Saturday, February 02, 2013

வில்லங்க ரூபம்!

(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights"  எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி" என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------

40 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பா,
ஹா ஹா ஹா சபாஷ் சரியான விமர்சனம்,.
பட வியாபாரத்தில், டி டி எச் விவகாரத்தில் கமல் செய்த குளறுபடிகளைத் தவிர்த்து இருக்க்லாம்!!!.

பணம் படுத்தும் பாடு!!!.
நட்டம் வரும் என்ற ஒப்பாரி வடி கட்டிய பொய். இந்நேரமே போட்ட பணம் வந்து இருக்கும். செலவை நீங்க்ள் சொன்னபடி அதிகமாக் காட்டுகிறார்.
**

ஜேயா தொ.கா வுடன் சுமுகமான சூழ்நிலை வெளியிட்டு இருந்தால் எந்த எதிர்ப்பும் வந்து இருக்காது. சட்டம் ஒழுங்கு கெடும் போராட்டங்களை இப்போதைய அரசின் போலீஸ் என்ன செய்யும் என்பது மார்க்க பந்துக்களுக்கு தெரியாதா!!. ஆகவே மார்க்க பந்துக்கள் செய்தது ஆளும் கட்சியின் தூண்டுதல்,ஆதரவினால் மட்டுமே!!

வேண்டுமானால் மார்க்கத்தில் ஹராமான மதுக்கடைகளை எதிர்த்து யாரையும் வரவிடாமல் போராட்டம் நடத்தி பார்க்கட்டும். ஹி ஹி நிறையப்பேருக்கு சுவனம் கிட்டும்!!!

வரும் 2014 தேர்தலில் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன் என்றால் மட்டுமே எங்கள் ஓட்டு என சொல்ல முடியுமா?

சும்மா உதார் விடுவாங்க நம்ம மார்க்க பந்துக்கள் என்பது தெரிந்த விடயம்தானே!!

**

எனினும் நாத்திகர் கமல் மதம் சார் படங்களை எடுக்ககூடாது என்பதுசரியல்ல!!. பல படங்களில் நடிகவேள் எம்.ஆர் இராத பக்திபழமாகவே வருவார்!!

கமல் உண்மையான நாத்திகரா என்பதை இதனால் உறுதி செய்ய இயலாது!!

ஹே ராம் படத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் சூழல் நடுநிலையாகவே காட்டப்பட்டது!

கம்லுக்கு ஏற்பட்ட மனிவியின் இழப்பினால் இந்து தீவிரவாதி ஆகிறார். ஆனால் ஷாருக் கான் தன் குடும்பத்தை இழந்தாலும் இந்தியாவை நேசிக்கும் முஸ்லிமாகவே, நான் காந்தியின் மகன் என்பவன் ஆகவே காட்டி இருக்கிறார்.

தசாவதாரத்தில் நம்க்கு பிடித்ததே அந்த இரமானுஜ தாசன் விடயம்தான்!!. அப்படியே நம்ம மாப்ளே ஜெயதேவு தாசை ,அந்த இடத்தில் கற்பனை பண்ணும். நான்தான் [நம்ம பிராண்டு ஹி ஹி]நெப்போலியன்!! ஒரு கை குடுத்தால் கடலில் துக்கி பொட்டு விடலாம்!!.

உன்னைப் போல் ஒருவன் நிச்சயம் முஸ்லிம் விரோத சித்தரிப்பே!!.
மூன்று பெரிய தீவிரவாதிகள் முஸ்லிம் ஆகவும், இந்து சந்தானபாரதி ஆயுத வியாபாரி போல் அதுவும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஆளாக காட்டுவது தவறே!!


தவறு செய்யாதோர் யார்??

விசுவரூப பிரச்சினையில் தமிழ்மணத்தில் அமைதி வேடம் போட்டவர்களின் குலகுருவின் ஆபாச பிதற்றல் உண்மையை வெளிச்சம் ஆக்கியது!!


இனி தாவா சுதி இறங்கிவிடும்!! ஆ டண்டனக்கா!!
**
இப்படி சரக்கு படம் போட்டு தூண்டும் உம்மை!!!!!!!!!!!!!!!!!!

நன்றி!!

நாய் நக்ஸ் said...

Vavvaal....

I know this water shop.....
:)

ippa seththa paambukku.....
Ellaarum sernthu.....
Uyir koduththuttaanga........

Ini athu padam
edukkuma....????
Illai....
Koththumaa-nnu
wait panni parppom......

Ory velai....ponthukkulla
ponaanlum.....
Pogalaam.......

Sorry for eng comment.....
In mob.

? said...

லோகம் அயல் நாட்டுக்கு ஓடிவிடவேன் என்கிறார்... உடனே நம்ம அயல்நாட்டு பதிவர்கள் தமிழ்நாட்டில் மதவாதம் அதிகமாகிவிட்டது, ஆகவே நாங்களும் ஆங்காங்கே செட்டில் ஆகிவிடுவோம், தமிழ்நாட்டுக்கு திரும்பிவரமாட்டேன் என்கிறார்கள். என்னே தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

லோகத்தை பற்றி புட்டுபுட்டு வைத்திருக்கிறீர்கள். எங்களுர் பணக்காரர் ஒருவரிடம் மருதநாயகம் எடுக்க காசு வாங்கினராம். இப்ப டிடிஎச் க்கு பணம்கட்டிய இளிச்சவாயர்களின் கதிதான் அவருக்கு அப்போது நிகழ்ந்தது.

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது லோகத்துக்கு நடிப்பு நன்றாக வருகிறது. மும்பையி்ல் புரட்சிகாரனாக நடிக்கிறார். மம்மி 1950களில் வந்த சட்டத்தை போட்டு டேம் படம் மாதிரி ஆஃப் பண்ணிடுவேன் என்றால் பம்புகிறார். நவரசத்தை கலந்து போட்டு தாக்குகிறார்.

என்னதான் ஆனாலும் எனக்கு படம் பார்க்கும் வெறி வரவேயில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்ணா...... போட்டு பொரட்டி எடுத்துட்டிங்ணா....... இருந்தாலும் லோகநாயகருக்கேத்த மாதிரி ஒரு லோகநாயகிய போட்டிருக்கலாம்ல..... அதே அசின..... போட்டு கெடுத்துப்புட்டீங்களேங்ணா.....

இம்சைஅரசன் பாபு.. said...

சரியான அலசல் ... :))

குறை ஒன்றும் இல்லை !!! said...

சூப்பர் ! வழக்கம் போல.. நான் ஃபேஸ்புக்கில் பகிர்கிறேன் !

? said...

//அசின..... போட்டு கெடுத்துப்புட்டீங்களேங்ணா.....//

வவ்வால் ??????

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஒரு புரொபஷனல் எதிக்ஸ் இல்லாமல் தினம் ஒரு திட்டம்,அறிவிப்புனு ஓவரா குழப்பிட்டார், எல்லாம் கூட இருக்கும் அல்லக்கைகளின் உசுப்பேத்திவிடலாக இருக்கும்னு நினைக்கிறேன்.

டிடிஎச் ரிலீஸிலேயே புக்கிங்க் நடக்காதப்போவே அவரோட நிலைமை புரிஞ்சு இருக்கணும், இப்போ கூட ஆரோ, உலகத்தரம்னு சொல்லி நஷ்டம் இல்லாமத்தப்பிச்சுட்டார், இந்த அழுகாச்சி நாடகம் எல்லாம் பிவிபி சினிமாவை காசு கொடுக்காம மொட்டை அடிக்கவோனு டவுட்டா இருக்கு.

காசுக்கொடுத்தவன் என்ன சொல்லுறதுனு தெரியாமா கமுக்கம்மா எப்போ திரும்ப வரும்னு காத்திருக்கான்,ஆனால் அதை வாங்கி செலவு செஞ்சவன் ஊரெல்லாம் ஒப்பாரி :-))

நல்லா கவனிங்க நான் இப்போவே இதை சொல்லிட்டேன் ,பின்னாடி நடந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை :-))

//வேண்டுமானால் மார்க்கத்தில் ஹராமான மதுக்கடைகளை எதிர்த்து யாரையும் வரவிடாமல் போராட்டம் நடத்தி பார்க்கட்டும். ஹி ஹி நிறையப்பேருக்கு சுவனம் கிட்டும்!!!//

மதுபானக்கடைக்கு பூட்டு போடுவேன்னு சொன்ன தலிவரு ஏன் அறிக்கையோட அமுங்கி கிடக்கார்னா, கடைக்கு கிட்டக்க வந்தா கைது செய்து ரிமாண்ட் செய்யலாம்னு சொல்லியாச்சு, அதனால தான் தொண்டர்கள் மட்டும் அவ்வப்போது போராட்டம் அறிவிச்சாலும், பெருசா நடக்கலை, கைது செய்தா அன்னிக்கு மாலையே விட வேண்டாம் 15 நாள் உள்ள வைக்கலாம்னு சொல்லியாச்சாம் :-))

ஆளும் தரப்புடன் லோகநாயகர் ச்மூகம்மாக வியாபாரம் செய்திருந்தால் அதே கதை தான் மார்க்குகளுக்கும் நடந்திருக்கும். என்ன லோகநாயகர்,நம்மளவா நம்ம மேல எல்லாம் நடவடிக்கை எடுக்கமாட்டானு தப்புக்கணக்கு போட்டுப்புட்டார் :-))

# எம்.ஆர்.ராதா செய்தது வேறு லோகம் செய்வது வேறு. ராதா நேரடியாக போராட்டத்துல கலந்துப்பார், தொடர்ந்து பிரச்சாரம்,நாடகம் என எல்லாம் செய்தவர், லோகம் தேவையான படங்களில் மட்டும் நாத்திகம்ம் பேசுவார், பெரும்பாலும் ஆத்திக பிரச்சினைகளை வியாபாரத்துக்கு பயன்ப்படுத்துவார்.வியாபார நாத்திக கொள்கையாளர்.

ஹே ராமில் ஷாருக்கான் பாத்திரத்தினை ,வைத்து கவுண்டர் பேலன்ஸ் செய்திருப்பார், ஆனால் முழு அனுதாபம் இந்து நாயகனுக்கு விழுவது போல காட்சிகள். எனவே நீங்க கருத்தின் தாக்கம் தெரியாது,ஆனால் லோகத்தின் கேரக்டர் வழியே கதையின் கருத்து மக்களுக்கு நான் சொன்னது போல சென்றடையும்.

#//விசுவரூப பிரச்சினையில் தமிழ்மணத்தில் அமைதி வேடம் போட்டவர்களின் குலகுருவின் ஆபாச பிதற்றல் உண்மையை வெளிச்சம் ஆக்கியது!!//

அந்த வீடியோ என்னால இப்போ பார்க்க முடியலை, பார்த்துட்டு அதுக்கு ஒரு பொங்கல் வைக்கணும்.
------------

நக்ஸ் அண்ணாத்த,

நன்றி!

எல்லா ஊரு தண்ணிக்கடையும் அத்துப்படி போல இருக்கே அவ்வ்:-((

செத்த பாம்பு இனிமே தான் நல்லா படம் எடுக்கும் :-))
-------------
நந்தவனம்,

நன்றி!

//உடனே நம்ம அயல்நாட்டு பதிவர்கள் தமிழ்நாட்டில் மதவாதம் அதிகமாகிவிட்டது, ஆகவே நாங்களும் ஆங்காங்கே செட்டில் ஆகிவிடுவோம், தமிழ்நாட்டுக்கு திரும்பிவரமாட்டேன் என்கிறார்கள். என்னே தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!//

இப்போ இவங்கலாம் இல்லாம தமிழ்நாடு வங்க கடலில் மூழ்கிடுச்சா, திரும்ப வந்தால் மேல வருமா? வந்தா இவங்க சொந்தப்பந்தங்களை தான் பார்த்து சந்தோஷமா இருப்பாங்க, என்னமோ வந்து நாட்டுல இருக்க ஊழலை அழிச்சு, ரோடு போட்டு சாக்கடை அள்ளி சேவை செய்திடுறாப்போல ,நாங்க வராம அங்கேவே இருப்போம்னு சொல்லிக்கிட்டு, இருந்தா இருந்துட்டு போங்கய்யா, ஆனால் டாய்லட் கதை மூடிட்டு இருக்கணும் :-))

//. எங்களுர் பணக்காரர் ஒருவரிடம் மருதநாயகம் எடுக்க காசு வாங்கினராம். இப்ப டிடிஎச் க்கு பணம்கட்டிய இளிச்சவாயர்களின் கதிதான் அவருக்கு அப்போது நிகழ்ந்தது. //

லோகத்துக்கிட்டே பணம் போனால் அதை பெருமால் கோயில் உண்டியலில் போட்டதா தான் நினைக்கணும் :-))

எப்படி சும்மா விட்டார், நீங்களாவது சொல்லி ஒரு 420 கேசு போட வச்சிருக்கலாம். இதனை லோகத்துக்காக மட்டும் சொல்லவில்லை சினிமாவில் இருப்பவர்கள் இப்படி பல அப்பாவிகளின் பணத்தை அபேஸ் செய்துவிடுகிறார்கள். ஆனால் வெளியில் சமூகப்போராளி போல பேச வேண்டியது.

//என்னதான் ஆனாலும் எனக்கு படம் பார்க்கும் வெறி வரவேயில்லை.//

படம் எப்படினு தெரிஞ்சிக்கிட்டு பேசினால் நல்லா இருக்கும்னு தான் பார்க்கலாம் நினைச்சேன், அப்புறம் சோழர் காலத்து சிலைப்போல முன்னழகை காட்டிக்கிட்டு பூஜாகுமார் படம் வேற இணையத்தில பார்த்தேனா லேசா வெறி ஏறிடுச்சு :-))

ஆனால் மூஞ்சு தான் 4 பேரன்,பேத்தி எடுத்த பாட்டியாட்டம் இருக்கு அவ்வ் :-((
--------------------

வவ்வால் said...

ப.ரா,

வாரும்,நன்றி!

பொரட்டி மட்டுமா , வெறட்டியும் அடிப்போம்ல :-))

லோகநாயகின்னு சொல்லி அம்மன் படம் போடனுமா, அபச்சாரமா பேசுறீர் :-))

சுட்டும் விழி சுடரே என் உலகம் உன்னை சுற்றுதேனு கவிதை படித்து பாருங்க்ணா ,லோகநாயகி யாருனு புரியுங்க்ணா :-))

ங்க்ணா உமக்காகவே ஒரு ஸ்பெஷல் எடிஷன் பதிவு போடணும் போல இருக்கே அவ்வ்வ்:-((
---------------

இ.அ.பாபு,

வாங்க,நன்றி!

கும்மி டீம் ஒன்னா தான் வருவீங்க போல :-))
-----------
ரா.சி(ராஜ்குமார் சின்னசாமி)

வாங்க,நன்றி!

உங்க பிளஸ்ஸும் படிக்கிறது தான் ஆனா தொடர்ந்து படிக்க முடிவதில்லை, ஒரே நாளில் நிறைய பிளஸா ஓடுது,எதை படிக்க ,விட ,ஒரே கன்பீயுஷ்அன் அவ்வ்:-((

பகிர்வுக்கு நன்றி! நீங்க எங்கே வேண்டும்னாலும் பகிரலாம், பகிர்ந்தா மட்டும் போதும் :-))

பின்ன நம்ம பதிவை நாலுப்பேர் படிக்கிறது பெரிய விஷயமில்லையா?
--------------
நந்தவனம்,

ஏன் ,ஏன் இந்த கொலவெறி?

ப.ரா செய்த கூத்துக்கு என்னை பொம்பளை கேசில உள்ள தள்ளிடுவீர் போல இருக்கே அவ்வ் :-((

பதிவுல எல்லாம் கிரிமினல் மைண்டட் ஆ இருக்காங்க ,பீ கேர்ஃபுல்(நான் என்னை சொல்லிக்கிட்டேன்)

நான் அந்த மேரி வேலையெல்லாம் செய்ய மாட்டேன் மி அப்பாவி, ஒன்லி லுக்கிங் தான் :-((
--------------------

குறை ஒன்றும் இல்லை !!! said...


உங்க பிளஸ்ஸும் படிக்கிறது தான் ஆனா தொடர்ந்து படிக்க முடிவதில்லை, ஒரே நாளில் நிறைய பிளஸா ஓடுது,எதை படிக்க ,விட ,ஒரே கன்பீயுஷ்அன் அவ்வ்:-(//

அண்ணே ! பதிவெழுத தான் நிறைய மெனக்கெடணும் ஆனா ப்ளஸ் அப்படி இல்லை.. போற போக்கில தோணிணத எழுதிட்டு போயிட்டே இருக்கலாம் :)

Anonymous said...

வவ்வால், கில்லி பதிவு. வாழ்த்துகள்.

By,----

Maakkaan.

சார்வாகன் said...

சகோ வவ்வால்,
//என்ன லோகநாயகர்,நம்மளவா நம்ம மேல எல்லாம் நடவடிக்கை எடுக்கமாட்டானு தப்புக்கணக்கு போட்டுப்புட்டார் ://
வரலாற்றை மறக்க கூடாது!!

சு.சாமி[ இது நம்ம சுவனச்சாமி இல்லை சுப்ரமண்ய சாமி] க்கு நடந்த மகளிர் அணி ஆபாச நடனம்!!

காஞ்சி சாமியை கஞ்சி காய்ச்சிய கதை மறக்கலாமா!!!

சு.சாமிக்கு மகளிர் அணி போல் மாதிரியே , ஒரு அல்லக்கையை விட்டு லோகத்தை ஆபாசமாக திட்ட வைத்த திறமை கண்டு போற்றுகிறேன்!!!

***
//பார்த்துட்டு அதுக்கு ஒரு பொங்கல் வைக்கணும்.//

ஹி ஹி வச்சுடுவோம்!!

நன்றி!!

priyamudanprabu said...

இது வவ்வால் எழுதியதா?

அவ்வவ் அப்போ இவர் அதுக்கு முன்பு எழுதியவையும் இப்படி தான?


#*வடிவேலுக்கு என் வாய்ப்பு தரள ?
ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?*

அவ்வவ் இது முன் எந்த கமல் படத்தில் பெரிய காமெடியன் வடிவேல் இருந்துள்ளார் ??? இந்த பிரச்சனைக்கு பின்புதான் கமல் வடிவேலை பயன் படுத்தலையா ?? அவ்வ்வ்வ் இதை மாஸ் ஈரோ ன்னு சொல்லிகிட்டு வடிவேலை வச்சு படம் ஓட்டியவர்களிடம் கேட்கணும்..:)))


#, *50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்*.


அப்போ பிவிபி-க்கு 50 யை திருப்பி தர வேண்டாமா ? அதை யார் தருவா ?



##*அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும்*

இதை எப்போ கமல் சொன்னார்? போடா பிரபு உனக்கு உலக நடப்பே தெரியல...:))))



#*அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))*


கமல் யை விடுங்க வேறு யாரு எல்லாம் விசைக்கு அதரவு தந்தார்கள் ? இப்ப மட்டும் என் சாருக் - சல்மான் கான் எல்லாம் "படம் பார்த்து கமலுக்கு ஆதரவு தாருங்கள்" என்று தன ரசிகர்களிடம் சொல்லணும் ? என் விஜய் யின் துப்பாக்கிக்கு அவங்க ஆதரவு தரல ? கொடிகளில் புழங்கும் சினிமாவில் மிரட்டல்-போராட்டம்-கட்டபஞ்சத்யத்து-கோர்ட் கேசு- எல்லாம் பழக்கப்பட்டது அதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் ..ஆனால் இப்போ நடப்பது வேறு ..முழுக்க முழுக்க தனி[பட்ட காரணத்துக்காக வேலைவேட்டிஎல்லாம் விட்டு அரசு இறங்கி வந்து செய்யும் அராஜகம்...



பணம் போகும் அதனால் நாடு-மாநிலம் போவேன் என்று கமல் சொன்னாரா ?

அவ்வ்வ்வ் எனக்குத்தான் புரியல போல,,,நான் என்ன நினைத்தேன் என்றால்... பணம் போட்டு படம் எடுத்தாச்சு -,எதிர்ப்பு வந்ததால் தடை செய்திக்க எல்லாம் நியாயம்.(!) , அனால் கோர்ட் தடை நிக்கிய அன்று இரவோடு இரவாய் அரசு காட்டிய வேகம் ஏன்? காலையில் படம் போட்ட அரங்குகளில் கரைவேட்டிகள் வந்து பிரச்சனை செய்ததாய் செய்திகள் வந்ததே ஏன் ? மற்ற படங்களுக்கு வந்த பிரச்சனை வேறு ..இங்கே மாநில அரசே முழு வெறியுடன் தனிப் பகையை தீர்த்துக்கொள்ள தன முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் பொது அவர் எங்கே செல்ல ? வருமானம் வரவில்லை அதனால் வேறு இடம் போகிறேன் என்று கமல் சொல்லனும்னா அதை ஹேராம் கே சொல்லி இருக்கணுமே? இங்கே தொழில் செய்ய விடவில்லை என்பதே.. பின் எப்படி இங்கே பிழைக்க ? நானோ-நிங்களோ இருந்தாலும் அதையே செய்திருப்போம்...அவ்வ நல்ல காமெடி பதிவுங்க வவ்வால் ...:)))))))

நான் படம் [பார்த்துவிடேன் சிங்கையில் எந்த கட்டும் இல்லாமல்...ஹேராம் பல இடங்களில் புரியாமல் இருந்தது அனால் இதபடம் புரிந்தது (சில வசனம் தவிர்த்து)..ஆனால் கடைசி வரை புரியாதது "என் இவர்கள் தடை கேட்டு போராடினார்கள்" என்பதுதான்...

priyamudanprabu said...

.

வவ்வால் said...

ரா.சி,

நன்றி!

நீங்க சொன்னாப்போல போற போக்கில் ஒரு பிளஸ்ஸ விடலாம் தான், ஆனால் ஒரே நாளில் பல சப்ஜெக்ட்களையும் தொட்டுவிடுவதால், நிறைய இருப்பதாக படுகிறது,சாட்டிங்க் திரெட் போல ஓடுது:-))

அதை சொன்னேன், இணையத்தில் தொடர்ச்சியாக அப்படி கவனிக்க முடியலை எனக்கு.

உங்க புண்ணியத்தால பிளஸ்ஸில் இருந்து பிரபு வந்து கேள்வி கேட்கிறார்,அவரையும் "கவனிச்சிட்டு" வருகிறேன் :-))
------------------

மாக்கான் ,

வாங்க,நன்றி!
-------------
சகோ.சார்வாகன்,

நன்றி!,

பழைய முன்னுதாரணங்கள் இருந்தாலும்,ஒவ்வொருவரும் நினைப்பது நமக்கு அப்படிலாம் ஆகாது என்பதே,

பீஜே ?பேசியதெல்லாம் ரொம்ப ஓவர் தான், கிடைச்ச விளம்பரத்தில கொஞ்சம் தலைகால் புரியாம பேசி இருக்கணும்,

சீக்கிரம் வீடீயோவை பார்க்கிறேன்.
-------------

வவ்வால் said...

பிரியமுடன் பிரபு,

வாங்க,நன்றி!

எப்பவும் நாமே எழுதுவது தான் மண்டபத்தில எழுதிக்கொடுக்க ஆள் இல்லையே அவ்வ்வ்!

# இங்கு நான் வடிவேலை உதாரணமாக காட்டியது, அடக்கு முறை நடக்கிறது ,எனக்கு அரசியல் தெரியாது என்பது போல லோகநாயகர் கொடுத்த பேட்டியை வைத்து, முன்னரே இப்படி வடிவேலுக்கும் நடந்துள்ளதை கருத்தில் கொண்டாரா எனக்கேட்கவே, இப்போ சூப்பர் ஸ்டார் எனக்கு இப்படி நடந்திடுச்சேனு சொல்வாரானால் அவரையும் கேட்ப்பேன்.

இப்போ எங்களுக்கு சேட்டிலைட்ஸ் உரிமை கொடுங்கன்னு ஆளுந்தரப்பு கூப்பிட்டு கேட்டதா? எப்படி தானாக தேடிப்போய் விற்றார்? காரணத்தோடு தானே? அப்போ நாம் வியாபாரம்ம் செய்யும் இடம் எப்படினு தெரிந்திருக்க வேண்டாமா?

வடிவேல் காதலா,காதலா படத்தில் கூட நடித்திருப்பார். அப்போ அவர் பெரிய காமெடியன் இல்லைனு நீங்கள் சொல்லக்கூடும், ஆனால் சக கலைஞன் மீது அடக்கு முறை நடப்பது தெரியாமலா இருந்தார் என்பதே எனது கேள்வி இங்கே?

#//அப்போ பிவிபி-க்கு 50 யை திருப்பி தர வேண்டாமா ? அதை யார் தருவா ?//

இவர் தான் தரணும், நான் குறிப்பிட்டது இப்பவே வீட்டை அடகு வைத்துவிட்டேன், என் மொத்த வருவாயும் முடங்கி இருக்கிறது என சொன்னதை இல்லை என்றே.

மேலும் இது வரையில் வந்திருக்க கூடிய வருவாய் கணக்கையும் சொல்லி இருக்கிறேன்.

73 கோடி வந்திருக்கணும், அவ்வளவு எல்லாம் வராது என சொன்னால், அப்புறம் என்ன பெரிய ஹீரோ, உலக மார்க்கெட் இருக்குனு சொல்லிக்கொள்வது, மார்க்கெட்டே இல்லாமல் ஏன் 100 கோடிக்கு படம் எடுக்கணும்? அப்போ மார்க்கெட் இருக்குனு சொன்னதெல்லாம் பொய்யா?

இத்தனைக்கும் நான் சொல்லியிருப்பதெல்லாம் மிக குறைவான தொகையே, சூர்யாவின் மாற்றானே தெலுகு பதிப்பு21 கோடிக்கு போனதாக செய்தி வந்தது, ரொம்ப குறைவாக 10 கோடினு தான் லோகநாயகருக்கு சொல்லி இருக்கிறேன்.இதே போல மற்ற பகுதிகளுக்கும் 10 கோடி என மினிமம் தொகையே சொல்லியுள்ளேன்.

இப்போ வந்திருக்கும் 73 கோடி என்பது விற்ற எம்.ஜி தொகை, வசூலைப்பற்றி வாங்கியவர்கள் தான் கவலைப்படனும், ஒரு வேலை வசூலாகவில்லை எனில் திரும்பப்பணம் கேட்டால் கொடுக்காமல் டபாய்க்கவே இப்பொவே நஷ்ட கணக்கு சொல்வது :-))

இந்த 73 கோடியில் பிவிபிக்கு 50 கோடியை திருப்பி தரலாமே?
ஆனால் அதையும் தருவாரா? என்பதே இப்போது சந்தேகம் தான் :-))

மேலும் இன்னும் தமிழக வியாபாரம்இருக்கு, டிடிஎச் வியாபார வருவாய் இருக்கு, எனவே இன்னும் கூடுதலாக வருவாய்ய் வரும். இப்போவே கையில் பிவிபி கடன் போக 23 கோடி ,இனிமேல் வருவதெல்லாம் இவருக்கே, எப்படி கடனாளி ஆகிவிட்டார்னு சொல்ல முடியும்?

லோகநாயகருக்கு நடிப்பு,இயக்கம் என சம்பளம் இல்லையா என்றால் இருக்கு, ஆனால் அதையெல்லாம் படம் வியாபாரம் ஆன பின் தான் லாபம் வருவதில் எடுத்துக்கொள்ள வேண்டும், அதை எப்படி முன் கூட்டியே கடனாக சொல்லிக்கொள்ள முடியும்? இவரே தயாரிப்பாளர் ஆச்சே? என்னமோ இவர் ஒருவரிடம் கடன் வாங்கி மீண்டும் கொடுக்கப்போவது போல சொல்வதை தான் நான் கேள்விக்குள்ளாக்கியுள்ளேன்.

இயக்குனரில் ஷங்கரும் இல்லை, நடிகருள் சூப்பர் ஸ்டாரும் இல்லை ஆனால் அவர்கள் ரேஞ்சில் தனக்கான சம்பளத்தை இவரே ஃபிக்ஸ் செய்துக்கொண்டு, படத்தின் பட்ஜெட்டினை பெரிதாக்கி காட்டுகிறார் அவ்வளவே.

வவ்வால் said...

//அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும்*

இதை எப்போ கமல் சொன்னார்? போடா பிரபு உனக்கு உலக நடப்பே தெரியல...:))))//

அவரே சொன்னாரா என்பதை விட அப்படி நினைத்தாரா இல்லையா என்பதே முக்கியம். பாரதிராஜா பேட்டியை படிக்கலையோ?

மேலும் லோகநாயகர் பேட்டியில் அவரை கைவிட்டு விட்டார்கள் என்பதான குரல் இருப்பதை சாதரணமாக பார்த்தாலே தெரியும்.

என் ரசிகர்கள் பொறுமை காக்கிறார்கள், பொறுமைக்கும் எல்லையுண்டு போல எல்லாம் பேசி உசுப்பியதும் அடக்குமுறைக்கு எதிராக திரட்டும் முயற்சித்தானே.

பாரதி ராஜா பேட்டியில் சொல்லி இருப்பது எனக்கு உடன் பாடில்லை என சொல்லவில்லையே, மேலும் பதிவிலேயே அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை,இவர் ஏன் குரல் கொடுக்கவில்லைனு பேசினார்கள் தானே?

//சாருக் - சல்மான் கான் எல்லாம் "படம் பார்த்து கமலுக்கு ஆதரவு தாருங்கள்" என்று தன ரசிகர்களிடம் சொல்லணும் //

இந்தியில் லோகநாயகரை தெரியும் என்பதால் சொல்லி இருக்கிறார்கள். விஜயை அவர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம், ஆனால் லோகநாயகருக்கும் தெரியாமல் போய்விட்டதா?

//பணம் போகும் அதனால் நாடு-மாநிலம் போவேன் என்று கமல் சொன்னாரா ?//

பண இழப்பு ,மதவாதம் என்ற இரண்டையும் சொல்லி இருக்கிறார், நீங்க ஏன் ஒன்றை மட்டும் பிரிச்சு பார்க்கிறிங்க?

அப்போ அவர் சொன்னது போல தமிழ்நாடு மதவாத மாநிலம் ஆகிடுச்சா? அப்படி எனில் இதே மதவாத சக்திகள் விஜய்க்கு எதிராக போராட்டம் செய்த போது அது மதவாதம் என எப்படி தெரியாமல் இருந்தார் என்பதே எனது கேள்வி, தடை ,தடையில்லை என்பது அடுத்த விஷயம், இவர் குறிப்பிடும் மதவாதம் செயல்படுவதை இந்த மாதம் தான் கண்டுப்பிடித்தாரா?

வடிவேலு சொல்வது போல அது போன மாதம் நான் சொல்வது இந்த மாசம்னு சொல்கிறாரா?

// அனால் கோர்ட் தடை நிக்கிய அன்று இரவோடு இரவாய் அரசு காட்டிய வேகம் ஏன்? காலையில் படம் போட்ட அரங்குகளில் கரைவேட்டிகள் வந்து பிரச்சனை செய்ததாய் செய்திகள் வந்ததே ஏன் ? மற்ற படங்களுக்கு வந்த பிரச்சனை வேறு ..இங்கே மாநில அரசே முழு வெறியுடன் தனிப் பகையை தீர்த்துக்கொள்ள தன முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் பொது அவர் எங்கே செல்ல ? //

இது ரைட்டு, ஆனால் இதனை குற்றமாகவே சொல்லவில்லையே ,தமிழ்நாடு மதவாத மாநிலம் ஆகிவிட்டது என்று தானே சொல்லியிருக்கிறார்.

நீங்க சொல்லி இருப்பது அரசியல் பழிவாங்கல், ஏன் அதனை சொல்லி புகார் செய்யவில்லை?

அப்போ ஒரு மாதத்தில் அம்மையார் மதம் மாறி இஸ்லாமியராக ஆகிட்டாங்களா? இல்லை தமிழ்நாடு இஸ்லாமிக் ஸ்டேட் ஆகிவிட்டதா?

சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் விக்க போய் பார்த்தாரே அது எப்படி?

சேட்டிலைட்ஸ் உரிம குளறுபடிகளை சொல்லி இருக்கிறேன், இவர் முதலில் டிடிஎச் வெளியிட போகிறேன் என சொல்லாமல் ஏன் சேட்டிலைஸ் உரிமம் விற்க வேண்டும்? பின்னர் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் இருப்பார்களா? ஆடியோ வெளியீடு லைவ் டெலிகாஸ்ட் செய்த செலவெல்லாம் யார் கொடுப்பது?

தினம் ஒரு திட்டம்,தினம் ஒரு குழப்பம் என சொதப்பியது லோகநாயகர் தான், இவர் மனம் போன போக்கில் செயல்ப்படுவதை மற்றவர்கள் வேண்டுமானால் பொறுத்திருப்பார்கள், அரசியல் பலம் உள்ளவர்கள் தங்கள் வேலையை காட்டத்தான் செய்வார்கள், இவருக்கு ஆதரவாக பேசும் கழகமே அப்படி தான் செய்யும். காவலன் படம் வெளியாக பிரச்சினை செய்தது எப்படினு தெரியாமலா லோகநாயகர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்?

அம்மையாருக்கு எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதால் தடாலடியாக தடை போட்டு , கோவத்தினை காட்டிவிட்டார்கள், இதெல்லாம் செய்யாமலே கதற விட்டிருப்பார்கள் கேடி பிரதர்ஸ் :-))

டிடிஎச் இல் வெளியிடுவதை முன்னரே சொல்லவில்லையா, சரி நீ டிடிஎச் இல் போடு அன்னிக்கே நான் என் டீவியில் போடுறேன் என போட்டு காலி செய்திருப்பார்கள் :-))

சேட்டிலைட்ஸ் உரிமம் கொடுத்தாச்சு இனிமே எப்போ வேண்டுமானாலும் நான் போடுவேன்னு சொல்லிடுவாங்க :-))

நான் சொன்னது போல டிடிஎச் இல் தனி என ஒப்பந்தம் குறிப்பிட்டு போடவில்லை எனில் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து சேட்டிலைட்ஸ் உரிமமும் வந்துவிடும், அதை வைத்தே வழக்கு போட்டு தாளிச்சு இருப்பார்கள்.

அம்மையாருக்கு நிதானமா செய்யும் பக்குவமில்லாமல், இப்படி எதாவது செய்துவிட்டு முழிப்பது வாடிக்கை, சைலண்டா அடிக்கும் கழக வித்தையை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை :-))

Anonymous said...

Thennapan and KH had a fall out long before Naan Kadavul fallout. Moreover, Thennapan was not his manager. He was KSR's and later had become good friend of KH. Had produced couple of movies under KH's mother's name.
Also, KH didn't deny the advance just because the movie didn't take off. He had spent his time and energy on the project and production cost, which was later scrapped due to Pyramid's own financial problems.
Probably you were not aware of this (this information is available in the public domain) or choose to ignore the facts - like you have done in this article.

வவ்வால் said...

அனானி,

நன்றி!

நீங்க தேனப்பன், லோகநாயகர், பிரமீட் சாய்மீரா என எல்லாருக்கும் பக்கத்திலேயே இருந்து பார்த்துட்டு சொல்லுறிங்க,நீங்க சொன்னா அது ஃபேக்டு தான் :-))

பிரமிட் சாய்மீராவிடம் அட்வான்ஸ் வாங்கிட்டு ஆறுமாசமா ஷூட்டிங்கே ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்க லோகநாயகருக்கு உரிமை உண்டு,அதில் எனர்ஜி ஸ்பெண்ட் செய்தா என்ன சொல்வதாம்? அதுக்குள்ள நிதி நெருக்கடி வந்தால் யார் தப்பு ,பிரமிட் தப்பு தான் , எனவே வாங்கின அட்வான்ஸ் வாங்கினது தான் கொடுக்க வேண்டாம் :-))

தேனப்பனை நிர்வாகினு சொல்லிட்டேன்,அதான் இல்லைனு சொல்லுறிங்க,தயாரிப்பு நிர்வாகியா ராஜ்கமல் பிக்சர்சில் வேலை செய்தார்னு சொல்லி இருக்கணும் போல, மேலும் நண்பர்னு சொல்லி இருக்க்கேன், ஏதோ ஒரு வகையில் வேண்டப்பட்டவர்னு வச்சுக்கலாம்.

அஜித் 6 மாசம் முடி வளர்த்து,வேற படம் நடிக்காம உட்கார்ந்திருந்தது அவருக்கு நஷ்டம் தானே? நீங்க தான் பிரிஞ்சிட்டார்னு சொல்லுறிங்களே, எனவே தேனப்பன் செய்ததைப்பற்றி லோகநாயகர் கவலைப்பட முடியுமா? அஜித்துக்காக பேச முடியுமா?

துப்பாக்கிக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவிச்சது லோகநாயகர் நடிக்க வரும் காலத்துக்கு முன்னே எனவே அப்போ தமிழ்நாட்டில் மதவாதம் இருந்தது தெரியாது,இப்போ தான் கண்டுப்பிடிச்சு இருக்கார், எனவே அவர் சொல்றது சரியாத்தான் இருக்கும், தமிழ்நாடு மதச்சார்பு மாநிலமா மாறிடுச்சு -))

குறை ஒன்றும் இல்லை !!! said...

வவ்வால் அண்ணே ! இங்கே உங்க பிளாக் பத்தி கமெண்ட்ஸ் ஓடுது !

https://plus.google.com/u/0/108785930679834031188/posts/RKUmm14nD14

முடிஞ்சா பதில் சொல்லுங்க எனக்கு உதவியா இருக்கும் :)

வவ்வால் said...

ரா.சி,

பிளஸ்ஸில் இணைப்பு போட்டதும் பார்த்திருந்தேன்,அதுக்குள்ள இவ்வளவு வாதம் ஓடிருச்சா?

என்னால இப்போ பிளஸ்ஸில் லாக்கின் செய்ய முடியாது,இன்னும் பிளஸ் ஆக்டிவேட் செய்யாமல் இருக்கும் ஆள் நான் :-))

இங்கேயே பதில் சொல்லுகிறேன்.

பதிவில் தெளிவா சொல்லி இருக்கிறேன் அதையே சுருக்க இங்கே சொல்கிறேன்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை ஒரு சேனலுக்கு விற்கும் போது டிடிஎச் ஒளிபரப்பினை சொல்லி ஒரு சப் கிளாஸ் போட்டு ஒப்பந்தம் போட வேண்டும் இல்லை எனில் டிடிஎச் உரிமம் உட்பட அனைத்தும் சேனலுக்கே.

காரணம் டிடிஎச் , டீவ் சேனல் எல்லாம் ஒரே சேட்டிலைட்ஸ் சேனல் என்ற பதத்தில் அடகக்ம்.

டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமான்ட் என்பது ஒரு சேட்டிலைட் சேனலே, வழக்கமாக ஒரு சேனல் ஆரம்பிக்க எப்படி உரிமம் வாங்குகிறார்களே அப்படி வீடியோ ஆன் டிமாண்ட் சேனல் உரிமம் பெறப்படுகிரது, எனவே அதுவும் ஒரு சேனல் ஆகிவிடுகிறது.

இது ஒரே நேரத்தில் ஜெயாவுக்கும்,விஜய் டீவிக்கும் விற்பது போலத்தான், எனவே கண்டிப்பாக முன்னரே டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்டில் ஒளிப்பரப்புவதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

எனவே சப் கிளாஸ் போட்டு குறிப்பிடாமல் சேட்டிலைட்ஸ் உரிமம் விற்றால் ,சேனலுக்கு அனைத்து ஒளிப்பரப்பு உரிமையும் போய்விடும்.

இதனை கண்டிப்பாக ,முன்னதே சேனலிடம் சொல்லி இருக்க வேண்டும், சொல்லாதது லோகநாயகரின் தவறு.அதை கேட்டதால் பின்னர் மாற்றி விற்றார் லோகநாயகர், இப்பொழு ஆளும் தரப்புக்கு என்ன எரிச்சல் என்றால் ,ஆடியோ வெளியீட்டை லைவ் ஆக ஒளிபரப்ப செலவு செய்திருக்கிறோம், கூடவே நம்மோடு நெருக்கம் போல பட வெளியீடு வரைக்காட்டிக்கொண்டு, பிரச்சினை வரமால் பார்த்துக்கொண்டார் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள், எனவே நம்மோடு நெருக்கமாக இருப்பதாக வெளியுலகிற்கு காட்டி பிரச்சினை வராமல் பார்த்துக்கொண்டதை உடைக்கவே , இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்திற்கு ஆதரவு காட்டிவிட்டார்கள்.

அவரோட தேவைக்கு பயன்ப்படுத்திக்கிட்டு கடைசியில் தூக்கி எறிந்துவிட்டதாக நினைத்ததால் உண்டான கடுப்பு இது.

அடுத்து நம்ம பக்கமும் வியாபாரம் சன் டிடிஎச் பக்கமும் வியாபாரமா என்ற கடுப்பு. இரண்டு தரப்பும் எதிர் எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ரெண்டுப்பக்கமும் டீல் வைத்துக்கொண்டால் எப்பூடி?

புரொபெஷனல் அப்ரோச் இல்லாமல் சந்தர்ப்பவாதமாக செயல்ப்பட்டுள்ளார் லோகநாயகர்.

மேலும் டிடிஎச்இல் ரிலீஸுக்கு முன்னர் வெளியீடு என சொல்லி ,டிடிஎச் ஆப்பரேட்டர்கள் மூலம் இலவச விளம்பரம் பெற்றுள்ளார், ஆனால் சொன்னது போல செய்யவில்லை, இப்போது குறைந்த பட்சம் படம் வெளியான ஒருவாரத்துல டிடிஎச் இல் போட வேண்டும், அதுவும் குறைந்த கட்டணம் எனும் போது டிடிஎச்க்கு தான் இழப்பு.

விளம்பரம் செய்த ஏர் டைம் கட்டணம் என பில் போட்டுக்கேட்டாலே , டிடிஎச் மூலம் வரும் வருவாய் விட அதிகமாகிடும், முன்னர் ஏன் ஒத்துக்கொண்டார்கள் என்றால் 1000 ரூ கட்டணம்,நிறைய பேர் முதலில் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்று, இப்போ ஒரு வாரம் அப்புறம் என்றால் அவ்வளவு வசூல் ஆகாது. இதுக்கா போய் இவ்வளவு விளம்பரம் செய்தோம், என டிடிஎச் காரர்கள் நொந்து போயுள்ளார்கள், எல்லாரும் விளம்பரம் செய்ததுக்கு காசு குடுன்னு கேட்டால் லோகத்துக்கு பெரிய ஆப்பு தான்.

பார்ப்போம் எந்த டிடிஎச் ஆவது நஷ்ட ஈடுக்கேட்குதானு :-))

# இந்தியில் புதுப்படங்கள் எல்லாம் ஒரு வாரத்தில் 50 முதல் 150 ரூக்குள் டிடிஎச் இல் வீடியோ ஆன் டிமாண்டில் ஒளிப்பரப்புகிறார்கள், அதுவும் 24 மணி நேரத்துக்கு பார்த்துக்கொள்ளலாம், சில படங்களை ஒரு மாசம் வரைக்கும் பார்க்கலாம்,எனவே தமிழில் 1000 அல்லது 500 ரூ என்பதே பகல் கொள்ளை.



நுகர்வோர் பாயிண்ட் ஆஃப் வியுவில் பார்த்தால், 1000 ரூ கட்டிய யாருக்கும் பணம் திருப்பி தரப்படவேயில்லை, படம் பார்க்க விருப்பமில்லாதவர்களின் பணம் டிடிஎச் சப்கிரைஷனில் சேர்த்துக்கொள்ளப்படுமாம், அதாவது டிடிஎச் பார்க்க மாதம் டாப் அப் செய்யும் கட்டணம் ஆக கணக்கு வைத்துவிடுவார்கள்.

இப்போ ஒரு பொருளை விற்பதாக சொல்லிவிட்டு ,அது இல்லை இதை வச்சுக்குங்க என சொல்வது ,நுகர்வோரை ஏமாற்றுவதாகும், யாரேனும் வழக்குப்போட்டால் கதை மோசமாகிடும், ஏதோ நம்ம ஊரில் நஷ்ட ஈடு கம்மியா கொடுக்க சொல்வாங்க, வெளிநாட்டில் என்றால் ,சொத்தை எழுதி வாங்கிட்டு அனுப்பிடுவாங்க :-))

மொத்தமா சொன்னால் லோகநாயகர் மனம் போனப்படி பேசி,செய்து ,எல்லாத்தையும் குழப்பிவிட்டா,ர் இது போல எல்லாம் இந்தியாவில் மட்டும் தான் ஒருவர் பிசினெஸ் செய்ய முடியும் :-))

un ethical business practice எனலாம்.

வவ்வால் said...

ரா.சி,

இது உங்களுக்கு உதவும்னு நினைக்கிறேன் , வழக்கமா டிவிடி வாங்கும் கடையில் பேசிய போது சொன்னார், லோகநாயகர் டிவிடி சேல்ஸ் கூட ரொம்ப கம்மியாத்தான் போகுமாம், மன்மதன் அம்பு படத்துக்கு 50 டிவிடி வாங்கியதில் வெறும் நாலு டிவிடி தான் அவருக்கு வித்துச்சாம், திருட்டு டிவிடி விக்குறவருக்கே நஷ்டம் உண்டாக்கிய்வர் :-))

அவர் தான் சொன்னார், கமல் படத்துக்கு எல்லாம் 100 கோடி பட்ஜெட் போட்டால் எப்படி கட்டுப்படியாகும்,இது போல பிரச்சினை பண்ணினா தான் ஓட வைக்க முடியும்னு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா வெறும் 1.5 கோடி தான் பட்ஜெட்டாம்(சந்தானம் சம்பளம் சேர்க்காமல் என நினைக்கிறேன்), ஆனால் 30 கோடி வசூல், டிவிடி சேல்ஸிலயும் அதான் டாப்பாம் , குறைந்த முதலீட்டில் எல்லாருக்கும் லாபம். அத மாரி படம் தான் வேணும்னு சொல்லுறார் :-))

ராஜ நடராஜன் said...

பேரு மட்டும் பெத்த பேரு!கோல்டன் டச்:)

என்னோட போன் லைன் வேலை செய்யலை.இல்லைன்னா வவ்வால் தலையை அப்படியே அம்மிக்கல்லில் வச்சு நச்சு நச்சுன்னு தட்டி மசலா சேர்த்து சூப் வச்சு குடிச்சிடுவேன்.

ராஜ நடராஜன் said...

மிஸ்டர் புள்ளி விவகாரம்:)இப்பத்தான் உண்மைத்தமிழன் கடைக்கு விஸ்வரூப பின்னூட்டம் பார்க்கப் போனேன்.நீங்க எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இருக்கிறபோது நாம ரா மாதிரி ஆக்ட் கொடுக்கறதுல என்ன தப்பு:)

நீங்க தலைகீழாத்தான் தொங்குவேன்னு அடம் பிடிக்கிற மாதிரி நான் மாத்தி யோசி மணியாக்கும்ன்னு ஒருத்தர் சுத்திகிட்டிருக்கிறார்.

ஏழு என்கிற ஏழரையை வெட்டிட்டா மட்டும்ன்னு ஒரு பதிவு போட்டதுக்கும் உளவுத் தகவல் சொல்லியிருக்கேன்.போய்ப் பாருங்க.புடிச்சா கட்டிப் புரளலாம்.புடிக்காட்டியும் கட்டிப்புடிதான்:)

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு ஒரு அக்னி ஏவுகணை உருவாகிட்டிருக்குது.கனெக்சன் கிடைச்சதும் ஏவிடறேன்:)

வவ்வால் said...

ராச நட,

வரும்,நன்றி!

ஏக இறைவனின் ஆசிப்பெற்ற புனித பூமியில் போன் வயர் புடுங்கிச்சுன்னா இணையம் வேலை செய்யாதா? என்ன கொடுமை சார் இது :-))

நெட் புளிக்குது எல்லாம் வச்சிருப்பவருக்கே இணையம் போன் வயர் மூலமா தான் வருமா? காத்துல இணையம் வருவது போல எல்லாம் மாறி ரொம்ப காலமாச்சு, இதுல நெட் புளிக்குது பார்க்காம என்ன மானிட ஜென்மம்னு என்னைப்பார்த்து கேட்க வேண்டியது ;-))

பேருலாம் சைவ சித்தாந்த மடாதிபதி போல வச்சுக்க வேண்டியது ஆனால் காளமுக சைவர்கள் போல நரமாமிசம் கேட்க வேண்டியது, ஏற்கனவே ஒரு ஆழ்வார்க்கடியான் வெஜிடேரியன் சொல்லிக்கிட்டு ரத்தம் குடிக்க அலைவது போதாதுன்னு இவர் வேற நரமாமிச சூப்பு குடிக்க அலையறார், ஒரு வேலை அகோரி பரம்பரையா இருக்குமோ?

# யாராவது மாத்தாம கூட யோசிக்கட்டும், அதுக்கென்ன இப்போ? ஊரை கொள்ளை அடிக்க ஒருத்தர் அழுவாச்சி நாடகம் போட்டால் அதை சொல்வது தப்பா?

என்ன வகையான அடக்குமுறை இது? நான் எழுதினது புடிச்சா படிக்கவும், அதுக்கு பதில் சொல்ல திராணியிருந்தால் சொல்லவும் :-))

# அக்னி ஏவுகணையாம்ல நாங்க எல்லாம் எரிமலை குழம்புல இட்லி தொட்டு சாப்பிடுவோம் :-))

தீயை தீயால் அணைப்பது எப்படி?

இவன் யார் என்று தெரிகிறதா

தீ என்று புரிகிறதா...

ஹி...ஹி... புரிஞ்சா சரித்தேன்!

ராஜ நடராஜன் said...

தோ!வீட்டு வயரு புடிங்கிடுச்சுன்னு சொன்னா இவரு இணையத்து வழியில்லையான்னு கேட்கிறார்.என்ன கொடுமை நடராசா:)

நான் சொன்னது பறக்கிற வவ்வாலை.தலை கீழா தொங்குற வவ்வாலை இல்ல.சார்க் பின் சூப் குடிச்சிருக்கேளா:)

கோல்டன் டச்சுக்கு அபிடைஸரே அதுதான்.வலி படம் எடுத்தவனுக்குத்தான் தெரியும்.தொங்கிகிட்டே ஒரு வீடியோ பார்சல்ல்ல்ல் சொல்ற உங்களுக்கு எப்படி தெரியும்? இருக்கிற கோர்ட் கேசுகளையெல்லாம் விட்டுட்டு அப்பாவி கமல்தான் ஊர்க்காசுக்கு ஆசைப்படறாரு இல்ல?வவ்வால் வாயில சரவெடி பட்டாசு வெடிக்க:)

எரிமலைக் குழம்புல இட்லி சாப்பிடற கோளாறுதானா இந்த விஷ்வரூப வியாதி!இப்பத்தானே புரியுது:)

கருத்துரிமைக்கு எதிரா பந்துகளோடு பந்து விளையாண்டு சேம் சைட் கோல் போட்டா அகோரி என்ன பிகாரி நிலைமைதான் தமிழகத்துக்கு.

கமல்!உங்களுக்கு எசப்பாட்டு பாடும் கடூர வித்வான்களுக்கும் உங்க பாட்டுத்தான் சரணம்:)

Anonymous said...

Vovs for your kind information: "Pentagon funding Hollywood movies" search Google.


:-)))

வவ்வால் said...

ராச நட,

ஒயர் அந்துப்போச்சுன்னு சொன்னது நீர் அதை கேட்டது குத்தமா?

பறக்கிற வவ்வாலும் என்னோட சொந்தங்க தான் அதை மட்டும் சூப்பு வச்சு குடிக்க விடுவோமா?

# நாயகன் படம் எடுத்தவரும் தயாரிப்பாளர் தானே அவருக்கும் வலி அப்போ இருந்திருக்கும் தானே, காரை ஒடைக்க விடலை கஞ்சன்னு 25 வருஷம்ம் கழிச்சி சொல்லும் போது யோசிக்க வேன்டாமா?

ஆளவந்தான் எடுத்த தாணுவுக்கும் வலியிருந்திருக்குமே, இப்படி எத்தனை தயாரிப்பாளர்களை வலிக்க விட்டு இருப்பார்?

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சூசு :-))

# பதிவில் நான் தர்க்க ரீதியாக எழுப்பியவற்றுக்கு பதில் இருந்தால் சொல்லவும்,சும்மா பொறணி பேசிட்டு இருக்கப்படாது.

# வேற பாட்டு பாடினா,உம்மை போன்ற விலடிச்சான் குஞ்சுகள் உடனே நீ அவரோட ரசிகர்னு டிவிஸ்ட் செய்யுமே :-))
-------------
அனானி யாரு மாக்கானா?

நீங்க சொன்னதை முன்னரே கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் எல்லாம் ஒரு யூகம்மாத்தான் சொல்றாங்க. காட் ஃபாதர் படத்துக்கே மாபியாக்கள் ஃபைனான்ஸ் செய்ததாக சொன்னார்கள்.
------------------

Anonymous said...

Below link for reference only, Research on your own way whatever its.....

http://www.vinavu.com/2012/05/29/hollywood-us-army-nexus/

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே நன்றி!முடிஞ்சளவு சமாளிக்கப் பார்க்கிறேண்:)

சதுக்க பூதம் said...

அருமையான பதிவு. உலக நாயகனை பற்றி புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
//ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?
//
அதில் கூட ஒரு அரசியல். உண்மையில் அந்த காலத்தில் (சைவ)ஐயர்கள் மற்றும் (வைணவ) ஐயங்கார்கள் மத்தியில் நடந்த அதிகார போரின் வெளிப்பாடே அந்த படத்தில் வருவது போன்ற நிகழ்வுகள். ஆனால் அந்த படத்தில் வைணவ ஐயங்காரை (பூணூல் போட்டிருப்பார்) அடித்து துன்புறுத்துவது போல் வருவது எல்லாம் மிகவும் கருப்பாக இருக்கும் ஒரு பிரிவு மக்களும் (வீர சைவர்கள்?) ,அரசனும் தான். வைதீக ஐயர்களின் பங்கை தெளிவாக இருட்டடித்திருப்பார்!

அது மட்டுமன்றி சுனாமிக்கு காரணம் நாராயணண் சிலையை கடலில் போட்டு அவமதித்தது தான் என்று ஸ்டிரிங் தியரி மூலம் அறிவியல் பூர்வமான பதில் வேறு!

//இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே //

கமல் மட்டுமல்ல. பல எழுத்தாளர்களும் அது போல் உள்ளார்கள்
//ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்? //

எப்படியும் சாதாரணமாக வெளியிட்டால் படம் பெரிதாக ஓடாது என்று தெரியும் அவருக்கு. மார்க்கபந்துக்கள் எதாவது பிரச்ச்னை கிளப்பினால் பரபரப்பில் இன்னும் ஓடும் என்று நினைத்திருப்பார். ஆட்சி மேலிடத்தின் சப்போர்ட் தனக்கு முழுமையாக உள்ளது என்று தப்பு கணக்கு போட்டிருப்பார்.அதனால் இந்த அளவு பிரச்ச்னை விஸ்வரூபம் எடுத்திருக்காது என்று தப்பு கணக்கு போட்டிருப்பார்.

சதுக்க பூதம் said...

//அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.
//
நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர் சொல்லியிருப்பது அவர் சுயநலத்தை காட்டுவதோடு நின்று விடவில்லை. அது மிகவும் ஆபத்தான மற்றும் பொருப்பற்ற பேச்சாகும். பொதுவாக மத அடிப்படைவாதிகள் ஒரு நாட்டின் கட்டுபாட்டை எடுத்தபின் முதலில் செய்வது அந்த நாட்டில் உள்ள லிபரல் எண்ணம் கொண்ட அறிஞர், கலைஞர் ,மக்களை முதலில் நாட்டை விட்டு வெளியே துரத்தி விடுவர். அதாவது லிபரல் எண்ணம் கொண்ட மக்கள் ஒரு நாட்டை விட்டு வன்முறை மூலம் வெளியேறினால் அந்த நாடு மத அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ளது என்று அர்த்தம். கமலுக்கு ஊடகங்கள் மூலம் லிபரல் கலைஞர் என்ற பெயர் ஏற்கனவே ஏற்படுத்தியாயிற்று. அவர் கூறியிருப்பதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் தமிழகம் மத அடிபப்டைவாதிகளின் கையில் சென்று விட்டது என்று எண்ணம் ஏற்படுத்தும் (ஏற்கனவே யாரோ ஒரு பொர்ன் படம் எடுத்ததற்கு நம்ம மார்க்க பந்துக்கள் அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கியது குறிப்பிட தக்கது)

இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் இமாஜை உலகளவில் பாகிஸ்தான் கணக்காக சந்தேக கண்களில் பார்க்க வைக்க ஆரம்பிக்க கூடும்.அது தமிழகத்தின் வளர்ச்சி, தமிழகர்கள் உலக பயணம் போன்றவற்றில் பல பிரச்ச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் பரவாயில்லை. அந்த நிலை தமிழகத்தில் இன்று இல்லை. தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழகத்துக்கு நல்ல கைமாறு செய்துவிட்டார் உலக நாயகர்

Anbazhagan Ramalingam said...

வவ்வால் கலக்குது உஙக ப்ளாக்.

வவ்வால் said...

அனானி,

வினவு மேம்போக்காக எழுதி இருக்கு, ஹாலிவுட் படங்களில் ராணுவ சம்பந்தமான காட்சிகள் இருப்பதை பட்டியல் போட்டு , குத்து மதிப்பாக ,ராணுவம் உதவுது,கட்டுப்படுத்துனு சொல்லி இருக்காங்க, ஆமாம்ம் ராணுவத்தினை படத்தில் பயன்ப்படுத்தினால் அவர்கள் செய்யும் உதவிக்கு, சில நிபந்தனைகள் விதிக்க தான் செய்வாங்க, இந்தியாவிலும் உண்டு. ராணுவ தளத்தில் நேரடியாக படம்ம் எடுக்கணும்னா ,கதையை கொடுத்து ஒப்புதல் வாங்கணும்.

மேஜர் ரவி என்பவர் ,மோகன்லால் நடிப்பில் காந்தகார், அரண் போன்ற படங்களை எல்லாம் அப்படித்தான் எடுத்தார்.

நான் சொல்ல வருவது அமெரிக்க அரசே மறைமுகமாக நிதி உதவி செய்து சிலப்படங்களை கொண்டுவருவதை, நிறைய செய்திருப்பதாக படித்துள்ளேன்.இரண்டாம்ம் உலப்போரின் போது வால்ட்டிஸ்னியை கார்ட்டுன் எல்லாம் போட வைத்துள்ளார்கள்.

கேப்டன் அமெரிக்கா என் காமிக்ஸ், படம் எல்லாம் நேரடியாக அமெரிக்க ராணுவத்தினை ஆதரிக்க உருவாக்கப்பட்டதே, ஹர்ட் லாக்கர் பற்றி வினவில் சொல்லியிருப்பதில் இருந்தே எந்த அளவுக்கு மேம்போக்கா அவங்க அந்த கட்டுரை எழுதியிருக்காங்க என்பதற்கு சான்று. ஹர்ட் லாக்கர் அமெரிக்க ராணுவ ஆதரவு படம்ம் என்று தான் குற்றச்சாட்டே, இப்போ சீரோ டார்க் தர்ட்டி மீதும் அதே குற்றச்சாட்டு உண்டு. எனவே தான் ஒபாமா தேர்தலுக்கு முன்னர் வெளியிட சிலர் கண்டனம் தெரிவித்து, தேர்தலுக்கு பின் வெளியானது.

மேம்போக்காக பார்த்தால் விமர்சிப்பது போல தெரிந்தாலும், வீரர்களின் கடின உழைப்பை பாராட்டுவதே படத்தின் நோக்கம் என்கிறார்கள்.
----------------

ரா.சி,

நன்றி!

ரொம்ப கேள்விக்கேட்டால் இங்கெ அனுப்பிவிடுங்க, கைமா பண்ணிடலாம் :-))

உண்மையில் லோகநாயகர் பயங்கரமாக டகால்டி செய்திருக்கார், அம்மையார், எடுத்தேன் கவிழ்த்தேன் அனுகுமுறையால் லோகத்துக்கு தியாகி பட்டம் கிடைச்சிடுச்சு,அதைத்தான் அவரும் எதிர்ப்பார்த்திருப்பார் :-))
-----------------

பூதம் ,
நன்றி!

கருப்பாக இருப்பவர்களை எல்லாம் கவனித்து இருக்கீங்க,நான் அவர்கள் சோழப்படையினர் என நினைத்தேன்.

அக்காட்சியெல்லாம் வஈணவ நுண்னரசிலே. டாவின்சி கோட் என்ற டான் பிரவுன் நாவலை சுட்டு உருவாக்கியது, அதில் கிருத்துவ பிண்ணனி என்பதால் தசாவதாரத்தில் வலிந்து வைணவத்தை புகுத்தி இருப்பார்,

சுனாமி ஜஸ்டிபிகேஷன்ன் எல்லாம் செம காமெடியா இருக்கும்.

//கமல் மட்டுமல்ல. பல எழுத்தாளர்களும் அது போல் உள்ளார்கள்//

உண்மை தான்.

//எப்படியும் சாதாரணமாக வெளியிட்டால் படம் பெரிதாக ஓடாது என்று தெரியும் அவருக்கு. மார்க்கபந்துக்கள் எதாவது பிரச்ச்னை கிளப்பினால் பரபரப்பில் இன்னும் ஓடும் என்று நினைத்திருப்பார். ஆட்சி மேலிடத்தின் சப்போர்ட் தனக்கு முழுமையாக உள்ளது என்று தப்பு கணக்கு போட்டிருப்பார்.அதனால் இந்த அளவு பிரச்ச்னை விஸ்வரூபம் எடுத்திருக்காது என்று தப்பு கணக்கு போட்டிருப்பார்.//

அஃதே,அஃதே,

இதைத்தான் பதிவிலும்,பின்னூட்டங்களிலும் சொல்லிவருகிறேன்.

#//அது மிகவும் ஆபத்தான மற்றும் பொருப்பற்ற பேச்சாகும். //

//இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் இமாஜை உலகளவில் பாகிஸ்தான் கணக்காக சந்தேக கண்களில் பார்க்க வைக்க ஆரம்பிக்க கூடும்.அது தமிழகத்தின் வளர்ச்சி, தமிழகர்கள் உலக பயணம் போன்றவற்றில் பல பிரச்ச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.//

இதைத்தான் நானும் நினைத்து இப்பதிவையே எழுதினேன், தவறான குற்றச்சாட்டினை தமிழகத்தின் மீது வைத்துள்ளார் என்பதே நான் சொல்ல வந்த கருத்து,சரியாக புரிந்துக்கொண்டீர்கள், ஆனால் ரசிக கண்மணிகளோ, சினிமா மயக்கத்தில் அவர் எப்படிப்பட்ட குற்றச்சாட்டினை சொல்லி இருக்கிறார் எனக்கூட புரியாமல் "ஐ சப்போர்ட் கமல்" என அலைகிறார்கள், ஒரு திரைப்படத்துக்காக தமிழ்நாட்டையே இழிவுப்படுத்தியுள்ளார் என்பது கூட பலருக்கு புரியவில்லை.

இவர் படம் எடுத்துவிட்டால் அதை அனைவரும் பார்க்க வேண்டும் ,இல்லை எனில் தமிழனுக்கு ரசனை இல்லை என்பவர் தானே :-))
---------

அன்பழகன் ராமலிங்கம்,

வாங்க,நன்றி!

ஏதோ நம்மால் முடிஞ்சது செய்கிறோம்.
---------------------

Anonymous said...

கருத்து சுதந்திரம் இல்லாத இவ்விடுகையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். படம் பார்த்தவன் என்ற முறையில் கமலதாசன்களுக்கு மறுமொழி சொல்லலாம் என்றால் கருத்து சுதந்திரம் இல்லாததால் சொல்லவில்லை எனவே என் பெயரிலும் புகுபதிகை செய்யாமல் பெயரற்றவனாக இக்கருத்தை பதிவு செய்கிறேன். - *****

வவ்வால் said...

அனானி,

காமெடியா,சீரியசானே பிரியலையே?

அனானி, மட்டுறுத்தல் என எதுவுமேயில்லாத இங்கே இதுக்கு மேல என்ன கருத்து சுதந்திரம் வேண்டுமோ? ஒரு வேளை என் பிலாக் பாஸ்வேர்டே கொடுத்தா தான் திருப்தி அடைவாரோ?

இந்த அனானியை புடிச்சு சுனாமில போட :-))

Anonymous said...

போன இடுகையில் (மட்டும்) கருத்து சுதந்திரம் இருந்தது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். - *****

Anonymous said...

பொதுவாக நம்ம ரஜினி ரசிகர்கள் ஆறரை மணிக்குதான் டாஸ்மாக் போவார்கள். இந்த கலெக்‌ஷன் ரெக்கார்டை பார்த்தவர்கள் இப்போதே கிளம்பிவிடுவார்கள் :-)

1st wknd Chennai BO Collections

Endhiran - Rs.2,02,38,075 (894 shows)

Vishwaroopam - Rs.3,06,40,101 (891 Shows)

-YUVAKRISHNA

என்னுடைய பின்னூட்டம் - இந்த வெற்றியை கமல் எதிர்ப்பு பதிவர்களான (ரஜினியின் அல்லக்கைகள்) வருண், வவ்வால், கிரி ஆகியோருக்கு அர்ப்பணம் செய்யலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா யப்பா என்னாதிது அவ்வவ்....