Wednesday, March 21, 2012

சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- உலக குருவி தினம்! மார்ச்-20



சிட்டுக் குருவிகளும் கட்டுக்கதைகளும்- மார்ச்-20: உலக குருவி தினம்!



மயன் நாட்காட்டியின் படி உலகம் 2012 இல்  அழியப்போகிறது என்று புனையப்பட்ட இணையக்கதைகளுக்கு சற்றும் குறையாமல் சிட்டுக்குருவிகள் அழிய போகிறது என  யாரோ சிலர் இணையத்தில் கிளப்பிவிட்டு , உலக சிட்டுக்குருவி தினம் என ஒன்றை சிலர் திட்டமிட்டே உருவாக்கி  ஒரு இணைய தளத்தையும் ஏற்படுத்தி அக்கதையினை  மிக நன்றாக பராமரித்தும் வருகிறார்கள்.உண்மையில் சிட்டுக்குருவிகள் முன்பிருந்த எண்ணீக்கையை விட சற்றுக்குறைந்திருக்கிறது ஆனால் இன்றும் மிக அதிக எண்ணிக்கையிலெ இருக்கு என்பதை விளக்கமாக சொல்லவே இப்பதிவு.

 தெரு தெருவா சுற்றி பரபரப்பான செய்தி சேகரிக்க அல்லாடும் ஊடகக்காரங்களை விட மிக அதிக பரபரப்பில் பதிவு போட அல்லாடும் நம்ம மக்களுக்கு இந்த குருவி செய்தி அல்வா ஆக மாட்டவும் ஆளாளுக்கு குணா கமல் போல குருவி பாசம் மண்டைய கொத்த ஈகலப்பைய எடுத்து உழுது  தள்ளி அவர்களின் ஜீவகாருண்ய அபிமானத்தை சாரு பிழிந்து சக்கையாக கொட்டித்தள்ளுறாங்க பதிவுகளில் :-))

உண்மையில் சிட்டுக்குருவிகள் அழிய போகிறதா அல்லது அழிந்துக்கொண்டு வருதா எனப்பார்ப்போம். சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் பேஸர் டொமெஸ்டிகஸ்  யூரோப்பியன் ஆகும். ஐரோப்பாவில் இருந்து நாடுப்பிடிக்க கிளம்பின வெள்ளைக்காரர்கள் கையோடு குருவிகளையும் கூண்டுகளில் எடுத்து சென்று ,சென்றமிடமெல்லாம் பறக்கவிட்டார்கள், அப்படித்தான் இந்தியாவுக்கும் வந்தது, இந்தியாவில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இப்போது தாயக பறவை நிலை கொடுக்கப்பட்டாச்சு.

சிட்டுக்குருவியின் அறிவியல் வகைபாடு கீழே:

Scientific Name: Passer domesticus
Common Name/s: English House Sparrow
French Moineau domestique

Taxonomy
                           
 Kingdom -ANIMALIA 
 
Phylum- CHORDATA  

Class - AVES 


Order  -PASSERIFORMES 

Family-PASSERIDAE

Species Authority: (Linnaeus, 1758)

உலகத்தில் அதிகம்காணப்படும் பறவையினம் எதுவெனில் கொக்கரக்கோ அதாவது கோழி(gallus gallus domesticus) தான் ,ஏன் எனில் மனிதனுக்கு உணவாக பயன்படுகிறது, எதெல்லாம் மனிதனுக்கு தேவையோ அதை அழிய விட மாட்டான். கோழிக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாக சொல்லப்படும் பறவையினம் எதுவென பார்த்தால் அழியப்போவதாக பூச்சாண்டிக்காட்டப்படும் சிட்டுக்குருவிகளே , வகைப்படுத்தப்பட்டே 25 இனங்கள் இருக்கு, மேலும் ஸ்பானிஷ் சிட்டுக்குருவி, வழக்கமான வீட்டு சிட்டுக்குருவி ஆகியவை ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில்  உணவு தானியங்களை அழிக்கும் உயிரிகளாக (pest on cereals) பட்டியலிடப்பட்டுள்ளது. அப்படி எனில் மிக அதிக எண்ணிக்கையில் பெருகி தானியங்களை உண்டு அழிப்பதாக பொருள்.

உலக அளவில் அழிந்து வரும் உயிரினங்களை பட்டியலிடும் சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையமும் (INTERNATIONAL UNION OF CONSERVATION AND NATURE=IUCN) சிட்டுக்குருவிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அழிந்துவிடும் கவலையில்லாத பாதுகாப்பான பறவையினம் என வகைப்படுத்தியுள்ளது. அவர்களே உலக அளவில் உயிரினங்களை கணக்கெடுத்து அழிந்த ,அழியப்போகிற என பலவகையில் பட்டியலிட்டு "ரெட் லிஸ்ட்"(red list on endangerd and threatended sps) ஒன்று தயாரித்து அதன் அடிப்படையில்  உயிரினங்களை பாதுகாக்க ஏற்பாடு செய்பவர்கள். அந்த ரெட் லிஸ்ட் அடிப்படையில் உலக நாடுகளும் செயல்படுகின்றன, இதற்கு யுனெஸ்கோவின் ஆதரவும் உண்டு.

கீழே அளிக்கப்பட்டுள்ளது சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையத்தின் சிட்டுக்குருவிப்பற்றிய அறிவிப்பு. அவர்கள் அழிந்திடும் என்று கவலைப்பட தேவையில்லாத இனம் என வகைப்படுத்தியுள்ளார்கள்.

கீழ்காணும் சுட்டியை அழுத்தினால் அவர்கள் தளத்துக்கு போகலாம் , அங்கே செர்ச் பாக்சில் "பேசர் டொமெஸ்டிகஸ் என ஆங்கிலத்தில்  தட்டினால் நீங்களே கீழ்காணும் அறிக்கையையும் காணலாம்!

IUCN link:

passer domesticus

sparrow distribution map

அறிக்கை:

 Assessment Information [top] Red List Category & Criteria: Least Concern     ver 3.1
Year Published: 2009
Assessor/s: BirdLife International
Reviewer/s: Bird, J., Butchart, S.

Justification:
 This species has an extremely large range, and hence does not approach the thresholds for Vulnerable under the range size criterion (Extent of Occurrence <20,000 km2 combined with a declining or fluctuating range size, habitat extent/quality, or population size and a small number of locations or severe fragmentation). Despite the fact that the population trend appears to be decreasing, the decline is not believed to be sufficiently rapid to approach the thresholds for Vulnerable under the population trend criterion (>30% decline over ten years or three generations). The population size is extremely large, and hence does not approach the thresholds for Vulnerable under the population size criterion (<10,000 mature individuals with a continuing decline estimated to be >10% in ten years or three generations, or with a specified population structure). For these reasons the species is evaluated as Least Concern.
History: 2008 Least Concern
2004 Least Concern


அப்படியானால் மார்ச் --20 உலக சிட்டுக்குருவிகள் தினம் என்றெல்லாம் யார் முடிவு செய்தது வழக்கம் போல இயற்கை ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை தான். தனியா ஒரு தளமும் உலக சிட்டுக்குருவிகள் தினம்னு வைத்திருக்கிறார்கள்.

முன்னர் உலக அதிசயம் தேர்வு செய்யப்போகிறோம்  என சொல்லி சிலர் பரபரப்பை கூட்டியது போல தான், அப்போது மக்களும்  கைக்காச செலவு செய்து போட்டிப்ப்போட்டு ஓட்டு எல்லாம் போட்டார்கள். உலக அதிசய தளத்துக்கு  நல்ல விளம்பரம் வருமானம் கிடைத்தது தான் மிச்சம் மதுரை மீனாட்சியம்மன் உலக அதியசம் ஆகாமலே இன்னமும்  அதிசயம் ஆகவே இருக்கிறார் :-))

உண்மையில் மிக குறைந்த எண்ணிக்கையில் இப்போவோ அப்பவோ என அழியும் நிலையில் நம் நாட்டிலே சிலப்பறவைகள் இருக்கு அதுக்கு எல்லாம் இப்படி யாரும் முயற்சிக்க அல்லது மூச்சு விட்டதாக கூட எனக்கு  தெரியவில்லை. எல்லாம் எனக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை , முயற்சிகள் பல இணையத்தில் பகிரப்படாமலே நடந்துக்கொண்டிருக்கிறது. நான் குறிப்பிட்டது நம்ம பதிவுலக மக்களை மனதில் வைத்தே ஏன் எனில் இன்று மட்டும் சுமார் 10க்கு மேற்பட்ட குருவி புராணம் கண்ணில் பட்டது.


நிலகிரி பிப்பிட் அ பைப்பர்  (Nilgiri Pipit (Anthus nilghiriensis) எனப்ப்படும் தென்னிந்திய பறவை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது, விரைவில் அழியக்கூடிய அபாயமுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் நமது தேசிய பறவையான மயிலும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.இன்றைய நிலையில் 1947ல் இருந்த எண்ணிக்கையில் 50% அளவிலேயே இருக்கிறது, விரைவில் கிரிட்டிக்கல்லி என்டேஞ்சர்டு வகையில் சேர சாத்தியமுள்ளது.

தமிழ் நாட்டில்  விராலி மலை, மதுரை ஒத்தக்கடை பக்கம் உள்ள விவசாயிகள் பயிர்களை காக்க விசம் வைத்தும் பொறி வைத்தும் மயில்களை கொல்வது வழக்கம், சில இடங்களில் இறைச்சிக்காகவும் , தோகைக்காகவும் வேட்டையாடப்படுகிறது. அப்படி செய்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றம் ஆனால் பெரிதாக யாரையும் தண்டிப்பதில்லை , சென்னையில் திநகர் பாண்டிப்பசார் போன்றப்பகுதிகளில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் மயில் தோகைகளை விற்பவர்களை  காணலாம். ஏன் எனில் சட்டத்தில் உள்ள ஓட்டையே காரணம் , இயல்பாக உதிர்ந்த தோகை என சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனையும் கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம் செய்ய மேனகா காந்தி முயன்று முடியாமல் போயிற்று, இப்போது என்ன நிலை எனத்தெரியவில்லை.

மயில்கள் வேட்டையாடப்படுவது குறித்த செய்தி

 http://www.tribuneindia.com/2004/20040502/spectrum/main1.htm">அழியும் மயில்கள்

மேலும் இப்படி அழியக்கூடிய பட்டியலில் வங்கப் புலி, இந்திய சிங்கம், காண்டா மிருகம், நீலகிரி தார் என நிறைய உயிரினங்கள் நம் நாட்டில் இருக்கு.. அழிவின் நிலையில் உள்ள இந்திய உயிரினங்களின் பட்டியல்

http://en.wikipedia.org/wiki/List_of_endangered_species_in_India">அழியும் இந்திய உயிரினங்கள்
நீலகிரி தார்

இணையத்தில் யாராவது புரளியக்கிளப்பிவிட்டால்  போதும் திடிர் என எல்லாரும் இயற்கைப்பாதுகாவலர்களாக உருமிக்கொண்டு கூட்டம் கூட்டமாக பதிவுப்போட  ஆராவாரத்தோட கிளம்பிடுவாங்க மக்கள் , சிலர் சின்ன வயசில என் மண்டையில தான் குருவி கூடுக்கட்டும் அதுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் போட்டு வளர்ப்பேன் இப்போ எல்லாம் குருவியப்பார்க்கவே முடியலை எல்லாம் பாழாப்போன செல் ஃபோனால் தான்னு கேட்கும் போதே கண்ணுல ஜலம் வந்துப்போச்சுன்னு புழிஞ்சு எடுக்கிறார்கள், ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டியதை சுலபமாக மறந்து விடுவார்கள்,,  யாராவது விழிப்புணர்வு மெயில் அல்லது முகநூல், துவித்தர்னு தேவ செய்தி அனுப்பினால் குதித்தெழுவார்களாயிருக்கும்.

---------
பின்குறிப்பு;

தகவல் மற்றும் படங்கள் உதவி ,கூகிள்,விக்கிப்பீடியா, IUCN இணைய தளங்கள்.