Friday, March 15, 2013

எல்லாமே அரசியல்!


(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு? )


இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ரீதியான பல போராட்டங்கள்,கண்டனங்கள் எழுந்துள்ளன, தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றளவில் இதற்கான ஆதரவு எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

அரசியல் இயக்கங்களை தாண்டி மாணவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அத்தகைய ஒரு வெளிப்பாடாக லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் எட்டாம் தேதி காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து பன்னிரெண்டாம் தேதி முடித்துக்கொண்டுள்ளார்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் அல்லாமல் பிறக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள், ஆனால் இவையெல்லாம் அரசியல் நாடகங்களின் ஓரங்கமாகவே இருக்கிறதோ என சந்தேகிக்க தூண்டும் அம்சங்கள் பலவும் காணப்படுகின்றன.

மாணவர்களின் சிந்தனை மற்றும் எழுச்சி தேவை ,அது சரியே எனவும் நினைக்கிறேன் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர்கள் அறிந்தோ,அறியாமலோ பகடையாக்கப்படுகிறார்களோ என நினைக்கவும் வேண்டியதாகிறது. நாட்டில் எல்லாமே அரசியல் தானோ என நினைக்கும் போது அயர்ச்சியாகிறது.

யே யப்பா உடனே உணர்ச்சி பொங்க ,நீ எல்லாம் தமிழனா, மாணவர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துவதும் ஒரு பொழைப்பா, ஏ தமிழ் நண்டே ,உன் நொள்ளைக்கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இரும் என கொந்தளிக்காதீர்கள் என்னருமை புரட்சி புடலைங்காய்களே, என்ன சொல்ல வருகிறேன் என சற்றே நிதானமாக வாசித்து உள்வாங்கிக்கொண்டு அப்புறமாக தீர்ப்பெழுத பேனா எடுங்களேன்!

(கம்யூனிச பாணியில் பறை முழங்க போராட்டம்)

லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கடந்த எட்டாம் தேதி ஈழ இனப்படுகொலையை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் என அறிவித்தனர், முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள AICUF(All India Catholic University Federation ) வளாகத்தில் ஆரம்பிக்க சென்றனர்,ஆனால் அவ்விடம் இலங்கை தூதரகத்திற்கு வெகு அருகில் இருப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என காவல் துறை அனுமதி மறுக்கவே, பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஒரு "தனியார் இடத்தில்" தங்கள் உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கினர்.

இங்கு கவனிக்க வேண்டியது ,காவல் துறை அவ்வளவு எளிதில் உண்ணாநிலை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காது, காவல் துறை அனுமதி என சொல்லப்பட்டாலும் அது ஆட்சியாளரின் முடிவை பொறுத்தே என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது ஆளுங்கட்சி தலைமையின் விருப்பத்தின் படியே என அறியலாம்.

பல பத்திரிக்கைகளும் கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என்றே எழுதின ,அது என்ன சிறப்பான தனியார் இடம், உண்ணா நிலைப்போராட்டத்திற்கு என யாராவது கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார்களா,அல்லது வீட்டை வாடகைக்கு எடுத்து போராட்டம் நடக்கிறதா?

இக்கேள்வி ரொம்ப அவசியாம என நினைக்கலாம்,ஆனால் அவசியம் ஆகிறது.

இப்போ சின்னதா ஒரு பிளாஷ் பேக் அடிப்போம்,

ஆகஸ்ட்,2011 இல் காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான செங்கொடி என்பவர், ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்ககோரி ,காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும்,கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் ,கிருத்துவப்பின்னணிக்கொண்ட ஒரு மக்கள் சேவை இயக்கம் ஆகும். இவர்களுக்கு PUCL(PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES) மற்றும் Madras Social Service Society (MSSS-இவ்வமைப்பு the official organ for social work in the Archdiocese of Madras-Mylapore), ஆகியவற்றின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் உண்டு.

அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தின் போராட்டங்களுக்கு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் சமீபமாக வேல் முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மற்றும் பழ.நெடுமாறன், சேவ் தமிழர் இயக்கம் ,மே-17 இயக்கம், ஆகியன ஆதரவளிப்பதும் ,கூட்டுப்போராட்டங்கள் செய்வதும் வழக்கம்.

காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சென்னைக்கோயம்பேட்டில் ஒரு அலுவலகம் உள்ளது(உரிமையாளர் அவர்களா அல்லது கம்யூனிச இயக்கமா என தெரியவில்லை), அதற்கு தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடியின் பெயரை சூட்டி செங்கொடி மன்றம் என அழைக்கப்படுகிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய தனியார் கட்டிடம் தான் இந்த செங்கொடி மன்றம்!

எதற்கு பத்திரிக்கைகள் மீண்டும் ,மீண்டும் சென்னைக்கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என "சிறப்பாக" தனித்து சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் செங்கொடி மன்றம் என சொல்லப்பட்டால் அவ்வியக்கம்,அதன் சார்புக்கட்சிகளின் நிலை எளிதில் வெளிப்பட்டுவிடும் என்பதாலே.

இப்போராட்டம் லயோலாக்கல்லூரி மாணவர்கள் தானே முன்னெடுத்தார்கள் இதற்கெல்லாம் எப்படி பொறுப்பாவார்கள் எனலாம், லயோலாக்கல்லூரி AICUF இன் ஒரு அங்கம், இது Archdiocese of Madras-Mylapore, ஒரு அங்கம்.இவர்களோடு சென்னை சமூக கூட்டமைப்புக்கும், அதனோடு மக்கள் மன்றதுக்கும் தொடர்பு உள்ளதை பார்த்தோம். மேலும் வைக்கோவிற்கும் கிருத்துவ அமைப்பினருக்கும் இணக்கமான உறவுண்டு, எனவே எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.


அதெல்லாம் சரி ,மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தில் இவர்கள் தொடர்பு இருந்தால் என்ன ,நல்ல நோக்கத்திற்காக தானே போராடினார்கள் என நினைக்கலாம், ஆனால் இவர்களின் தொடர்பால் மாணவர்களின் போராட்டத்தினை வைத்து ஆளுங்கட்சி ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தினை காவல் துறைக்கொண்டு ஆளுங்கட்சி அடக்கியிருக்கிறது எனவே இப்போராட்டத்தினை ஆளுங்கட்சி விரும்ப வழியில்லை, மேலும் மாணவர்கள் தி.முக.,காங்கிரஸ் கட்சியினரையும் எதிர்த்துள்ளார்கள் எனவே இதில் என்ன அரசியல் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் பல வெளியில் தெரியாத உள்நீரோட்டங்களே என்பதை புரிந்துக்கொண்டால் உண்மை தெளிவாகும்.

தி.மு.க கூட்டணியினர் டெசோ அமைப்பினை உயிர்ப்பித்து மீண்டும் ஈழ விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்த ,இழந்த இமேஜை தூக்கி நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்,அதன் ஒரு அங்கமாக ஐ.நாவுக்கு மனு,புது தில்லியில் மார்ச்-10 இல் டெசோ கருத்தரங்கு, தமிழகத்தில் மார்ச்-12 இல் வேலை நிறுத்தப்போராட்டம் என பிசியோ பிசியாக தீயாக வேலை செய்ய பார்க்கிறார்கள்.

இந்நிலையில் எட்டாம் தேதி மாணவர்களுக்கு உண்ணாநிலைப்போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது, பின்னர் சரியாக பதினோராம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறை கைது செய்கிறது. விடிந்தால் டெசோ பந்த்!

இதில் உள்ள நுண்ணரசியல் என்னவெனில் மறுநாள் நடைப்பெற்ற பந்தினை விட மாணவர்கள் கைது என்ற செய்தி முன்னிலைக்கு வந்துவிட்டது.

மேலும் கல்லூரிகள் இயங்காமல் இருந்தால் பந்துக்கு ஆதரவு மாபெரும் வெற்றி என திமுக சொல்லிக்கொள்ள முடியாது, கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தால் அது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என்றே பார்க்கப்படும் நிலை.

அப்படிப்பார்த்தாலும் ஆளும்தரப்புக்கெட்டப்பெயர் தானே என நினைக்கலாம், எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும் சித்தாந்தம் தான் :-))

மேலும் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும்,அவர்களின் டெசோ எதிர்ப்பு நிலையையும் பார்த்தால் , ஆளும்தரப்பை கோபப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the "Tamil Nadu State Government", should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6)On behalf of the "Tamil Nadu State Government", a foreign relations department should be created to assure the security of global Tamils.

7)No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

சட்டப்பேரவையில் அம்மையார் கொண்டு வந்த தீர்மானத்தையும்,மாநில அரசையும் முன்னிறுத்த வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.அதாவது ஆளுங்கட்சியினரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போரட்டமாக கருத வாய்ப்புள்ளது,ஆனால் கைது ,அடக்குமுறை என்பது போலவும் ஒரு தோற்றம்,என்ன அரசியலப்பா இது?


உண்ணா நிலைப்பந்தலில் ,மாணவர்களுடன் "ஜென்டில் மேன்" வைகோ,ஹி...ஹி பளீர்னு பாலிஷ் அடிச்சு ஷீ,டக் இன் கெட்டப்பில் ,ஒரு கார்ப்பரேட் எக்சிகியூட்டிவ் போல இருப்பதால் ஜென்டில்மேன் என சொன்னால் தப்பில்லை தானே.

மாணவர்கள் தான் பாவம் திடீர்னு அவசரமா உண்ணா நிலைக்கு வந்துவிட்டதால் கருப்பு சட்டை வாங்க நேரமில்லை போல எல்வீஸ்னு எழுதிய கருப்பு பனியனை ,உள் பக்கம் வெளிப்பக்கமா வருமாறு திருப்பிப்போட்டு சமாளிச்சு இருக்காங்க!






மாணவர்களுடன் ,நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்கள்,

//Activists Mallai sathya and Manimaran from MDMK,  Thirumalai from AISF, Senthil from the Save Tamils Movement, Arun shourie from the Tamil Nadu Makkal Katchi, Ilaya raja from the Tamil Thesiya Maanavar Iyakkam, movie directors Ram, Kalaignan and Gauthaman and few activists from the May 17 movement were among the arrested.//

நள்ளிரவில் கைது செய்யப்படும் பொழுதும் கூட கைதாகியுள்ளவர்கள் யார் எனப்பார்த்தால் மல்லை சத்யா உள்ளிட்ட 200 மதிமுக கட்சியினர் மற்றும் பலர் ,இதன் மூலம் மதிமுகவின் பங்கு என்னவென புரிகிறது. இப்போராட்டக்களத்தில் மதிமுகவினரின் பின்புலம் இருப்பதாலோ என்னவோ புதிய புரட்சி அவதாரம் "நாம் தமிழர்" சீமான் சீனுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

(முகமலர்ச்சியுடன் முதல்வர், கூட்டணி மறுமலர்ச்சி காணுமா?)

கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே அம்மையாருடன் இணக்கமான அரசியலில் உள்ளனர், சமீபத்தில் வைகோவின் மது பான பாதயாத்திரையில் திடீர் சந்திப்பு என அம்மையாருடன் புதிய அரசியல் மலர்ச்சியுடன் மதிமுக,இவை எல்லாம் வரும் நாடாளுமன்றத்தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிக்கான அச்சாரங்களாக மாறக்கூடும்.


லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக்கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி ,புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.


மற்ற கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளும் போராட்டத்தில் கலந்துள்ளன,ஆனாலும் அனைத்தும் ஒருங்கிணைக்க ஒரு அரசியல் இயக்கம் பின்னிருந்துள்ளதை தெளிவாக காணலாம்.ஏன் எனில் இலங்கைக்கு கண்டனம் என கோரிக்கை பதாகைகளுடன் டெசோவை புறக்கணிக்கவும் எனவும் பதாகைப்பிடித்து நிற்கிறார்கள்!

படம்.


ஆளுங்கட்சி , தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் , டெசோ பலூனில் காற்றையிறக்க இரு கோடுகள் தத்துவப்படி டெசோவை சின்னதாக காட்ட மாணவர்கள் போராட்டத்தினை அடக்குவது போல் நடவடிக்கை எடுத்து , பெரிதாக வளர்க்கிறது எனலாம். ஒருக்கட்டத்தில் தனது பேர் கெடாமல் செய்ய மாணவர்கள் கோரிக்கையை "எனது அரசு" ஏற்கிறது என பெருந்தன்மையான அறிக்கையே கூட அம்மையாரிடம் இருந்து வரலாம், அப்படி வந்துவிட்டால் ,மீண்டும் ஈழத்தாய் பட்டம் சூடி மகிழ சீமான் தயாராக இருப்பார் என சொல்லவும் வேண்டுமோ?

டெசோ என்பது வெண்ணைக்கூட வெட்ட உதவாத மொன்னைக்கத்தி என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,ஆனால் மொன்னைக்கத்தியாக இருந்தாலும் என்னோடதாக்கும் என போராட்டத்தில் குதித்து பெயர் வாங்கப்பார்க்கும் திமுகவின் ஆசையில் ஒரு லோட் மண்ணள்ளி போடும் விதமாக அம்மையார் இராச தந்திரமாக மாணவர்கள் போராட்டத்தினைப் பயன்ப்படுத்திக்கொள்வதாக நினைக்கிறேன்.

லயோலா கல்லூரி மாணவர்களும் சொல்லி வைத்தார்ப்போல 12 தேதியுடன் உண்ணாநிலைப்போராட்டத்தினை நிறுத்திக்கொண்டார்கள், அரசு நிர்பந்தம் என சொல்லலாம்,ஆனால் நிர்பந்தம் வரும் என தெரிந்து தானே சாகும் வரைப்போராட்டம் என குதித்தார்கள்,அரசைப்பற்றி  12 தேதிக்கு அப்புறம் தான் தெரிய வந்ததா? இப்பொழுது நடக்கும்  போராட்டத்தில் மாணவர்கள் எத்தனை சதவீதம் உறுதியாக நிலைப்பார்கள்,என்று மங்கலம்பாடுவார்கள் என சொல்ல முடியாது.

ஆனால் அதற்குள் நம்ம இணைய சேகுவேராக்கள் ஒரு முன் முடிவுடன் என்ன என்னமோ பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இப்போராட்டங்கள் பற்றி கேள்விக்கேட்டுவிட்டாலே போதும் , உடனே அறச்சீற்றம் கொண்டு கண்கள் சிவக்க ,காது மடல் சிலிர்க்க , ஒரு நீண்ட சொற்பொழிவை ஆரம்பிக்கிறார்கள்,ஒரு கணினியும்,இணையமும் இருந்துவிட்டால் என்ன  வேண்டுமானாலும் எழுதுவியா, நீ என்னிக்காவது போராடி இருக்கியா,வலினா என்ன தெரியுமா,இரத்தம் பார்த்து இருக்கியா , யாரும் எதுவும் பேசக்கூடாது பேசினால் உனக்கு தமிழுணர்வு இல்லை, இது மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஏதேச்சதிகாரமா தீர்ப்பு எழுதி தள்ளுகிறார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாணவர்களோ,பொதுமக்களோ தன்னெழுச்சியாக ,சுயநல அரசியலற்று போராட வேண்டும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணோம்.

எல்லாமே அரசியல் தானோ?
--------------

பின் குறிப்பு:

# நாம் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளனும் அல்ல, செய்திகளில் படிப்பதை வைத்து எனது அவதானிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன், இதில் பிழையொன்றுமில்லை, அதெல்லாம் முடியாது நீ அந்தக்கட்சி ஆதரவாளன் தான் என ஏதேனும் ஒரு சாயம் பூச ஆசைப்பட்டால் நானென்ன செய்ய, சாயம் பூசி உங்க கொலை வெறியை தணித்துக்கொள்ளவும், ஆனால் பூசுறது தான் பூசுறிங்க நல்ல சேப்பு சாயமா பூசிட்டு போங்க அப்போவாச்சும் கொஞ்சம் கலர் கூடுதா பார்ப்போம் :-))

#படங்கள் மற்றும் தகவல் உதவி,

சேவ் தமிழ், தமிழ் நெட், விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

111 comments:

சார்வாகன் said...

சகோ வவ்வால்,

தமிழனின் பெரிய பிரச்சினைகள் 1. உணர்ச்சி வசப்படல் 2. நாயக வழிபாடு 3. சாதி வெறி.

இதனை நம் அரசியல் தலைகள் சாதிர்யமாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்.

இப்பதிவில் இந்த‌ கட்சி அந்த‌ கட்சிக்கு எதிராக மாணவ்ர்களை பயன்படுத்துவது போல் 1980களில் அந்த கட்சி,இந்த கட்சிக்கு எதிராக தூண்டி விட்டது.

1980களில் யாருமே இலங்கைப் பிரச்சினை குறித்த சரியான‌ வரலாறு கூட சொல்லவில்லை.மலையக்த் தமிழர் 10 இலட்சம் பேர் சிரிமாவோ,இந்திரா ஒப்பந்தம் மூலம் இந்தியா துரத்த‌ப் பட்டது கூட சொல்லவில்லை.இது ஒரு பெரிய துரோகம். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தால் அங்கே தமிழர்கள் பெரும்பான்மை!!

உண்மையை சொல்லக் கூடாது என்பதைல் அனைத்து அரசியல் தலைகளுக்கும் ஒற்றுமை.
**

முள்ளிவாய்க்காலில் என்ன் நடந்தது என்பதை மறைப்பதிலும் அதே ஒற்றுமை.
**

என்னமோ அமெரிக்க,சீனா பிரச்சினையில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறான்.வெற்றி பெற்றால் அங்குள்ள தமிழரின் நிலைப்பாடு அறிய முடியும். நடந்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும் வாய்ப்பு உண்டு. வெளிவரும்
முள்ளிவாய்க்கால் காணொளிகள் எல்லாமே சிங்கள சிப்பாய்களால் எடுக்கப் பட்டவை!!

மாணவர்கள் அமெரிக்க ஜெனிவா தீர்மானத்தை எதிர்ப்பது நமக்கு வரலாற்று தவறு.அவன் ஆதரித்தால் நான் எதிர்ப்பேன் என்பது கோமாளித்தனம்.

காந்தி உண்ணாவிரதம் இருந்து சுதந்திரம் கிடைத்தது என வரலாறு படித்தால் இப்படித்தான்.

*
இராஜபக்சேவின் நோக்கம் தெளிவானது. காலம் செல்ல செல்ல பிரச்சினைகள் நீர்த்து போகும்.1983 இனப்படுகொலை ஐ மறக்கவில்லையா!!அதே போல் முள்ளிவாய்க்கால் மறக்க வேண்டும்.

இப்போதைய ஜெனிவா தீர்மானம் வெளிநாடுகள்,ஐ,நா இலங்கையில் தலையிடா வண்ணம் மாற வேண்டும் இலை தீர்மானமே வேண்டாம்!!!
**
தமிழனின் நோக்கம் பிரிந்து, குழப்பம் ஆவதுதான்!!!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!!

Anonymous said...

ok thala, neenga sollunga eppadi, enna maadhiriyana poratatha mun-edukalaam.

Anonymous said...

:-(((.....:-))))


By-Maakkaan.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.யார் எதை உண்மையா ஆதரிக்கறாங்க!எதிர்க்கறாங்க!குழப்பமா இருக்கு.

Jayadev Das said...

தி.மு.க. இளிச்சவா ......... சாரி இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்ப்பதை முறியடிக்க அம்மாவின் கேம் பிளான்.......... ம்ம்....... இந்த ஆங்கிளில் பார்த்தா சரியாத்தான் படுது..... பார்க்கப் போனா யார் நல்லவங்க யார் கெட்டவங்க ஒரு இழவும் புரியலை.............

Jayadev Das said...

\\ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு?\\ அவனவன் பிள்ளையார் சுழி போட்டு கடையைத் திறப்பான். உமக்கு இது............!! நல்லாயிருந்தா சரி.

சதுக்க பூதம் said...

நல்ல செய்தி - மாணவர்கள் இன்னமும் சமூக அக்கறையுடன் இருக்கிறார்கள்.
கவலை அளிக்கும் செய்தி - அவர்களை ஒருங்கினைத்து வழி நடத்த நல்ல தலைமை இல்லை.

வவ்வால் said...

சகோ.சார்வாக்கன்,

வாங்க,நன்றி!

//தமிழனின் பெரிய பிரச்சினைகள் 1. உணர்ச்சி வசப்படல் 2. நாயக வழிபாடு 3. சாதி வெறி.

இதனை நம் அரசியல் தலைகள் சாதிர்யமாக பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள்.//

அஃதே,அஃதே!

என் இரத்தத்தின் ரத்தமே என்றாலும் கைத்தட்டு, என் உடன் பிறப்பே என்றாலும் கைத்தட்டுவான் தமிழன் :-))

# //1980களில் யாருமே இலங்கைப் பிரச்சினை குறித்த சரியான‌ வரலாறு கூட சொல்லவில்லை.மலையக்த் தமிழர் 10 இலட்சம் பேர் சிரிமாவோ,இந்திரா ஒப்பந்தம் மூலம் இந்தியா துரத்த‌ப் பட்டது கூட சொல்லவில்லை.இது ஒரு பெரிய துரோகம். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தால் அங்கே தமிழர்கள் பெரும்பான்மை!!//

1967 இல் ஷாஸ்ட்ரி- ஷ்ரிமாவோ ஒப்பந்தம் மூலம் ஆரம்பம் ஆச்சு. இந்திராவும் அப்படியே.

இதை எல்லாம் முன்னர் பேசி பெரிய வம்பாச்சு, தந்தை செல்வா, ஜி.ஜி பொன்னம்பலம் போன்றோர் தான் அப்போது இலங்கையில் தமிழின தலைவர்கள் அவர்கள் ஆதரவோடு தான் இலங்கை குடியுரிமை சட்டம் உருவாகி, மேற்கண்ட ஒப்பந்தங்கள் மூலம் பல லட்சம் தமிழர்கள் இலங்கையில் இருந்து நாடுக்கடத்தப்பட்டார்கள், அப்படி வந்த குடும்பங்களில் ஒன்று தான் 2ஜி புகழ் ஆ.ராசா குடும்பம்!

மலையகத்தமிழர்கள் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டோர் சமூகம் என்பதாலேயே இலங்கை தமிழர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை, மேலும் அவர்களை தங்களுக்கு போட்டி என்றும் நினைத்தார்கள்.

பழசை எல்லாம் பேசினால் வம்புதேன் வரும் :-))
-----------
அமெரிக்க தீர்மானம் காகிதப்புலி, ஆனால் அமெரிக்காவை குற்றம் சொல்லி என்ன ஆகப்போகிறது,ஏன் இந்தியா ஒரு தீர்மானம் கொண்டுவர முயலவில்லை என ஒருவனும் கேட்கக்காணோம் :-))
--------------------

அனானியும் மாக்ஸ் தானா?


நன்றி!

தீர்வு சொல்லலாம் ஆனால் செயல்ப்படுத்த முடியுமா?

----------------
முரளி சார்,

வாங்க,நன்றி!

ஆமாம் இன்னும் சிலப்பல அரசியல் சதிராட்டங்களும் இருக்கு,எதை சொல்ல ,விட?

ஹி...ஹி வைக்கோவே ஒரு முன்னாள் கிருத்துவர்னு ஒரு செய்தி இருக்கு ,அதெல்லாம் கேட்டால் இன்னும் ஷாக்காவிங்க போல இருக்கே :-))
----------

பாகவதரே,

வாரும்,நன்றி!

//பார்க்கப் போனா யார் நல்லவங்க யார் கெட்டவங்க ஒரு இழவும் புரியலை.............//

அந்த எழவு மக்களுக்கு புரிஞ்சிட்டா யாருமே அரசியலே செய்ய முடியாதே, நம்ப வைத்து ஏமாற்றுவதில் ஆன்மிகவாதிகளை போன்றே அரசியல்வாதிகளும் :-))

# ஆன்மீகவாதினா மனக்கட்டுப்பாடு இருக்கனும், எதுக்கு படத்தை எல்லாம் பார்க்கிறீர் பார்க்காம கருத்துக்களை மட்டும் படியும்.

பதிவுக்கு ஒரு மங்கலகரமான லுக் கொடுக்கத்தான் ,நாம தான் நாத்திகனா போயிட்டோம்,பதிவும் அப்படியேவா இருக்கணும்,கொஞ்சம் அழகுப்படுத்தி பார்க்க வேண்டாமா?

நல்லா தானே இருக்கு :-))
---------------
பூதம்,

வாங்க,நன்றி!

மாணவர்கள் தயார் ஆனால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு எளிதில் பலியாகிவிடும் சூழலே நிலவுது.

எனவே அரசியல் கலப்பேயில்லாமல் தன்னெழுச்சியாக ஒரு மாற்றம் வரனும், வந்தால் நல்லா இருக்கும்.
------------

Unknown said...

உயர் திரு வௌவால் அவர்களே. உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் பலவற்றை பல கோணங்களில் பார்த்து அலசி ஆராய்ந்து எழுதுபவர் போல் தெரிகிறது. அரசியலின் உள் நீரோட்டத்தை புரிந்து கொள்ளும் உங்கள் சீரிய புத்தி கூர்மை நான் எந்த தளத்தின் பதிவிலும் காணாதது. இவ்வளவு சிறப்புக்களை உடைய, பன்முக சிந்தனை உடைய தங்கள் தளத்தின் கருத்து பகுதியில் ஓர் சிறிய எழுத்து பிழை இருக்கிறது. சாஸ்திரி - சிறிமாவோ ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 1964. நீங்கள் தட்டச்சு செய்யும் அவசரத்தில் 67 என்று எழுதி விட்டீர்கள். பலரின் பதிவகளுக்கு பரிவன்புடன் மேலதிக விபரங்கள் சேர்த்து பின்னூட்டம் இடும் உயர்ந்த மனதுடைய தங்களின் சொந்த தளத்தில் மேலே கூறியது போன்ற வரலாற்று பிழை இடம் பெற்று விட்டது என்ற பழி சொல்லுக்கு ஆழாக கூடாது அல்லவா?!

? said...

மாணவர்கள் பஸ்டே போராட்டமெல்லாம் நடத்தியது போய் இப்போது சமூக விடயங்களை நோக்கி திரும்பியிருப்பது நல்லதே. ஆனால் மொழிப்போர் என்ற பெயரில் மாணவர் தலையில் முன்பு அரசியல்வாதிகள் மொளகாய் அரைத்தது போல் இப்போதும் ஆகிவிடும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது உம்ம ஆராய்ச்சி! இசெவின் பதிவை பார்த்து இதில் அரசியல் கலக்கவில்லை என நினைத்தேன். ஆனால் உமது பதிவு இருட்டில் நடக்குற எல்லாத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திடுச்சு (நோ டபுள் மீனிங்).

ஆனால் இந்த மாதிரி போராட்டங்களும் தமிழகத்துக்கு வரும் சிங்கள பொதுமக்களை கூட உதைப்பது போன்ற நிலைப்பாடுகள் இலங்கை தமிழர் மீது என்ன மாதிரியான விளைவினை ஏற்படுத்தும் என்பது அச்சமாயிருக்கின்றது. ஏனெனில் சிங்கள இனவாதி ஆட்சியாளர்கள் கிடைத்தவனை அடிப்போம் என அப்பாவிகள் மீதுதான் கோவத்தை காட்டுவார்கள். இந்த மாதிரி தண்டிப்போம் என்பதினைவிட எஞ்சியிருக்கும் பொது மக்களுக்கு சம உரிமை பெற்றுதர இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்பதே எனது ஆசை. குறிப்பாக காங்கிரஸ் அரசு ராஜிவின் உருவாக்கமான 13 வது அரசியல் சட்டதிருத்தத்தை அமுலாக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். (இதற்கு யாராவது கும்மவர போகிறார்கள். கனவான ஈழம் கிட்டும் வரை இடைக்கால தீர்வாக இருக்கட்டுமே, ஐயா!).இதை விடுத்து போர் நடக்கும் போது வேடிக்கை பார்த்த அமெரிக்கா தீர்மானம் போட்டு ஏதாவது நடக்கும் என்பது கொக்கு தலையில் வைத்த வெண்ணைக்கு சமானம்.

ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து அதில் பலனடைவே முயற்சிக்கின்றார்களே ஒழிய ராசதந்திரமாக அப்பாவி ஈழ பொதுமக்களை காக்க ஒன்னுமே செய்யக்காணோம். இசெவின் பதிவில் பொருளாதார தடைக்கு எதிராக வேகநரியும் ஈழத்தில் வசிக்கும் தமிழர் இட்டுள்ள பின்னூட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அதிலும் உணர்ச்சிவயப்பட்டு அவர்களை பிறர் அர்ச்சனைதான் செய்துள்ளார்கள். தமிழருக்கு ராஜதந்திரத்தில் இன்னும் பயிற்சி தேவை!

? said...

//இந்தியா ஒரு தீர்மானம் கொண்டுவர முயலவில்லை என ஒருவனும் கேட்கக்காணோம்//

நானும் இந்தியா அதை கிழிக்க வேணும் என எழுதிவிட்டேன். தனது ராணுவ வீரர்களை பாகிஸ்தான்காரான் கழுத்தறுக்கும் போதும் பங்களாதேஷ்காரன் செத்த மிருகத்தை போல குச்சியில் கட்டி தூக்கி வீசிய போதும் இந்திய அரசு ஒன்றுமே கிழிக்கவில்லை. தனது நாட்டு மீனவ மக்களை பாகிஸ்தானும் இலங்கையும் கொன்றால் ஒரு நடவடிக்கையும் எடுத்தது இல்லை. ஆனால் வெள்ளைத்தோல் வெளிநாட்டுக்காரன் எப்போது மாட்டினாலும் உடனே விடுதலை.

தனது போலிஸே தமிழ்நாட்டு பெண்களை கற்பழிக்கும் போது தமிழ்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. இந்த மாதிரி ஆட்களை தலைவர்களாக வைத்துக்கொண்டு கொண்டு பக்கத்து நாட்டு மக்களை காக்க சொல்லி காத்திருக்கும் நம்மை போல முட்டாள்கள் இல்லை என தோன்றுகிறது.

வவ்வால் said...

மாண்புமிகு நிஷா அவர்களே,

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!

வஞ்சப்புகழ்ச்சி அணினு ஒரு அணி இருக்காம் அப்படிலாம் கூட்டணி வச்சி கலாய்க்கலையே அவ்வ்.

சரி விடுங்க தெளிவா திட்டுனாலே, ம்ம் அப்புறம் மேல சொல்லுங்கனு கேட்டுக்கிற ஆளு நாம,இதுக்கெல்லாமா?

ஆனாலும் சும்மா சொல்லப்படாது அருமையான புகழுரைகள் படிச்சதும் மெய்சிலிர்த்து புளகாங்கிதமுற்றேன்!

பின்னூட்டங்கள் போடும் போது ரெபர் எல்லாம் செய்வதில்லை, நினைவில் இருந்தே சொல்வது,பெரும்பாலும் தப்பிச்சுப்பேன்,இப்ப சறுக்கிடுச்சு, நீங்க சொன்ன ஆண்டு தான். பிழை திருத்தி என்னை பெரும்பாவத்துக்கு ஆளாவதில் இருந்து தடுத்தாட்கொண்டமைக்கு நன்றி!

1954 இல் நேரு -ஜான் கொதலவாலா ஒப்பந்தம் எல்லாம் கூடப்போட்டு இருக்காங்க,அது அப்படியே ஷாஸ்த்ரி, இந்திரா என இன்னும் தொடருது.

இனிமே பிழையில்லாமல் சொல்லிடுவேன் :-))

# இனிமே கொஞ்சம் சூதனமா இருந்துக்கணும்,நிறைய பேரு கறம் வச்சுக்காத்து இருக்காப்போல தெரியுது ....அவ்வ்.
----------------

நந்தவனம்,

வாங்க,நன்றி!

"கை"வலி நீங்கி ,"வலி"கையுடன் மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

# மொளகா மட்டுமா அறைக்கிறாங்க இப்போலாம் மசாலாவும் சேர்த்து அறைச்சு பிரியாணி கிண்டுறாங்க :-))

இக்பால் உள்நாட்டு அரசியலின் சூட்சுமங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நாம தெருமுனைக்கூட்டங்கள் முதற்க்கொண்டு போவதால் நரி எது பரி எதுவென இனங்காண முடியுது.

//ஆனால் உமது பதிவு இருட்டில் நடக்குற எல்லாத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திடுச்சு (நோ டபுள் மீனிங்).//

சொல்றதையும் சொல்லிட்டு நோ டபுள் மீனிங்காம்ம் ...அவ்வ்!

ஹி...ஹி சும்மாவா எம்மாம் பெரிய மின்வெட்டுலவும் பெட்ரோ மாக்ஸ் லைட் வச்சி ,பதிவு எழுதுவோம்ல :-))

//அமெரிக்கா தீர்மானம் போட்டு ஏதாவது நடக்கும் என்பது கொக்கு தலையில் வைத்த வெண்ணைக்கு சமானம்.//

அஃதே,அஃதே!

இந்த கொக்கு தலை வெண்ணை சொலவடை உங்களுக்கும் புடிச்சி போச்சு போல :-))

// பொருளாதார தடைக்கு எதிராக வேகநரியும் ஈழத்தில் வசிக்கும் தமிழர் இட்டுள்ள பின்னூட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. //

பொருளாதார தடைக்குறித்து மாற்றுப்பார்வை இருக்கு,விரிவா எதாவது பதிவில் சொல்வோம்.

பொருளாதார தடை இல்லை என்றாலும் ,இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்கு எவ்வசதியும், பொருட்கள் தட்டுப்பாடும் எப்பொழுதும் நிலவவே செய்யும்.

பொருளாதார தடை வந்தால் அரசின் மேம்பட்ட வாழ்வியல் எல்லையில் வசிக்கும் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால் நேரடியாக ஒரு அரசினை தண்டிக்க சர்வதேசத்தால் இயலாத நிலையில் ,பொருளாதார தடை ஒரு தீர்வே.

இரான்,ஈராக்,வடகொரியானு பொருளாதார தடை பிரயோகிக்காமலா இருந்தாங்க,அங்கும் மக்கள் வசிக்கலையா?

எனவே பொருளாதார தடை என்பது ஒரு ஆப்ஷன், அதில் சில மாற்றங்கள் உடன் கொண்டுவரலாம்.

//நானும் இந்தியா அதை கிழிக்க வேணும் என எழுதிவிட்டேன். //

நம்ம வகை நீர்!

போன ஆண்டு,அமெரிக்கா ஐநாவில் தீர்மானம் கொண்டுவர இணையத்தில் ஓட்டுப்போடுங்கன்னு சில மக்கள் உசுப்புனாங்க,நானும் ஓட்டுப்போட்டுவிட்டு,இதை ஏன் இந்தியாவே செய்யக்கூடாது,அதுக்கு பிரச்சாரம் செய்யலாமேனு யதார்த்தமா கேட்டுப்புட்டேன்,ஹி..ஹி வழக்கம் போல இணைய போராளிகள் ,உனக்கு தமிழுணர்வே லேதுனு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க :-))

என்ன கொடுமைய்யா இது,ஆ ..ஊனா உணக்கு தமிழுணர்வு இல்லைனு சொல்லிக்கிட்டு,எனக்கே இல்லைனு சொல்லிட்டா அப்புறம் நாட்டுல எவனுக்கு தான் இருக்காம்?

//தனது போலிஸே தமிழ்நாட்டு பெண்களை கற்பழிக்கும் போது தமிழ்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. இந்த மாதிரி ஆட்களை தலைவர்களாக வைத்துக்கொண்டு கொண்டு பக்கத்து நாட்டு மக்களை காக்க சொல்லி காத்திருக்கும் நம்மை போல முட்டாள்கள் இல்லை என தோன்றுகிறது.//

In the name of law and order on behalf of govt any thing can be done :-))

அதையெல்லாம் கேள்விக்கேட்டா தீவிரவாதினு சொல்லி ஓடவிட்டு சுட்டுப்புடுவாங்க :-))

நாம் பிறவி முட்டாள்கள் அல்ல ,முட்டாள்கள் ஆக்கப்பட்டோம்,அதுவும் நம் அனுமதியுடன் தேர்தல் என்ற பெயரில்!

முட்டாளா இருந்தாலும் தம் இனத்தவர் அழிக்கப்ப்படும் போது குரல் கொடுப்பாங்க தானே?
-----------------

அஜீம்பாஷா said...

நண்பா நீங்க சொல்வது நூறு சதவீதம் சரி, ஏனென்றால் இது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன் வைத்து நடத்தும் நாடகமே , நேற்று மாலை மழவில் மனோரமா நியூஸ் சான்னலில் பத்திரிகையாளர் அனிதா பிரதாபின் நேர்காணல் கண்டேன் , அவர் பிரபாகரன் உயிருடன் இருந்த போது நேர்காணல் நடத்தியவர் , பிரபாகரன் குறித்து புத்தகம் எழுதி வருகிறார் , இப்போது தமிழகத்தை கலக்கும் பாலச்சந்திரனின் போட்டோவை அவர் ஒரு வருடம் முன்பே அமெரிக்காவில் வைத்து பார்த்திக்கிறார் , வலைதளங்களிலும் இந்த படம் வந்திருக்கிறது , இப்போது திடிரென போராட்டம் நடத்துவது , தேர்தல் நேரங்களில் தமிழக அரசீயல்வாதிகள் இலங்கை பிரச்னையை பெரிதாக்குவது , தேர்தல் முடிந்தவுடன் அதை மறந்து விடுவது , இலங்கை தமிழர் வாழும் பகுதிகளை இறுதி போருக்கு முன்பு நேரில் பார்த்திருக்கிறார் அவர் , தமிழ் தாய்மார்களின் சாபம் இலங்கை ஆட்சியர்களை சும்மா விடாது என்றார்

? said...

//பொருளாதார தடை இல்லை என்றாலும் ,இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்கு எவ்வசதியும், பொருட்கள் தட்டுப்பாடும் எப்பொழுதும் நிலவவே செய்யும்.பொருளாதார தடை வந்தால் அரசின் மேம்பட்ட வாழ்வியல் எல்லையில் வசிக்கும் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள்.ஆனால் நேரடியாக ஒரு அரசினை தண்டிக்க சர்வதேசத்தால் இயலாத நிலையில் ,பொருளாதார தடை ஒரு தீர்வே.//

நீங்கள் குறிப்பிட்ட நாடுகளை பொருளாதார தடை மூலம் அடக்க முயற்சித்தும் முடியவில்லையே. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கபட்டு 60 வருடம் ஆகிறது. ஒரு பலனும் இல்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரகசியமாக அந்த நாடுக்கு உதவுகின்றன. இலங்கை விடயத்திலும் சீனா உதவி செய்து இந்தியவை ஒரங்கட்டிவிடலாம். ஆகவே பொருளாதார தடை விதிக்கப்பட்டால் பாதிக்கபடுபவர் பொதுமக்களே. வடகொரியாவில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மருத்துவ வசதியின்றி பொதுஜனங்கள் பல நோய்களினால் அவதிப்படுகிறார்களாம். வலி வேதனையுடன் பொது மக்களை படுத்துவது சரியா? ராசபட்சே குடும்பத்துக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?

நான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளியுங்கள் என்கிறேன். மாறாக பழிக்குபழி என பொதுமக்களை, அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் கஷ்டப்படுத்துவது தவறு என்பது எனது கருத்து. மேலும் போர் குற்றத்திற்கு தண்டனை என்பது இரண்டாம் பட்சமே. ஈழதமிழர் நலவாழ்வும் சம உரிமையும்தான் முக்கியம்.

//முட்டாளா இருந்தாலும் தம் இனத்தவர் அழிக்கப்ப்படும் போது குரல் கொடுப்பாங்க தானே?//

முட்டாள்கள் என்ன, மிருகங்கள் கூட குரல் கொடுக்கும். ஆனால் சும்மா சவுண்டு விடாமல் எவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவும் என பார்க்கவேண்டும். அதைவிடுத்து பழிக்குபழி என கத்தினால் உண்மையில் கஷ்டப்படும் ஈழ பொதுமக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை.

வவ்வால் said...

அஜீம் பாஷா,

வாங்க,நன்றி!

எந்த ஒரு சம்பவத்தையும் உணர்ச்சிகளுக்கு ஆட்ப்படாமல் பார்த்தால் அதன் பின்னால் ஒரு அரசியல் இருப்பதை உணரலாம்.

பாலச்சந்திரன் படுகொலைப்படமெல்லாம் தமிழ்நாட்டிலேயே ஒரு வருடம் முன்னரே வெளியாச்சு,ஏன் பேனரே கூட வச்சாங்க,நக்கீரன் கூட படமெல்லாம் போட்டுச்சு,எனவே அமெரிக்கா போய் தான் படம் பார்க்க தேவையில்லை,நானே பல பல படங்களை இணையத்தில் பார்த்திருக்கேன்,ஆடையற்ற நிலையில் பல ஆண்,பெண்கள் சடலமாக கிடத்தப்பட்டிருப்பார்கள்,எனவே தமிழக அரசியல்வாதிகளுக்கு அதெல்லாம் தெரியாமல் போயிருக்க வாய்ப்பேயில்லை, என்ன இப்போ சர்வதேச ஊடகத்தில் வந்திருக்கு என்பதால் கூடுதலாக உணர்ச்சி வசப்படுகிறார்கள்.

வழக்கமா தி.மு.க ஈழ விவகாரத்தில் எதை செய்தாலும் எளிதில் மக்கள் நம்பி ஆதரவு அளிப்பார்கள்,இம்முறை பந்துக்கு பெரிய ஆதரவேயில்லை. மற்ற கட்சிகளும் நேரடியாக செய்யாமல் மாணவர்கள் பின்னால் போய் ஒளியக்காரணமே அவர்களுக்கே நாம் செய்வது ரொம்ப தாமதமான செயல்னு புரிந்துப்போச்சு,ஆனால் திமுக தான் புரிந்துக்கொள்ளவில்லை.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

//? ராசபட்சே குடும்பத்துக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?//

நல்லாக்கேட்டிங்க, இதுக்கு பதில் கொஞ்சம் யோசித்தாலே பிடிபடுமே?

இரான்,இராக்,வடக்கொரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேர்தல் அற்ற சர்வாதிகார ஆட்சி, அப்படியே தேர்தல் நடத்தினாலும் அவர்களே வெற்றி என ஒரு தலைப்பட்சமாக அறிவிக்க கூடிய நாடு, மாற்று தலைவர்களே அங்கு கிடையாது.

ஆனால் இலங்கையில் அப்படியல்ல ,இராசபக்சே ஆட்சிக்கு போட்டியுண்டு, இப்பொழுது பக்சேவை சிங்கள மக்கள் ஹீரோவாக பார்க்கும் நிலையும் இருக்கலாம், ஆனால் அவரது செயல் தான் பொருளாதார்ர தடைக்கு காரணம் என ஆகிவிட்டால் எதிர்ப்பார்கள், எனவே மீன்டும் ஒரு தேர்தலில் வெற்றிப்பெற முடியாது, ரனில்,சந்திரிகா போன்றவர்கள் வசம் ஆட்சி மாறும் வாய்ய்ப்புள்ளது.
தலைமை மாறினாலும் அவர்களும் பக்சே போல இருக்க மாட்டார்களா என்றால் இருக்கலாம், ஆனால் பொருளாதார தடை போன்ற வலிமையான நடவடிக்கை வரும் என்று ஒரு எச்சரிக்கையுடன் பக்சே அளவுக்கு கடுமையாக போக்கினினை மேற்கொள்ள தயங்குவார்கள்.

இலங்கையில் இன்னும் ஜனநாயக் தேர்தல் முறை இருப்பதால் எளிதில் பொருளாதார தடை என்பது மாற்றம் கொண்டு வரும்,எனவே ரொம்ப நாளூக்கு தடையை வைத்திருக்க தேவையிருக்காது.

#வட கொரியாவை பொறுத்தவரை கம்யூனிச நாடு என்பதால் சினா,ரஷ்யா முழுமூச்சாக உதவுகின்றன அதே அளவுக்கு இலங்கையில் ஆர்வம்ம் காட்ட மாட்டார்கள்.

தமிழக நிலவரங்கள் அறியாமல் நீங்கள் இருக்கலாம், இன்றும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்க காரணம் மீன்ப்பிடித்தல் மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து தீப்பெட்டி முதல் பலப்பொருட்கள் இலங்கை வடகிழக்கு பகுதிக்கு கடத்தப்படுவது வழக்கம்,அது இன்னும் தொடர்கிறது என்பதை தாக்குதல்கள் தெளிவுப்படுத்துகின்றன.

எனவே வடகிழக்கு பகுதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் தற்போதுள்ள இலங்கை அரசால் வழங்கப்படவில்லை, மக்கள் தமிழகத்தினை சார்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

ராசபக்சே இருப்பதால் சிங்கள மக்களுக்கு பாதிப்பில்லை, அவரை சர்வதேச சமூகம் குற்றவாளியாக பார்க்கவில்லை என சிங்கள மக்கள் நினைக்கும் வரைக்கும் தான் அவருக்கு ஆட்சி இலங்கையில்,சர்வதேச சமூகம் ராசபக்சேவின் அரசை தண்டிக்க நினைப்பதால்,பொதுவான சிங்கள மக்களுக்கும் பாதிப்பு எனில் ,மக்கள் ஆதரவு போய்விடும்,ஆட்சி இழப்பு என்பதே பக்சேவுக்கும் குடும்பத்துக்கும் பெரிய இழப்பு தானே?

சர்வதேச அளவில் பக்சேவுக்கு கண்டனமே இல்லை ஏனில் சிங்கள மக்கள் என்ன நினைப்பார்கள் எனில் பக்சே நமக்காக போரிட்ட இனமான வீரன் என கொண்டாட செய்வார்கள், ஆனால் குற்றவாளி என அறியப்படும் நிலையில் எதற்காக பக்சேவிற்காக்க நாம் துன்பப்பட வேண்டும் என ஒதுக்கிவிடுவார்கள்.

ஆட்சியில் இல்லாவிட்டால் பக்சேவினால் இலங்கையில் வசிக்க கூட முடியாது ,நாடுவிட்டு நாடு ஓடத்தான் வேண்டும், பாக்கிஸ்தானில் முஷாரஃப் நிலை என்ன ஆனது எனப்பார்க்கவும்.

// ஆனால் சும்மா சவுண்டு விடாமல் எவ்வாறு செய்தால் பாதிக்கப்பட்டோருக்கும் உதவும் என பார்க்கவேண்டும். அதைவிடுத்து பழிக்குபழி என கத்தினால் உண்மையில் கஷ்டப்படும் ஈழ பொதுமக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை.//

பக்சே பொறுப்பில் உள்ளவரையில் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு என செய்யப்படும் பொருளாதார உதவிகள் எதுவும் போய் சேராது,இது வரையில் இந்தியாவே 25,000 கோடி உதவி செய்தது எனக்கணக்கு சொல்கிறது,அதில் எவ்வளவு மக்களுக்கு போய் சேர்ந்திருக்கும்?

இலங்கையில் பொதுவான சிங்கள மக்களுக்கு ப்க்சேவின் செயல்பாடு பிடிக்கவில்லை,அதே சமயம் அகற்றவும் வாய்ப்பில்லை, ஏன் எனில் பெரும்பாலான அடிப்படை வாத சிங்களர்களுக்கு பக்சே நல்லவனாக தெரியும் சூழல், பொருளாதார தடை வரும் சூழலில் பக்சேவினால் நாட்டுக்கு பாதிப்பு என ஆதரவு குறையும், மற்ற மிதவாத அரசியல் கட்சிகள் அவ்வாய்ப்பினை பயன்ப்படுத்தி ஆட்சி மாற்றம் கொண்டு வரும்.

ஆட்சி மாற்றம் வராத சூழலில் ,என்ன தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினாலும் அது அவர்களுக்கு போய் சேராது, அப்பணத்தை வைத்து சிங்கள மக்களுக்கு நலத்திட்டம் செய்து,பக்சே தனது அரசியலை பலப்படுத்துவார் என்பது எனது புரிதல்.

? said...

இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டுமானால் இந்தியா மட்டும்தான் விதிக்க வேண்டும். மற்ற உலக நாடுகள் ஒரு போதும் சம்மதிக்காது. மேலும் இந்தியாவை கட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்பு என்பதால் இலங்கைக்கு கட்டாயம் சீனா உதவும்.

மேலும் எப்போது குண்டு வெடிக்கும் என பயத்தில் இருந்த சிங்கள மக்களை புலி பயத்திலிருந்து மீட்டவர் என சிங்கள பொதுமக்கள் மரியாதையுடனே ராசபட்சேவை கருதுகிறார்கள். பொருளாதாரத்தடை விதித்ததும் அவர் இலங்கையின் சர்வதிகாரியாக நியமித்துக்கொண்டால், அதற்கு சீனா ஆதரவு அளித்தால் கதை முடிந்துவிடும்.

அது போக இந்திய பொருட்கள்தான் ஈழப்பகுதிகளில் விற்கபடுகின்றன. பொருளாதார தடை என்றால் மக்கள் ஒரு சோப்பு, மருந்து கிடைக்காமல் அவதியுறுவர். ஆகவே நீங்கள் சொல்லுவது மற்றும் நான் சொல்லுவது எல்லாமே ஒரு ஊகம்தான். ஆகவே இலங்கை தமிழ் மக்களை கலந்தாலேசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்துவிட்டு நொந்து போயியுள்ளோரை மேலும் அழித்துவிடக்கூடாது.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு காலம் கடந்தாவது தமிழகத்தில் குரல் எழும்புவதை வரவேற்கிறேன்.இதில் ரிஷி மூலம் நதி மூலம் தேடுவது இப்பொழுது முக்கியமல்ல.சில அரசியல் பின்புலங்கள் இருந்தாலும் கூட மாணவர்கள் என்ற புது வடிவில் தமிழகத்தின் குரல் உருவாகிறது.

இப்போதைய மனித உரிமைக்குழுவில் அமெரிக்க தீர்மானம் தமிழர் நலன் சார்ந்து அல்லாமல் புவியியல் சார்ந்து கூட இருக்கலாம்.முதல் வரைவின் சொறபதங்கள் மூன்று முறை மாற்றப்பட்ட வரைவு அழுத்தங்கள் குறைந்து நீர்த்துப் போயும் கூட இருக்கலாம்.ஆனால் ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மனித மீறல்கள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் கண்டனங்களை தெரிவிக்கின்றன என்பதோடு ராஜபக்சே ஆட்சி குறித்த அசைதலுக்கு மெல்ல தளம் வகிக்கிறது.

உலகநாடுகளே தம் நலன் சார்ந்தே வாக்களிக்கின்றன.இதில் தமிழகம் சார்ந்தும் எல்லாம் அரசியல் என்று இருப்பதில் என்ன தவறு?டெசோ குறித்த விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை இப்பொழுது தி.மு.க உணர ஆரம்பித்திருக்கிறதென்றே அவர்களின் முயற்சியில் தெரிகிறது என்பதோடு இப்பொழுது உருவான மாணவர்களின் போராட்டங்களோடு தமிழகத்தில் காங்கிரஸ்க்கு இன்னுமொரு சாவுமணி அடிக்கப்படப்போகிறது என்பதை உணர்ந்தும் கூட கழன்று கொள்ளும் யுக்தியை கலைஞர் கையில் எடுத்திருக்க கூடும்.

தனித்தனியாகவோ அல்லது எதிரும் புதிருமாகவோ தமிழக கட்சிகள் நின்றாலும் கூட ஈழத்தமிழர்களுக்கான ஒட்டுமொத்தக் குரலாகவே தமிழகம் இருக்கிறது.உங்களைப் போலவும் தவ்ஹீத் ஜமாத் பந்துகள் போலவும் சில விதி விலக்குகள் இருக்கலாம்:)

ராஜ நடராஜன் said...

சென்ற பதிவில் இந்தியன் கொடுத்த தொடுப்பில் தீக்‌ஷித் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.தூதரக ஆணையர் பதவியிலும் இலங்கை பிரச்சினையிலும் உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமில்லையென்றதோடு ராஜிவ் காந்தி இறந்ததும் கூட எந்த வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லையென்றார்.ஜடமாக இருப்பதோ அல்லது பிரச்சினையின் போதோ உணர்ச்சி வசப்படாமல் மூளைக்கு முன்னுரிமை கொடுப்பதென்பதோ சொல்வதற்கும் எழுதுவதற்கும் சரியாக இருக்கும்.அல்லது விதிவிலக்குகள் இருக்கலாம்.மூளையை மீறிய உணர்ச்சியே சாதாரணமாக மனிதனுக்கு செயல்படுகிறது.ஜனாதிபதி நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் புஷ்க்கே விமான தாக்குதல் செய்தி வந்த போது முகம் பேயறைந்த மாதிரிதான் இருந்தது.எனவே உணர்ச்சி வசப்படாமல் செயல்படனும்ங்கிறதெல்லாம் பீலா:)

தற்போதைய நிலையில் உணர்ச்சி வசப்படுவது ஒன்று மட்டுமே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழி.உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு மாணவர்கள் பிரச்சினைகளின் எல்லைகளை உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதும் அவர்களது நேர்காணல்களில் தெரிகிறது.

வேகநரி said...

வவ்வால்,
//இன்றும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்க காரணம் மீன்ப்பிடித்தல் மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து தீப்பெட்டி முதல் பலப்பொருட்கள் இலங்கை வடகிழக்கு பகுதிக்கு கடத்தப்படுவது வழக்கம்,அது இன்னும் தொடர்கிறது என்பதை தாக்குதல்கள் தெளிவுப்படுத்துகின்றன.எனவே வடகிழக்கு பகுதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் தற்போதுள்ள இலங்கை அரசால் வழங்கப்படவில்லை மக்கள் தமிழகத்தினை சார்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.//
ஒரு அறிவுஜீவியான நீங்களே இப்படி நம்பும் போது தமிழகத்தில் உள்ள முட்டாள்களின் நிலமை எந்தளவில் இருக்கும் என்பதை அறிய முடிகிறது.நீங்களும் இன்னும் ஈழ போர்க்காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது தான் ஒரு தடவை நேரில் இலங்கை போய் பார்த்து வரும்படி சென்னேன். வவ்வால், இலங்கை தமிழ்பகுதிகளில் தீப்பெட்டி மட்டுமல்ல வெளிநாட்டு எலற்றோனிக் lighter கூட கடையில் வாங்கலாம் முறைபடி இறக்குமதிசெய்யபட்டது. அவர்களுக்கு தேவை நீண்ட கால போரினால் பாதிப்படைந்த அவர்கள் வாழ்கையை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான உதவி.பொருளாதார தடை கொண்டுவந்து பழையபடி துன்பபடுத்த மனிதாபிமானம் கூட இல்லாம இசெனாவின் லயோலா கல்லூரி மாணவர்கள் கேட்டாங்களோ தெரியல்ல.

வேகநரி said...

சகோ நந்தவனத்தான்,
கம்யூனிச வட கொரியாகாரன் இந்த வீடியோவில் அமெரிக்கா எப்படி என்று தனது நாட்டு மக்களுக்கு சொல்கிறான்.
http://msnvideo.msn.com/?channelindex=4&from=en-us_msnhp#/video/85746905-0ab0-c6c7-c62f-97b5c11eac09
இலங்கை பற்றி தமிழகத்தில் சொல்லபடும் கதைகளும் நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

மன்னா...

உமது பின்னூட்டம் நச்...


கொங்கு நாட்டான்.

Anonymous said...

மன்னா...

கனிமொழி 2G வழக்கில் இருந்து விடுவிப்பு....இனி கலைஞர் அடித்து ஆடுவார்....:-)

கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

இந்திய வெளியுறவு துறையை விட சிறப்பாக சிந்திக்கிறீர்கள் :-))

சீனாவால் ஓரளவுக்கு மேல் இலங்கைக்கு உதவி செய்திட முடியாது, செய்யவும் விரும்பாது.

உதாரணமாக இலங்கைக்கு தேவையான பெட்ரோலியப்பொருட்களை சுத்திகரித்து இந்தியாவே வழங்குகிறது. இந்தியா அதனை நிறுத்திக்கொண்டால் ,சீனாவோ ,பாகிஸ்தானோ பெட்ரோலியப்பொருட்களை வழங்குமா?

பெட்ரோல் என்பது சீனாவுக்கும்,பாகிஸ்தானுக்குமே மிகவும் அத்யாவசியமானது,இறக்குமதியில் தான் வண்டி ஓடுகிறது,எனவே இன்னொரு நாட்டின் தேவைக்காக சுத்திகரித்து அனுப்பாது.

பெட்ரோல் போன்ற ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு,அதற்கெல்லாம் இந்திய உதவியே அவசியம். இந்தியா மட்டுமே தனிப்பட்ட முறையில் சிலவற்றை தடை செய்தால் கூட இலங்கையின் நிலை மோசமாகும். என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தியாவிடம் வாங்கிக்கொண்டு தமிழர்களுக்கே அப்பு அடிக்கும் ராசபக்சே அரசுக்கு எதற்கு உதவ வேண்டும்?

மேலும் பொருளாதார தடை என்பது ஒரு ஆப்ஷன் என்று தான் சொல்லியிருக்கிறேன், ராசபக்சே பதவியில் இருக்கும் போது என்ன தான் உதவி செய்தாலும் பாதிக்கப்பட்ட மக்களூக்கு போய் சேராது, இராசபக்சேவை போர்க்குற்றவாளியாக தண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்,முதலில் அவர் மீண்டும் அதிபராகமல் தடுக்கப்பட வேண்டும்.

------------

ராச நட,

வாரும்,நன்றி!

நீங்க சொல்வதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கு,ஆனால் அவ்வப்போது எழும் போராட்டக்குரல்கள் சிறிது காலத்திற்கு பின் அடங்குவதும்,மீண்டும் ஒலிப்பதுமாக இருக்க காரணம் என்ன என பார்க்க வேண்டும், மாணவர்கள்,மக்களை தேவைக்கு அரசியல் இயக்கங்கள் தூண்டி குளிர்காய்கின்றன. இதனை புரிந்துக்கொள்ள பெரிய அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை.

//.இதில் தமிழகம் சார்ந்தும் எல்லாம் அரசியல் என்று இருப்பதில் என்ன தவறு?//

அப்போ அதனை விமர்சித்தால் என்ன தவறு,தேவைக்கு குரல் கொடுக்க வா, என் தேவை முடிஞ்சுப்போச்சு மூடிக்கோ என்றால் மூடிக்கணுமா? அரசியல்வாதிகளின் ஆட்டத்துக்கு கூட சேர்ந்து ஆட கூட்டம் கூடனுமா?

அம்மையாரும், அய்யாவும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக ஒரு முறை பேசிக்குரல் கொடுத்தாலே மத்திய அரசுக்கு அடிவயிற்றில் ஜன்னி வைத்துவிடும். தமிழர் நலம் தான் முக்கியம் என்றால் அரசியல்வேறுபாடு இல்லாமல் ஒன்றாக குரல் கொடுத்தால் என்னக்கேடு?

இவர்கள் செய்வதெல்லாம் நான் ஒன்றும் சும்மாயில்லை நானும் குரல் கொடுத்தேன் என பதிவு செய்யும் நோக்கிலான அரசியல் வித்தைகளே, நீண்ட நெடுங்காலமாக இப்பிரச்சினை தீராமல் இருக்க காரணமே ஆளுக்கு ஆள் தாங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்த பட வேண்டும் என்ற சுயநலமே.

இப்படித்தனி ஆவர்த்தனம்ம் செய்வதால் தான் மத்திய அரசுக்கு கவலையில்லை,எப்படியும் இவர்களே கத்திவிட்டு இவர்களே ஓய்ந்துவிடுவார்கள் என்ற அலட்சியம் தான் மிக அதிகம்.

தமிழன் உயிர்தான் முக்கியம்னு எந்த அரசியல் தலைவரும் மனசார விரும்புவதேயில்லை என்ற அடிப்படையை புரியாமல் ,குரல் கொடுத்தான் எங்க தலைவன்னு இன்னும் எத்தினி நாளுக்கு தான் நம்மையே நாம் ஆறுதல்ப்படுத்திக்கொள்வது?

இந்திய அரசு இது வரையில் செய்தது என்ன? அதன் பலன் என்ன என கூட்டிக்கழித்து பார்த்தால் பூஜ்ஜியம் தானே?

நீங்கள் அறிவீர்களோ மாட்டீர்களோ, உண்மையாக எந்த ஒரு அரசியல் தலைவரும் தொடர்ந்து செயல்ப்பட்டிருந்தால் ஒரு நல்ல தீர்வு கிட்டியிருக்கும்.

அதற்கெல்லாம் நம்ம ஜனநாயக நாடாளுமன்ற அமைப்பில் வழி இருக்கிறது என்பதை அறிவீர்களா?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனி நபர் சட்ட முன்வறைவு தீர்மானம் எனக்கொண்டு வந்து , மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்கை கோரிப்பெற்றுவிட்டால் சட்டமாகிவிடும்,அதற்கு ஆளுங்கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமேயில்லை.

நம் நாட்டில் எம்பிக்கள் எல்லாம் கட்சி தலைமை சொல்வதை மட்டுமே கேட்கும் அடிமைகளாக இருப்பது பெரிய பின்னடைவு.

காங்கிரஸ் ஆட்சி என்பது மைனாரிட்டி ஆட்சித்தான் ,எனவே மற்றக்கட்சி எம்பிக்களை சந்தித்து தொடர்ந்து பேசி ,விளக்கி நம் கருத்தை ஏற்க வைத்து ,வாக்களிக்க செய்ய முயன்றால் முடியும்,ஆனால் யாருமே அப்படி எல்லாம் முயற்சிக்காமல் ,ஐ.நா, அமெரிக்கானு வேறப்பக்கம் கைகாட்டுகிறோம்.
-----------

வவ்வால் said...

வேகநரி,

நன்றி!

நாம் கேள்விப்பட்டதை வைத்தே சொல்கிறோம், அதுவும் மீனவர்களிடமே நான் பேசியப்போது சொன்னது, இன்னும் ஏன் சுடுகிறார்கள் என்றால், இன்னும் கடத்தல் நடக்குது அதான் சுடுறாங்கன்னு சொல்கிறார்கள். கடத்தல் செய்யாதவர்களும் சுடப்படுகிறார்கள் ஏன் எனில் யார் கடத்த வராங்க, யார் மீன் மட்டும் பிடிக்க வராங்கன்னு தெரியாது என்னும் நிலை.

நீங்க சொன்னது போல இறக்குமதி பொருட்கள் எல்லாம் எல்லா பகுதியிலும் கிடைக்குமா? அங்கு பலப்பகுதிகளில் மின்சாரமேயில்லை,டீசலுக்கு கடும் தட்டுப்பாடு என்றும்,டீசல் /மண்ணெண்னை இங்கிருந்து கடத்தப்படுகிறது என்றும் சொன்னார்கள்.

இப்பொழுது உள்ள நிலையே நீடித்தால் ராசபக்சே தொடர்ந்து ஆட்சியைப்பிடிக்கும் நிலை உருவாகும், அதன் பின்னர் முற்றிலுமாக இலங்கையில் தமிழர் உரிமைகள் பறிக்கப்படும்,அதுக்கு சில காலம் பொருளாதார தடை என்னும் கஷ்டத்தை தாங்கிக்கொண்டால் ,ராசபக்சேவை வீட்டுக்கு அனுப்பிவிடலாம், பதவியில் இல்லாத போது எளிதில் போர்க்குற்ற நடவடிக்கைக்காக விசாரிக்க முடியும்.

எது எப்படியோ விரைவில் ஏதேனும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய நிலை.
===============

கொங்கு நாட்டு ஜப்பான்,

வாரும் ,நன்றி!

மன்னருக்கு நன்றாக கட்டியம் கூறுகிறீர் :-))

//கனிமொழி 2G வழக்கில் இருந்து விடுவிப்பு..//

இதற்கு தானே ஆசைப்பட்டார் மூனா கானா :-))

ஆனால் இன்னும் அஞ்சா நெஞ்சருக்கு போட்ட சுருக்கு அப்படியே இருக்கு, எப்போது வேண்டுமானாலும் இழுத்துப்பிடிப்பாங்க :-))

Anonymous said...

vovs,

http://profit.ndtv.com/news/corporates/article-sri-lanka-rejects-5-000-tonnes-of-diesel-from-indianoil-citing-poor-quality-317673

"Indian Oil's Lanka chief Subod Dakwale said the shipment in question had came from Singapore."

சிங்கப்பூரில் (distance) இருந்து வருகிற போது..ஏன் சீனாவில் வராதா...???

கொங்கு நாட்டான்.





ராஜ நடராஜன் said...

வவ்வால்!பொருளாதார தடை என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது போல் தெரிகிறது.என்னமோ அரிசி,பருப்பு போன்றவைகளை அனுப்பாமல் போனால் மக்கள் அவதிக்குள்ளாவார்கள் என்கிற மாதிரி வேகநரி பின்னூட்டம் சொல்கிறார்.இந்தியா பொக்ரான் பரிசோதனைக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.முன்பு இந்தியாவுக்கு அணு ஆயுத பொருளாதார தடை மாதிரி ஏற்கனவே இலங்கை ஈரானிடம் பெட்ரோல் வாங்ககூடாது என்று சொல்லி பின்பு தடையை கொஞ்சம் தளர்த்திக்கொண்டது.ஐ.எம்.எஃப் கடன் உதவி செய்யக்கூடாது போன்றவைகள் பொருளாதார தடையில் வரும். சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் செக்யூரிட்டி கவுன்சிலில் வீடோ வாங்கி மொத்த பொருளாதார தடைக்கு வழியில்லாமல் செய்து விடும்.எனவே பொருளாதார தடை நம்பகத்தன்மையற்றது.

ராஜபக்சே அரசுக்கு குழி பறிக்க ஒரே வழி இலங்கையில் பொன்சேகா அல்லாத ரணில்,சந்திரிகா போன்றவர்களின் எதிர்க்கட்சி வலிமைப் படுவதும் அதற்காக அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியும்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே ராஜபக்சேவுக்கும்,ராஜபக்சேவை விட திருட்டு முழி முழிக்கும் Hardcore fanatic கோத்தபயலுக்கும் எதிர்கால பயத்தை உருவாக்க முடியும்.

சிங்களவர்களில் பலர் போர்க்குற்றங்களை விமர்சிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.இவர்களோடும் இணைந்து ஒரு பொது கருத்தியலை கொண்டு வர முயற்சிகள் தேவை.இதெல்லாம் உணர்ச்சிக்கு அப்பால் செயல்படுத்த வேண்டியவைகள்.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னன்னா தற்போதைய நிலையில் தமிழகத்தில் இலங்கைக்கான எதிர்ப்பும் ராஜபக்சேவுக்கான எதிர்ப்பும் இருப்பது தெரிந்தும் அந்தாளு திருப்பதி வந்துதான் தனது பாவத்தைக் கழுவிக்கொள்வேன் என கோயிலுக்கு வருகிறார்.மக்களும் இந்தியா சுற்றிப்பார்க்கப் போறேன்னு தமிழகத்துக்கு டூர் வந்துடறாங்க.அதாவது பரவாயில்லை ஏதோ ஆர்வத்துல வந்துடறாங்கன்னு பலரின் கவனத்தையும் ஈர்ப்பதில்லைன்னு நினைக்கலாம்.ஆனால் தஞ்சை கோயிலுக்கு வந்த பிக்கு அட்சர சுத்தமா பிக்கு ஆடையோடு போராட்டங்களையெல்லாம் கவனிக்காமல் போட்டோ பிடித்துக்கொண்டிருக்கிறார்.

ஒற்றை ஆளை பலரும் கூடிகிட்டு ரகளை செய்தது பரிதாபமாக இருந்தது என்றாலும் போராட்ட காலத்தின் பலரின் கோபங்களை உதாசினப்படுத்தும் அரசு அனுமதிகளின் போக்கு புரியவேயில்லை.

விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து இத்தாலிக்கு அனுப்பி வைத்த ஆட்களை திருப்ப அனுப்ப மாட்டேன் என அடம்பிடிக்கும் இத்தாலியே இந்தியாவில் இருக்கும் இத்தாலியர்கள் கவனமாக இருக்கவும் என அறிவிப்பு வெளியிடும் போது இலங்கை ஒன்றையும் பொருட்படுத்தாமல் தமிழகமே போராட்டக்களத்திலிருக்கும் போது பிக்குகளை ஆராய்ச்சிப் பயணம்ங்கிற பெயரில் உல்லாசப்பயணம் அனுப்புவதில் ஏதோ திரை மறைவு வேலை நிகழ்கிறது.

தமிழகத்தை சுற்றி ஏதோ சூதுவலை பின்னப்படுவது போலவே மத்திய அரசின் நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன.ஒரு விதத்தில் அமெரிக்காகாரனைப் பாராட்ட வேண்டும்.சூதுவாதுகளில் பதவியில் இருக்கும் போது ஈடுபட்டாலும் கூட பதவிக்காலம் முடிந்து புத்தகம் போட்டு தவறுகளை வெளிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.இந்திய பீரோகிரட்ஸ் பென்சன் வாங்கின கையோடு செய்த தவறுகளை அப்படியே மூடி மறைத்து மண்டையப் போட்டு விடுகிறார்கள்.

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

சிங்கப்பூரில் இருந்து வந்த டீசலும் இந்தியன் ஆயில் வாங்கி கொண்டு வந்த எண்ணை தான்.

ஏன் இலங்கை அரசு நேரா வாங்கிக்க வேண்டியது தானே?

டப்பு லேது , இந்தியன் ஆயில் தான் கிரெடிட்ல கொடுக்கும்.

சீனாவால் அப்படி தொடர்ந்து கொடுக்க இயலாது. ஏன் எனில் சீனாவே பெட்ரோலிய தட்டுப்பாட்டில் சிக்கி இருக்கும் நாடு, காரணம் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க ஏகப்பட்ட எரிபொருளை பயன்ப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதுமே தட்டுப்பாட்டில் இருப்பது எரிபொருளே.

இந்தியாவுக்கு மூன்று நாளுக்கு புதிய குருட் வரவில்லை எனில் பெட்ரோலிய தட்டுப்பாடு வந்துவிடும். சீனாவுக்கு ஒரே நாளில் வந்துவிடும்.

தமிழ்நாட்டில் போன ஆண்டு வந்த பெட்ரோலிய தட்டுப்பாட்டினை நினைத்துப்பார்க்கவும்.

நாம் அந்த நிலையிலும் இலங்கைக்கு தினசரி ஷிப்மென்ட் செய்தோம்.

உலக அளவில் எல்லா நாடுகளுமே பெட்ரோலிய விவகாரத்தில் மிக கெடுபிடியாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னா!பின்னூட்ட கமெண்ட்ரிக்கு நன்றி.

கையில டாலரு,சரியான கனெக்சன் இருந்தா பெட்ரோல் வாங்குவது அப்படி ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமல்ல.அரபு ஷேக்குகள் இஸ்ரேலுக்கு பெட்ரோல் தரமாட்டேன் என பேப்பரில் அளவில் சொல்றாங்க.ஆனால் இஸ்ரேல்காரன் உபயோகிக்கிற பெட்ரோல் எல்லாமே அரபி பெட்ரோல்தான்.நேரடி ஏற்றுமதி மட்டுமே சாத்தியமில்லை.மூணாவது நபரின் பெயரில் லெட்டர் ஆஃப் கிரடிட் செய்து (அரேபிய வில்லங்கமில்லாத வங்கியில் )பெட்ரோலை இறக்குமதி செய்து விட முடியும்.

ஈரான் பொருளாதார தடை காரணமாக இலங்கைக்கு கடனாகவே ஈரான் பெட்ரோல் தரும்.மற்றவர்களிடம் கைமாற்று வாங்கி வாங்கும் போது டாடர் செலவு,இதர செலவுகள் கூடும்.

? said...

இந்தியா ஓசியில் பெட்ரோல் கொடுப்பதில்லை. நோபாளமும் சீனா கஸ்ட்டியில் போய்விட்ட பொறவு, இந்தியாவிடம் சிக்கியிருக்கும் ஒரே அடிமை இலங்கைதான். அதற்கு ஆப்பு வைக்க வல்வால் ஆலோசனை தருகிறார். மாணவர் போராட்டம் வென்று தமிழ்நாட்டுக்கு வெளியுறவுத்துறை கிடைத்தால் அம்மா வவ்வாலை அமைச்சர் ஆக்கிவிட வேண்டியதுதான்!

இலங்கை பேரினவாதிகளும் இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை குறைந்து கொள்ள வலியுறுத்துகிறார்கள் என்பது முரண். இவர்களை குஷிபடத்தவே இலங்கை போன மாதம் பெரிய டீசல் ஷிப்மென்டை திருப்பி இந்தியாவுக்கு அனுப்பியது. இந்தியாவை மட்டும் சார்ந்திருந்தால் அப்படி செய்யுமா? சீனாவை விட்டால் ஆயில் சப்ளைக்கு நாடே இல்லையாக்கும்.

இலங்கையில் கிடைக்கும் கேஸ் பெட்ரோலுக்கு அமெரிக்காவின் எக்ஸான் மற்றும் ஐரோப்பிய கம்பனிகள் ஆர்வம் காட்டுகின்றன். அவர்களை சுத்தகரிப்பு ஆலை அமைத்து பெட்ரோல் வித்துக்க என்றால் மாட்டேன் என்றா சொல்லிவிடப்போகிறார்கள்? மேலும் இலங்கையிடம் நாளுக்கு 50,000 உற்பத்தி செய்யும் ஆலை இருக்கிறது. இதுவே ஏறக்குறைய பாதி தேவையை பூர்த்தி செய்துவிடும். இதனை விரிவாக்க 2011-ல் சீனா $1.5 பில்லியன் கொடுத்தது.மேலும் துபாயின் ஸ்டார் பெட்ரோ இன்னொரு ஆலை அமைக்க கான்டராக்ட் வாங்கியுள்ளது.

இந்தியாவை விட்டால் உலகில் ஒருத்தனும் ரிபைன்டு ஆயில் விற்பதில்லையயா? பெட்ரோ வியட்நாமிடமிருந்து இலங்கை ரிபைன்டு ஆயில் வாங்குகிறது. இந்தியாவிற்கு பெட்ரோல் விற்கும் உரிமையை இலங்கை வழங்கியது போக இலங்கையில் பெட்ரோல் நிறுவனம் வேறுநாடுகளிடமிருந்தே குருடு ஆயிலையும் ரிபைன்டு ஆயிலையும் வாங்குகிறது. எதையாவது எழுதி அடுத்தவன் வாயை அடைச்சிடனும்னு எழுதக்கூடாது
----------

அண்ணன் ராச நடவின் கடைசி இரு பின்னூட்டங்களும் அர்த்தமுடையவையாக இருக்குது

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

// சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் செக்யூரிட்டி கவுன்சிலில் வீடோ வாங்கி மொத்த பொருளாதார தடைக்கு வழியில்லாமல் செய்து விடும்.எனவே பொருளாதார தடை நம்பகத்தன்மையற்றது. //

அப்போ போர்க்குற்றவாளியாக மட்டும் விசாரிக்க விடுவாங்களா?

சீனா அதை செய்யும் இதை செய்யும்னு பயமுறுத்தியே காரியம் சாதிக்கும் டெக்னிக் இது.

பங்க்ளாதேஷ் பிரிச்சப்போ சீனா ஓடி வந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக சண்டைப்போடும்னு நினைச்சாங்க,ஆனால் சீனா சைலண்டா வேடிக்கை தான் பார்த்துச்சு.

எந்த நாடும் அனாவசியமாக தனது பொருளாதாரத்தை சேதப்படுத்திக்க விரும்பாது.

சீனா முன்னரை விட ரொம்பவே கேப்பிடலிஸ்டிக் பாதைக்கு போயிடுச்சு, இன்னிய தேதிக்கு இந்தியா சீனாவிடம் நிறைய வாங்குது, சீனாவின் மேல் இந்தியாவுக்கு வெறுப்பு வருவது போல நடந்துக்க விரும்பாது. அப்படி ஆனால் அதன் உற்பத்தியை வாங்கும் மிகப்பெரிய வாடிக்கையாளரை இழக்க வேண்டியதாகும்.

இந்தியாவில் சீன பொருட்கள் இறக்குமதி செய்ய தடை என உருவானால் சீனாவுக்கு பல பில்லியன் டாலர் வருமானம் போகும்.

# ரணில்,சந்திரிக்கா ,பொன்சேகா எல்லாம் தானாக வலைமைப்பெற்று ஆட்சிக்கு வர முடிஞ்சால் போன தேர்தலிலேயே வந்திருக்கலாமே.

சிங்களர்களின் பாதுகாவலன் என்ற இமேஜை பக்சே உருவாக்கி வைத்துக்கொண்டார், இப்போ அந்த இமேஜ் உடைஞ்சா தான் மற்ற கட்சிகள் மேல வர முடியும்.

# இலங்கை- இந்தியா இடையே விசா ஆன் அரைவல் முறை இருப்பதால் எளிதில் பயணம் செய்யலாம். ஆனால் போராட்டமான சூழலிலும் வருவதற்கு ஒரு காரணம் , தமிழ்நாட்டில் சிங்களருக்கு பாதுகாப்பு இல்லை, நட்புறவு இல்லைனு சிங்களருக்கு இலங்கையில் போட்டுக்காட்ட ஒரு சாட்சி உருவாக்க நினைக்கிறார்களோ என்னமோ?

இதன் மூலம் சிங்கள மக்களுக்கு தமிழர் மீதான வெறுப்பு,பகை அணையாமல் இருக்கும்.

#இரான் குருட் ஆய்யில் வேண்டுமானால் கொடுக்கலாம், சுத்திகரிக்கப்பட்ட எண்னை கொடுக்காது.

2010 வரையில் இரானே பெட்ரோல் இறக்குமதி செய்தது. இப்பொழுது கூட சுய தேவை பூர்த்தி ஆகிவிட்டது, கொஞ்சம்ம் ஏற்றுமதி செய்கிறோம் என்றாலும்,அதற்கு காரணம் அங்கு ரேஷன் முறை மூலம் உபயோகத்தினை குறைத்துக்கொண்டார்கள்.
காண்க...
//Average daily gasoline consumption stood at 73 million liters in 2006 but fell to 64 million liters per day in 2007 concurrent with gasoline rationing plan and to 61 million liters after the full implementation of the first phase of the subsidy reforms plan.[13] Gasoline production will reach 70 million liters per day in 2013.[13]
Major gasoline suppliers to Iran historically have been India, Turkmenistan, Azerbaijan, the Netherlands, France, Singapore, and the United Arab Emirates.[14][15] The Financial Times reported that Vitol, Glencore, Trafigura and other (western) companies had since stopped supplying petrol to Iran because of international sanctions.[16] In 2006, Vitol, a MNC based in Switzerland, supplied Iran with 60% of its total gasoline cargo imports.[14] In September 2010, Iran claimed that it has stopped importing gasoline according to the domestic capacity expansion plans.[17]//

http://en.wikipedia.org/wiki/National_Iranian_Oil_Refining_and_Distribution_Company#Fuel_imports

2007 இல் இன்னும் மோசம், 40% பெட்ரோல் இறக்குமதி செய்தது.

//Iran has the world's second largest oil reserves but lacks the refinery capacity to meet its own transport fuel demand. OPEC's second largest crude producer imports around 40 percent of its gasoline needs, which it then heavily subsidises.//

http://www.reuters.com/article/2007/06/19/us-iran-refinery-idUSL1490018620070619

இரானுக்கு ரொம்ப காலமாக பெட்ரோல் ஏற்றுமதி செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று :-))
----------------

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

நல்லாக்கொடுக்கிறிங்க டீடெயிலு, வியட்நாமில் இருந்து எம்புட்டு எண்ணை வருது? எவ்வளவு கடன் கொடுக்கிறாங்க.

இந்திய நிறுவனம் தாரளமா கடனில் வழங்குது. கொஞ்ச காலத்துக்கு முன்னர் எண்ணை வித்த கடனை தள்ளுபடி செய்ததாகவும் செய்தி. இப்படிலாம் எந்த நாடு உதவும்?


//இலங்கையில் கிடைக்கும் கேஸ் பெட்ரோலுக்கு அமெரிக்காவின் எக்ஸான் மற்றும் ஐரோப்பிய கம்பனிகள் ஆர்வம் காட்டுகின்றன். அவர்களை சுத்தகரிப்பு ஆலை அமைத்து பெட்ரோல் வித்துக்க என்றால் மாட்டேன் என்றா சொல்லிவிடப்போகிறார்கள்?//

ஹி...ஹி இப்போ வரைக்கும் எவ்வளவு எண்ணை எடுக்கிறாங்களாம் அங்கே?

ஆயில் ரிசர்வ் இருக்கலாம் னு ஆரம்பக்கட்ட சர்வே சொல்லுது அவ்வளவே, அதை எடுப்பது பொருளாதார ரீதியாக பலன் தருமானு இன்னும் தெரியவேயில்லை,அதுக்குள்ள அதை எடுத்து சுத்திகரித்து விற்பதை பற்றி பேசுறிங்களே :-))

இந்தியா நினைத்தால் பல வழிகளிலும் இலங்கைக்கு முட்டுக்கட்டை போட முடியும்,ஆனால் செய்யாது, செய்ய வைக்கும் அரசியல் சக்தி இருந்தால் என்றோ இலங்கை பிரச்சினை தீர்ந்து இருக்கும்.

இதை தமாசு என்று எடுத்துக்கொண்டாலும் , சொல்லி வைக்கிறேன் , நம்மள பிரதமரா ஆக்கினிங்கனா , இலங்கைப்பிரச்சினையை ஒரு ஆண்டுக்குள் முடித்து வைத்துவிடுவேன். இந்த விடயத்தில் முடியாது என்று இல்லை, செய்ய மனசில்லை என்பதே உண்மை.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் புதிய மாநிலங்களே உருவாக்கப்படாமலா இருக்கு, பின்னர் ஏன் தெலுங்கான உருவாகாமல் தடுக்கிறாங்க,எல்லாமே அரசியல்!

நாய் நக்ஸ் said...

ஐயையோ....கொல்லுறாங்களே.....

இருவருக்கும்....பொருந்தும்....

அப்புறம் வவ்வால்....இன்னுமா தேடுரீர்....???????

Anonymous said...

voval

watch National Geographic channel now...Taboo ..Bangladesh's prostitution center....மார்கபந்து...


raviraj

? said...

//இந்திய நிறுவனம் தாரளமா கடனில் வழங்குது. கொஞ்ச காலத்துக்கு முன்னர் எண்ணை வித்த கடனை தள்ளுபடி செய்ததாகவும் செய்தி. இப்படிலாம் எந்த நாடு உதவும்?//

அமெரிக்கா சீனா, சீனா இப்போது அதிக கடன் வழங்கும் நாடு! மேலும் இலங்கை பெட்ரோலுக்கு காசு தர இயலாத அளவில் இல்லை. கோடிகோடியாக அள்ளி கொடுத்து துபாய்காரனை சுத்திகரிப்பு ஆலை அமைக்க சொன்னயுள்ளது. ஆனா பெட்ரோலுக்கு தர காசு இல்லையா என்ன?

//எவ்வளவு எண்ணை எடுக்கிறாங்களாம் அங்கே?//

அங்கு எண்ணெய் எடுக்கும் வரை இக்கம்பனிகள் எண்ணெய் இறக்குமதி செய்து சுத்தகரிப்பு ஆலை அமைத்து சுத்தம் செய்து தந்தாலே போதுமே!

///ம்மள பிரதமரா ஆக்கினிங்கனா , இலங்கைப்பிரச்சினையை ஒரு ஆண்டுக்குள் முடித்து வைத்துவிடுவேன். இந்த விடயத்தில் முடியாது /

அதுல என்ன ஓய் கஞ்சத்தனம். உலகத்துல இருக்குற பிரச்சனை எல்லாத்தையும் முடித்துவிடுவேன்னு அடிச்சு உட வேண்டியதுதானே! உமக்கு வாக்குறிதி அளிப்பதில் பயிற்சி தேவை!

------------------------------------------------------------------------\\

சகோ வேகநரி,

இணைப்பு அளித்தமைக்கு நன்றி. இந்தியா அமெரிக்கா போன்றவை முதலாளிகளுக்காக அரசியல்வாதிகளால் நடத்தபடுபவை. ரிலையன்ஸ் ஏர்டெல் போன்ற கம்பெனிகள் பலகோடி இலங்கையில் முதலீடு செய்துள்ள சமயத்தில் இந்திய பொருளாதார தடை விதித்தால் இக்கம்பனி முதலாளிகள் கடும் கோபமடைவார்கள். சீக்கிரமாக எலெக்சன் வேற வருது. முதலாளிகளிடமிருந்து அரசியல்வாதிக்கு தேர்தல் பணம் வேண்டும். ஆதலால் முதலாளிகளை அரசியல்வாதகள் ஒரு போதும் டென்சனாக்க மாட்டார்கள். ஆக பொருளாதார தடை என்பது எட்டாகனிக்கு கொட்டாவி விட்ட கதைதான்.

Anonymous said...

// என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தியாவிடம் வாங்கிக்கொண்டு தமிழர்களுக்கே அப்பு அடிக்கும் ராசபக்சே அரசுக்கு எதற்கு உதவ வேண்டும்?//

Mindset!

அரை உண்மைகளின் அபாயம்
by B.R. மகாதேவன்


இந்தியா நிச்சயமாக இலங்கைக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை எடுக்கவே செய்யாது. அது முடியவும் செய்யாது. இலங்கை அரசு உள்நாட்டில் கலகம் விளைவித்தவர்களை அடக்கியிருக்கிறது… அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது

பஞ்சாபில் ஆரம்பிக்கப்பட்ட காலிஸ்தான் பிரச்னை இந்திய அரசால் ஓரளவுக்கு ”நல்ல முறை’யில் தீர்க்கப்பட்டிருக்கிறது. என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் என எல்லையோரப்பகுதிகளில் தீராத வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்போது ஈழத்தையும் உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு என்ற சாகசப் போர் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Anonymous said...

vovs

ஆர்.எஸ்.எஸ் டவுசர் இங்கு வந்து வாந்தி எடுத்து இருக்கிறது...


கொங்கு நாட்டான்.

வேகநரி said...

யாராவது உண்மைகளை சொல்லவந்தால் அது வாந்தியாக தெரிகிறது.அடிப்படை கல்வி அறிவில் இலங்கை தமிழர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.அடிப்படை கல்வியில் தமிழக தமிழர்கள் கீழான நிலையில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.ஆனால் உண்மை தமிழன் என்பவர் பாதி இலங்கை தமிழர்களுக்கு கல்வி கிடையாது என்று பொய் சொல்கிறார். அது இனிக்கிறது. தமிழக மீனவர் செய்தி வாசிக்கிறார் இலங்கை தமிழங்களுக்கு தீப்பெட்டி டீசல் மண்ணெண்னை பல பொருட்கள் இலங்கை அரசு தடை நாங்க தமிழகத்தில் இருந்து அவற்றை கொண்டு போய் நல்ல லாபம் வைத்து அவங்களுக்கு விற்போம் அதை அவங்க அதிக பணம் கொடுத்து வாங்கிப்பாங்க இந்த பொய்யும் இனிக்கிறது.இனவாதிற்காக பொய்களே கேட்டு கற்பனையில் வாழ்வதே பலருக்கு பிடிக்கிறது.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத்த,

நன்றி!

கொலையா கொல்லுற உங்களை போய் கொல்ல முடியுமா அவ்வ்.

விரைவில் சொல்கிறேன்.
---------------

ரவிராஜ்,

நன்றி!

நேட் ஜ்யோ பார்க்கணுமா? பார்ப்போம்!
-------------

நந்தவனம்,

நன்றி!

உங்களுக்கு காமெடி நல்ல வருது :-))

அந்நிய முதலீட்டில் தான் செய்றாங்க.

இலங்கை ஒரு நெட் டாலர் டெபிசிட் நாடு, 10 பில்லியன் டாலர் ஏற்றுமதி ,20 பில்லியன்ன் டாலர் இறக்குமதி, ஒரு டாலர் சுமார் 114 இலங்கை ரூபாய் என மிகப்பலவீனமான பொருளாதாரம். நாட்டில் ஜிடிபி மதிப்பில் 81% கடன்ன் வைத்துள்ளது. தாரளமாக எல்லாம் செலவு செய்ய முடியாது, இப்போது கொஞ்சம் வாணவேடிக்கை விடுவதெல்லாம் கடன் பணம்,விரைவில் அதன் பலனை பொருளாதார ரீதியாக சந்திக்கும்.

இலங்கை என்ற நாட்டின் பொருளாதாரம் தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பொருளாதாரம் அளவுக்கு கூட கிடையாது.தமிழ்நாட்டின் ஜிடிபி 149 பில்லியன் டாலர்கள், இலங்கையின் ஜிடிபி மதிப்பு 64 பில்லியன் டாலர்கள். இப்படி எல்லா வகையிலும் தமிழ்நாடு என்ற மாநிலத்தை விட பின்னாடி தான், என்ன தனிநாடு என்பதால் பல சுதந்திரங்கள் கிடைக்குது.

# ஒலகத்து பிரச்சினை எல்லாம் தீர்க்க ஒலகப்போலீஸ் அமெரிக்காவின் சனாதிபதியாவனும்,நாம இப்போதைக்கு இந்திய அளவில் பேசுவோம்.

#பொருளாதார தடைக்கு நம்ம ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க மாட்டாங்கன்னு தான் சொல்லிட்டு அதன் விளைவு என்னனு சொல்கிறேன்,அப்புறம் என்ன ரிலையன்ஸ்,ஏர்டெல்லுனு சொல்லிக்கிட்டு. நம்ம அரசியல்வாதிகளே பினாமியா நிறைய முதலீடு போட்டு இருக்காங்க,அப்புறம் எப்படி விடுவாங்க :-))
----------------------

அனானி,

மைண்ட் செட்டா,முதலில் உமக்கு மைக் செட்னா என்னானு தெரியுமா?

//அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது //

இந்திய ஆட்சியாளர்கள் உள்நோக்கம் வேறன்னு தான் சொல்லியாச்சே,அப்புறம் என்ன?

இப்போ மட்டும் சீனா காலுன்றாமல் ------- ஊன்றி இருக்கு?

இதில் தமிழக பிரிவினை சக்திகள் எங்கே இருந்து வருது,எல்லாம் மனப்பிராந்தியா?

//என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் //

அங்கெல்லாம் அம்மக்களுக்கே ஆட்சி அமைக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கு. காஷ்மீர் பிரச்சினை என்பது அம்மக்களாக கேட்கவில்லை,பாகிஸ்தான் தான் கேட்கிறது,பின்னர் ஆக்ரமித்து விடும்,ஆனால் இலங்கையில் போய் இந்தியா ஆக்ரமிக்காது. தனி ஈழம் அமைந்தாலும் அது தன்னாட்சி பெற்ற தனி நாடாக இருக்கும்.
-----------
கொங்கு நாட்டார்,

எந்த டவுசராக இருந்தாலும் சரி ,இங்கே வாலாட்டினால் டவுசர் உருவப்படும் :-))
------------

வேகநரி,

வாரும்,

உம்மை விவரமானவர்னு நினைச்சேன் இப்படி இருக்கீங்களே.

தமிழ்நாட்டை எதில் வேண்டுமானாலும் பின் தங்கி இருக்குனு சொல்லலாம் ஆனால் கல்வியில் மட்டும் சொல்லவே முடியாது.

இந்தியாவிலேயே கல்வித்துறை மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலம் தமிழ்நாடு,

இந்தியாவில் கல்வியை மேம்படுத்த வேன்டும் என வெள்ளைக்காரன் திட்டமிட்டப்போது முதலில் நினைவுக்கு வந்தது சென்னை மாகாணம் தான்.

இந்தியாவின் முதல் மூன்று பல்கலைகளில் ஒன்று சென்னைப்பல்கலை. அடுத்து மும்பை,கொல்கட்டா.

முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் கிண்டி பொறியியல் கல்லூரி எனப்படும் அண்ணா பல்கலை, 150 ஆண்டுக்களுக்கும் மேல் பழமையானது.
நீங்க என்னடான அடிப்படைக்கல்வியில் இலங்கை முன்னேறி இருக்குனு சொல்லிக்கிட்டு, அடிப்படைக்கல்வினா 5 ஆம் வகுப்பு வரைக்கற்பது அதுக்கா இம்புட்டு அலப்பறை?

இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகள் -சுமார் 550 கல்லூரிகள்.

இந்தியாவிலேயே இரண்டாவது அதிக மருத்துவக்கல்லூரிகள் சுமார் 32.

மிக அதிகமான நிகர் நிலை பல்கலைகள்.

ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் பொறியாளர்கள், 2,5000 மருத்துவர்கள், மேலும் சட்டம், கால்நடை, பல அறிவியல் பட்டங்கள் என பல லட்சம் பட்டதாரிகளை உருவாக்கும் மாநிலம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு உயர் கல்வி நிலையத்துக்கு இணையான கல்வி நிலையம்,பல்கலையை இலங்கையில் பேருக்கு கூட காட்டவியலாது.

# பொருட்களுக்கு தடை என சொல்லவில்லை தட்டுப்பாடு என சொன்னேன், இப்பொழுது அனைவருக்கும் எல்லாம் கிடைக்கிறதா? கிடைத்தால் சந்தோஷம் தான்.
------------------------

வேகநரி said...

வவ்வால், நான் இங்கே சொன்னது அடிப்படை கல்வி அறிவை பற்றி தான்.தமிழகத்தில் தமிழ்கடிதம் படிக்க முடியாத தமிழங்க இருக்கிறாங்க. இலங்கையில் தமிழ்கடிதம் கூட படிக்க முடியாத தமிழர்கள் கிடையாது. மற்றும்படி இலங்கை பல்கலை கழகங்களில் புள்ளி அடிபடையில் போதுமான புள்ளிகள் பெற்று இடம் பெற முடியாத இலங்கை தமிழ் மாணவங்க இந்தியாவில் வந்து படிக்கிறார்கள். புலிகளை கட்டுபடுத்துவாக சொல்லி அவர்களையும் அதிமுக தலைவி தடை விதித்ததாகவும் பின்புகருணாநிதி ஆட்சிக்கு வந்து அந்த தடை நீக்கியதாகவும் இலங்கையில் கல்விகற்ற மாணவர்களிடம் இருந்து நான் அறிந்திருக்கிறேன்.இந்தியாவின் முதல் மூன்று பல்கலைகளில் ஒன்று சென்னைப்பல்கலைகம் என்பதைவிட தமிழகத்தின் எல்லா மக்களும் எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்களா என்பதை தான் நான்பார்த்தேன். மற்றும்படி உலகப் பெரும் செல்வந்தர்கள் வரிசையில் இந்தியர்கள் இருக்கிறார்கள் சுவிஸ்ந்து நாட்டில் எல்லாம் இந்தியர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள் இப்படியான வசதிமிக்க இந்திய குடிமக்கள் வசிக்கும் எமது நாட்டில் இந்தியாவில் நிரந்தரமாக செட்டிலாகி தங்கிவிட எனக்கும் கூட அளவுக்கதிகமான கற்பனை ஆசை தான்.

Anonymous said...

******
அனானி,

மைண்ட் செட்டா,முதலில் உமக்கு மைக் செட்னா என்னானு தெரியுமா?

//அங்கு சீனா காலூன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது… தமிழக பிரிவினை சக்திகள் வளர இடம் கொடுக்கக்கூடாது //

இந்திய ஆட்சியாளர்கள் உள்நோக்கம் வேறன்னு தான் சொல்லியாச்சே,அப்புறம் என்ன?

இப்போ மட்டும் சீனா காலுன்றாமல் ------- ஊன்றி இருக்கு?

இதில் தமிழக பிரிவினை சக்திகள் எங்கே இருந்து வருது,எல்லாம் மனப்பிராந்தியா?

//என்றாலும் காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் //

அங்கெல்லாம் அம்மக்களுக்கே ஆட்சி அமைக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கு. காஷ்மீர் பிரச்சினை என்பது அம்மக்களாக கேட்கவில்லை,பாகிஸ்தான் தான் கேட்கிறது,பின்னர் ஆக்ரமித்து விடும்,ஆனால் இலங்கையில் போய் இந்தியா ஆக்ரமிக்காது. தனி ஈழம் அமைந்தாலும் அது தன்னாட்சி பெற்ற தனி நாடாக இருக்கும்.
******

அந்தக் கமெண்ட் மகாதேவன் ஸாரோடது ஸ்வாமி. என்னோடதில்ல. கோட் பண்ணும்போது கொட்டேஷன் போட மறந்துட்டன்.

? said...

//உங்களுக்கு காமெடி நல்ல வருது :-))//

நன்றிங்க. ஆனா உங்க அளவுக்கு வரமாட்டீங்குது.:)

கண்டவனுக்கெல்லாம் பொருளாதார நோபல் பரிசு கொடுக்கறானுவ உங்களுக்கு தரமாட்டீங்கரானுவ கெட்ட பயபுள்ளைக.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அந்நிய முதலீடே இல்லாம எல்லாமே நம்ம காசாக்காகும்? அந்நிய முதலீடு வருதுன்னாலே காசு வருகிறதுன்னுதானே அர்த்தம்?

அமெரிக்கா (1st) இந்தியாவும்தான் (3rd) டாப் டாலர் டெபிசிட் நாடுகள். இதுல இந்தியாவை நம்பித்தான் இலங்கை இருக்குது பொருளாதார தடை விதித்தால் காலி ஆகிவிடுங்றீங்க. பிச்சைகாரனுக்கு பிச்சைகாரனே செக்கியூரிட்டி!பலே!

இப்போதைக்கு நாடு போரினால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவைவிட இலங்கை வளமான நாடு(இதனாலேயே முன்பு ஈழத்தவர் தமிழ்நாட்டுகாரனை மதிக்கமாட்டார்கள், மலேசியா சிங்கப்பூர் போல). ஆகவே ரிக்கவரி ஆக சில ஆண்டு பிடிக்கும்.

இப்போதே GDP per capita வும் Human Development Index-ம் இந்தியாவைவிட இலங்கைக்கு அதிகம். தமிழ்நாட்டினை விட GDP குறைவாக இருக்க காரணம் மக்கள் தொகையும் போரும்தான். ஆனால் GDP வளர்ச்சிவீதம் தென்னாசியாவிலேயே இலங்கையின்தான் அதிகம்.

மேலும் ஏற்றுமதி குறைவு என்கிறீர்கள். இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி அதிகம் செய்கிறது. ஆனால் இலங்கை பொருட்களை வாங்குவதில் 5தாம் இடத்தில்தான் உள்ளது. ஆக இந்தியாவுக்கு இதில் லாபம். பொருளாதார தடை விதித்தால் இந்தியாவுக்கு நட்டம். இலங்கை தனது பொருட்களை வேறுநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறது. இந்தியா முறுக்கினால் பொதுமக்களே பொருட்களின் விலை அதிகமாவதால் அவதியுறுவார்கள்.

வவ்வால் said...

வேகநரி,

வாரும்,

நல்ல நகைச்சுவை உணர்வு உமக்கு :-))

வவ்வால்: நான் பத்தாம் வகுப்பு ஃபெயில்

வேகநரி: நான் எட்டாம் வகுப்பு பாஸ்,

வவ்வால்: ஓய் நான் பத்தாவதுய்யா

வேகநரி:நான் எட்டாவது பாஸ்,நீங்க பத்தாவது ஃபெயில் ,பாஸ் பெருசா ஃபெயில் பெருசா ...

வவ்வால் : அடங்கொக்காமக்கா ... நாராயணா கொசுத்தொல்லை தாங்கலைப்பா அவ்வ்வ் :-))

போதுமா... போதுமா :-))

உயர்க்கல்வியிலேயே இந்த முன்னேற்றம்னா அடிப்படைக்கல்வியில் எப்படிய்யா பின் தங்கி இருக்க முடியும்?

நீர் தமிழ் வழிக்கல்வினா சொன்னீர், அடிப்படைக்கல்வினு சொன்னீர், தமிழ்நாட்டில் அடிப்படைக்கல்வி மட்டும் விளங்காம போச்சா என்ன?

80.33% கல்வியறிவுடன் மிக அதிக எண்ணிக்கையில் உயர்க்கல்வி கற்றோர் கொண்ட மாநிலமாக உள்ளது.

http://www.thehindubusinessline.com/industry-and-economy/economy/article3146578.ece

இலங்கையில் தேசிய அடிப்படைக்கல்வியறிவு 90% ,ஆனால் உயர்க்கல்வி நிலை என்ன?

அடிப்படைக்கல்வி மற்றும் உயர்க்கல்வி என இரண்டிலும் நல்ல நிலையில் இருப்பதே சிறந்தது.

இலங்கை மாணவர்கள் மட்டுமல்ல அமெரிக்காவில் இருந்து கூட கல்வி பயில வருகிறார்கள், அமெரிக்க தரம், மலிவான கட்டணம். அமெரிக்காவில் தனியார் பல்கலையில் கற்க பெரும் கட்டணம் செலுத்த வேன்டியதாக இருக்கும்.

# தமிழ்நாடு வசிப்பதற்கு மோசமான இடமும் இல்லை ,உயர்வான இடமும் இல்லை, தாரளமாக வசிக்கலாம் வாங்க.
------------

அனானி,

நீங்க சொல்வதோ ,மகாதேவன் சொன்னதோ, நீங்க போட்டப்பின்னூட்டத்தில் அதனை ஆதரிக்கிறீர்களா,எதிர்க்கிறீர்களா என்ற தெளீவே இல்லை,ஆதரிப்பது போல தோன்றியது.

தெளிவாக கருத்துக்களை மேற்கோள் காட்டவும் அய்யா!

நன்றி!

? said...

//இலங்கையில் தேசிய அடிப்படைக்கல்வியறிவு 90% ,ஆனால் உயர்க்கல்வி நிலை என்ன?//

ஆகா அப்புடி போடுங்க அருவாளை!
நம்மூரில் எல்லா சிஎம்மும் டாக்குடர். அம்மா டாக்குடர் கலைஞர் டாக்குடர் அட அம்புட்டு ஏன்யா நம்ம வருங்கால முதல்வர் விஜய் கூட இப்பவே டாக்குடர் பட்டம் வாங்கிட்டு ரெடியா இருக்குறாரு. ராசபட்சேவுக்கோ ரனிலுக்கு டாக்குடர் பட்டம் வாங்கும் அளவுக்கு தகுதி உண்டா? அட ஒபாமாவுக்கே டாக்குடர் பட்டம் கெடையாதுய்யா. எங்கு தகுதி புரியாம பேசப்படாது சொல்லிட்டேன்!

? said...

//அமெரிக்க தரம்//

சீரியஸாத்தானே எழுதிகிட்டு இருந்தீங்க. தீடீர்னு இடையில ஒரு சூப்பர் காமடிய சொருகீட்டீங்க.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும் ,நன்றி!

உமக்கு நகைச்சுவை மட்டுமில்லை,இன்னும் பலவும் இருக்கு எனக்கண்டுக்கொண்டேன் , ஹி...ஹி சாளேஸ்வரமும் உண்டு தானே :-)0

நான் இலங்கையை இந்தியாவுடனே ஒப்பிடவில்லை, தமிழ்நாடு என்ற மாநிலத்துடன் தான் ஒப்பிட்டுள்லேன், தமிழ்நாட்டின் அளவுக்கு கூட பொருளாதாரம் வலுவாக இல்லை என சொல்லியுள்லேன்.

சரி நீரே இலங்கையில் மக்கள் தொகை குறைவு என சொல்லியாச்சு, அதனால் தான் அவர்களின் பெர் கேப்பிட்டா ஜிடிபி கூட வருகிறது.

இந்தியா/தமிழ்நாடு எல்லாம் அந்நிய முதலீடு வாங்கவே செய்கிறது, ஆனால் நம்ம பிச்சைப்பாத்திரம் பெருசு எனவே பிச்சை எடுத்தாலும் நிறைய வரும்படி,எனவே தாக்குப்பிடிக்கும், மேலும் உள்நாட்டு உற்பத்தியும் அதிகம்.

பெட்ரோலிய பொருட்களை தவிர வேறு எந்த பொருளும் இறக்குமதி செய்யாமல் தாக்குப்பிடிக்க முடியும்.

இந்தியா மிகச்சிறந்த நுகர்வோர் சந்தை என்பதால் தான் உலகின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவில் கடைத்திறக்க ஓடி வருகிறார்கள்.

இலங்கையில் எல்லாம் அத்தகைய சந்தையே இல்லை.

ஆட்டோ முதல் இரு சக்கர வாகனம் வரையில் இறக்குமதி தான்.

நீங்க தான் வளமான நாடு என சொல்லிக்கனும்,வளம் என்றால் தேயிலை, விவசாயம் இதான், தொழில்வளம் சுத்தமாக இல்லை, இன்றைய சந்தைப்பொருளாதாரத்தில் வளமே இல்லை என்றாலும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் சாதிக்க முடியும் ,

உ.ம்: சிங்கை, ஜப்பான்.

இந்தியாவில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பம்ம் இரன்டுமே இருக்கு.

// இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி அதிகம் செய்கிறது. ஆனால் இலங்கை பொருட்களை வாங்குவதில் 5தாம் இடத்தில்தான் உள்ளது. //

உண்மை தான் ஆனால் இதில் உள்ள முக்கியமான ஒரு காரணியை கவனிக்கவில்லை, இலங்கை இந்தியாவில் இருந்து பல மூலப்பொருட்களுக்கும் சார்ந்துள்ளது.

யார்ன், நிலக்கரி, போன்ற மூலப்பொருட்கள் அவை எல்லாம் இலங்கைக்கு பொருளாதார முதலீடுகள், எனவே வாங்கியே ஆக வேண்டும்.

இந்திய பொருட்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுபடியாகிவிடும்.

மலிவாக பொருட்களை கொடுக்க வல்ல நாடுகள் இந்தியா மற்றும் சீனா , இதில் சீனாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்யலாம் ஆனால் போக்குவரத்து செலவை பார்த்தால் இந்தியப்பொருட்கள் சில மலிவானவை, இதெல்லாம் பார்த்து தான் இறக்குமதி செய்வார்கள்.

சரி விடுங்க இலங்கை தான் ஆசியாவின் சூப்பர் பவர், இந்தியா அதைப்புரிந்துக்கொண்டு அடக்கி வாசிக்க வேண்டும் , இப்போ நான் சரியா சொல்லிட்டனா :-))

ஒரே ஒரு சின்ன உதாரணம்,

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கட்டு கட்டிய காலத்தில் அது தான் உலகிலேயே மிகப்பெரிய அணை. இன்றும் ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்றாக உள்ளது.கட்டியது 1934 .

ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான அணை பக்ரா நங்கல்,

இன்றும் உலகின் மிக நீளமான அணை- ஹிராகுட்.


உலகில் இன்றும் பயன்ப்பாட்டில் உள்ள மிகப்பழமையான அணை -கல்லணை, 2000 ஆண்டுகளுக்கு மேலானது.

இதெல்லாம் சப்பை இந்தியாவில் செய்த சாதனைகள்.

ஊழலில் திளைக்கும் இந்தியா ஒரே அடியாக பின்னாடி போயிடாம இன்றும் முக்கியமான ஒரு வளரும் நாடாக இருக்க காரணம் நம் மக்களின் சகிப்பு தன்மையும், சுய ஊக்கமுமே.

? said...

//சரி விடுங்க இலங்கை தான் ஆசியாவின் சூப்பர் பவர், இந்தியா அதைப்புரிந்துக்கொண்டு அடக்கி வாசிக்க வேண்டும் , இப்போ நான் சரியா சொல்லிட்டனா :-))//

ஆரம்பத்தில இருந்தே இதே பாணிலதான் சொல்லுறீங்க.அதால எது சரி தவறு புரியமாட்டீங்குது.

ஆமாம் பின்னூட்டம் மேல மேல பின்னூட்டம் போட்டு உம்ம கடையில பிஸினஸ் பண்ணுறனே.. சிறப்பு பரிசு ஏதும் கிடையாதா (ஏதோ உதைக்காம விட்டீர்னா சரிதான்,:)

வவ்வால் said...

நந்தவனம்,

உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா :-))

எண்ணற்ற அரசியல் டொக்டர்கள் கொண்ட தேசம் என்பதை இன்றாவது புரிந்துக்கொண்டீர்களே :-))

தலைவர்களுக்கு டொக்டர் பட்டம் கொடுப்பது போல வட்ட,கிளை செயலாளர்களுக்கு கம்பவுண்டர்,வார்டு பாய்,மகளீரணிக்கு நர்ஸ் பட்டம் கொடுக்க கூடாதா என ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கிறது உமது பின்னூட்டம் :-))

------------

அய்யா நந்தவனமய்யா,

அமெரிக்க, யு.கே என்.ஆர்.ஐ கள் இங்கே வந்து படிக்கிறாங்க ,அவங்களே சொன்னது தான்யா.

அங்கே தனியார் பல்கலையில் மருத்துவம் ,பொறியியல் படிக்க அதிகம் செலவாகுதுனு எஸ்.ஆர்.எம்கு வருகிறார்கள்,பெருசா தரத்தில் வித்தியாசமில்லை என்கிறார்கள். எங்க அப்பார்ட்மெண்டில் ஒரு கும்பல் ஃப்ளாட் எடுத்து தங்கிட்டு அட்டகாசம் செய்யுது :-))

வீக் எண்ட் ஆனால் ஒரே மஜா தான்,பத்தாதுக்கு பொண்ணுங்க வேற வருது ,குரூப் ஸ்டடியாம் அவ்வ் :-))

ஹவுஸ் ஓனர்கிட்டே எல்லாம் கம்ப்ளெயிண்ட் செய்து காலி செய்ய சொல்லி இருக்கிறார்கள்,ஒரு மாசம் நோட்டிஸில் ஓடுது,ஆனால் போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

வவ்வால் said...

நந்தவனம்,

//ஆமாம் பின்னூட்டம் மேல மேல பின்னூட்டம் போட்டு உம்ம கடையில பிஸினஸ் பண்ணுறனே.. சிறப்பு பரிசு ஏதும் கிடையாதா (ஏதோ உதைக்காம விட்டீர்னா சரிதான்,:)//

உமக்கு பின்னூட்டத்தில் டாக்டர் பட்டமே கொடுக்கலாம் :-))

சிறப்பு பரிசாக "கன்னடத்து பைங்கிளி: சரோசாடேவி பயன்ப்படுத்திய விலைமதிப்பில்லா சோப்பு டப்பா :-))

போனசாக இந்தப்பாடல்...


நந்தவனத்தில் ஒரு ஆண்டி

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தாடி ஒரு தோண்டி

அதைக்கூத்தாடி கூத்தாடி

போட்டுடைத்தாண்டி

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா!!!

? said...

வவ்வால் நன்றி.

அமெரிக்க பள்ளிகளை விட இங்கு பள்ளிகல்வி கடினம். கணக்கு பாடமெல்லாம் அதிகம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் கல்லூரிக்கல்வியில் ஆசிரியர் தரம் மற்றும் பாடத்திட்டத்தில் அமெரிக்க கல்வி சிறந்தது. இங்கு மாதிரி வெறும் மனப்பாடம் மட்டுமல்லாது சிந்திக்க வைக்கும்படியான கேள்விகளும் கேட்கப்படும். அதே மாதிரி கோடை விடுமுறையில் ஆராய்ச்சி மற்றும் பிற படிப்பு சம்மந்தமான வேலை செய்து அனுபவமும் தேடலாம். ஆனால் சில மொன்னையான கல்லூரிகளும் உண்டு. அங்கு கட்டணமும் குறைவு.
இதை இரு கல்வி நிறுவனங்களிலும் படித்து வேலை பார்த்த அனுபவத்தில் எழுதுகிறேன்.

உங்களுக்கு தெரிந்த கும்பல் இந்தியா வந்து படிப்பதை குறைவாக நினைக்ககூடாது என அடித்து விட்டிருக்கிறார்கள். இளநிலை இந்தியாவில் படித்துவிட்டு மேற்படிப்பு அமெரிக்கா வந்தாலே போதும்தான். விட்டதை பிடித்துவிடலாம்!

ஆசிரியர் தரத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். தமிழ்நாட்டின் ஒரே தொழில்நுட்ப பல்கலையின் தற்போதைய விசிக்கு ஈமெயில் பாக்கவே தெரியாதாம். அவரது மாணவர் பாஸ்வேர்டு அடித்து திறந்து விடுவானுகளாம். இது எப்படியிருக்கு?ஆக ஐஐடியிலும் மாணவர் தரமே கல்வி நிறுவனதரத்தை நிர்ணியிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பேராசிரியர்கள் அப்டேட் செய்துகிட்டே இருப்பார்கள். இதற்கு போட்டி மனப்பான்மை காரணம். இந்தியாவில் படிக்கும் வழக்கமே இல்லை. 30-40 வருடம் பின்தங்கியே இருக்கிறார்கள்.

? said...
This comment has been removed by the author.
? said...

/ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ஜிக்கா!!!//

இன்னைக்கும் தீர்த்தவாரியா இந்த ஆட்டம் போடுறீர்.

கஸ்டபட்டு பின்னூட்டம் போட்டா போயும் போயும் செகன்ட் ஹேன்ட் சோப்பு டப்பா குடுக்கறீர். கஞ்சப்பிசனாறியா இருப்பீர் போலயே!

வவ்வால் said...

நந்தவனம்,

என்ன மின்னலாய் வருது பதில் எல்லாம்.

//ஆனால் கல்லூரிக்கல்வியில் ஆசிரியர் தரம் மற்றும் பாடத்திட்டத்தில் அமெரிக்க கல்வி சிறந்தது. இங்கு மாதிரி வெறும் மனப்பாடம் மட்டுமல்லாது சிந்திக்க வைக்கும்படியான கேள்விகளும் கேட்கப்படும். அதே மாதிரி கோடை விடுமுறையில் ஆராய்ச்சி மற்றும் பிற படிப்பு சம்மந்தமான வேலை செய்து அனுபவமும் தேடலாம். //

இதனையும் சொல்லி இருக்கிறார்கள்,நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும்னு.

நான் சொல்வது ,கல்லூரியின் கட்டமைப்பு,சிலபஸ் எல்லாம் அப்டுடேட் ஆகிடுச்சு அதை.மல்டி மீடியா புரொஜெக்‌ஷன்,வை-பை, லேப்டாப் என வகுப்பறைகள் நவீனமாகிடுச்சு.

பல சீனியர் புரொபசர்கள் புரதான தன்மையுடன் இருப்பதும் உண்மையே.

அவங்க வச்சி இருக்க நோட்ஸ் புடுங்கிட்டா ஒன்னு தெரியாதுனு கலாய்ப்பது வழக்கம்.

# முன்ன இருந்த மன்னரை சொல்லுறிங்களா,இப்ப இருப்பவரையா,மன்னர் ஒரு மங்குனினு எல்லாருமே சொல்லுவாங்க. இப்போ இருக்கவர் தற்காலிகம் தான்.

ஆனால் எப்பவும் நாலு ப்ரொஃப் கூட வச்சுக்கிட்டு இருப்பாரே ,அப்புரம் என்னக்கவலை.கூட இருக்கவங்க தான் எல்லா வேலையும் செய்வதாம்.
------------

இன்னிக்கு வறட்சியில் இருக்கேன்,தீர்த்தம்,கீர்த்தம்னு வெறுப்பேத்திக்கிட்டு :-((

நாளைக்கு நைட் திருப்பதி போறேன் ,அங்கே போய் தீர்த்தவாரிய ஆரம்பிச்சுக்கலாம் :-))

---------

சிலதுலாம் பழசானா தான் மதிப்பே ,எம்சிஆருக்கே கிடைக்காத சோப்பு டப்பா ,அதுவும் மூடியோட உமக்கு முழுசா கொடுக்கிறேன் ,கொண்டாட வேண்டாமோ :-))

? said...

//இப்போ இருக்கவர் தற்காலிகம் தான்.//

தற்காலிக பார்ட்டியத்தான் சொல்லுறேன். இந்தாளும் மங்குனிதான். பிகர் மேட்டர்லயும் வீக்காம்!

பரிச்சை வைத்தால் பிடெக் பாடத்திலேயே அப்பல்கலையில் பல வாத்தியாருக கோட் அடிப்பானுக.

வேகநரி said...

உண்மையில் இந்தியாவைவிட இலங்கை வளமான நாடு
சகோ நந்தவனத்தான் சொன்னது மறுக்க முடியாத உண்மை. உங்களுக்கு உங்க தொப்பள் கொடி உறவான சிங்களவனோடு பிரச்சனையை என்றால் எங்களோடு இந்தியா தமிழகத்தோடு தமிழர்களோடு உங்களை உங்க பிரதேசத்தை இணைத்து கொள்ளுங்களேன் என்று இலங்கை தமிழனை கேட்டு பாருங்களேன் உடனே எஸ்கேப் ஆகிவிடுவாங்க. யுத்தத்திற்க்கு முன்பு அங்கே குடியேறிய இந்தியன்களை தங்க வீட்டு வேலைகாரர்களாக வத்திருக்கும் அளவுக்கு பொருளாதார வசதிபடைத்தவங்களாக இருந்தவங் தான் இலங்கை தமிழர்கள்.சிலரது தனி பிசினஸ் தொடங்கி பார்க்கலாமே என்ற பேராசையால் தொடங்கபட்ட ஈழபோர் தான் அவங்க வாழ்கையில் பின்னடைவ ஏற்படுத்தியது.

வேகநரி said...

சகோ நந்தவனத்தான்,
இரு கல்வி நிறுவனங்களிலும் படித்து வேலை பார்த்த அனுபவத்தில் எழுதும் உங்க எழுத்துகளில் இருந்து நிறைய அறிந்து கொள்கிறேன். நன்றி. மாணவர்கள் கல்வி கட்டண உயர்வு மாணவர் தங்கும் விடுதி தட்டுபாடுகளுக்காக போராடி தான் அறிந்திருக்கிறேன்.பக்கத்து நாட்டின் மீது கொருளாதார தடை கொண்டுவந்து பட்டினி ஏற்படுத்தும் படி லயோலாக் கல்லூரி மாணவர் போராட்டத்திலிருந்தும் சில விடயங்களை அறிய முடிகிறது.

Anonymous said...

நரிமா,

//பக்கத்து நாட்டின் மீது கொருளாதார தடை கொண்டுவந்து//

நீ எல்லாம் ஒரு ஆளுய்யா...தூ தூ..


கொங்கு நாட்டான்.

ராஜ நடராஜன் said...

வவ்வால் & நந்தவனம்!

எனக்கும் கூட ரொம்ப நாளா ஒரு அசரீரி ஒலிச்சிகிட்டே இருக்குது.அதாவது என்கிட்ட இலங்கை ஆட்சியைக் கொடுத்தா ஒரே வருடத்தில் முக்கியமான பிரச்சினைகளை சமாளித்து இந்திய,இலங்கைப் பிரச்சினையை முடித்து தமிழர்கள்,சிங்களவர்கள் பிரிவினையை மாற்றி நல்லுறவு நிலையைக் கொண்டு வந்து விட முடியும் என நினைக்கிறேன்.

அரசியல் சாசன ரீதியாக மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை முதலில் துவங்க வேண்டும்.தொலை நோக்குப் பார்வையில் நன்மை தரும் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன விலை வேண்டுமானாலும் தரலாம்.

இலங்கையின் ஆட்சி மாற்றம் சில புதிய விளைவுகளை உருவாக்கலாம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நான்கு மாதம் காலக்கெடு சொன்ன உங்க கிளி ஜோசியம் பலிக்கல போல தெரியுதே! இதோ கூட்டணியிலிருந்து விலகல்ன்னு இன்றைக்கு உடன்பிறப்புக்கள் பட்டாசு வெடிக்கிறாங்களே!மாநில தேர்தல் காலத்திலும் இப்படித்தான் பட்டாசு வெடிச்சாங்க:)ஆனால் இந்த முறை அப்படி நிகழாது என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!எதிர் வாதம் செய்வதுதான் பின்னூடத்துக்கே அழகு.ஆனால் கொஞ்சம் யதார்த்தமாகவும்,புத்திசாலித்தனத்தோடும்விவாதிக்க வேண்டாமோ!

கல்வி தரத்திற்கு சென்னை மாகாண காலம் தொட்டு தமிழகத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது.முந்தைய காலகட்டத்தை விட படிப்பறிவு விகிதாச்சாரம் உயர்ந்திருக்கிறது.அடிப்படைக்கல்வி என்ற விதத்தில் இலங்கையில் தமிழர்களின் தொகை அதிகமாக இருந்திருக்கலாம்.ஆனாலும் தமிழகத்தோடு விகிதாச்சாரம் பேச முடியாது.வாய்ப்புக்கள் இருந்தும் சிங்களவர்களின் கல்வியறிவு நிலை பின் தங்கியிருக்கும் வாய்ப்புக்களே அதிகம் என்பதையும் உணரமுடிகிறது.சிலருக்கு மட்டுமே எலைட் கல்வி வாய்ப்புக்கள் இருந்திருக்கும் எனலாம்.

போர்க்காலங்களை விட்டு விடுவோம்.போருக்கு முன்பும் கூட இந்தியாவை,தமிழகம் தேடிய உயர்படிப்பு என்ற இலங்கையின் நிலைதானே தவிர இலங்கை சென்று கற்கும் இந்திய நிலை இருந்ததில்லை.தற்போதைய கணினி யுகத்தில் இன்னும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன.

ராஜ நடராஜன் said...

வேகநரி!நம்ம புள்ளி விபரம் அடிச்சு ஆடுறதை முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட மறந்து விட்டேன்.அதற்காக வேண்டி உங்களுக்குப் பிடித்த ஹலால்,பர்தா போன்ற இலங்கை குறித்த பொது பால சேனா பற்றி கொஞ்சம் பேசலாம்.

இணைய கலந்துரையாடலில் ஏற்கனவே பர்தா போன்ற விசயங்களை ஜனநாயக முறையில் பேசியவைகள் நிறைய.உடைகள் அவரவர் சுய விருப்பத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்கிற சுதந்திரம் இருக்க வேண்டும் என நம்புகிறேன்.மதம் சொல்வதற்காக அணிவதும் பொது பாலா சேனையின் அடக்கு முறையிலும் தவறுகள் இருக்கின்றன.முன்பு விடுதலைப்புலிகள் பற்றி அடாவடி விமர்சனம் செய்த பந்து ஒன்று இன்றைக்கு ஹலால் பற்றி பொது பாலா சேனையின் நிலைப்பாட்டுக்கு அய்யோ குய்யோ என்கிறது.

ஹலால் பற்றி இ.செ பதிவு போட்டிருந்தார்.அது பற்றி கருத்து சொல்ல முடியாமல் போய் விட்டது.மத்திய கிழக்கு நாடுகளில் ஹலால் முறை மதம் சார்ந்தும்,நம்பிக்கை சார்ந்தும் முக்கியமான ஒன்று.இலங்கையின் நிலைப்பாடு பற்றி இஸ்லாமிய நாடுகள் என்ன கருத்துக்களை முன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.தமது நலன் சார்ந்த ஒன்றே வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்கும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் அமெரிக்க வரைவு தீர்மானத்துக்கு இலங்கை சார்ந்து வாக்களிக்கும் இஸ்லாமிய நாடுகள் நிலை கூட இந்தியா போல் வால் மாட்டிக்கொண்ட குரங்குகள்தான்.

இந்தப் பின்னூட்டம் உங்களுக்கு திருப்தியளிக்குமென நம்புகிறேன்:)

வவ்வால் said...

நந்தவனம்ம்,

அயல்நாட்டில இருந்துக்கிட்டு லோக்கல் கில்மா சமாச்சாரம் எல்லாம் சொல்லுறீர், நீர் என்ன சிஐஏ வா?

விசி பதவி எல்லாம் ஏலம் விடுறாங்க சாமி,இப்போதைக்கு 5 சினு கேள்வி. உம்ம கையில துட்டு எக்கசக்க்கமா இருந்தா வாரும், போட்டக்காசை எப்பிடி திருப்பி அள்ளுவதுனு நானே சொல்லித்தாரேன் :-))
----------

வேக நரி,

விவேகமான நரியாக இருக்கும்னு பார்த்தேன் ,சரியான வெளங்காவெட்டி நரியா இருக்கே :-))

கிணற்று தவளைக்கு சமுத்திரம் பெரிதென தெரியாது :-))

வேகநரியின் நகைச்சுவை இனியும் தொடருமா?
-------------

கொங்கு நாட்டார்,

வேகநரிக்கு அறிந்தது அவ்வளவு தான் , ஒய் டென்ஷன் நோ டென்ஷன், கூல் ...கூல்!!!
---------
ராச நட ,

வாரும்,

//என்கிட்ட இலங்கை ஆட்சியைக் கொடுத்தா ஒரே வருடத்தில் முக்கியமான பிரச்சினைகளை சமாளித்து இந்திய,இலங்கைப் பிரச்சினையை முடித்து தமிழர்கள்,சிங்களவர்கள் பிரிவினையை மாற்றி நல்லுறவு நிலையைக் கொண்டு வந்து விட முடியும் என நினைக்கிறேன்.//

என்ன ஒரு துன்பியல் காமெடி?

இலங்கைக்கு அதிபராக ஒரு தமிழன் முடியுமானால் ஏனய்யா பிரச்சினை வர்ர்ரப்போகுது, பிரச்சினை உருவ்வான இடத்தில் இருப்பவர்கள் தீர்க்க என்ன பெருசா எண்ணம்ம் ஓட வேண்டும், இந்தியா பக்கம்ம் இருந்து செய்ய முடியாது என சொல்லும் போது, இந்திய பிரதமரால் கூட செய்ய முடியும்னு காட்டனும் ஓய்.

//இலங்கையின் ஆட்சி மாற்றம் சில புதிய விளைவுகளை உருவாக்கலாம்.//

இலங்கையில் ஆட்சி மாறினால் தான் புதிய விளைவுகளை கொண்டு வர முடியும், இதே ஆட்சி தொடர்ந்து ,பின்னர் யார் வந்தாலும் ,பக்சே கொள்கையை மாற்ற முடியாது,அதுவே நிறந்தர தேசியக்கொள்கை ஆகிடும்.

பக்சேவின் பேரினவாதக்கொள்கை வெற்றிகரமானது என நிறுவப்பட்டால் பின்னர் இலங்கையில் தமிழன உரிமை என்ற சொல்லுக்கே இடமில்லை, எனவே பக்சேவின் பேரினவாதக்கொள்கை பிழையானது,இலங்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் என தெளிவாக காட்ட வேண்டியது கட்டாயம்.

# நரி சொல்லும் அடிப்படைக்கல்வி இருக்கு என்பதே செமக்காமெடி, 5 ஆம் வகுப்பு அல்லது சுயமாக கையொப்பம் இட தெரிந்தாலே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள்.

எனவே அதன் விகிதாசாரம் வைத்த்எல்லாம்ம்ம் பெருமைப்ப்ட்டுக்க்கொள்வ்வது சரியல்ல, தமிழகத்தினை பொறுத்தவரையில் உயர்க்கல்வி வரையில் சீரான தன்மையுள்ளது.

ஆண்டுக்கு 2 லட்சம் பொறியாளர்கள் படிக்க வராங்கன்னா லேசுப்பட்ட காரியமில்லை.அதில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தான் நல்ல வேலைக்கிடைக்குது. ஆனால் உயர்கல்வி என்ற நிலையை மட்டும் கணக்க்கிட்டால் ,த்மிழகம் முன்னோடி தான்.

இலங்கையில் ,ஆண்டுக்கு 2 லட்சம் பேர் +2 படிப்ப்பாங்களேனு சொல்ல முடியாது :-))

# ஏன் ஓய் நாம சொன்னது நடந்டுச்ச்ச இல்ல்லையா , இதுல என்ன பல்லிக்கலை,கெலிக்கலனுக்கிட்டு , பிச்சுக்கிட்டு ஓடி வருவாங்கன்ன்னு சொன்னப்படி வந்தாங்களா இல்லையா, நஅலு மாசமென்ன,10 மாசமென்ன, ஆனால் இதுல ஏமாந்தது போங்கிரஸ் தான், எப்படியும் நம்ம விட்டா திமுகவுக்கு நாதியில்லைனு தெனாவெட்டா இருந்தது, அந்த தெனாவெட்டுக்கு காரணமே கலைஞ்அர் குடும்ப லாப்பி தான் :-))

ஆனால் இப்பவரைக்கும் ஒரே அடியா முறிச்சுக்க தெகிரியம் இல்லையே, என்ன கொடுமை சார் இது :-))


வேகநரி said...

//நரி சொல்லும் அடிப்படைக்கல்வி இருக்கு என்பதே செமக்காமெடி 5 ஆம் வகுப்பு அல்லது சுயமாக கையொப்பம் இட தெரிந்தாலே எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள்.//
வவ்வால், உங்களது செமக்காமெடிக்குரிய அந்த அறிவுகூட குறைவாக இருப்பது தானே தமிழகத்தின் பிரச்சனையே.

ராஜ நடை,கருணாநிதி கூட்டணியிலிருந்து விலகினதற்க்கு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடிச்சு தானே கொண்டாடுறார்கள்.ஆனா ஈராக்கில் சதாம் அகற்றபட்டதை இஸ்லாமியர்கள் எப்படி கொண்டாடுகிறர்களென்றால் 60 பேர் கொல்லபட்டுள்ளனர்,150 பேர் காயம். அதனாலே தான் இஸ்லாம் அமைதிமார்க்கம் என்று சொல்லபடுகிறது. இஸ்லாமிய நாடுகள் நிலை வால் மாட்டிக்கொண்ட குரங்குகள் என்த பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலையில்லை. அமெரிக்காவின் செல்லமான பிள்ளை சவூதி அரேபியா. ஆனா அமெரிக்காவை இஸ்லாமின் எதிரி என்பார்கள்.சவூதி அரேபியாவோ அவர்களின் புனிதமான பயபக்திக்குரிய நாடு. சிங்கல பௌத்த பிக்குகள் இந்திய தமிழர்களால் தாக்கபடவில்லை.ஜெயலலிதா உதவியுடன் இஸ்லாமிய இயக்கம் ரிஎன்ரியே தான் நடத்தியுள்ளதாக பொதுபல சேனா சொல்லியிருக்கு.

வேகநரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

நரிமா,

இஸ்லாம் என்ற உடன் இப்படி ஒடி வருகிறாய்...பார்த்து மெதுவா... மூச்சு வாங்குது பாரு...


கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

வேக நரி,

நீர் செய்வது காமெடியிலும் மொக்கை காமெடி :-))

அடிப்படைக்கல்வியில் என்ன பெரிய பின்னடைவில் தமிழகம் இருக்குனு நினைச்சிட்டு பேசுறீர்?

நான் தான் சதவீதம் எல்லாம் சொல்லிட்டேன், தமிநாட்டில் 80% இலங்கையில் 90% அடிப்படைக்கல்வி, இந்த 10 சதவீத அடிப்படைக்கல்வி வித்தியாசத்தில் என்ன பெரிய பிந்தங்கல்னு நீரே சொல்லும்.

முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவும், இலங்கை மொத்த மக்கள் தொகையே இரண்டுகோடி சொச்சம் தான் ,தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7.2 கோடி , இதில் 80% அடிப்படைக்கல்வினு சொன்னால் அது மொத்த இலங்கை ஜனத்தொகையை விட அதிகம்யா , மேலும் உயர்கல்வியிலும் நல்ல சதவிகிதம் இருக்கு.

பயனுள்ள முழுக்கல்வி பெற்றோரின் எண்ணிக்கை என்ன என்பதே நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம்.

டிப்ளமோ, அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் என கனக்கிட்டாலே 2 கோடிக்கு மேல் வரும், அது இலங்கை மக்கள் தொகையை விட அதிகம் :-))

இலங்கை ஒரு நாடு ,தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் ஏனவே மாநிலத்து அளவுக்கு கூட ஒரு நாட்டின் நிலை இல்லையே ஏன் என சிந்திக்கவும்!

சரி நீர் எதுக்கு பக்சேவின் கொ.ப.சே போலவே பேசிட்டு இருக்கீர்னு தெரியலையே அவ்வ்.
----------

கொங்கு நாட்டார்,

வேகநரிக்கு பந்துக்களின் மீது தீராத பாசம் :-))

Anonymous said...

vovs,

சவுக்கு பின்னூட்டத்தில் உமது பதிவு தொடுப்பு பார்த்தேன்....கலக்குங்க...


கொங்கு நாட்டான்.

Paleo God said...

இந்த மாதிரி ஜிந்திக்கத்தான் ஊர்ல உங்கள மாதிரி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது.

குரங்குபெடல் said...

அண்ணே . . .



கழுகு - வம்பானந்தா



அடுத்து



வவ்வாலா கொக்கா . .



ஹீ - - - ஹீ

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

வாரும்,நன்றி,

நீர் என்ன சர்வலோக சஞ்சாரியா ? சவுக்குல போட்ட சமாச்சாரம் எல்லாம் பார்த்துட்டு சொல்லுறீர், வம்பு பிடிச்ச இடமாச்சே, இதெல்லாம் யார் செய்ற வேலை? தேர இழுத்து தெருவில விட்டுறப்போறாய்ங்க,அவ்வ்வ்!
--------

ஷங்கர்ஜி,

வாங்க,நன்றி!

கும்பமேளா சென்று ஆன்மீகப்பேரொளியா வந்து இருக்கீங்க,ஆனாலும் அரசியலிலும் கண்ணு?

நம்ம கிட்டவும் பெட்ரோமாக்ஸ் லைட் இருக்குல்ல,அப்போ நாமளும் ஆல் இன் ஆல் அழகு ராசா தான் :-))
------------

கு.பெ,

வாரும்,நன்றி!

பெரிய அரசியல் நாரதர்களோடு முடிச்சு போட்டு கதை முடிக்கும் திட்டமா?

வவ்வாலா கொக்கானு சொன்னால் வவ்வால்,கொக்காக பரிணாம மாற்றம் அடையுமா? ரெண்டுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருக்கா,அதோட கற்படிமம் காட்டுனு ஒரு கும்பலே ஓடி வருமே .அவ்வ் :-((

ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னா!என்னது! தொடுப்பு சவுக்கு வரைக்கும் போயிடுச்சா?முன்னாடியே யாராவது சொல்லியிருந்தால் ஜாபர் சேட் கிட்டயாவது வவ்வாலை புடிச்சுக் கொடுத்திருக்கலாம்:)

சான்ஸ் போச்சே!

Anonymous said...

மன்னா!

குகையில் இருந்து குன்றின் மேல் இட்ட விளக்காக ஷிப்ட் ஆய்டார் போங்கோ....:-)

உமது கடைசி இரு பதிவுகளும் வாள் நிகர் கூர்மை...தொடரட்டும்..

கொங்கு நாட்டான்.




reverienreality said...

வவ்வால்ஜி..இத பதிவை எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியலை..

பதிவு + பின்னூட்டங்கள் படிச்சதுல....மூச்சு வாங்குது...

Punishment for coming late?..-:)

ஆத்தா போட்ட திட்டம் BACKFIRE ஆகும்னு நினைக்கிறேன்..பார்க்கலாம்...



ராஜ நடராஜன் said...

மறுபடியும் நான் வந்துதான் செஞ்சுரி போடனும்ன்னு இருக்கும் போல தெரியுதே!யாராவது கூட ஓட வாங்களேன்!

KASBABY said...

enakku inaiyaaga ASIN-i rasikkum oru manithanai ippothuthaan kaanukiren.sameepa kaalamaaga, ASIN tamilil ndikaathapothum, ASIN photo ella pathivilum irukkirathu.

ராஜ நடராஜன் said...

கேஸ்பேபி!அசின் என்ற கொட்டை எழுத்தை தவிர என்ன சொல்றீங்கன்னே புரியல:)தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழலில் பின்னூட்டம் போட்டே தீருவேன் என்ற அடம் பிடிக்கிறீர்கள் என நினைக்கிறேன்:)

வவ்வாலைக் காணவில்லை.அவருக்கு ஏதாவது தகவல் சொல்லனுமின்னா அவர் உண்மைத்தமிழனின் வத்திக்குச்சி அஞ்சலி ரசிகர் மன்றம் பக்கம் சுத்திகிட்டிருப்பார்.போய்ப் பாருங்கள்.

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி1

ஏன் இந்த கொலவெறி? சேட் செம தில்லாலங்கடி ,அவரு கையில மாட்டினா போலி என்கவுன்டர் தான் அவ்வ்.

நான் ஒரு நிஜ என்கவுண்டர் கதைய நேரடியாக கேட்டதுக்கு அப்புறம் , காக்கிசட்டைனாலே அலர்ஜியாகிடுச்சு ஓய்.

நாம வாழ்வது சனநாயக சர்வாதிகார நாடு அதை புரிஞ்சுக்கிடும் ஓய்!

-------

கொங்கு நாட்டார்,

ஒரு முடிவோட இருக்காப்போல தெரிதே அவ்வ்!
-----------

ரெவரிஜி,

வாங்க,நன்றி!

நான் சொன்னது கொஞ்சம் சொல்லாததும் அதிகம், ஈழப்பிரச்சினையின் அடிப்படையை எல்லாம் பேசினால் மனவருத்தங்கள் தான் வரும்.

அம்மையாருக்கு எதிராக திரும்பவும் வாய்ப்புண்டு,ஆனால் இன்றைய நிலையில் திமுக மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை என்ற போது, அம்மையார் லேசா ஆதரவு நானும் குரல் கொடுக்கிறேன்னு சொன்னாலே போதும் , எல்லாமே ஆதரவாக ஆகிவிடும்.

ஆளும் மாநில அரசு விரும்பவில்லைனா இந்த போராட்டம் எல்லாம் நடக்கவே நடக்காது, அதுவும் மருத்துவ, பொறியியல் கல்லூரிலாம் கலந்துக்குதுனா, மாநில அரசின் எண்ணம் என்னனு புரியும்.

மாநில அரசுக்கு பிடிக்கலைனா ஒரு சின்ன துறும்பை கூட அசைக்க முடியாது.

ஷாமியான பந்தல்,சேர், மைக் செட், போஸ்டர், பேனர் எதுவுமே கிடைக்காது. காவல் துறை அடிப்பின்னிறும்,மேலும் ஏகப்பட்ட அழுத்தம் கல்லூரி மட்டத்திலும் கொடுக்கப்படும், அதெல்லாம் இல்லாம ஃப்ரியாக இப்போ நடக்குது.

இங்கே எல்லாமே அரசியல் தான் :-))
----

காச்பேபி,

வாங்க,நன்றி!

எனக்கும் இணைவைத்தல் பிடிக்காது :-))

இங்கே நான் ,நான் மட்டுமே முதன்மை ரசிகன் ,புதுசா உள்ள வந்துட்டு நீர் என்னமோ பெரிசா பில்ட் அப் கொடுக்க பார்க்கிறீர், எனக்கு பின்னாடி வாரும், இல்லைனா கல்தா தான் :-))
-------

ராச நட,

நாங்க எல்லாம் 99 அடிச்சு வைப்போம் நீர் வந்து 100 அடிப்பீரோ, 100 னு மொபைலில் அடியும் போலீஸ் வரும் :-))

# ஊருல இல்லைனு சொல்லிட்டேன் அப்புறமும் அங்கே போய் பாரு இருப்பார்னு , அண்ணாச்சி கடைக்கு வழிக்காட்டினா எப்படி?

இப்போ வந்தாச்சு , பொறுமையா குந்த வச்சு கும்மி அடிக்கலாம் வாரும் :-))

Anonymous said...

வவ்வால்,

திருப்பதி....திருப்தியா....




கொங்கு நாட்டான்.

naren said...

வவ்வால்,
என்னது அம்மாவும் ராஜதந்திரியாகிவிட்டாரா??. அந்த தகுதி தாத்தாவுக்கு மட்டும்தான் இருக்குன்னு சரித்திரம் சொல்வதாக உ.பி க்கள் கத்துவது பொய்யா. தாத்தாவின் கடைசி காலத்தில் அவரின் ஒவ்வொரு தகுதியையும் அம்மா பறிக்கிறாங்க, நல்ல ஜோதிடரை பார்த்து மஞ்ச துண்டை மாத்தச்சொல்லவும்.

ஈழப் பிரச்சனையில் திடமான குறிக்கோள்களும் செயல்பாடுகளும் தேவை. இந்தியாவின் ஆதரவும் கண்டிப்பாக தேவை. இந்தியாவின் ஆதரவை எப்படி பெற வேண்டும், மற்ற குறிக்கோள்களை எப்படி அடைய வேண்டும் என்பதை பற்றிய செயல்பாடுகளைப் பற்றி, அதை முன்னெருப்பவர்கள் real politics செய்யவேண்டும். தன்னுடைய சித்தாந்தம் கொள்கைப்படித் தான் நடக்கவேண்டும் என்றால் ஒரு பயனும் கிடைக்காது. மஞ்ச துண்டு தலைவர் டெல்லிக்கு கடிதம் எழுதி ஈழ மக்களுக்காக போராடினேன் என்பதை போலத்தான் இருக்கும்.

முதல் படி ஒரு படியாக ஒரு “தக்கியாவை” செய்யவேண்டும். தற்போதிய ஈழநிலைமைக்கும் பிராபகரனுக்கும் சம்பந்தம் படுத்த கூடாது. தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஈழப் போராட்டங்கள், இந்திய எதிர்ப்பு நக்ஸ்பல்பரி தமிழ் தேசிய போராளிகளால் முன்னெடுக்கவில்லை, அவர்கள் காப்புரிமை பெற்ற போராட்மில்லை என்று காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால் ஈழம் தமிழ் பொது புத்தி மக்களின் மத்தியில் பிரபலமடைந்து, அதைவைத்து நைச்சியமாக படிபடியாக அடிவைத்து தனி ஈழத்தை அடைந்து விடலாம்.

ஈழம் வெல்ல, வரும் நாடாளாமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று ஒரே கன்பியூஷன்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!ஏற்கனவே நீங்க ராஜிவ் காந்திக்கு முன்-பின் மற்றும் முள்ளிவாய்க்காலுக்கு முன் - பின் என வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள்.எனவே ஈழப்பிரச்சினையின் அடிப்படை என பின்னோக்கிப் போய் பேசுவது சரியாக இருக்காது என்பதோடு முந்தைய கால கட்டத்தின் சரி தவறுகள் ஏற்கனவே பலராலும் பேசப்பட்டு விட்டன.

இனி வரும் காலம் என்ன என்பது பற்றிய நம்பிக்கைகள் மற்றும் பின்னடைவுகள் பற்றி பேசுவது மட்டுமே சரியாக இருக்கும்.

எல்லாமே அரசியல் என்றாலும் தனித்தனியாகவேனும் ஒன்றுபட்ட குரலில் தி.மு.கவும்,அ.தி.மு.கவும் குரல் கொடுப்பது நல்ல முன்னேற்றம்தான்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!வத்திக்குச்சுக்கு வத்தி வச்சுட்டு நீங்க ஊருக்குப் போனதெல்லாம் எனக்கென்ன தெரியும்?வவ்வால் குகையிலும் காணோம்,எங்காவது பறக்குதான்னு தேடுனதுல அண்ணாச்சி கடையில் உட்கார்ந்திருந்ததை பார்த்தேன்.அமெரிக்க சுயவரத்திலிருந்து பின்வாங்கிட்டிங்களோன்னு நினைச்சேன்:)

ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னா!நீங்க என்ன புரூஃப் ரீடரா வேலை பார்க்கிறீங்களா:)

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

எங்க திருப்தியாக ,லட்டுக்கூட கிடைக்கலை, எல்லாம் சொந்தக்காரங்களே எடுத்துக்கிட்டாங்க,போயிட்டு வந்ததுக்கு கால்வலி தான் மிச்சம் அவ்வ்.
----------

நரேன்,

வாரும்,நன்றி!

மஞ்சத்துண்டு ,செவப்பு ராசிக்கல் மோதிரம் இன்னும் என்னென்னமோ தாயத்துலாம் கட்டிப்பார்க்கிறார் பகுத்தறிவு பகலவன்,ஆனால் ஒன்னும் வேலைக்காவ மாட்டேங்குது, மகாபாரத திருதராஷ்ட்ரன் நிலைமையில் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

//அதை முன்னெருப்பவர்கள் real politics செய்யவேண்டும். //

அதான் தேவை.

ஆனால் மாணவர்களும் சரி பின்னால் இருப்பவர்களும் சரி இலக்கில்லாமல் தான் இருக்கிறார்கள், ஒரு போராட்டம் ,அதை வைத்து சிலருக்கு கரிப்பூசுதல் அவ்வளவே, இறுதி இலக்கை அடைதல் குறித்த தெளிவு இல்லை.

அரசியல் சார்பற்ற இயக்கம் ஆக நடந்துக்கொண்டு, போராட்டத்தினை கட்டுக்கோப்புடன் நடத்துவது கடினம்,அப்படி நடத்திக்காட்டினால் மகிழ்ச்சியே.

இதனை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், மீண்டும் இங்கே சொல்லி வைக்கிறேன்,

உண்மையில் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஈழப்பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்பட வேன்டும் என எண்ணம் இருந்தால் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்கலாமே,

கலைஞரும்,அம்மையாரும் ஒரு முறை கூட்டாக மேடை ஏறி ஈழப்பிரச்சினை தீர வேன்டும் எனப்பேசினால் அதன் கனபரிமாணமே வேறு,மத்தியில் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும்.

ஏன் மாணவர்களே அனைவரும் ஒன்றாக திரளுங்கள் எனக்கோரிக்கை வைக்க கூடாது.

ஒரு கண்டனக்கூட்டம் மாணவர்கள் சார்பில் ஏற்பாடு செய்து அதில் கலைஞர்,அம்மையார் ,வைகோ என தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துக்கொண்டு ஒரே குரலில் ஈழ ஆதரவு அளிக்க செய்தால் என்ன?

மாணவர்கள் வைக்கும் பலக்கோரிக்கைகள் இந்திய அரசியல் எல்லைக்கு அப்பால் இருக்கு, அது நடக்கும் சாத்தியங்கள் வெகு குறைவே,ஆனால் தமிழக அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் தானே இருக்காங்க, எல்லாம் ஒன்றாக கூடி குரல் கொடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து முயற்சிக்கலாம்.

இதன் மூலம் யாருக்கு உண்மையான அக்கரை இருக்கு என்பதும் வெளிச்சம் ஆகும்.


யாருக்கு ஓட்டுப்போட்டாலும் தேர்தல் வரைக்கும் தான் ஈழம்னு பேசுவாங்க,அப்புறம் மறந்துடுவாங்க :-))

நம்ம தமிழக அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற செயல்முறைகளை எப்படி பயன்ப்படுத்திக்காரியம் சாதிப்பது என்றே தெரியாது.

அப்படி தெரிந்து இருந்தால் கட்சத்தீவை என்றோ மீட்டு இருப்போம்.

ஒரு தனிநபர் சட்ட திருத்த மசோதா ஒன்றை தயாரித்து ,கட்சி சார்பே இல்லாமல் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவை கேட்டுப்பெற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் மத்தியில் ஆளும் கட்சி அதனை ஒன்றுமே செய்ய முடியாது ,நிறைவேற்றியே தீர வேண்டும்.

நம்ம ஊரில் எல்லாம் தேசிய கட்சி தலைமையின் முடிவை பொறுத்தே சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்றன.

இந்த அரசியலை எல்லாம் அமெரிக்க செனட்டர்களைப்பார்த்து கற்றுக்கொண்டால் பரவாயில்லை, கென்டக்கி கர்னல்னு உப்புமா பட்டம் வாங்கிட்டு அதுக்கு போஸ்டர் அடிச்சு மகிழும் கத்துக்குட்டிகளாகவே இருக்காங்க நம்மாளுங்க :-))

தனி நபர் சட்ட மசோதா குறித்து விக்கியில் உள்ளதை காண்க,

http://en.wikipedia.org/wiki/Private_member's_bill

ராஜ நடராஜன் said...

நரேன்!தற்போதைய ஈழநிலைமைக்கு காரணம் பிரபாகரனா என ஒட்டியும் வெட்டியும் பட்டிமன்றம் நடத்த ஏராளமான கருத்துக்களை முன் வைக்கலாம்.தற்போதைய நிலையில் பிரபாகரனை பின் தள்ளி முள்ளிவாய்க்காலின் மனித படுகொலைகளை முன் வைத்து பேசுவது மட்டுமே சரியாக இருக்கும்.அதனை தமிழகமும்,உலக அரங்கும் ஊடகங்களும் சரியாகவே செய்கின்றன.

இலங்கை அரசின் தெனாவெட்டுக்கள் அமெரிக்க தீர்மான வாக்கெடுப்புக்கு பின்னும் அடங்க வில்லை என்பதும்,இந்த வருட இறுதிக்குள் வட மாநில தேர்தலை நடத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தேர்தல் ஆணையர் அறிக்கை விட்டுருப்பது போன்று இன்னும் நிறைய LLRC வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுவதை நோக்கிய விமர்சனங்களை முன் வைப்பது ஒரு புறமும் மாணவர் போராட்டங்களின் கோரிக்கைகளை முன் நடத்தி செல்வது என இரு கொள்கை முறைகளில் செல்வது பலனிக்கும் என நினைக்கின்றேன்.

தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காமல் ஊடக வலுவுடனும்,அரசியல் களத்தில் முன் நிற்கும் வாய்ப்புக்கள் காரணமாக இந்து ராம்,சுப்பிரமணி சாமி,சோ போன்றவர்கள் இரண்டகமாக வேலை செய்கிறார்கள்.இந்தாளு சோ ஒரு நேர்காணலில் வடகிழக்கு பிரச்சினைகளை இலங்கை அரசு தீர்க்காவிட்டால் நானே இலங்கைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என சொன்னார்.சோ மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார்.இந்து ராம் ஓய்வில் இருக்கிறார்.உள்ளடி வேலைகள் ஏதாவது செய்யக்கூடும்.ராமுக்கு கிடைத்த லங்கா ரத்னா மாலையை தானும் வாங்கியே தீருவேன் என சுப்ரமணி சாமிதான் தீயாக வேலை செய்கிற மாதிரி தெரிகிறது.

2014 மார்ச் மாதத்திற்குள் பிரச்சினைகளை களைய முடியாமல் LLRC மார்ச்சுவரிக்குத்தான் போகப்போகிறது.பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!டெல்லியில் பாராளுமன்றத்தில் காச்சு மூச்சுன்னு காங்கிரஸும்,பிஜேபியும் கத்திக்கொண்டால் கூட டீ பார்ட்டி டின்னர் என சாயந்திரமாக அத்வானி,சோனியா போன்றவர்கள் இணைந்து கொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்,சிவாஜியின் திரைப்பட இறுக்கத்தை ரஜனியும்,கமலும் நண்பர்களாக முறியடித்திருக்கிறார்கள்.அதே போல் கருணாநிதியும்,ஜெயலலிதாவும் அரசியல் மேடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல் ஒன்றாக சேராவிட்டாலும் பரவாயில்லை.விருந்து,திருமண வைபவங்கள் போன்றவற்றிலாவது முகம் மலரலாம்.முன்பெல்லாம் திருமண வைபவ கலாச்சாரங்கள் அரசியலிலும் இருந்தது.கருணாநிதி,எம்.ஜி.ஆர் சண்டைக்குப் பின் மாறியிருக்க கூடும் என நினைக்கிறேன்.

கலைஞர் போட்ட திட்டங்களே தவுடுபொடியாகும் போது நம்ம கற்பனைகள் நிராசைகள்தான்.தமிழகத்தில் ஈகோ ஒரு முக்கிய வியாதி.அதிலும் இப்பொழுது கருணாநிதி,ஜெயலலிதா இருவரும் வியாதிகளுக்கெல்லாம் வியாதி.ஒரு வேளை ஸ்டாலின்,ஜெயலலிதா கால அரசியலுக்காவது மாற்றங்கள் வந்தால் தமிழகத்திற்கு நல்லது.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!ஓப்பன் கர்ணம் ஸ்டார் தான் இப்ப உலகளவில் பிரபலம்.இது யாரு கென்டக்கி கர்னல்னு உப்புமா பட்டத்துக்கு சொந்தக்காரர்?

ராஜ நடராஜன் said...

என்னது!திருப்பதிக்கு லட்டு சாப்பிட போனிங்களா?

100க்கு இன்னும் எத்தனை மிச்சம் பாக்கியிருக்கு:)

Anonymous said...

மன்னா!,

27 பிப்., 2012 – சென்னை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் ''கென்டக்கி கர்னல் விருது'

மன்னா!,

//எத்தனை "மிச்சம் பாக்கியிருக்கு"//


என்னது! "நடு சென்டர்"..போல


கொங்கு நாட்டான்.


ராஜ நடராஜன் said...

கொங்கு மன்னா!தகவலுக்கு நன்றி.ஸ்டாலின் தான் அந்த கர்னல் ஸ்டாரா? உடன் பிறப்புக்களின் தாரை தப்பட்டைகள் ஒலித்து மாநாடு கூட்டியிருக்க வேண்டாமா?

அ.தி.மு.க அம்மா கும்பிடுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறதா அல்லது ஜெயா தொலைக்காட்சியிலும் அம்மா பல்லவிதானா என தெரியவில்லை. பதிலாக தப்பித் தவறி ரிமோட் பட்டன் கலைஞர் தொலைக்காட்சியை தட்டி விட்டால் தலைவர் தலைவர் என்ற குரலே கேட்கிறது.

எப்படியெல்லாம் விழாக்கள் நடத்தி ஜொலித்து இப்ப இப்படியாகிப் போச்சே!

நடு சென்டர் தெரியும்.மிச்சம் மீதியும் அதில் சேர்த்தியா?அவ்வ்வ்வ்வ்:)

ராஜ நடராஜன் said...

யாராவது வந்து கொஞ்சம் ரன் எடுங்கய்யா!ஐ அம் 100க்கு வெயிட்டிங்க்:)

வவ்வால்!எனக்கு காவல் நிலையம் எனும் மக்பர் ன்னாலே அலர்ஜி.அதுவும் பாஸ்ட் ட்ராக்கில் வண்டியை ஓட்டிகிட்டுப் போகும் போது தூரத்திலேயே போலிஸ் வண்டி தீபாவளி லைட்ல நிற்கும் போது நடு சென்டருக்கு குறுக்கு சால் ஓட்டி விடுவேன்.அதை விட முக்கியமாக ஓடும் வாகன ஓட்டிகளை பார்த்துகிட்டிருக்கும் போலிஸ் கண்களை பார்க்கவே மாட்டேன்:)

ராஜ நடராஜன் said...

டெண்டுல்கர் 100 எடுக்குறதுக்கு முன்னாடி ஏன் டக்காவுட்டாகிறார்ன்னு இப்பத்தானே தெரியுது:)

வவ்வால் said...

ராச நட,

டீ பார்ட்டி சந்திப்புக்கள், கல்யாண மொய்விருந்துகள் என சந்திக்கும் டிப்ளமட்டிக் பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும், மாநில நலன் என்றால் ஒன்றாக கூடிக்கொள்ளும் கர்நாடகா,கேரள அரசியல் போல ஏன் தமிழகத்தில் இல்லை என்பதை சொன்னேன்.

அம்மாவோ,அய்யாவோ அவங்களே கொழுக்கட்டை சுட்டு வேக வைக்கணும்னு பார்க்கிறாங்க, யாரு சுட்டா என்னா கொழுக்கட்டை வெந்து ,சாப்பிட கிடைச்சா போறாதா?

#கென்டகி சிக்கன் மட்டும் சாப்பிட்டா போதுமா, இதெல்லாம் தெரியாம என்ன அரசியல் பார்வையாளர் நீர்?

கொங்கு நாட்டார் பாருங்க, கணக்கா பதில் சொல்லுறார்.

# லட்டு என்ன பூந்திக்கூட கிடைக்கலை ,அவ்வ் :-((

#கணக்குலாம் பார்க்காம அடிச்சிக்கிட்டே வந்தா தானா 100 வந்திடும் :-))

டெண்டுல்கரை விட 100 அடிக்க ரொம்ப ஆசைப்படுறீர் :-))

அவருக்கும் எனக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்,

அவரு BATSMAN,அடியேன் BATMAN :-))

அதான் 100 அடிக்க அவரு போலவே எனக்கும் இழுக்குது போல,

வானமே கூடென திரியும் கூடற்ற தேசந்திரி பறவையான அடியேனுக்கு,அக்கம் பக்கம் உள்ள கூடுகளில் இளைப்பாறவே விருப்பமாகிவிட்டது ,என்ன செய்வேன் அவ்வ்!

ஊரார்ப்பதிவை "ஊட்டி" வளர்த்தால் தன்ப்பதிவை "கொடைக்கானல்" வளர்க்கும் என்ற நம்பிக்கைதேன்!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நாமளும் ஊர் சுத்தற பறவைதான்.மாணவர்களே உங்கள் நண்பன் யார் பதிவைப் போட்டு விட்டு இன்றைக்குதான் கடைப்பக்கமா போனேன்.நீங்களும்,நரேனும் மட்டுமா கடை காத்து வாங்குது.இதுக்கெல்லாம் அசர மாட்டேனே:)

கலைஞர் தொலைக்காட்சியும்,நக்கீரனும்தான் தி.மு.கவின் பிரச்சார பீரங்கிகள்.நாமதான் அந்தப் பக்கமா போறேதேயில்லையே.அப்புறமா எங்கே கென்டக்கி பட்டமெல்லாம் தெரிஞ்சுக்கிறது.

நாம இழுக்குற பின்னூட்ட இழுவையை பத்தி பிரிச்சாலே 100 அடிச்சிடலாம்.இல்லைன்னா பதிவர் மனோ மாதிரி இட்லி,டீ,வடை,போண்டான்னு கூட சொல்லி 100 அடிக்கலாம்.நாமெல்லாம் பின்னூட்ட எதிக்ஸ் பார்க்கிற ஆளுக லிஸ்ட்ல மெம்பர் தெரியுமோன்னோ!

நண்பர் ஒருவர் திருப்பதிக்கு போய்விட்டு வீட்டில் இருக்கிறவர்கள்,உறவினருக்கு கொடுக்கலாம் என நிறைய லட்டு வாங்கிட்டு பஸ் ஏறி திருச்சி வந்து சேரும் போது எல்லா லட்டும் காலி.அன்னைக்கு புடிச்ச சுகர் அவரை இன்றைக்கும் விடலை.

கை நிறைய லட்டு,உல்லாசமா மொட்டையெல்லாம் அந்தக் காலமய்யா!இப்ப பூந்தியே கிடைக்கலைன்னு சொல்றீங்களே!

இப்பவெல்லாம் பாதி மொட்டை போட்டு வச்சுட்டு அடுத்த மொட்டைய கவனிக்கிறதா கேள்வி.மொட்டைக்கு மெசினெல்லாம் வந்தும் இந்த பாடுன்னா திருப்பதி மொட்டைகளை வெங்கடாசலபதியே காப்பத்தனும்.

பேட்மேனுக்கு மூணுகால்ன்னு பேட்ஸ்மேன் ஒப்பீடு மூலமா தெரியுது:)

வவ்வால் said...

ராச நட,

நீர் இடமிருந்து வலமாக சுற்றி வாரும்,நான் வலமிருந்து இடமாக சுற்றி வாரேன் எங்காவது ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ளொம் பொழுது பேசமுடியவில்லையேனு பேசுவோம் :-))


#நக்கீரனின் ஊடக தில்லுமுல்லுனு பதிவுப்போட்டுக்கிட்டு விடாம நக்கீரன் படிப்பவர் நீர் ,இப்படி சொல்லலாமா :-))

# நாம பக்கம் பக்கமா அடிச்ச பின்னூட்டமெல்லாம் பிரிச்சி போட்டா 1000மே அடிச்சிருப்போம் :-))

# திருப்பதில அநியாய கொள்ளை நடக்குது, பேசாம நானும் ஒரு கோயில் கட்டி "அதிபதி" ஆகிடலாமனு பார்க்கிறேன்.

மொட்டை அடிக்க எல்லாம் கிரவுட் பகலில் தான் மொய்ய்க்கும், நைட் 11 மணிக்கு போனா அவசரமில்லாம அடிக்கிறாங்க. ஆனால் ஒரு மொட்டைக்கு டிப்ஸ் ஆ 100 ரூபா கேட்கிறாங்க,ஆனால் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் மொட்டை அடிக்கும் இடத்தில், " காசு கேட்டால் புகார் கொடுக்கவும்"னு தமிழ்,தெலுகு,இந்தி,ஆங்கிலம்னு அறிவிப்பு போட்டு,போன் நம்பர் எல்லாம் போட்டு வச்சிருக்காங்க,அதுக்கு அடியிலேயே குந்திக்கிட்டு சுவாமி பார்த்துப்போட்டு கொடுங்கோனு பவ்யமா 100 கேட்கிறாங்க :-))

மொட்டையே போடாத நான் மட்டுமே 1000 ரூபா அழுதேன், சொந்தங்கள் எல்லாம் மொட்டையிலே பிசி அவ்வ்:-((


இது இல்லாம எல்லா இடத்திலும் காசு கொடுத்தா ராச மருவாதி தான் :-))
#

//பேட்மேனுக்கு மூணுகால்ன்னு பேட்ஸ்மேன் ஒப்பீடு மூலமா தெரியுது:)//

ஒட்டகத்துக்கு ஒன்றரைக்கண்ணுனு நல்லா தெரியுது :-))

Anonymous said...

வவ்வால்,

இ.செ. பதிவில் வெளியுறவுத்துறை குறித்த பின்னூட்டம் அருமை மற்றும் அதுதான் உண்மை நிலை...அதுபோன்றே கருத்துக்கள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இடம் பெற்றிருந்தால் சிறப்பு....

எதிர்பார்ப்பு: ஹாட்ரிக் பின்னூட்டம்...அடுத்த பதிவில்....

கொங்கு நாட்டான்.

குரங்குபெடல் said...

குரங்குபெடல் said...

வ்

குரங்குபெடல் said...

வா

குரங்குபெடல் said...

ல்

குரங்குபெடல் said...

பொழுதே போகலை

அதான் . . .



ஹீ . . . ஹீ

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

ஆஹா பின்னூட்டத்திற்குலாம் பாராட்டா,நன்றி!

ஆனா இதை அங்கே சொல்லாம இங்கே சொல்லுறிர்ரே அவ்வ்!

நாம என்ன ஒரு அய்ந்தாண்டு கால திட்டம் போட்டா பின்னூட்டம் தயார் செய்றோம்,அந்த நேரம்,இடம் பொறுத்து தானா பொங்குறது தான்,நம்ம பதிவிலும் அப்பப்போ பொங்குறது உண்டு தானே,அப்புறம் என்னா பார்த்துக்கலாம்.

கச்சத்தீவு பற்றி பதிவு போடலாம்னு படிக்க ஆரம்பிச்சு வியட்நாம், ஈஸ்ட் திமோர் ,கொசாவானோ எங்கோ போயிட்டேன், விரைவில் கச்சத்தீவு கச்சைக்கட்டி வரும் ,பாரும்!
---------------

கு.பெ,

ஏன் ...ஏன் இந்த கொலவெறி, இங்கே ராச நட என்ற திருநாமம் உடைய ஒருத்தர் ஒத்தைக்காலில் ஒட்டகம் மேல நின்னுக்கிட்டு 100 அடிக்க காத்திருந்தார்,அவரு ஆசையில மண்ணள்ளிப்போட்டுப்புட்டீரே, வருவார் வந்து ,ஒட்டகத்தை விட்டு கடிக்க வைப்பார் :-))

நல்லா பொழுது போகும்!

முட்டாப்பையன் said...

வவ்வால். உம்ம பதிவுகளும்,இந்த பதிவுகளும்,ஸ்டைல் ஒத்துபோகுதே.
இது வேறையா?
http://othisaivu.wordpress.com/

:-)))

வவ்வால் said...

முட்டாப்பையர்,

பேருத்தான் இப்படினா ,ஆளும் அப்படியேவா இருப்பீர் :-))

அந்தப்பதிவைப்பற்றி ஜோதிஜி பிளஸ்ஸில் போட்டிருந்தார்,நானும் பார்த்தேன். ஏதோ சமூகத்தால் புண்ப்பட்ட மனசுக்கார பெருசு எழுதறப்பதிவு போல இருந்துச்சு.

நீரும் ஜோதிஜி பிளஸ் பார்த்து தானே இப்போ கேட்கிறீர்,என்னமோ துப்பறியும் சொம்பாட்டாம் :-))


இதுக்கெல்லாம்ம் விளக்கினா விடிஞ்சிடும், பேசாம அந்த பதிவு எழுதுறவரையே புடிச்சு ,நீ தானே வவ்வாலுனு கேட்டு ஒத்துக்க வச்சிடும் :-))

எனக்கு இதிலொன்றும் ஆட்சேபனையே இல்லை!!!

naren said...

என்னது, விஸ்வரூபம் பார்ட் -2 நூறு நாள் ஓடியாச்சா??? நூறு கமெண்ட் வந்த்ப்பிறவும் ராஜ நடராஜரை இன்னும் காணவில்லை.

வவ்வால், எத்தனை அவதாரம்பா எடுக்கவைக்கிறாங்க உன்னை. இப்போது புது அவதாராமா குற்றச்சாட்டப் பதிவில், இரண்டு மறுமொழி எழுதினேன். இரண்டுமே பிரசுரமாகவில்லை, ஐ.ஐ.டி லேவலுக்கு இல்லைப்போல.

முட்டாப்பையன் said...

வவ்வால்.வாரும் சப்பளாக்கட்டை பதிவுக்கு.என் கமெண்ட்ஐ தூக்குது.பரவாஇல்லை. மெயில் டிக் பண்ணவங்களுக்கு போகட்டும்.

Anonymous said...

வவ்வால்,

//ஆனா இதை அங்கே சொல்லாம இங்கே சொல்லுறிர்ரே //

அங்கே அனானிகளுக்கு அனுமதியில்லாததால் தான் இங்கே.....

கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

நரேன்,

வாரும்,

என்னது விஷ்வரூபமா,இன்னும் அந்த போதையில் இருந்து மீளவில்லையா அவ்வ்!

நாம பஸ்டாப்பில் நிக்கும் போது,கெரகம் புடிச்ச சில பேரு 12பி பஸ் எப்போ சார் வரும்னு நிமிட்கு ஒருக்கா கேட்டுக்கிட்டே இருப்பாங்க,ஆனால் பஸ் வரும் நேரமா பார்த்து ,எதாவது டிரான்ஸ்ஃபார்ம் பின்னாடி பிஸ்சடிக்க போயிடுவாங்க,அது போல தான் நம்ம ராச நடயும், 100 எப்ப வரும், எப்ப வரும்னு கேட்டுப்புட்டு இப்போ காணோம் :-))

#தாசாவதாரம் போட்ட லோகநாயகரை விட நம்மள அதிக அவதாரம் எடுக்க வச்சிடுவாங்க போல மக்கள் ,அவ்வ்.

எதுக்கும் நீர் கொஞ்சம் உஷாரா இரும், அப்பாலிக்காஊம்ம பதிவையும் நான் தான் எழுதுறேன்னு கண்டுப்பிடிச்சாலும் பிடிப்பாங்க,எப்பூடி!
-----------

முட்டாப்பையர்,

சப்ளாக்கட்டை என் பின்னூட்டமும் தூக்குது என்ன செய்ய கெரகம் அதுக்கு தெரிஞ்ச விவரம் அம்புட்டுத்தேன்.

நம்மளப்பார்த்து ரொம்ப மிரண்டு போச்சுனு நினைக்கிறேன்,இப்போ கமெண்ட் மாடரேஷன் வச்சிடுச்சு.

அந்த பயம் இருந்தா சரித்தேன்,என்னால கமெண்ட் மாடரேஷன் வச்சவங்களின் எண்ணிக்கையில் ஒன்னுக்கூடிப்போச்சு :-))

----------

கொங்கு நாட்டார்,

ஓ அப்படியா,எல்லாம் என்னப்போல நல்லவய்ங்களா இருக்க முடியும் :-))

நம்ம கடையில் என்னிக்குமே யாருக்குமே தடையிருக்காது. நீர் வாரும்.

----------

இது நன்றி சொல்லும் நேரம்,

இப்பதிவினை இடும் பொழுது பெரிதாக வரவேற்பு இருக்காது,ஏதோ ஆர்ட் ஃபில்ம் போல ரெஸ்பான்ஸ் இருக்கும் என நினைத்தேன்,ஆனால் மக்கள் அலைகடலென திரண்டு மாபெரும் வரவேற்புக்கொடுத்து விட்டார்கள்,என்றும் உண்மைக்கு குரல் கொடுக்க மக்கல் தயங்குவதில்லை என்பது புலனாகிறது.

இப்பதிவுக்கு அயராது வருகை தந்து அசத்தியவர்கள் பலர் ,ஆனால் சிலரை குறிப்பிட்டே ஆக வேண்டும், நந்தவனம்,ராச நட, கொங்கு நாட்டார்,வேகரி,நரேன் ,கடைசியா வந்தாலும் 100 அடிச்சு சாதித்த கு.பெ ஆகியோரின் அளப்பரிய சேவைக்கு அடியேனின் அனந்தகோடி நமஷ்காரங்களும்,நன்றிகளும்!

கண்கள் பனித்தன,நெஞ்சம் இனித்தது!

மழைவிட்டாலும் தூவானம் நிற்காது என தொடரட்டும் பின்னூட்டங்கள் :-))

முட்டாப்பையன் said...

உமக்கு முன்னாடியே என் கமெண்ட் மூணு மாடுரேசன் வச்சி வேலி விடலை.சரி போன்னு வந்துட்டேன்.
இப்ப ஒரு கமெண்ட் மட்டும் ஓகே பண்ணி பதில் போட்டிருக்கு.மீண்டும் தொடருவோம்.

:-))

முட்டாப்பையன் said...

அப்ப கேணத்தனமான பதிவு போட்டு உளறுவதை என்ன வென்று சொல்லுவது?தில் வேணும்.எதிர்கொள்ள.அது இல்லாட்டி (????!!!!)

Jayadev Das
has left a new comment on the post "பரிணாமம்: நாரத்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும...
":

@ முட்டாப்பையன்

கேனத் தனம் என்றால் அதற்க்கு தகுந்த காரணத்துடன், எந்த விதத்தில் கேனத் தனம் என்று நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் தக்க பதில் தரப்படும் அல்லாது ஆம் நீர் சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்ளப் படும். நீர் பேசுவதும் கேனை ஐந்து வார்த்தைகளில் ஐம்பது எழுத்துப் பிழை, அர்த்தத்தோட எழுவது மாதிரியும் தெரியவில்லை. இந்த யோக்கியதையில் உம்மோட விவாதம் வேறா?

\\தில் வேணும்.எதிர்கொள்ள.அது இல்லாட்டி\\ பாலியல் நோய் இருக்கும் விபச்சாரி நீ ஆம்பளையாடான்னு கேட்கலாம், ஆனாலும் புத்தியிருப்பவன் நிரூபிக்கப் போக மாட்டான்.

முட்டாப்பையன், இதுக்கு மேல உனக்கு பதில் கிடையாது.நீ திருந்து.
-------------------------------------------------------------------------------------------------------------------

இத வெளிஇட்டு உடனே தூக்கிடுச்சி.தொடை நடுங்கி வெண்ணை.

:-))

முட்டாப்பையன் said...

@வவ்வால்.இது சும்மா ஜாலிக்கு.மத்தவங்களும் தெரிஞ்சிக்கிடட்டுமே சப்பளாக்கட்டை லச்சனத்தை.
_______________________________________________________________________

இராமயணம்,மஹாபாரத்தில் இல்லாத ஆபாசமா, நியோக திருமணம்னா என்னனு தெரியுமா ஓய்,வியாசர் தான் அதில எக்ஸ்பெர்ட் :-))

அதைவிடவா நான் சொன்னது உமக்கு ஆபாசாம தெரிஞ்சு போச்சு,அய்யோ பாவமே :-))\\ இதற்க்கு உமக்கு சரியான புரிதல் இல்லை. அப்படியே இருந்தாலும் நீர் செய்யும் அயோக்கியத் தனத்துக்கு இது பதிலாகாது. ////////////


எப்படியா பருன் மாமா மாதிரியே சமாளிக்கிறீர்?
தெரியலைனா நான் படிக்கலை.படிச்சிட்டு சொல்லுறேன் அப்படி சமாளி.
இப்படி படார்ன்னு கால்ல விழக்கூடாது.


\\அப்புறம் இந்த கமெண்டையும் டெலிட் செய்து உமது தொடை நடுங்கி தனத்தை நிறுபிக்க வேண்டாம் :-)) \\ முட்டப் பையன் கிட்ட சரண்டர் ஆன தொடை நடுங்கி நீர், நானல்ல./////////////

சொல்லும்போதே வாய் கொளறுது பாரு.மறைக்க வாய்ல எதையாவது தினித்துக்கொள்ளவும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சரி அடுத்து எங்க போகலாம்?பந்துக்கள் ஏதாவது பதிவு போட்டிருக்கா?
இனி இந்தமாதிரி உலக மஹா போஸ்ட் பார்த்தால் எங்களுக்கு இந்த மெயில்லில் தகவல் சொல்லவும்.எங்கள் குழு உடனே வரும்.
chennaipathivargal@gmail.com

நன்றி.எங்கள் பின்னுட்டத்தை அனுமதித்தற்கு.மீண்டும் நன்றி!

Unknown said...

தமிழக தேர்தலின் வரலாறுகள், தமிழக அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/politics_history