Friday, December 16, 2011

விவசாயி படும் பாடு!-1


      விவசாயி படும் பாடு!-1








உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.

எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.

தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!



COST OF CULTIVATION (ACRE) in Rs.

 Land Preparation ->1500 ரூ

Seeds & sowing  ->  2000 ரூ


Manures & Manuring ->2500 ரூ

Weeding after cultivation & Irrigation ->1620 ரூ

Plant protection -> 803 ரூ

Harvest and other Expenses (Rs.) -> 2300 ரூ

                                          ______________
       செலவு=                         Total 10723

வருமானம்:

Yield (Kg)  -> 2100

 Gross Income (Rs.):  ->15123-10723=4400 ரூ.


Net income (Rs.) : ->    4400


சுட்டி:

கோவை வேளாண்ப்பல்கலை

கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் 4,400 மட்டுமே என்பதைப்பார்க்கவும்.

 கால அளவின் படி நெல் வகைகள்:

#குறுகிய காலப்பயிர்: 110-125 நாட்கள்

#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்: 120-170 நாட்கள்.

#நீண்டக்காலப்பயிர் : 170 நாட்கள்.

ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய் சுமார் 4,400 ரூபாய் மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.

அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் =4,400/4= 1100 ரூபாய்.

இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!

அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,

1100/4= 275 ரூபாய் மட்டுமே!

ஒரு தனி நபர் மாதம் 275 ரூ வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?

இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன் என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.


மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:






சுட்டி:



நெல்சாகுபடிவருவாய்

  
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.

திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான 275 ரூபாயை ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!

ஒரு மனிதன் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய் போதும் என சொன்ன திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.

பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு மாதம் 275 ரூபாய் தான் வருமானம் வருகிறது.

திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் = 32 ரூX30 =960 rs  வரவேண்டும்.

ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.

இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன்  பசியைப்போக்குகிறது.

இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?


எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,
2010 ஆம் ஆண்டில் 132 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை 128 மி.மெ.டன் தான். அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே   நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.

இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.






ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.

கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150 ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.


எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா  சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!


இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா  அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.

எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது  குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!

ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா?  இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!




சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.

மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.

ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன் எல்லாம் 50-70 லட்சம் சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.ஒரு கோடிக்கு கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் 70 லட்சம்என பீதிக்கிளப்புகிறார்கள்.

ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில்  எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.

நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?

இப்படி பல வகையிலும் விவசாயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.

மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.

இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.

சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:


4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil
Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement
System, during the Khariff Marketing Season 2011-2012, i.e. from 01.10.2011 to
30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-

for Common variety of paddy by opening adequate number of procurement
centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in
consultation with the District Collectors on need basis.


சுட்டி:

tngov.msp for paddy

எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன் 50% விலை அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.

தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:

யூரியா ஒரு மூட்டை= 310 ரூ

டிஏபி ஒரு மூ= 900 ரூ

பொட்டாஷ் ஒரு மூ =620

சூப்பர் காம்ப்ளக்ஸ் ஒரு மூ= 870 ரூ.

மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.

#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,

//The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//


சுட்டி:

the hindu


நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.

விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ

பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)

விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,

சுட்டி:

அரசு சம்பளநிர்ணயம்


பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு 1000 ரூ, விதை நெல் ஒரு 1000 ரூபாய் வரும்.

இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.

இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

தொடரும்...


.
50-70

Thursday, December 08, 2011

பெட்ரோல் விலை ரகசியம்!



பெட்ரோல் விலை ரகசியம்!


நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது.

உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூரில் இருந்து இறக்குமதி ஆகிறதா இல்லையா என தெளிவாக இன்னும் தெரியவில்லை) என அக்கட்டுரையில் கேட்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கான தங்கத்தின் விலை நிர்ணயம் துபாய் கம்மோடிடி சந்தையின் அடிப்படையிலேயே தீர்மானீக்கப்படுகிறது.MCX india துபாய் தலைமையகமாக கொண்டு தான் செயல்படுகிறது.

துபாயில் தங்க சுரங்கம் இல்லை, நாமும் அங்கிருந்து இறக்குமதி செய்யவில்லை, பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தான் பின் ஏன் துபாய் கம்மோடிடி பார்க்க வேண்டும்.காரணம் நியுட்ரலாக இருக்கும் துபாய் தங்க மார்க்கெட்.

மேலும் துபாய் கோல்ட் கம்மோடிடி பெரிய ஒன்று, , உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது, ஆசியாவில், இந்தியாவிற்கு அருகில் இருக்கு. அமெரிக்க கோல்ட் கம்மோடிட்டி என்பது ஆசிய நிலவரத்தை சரியாக காட்டாது, மேலும் இரண்டுக்கும் கொஞ்சம் விலையில் வித்தியாசம் இருக்கும்.

துபாய்ல தங்க உற்பத்தி இல்லை ஆனால் பெரிய தங்க வியாபார மையம், எனவே நமக்கு துபாய் கோல்ட் கம்மோடிடி மார்க்கெட் சரியாக பொருந்தும்.

அதே போல தான் பெட்ரோல் விலைக்கு சிங்கப்பூரை வைத்துக்கொண்டுள்ளோம். மேலும் உலக அளவில் சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் நல்லப்பெயர் கொண்டது..கச்சா உற்பத்தி இல்லை ஆனால் சுத்திக்கரிப்பு இருக்கு, ஆசியாவிலேயே பெரிய எண்ணை சுத்திகரிப்பு நாடு சிங்கப்பூர்(இது ஒப்பீட்டளவு என நினைக்கிறேன்), எனவே நியுட்ரல் ஆனது.

உ.ம் துபாயில் குருட் விலை சர்வதேச அளவுக்கு ஒரே போல இருக்காது, காரணம் துபாய் பெட்ரோலிய நாடுகளிடையே இருக்கு. அங்கு விலை எப்போதும் மற்ற நாடுகளை விட கம்மியாகவே டிரேட் ஆகும் , இந்த வித்தியாசம் கணக்கிட்டால் பைசா கணக்கில் வாரும் என்றே வைத்துக்கொள்வோம், ஆனால் பல மில்லியன் பேரல்கள் என வர்த்தகம் செய்யும் போது பெரிய தொகை ஆகிவிடும்.

நமக்கு விற்பவனும், வாங்கும் நாமும் நம்பி ஒத்துக்கொள்ளும் ஒரு சந்தையை வைத்தே விலைப்பேசி முன் ஒப்பந்தம் போட முடியும். நாளைக்கே ஒரு பெரிய எண்ணை நிறுவனம் வேறு ஒரு மார்க்கெட் விலை வைத்து ஒப்பந்தம் போட வேண்டும் என சொன்னால் அதற்கும் தயாராகவே இருப்போம்.

சந்தையில் பேசும் விலைக்கு குருட்/பெட்ரோல் ஐ ஒரு நிறுவனம் வாங்க முடியாது, காரணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலைக்கும் ஏற்றுமதி செய்யும் இடத்துக்கும் இடையே இருக்கும் தூரம் , மற்றும் ஆகும் போக்குவரத்து செலவு என்று ஒன்று இருக்கு. எனவே ஏதோ ஒரு இடத்தினைக்குறிப்பிட்டு இங்கு வைத்து எனக்கு என்ன விலைக்கு விற்பீர்கள் என பேச வேன்டும்.

இதனை டெர்மினல் கேட் பிரைஸ் என்பார்கள் அதாவது இந்த துறைமுகத்தில் வைத்து எனக்கு குருட் கைமாற்றி விட வேண்டும் அப்போது என்ன விலைக்கு தருவீங்க என்று விலை பேசணும்.

உ.ம் சிங்கப்பூர் கம்மோடிட்டியில் ஒரு பேரல் 100 சிங்கை டாலர் என வியாபாரம் படிகிறது என்றால் , சிங்கப்பூர் துறைமுகத்தில் டெலிவரி எடுக்கவேண்டும் நாம், அப்போது துறைமுகத்துக்கு கொண்டு வர ஆகும் போக்கு வரத்து செலவு அதில் அடங்காது , போக்குவரத்து செலவு +வரி எல்லாம் சேர்த்து துறைமுகத்தில் நமக்கு கொடுக்கும் விலையே டெர்மினல் கேட் பிரைஸ்.

வரி விஷயத்தில் சிங்கப்பூரில் இன்னொரு அனுகூலம் இருக்கு,அங்கே துறைமுக வரி கிடையாது, அது ஒரு ஃபிரி டிரேட் துறைமுகம்.எனவே தான் சிங்கப்பூர் துறைமுகம் உலக அளவில் பெரிய டிரான்சிட் துறைமுகமாக இருக்கு.(முதல் இடம் ரோட்டர் டேம் ஹாலண்ட் என நினைக்கிறேன்).

இந்தியாவுக்கு வரும் சரக்குகள் பெரும்பாலும் சிங்கை துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டு விடும், பின்னர் வேறு ஒரு கப்பலில் ஏற்றி இந்தியாவுக்கு வரும். இன்னொரு டிராண்சிட் துறைமுகம் இலங்கையின் கொழும்பு துறைமுகம்.

ஏன் இப்படி இறக்கி, பின் ஏற்றி என அலைச்சல் என்றால் அதன் பின்னால் நம்ம துறைமுகங்களின் செயல்படா தன்மை இருக்கு, அதை சொல்ல தனிப்பதிவே தேவைப்படும்.


துறைமுகத்துக்கும், கம்மோடிடி மார்க்கெட்டுக்கும், தூரம் அதிகம் இருந்தால் டெர்மினல் கேட் பிரைஸ் அதிகம் ஆகும்.நேரடியாக எண்ணை நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் போதும் இப்படி டெர்மினல் கேட் பிரைஸ் பார்ப்பார்கள்.அதிலும் டெலிவரி என்று கொடுக்கிறார்களோ அன்று என்ன விலை என தீர்மானிப்பார்கள், முன்பு பேசிய தொகை ஒரு ஒப்பந்ததிற்காக மட்டுமே, துறைமுகத்தில் கப்பலில் ஏற்றும் அன்று தான் இறுதி விலை நிச்சயம் ஆகும்.இதனை ஸ்பாட் பிரைசிங் என்பார்கள்.

எனவே சர்வேதேச சந்தையில் டெர்மினல் கேட் பிரைசில், ஸ்பாட் பிரைசிங்கில் தான் கச்சா விற்பனை ஆகும். சிங்கப்பூர் நமக்கு மிக அண்மையில் உள்ளது சிறிய நாடு என்பதால் டெர்மினல் பிரைஸ், கம்மோட்டி விலை என பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே நமக்கு ஏற்ற கம்மோடிட்டி மார்க்கெட் சிங்கப்பூர் ஆகும்.எனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட சிங்கப்பூர் கச்சா/ பெட்ரோல் விலையை பென்ச் மார்க் விலையாக எடுத்துக்கொள்கின்றன.

மேலும் சிங்கப்பூர் ஆசியாவிலேயெ பெரிய கச்சா சுத்திகரிப்பு நாடு, ஆஸ்திரேலியாவின் எண்ணை தேவையில் 30 சத வீதம் சிங்கப்பூர் மூலம் தான் பூர்த்தி ஆகிறது.
இபோது ஏன் சிங்கப்பூர் பெட்ரோல் விலைக்கு பெஞ்ச் மார்க் ஆக இருக்கு என்பது புரிந்திருக்கும்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு துறைமுகத்துக்கு என ஒரு டெர்மினல் கேட் பிரைஸ் வைத்திருப்பார்கள்.

அந்த கட்டுரை ஏன் சரியானதாக இருக்கவில்லை என நினைத்தேன் என்றால் டிசம்பர் 2 இல் ஒரு பேரல் 112 டாலர் என்பதாக சார்ட் போட்டிருந்தார்கள், சிங்கை டாலர் எனில் SGD போட்டு டாலர் குறியிடு வரும்.ஆனால் அதில் அமெரிக்க டாலர் குறியீடே இருந்தது.சிங்கப்பூர் கம்மோட்டிடி மார்க்கெட்டில் சிங்கபூர் டாலரிலே வர்த்தகம் நடை பெரும்.

one SGD =0.77 USD, அப்படி எனில் அதில் போட்டிருந்ததை வைத்து 112 சிங்கை டாலருக்கு ஒரு பேரல் பெட்ரோல் என்றால் ரொம்ப மலிவாக விலை வருமே. ஒரு பேரலில் 42 கேலன் அதாவது சுமார் 159 லிட்டர் எண்ணை இருக்கும். இல்லை அது அமெரிக்க டாலர் என்றால் அப்போதும் மலிவான விலை ஆகவே வரும்.

சிங்கபூரில் டிசம்பர் 4 இல் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் 1.4 சிங்கை டாலர் என போட்டு இருக்கான்,வரி இல்லாத விலை 1 டாலர் வருது,(வரி 0.41 சிங்கைடாலர்) அப்படி ஆனால் 159 லிட்டர் பெட்ரோல் ஐ 112 டாலருக்கு விற்பாங்களா? எனவே தான் அது கச்சா எண்ணையாக இருக்க வேண்டும் என சொல்லி இருந்தேன்.

அந்த அளவுக்கு மலிவா பெட்ரோல் விற்பனை ஆகி இருந்தால் இந்தியாவில் வரிகளுடன் சேர்த்து பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய் தாண்டாது.

இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருக்க உண்மைக்காரணம் என்ன எனப்பார்ப்போம்.

ஒரு லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் என்ன கிடைக்கும் எனப்பார்ப்போம்.

What Does One Barrel Of Crude Oil Make?

One barrel of crude oil contains 42 gallons
About 46% of each barrel of crude oil is refined into automobile gasoline
In the US and Canada an average of 3 gallons of crude oil are consumed per person each day
The US imports about 50% of its required crude oil and about 50% of that amount comes from OPEC countriesProduct Refined Gallons/Barrel


Gasoline 19.3

Distillate Fuel Oil (Inc. Home Heating and Diesel Fuel) 9.83
Kerosene Type Jet Fuel 4.24

Residual Fuel Oil 2.10
Petroleum Coke 2.10
Liquified Refinery Gases 1.89
Still Gas 1.81
Asphalt and Road Oil 1.13
Petrochemical Feed Supplies 0.97
Lubricants 0.46
Kerosene 0.21
Waxes 0.04
Aviation Fuel 0.04
Other Products 0.34

Processing Gain 2.47


42 கேலன் கச்சா சுத்திகரித்தால் 44.47 கேலன் உற்பத்தி பொருள் கிடைக்கும் கூடுதலாக 2.47 கேலன் கிடைக்கும்.





Source: EIA March 2004 Data

ஒரு அமெரிக்க கேலன் =3.79 லிட்டர், அப்படி எனில் 19.3 கேலன் என்பது ,

19.3*3.79=73.47 லிட்டர்,

159 லிட்டர் கச்சா எண்ணை சுத்திகரித்தால் 73.47 லிட்டர் பெட்ரோல் கிடைக்கிறது.இது கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும்.

இப்போ 100 டாலர் விலையில் இருக்கும் கச்சாவில் இருந்து 50 சதவீதம் பெட்ரொல் எடுத்தால் விலையை சராசரியாக 2 டாலர் என வைக்க வேண்டி இருக்கும், ஆனால் அப்படி இல்லையே ஏன்? காரணம் கச்சா சுத்திகரிப்பில் கிடைப்பவை அனைத்துமே விலை போக கூடிய பொருட்கள், டீசல் , மண்ணெணை, பாரபின் மெழுகு, மேலும் கடைசிப்பொருளான அஸ்பால்ட்(தார்) என எல்லாமே காசு தான். எனவே மொத்த வருவாய், செலவு எல்லாம் கணக்கிட்டே விலை நிர்ணயம் செய்வார்கள்.

மேலும் 42 கேலன் சுத்திகரிச்சா 44.47 கேலன் பொருட்கள் கிடைக்கும் கச்சாவில , கூடுதலாக 2.47 கேலன் உப பொருள் கிடைக்கும். அப்படி கிடைப்பதை சுத்திகரிப்பு லாபம் என்பார்கள்.

ஒரு பேரால், 42 கேலன் கச்சா வாங்க ஆகிய செலவு, சுத்திகரிப்பு செலவு எல்லாம் கணக்கிட்டு , சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களின் மதிப்புடன் ஒப்பிட்டு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு இவ்வளவுனு தீர்மானிப்பார்கள்.

இப்படி கணக்கிடப்படும்  பெட்ரோல் விலை சுத்திகரிப்பு விலை பெட்ரோல் விலை( refinary price)என்பார்கள்,

//Petrol price in Delhi today costs Rs 66.42 per litre as against Rs 44.88 a litre price in the US, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh told Rajya Sabha in a written reply to a question.//

மேல போட்டு இருப்பது சமீபத்தில பார்லிமெண்ட்ல பெட்ரோலிய இணை  அமைச்சர் சொன்ன விவரம், இதன் அடிப்படையில் விலை உயர்வுக்கு காரணம் பார்ப்போம்.

அமெரிக்காவில் ஒரு கேலன் ,3.7 லிட்டர் விலை 3.2 அமெரிக்க டாலர், அங்கு பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி தேசிய சராசரி 16% , அங்கே அலாஸ்காவில் மிக குறைவாகவும் மற்ற மாகாணங்களில் வேறு வேறு விகித வரி உள்ளது.

அமெரிக்க மாகாணங்களில் வரி விகிதம் ஒரு கேலனுக்கு செண்ட் கணக்கில் ,
(100 செண்ட் =1 டாலர்)






இப்போ அமெரிக்காவில் ஒரு லிட்டர் 44.88 ரூ என்றால் அதில் 16% வரி ,

44.88x16/100=7.18 ரூ, இது தான் அங்கே விதிக்கப்படும் வரி.

அமெரிக்காவில் நவம்பர் மாதத்திய பெட்ரோலிய விற்பனையில் சதவிகித அடிப்படையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் செலவு,வரி, லாபம் ஆகியவற்றின் பட்டியல்,

Branded

Nov 28 $0.29 $2.73 $0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (இறுதி விலை ஒரு கேலனுக்கு)

Unbranded $0.40 $2.73 -$0.06 $0.02 $0.08 $0.36 $0.18 $3.72 (ஒரு காலனுக்கு)

முழுப்பட்டியல் இங்கே,

http://energyalmanac.ca.gov/gasoline/margins/index.php

இந்த வரியை கழித்து விட்டால் எண்ணை நிறுவனம் பெட்ரோல் பம்ப்க்கு விற்கும் விலை வரும்.இந்த விலையில் பெட்ரொல் பம்ப் நடத்துபவரின் லாபம் அடக்கம்.

44.88-7.18=37.7 ரூபாய். இது தான் பெட்ரோல் பங்கில் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை. சுத்திக்கரிப்பு ஆலையில் ரிபைனிங் விலை என்று சொல்வது இதை விட குறைவாக இருக்கும்.

சுத்திகரிப்பு ஆலை விலை= கச்சா விலை +சுத்திகரிப்பு செலவு + ஆலை லாபம் + மூல தன முதலீட்டு லாபம் ஆகியவை அடங்கி இருக்கும்.

கனடாவில் சுத்திகரிப்பு செலவு பெட்ரோல் விலை காட்டும் பட்டியல்:




இந்தியாவிலும் என்ணை நிறுவனம் இதே போல பெட்ரோல் பங்குக்கு 37.7 ரூ அளவிற்கு தானே அளித்து இருக்கும், ஆனால் எப்படி 67 ரூபாய் ஆகிறது நாம் வாங்கும் போது?

காரணம் நம் மத்திய,மாநில அரசுகள் விதிக்கும் வரி, இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக 45% ஆகும்.அதாவது சுமார் 30 ருபாய் அரசுக்கு வரி வருவாயாக போகிறது.உலகிலே அதிக வரி விதிக்கும் நாடு யுனைட்டெட் கிங்க்டம், நாமும் அவங்க பக்கத்தில போக முயற்சிக்கிறோம்.

உலக அளவில் சில நாடுகளின் வரி விகிதம் , பெட்ரோல் விலை காட்டும் ஒரு பட்டியல்:







சில மாநிலங்களில் இருக்கும் வாட் வரி விகிதங்கள்,

ஆந்திரா =33%(இந்தியாவிலேயே மிக அதிக வாட்)

மேற்கு வங்கம்= 27

பஞ்சாப் =32.96%

கர்நாடகா =31.25%

உத்தரப்பிரதேஷ்=26.6%

ஒரிசா =19%

புதுவை =15%(இந்தியாவிலேயெ குறைவான வாட்)

தமிழ்நாடு =27%

மத்திய அரசு விதிக்கும் வரிகள் 20-25% வருகிறது. இப்படி தோராயமாக மொத்தமாக 45% பெட்ரோல் மீது வரி சுமை இருக்கு.

தமிழ் நாடு அரசுக்கு பெட்ரோலிய வரி வருவாய்,

//Tamil Nadu, for instance, charges a rather high 27% value added tax (VAT) on fuel.

The Tamil Nadu government has earned 15% more by way of taxes on fuel this year compared to last year, even though it lowered VAT to 27% from 30% after the decontrol of petroleum prices . Tamil Nadu's income on each litre of petrol sold is about 15.40 at current prices. With an average monthly petrol sales of 17 crore litres, the state earns close to 264 crore a month. That would amount to over 3,000 crore annually. Last year, TN earned about 13.40 per litre (at 30% VAT), when pump prices were 68 a litre.//

http://timesofindia.indiatimes.com/city/chennai/States-add-to-price-of-petrol-with-taxes/articleshow/10749952.cms

தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் 15.40 ரூபாய் வருமானம் போகிறது. மீதி 14.60 ரூபாய் மத்திய அரசுக்கு போகிறது.

ஒரு மாதத்திற்கு சுமார் 264 கோடி, என ஆண்டுக்கு சுமார் 3000 கோடி பெட்ரோல் விற்பனையில் மட்டும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக செல்கிறது.அப்புறம் டீசல் வேற இருக்கு.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு எங்கோ நடக்கிற கம்மோடிடி டிரேட் அல்லது கச்சா எண்ணை விலை காரணம் இல்லை, நம்ம மத்திய மாநில அரசுகள் தான் முக்கிய காரணம்.

உலக நாடுகள் மற்றும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒப்பீடு,

Petrol Prices across the World Country $ per Gal. 2008 `/ ltr $ per Gal. 2009 `/ ltr $ per Gal. 2010 `/ ltr $ per Gal. 2011 `/ ltr % Deviation from India, 2011
Doha, Qatar -- -- -- -- -- -- 0.83 8.25 -87%
Saudi Arabia 0.61 5.71 -- -- -- -- 0.85 8.53 -86%
Kuwait -- -- -- -- -- -- 0.92 9.45 -85%
Kabul, Afghanistan -- -- -- -- -- -- 1.19 12.37 -80%
Nigeria -- -- -- -- -- -- 1.60 16.63 -74%
UAE 1.70 15.95 1.81 18.61 -- -- 1.82 18.14 -71%
Malaysia 2.31 25.49 -- -- 2.04 20.99 2.42 24.11 -62%
Iran -- -- -- -- 2.48 25.49 2.58 25.53 -59%
Hongkong -- -- -- -- -- -- 3.00 29.86 -53%
Dhaka, Bangladesh -- -- -- -- -- -- 3.35 36.12 -43%
Pakistan 3.23 30.54 -- -- 3.03 31.43 3.73 38.78 -38%
China -- -- -- -- -- -- 3.77 37.31 -41%
Vietnam -- -- -- -- 3.14 31.89 3.90 38.42 -39%
USA 1.69 17.57 2.40 25.59 2.55 26.25 3.99 39.64 -37%
SriLanka 5.73 54.12 -- -- 4.00 40.60 4.35 44.51 -29%
Nairobi, Kenya -- -- -- -- -- -- 4.54 45.55 -28%
Canada 2.62 26.59 -- -- 3.69 35.99 5.20 56.07 -11%
South Korea 3.69 39.25 -- -- -- -- 5.49 54.35 -14%
South Africa 4.58 44.08 5.00 52.58 -- -- 5.68 55.24 -12%
Bulgaria -- -- 5.34 54.79 -- -- 5.71 57.29 -9%
India 4.88 50.65 4.59 48.24 4.92 52.53 5.74 62.88 --
New Zealand 3.03 32.28 3.04 34.16 5.87 58.91 5.77 57.36 -9%
Australia 2.54 27.06 -- -- 4.32 43.84 6.20 62.46 -1%
Poland 8.15 77.35 -- -- 5.38 54.97 6.27 62.48 -1%
Spain 4.73 50.07 6.02 63.14 -- -- 6.48 64.58 3%
Cayman Islands -- -- -- -- -- -- 6.58 64.25 2%
Switzerland 7.56 66.44 -- -- 4.58 46.72 6.58 65.57 4%
Thailand -- -- -- -- 3.52 36.44 6.66 67.52 7%
Czech Republic 4.46 39.21 -- -- 5.87 59.98 7.10 70.76 13%
Japan 4.50 39.65 5.19 53.62 -- -- 7.23 70.75 13%
France -- -- 6.89 70.69 -- -- 7.51 74.84 19%
Sweden 8.13 76.29 -- -- 6.40 65.39 7.61 75.84 21%
Singapore 6.96 65.75 -- -- 4.92 49.97 7.61 75.07 19%
Finland 8.00 77.74 6.81 69.87 -- -- 7.76 77.33 23%
Denmark 9.27 86.46 -- -- 7.00 71.52 7.82 77.93 24%
Hungary 8.04 78.44 25%
Germany 8.19 79.61 -- -- 6.51 67.07 8.21 83.37 33%
Italy 9.19 86.27 -- -- 7.19 71.53 7.96 87.19 39%
UK 8.81 83.03 4.85 51.45 7.38 72.78 8.54 85.02 35%
Norway -- -- -- -- -- -- 9.00 90.30 44%
Netherland 8.85 85.96 -- -- -- 9.12 92.61 47%
Fiji -- -- -- -- -- -- 9.62 94.09 50%
Turkey -- -- -- -- 9.58 95.03 10.19 101.06 61%
Brazil -- -- -- -- 5.79 57.61
Bahrain 1.02 9.57 -- -- -- --
Lebanon 3.90 36.82 -- -- -- --
Kathmandu, Nepal 4.85 42.20 -- -- -- --
Egypt -- -- 1.35 14.20 -- --
Zimbabwe -- -- 4.54 46.38 -- --


Petrol Prices in IndiaCity 2008 Price (`) 2009 Price (`) 2010 Price (`) 2011 Price (`)
Agra -- -- -- -- -- -- 18-Sep-11 70.53
1-Nov-11 71.13
Ahmedabad 30-Sep-11 71.20
-- -- -- -- -- -- 22-May-11 67.52
-- -- -- -- -- -- 12-Feb-11 62.24
-- -- -- -- -- -- 25-Jan-11 52.28
Ajmer, Rajasthan -- -- -- -- -- -- 20-Sep-11 70.04
Allahabad -- -- -- -- -- -- 5-Jun-11 67.00
Ballia, Ghazipur/ UP -- -- -- -- -- -- 2-Mar-11 60.91
Bangalore -- -- -- -- -- -- 5-Nov-11 77.00
-- -- -- -- -- -- 3-Nov-11 74.82
-- -- -- -- -- -- 19-Oct-11 75.00
-- -- -- -- -- -- 29-Jun-11 73.00
23-May-08 55.00 14-Mar-09 52.17 16-Dec-10 63.45 22-May-11 71.00
11-Nov-08 57.17 -- -- -- -- 3-Apr-11 65.00
-- -- -- -- -- -- 17-Jan-11 65.45
Belgaum, Karnataka -- -- -- -- -- -- 14-May-11 65.00
Bhopal -- -- -- -- -- -- 10-Sep-11 68.49
Bhubaneswar, Orissa 27-Oct-11 66.72
Chennai -- -- -- -- -- -- 5-Nov-11 72.73
-- -- -- -- -- -- 23-Oct-11 71.10
-- -- -- -- -- -- 19-May-11 67.00
11-Jun-08 55.00 2-Jul-09 48.58 20-Aug-10 58 15-May-11 68.38
2-Jul-08 59.20 29-Jan-09 44.24 2-Jul-10 57 8-May-11 63.00
-- -- -- -- -- -- 8-Feb-11 65.00
-- -- -- -- -- -- 16-Jan-11 63.36
Cochin -- -- -- -- -- -- 20-Sep-11 69.70
Coimbatore -- -- -- -- -- -- 24-Oct-11 71.00
-- -- -- -- -- -- 13-Jun-11 67.05
9-Jun-08 58.91 -- -- -- -- 15-May-11 67.03
Dehradun -- -- -- -- -- -- 30-May-11 65.81
Faridabad -- -- -- -- -- -- 2-Feb-11 59.31
Gujarat 26-Jun-08 53.48 -- -- -- -- 5-Feb-11 62.10
Gurgaon, Haryana -- -- -- -- -- -- 15-May-11 61.98
-- -- -- -- -- -- 8-Feb-11 59.00
Guwahati( Assam) -- -- -- -- -- -- 25-May-11 66.65
Hyderabad -- -- -- -- -- -- 1-Nov-11 76.75
22-Apr-08 55.00 -- -- 14-Jul-10 57.91 16-Sep-11 74.48
30-May-08 51.10 -- -- -- -- 15-May-11 70.70
11-Jun-08 60.00 -- -- -- -- 21-Mar-11 65.15
13-Jun-08 56.65 -- -- -- --
25-Nov-08 56.00 -- -- -- --
Indore -- -- -- -- 6-Aug-10 55.17
Jaipur, Rajasthan -- -- -- -- -- -- 16-May-11 67.45
-- -- -- -- -- -- 5-May-11 62.64
Jalgaon/Maharashtra -- -- -- -- -- -- 15-May-11 69.00
Kanpur, UP -- -- -- -- -- -- 6-Jul-11 67.25
Kerala -- -- -- -- -- -- 19-Sep-11 70.00
-- -- -- -- -- -- 9-Jun-11 66.89
-- -- -- -- -- -- 26-Apr-11 61.96
-- -- -- -- -- -- 4-Feb-11 65.00
-- -- -- -- -- -- 18-Jan-11 61.31
Kolhapur -- -- -- -- -- -- 5-Nov-11 76.50
Kolkata -- -- -- -- -- -- 5-Nov-11 73.15
-- -- -- -- -- -- 16-Sep-11 71.15
4-Jun-08 48.95 2-Jul-09 48.25 -- -- 15-May-11 67.31
-- -- 29-Jan-09 44.05 -- -- 28-Feb-11 62.50
Lucknow -- -- -- -- -- -- 16-Sep-11 70.02
-- -- -- -- -- -- 5-Feb-11 62.61
Mangalore -- -- -- -- -- -- 23-May-11 71.00
-- -- -- -- -- -- 22-Jan-11 64.55
Margao /Goa -- -- -- -- 8-Jul-10 52.11 9-Mar-11 58.31
Mumbai -- -- -- -- -- -- 5-Nov-11 73.81
-- -- -- -- -- -- 31-Oct-11 71.92
-- -- -- -- -- -- 24-Sep-11 71.62
-- -- -- -- -- -- 12-Jun-11 68.33
8-Mar-08 56.00 2-Jul-09 48.76 7-Jul-10 55.20 15-May-11 68.32
4-Jun-08 50.51 4-Mar-09 44.00 -- -- 22-Feb-11 65.00
-- -- 29-Jan-09 44.55 -- -- 16-Jan-11 63.08
Muzaffarpur, Bihar -- -- -- -- -- -- 21-Jun-11 65.00
Mysore 1-Nov-11 74.06
Nagpur 23-Apr-08 54.25 -- -- -- -- 7-Feb-11 65.00
Nashik -- -- -- -- -- -- 17-Sep-11 71.75
New Delhi -- -- -- -- -- -- 5-Nov-11 68.64
-- -- -- -- -- -- 21-Sep-11 66.84
-- -- -- -- -- -- 15-May-11 63.41
24-May-08 47.00 2-Jul-09 44.63 4-Jul-10 51.43 16-Jan-11 58.37
Noida -- -- -- -- -- -- 19-Sep-11 70.77
Pondicherry -- -- -- -- -- -- 15-May-11 61.64
Pune 4-Jun-08 45.52 6-Jul-09 48.00 19-Dec-10 60.47 17-Sep-11 72.00
15-May-11 69.63
29-Feb-08 51.46 29-Jan-09 40.62 11-Jul-10 52.00 14-Apr-11 63.00
15-Jul-08 54.95 26-Jan-09 53.00 2-Feb-11 64.00
Punjab -- -- -- -- 13-May-10 53.00 20-Sep-11 73.87
Rajkot -- -- -- -- -- -- 1-Nov-11 70.68
Raipur,Chhattisgarh -- -- -- -- -- -- 21-Feb-11 59.89
Kashmir -- -- -- -- -- -- 18-Oct-11 69.85
-- -- -- -- -- -- 2-Feb-11 62.96
Simla 5-Nov-11 71.84
Surat 1-Nov-11 71.16
-- -- -- -- -- -- 17-Sep-11 71.00
Thane -- -- -- -- -- -- 3-Feb-11 41.41
Tamil Nadu -- -- -- -- 13-Jul-10 55.92 16-Jan-11 63.01
Tirupati -- -- -- -- -- -- 20-Sep-11 73.45
Trivandrum -- -- -- -- -- -- 17-Sep-11 70.00
-- -- -- -- -- -- 23-Jul-11 67.00
-- -- -- -- -- -- 16-Jun-11 65.91
Vadodara, Gujarat -- -- -- -- -- -- 1-Nov-11 70.36
-- -- -- -- -- -- 16-May-11 68.00
-- -- -- -- -- -- 18-Feb-11 61.51
Visakhapatnam -- -- -- -- -- -- 5-Nov-11 75.00
-- -- -- -- -- -- 27-Sep-11 73.00



Note:

மேற்கண்ட விலை ஒப்பீடு http://kshitij.com/research/petrol.shtml என்ற தளத்திலிருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. நம்பகத்தன்மை அதனையே சாரும். நன்றி!

எனவே பெட்ரோல் விலை உயர உண்மையான காரணங்கள் என நான் கருதுவது,

# மத்திய மாநில அரசுகளின் வரி மொத்தமாக 45 %

#எண்ணை சுத்திகரிப்பு நிலையத்துக்கும், விற்பனை நிலையத்துக்கும் இடையே கொண்டு செல்ல ஆகும் செலவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் குழாய்கள் வழிக்கொண்டு செல்லப்படும், நம் நாட்டில் அதிகப்பட்சமாக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிரது. குழாய் வழி விநியோகம் குறைவே.

#எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களின் செயல் பாடு, வெளிநாட்டில் 100 பேர் செய்யும் வேலைக்கு இங்கே 1000 பேர் வேலை செய்ய இருக்காங்க, மேலும் அதிக சம்பளம், போனஸ், என 6 மாதத்துக்கு ஒரு முறை அள்ளி விடுவது, ஆனால் செயல் பாடு அதே அளவுக்கு இல்லை. அதாவது எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டே லாபத்தொகையை குறைக்கின்ற இப்படி பட்ட செலவீனங்கள் மூலமாக.
எந்த எண்னை நிறுவனமும் நட்டம் என பேலன்ஸ் ஷீட் காட்டவில்லை, ஆனால் ஏன் நட்டம் என்கிரார்கள், அவர்கள் 10000 கோடி லாபம் எதிர்பார்க்க 2500 கோடி லாபம் வந்தால் உடனே நட்டம் என்கிறார்கள், அதாவது லாபத்தில் நட்டம்!



பாரத் பெட்ரோலியத்தின் லாப நட்ட கணக்கு அதன் பேலன்ஸ் ஷீட்டில் இருந்து,

Profit loss account Mar ' 11 Mar ' 10 Mar ' 09 Mar ' 08 Mar ' 07
Income
Operating income 1,50,838.33 1,20,216.99 1,34,073.43 1,10,208.13 96,556.85
Expenses
Material consumed 1,38,971.98 1,09,894.18 1,23,567.17 1,02,136.48 88,539.75
Manufacturing expenses 886.02 621.84 414.26 291.29 310.08
Personnel expenses 2,802.85 2,141.12 1,884.88 1,297.21 1,003.70
Selling expenses 2,854.80 2,585.47 2,426.14 2,052.39 1,875.82
Adminstrative expenses 1,812.07 1,489.82 1,240.35 1,279.79 1,109.72
Expenses capitalised - - - - -
Cost of sales 1,47,327.72 1,16,732.43 1,29,532.80 1,07,057.16 92,839.06
Operating profit 3,510.61 3,484.56 4,540.63 3,150.97 3,717.79
Other recurring income 1,395.95 1,679.64 1,491.16 982.98 768.63
Adjusted PBDIT 4,906.56 5,164.20 6,031.79 4,133.94 4,486.42
Financial expenses 1,100.78 1,010.95 2,166.37 672.47 477.35
Depreciation 1,655.40 1,242.32 1,075.53 1,098.21 904.11
Other write offs - - - - -
Adjusted PBT 2,150.38 2,910.93 2,789.89 2,363.26 3,104.96
Tax charges 776.24 823.75 261.12 1,010.00 955.33
Adjusted PAT 1,374.14 2,087.18 2,528.77 1,353.26 2,149.62
Non recurring items -74.91 -489.45 -1,789.90 108.65 -217.64
Other non cash adjustments 247.45 -60.11 -2.97 118.65 -126.50
Reported net profit 1,546.68 1,537.62 735.90 1,580.56 1,805.48
Earnigs before appropriation 1,727.74 1,613.99 735.90 1,580.56 4,488.39
Equity dividend 506.16 506.16 253.08 144.62 578.47
Preference dividend - - - - -
Dividend tax 71.08 72.77 31.45 9.16 91.87
Retained earnings 1,150.50 1,035.06 451.37 1,426.78 3,818.05

Mutual Fund Selector
Find the fund that is right for you
Market Astrology
Stock market predictions by Satish Gupta

1546 கோடி இறுதி லாபம் எனக்காட்டியுள்ளார்கள், இதில் ரிடெய்ன்ட் எர்னிங்  1150 கோடி சேர்த்தால் 2696 கோடி லாபம் ஈட்டியதாக கணக்கில் கொள்ள வேண்டி இருக்கும்.






மேலும் லாபத்தை ஆங்காங்கே தொழில்நுட்ப ரீதியாக பரவ விட்டு பதுக்குவார்கள். கணக்கில் நேரடியாக காட்ட மாட்டார்கள்.


Thursday, December 01, 2011

வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!



வால்மார்ட் சில்லரை வர்த்தகம்,கம்மோடிட்டி மார்க்கெட் -சூர்யஜீவாவின் சந்தேகங்கள்!


பதிவுலக நண்பர் சூர்யஜீவா வால்மார்ட், கம்மோடிட்டி மார்க்கெட் பற்றி ஒரு பதிவினைப்போட்டு அதன் வாயிலாக சில கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பி பதில் அளிக்குமாறு கேட்டு இருந்தார். அவர் பதிவில் விரிவான பின்னூட்டம் இட்டு இருந்தாலும், சரியாக விளக்கினேனா என தெரியவில்லை, எனவே இன்னும் கொஞ்சம் விரிவாக அதனைப்பதிவாக இங்கே போட்டுள்ளேன்.

ஏதோ என்னால் முடிந்த அளவு சொல்லி இருக்கேன், இது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல, முயன்றால் இணையம் கற்பிக்கும்.

கம்மோடிடி மற்றும் சில்லரை வர்த்தகம் சேர்ந்து செயற்கை தட்டுப்பாடு:

ஒன்று:

//ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..//

சூர்யா,

கேள்வி எல்லாம் ஹைப்போதெடிகலாக இருக்கு, இணையத்தில் தேடிப்பார்த்தாலே கிடைக்கும் பதில்கள். தினம் விதம் விதமாக பதிவுப்போடுறவங்க கூட பொருளாதாரம் பத்தி படிக்க பயந்துக்கிட்டு தலைசுத்தும் என ஓடுவது ஏன்,அப்போ உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படினு பதிவு போடுறது மட்டும் தான் அவங்க  செய்வாங்களா :-))

சரி எனக்கு தெரிஞ்சத வைத்து ஒரு ஜல்லி அடிக்கிறேன் புரிஞ்சா உங்கப்பாடு!

கம்மோட்டி, ல வாங்க விற்க மொத்தமாக பொருட்களை வெளிநாட்டினர் வாங்க என தற்போது எந்த தடையும் இல்லை, நீங்க ,அதுக்கு அனுமதிக்கொடுத்தப்ப இந்த கேள்விக்கேட்டு இருந்தா சரியா இருந்து இருக்கும், இப்போ அனுமதி கொடுத்தது சில்லரை வணிகம்,

மொத்தமாக பொருட்கள் ( அரிசி பட்டியலில் இருக்கா) வாங்கும் வசதி முன்னரே இருந்தும் , ஏன் யாரும் வாங்கி முடக்கவில்லை?. மேலும் கம்மோடிடி பட்டியலில் சேர்க்க நீக்க முடியும். எனவே எப்போது பாதகமான சூழல் வருதோ அப்போ நிக்கி பின்னர் நிலமை சீரானதும் சேர்க்கலாம்.

சரி நீங்க லேட்டாக கேட்டாலும் என்ன ஆகும்னு பார்ப்போம்.

யூக வணிகம் என்பது பங்கு வணிகம் என்று மட்டும் இப்ப வச்சுக்குவோம்,இதுல டிமாண்ட், சப்ளை , முதலீடு எப்படி இருக்கும் என பார்ப்போம்,

முதலீடு செய்ய capital asset pricing model என்பதை பயன் படுத்துவாங்க, ஒரு கம்பெனியின் செயல்பாடு 10% உயர்ந்ததாக காட்டினால் அதாவது லாபம் 10% என கணக்கு காட்டுவதாக சொல்லலாம்,அதன் பங்கு மதிப்பு சந்தையில் 15% ஏறும், எனவே அதுக்கு ஏற்ப டிமாண்ட் ஏற்படும்.இது ஒரு விதி

அதே போல ஒரு கம்பெனி 10% நட்டம் ஆச்சுனா பங்கு விலையில் 15% இறங்கவும் செய்யும்.

இதனால் ஒரு நிறுவனம் லாபகரமாக இருக்கும் போது விரைவாக பங்கு சந்தையில் உயரும், நட்டம் வர்ம்பொது விரைவாக சரியும்.

இந்த இடத்தில் ஒரு கம்பெனி பங்கு என்பது ஒன்றே அதே போல இன்னொரு மாற்று இல்லை ,இப்போது ஒரு நிறுவனமே பாலோவ் ஆன் பப்ளிக் ஆஃபர் அறிவித்தால் அவர்களது முந்தய அதே வகை பங்கின் விலை ஏறுவது நின்றுவிடும்.

எனவே கம்மோடிடிட்டியில் விலை ஏறும் பண்டம் என நினைத்து அதிகம் முடக்கினால் அதே பண்டம் வெளி சந்தையில் புதிய வரவாக வரும் போது விலை சரிந்து நட்டம் உருவாக்கும்.

ஏன் எனில் ஒரு பண்டம் என்பது தொடர்ச்சியாக உற்பத்தி ஆகிக்கொண்டே இருப்பது, ஆனால் பங்கின் அளவு ஒரு நிறுவனத்தால் நிலை நிறுத்தக்கூடியது.எனவே கம்மோடிட்டி யூக வணிகத்தில் மிக அதிகம் முடக்கி செயற்கை தட்டுப்பாடினை நீண்ட நாள் உருவாக்க முடியாது.

  ஆனால் பங்கு சந்தையில் காம்ளிமெண்ட் இருக்கும். இது வேறு,

காம்ப்ளீமென்ட் என்பது ஒரு ஆட்டொ மொபல் பங்கு ஏறினா, இன்னொரு ஆட்டோ மொபைல் கம்பெனி பங்கு ஏறுவது போல.எனவே தான் பங்கு வர்த்தகத்தில் பல தரப்பட்ட பங்கு வாங்கி வைப்பாங்க (portfolio management)ஒரே டைப் செக்டார்ல வாங்கினா கவிழ்த்துவிடும்.

இப்போ அரிசி விலை ஏறினா அதே போல பெரும்பான்மை உணவான கோதுமை விலை ஏறும்னு சொல்ல முடியாது. அதே போல வெங்காயம் விலை ஏறினா பிளைன் ஆம்லெட் சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க, அல்லது முட்டைக்கோஸ் கூட கலந்து வெங்காயம் கம்மி பண்ணிடுவாங்க, இப்படி உணவுப்பொருட்களில் உடனே மாற்றுக்கு போய்டுவாங்க.

இப்போ அரிசிக்கு வருவோம், அதன் விலை நுகர்வோர் சந்தைல 10% ஏறினா, கம்மோட்டி மார்க்கெட்ல 15% ஏறுது வைத்துக்கொள்வோம், அப்படியே விலை 10% இறங்கினா , 15% கம்மோடிட்டில இறங்கிடும்.

law of demand ஐ பார்ப்போம், விலை ஏறினா தேவை குறையும், விலையும், தேவையும் எதிர்விகித தொடர்புடையவை. pricing elasticity of demant (PED) என்ற சதவிகிதம் எப்போதும் எதிர் மறையாகவே(-) இருக்கும்.

உ.ம்: பஸ் டிக்கெட் விலை ஏறினா அடிக்கடி பயணம் செய்வதை மக்கள் குறைத்துக்கொள்வது போல.

பால் விலை ஏறினா ஒரு லிட்டருக்கு பதில் அரை லிட்டர் வாங்கி கொஞ்சம் தாராளமாக தண்ணி ஊத்தி காபிக்கு பதில் டீ யாக குடிப்பது.

giffens goods: அப்படி னு ஒன்னு இருக்கு இது தேவை விதிக்கு எதிரானது, விலை ஏறினாலும் தேவைக்குறையாது, ஆனால் அந்த பொருளுக்கு வேறு மாற்றே substituion goods இருக்க கூடாது.

கிப்பன்ஸ் குட் என்பது ஒரு கடை நிலை , மாற்று இல்லாத மலிவான ஒன்றாக இருக்க வேண்டும், பெரும்பாலும் அரிசி, உணவு ஆகியவற்றை சொல்வார்கள்.விலை ஏறினாலும் வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால் விலைக்கம்மியா இருக்குனு அதிகமாக சாப்பிடவும் மாட்டார்கள்.

ஆனாலும் இந்தியா என்பது பல தரப்பட்ட மக்கள் , தட்ப,வெப்பம், உணவுப்பழக்க வழக்கம் கொண்ட நாடு, எனவே இங்கே ஒரே உணவு தான் சாப்பிடுவேன்னு யாரும் அடம் பிடிப்பதில்லை,substituion goods பயன்ப்படுத்துவார்கள். அரிசி இல்லையா கோதுமை , அதுவும் இல்லையா மைதா, அதுவும் இல்லையா கம்பு, சோளம் , கப்பக்கிழங்கு என போவார்கள்.எனவே கிப்பன்ஸ் குட்ஸ் தியரி கூட அடி வாங்கும் இந்தியாவில்.

இப்படி மக்கள் உணவுக்கு மாற்றுப்போவதால் செயற்கையாக நீண்ட காலத்துக்கு விலை ஏற்றி வைக்க முடியாது, தேக்கி வைத்தது போதும்னு வெளில விட்டுவிடுவார்கள், அரிசி விலை கீழ வரும்.

மேலும் அரிசி போன்ற உணவுப்பொருட்கள் சீசனுக்கு சீசன் விளைவிப்பார்கள் , மூன்று மாதத்திற்கு ஒரு நடவு, அறுவடை என புதிய விளைப்பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருக்கும். ஓவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு காலம், உ.ம் தமிழ்நாட்டில் அறுவடை முடிந்து சில காலம் பின்னர் கர்நாடகாவில் அறுவடை நடக்கும், இப்படியே ஆந்திராவிலும், எனவே தொடர்ச்சியாக பொருட்கள் சந்தைக்கு வந்துக்கொண்டே இருப்பதால் அனைத்தையும் முடக்குவது என்பது கற்பனைக்கு எட்டாத ஒன்று.

அப்படி வெளிசந்தைல அரிசி விலை கீழ வரும் போது , கம்மோட்டில அரிசி வைத்திருந்தா அதிகமா நட்டம் ஆகிடும்.காரணம் capital asset pricing model .

ரியல் மார்க்கெட்டிலும், கம்மோட்டிலவும் ஒரே ஆளே அதிகம் பணம் முதலீடு செய்திருந்தால் நட்டம் தான் வரும். ரியல் மார்க்கெட்ல பொருளை மக்கள் வாங்கிடுவாங்க, கம்மோட்டில என்ன பொது மக்களா வாங்குறாங்க அத இன்னொரு டிரேடர் தான் வாங்கணூம், எனவே அதிகமான பங்குகளை ஒரே நேரத்தில டிஸ்போஸ் செய்ய முடியாது, எனவே விற்பனை ஆகாம நட்டம் ஆகிடும் முடக்கி வைத்தவனுக்கு, ஏதோ ஒரு இடத்தில் மட்டும் லாபம் கிடைக்கும், கூட்டிக்கழித்துப்பார்த்தால் நட்டம் :-))

உதாரணமாகப்பார்த்தால் வெளிசந்தையில் விற்பனையாளார் என்பது சுமார் ஒரு கோடி வணிகர்கள் என வைத்துக்கொள்வோம், ஆனால் வாங்குபவர் நுகர்வோர் ஆகிய மக்கள் சுமார் 100 கோடி இருக்கும்.எனவே வெளிச்சந்தையில் பங்குப்பெறுவோர் எண்ணிக்கை மிக பெரியது.

ஆனால் கம்மோடிட்டி மார்க்கெட்டில் வாங்குபர், விற்பவர் என பங்குப்பெறுவோர் சில லட்சங்கள் இருந்தாலே அதிகம், அதுவும் அவர்கள் யாருமே நுகர்வோர் அல்ல அனைவருமே வியாபாரிகள்.லாப, நட்டத்திற்காக மட்டுமே வாங்குவார்கள், அங்கே நுகர்வு என்பதே இல்லை. நட்டம் வரும் என்றால் வாங்கவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள். ஒரு மணி நேரத்தில் பங்கு விலை சரிய ஆரம்பித்தா அடுத்து வாங்க ஆளே இருக்காது.

நீங்க ஹைப்போதெடிகலா கேட்டாலும் அரிசிக்கு ஒரு வகையில் பேச்சுக்கு சரி, அழுகும் காய்,கனிக்கு என்ன செய்வாங்க கம்மோடிட்டி மார்க்கெட்ல.

மேலும் கம்மோடிடி என்பது ஒரு கால நிர்ணயம் கொண்டது, ஒரு டெர்ம் 3 மாதம் அதற்குள் டெலிவெரி எடுக்க வேண்டும் அல்லது பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.எனவே வெளிசந்தையிலும் வாங்கிப்போட்டு, கம்மோட்டியிலும் வாங்கிப்போடுவதை ஒருவரே செய்தால் பலத்த நட்டம் வரும்.

ஒப்பந்த விவசாயமும், செயற்கை தட்டுப்பாடும்:

//இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்..//

பாஸ்மதி அரிசி, கோதுமையை தமிழ் நாட்டில பயிரிட முடியாது, கேரட்டை கடலூரில பயிரிட முடியாது, இப்படி நம்ம நாடு பல தட்ப வெப்பம், பருவ காலம், மண் வளம், கலாச்சாரம் கொண்டது.

இன்னும் ஏன், கோதுமைய மட்டும் பெருவாரியா சாப்பிட சொன்ன சாப்பிட மாட்டாங்க ,அரிசி சோறு கிடைக்கலைனா தான் சப்பாத்திக்கு போவாங்க..

அதனால அப்படிலாம் ஒரே வகையா விவசாயத்தை மாற்ற முடியாது.ஏன் இத சொல்கிறேன் என்றால் ஒரு குறிப்பிட்ட வகை நெல்லை விவசாயிகளிடம் அறிமுகம் செய்ய விவசாயத்துறை படாத பாடு பட வேண்டி இருக்கும்.இதற்காக முன்னோடி விவசாயி என ஊருக்கு 10 பேரை தேர்வு செய்து அவர்களை பயிரிட வைத்து ,விளக்கி எல்லாம் செய்தாலும் அடுத்த வருடம், புதிய முறைக்கு மாற ஒரு 2 பேர் தான் வருவாங்க.

உதாரணமாக அமெரிக்க மக்கள் தொகை சுமார் 32 கோடி ஆனால் அவர்களுக்காக உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி இருந்தாலே அதிகம். மேலும் அமெரிக்கா இந்தியாவை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்டது. எனவே ஒவ்வொரு விவசாயியும் சுமாராக 500 ஏக்கராவது நிலம் வைத்திருப்பார்.

ஆனால் இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு 60% மக்கள் உணவு உற்பத்தி செய்யும் தொழிலில் இருக்காங்க, அதாவது இங்கே எல்லாம் சிறிய விவசாயிகள், ஒவ்வொருவரும் சுமாராக 1 ஏக்கர் முதல் சில ஏக்கர்கள் தான் நிலம் வைத்திருப்பார்கள்.இந்தியாவில் நிலங்களை விட வரப்புகள் அதிகம் என நகைச்சுவையாக சொல்வார்கள்.

அமெரிக்காவில் ஒரு விவசாயியுடன் வால்மார்ட் ஒப்பந்தம் செய்தால் சுமார் 500 ஏக்கர் உற்பத்தி கைவசம் ஆகிவிடும், ஆனால் இந்தியாவில் 500 ஏக்கர் உற்பத்தியை கைப்பற்ற சுமார் 250 விவசாயிகளுடனாவாது ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

எனவே பெரிய அளவில் உற்பத்தியை கைவசம் கொண்டு வர நிறைய பேரை ஒப்பந்ததிற்குள் கொண்டு வர வேண்டியது இருக்கும், இதுவே நீண்ட கால செயல் ஆகும்.மேலும் அனைவரும் சிறு விவசாயிகள் என்பதால் வால்மார்ட் ஒப்பந்தம் சரியாக கடைப்பிடிக்கவில்லை என்றால் ..மயிராப்போச்சுனு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள தயங்க மாட்டார்கள். அதே சமயத்தில் அமெரிக்காவில் பெரிய அளவிலான ஒப்பந்தம் என்பதால் விவசாயி அவ்வளவு சீக்கிரம் முறித்துக்கொள்ள மாட்டான்.

இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் பெரிதாக வர விடாமல் தடுப்பது பல சிறு விவசாயிகள் இருப்பதும் ஒரு காரணம், ஆனால் பெரிய அளவிலான சில்லரை விற்பனை சீராக செல்ல ஒப்பந்த விவசாயம் தேவை என்பதால் வால்மார்ட் போன்றவர்கள் விவசாயிகளைப்பகைத்துக்கொள்ளாமல் செயல்படவே பார்ப்பார்கள்.

எனவே நீங்க சொல்வது நம்ம நாட்டில நடக்காது.

கொள்முதல் சதவீதக்கட்டுப்பாடு:

//மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.//

இதுக்கு என்பதிவிலே சொல்லி இருந்தேன், இந்திய உற்பதியை அதிகம் வாங்க செய்ய வேண்டும் என்று. அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால் இந்த 30% கொள்கையில தான், ஏன் நாமளே குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்க கடைய தொறக்கலாம் ஆனால் இங்கே வாங்கி விற்க வேண்டும் என கட்டாயமாக சொல்ல அரசுக்கு ஏன் தைரியம் இல்லை.அரசாங்கம் உள்நாட்டுக்கொள்முதல் என்பதில் கண்டிப்பு காட்ட வேண்டும்.

இப்படி ஒரு சலுகை கொடுத்தாலும் இதனால் உணவுப்பொருளில் அவர்களால் தாக்கம் கொண்டு வரமுடியாது, காரணம் இந்தியாவை விட வெளிநாட்டில் உணவுகள் விலை அதிகம்,அதை வாங்கி இங்கே இறக்குமதி செய்து விற்றால் நட்டம் தான் ஆகும்.

முன்னர் வெள்ளைக்காரன் வணிகம் செய்ய இந்தியா வந்த போதும் நட்டம் தான் ஆனான், பொருட்கள் சரியாக விற்பனை ஆகவில்லை. அதை தவிர்க்க தான் வரி வசூலிக்க உரிமம் பெற்றான், கார்ப்பரேஷன் கக்கூஸ் டெண்டர் எடுப்பது போல நவாப்புக்கு பணம் கொடுத்து பெற்றான்.

இப்போ இருக்கிறவங்க வரிவசூலிக்கும் உரிமையை தாரை வார்க்க மாட்டார்கள் என நம்புவோம்.

மேலும் சில,

ஆனால் நீங்க முதலில்  கவலைப்படுவதாக இருந்தா டோல் ரோடு பத்திக்கவலைப்பட்டு இருக்கணும்,ஆனால் வழ வழ ரோடுனு சந்தோஷப் படுறிங்க போல :-))

விலைவாசி உயர்வுக்கு இந்த டோல் ரோட்களும் ஒருக்காரணம், முன்னர் இலவச சாலைகளாக இருந்தவையே இன்று டோல் ரோட்களாக மாறி இருக்கு. இலவச நெடுஞ்சாலையே இல்லை எனலாம்.

டீசல் விலை உயர்வு கூடவே சாலைகளில் செல்லக் டோல் கட்டணம் ஆகியவை சேர்ந்து உணவுப்பொருட்களை கொண்டு செல்ல ஆகும் செலவு கூடி விட்டது அதனை நுகர்வோர் தலையில் தான் வைப்பார்கள் வியாபாரிகள்.

அமெரிக்காவில் வால்மார்ட் போன்றவை செயல் பாட்டுக்கு வந்ததால் அங்கிருந்த சிறுவணீகர்கள் அனைவருமே அழிந்து விட்டார்கள் என பதிவர் ரெவரி சொல்லி இருந்தார் , இருக்கலாம், ஆனால் அதனால் என்ன நுகர்வு விலைவாசி உயரவில்லையே. மேலும் அமெரிக்காவிற்கும் அல்லது மேலை நாடுகளுக்கும் நமக்குமான ஒரு வித்தியாசத்தினை கவனிக்கவில்லை அவர்.

மேலை நாடுகளில் ஒரு நகரத்தில் ஒரு லட்சம் பேர் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதி இருந்தாலும் அங்கே கடைகள் இருக்காது. கடைகள் எல்லாம் மார்க்கெட் பகுதி என ஒதுக்கப்பட்ட ஒரு ஷாப்பிங் ஸோன் இல் மட்டுமே இருக்கும். சிறு வணிகராக இருந்தாலும் வால் மார்ட் ஆக இருந்தாலும் ஒரேப்பகுதியில் அக்கம்,பக்கமாக இருக்கும்.மக்கள் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கொஞ்ச தூரமாவது காரில் பயணித்தே வாங்க முடியும்.

பொருட்களை வாங்க என வரும் நுகர்வோர் சிறியக்கடைக்கு பக்கத்தில் இருக்கும் பெரியக்கடைக்கு தான் முன்னுரிமை அளிப்பார், அங்கே பல சலுகைகளும் இருக்கும். இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்புறம் ஏன் சின்னக்கடைக்கு போகணும் என்ற மனோபாகவம் இருக்கும்.

ஆனால் இந்தியாவில் அப்படி மார்க்கெட் பகுதி என ஒதுக்கி அங்கே மட்டும் கடைகள் இருப்பதில்லை, தெருவுக்கு தெரு ஒரு கடை இருக்கும். பெரும்பாலும் 100 மீட்டர் தொலைவில் நடந்து செல்லும் தூரத்தில் ஒரு கடையைக்காணலாம். இப்போதும் சில பல சூப்பர் மார்க்கெட்கள் இருந்தாலும் அங்கே மாதத்திற்கு ஒரு முறை தான் செல்வார்கள், ஆனால் தினசரி தெரு முனைக்கடையில் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கான இடம் சந்தையில் எப்போதும் உண்டு. ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலேயே பல சிறு கடைகளிலும் கூட்டம் அலை மோதுவதே இதற்கு உதாரணம்.யானை இருக்கும் காட்டில் கண்டிப்பாக எறும்பும் இருக்கும்.

வால்மார்ட்களால் இப்படி தெருவுக்கு தெரு கடை திறக்க முடியாது. எனவே வால்மார்ட்கள் வந்தாலும் சிறுவணிகர்கள் வியாபாரம் தடைப்படாது. என்ன அவர்களும் விற்பனை சதவீதத்தில் பங்கு எடுத்துக்கொள்வார்கள்.ஒரே அடியாக அவர்கள் வழக்கொழிந்து விட மாட்டார்கள்.

ஒரு காலத்தில் அம்பாசிடர் கார்கள் மட்டுமே போட்டியே இல்லாமல் இந்திய சாலைகளில் ராஜ்ஜியம் நடத்தியது, பின்னர் மாருதி வந்த பின் அம்பாசிடர் கொஞ்சம் அடி வாங்கியது.

அப்போதே பிர்லா குருப் சேர்ந்த ஹின்டுஸ்தான் மோட்டார்ஸ் தனது தயாரிப்பினை மேம்படுத்தி இருக்க வேண்டும் எதுவும் செய்யவில்லை. இன்று என்னாச்சு அந்தக்காரை வாங்க ஆள் இல்லை.

சமிபத்தில் கூட ஒரு புதிய அம்பாசிடர் காரில் போய்ப்பார்த்தேன், சென்ரலைஸ்ட் லாக் இல்லை, பவர் வின்டோ இல்லை, இன்டீரியர் மட்டமாக பழைய பாணியில், டேஷ் போர்டும் அப்படியே,கியர் அதே போல கடினமாக விழுகிறது,டீசல் எஞ்சின் அதே போல ரைஸ் மில் கணக்காக சத்தம் போடுகிறது(முன்பு விட கம்மி) 5 த் கியர் எனப்படும் ஓவர் டிரைவ் ஆப்ஷனாக சில மாடல்களில் மட்டும் இருக்கு, மற்ற எல்லாக்காரிலும் சாதாரணமாகவே இருக்கும். இதனால் ஆக்சிலேட்டர் போட்டு மிதி..மிதி என மிதிக்க வேண்டியது இருக்கு, பிக் அப் என்பது பற்றி எல்லாம் கேட்கவே கூடாது.இப்படி மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி இல்லாத ஒரு தயாரிப்பு எப்படி சந்தையில் இருக்கும். இத்தனைக்கும் அம்பாசிடரின் உறுதிக்கு முன்னால் இன்றைய கார்கள் நிற்க முடியாது. ஆனால் எத்தனைக்காலம் தான் ஸ்ட்ராங்கான பாடி என கார் வாங்குவார்கள்!

இப்போது இந்தியாவில் பல கார் தயாரிப்பாளர்கள் வந்து விட்டார்கள் ஆனால் மாருதி இன்னும் நடக்கிறது, மார்கெட் ஷேர் வேண்டுமானால் குறைந்து இருக்கலாம். ஆனால் அம்பாசிடர் இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறது யார் காரணம், மக்களா, அரசாங்கமா? இல்லை அம்ப்பாசிடர் கார் தயாரிப்பாளர்கள் தான் காரணம், எந்த நவீன மாற்றமும் செய்யாமல் நான் தயாரிப்பது தான் கார் , வாங்குவது உன் கடமை என்றால் யார் வாங்குவார்கள்.

இந்த உதாரணம் நம்ம ஊர் சில்லரை வர்த்தகர்களுக்கும் பொருந்தும்.அவர்களும் நவீனமாக மாறிக்கொள்ளவேண்டும், குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் வைத்து விற்க வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, அப்போது தான் எத்தனை வால்மார்ட்கள் வந்தாலும் சமாளிக்க முடியும்.

Tuesday, November 29, 2011

வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!



வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீதமும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ "அன்னிய" என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.

இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின்  பெரிய பலவீனமே.

முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.



முறை சார் சில்லரை வணிகம்
என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி,  தணிக்கை எல்லாம் உண்டு.

முறை சாரா சில்லரை வணிகம்:

இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.

உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே ஒட்டன் சத்திரம் முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.

சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.

இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.

இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து 5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.

இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல் தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.

அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது  விரயம் ஆன  தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.

தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.

சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.

மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல் " laizze fair market" ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.

இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய முறைசாரா வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜண்ட்கள் கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.

ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?

எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.

முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில் 2/3  பங்கு விவசாயிக்கு சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில்  அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக 1/5 அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.

இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில் தயாரிக்கப்படுகிறது ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.

நுகர்வோருக்கு வாங்கும் அனுபவம் நல்லதாக,இனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.

இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!

இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான் இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம்  மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.

முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.

அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.

அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.

இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.

உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.

மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன் அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.




Wednesday, November 23, 2011

அறிவியல் தேசம் இந்தியா!





அறிவியல் தேசம் இந்தியா!


இந்தியா பல சிறப்புகளை உடைய ஒரு தேசம் , உலகத்திற்கே முன்னோடியான நம் நாடு இன்று அணு சக்தி முதல் இன்ன பிற தொழில்நுட்பங்களுக்காக அயல்நாட்டிடம் பரிதாபமாக கையேந்தி நிற்கிறது.அந்த காலத்தில் வெற்றிலையில் மை தடவி " LED tv " க்ளை விட சிறப்பாக தொலைக்காட்சிகளை கொண்டு வந்த விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள். ஆனால் இன்றோ எல்லாம் அன்னிய மயமாகி விட்டது. காரணம் நாம் நம் திறமை மீது நம்பிக்கை வைக்காததும், பழம் பெருமைகளை மறந்து விட்டதுமே ஆகும், போதி தர்மனை எல்லாம் மறந்தூ விட்டோம்.

ஏஆர்.முருகதாஸ் மட்டும் இல்லை என்றால் நம்மில் எத்தனைப்பேருக்கு போதி தர்மனை தெரிந்து இருக்கும்.
எனவே  நமது கலாச்சார விஞ்ஞான வேர்களை அடையாளம் காட்டவே இப்பதிவு.

# முதல் கண் தானம், மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்தது இந்தியாவில் தான், கண்ணப்ப நாயனார், கேடராக்ட் வந்த சிவனுக்கு தனது கண்ணை தானமாக கொடுத்து , அவரே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

#பயோ டெக்னாலஜியை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, பாலை உறையூற்றி தயிராக ஆக்கினர், அந்த தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்துள்ளனர்,ஆதாரம் கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்றதே.

# திசு வளர்ப்பு, குளோனிங் ஆகியவற்றை கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே, காந்தாரிக்கு சிசு பிறக்காமல் ஒரு திசுவாக பிறந்தது அதனை 101 துண்டுகளாக்கி 101 கலசங்களில் இட்டு குழந்தைகளாக மாற்றினார் துர்வாசர் , அவர்களே கவுரவர்கள். கவுரகர்களின் ஒரே தங்கை துசாலை தான் 101 வது உடன்பிறப்பு.

#ஒரு மிகப்பெரும் நிகழ்வினை நேரடி வர்ணனையாக சொல்லும் ரன்னிங் கமெண்டரி கொடுக்கும் முறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்களே, மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார் விதுரர்.  சஞ்சயன் .இதை அடிப்படையாக வைத்தே பின்னாளில் வானொலி ,தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்கும் வழக்கம் வந்தது.

#முதன் முதலில் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக பணிப்புரிந்ததும் ஒரு இந்தியரே, மகாப்பாரதபோரில் பாண்டவர்கள் வெற்றி அடைய யார்க்காரணம் என தீர்ப்பு வழங்கியது , போரினை ஆரம்பம் முதல் கடைசிவரைப்பார்த்த பார்பரிக்கா என்பவரே(பீமனின் பேரன்,கடோத்கஜன் மகன்). இவரே உலகின் முதல் போர்ப்பார்வையாளர் ஆவார். இதன் பின்னரே மானாட மயிலாட போன்றவற்றில் கெமிஸ்ட்ரி பற்றிப்பேச ஆரம்பித்தார்கள் நீதிபதிகள்.

# உலகின் முதல் டிரான்ஸ்ஜெனிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததும் இந்தியாவில் தான், சிவன் , யானை தலையை ,மனித உடலுக்கு பொருத்தி வினாயகரை உருவாக்கினார்.

#முதல் பறக்கும் எந்திரம் கண்டுப்பிடித்ததும் இந்தியாவில் தான் , இராவணன் புஷ்பக விமானம் வைத்திருந்தார், அவரே உலகின் முதல் பைலட் லைசென்ஸ் வாங்கியவர்.

#கொரில்லா தாக்குதல் எனப்படும் மறைந்து இருந்து தாக்கும் உத்தியைக்கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே ,இராமன் மறைந்திருந்து வாலியை தாக்கியதே உலகின் முதல் கொரில்லா தாக்குதல்.(வாலி வானரம், இராமன் மனிதன் என்பது ஒரு முரண்நகை)

#உலகின் முதல் கடல்ப்பால சிவில் கட்டுமான வடிவமைப்பாளர் இராமன் அவர்களே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டியுள்ளார்.

# உலகின் முதல் போர் நிறுத்த அமைதி தூதர் அனுமன், இராவணனுக்கும் , இராமனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போட தூது சென்றுள்ளார்.

#உலகிலே ஸ்டெனோகிராபர் என்ற தொழிலை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, வியாசர் மஹாபாரதம்  எழுத விநாயகரை ஸ்டெனோகிராபராக பணிக்கு வைத்துள்ளார்.

#உலகின் முதல் நில அளவையாளர் வாமனன் அவர்களே ,கால்களாயே உலகை அளந்துள்ளார்.

#உலகிலேயே தொலைநிலைக்கல்வி முறையை முதலில் அறிமுகப்படுத்தியது இந்தியாவே, ஏகலைவன், துரோணரிடம் தொலைநிலைக்கல்வி கற்றுள்ளார்,(கட்டணம் ரொம்ப அதிகம்)

# கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ்க்கு முன்னோடியான ரைஸ் பிளேக்ஸ் எனப்படும் அவலைக்கண்டு பிடித்தது இந்தியா தான், குசேலர் , கண்ணனுக்கு அவல் கொண்டு சென்றதே ஆதாரம்.

இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம்  ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))

இன்னும் எத்தனையோ பல அறிவியல் சிறப்புகள் இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன் ,விடுபட்டவை மற்றும்  உங்களுக்கு தெரிந்தது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்!

Tuesday, November 22, 2011

விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!



விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!


அந்தக்காலத்தில வெண்ணிர ஆடைப்படத்தில் செவப்புக்கலர் புடவைல உங்கள பார்த்தப்போதே அடுத்த முதல்வர் கிடைத்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்த நம்ம மக்கள் தற்ப்போது மீண்டும் ஒரு மாற்றம் வேண்டும் என ஆட்சியை அலேக்காக தூக்கீ அம்மா கையில் கொடுத்தார்கள,அவரும் ஏமாற்றாமல் மக்கள் திக்கு முக்காடும் வகையில் அதிர்ச்சியளித்தார் .

ஆனால் இவ்வளவு மிக நல்ல மாற்றம் வரும் என மக்கள் கனவிலும்  எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்.
அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் உலகமே வியக்கும் வகையில் திடீர் என தமிழக மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்தது எல்லாரும் மானாவாரியாக செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், இதனால் பணவீக்கம் அதிகரித்து அதற்கு அயோடக்ஸ் போட வேண்டிய நிலை வந்தது.

பணவீக்கத்தைக்கட்டூப்படுத்த பல பொருளாதாரப்பெருச்சாலிகளும் திணறிய நிலையில் அம்மா சுலபமாக பேருந்து,பால்,மின்சாரம் என கொஞ்சம் மட்டும் விலை உயர்த்தி பணப்புழக்கத்தினைக்கட்டுப்படுத்தி இந்தியாவை பெரும் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். இதனைப்பாராட்டி மண்டைல சிக்கு அலுவால் அம்மாவுக்கு ரகசியமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் அதில் ரூபாய் 32 இருந்தாலே ஒரு மனிதன் இந்தியாவில் சுகபோகமாக வாழ முடியும்,அதை விட அதிகம் பணம் கையில் இருந்தால் ஆடம்பரமாக செலவு செய்வான், பணவீக்கம் அதிகம் ஆகும், உங்கள் செயல்பாடுகள் பணவீக்கத்தினை வடிய வைக்க உதவுகிறது எனப் பாராட்டியதே அம்மாவின் நிர்வாகதிறனுக்கு சான்று.

தங்க தாரகையின் ஆட்சில இவ்வளவு நல்லது ஒரு பக்கம் நடந்தாலும் , நன்மையிலும் தீமைப்போல கொஞ்சம் பேருக்கு இதனால பாதிப்பும் வந்து இருக்கு , சுமாராக 6.5 கோடி பேர் மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பாதாக செய்தி, இந்த மைனாரிட்டிகும்பலுக்கு விலையுயர்வை சமாளிக்க தெரியலை.எனவே அவர்களுக்காக சில தொழில் ரகசியங்களை இலவசமாக சொல்லித்தரலாம்னு இருக்கேன்.

பேருந்துக்கட்டண உயர்வு சமாளிப்பு வித்தை:

ஃபிராட்வே தொழில்நுட்பம்:

# உதாரணமாக நீங்க பல்லாவரத்தில இருந்து பிராட்வேக்கு போகனும் என்று வைத்துக்கொள்வோம், முன் வாசல் வழியே பிராட்வே பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், டிக்கெட் எடுக்காமலே கொஞ்சம் நேரம் கடத்துங்கள் அதற்குள் கிண்டி நெருங்கி இருக்கும், இப்போ அரியாசணத்தில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம் போய் தாம்பரத்துக்கு ஒரு டிக்கெட் என கேளுங்கள்! அவரும் ரொம்ப அன்பா,மரியாதையா யோவ் அறீவு இருக்கா இது பிராட்வே வண்டி என கத்திக்கொடுப்பார் பாட்டு, ஹி..ஹீ நான் ஊருக்கு புதுசு பஸ்ல தாம்பரம்-பிராட்வே போட்டு இருந்துச்சா ஏறிட்டேன் என சமாளித்து , தாம்பரம் எப்படி போறது என அவரிடமே வழிக்கேட்டு ,ஒருவழியாக சமாளித்து முடிக்கும் போது கிண்டி வந்திருக்கும் , இறங்கிக்கொள்ளுங்கள்!

மேற்சொன்ன கதைய அடுத்து அடுத்து இரண்டு, மூன்று பேருந்தில் சொல்லி அப்படியே பிராட்வே வரைக்கும் நீட்டிப்பது உங்கள் வாய்ஜாலத்தில் இருக்கு. வாயுள்ள பிள்ளை பிழைக்குமாம்!

#ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்:

உங்க  மாமனார் கிட்டே சீதனமாக நீங்க வாங்கிய ரெண்டு சக்கரமோ, இல்லை தவணைல வாங்கிய நாலு சக்கரமோ உங்களிடம் இருந்தால் கிடைத்த விலைக்கு வித்துடுங்க.கிடைக்கிற காசுல ஒரு பழைய ஆட்டோ ,ஷேர் ஆட்டோனா இன்னும் வசதி வாங்கிக்கோங்க, வண்டி வாங்கியதும் ஆட்டோ பின்னாடி அம்மா படத்தை பெருசா போட்டுக்கோங்க, ஆட்டோக்கு பெர்மிட் இல்லைனா சமாளிக்க உதவும்!

இல்லை எனில் பிரைவேட் என போட்டுக்கொள்ளலாம், ஆட்டோ எதுக்கா இனிமே அலுவலகம், இன்ன பிற சவாரிலாம் ஆட்டொல தான். இப்போ செயல் முறைக்கு வருவோம். அலுவலகம் கிளம்பிப்போற டைம் பீக் அவர்ஸ் என்பதால் எப்படியும் வழில நிறையப்பேர் கடன் வாங்கியாவது பஸ் காசு வைத்துக்கொண்டு நிற்பாங்க, உங்க அலுவலகம் போர ரூட் வரவங்களா பார்த்து சவாரிப்பிடிங்க அப்படியே ஆங்காங்கே பிக் அப் ,டிராப் னு அலுவலகம் போய் சேருங்க.திரும்ப மாலையிலும் இதே சவாரி தான்!

இப்போ கூட்டிக்கழித்துப்பார்த்தா கணக்கு லாபமாகவே இருக்கும் பெட்ரோல் காசும் கிடைச்சுடும். உங்களுக்கு அலுவலகம் போக வர ஆகிற செலவும் மிச்சம்.

இரண்டு சக்கரம் என்றால் மனைவி(கள்), குழந்தைகள்னு தாரளமாக கூட்டிப்போக முடியாது இப்போ ஆட்டோவில் தாரளமாக போய் வரலாம்.மேலும் உங்க பசங்களை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வரும் வேலையும் சேர்த்து செய்தால் (அக்கம் பக்கம் குழந்தைகளையும் சவாரிப்பிடித்தால் இரட்டிப்பு லாபம்), வழக்கமாக ஆட்டோக்கோ ,வேனுக்கோ கொடுக்கும் காசும் மிச்சம் ஆகும்.மேலும் வார இறுதிகளில் உபத்தொழிலாக ஆட்டொ சவாரி ஓட்டினா நல்ல வருமானம் உறுதி.

இல்லைனா இருக்கவே இருக்கு சங்க கால லிப்ட் பாலிசி, கூடுதலாக ஒரு ஹெல்மட் வாங்கி வைத்துக்கொண்டு கைய காட்ட வேண்டியது தான்!

பாலுக்கு கல்தா:

பால் விலைக்கொடுத்து வாங்க முடியாத பிலோவ் பால் லைன் மக்களா(BPL) நீங்க , உங்களுக்காக சில வித்தைகள்.

முதல் வழி பாலைக்கட் (கவரை அல்ல)செய்து விட்டு , கடுங்காபி என்கிற வரக்காபி குடிக்கப்பழகிக்கொள்ளலாம்.

காகிதம் பொறுக்கு காபி குடி:

காபிக்குடிக்கலைனா கக்கா போக முடியாது என்ற தீவிர குடி வெறியர் எனில், காலைத்தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கும், சீக்கிரமாக எழுந்து பக்கத்து வீட்டுக்கு போங்க , அவங்க வீட்டுக்கு போட்டு இருக்க செய்தித்தாளைக்கைப்பற்றிக்கொண்டு வரவும்..

பின்னர் கொஞ்ச நேரம் கழித்து ஒன்றும் தெரியாத பாலகன் போல பக்த்து வீட்டுக்கு போய் ஹி..ஹி உங்க பேப்பரை எங்க வீட்டுல தெரியாம போட்டுட்டாங்க, இந்தாங்க என்று சொல்லிக்கொடுத்து விட்டு , அப்படியே காபி வாசம் மூக்கை தொலைக்குதே ஹி..ஹி பில்டர் காபியா என்று அடிப்போடவும்,கூடவே என் பொண்டாட்டியும் காபினு ஒன்னு போடுவா கழனி தண்ணிப்போல என்று சொல்லி வாய் மூடி இருக்க மாட்டிங்க, உங்க சம்பாஷணையை ஒட்டுக்கேட்டுகொண்டிருக்கும் ,பக்கத்து வீட்டு மாமி கையில் காபியுடன் உங்க முன்னர் பிரசன்னம் ஆகிடுவாங்க!எல்லாம் பெண்களின் ஈகோ தான் உங்க மனைவிக்கு காபி போட தெரியலைனு கேள்விப்பட்டதும் அவங்களுக்கு அதில ஒரு அல்ப சந்தோஷம்.

இந்த பேப்பர் பொறுக்கும் தத்துவம் எல்லா நாளும் கைக்கொடுக்கும்னு சொல்ல முடியாது, அடிக்கடி ,பக்கத்து வீடு, எதிர் வீடு என்று மாற்றி ,மாற்றி செய்ய வேண்டும்.

ஆபீஸில் சகலாகலா வல்லவன்:

பெரும்பாலும் கஷ்டமான வேலை,இல்லை மத்தவங்களூக்கு தெரியாத ஒன்றை செய்து காட்டி சகலகலா வல்லவன் என்று அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று ஒரு ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் இப்படி எக்ஸ்ட்ராவாக எனர்ஜி காட்டி பல்ப் வாங்குவோம். சரி ஆனால் இப்போ நாம அவங்களுக்கு பல்ப் கொடுக்கலாம்.

ஆபீஸ் பாயை விட்டு பிளாஸ்கில் காபி வாங்கி வர சொல்லும் வழக்கம் உங்கள் அலுவலகத்தில் இருக்கா , அப்போ இனிமே நீங்க தான் காபி பாய், காபி குடிக்கும் நேரமாக பார்த்து , ஆபிஸ் பாய் காபி நல்லாவே வாங்கி வர மாட்டேன்கிறான் ,நானே வாங்கி வரேன்னு வாலண்டியர் வடிவேலாக கிளம்புங்கள்.காபிக்கடைக்கு போய் 10 காபி வேண்டும் எனில் 8 காபி மட்டும் வாங்கிக்கொண்டு(2 காபி காசு உங்களூக்கே) , அங்கேயே ஒரு கப் ஊற்றிக்குடிச்சுட்டு வரவும்.சிலக்கடைகளில் கடைக்காரனே ஒரு கப் காபி தருவான்.

அலுவலகம் திரும்பியதும் உஸ்ஸ் அப்பாடா என்றபடியே மீண்டும் ஒரு காபியை உள்ளே இறக்குங்கள்! உங்களுக்காக ஸ்பெஷல் காபி வாங்கி வந்தேன் என்று பில்ட்-அப் கொடுக்கவும் தவறக்கூடாது. இனிமே என்ன ஆசைப்பட்டாப்போல சகலகலா வல்லவன் பட்டமும் கிடைச்சாச்சு, ஓசிக்காபியும் ஆச்சு! ஒரே கல்லில ரெண்டு காபி!

மின் கட்டண உயர்வு ஏப்ரலில் தானாம் அதுவரைக்கும் ஜமாய்க்கலாம், அப்போ உங்களூக்காக சில அதிநவீன தீவட்டி டெக்னாலஜிகள் வழங்குகிறேன்.

Friday, November 18, 2011

சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?




சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?



என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)

காரணம் இணைக்கும் போது ஏதும் சொல்லாமல் இணைந்த பிறகு 10 பேருக்கு ஓட்டு போட்டால் தான் உங்க பதிவை இணைப்போம்னு சொல்றாங்க!

அந்த திரட்டி நிர்வாகிகள் அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்யும் போது மண மகனிடம் இப்படி 10 பேரை என கண்டிஷன் போடாமல் இருக்க கூகிளாண்டவர் அருள் புரியக்கடாவது!

அப்புறம் மக்கள் னு ஒரு திறட்டி அங்கே போனா ரொம்ப கொடுமையா இருக்கு, எல்லாம் ஏதோ கில்மா டோரண்ட் போல பதீவ போடுறாங்க, கொடுமை என்னான பதிவில தமிழ் தப்பா இருக்குனு சண்டைக்கு வருவாங்க,அங்கே திரட்டிலவே தப்பா இருக்கு தமிழ்!

இண்டலி .என்னையா இது அகில இந்திய பாரதிய வித்யாபவன், போல ஆரம்பிச்ச்சுட்டு, ஓவரா கடிக்கிறாங்க! அவங்க கேப்சாவிலா தப்பா போட்டா கூட தப்புனு மெசேஜ் வர மாட்டேங்குது , ரொம்ப பயங்கரமான டெக்னாலஜியா இருக்கும் போல :-))


யுடான்ஸ் லேட்டஸ்டாக ,பதிவர்களுக்காக ,பதிவர்களால் என்று கிளம்பி இருக்கு, இது நல்லா இருக்காப்போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு :-))

ஏன் கேட்டிங்கண்ணா பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுது, எவன் படிப்பான், இல்லை என் பதிவை எத்தன பேரு படிப்பான்னு எனக்கு தெரியாதா?

ஆனால் எனக்கு ஒரு கமெண்ட் கூட இருக்காது, அதே சமயத்தில் தமிழ் மணத்தில் இணைத்தவுடன் கமெண்ட் வரும்!(ஓட்டுக்கு யுடான்ஸ், கமெண்டுக்கு தமிழ்மணமா)

இது எப்படி உனக்கு தெரியும் நீ என்ன ஜேம்ஸ்பாண்டா என்றெல்லாம் கேட்காதிங்க, என் பதிவு தமிழ் மணத்தில 30 நிமிடம் தாமதமாக வரும் காரணம் நான் அப்போ 2006 ல பதிவு பண்ண ஆளூ,நடுவில வரலை,எனவே இப்போ மெதுவா தமிழ் மணத்தில காட்டும். எனவே யுடான்ஸ்ல 2 டூ 3 ஓட் வாங்கின பிறகு தான் தமிழ்மணத்தில வரும், சில - ஆர் + ஓட்டுகள் காட்டும், கமெண்டுகள் காட்டும்.

என்னைப்பொறுத்த வரைக்கும் - ஆர் + ஒன்றுமே இல்லை, எல்லாம் என் ஓட்டு பொட்டில விழுந்த பிறகு அதுல என்ன மைனஸ் ஹி..ஹி!(எல்லாம் என்னோட ஓட்டு,மொத்தமா கூட்டிப்பேன்)

யுடான்ஸ்ல பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுவது எப்படி, அது நம்ம ஓட்டா? தமிழ் மணம் சேர 30 நிமிடம் ஆகும் அதுக்கு இடையில 2-3 என யுடான்ஸ்ல ஓட்டு மட்டும் வரும் ஆனால் கமெண்ட் வராது. ஆனால் தமிழ் மணத்துல சேர்ந்த உடன் சில கமெண்ட்ஸ் வரும்.எனவே என்ன பொறுத்த வரைக்கும் தமிழ்மணம் தான் சரியா என்னை கொண்டு போய் சேர்க்கிறது.

என்னோட தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தமிழ் மணம் எல்லாப்பதிவருக்கும் இலகுவா இருக்கு, அந்த அளவுக்கு மற்ற வலைத்திரட்டிகள் இல்லைனே சொல்வேன்.

அடுத்து யுடான்ஸ் இருக்குனு நினைக்கிறேன்! காரணம் நான் இந்த இரண்டில் மட்டுமே எளிதாக சேர்ந்துள்ளேன்! மற்ற இணைய உலக ஜாம்பவான்கள் என்னை புறக்கணிக்க வேண்டும்!

Thursday, November 17, 2011

பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!



பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!




மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா, அவர்களை துணிவுள்ளம் கொண்ட இரும்பு பெண்மணி என்று வர்ணிப்பார்கள் , அவர் எதை செய்தாலும் தீர்க்கமாக செய்வாராம். அவர் அளவுக்கு துணிவுள்ள அரசியல்வாதி இந்தியாவில் இல்லை என்றால் அது மிகை ஆகாது.

சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து , மக்கள் சேவை செய்ய வாய்ப்பை பெற்றவர், ஊழல் செய்தவர்கள் வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பியவர் , ஆனால் உள்ளாட்சியிலோ கூட்டில் இருந்தவர்களுக்கு விடுதலை அளித்து , சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொடுத்த ராசதந்திரி, துணிச்சலாக தனியாக களம் கண்டு பெருவாரியாக வென்றுக்காட்டிய வித்தகர்.

தொலைநோக்கு கொண்ட சிறந்த அரசியல்நிர்வாகியான அவர் , இனிமேல் பாராளூமன்ற தேர்தல் மட்டுமே அடுத்து வரும் என்பதையும் சிறப்பாக கணித்து உள்ளார். அடுத்த சட்ட மன்ற தேர்தலோ நான்கு ஆண்டுகளுக்கு அப்பால் தான். இடைப்பட்டக்காலத்தில் அதிரடிக்காட்ட வாய்ப்பில்லாமல் போய் விட்டதே, துணிச்சலைக்காட்ட என்ன செய்யலாம் , என மற்றவர்களைப்போல் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் , , கணிதம்,புள்ளியியல் ,பொருளாதார அறிவினை செயல்ப்படுத்தி துணிச்சலாக பால், மின்சாரம், பேருந்துக்கட்டணம் ஆகியவற்றை மிகவும் நியாயமாக உயர்த்தியுள்ளார்!

முதல்வராக இருக்கும் போதே வழக்கு மன்றத்தில் மரக்கூண்டு
(" குற்றவாளி"க்கூண்டுனு சொன்னா கோவி திட்டு வார்)ஏறி துணிச்சலாக நீதிபதிகளே வியக்கும் வண்ணம் பதில் கூறி சாதனைப்படைத்தவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினமாக விலையுர்வு அறிவிப்பு ஜொலிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!

இந்த விலையுயர்வினை அனைவரும் மனம் திறந்து பாராட்டி; வரவேற்க வேண்டும், எதிர்ப்பவர்கள் பொருளாதார அறிவில்லாதவர்கள், நம் நாட்டின், குறிப்பாக தமிழ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு அறியாதவர்கள் ஆவார்கள்.

மாட்டு வண்டி, குதிரை வண்டியில் கட்டு சோறுக்கட்டிக்கொண்டு பயணித்தை மறந்து அடிக்கடி பேருந்தில் ஏறி பயணம் செய்யலாமா, நம் பாரம்பரியம் என்னாவது. மாடு,குதிரை புகை விடாது, சாணிப்போடும் அவை இயற்கை உரம், அப்படி இருக்கையில் புகை கக்கும் பேருந்தில் போக ஆசைப்படுவது சுற்று சூழலுக்கு கேடு.

சுற்று சூழல் காக்க வேண்டும்,புவி வெப்பமாதல் தடுக்க வேண்டும் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள், என்பதால் , கட்டணத்தை உயர்த்தினாலாவது பேருந்து பயணம் தவிர்ப்பார்கள் ,மேலும் பலர் பூட் போர்டில் தொங்கி கையைக்காலை உடைத்துக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டுல எல்லாம் மலிவா இருப்பதால மத்திய அரசு எவ்வளவு தான் பெட்ரோல் விலை ஏத்தினாலும் கவலைப்படாம வாங்கி ஊத்திக்கிட்டு,பக்கத்து தெருவிற்கு போக கூட மாமானார் வாங்கிக்கொடுத்த பைக்கிலோ, அல்லது தவணையில் தறான்னு வாங்கிய வண்டியிலோ போறாங்க,இதனால் இளம் வயதிலே தொப்பை,கொழுப்பு எல்லாம் வருது, வாக்கிங் போக சொன்னா கேட்பதில்லை,என்பதால் தான் மதியூகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளார் நம்ம முதல்வர்.

இதனால் இப்போ எத்தனை நன்மைகள்,தமிழனோட பணம் தமிழ் நாட்டிலயே செலவாகும், இனிமே மத்திய அரசை நிதிக்கேட்க தேவையில்லை, மத்திய அரசுக்கு விலை ஏற்ற இருக்கும் உரிமை மாநில அரசுக்கும் இருக்குனு காட்டி மாநில உரிமையை வலுவாக்கி இருக்கோம். என்பதை மானமுள்ள தமிழர்கள் சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த காலத்தில் வீட்டுக்கு குவளையில் பால் எடுத்து வந்து ஊற்றிய கோவிந்த சாமி, கோபால் போன்ற நம்ம ஊரு பால்காரர்களை நன்றீக்கெட்ட தனமாக மறந்து விட்டு இரண்டு நாளுக்கு முன்னர் கறந்து ,வெண்ணை எடுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பழையப்பாலை பாலித்தீன் கவரில் அடைத்து விற்றால், அதை வாங்கிக்குடிக்க எப்படி பழகிக்கொண்டோம். இது ஏகாதிபத்திய நாடுகளின் சதி, இதனால் பாலித்தீன் உறைகள் அதிகரித்து மண்ணை மாசுப்படுத்துகிறது.

மேலும் வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் வரை வரக்காபி தான் குடித்து வந்தோம் என்பதையும் மறந்து விட்டோம். திடீர் என வெள்ளைக்காரனைப்பார்த்து வெள்ளைப்பால் வாங்கி குடித்தோம் ,மானகெட்ட தமிழனை எப்படி திருத்துவது. பழசை எப்படி நினைக்க வைப்பது , எனவே போட்டார்கள் மதியூக மந்திரிகள் கூட்டத்தை , ஏற்றினார்கள் பால் விலையை என்ன ஒரு துணிச்சல்,ராச தந்திரம். இது போன்ற திறமைகள் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே நம்ம முதல்வர் அம்மாவை தவிர வேற யாருக்காவது இருக்குமா?

இதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் விளைந்துள்ளது, பழைய பாரம்பரியம் மீண்டும் நியாபகம் வந்துள்ளது.வரக்காபியில் சுக்கு, மிளகு,பன வெல்லம் போட்டு குடித்தால் தொண்டைக்கு நல்லது., சளீ காய்ச்சல் ,தும்மல், இருமல் வராது, நமக்கு மருத்துவ செலவு மிச்சம் ஆகும்.ஆரோக்கிய வாழ்வு லைப்பாய் சோப் போட்டுக்குளிக்காமலே அனைவருக்கும் வரும்.

மேலும் பாலித்தீன் உறையில் அடைக்கப்பட்ட பழைய பால் வாங்குவது குறையும், அப்படியே பால் ஊத்திக்காப்பி குடிக்க ஆசைப்படும் பேராசைக்காரர்களும் உள்ளூரில் மாடு வைத்து பால் கறந்து விற்கும் கோவிந்தன், கோபாலனை நாடுவார்கள், இதனால் உள்ளூர் வேலை வாய்ப்பு பொருளாதாரம் கூடும்.பாக்கெட் பால் விற்பதால் ஏகாதிப்பத்திய பெரு முதலாளீகள் மட்டுமே கொள்ளையாக லாபம் ஈட்டுவார்கள்.

மேலும் இலவச,ஆடு,மாடுகள் வழங்கப்பட இருக்கிறது அதை வைத்து எளிதாக பிழைக்க முடியும். மாட்டுப்பால் கிடைக்காத போது காந்திய வழியில் ஆட்டுப்பாலும் வாங்குவார்கள்.பாலித்தீன் பாக்கெட்கள் குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.

இதெல்லாம் சரி மின்சாரக்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும் என்றுக்கேட்கலாம். பின்ன என்ன மின்சாரம் தாராளமா ,மலிவாக்கொடுத்தா அறிவு வளர மாட்டேன்குது , மக்கள் டீவி தான் பாக்குது. அந்த காலத்தில எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய ஆளானவங்கள கேட்ட நான் தெருவிளக்கு வெளிச்சத்தில படிச்சு பெரிய ஆளானேனுசொல்வாங்க, இப்ப யாராவது அப்படி சொல்றாங்களா? மீண்டும் அப்படி பெருமையா சொல்ல வைக்க வேண்டாமா?

நிறையப்பேரு சும்மா மின்விசிறி, விளக்கு எல்லாம் போட்டு வைக்கிறாங்க, ஆஃப் பண்ன மாட்டேன்கிறாங்க, மின்சாரத்தை சேமிக்க சொன்னா கேட்கிறாங்களா? விலையை ஏத்தினா அப்படி செய்வாங்களா? அதான் ஒரு திட்டம் போட்டு மின்சாரத்த சேமிக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் 4 மணி நேரம் மிந்தடை செய்துப்பார்த்தோம் அப்பவும் அடங்காம காசு  இருக்கும் திமிரில் இன்வெர்ட்டர் வாங்கிப்போட்டு மின்விசிறி,விளக்கு எறிய வைக்கிறாங்க.சிலபேர் அப்போ கூட டீவி சீரியல் பாக்கிறாங்க!

இன்வெர்ட்டர் வாங்குகிற அளவுக்கு காசு இருக்க மக்கள் கஷ்டப்படுகிற அரசாங்கத்துக்கு வருமானம் வர வழி செய்யக்கூடாதா அதான் மின் கட்டணம் உயர்வு.இனிமே மின்சாரம் விரயமாகாது, புவி வெப்பம் ஆகாது, நிறைய அறிஞர்கள் தெரு விளக்கில் படித்து உருவாகுவார்கள்.

இப்படி எதை செய்தாலும் துணிவுடனும், மக்கள் நலனுக்காகவும் பல நோக்கு பார்வையில் தாயுள்ளத்துடன் செய்பவர் தான் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், அவர்களை நாம் அனைவரும் மனம் திறந்து பாராட்ட வேண்டும் தினம் "அம்மானா சும்மா இல்லைடா "என துதிக்க வேண்டும்.அப்படி செய்யாம பதிவுப்போட்டு வசைப்பாடினா ,பதிவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படும்.குறிப்பா சினிமா பதிவுகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படும்.



Wednesday, November 16, 2011

புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!





புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!


சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.

பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?

ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.

இது எப்படி எனில்,

சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.

சேனல் A,

10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல்

டீஆர்பி = 8*10=80%

இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.

உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1

GRP =8*1*10=80 % என்றே வரும்.

சேனல் B :

10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,

டீஆர்பி= 4*10=40%




துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2

GRP =4*2*10=80% என வரும்.

8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!

அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.

TRP= TARGET (TELEVISION) RATING POINT,

GRP= GROSS RATING POINT

இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.

பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.

வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.

இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.