Saturday, May 20, 2006

எதையும் நினைக்கவில்லை...



பிரிவென்று நினைக்கவில்லை பிரிந்த பின்னும்

வலி என்று நினைக்கவில்லை வலித்த பின்னும்

வாழ்க்கை என்று நினைக்கவில்லை தொலைத்த பின்னும்

உண்மை என்று நினைக்கவில்லை உதறிய பின்னும்

உயிர் என்று நினைக்கவில்லை இழந்த பின்னும்.

உறக்கம் என்று நினைக்கவில்லை உறங்கிய பின்னும்

விடியல் என்று நினைக்கவில்லை விடிந்த பின்னும்

மலர் என்று நினைக்கவில்லை மலர்ந்த பின்னும்

மனம் என்று நினைக்கவில்லை உடைந்த பின்னும்

தாகம் என்று நினைக்கவில்லை தவித்த பின்னும்

தீ என்று நினைக்கவில்லை தீண்டிய பின்னும்

தேவை என்று நினைக்கவில்லை இதயம் தொலைந்த பின்னும்

தேடல் என்று நினைக்கவில்லை தேடியலைந்த பின்னும்

எதையும் நினைக்கவில்லை என்னையே மறந்த பின்பு!

2 comments:

Anonymous said...

Appo yethai thaan ninaitheengha...yellavatraiyum ninaikaamal, yenna yennghala thana odughiratho...nallakavithai, aanal yennal athaan ninaikaamal irukamudiyavillai..lol

வவ்வால் said...

வணக்கம் கீரா!

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா... எனக் கேட்காமல் ,நான் நினைக்காமல் மறந்து விட்டேன் நினைப்பதையே!