Saturday, May 19, 2012

"வசூல்ராஜா எம்பிபிஸ்"கள் இனியாவது கிராமத்திற்கு வருவார்களா?



இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மருத்துவக்கல்லூரிகள் இருந்தாலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேவையான மருத்துவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை இல்லை எனலாம் ,மேலும் உருவாகி வரும் மருத்துவர்களும் நகரத்திலேயே தங்கி விடுகிறார்கள் எனவே கிராமப்புரங்களில் மருத்துவ வசதி நிலைமை ரொம்பவே மோசம்.


தேவையான மருத்துவர்களை உருவாக்கவே அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி ,மருத்துவப்படிப்பை குறைவானக்கட்டணத்தில் வழங்கி வருகிறது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் பணிப்புரிய செல்வதேயில்லை, அனைவரும் வருமானம்,வசதி இன்னப்பிற காரணங்களை முன்னிட்டு நகரங்களில் தங்கி விடுகிறார்கள்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் எனில் குறைந்தது 25 லட்சம் ஆகும்,ஆனால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரங்களில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு கிராமங்களில் அரசு மருத்துவராக பணி நியமனம் செய்தால் செல்ல மறுக்கிறார்கள்,இப்பிரச்சினை நீண்டகாலமாகவே இருக்கிறது, எனவே மருத்துவ மாணவர்கள் கிராமப்பணி செய்வதை கட்டாயம் என சட்டம் கொண்டு வர இருப்பதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்,.

செய்தி:


டெல்லி: மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

செய்தி சுட்டி;

இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த மகாராஷ்டிர மருத்துவக்கல்வி அமைச்சர் அவர்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் பற்றிக்கூறியது....

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

News link-2

மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது பல காலமாய் ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் பின் வாங்கிவிடும், எனவே மத்திய அரசை நம்பாமல் தமிழக அரசு , மகாராஷ்டிர மாநிலத்தினை முன் மாதிரியாகக்கொண்டு மருத்துவர்கள் கட்டாய கிராம சேவை செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம், எது எதற்கோ அதிரடியாக செயல்படும் அம்மையார் இவ்விஷயத்தில் இரும்புக்கரமோ ,சாட்டையோ சொடுக்கினால் மக்களுக்கு பயன் அளிக்குமே.

இனியாவது வசூல் ராஜா எம்பிபிஎஸ்கள் பணியாற்ற கிராமத்திற்கு போக முன் வருவார்களா?

மருத்துவ மாணவர்களின் கிராம புறக்கணிப்பு பற்றி 2007 இல் நான் எழுதிய பதிவு,


--------------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,தினமலர்,சுலேகா.காம்,இணைய தளங்கள்,நன்றி!

*****