Saturday, August 11, 2012

அஃதே ,இஃதே-1



தலைப்பில் என்னமோ ரெண்டு இட்லி ஒரு வடை போல ஒரு எழுத்தை போட்டு இருக்கானே என நினைக்க வேண்டாம் அதுக்கு பேரு தான் தமிழ் ஆயுத எழுத்து, என்ன ஆயுதமா? அக்கால கேடயத்தில் மூன்று குமிழ்கள் இருப்பது போல எழுத்தும் அமைந்து இருப்பதால் ஆயுத எழுத்து என்று பெயர் வைத்தார்கள்னு சின்ன வயசில எங்க தமிழய்யா சொல்லிக்கீறார்.

இந்த ஆயுத எழுத்து ரொம்ப சுவாரசியமானது, ஃ ல் மூன்று புள்ளி ஒரு முக்கோணத்தினை உருவாக்குவது போல அமைத்து அதற்கும் ஒரு பொருளோட எழுத்து என வடிவமைத்து ஒலி கால அளவில் அரை மாத்திரைனு (அனாசின் மத்திரையில பாதியான்னு கேட்டா போலி டாக்குடர் கிட்டே புடிச்சு கொடுத்துபுடுவேன்)வேற சொன்ன தமிழர்கள் உண்மையில் அறிவுக்கூர்மை மிக்கவர்களே, இதில மிக எளிமையாக முக்கோணவியல் வருது ஆனால் முக்கோணவியல் என்ற கணித அறிவியல் எல்லாம் பின்னரே வந்தது. ஒரு வேளை நம்ம பழந்தமிழருக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம், ஆனால் வழக்கம் போல அவங்க குடும்பம் , பரம ரகசியம் என பாதுகாத்து பின்னர் யாருக்கும் பொருள் தெரியாம போய் இருக்கலாம்.

ஃ இன் தமிழ் ஒலியியல் மற்றும் பயன்ப்பாடுகள்:

ஆங்கிலத்தில் "F" ஒலிக்கு தனியாக தமிழில் எழுத்து இல்லை என்பதால் ஃ ஐ சேர்த்து எழுதினால் எஃப் ஒலி கிடைக்கும் என்கிறார்கள்.

Fan என்ற மின்விசிறியை அப்படியே ஆங்கில ஒலியில் தமிழில் எழுத முற்பட்டால் "பேன் "என்றால் தலையில் இருக்கும் பேன் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் ஃபேன் என தமிழில் எழுதலாம்.இரும்பினை எஃகு என எழுதவும் பயன்ப்படுது ,சிலர் எக்கு என எழுதி நம்மை எக்கிப்பார்க்கவும் சொல்வார்கள்.சிலபேர் ஆங்கில சொல்லில் தமிழில் எழுதி திட்டுவதாக நினைத்துக்கொண்டு "பக் யூ" என்கிறார்கள் ஒரு எழவும் புரியலை இனிமே ஃ போட்டு எழுதவும் :-))

நம்ம சித்தர்கள் ஓலைச்சுவடிலாம் அப்படித்தான். யாருக்கும் லேசில் புரியாது அவங்க சிஷ்யகோடிகளுக்கு மட்டும் சொல்லிக்கொடுத்துட்டு செத்து போய்டுவாங்க,இப்போ அதனால தான் பல அரிய மூலிகைகள் பற்றி தெரியாமலே போயிடுச்சு, இப்போ ஆய்வு செய்பவர்கள் அக்காலத்திலேயே எயிட்ஸ்க்கு மருந்து சொல்லி இருக்காங்க சித்தர்கள்னு சொல்வது ஆச்சரியமான ஒன்று. முதல் ஆச்சர்யம் அக்காலத்துல எயிட்ஸ் இருந்தது என்பது(all in the game) ரெண்டாவது அதற்கு உடனே மருந்தும் கண்டுப்பிடிச்சது.

இப்போ ஆங்கில மருத்துவத்தில் எயிட்ஸ்க்கு உருப்படியா ஒரு மருந்தும் இன்னும் வரவில்லை அதற்கே கிளினிக்கல் லேபரேட்டரி ஆய்வுகள் உச்சத்துல இருக்குன்னு சொல்லிக்கிறாங்க.

ஃ பற்றிய சிறப்பு பதிவல்ல இது, இதுநாள் வரையில் ரொம்ப கொடுமைன்னு தோன்றுவதை "என்ன கொடுமை சார் இது". என தொடராக போட்டு வந்தேன்(ஆமாம் இவரு தொடரு போடுற அளவு பெரிய பதிவரு) ஒரு மாதத்திற்கு 30 பதிவு கூட போட துப்பு இல்லாத துப்பு கெட்டவனுக்கு எதுக்குய்யா தொடருன்னு நீங்க கேட்கலாம். ஹி..ஹி என்னை பொறுத்தவரையில் ஆண்டுக்கு ஒன்று என ஒரே தலைப்பில் தொடர்ச்சியாக போட்டாலும் தொடர் தான் :-))

எனவே இனிமேல் நேரம் கிடைக்கும் போது பிடித்தது ,படித்தது, பார்த்தது ,வம்பு வளர்த்தது என எல்லாத்தையும் இங்கே சொல்லிவிட்டு கொடுமையை அங்கே சொல்வேன் என சகப்பதிவர்களுக்கும் ,பதிவர்களுக்கு எல்லாம் மேலே இருப்பதாக நினைக்கும் பதிவுலக பிரம்மாக்களுக்கும், தமிழ் நேயர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு வாசகர்கள் என தனியே கிடையாதுங்கோ :-))

ஓ.கே போகலாம் நாம உள்ளே -அஃதே,இஃதே,

பாட்டொன்று கேட்டேன்.

அக்கால மாஸ் ஹீரோக்களில் எம்ஜீஆர் தான் உச்சம் எனலாம் , அனேகமாக ஹீரோவுக்கு இண்ட்ரோ சாங்க் வைக்கும் கான்செப்ட் அவரால் தான் பாப்புலர் ஆச்சுன்னு நினைக்கிறேன்(ஆகா என்னமா தமிங்கிலம் நீச்சல் அடிக்குது,இப்படி எழுதினால் தான் பிராபல்ய பதிவர் ஆகலாம்னு சொல்றாங்க)

எம்.ஜீ ஆருக்கு பிறகு அந்த கான்செப்டில் நிறைய பேர் முயற்சித்து இருக்கலாம் ஆனால் வெற்றிப்பெற்றது நம்ம" ரியல் தல" மட்டுமே , ரியல் தல என்றால் அது சூப்பர் ஸ்டார் மட்டுமே , அவர் ஒரு சூப்பர் ஹிரோ அந்தஸ்துக்கு வந்தப்பிறகு எல்லாப்படத்திலும் ஒரு இண்ட்ரோ சாங்க் அல்லது சமூகத்துக்கு கருத்து சொல்லும் பாட்டு இருக்கும்.

சிவாஜில அப்படி ஒரு சாங்க் நான் வைக்கலைனு ஏ.ஆர் ரெஹ்மான் பேட்டிக்கொடுத்தாலும் பல்லே லக்கா பல்லே லக்கான்னு போடவே செய்தார் என்பதை மக்கள் உணரணும்.

எனவே சூப்பர் ஸ்டாரின் எப்பொழுதும் பச்சையான (ever green)ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் அறிமுக பாடல் உங்களுக்காக.


சூப்பர் ஸ்டாரின் ஓப்பனிங்க் சாங்கில என்ன விசேஷம்னா "பல்லி போல சுவத்தில ஒட்டிக்கிறது ,தவளை போல ஜம்படிக்கிறது, பாம்பு போல நெளியறது" போன்ற வித்தைகள் எதுவும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வாக், ஒரு லுக் , கையை விஷ்க்,விஷ்க்னு வீசுவது மட்டும் தான் ஆனால் அதுக்கே அல்லு சில்லு பறக்கும், தியேட்டர் அல்லோகளப்படும். இந்த கால நண்டு சிண்டு ஸ்டார்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இதில் இருக்கு.

பின் குறிப்பு:

சொல்லாததும் கருத்தே ,ஹி...ஹி இந்த பாட்டில் யாருக்கோ நான் மெசேஜ் சொல்கிறேன்னு யாரேனும் நினைத்தால் அது அவர்களின் மனப்பிராந்தியே(நெப்போலியனா?)

அமீர் கானும் அரைவேக்காடு முட்டையும்!-A story about “Own. Worst. Enemy".



அக்ஷாத் வர்மா ,இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து,சினிமாவில் நுழையணும் என ஆசையுடன் ஒரு வெண்ணைக்கதையை எழுதி எடுத்துக்கொண்டு ஹாலிவுட்டில் முட்டி மோதிப்பார்த்து விட்டு , ச்சீ..ச்சீ புளிக்கும் என மும்பைக்கு வந்து பலரையும் பார்த்துள்ளார்,எல்லோரிடமும் கதையும் சொல்லி இருக்கிறார் எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிக்கதை கேட்டுவிட்டு அப்புறம் சொல்லுங்க என்ன விஷயமா வந்தீங்க என்று நக்கல் அடித்துள்ளார்கள்.

என் கதையை வச்சு படம் எடுக்கணும் சார் அதுக்கு தானே கதை சொன்னேன் என்று கேட்டால் நான் எதுக்கு உங்க படத்தை தயாரிக்கணும் என அதி அற்புதமான கேள்விக்கேட்டுள்ளார்கள்.

கொஞ்ச நாள் மும்பையை அலசிவிட்டு வெறுத்துப்போய் மீண்டும் அமெரிக்கா போய் விடலாம்னு முடிவு செய்து விட்டு போகும் முன் ஆமீர்கானைப்பார்க்கலாம் என முயற்சித்து பார்க்க முடியாமல் போகவே ,ஸ்கிரிப்ட் பைலை கொடுத்துவிட்டு ஊருக்கு வண்டியேறிவிட்டார்(ஃப்ளைட்ல தானே ஏறனும்னு சிலர் என்னை மடக்குவாங்கலாம்)

சுமார் ஓராண்டுக்கு பின்னர் திடீர் அழைப்பு ஆமிர்கானிடம் இருந்து, உடனே அக்‌ஷத் வர்மா தனது நண்பருடன் பொட்டியைக்கட்டிக்கொண்டு மும்பைக்கு ஓடி வந்து ,இறங்கின கையோடு ,காலோடு ஆமீர் அலுவலகம் போனால் ...

வெண் திரையில் காண்க என சொல்ல மாட்டேன் டெல்லி பெல்லி (delhi belly)எப்படி உருவாச்சு என்பதை அப்படத்தின் கதாசிரியர் ஒரு பேட்டியில் சொன்னதன் தமிழாக்கம் இது முழு சரக்கும் படிக்க போகவும் இங்கே ....

ஹி...ஹி டெல்லி பெல்லி படத்தின் கதையை பாதியா கட் செய்து தமிழில் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்கள்? சரியான பதில் சொல்வோருக்கு பரிசாக நான் ஒரு வாரம் தொடர்ந்து பின்னூட்டம் போடுவேனாம் :-))
சும்மாவே இவன் இம்சை தாங்காது , இதில ஒரு வாரம் பின்னூட்டம் போடுறானாம் ஆளைவிடுப்பா சாமின்னு ஓடினால் சாமி கண்ணை குத்திடும் :-))

just a simple beginning for me and a big leap for tamil blogging!

(ஹி...ஹி என்னா ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம் நீல் ஆம்ஸ்ட்ராங்க் சொன்னதை லைட்டா உல்டா அடிச்சேனுங்க)

(a simple beginning start ஆவது இப்படித்தான்...ஹி...ஹி)
******