Thursday, May 11, 2006

என் கனவும் நீயடி!



உன் நினைவு என்னுள் ஊர்கையில்

தேகம் எங்கும் தீயின் தீண்டல்கள்

தொலைந்து போன எனது நினைவுகளை

தேடிப் பார்த்து களைக்கிறேன்

தொலைவில் செல்லும் உனது நிழலை

தொடர்கிறேன் தொடாமலே!

இருளில் ஒளியை தேடினேன்

ஒளியில் இருளை காண்கிறேன் !

காலம் கடந்து நிற்கிறேன்

கரையில் அலையாய் அடிக்கிறேன்!

கடந்து விடவே துடிக்கிறேன் !

கடக்க மறந்து தவிக்கிறேன்!

கானல் நீரை குடிக்கிறேன்!

கண்கள் திறந்தே காண்கிறேன் கனவு

கலைந்த பின்னும் தொடருமென் கனவு!

என் கனவு என்ன தேடினேன்

என் கனவும் நீயென கண்டு கொண்டேனடி!

4 comments:

Anonymous said...

Arumaiyaana kavithai

வவ்வால் said...

வணக்கம் கீரா!

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்.நன்றி! .அடிக்கடி வாருங்கள்.

Anonymous said...

I'm impressed with your site, very nice graphics!
»

வவ்வால் said...

வணக்கம் அனானி,
தங்கள் வருகைகும் கருத்திற்கும் நன்றி.மீண்டும் வருக.

கிராபிக்ஸ் ஆ ,ஹா ஹா ஹா