Monday, October 21, 2013

Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!


(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA) அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே' மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்" உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு" எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ" மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்" எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை " நன்மை பயக்கும் பூச்சிகள் " என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே" என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி" தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!