Sunday, May 13, 2012

கெரில்லா மதவாதிகள்: சாந்தியும் சமாதானமும் உலாவுவதாக!




இந்த இஸ்லாமிய பதிவர்களோடு ஒரே நகைச்சுவையப்பா ...கொஞ்ச காலத்துக்கு முன்னர் சாந்தியும் சமாதானமும் என்பதை வைத்து தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவர் என அறியப்படும் பெயரிலி ஒரு கமெண்ட் சொல்லிட்டார்னு ஏகத்துக்கும் குதிச்சாங்க ...அப்போ சாந்தி, சமாதானம் இரண்டும் ஒரே பொருள் தர வார்த்தை ஆனால் இஸ்லாமிய முகமன்னில் ஒரு முறை தான் சாந்தி(peace) என்ற பதம் வருகிறது எனவே "நடு சென்டர் "போன்று ஏன் இரண்டு முறை தமிழில் சொல்ல வேண்டும் எனவே அப்படி தமிழ்ப்படுத்துவது சரியல்ல ,அப்படி சொல்வதை மாற்றி சொன்னால் தவறும் இல்லை அது இஸ்லாமிய முகமன்னை கிண்டல் செய்வதும் ஆகாது என நான் ஒரு பதிவே போட்டேன் ,பின்ன அரபிய மூலத்தில் இல்லாத வகையில் மொழிப்பெயர்த்துக்கொண்டு அதான் இது என சொல்லிக்கொண்டால் எப்படி? எனக்கு வேலை வெட்டியில்லைப்பாருங்க அதான் சொம்பை தூக்கிட்டு வந்து அப்படி சொன்னேன் :-))


அப்போ சில இஸ்லாமிய அறிவு சீவிக்கள் ஓடி வந்து சாந்தி வேற சமாதானம் வேற எனவே இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து அரபு மூலத்தினை மொழிப்பெயர்க்கிறோம் எனவே அதனை கிண்டல் எல்லாம் செய்யப்படாது தமிழ்மணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொல்லி அரபு நாட்டில் தடை கூடப்போட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா பேசி தீர்த்து ,அப்படி சொன்னது தனி நபரின் கருத்து அதற்கு கம்பெனி பொறுப்பாகாது அப்படியே யாருக்கேனும் மனம் புண்ப்பட்டிருந்தால் வருத்தங்கள் என டிப்ளமாட்டிக்கா ஒரு அறிக்கை விட்டு தமிழ்மணம் தண்ணீர் விட்டு அனைத்தது.

இந்த கண்றாவி எல்லாம் ஏற்கனவே தெரியுமே இப்போ என்னாத்துக்கு நீ கூவுற என கேட்பதும் தெரியுது மாமே.... மேட்டரே இனிமே தான்...

அதன் பின்னரும் ஓயாத அலைகளாய் மத வாத பிரதிவாதங்கள் ஓடிக்கொண்டே இருந்தது , அது தமிழ்மண மகுடத்தினை அபகரிக்கும் அல்லது ஆக்ரமிக்கும் வகையில் போய் பல கள்ள ஓட்டு கதாநாயகர்கள் உருவானார்கள் , இது சல சலப்பை உருவாக்கி அமைதியின்மைக்கு அழைப்பு விடுத்தது.

மதவாதிகள் கள்ள/நல்ல ஓட்டுக்களை கூட்டமாக போட்டு மகுடத்தினை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொன்னதால் தமிழ்மணம் ஆழ்நிலை தியானத்தில் இருந்து வெளிவந்து மகுடம்னு இருந்தா தானே சண்டை அதையே தூக்கி விடுகிறோம் என "சாலமன் தீர்ப்பை " சொல்லி இனிமேல் மதம் அல்லது மதம் சார்ந்த இடுகைகள் இடப்பட்டால் நீக்கப்படும் என பிரகடணம் செய்தது. சரி சண்டை சச்சரவு நீங்க ஏதோ ஒன்று செய்தாக வேண்டிய சூழலில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் ஆல் இஸ் வெல் சொல்லி அமைதியானார்கள்.

இதில் நடுநிலையாக மத மூட நம்பிக்கைகளை அலசும் விமர்சிக்கும் பதிவாளார்களும் பாதிக்கப்பட்டு ,இடுகைகள் நீக்கப்பட்டது அவர்களும் இடுக்கண் வருங்கால் நகுக என்பது போல சிரித்துக்கொண்டே "ஆல் இஸ் வெல் "சொல்லிக்கொண்டார்கள் :-))

மதம்னு லேபிளிலோ அல்லது தலைப்பிலோ மத வாசனை அடித்தால் இடுகை நீக்கப்பட்டது ஆனால் இப்போ பாருங்க தமிழ்மண நட்சத்திரப்பதிவுகளிலேயே பொதுவா விளக்கம் சொல்கிறார்ப்போல "சாந்தியும் சமாதானமும்" என ஒருத்தர் பதிவு போட்டு இருக்காங்க. அதில் நேரடியாக எந்த தூண்டிவிடும் வார்த்தைப்பிரயோகமும் இல்லாவிட்டாலும் ஒரு நுண்ணரசியல் இருக்கு , எந்த கருத்தை வைத்து பிரச்சினை கிளம்பியதோ அதையே நட்சத்திர வாரத்திலும் எழுதுவோம் என்ன செய்ய முடியும் என்ற ஒரு சவால் ஒளிந்திருக்கிறது மேலும் மதம் சார்ந்த இடுகைகள் நீக்கப்பட்டு வரும் வேளையில் இப்படி எழுதினால் என்ன செய்ய முடியும் என கேள்விக்குள்ளாக்குகிறது அப்பதிவு?

சொல்லலாம் இது இஸ்லாமிய முகமன்னை விளக்கும் பதிவுனு ஆனால் பல நாட்களுக்கு முன்னரே அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசி சாறு பிழிந்து சக்கையாகி போன சமாச்சாரம் அப்போதே அனைவரும் விளக்கம் கிளக்கம் எல்லாம் கொடுத்தாச்சு இப்போ மீண்டும் விளக்கம் தேவையா? தேவையே இல்லை ஆனால் மதவாதிகளுக்கு தேவையாய் இருக்கு :-))

மேலும் இரண்டு முறை ஒரே பொருளில் உள்ள சொல்ப்பயன்ப்படுத்தப்பட்டிருக்கு அது தவறான மொழிப்பெயர்ப்பு என சொன்னதற்கு இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள்,ஆனால் இப்போதைய பதிவில் ஒரே பொருள் வரும் இரண்டு சொற்கள் அவைனு ஒத்துக்கிட்டு இருக்காங்க,அப்போ தவறான மொழிப்பெயர்ப்பை பயன்ப்படுத்திக்கொண்டு அதற்கு ஒரு சண்டையிட்டது ஏன்? சண்டைப்போடனும் அதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றா ?

இனிமேல் இப்படியான என்கிரைப்டட் மதப்பதிவுகள் மெல்ல வரத்துவங்கும் மீண்டும் குடுமி புடி சண்டை தான் :-)) ஆனால் இதுல மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டது தேமேனு இருந்த நடு நிலையாளர்கள் தான் .சிலர் மதவாதிகளே சண்டைப்போடாதிங்கன்னு பதிவுப்போட்டதுக்கு எல்லாம் மத பதிவுனு நீக்கப்பட்டிருக்காங்க ... பாவம் சண்டைப்போட்டுக்கிறாங்களேனு சமாதானம் செய்யப்போறேன்னு போய் மூக்கு உடைப்பட்ட வடிவேலுகள் அவங்க :-))

பின் குறிப்பு:

#மதம் சார்ந்த பதிவுகள் நீக்கப்படும் என்ற நிலையில் பல நடுநிலையாளர்கள், மூட நம்பிக்கையை விமர்சிக்கும் பதிவர்கள் ஆகியோரின் இடுகைகள் கும்பலில் கோவிந்தாவாக நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று இந்நிலையில் ,மறைமுகமாக மதம் சார்ந்து பதிவுகள் இடுவதும் அதுவும் நட்சத்திரவாரத்திலும் என்ற நிலையில் இதற்கான அளவு கோள் என்ன என அறிந்துக்கொள்ளவே இப்பதிவு.

# அஹமது (அ) முகமது கூட ஆஷிக் என்பது முன்னாலோ ,பின்னாலோ ஒட்டி இருக்கும் அவர் தான் சாந்தி வேறு சொல் சமாதானம் வேறு சொல்னு சொல்லிக்கிட்டு இருந்தார் அந்த மானஸ்தர் இப்போ என்ன சொல்கிறார் என அறிய ஆவல்!

#இது மதப்பதிவு அல்ல ஆனாலும் பெயரிலி ஏதேனும் ஆங்கில கவிதை படிப்பாரா என தெரியவில்லை :-))

*****