Friday, December 28, 2007

இசை ஞானி வேட்டிக்கட்டியது தவறா?

அரபு நாட்டில் இசைக்கச்சேரி நடத்திய இளையராஜாவின் நிகழ்ச்சியைப்பற்றி கிட்டத்தட்ட ஒரு டஜன் பேர்கள் , பலரும் பல விதமாக பதிவு போட்டு விட்டார்கள், ஆனால் இந்த வாரம் குமுதம் படித்தப்போது நம்ம பதிவர்கள் எப்படி ஒரே மாதிரி மாவு ஆட்டி இருக்காங்க என்பது தெரியவந்தது.

குமுதத்தில் வந்த செய்தி, இசை நிகழ்ச்சிக்கு வந்த இளையராஜாவை அரபு நாட்டில் உள்ள மிகப்பெரிய அய்ந்து நட்சத்திர விடுதியில் தங்க வைக்க அழைத்து சென்றுள்ளார்கள், ஆனால் வேட்டி சட்டையுடன் வந்த ராஜாவை அங்கிருந்த ஊழியர்கள் , வேட்டி,சட்டையுடன் வருபவர்களை தங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று சொல்லி ,தங்க அனுமதிக்க வில்லை. அதைப்பார்த்த ராஜா பரவாயில்லை என்று வேறு விடுதிப்பார்க்க சொல்லி இருக்கிறார். இதற்குள் விடுதி நிர்வாகத்திற்கு ராஜாவின் பெருமைகள் சொல்லப்பட்டு , பின்னர் அவ்விடுதி நிர்வாகியே தலையிட்டு அனுமதி அளித்த பின்னரே அங்கே ராஜா தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இளையராஜா பெரிய இசைக்கலைஞர் என்பதாலேயே அவ்விடுதி நிர்வாகம் பின்னர் ஒத்துக்கொண்டுள்ளது, அவர்கள் வேட்டி சட்டையை ஏற்றுக்கொண்டல்ல என்பது தான் இங்கே குறிப்பிடதக்கது. இந்தியாவிலேயே வேட்டி சட்டையை மதிக்காத போது அங்கே என்ன நடந்தா என்ன என்று கேட்கலாம். ஆனால் கேள்வி கேட்டாகனுமே!

மேலும் வேட்டிக்கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று அவமானப்படுத்தியது படுத்தியது தானே , இதைக்கேட்டால் அங்கே எல்லாம் டிரஸ் கோட் அப்படித்தான் அதை தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டாமா , இல்லைனா அங்கேலாம் எதுக்கு போகனும் என்பார்கள்! ஆனால் அமெரிக்காவிலோ ,கனடாவிலோ முக்காடு போடுவதை எடுக்க சொன்னால் எங்கள் உரிமையில் தலையிட கூடாது என்பார்கள்.

எங்கே போனாலும் உடைக்கட்டுப்பாடு என்று சொல்லி கொலைப்பண்றாங்கப்பா, பெண்ணிற்கு ஏற்பட்டா மட்டும் ஆள் ஆளுக்கு பதிவு போட்டு தாளிக்கிறாங்க, ராஜாவுக்கு என்றால் ..ஹா ...அக்காங்க் வேற வேலை இல்லை எங்களுக்கு என்று ஒதுங்கிடுறாங்கப்பா.

இதை விட , ராஜா இசை நிகழ்ச்சிக்கு வந்த போது அங்கே நடந்த திரை மறைவு வேலை எல்லாம் எனக்கு தெரியும், ஒரு சின்னப்ப்பையனை(பெண்?) டான்ஸ் ஆடக்கூடாது சொல்லிட்டார், வேற யாரு படமும் வைக்க கூடாதுனு சொல்லிட்டார்னு செய்திகளை முந்தி தருவது தினத்தந்தி போல எல்லாம் பதிவு போட்டாங்க ஆனா இதை மட்டும் சொல்லவே இல்லை!

இன்னும் சிலர் நிகழ்ச்சி சொதப்பல், ராஜா பேசினது சரி இல்லை, வேலி தாண்டி போனோம் , இத்தனை ரூபா டிக்கெட் எடுத்தோம் என்றெல்லாம் பதிவு போட்டு அவங்க பதிவு எண்ணிக்கையை கூட்டிக்கிட்டாங்க.

Tuesday, December 25, 2007

காமெடி டைம்!

வலைப்பதிவுகளில் நகைச்சுவை என்று தேடினால் மொக்கைப்பதிவுகளோ,கும்மி பதிவுகளோ தான் அடையாளம் காட்டப்படுகிறது. அது தான் காமெடியாம் என்ன கொடுமை சார் இது! (ஆனாலும் ஓசை செல்லா, புருனோ போன்றவர்கள் சீரியசா எழுதுவதே செம காமெடி என்பது வேறு)சரி நாமளும் சிரிப்பு வெடிய கொளுத்துவோம் என்று சில நகைச்சுவை துணுக்குகளை சொந்தமாக எழுதிப்பார்த்தேன்.இதுக்கு எல்லாம் சிரிக்க முடியுமா என்று கேட்காதிங்க, எவ்வளோ செஞ்சுட்டிங்க இதை செய்ய மாட்டிங்களா...can...can!

-------------------------------------------------------------------------------------------------------

இயக்குனர்: விஜய் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறாப்போல ஒரு படம் எடுக்கிறேன்.
தயாரிப்பாளர்: பேர் என்ன?
இயக்குனர்:அழகிய டுமீல் மகன்!
--------------------

நண்பர்: கார்த்திக் அஜித் ஃபேன் என்பதை நிருபிச்சுட்டாண்டா...
நண்பர்2: எப்படிறா?
நண்பர்1: வரலாறு ல மட்டும் பாஸ் மத்த சப்ஜெக்ட்ல எல்லாம் பெயில் ஆகிட்டான்.
-------------------------------

இயக்குனர்: நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் கதையை வச்சு ஒரு சரித்திர படம் எடுக்கப்போறேன்.
தயாரிப்பாளர்:பெயர் என்ன வச்சு இருக்கிங்க...
இயக்குனர்: நேதாஜி - "the bose"

---------------------------------------------
(ஆசிரியர் இலவசக்கொத்தனார், பெற்றோர் அபிஅப்பா)

இ.கொ: உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...
அபி அப்பா: அப்படி என்ன பேசினான்:
இ.கொ: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும் சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்?
-----------------------------------
(கண்மணி டீச்சர், அபி அப்பா)

கண்மணி: என்கிட்டேவும் அப்படித்தான் அதிகப்பிரசங்கியா பேசுறான்.
அபி அப்பா: என்ன பேசினான்....
கண்மணி: செங்கல் வச்சு வீடுகட்டுறாங்க, கருங்கல் வச்சு வீடு கட்டுறாங்க ,ஏன் யாரும் பொங்கல் வச்சு வீடுக்கட்டலைனு கேட்கிறான்!.....
அபி அப்பா:( மனசுக்குள்)அதான் நாங்கலாம் "பொங்கள்" வச்சு பதிவு போடுறோம்ல!
---------------------------------------------------------

அபி அப்பா: கல்லூரி னு படம் வந்துச்சு அதுக்குள்ள பழனியப்பா கல்லூரினு ஒரு படம் வருதே, ரெண்டும் ஒண்ணா?
குசும்பன்: படத்துக்கு கல்லூரினு பேரு வச்சாங்க ஆனா கல்லூரிக்கு பேருக்கு வைக்க மறந்துட்டாங்களாம், அதான் பழனியப்பா கல்லூரினு பேரு வச்சு கல்லூரிய திரும்பவும் ரிலீஸ் செய்றாங்க!
-------------------------------------------------------------
நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தரிங்களே!
அபி அப்பா: என்னை என்ன கேணைப்பயனு நினைச்சிங்களா.... "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கறிங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்!
-------------------------------
(சம்பந்தப்பட்ட பதிவர்கள் பெயரைப்பயன் படுத்தியதற்கு மன்னிப்பார்களாக சும்மா டமாசு)
----------------------------------------------------------------------------------------------------

தொண்டன்1: நம்ம தலைவர் கதை விடுறதுல பலே கில்லாடி...
தொண்டன்2: அப்படி என்னக்கதை விட்டார்...
தொ1: நாங்க ஆட்சிக்கு வந்தால் .... இரவில் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு சரியாக வழி தெரிய வானத்திலும் தெரு விளக்குகள் அமைப்போம்னு சொல்றார்.
----------------------------
ஒருவர்: எதுக்கு அந்த டிராபிக் போலீஸ் காரர் விமான நிலையத்தில வந்து சண்டைப்போடுறார்.
மற்றவர்: நோ எண்ட்ரி வழியா ஒரு பிளைட் ஆகாயத்துல பறந்து போச்சாம், அதுக்கு ஃபைன் போடணும்னு சொல்றார்!
-------------------------------------

வித்வான்:அந்தம்மாவுக்கு பெரிய நாட்டிய "தார"கைனு தான் பேரு, ஆனால் சம்பளம் ஒழுங்காவே தர மாட்டாங்க!
நண்பர்: அப்போ நாட்டிய தராத"கை"னு சொல்லுங்க!
-----------------------
நண்பர்: பக்கத்து வீட்டில திருடி போலீஸ்ல மாட்டிக்கிட்டாரே கொன்னக்கோல் பாகவர் கிட்டப்பா இப்போ என்ன ஆனார்?
மற்றவர்: இப்போ அவரை எல்லாம் கன்னக்கோல் பாகவதர்னு சொல்றா!
--------------------------------------------------
நண்பர்1: உங்க பிரண்டு பெரிய விஜய் ஃபேனாக இருக்கலாம் அதுக்காக பஸ்டாண்ட்ல போய் மதுரைக்கு போகாதடினு பாடிக்கிட்டு நிக்கனுமா?
நண்பர்2: நீ வேற அவன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டு அவங்க அம்மா ஊரு மதுரைக்கு போகுது அவங்களை போக வேண்டாம் சொல்லிக்கிட்டு இருக்கான்!
--------------------------------------------------
ஒருவர்: உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல...
மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!
------------------------------------------------------
நண்பர்1: தனுஷ் "பொல்லாதவன், அஜித் "பில்லா" தெரியும் அது என்ன அவரைப்பார்த்து எல்லாம் பில்லாதவன் சொல்றாங்க!
நண்பர்2: அவர் பலே ஆசாமி , ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டு போய்ட்டு பில்லை நம்ம தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆகிடுவார், பில் தர மாட்டார் அதான் "பில்லாதவன்"
------------------------------------------------------
மீனா: நம்ம பரிமளாவுக்கு ஓவர் பந்தாடி...
வீணா: எப்படி சொல்ற...
மீனா: அவ ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு ஒரு விண்டோவ் ஏசி வைக்க போறாளாம்!
----------------------------------------------
அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க:
இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!
--------------------------------

அவள்: அந்த டைலர் லேட்டஸ்ட் டெக்னாலஜிப்படி ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாரம்?
இவள்: எப்படி?
அவள்: ஜாக்கெட்ல இருக்க ஜன்னலுக்கு "பவர் விண்டோவ் "எல்லாம் வைப்பாராம் ஒரு பட்டனை அமுக்கினா விண்டோவ் தானா மூடிக்கிட்டு சாதாரண ஜாக்கெட் ஆகிடுமாம்!
------------------------------------------------------------------

பின்குறிப்பு: என் பேரைப்பார்த்தாலே இங்கே சிலர் டென்சன் ஆகிறார்கள் , அவர்கள் டென்சனை குறைக்கத்தான் இப்படி ஒரு மருந்து கொடுத்து இருக்கேன். வசூல் ராஜாவில பிரகாஷ் ராஜ் செய்வாரே "லாப்டர் தெரபி" அதை தான் தருகிறேன்ன். இன்னும் நிறைய சிரிக்க வைக்கணும்(அப்போ இன்னும் நிறைய டென்சன் ஆவாங்கனு அர்த்தமானு கேட்கப்படாது)

Sunday, December 23, 2007

வீணாவின் ஜாக்கெட்!

வீணா தணிகாச்சலம் வளர்ந்து வரும்(உயரத்தில் அல்ல) குறும்பட, விளம்பரப்பட இயக்குனர்,பெண் விடுதலை, ஒடுக்கபட்டோர்க்காக குரல் கொடுத்தல் எனப்புரட்சிகரமான சிந்தனை மட்டுமல்ல செயலும் கொண்டவள். ஆனால் பார்த்தால் திரை நட்சத்திரம் போன்ற ஒரு வாளிப்பு! முப்பதுகளின் துவக்கத்தில் இருந்தாலும் பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க தூண்டும் ஒரு வசீகரம் கொண்டவள்.

அன்று நகரத்திலேயே மிகப்புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்ந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாள். அது அவளுக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான் நம்மையும் அம்மாம் பெரிய கல்லூரியில் கூப்பிட்டு இருக்காங்களே என்று. பின்னே இருக்காதா இவளின் குரு நாதர் என்று அறியப்படுபம் புகழ்ப்பெற்ற திரைப்பட இயக்குநர் "வேலு ராஜேந்திராவும்", மற்றொரு புகழ் பெற்ற விளம்பரப்பட இயக்குனர் "விஜயன் பாலாவும்", "அமரன்"என்ற ஒரு பெரிய எழுத்தாளரும் அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்கள் அனைவரும் ஆண்கள், ஏற்கனவே தங்கள் துறையில் முத்திரை பதித்தவர்கள்.இவள் மட்டுமே வளர்ந்து வரும் பெண் படைப்பாளி. அவர்களுக்கு சரிசமமாக ஒரு வாய்ப்பு என்பது பரவசம் அளிக்கும் ஒன்று தானே!

நேரத்தோடு போய் சேர்ந்து விட வேண்டும் என்று அவளது ஸ்கூட்டியை விரட்டிக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள், வழக்கமாக எல்லா இடத்திலும் கேட்பது போன்று அங்கிருந்த செக்யூரிட்டி வாசலில் நிறுத்தி விசாரித்தான் , சற்றே கர்வத்துடன் , விழா அழைப்பிதழை எடுத்துக்காட்டி, நான் இங்கே நடக்கிற பங்ஷனில் சீப் கெஸ்ட்டாக கலந்துக்க வந்திருக்கேன் என்றாள்.

ஆனால் அந்த செக்யூரிட்டி கல்லுளி மங்கன் போல, சாரி ... உங்களை உள்ளேவிட முடியாது என்றான்.

-ஏன்?...
-உங்கள் ஜாக்கெட்....
-அதுக்கு என்ன? ....
-ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு இருக்கிங்க...

- அப்போது தான் உணர்ந்தாள் , வழக்கமாக அணியும் அவளது ஃபேவரைட் புளு கலர் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் , பின்க் கலர் காட்டன் புடவையில் அசத்தலாக வந்திருந்தால், அது அவளுக்கு பளிச்சென்று எடுப்பாகவும் இருக்கும்.

நான் வழக்கமாக இது போல உடை உடுத்திக்கொண்டு பல இடத்துக்கும் ,கல்லூரிக்கும் போய் இருக்கேன், அங்கே எல்லாம் என்னை யாரும் ஆட்சேபணை செய்யவில்லையே, இங்கே இது என்ன புது பழக்கம் எனக்கேட்டாள்.

மற்ற இடத்தில் எப்படியோ இங்கே டிரெஸ் கோட் இருக்கு,புடவைனா, கை வைத்த ஜாக்கெட், சுடிதார் என்றால் ,துப்பட்டா என்று பெண்கள் அணிய வேண்டும், அப்படி உடை அணிந்தவர்கள் மட்டும் தான் கல்லூரிக்குள் வர முடியும்.இது பிரின்சிபாலின் உத்தரவு , நான் மீற முடியாது என்று சொல்லிவிட்டான் செக்யூரிட்டி.

அட கடங்கார பாவி என்று மனசுக்குள் சபித்தவாறு. பிரின்சிபாலைப்பார்க்கணும் என்றதுக்கு, அவர் இப்போ பங்ஷனில் பிசியாக இருப்பார், நீங்க உள்ள போகணும்னா போய் பக்கத்தில இருக்க ரெடிமேட் கடை எதுலவாச்சாம் வேற ஜாக்கெட் வாங்கி மாத்திக்கிட்டு வாங்க என்று சிரிக்காமல் சொன்னான்.

தன்மான பெண்ணாச்சே வீணா, அப்படிலாம் டிரெஸ் மாத்திக்கிட்டு இந்த விழாவில் நான் கலந்துக்கொள்ளவேண்டிய தேவையே இல்லை, வர்ரேன், ச்சே இனிமே இந்தப்பக்கமே வர மாட்டேன் என்று திரும்பியவள். போவதற்கும் முன்னர் இதனை அங்கு வந்திருக்கும் அவள் குருநாதர் காதுக்கு தெரியப்படுத்துவோம் அவர் கண்டிப்பாக கேள்வி கேட்பார் என்று நினைத்தாள், ஆனால் அவர் செல் போன் பயன்படுத்துவதே இல்லை,அப்படி ஒரு கொள்கை அவருக்கு.

நல்ல வேளை இன்னொரு விளம்பர பட இயக்குனரான விஜயன் பாலாவின் நம்பர் இருந்தது. அதில் அழைத்து அவனிடம் விபரம் சொன்னாள். அவனோடு நல்லப்பழக்கமும் உண்டு .அவனும் சரி .. சரி என்று கேட்டுக்கொண்டான்.கண்டிப்பாக தகவல் போய் மேடையில் வைத்தே இதை கேள்விக்கேட்டு ஒரு பிரச்சினை ஆக்கி விடுவார் தனது குருநாதர் என்ற நம்பிக்கையுடன் வீணா விர்ரென கிளம்பினாள்.

விஜயன் பாலா போனை துண்டித்துவிட்டு , ... ஆமாம் இவள் வந்திருந்தா, நாம என்ன பேசினாலும் எவனும் கவனிக்க மாட்டான்,அவள் அலங்காரத்தையும் அவளையும் பார்த்துக்கிட்டு அவள் பேசுறதுக்கு மட்டும் யாருமே சொல்லாததை சொன்னாப்போல கை தட்டி ரசிப்பாங்க, பொம்பள பேசினா மவுசு தானே. இனிமே நிம்மதியாக நாம மட்டும் "நச்சுனு" பேசி அசத்திடலாம் ,என்று நினைத்தவாறே, பக்கத்தில் இருந்த வீணாவின் குருநாதரிடம் பாத்ரூம் எங்கே இருக்கு என்று கேட்டு விட்டு சாவகாசமாக ஒரு லேட்டஸ் பாடலை முனுமுனுத்தபடி பாத்ரூம் கிளம்பினான்.

செக்யூரிட்டியை அழைத்த பிரின்சிபல் நான் சொன்னாப்போல சொல்லி வீணாவை திருப்பிட்டியா , தாங்க்ஸ் என்று 100 ரூபாய் எடுத்துக்கொடுத்து விட்டு..... எஞ்சினியரிங்க் படிச்சுகிட்டு இருந்த என் பொண்ணை விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி,மனச மாத்தி அரை குறை உடைல டீவி விளம்பரத்தில நடிக்க வச்சிட்டு, இப்போ அவள் எப்போதும் அரை குறை டிரெஸ் போட்டுக்கிட்டு அலையறா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா, பெண்கள் உடை விஷயத்தில் கவனமா இருக்கனும் என்பதும் டிரெஸ் எப்படி போடனும் என்பதும் இனிமே உனக்கும் மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கும் வீணா! என்று மனதுக்குள் சொல்லி திருப்தியுடன் சிரித்துக்கொண்டே விழாவுக்கு போனார்.
------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:-
இக்கதையில் வரும் சம்பவங்களோ, பெயர்களோ முழுக்க கற்பனையே, ஏதேனும் பெயரையோ,உண்மை சம்பவத்தை நினைவூட்டினால் அது தற்செயலே!

இக்கதை சர்வேசனின் நச்சு "கதைப்போட்டிக்காக"

Saturday, December 22, 2007

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-3

மருத்துவ மாணவர்களின் கல்வி செலவுக்கென dme வழியாக அரசு ஒதுக்கும் பணம் 712.20 கோடி,(மக்கள் சுகாதாரப்பட்ஜெட் தனியா உள்ளது) எனில் அதில் மாணவர்களுக்கு செலவு ஆவது வெகு குறைவு என்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல என்பதை கொஞ்சம் அலசினால் தெரியும்.

மாணவர்களுக்கு கையில் எந்த நிதியியும் போய் சேராது , அவர்களுக்கு தரப்படும் கல்வி உதவித்தொகை தவிர. மற்ற செலவுகள் எல்லாம் மறைமுக செலவுகள்.

உதாரணமாக ...

மருத்து விரிவுரையாளர்கள்,
கல்லூரி பணியாளர்கள்,
ஆய்வுக்கருவிகள்,
ஆய்வக செலவுகள்,
நூலகம்,
கான்பெரன்ஸ் ஹால்,
வகுப்பரை,
விடுதி,
சமையல் கூடம்,
நூலகம்,
தொலைப்பேசி, அலுவலக ஸ்டேனரி , நிர்வாக செலவுகள்,
குடிநீர்,
மின்சாரம்,
இன்ன பிற என்று 1000 செலவீனங்கள் உண்டு.

ஒரு சின்ன உதாரணம்,

சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்த mbbs இடங்கள் 165 மட்டுமே.
ஆனால் தற்போது அங்குள்ள விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 510. ஆகும் இதிலும் இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் அங்கே நியமிக்கப்படவே இல்லை,அவர்களும் நியமிக்கப்பட்டால் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்தச்சுட்டியில் சென்னை மருத்துவக்கல்லூரியில் வேலை செய்யும் விரிவுரையாளர்களின் பட்டியல் உள்ளது.

http://www.tnhealth.org/dmedoctorslist/dmelistprocess.asp

ஒரு விரிவுரையாளர் தோராயமாக சராசரியாக குறைந்த பட்சம் 20,000 சம்பளம்(15000- இல் இருந்து 35000 வரைக்கும் சம்பளம் இருக்கு) வாங்குகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ,
510x20,000= 10,200,000

ஒரு மாதத்திற்கு மட்டும் teaching staff சம்பளம் மட்டுமே ஒரு கோடியே இரண்டு லட்சம்! இதை மட்டும் ஒரு மாணவனுக்கு கற்பிக்க ஆகும் செலவு என்று கணக்கிட்டால் 61,818 ரூபாய் வருகிறது. ஒரு வருடத்திற்கு 7,41,818(ஏழு லட்சத்து சொச்சம்) இது வெறும் கற்பித்தலுக்கான செலவு மட்டுமே!

மற்ற மாதாந்திர செலவுகள் எவ்வளவு வரும்? எல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்தால் மொத்த தொகை எங்கோ போய்விடும்.இது சென்னை மருத்துவக்கல்லூரியை மட்டும் வைத்து சொல்வது.மக்களே கொஞ்சம் சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கினால் தோராயமாக என்ன செலவு ஆகிறது என்பதை சுயமாக கண்டுப்பிடித்து விடலாம். கூகிள் போதுமே உதவிக்கு.

இப்போ சொல்லுங்க மக்களே மருத்துவ மாணவர்களுக்கான அரசின் செலவு அற்பமா? அவை எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே!

Thursday, December 20, 2007

வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்பு-2

மருத்துவ மாணவர்கள், கிராமப்புறத்திற்கு போகத்தயார்,
ஆனால்,
*நிரந்தர வேலை.
* கை நிறைய நல்ல சம்பளம்
*முதுகலை படிக்க தாமதம் ஆக கூடாது , இப்போது அரசு அனுப்பினால் , ஒரு ஆண்டு தாமதம் ஆகும் என்று சொன்னார்கள்.

இவை எல்லாம் கிடைத்தால் போக தயார் என்றார்கள்.சரி உரிமைக்குரல் போலனு பார்த்தா,

ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்தது என்ன? இதோ ஒரு அரசு ஆணையின் நகல்.(2004 இல் வந்தது)

ஆங்கிலத்தில் இருக்கும், சோம்பல் படாமல் படித்துப்பாருங்கள்(டாக்டர்களுக்கு ஆங்கிலம் தானே பிடிக்கும்)





ABSTRACT

Health and Family Welfare – Upgraded Primary Health Centres – Creation of 186 posts of Medical Officers – Appointment on Contract Basis – Terms and Conditions – Orders – issued.


HEALTH AND FAMILY WELFARE (E2) DEPARTMENT

G.O (Ms) No.197 Dated: 7.6.2004

Read:

1.G.O.(Ms) No.1395, Health dt, 27.9.2001

2.G.O.(Ms) No.293, Health dt, 12.10.2001

3.G.O.(Ms) No.106, Health dt, 7.6.2002

4.G.O.(Ms) No.210, Health dt, 24.10.2002

5.G.O.(Ms) No.108, Health dt, 22.5.2003

6.G.O.(Ms) No.320, Health dt, 29.9.2003

ORDER:

In the Government Order read above, the Government have issued orders for the upgradation of 93 Primary Health Centres as detailed in Annexure 1. The upgraded Primary Health Centres (UPHCs) have been provided with modern equipments like Ultra Sonograms, Portable ECGs, X-Ray with improved laboratory facilities and ambulances.

2. In order to provide round the clock service to the people at the upgraded Primary Health Centres it has been decided to create 186 posts of Medical Officers at the rate of two (one male and one female) for each of the upgraded Primary Health Centres. The Government have accordingly decided to create 186 additional posts of Medical Officers. It has also been decided to fill up the above posts on contract basis.

3. Accordingly the Government direct that 186 posts of Medical Officers be created in the 93 Upgraded Primary Health Centres. The Government also direct that these posts shall be filled up on contract basis. The Medical Officers shall be paid a consolidated pay of Rs.8000 (Rupees eight thousand only) per month.

4. The details of the Upgraded Primary Health Centres are indicated in Annexure 1. The procedure for selection of Medical Officers and the terms and conditions of appointment are indicated in Annexure II and III of this order. The form of agreement to be executed by the Medical Officers is indicated in Annexure IV of this order.

5. The expenditure shall be debited to

“2210-Medical and Public Health II State Plan – 03.Rural Health Services – Allopathy – 103.Primary Health Centres – JM.Primary Health Centres – (DPC 2210 03 103 JM 0008)”.

6. This order issues with the concurrence of Finance Department vide its U.O.No.1672/FS/P/2004 dated 4.6.2004.

(BY ORDER OF THE GOVERNOR)

SHEELA RANI CHUNKATH

SECRETARY TO GOVERNMENT

மேலும் அரசின் நிபந்தனைகள்:

ANNEXURE – III

TERMS AND CONDITIONS FOR APPOINTMENT OF CONTRACT MEDICAL OFFICERS

1. The appointment is purely on contract basis. The period of contract shall initially be for one year from the date of joining. The contract may however be extended, further at the discretion of the District Level Committee depending upon the performance and need.

2. The candidate is liable to be terminated at any time during the period of contract, without any notice.

3. The selection of the medical officers will be specific to the upgraded Primary Health Centre. He / She will work in that Primary Health Centre during the period of Contract. He / She shall be paid a consolidated sum of Rs.8,000/- (Eight thousand only) per month and shall work for six days a week from 8.00 a.m. to 5.00 p.m. He / she shall be resident in Primary Health Centre Headquarters and will be on 24 hours call duty. He / She will also have to take up regular night duty as assigned.

4. Medical Officers working on contract basis shall abide by the duties and responsibilities assigned by the Deputy Director of Health Services.

5. The Medical Officers selected and posted for specific Primary Health Centres on contract basis shall not be transferred under any circumstances to any other Primary Health Centre or to any other Health Institution.

6. The Medical Officers working on contract are not eligible to apply for Post Graduate course as a Service candidate.

7. He / She will be eligible only for 10 days Casual Leave in a year. He / She will not be eligible for any other leave.

8. Any unauthorized absence will entail termination from service.

9. The Medical Officer will also carry out any instructions assigned from time to time in the course of his / her employment.

10. Any representation that the Medical Officers may have may be addressed to the Chairman of the District Committee who will give a quick hearing and fair disposal

SECTION OFFICER


மேலே கொடுக்கப்பட்ட அரசு ஆணையைப்படித்தால் தெரியவருவது.

நிரந்தர வேலை, அதிக சம்பளம் கொடுத்தால் தான் போவேன் என்று இன்று கேட்பவர்கள், எப்படி 8000 சம்பளம், ஒப்பந்த அடிப்படை, pg படிக்க அனுமதியில்லை. ஒரு ஆண்டு மட்டும் தான் வேலை , பின்னர் தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்,போன்ற நிபந்தனைகளுடன் அன்று வேலையில் சேர்ந்தார்கள்.
ஆனால் இப்போது அதே சம்பளம், கால அளவு, நிபந்தனைகள் , கிராமத்திற்கு போக மாட்டேன் என்கிறார்கள்.

இன்றக்கு பரிந்துரைக்கப்பட்ட கிராமப்புற சேவையின் சாராம்சமும், அன்றைய அரசு மருத்துவர்களின் நியமன உத்தரவும் ஒன்று போல இருக்கிறது.

அப்போது எதிர்ப்பு எதுவும் இல்லை இப்போது மட்டும் ஏன்?


ஒரே காரணம், அப்போது வேலையில் சேர்ந்துக்கொண்டு ,கிராமப்புற மருத்துவமனைக்கே போகாமல், போனது போல் கணக்கு காட்டிவிட்டு ,தனியே மருத்துவமனை வைத்து சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் .அதுவே இப்போது கையில் பட்டம் கொடுக்காமல் அங்கே அனுப்புவதால் மருத்துவமனைக்கு போகாமலே சம்பாதிக்க முடியாது.இப்போது அரசை ஏமாற்றி இரட்டை சம்பாத்தியம் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காக தான் எதிர்க்கிறார்கள்.

இப்போது புரிந்து இருக்குமே ..மருத்துவமாணவர்களின் போராட்டத்தின் பின்னனி!

Wednesday, December 19, 2007

எனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்! இவர்களையும் சேர்த்துக்கோங்க!








"நாற்று "நடுபவர்கள்" எல்லாரும் நடுவர் தானே, ஏன் அவங்களை எல்லாம் நடுவர்னு சொன்னா குற்றமா? இவங்க எல்லாம் சேற்றில் கால் வைக்கலைனா நாம யாரும் சோற்றில் கை வைக்க முடியாது! வவ்வால் என்னும் பிலாக்காளி கண்டெடுத்த நடுவாளி(நடுவர்)

இந்த நடுவர்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பலான படத்துக்கு போனாலும் அதிலும் ஒரு மெஸ்ஸேஜ் தேடும் வாசக அன்பர்களுக்காக , சும்மா படம் மட்டும் காமிக்காம ஒரு மெஸ்ஸேஜும் தருகிறேன்.(வவ்வால் மொக்கை போட்டாலும் கருத்தா மொக்கை போடுவான்னு நீங்க நினைப்புது எனக்கு புரியுது...(cool ..buddy")

இந்தியா விவசாயத்தில் நெல் நாற்று நடும் வேலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதே சமயம் ஒரு ஆண் நாற்று நட்டால், அவருக்கு , பெண்ணை விட அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது(ஆணுக்கு 75 எனில் பெண்ணுக்கு 60 ரூபாய்). ஆணை விட பெண்ணே "நடுவராக" செயல்படுவதில் வல்லவர் என்பது விவசாயிகளுக்கு நன்கு தெரியும் , அப்படி இருந்தும் , இப்படி பாலியல் ரீதியான சமச்சீர் இன்மை சம்பள விகிதத்தில் இருக்கிறது.

இதில் எந்த உள், வெளி குத்தும் இல்லை... இது விவசாய குத்துங்கோ ....சும்மா கில்லியாட்டாம் இருக்கும்!

நாத்து நடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்.... ஏலே லோ ...ஏலே...லோ....

Friday, December 14, 2007

வசூல்ராஜாக்களின் கிராம புறக்கணிப்பு

தற்போது பலரும் மருத்துவமாணவர்களின் கிராமப்புற சேவைக்குறித்து பதிவுகள் போடுகிறார்கள், அவற்றில் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அடித்து சொல்கிறார்கள் சிலர். அதையே நம்பும் அபாயம் அதிகம் இருப்பதால் சில மாற்றுக்கருத்துக்களை சிலப்பதிவில் சொன்னேன்,நான் சொன்னதில் அவற்றில் சிலது வெளியிடப்படவே இல்லை, காரணம் தெரியவில்லை. சரி நாமே சொல்ல நினைத்ததை மறந்து போறதுக்குள்ள சொல்லிடலாம்னு தனிப்பதிவா போட்டாச்சு!

மருத்துவ படிப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்ன என்று பார்ப்போம்.

4 1/2 வருடங்கள் படிப்பு, பின்னர் ஒரு ஆண்டு உள்ளுறை மருத்துவர்(internship) ஆக இருக்க வேண்டும். மொத்தம் 5 1/2 ஆண்டுகள், இதில் புதிதாக ஒரு ஆண்டு கிராமப்புற சேவை, இதில் நகரம், மாவட்டம், கிராமம் என்று தலா 4 மாதங்கள் இருக்க வேண்டும்.

அப்படி இருக்கும் ஒரு ஆண்டிற்கும் மாதம் 8 ஆயிரங்கள் ஊதியம் அளிக்கப்படும்.

இப்போது மருத்துவ மாணவர்கள் எதிர்க்க காரணங்களாக சொல்வது,

*1 ஆண்டு அதிகரிப்பால் மேல் படிப்பு படிக்க முடியது
*திருமணம் செய்வது தள்ளிப்போகும்.
*இதனால் இனிமேல் மருத்துவம் படிக்கும் ஆர்வம் குறையும்.
*நிரந்தர வேலைக்கொடுத்தால் கிராமம் போவோம். நிறைய பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
*கணினித்துறையில் எல்லாம் அதிகம் சம்பாதிக்கிறாங்க அவங்களுக்கு இப்படிக்கட்டுப்பாடு இருக்கா , எங்களுக்கு மட்டும் ஏன்? அவங்களையும் கிராமத்துக்கு அனுப்புங்க என்கிறார்கள்.

இப்போ இதெல்லாம் சரியானு பார்ப்போம்,

1 ஆண்டு அதிகம் ஆவது பெரிய இழப்பு என்கிறார்கள்,

ஆனால் ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவம் சாதரணமாகவே 6 ஆண்டுகள், ஒரு ஆண்டு ரஷ்யன் மொழி படிப்பு படித்து அதிலும் பாஸ் ஆக வேண்டும்.

மேலும் அங்கே internship இரண்டு ஆண்டுகள். ஆக மொத்தம் அங்கே மருத்துவப்படிப்பு மொத்தம் 9 ஆண்டுகள் வருகிறது.

இந்தியாவப்பத்தி பேச சொன்னா ரஷ்யாவப்பத்தி எதுக்கு பேசனும், அங்கே போயா நம்ம பசங்க படிக்க போறாங்கனு கேட்கத்தோனுமே,

இந்தியாவில் இருந்து வருடம் தோறும் 12,000 பேர் மருத்துவம் படிக்க ரஷ்யா போறாங்களாம்.
இதில் தமிழ் நாட்டில் இருந்தும் கணிசமான அளவுக்கு போகிறார்கள்.

9 வருஷம் படிச்சது போறாதுனு, இந்தியாவில் வந்து தொழில் செய்ய மீண்டு ஒரு தேர்வை mci நடத்தும் அதிலும் தேர்வாக வேண்டும்.

இந்துவில் இது பற்றி வந்தசெய்தி:
// Medical education affordable in Russia

Staff Reporter

COIMBATORE: Indian students aspiring to pursue medical education can now look to Russia as an option. The county has about 48 medical universities and has over 12,000 Indian students studying in it.//



இப்படி இருந்தும் ஏன் அங்கே போய் படிக்கிறாங்க வருமானம் வரும்னு தானே. இங்கே நம்ம ஊரில் ஒரு வருடம் கூடுதல் ஆனா இத்தனை புலம்புறிங்க.அங்கே 9 வருஷம் ஆகும்னாலும் காசு கட்டிப்படிக்க ஓடுறிங்களே அது ஏன்.

இதே போன்று சீனாவிலும் போய் படிக்கிறார்கள் அங்கே ஆங்கிலத்தில் நடத்தினாலும் , internship செய்ய சீனம் தெரிந்து இருக்க வேண்டும் என்று விதி , இதற்காக சீன மாண்டரினில் ஒரு டிப்ளமோ படித்து தேற வேண்டும். எனவே கூடுதலாக ஒரு ஆண்டு அங்கேயும் ஆகும். தோராயமாக வருடத்திற்கு 1500 பேர் சீனாவுக்கு போகிறார்கள் மருத்துவம் படிக்க.

பின் குறிப்பு:
----------------------------------------------------------
சில பல்கலையைப்பொறுத்தவரை ஆங்கில வழியிலும் அங்கே மருத்துவம் உண்டு , அப்போது 6 வருடங்கள் தான்.ஒரு வருசம் தான் கம்மி ஆகும், எப்படிப்பார்த்தாலும் internship சேர்த்து 8 வருடம் ஆகி விடும்.
இரண்டு வருட internship என்பது அங்கே தனியான ஒரு டிப்ளமோவா தருவார்கள். அங்கே mbbs என்று இல்லாமல் மொத்தமாக MD என்று தருவார்கள், ஆனால் இந்தியாவில் அது mbbs க்கு இணையாக தான் கருதப்படும்.

hindu வில் வந்த ஒரு தகவல்,
//Russian medical universities offer M.D. degree equivalent to M.B.B.S in India of six years duration in English and seven years in Russian medium with one-year intense preparatory-cum-preliminary study in Russian.//

----------------------------------------------------------------------

இப்போ இவர்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகாமல் போகிறதா , ஆர்வம் குறைந்தா போச்சு, இல்லை அவர்கள் மேல் படிப்பு படிக்காமலா இருக்காங்க.

மருத்துவம் படிக்க எத்தனையோ பேர் வாய்ப்பு கிடைக்காம இருக்காங்க. எந்த வருடமும் மருத்துவப்படிப்பில் காலி இடங்கள் இருந்ததே இல்லை.ஆனால் பொறியியலில் நிறைய காலி இடங்கள் கடைசி வரைக்கும் இருக்கும்.

மென்பொருள் வல்லுனர்கள் நிறைய சம்பாதிக்கிறாங்க என்று சொல்கிறார்கள், அப்படி இருக்க இப்படி 8000 கொடுத்து ஏமாற்றுகிறது என்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் தனியாரிடம் தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க. அரசு பொறியாளார்கள் சம்பளம் என்ன?

இல்லை சிறிய அளவு நிறுவனங்களில் குறைந்த அளவு சம்பளம் வாங்கும் பொறியாளர்கள் இல்லையா?

ஏன் எத்தனை மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் வாங்குகிறாங்க. சொந்த மருத்துவ மனை நடத்தி அதிகம் சம்பாதிக்க வில்லையா?

பொறியாளார்கள், மற்றவர்களை கிராமம் போக சொல்கிறார்கள். ஆனால் ஒரு ஆண்டில் உருவாகும் பொறியாளர்கள் எண்ணிக்கை 55,000 ஆனால் மருத்துவர்கள் 1535 பேர் தான். எனவே தேவை அதிகம் இருப்பது மருத்துவர்களுக்கு தான்.

நிரந்தர வேலைக்கொடுத்தால் போவோம்னு சொல்கிறார்கள். அப்படி செய்தால் இவர்கள் அங்கே வேலை செய்வார்களா, இப்போதே பல அரசு மருத்துவர்களும் சொந்த மருத்துவமனையில் தான் அதிக நேரம் இருக்கிறார்கள். பேருக்கு என்றோ ஒரு நாள் அரசு மருத்துவமனைக்கு வருவார்.

அரசு மருத்துவர் வேலை கொடு என்பது கூட சேவை செய்யவா, அரசு மருத்துவர் எனில் உடல் தகுதி சான்றிதழ், மெடிக்கல் லீவில் போகிறவர்களுக்கு சான்றிதழ், சான்றொப்பம் அளிக்க என பல வகையிலும் சம்பாதிக்கலாம் என்பதால் தான்.மேலும் சொந்தமாக ஒரு எக்ஸ்ரே, ஸ்கேன் , பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு அங்கே நோயாளிகளை போய் சோதனை செய்துக்கொள்ள செய்யலாம். இங்கே விட என் மருத்துவமனைக்கு வாங்க மலிவா வைத்தியம் பார்க்கலாம் என அரசு மருத்துவராக இருந்துக்கொண்டே ஆள் பிடிக்கலாம்.

இப்படி அரசாங்க சம்பளமும் வாங்கிக்கொண்டு, தனியாகவும் கல்லாக்கட்டி, இரட்டை வருமானம் பார்க்கும் வசூல் ராஜாவாக ஆகத்தான் அரசு பணிக்கொடுத்தா கிராமம் போவோம்னு கோஷம் போடுவது!

முதல்வன் படத்தில் ஒரு அரசு மருத்துவ மனை காட்சி வரும், டாக்டர் எங்கேனு கேட்பார் அர்ஜூன், அவரோட மருத்துவமனைல தான் இருப்பார் இங்கே எப்பவாது தான் வருவார்னு சொல்வார் வார்டு பாய், உடனே பேர் என்னனு கேட்டு சஸ்பென்ஷன் ஆர்டர் பேக்ஸில் அனுப்புவார். இதெல்லாம் அரசு மருத்துவர்களின் கல்யாண குணங்களுக்கு ஒரு உதாரணம் தான்!

இப்பதிவை படிக்கும் உங்களில் யாராவது ஏதாவது அரசு மருத்துவமனைக்கு போய் பாருங்கள் அங்கு நியமனம் செய்யப்பட்ட பல மருத்துவர்கள் வந்திருக்கவே மாட்டார்கள்.நகரங்களிலே அப்படித்தான் இருக்கும். கிராமத்தில் எப்படி கேட்கவே வேண்டாம்!

மேலும் அனுபவம் இல்லாத மருத்துவர்களை அனுப்புவது தவறு என்கிறார்கள், அடடா மக்கள் மீது அக்கரைனு நினைக்கலாம்,

ஆனால் ஒரு வருட "internship" முடித்தவர்களுக்கு அனுபவம் வந்திருக்குமே, அப்புறம் என்ன,? இது வரைக்கும் ஹவுஸ் சர்ஜன் முடிச்சதும் நேரா யாருமே மருத்துவ தொழிலுக்கே போகலையா? மேலும் கிராப்புறத்தில் சாதாரண காய்ச்சல், தலை வலி, அறுவடையின் போது அருவா கையை வெட்டிச்சு, போன்ற சின்ன நோய்கள் தான் அதுக்கு இவர்களே போதும். கிராமத்தில போய் இதய அறுவை சிகிச்சையா செய்யப்போறாங்க.

மருத்துவர்களுக்கான காலி இடங்கள் இருக்கு, அதை நிரப்பலாமே என்று சொல்லலாம். காலி பணியிடங்கள் இல்லாத அரசு துறை எதாவது இருக்கா? எல்லாவற்றிலும் காலி இடங்கள் இருக்கு , அப்படி நிரப்பினா , சம்பளம் கொடுக்க பணம் அரசிடம் இருக்கணுமே?

எத்தனையோ கிராமப்புற பள்ளிகளில் ஒரே ஆசிரியர் தான் இருப்பார், 5 வகுப்பு இருக்கும். போதாக்குறைக்கு அவருக்கும் வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டு பட்டியல், மக்கள் தொகை சரி பார்ப்பு, என்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் புத்துணர்வு பயிற்சி என்றும் அழைப்புகள் வரும். அவர் இல்லாம பள்ளி என்ன ஆகும்? பெரும்பாலான நேரங்களில் சத்துணவு ஆயா தான் பசங்களை அங்கே மேய்ப்பாங்க.
இது போல பள்ளிகளுக்கு எல்லாம் ஆசிரியர் நியமிக்கலாமே, அதுவே அரசால் முடியலையே?

இதுக்கு மாற்றா , "சர்வ சிக்ஷா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் சொற்ப சம்பளத்தில் (வெறும் 2000- 3000த்துக்கு M.sc.M.ed, m.phil வேலைக்கு போறாங்க)ஆசிரியர்களை நியமித்து சமாளிக்கிறது அரசு. அவர்கள் எல்லாம் கொஞ்ச சம்பளம் என்று கிராமத்துக்கு போகாமலா இருக்காங்க.

உங்களுக்கு காசு வர வேற வழி இருக்கு அதான் தெனாவெட்டா 8000 கம்மி போக மாட்டோம் சொல்றிங்க. மக்கள் சேவைனு எண்ணம் இருந்தா சொல்விங்களா?

அதிக வேலை வாய்ப்பு இல்லாத படிப்பாக தற்போது இருப்பது வேளாண்மை கல்வி தான் , ஆனால் அவர்களும் ஆறு மாதம் படிக்கும் காலத்தில் கட்டாயம் கிராமத்தில் தங்கி இருந்து நேரடியாக விவசாயத்தை படிக்க வேண்டும். "village stay programme" என்று பெயர். அதற்கு எல்லாம் அரசு பணம் தராது, மாணவர்களே தங்க, உணவுக்கு எல்லாம் செலவு செய்ய வேண்டும்.

அக்காலத்தில் இரண்டு விவசாயிகளை ஒரு மாணவருக்கு என்று ஒதுக்கிவிடுவார்கள். அவர்களை கவனித்து நடைமுறை விவசாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.மண் மாதிரி எடுப்பது, பயிர் நோய்கள் என்று அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்துடன் சேர்ந்து பணிப்புரிய வேண்டும். எனவே கிராமப்புற சேவை என்பது மருத்துவ மாணவர்களின் மீது மட்டும் சுமத்தப்பட்ட சுமை அல்ல.

அரசு மருத்துவக்கல்லூரிகளில் தான் கல்விக்கட்டணம் குறைவு 4000 ரூபாய் தான,் விடுதிக்கட்டணம் தனி.

அதுவே தனியார்க்கல்லூ்ரிகளில் எவ்வளவு என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு மருத்துவரை உருவாக்க சுமார் பத்து லட்சத்துக்கும் குறையாமல் அரசு செலவிடுகிறது.அது எல்லாம் மக்கள் பணம் தானே , ஒரு வருடம் போனால் போகட்டும் என்று செய்யலாமே.

சென்னை அருகே எனாத்தூரில் இருக்கும் மீனாக்ஷி மருத்துவக்கல்லூரியில் அதிகப்படியாக கட்டணம் வசூலித்தது குறித்த இந்துவில் வந்தசெய்தி,

"They appealed to the Directorate of Medical Education (on September 1, 2003) and to the Chief Minister (on March 18, 2004) to look into the matter, but till date nothing had been done. They have also mentioned that for the second year, students have been asked to pay a total tuition fee (inclusive of room rent) of Rs. 6,22,500; for the third year the tentative tuition fee is Rs. 4.47 lakhs, plus Rs. 30,000 for room rent and the fees for the fourth year is Rs. 4,39,500 (plus Rs.30,000 room rent).

They have estimated that the total fee for the entire course is Rs.21,46,000, but fear that it "might be higher, as the college administration is not following any rational approach while fixing fee structures.""

அரசுக்கல்லூரியில் படிக்கவில்லை எனில் இவர்கள் அனைவருக்கும் சொத்தை விற்க வேண்டியது இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்க. மக்கள் பணத்தில் படித்தவர்கள் மக்களுக்காக இது கூட செய்யக்கூடாதா.

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை பட்ஜெட்டில் மருத்துவப்படிப்புக்கு என தனி நிதி ஒதுக்கப்படுகிறது, நோயாளிகளுக்கு என தனி நிதி. எனவே படிப்புக்கான செலவில் நோயாளிகளுக்கான செலவும் சேர்வதில்லை.

"dme" க்காக ஒதுக்கப்பட்ட மாணவர்கள் கல்விக்கான தொகை 714.20 கோடி. மொத்த சுகாதார துறை நிதி ஒதுக்கீடு 2285.88 கோடி. , எனவே மொத்த 6.5 கோடி மக்களுக்கான மருத்துவ நிதி ஒதுக்கீடு தொகை 1571.68 கோடி தான் ஆனால் சில ஆயிரங்கள் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு என்ன செலவு செய்தது மாணவர்களுக்கு என்று கூசாமல் கேட்கிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவனுக்கு தலைக்கு சுமார் 10 லட்சம் ஆவது செலவு ஆகும். ஆனால் இவர்கள் அந்த பணத்தை மாணவர்கள் கையில் கொடுக்கவில்லை என்கிறார்கள் போல :-))

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்ட விவரம்;
http://www.tnhealth.org/healthbudget0708.htm


The provision for Health and Family Welfare Department under Demand No.19 for 2007-2008 is Rs.2285.88 crores as detailed below:-

(Rs. in Crores)

Demand

Non Plan

Plan

State Plan

Centrally Spon sored

Shared between Centre and State

Total

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

19. Health & Family Welfare Department

1644.48

374.93

261.27

5.00

641.20

Demand

Total Plan and Non Plan

Add Recoveries

Total

(1)

(7)

(8)

(9)

19. Health & Family Welfare Department

2285.68

0.20

2285.88

This includes Rs.2231.20 crores on the Revenue Account and Rs.54.68 crores on the Capital Account. The provision on the Revenue Account, works out to 5% of the total provision of the Revenue Account of Rs.44633.66 crores in the Tamil Nadu State Budget for the year 2007-2008.

1.4. The directorate-wise provision for 2007-2008 made under Demand No.19 Health and Family Welfare Department is as follows:-

(Rs. in Lakhs)

1

Secretariat

466.45

2

Directorate of Medical and Rural Health Services

37405.81

3

Directorate of Medical Education

71420.11

4

Directorate of Public Health and Preventive Medicine

79226.38

5

Directorate of Family Welfare

8017.69

6

Directorate of Drugs Control

653.59

7

Commissionerate of Indian Medicine and Homeopathy

7904.80

8

Tamil Nadu State Health Transport Department

1243.38

9

Reproductive and Child Health Project

352.25

10

Tamil Nadu Health Systems Project

21897.27


Total

228587.73