Thursday, December 20, 2007

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-2

மருத்துவ மாணவர்கள், கிராமப்புறத்திற்கு போகத்தயார்,
ஆனால்,
*நிரந்தர வேலை.
* கை நிறைய நல்ல சம்பளம்
*முதுகலை படிக்க தாமதம் ஆக கூடாது , இப்போது அரசு அனுப்பினால் , ஒரு ஆண்டு தாமதம் ஆகும் என்று சொன்னார்கள்.

இவை எல்லாம் கிடைத்தால் போக தயார் என்றார்கள்.சரி உரிமைக்குரல் போலனு பார்த்தா,

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்தது என்ன? இதோ ஒரு அரசு ஆணையின் நகல்.(2004 இல் வந்தது)

ஆங்கிலத்தில் இருக்கும், சோம்பல் படாமல் படித்துப்பாருங்கள்(டாக்டர்களுக்கு ஆங்கிலம் தானே பிடிக்கும்)





ABSTRACT

Health and Family Welfare – Upgraded Primary Health Centres – Creation of 186 posts of Medical Officers – Appointment on Contract Basis – Terms and Conditions – Orders – issued.


HEALTH AND FAMILY WELFARE (E2) DEPARTMENT

G.O (Ms) No.197 Dated: 7.6.2004

Read:

1.G.O.(Ms) No.1395, Health dt, 27.9.2001

2.G.O.(Ms) No.293, Health dt, 12.10.2001

3.G.O.(Ms) No.106, Health dt, 7.6.2002

4.G.O.(Ms) No.210, Health dt, 24.10.2002

5.G.O.(Ms) No.108, Health dt, 22.5.2003

6.G.O.(Ms) No.320, Health dt, 29.9.2003

ORDER:

In the Government Order read above, the Government have issued orders for the upgradation of 93 Primary Health Centres as detailed in Annexure 1. The upgraded Primary Health Centres (UPHCs) have been provided with modern equipments like Ultra Sonograms, Portable ECGs, X-Ray with improved laboratory facilities and ambulances.

2. In order to provide round the clock service to the people at the upgraded Primary Health Centres it has been decided to create 186 posts of Medical Officers at the rate of two (one male and one female) for each of the upgraded Primary Health Centres. The Government have accordingly decided to create 186 additional posts of Medical Officers. It has also been decided to fill up the above posts on contract basis.

3. Accordingly the Government direct that 186 posts of Medical Officers be created in the 93 Upgraded Primary Health Centres. The Government also direct that these posts shall be filled up on contract basis. The Medical Officers shall be paid a consolidated pay of Rs.8000 (Rupees eight thousand only) per month.

4. The details of the Upgraded Primary Health Centres are indicated in Annexure 1. The procedure for selection of Medical Officers and the terms and conditions of appointment are indicated in Annexure II and III of this order. The form of agreement to be executed by the Medical Officers is indicated in Annexure IV of this order.

5. The expenditure shall be debited to

“2210-Medical and Public Health II State Plan – 03.Rural Health Services – Allopathy – 103.Primary Health Centres – JM.Primary Health Centres – (DPC 2210 03 103 JM 0008)”.

6. This order issues with the concurrence of Finance Department vide its U.O.No.1672/FS/P/2004 dated 4.6.2004.

(BY ORDER OF THE GOVERNOR)

SHEELA RANI CHUNKATH

SECRETARY TO GOVERNMENT

மேலும் அரசின் நிபந்தனைகள்:

ANNEXURE – III

TERMS AND CONDITIONS FOR APPOINTMENT OF CONTRACT MEDICAL OFFICERS

1. The appointment is purely on contract basis. The period of contract shall initially be for one year from the date of joining. The contract may however be extended, further at the discretion of the District Level Committee depending upon the performance and need.

2. The candidate is liable to be terminated at any time during the period of contract, without any notice.

3. The selection of the medical officers will be specific to the upgraded Primary Health Centre. He / She will work in that Primary Health Centre during the period of Contract. He / She shall be paid a consolidated sum of Rs.8,000/- (Eight thousand only) per month and shall work for six days a week from 8.00 a.m. to 5.00 p.m. He / she shall be resident in Primary Health Centre Headquarters and will be on 24 hours call duty. He / She will also have to take up regular night duty as assigned.

4. Medical Officers working on contract basis shall abide by the duties and responsibilities assigned by the Deputy Director of Health Services.

5. The Medical Officers selected and posted for specific Primary Health Centres on contract basis shall not be transferred under any circumstances to any other Primary Health Centre or to any other Health Institution.

6. The Medical Officers working on contract are not eligible to apply for Post Graduate course as a Service candidate.

7. He / She will be eligible only for 10 days Casual Leave in a year. He / She will not be eligible for any other leave.

8. Any unauthorized absence will entail termination from service.

9. The Medical Officer will also carry out any instructions assigned from time to time in the course of his / her employment.

10. Any representation that the Medical Officers may have may be addressed to the Chairman of the District Committee who will give a quick hearing and fair disposal

SECTION OFFICER


மேலே கொடுக்கப்பட்ட அரசு ஆணையைப்படித்தால் தெரியவருவது.

நிரந்தர வேலை, அதிக சம்பளம் கொடுத்தால் தான் போவேன் என்று இன்று கேட்பவர்கள், எப்படி 8000 சம்பளம், ஒப்பந்த அடிப்படை, pg படிக்க அனுமதியில்லை. ஒரு ஆண்டு மட்டும் தான் வேலை , பின்னர் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்,போன்ற நிபந்தனைகளுடன் அன்று வேலையில் சேர்ந்தார்கள்.
ஆனால் இப்போது அதே சம்பளம், கால அளவு, நிபந்தனைகள் , கிராமத்திற்கு போக மாட்டேன் என்கிறார்கள்.

இன்றக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராமப்புற சேவையின் சாராம்சமும், அன்றைய அரசு மருத்துவர்களின் நியமன உத்தரவும் ஒன்று போல இருக்கிறது.

அப்போது எதிர்ப்பு எதுவும் இல்லை இப்போது மட்டும் ஏன்?


ஒரே காரணம், அப்போது வேலையில் சேர்ந்துக்கொண்டு ,கிராமப்புற மருத்துவமனைக்கே போகாமல், போனது போல் கணக்கு காட்டிவிட்டு ,தனியே மருத்துவமனை வைத்து சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் .அதுவே இப்போது கையில் பட்டம் கொடுக்காமல் அங்கே அனுப்புவதால் மருத்துவமனைக்கு போகாமலே சம்பாதிக்க முடியாது.இப்போது அரசை ஏமாற்றி இரட்டை சம்பாத்தியம் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான் எதிர்க்கிறார்கள்.

இப்போது புரிந்து இருக்குமே ..மருத்துவமாணவர்களின் போராட்டத்தின் பின்னனி!

14 comments:

ரசிகன் said...

அடப்பாவமே அப்படியா?.. முன்னாடியே அரசு சொல்லித்தேன் படிக்க வைக்குதா ?.இதுவரை தெரியாத விசயங்களை நல்லா சொல்லியிருக்கிங்க....வெளவால்..
இந்த கருத்தோடு தொடர்புடைய என்னோட ரெண்டு பதிவுக்கும் உங்க கருத்தை சொல்லுங்களேன்.

கொலை செய்ய லைசென்ஸ்? -டாக்டர்கள் ஜாக்கிரதை.
http://rasigan111.blogspot.com/2007/12/blog-post.html

கிராமபுற சேவையா? மருத்துவ பயிற்சியா?
http://rasigan111.blogspot.com/2007/12/blog-post_8549.html

(அதில வந்த துறை சார்ந்தவர்களின் பின்னூட்டத்தையும் படித்து பார்த்து ,முரண்பாடு இருந்தால் எங்களுக்கும் விளக்குங்களேன் வவ்வாலாரே...).

அன்புடன் ரசிகன்.

Thekkikattan|தெகா said...

ஓ! கதை இப்படிப் போகுதா?

வவ்வால் said...

ரசிகன்,
நன்றி!

8000 சம்பளம் என்பது குறைவு என்று இப்போது தான் ஞானம் வந்திருக்கும் போல,

உங்கள் பதிவுகளையும் பார்க்கிறேன்.
------------------
தெகா,
நன்றி,

ஆமாம் பழைய சமாச்சாரங்கள், டாக்டர்களுக்கான நன்னடத்தை விதிகளை எல்லாம் பார்த்தால்,இவர்கள் போராடுவது சுயநலத்திற்காக என்பது அப்பட்டமாக தெரியும்.

வவ்வால் said...

விடுபட்ட ஒன்று,

இந்த கிராமப்புற மருத்துவ மாணவர் பயிற்சிக்கு வழங்கப்படும் 8000 ரூபாய் உதவித்தொகை முழுவதும் மத்திய அரசின் நிதியாகும். இதனால் மாநில அரசுக்கு பெரும் நிதி சுமை குறையும் என்பது கூடுதல் பலன்.

எனக்கு தெரிந்து இது வரை மத்திய அரசின் நிதி மாநில அரசின் மருத்துவக்கல்விக்கு வழங்கப்படவில்லை. இந்த வகையில் நிதிஉதவி வருவது நன்மைத்தானே!

Anonymous said...

Now you come to the point

That was is 2004

But since that scheme was not successful, government of tamil nadu brought all of them into time scale in 2006

http://law.aftermbbs.com/2006/11/contract-medical-officers-contract.html

Please see the above GO.

At present Government of Tamil Nadu is giving postings to all doctors on time scale of pay

This is a better method than the Contract method proposed by the new scheme
---
Please check the new GO also
---

வவ்வால் said...

அனானி,
நன்றி!

நீங்கள் சொன்னது சரி தான், நீங்களும் பாயிண்டுக்கு வந்திட்டிங்க, அதே சமயம் எனக்கும் பாயிண்ட் தந்துட்டிங்க!

ஆனால் 2004 இல் நியமிக்கப்பட்டவர்கள் , இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2006 இல் தான் அப்படி அதிக சம்பளத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்கள்.

அப்போது 2004 இல் யாரும் எதிர்ப்பு தெரிவித்து வேலையில் சேராமல் இல்லை.

பின்னர் சம்பளம் உயர்த்தப்பட காரணம், அவர்கள் பணியில் இருந்துக்கொண்டே கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

அதே போல ஒரு ரெண்டு வருசம் மாணவர்களும் கிராமப்புரசேவைக்கு போய்ட்டு கோரிக்கை வைத்தா சம்பளம் உயர்த்தப்படலாம் இல்லையா? போகாமலே எதிர்ப்பு ஏன்?

அதை ஏன் இப்போது மாணவர்கள் செய்யவில்லை.

மேலும் இங்கே புருனோ என்பவர் 20,000 சம்பளத்தில் தான் மருத்துவர்கள் பணி நியமனம் செய்வார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார், நீங்கள் கொடுத்திருப்பதிலோ,

//time scale of pay of Rs.8000-275-13500.//

8000 இல் இருந்து 13500 ஆக தான் உயர்த்தப்பட்டுள்ளது.


பொதுவான சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், மத்திய அமைச்சர் இத்திட்டத்தை முன்னர் தமிழக அரசு கொண்டு வந்திருந்த ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் நியமனத்தின் அடிப்படையில் தான் கொண்டு வந்திருக்கிறார் என்பது.எனவே முன்னுதாரணம் இருக்கிறது.

இது வரைக்கும் இப்படிலாம் இல்லை , இன்று தான் இப்படி எங்களை அரசு ஏமாற்றுகிறது என்று பெரிதாக பில்ட் அப் கொடுத்தாரே புருனோ!

அனானி நீங்களும் ஆங்கிலத்திலேயே பின்னூட்டுறிங்க ,ஒரு வேளை அவரா நீங்க!

சுரேகா.. said...

அப்பாடி..!



இதுக்குத்தாங்க நானும் தகவல்கள் திரட்டிக்கிட்டிருந்தேன்.

நல்லவேளையா..கலக்கிட்டீங்க.!




இதுல
அவுங்க (மருத்துவ மாணவர்கள்+அவர்களுக்கு துணைபோகும் மருத்துவர்கள்)
என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும்
உள்ளே இருக்கும் சுயநலம்தான் தெளிவாக பல்லிளிக்கிறதே..?

இந்தவார ஆனந்தவிகடனில் இராமதாசும் இதை சொல்லியிருக்காரு பாருங்க..!

வவ்வால் said...

சுரேகா,
நன்றி!
//இதுக்குத்தாங்க நானும் தகவல்கள் திரட்டிக்கிட்டிருந்தேன்.

நல்லவேளையா..கலக்கிட்டீங்க.!//

இது வரைக்கும் நான் பல ஆதாரங்களுடன் பேசி இருக்கிறேன், ஆனால் புருனோ எதையும் முன்வைக்காமலே சவால் விட்டுக்கொண்டு திரிகிறார்.

2004 இல் எந்த சத்தமும் இல்லை இப்போது ஏன் இத்தனை சல சலப்பு? காரணம் அப்போது அம்மையார் ஆட்சி, அரசு ஊழியர்களையே தூக்கி உள்ளப்போட்டவங்க, எஸ்மா, டெஸ்மா, பொடா தான் கிடைக்கும்னு சும்மா இருந்தாங்க போல :-))

மேலும் இவர்கள் இப்போது சேர்ந்து விட்டு பின்னர் கோரிக்கை விட்டால் என்ன குறைந்து விடும்? அதிலும் இது முழுக்க மத்திய அரசு நிதி, மாநில கல்விக்கு கிடைக்கிறது,இதற்கு முன்னர் இப்படி கிடைத்தது இல்லை. எப்படி பார்த்தாலும், மாநில அரசுக்கும், மக்களுக்கும் நன்மை தானே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

நான் இன்னும் விகடன் படிக்கவில்லை, அதற்கு முன்னரே பதிவிட்டு விட்டேன்.

வவ்வால் said...

//Rajya Sabha

There is no shortage in the aggregate number of doctors and nurses in the country. As per information furnished by Medical Council of India (MCI), at present there are 6,83,682 allopathic registered doctors in the country. Besides, 30,922 doctors pass out from 269 medical colleges every year adding to the strength of doctor in the country. In addition, there are more than 6 lakh practitioners of Indian Systems of Medicine and Homoeopathy in the country. However, there is an imbalance in the availability of doctors in the rural and urban areas of the country. //

http://pib.nic.in/release/release.asp?relid=30771

ராஜ்யசபாவில் அளிக்கப்பட்ட ஒரு பதில் இது, பல லட்சம் மருத்துவர்கள் நாட்டில் இருந்தும் கிராமப்பகுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

அப்போது 8,000 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார்கள்; இப்போது ஏன் மறுக்கிறார்கள் என்பது சரியான விவாதமாயிருக்காது - அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; அது முக்கியமல்ல.

முக்கியமானது 8,000 ரூபாய் என்பது சரிதானா.? ஒரு மருத்துவருக்கு 20,000 ரூபாய் சரியாயிருக்குமா அல்லது 8,000 ரூபாய் சரியாயிருக்குமா.?

இந்தப் பணம் மத்திய அரசிலிருந்து வருகிறதா மாநில அரசு தருகிறதா போன்றவையும் தேவையில்லாத விஷயம். மருத்துவர்கள் அதிகமிருந்தும் கிராமத்தில் வேலை செய்ய ஆளில்லை என்றால் மருத்துவர்களைப் பணிக்கமர்த்துவதுதானே சரியான செயல்பாடாக இருக்க முடியும்.?

வவ்வால் said...

ஜியோவ்ராம் சுந்தர்,
நன்றி!

//இந்தப் பணம் மத்திய அரசிலிருந்து வருகிறதா மாநில அரசு தருகிறதா போன்றவையும் தேவையில்லாத விஷயம். மருத்துவர்கள் அதிகமிருந்தும் கிராமத்தில் வேலை செய்ய ஆளில்லை என்றால் மருத்துவர்களைப் பணிக்கமர்த்துவதுதானே சரியான செயல்பாடாக இருக்க முடியும்.?//

மத்திய அரசின் நிதியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, மாநில அரசின் நிதி சுமையை குறைக்கும் அல்லவா? மேலும் மாநில அரசையும் கொஞ்சம் பங்களிப்பு செய்ய சொன்னால் கூடுதல் பணம் கொடுக்க முடியுமே?

மேலும் ஒரு மருத்துவருக்கு பணி நியமனத்தின் போது அரசு சம்பளம் 13,500 தான் , 20,000 அல்ல. வித்தியாசம் குறைவு தான், அதனையும் கொஞ்சம் கூடுதலாக கொடுக்க வைத்தால் தீர்ந்தது பிரச்சினை.

அரசு செலவில் ஒன்றும் படிக்கவில்லை,மாணவர்களிடம் இருந்து வாங்கும் கல்விக்கட்டணத்திலேயே படித்து விடுவார்கள் என்பது போல இங்கே சிலர் பேசியதால் தான் 10 லட்சம் ஆவது குறைந்த பட்சம் அரசின் செலவு இருக்கிறது என்று நான் சொன்னேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

/மத்திய அரசின் நிதியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது, மாநில அரசின் நிதி சுமையை குறைக்கும் அல்லவா? மேலும் மாநில அரசையும் கொஞ்சம் பங்களிப்பு செய்ய சொன்னால் கூடுதல் பணம் கொடுக்க முடியுமே? /

சரிதான். ஆனால் இது பிரச்சனைக்கு வெளியே உள்ளது. கண்டிப்பாக வேறு ஒரு இடத்தில் இது சம்பந்தமாக விவாதம் / உரையாடல் வந்தால் பேசுவோம்.

/அரசு செலவில் ஒன்றும் படிக்கவில்லை,மாணவர்களிடம் இருந்து வாங்கும் கல்விக்கட்டணத்திலேயே படித்து விடுவார்கள் என்பது போல இங்கே சிலர் பேசியதால் தான் 10 லட்சம் ஆவது குறைந்த பட்சம் அரசின் செலவு இருக்கிறது என்று நான் சொன்னேன்./

Dr Brunoவும் அப்படியாகச் சொல்லவில்லை (எனக்குத் தெரிந்து). சிலர் செலவைப் பற்றிப் பேசும் போது அவரும் அந்த்ச் சுழலில் மாட்டிக் கொண்டார். (இன்னமும் சொல்லப் போனால் தனியாகச் சொல்ல முடியாத கணக்கை மொத்தச் செல்வுடன் சேர்க்க முயல்வதுதான் அரசாங்ககளின் வாடிக்கை. நீங்கள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்கு மட்டுமென செலவு செய்த தொகை எவ்வளவு எனக் கேட்பதை என்ன சொல்ல).

சரி, நண்பரே, 20,000 ரூபாய் சரியான amount என ஏறிகிறீர்களா.?

/அரசு செலவில் ஒன்றும் படிக்கவில்லை,மாணவர்களிடம் இருந்து வாங்கும் கல்விக்கட்டணத்திலேயே படித்து விடுவார்கள் என்பது போல இங்கே சிலர் பேசியதால் /

யார் சொன்னது அவ்வாறு.??

வவ்வால் said...

ஜி.ராம்,

////Total amount spend by DME is 615.20 crores (college + hospital)

Out of which the amount alloted for education (College) (head 12) is 37.88 crores

Fees Collected 36.95 crores (this includes all courses - The Fees for Superspeciality runs in lakhs)//

36.5 கோடி ரூபாய் ஆண்டுக்கு மருத்துவக்கல்விக்கட்டமாக அரசு வசுலிக்கிறது என்று புருனோ சொல்லி இருக்கிறார் பாருங்கள், அதற்கு என்ன ஆதாரம் என்றே தெரியவில்லை.

இதை எல்லாம் சொல்லித்தான் அரசு மாணவர்களுக்கு செலவிடுவது மிகச்சிறிய தொகை. அதை ஒரு கணக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்.

நான் ஆவது குறைந்த பட்சம் 10 லட்சம் செலாவகும் என்று தான் சொன்னேன்.

//நண்பரே, 20,000 ரூபாய் சரியான amount என ஏறிகிறீர்களா.?//

அரசு வழக்கமாக வழங்குவதே 13,500 எனும் போது அதையும் தாண்டி ஒரு தொகை சரியானது என்று எப்படி சொல்ல வருகிறீர்கள்.

ஒவ்வொருவருக்கும் அதிக சம்பளம் வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் வேலை தருவதற்கு முன்னாலே அதைக்கேட்டு போராடுவதா?

புருனோ Bruno said...

//36.5 கோடி ரூபாய் ஆண்டுக்கு மருத்துவக்கல்விக்கட்டமாக அரசு வசுலிக்கிறது என்று புருனோ சொல்லி இருக்கிறார் பாருங்கள், அதற்கு என்ன ஆதாரம் என்றே தெரியவில்லை.//

அரசின் நிதி நிலை அறிக்கை தான். அதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்

//மேலும் ஒரு மருத்துவருக்கு பணி நியமனத்தின் போது அரசு சம்பளம் 13,500 தான் , 20,000 அல்ல.//

முழுப்பொய். இது போல் தவறான தகவல்களை சொல்வதற்கு நீங்கள் கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டீர்களா