காரம் சாரமாக எழுத "மேட்டர்" ஒன்னும் சிக்க வில்லை(அரசியல் மட்டும் தான் சூடா இருக்கு அத தான் ஆள் ஆளுக்கு ஏற்கனவே கொத்து பரோட்டா போடுராங்களே அப்புறம் இந்த வவ்வால் எதுக்குன்றேன்!) அது வரைக்கும் சும்மா நேரம் போக மீண்டும் ஒரு கவித !
மழை மேகம்!
வானம் எங்கும் வெண்மேகங்கள்
என் தலைக்கு மேலே கடந்து செல்கின்றன
தினம் தோறும் மழை வருவதில்லை
வீதி எங்கும் பல வண்ண உடைகளில்
பெண்கள் மறைகிறார்கள்
என் பார்வையை விட்டு
மனதில் பதியவில்லை எவர் முகமும்!
மழைமேகம் வர கூடும்
மனதில் பதிந்த முகம் வருமா?
கோடை வெயிலில் ஆவியாகிவிட்டது என் வினா!
6 comments:
Vanna udaigalai paarkaamal, mugangalai paarkaamal pazhakka vazhakangalai paarkavum. Pathiyum!
நரியா,
பழக்க வழக்கங்கள் எப்போது தெரிய வரும் ஒருவரை நஙு அறிந்த பின் அல்லவா? அதற்கு அறிமுகம் ஆக எதோ ஒன்றால் நாம் அவர்கள் பால் ஈர்க்க பட வேண்டும்,அத்தகைய காரணிகளாக உள்ளவையே வண்ண உடை,முகம்,அவையும் என்னை ஈர்ககாத ஏகாந்த நிலையில் நான்! --வவ்வால்
wow itk...really super...keep it up...unkal pani melum sirekka vazhthukkal...geetha
நன்றி கீதா!
அடிக்கடி இந்த பக்கம் வந்து போங்க கீதா,உங்களை போன்றோரின் ஆதரவை நம்பி தான் நான் உள்ளேன் !
Greets to the webmaster of this wonderful site! Keep up the good work. Thanks.
»
வணக்கம் அனானி 1 &2 ,
தங்கள் வருகைக்கு நன்றி.இந்த பக்கம் அடிக்கடி வாங்க
Post a Comment