Friday, May 16, 2014

தேர்தல்-2014 : ஒரு புதிய பார்வை!

(இந்த வவ்வால் பார்வையே வித்தியாசமா இருக்கே ...ஹி.ஹி)

அரசியல் பதிவு ஒன்னு போட வேண்டும் என நினைத்து ,அவ்வப்பொழுது சில குறிப்புகள் எடுப்பதும் ,பின்னர் குப்பையில் இடுவதுமாக போய்க்கொண்டேயிருந்தது, இன்றாவது அப்பதிவை வெளியிடவில்லை,எனில் ,நமது அரசியல் கணிப்புகளை பின்னர் சொல்வதில் பயனேயில்லை, அதான் இன்று முடிவே சொல்லிட போறாங்களே அப்புறம் என்ன கணிப்பு வேண்டிக்கிடக்கு, சரி நேரா மேட்டருக்கு போவோம்!

அகில இந்திய அளவில் மோடி அலை வீசுது என்கிறார்கள் ,மெரினா பீச்சில் கடல் அலையை தவிர வேற அலை எதுவும் நமக்கு தெரியலை, பிஜேபி என்பது தேசியக்கட்சி எனினும் பல மாநிலங்களில் அடித்தளமே இன்னும் உருவாக்கிக்கொள்ளாத கட்சியாக தான் உள்ளது.

# பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்கள்;

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ம.பி, டெல்லி, கோவா, இமாச்சால், உ.பி,ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களே, இங்கு தான் பெரும்பாலான தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தென்னகத்தில் கர்நாடகம் தவிர , கேரளா, தமிழ்நாடு,ஆந்திரா ,புதுவையில் எல்லாம் செல்லாக்காசு.

அதே போல , ஒரிசா, பீகார் , சத்தீஸ்கர் ,மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மேலும் வட கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் பெரிதாக செல்வாக்கே இல்லை.இப்பகுதிகளில் எல்லாம் மாநிலத்துக்கு ஒரு எம்.பி வென்றால் அதிசயம்.

எனவே பொதுவாக களப்பணி ஆற்றுதல் ,வாக்கு திரட்டுதல் என செய்தால் மட்டுமே அலையே அடிச்சாலும் வெற்றி கிட்டும் எனவே அடித்தளமே பல மாநிலங்களில் இல்லாத பிஜேபி தனிப்பெரும் மெஜாரிட்டியாக 272 இடங்களை பெற முடியாது( கரிப்பூசிடுவாங்களோ...ஹி...ஹி எனக்கு தான்)

பிஜேபி அதிகப்பட்சம் வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்- சுமார் 170-190 இடங்களே.

கூட்டணிகள் வெல்ல வாய்ப்புள்ள இடங்கள் சுமர் 50 வரையிலே இருக்கும் ,மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 240 இடங்களுக்குள் வரக்கூடும்.

# காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் உள்ளது அதே போல சுமார் 15 மாநிலங்களில் இன்னமும் ஆட்சியில் உள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் நல்ல அடித்தளமும் உள்ளது.

பொதுவாக தென்னக மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் இன்னமும் வலுவான சக்தியே ,எனவே அகில இந்திய அளவில் பிஜேபியை விட அடித்தளம் வலுவான கட்சியே.

தொடர் ஊழல் குற்ற சாட்டுகள், தொடர்ந்த்து 10 ஆண்டுகள் ,ஆட்சி எனும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான  அதிருப்தி என்பவை பலவீனங்களாகும் ,அதுவே பிஜேபியின் பலம், கடந்த பத்தாண்டுகளில் பிஜேபி எதிர்க்கட்சியாக பெரிதாக எதுவுமே சாதிக்கவில்லை , மோடியை திட்டமிட்டு விளம்பரப்படுத்தினாலும் , அவர் அகில இந்திய பிராண்டாக சொல்லிக்கொள்ள தக்க சாதனைகளை எதுவும் செய்யவில்லை.

காங்கிரசின் கோஷ்டி அரசியல்,ஊழல், அதிருப்தி மன நிலை ஆகியவற்றினை கடந்து இம்முறை அதிகப்பட்சம் வெற்றிப்பெற வாய்ப்புள்ள இடங்கள் சுமார் 110-120, குறைந்த பட்சம் 78 இடங்கள்.

தமிழகத்தினை பொறுத்த வரையில்,

அதிமுக

தேர்தலில் முந்திக்கொண்டி களத்தில் குதித்தது முதல் அனைத்திலும் பிறக்கட்சிகளை தனக்கு பின்னால் வர வைத்தார் அம்மையார்,ஆனால் நாற்பதும் நமக்கே எனும் வெற்றி நிலையெல்லாம் இல்லை,

மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 23-24 இடங்கள் அதிகபட்சமாகவும், குறைந்த பட்சம் 17 இடங்கள் வரலாம்.

இந்தளவு இடங்கள் கூட எப்படி வருமெனில் , கடந்த ஆட்சியை விட தேர்தல் வரையில் மின் வெட்டினை சமாளித்து விட்டது ,மேலும் தேர்தலுக்கு வெகு நெருக்கமாக பல இடங்களில் "அத்தியாவசிப்பணிகளைசெய்துக்கொடுத்தது", உ.ம். சென்னை புற நகர்ப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையே இல்லாத இடங்களில் எல்லாம் தார்ச்சாலை வந்துவிட்டது

(road work on progress)

தேர்தல் காலங்களில் எல்லாம் இப்படி செய்வது தானே என நினைக்கலாம், ஆனால் எனக்கு தெரிஞ்சு 2 சட்ட மன்ற தேர்தல் ,2 நாடாளு மன்ற தேர்தல் வந்து விட்டது ஆனாலும் அவ்விடங்களில் சாலைகளே போடப்படவில்லை, இம்முறை தான் சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வசதி என்பதோடு "லேண்ட் வேல்யூ" வேறகூடிப்போச்சு -))

மேலும் சென்னைப்புற நகர்ப்பகுதிகளில் பல மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன, இது வரையில் பேருந்துகள் செல்லாத தடங்களில் எல்லாம் செல்கின்றன.


கூடுவாஞ்சேரி அருகில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் 8-10 கி.மி உள் இருக்கும் பகுதி காட்டூர் ,காட்டுப்பாக்கம் , காரணை ,கன்னிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு எல்லாம் மினி பஸ் ஜிகு ஜிகு என போகுது,முன்னர் எல்லாம் இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி ,அல்ல ஊரப்பக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து , பார்க்கிங்கில் வண்டிய விட்டு தான் நகருக்குள் செல்ல முடியும், இப்போ நேராக காட்டூர் - தாம்பாரம், கன்னிவாக்கம் - தாம்பரம் என மினி பஸ்கள் ஓடுது.


இதனால் சாலை வசதி ,பேருந்து வசதியுள்ள இடங்கள் என சொல்லி ரியல் எஸ்டேட் வேற தூக்குது , மக்களும் ஹேப்பி!!!.

ஒரு சில மினிபஸ்கள் விட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை உறுதி செய்தாயிற்று ,இப்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துலவும் , சில பல ஆயிரங்களில் கூடுதல் வாக்கினை அம்மையார் கைப்பற்றக்கூடும் என்பதால் ,இம்முறை நல்ல முடிவு கிடைக்கும் என தெம்பாக உள்ளார் எனலாம்.

தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என சொன்னதெல்லாம் "காகித அறிக்கை" தான் ,அவர்களும் பார்த்தா "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்,பூசாதமாதிரியும் இருக்கணும்' என கெடுபிடி போல ஒரு மாதிரி வேலைப்பார்த்து முடித்து விட்டார்கள், வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னரே வாக்களர்களுக்கு ஒரு ஓட்டுக்கு சுமார் 200 அல்லது 300 ரூ பட்டுவாடா ஆகிவிட்டது , கடைசி நாளில் பணப்பட்டுவாடா செய்யலாம் என முயற்சித்து மாட்டியது ,திணறியது எல்லாம் எதிர்க்கட்சிகளே அவ்வ்!

இதில் வேற மேலிடத்தில்  500 ரூ கொடுக்க சொல்லி கொடுத்ததில் அமுக்கிட்டு 300 அல்லது 200 கொடுக்கிறாங்கனு மக்களுக்கு புலம்பல் அவ்வ்.

# திமுக:

மேற் சொன்ன எந்த சாதகங்களும் இல்லை ,மேலும் கடந்த 10 ஆண்டுகளாக  மத்தியில் ஆட்சியில் இருந்தும் 2ஜீ இல்  மட்டுமே "பேர்" வாங்கியிருக்கு மற்றபடி சொல்லிக்கொள்ளும் சாதனைகளே இல்லை என்பதால் மாநில தேர்தல் போல அம்மையாரின் ஆட்சி குறைப்பாடுகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்கும் பரிதாப நிலை.

# சகோதர சண்டை, எனவே கட்சியினரில்  சில பிரிவுகள் உருவாகி நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருக்கு.

# பல மாவட்டங்களில்முன்னால் அமைச்சர்களை வேட்பாளர்களின் மேம்படி செலவினை கவனிக்க சொல்லவே ,அவர்கள் நாம ஏன் செலவு செய்து இன்னொருத்தனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என "கஜானாவை" தொறக்கவேயில்லை, இதனால் வார்டு அளவில் கிடைக்க வேண்டிய தேர்தல் கவனிப்புகள் " இல்லாமல் உடன்ப்பிறப்புகள் பெரிதாக ஆர்வமில்லாமல் சுருண்டு விட்டார்கள்.

ஒரு வார்டுக்கு 10 பேருக்கு கூட தின செலவுக்கு காசு கொடுக்காம , நீப்பாரு அப்பறம் பார்த்துக்கலாம் என சொல்லவே ,பல கிளைச்செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் நைசாக நழுவிட்டார்கள் :-))

எனவே ஊழல் குற்ற சாட்டு, சகோதர சண்டை, ஒருங்கிணைப்பில் தொய்வு , என இம்முறை தேர்தல் களத்தில் திமுக பின் தங்கியே உள்ளது , அதிகப்பட்சமாக 7-9 இடங்களை கைப்பற்றலாம்.

குறைந்த பட்சம் -5.

கூட்டணியில் 1-2 இடங்கள் கிடைத்தால் அதிசயம்.

#பி.ஜேபி அலை எல்லாம் தமிழகத்தில் எடுபடவே இல்லை,

தமிழகத்தில் பிஜேபி அணியில் இருக்கும் கூட்டணிக்கட்சிகளே "நம்மளை தவிர கூட்டணியில்" யாருக்கும் அதிக இடங்கள் கிடைத்து விடக்கூடாது என உட்குத்து அரசியல் செய்வதால் ஒன்னும் பெரிதாக தேற வாய்ப்பில்லை அவ்வ்.

பாமக மற்றும் தேமுதிக   வினரின் ஓட்டுக்கண்டிப்பாக கூட்டணி என்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படவேயில்லை.

அதிகப்பட்சம் 2 இடங்கள் கைப்பற்றலாம், ஆனால் அதுவே நிச்சயமில்லை.

# தமிழகத்தினை பொறுத்த வரையில் இத்தேர்தல் இரு பெரும் திராவிடக்கழகங்களின் நேருக்கு நேர் மோதல் , யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கு என இன்று மாலைக்குள் தெரிந்து விடும்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பகமானதா?

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் " நம்பகமானது" அதில் திரிசமன் செய்யவே முடியாது என்கிறார்கள் ,ஆனால் மிக எளிதாக செய்யலாம் என நினைக்கிறேன் ,கீழ்கண்ட முறை எனது  அவதானிப்பே ,பிழை இருக்கலாம்.

ஒரு சுவிட்ச் போர்டில் அருகே மின் விளக்கு ,மின் விசிறி என இரு சுவிட்சுகள் உள்ளது , ஒன்றினை இயக்கினால் விளக்கு எரியும், இன்னொன்று மின் விசிறி என இருக்கு

நாமும் அப்படியே இயக்கி பழகிவிடுகிறோம், ஆனால் அதன் உள் இருக்கும் இணைப்புகளை மாற்றினாலே , மின் விளக்கு சுவிட்சை போட்டால் மின் விசிறி இயங்கும் படி செய்யலாமே?

காண்க படம்.





இதே போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் ,வாக்களர்கள் பெயர்கள் அகரவரிசையில் இருக்கும் எனவே ஒருவரின் பித்தானின் இணைப்பினை , மின்னணு வாக்கு எந்திரத்தின் ஐசி உடன் இணைக்கும் சர்க்கியுட்டில் மட்டும் சால்டரிங் செய்து மாற்றி விடலாமே. நமது மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஐ.சி தான் "கை வைக்க முடியாத "read only" வகை, எனவே அதற்குள் செல்லும் இணைப்பில் எந்த பட்டனை மாற்றி இணைத்தாலும் கண்டுக்கொள்ளாது அவ்வ்!


"schematic diagram for EVM"

(சரியான இணைப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம்.)

(குறுக்காக இணைக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு எந்திரம்)


தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள EVM இல் ஐசி மற்றும் நினைவகம் மட்டுமே ஒரு முறை புரோகிராம் செய்த பின் "மாற்றம் செய்ய இயலாத வகையில் , "READ ONLY" ஆக உள்ளது, எனவே ஐ.சிக்கு உள்ளிடு செலுத்தும் ,பித்தான்களினை இரண்டாவது படத்தில் போல மாற்றி இணைத்துவிடலாம், ஆனால் அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் ஒன்றிலிருந்து துவங்கும், இதனால் முதல் பித்தானுக்கு நேராக உள்ள வேட்பாளருக்கு அழுத்தினால், அதன் எண்ணிக்கை "ஐசி" இல் இரண்டாவது "நினைவக ஒதுக்கீட்டில்" சேமிப்பாகும். இதனை வாக்களிப்பவர் உணர இயலாது,அவர் அழுத்திய பித்தானுக்கு நேராக "விளக்கு எரிவதை கண்டு வாக்குப்பதிவானது என "திருப்திப்பட்டுக்கொள்ள" மட்டுமே முடியும்.

வாக்கு பதிவு எந்திரத்தில் ,வேட்பாளர் பெயருடன் இணைந்த பித்தான்கள், அதற்கு அருகில் விளக்கு என இருக்கும் அமைப்பு "பேலட் யூனிட்"  ஆகும் , அதில் எந்த வரிசை பித்தானை அழுத்தினோம் என காட்டாது, பித்தானை அழுத்தியதும் விளக்கு மட்டுமே எரியும்.
(பேலட் யூனிட் -வரிசை எண் காட்டாது)

கண்ட்ரோல் யூனிட் என ஒன்று தேர்தல் அலுவலரின்  மேசையில் இருக்கும் அதில் தான் வரிசை எண் ,மற்றும் அதற்கு பதிவான வாக்குகளை காட்டும், எனவே பேலட் யூனிட்டில் , இரண்டு பித்தான்களை மாற்றி இணைப்புக்கொடுத்தாலும் , அதற்கான விளக்கு எரியும் என்பதால் ,அச்சின்னத்திற்கு வாக்கு அளித்ததாக தெரியும் ,ஆனால் வாக்குகள் பதிவாவது வரிசை எண்ப்படி என்பதால் , அதனை சரிப்பார்க்க வாக்களரால் முடியாது.

(கண்ட்ரோல் யூனிட்- வரிசை எண் ,பதிவான வாக்கினைக்காட்டும்)


தேர்தல் அலுவலரும் ஏதோ ஒரு வரிசை எண்ணில் வாக்குப்பதிவானதை மட்டுமே உறுதி செய்துக்கொள்வார், வரிசைப்படி இந்த சின்னம் இருக்கு அதில் தான் பதிவானது என்பது அவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் பித்தான்கள் மாற்றி இணைக்கப்பட்டு ஒன்றை அழுத்தி அது மற்றொன்றில் வாக்குப்பதிவு செய்துள்ளதை அவரும் அறிய இயலாது.

எனவே ஒரு தொகுதியில் "A" கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது எனில் அங்கு வலுவிழந்த இன்னொரு கட்சி "B" க்கு வாக்கு விழுமாறு செய்ய  இரண்டையும் மாற்றி இணைத்தாலே போதும், B இன் வாக்குகள் "A"  க்கு போகும் , "A"  வாக்குகள்  B க்கு போகும் , ஏதேனும் ஒருக்கட்சிக்கு வாக்குகளே விழாமல் போனால் தான் சந்தேகம் வரும் ஆனால் ஒரு குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகும் போது சந்தேகமே உருவாகாது. இப்படி மாற்றி இணைக்க , பேலட் யூனிட்டை மட்டுமே திறந்தால் போதும் ,ஐ.சி யூனிட்டில் கையே வைக்க வேண்டாம், இதனை சாதாரணமாக " செல் போன்" பழுதுப்பார்ப்பவர்களை வைத்து சால்டரிங் அயர்ன் மூலம் , பித்தான்களின் சர்க்கியூட் போர்டில் எளிதில் செய்ய இயலும்

வாக்கு எண்ணும் போதும் கண்ட்ரோலில் யூனிட்டில் பதிவான வாக்குகள் வரிசைப்படியே  பிரித்து எண்ணப்படும், அப்பொழுது மாற்றிப்பதிவானதையும் கண்டுப்பிடிக்க இயலாது.

இது எனது சந்தேகம் மட்டுமே, இப்படி செய்ய ஒரு சாத்தியக்கூறுள்ளதாக கருதுகிறேன், இதற்கு  " தேர்தல் அலுவலர்களின்" ஒத்துழைப்பும் தேவை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக தான் காவலுடன் வைத்துள்ளார்கள், ஆனால் அவர்களும் அரசு ஊழியர்களே எனும் நிலையில் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் நினைத்தால் 'தில்லு முல்லு" செய்யலாம் என்பதை மறுக்க இயலாது!

EVM= Electronically Void Machine!
-----------

பின் குறிப்பு:

# இன்னும் சில அலசல்கள் ,படங்கள் பின்னர் இணைக்கப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தேர்தல் ஆணைய இணைய தளம், தி இந்து மற்றும் விக்கி ,நன்றி!
--------------

58 comments:

Anonymous said...

chip level programming தெரிந்தால் (machine language) எந்த ஒரு logic ஐயும் apply பண்ண முடியும். உதாரணமாக "A" கட்சியின் every 10th vote can be casted to "B" கட்சி. Or, "A" கட்சிக்கு ஒரு maximum count-ஐ set செய்து விட்டு (for example max set point = 78,913 votes) அதற்க்கு மேல் விழுகிற vote-ஐ எல்லாம் "B" கட்சிக்கு விழுகிற மாதிரி program செய்யலாம். எந்த company manufacture செய்ததோ அவர்களுக்கு தான் உண்மை தெரியும். ஆனால் இதெல்லாம் உச்சக்கட்ட தில்லுமுல்லு. இந்த extent தப்பு செய்வதற்கு நம்மாட்கள் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை(என்று நினைக்கிறேன்).

Anonymous said...

ஆனால் என்னைபொருத்தவரை, facebook இல் எவ்வாறு நாம் போட்ட like ஐ unlike செய்யமுடியுமோ, அவ்வாறு நாம் போட்ட வோட்டையும் Un-Vote (சரியான வார்த்தை தெரியவில்லை) வாபஸ் வாங்கிகொள்கிற control மக்களிடம் இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் ஒரு பயம் ஒருக்கும். ஒழுங்காக தன் கடமையை செய்யவிட்டால், வோட்டுக்கள் வாபஸ் வாங்கப்படும் என்று.

இந்த Unvotting machine அந்தந்த அரசு அலுவலகங்களில் 24x7 செயல்படுமாறு இருக்க வேண்டும். Just like "புகார் பெட்டி". election முடிந்து ஆறு மாதத்திலிருந்து பதவி முடிகிற 5 வருடம் வரைக்கும் இந்த unvotting machine ON இல் இருக்கும். யார் எப்போது வேண்டுமானாலும் தங்கள் வோட்டை unvote செய்ய இயலும்.

உதாரணமாக, 1,00.000 லட்சம் வாக்காளர்கள் உள்ள தொகுதியில், 60,000 வாகு பெற்று ஒரு MLA or MP வென்றிருக்கிறார். ஓரிரு வருடங்கள் சென்ற பிறகு அவரது செயல் பாட்டில் மக்களுக்கு திருப்தி இல்லைஎன்றால் மக்கள் தாங்கள் போட்ட வோட்டை திரும்ப பெற்றுக்கொள்ளல்லாம். இவ்வாறு அந்த MLA வுக்கு வோட்டு போட்ட 60,000 மக்களில், 31,000 மக்கள் வாபஸ் வாங்கி விட்டால், அந்த MLA தன் பதவியை இழப்பார்.

வவ்வால் said...

வேற்றுகிரகம்,

வாரும்,நன்றி!

//chip level programming தெரிந்தால் (machine language) எந்த ஒரு logic ஐயும் apply பண்ண முடியும். உதாரணமாக "A" கட்சியின் every 10th vote can be casted to "B" கட்சி. Or, "A" கட்சிக்கு ஒரு maximum count-ஐ set செய்து விட்டு (for example max set point = 78,913 votes) அதற்க்கு மேல் விழுகிற vote-ஐ எல்லாம் "B" கட்சிக்கு விழுகிற மாதிரி program செய்யலாம்.//

இப்படியான ரி புரோகிராமிங்க் பற்றி முன்னரே வழக்குபோடப்பட்டது ,ஐசி யின் நினைவகம் ஒரு முறை எழுதப்பட்டுவிட்டால் மிண்டும் மாற்றி எழுத முடியாதவாறு ரீட் ஒன்லி ஆக செய்யப்பட்டுள்லது,எனவே மாற்றி எழுத முடியாது,அப்படி முயற்சித்தால் நினைவகமே செயல்படாமல் போய்விடும் என செய்துக்காட்டி வழக்கினை தள்ளுபடி செய்தாகிவிட்டது.

எனவே தான் எளிய முறையில் உள்ளீட்டினை மாற்றுவதை குறிப்பிட்டுள்ளேன்.

பேலட் யூனிட்டில் , பித்தான்களின் வரிசையை மாற்றுவது மிக எளிது ,அடியில் செய்த மாற்றம் வெளியில் தெரியாது.

கவுண்டிங்க் செய்யும் போது வரிசை எண் ஒன்று என சொல்லி ,அதற்கான வேட்பாளர் யார் என சொல்லி வாக்கினை கணக்கிடுவார்கள், ஆனால் பதிவானதோ இடம் மாறி அவ்வ்!

# // Un-Vote (சரியான வார்த்தை தெரியவில்லை) வாபஸ் வாங்கிகொள்கிற control மக்களிடம் இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் ஒரு பயம் ஒருக்கும். ஒழுங்காக தன் கடமையை செய்யவிட்டால், வோட்டுக்கள் வாபஸ் வாங்கப்படும் என்று.//

வேட்பாளரை திரும்ப பெரும் அதிகாரம் மக்களுக்கு வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது ,ஆனால் அப்படி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யணும் ,நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து அதனை வாக்கெடுப்புக்கு விடனும்,
அதில் எம்பிக்கள் தான் வாக்களிக்கணும் ,அவர்களுக்கு ஆப்பு வைக்கும் செயலை செய்வார்களா அவ்வ்!
------

தற்போதைய நிலவரப்படி அதிமுக 30க்கு மேல் வெல்லும் போல் உள்ளது,நான் வேற 24 னு சொல்லி இருக்கேன் ,ஆனால் அமுதவன் அவர்கள் பதிவில் 30 இடங்கள் வரையில் வெல்லும் என பின்னூட்டம் போட்டிருக்கேன் ,எனக்கும் அதான் தோன்றியது,ஆனால் கடைசி கட்டத்தில் கொஞ்சம் சுணங்கிது போல தெரிந்தது ,மேலும் எதிர்க்கட்சிகள் கடைசியில் கொஞ்சம் ஈடு கொடுத்தன,

உண்மையில் பணம் வாங்கியவர்கள் எல்லாம் சரியாக ஓட்டுப்போட்டால் ,ஆளுங்கட்சிக்கே ஜெயம், முறையாக விநியோகம் அவர்கள் மட்டுமே சுமார் 1 நாட்களுக்கு முன்னரே முடித்து வைத்திருந்தார்கள்.

வவ்வால் said...

முன்னர் அமுதவன் அவர்கள் பதிவில் இட்ட பின்னூட்டம்,

//#//விஷயம் என்னவென்றால் ஜெவின் 'மூஞ்சியும்' இப்போது அப்படியொன்றும் பளிச்சென்று இல்லையென்பதுதான்.//

சுமார் மூஞ்சி என்றாலும் அரசு எந்திரம் கையில் இருப்பதால் "சூப்பர் மூஞ்சாக" புரொஜெக்ட் செய்வார்கள் :-))

அம்மையார் பக்கமும் "ஓட்டுக்கூட்டணி" இல்லை அதே போல திமுக பக்கமும் ஓட்டுக்கூட்டணி சேராமல் பார்த்துக்கொண்டாச்சு, இப்போ "one to one battle" நிலைமை, மற்ற கூட்டணிகள் எல்லாம் தனிக்கிரகமா நிற்பதால் "முடிவில்" மாறுதலை உருவாக்காது.

இரு திராவிட பெருச்சாளிகளில் யார் மிக அதிக இடங்களை கைப்பற்றுவது என்பதே போட்டி. அனேகமாக காற்று அம்மையாருக்கே சாதகமாக வீசுகின்றது. அப்படியே மெயின்டைன் செய்து கப்பலை ஓட்டினால் "30" இடங்கள் வரையில் கிடைக்க கூடும்.

எந்த வித திடீர் திருப்பம் "அனுதாப அலை" என இல்லாமல் தேர்தல் நடக்குமானால் "அம்மையாரே அதிக இடங்களை" கைப்பற்றுவார்.

மேற்கண்டதை "தேர்தல் முடிவு" வந்தவுடன் உறுதிப்படுத்திக்கொள்வோம், அது வரையில் நாம இருப்போம்னு நம்பிக்கை வைப்போம் :-))

March 24, 2014 at 12:06 PM //

குட்டிபிசாசு said...

//இந்த extent தப்பு செய்வதற்கு நம்மாட்கள் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை(என்று நினைக்கிறேன்). //

:)

//பாமக மற்றும் தேமுதிக வினரின் ஓட்டுக்கண்டிப்பாக கூட்டணி என்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படவேயில்லை.//

பாமகவிற்கு தருமபுரியில் ஜெயிக்க வன்னியர் ஓட்டு போதும், அதனை முக்கியமாக் பிரிப்பது தேமுதிக. ஆகவே கூட்டணி வைத்து போட்டியில்லாமல் செய்து கொண்டார்கள்.

//# பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்கள்;

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ம.பி, டெல்லி, கோவா, இமாச்சால், உ.பி,ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களே, இங்கு தான் பெரும்பாலான தொகுதிகளை வென்றாக வேண்டும்.//

இவற்றில் உ.பி, மகாராஷ்ட்ரா போன்ற அதிக தொகுதிகள் உள்ள மாநிலங்கள் உள்ளன. அதுவும் ஒரு பலம்.

குட்டிபிசாசு said...

அதிமுகவைப் பொருத்தவரை யாருடனும் கூட்டணி இல்லாமல், மின்வெட்டு, குடிநீர் பிரச்சனைகளோடு அதிக தொகுதிகள் வென்றால் அது பெரிய சாதனை. சாதாரணமாகவே ஜே மற்ற கட்சிகளை மதிக்கமாட்டார். இதில் இதுவேறு சேர்ந்தால், வெளங்கிடும்.

குட்டிபிசாசு said...

//முன்னர் அமுதவன் அவர்கள் பதிவில் இட்ட பின்னூட்டம்,//

அதை மறுபடியும் சொன்னால் ஜேவின் ஜால்ரா என்று பட்டம் கிடைக்கும் பரவாயில்லையா?

Unknown said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

விஜயகாந்துக்கு பிம்பிலிக்கி பிலாக்கியா! பேஷ்!

Anonymous said...

//பேலட் யூனிட்டில் , பித்தான்களின் வரிசையை மாற்றுவது மிக எளிது ,அடியில் செய்த மாற்றம் வெளியில் தெரியாது.//

ஆம். உங்களின் இந்த ஐடியாவிலிருந்து பரிணமித்தது தான் என் ஐடியா. இதை படித்து ரொம்ப excite ஆகி தான், நீங்க ஈசியாக சொன்னதை நான் கொஞ்சம் advanced ஆக எழுதினேன். அவசரத்தில், இதைப்பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.

//அப்படி முயற்சித்தால் நினைவகமே செயல்படாமல் போய்விடும் என செய்துக்காட்டி வழக்கினை தள்ளுபடி செய்தாகிவிட்டது.//

நம்ம நீதி மன்றத்தின் நீதியை பற்றி சொல்லனுமா என்ன.
நீதிமன்றத்தில் வழக்கில் ஜெயிப்பதற்காக அந்த ஒரு machine ஐ அல்லது சில machine-களை மட்டும் அந்த மாதிரி தயார் கூட செய்திருக்கலாம். முழு இந்தியாவில் உள்ள அனைத்து voting machine-களையும் calibrate செய்வது மிகக் கடினம்.

ஆனால் இந்த மாதிரியெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிக மிக குறைவு. எப்படியாவது விஷயம் எதிர்க்கட்சி மூலமாக வெளியில் வந்து விடும்.

ஆமா, போன தேர்தலில், ப.சி, ஜெயித்த வழக்கு முடிந்து விட்டதா? அவரு பதவியுடைய ஆயுட்காலமே முடிந்து விட்டதே...

இது வேற்றுகிரகத்தின் திருமொழி.
"எனக்கு என் வீட்டில் திருடினவனையும் தெரியும். திருடின பொருள்களையும் தெரியும். அவன் எப்போ திருடினான் என்பதும் தெரியும். ஆனால், என்னால் திருடனை ஓன்றும் செய்ய முடியாது" அவ்வ்.....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
குட்டிபிசாசு said...

//இது வேற்றுகிரகத்தின் திருமொழி.
"எனக்கு என் வீட்டில் திருடினவனையும் தெரியும். திருடின பொருள்களையும் தெரியும். அவன் எப்போ திருடினான் என்பதும் தெரியும். ஆனால், என்னால் திருடனை ஓன்றும் செய்ய முடியாது" அவ்வ்..... //

:)

வவ்வால் said...

குபி,

வாரும்,நன்றி!

//பாமகவிற்கு தருமபுரியில் ஜெயிக்க வன்னியர் ஓட்டு போதும், அதனை முக்கியமாக் பிரிப்பது தேமுதிக. ஆகவே கூட்டணி வைத்து போட்டியில்லாமல் செய்து கொண்டார்கள்.//

தரும புரியில் மட்டும் கவுரவப்பிரச்சினையாக கருதி முக்கி முக்கி வேலைப்பார்த்திருப்பாங்கனு நினைக்கிறேன்.

பொதுவாக இரண்டு கட்சியினரும் அடுத்தவருக்கு ஓட்டுப்போடவில்லை அதனால் தான் "மோடி" அலை தமிழ்நாட்டில் வீசவேயில்லை -))

பிஜேப்பி இல் கூட்டணி என்று தான் பேரே ஒழிய ஒருக்கட்சியும் கூட்டணி வேட்பாளருக்கு ஓட்டினை அளிக்கவில்லை போலும் , மார்ஜினை பார்த்தாலே நான் சொன்ன உண்மை புரியும்.

#//அதிமுகவைப் பொருத்தவரை யாருடனும் கூட்டணி இல்லாமல், மின்வெட்டு, குடிநீர் பிரச்சனைகளோடு அதிக தொகுதிகள் வென்றால் அது பெரிய சாதனை. சாதாரணமாகவே ஜே மற்ற கட்சிகளை மதிக்கமாட்டார். இதில் இதுவேறு சேர்ந்தால், வெளங்கிடும்.//

மின் வெட்டு சுமார் 2 மணி நேரம் போல தான் இருக்கு அதற்கு மக்கள் பழகிவிட்டார்கள், மேலும் மினி பஸ், புதிய சாலை என தேர்தல்லுக்கு நெருக்கமாக நெறைய வேலைகள் ஆளுங்கட்சி என்பதால் செய்துள்ளார்கள்,அதனை தான் அமுதவன் அவர்களின் பதிவில் குறிப்பிட்டு இம்முறை அம்மையார் தனியா நின்றாலும் வலுவாக இருக்கார் என்றேன் ,இந்த வேற்றுகிரகம் முதல் எல்லாம் "சொம்பு" என சொல்லிவிட்டார்கள் அவ்வ்!

இப்போ நாம சொன்னதையும் தாண்டி போயிட்டிருக்கு ,இப்போ என்ன சொல்வார்கள்?

எப்போவும் நான் நடைமுறையில் என்ன நடக்குது எனப்பார்ப்பேன், தேர்தல் காலத்தில் , நான் சென்னை ,காஞ்சி,வேலூர் ,திருவள்ளூர் மாவட்டங்களில் அடிக்கடி பயணம் செய்தேன் , கொஞ்ச நாளுக்கு முன்ன அங்கே எப்படி இருந்தது என்பதும் தெரியும் எனவே "வேலைகள்" தேர்தலை வைத்து நடப்பதை பார்த்துவிட்டே அப்படி சொன்னேன்.

#//விஜயகாந்துக்கு பிம்பிலிக்கி பிலாக்கியா! பேஷ்!//
அஃதே ,அஃதே , பணத்துக்காக அமைந்த கூட்டணி ,ஆனால் ஓட்டு லேது -))
---------

வேற்றுகிரகம்,

//ஆம். உங்களின் இந்த ஐடியாவிலிருந்து பரிணமித்தது தான் என் ஐடியா. இதை படித்து ரொம்ப excite ஆகி தான், நீங்க ஈசியாக சொன்னதை நான் கொஞ்சம் advanced ஆக எழுதினேன். அவசரத்தில், இதைப்பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.//

அந்த அட்வான்ஸ் டெக்னாலஜி பற்றி முன்னரே பார்த்துவிட்டதால் தான் அதனை சொல்லவில்லை, இப்படி ஒரு எளிய வழி இருக்கும் போது ஏன தில்லு முல்லு செய்யக்கூடாது என்பதே எனது கேள்வி.

ஒரு நாடாளுமண்ற தொகுதியில் சுமார் 1200- 1400 பூத்துகள் இருக்கும், அவற்றில் ஒரு 100 பூத்தில் எதிர்க்கட்சி வலுவாக இருக்கும் இடத்தில் மட்டும் "மெசினில் கைய வச்சாப்போதுமே" ,அமோகமா ஜெயிக்கலாம்.

#//ஆனால் இந்த மாதிரியெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிக மிக குறைவு. எப்படியாவது விஷயம் எதிர்க்கட்சி மூலமாக வெளியில் வந்து விடும்.//

வெளியில் வந்தாலும் தப்பை ஒத்துக்க கூடாது என "நடக்கவே" இல்லை என தான் நிறுவுவார்கள்.

#//இது வேற்றுகிரகத்தின் திருமொழி.
"எனக்கு என் வீட்டில் திருடினவனையும் தெரியும். திருடின பொருள்களையும் தெரியும். அவன் எப்போ திருடினான் என்பதும் தெரியும். ஆனால், என்னால் திருடனை ஓன்றும் செய்ய முடியாது" அவ்வ்.....//

அம்புட்டு தேன்!

இப்போ எனக்கு என்ன கவலைனா, நாம சொன்னதை வச்சி ,நாளைக்கே எதிர்க்கட்சி எதுனா அதுவே "கண்டுப்புடிச்சா" போல பேட்டிக்கொடுக்குமோனு தான் -))

நல்லாப்பார்த்துக்கோங்க நீங்கலாம் தான் சாட்சி அவ்வ்!

# மெயில் எல்லாம் கேட்கிறீர் ,எதுனா "கட்சிக்காரங்கக்கிட்டே" மாட்டிவிட ஐடியாவா, மி பாவம் ,அடி வாங்கும்/தாங்கும் உடம்பல்ல அவ்வ்!

சரி மெயில் செய்றேன் ,நோட் செய்துட்டேன் ,உமது மெயில் பின்னூட்டத்தினை எடுத்துவிடுகிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு கூட வோட்டுபதிவு எந்திரம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழகத்தில் அம்மா எல்லா கணிப்புக்களையும் மீறி இத்தனை வாஷ் அவுட் செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை!

குட்டிபிசாசு said...

திமுக ஒரு 10 இடமாவது ஜெயிக்கும்னு நெனச்சேன். நன்னா சொருவிட்டாங்களே! என்ன இது நம்ம தமிழ் ஜனங்கள புரிஞ்சிக்கவே முடியலயே!

பாஜகவும் இந்திய அளவில் இப்படி ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வெறுத்துப்போய் எல்லோரும் பாஜகவுக்கு குத்திட்டாங்கனு நினைக்கிறேன். "எல்லா புகழும் காங்கிரஸுக்கே!"

Amudhavan said...

உங்களின் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள்தாம் இன்னமும் நான் நம்புவது(தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் முடிவுகளையும் சேர்த்துத்தான்). முடிவுகள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருப்பதன் தாத்பர்யம்தான் தெரியவில்லை.நீங்களே வேறு 'இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருப்பதாகப்' படங்களெல்லாம் போட்டு கிலியைக் கிளப்பிவிட்டிருக்கிறீர்கள்.
என்ன நடந்தது, என்ன நடக்கிறது.........பொறுத்திருந்து பார்ப்போம்.

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

ஏமாற்றவே முடியாத மின்னணு சாதனம் என ஒன்று இன்று வரையில் கண்டுப்பிடிக்கப்படவேயில்லை, மேலை நாடுகளில் என்கிரைப்டட் டெக்னாலஜியில் செய்யப்பட்ட கருவிகளையே ஊதித்தள்ளிட்டாங்க.

அங்கேலாம் மின்னணு வாக்கு எந்திரம் ஆப்சனல் தான், ஒரு வாக்களர் நான் காகித ஓட்டு தான் போடுவேன் என சொன்னால் அவருக்கு என "அச்சடித்த வாக்கு சீட்டினை" தருவார்கள்.

இதையெல்லாம் நான் சொன்னால் எவன் கேட்கப்போறான் அவ்வ்!

#//ஆனால் தமிழகத்தில் அம்மா எல்லா கணிப்புக்களையும் மீறி இத்தனை வாஷ் அவுட் செய்வார் என்று எதிர்பார்க்கவே இல்லை!/

ஓரளவு எதிர்ப்பார்த்தது தான் , 30 வரையில் எதிர்ப்பார்த்தேன் , 37 போனஸ் எனலாம்.

-----------

கு.பி,

வாரும்,நன்றி!

தொடர்ந்து ஆர்வம் காட்டுறீர் :-))

ஓரளவு எதிர்ப்பார்த்தேன் , திமுக விற்கு கோமணம் மிஞ்சும் என்ற அளவில் ஒற்றை இலக்கமே என்னால் ஒதுக்க முடிந்தது என்றால் , கள நிலவரம் எப்படி போனது என்பது புரிந்திருக்கும்.

பலரும் மீடியா சொல்வது மற்றும் ,முந்தைய மதிப்பீட்டிலேயே "திமுக" இன்னும் வலிமையாக இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஆட்சிப்பிடித்த சட்ட மன்ற தேர்தலில் ,வலுவான கூட்டணி இருந்தும் மைனாரிட்டி ஆட்சியே அமைக்க முடிந்ததே ,அப்போவே அதன் " அந்திம" காலம் துவன்கிவிட்டது.

கலைஞரின் காலத்திற்கு பின் அக்கட்சி " பெயரளவில்" தான் இயங்கும் மீண்டும் ஆட்சிக்கே வரவியலாது!

இதை சொன்னதற்கு எத்தனைப்பேர் என் மேல பாயப்போறாங்களோ அவ்வ்!

ஏன் எனில் ஸ்டாலின் தலைமையை இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருமே மனதளவில் ஏற்கவில்லை , உள்ளுக்குள் பொருமலுடன் , வெளியில் ஒன்றும் சொல்ல முடியாமல் சீரிச்சு மழுப்பிட்டு இருக்காங்க, அதே போல வெகுஜனங்களும் ஏற்கவில்லை.

குஷ்புக்கு கூட்டம் கூடினால் கூட அய்யய்யோ ஸ்டாலினுக்கு போட்டி உருவாகிடுமோனு நினைச்சு பதட்டமாகும் 'தலைமை" எப்படி கட்சிக்கு ஒத்து வரும்?

கட்சி என்ற சொத்து வேண்டுமானால் மஞ்சத்துண்டு விருப்பப்படி கிடைக்கலாம், ஆனால் மக்கள் செல்வாக்கு என்பது தானாக உருவாகணும் அல்லது உருவாக்க தெரியணும், அத்தகைய தலைமைப்பண்பு உடையவரல்ல "ஸ்டாலின்" என்பதே கசப்பான உண்மை, இதெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு கழக சொம்புகளுக்கு மூளை வளர்ச்சியும் இல்லை அவ்வ்!

விரிவான பின் விளைவு ஆய்வினை பிறகு எழுதலாம் என இருக்கிறேன் ,பார்ப்போம்!
----------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

//உங்களின் பதிவில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள்தாம் இன்னமும் நான் நம்புவது(தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் முடிவுகளையும் சேர்த்துத்தான்). //

அது எப்படி சார் பல நாட்களுக்கு முன்னரே 30 இடங்கள் அம்மையாருக்கு சாதகமாக இருக்கு என சொன்னப்போது நம்பிக்கையே இல்லாமல் இருந்தீங்க , உங்களுக்காக தான் இப்பதிவில் எண்ணிக்கையை குறைச்சேன் , மனசுக்குள் அதே 30 கூடவே + அல்லது "-" 2 என வைத்திருந்தேன் , 37 போனஸ் எனலாம்.

விரிவான ஒரு ஆய்வு பின்னர் போடலாம் என இருக்கேன்.

#//நீங்களே வேறு 'இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருப்பதாகப்' படங்களெல்லாம் போட்டு கிலியைக் கிளப்பிவிட்டிருக்கிறீர்கள்.//
மின்னணு கருவி என வந்துவிட்டாலே "அதில்" ஒரு ஓட்டையும் தன்னால் உருவாகிடும், நீங்க சுஜாதா அபிமானி என்பதால் நம்ப மாட்டிங்க, நம்ம எந்திரம் எல்லாம் வெறும் டப்பா தான் , சும்மா நாமலே சூப்பர் எந்திரம்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கோம்.

இதே எந்திரத்தினை , ஒவ்வொரு பித்தானுக்கும் என்கிரைப்படட் " பாஸ் கீ" உடன் வடிவமைக்கலாம், அதெல்லாம் செலவு பிடிக்கும் சமாச்சாரங்கள் என்பதால் " ஒரு சாதாரண கால்குலேட்டர் ஐ.சி "ய வச்சே வேலைய முடிச்சிக்கிட்டாங்க அவ்வ்!

இதோட அல்காரிதம் "கால்குலேட்டரில்" உள்ளதே தான். இந்த மெசினை அசெம்பிள் செய்து தயாரிப்பதே பத்தாம் கிளாஸ் படிச்சவங்க தான் அவ்வ்!

# மிகவும் நம்பகமான வாக்கு முறை வாக்கு சீட்டே ஆகும் , அதனை நவீனமாகவும் செய்யலாம், அதில் ஆப்டிகல் கேரக்டர் ரெககனைஷன் முறையினை புகுத்தி ,கணினி மூலம் படிக்கும் படி செய்யலாம்.

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பங்களில் ஷேட் அடிக்கிறோமே அது போல!

Anonymous said...

//இந்த வேற்றுகிரகம் முதல் எல்லாம் "சொம்பு" என சொல்லிவிட்டார்கள் அவ்வ்!
இப்போ நாம சொன்னதையும் தாண்டி போயிட்டிருக்கு ,இப்போ என்ன சொல்வார்கள்?//

ஹி..ஹி..ஹி....ஒரு நல்லென்னெத்தில சொன்னத இப்படியா தப்பா எடுத்துகிறது! அவ்வ்....
37 மட்டுமல்ல 543 ஐயும் ஜெயிச்சாலும் எனக்கு சந்தோசம் தான். நான் சொல்ல வந்தது என்னவென்றால், எங்க சங்கத்து தல வவ்வாலா மட்டும் தான் இருக்கணும். யாரோட சொம்பாவும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் அவா.

Amudhavan said...

\\பல நாட்களுக்கு முன்னரே 30 இடங்கள் அம்மையாருக்கு சாதகமாக இருக்கு என சொன்னப்போது நம்பிக்கையே இல்லாமல் இருந்தீங்க , உங்களுக்காக தான் இப்பதிவில் எண்ணிக்கையை குறைச்சேன் , மனசுக்குள் அதே 30 கூடவே + அல்லது "-" 2 என வைத்திருந்தேன் , 37 போனஸ் எனலாம்.\\
ஒன்றைச் சொல்லுவோம், கூடவே ஒரு ஆப்ஷனையும் வைத்திருப்போம் இல்லையா? அப்படி இது சரிப்பட்டுவரவில்லையெனில் இப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் முடிவுகள் எல்லாவற்றையும் குப்புறத்தள்ளியிருக்கின்றன. இது வந்த முடிவா, வரவழைக்கப்பட்ட முடிவா என்பதில்தான் எல்லாமே தொக்கிநிற்கின்றன. இதற்கெல்லாம் காரணமே அந்த 'தமிழ்நாடு பூராவுக்கும் 144 தடையுத்தரவு விவகாரம்தான். எல்லாக் கட்சிகளும் பணம் வழங்கத்தான் இது என்று நினைத்திருக்க வேறு ஏதாவதொன்றுக்குத் திட்டம் போடப்பட்டதா என்ற சந்தேகம்தான் காரணம்.


\\மின்னணு கருவி என வந்துவிட்டாலே "அதில்" ஒரு ஓட்டையும் தன்னால் உருவாகிடும், நீங்க சுஜாதா அபிமானி என்பதால் நம்ப மாட்டிங்க, நம்ம எந்திரம் எல்லாம் வெறும் டப்பா தான் , சும்மா நாமலே சூப்பர் எந்திரம்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்கோம்.\\

சுஜாதா அபிமானி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சுஜாதா இதையெல்லாம் டிசைன் பண்ணியே இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்குமே. இதற்குள் எத்தனைப்பேர் என்னென்ன மாற்றங்களை உள்ளுக்குள் கொண்டுவந்திருக்கிறார்களோ என்றுதானே சிந்திக்கவேண்டியிருக்கிறது.....

குட்டிபிசாசு said...

//எங்க சங்கத்து தல வவ்வாலா மட்டும் தான் இருக்கணும். யாரோட சொம்பாவும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் அவா. //

:)

Anonymous said...

வவ்வால்,
குட்டிபிசாசு நல்லா புன்னகைக்கிறார். அவருக்கு சங்கத்து "புன்னகை மன்னன்" னு பட்டம் கொடுத்திரலாமா? இவர மாதிரி எல்லோரும் இருந்துட்டா நாட்ல பிரச்சனையே இல்லையே.

வவ்வால் said...

வேற்றுகிரகம்,

வாரும்,நன்றி!

//எங்க சங்கத்து தல வவ்வாலா மட்டும் தான் இருக்கணும். யாரோட சொம்பாவும் இருக்கக்கூடாது என்பதே எங்கள் அவா.//

நல்ல சமாளிப்பு அவ்வ்!

நாம எந்தப்பக்கமும் சாயாத "தலைகீழ்" பிராணி ஆச்சே ஹி....ஹி!

ஒரு ஆசியல் நிகழ்வை "நடப்பதை உள்ளது உள்ளப்படி" சொல்லித்தானே ஆக வேண்டும்?

நாம என்ன நக்கீரன் கோவாலா எல்லாத்தையும் திரிச்சே சொல்ல அவ்வ்!
-----------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

//கூடவே ஒரு ஆப்ஷனையும் வைத்திருப்போம் இல்லையா? அப்படி இது சரிப்பட்டுவரவில்லையெனில் இப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.//

சில பல அளவுகோள்கை முன் வைத்து கணக்கீட்டு பார்த்திருந்தால் உங்களுக்கே அப்பொழுதே "இந்தளவுக்கு" திமுக அடிவாங்கும் என்பதை கணித்திருக்கலாம்.

வழக்கம் போல எப்படியும் ஒரு மினிமம் கியாராண்டி முகவுக்கு இருக்கும் என்ற அடிப்படையில் பார்த்துட்டிங்க.

#/இது வந்த முடிவா, வரவழைக்கப்பட்ட முடிவா என்பதில்தான் எல்லாமே தொக்கிநிற்கின்றன. இதற்கெல்லாம் //

முந்தைய இரு பாராளுமன்ற தேர்தல்களின் போதும் இப்படியான தொக்கு உங்களுக்கு புலப்பட்டதா?

எனக்கு அப்பவும் இப்படி ஒரு சந்தேகம் உண்டு!

#தமிழ்நாடு பூராவுக்கும் 144 தடையுத்தரவு விவகாரம்தான். எல்லாக் கட்சிகளும் பணம் வழங்கத்தான் இது என்று நினைத்திருக்க வேறு ஏதாவதொன்றுக்குத் திட்டம் போடப்பட்டதா என்ற சந்தேகம்தான் காரணம்.//

அந்த தடை உத்தரவே தேவையில்லை தான் ,ஆனால் அது எதிர்க்கட்சிகளின் கடைசிக்கட்ட பண விநியோகத்தினை தான் மந்தப்படுத்தியது என்பேன். ஆளும்கட்சி சுமார் 10 நாட்களுக்கு முன்னரே அவ்வேலையை ஆரமித்து முடித்துக்கொண்டது.

பொதுவாக அப்போ நான் நினைத்தது என்னவெனில் முன்னாடியே கொடுக்கிறாங்க ,தேர்தல் நெருக்கத்தில் கொடுக்கிறவங்களை தானே நல்லா நியாபகம் வச்சுப்பாங்க, இப்ப வான்கிட்டு ஓட்டுப்போட மாட்டங்கனே நினைச்சேன் அவ்வ்!

சில எதிர்க்கட்சி ஹெவி வெயிட்கள் ஆளும் தரப்பை விட மிக அதிக பணம் செலவழித்துள்ளார்கள், ஆனால் அவர்களும் மண்ணைக்கவ்விட்டாங்க , அவ்வ்!

#//ஆனால் சுஜாதா இதையெல்லாம் டிசைன் பண்ணியே இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்குமே. இதற்குள் எத்தனைப்பேர் என்னென்ன மாற்றங்களை உள்ளுக்குள் கொண்டுவந்திருக்கிறார்களோ என்றுதானே சிந்திக்கவேண்டியிருக்கிறது.....//

அப்போ இருந்தே இந்த சர்ச்சை ஓடிட்டு தான் இருக்கு.

நீதி மன்றங்களும் தேர்தல் ஆணையம் சொல்லும் விளக்கத்தினை கேட்டுவிட்டு "வழக்கினை தள்ளுபடி செய்துவிடுகின்றன, யாராவது வலுவாக வழக்கு போடனும்.

# அடுத்த அரசியல்ப்பதிவை படிச்சிட்டு எனக்கு "பெரிய அண்டா" கொடுப்பீங்களோனு டவுட்டாக்கீது ஹி.ஹி!

-----------

வேற்றுகிரகம்,
சிரிக்கட்டும் எல்லாம் நம்ம சங்கத்து ஆளுதானே ,ஆனால் அது பேய்ச்சிர்ரிப்பா இருக்குமோனு ஒரு டவுட்டு ,எதுக்கும் உசார்ரா இருக்கோணும் அவ்வ்!

# கு.பி ,

இப்படி எங்கப்பார்த்தாலும் சிரிச்சு வச்சு ஏன்யா ஊரைக்குழப்புறீர் அவ்வ்!

வவ்வால் said...

வளைகுடா "இந்துத்வா" பிரமுகர் ராச நடைய காணோம், அமோக வெற்றிய கொண்டாட குஜராத்துக்கே போயிட்டாரா அவ்வ்!

குறும்பன் said...

வெற்றியில் தோல்வி என்பது இது தானோ :)

பாசக தனியாக 272+ பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. உபியில் 73 எல்லாக் (எல்லோர்) கணக்கையும் மாற்றிவிட்டது.
காங்கிரசு 44 என்பது காந்தி கனவை நனவாக்க கடுமையாக முயல்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. வாழ்க வளர்க அவர்களின் இம்முயற்சி. திருவனந்புரத்தில் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தான் பாசக தோற்றுள்ளது.
தெலுங்கானாவில் கூட காங் சொல்லிக்கொள்ளும் படி வெற்றி பெற வில்லை :(
இத்தேர்தலில் எல்லோர் கணக்கும் தவறாகிவிட்டது.

ராஜ நடராஜன் said...

//வளைகுடா "இந்துத்வா" பிரமுகர் ராச நடைய காணோம், அமோக வெற்றிய கொண்டாட குஜராத்துக்கே போயிட்டாரா அவ்வ்!//

அதுதான் ஆட்டம் பாட்டுக்கு போய்கிட்டிருக்குதே!அதென்ன என்னை நோண்டுறது:)அதுவும் இந்துத்வா பட்டம் வேற!பெரியாரின் ஆவி கேட்டா கோபிச்சுக்க போகுது:)டெல்லியிலும்,மெட்ராஸிலும் வாரிசு அரசியல் இப்போதைக்காவது தலை தூக்காமல் போனதே என்ற பெரும் மகிழ்ச்சிக்கு இந்துத்வா, ஜெயலலிதாவின் அல்லக்கை பேர் கூட வாங்கலாம்:)

அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராவதும்,ராகுல் காங்கிரஸ் துணை இயக்குநர் ஆவதையும் விட சாயாக்காரன் மோடி பிரதமர் ஆவது நல்லது என்ற ஜனநாயக பார்வைக்கு பெயர் இந்துத்வான்னு எந்த தொண்டர்புராணத்தில் எழுதி வச்சிருக்குது:)

மோடியின் வெற்றி எதிர்பார்த்ததுதான்.அதுக்குன்னு இப்படியா காங்கிரஸ்க்கும்,தி.மு.கவுக்கும் கழுவி ஊத்துறது? இதுல இன்னும் காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆளுதுன்னு சப்பைக்கட்டு வேற!

நீங்க விமான பதிவா,அரசியல் பதிவான்னு குழம்பி அரசியல் பதிவு போடறதுக்கு பம்முற போதே சந்தேகப்பட்டிருக்கனும் உங்களுக்கும் சேர்த்து மக்கள் கழுவி ஊத்திட்டாங்கன்னு..மோடியும்,ஜெவும்,கலைஞரும்,இந்தியாவும்,இந்தியா நோக்கும் உலகே எதிர்பார்க்காத அரசியல் சுனாமி இது.

மூக்கணாங்கயிறு இருக்கும் போதே குதிக்கிற காளை கயித்தை அவுத்து விட்டா என்ன நடக்குமோ அதெல்லாம் இந்தியாவில் நிகழாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.மோடி மாடே சும்மா குந்திகிட்டிருந்தாலும் உசுப்பேத்தறதுக்கு எங்கிருந்தாலும் ஊசி வருமோ?

இருக்குற மெஜாரிட்டில எவனாவது மாட்டுனாலும் சங்குதான் என்பதால் அடக்கி வாசிப்பதும் உத்தமம்.மோடி எதிர்ப்பலைகளை சமாளித்தும்,குண்டர்களின் குண்டு வெடி இந்தியாவில் வெடிக்காமல் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதிலும்,சொன்னபடி பொருளாதார மேம்பாட்டை நிறுவுவதில்தான் மோடியின் லெகசியே இருக்குது.

எதை சொன்னாலும் அதற்கு ஒரு கான்ஸ்பைரஸி தியரியா?மெசின்ல கோளாறுன்னாலே 0 வெற்றிக்கு எம்பிக் குதிக்கலாம்.இதுல வேற எண் தப்பா காண்பிக்குதுன்னா கிளிஞ்சது கிருஷ்ணகிரி.

ஜெயலலிதா மைனாரிட்டி மைனாரிட்டின்னு சொன்னது கூட இல்லாமல் 0 வில் வந்து நிற்குதே!
ஆளும் திறன்,செயல்பாடுகள் அத்தனைக்கும் மதிப்பில்லா சூழலில் குடும்ப அரசியல் வந்து நிற்பதை நினைத்தால் வருத்தமாக இருக்குது.

என்னைப்பொறுத்தவரையில் இரண்டே காரணம்.1ல 2ஜி குந்திகிட்டிருப்பதும் 2ல இங்கேயும் அங்கேயும் ஈழப்பிரச்சினை சூரிய நிலைக்கு ஒத்து வரலை.

இதுக்கு பரிகாரம் என்னன்னா மஞ்சத்துண்டு போடச்சொல்லி எந்த மூதேவி சொல்லிச்சோ அதை மாத்திட்டு கனிமொழியை வரவேற்க வெள்ளைத்துண்டு போட்ட மாதிரி கலரை மாத்தினாலவது தோசம் குறையலாம்.குறைந்த பட்சம் அம்சமாவது இருக்கும்.

நம்ம மாதிரி நல்ல புள்ளக சொல்றத தி.மு.கவுல யார் கேட்க போறா?இருக்குற ஜால்ரா கூட்டங்கள் தொப்பை நிறைந்தா போதுமென்று ஆமாம் தலைவரே போட்டா 0 விலிருந்து பீனிக்ஸ் என்பதெல்லாம் குளறுபடிக்கின்னே பிறந்த ஜெயலலிதாவின் கையில்தான் இருக்குது:)

பல்லு இல்லாட்டியும் பக்கோடா சாப்பிடனுமின்னா அது இந்திய,தமிழக அரசியல் மட்டுமே:)

அரசியல் பேசுனா வலைத்தளத்தையே மூடி விட உத்தரவுன்னு கேள்விப்பட்டேன்.பின்னூட்டத்தையும் மூடி விடுவாங்களான்னு சின்ன சந்தேகம்:)

நேரம் கிடைச்சா மல்லு பார்க்க வாரேன்!இரட்டை மொழிக்கு தமிழை விட்டா இனிதாவது எங்கு காண்போம்:)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இந்த ஓயரைப் பிடுங்கி அந்த ஒயரில் இணைத்து போகிற போக்கில் எளிதில் மாற்றிவிடலாம் என்பதுபோல சொல்வது சரியல்ல.பல்லாயிரக் கணக்கான EVM இல் இந்த மாற்றங்கள் செய்வது எளிதானது அல்ல.மாக் போலிங் ஒவ்வொருநிலையிலும் தயாரிக்கும் போதில் இருந்து பல்வேறு கட்டங்களில் கட்சிக்காரர்கள் மாக் போல் செய்து பார்க்க அனுமதிக்கப் படுகிறது.
பல நிலையிலும் 5% ரேண்டமாக தேர்வு செய்த EVM களில் குறைந்த பட்சம் 1000 ஒட்டுக்குமேல் கட்சி ஏஜென்ட்களை பதிவு செய்ய வைத்து சரி பார்க்கிறார்கள் . தேர்தல் நாளன்று வாக்கு சாவடியிலும் ஏஜெண்டுகளை வைத்து மாதிரி வாக்குப் பதிவு செய்து ரிசல்ட் காண்பிப்பார்கள்.
தகராறு செய்து இரண்டு மூன்று முறை சோதனை செய்து காண்பிக்க சொல்பவர்களும் உண்டு.
மின்னணுக் கருவிகளில் மாற்றம் சாத்தியம் என்றாலும் செய்ய முனையும்போதே மாட்டிக் கொள்வதற்கே வாய்ப்பு அதிகம்.
ராணுவ ஆட்சி உள்ள நாடுகளில் மட்டுமே இது சாத்தியம்.
*******

பதிவை இப்போதான் படிச்சேன். என் சுறுசுறுப்பை நினைச்சி வவ்வால் பொறாமைப் படக் கூடாது. ஹிஹிஹி

ராஜ நடராஜன் said...

@டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று sa

இன்னுமொரு முறை வவ்வால் மண்டையில் கொட்டுங்களேன்:)

வவ்வால் said...

குறும்பன்,

வாரும்,நன்றி!

வெற்றியில் மேலும் வெற்றி தானே?

//பாசக தனியாக 272+ பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. உபியில் 73 எல்லாக் (எல்லோர்) கணக்கையும் மாற்றிவிட்டது. //

பாஜகவின் வெற்றிக்கு இன்னொரு காரணம் உ.பி,பிகார் போன்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளான பி.எஸ்பி, சமாஜ்வாடி , ஐக்கிய ஜனதா தளம் போனவறின் தோல்வியும் ஒருக்காரணம் ஆகும் , கடந்த காலங்களில் இவர்கள் சுமார் 40-50 இடங்களை வென்று விடுவார்கள், அந்த இடங்கள் எல்லாம் பாஜகவிகு போய்விட்டது.

#//காங்கிரசு 44 என்பது காந்தி கனவை நனவாக்க கடுமையாக முயல்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. வாழ்க வளர்க அவர்களின் இம்முயற்சி. திருவனந்புரத்தில் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தான் பாசக தோற்றுள்ளது.
தெலுங்கானாவில் கூட காங் சொல்லிக்கொள்ளும் படி வெற்றி பெற வில்லை :(
இத்தேர்தலில் எல்லோர் கணக்கும் தவறாகிவிட்டது.//

காங்கிரஸ் தன்னிலை மறந்த ஒரு கட்சியாகிவிட்டது, மக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் செயல்ப்பட்டார்கள்.

தெலுங்கானா விவகாரத்தில் வேண்டும் என்றே சொதப்பினார்கள் அதான் மக்கள் தங்களின் ஆயுதத்தினை பிரயோகித்து விட்டார்கள்.

# உங்க பின்னூட்டம் அமுதவன் அவர்களின் பதிவில் பார்த்தேன் ,நன்றி!
-------

முரளி,

வாங்க ,நன்றி!

உங்க மாதிரி பிராபல்யப்பதிவர்கள் வருவதே பெரிசு ,இதுல எப்போ வந்தா என்ன?

//இந்த ஓயரைப் பிடுங்கி அந்த ஒயரில் இணைத்து போகிற போக்கில் எளிதில் மாற்றிவிடலாம் என்பதுபோல சொல்வது சரியல்ல.பல்லாயிரக் கணக்கான EVM இல் இந்த மாற்றங்கள் செய்வது எளிதானது அல்ல.//

இணைப்ப்பினை மாற்றி கொடுக்க இயலாதவாறு "பாதுகாப்பு அம்சம்" எந்திரத்தில் இருக்கிறதா?

ஆம் அல்லது இல்லை என மட்டும் சொல்லவும்.

பல்லாயிரக்கணக்கில் சொல்லவில்லை ஒரு தொகுதிக்கு சுமார் 100 பூத்தில் செய்தால் போதும்.

ஒரு பூத்துக்கு சுமார் 1000 வாக்கு என கொண்டாலும் 100*1000= 1,00,000 வாக்குகள் திசை மாறிவிடும் அவ்வ்!

#//தேர்தல் நாளன்று வாக்கு சாவடியிலும் ஏஜெண்டுகளை வைத்து மாதிரி வாக்குப் பதிவு செய்து ரிசல்ட் காண்பிப்பார்கள்.//

தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு செய்கிறார்களா? அப்படி செய்யவியலாது, ஏன் எனில் " வாக்குகளை அழிக்கும் "tare" or factory reset" அமைப்பு சீல் செய்யப்பட்டு பின்னர் தான் பூத்துக்கு வருகிறது , இப்படி செய்வது ஏன் எனில் பதிவான வாக்குகளை யாரும் அழிக்காமல் இருக்க , எனவே வாக்குப்பதிவு அன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தினால் அவ்வாக்குகளை அழிக்க முடியாதே?

எனக்கு தெரிந்தது அவ்ளோ தான் வேற விளக்கம் இருந்தால் சொல்லவும்.

இன்னும் சொல்லப்போனால் பூத் ஏஜண்டுகள் உடன் பாட்டுடன் அப்பகுதியில் செல்வாக்கான கட்சி "கள்ள ஓட்டு" போட்டுக்கொள்ளும் , எத்தினி பூத் ஏஜண்ட் யாருக்கு சப்போர்ட் என்பதை பொறுத்து , நாலு பேர் கட்சி ஏ க்கு சப்போர்ட் எனில் நாலு கள்ள ஓட்டு அவங்களுக்கு , 6 பேர் கட்சி "பி'க்கு சப்போர்ட் எனில் 6 கள்ள ஓட்டு அவங்களுக்கு என பங்கு பிரித்து போட்டுக்கொள்வார்கள், மதியம் 3 மணிக்கு மேல இதெல்லாம் நடக்கும், இதெல்லாம் கிராமப்புற பூத்களில் சகஜம் :-))

------

வவ்வால் said...

ராச நட ,

வாரும், நன்றி!

ஒயின் ஷாப் எப்ப தொறக்கும்னு வடிவேல் கேட்பது போல ,எப்ப அரசியல் பதிவு வரும்னு கேட்டுக்கிட்டே இருந்துட்டு இப்படி லேட்டா வாரிங்கலே?

#//அதுதான் ஆட்டம் பாட்டுக்கு போய்கிட்டிருக்குதே!அதென்ன என்னை நோண்டுறது:)அதுவும் இந்துத்வா பட்டம் வேற!பெரியாரின் ஆவி கேட்டா கோபிச்சுக்க போகுது:)டெல்லியிலும்,மெட்ராஸிலும் வாரிசு அரசியல் இப்போதைக்காவது தலை தூக்காமல் போனதே என்ற பெரும் மகிழ்ச்சிக்கு இந்துத்வா, ஜெயலலிதாவின் அல்லக்கை பேர் கூட வாங்கலாம்:)//

நீங்க தானே நோண்டுறதுக்கு வசதிய ஒளறி வைப்பீங்க அதான் :-))

# பெரியாரின் பேரன் கூட அவர் ஆவிய மறந்திருப்பார், இவர் என்னமோ ஆவி கூட பேசுற மீடியேட்டர் போல பேசிட்டு இருக்கார் அவ்வ்!

# வாரிசு அரசியலை மக்கள் மட்டுமல்ல அடிமண்ட தொண்டர்களும் ஏற்கவில்லை, அல்லக்கைகள் மட்டும் 'மக்கள் ஏற்றுக்கொண்டார் போல கூவிக்கொண்டிருந்தார்கள்" அத நம்பி இந்த வாரிசுகள் மனக்கோட்டை கட்டி விட்டார்கள்!

#//அரசியல் சூழலில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராவதும்,ராகுல் காங்கிரஸ் துணை இயக்குநர் ஆவதையும் விட சாயாக்காரன் மோடி பிரதமர் ஆவது நல்லது என்ற ஜனநாயக பார்வைக்கு பெயர் இந்துத்வான்னு எந்த தொண்டர்புராணத்தில் எழுதி வச்சிருக்குது:)//

அல்லக்கைனு பேரெல்லாம் ஏற்கனவே வாங்கியாச்சு ,என்னமோ புதுசா வாங்கப்போறாப்போல பேசிட்டு :))

பங்காளி தொண்டர்ப்புராணத்தில் இந்துத்வா, தோட்டத்து அல்லக்கைனு எல்லாம் பாடியிருக்கு :-))

#//மோடியின் வெற்றி எதிர்பார்த்ததுதான்.அதுக்குன்னு இப்படியா காங்கிரஸ்க்கும்,தி.மு.கவுக்கும் கழுவி ஊத்துறது? இதுல இன்னும் காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆளுதுன்னு சப்பைக்கட்டு வேற!//

காங்கிரசை மக்கள் முன்னர் நம்பி பொறுப்பு கொடுத்திருக்காங்களே அதை இல்லைனா சொல்ல முடியும்?

கொடுத்த பொறுப்பை உணராமல் செயல்ப்பட்டார்கள் அதான் " சர்ப் எக்செல் போட்டு" வெளுத்து விட்டார்கள் :))

#//நீங்க விமான பதிவா,அரசியல் பதிவான்னு குழம்பி அரசியல் பதிவு போடறதுக்கு பம்முற போதே சந்தேகப்பட்டிருக்கனும் உங்களுக்கும் சேர்த்து மக்கள் கழுவி ஊத்திட்டாங்கன்னு..மோடியும்,ஜெவும்,கலைஞரும்,இந்தியாவும்,இந்தியா நோக்கும் உலகே எதிர்பார்க்காத அரசியல் சுனாமி இது.//

பத்திரிக்கைகளில் இத்தனை இடமென சொல்லும் முன்னரே தமிழக நிலைமை அம்மையாருக்கு சாதகமாக இருப்பதாக நான் உணர்ந்தேன் அதான் என்னை உண்மையில் குழப்பியது, இதெல்லாம் ஆளுங்கட்சி என்பதால் செய்யப்படும் பில்டப்போ என்னமோ என நினைத்தேன்.மேலும் பொதுவாக ஆரம்பத்தில் ஜோராக செல்வது இறுதியில் வழுக்கி விடும், எனவே நாம தப்பா கணிச்சு சொல்லிடுவோமோ என நினைத்து வாய மூடிக்கிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு நினைச்சேன் அவ்வ்.

90 மார்க் வாங்குவாங்கனு நினைச்சா 100 வான்கின கதை தான், ஆனால் ஃபெயில் ஆகும் நிலை என யாரும் சொல்லவில்லையே, ஆரம்பத்தில் இருந்தே " சாதகமான" ரிப்போர்ட் தான் வந்தது, காங்கிரஸ், திமுக வினர் இதெல்லாம் மாயயை என தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்துக்கொண்டு ஏமாந்து விட்டார்கள்.

#//இருக்குற மெஜாரிட்டில எவனாவது மாட்டுனாலும் சங்குதான் என்பதால் அடக்கி வாசிப்பதும் உத்தமம்.மோடி எதிர்ப்பலைகளை சமாளித்தும்,குண்டர்களின் குண்டு வெடி இந்தியாவில் வெடிக்காமல் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதிலும்,சொன்னபடி பொருளாதார மேம்பாட்டை நிறுவுவதில்தான் மோடியின் லெகசியே இருக்குது.//

பார்ப்போம் என்ன நடக்குதுனு , இப்போ தானே படத்துக்கு டைட்டில் போட்டு இருக்கு!

#//எதை சொன்னாலும் அதற்கு ஒரு கான்ஸ்பைரஸி தியரியா?மெசின்ல கோளாறுன்னாலே 0 வெற்றிக்கு எம்பிக் குதிக்கலாம்.இதுல வேற எண் தப்பா காண்பிக்குதுன்னா கிளிஞ்சது கிருஷ்ணகிரி.//

cartesian doubt என ஒன்று இருக்கு, இதனை பிரஞ்சு தத்துவவியலார் "ரெனெ டெஸ்கார்டெஸ்" வழி மொழிந்துள்ளார், சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு உண்மையை "உண்மை என நிறுவ" சந்தேகப்பட வேண்டும் என்கிறார். இவரோட இன்னொரு புகழ் பெற்ற வாசகம்,I think therefore I am ... a blogger .. i am a human or i am a god !!!

இப்படி நாம நினைப்பதே நாம் , மற்றபடி நாம் என ஒன்று தனியாக இல்லை :-))

doubt everything என கார்ல் மார்க்ஸ் கூட சொல்லி இருக்கார். எனவே அத்தனையும் சந்தேகப்படு "உனக்கான உண்மை ஒளியை கண்டு பிடி!!!

தொடரும்...
----------

வவ்வால் said...


தொடர்ச்சி...

#//ஜெயலலிதா மைனாரிட்டி மைனாரிட்டின்னு சொன்னது கூட இல்லாமல் 0 வில் வந்து நிற்குதே!
ஆளும் திறன்,செயல்பாடுகள் அத்தனைக்கும் மதிப்பில்லா சூழலில் குடும்ப அரசியல் வந்து நிற்பதை நினைத்தால் வருத்தமாக இருக்குது.

என்னைப்பொறுத்தவரையில் இரண்டே காரணம்.1ல 2ஜி குந்திகிட்டிருப்பதும் 2ல இங்கேயும் அங்கேயும் ஈழப்பிரச்சினை சூரிய நிலைக்கு ஒத்து வரலை.//

இதெல்லாம் பல காலமாக பல முறை நான் சொல்லிட்டேன் ,யாரு கேட்டா, இப்போ அதான் நடக்குது!

#//0 விலிருந்து பீனிக்ஸ் என்பதெல்லாம் குளறுபடிக்கின்னே பிறந்த ஜெயலலிதாவின் கையில்தான் இருக்குது:)//

இதான் தமிழக அரசியலில் சித்தாந்தமே , ஒருத்தர் செய்யும் தவறை வைத்து இன்னொருவர் 'நல்லவராக" தெரிவார், உண்மையில் எல்லாம் ஒரே குட்டை மட்டைகள் தான் , ஐந்தாண்டுக்கு ஒரு முறை தன்னால வாய்ப்பு உருவாகிடும், இம்முறை அது பிரேக் ஆகணும் ,ஆகும், பார்ப்போம்.

#//அரசியல் பேசுனா வலைத்தளத்தையே மூடி விட உத்தரவுன்னு கேள்விப்பட்டேன்.பின்னூட்டத்தையும் மூடி விடுவாங்களான்னு சின்ன சந்தேகம்:)//

இது எப்போ இருந்து? நான் வேற அரசியல் சுனாமி பதிவு தயாரிச்சுட்டு இருக்கேனே அவ்வ்!

#//நேரம் கிடைச்சா மல்லு பார்க்க வாரேன்!இரட்டை மொழிக்கு தமிழை விட்டா இனிதாவது எங்கு காண்போம்:)//

ஒருத்தன் மூளையில் இருக்க அத்தனை நியுரான்களையும் கசக்கி பிழிந்து சூசு போட்டு பதிவு எழுதிட்டு இருக்கான் அதை பாக்காம "மல்லு" பார்க்க வாரேன்னு சொல்லுறாரே ' இது மாதிரி மூடர் கூடத்தில்" இன்னும் எத்தினி நாளைக்கு தான் உழல்வேனோ தெரியலையே அவ்வ்!

----------

//இன்னுமொரு முறை வவ்வால் மண்டையில் கொட்டுங்களேன்:)///

பின்னூட்டம் போடும் போது குறுக்க பாய்றதே வேலையா போச்சு அவ்வ்.

நம்ம கபாலம் ரொம்ப ஸ்ட்ராங்கு அடியேன் ஒரு "'இரும்பு தலையன்" என் தலையில கொட்டுனா கொட்டுன கை தான் உடையும் :-))

குட்டிபிசாசு said...

வவ்வால்வாழ்,

//இப்படி எங்கப்பார்த்தாலும் சிரிச்சு வச்சு ஏன்யா ஊரைக்குழப்புறீர் அவ்வ்!//

கருத்து சொன்னால் பிரச்சனை ஆகுது என்று சிரித்துவைத்தால் அதுக்கு வியாக்யானம். :))

ராசநடையை தூண்டிவிட்டுவிட்டீர். இப்ப பாரும் அவரு தமிழக, இந்திய, உலக அரசியல் எல்லாத்தையும் கிண்டி கிளரி உப்புமா செய்கிறார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//தேர்தல் நாளன்று மாதிரி வாக்குப்பதிவு செய்கிறார்களா? அப்படி செய்யவியலாது, ஏன் எனில் " வாக்குகளை அழிக்கும் "tare" or factory reset" அமைப்பு சீல் செய்யப்பட்டு பின்னர் தான் பூத்துக்கு வருகிறது , இப்படி செய்வது ஏன் எனில் பதிவான வாக்குகளை யாரும் அழிக்காமல் இருக்க , எனவே வாக்குப்பதிவு அன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்தினால் அவ்வாக்குகளை அழிக்க முடியாதே?//

இது முற்றிலும் தவறு.

ஒவ்வொரு வாக்குசாவடியிலும் மாக் போல் என்ற மாதிரி வாக்குப் பதிவை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாக ஏஜெண்டுகளின் முன்னிலையில் செய்து காண்பிக்க வேண்டும். இது கட்டாயம். நான் 2011 இல் நடந்த தேர்தலில் 30 வாக்குகள் வரை ஏஜண்டுகளை விட்டே பதிவு செய்து ரிசல்டைக் காண்பித்தேன். presiding officers diary ( இது முக்கியமான ஆவணம்)இல் இதற்கான விவரங்களை வாக்கு சாவடி தலைமை அலுவலர் குறிக்கவேண்டும் ஏஜெண்டுகள் தாங்கள் போட்ட வாக்குகளின் எண்ணிக்கையை குறித்து வைத்துக் கொள்வார்கள் .ஏஜெண்டுகள் அனைவரும் மாதிரி வாக்கு அளித்து முடித்ததும். கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள Close பட்டனை அழுத்தி பதிவு முடிந்ததாக சொல்வார். close ஐ அழுத்தி விட்டால் அதற்குமேல் வாக்களிக்க முடியாது.total button ஐ அழுத்தி பதிவான வாக்குகளில் எண்ணிக்கையை காண்பிப்பார். மேலும் வாக்களிக்க முடிகிறதா என்று சோதித்துக் கொள்ளவும் அனுமதிப்பார். ballot unit இல் வாக்களிப்பு பட்டனை அழுத்திப் பார்ப்பார்கள். மொத்தத்தை மீண்டும் காட்டி மொத்த எண்ணிக்கை மாறாதிருப்பதை உறுதி செய்வார். இப்போது Result பட்டனை அழுத்தினால் ஒவ்வொருவரிசை எண்ணுக்கும் எவ்வளவு வாக்கு பதிவாகி இருக்கிறது என்பதை காண்பித்து அவர்கள் போட்ட ஒட்டு எண்ணிக்கை சரிதான் என்பது உறுதி செய்யப்படும்.
இவை முடிந்தபின் Clear என்ற பட்டனை அழுத்தப்பட்டு பதிவானது அனைத்தும் அழிக்கப்படும். அதை உறுதி செய்ய ஏஜெண்டுகளின் முன்னிலையில் மீண்டும் ரிசல்ட் பட்டனை அழுத்துவார். இப்போது ஒவ்வொரு வரிசை எண்ணுக்கும் தொடர்ந்து 0 வாக்குகள் காண்பித்துக் கொண்டே வரும். வேண்டுமானால் அவர்களே கூட சோதித்துக் கொள்ளலாம். இதில் ஏதேனும் தவறு இருந்து உறுதி செய்யப்பட்டால் வேறு avm மாற்றப்படும். இதற்கான கையொப்பம் ஏஜெண்டுகளிடம் பெற்றபின் இந்தப் பகுதியைமூடி சீல் செய்துவிடுவார்கள். சீலில் ஏஜெண்டுகள் தங்கள் முத்திரைகளை பதிப்பார்கள். முடியபின் CLOSE BUTTON தெரியும் வண்ணம் ஒரு ஓட்டை இருக்கும்.
முன்னதாக உட்புறத்தில் ரிசல்ட் பகுதியை தனியாக சீலிடவேண்டும்.
இவ்வாறு சீலிடும்போது பாட்டரியை கழட்டிவிடவேண்டும் ஏனினில் க்ளோஸ் பட்டனில் கொஞ்சம் தெரியாமல் அழுத்தமாக கைபட்டுவிட்டால். வாக்குப் பதிவு தொடங்கு முன்னேயே cLOSE ஆகிவிடும். ஓட்டளிக்க முடியாது. எனவே சீலிட்ட பின் மீண்டும் பாட்டரியை பொருத்துவார்கள். சீலிடுவதற்கு பேப்பர் சீல் என்ற ஒன்றை பயன்ப்படுத்துவார்கள். அதில் ஒரு எண் குறிக்கப் பட்டிருக்கும் அந்த எண்ணை ஏஜெண்டுகள் குறித்துக் கொள்வார்கள். இந்த விவரங்கள் அடங்கிய அலுவலர் கையெழுத்திட்ட படிவம் ஒன்றும் ஒவ்வொரு ஏஜ்ண்டுக்கும் வழங்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தில் பேப்பர் சீல் கிழிந்திருந்தாலோ எண் மாறி இருந்தாலோ முகவர்கள் ஆட்சேபிக்கலாம். அவை உறுதி செய்யும் பட்சத்தில் அந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையையே நிறுத்தி விடுவார்கள்.
வாக்குப் பதிவு தொடங்கு முன் முகவர்கள் முன் மீண்டும் மொத்த ஒட்டு எண்ணிக்கை 0 ஆக இருப்பதையும் வாக்குகள் ஏதும் பதிவாகவில்லை என்பதையும் காண்பித்து விட்டே உண்மையான வாக்குப் பதிவு தொடங்கப்படும்.
வாக்குப் பதிவு முடிந்ததும் முகவர்களிடம் அறிவித்து விட்டு அவர்கள் முன்னிலையில் க்ளோஸ் பட்டனை அழுத்தி வாக்குப் பதிவை முடிக்கவேண்டும். BALLOT UNIT படங்களை அழுத்திக் காண்பித்து இனி வாக்குகள் பதிவு செய்ய முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.பின்னர் வெளிப்புற இணைப்பு ஒயரை அகற்றி cONTROL UNIT,BALLOTING UNIT ஐ தனித்தனி பெட்டிகளில் வைத்து சீல் செய்யவேண்டும். வேட்பாளர்களின் வாக்கு சாவடி முகவர்கள் அனைவருக்கும் அன்றைய வாக்குப் பதிவு விவரங்கள் குறிப்பிட்ட படிவத்தில் அலுவலரின் கைழுத்திட்டு வழங்கப்படும்.
முடிந்தவரை சொல்லி இருக்கிறேன்.

இன்னும் சில நடைமுறைகளும் உள்ளன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு திருத்தம்:cONTROL யூனிட்டை ON OFF செய்ய சுவிச் உள்ளது,பாட்டரியை கழற்றத் தேவை இல்லை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

/இணைப்ப்பினை மாற்றி கொடுக்க இயலாதவாறு "பாதுகாப்பு அம்சம்" எந்திரத்தில் இருக்கிறதா?//
இந்தக் கேள்வியே தவறு.தனியாகக் கொண்டு போய் பிரித்துத்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.அப்படிச் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. நிறுவனத்தில் இருந்து avmகள் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடங்கி பல கட்டங்களில்பல்வேறு நடைமுறைகள் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இவை அனைத்துக் கட்சிகளின்ஏஜண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறுகின்றன.

வவ்வால் said...

முரளி,

விரிவான பதிலுக்கு நன்றி!

நீங்க சொன்ன சீல் வைப்பதை தான் நானும் சொன்னேன் ,ஆனால் அது மாவட்ட மையத்திலேயே வைத்து விடுவார்கள் என்பது போல படித்தேன் ,அல்லது சீல் வைக்கப்படும் என சொன்னதை , மாவட்ட மையத்தில் வைப்படுவதாக எடுத்துக்கொண்டேன் என நினைக்கிறேன்.

# நீன்கள் சொன்னது போல , மாதிரி வாக்கெடுப்பு, இன்ன பிற விவரங்களை எல்லாம் சரியாக பின்ப்பற்றுவது நகர்ப்புரங்களில் தான் சாத்தியம், கிராமப்புரங்களில் இத்தனை "தீவிர கண்காணிப்பெல்லாம்" இருக்காது.

நான் கள்ள ஓட்டு போடும் வேலை நடப்பதையே சொல்லி இருக்கேன், ஏரியாவில் செல்வாக்கான ஆள் நினைத்தால் செய்யலாம்.

வாக்குப்பதிவுக்கு இனிமே யாரும் வரமாட்டாங்கனு ஒரு நிலை வந்ததும் ,மதியத்துக்கு மேல " பூத் ஏஜண்ட்களை" வளைத்து , பங்குப்போட்டு ஓட்டுப்போடுவாங்க, ஆரும் கேட்டால் வம்புனு கேட்கவே மாட்டாங்க.

அப்படி இருக்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தில் கைய வச்சிட்டு "அடக்கி வைக்க" முடியாதா?

//இந்தக் கேள்வியே தவறு.தனியாகக் கொண்டு போய் பிரித்துத்தான் மாற்றங்கள் செய்யமுடியும்.அப்படிச் செய்வதற்கு வாய்ப்பு இல்லை//

ஏன் பிரிக்க முடியாத அமைப்பா அது?

எளிதில் பிரிக்கலாம், என்னோட கேள்வி இதான்,

எப்படியோ பிரிச்சிடுறான்க,இப்போ

இணைப்பை மாற்றுவதை தடுக்க "பாதுகாப்பு" அம்சம் என்ன உள்ளது?

மெசினை பூத்துக்கு எடுத்து போகும் முன்னர் "முழுக்க தேர்தல் அலுவலர்கள்" எனும் அரசு ஊழியர்கள் பாதுகாப்பில் தானே இருக்கப்போகுது, அப்போவே அரசியல் கட்சிகளின் ஏஜண்டுகளையா கூப்பிட்டு பாதுகாக்க சொல்லப்போறாங்க.

சென்னையில் மொத்தமாக எல்லா மெசினையும் வச்சிருக்கும் போது யாரு அதுக்கு பொறுப்பு? அங்கேயிருந்து தானே மாவட்ட வாரியா போகப்போகுது.

#/பல்வேறு நடைமுறைகள் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.இவை அனைத்துக் கட்சிகளின்ஏஜண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறுகின்றன./

பல ஆயிரம் மெசின்களை எல்லாவரையும் ஏஜண்டுகள் முன்னால் ஒவ்வொன்றாக சோதித்துக்காட்டுகிறார்களா?

அப்படி சோதிக்கப்பட்டிருக்குமானால் ஏன் பல மையங்களில் வாக்குப்பதிவு துவங்கிய பின் எந்திரம் பழுது என "வாக்குப்பதிவை" நிறுத்தி வைக்கிறாங்க, இம்முறை சேலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் ஒரு பூத்தில் மீண்டும் மறு தேர்தலே நடத்தினாங்க.

எனவே 100 சதவீதம் பாதுகாப்பான எந்திரம் என சொல்ல எந்த உத்திரவாதமும் இல்லை , அரசு அதிகாரிகளின் நாணயத்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்கிறோம் ,அவ்வளவு தான்!

# ஒரு சின்ன கணக்கு சொல்கிறேன் சரியானு சொல்லுங்க,

வாக்குப்பதிவு காலம் , காலை 7 முதல் மாலை 5 வரை என மொத்தம் 10 மணி நேரங்கள்.

ஒரு மணி = 60நிமிடங்கள்.

10*60= 600 நிமிடங்கள்.

ஒரு வாக்களிக்கு குறைந்த அட்சம் 1 நிமிடம் எனக்கொண்டாலும் ஒரு எந்திரத்தில் அதிகபட்சமாக 600 வாக்குகள் தான் பதிவே செய்ய முடியும்,அதுக்கு தான் நேரமே இருக்கு.

மாலை 3 மணிக்கு மேல எல்லாம் பூத் பக்கம் போனால் வெறிச்சோடி தான் கிடக்கு ,ஆனால் பெரும்பாலான எந்திரத்தில் 600க்கு மேல வாக்குகள் பதிவாகி இருக்கும் , அப்படித்தான் கவுண்டிங்கின் போது காட்டுகின்றது.

ஒரு எம்பி தொகுதிக்கு எத்தினி பூத்து ,எத்தினி மெசின் இருக்கு ,ஒரு பூத்துக்குட்பட்ட வாக்களர்கள் எண்ணிக்கை என எல்லாமே தேர்தல் ஆணைய தளத்தில் கிடைக்குது நானும் பாத்துட்டேன், ஆனால் மொத்த நேரம் மற்றும் பதிவான வாக்கு எண்ணிக்கை எல்லாமே டேலி ஆகாத போல தான் எனக்கு தெரியுது.

இதுல ஒரு வாக்கு பதிவுக்கும் அடுத்த வாக்குக்கும் 30 செகண்ட்ஸ் டைம் டிலே மெக்கானிசம் வேற மெசின்ல இருக்காம் அவ்வ்.

அது 30 செகன்ட் அல்லது 10 செகன்ட்டா?

வவ்வால் said...

முரளி,

//Before the commencement of the polling process, the Presiding Officer demonstrates to the polling agents present that there are no hidden votes already recorded in the machine by pressing the 'Result' button. Then he or she conducts a mock poll by asking the polling agents to record their votes and presses the result button to satisfy them that the result shown is strictly according to the choice recorded by them. Finally the clear button is pressed to clear the result of the mock poll and the "unit is sealed before sending it to the respective polling booths." Each Control Unit has a unique ID Number, which is painted on each unit with a permanent marker. This ID Number will be allowed to be noted by the Polling Agents and will also be recorded in a Register maintained for the purpose by the Returning Officer. The address tag attached to the Control Unit also will indicate this ID Number. This is to avoid replacement of a genuine EVM by another one.//

http://en.wikipedia.org/wiki/Indian_voting_machines

விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.

எனவே இப்பொழு உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி, சின்னத்துடன் பிரிண்ட் அவுட் தரும் முறையினை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது வரையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு நம்பகமான "உறுதி" இல்லை என்பதே உண்மை ஆகும்.

வவ்வால் said...

முரளி,

//Before the commencement of the polling process, the Presiding Officer demonstrates to the polling agents present that there are no hidden votes already recorded in the machine by pressing the 'Result' button. Then he or she conducts a mock poll by asking the polling agents to record their votes and presses the result button to satisfy them that the result shown is strictly according to the choice recorded by them. Finally the clear button is pressed to clear the result of the mock poll and the "unit is sealed before sending it to the respective polling booths." Each Control Unit has a unique ID Number, which is painted on each unit with a permanent marker. This ID Number will be allowed to be noted by the Polling Agents and will also be recorded in a Register maintained for the purpose by the Returning Officer. The address tag attached to the Control Unit also will indicate this ID Number. This is to avoid replacement of a genuine EVM by another one.//

http://en.wikipedia.org/wiki/Indian_voting_machines

விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.

எனவே இப்பொழு உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின் படி, சின்னத்துடன் பிரிண்ட் அவுட் தரும் முறையினை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இது வரையில் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கு நம்பகமான "உறுதி" இல்லை என்பதே உண்மை ஆகும்.

காரிகன் said...

வவ்வால்,
தேர்தல் தொடர்பான அரசியல் பதிவுகள் எல்லாம் நம் காலை வாரிவிடுபவை நக்கீரன் தேர்தல் கணிப்பு போல. இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த பழைய அரசியல் பதிவுகளைப் படித்தால் படு நகைச்சுவையாக இருக்கும். நீங்கள் துவக்கம் முதலே ஜெ அதிக இடம் பிடிப்பார் என்று சொல்லிவந்தீர்கள். ஆனாலும் 37 பெற்று அரசியல் சாணக்கியரை 0 இல் நிறுத்தியிருப்பதை யாருமே கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். (இதை சொல்வதால் என்னை டேய் நீ அவங்க ஆளா என்று சிலர் நினைப்பதை மறுக்க முடியாது.)

வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை மேற்கத்திய நாடுகளில் எப்போதோ காணாமல் போய்விட்ட ஒன்று. இங்கே நாம் இதை பிடித்துக் கொண்டிருக்கக் காரணம் அதன் விரைவுத் தன்மை மட்டுமே. (சோம்பேறி அதிகாரிகளுக்குக் கிடைத்த ஜீபூம்பா.)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//விக்கிப்பீடியாவில் நான் சொன்னது போல போட்டிருக்கு, எனவே பூத்தில் வச்சு மாக் போல் நடத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.//
விக்கி பீடியாவை நம்பும் நீங்கள் நேரடியாக பணி செய்த நான் சொல்வதை நம்ப மறுக்கிறீர்கள். அந்தக் கட்டுரையை தேர்தல்பணியுடன் தொடர்புடையவர்கள் எழுதி இருக்க முடியாது. விக்கிபீடியா சொல்வதே வேதம் நினைப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். முடிந்தால் அதில் திருத்தம் செய்ய முயற்சிக்கிறேன்.

இதோ புத்தகத்தில் இருந்து சொன்னால்தான் நம்புவீர்களா பார்ப்போம். நம்பகமான தேர்தல் ஆணையத்தின் Hand book of Officers ஐ பாருங்கள். ஒவ்வொரு வாக்கு சாவடி தலைமை அலுவலருக்கும் இது தரப்படும். இதில் சொல்லும் விதிமுறைகளையே பின்பற்றவேண்டும்.
CHAPTERXII
CONDUCTING MOCKPOLL
Demonstration of ‘Clearing’votingmachine
Before commencing the poll,
you have to satisfy not only yourself but also all polling agents, who are present at the polling station that the voting machine is in perfect working order and that no votes have already been recorded in the machine....................

Legal provisions regarding conduct of poll
The provisions of the law which have a bearing on your duties
as a Presiding Officer are reproduced in Annexures I and II.

ஏற்கனவே திறக்க முடியாதபடி அமைந்திருந்தாலும் சிப் லெவல் அமைந்துள்ள பாகங்கள் மாவட்ட அளவில் சீல் வைக்கப் படும். அவற்றை வாக்கு சாவடியில் திறக்க முடியாது. சீல் வைப்பது மாவட்ட அளவிலும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட ஏஜெண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறும்.
மாவட்ட அளவில் மாக் பொழில் பிரிண்ட் எடுத்தும் காட்டப்படும். இரண்டும் ஒப்பீடு செய்து உறுதி செய்யப்படும்.
*******************************
நகரத்தை விட கிராம ஏஜெண்டுகள் பிடிவாதக் காரர்கள் விவரமானவர்கள் நமது சிறு தவறையும் பெரிது படுத்தி விடுவார்கள். விளக்கங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்..(உங்களைப் போல்? ஹிஹிஹி )
ஓட்டை தவறாக போட்டு விட்டு மெஷின் தவறு என்று வாதிடுவார்கள். மீண்டும் அவர்களுக்கு செய்து காட்ட வேண்டி புரிய வைக்க வேண்டும்.




டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

Before the commencement of poll,the voting machine hastobe demonstrated to the polling agents,who are present at the polling station
to satisfy them that no votes are already recorded therein and that the machine is
in perfect working condition. For these
purposes,a mock poll shall be compulsorily conducted by letting thepolling agents
record a few votes at random for each of the contesting candidates and tallying the result thereafter. The Commission’s latest guideline stipulates that at least 50 votes will be cast in mock poll and at least one vote will be
cast against each candidate

According to the Commission’s instructions,if there is no mock poll at a polling station, there shall be no poll at that polling station.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு நிமிடத்திற்குள் நான்கு ஓட்டுக்கள் தாரளமாக பதிவு செய்ய முடியும். பீப் சவுண்ட் 7 வினாடிகள் ஒலிக்கும் என்பதாக ஞாபகம். சரிபார்த்து சொல்கிறேன்.
சராசரியாக இரண்டு ஓட்டுக்கள் மிக எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும் முடியும் நேரத்தில் கூட்டம் இருந்தால் நிற்பவர் அனைருக்கும் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்கப்படும் ********
பல இடங்களில்demo மெஷின்கள் வைத்திருந்தனர். பலர் அதைப் பயன்படுத்தியும் பார்த்தனர்.

வவ்வால் said...

காரிகன்,

வாங்க,நன்றி!

//இப்போது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த பழைய அரசியல் பதிவுகளைப் படித்தால் படு நகைச்சுவையாக இருக்கும்//

அதே தான் ,அதுவும் ரகசியமாக பேசிக்கொண்டார்கள் என சொல்லீட்டு ஒட்டுக்கேட்டாப்போல "அவங்க என்னப்பேசினாங்க" என்பதையும் சொல்லுவாங்க "அதுக்கு பேரு ரகசிய பேச்சா" அவ்வ்!

#//நீங்கள் துவக்கம் முதலே ஜெ அதிக இடம் பிடிப்பார் என்று சொல்லிவந்தீர்கள். ஆனாலும் 37 பெற்று அரசியல் சாணக்கியரை 0 இல் நிறுத்தியிருப்பதை யாருமே கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். (இதை சொல்வதால் என்னை டேய் நீ அவங்க ஆளா என்று சிலர் நினைப்பதை மறுக்க முடியாது.) //

என்ன தான் கணிச்சாலும் 100 %ஸ்வீப்னு சொல்ல முடியாதல்லவா,எனவே பெரும்பான்மை கிடைக்கும் என்பதோடு தான் நிறுத்திக்க முடியும், மற்றக்கட்சிகளை விட அம்மையாருக்கு சாதகமான சூழல் நிலவுவது தெளிவாக தெரிந்தாலும் மற்றக்கட்சிகள் எப்படியும் ஓரளவு ஜெயிக்கலாம்னு நினைக்க காரணமே "கடைசில நாம" காச அள்ளி விடலாம் என்ற பிளான் தான் , பெரிய கட்சிகள் எல்லாமே பணம் கொடுத்தன ,அதுவும் சில தொகுதிகளில் ஆளுங்கட்சியை விட அதிகம் செலவழித்த எதிர்க்கட்சியினரும் இருக்காங்க ,ஆனால் மக்கள் கொடுப்பதை எல்லாம் வாங்கிட்டு "அவங்க விருப்பப்பட்ட சின்னத்துக்கே ஓட்டுப்போட்டு இருக்காங்க என்பதே உண்மை.

# நம்ம ஊரில, எந்த சார்பும் இல்லாம "இப்படி நடக்கும்னு" கூட சொல்ல முடியாது, அதுக்கும் ஒரு முத்திரைக்குத்திடுவாங்க அவ்வ்!

//வாக்கு எந்திரத்தின் நம்பகத்தன்மை மேற்கத்திய நாடுகளில் எப்போதோ காணாமல் போய்விட்ட ஒன்று. இங்கே நாம் இதை பிடித்துக் கொண்டிருக்கக் காரணம் அதன் விரைவுத் தன்மை மட்டுமே. (சோம்பேறி அதிகாரிகளுக்குக் கிடைத்த ஜீபூம்பா.)//

அதே தான் , வெளிநாடுகளில் தவறு நடக்க வாய்ப்பிருக்கு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள், நம்ம நாட்டிலோ " அதெல்லாம் இல்லை"னு வாதத்திறமையால் வாதாடி என்றுவிடுவார்கள் அவ்வ்!

முரளி எப்படி "வாதாடுறார் பாருங்க" இதான் நம்ம நாட்டு அரசு எந்திரத்தின் பாலிசி.

நமக்கு மெசின் செஞ்சு தந்த ஜப்பானிலவே வாக்கு சீட்டு தான் , மெசினை லோக்கல் பாடி எலெக்‌ஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்துறாங்க :-))
----------

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி!

உங்க கிட்டே இது போல வாதம் தான் வரும்னு நினைச்சேன் -:))

நீங்க சொன்னாப்போல தான் மாக் போல் நடக்குதுனு வச்சிப்போம்.

நான் கேட்ட கேள்வியான ," இணைப்பை மாற்றிக்கொடுக்கவே முடியாத வகையில் மெசின் வடிவமைக்கப்பட்டுள்ளதா, மாற்றிக்கொடுப்பதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சம் எந்திரத்தில் உள்ளது ?

என்பதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே?

#//ஏற்கனவே திறக்க முடியாதபடி அமைந்திருந்தாலும் சிப் லெவல் அமைந்துள்ள பாகங்கள் மாவட்ட அளவில் சீல் வைக்கப் படும். அவற்றை வாக்கு சாவடியில் திறக்க முடியாது. சீல் வைப்பது மாவட்ட அளவிலும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட ஏஜெண்டுகளின் முன்னிலையில்தான் நடைபெறும்.//

பதிவினையே படிக்கவில்லையா?

நான் சிப்புக்குள்ள எல்லாம் போகவே இல்லை, பேலட் யூனிட்டில் பித்தான்களுக்கு அடியில் இணைப்பினை மாற்றுவதை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.

மேலும் வாக்கு சாவடியில் திறந்து மாற்றுகிறார்கள் என்றும் சொல்லவில்லையே நீங்களாக ஒரு கருத்தினை நான் சொன்னாப்போல சொல்லி ,அப்படி செய்ய முடியாது எனப்பதிலும் சொல்லிக்கிறீங்களே அவ்வ்!

மாவட்ட அளவிலேயே தொகுதிக்கு சுமார் 100 மெசினை மட்டும் மாற்றி அமைத்தால் போதும் ஒரு லட்சம் ஓட்டில் விளையாடலாம், அதுவே வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும்.

# //நகரத்தை விட கிராம ஏஜெண்டுகள் பிடிவாதக் காரர்கள் விவரமானவர்கள் நமது சிறு தவறையும் பெரிது படுத்தி விடுவார்கள். விளக்கங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்..(உங்களைப் போல்? ஹிஹிஹி )//

உங்களைப்போல கூட தான் ஒரு பொய்யை உண்மையாக்க துடிப்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் :-))

ஒரு சில விவரமான பூத் ஏஜண்டுகள் தான் தெளிவாக கவனிப்பார்கள் , அதுவும் ஏதேனும் ஒருக்கட்சி கோல்மால் செய்ய போகிறது என்றால் முதலிலேயே "அந்தந்த பூத்களில்" உள்ளவர்களை கவனிச்சு மடக்கிடுவாங்க.

பூத் ஏஜன்டுகள் எல்லாம் விழிப்பாக செயல்ப்படுவார்கள் என நினைப்பது ஒரு நம்பிக்கை தான்.

மும்பையில் மாக் போல் செய்துவிட்டு அதனை அழிக்காமல் அப்படியே ஒட்டு போடவும் அனுமதித்து இருக்கிறார்கள்.

"The re-polling will take place in Charkop area booth number 243 and Malad West booth number 242 of Mumbai North West constituency.

Election Commission officials told PTI that votes franchised during the mock polls on the affected booths undertaken by the EC were not cleared before the actual polls, resulting in the EVMs showing more votes cast than the actual number."

http://www.rediff.com/news/report/ls-election-3-mumbai-booths-to-vote-again-on-sunday/20140426.htm

இதனை வாக்குப்பதிவு முடிஞ்சு "பதிவான வாக்குகளின்" சதவீதம் ,எண்ணிக்கை எல்லாம் சரிப்பார்க்கும் போது தான் கண்டுப்பிடிச்சு இருக்காங்க.

பூத் ஏஜண்டுகள் மாக் போல் வாக்குகள் அழிக்கப்பட்டதை உறுதி செய்திருந்தால் இப்படி நடக்குமா?

ஹி..ஹி நீங்க போலிங் ஆபிசராக இருந்திருந்தால் ,இதை வெளியில தெரியாம அமுக்கிடலாம் ,கூடுதலாக மெசினில் இருக்க வாக்குகளுக்கு ஏற்ப ' ரெக்கார்டுகளில்" திருத்தம் செய்தால் போச்சுனு எளிதான தீர்வு கண்டுப்பிடிச்சிருப்பீங்க தானே :-))

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //According to the Commission’s instructions,if there is no mock poll at a polling station, there shall be no poll at that polling station.//

சாரே ஆரம்பத்தில் விக்கிய பார்த்தேன் ,அப்புறம் எலெக்‌ஷன் கமிஷனிலும் பார்த்தேன் அவங்க பிடி.எஃப் ஆக தான் வச்சிருக்காங்க, அதில் நீங்க சொன்னத மட்டுமேவா போட்டிருக்கு?

வாக்குப்பதிவு நேரத்துக்கு(காலை ஏழு மணிக்கு முன்னர்) முன்னர் மாக் போல் நடத்தும் போது "எந்த பூத் ஏஜண்டும்" வரவில்லை எனில், 15 நிமிடம் காத்திருந்து விட்டு, தேர்தல் அலுவலரே சாட்சியாக வைத்து அவங்களே ஒரு மாக் போல் நடத்திக்கலாம்னு சொல்லி இருக்கு,அதனை டிக்ளரேஷன் பார்மில் குறிப்பிட்டு விட்டால் போதும்.

இந்த பேராகிராப்பை கவனமாக தவிர்த்துவிட்டு உங்களுக்கு சாதகமான பகுதியை மட்டுமே "காப்பி & பேஸ்ட்" போடுறிங்களே இதான் "உங்க நியாயமா"

இப்ப உடனே எப்படியோ மாக் போல் நடக்குது தானே என அடுத்த சப்பக்கட்டை சொல்வீங்களாம் :-))

#//சராசரியாக இரண்டு ஓட்டுக்கள் மிக எளிதாக பதிவு செய்ய முடியும். மேலும் முடியும் நேரத்தில் கூட்டம் இருந்தால் நிற்பவர் அனைருக்கும் டோக்கன் வழங்கப்படும். அவர்களுக்கு மட்டும் எவ்வளவு நேரம் ஆனாலும் ஓட்டளிக்கும் வாய்ப்பளிக்கப்படும்//

ரெண்டு ஓட்டு போடலாம்னே வச்சிப்போம், இப்போ வாக்கு போடும் போது வாக்களர் கொஞ்ச நேரம் " எல்லா சின்னத்தையும்" பார்க்கவே மாட்டாரா?

கையில மை வச்சிட்டு ,கையொப்பம் போட்டு விட்டு , ரெடி என கண்ட்ரோல் யூனிட்டினை புரோசிடிங்க் ஆபிசர் அழுத்திய பின்னர், வாக்காளர் , பேலட் யூனிட்டில் போய் வாக்களிக்க போகிறார் , அவர் யாருக்கு வாக்களிப்பது என குழப்பமா இருக்கு, கொஞ்சம் யோசிக்கிறேன் என சொல்லிட்டு சும்மா நின்னால் " தேர்தல் அலுவலர்" என்ன செய்யணும் என கொஞ்சம் விளக்க முடியுமா?

---------

இப்ப உள்ள வாக்கு முறையில் நம்பகத்தன்மை இல்லைனு தான் சுப்ரீம் கோர்ட்டே "பிரிண்ட் அவுட்" வரும் வகையில் மெசினை தயாரிக்கணும் என உத்தரஏ போட்டிருக்கு ,இதனை முன்னரே சொன்னேன் அதெல்லாம் கவனிக்காதிங்க?

//India ordered to introduce 'paper trail' in electronic voting machines
India’s Supreme Court has directed the country’s Election Commission to introduce a paper backup of votes cast through electronic voting machines, but allowed the commission to introduce it in stages during general elections next year.//

http://www.pcworld.com/article/2053800/india-ordered-to-introduce-paper-trail-in-electronic-voting-machines.html

# நமக்கு மெசினை வித்த ஜப்பானில் கூட பேப்பர் ஓட்டு தான்

//votes in national and most local elections are cast by writing the candidate's or party's name on a blank ballot paper. In elections for the House of Representatives voters fill in two ballots, one with the name of their preferred district candidate and one with their preferred party in the proportional representation block//

http://en.wikipedia.org/wiki/Elections_in_Japan
http://en.wikipedia.org/wiki/Elections_in_Japan#cite_note-28

early voting என தேர்தல் நாளுக்கு முன்னரே ஓட்டு போட விரும்பினால் அப்போ மட்டும் மின்னணு ஓட்டு போடலாம் , அதனை மின்னஞ்சல் மூலமாவும் போடலாம்.

ஃபிரான்சில் எல்லாம் வெளிநாட்டில் இருப்பவர்கள் , தூதரகத்தில் போய் கணினியில் வாக்களிக்கலாம்.

போன முறை வளைகுடா வாழ் இந்தியர்கள் கூட தூதரகத்தில் வாக்களித்துள்ளார்கள், நம்ம நாட்டிலும் அப்படியே தூதரகத்தில் இருந்து கணினி மூலம் வாக்களிக்கலாம் என அனுமதிக்கொடுத்தாச்சு.

இதெல்லாம் வாக்காளர் விருப்பத்தின் படி , ஆனால் மின்னணு வாக்குப்பதிவு மட்டுமே கட்டாயம் என வளர்ந்த நாடுகளில் கூட கிடையாது.

# //Electronic voting machines are perfectly designed to steal elections. That’s their principle purpose. Ireland has just gotten rid of them altogether. Germany, Japan, Canada, Switzerland all use paper ballots. Why? Because you can actually count them in public, and then count them again.//
http://www.globalresearch.ca/electronic-voting-machines-designed-to-steal-elections/5310194

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//மும்பையில் மாக் போல் செய்துவிட்டு அதனை அழிக்காமல் அப்படியே ஒட்டு போடவும் அனுமதித்து இருக்கிறார்கள்.//
மாக் போலே இல்லை என்றீர்கள் அப்படியானால் இந்த செய்தி எப்படி வந்தது?
100% சதவீதம் முழுமை என்பது எந்த சிஸ்டத்திலும் இல்லை. அதனைசரி செய்யவே பிற ஏற்பாடுகள்.

வாக்குப் பதிவு முடிந்த பின்பு கூட ஏதாவது தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் கட்சிக்காரர்கள்.
/Electronic voting machines are perfectly designed to steal elections. That’s their principle purpose. Ireland has just gotten rid of them altogether. Germany, Japan, Canada, Switzerland all use paper ballots. Why? Because you can actually count them in public, and then count them again.//
இந்த நாடுகள் எல்லாம் தவிர்த்துவிட்டால் அவை தவறாகிவிடாது,

வெள்ளைக்காரனே சொல்லிட்டான். சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் அவன்தான் புத்திசாலி என்ற தாழ்வு மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.

அனைத்துக்கும் பதில் சொல்ல முடியும். அது வீண் வேலை என்றே கருதுகிறேன். . சமயம் வாய்க்கும்போது தனிப் பதிவாக எழுதி விடுகிறேன்.

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி!

//மாக் போலே இல்லை என்றீர்கள் அப்படியானால் இந்த செய்தி எப்படி வந்தது?//

வாதத்திற்கு மருந்துண்டு , பிடிவாதத்திற்கு மருந்தில்லை அவ்வ்வ்!

நான் மாக் போல் பற்றியே பதிவில் பேசவில்லை, நீங்கள் சொன்னப்பிறகு தான் விக்கியில் பார்த்தேன் , ஒரு இடத்தில் நடத்திக்காட்டிவிட்டு பூத்துக்கு அனுப்புவார்கள் என்பதாக இருக்கவே ,அதனால் பெரிய பாதுகாப்பு இல்லை என நினைத்தேன் ,அதனையும் நான் குறிப்பிட்டேன்.

நீங்க ஒவ்வொரு பூத்திலும் நடக்கும் என சொன்னப்பிறகு தான் தேடிப்பார்த்தேன் "மாக் போல்" லட்சணம்ம் இப்படி இருக்கு அவ்வ்!

ஏஜண்டுகள் எல்லாம் கவனமா இருப்பாங்கனு சொன்னீங்களே அது என்னாச்சு?

வெளியில் லீக்கான தவறுகள் இது, தெரியாமல் மூடி மறைக்கப்பட்டவை எத்தனையோ?

#//100% சதவீதம் முழுமை என்பது எந்த சிஸ்டத்திலும் இல்லை. அதனைசரி செய்யவே பிற ஏற்பாடுகள்.//

இதைத்தானே நான் பதிவில் சொல்லி இருக்கேன் , இப்போ இருக்க மெசின் 100% நம்பகமானது அல்லனு அவ்வ்.

நான் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள உங்கள் ஈகோ இடம் கொடுக்கலையோ அவ்வ்!

#//வாக்குப் பதிவு முடிந்த பின்பு கூட ஏதாவது தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள் கட்சிக்காரர்கள்.//

எப்படி மாக் போல் வாக்குகள் அழிக்காமல் வாக்குப்பதிவு நடந்ததை "கண்காணித்தார்களே" அது போலவா :-))

#//இந்த நாடுகள் எல்லாம் தவிர்த்துவிட்டால் அவை தவறாகிவிடாது,//

அது சரி அவ்வ்வ்!

ஆமாம் சுப்ரிம் கோர்ட் ஜட்ஜுகளுக்கு எல்லாம் மறை கழண்டா போச்சு ,இப்போ இருக்கும் முறையில் பாதுகாப்பில்லை ,நம்பகத்தன்மை இல்லை எனவே பிரிண்ட் அவுட் எடுக்கும் மெசினை உருவாக்கனும் என தீர்ப்பு கொடுக்க :-))

#//வெள்ளைக்காரனே சொல்லிட்டான். சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் அவன்தான் புத்திசாலி என்ற தாழ்வு மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது.//

ஜப்பானியர்களையும் வெள்ளக்காரனா இனமாற்றம் செய்துட்டாரே அவ்வ்.

ஒரு சோக்கு,

வாடிக்கையாளர்: எங்கேயா உங்க முதலாளிய காணோம்?

ஹோட்டல் சர்வர்: டிபன் சாப்பிட எதிர்த்த ஹோட்டலுக்கு போயிருக்கார், இந்த ஹோட்டலில் சமைச்சத நாங்களே சாப்பிட மாட்டோம், மொதலாளியா சாப்பிடுவார் ...!!!

நம்ம நாட்டு மின்னணு வாக்கு கருவிக்கு மைக்ரோ கண்ட்ரோலர் சிப் தயாரித்து கொடுக்கும் நாடான ஜப்பானிலே வாக்கு சீட்டாம் ,மெசினை பயன்ப்ப்படுத்த அவங்களுக்கே நம்பிக்கை இல்லை ,ஆனால் நம்ம அடிமை சனங்களுக்கு அன்னிய மோகம் தலை விரிச்சாடுது :-))

பின்ன சும்மாவா டீவி, ரேடியோ , ஏன் தலைக்கு குளிக்க ஷாம்பா இருந்தாலும் வெளிநாட்டு தயாரிப்பு தான் ஒஸ்தினு நம்புறக்கூட்டமாச்சே , பர்கர் ,பீசா எல்லாம் ஜங்க் ஃபுட் என தயாரிக்கிற நாடுகளிலேயே மக்கள் வெறுக்க ஆரம்பிச்சாலும் நம்ம ஊரு மக்கள் சப்புக்கொட்டி தின்னுற ரகமாச்சே , சப்பான் தயாரிச்ச மெசினை மட்டும் " லேசுல" விட்டுக்கொடுக்குமா என்ன?

#//அனைத்துக்கும் பதில் சொல்ல முடியும். அது வீண் வேலை என்றே கருதுகிறேன். . சமயம் வாய்க்கும்போது தனிப் பதிவாக எழுதி விடுகிறேன்.//

நீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லுறது இருக்கட்டும் ,முதலில் இதுக்கு பதில் சொல்லுங்க,

//நான் கேட்ட கேள்வியான ," இணைப்பை மாற்றிக்கொடுக்கவே முடியாத வகையில் மெசின் வடிவமைக்கப்பட்டுள்ளதா, மாற்றிக்கொடுப்பதை தடுக்க என்ன பாதுகாப்பு அம்சம் எந்திரத்தில் உள்ளது ? //

இது வரையில் மூன்று முறை இதனைக்குறிப்பிட்டு கேட்டு விட்டேன், ஆனால் பதிலே வரவில்லை :-))

# வாக்குப்பதிவு சதவீதம் உயரக்காரணம் வாக்களர்களிடையே தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி என தேர்தல் ஆணையரே சொல்கிறார் , ஆனால் நீங்களோ "வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?" என பதிவு எழுதுறீங்க , இதுல இருந்தே உங்க புரிந்துக்கொள்ளும் ஆற்றல் விளங்குது ,எனவே நீங்க பதிவே எழுதினாலும் அதை படிப்பதும் வீண் வேலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன் அவ்வ்.

மேலும் நீங்க உங்களுக்கு தேவையான இடங்களில் வெட்டி ஒட்டி தான் எழுதப்போறிங்க , மாக் போல் நடத்த ஏஜண்டுகள் கட்டாயம் இருக்கணும் என அவசியம் இல்லை ,ஏஜண்டுகளே இல்லாமல் கூட நடத்திக்கலாம் என போலிங் ஆபிசர்ஸ்க்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் கொடுத்துள்ளதை மிக கவனமாக "எடிட்" செய்து தகவலைப்போடுறிங்க அப்புறம் எப்படி இருக்கும் உங்க பதிவுனு சொல்லவா வேண்டும் :-))

# சார் இணையம் என்பது ஒரு ஓபன் லைப்ரரி , எல்லாருக்குமே தகவல்களை கொடுக்கும் எனவே நீங்க மறைச்சுட்டா தெரியாம போயிடாது , தேடினா கிடைச்சிடும் , என்ன ஆரம்பத்துல முழுமூச்சா தேடக்கொஞ்சம் சோம்பல் படுவேன் ஆனால் ஆரம்பிச்சிட்டா "தூர் வாறிட்டு" தான் வெளியில வருவேன் :-))

----------

குட்டிபிசாசு said...

வவ்வால்,

வாக்குப்பெட்டி வைத்தால் மட்டும் நம்ம ஆளுங்க கள்ள ஓட்டு போடுவதை நிறுத்திவிடப் போகிறார்களா?

அந்தந்த சிஸ்டத்திற்குரிய பிரச்சனைகள் உள்ளன. மற்ற நாடுகள் போலல்லாமல், நம் நாட்டில் எல்லாமே பிரச்சனைதான். வாக்குச்சீட்டாகட்டும், வாக்கு இயந்திரமாகட்டும்.

தவறு நடப்பதில்லை என்பது ஒரு நம்பிக்கை தான். கடவுள் இருக்கிறார் என்பது போல.

எது எப்படியோ தேர்தல் முடிவு உடனடியாக தெரிந்துவிடுவது, வாக்கு இயந்திரத்தில் ஒரு நன்மை. இல்லாட்டி ரொம்ப நேரம் தேவுடு காக்கணும்.

வவ்வால் said...

கு.பி

வாரும்,நன்றி!

#//வாக்குப்பெட்டி வைத்தால் மட்டும் நம்ம ஆளுங்க கள்ள ஓட்டு போடுவதை நிறுத்திவிடப் போகிறார்களா?//

கத்திய காட்டி "பர்ஸ்" ஐ பிடுங்குவது = வாக்கு சீட்டில் கள்ள ஓட்டுப்போடுவது.

நாம் திருடு கொடுத்ததை அறிவோம், திருடுனவனையும் அறியலாம்.

பிக்பாக்கெட் அடிப்பது= மின்னணு வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்வது.

பர்ஸ் காணாமல் போனதை உடனே அறிவதில்லை, யார் பிக்பாக்கெட் அடிச்சானும் தெரியாது அவ்வ்.

#//அந்தந்த சிஸ்டத்திற்குரிய பிரச்சனைகள் உள்ளன. மற்ற நாடுகள் போலல்லாமல், நம் நாட்டில் எல்லாமே பிரச்சனைதான். வாக்குச்சீட்டாகட்டும், வாக்கு இயந்திரமாகட்டும். //

நம்ம நாட்டில எல்லாமே பிரச்சினை தான் , மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பிரச்சினை இருக்குனு நம்ப வைப்பதுமே பிரச்சினையா தான் இருக்கு அவ்வ்.

மின்னணு வாக்கு முறை 100 % சதவீதம் பாதுகாப்பனதோ அல்லது நம்பகமானதோ அல்ல ஆனால் அதனை ஏற்கிறார்களா சிலர்? எப்படி குருட்டு தனமாக வாதம் செய்கிறார்கள் என்பதை நீரே பார்த்தீரல்லவா?

நம்ம நாட்டின் சாபக்கேடு என்னவெனில் எதையாவது நம்பினால் கண்மூடித்தனமாக நம்புவோம், அதே போல எதையாவது எதிர்த்தாலும் கண்மூடித்தனமாக எதிர்ப்போம், எதற்கும் ஏன் ,எப்படி என ஆய்வதே இல்லை அவ்வ்!

#// தேர்தல் முடிவு உடனடியாக தெரிந்துவிடுவது, வாக்கு இயந்திரத்தில் ஒரு நன்மை//

முடிவு சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் ,வேலை செய்வது எளிதாக இருக்கு என்பதால் தான் இதனை தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுறாங்க அவ்வ்.

மைக்ரோ கண்ட்ரோலர் செய்து கொடுக்கிற ஜப்பான் காரனுக்கே நம்பிக்கை இல்லை ஆனால் அவங்கிட்டே இருந்து வாங்கி பயன்ப்படுத்துற மக்களுக்கு அபார நம்பிக்கை ,என்ன கொடுமை சார் இது அவ்வ்!

# இன்னும் கூட சில வழிமுறைகள் இருக்கு அதை எல்லாம் இன்னொரு பதிவா போட்டு சிலருக்கு புளிய கரைக்கலாமானு திங்க்கிங் அவ்வ்!

ராஜ நடராஜன் said...

அவ்வ்..வாலுன்னு உங்க பேரை மாத்திடலாம்ன்னு நினைக்கிறேன்:) நான் சரியாத்தானே மல்லு பார்க்க வாரேன்னு சொல்லிட்டுப் போனேன்.குதர்க்கமா எடுத்துகிட்டா நானா பொறுப்பு?

நான் உங்க மண்டையில கொட்டச்சொன்ன உற்சாகமோ என்னவோ முரளி தேர்தல் ஆணையர் சரியாகவே சொல்கிற மாதிரி படுது.எந்த வருடம்ன்னு நினைவில்லை.ஒரு வேளை முந்திய தேர்தலுக்கு முந்திய தேர்தலாக இருக்கலாம்.இப்படித்தான் உங்க மாதிரி ஒரு வில்லங்கம் மெசின்ல கள்ள ஓட்டு போட முடியும்ன்னு டெமோவே காண்பித்தார்.கூடவே சவாலும் ஏதோ விட்ட மாதிரி நினைவு.இப்ப தேவுடுகாரு எங்கேன்னே தெரியலை.ஆனால் வாக்கு இயந்திரம் மட்டும் நாந்தான் ஜெயிச்சேன்னு தேர்தலுக்கு தேர்தல் அதுதான் ஹீரோ.

பெரிய வங்கிகளில் கூட பின்புலத்தில் இன்னும் கைநாட்டுகள் மாதிரி எக்ஸல் ஷீட்லதான் வேலை செய்கிறார்கள்.ஆனால் பயனர் உதவிக்கு ஏ.டி.எம் இயந்திரம் மட்டும் போட்ட்ட காசு,எடுத்த காசு,மிச்சம் என துல்லியமாகவே கணக்கு காண்பிக்குது.தேர்தல் இயந்திரம் கூட இப்படித்தான்.உள்ளே எந்த இணைப்பில் எங்கே ஓட்டை போடலாம் என்று புத்தியை செலவழிக்காமல் வழிமுறைகளை மட்டும் சரியாக பின்பற்றினால் தேர்தல் வாக்குகளை சரியாகவே காண்பிக்கும்.

திரு.முரளி சொல்வதற்கு முன்பே எனக்கு மனசுல பட்டது என்னன்னா நகரத்தானை விட கிராமத்தான் கணக்குல கெட்டி என்பது.ஏஜண்டுகள் பருந்து மாதிரி பாதுகாவல் செய்வார்கள்.நீங்க சொல்ற மாதிரி நாட்டாமை கட்சி சார்பாளர்கள் எங்கேயாவது குளறுபடி செய்யலாம் என்று வாதத்திற்கு வைக்கலாம்.அல்லது நம்ம மாஜி பொருளாதார மந்திரி சிதம்பரத்தைக் கூப்பிட்டு பூத் கணக்கை மாத்துவது எப்படி என்று வேண்டுமானால் கேட்கலாம்:)ஆனால் பாவம் இயந்திரம் வாயில்லா கணக்கு வாத்தியார்.

முரளி இன்னுமொன்றும் சொன்னார்.விக்கிபீடியா என்பது என்ன?இதோ நீங்கள் சொல்வதை இன்று பதிவு செய்கிறது.நாளை முரளி சொன்னமாதிரியே விக்கிபீடியாவை மாத்தி எழுதுகிறேன் என மாற்றியும் விடலாம்.அந்தந்த துறை சார்ந்தவர்கள் கருத்தை பதிவு செய்கிறது.அதில் தவறுகளும் இருக்கலாம்தானே!

மைக்ரோ கண்ட்ரோலரை தேர்தலுக்கு ஜப்பான்காரன் பயன்படுத்தாமல் இருக்கலாம்.ஆனால் வேற எதுக்கோவெல்லாம் பயன்படுத்தறான் தெரியுமோ:)நம்ம ஊர் மக்கள் தொகைக்கு 10க்கு 1 சேதம்ன்னு உங்க கணக்குபடி வச்சிகிட்டாலும் நடைமுறைக்கு தேர்தல் இயந்திரத்தை விட்டா வேறு மாற்று இல்லை.

ஒரு வேளை ஓராக்கிள் மாதிரி பெரிய தகவல் சேமிப்புக்களை உபயோகிக்கலாம்ன்னு பார்த்தா டைம்ஸ் பத்திரிகைக்கே கள்ள ஓட்டு போடுறது எப்படி என்ற ராஜபக்சே விசுவாசிகள் கற்றுக்கொடுப்பதால் இப்போதைக்கு இயந்திரத்தை விட்டால் மாற்று இல்லை.

வடக்கு பகுதியில் மலைப்பிரதேசத்தில் கால்நடையாக இயந்திரங்களை சுமந்துகொண்டும் கூட சென்று இந்திய ஜனநாயகத்தை காப்பவர்கள் அரசு பணியாளர்களே என்ற ஆக்கபூர்வமான கருத்தோடு முடிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//கத்திய காட்டி "பர்ஸ்" ஐ பிடுங்குவது = வாக்கு சீட்டில் கள்ள ஓட்டுப்போடுவது//

இது எந்த கணிதமேதை சொன்ன ஈகுவேசன்:)பணத்தைக் காட்டி ஓட்டு வாங்குறதுக்காவது ஏதாவது ஈகுவேசன் போடுங்க.

காசுக்கு ஓட்டு என்பதைக்கூட மக்கள் காசை வாங்கிட்டு ஆளை கவிழ்த்து விட்டுற மாதிரிதான் தெரியுது.இதுல வேற வெத்தலை பாக்கு வச்சு சூடமெல்லாம் ஏத்தி சாமி குத்தமாயிடும்ன்னு கூட பயம் காட்டிப்பாத்தாங்க போல இருக்குது.உனக்கும் பெப்பே வெத்தலை பாக்கு சூடத்துக்கும் பெப்பே என்ற நிலைக்கு மக்கள் தெளிந்து விட்ட மாதிரி தெரியுது.

குட்டிப்பிசாசு கமெண்டுனதுக்கு கொஞ்சம் தேர்தல் முடிவுக்கு அப்பால் நகர்கிறேன்.
மோடி நவாஸ் செரிப்புக்கு வச்சிட்டான்யா ஆப்பு என்று வடக்கில் பலரும் குதுகலிக்க ராஜபக்சே மோடிக்கு வச்சிட்டான்யா முதல் ஆப்பு!

எப்படியோ நவாஸ் செரிப் வரப்போவதில்லை.ஒப்புக்கு சப்பாணியா யாரையாவது அனுப்பலாம்.நீ கூப்பிடுவேன்னுதானே விமானத்துக்கே செண்ட் அடிச்சிட்டிருக்கிறேன் என ராஜபக்சே கட்டாயம் வரலாம்.

ராஜ நடராஜன் said...

//பின்ன சும்மாவா டீவி, ரேடியோ , ஏன் தலைக்கு குளிக்க ஷாம்பா இருந்தாலும் வெளிநாட்டு தயாரிப்பு தான் ஒஸ்தினு நம்புறக்கூட்டமாச்சே///

உண்மையா சொல்லப்போனா நமக்கு சரியான மார்க்கெட்டிங் நுட்பம் தெரியலை.தொலைக்காட்சி விளம்பரத்துக்கு வாரி இறைக்கிற காசை காஸ்ட் கட்டிங்க் என குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவார்கள்.100 ரூபாய் பொருளுக்கு 100 ரூபாய் அழகுபடுத்தி 200 ரூபாய் என வியாபாரம் செய்து விடுவார்கள் வெளிநாட்டவர்கள்.நாம் 100 ரூபாய் பொருளை வாட் வரி தனி என 129க்கு விற்பதால் ஒசத்தி விலைதான் ஒசத்தி என கன்ஸ்யூமர் மெண்டாலிட்டிக்கு அடிமையாகி விடுகிறோம்.

//நீங்க பதிவே எழுதினாலும் அதை படிப்பதும் வீண் வேலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன் அவ்வ்.//
நீங்க எழுதுவதையே ஜீரணிக்கிறோமே முரளி எழுதுவதை ஜீரணிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)

வவ்வால் said...

ராச நட,

வாரும் நன்றி!

உம்மோட பேசுவதும் கூட வீண் வேலைகளில் சேர்க்கலாம் தான் அவ்!

#//இப்ப தேவுடுகாரு எங்கேன்னே தெரியலை.ஆனால் வாக்கு இயந்திரம் மட்டும் நாந்தான் ஜெயிச்சேன்னு தேர்தலுக்கு தேர்தல் அதுதான் ஹீரோ.
//

இதுக்கு தான்யா படிச்சு படிச்சு சொல்லுறது சுட்டி போட்டா படிச்சு பாருங்கனு ,சொல்பேச்சே கேட்காதின்க அவ்வ்.

சுப்ரீம் கோர்ட்ல ஜட்ஜ்மெண்ட் எந்திரத்துக்கு எதிரா வந்ததுக்கு அவரும் ஒருக்காரணம் , சுப்பிரமணிய சுவாமிஉடன் சேர்ந்து வழக்கு போட்டு ஜெயிச்சுட்டார்.

ஒரு எழவும் தெரியாமலே "வம்பளக்க" கிளம்பிட வேண்டியது ,என்ன கொடுமை சார் இது.

ராஜ நடராஜன் said...

சொன்னதையெல்லாம் விட்டுப்புட்டு சொரக்காய்க்கு உப்பில்லைன்னு என் மேல வந்து பாயுங்கவ்வ்வ்வ்வ்வ்:_

நாய் நக்ஸ் said...

. டேஸ்ட்

நாய் நக்ஸ் said...

. டேஸ்ட்

நாய் நக்ஸ் said...

இப்பதான் இந்த எழவு கருமாம்திர போஸ்ட் படிச்சேன் ..வவ்வாலிடம் இப்படியான _______போஸ்ட் evm பத்தி வர வேண்டியதில்லை .,இப்பதான் புரியுது ---நீர் 1 no டுபாக்கூர் என்று ...3pre,off,.. மற்றும் ,அனைத்து po off ----so 7 eletion நான் அட்டென் பண்ணிஇருக்கேன் ---===




இதுல வேற அடுத்த பாகம் போல ...,வவ்வால் அண்ணாத்தே ----ஓடிடும் ..,இல்லை எனில் நீர் தரம் தாழ்ந்து ---உம்முடைய நண்பகத்ன்மை ????????? ஆகிடும்

நாய் நக்ஸ் said...

ரோம்ப நாள் கழித்து நெட்டில் உக்காரணும் போல