Showing posts with label மின்வெட்டு. Show all posts
Showing posts with label மின்வெட்டு. Show all posts

Sunday, October 14, 2012

மின்சாரக்(கொடுங்)கனவுகள்.


தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.

மின்வெட்டு என்று சொன்னால் மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் தடை ஏற்படுவதாகும், முழுக்க மின்சாரம் இல்லாத நிலையில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதனை  மின்வெட்டு என சொல்வது எப்படி சரியாகும், ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?

சரி எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிய எதுக்கு வார்த்தை விளையாட்டுல சொல்லிக்கிட்டு, இப்போதைய மின்சார தட்டுப்பாடான நிலைக்கு அடிப்படையான சில காரண ,காரியங்களை பார்க்கலாம்.

முதல் காரணம் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 500 மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 4000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மின்நுகர்வு-தட்டுப்பாடு பட்டியல்.

in MW
Month     Jun - 10  July -10  Aug -10  Sep -10  Oct -10 Nov -10
Avg.
Demand  10850    10860     10500    10650 10990     9850
Avg.
Availability  9160    9130       9040     8500   7940      7250
Deficit -      1690   -1730     -1460    -2150 -3050      -2600

in MW

Month     Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand  10770  11080    11160    11580   11760     11840
Avg.
Availability 8150   7650     9150      9050     9400       10270
Deficit       -2620 -3430    -2010    -2530    -2360      -1570


The deficit varies from 1400MW to 3400MW
The availability Vs demand and the deficit during Day time
(6.00 to 18.00 Hrs)
in MW

Month       Jun - 10 July -10 Aug -10 Sep -10 Oct -10 Nov -10
Avg.
Demand   10300          10300   9980      10130     9890        8880
Avg.
Availability   8580       8400       8290      7780      6780        6400
Deficit        -1720      -1900      -1690 -    2350    -3110       -2480

in MW
Month        Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand     9150       11080      11160      11580      11160     11840
Avg.
Availability   7290       7450        8940         8740       9200      10160
Deficit -       -1860       -3630      -2220         -2840    -1960      -1680

-----------------

மின் தட்டுப்பாடு இவ்வளவு உக்கிரமாக இருக்கும் போது மின்வாரியம் ஏன் விரைந்து செயல்படவில்லை என பார்த்தால் அதனுள் ஏகப்பட்ட அரசியல் அதுவும் நிர்வாக அரசியல் என விரவிக்கிடக்கிறது, ஆள்வோருக்கு சரியான நேரத்தில் உண்மையான நிலவரத்தினை சொல்ல தவறிவிடுகிறார்கள், பொய்யான காகித கணக்குகளை காட்டி விரைவில் சரியாகிவிடும் என்பதே அதிகாரிகளின் பதில் ,அதனையே தலைமையும் நம்புகின்றது,ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என அவர்கள் அறிவதே இல்லை, ஊடகங்களில் வரும் செய்தியினைக்கூட அரசியல் காழ்ப்புணர்வு செய்தி எனப்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு மின்வாரியம் ஆமை வேகத்தில் வழக்கமாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தது ,அதனை மேலும் சிக்கலாக்கி இன்னும் நத்தை வேகத்தில் செயல்படுமாறு சில மாற்றங்களை செய்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும் எனலாம்.

முதன் முதலில் தமிழ்நாடு மின்வாரியம் 1957 இல் மாநில மின்விநியோக சட்டம் 1948 இன் கீழ் உருவாக்கப்பட்டது , இதன் பணி மின் உற்பத்தி, மின் பகிர்வு,மின் விநியோகம் ஆகும்.

1993 வரையில் மின்சார வாரியம் பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக செயல்ப்பட்டு வந்தது, பின்னர் மின்சக்தி துறை என தனியாகப்பிரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பின்னர் மீண்டும் 2003 இல் மின்சார துறையை நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டு , மின் உற்பத்தி, கடத்துதல்,விநியோகம்,கட்டுமானம், நிதி என தனித்தனியாக பிரிக்கப்போவதாக ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் 2003 இல் தனி துறைகளாக பிரிக்க வேலைகள் காகித அளவில்  துவங்கினாலும் பிரிக்கப்படவில்லை அல்லது வேலை மெதுவாக நடந்து வந்தது எனலாம், இந்த இரண்டு வேலைகளையும் துவங்கியது அம்மையார் ஆட்சிகாலத்தில் என்றாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

பின்னர் 2010 இல் முத்தமிழ் வித்தவரான மஞ்சத்துண்டு அய்யா ஒரே வீச்சில் பல துறைகளாகவும், அவற்றை அரசு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும் மாற்றியமைத்துவிட்டார்.

இப்படி தனித்தனியாக பிரிப்பது நல்ல விளைவினை ஏற்படுத்தும் திட்டம் போல தோன்றினாலும் , மின்வாரியம் செயல்ப்படும் வேகத்தினை குறைக்கவே செய்யும் என்பது அரசு நிர்வாகம் செயல்படும் விதம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

மேலும் இது துறை ரீதியாக பிரிக்கப்பட்டது என சொன்னாலும் அனைத்து பிரிவினையும் தனி லிமிட்டட் கம்பெனிகள் என்றே உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்,அரசு துறை வேறு ,அரசு நிறுவனம் என்பது வேறு, நிறுவனமாக பிரிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானலும் தனியார் முதலீட்டினை அனுமதித்து தனியார் மயமாக்கலாம், பங்குகளை விற்கலாம், மேலும் லாப,நட்டம் என பார்த்து செயல்படும் ஒரு அமைப்பாக மாறிவிடும், சேவை என்பதற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது எண்ணை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் , சர்வதேச சந்தை விலைக்கு எண்ணை விலையை நிர்ணயிக்க உரிமை கொடுத்துவிட்டு, விலை ஏற்றினால் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பேட்டிக்கொடுக்கிறார்கலே ,அது போல வருங்காலத்தில் மின் நிறுவனங்களும் செயல்படலாம்.

தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு மின்வாரியத்தின் பிரிவுகள்.

I. Erstwhile TNEB which has been reorganized as,

i. TNEB Limited.

ii. Tamil Nadu Generation and
Distribution Corporation Limited
(TANGEDCO),

மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுகர்வோருக்கு மின்சாரம் அளித்தல்.

iii. Tamil Nadu Transmission Corporation
Limited (TANTRANSCO) and

மாநிலத்தின் உள் பகிர்வு வலை(கிரிட்) மற்றும் வெளியில் இருந்து வாங்கும், விற்கும் மின்சாரத்தினை மின் பகிர்வு வலை மூலம் செயல்படுத்துதல்.

II. Tamil Nadu Energy Development Agency
(TEDA)

உற்பத்தி, தேவை, எதிர்கால திட்டம் என வடிவமைத்தல்.

III. Chief Electrical Inspector to Government
(CEIG)

மின் திட்டங்கள், மின் பகிர்வு,விநியோகம் என கண்காணித்தல்.

IV. Tamil Nadu Power Finance and Infrastructure
Development Corporation Limited.

மின் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், திரட்டுதல்.

இப்படித்தனியாக  பிரிக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதே மிகப்ப்பெரிய வேலையாக இருக்கும்.

முன்னர் மின்வாரிய தலைவர் என ஒருவர் இருப்பார் அவர் முடிவு செய்து மற்றவர்களை செயல்ப்படுத்த சொன்னால் போதும், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு மேலாண் இயக்குனர், அனைவரும் சம அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகள், 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்க அனைவரும் ஒற்றுக்கொண்டு செயல்ப்படுத்த வேண்டும், இவர்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து வட்டம்,வட்டமாக மீட்டிங் போடுவதற்கே மின்சாரத்துறை அமைச்சருக்கு நேரம் சரியாக போய்விடும்.

கடைசியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ,மெது பகோடா ,காப்பி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே மீட்டிங் கலைந்துவிடும்.

இப்படி தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் , ஒவ்வொன்றாக தனியார் முதலீட்டுக்குள் நுழைக்கலாம், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பினை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என எளிதாக காரியத்தினை முடிக்க முடியும்.

உதாரணமாக மின்பகிர்வு நிறுவனம் தனது கம்பிவட கட்டமைப்பினை ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடலாம், அதனை மின் உற்பத்தி நிறுவனம் எதிர்க்க முடியாது. எல்லாம் அரசு நிறுவனம் தானே அமைச்சர் , முதலமைச்சர் இருக்காங்களே கேட்க மாட்டாங்களா என்றால், அவர்களுக்கு தெரிந்து தானே நடக்கிறது , அப்படியே  யாரேனும் கேள்வி கேட்டாலும் அந்நிறுவனங்கள் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது,அதில் அரசு தலையிடாது என டிப்ளமேட்டிக்காக சொல்வார்கள்,ஆனால் அந்த அதிகாரத்தினை கொடுத்ததே அமைச்சரவை என்பதை மறைத்துவிடுவார்கள்.

------------------------

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் பகிர்வு கட்டமைப்பு விவரம்,

• EHT & HT Substations:-

400 KV SS-துணை மின்நிலையம் : 13

230 KV SS  துணை மின் நிலையம்: 77

மேற்கண்ட வகை துணை மின்நிலையங்கள் கிரிட் மின்பகிர்வில் பயன்ப்படுபவை.

110 KV SS துணை மின்நிலையம்: 707

66 KV SS துணை மின்நிலையம் : 33

33 KV SS துனை மின்நிலையம்: 513
                                                    Total : 1343

மேற்கண்டவை முறையே மாநகர, தொழிற்சாலை, நகரம், சிற்றூர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பயன்படுபவை.

     
• EHT/HT Lines : 1.77 lakhs Ckt. Km

கூடுதல் உயர் அழுத்த.உயர் அழுத்த கம்பிவட அமைப்பு ,உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்பகிர்வுக்காக மின்சாரம் கொன்டு செல்ல பயன்படுகின்றன.

• LT Lines : 5.58 lakhs Km
குறைவழுத்த மின் கம்பி வட அமைப்பு வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய.

• ஊர்களின் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய 2.05 lakhs Distribution Transformers பயன்படுகின்றன.
-------------

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இயக்க்ப்படும் அனல், புனல்,காற்றாலை, எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள்.




கவனிக்கவும்:-

* மேட்டூர் ,போன்ற நீர் மின் நிலையங்களில் நீர் இருக்கும் அளவைப்பொறுத்தே மின் உற்பத்தி என்பதால் ,காவிரியில் நீர் வராத நிலையில் இப்பொழுது மின் உற்பத்தி 50%க்கும் கீழே போய்விட்டது.

*எண்ணூர் அனல் மின்நிலையம் 50% மின் உற்பத்தி திறனில் செயல்ப்படும் நிலையில் இருப்பதால் பாதி மின் உற்பத்தி தான் செய்கிறது.

*அனல் மின் நிலையங்களுக்கு என ஆண்டுக்கு மொத்தம் 15 .5 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது, அதில் 13.5 மில்லியன் டன் மத்திய அரசின் கோல் இந்தியா அளிக்கும் மீதி 2 மில்லியன் டன் வெளியில் வாங்கப்படுகிறது,எனவே நிலக்கரி கையிருப்புக்கு ஏற்ப மின் உற்பத்தியின் அளவு ,குறைக்கப்படுவது வழக்கம், எனவே பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் 80-90% மட்டுமே மின் உற்பத்தி செய்யும்.

*குத்தாலம், வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படா நிலையில் உள்ளது.

*பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் நாப்தா மூலம் இயக்கப்படுவதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயங்கும்.

மேற்கண்டப்பட்டியல் மூலம் அறிய வருவது என்னவெனில்,அரசு மின்னுற்பத்தி வெறும் 5,677 மெகாவாட்டுகள் மட்டுமே. மொத்த மின் தேவையோ 14,000 மெகாவாட்டுக்கு அருகில், சராசரியாக 11,000 மெகாவாட் மின்சாரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

ஆனால் அரசு மின் உற்பத்தில் முதலீடு செய்யாமல் தனியார் உற்பத்திக்கு முன் உரிமை அளித்து வருகிறது,இப்படியே போனால் வெகுவிரைவில் மின் உற்பத்தியில் தனியாரின் கை ஓங்கி, மின்சாரத்தின் விலை வெகுவாக உயரும், அரசின் பெரும்பணம் மின்சாரம் வாங்கவே செலவாகும் அல்லது சிக்கன நடவடிக்கை என மேற்கொண்டால் தற்போதுள்ளது போன்று கடும் மின்வெட்டு ஏற்படும்.

• Gross energy consumption during

2010-11 was 74990 MU.

• Total energy generated from State
owned stations during 2010-11 was
25784 MU.

• Energy purchased from Central
Generating Stations, Wind, Open
Market, Exchange etc., during 2010-11
was 49206 MU.

தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியே அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் செய்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதி மின்சாரம் வெளியில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு ,விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விநியோக விலை ரூ3.81 ,

ஆனால் அரசின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ 5.31

எனவே சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் விற்பதனால் மின்வாரியத்திற்கு 1.50 ரூ நட்டம்.

இதன் மூலம் ஆண்டுக்கு ஏற்படும் நிகர நட்டம் ரூ 38,000 கோடி ஆகும்.

மேலும் கடந்த காலங்களில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் 45,000 கோடிகள்.

இந்த லாப-நட்ட கணக்குகளின் காலம் 2011 ஆகும், பின்னர் ஆட்சிக்கு  வந்த அம்மையார் நட்டமில்லாமல் மின் நிறுவனங்கள் செயல்பட என்ன செய்வது என "உயர் அதிகாரிகளை" ஆலொசனை கேட்க கட்டணம் உயர்த்த வேண்டும் என்று சொல்ல ,கட்டணமும் உயர்த்தப்பட்டது,அப்படியும் நட்டமே வர , கூடுதலாக பணம் செலவழிக்க அரசால் முடியாது, எனவே முடிந்த வரை நட்டமில்லாமல் இயங்க சொல்ல , "உயர் அதிகாரிகளும்" கூடுதல் விலைகொடுத்து  மின்சாரம் வாங்கி, குறைவான விலையில் விநியோகித்தால் தானே நட்டம் வரும் என அதி அற்புதமாக கண்டுப்பிடித்து மின்சாரம் வாங்குவதை குறைத்து விட்டார்கள், அதன் விளைவே மின்வெட்டு.

மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் வெளியில் வாங்கப்படுகிறது ,அதனை முழுவதுமாக நிறுத்தி இருந்தால் 8 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும், அப்படி எல்லாம் மக்களை வதைக்க கூடாது என கருணை உள்ளத்துடன் மேலும் கொஞ்சம் நேரம் மின்சாரம் கொடுப்போம் என குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கி சுமார் 12 மணி நேரம் மின்விநியோகம் செய்கிறார்கள்.

நடுநிலையானவர்கள் நட்டத்தில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும், மக்கள் தொகை அதிகம்ம் ஆகிடுச்சு ,நிறைய மின் இணைப்பு கொடுத்தாச்சு, அதற்கேற்ற மின் உற்பத்தி பெருகவில்லை, அரசும் என்ன தான் செய்யும் என அப்பாவியாக நினைக்கலாம்.

உண்மையில் மக்கள் அனுபவிக்கும் மின்சாரம் என்பது மொத்த மின்விநியோகத்தில் குறைவான அளவே,

வகை வாரியாக மின்நுகர்வு அளவு.



மேல் கண்ட அட்டவனையில் இருந்து அறியப்படுவது என்னவெனில்,

தமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 223.44 லட்சம்.

அவற்றின் மூலம் நுகரப்படும் மின் சாரத்தின் அளவு=60,357  மில்லியன் யூனிட்கள்.

ஆனால் இதில் வீட்டு மின் இணைப்பு 148.77 லட்சம், அவற்றின் மூலம் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு 16,387 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

இந்தளவானது அரசின் மின் உற்பத்தி அளவான 25,734 மில்லியன் யூனிட் மின்சாரம் என்ற அளவை விட குறைவு.

மேலும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 19.73 லட்சம்.
நுகரப்படும் மின்சாரத்தின் அளவு= 12,632 மில்லியன் யூனிட்கள்.

பொது மக்கள் +விவசாயிகள் மின்நுகர்வு=      29,019 மில்லியன்ன் யூனிட்கள்.

அரசு தயாரிக்கும் மின்சாரத்திற்கும் ,மக்கள்,மற்றும் விவசாயிகள் பயன்ப்படுத்தும் மின்சாரத்திற்கும் உள்ள இடைவெளி=4,715 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

அரசு ஒரு யூனிட் கொள்முதல் விலை சராசரியாக 5.31 ரூ எனவும் ,அதனை சராசரியாக 3.81 ரூவிற்கு விற்பதால் நட்டம் வருகிறது என சொல்கிறதே ,ஆனால் நிகர நட்டம் 38,000 கோடி என்கிறார்கள் அப்படியானால் மக்களுக்காக வாங்கும் மின்சாரம் வெறும் 4,715 மில்லியன் யூனிட்கள் தானே அவற்றின் விலையா 38,000 கோடி என ஒரு கேள்வி பாமரனுக்கும் வரனுமே ?

வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரம் 49,203 மில்லியன் யூனிட்டில் 4,715 மி.யூ போக மீதம் 44,500 மி.யூனிட்களுக்கு செலவாகும் பணமும் மக்கள் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.

இந்த மின்சாரம் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் ,இதரவற்றிற்கு.

தொழிற்சாலை இணைப்புகளின் எண்ணிக்கை 5.37 லட்சம் மட்டுமே ஆனால்  21,075 மில்லியன் யூனிட்கள் என மொத்த மின்நுகர்வில் 34.92 சதவீதம் மின்நுகர்வினை அனுபவிக்கின்றன.

இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்கள்,மென் பொருள் நிறுவனங்கள்.சிறு குறு தொழிற்சாலைகள் மின் வெட்டினை அனுபவிக்கவே செய்கின்றன.

வெளியில் வாங்கும் மின்சாரம் சுமார் 8 ரூ -முதல் 17.50 ரூ வரையில் ஒரு யூனிட்டுக்கு ஆகிறது,

அரசு தயாரிக்கும் மின்சாரம் யூனிட்டுக்கு 2.50 ரூ மட்டுமே ஆகும், இதை எல்லாம் கூட்டி சராசரியாக 5.31 ரூ என யூனிட்டுக்கு கணக்கு சொல்லி ,அதன் மூலம் வரும் நட்டத்தினை அனைவருக்கும் பரவலாக்கிவிடுகிறார்கள்.

அதாவது 5.37 லட்சம் தொழிற்சாலை இணைப்புகள் பெருமளவு மின்சாரம் பயன்படுத்திக்கொண்டு, பெருமளவு பொதுமக்கள் 143 லட்சம் இணைப்புகள் மூலம் குறைவான மின்சாரம் பயன்ப்படுத்தினாலும் அனைவருக்கும் சராசரியாக ஒரே விகிதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரத்தின் பெரும் பங்கினை அனுபவிப்பது தொழில்,வணிக துறைகளே, அவர்களையே நேரிடையாக வெளிமார்க்கெட்டில் மின்சாரம்ம் வாங்கிக்கொள்ளுங்கள் என சொன்னால் அரசுக்கு கூடுதலாக செலவாவது குறையும்.

அப்படியும் அரசு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்கி,மின்வாரிய மின்பகிர்வு கிரிட் மூலம் கொண்டு வந்துக்கொள்ளலாம் என அனுமதிக்கொடுத்தும் யாரும் அப்படி செய்யவில்லை ,காரணம் அவர்களே வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் சுமார்12 ரூக்கு குறைவாக வாங்க முடியாது. அரசு கூடுதல் விலைக்கு வாங்கினாலும் ரூ 5.31க்கு மேல் விற்காது என்பதால் , அரசின் மின்வாரியமே வாங்கிக்கொடுக்கட்டும் என இருக்கிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17.50 ரூ என்றெல்லாம் அநியாய விலை நிர்ணயம் செய்து வாங்கியதில் மஞ்சத்துண்டின் கைங்கர்யமும் உண்டு.

மேலும் மின் உற்பத்தியில் 18.5% மின்கடத்தி இழப்பாக போய்விடுகிறது, இது அல்லாமல் மின் திருட்டு  என கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது மின்சாரத்தின் விலை மட்டும் அல்லாமல் அவற்றை கிரிட் வழியாக கொண்டு வரவும் கட்டணம் உண்டு, இதனை வீலிங் சார்ஜ் என்பார்கள்.

மாநிலங்களுக்கு இடையே கிரிட்டில் மின்சாரம் கொண்டு வரும் போது எத்தனை சப் ஸ்டேஷன்களை கடக்கிறதோ அவ்வளவு மின் இழப்பு ஏற்படும்.

ஒரு சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என தேசிய மின்வாரியம் சொல்கிறது.

உதாரணமாக குஜராத்தில் இருந்து 800 மெ.வாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்கியது ,ஆனால் தமிழக எல்லையில் 450 மெ.வாட் தான் கிடைத்தது ,350 மெ.வாட் கடத்தி இழப்பு,வீலிங் இழப்பாக போய்விட்டது.

தொலை தூரத்திலிருந்து மின்சாரம் வாங்கினால் இப்படி இழப்பு அதிகம் ஆகும்.

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி ,சுமூகமான உறவு இல்லை எனவே மின்சாரம் தரமாட்டார்கள். கர்நாடகாவில் தண்ணீரே தருவதில்லை, மின்சாரம் தரப்போவதில்லை.

மத்திய மின் தொகுப்பில் வழக்கமாக கொடுக்கும் மின்சாரம் வருவதிலேயே பிரச்சினை எனவே கூடுதலாக விலைக்கு கேட்டால் தர வாய்ப்பில்லை அல்லது தர விருப்பம் இல்லை எனலாம்.

இந்நிலையில் தனியாரிடம் வாங்கி சமாளிக்கலாம் என்றால் விலை மிக அதிகம், இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மாநில மின்வாரியம் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கோ அதில் ஆர்வமில்லை, தனியாரை தயாரிக்கவிட்டு , விலைக்கு வாங்கி அரசின் கஜானாவை காலி செய்யலாம் இல்லை எனில் மின்கட்டணத்தினை உயர்த்தி கொள்ளலாம் ,அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மின்வெட்டு தான் என மக்கள் விரோத சிந்தனைகளில் ஆட்சியாளரும்,அதிகாரிகளும் சிந்திக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

மின் வாரியத்தின் லாப நட்ட கணக்கு மற்றும் கடன் ,கடந்த ஐந்தாண்டுகளில்.



2006 இல் 9,000 கோடியாக இருந்த மின்வாரிய கடன் 2011 இல் 45,000 கோடியாக உயரக்காரணம் ,தனியாரிடம்ம் மின்கொள்முதல் செய்ய அதிக விலை நிர்ணயம் செய்ததும் ஒரு காரணம். பல தனியார் மின் உற்பத்தியாளர்களும், காற்றாலை அதிபர்களும் அரசியல் பினாமிகள் என்பதால் ,யாரு வீட்டு பணம் எடுத்துக்கோ என கண்ணை மூடிக்கொண்டு விலை நிர்ணயம் செய்து மின்வாரியத்தினை கடனுக்குள் தள்ளி , அதன் வளர்ச்சியினை முடக்கியதில் மஞ்சத்துண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

இப்பொழுதும் கூடுதல் பணம் செலவழித்தால் மின்சாரம் வாங்கி ,மின் தடையை நீக்கலாம், ஆனால் நிர்வாக மேம்பாடு என சொல்லி  நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவிட்டு மின்வெட்டினை அதிகரித்துவிட்டார்கள்.

மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கொடுப்பதால் ஆகும் வருவாய் இழப்பு



மேற்கண்ட அட்டவணையிலிருந்து , பொதுமக்கள், விவசாயிகள், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு அளிக்கும் மின்மானியம் சுமார் 2071 கோடிகள் மட்டுமே என்பது புலனாகிறது.

ஆகவே ஆண்டுக்கு 38,000 கோடி வருவாய் இழப்பு மின்வாரியத்திற்கு ஏற்படக்காரணம் மக்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால் மின்வாரியத்திற்கு நட்டம், எனவே மின்சாரம் வாங்க இயலவில்லை என மின்வெட்டு மட்டும் மக்களுக்கு?

ஆட்சிக்கு வந்தால் உடனே மின் வெட்டு தீரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதே எப்படி எனப்பார்த்தால்,

வட சென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ஆகியவற்றில் கூடுதல் மின் நிலையம் அமைத்தல் ,திருவள்ளூர் அருகே வள்ளூர் மின் திட்டம் அனைத்தும் 2011 இறுதியில் செயல் பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி நடைபெறாமல் காலை வாரிவிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்.



அனைத்து திட்டங்களும் இறுதிக்கட்டத்தில் இருந்தும் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டுள்ளது ,அதனை விரைந்து முடிக்க வைக்க அதிகாரிகள் அக்கரைக்காட்டியிருந்தாலே இப்போதைய மின்வெட்டினை சமாளித்து இருக்கலாம். அதனை செய்ய தவறிவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் சாட்டையை வீசும் அம்மையார் இதற்கு ஏன் சாட்டையை சொடுக்க மறந்தார்கள் என தெரியவில்லை.

இதில் மத்திய அரசின் கை இருக்குமோ எனவும் ஒரு சந்தேகம் இருக்கிறது, இத்திட்டங்களுக்கான பாய்லர், இன்ன பிற உபகரணங்களை வழங்க வேண்டியது பாரத மிகு மின் நிறுவனம் ஆகும், காலத்தே வழங்கி இருந்தால் இந்நேரம் மினுற்பத்தி நடந்து இருக்கும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் துவங்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், எனவே மின் தட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என ,  ,மத்திய அரசு அழுத்தம் கொடுத்து பாரத மிகு மின் நிறுவனத்தினை தாமதப்படுத்துவதாக செய்திகளில் அடிபடுகிறது.

எது எப்படி இருந்த போதும் மாநில அரசு மக்களின் நலன் கருதி இதனை சரி செய்திட போராடி இருக்க வேண்டாமா? மத்திய அரசை எதிர்த்து கேள்விக்கேட்காதவரா அம்மையார், ஒரு வேளை பெங்களூர் வழக்கெல்லாம் இருக்கும் நிலையில் ரொம்ப முறுக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ?

-------------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,தமிழ்நாடு மின்வாரிய இணைய தளம்.நன்றி!
********

Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!





கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))

Tuesday, April 10, 2012

மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!





நம்ம நாட்டில் தான் மின் வெட்டு ,புழுக்கம், எரிச்சல் எல்லாம் வெளிநாட்டில் எல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் தடையே இல்லாமல் பாயும் என்று பொதுவாக நினைத்து நாம் ஏக்கப்பெரும்முச்சு விடுவதுண்டு, ஆனால் அங்கும் உண்டு , நம்மை ஆண்டுவிட்டு போன வெள்ளைக்கார துரைமார்களின் தேசமான இங்கிலாந்தில் கடுமையான மின் வெட்டு அதுவும் நான்காண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தது என்றால் நம்ப முடியாதில்லையா? ஆனால் அது உண்மையே ஆனால் இப்போ இல்லை அது 1970  களில் , ஹி..ஹி அதை எதுக்கு இப்போ சொல்றேன்னு  பார்க்கறிங்களா, எல்லாம் மின்வெட்டில் வெந்து நொந்த மக்கள் மனசை தேற்ற தான் :-))

மூன்று நாள் வாரம்:
(three day week)

கி.பி 1970 இல் இங்கிலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சங்கம் ஊதிய உயர்வு , பணிப்பாதுகாப்பு இன்ன பிற கோரிக்கைகளை வைத்து போராட்டத்தினை அறிவித்தது, வேலை நிறுத்தம் செய்யாமல் விதிப்படி வேலை என்று அறிவித்து போராடினார்கள்.

அது என்ன விதிப்படி வேலை போராட்டம்,  
(work by rule)

# எட்டு மணி நேர வேலை என்றால் எட்டு மணி நேரம் மட்டுமே, கூடுதல் பணம் கொடுத்தாலும் கூடுதல் நேரம் வேலை செய்ய மாட்டார்கள்.

# ஒருவருக்கு என்ன வேலையோ அவ்வேலையை மட்டும் செய்வார்கள்.அதாவது ,வாகன ஒட்டுநர் வாகனம் மட்டுமே ஓட்டுவார் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் மாற்ற மாட்டார்.அது அவர் வேலை இல்லை. இதான் விதிப்படி வேலை செய்வது.

#எட்டு  மணி நேரம் வேலை செய்வார் ஆனால் எவ்வளவு செய்வார் என்றெல்லாம் கேட்க முடியாது. உ.ம்: ஒரு அடிப்பள்ளத்தையே அளந்து அளந்து எட்டு மணி நேரமும் வெட்டிக்கொண்டு இருக்கலாம் :-))

நம்ம அரசு அலுவலகத்தில இப்பவும் இதான் செய்கிறார்கள் :-)) காலையில் இருந்து மாலைவரை ஒரே கோப்பை புரட்டிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பிவிடுவார்கள்!

சுரங்க தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்ததால் நிலக்கரி உற்பத்திக்குறைந்து  ,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கிடைக்கும் நிலக்கரி கொண்டு மூன்று நாட்களுக்கு தான் மின் உற்பத்தி முழுசாக செய்ய முடியும் என்பதால். வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மின் விடுமுறை அறிவித்து விட்டது ஆங்கில அரசு. மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், பத்திரிக்கை அலுவலகங்கள் போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு.இதனை மூன்று நாள் வாரம் என்று சொன்னார்கள்.

மின்சாரம் கிடைக்கும் மூன்று நாட்களிலும் பல கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகள் முழுதும் இயங்க கூடாது, தொலைக்காட்சி ஒளிபரப்பு  இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்படும் என்பது போல பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலை 1970 முதல் 1975  வரை நீடித்தது, மின்வெட்டைக்காரணம் காட்டி , மெழுகு வர்த்தியை போஸ்டர் ஒட்டி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் நடந்தது. ஆட்சியும் மாறியது. பின்னரே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நின்று முழு அளவில் மின்சாரம் கிடைத்தது.

ஆனானப்பட்ட சூரிய அஸ்தமனமில்லா ஆங்கில தேசத்திலும் மின்வெட்டு இருந்திருக்கு, மக்கள் போராடி ஆட்சியை மாற்றி இருக்காங்க, ம்ம் இங்கேயும் தான் ஆட்சியை மாற்றிப்பார்த்தோம் மின்வெட்டு குறையாம கூடிப்போச்சு :-))

கூடுதலாக ஒரு தகவல் , இப்போ இங்கிலாந்தில் நிலக்கரி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது, பல சுரங்கங்களிலும் கரி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது.இப்போதைய சுரங்களில் இருக்கும் நிலக்கரி கையிருப்பும் 2020 வரைக்கும் தான் வரும், அதன் பிறகு அங்கு ஒரு கிலோ நிலக்கரிக்கூட இருக்காது இறக்குமதி செய்தால் தான் உண்டு. அப்படி செய்தால் விலை அதிகம் ஆகிவிடும் என மரபு சார ஆற்றலைப்பயன்ப்படுத்த முடிவு செய்து அதற்காக பல திட்டங்கள் தீட்டிவருகிறார்கள்.

மிக அதிக அளவில் காற்றாலையிலும் , கடலலை மின்சாரத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டு செயல்படுத்தியும் வருகிறார்கள்.

உலக அளவில் இன்னும் 144 ஆண்டுகளுக்கு தான் நிலக்கரி படிமம் பயன்ப்படுத்த கிடைக்கும் என கணக்கிட்டுள்ளார்கள்.சிலர் 114 ஆண்டுகள் என்கிறார்கள், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பயன்ப்படுத்தும் வேகம் அதிகரிப்பதை பார்த்தால் அதற்கு முன்னரே  நிலக்கரி படிமங்கள் தீர்ந்துவிடலாம் என்றும் கணிக்கிறார்கள்.

சரி இந்தியாவின் நிலை என்ன , நம் நாட்டில் இன்னும் 140 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிமம் இருப்பதாக இந்திய நிலக்கரி கழக ஆய்வு சொல்கிறது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியம் இல்லாத ஒரு ஆய்வு , இன்னும் 40 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என பிசினஸ் ஸ்டேண்டர் பத்திரிக்கை ஒரு கணக்கை காட்டுகிறது.

நம் நாட்டில் மரபு சாரா எரிசக்தி ஆய்வுகளும், பயன்பாடும் ஆமை வேகத்தில் போகிறது. வருங்காலம் ஒளி வீசுமா ,இருண்டு போகுமா என்பது ஆட்சியாளார்களின் கொள்கை முடிவெடுப்பதிலும், விரைந்து செயல்ப்படுத்துவதிலும் தான் இருக்கிறது. நாளை  என்ன நடக்கும் யார் அறிவார்?

இங்கிலாந்தில் மின் தட்டுப்பாடு காலத்தில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இப்போது  சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

# திரையரங்குகளில் தினசரி இரண்டுக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம்.தமிழ் நாட்டில் சுமார் 1500 அரங்குகள் இருக்கலாம் எனவே நிறைய மின்சாரம் மிச்சம் ஆகும் , மக்களுக்கும் பணம் மிச்சம் ஆகும்.

# தொலைக்காட்சி ஒளிப்பரப்பை இரவு 10 மணியோடு நிறுத்த செய்யலாம்.

# ஐ.பி.எல் போன்ற பகலிரவு விளையாட்டுப்போட்டிகளுக்கு  தடை விதிக்கலாம்.

#வணிக வளாங்களில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கொண்டுவரலாம்.துணிக்கடை ,நகைக்கடைகளில்  பகலிலும்  அதிக விளக்குகள் எரிவதை காணலாம்.அப்போது தான் அவர்கள் பொருள் பள பளக்குமாம்.

#இரவு 9 மணிக்கு மேல் கடைகள் ,வர்த்தக நிறுவனங்களை மூட செய்யலாம்.

# தமிழ் நாடு முழுக்க தெரு விளக்குகளாக பயன்ப்படுத்தப்படும் அதிகம் மின்சாரம் குடிக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு தடை விதிக்கலாம். வழக்கமான குழல் விளக்குகளை தெருவிளக்குகளாக பயன்ப்படுத்த வேண்டும்.மக்களை மட்டும் குண்டு பல்ப் பயன்ப்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டு அரசாங்கம் செய்யுற வேலைய பாருங்க :-))

#அரசியல் கட்சி கூட்டம், மாநாடு எல்லாம் பகலில் மட்டும் நடத்த வேண்டும், சீரியல் லைட் , கிலோ மீட்டர் கணக்கில் விளக்கு புடிப்பதை எல்லாம் தடை செய்யலாம்.

இன்னும் நிறைய சிக்கன நடவடிக்கை  எடுக்கலாம், உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

அடுத்தப்பதிவில் விரிவாக நிலக்கரி ,அனல் மின்சார உற்பத்தி , மற்றும் மரபு சாரா மின் உற்பத்தி சாத்தியங்களை முடிந்தவரை விளக்கலாம் என இருக்கிறேன்.

------
பின்குறிப்பு:

தகவல்கள், படம் ,கூகிள்,விக்கி,நன்றி!

Thursday, April 05, 2012

என்ன கொடுமை சார் இது-4






என்ன கொடுமை சார் இது-4

மங்குனி உத்திரம்:

பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))

என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.

ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற  படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))



சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு  தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))

வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))

எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!

*****


பாக்தாத் கஃபே:

ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.


ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))

பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு  கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.



இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))

பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .

நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..

இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))

இந்த பாக்தாத் கஃபே  படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.

டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))

தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!

*****
மின் வெட்டு அரசியல்:

மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))


ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.

பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி ,  இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.

நான்: 2001 -2006 காலத்தில்  தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.

அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,

2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))

அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?

2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.

எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது  தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி


மின்சாரக் கடன்


இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது,  மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.

எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.

அரசு நினைத்தார் போல தான்  இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?

 என்ன கொடுமை சார் இது!

---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!


Saturday, March 31, 2012

மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!



மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!





எதிர்பாரத நேரத்தில் ஒரு நிகழ்வுக்கு நாம் ஆளானால் அது அதிர்ச்சி , அது வலிக்கொடுத்தால் துன்ப அதிர்ச்சி, மகிழ்வு கொடுத்தால் இன்ப அதிர்ச்சி என்போம். பேருந்தில் பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தால் துன்ப அதிர்ச்சி ,அதுவே ஒரு கட்டிளம் வாளைக்குமரி அமர்ந்தால் இன்ப அதிர்ச்சி :-))

ஆனால் சபிக்கப்பட்ட நம்மளுக்கு இன்ப அதிர்ச்சி வாய்ப்பதேயில்லை, தொரத்தி தொரத்தி துன்ப அதிர்ச்சியை மட்டுமே எல்லோரும் கொடுக்கிறாங்க அதுவும் மக்கள் சேவை செய்யவே பிறவி எடுத்த அரசியல் மகான்கள் ஏ.சி ரூம் போட்டு யோசிச்சு டிசைன் டிசைனா துன்ப அதிர்ச்சிக்கொடுக்கிறாங்க ,பால் விலையை ஏத்தினாங்க, பஸ் டிக்கெட் ஏத்துனாங்க, இப்போ மின் கட்டணமும் ஏத்தியாச்சு இனிமே புல்டோசர் மேல ஏற்றாதது ஒன்று தான் பாக்கி, அதையும் சர்வாதிகார நாடாக இருந்தால் செய்திருப்பார்கள்.

சரி மின் கட்டணத்தை அவங்க தேவைக்கு ஏற்ப ஏற்றீயாச்சு அப்போ மக்கள் தேவைக்கு மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா என்று கேட்டால் வாயே திறக்க மாட்டாங்க.

கிடைக்கிற கொஞ்ச மின்சாரத்துக்கும் அணு உலை இருந்தால் தான் சாத்தியம்னு ஒரு அபாயகரமான திட்டம் வேற சொல்வார்கள். அது தான் மலிவானது என்பார்கள். அப்படியெனில் அபாயம் குறைவான, அல்லது முழுவதும் தீங்கற்ற மலிவான மின் உற்பத்தி சாத்தியம் இல்லையா?

சாத்தியமுண்டு ,ஆனால் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் மெத்தப்படித்த அதிகாரிகளும் திட்டமிட்டே பொய் பரப்புரைகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.


கேடு விளைவிக்காத சூரிய சக்தி,காற்றாலை எல்லாம் ஏன் அதிக அளவில் பயன்ப்படுத்த கூடாதா எனக்கேட்டால் அவற்றின் விலை மிக அதிகம் என்பார்கள் அரசியல் விஞ்ஞானிகள் , அதில் எந்த அளவுக்கு  உண்மை இருக்கு என பார்ப்போம்.

மெகா வாட் கணக்கு:

1000 மெகா வாட் மின் நிலையம், என்று சொல்கிறார்கள் அப்படி எனில் 1000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் 1000 மெகாவாட் என்பது ஒவ்வொரு வினாடியும் கிடைக்குமா? எந்த அடிப்படையில் 1000 மெகா  வாட் உற்பத்தியாகும் எவ்வளவு நேரத்துக்கு கிடைக்கும் என்று சொல்வதில்லை, உற்பத்தியாகும் மின்சாரத்தை எப்படி,எவ்வளவு பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதையும் யாரும் வெளிப்படையாக சொல்வதேயில்லை.

அப்படியெனில் மெகாவாட்டுக்குள் என்ன தான் ஒளிந்து இருக்கு?


ஒரு ஆண்டு மின்  உற்பத்தி என்று  சொல்லும்  போது மட்டும் ஒட்டு மொத்தமாக இத்தனை மில்லியன் யூனிட் /மெகாயுனீட்/கிகா யூனிட்,/டெரா யூனிட் என்று அப்போது மட்டும் யூனிட்டில் சொல்வார்கள். அப்படி எனில் மெகாவாட் திறனுக்கும், பயன்ப்பாட்டு அளவுக்கும் வேறு ஒரு தொடர்பு இருக்கிறது என்று தானே பொருள்.

நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்ப்படுத்தினோம் என்பதை மின் யூனிட்டில் சொல்வதைப்பார்த்திருக்கிறோம்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரம் பயன்ப்படுத்துவது.

1000 வாட்ஸ்/மணி = ஒரு கிலோ வாட்ஸ்/மணி.

இப்போ ஒரு சந்தேகம் வரும் 1000 மெ.வா மின் நிலையம் எனில் 1000 மெ.வா எவ்வளவு கால அளவில் உற்பத்தி செய்கிறது என்று. அப்படி கணக்கிட்டால் எவ்வளவு மின் யூனிட் உற்பத்தியாகும் ?.1000மெ.வா என்பது ஒவ்வொரு வினாடிக்கும் உற்பத்தியாகுமா என்றால் ஆகாது. அப்படி கால அளவுக்கும் வாட்ஸுக்கும் தொடர்பு படுத்தி கிடைப்பதே உண்மையில் பயன்படுத்த கூடிய நுகர்வு மின்சக்தி என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம் ,

ஒரு லிட்டர் ரைஸ் குக்கரில் ஒரு லிட்டர் சாதம் சமைக்கலாம். இப்போது அதன் திறன் என்ன? ஒரு லிட்டர் என்று சொன்னால் அதன் கொள்ளவைப்பொறுத்து மட்டுமே.கிடைக்கும் அவுட் புட் அளவு என்னவாக இருக்கும்? எவ்வளவு நேரத்தில் எவ்வளவு சாதம் கிடைக்கும் என்பதை வைத்தே சொல்ல முடியும்.

ஒரு லிட்டர் அரிசி சோறாக வேக எவ்வளவு நேரம் ஆகும் 15 நிமிடம் எனில் 15 நிமிடத்துக்கு ஒரு லிட்டர் சாதம் ஒரு மணி நேரத்துக்கு 4 லிட்டர் அரிசு வேக  வைத்து 4 லிட்டர் சாதம் கிடைக்கும். 24 மணி நேரத்தில் 56 லிட்டர் சாதம் கிடைக்கும் இப்போது அதன் திறன் என்ன என்று எப்படி சொல்வது?

அதனை ஒரு லிட்டர் குக்கர் என்பதா அல்லது 56 லிட்டர் குக்கர் என்பதா? 

எளிதாக ஒரு மணிக்கு 4 லிட்டர் சாதம் உற்பத்தி செய்யும் குக்கர் என்று சொன்னால் அதன் உண்மையான செயல் திறன் விளங்கும்.இப்போது 10 நிமிடத்தில் அரிசி வெந்தால் அதே ஒரு லிட்டர் குக்கரில் இருந்து அதிக சாதம் கிடைக்குமல்லவா?

அப்படித்தான் 1000 மெ.வாட் மின் நிலையம் என்று சொல்வதும் எளிதாக ஏமாற்றும் ஒரு ஒரு திறனளவு. ஒரு மணி நேரத்துக்கு எத்தனை வாட்ஸ்/மெகா வாட்ஸ் என்று சொல்ல மாட்டார்கள் ஒவ்வொரு வகையான மின் உற்பத்திக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும்.

1000 மெ.வா அனல் மின் நிலையமும் 1000 மெ.வா அணு மின் நிலையமும் ஒரு மணி நேரத்தில் ஒரே அளவு மின் உற்பத்தி செய்யாது. என்பதை சுலபமாக மறைத்துவிட்டு இணையானது அல்லது திறன் மிகுந்த மின் நிலையம் என்பது போல 1000 மெ.வா என்பதையும் யூனிட் மின்சார செலவையும் ஒரு கணக்காக காட்டி நம்ப வைக்கிறார்கள். மேலும் எவ்வளவு ஆற்றலை (எரிசக்தியை )மின்சாரம் ஆக மாற்றுகிறது என்பதை வைத்து திறனை சொல்கிறார்கள் அது கணக்கீடுக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் . நடை முறைக்கு ஒரு மணியில் கிடைக்கும் மின் யூனிட்டே முக்கியம் ஆகும்.

உண்மையில் வெகு திறனான மின் உற்பத்தி முறை நீர் மின் உற்பத்தி, காற்றாலை, அனல் , சூரிய சக்தி ஆகும் அணு மின்சாரம் கடைசியே.

சூரிய சக்தி  மின்சாரம் விலை அதிகம் என்பதும் ஒரு மாயையே அது எப்படி என இறுதியில் பார்ப்போம். இப்போது ஒரு மணியில் உற்பத்தி செய்யும் மின்யூனிட்கள் அடிப்படையில் திறனை ஒப்பிடலாம்.

சூரிய சக்தி நீங்கலாக மற்ற எல்லா மின் உற்பத்தியிலும் இறுதியில் மின்சாரம் உற்பத்தியாவது டர்பைனுடன் இணைந்த  ஜெனெரேட்டர்கள் மூலமே.எனவே ஜெனெரேட்டர்களை இயக்குவதில் எம்முறை அதிக உற்பத்தி கொடுக்கிறதோ அம்முறையே சிறப்பான மின் உற்பத்தி முறை ஆகும்.

உதாரணமாக ஒரு மெகா வாட் டர்பைனுடன் கூடிய ஜெனெரேட்டரை பார்ப்போம்.

இயக்கியவுடன் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிவிடாது , ஒரு மெகாவாட் உற்பத்தியை  டர்பைன் ஜெனெரேட்டர் எட்ட ஆகும் காலம்  மாறுபடக்கூடியது.

பொதுவாக ஒரு ஜெனெரேட்டருக்கு ஒரு மெகாவட் மின் உற்பத்தியை எட்ட 10 நிமிடம் ஆகிறது எனில் ஒரு மணியில் 6 முறை 1 மெ.வா மின் உற்பத்தியை எட்டும். அப்படி எனில் அதன் மின் உற்பத்தி திறன் 6 மெகாவாட்ஸ்/மணி ஆகும்.6000 கிவாட்ஸ்/மணி அதாவது 6000 யூனிட் மின்சாரம்.

ஒரு மெகாவாட்ஸ் உற்பத்தி ஆக எடுக்கும் காலத்தினை ரேம்ப் அப் ரேட்(ramp up rate) என்பார்கள். ஒரு மணியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை வைத்து அதனை ரன் அப் ரேட்(run up rate) என்பார்கள்.

ரேம்ப் அப் ரேட் (time to  reach peak power output)குறைவாக இருக்கும் மின் உற்பத்தி அமைப்பே சிறந்த ஒன்று , அதன் அடிப்படையிலேயே எவ்வளவு மின்சாரம் கிரிட்டுக்கு கிடைக்கும் என்பதை சொல்ல முடியும்,கிரிடுக்குள் பாயும் மின்சாரமே பயன்பாட்டின் லோடுக்கு போகும் , பயன் பாட்டின் அடிப்படையில் பேஸ் லோட்(base load) , பீக் லோட் (peak load), சராசரி (avg load) என்றெல்லாம் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப கிரிட்டில் மின்சாரம் செலுத்தப்படும். வெறுமனே 1000 மெவா மின் நிலையம் என்பதை வைத்து பயன்ப்பாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. அது ஒரு லிட்டர் குக்கர் என்று  சொல்வது போலவே.

இப்போது வகை வாரியாக பார்க்கலாம், அனைத்தும் ஒரு மெகாவாட் என்ற உதாரணத்தின் அடிப்படையில்.



 நீர் மின்சாரத்தின் ரேம்ப் அப் ரேட் மிக அதிகம், ஒரு மணியில் ஒரு மெ.வா டர்பைன் 8  மெவா/மணி உற்பத்தி செய்யும்.


அடுத்து அனல் மின் டர்பைன் மூலம் 6 மெவா /மணி கிடைக்கும்.

ரொம்ப மெச்சப்படும் அணு மின் டர்பைன் மூலம் 2 மெவா/மணியே .

காற்றாலை என்பது காற்றின் வேகத்தை பொறுத்து அடிக்கடி மாறக்கூடியது ஆனாலும் நிலையாக காற்று வீசினால் அதன் ரேம்ப் அப் ரேட் அனல், புனலுக்கு அருகில் செல்ல கூடியது.

உதாரணமாக காற்று நிலையான வேகத்தில் 12 மைல்/மணி காற்று வீசினால் காற்றாலை முழு திறனில் செயல்ப்படும், 6 மைல் எனக்காற்று வேகம் இருந்தால் குறைந்து விடும்.  காற்றின் வேகத்தினை போல 8 மடங்கு வேகத்தில் சுழலக்கூடியதாக காற்றாலை டர்பைனில் கியர்  அமைப்பு உள்ளதே காரணம் ஆகும். இதனால் காற்றின் வேகத்தின் மும்மடிக்கு காற்றாலையின் சக்தி இருக்கும். காற்றாலையின் பிளேட் நீளம் கூட கூட அதிக  திருப்பு விசைக்கிடைக்கும் இப்போது பெரும்பாலும் 1.25 மெ.வா திறனுடன் ஒரு  தனிக்காற்றாலை அமைக்கப்படுகிறது. 5 மெ.வா வரைக்கும் வடிவமைக்க சாத்தியமுள்ளது.

ஒரு தனிக்காற்றாலை சராசரியாக நல்லக்காற்றுள்ள சூழலில் 1.25 மெவா காற்றாலையில் இருந்து 6 மெ.வா/மணி என மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

எனவே ஒரு மெ.வா என ஒப்பிடும் போதே அணு மின் உற்பத்தி திறனை விட மற்ற எல்லாம் சிறப்பாக இருக்கும் போது அணு மின்சாரம் எப்படி மலிவானது என சொல்கிறார்கள்.அதில் தான் மிகப்பெரிய பித்தாலட்டமே இருக்கிறது. அணு பிளவை எரிப்பொருளின் விலையை மட்டும் கணக்கில் வைத்து  ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை கணக்கிடுகிறார்கள்.

மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவை பொதுவாக எப்படி கணக்கிட வேண்டும் எனில்,

நிறுவும் செலவு + எரிப்பொருள் செலவு +இயக்கும் செலவு +பராமரிப்பு செலவு ஆகியவற்றை மொத்தமாக கூட்டி , உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு என கணக்கிட வேண்டும். மேலும் அணு மின்சாரத்தில் உற்பத்தி காலம் முடிந்த பின் பாதுகாப்பாக அணு உலையை செயல் இழக்க செய்ய ஆகும் செலவையும் சேர்க்க வேண்டும் அப்படி எல்லாம் கூட்டி கணக்கிட்டால் அணு மின்சாரம் மலிவானதே அல்ல.

மின் நிலையங்களுக்கான செலவின் அடிப்படையில் ஒரு ஒப்பீடு:

அணு மின்சாரம்:

நிறுவும் செலவு - உண்டு,அதிகம்.

எரி பொருள் செலவு- உண்டு

இயக்கும் செலவு - உண்டு

பராமரிப்பு - உண்டு

டி கமிஷன் செலவு =உண்டு(மிக அதிகமும்)

அபாயம்,= மிக அதிகம்.

சுற்று சூழல் கேடு: தவறு ஏற்பட்டால் உண்டு.

அனல் மின்சாரம்:

நிறுவும் செலவு = உண்டு, மிதமான முதலீடு.

எரி பொருள் செலவு= உண்டு

இயக்கும் செலவு =உண்டு

பராமரிப்பு செலவு=உண்டு

அபாயம்= மிதமானது.

,சுற்று சூழல் கேடு: உண்டு.

புனல் மின்சாரம்:

நிறுவும் செலவு =உண்டு,மிதமானது

எரி பொருள் செலவு =இல்லை

இயக்கும் செலவு= குறைவானது

பராமரிப்பு செலவு= உண்டு, குறைவானது.

சுற்று சூழல் கேடு = இல்லை/குறைவானது

அபாயம் :மிதமானது.

காற்றாலை மின்சாரம்:

நிறுவும் செலவு= உண்டு

எரி பொருள் செலவு= இல்லை

இயக்கும் செலவு = மிக மிக குறைவு

பராமரிப்பு செலவு = மிக மிக குறைவு.

அபாயம் &சுற்று சூழல் கேடு= இல்லை

இப்போது சூரிய சக்தி மின் உற்பத்தியை கவனிக்கலாம்.

நிறுவும் செலவு =  உண்டு

எரி பொருள் செலவு=இல்லை

இயக்கும் செலவு= வெகு சொற்பம்

பராமரிப்பு செலவு= வெகு சொற்பம்

சுற்று சூழல் கேடு & அபாயம்: இல்லை

இயக்கும் செலவு* என்பது மின் நிலையத்தினை இயக்க தேவைப்படும் ஊழியர்கள் சம்பளம் உட்பட இன்ன பிற செலவுகள் ஆகும். அனு மின்  நிலையம், அனல் மின் நிலையம் ஆகியவை இயக்க அதிக ஊழியர்கள் தேவை அவர்களுக்கு ஆண்டு தோறும் செலவிடப்படும் தொகையை வெளிப்படையாக அரசு சொல்வதில்லை. ஆனால் மலிவான மின்சாரம் என அரசு சொல்லும்.

அதே சமயம் சூர்ய சக்தி,காற்றாலை, புனல் மின் சாரம் ஆகியவற்றிற்கு ஊழியர்கள் தேவை குறைவு,எனவே இயக்கும் செலவும் குறைவே.

அனைத்தையும் ஒப்பிடுகையில் சூர்ய சக்தி மின்சாரம் மலிவாக இருக்க வேண்டுமே பின் ஏன் அதிக செலவு என அனைவரும் சொல்கிறார்கள் என்றால் அதிலும் ஒரு கோல் மால் வணிக கணக்கு இருக்கிறது என்னவென பார்ப்போம்.

மற்ற அனைத்திலும் 24X7 என ஆண்டு முழுவதும் இயக்கி மின்சாரம் எடுக்கலாம் என தோராயமாக சொல்லலாம். நீர் இருக்கும் போது மட்டும் நீர் மின்சாரம் ,காற்றடித்தால் தானே காற்றாலை மின்சாரம் என்பதை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு வருவோம் இப்போதைக்கு.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்ய ஒரு அடிப்படையாக அனல் மின் உற்பத்தியை வைத்துக்கொள்கிறார்கள்.

24X7 என 365 நாட்களும் அனல் மின் நிலையத்தை இயக்க முடியும்.  எனவே தொடர் மின் உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் விற்று காசு சம்பாதிக்கலாம்.

ஆனால் சூர்ய சக்தி பகலில் மட்டுமே எனவே இரவில் மின்சாரம் உற்பத்தி ஆகாது விற்க முடியாது. எனவே இரவில் உற்பத்தி செய்யாமல் இருப்பதற்கும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.மின் உற்பத்தியை அல்லது வெப்பத்தை சேமித்து இரவில் பயன்ப்படுத்தலாம். ஆனாலும் அது பகலில் கிடைத்த 10 மணி நேர உற்பத்தியே.

 சூர்ய மின் உற்பத்தி குறித்தான  எனது முந்தைய பதிவு.

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_08.html">சூர்ய சக்தி மின்சாரம்

ஒரு நாளில் 10 மணி நேரம்  மின் உற்பத்தி ஆகிறது 14 மணி நேரம் ஆகவில்லை. 10 மணி நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு மட்டும் காசு கொடுத்தால் அது அனல் மின் நிலைய விலையிலே இருக்கும். ஆனால் மொத்தமாக 24 மணி நேரம் ஒரு மெகாவாட் அனல் மின் நிலையம் இயக்கினால் எவ்வளவு மின் சாரம் உற்பத்தியாகுமோ அதே அளவு கணக்கிட்டு அதனை 10 மணி நேரம் உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்திக்கு விலையாக நிர்ணயிக்கிறார்கள். எனவே ஒரு யூனிட் சூர்ய சக்தி மின்சாரத்தின் விலை கூடிப்போகிறது.

ஷேர் ஆட்டோவில் ஆளுக்கு 5 ரூபாய்  கட்டணம் , ஒரு 10 பேர் ஏறினால் தான் வண்டி எடுப்பான் , நான் ஒருவர் மட்டும் ஏறிக்கொண்டு உடனே வண்டி எடுக்க சொன்னால் எடுக்க மாட்டன், அதே சமயம் 10 பேர் ஏறினால் கிடைக்கும் தொகையை நானே கொடுக்கிறேன் என்றால் ஆட்டோவை எடுப்பான் அல்லவா அப்படித்தான் சூர்ய சக்தி மின்சாரத்துக்கும் விலை  நிர்ணயிக்கப்படுகிறது. இது தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த செய்யப்பட்டது. அதனை வைத்துக்கொண்டு சூர்ய  சக்தி மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆகும் என பரப்புவது சரியல்ல.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு ஆகும் செலவு அனைத்தும் நிறுவும் செலவே , மற்ற செலவுகள் எல்லாம் இல்லை. ஒரு முறை நிறுவினால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேற்படி செலவுகள் இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். அப்படிப்பார்த்தால் ஆண்டு தோறும் குறையும் விலை விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யலாம்.ஆனால் அரசின்  கொள்கை முடிவு எடுப்பவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளாமல் விலை நிர்ணய  கொள்கையை வடிவமைக்கிறார்கள் அல்லது திட்டமிட்டே அப்படி செய்தார்களா எனத்தெரியவில்லை.

இக்கதை காற்றாலைக்கும் பொருந்தும், செலவே இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதால் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.சீராக காற்று வீசும் பட்சத்தில் சில ஆண்டுகளில் போட்ட முதலீட்டினை எடுத்து விடலாம் பின்னர் வருவதெல்லாம் லாபமே.

காற்றாலை, சூர்ய சக்தி மின்சாரத்தில் இப்படி லாபம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாலேயே தனியார்கள் இப்போது போட்டிப்போட்டுக்கொண்டு களம் இறங்குகிறார்கள்.

தனியார்களை ஊக்குவிக்க இயங்காத காலத்துக்கும் சேர்த்து கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்கிறார்கள்,அரசே செய்தால் அப்படி உயர்த்தப்பட்ட விலை கொடுக்க வேண்டி இருக்காதே. ஆனால் அரசு செய்யாது ஏன் எனில் மாற்று எரிசக்தி திட்டத்தில் கமிஷன் அடிக்க வாய்ப்பு குறைவு. திட்ட மதிப்பீட்டில் 90% செலவு செய்தால் தான் ஒரு திட்டத்தையே நிறுவ முடியும்.காரணம் நிறுவ ஆகும் செலவை குறைக்க முடியாது.

ஆனால் அனல் , அணு போன்றவற்றில் திட்ட மதிப்பீட்டில் 60% தொகையை செலவு செய்தாலே மின் நிலையங்களை கட்டி விட முடியும் மீதி எல்லாம் பல்வேறு மட்டங்களில் கமிஷனாக போய்விடுகிறது.கமிஷன் தொகை எல்லாம் சேர்த்து போடும் மதிப்பீடே மொத்த திட்ட செலவு ஆகும்.

இந்தியாவிலேயே சூரிய சக்தி பேனல்கள் தயாரிக்கப்பட்டால் ,ஒரு மெகா வாட் சூர்ய சக்தி மின்நிலையம் அமைக்க 5 கோடியே போதுமானது அப்படியானால் ஒரு 1500 மெ.வா நிலையம் அமைக்க 7500 கோடி ஆகும். நம் நாட்டில் இப்போது 12 கோடி ஆகிறது காரணம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால்.

சுட்டி:

http://news.cnet.com/Shrinking-the-cost-for-solar-power/2100-11392_3-6182947.html">மலிவாகும் சூரிய சக்தி

மலிவான விலையில் சூர்ய சக்தி மின் உற்பத்தி திட்டம் ஒடிஷாவில் வர இருக்கிறது.
சுட்டி:

http://www.bloomberg.com/news/2012-02-27/alex-green-energy-wins-india-solar-project-with-record-low-bid.html">யூனிட் 7 ரூ சூர்ய மின்சாரம்

ஆனால் திருவள்ளூரில் 1500 மெ.வா அனல் மின் நிலையம் அமைக்க 8000 கோடி செலவு செய்துள்ளார்கள். மேலும் ஆண்டு தோறும் எரிப்பொருளாக நிலக்கரி வேறு வாங்க வேண்டும் அப்படி எனில் சூர்ய சக்தியை விட அனல் மின் நிலையம் அமைக்க ,செயல்படுத்த தானே செலவு அதிகம் ஆகிறது. பின் ஏன் தொடர்ந்து அனைவரும் சூர்ய சக்தியைப்பற்றி முரணாக சொல்கிறார்கள் எல்லாம் கமிஷன் படுத்தும் பாடு அன்றி வேறென்ன!

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி கூகிள்.நன்றி!

Sunday, February 12, 2012

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .



மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் .




எப்போ வரும் எப்போ போகும் தெரியாது, வர வேண்டிய நேரத்தில் வராது, ஆனால் வரும் அது யார் ? ஹி..ஹி சூப்பர் ஸ்டார் அல்ல அது மின்வாரிய மின்சார கண்ணா மின்சாரம் தான்.

முன்னர் அறிவிக்கப்படாமல் 4-5 மணிநேரம் எல்லாம் மின் தடை செய்தார்கள், இப்போ தெம்பாக 8 மணிநேரம் மின் தடை சொல்லிட்டாங்க. உலகம் முழுக்க புவி வெப்பமாதல் தடுக்க 5 நிமிடம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வாங்க அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆனால் தமிழக அரசு தினசரி 8 மணிநேரம் மின் உபயோகம் செய்யாமல் இருக்க சொல்வதன் மூலம் புவி வெப்பமயமாதலை தடுக்க கடுமையாக போராடி வருகிறது என்று சொன்னால் மிகையல்ல!


அனேகமாக இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபெல், யுனெஸ்கோ சுற்றுசூழல் விருது, கிரீன் பீசின் பசுமை நோபெல் பரிசெல்லாம் தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.

தமிழக மக்களும் புவிவெப்பமாதலை தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும், அப்படியும் சிலர் பதிவெழுத மின்சாரம் வேண்டுமே என தலையை சொறியக்கூடும் அவர்களைப்போன்ற சுயநல கிருமிகளுக்கு உதவவே இப்பதிவு..ஹி..ஹி ஏன் எனில் நானும் ஒரு சுயநலக்கிருமி ஆச்சே :-))

மின்வெட்டை குறுக்கு வெட்டாக வெட்டி புறவழிக்காண சில ,பல மக்கள் தலைக்கீழ் மின்மாற்றி சேமக்கலன் (இன்வெர்ட்டர் தானுங்க)வாங்கக்கூடும் , அப்படி வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கியமான குறிப்புகள்.

இனி நீட்டி முழக்காமல் த.சே என சுருக்கமாக சொல்வோம் , இது பல மின் திறன்களில் கிடைக்கிறது. ஆரம்பம் 600 வா.ஆ. பின்னர் 800va,1200va, 1500 vaஎன காசுக்கு ஏற்ப பல வண்ணங்களில், செயல்முறைகளில், பல நிறுவனங்களின் பெயர்களில் கிடைக்கிறது.

600 , 800 வா.ஆ எல்லாம் இப்போதைய நமது தேவைக்கு காணாது. குறைந்தது 1200 வா.ஆ திறனில் வாங்குவதே சிறந்தது. சில ஆயிரங்கள் மட்டுமே வித்தியாசம், 800 வா.ஆ ரூ 12000 எனில் 1200 வா.ஆ ரூ 15000 வரும்.

பிரபலம் அல்லாத நிறுவன தயாரிப்புகள் மலிவாக இருக்க கூடும், ஆனால் நம்பக தன்மை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.அமரன், கிராம்ப்டன் கிரீவ்ஸ், மஹிந்திரா, மைக்ரோ டெக் எல்லாம் நான் சொல்லும் விலை வரிசையில் கிடைக்கின்றன.


மின்னணு , தூய முழுஅலை தலைகீழ் மின்மாற்றி சேமக்கலன் (pure sinwave digital inverter)வாங்குவதே நல்லது.அப்போது தான் கணினிப்பயன்பாட்டுக்கு உதவும். இதனை இல்ல தடையில்லா மின்வழங்கி (home ups) என்று சொல்வார்கள்.இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு மின்சார இணைப்பு செய்யும் போதே ,த.சே இணைப்புக்கு என தனியே ஒரு மின்கம்பி பொருத்திவிடுகிறார்கள். எனவே இணைப்புக்கொடுக்கவேண்டிய சாதனத்திற்கு மட்டும் இணைப்பு வழங்கிவிடலாம் ,மீண்டும் புதிதாக மின் கம்பி இணைப்பு செய்ய தேவை இல்லை.

பொதுவாக ஒரு த.சே வில் ஒரு மின் ஏற்றி அமைப்பு(charging unit), மின்சாரம் சேமிக்க மின்சேமகலம்(12v battery) என இரண்டு அமைப்பு இருக்கும்.

மின் ஏற்றி அமைப்பு (charging unit) என்பது , மாறு மின்சாரத்தை நேர் மின்சாரம் ஆக முதலில் மாற்றி மின் சேமகலத்தில் சேமிக்கும் ,பின்னர் மின் தடையின் போது நேர் மின்சாரத்தை(டி.சி) மீண்டும் மாறு மின்சாரம் (ஏ.சி)ஆக மாற்றி உபகரணங்களுக்கு வழங்கும்.
எனவே தான் தலைகீழ் மின்மாற்றி சேமகலன்(இன்வெர்ட்டர்) என அழைக்கப்படுகிறது.ஒரு த.சே வின் திறன் 800வா.ஆ எனில் அதே அளவுக்கு மின்னேற்றம் செய்யும், அதே அளவுக்கு மின்சக்தியையும் உபகரணங்களுக்கு வழங்கும்.

ஒரு எளிய த.சே மின்சுற்று திட்ட விளக்க படம்.



அப்படிப்பட்ட எல்லா த.சேக்களும் ஒரே போல கட்டமைக்கப்படுவதில்லை. சிலவற்றில் இயங்கா வெப்ப நீக்கி (passive heat removal), இயங்கும் வெப்ப நீக்கி(active heat removal), என எல்லாம் இருக்கும்.த.சே செயல்ப்படும் போது அதிகம் வெப்பம் உருவாக்கும் எனவே வெப்ப நீக்கி அமைப்பு /குளிர்விக்கும் அமைப்பு முக்கியம், இல்லை எனில் மின்சுருள் புகை விடும்.

இயங்கும், இயங்கா வெப்ப நீக்கி என இரண்டும் உள்ளதில் வெப்பம் நீக்க ஒரு வெப்ப தொட்டி(ஹீட் சின்க்) யுடன் ஒரு குளிர்விக்கும் மின்விசிறியும் இருக்கும்.இரண்டும் உள்ளதே நல்லது அப்போது தான் எப்போதும் குளிர்ச்சியாக உங்கள் த.சே வேலை செய்யும்.

இப்போது மின் சேமகலன்(பேட்டரி) பற்றிப்பார்ப்போம். எல்லாமே 12வோல்ட் தான் ஆனால் அவற்றின் மின்னோட்ட திறன்= ஆம்பியர் வேறுபடும். அதைப்பொறுத்தே ஒரு த.சே எத்தனை மணி நேரம் மின்சாரம் வழங்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

சில த.சே விலைக்குறைவாக இருக்கும் காரணம்  குறைவான மின்னோட்ட திறன் கொண்ட மின்கலத்தை கொடுப்பார்கள்.

ஒரு 800 வா.ஆ த.சே வுடன்
100 ஆம்பியர் /ஹவர் மின்கலம் இருப்பது ஆரம்ப நிலை.மலிவானதும் கூட.

அடுத்து 120 ஆ/ஹ, 150 ஆ/ஹ என்று போகும். அதிகப்பட்சமாக 180 ஆ/ஹ , 12 வோல்ட் தான் சந்தையில் கிடைக்கிறது.

800 வா.ஆ க்கு 120 ஆ/ஹ மின்கலம் பொறுத்தமானது. அதிக திறனில் சேர்த்தால் மின்சாரம் ஏற அதிக நேரம் பிடிக்கும்.

1200 வா.ஆ த.சேவுடன் 150 ஆ/ஹ மின்கலம் என்ற அளவில் வாங்குவது நல்ல மின்வழங்கும் திறனுடன் இருக்கும்.


*1)வா.ஆ= வால்ட், ஆம்பியர்,

2)ஆ/ஹ= ஆம்பியர்/ஹவர்

நாம் வாங்கும் த.சே வில் விரைவு மின் ஏற்றி (குயிக் சார்ஜ்)மற்றும் வழக்கமான மின் ஏற்றி(நார்மல் சார்ஜ்) என இரண்டும் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு 12 வோல்ட், 150 ஆ/ஹ உள்ள மின்கலத்தின் மிந்திறன் என்ன எனப்பார்ப்போம்.

வாட்ஸ்= ஆம்பியர் Xவோல்ட்
=150 X12
=1800 வாட்ஸ்.

எனவே 1800 வாட்ஸ் திறனுக்குள் நாம் மின்சாதனங்களை த.சே மூலம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம். குறைவான மின் திறன் உள்ள சாதனங்களைப்பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் கிடைக்கும்.

ஒரு இல்லத்தின் சராசரி மின் உபகரணப்பயன்பாட்டு தேவை:

குழல் விளக்கு -4= 60வாட்ஸ்* 4= 240 வாட்ஸ்

மின்விசிறி -4= 80 வாட்ஸ்* 4 = 320

கையடக்க குழல் விளக்கு--4 = 30 வாட்ஸ் *4= 120

ஒரு 21 இஞ்ச் குழாய் தொ.கா(inch CRT T.V) =100-120 வாட்ஸ்

ஒரு 14 இஞ்ச் மடிக்கணினி=25 வாட்ஸ்
----------------------
மொத்த மின்நுகர்வு =825 வாட்ஸ்/ஹவர்அப்படி எனில் ஒரு 1200 வா.ஆ, 150 ஆ/ஹ ,12 வோல்ட் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் மூலம் மின்சாரம் கிடைக்கும் கால அளவு=1800/825=2.18மணிநேரம்.

எனவே குறைவான மின்சாதனம் பயன்ப்படுத்தினால் அதிக நேரம் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும். 8 மணிநேரத்திற்கு பயன்ப்படுத்த வேண்டும் எனில் சுமார் 200 வாட்ஸுக்குள் மின்சாதனங்களைப்பயன்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி மின்கலத்துக்கு மின்சாரம் ஏற ஆகும் காலம் எவ்வளவு இருக்கும்.?

ஒரு முனை மின் இணைப்புள்ள (சிங்கிள் பேஸ்)வீடு எனில்,

220 வோல்ட், 5 ஆம்பியர் மின்சாரம்,

220* 5 =1100 வாட்ஸ்,

காலம்=1800/1100
             =1.63

எனவே 1800 வாட்ஸ் மின்கலம் மின்சாரம் ஏற =1.63 *60 நிமிடங்கள்
= 98 நிமிடங்கள் ,
அதாவது 1 மணி 38 நிமிடங்கள் ஆகும்.

எல்லா தலைகீழ் மின்மாற்றி சேமகலத்துடனும் கொடுக்கப்படும் மின்சேமகலம் பராமரிப்பு தேவையில்லாத அடைக்கப்பட்ட மின்கலம் என்றே சொல்வார்கள் ஆனால் அப்படியல்ல, அவை யாவும் மிக குறைவான பராமரிப்பு மின்கலங்களே (ultra low maintanance sealed battery)எனவே 3 மாதத்திற்கு ஒரு முறை கலத்தில் நீர் அளவு பார்த்து வாலைவடி நீர் (distilled water)ஊற்ற வேண்டும் இல்லை எனில் மின்கல சுவர்களில் அரிப்பு ஏற்பட்டு வீண் ஆகிவிடும்.


பின்குறிப்பு:

# பட உதவி கூகிள் படங்கள்,நன்றி!

# மொழிமாற்றம், இன்ன பிற தகவல்களில் பிழை இருக்கலாம் :-))

சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.