Wednesday, May 24, 2006

போய் வா தென்றலே...



போய் வா தென்றலே...

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!

2 comments:

நரியா said...

வணக்கம் வவ்வால்,

சரி தான். நீங்க யாரையோ ஒரு பெண்ணை காதலித்து அந்த சோகத்தில் தான் இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுதுறீங்கனு நினைச்சேன். இப்ப தான் தெரியுது நீங்க இயற்கையை ரொம்ப ரொம்ப நேசிக்குரீங்கனு :).

இயற்கை நீங்க எதிர்பார்ப்பது போல் நடக்க ரொம்ப கஷ்டம். இருப்பினும் வாழ்த்துக்கள்!

நன்றி,
நரியா

வவ்வால் said...

வணக்கம் நரியா!

ஹெ ஹெ ..ஹெ ...ரொம்ப குசும்பு தான் காதல் தோல்வி இருந்தா தான் கவிதை எழுதுவாங்களா?எல்லாம் ஒரு உணர்வுகளின் வடிகால் தான்.மனதில் தோன்றுவதை கவிதையாய் வடிப்பேன்.இயற்கையும் நேசிப்பேன்.