என் நினைவுகளின்
ஆக்டோபஸ் கரங்கள்
கடந்த காலம் ,
நிகழ் காலம்
எதிர்காலம் என
எல்லா திசைகளிலும்
துழாவி என் இருப்பை
நினைவுருத்துகிறது
என் விருப்பமின்றி!
என்னையே தொலைத்த தருணங்களிலும்
நான் என்ற
என் நினைவைத்தொலைத்ததில்லை!
கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே
என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!
என்றாவது என் நினைவுகள்
மரிக்கலாம்
எனவே என் நினைவுத்தடங்களை
விட்டு செல்கிறேன் இவ்விடம்!
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Thursday, July 19, 2007
Thursday, July 12, 2007
என் கடல் நிறைவதில்லை!
மழைக்காலங்களில்
குளங்கள் நிரம்பி வழிகின்றது
ஏரிகள் நிரம்பிவழிகின்றது !
ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன
எல்லா மழைகாலங்களிலும்
கடல் மட்டும்
காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்
பேராவலுடன் பெற்றுக்கொள்ள!
நானும் அப்படித்தான்!
குளங்கள் நிரம்பி வழிகின்றது
ஏரிகள் நிரம்பிவழிகின்றது !
ஆறுகள் பெருக்கெடுத்தோடுகின்றன
எல்லா மழைகாலங்களிலும்
கடல் மட்டும்
காத்திருக்கிறது எல்லா பெருமழையையும்
பேராவலுடன் பெற்றுக்கொள்ள!
நானும் அப்படித்தான்!
Saturday, July 07, 2007
புறக்கணிப்பின் வலி
வெயிலில் நிற்கும்
மரங்கள் தரும்
நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!
நானோ நிழலை புறக்கணித்து
வெயிலில் நடக்கிறேன்,
எனக்கென துணையாய்
பின் தொடரும்
என் நிழலை புறக்கணிக்க
என்னாலாகாது!
எனக்கு தெரிந்த
புறக்கணிப்பின் வலி
என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!
பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
மரங்கள் தரும்
நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!
நானோ நிழலை புறக்கணித்து
வெயிலில் நடக்கிறேன்,
எனக்கென துணையாய்
பின் தொடரும்
என் நிழலை புறக்கணிக்க
என்னாலாகாது!
எனக்கு தெரிந்த
புறக்கணிப்பின் வலி
என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!
பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
Subscribe to:
Posts (Atom)