Thursday, October 19, 2006

விடுகதை!

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!
விடை
நாளை மறுநாள்
உயிரோடிருந்தால் தெரியும்!
வாழ்க்கை என்பது
புதுக்கதை!
வாசிக்க வாழ்நாள் தேவை!

இதயம் விடுதலையாகுமோ!

தேன்கூடு அக்டோபர் மாத போட்டிக்கான ஆக்கம்(இப்படிலாம் வேற விளம்பரம் போடனுமா??!!)


மொட்டு மலர்ந்தால்
மறைந்திருக்கும்
மணம் விடுதலையாகும்!
மனம் மலர்ந்தால்
கட்டவிழும்
கவிதை விடுதலையாகும்!
கனவு மலர்ந்தால்
மனக்கவலை விடுதலையாகும்!
ஆனால்
காதல் மலர்ந்தால் மட்டும்
இதயம் சிறைப்படுவதேன்!

Wednesday, October 18, 2006

உயிர்த்துளி!

மரத்தின் வேர்கள்
மண்ணில்
மனதின் வேதனை
என் கண்ணில்!
உருகும் உயிரின்
ஒரு துளி
உறைந்து நின்றது
விழியோரம்
அது காற்றில்
கரையும் முன்னே
காண வருவாயோ
என் கண்ணே!

Tuesday, October 10, 2006

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

கொசுக்கடி தாங்காமல் அர்த்த ராத்திரியில் என் கவிதை உள்ளம் விழித்துக்கொண்டதால் , கடித்த கொசுவை பழி வாங்கும் வன்மம் என் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததன் விளைவே இந்த சிக்குன் குன்யா கவிதைகள்.


கொசுவை பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை ஏன்யா பழி வாங்குறனு புலம்புறது கேட்கிறது என்ன பண்றது கொசுவுக்கு கடிக்க மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாதே.... உங்களுக்கு படிக்க தெரியுமே... ஹே... ஹே ஹே.
கொசு கடியை விட இந்த வவ்வால் கடி பெரும் கடியா இருக்கேனு திட்டாம ,சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகளைப்படித்து விட்டு சிக்கனமா ரெண்டு வரி பின்னூட்டமாவது போடுங்க மகா ஜனங்களே!.
********************************************************************

* நாட்டில பாதி பேரு ஆண்யா

பெண்கள் தலைல இருக்கு பேன்யா

கொசு கடிச்சா எல்லாருக்கும் சிக்குன் குன்யா..

இது ஏன்யா?

******************************

* குடிச்சா கிக் தருவது

'ரம்'யா

கொசு கடிச்சா வருவது

சிக்குன் குன்யா!

*****************************
* சிக்குனு உடைப்போட்டா

அது டென்னிஸ் சான்யா

பக்குனு கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

****************************
* பெண் டைகர் போல

ஏஸ் அடிச்சா

அது டென்னிஸ் சான்யா!

ஏடிஸ் டைகரிஸ்

பெண் கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

*****************************

* சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடிச்சா

வரும் சிக்ஸ் ரன்யா!

கொசு ஓங்கி கடிச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* பார்ல கடிச்சுக்க வச்சா

போன்லெஸ்

சிக்கன் துன்யா!

போன்லெஸ் கொசு

கடிச்சு வச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* அரட்டை அரங்கம்

நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை

கடிப்பது கொசு!

Monday, October 09, 2006

எங்கே எந்தன் வெண்ணிலா!...

காற்று வெளியில்

கட்டி வைத்தேன்

கதவில்லா மேகக்கோட்டை!

மின்னல் கொடியில் தோரணம் கட்டி

மினுக்கும் நட்சத்திர விளக்கமைத்து

நாட்தோறும் காத்திருந்தேன்

விளக்கேற்ற வருமா எந்தன்

வெண்ணிலா என்று!

எங்கே என் முகம்!

கொஞ்சம் பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது இம்சைகள் துவங்கிவிட்டது இதோ முதல் போனி! அனுபவி ராஜா அனுபவி...

கனவில் ஒரு முகம்,

நினைவில் மறு முகம்,

நிஜத்தில் வேறு முகம்,

நீ காண்பதொன்று,

நான் காண்பதொன்று,

யார் காண்பது என் முகம்?

எனக்கே தெரியவில்லை

எவருக்கேனும் தெரிந்தால் கூறுங்களேன்!

மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்



மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்!

வணக்கம் நண்பர்களே!

நகர்ப்புரத்தில் சுற்றுப்புறம் மாசடைந்துவிட்டதால் ஒரு மாறுதல் வேண்டி சிறிது காலம் வனவாசத்திற்கு சென்று விட்டேன்.ஆனால் வவ்வாலை என் நேசமிகு வலைஞர்கள் வலை வீசி தேடி வருவதாகவும், வவ்வால் இல்லாமல் வலைப்பதிவுலகம் சுரத்தின்றி தொய்ந்து விட்டது விரைந்து வந்து எங்களை எல்லாம் காத்தருள வேண்டும் என்று கைப்பேசி குறும் செய்தி(எஸ்.எம்.எஸ்),மின்னஞ்சல், தொலை ஒளி நகல் (ஃபேக்ஸ்),தந்தி, அஞ்சல் அட்டை போன்ற பலவற்றின் வாயிலாகவும் விடாத அழைப்புகள் வந்தமையால் அன்பர்களின் அழைப்பிற்கு செவி மடுத்து, என் வனவாசத்தை பாதியில் முடித்துக்கொண்டு மீண்டும் தமிழை காக்க ஓடொடி வந்து விட்டேன்.

என் உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணித்து தொய்ந்து விட்ட வலைப்பதிவு உலகிற்கு முட்டு கொடுத்து நிமிர்த்துவதே எனது தலையாயப் பணி என்பத்தை தட்டச்சு விசைப்பலகை மீது ஓங்கி அறைந்து உறுதி கூறிக்கொள்கிறேன்.

அவ்வப்போது அஞ்சாத வாசம் சென்றாலும் எப்பொழுதெல்லாம் தமிழுக்கு தொய்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் வவ்வால் அவதரிப்பான்!(தலைமறைவு ஆனதும் இல்லாமல் . இதுல ஓவர் அலம்பல் வேறயா அடங்குய்யா)
சரி இத்தோட நிப்பாட்டிப்போம் இல்லைனா நம்ம பதிவ படிக்கிற ஒண்ணு ரண்டு மக்களும் ஓடிப்போய்டுவாங்க ..ஹே ஹெ..ஹே மீண்டும் வவ்வால் இம்சைகள் தொடறும்...

Friday, June 23, 2006

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி மீண்டும் அரங்கேறுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(NLC தமிழகம்) தேசிய அலுமினியம் கம்பெனி(NALCO),ஒரிசா ஆகியவற்றில் உள்ள அரசின் பங்குகளில் 10 சதவீதம் பொது விற்பனைக்கு விற்க இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.இதன் மூலம் 2500 கோடி(NALCO-1400 CR, NLC-1100 cr) மூலதனம் திரட்டப்படும்.இதில் 75% சமுதாயப்பணிகளுக்கும் 25% நலிவடைந்த பொது துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் செலவழிக்கப்படும் என சொல்கிறார்கள்.

இதில் தமிழகத்தை சார்ந்த NLC யின் பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்க தி.மு.க,பா.ம.க போன்ற தமிழக கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பது வருத்தம் அளிக்க கூடியது மட்டுமல்ல ,அவர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்க தக்கதும் கூட.

தமிழக கட்சிகள் ஒரு காலத்தில் NLC யை தனியார் மயம் ஆக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தின ,இப்போழுது அந்த போராட்டக்குணம் எங்கே போயிற்று.

பங்கு சந்தை சரிவைக்கண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பங்கு சந்தை சரிவை தடுக்கலாம் என்பது நிதியமைச்சரின் குறுகிய கால கணக்காக இருக்கலாம். NLC யின் மிகப்பெரிய தொழிற் சங்கமான தொ.மு.ச. தி.மு.க சார்புடையதே அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனப்பார்க்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் தேர்தல் காலங்களில் தனியார் மயம் ஆதலை தடுக்க எங்களுக்கே வாக்கு போடுங்கள் என கோரியவர்கள்.சமீபத்தில் தேர்தல் எதுவும் வராது எனவே சத்தம் போடாமல் அடக்கி வாசிப்பார்களோ!

லாபத்தில் நடப்பதை விற்று காசு வாங்குவதற்கு பதில் நஷ்டத்தில் இயங்குவதை விற்று நிதி திரட்டலாம்,மேலும் அரசின் செலவீனங்களும் குறையுமே! நலிவடைந்த நிறுவனம் விலைப்போகாது என்று சொல்லலாம் அதையும் வாங்க ஆள் இல்லாமலா போவார்கள்.

Thursday, June 22, 2006

ஆராரோ ஆறு யாரோ ....



ன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பென்ச் மேல் நிக்க வைக்கும் டீச்சர் போல் எங்கே அந்த ஆறு என்று என்னை கடுமையாக விரட்டி விரட்டிக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க பொன்ஸ்(உன்னை எல்லாம் ஆறு போட சொல்லி கூப்பிடனே என் புத்திய... அப்படினு புலம்புறாங்க) ,இதுக்கு மேலே தாமதம் செய்தால் யானைக்காலால் இடறி சிரச்சேதம் செய்தாலும் செய்வார்கள் என்று உடனே போட்டு விட்டேன் எனது ஆறை.ஒரு வவ்வாலையும் ஆட்டத்திற்கு அழைத்தற்கு நன்றி! ஆர்.டி.ஓ கிட்டே கூட 8 போட்டு லைசென்ஸ் எளிதாக வாங்கிடலாம் போல இருக்கு இந்த ஆறு செமையா படுத்துது.ஒரு தடவை தட்டச்சு செய்து பிளாக்கர் சொதப்பலால் காணாம போய்டுச்சு (சி.பி.ஐ கிட்டெ தேட சொல்லனும்)ஒரு வழியா நானும் களத்தில் ஆறோட குதிச்சுட்டேன்!

I)பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்:

1)காதெலுனும் தீவினிலே- குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி:

குமுதத்தில் தொடராக வந்த நாவல்.குமுதம் ஆசிரியர் அதிகம் எழுதிக்குவிப்பவர் அல்ல ஆனால் எழுதிய சிலக்கதைகளில் முத்திரைப்பதித்தவர்.ஏழைக்காதலன் பணக்காரப்பெண்ணை காதலிக்கும் எவர் கிரீன் பார்முலா தான் ஆனால் வித்தியாசமா இருக்கும்.

2)சங்கர்லால் கதைகள்- தமிழ்வாணன்:

தமிழ்வாணனின் தொப்பி,கருப்புக்கண்ணாடி படு பிரசித்தம் அவரது சங்கர்லால் போல. தமிழ் நாட்டின் ஷெர்லாக் ஹோம்ஸ் சங்கர்லால்.அடிக்கடி தேநீர் அருந்துவது ,சத்தம் கேட்காத ரப்பர் காலணி என்று ஒரு மார்க்கமான துப்பறியும் நிபுணர் ஆக வருவர்.நியுயார்க்கில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் என உலகம் சுற்றி துப்பறிந்தவர்.

3)கடல் புறா - சான்டில்யன்:

சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் பிடிக்கும் ,அதுவும் அவரது பெண்களைப்பற்றிய வர்ணனை தீப்பிடிக்க வைக்கும்.புரவி,மரக்கலம் எல்லாம் இல்லாமல் ஒரு சமூக நாவல் கூட எழுதியுள்ளார் படித்துள்ளேன் பெயர் நினைவில்லை.இவரைப் பின்பற்றி கோவி.மணிசேகரன், மு.மேத்தா(சோழ தீபம்) எல்லாம் எழுதிப்பார்த்தார்கள் சாண்டில்யனின் நிழலை கூட தொடமுடியவில்லை.

4)கரித்துண்டு- மு.வரதராசன்:

கரித்துண்டு சாலையோரத்தில் படம் வரைந்து ஜீவனம் செய்யும் ஒரு ஓவியனின் கதை.இதில் ஒரு உளவியலை சொல்வார் அவன் வரையும் படங்களில் கால் இருக்காது ஏனெனில் அவனுக்கும் கால் இல்லை என.இப்பொழுதும் சாலையில் படம் வரைந்து காசு கேட்கும் ஓவியர்களைப்பார்த்தால் இந்த கதை தான் நிழலாடும்.பெரும்பாலும் கடவுள் படங்களையே வரைகிறார்கள் இத்தகைய ஓவியர்கள்

5)சுஜாதா கதைகள்:

இவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை சகலகலா வல்லவர்.இவரின் அனைத்து கதைகளும் பிடிக்கும். ஸ்ரிரங்கத்து தேவதைகள் கதைகள் சிலிர்ப்பானவை.சுஜாதாவும் மெக்ஸிகோ சலவைக்காரியும் பிரிக்க முடியாதவர்கள் :-)).விஞ்ஞானக்கதைகளில் வித்தகர்.கணேஷ்- வசந்த் என்ற இரட்டையர்களை வைத்துக்கொண்டு சமகாலத்தையும் பேசுவார் சோழர் காலத்தில் பெண்கள் மார்கச்சை அணிவதில்லையாம் பாஸ் என்றும் ஜொள்ளுவார் வசந்த் மூலமாக!

6)வீரப்பிரதாபன் கதைகள்- வாண்டுமாமா:

வாண்டுமாமா என்ற குழந்தைகள் கதாசிரியர் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஜே.கே ரவ்லிங் கின் ஹாரிப்பாட்டர்களுக்கு எல்லாம் தாத்தா இவர்.வீரப்பிரதாபனின் குதிரையின் காதில் ஒரு மந்திரம் சொன்னால் வானில் பறக்கும்.ஒரு குளிகையை வாயில் அடக்கிக் கொண்டால் மாயமாக மறையலாம். ஆலோசனை சொல்ல கூட ஒரு கட்டை விரல் சைஸ் குள்ளன் வேறு இருப்பான்.

II) பிடித்த திரைப்படங்கள்

1)கர்ணன் - சிவாஜி:

சிவாஜியின் கலக்கலான நடிப்பில் வந்த படம்.கர்ணன் கதாப்பாத்திரம் ஒரு சூழ்னிலைக் கைதி அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பர்

2) முள்ளும் மலரும்-ரஜினி:

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற கிரீடம் எல்லாம் சூட்டப்படாத காலத்திய படம் இயல்பான நடிப்பைக் காட்டி இருப்பார். செந்தாழம் பூவில் ...என்ற பாடல் கேட்டால் காதுகளை விட்டு நீங்காது ஒலிக்கும்

3)ரத்தக்கண்ணீர்-எம்.ஆர்.ராதா :

வில்லத்தனமாக நடித்தே சமூகத்திற்கு மெஸ்ஸேஜ் தந்தவர்.அள்ளி அள்ளி கொடுத்தேனே அடியே காந்தா ... வசனமும் குற்றம் புரிந்தவன் ..பாடலும் மறக்க முடியாதவை

4)ஒரு தலை ராகம்:

சோகமான காதலை இனிமையான பாடல்களுடன் சொன்னப் படம் .இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ராஜேந்தரா இப்படியெல்லாம் படம் எடுத்தார் என்று ஆச்சரியப்படுவார்கள்.இப்போது முரளி செய்த வேலையை அப்போது செய்தவர் சங்கர்

5) மூன்றாம் பிறை-கமல்:

உணர்வுப்பூர்வமான படம், கமலின் கிளைமாக்ஸ் நடிப்பு பிரமாதம் என்பார்கள் ஆனால் அந்த கிளைமாக்ஸ் எனக்கு நாடகத்தனமாகவே தோன்றியது. இயக்குனர்களை கமல் இயக்காத காலத்தில் வந்த படம் என்பதால் பாலுமகேந்திராவின் இயக்கதில் ராஜாவின் இசையில் இயல்பாக இருக்கும் .கண்ணே கலைமானே... எந்த காலத்திலும் தெவிட்டாத பாடல்

6)காதலுக்கு மரியாதை-விஜய் :

காதலியுடன் கனவுப்பாட்டு பாடும் போது ,அது வரைக் குடும்ப குத்து விளக்காக காட்டிய நாயகியை குறைந்த பட்ச உடையில் ஆடவிடுவார்கள்.அப்படியில்லாமல் நாகரீகமாக காதலை சொல்லி மரியாதை செய்து மரியாதை வாங்கிய படம்.என்னை தாலாட்ட வருவாளா... பாடல் காதுகளுக்கு உண்மையான தாலாட்டு.

III)பிடித்த விளையாட்டு

1)கோலிக்குண்டு :

கோலிகுண்டில் பேந்தா என்று ஒரு வகை சுவற்றுக்கு பக்கத்தில் செவ்வக பெட்டி போல கோடு போட்டு இரண்டு சின்ன கோலி ஒரு பெரிய கோலி வைத்து ஆடுவார்கள் அதில் அய்யா சூரப்புலி. ஒலிப்பிக்கில் இதை எல்லாம் சேர்க்க மாட்டேன்கிறார்கள். சேர்த்தால் ஒரு தங்கம் நிச்சயம்.ஆட்ட விதி, பந்தய தொகை என சந்தேகம் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்!

2)காத்தாடி விடுவது:

காத்தாடி விட்டு டீல் விடுவதிலும் எக்ஸ்பெர்ட் தான். இப்போ கூட பலரது வலைப்பதிவில் போய் பின்னூட்டமிட்டு டீல் விடுவதெல்லாம் அங்கே கத்துகிட்டது தான் :-))

3)கிரிக்கெட்:

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் நாம். அதிலும் ஸ்பெஷல் ஒரு ஓவரில் 3 பந்துகளை வலது கையாலும் 3 பந்துகளை இடது கையாலும் வீசி ரொம்ப டார்ச்சர் தருவேன்.(எனக்கு நோ பால் தந்துடுவானுங்க ரூல்ஸ் தெரியாத தத்திங்க)

4)சதுரங்கம்:

விஸ்வநாதன் ஆனந்த் வரவில்லை என்றால் அவர் இடத்தை நான் தான் நிரப்பி இருப்பேன் :-))

5)டேபிள் டென்னிஸ்: இந்த இரண்டு விளையாட்டும் நேரம் கிடைத்தால் ஆடுவது.
6)பேட்மின்டன்

IV)பிடித்த உணவு

1) பழைய சாதம், மோர், மாங்கா ஊறுகாய்:

மோர் ஊத்தி பழைய சாதத்திற்கு மாங்கா ஊறுகாய் தொட்டுகிடு சாப்டா ஜம்ம்னு இருக்கும். உடம்புக்கும் நல்லது.


2)முட்டை தோசை:

முட்டை தோசை மேல மிளகு பொடி தூவி ,காரசட்னி வைத்துகொண்டு சாப்டா சும்ம நச்சுனு இருக்கும்

3) இட்லி காரசட்னி:

இட்லி கூட கார சட்னி இல்லைனா கத்திரிக்கா கொத்ஸ்து இருந்தா ஒரு டஜன் இட்லி சகஜமா உள்ள இறங்கும்.

4)மாகி நூடுல்ஸ்(நானே செய்வதால் நல்லா இருக்கும்):

ஆபாத்பாந்தவன் இந்த மாகி நூடில்ஸ் அதனாலேயே நமக்கு புடிக்கும்

5)ரசம் சாதம் -தக்காளி ரசம் அரிசி வத்தல் அல்லது உருளை கிழங்கு வருவல். எதேஷ்டம். நல்லா எளிதா ஜீரணம் ஆகும்.

6)பிரெட் ஆம்லெட் :

இதுவும் அப்படி தான் எப்போ வேனா பசிக்கு உடனே தயார் ஆகிடும் சமயத்தில சைட் டிஷ் ஆகவும் பயன்படும்.

V)பிடித்த பானங்கள்:

1)ஏலக்காய் போட்ட டீ:

மழைக்காலத்திலே கொதிக்க கொதிக்க ஊதி ஊதி குடிக்கணும். தம் டீ என்று கேன் ல இருக்க டீ சொல்வாங்க நாங்க எல்லாம் ஒரு தம் அடிச்சுட்டு டீ குடிக்கிற ஆளுங்க!(கடைசில மறக்காம ஒரு ஹால்ஸ் இல்லைனா மெந்தோ போட்டுகணும் வாய்ல)

2) சுக்கு காபி/பிளாக் காபி:

சுக்கு காபியும் தொண்டைக்கு இதமானது. வீட்டில போட்டு குடிக்கிறது சமயத்தில ரோட்ல சைக்கிளில் சுக்கு காபி வித்துகிட்டு போவங்க அதையும் வாங்கி குடிக்கிறது.(அவங்க எப்படி போடுவாங்கனு ஆராய்ச்சிலாம் பண்ணா குடிக்க முடியாது)

3) சாதம் வடித்த கஞ்சி:

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூடான கஞ்சி தண்ணி குடிக்கிறது உண்டு. சாதத்தில இருக்க சத்தெல்லாம் தண்ணில போகுது அதனால அதை மீண்டும் அடைய ஒரு வழி. சூப்பரா இருக்கும்

4)மோரில் எலுமிச்சம் பழம் பிழிந்து:

இப்படிக்குடித்தால் உடல் குளிர்சியடையும் ,காலையில் வெறும் வயிற்றில் குடிக்கணும்.

5)ராயல் சேலஞ்ச் (விஸ்கி):

நம்ம வசதிக்கு இதான் சரிப்படும் அயல்னாட்டு சரக்குலாம் கைய கடிக்கும். இதிலும் நான் பல பரிசோதனைகள் செய்து இருக்கேன் அதெல்லாம் சொன்னா இடம் போதாது. சாம்பிளுக்கு சில. மிக்ஸிங்கு கோக்/பெப்சி லாம் பயன்படுத்த மாட்டேன் ,கொய்யா ஜூஸ்,(பொன்ஸ் உங்களுக்கும் கொய்யா ஜூஸ் மட்டும் தானே பேவரைட்) ஆப்பிள் ஜூஸ், மாதுளம் ஜூஸ் என்று பழச்சாறுகளை தான் பயன் படுத்துவேன்.
ஆல்கஹாலின் தீமையை குறைக்க :-))

ஒரு நாள் கொஞ்சம் வித்தியாசமாக குளுக்கோஸ் ஆரஞ்ச் கலந்து கூட குடிச்சாச்சு (இப்படி குடித்தா அதிகமா கிக் வந்து தூக்கிடும் கவனமா ட்ரை பண்ணனும் )

6)புல்லட் பீர்:

புல்லட் பீர் நல்லா ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் சமயத்துல அதுல வே சரக்கையும் மிக்ஸ் பண்ணி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க் ஆக்கிடுவேன் :-))

VI) அழைக்க விரும்பும் ஆறு

1)சுப்பிரமணிய பாரதி
2)இராமலிங்க அடிகளார்
3)கவிஞர் கண்ண தாசன்
4)நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்
5)ஆல்பிரெட் ஐன்ஸ்டீன்
6)நெப்போலியன் போனபார்ட்.

இவர்களை எல்லாம் அழைக்க முடியாது ,அழைத்தாலும் வரமுடியாத இடத்தில் இருக்கிறார்கள்.வலைபதிவுலாம் இல்லாத காலத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க!
எனவே வலையுலகில் இருக்கும் ஆறு பேரை அழைக்கிறேன்..

1)வெளிகண்ட நாதர்
2)திராவிடதமிழர்கள்

3)பத்ரி
4)மா.சிவக்குமார்
5)யாத்திரிகன்
6)பாடும் நிலா பாலு சுந்தர்

இப்படி ஆறு பேரை அழைப்பதில் தான் பெரும் சிக்கலே யாரை அழைக்க ,விட என முடிவெடுக்க முடியவில்லை.முன்பே சிலரை அழைத்து விட்டார்கள். எனவே என்னால் முடிந்த வரை ஒரு 6 பேரை அழைக்கிறேன் பெரிய மனசு பண்ணி வந்து உதவுங்கள்.

Saturday, June 10, 2006

காதல் வளர்சிதை மாற்றம்!




இருண்ட கிணற்றின் சுவர்களில்

எவரும் அறியாமல் கசியும்

நீர்த்தாரைகளைப் போல

என் இதயத்தின் நாளங்களில்

உன் நினைவுகள் கசிகின்றன!

இலையுதிர் காலத்து மரத்தில்

இளைப்பார நிழல் தேடும்

ஊர்க்குருவியைப் போல

என் மனம்

திக்கு தெரியாத மனிதக்கூட்டத்தில்

புறக்கண் மூடி

அகக் கண் திறந்து

தேடி அலைகிறது

என் இதயம் மட்டுமே

அறிந்த முகத்தை!

முகம் தேவை இல்லை உணர

மூச்சுக் காற்றே போதும்

உன் வரவை எனக்கு சொல்ல!

தற்செயலான விழி தீண்டலில்

என் இதயக்கூட்டில்

உறங்கும் உணர்வுகள் சிலிர்த்து

எந்தன் காதல் முகிழ்த்து வளர்ந்ததில்

எந்தன் இதயம் சிதைந்து

சிறைப்பட்ட உணர்வுகள் பொங்கி

பிரவாகம் எடுத்தது கவிதையாக!

நானும் கவிஞன் ஆனேன்!

இது தான் காதல் வளர்சிதை மாற்றமோ!

------------------------------------------------------------------------------------------------

ஒரு பிற்சேர்க்கை!

காதல் வளர்சிதை மாற்றம்! - வவ்வால் 9.2% (11)


இந்த கவிதை தேன்கூட்டின் மாதாந்திர போட்டியில்(ஜூன்) கலந்துகொண்ட ஒன்று,அதிகம் அறிமுகம் இல்லாத எனது வலைப்பதிவையும் படித்து கவிதையை நேசிக்கும் 11 ஆத்மாக்கள் வாக்களித்துள்ளன,அவர்களுக்கு தெண்டனிட்டு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

எனது வலைப்பதிவு மறுமொழியிடப்பட்டவை என தமிழ்மணத்தின் முகப்பில் அடிக்கடி தோன்றி மின்னாது,ஏனெனில் நான் மட்டுறுத்தல் பயன்படுத்தவில்லை,அது வாசகர்களின் மனதை உறுத்தும், பின்னூட்டம் இட்டோமே அது எப்போது வரும் என காத்திருக்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.பின்னூட்டம் இட்டதும் அது உடனே தோன்றுவதை பார்த்து சிறிது மனம் ஆனந்திக்கும் வாசகர்களுக்கு அதனை ஏன் கெடுக்க வேண்டும். ஒரு சிறிய மன நிறைவு கிட்டும் அவர்களுக்கு. அது தான் என்னால் முடிந்த பதில் மரியாதை.

அப்படி இருந்தபோதிலும் 11 வாக்குகள் கிடைத்திருப்பதை எண்ணி ... எண்ணி(11 முறை எண்ணி) மனம் இரும்பூது எய்துகிறது.பேரில்லா உவப்பு அடைகிறது! வெற்றி தோல்விகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. மேலும் ஆக்கப்பூர்வமாக பின்னுட்டம் இட்ட அன்பர்களுக்கும் நன்றி! வெற்றிப்பெற்றோர்க்கு வாழ்த்துகள்!

Thursday, June 08, 2006

சாதனை இளைஞர் அப்துல் கலாம்!



இந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அதிபர் திரு."அவுல் பக்கீர் ஜெயினுலாபிதின் அப்துல் கலாம்" 30 நிமிடங்கள் பறந்து சாதனைப்படைத்துள்ளார்.யுத்த விமானத்தில் பறந்த முதலாவது இந்திய அதிபர் இவரே,இதற்கு முன் நீர் மூழ்கி கப்பலில் 3 மணி நேரம் பிரயாணம் செய்தும் சாதனை படைத்துள்ளார்! வித்தியாசமான ஏவுகனை விஞ்ஞானி நம் நாட்டின் அதிபராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே!

புனேயில் உள்ள இந்திய விமான படை விமான தளத்தில் இருந்து விங்க் கமாண்டர் அஜய் ரத்தோர் செலுத்த 30 நிமிடங்கள் மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் கலாம் பயணம் செய்த விமானம் பறந்துள்ளது.திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு 75 வயது ஆகிறது இந்த வயதில் இது ஒரு மகத்தான சாதனையே ,எனவே இளைஞர்கள் எத்தனை சாதிக்கலாம் என எண்ணிப்பார்க்க வேண்டும்! நமது அதிபரின் விருப்பமும் அதுவே இளைஞர்கள் அரிய சாகசம் நிகழ்த்த வேண்டும் ,உயர் தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என மக்களுக்கு குறிப்பாக இலைஞர்களுக்கு செய்தி விடுத்துள்ளார்!

திரு. அப்துல் கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல சிறந்த சிந்தனையாளரும் கூட அவரது அக்னி சிறகுகள்,இந்தியா விஷன் 2020 போன்ற நூல்கள் விற்பனையில் சாதனைப்படைத்தவை!

Monday, May 29, 2006

மெய் தேடல்!



நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில்

நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்

மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்


நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்

நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்

நித்திரையை தேடினேன் நீயில்லாமல்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடங்களில்

திக்கெட்டு திசையும் தேடினேன்

தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!

மீண்டும் துவங்கியது தேடல்

என்னுள்ளே எதையோ தேடினேன்

எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!



Sunday, May 28, 2006

பார்க்க...ரசிக்க

சூப்பர் ஸ்டார் தொண்டர் செல்வன் அவர்களுக்காக இந்த படங்கள்,பார்க்க...ரசிக்க










காத்திருத்தலே தொழிலாய்....




உயிர் பிரிந்த பின்னும்

சுவாசித்திருப்பேன் உன் நினைவில்!

உதிர்ந்த பின்னும்

மணம் வீசும் உதிரிப்பூக்களைப் போல !

கனவென்று தெரிந்த பின்னும்

கலையாதிருக்க வேண்டினேன்!

காற்றில் வரைந்த ஓவியத்தை

கண்களில் சுமந்து நின்றேன்!

ஓவியம் உயிராகி வருமென

காத்திருந்தேன்...

காத்திருத்தலே தொழிலாய்ப் போனது !

Wednesday, May 24, 2006

சிப்பிக்குள் முத்து!



இந்த கவிதையை முன்னரே நான் வெளியிட்டேன் ஆனால் ஏனோ எனது வலைபதிவில் தெரியவே இல்லை எனவே மீண்டும் போடுகிறேன்.


கடலை விட்டுப் பிரிந்தாலும்

கடலோசையை சங்கு துறப்பதில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

உன் நினைவுகள் அலையடிப்பது ஓய்வதில்லை!

கடல் நீரின் உப்பு போல கலந்து விட்ட

நினைவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை!

கரையைத் தொட்டு தொட்டு செல்லும் அலைகள்

கடலை விட்டு விலகி செல்வதில்லை

ஒவ்வொரு அலைகளும் மணல் வெளியில்

பதிந்து விட்ட கால் தடங்களை அழித்து சென்றாலும்

என் மன வெளியில் அழிவதில்லை உன் நினைவு தடங்கள்!

மனக்கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் முத்தென

உன் நினைவுகளை சுமந்து கொண்டு உறங்குகிறேன்!

விடியலை நோக்கி



இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்

இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?

யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்

சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!

உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என

இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

போய் வா தென்றலே...



போய் வா தென்றலே...

நீ பிறந்த இடம் பொதிகை என்றாலும்

புகுந்த இடம் என் மனம் அல்லவா

சிறைப் பிடிக்க சிட்டுக்குருவியல்ல தென்றல் நீ!

வலையில் வீழாமல் வானகமே தாயகமாய்

வலம் வரும் தென்றலே

வசந்தமாய் வாராய் என் நெஞ்சில் வீசிட

நித்தம் காத்திருப்பேன் நீ வரும் திசை நோக்கி!

Saturday, May 20, 2006

எதையும் நினைக்கவில்லை...



பிரிவென்று நினைக்கவில்லை பிரிந்த பின்னும்

வலி என்று நினைக்கவில்லை வலித்த பின்னும்

வாழ்க்கை என்று நினைக்கவில்லை தொலைத்த பின்னும்

உண்மை என்று நினைக்கவில்லை உதறிய பின்னும்

உயிர் என்று நினைக்கவில்லை இழந்த பின்னும்.

உறக்கம் என்று நினைக்கவில்லை உறங்கிய பின்னும்

விடியல் என்று நினைக்கவில்லை விடிந்த பின்னும்

மலர் என்று நினைக்கவில்லை மலர்ந்த பின்னும்

மனம் என்று நினைக்கவில்லை உடைந்த பின்னும்

தாகம் என்று நினைக்கவில்லை தவித்த பின்னும்

தீ என்று நினைக்கவில்லை தீண்டிய பின்னும்

தேவை என்று நினைக்கவில்லை இதயம் தொலைந்த பின்னும்

தேடல் என்று நினைக்கவில்லை தேடியலைந்த பின்னும்

எதையும் நினைக்கவில்லை என்னையே மறந்த பின்பு!

Thursday, May 18, 2006

என்னவானேன் நான்...

நீ பிரிந்த தருணம் முதல்...

கண்ணீர் இல்லா கண்கள் ஆனேன்

தண்ணீர் இல்லா தடாகம் ஆனேன்

உணர்வு இல்லா உருவம் ஆனேன்

வேர் இல்லா மரம் ஆனேன்

வேகம் இல்லா காற்று ஆனேன்

தோகை இல்லா மயில் ஆனேன்

தூக்கம் இல்லா துயரம் ஆனேன்

ராகம் இல்லா பாடல் ஆனேன்

மேகம் இல்லா வானம் ஆனேன்

நிலவு இல்லா இரவு ஆனேன்

நிச்சயமில்லா கனவு ஆனேன்

இத்தனையும் ஆன பின்னும்

இறவாது இருக்கின்றேன் மண்மீது

மீண்டும் சந்திப்போம் என்றாவது என்று!

Monday, May 15, 2006

பின்னூட்டம் குறித்தான வலைப்பதிவரின் மனோ நிலை!

தருமி என்பவரின் வலைப்பதிவில் "நாமும் தமிழும், ஆங்கிலமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைப் படித்தேன்,சரி பின்னூட்டம் இடலாம் என்று போனால் பெயர், மின்னஞ்சல்,வலை மனை முகவரி எல்லாம் கொடுத்தால் தன் பின்னூட்டம் ஏற்கப்படும் என்பது போல் ஒரு அமைப்பில் உள்ளது அவரது வலைப்பதிவு!

எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின, இவர் எதற்காக யார்ப் படிப்பதற்காக வலைப்பதிவு போடுகிறார்? இவரது கருத்துகள் அப்படி என்ன தனித்தன்மை வாய்ந்தது என்று மறு மொழி இட இத்தனை கட்டுப்பாடுகள்.எல்லாரும் பின்னூட்டம் இட அனுமதித்தால் ஆபாசமாக திட்டி சிலர் இடுகிறார்கள் அதை தவிர்க்க என்றால்.அதற்கு தானே கமெண்ட்ஸ் மாடரேஷன் உள்ளதே. அதனையும் மீறி ஆபாச பின்னூட்டம் வர வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதனை எளிதில் நீக்க முடியுமே.எனக்கு எதற்கு வீண் வேலை நான் இப்படி தான் செய்வேன் என்றால் அத்தனை பயம் இருப்பவர் ஏன் இங்கே வந்து அவர் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டும்.பேசாமல் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பாக பக்கத்து வீட்டுக்காரர் உடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாமே!

தருமி இப்போது வேண்டுமானால் நான்கு பேருக்கு நன்கு தெரிந்தவராக இருந்து தேடி வந்து சிலர் பின்னுட்டம் இட்டு செல்லலாம். இவரின் துவக்க காலத்தில் ஒரு பின்னூட்டமாவது வராதா என்று காத்திருந்தவராக தான் இருக்க வேண்டும்.

இதனை தருமி என்ற தனி நபரை குறிப்பிட்டு சொல்ல வரவில்லை.இங்கே வலைப்பதிவு செய்யும் பெரும்பாண்மை மக்களுக்கு இருக்கும் மனோ நிலையை ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டே சொல்கிறேன்.சரி நீ ஏன் அவசியம் பின்னூட்டம் இட்டு தான் ஆக வேண்டுமா. அப்படி மறு மொழி கூறி தான் ஆக வேண்டுமெனில் நீ தைரியமாக மின்னஞ்சல் முகவரி தர வேண்டியது தானே என்று கேட்கலாம்.ஒரு வலைப்பதிவைப் படித்து அதை எழுதியவர்க்கு மறு மொழி சொல்வது ஒரு ஊக்கம் அளிக்கும் சேவை.அதனை செய்ய முன் வருபவர்க்கு ஏன் கட்டுப்பாடுகள் என்பது தான் என் வினா? மின்னஞ்சல் முகவரி தர முடியவில்லை என்றால் வேறு வேலைப் பார்த்து கொண்டு போகலாமே என்றும் கேட்கலாம்.எல்லோர்ப் பார்வையிலும் படும் வண்ணம் தமிழ்மணம் போன்ற வலைப்பதிவு திரட்டியில் வெளியிட்டப் பின் மாற்று கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமையுண்டு.அது பாரப்பட்சம் இன்றி அளிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்து.

ஒரு வலைப்பதிவு துவக்க வங்கி கணக்கு எண் தர வேண்டும் என்று சொன்னால் எத்தனை பேர் முன் வருவார்கள்.இலவசம் என்பதால் தானே ஆள் ஆளுக்கு வந்து கருத்து கந்தசாமிகளாய் மாறி தங்கள் வெந்ததும் வேகாததுமான கருத்துகளை அள்ளி இறைக்கிறார்கள்.இல்லை எல்லா வலைப்பதிவும் ஒரு தேர்வு குழு பரிசீலித்து அதன் பின்னரே வெளியிடப்படும் என்றால் எத்தனை தேறும்? இணையத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல வாய்ப்பளிக்க தான் இலவசமாய் பிளாக்குகள் உள்ளது.அப்புறம் என்ன தனியே ஒரு கருத்து சொல்வதில் பாகுபாடு!

பின்னூட்டமாக சொல்ல நினைத்ததை இங்கே நானே ஒரு வலைப்பதிவாக வெளியிட்டுள்ளேன்.இது எந்த தனி நபரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது அல்ல.முதலில் தங்கள் எழுத்துகளை யாரேனும் படித்தால் போதும் என்று இருந்து காலப்போக்கில் வலைப்பதிவு வெளியிடுவோரிடம் ஏற்பட்டுள்ள மன மாற்றத்தை சுட்டிக் காட்டவே.எனது வலைப்பதிவில் மறுமொழியிட எந்த வகைக் கட்டுபாடும் விதிக்கவில்லை என்பதை கவணத்தில் கொள்ளவும்!


வணக்கம் தருமி!

//1. அங்கலாய்த்தல் - இதிலிருந்துதான் கலாய்த்தல் என்ற சொல் வந்திருக்குமோ? (எப்படி நமது ஆராய்ச்சி?)//

கலாய்த்தல் என்று சொல்வது நடைமுறையில் இருந்தாலும் .. சரியான சொற்பதம் கலாசுதல் தான்.இது ஒரு தூய தமிழ்ச்சொல்.சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அகராதில் உள்ளது.

"கலாசுதல் என்றால் உரக்க சத்தமிட்டு பேசுவது ,பெரும்பாலும் பொருள் அற்ற பேச்சு என்று போட்டுளார்கள். மிகவும் பொருத்தமான வார்த்தை தான்.சென்னையில் பெரும்பாலும் சாதாரண வாய் சண்டைக்கு கூட "போடாங்கோ டுபுக்கு தட்டுனா தாரந்துருவ... எங்க ஏரியா பக்கம் வந்துருவியா நீ மவனே செத்த" என்று "ஓவரா சவுண்டு" வேறு விடுவாங்க அதை நம்ம கைல ராங்க் காட்டினான் நல்ல கலாசிடேன்னு பெருமையா சொல்லிப்பாங்க! இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட விவாதத்திற்காக தேடி எடுத்தேன்.தற்போது தான் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன்.. நம்ம ஆராய்ச்சிய வெளிக்காட்டிக்க ஒரு வாய்ப்பா போச்சு (எப்படி நம்ம வெட்டி ஆராய்ச்சி!??)

Thursday, May 11, 2006

சோனியா இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி

சோனியா ரேபரேய்லி(உ.பி) தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி(உறுதி செய்ய பட்ட ஒன்று)

தேர்தல் வெற்றி

தேர்தல்2006 வெற்றி -மு.கருணநிதி(சேப்பாக்கம்),
நாகநாதன்(திருவல்லிகேணி),
கு.பிச்சாண்டி(திருவண்ணாமலை)

என் கனவும் நீயடி!



உன் நினைவு என்னுள் ஊர்கையில்

தேகம் எங்கும் தீயின் தீண்டல்கள்

தொலைந்து போன எனது நினைவுகளை

தேடிப் பார்த்து களைக்கிறேன்

தொலைவில் செல்லும் உனது நிழலை

தொடர்கிறேன் தொடாமலே!

இருளில் ஒளியை தேடினேன்

ஒளியில் இருளை காண்கிறேன் !

காலம் கடந்து நிற்கிறேன்

கரையில் அலையாய் அடிக்கிறேன்!

கடந்து விடவே துடிக்கிறேன் !

கடக்க மறந்து தவிக்கிறேன்!

கானல் நீரை குடிக்கிறேன்!

கண்கள் திறந்தே காண்கிறேன் கனவு

கலைந்த பின்னும் தொடருமென் கனவு!

என் கனவு என்ன தேடினேன்

என் கனவும் நீயென கண்டு கொண்டேனடி!

Wednesday, May 10, 2006

அந்தி மழை!



கோடை மழை அந்தியில் பொழிகிறது

வரண்ட நிலத்தில் நீர்த் தாரைகள்

ஓடி மறைகிறது புழுதி வாசனையை கிளப்பி!

வெளிறிய வானவில்லில் மிச்சமிருக்கும் வர்ணத்தை போல

என்னுள் ஒட்டிகிடக்கும் உன்னுடைய நினைவுகள்

முளை விடும் விதை என முகிழ்த்து

விருட்சம் என வளர்ந்து விட்டது

வானவில் மறையும் முன்னே!

விலகி சென்ற பிறகும் விலக மறுக்கும் நினைவுகள்

துடுப்பற்ற படகைப் போல

நீரோட்டத்தின் திசையில் செல்கிறது நதியில்!

நாணல்கள் மட்டும் கரையோரம்!

மீட்சி!


கனவு வெள்ளத்தில் மூழ்கி

ஸ்வாசம் இழந்தேன்!

உன் நினைவு துளிகளே

மீட்டெடுத்தது என் மூச்சை!

Friday, May 05, 2006

நீங்காத நினைவுகள்!

அன்பர்களே கவிதைக்கு பொய் அழகு இதை நான் கவிதை என்று சொல்வது உ(எ)னக்கு அழகானு கேட்காம ..திரைப்படம் பார்க்கும் போது வரும் பாடல் காட்சிகளுக்கு எல்லாம் கதாநாயகியின் நாபிகமல தரிசனத்தை தியாகம் செய்து புகை பிடிக்க போவது போல் போகாமல் தம் கட்டி படிக்கவும் இந்தக் கவிதையை!

நீங்காத நினைவுகள்!


சிலந்தி பின்னும் வலையென

என் மனகுகையெங்கும் நினைவு வலைகள்

முடிவற்று படர்கின்றது

முன்னிரவில் தேய்பிறை நிலவொளியில்

தேங்கிய மழை நீரில்

நான் கண்ட உன் பிம்பம்

நாள் தோறும் வளர் பிறையென வளர்கிறது

நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்துவிட்ட

நீங்காத நினைவுகள் முடிவற்று நீள்கிறது

தூக்கமற்ற இரவுகளின் நினைவோடை கனவுகளில்!

Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?

Wednesday, May 03, 2006

மழை மேகம்!


காரம் சாரமாக எழுத "மேட்டர்" ஒன்னும் சிக்க வில்லை(அரசியல் மட்டும் தான் சூடா இருக்கு அத தான் ஆள் ஆளுக்கு ஏற்கனவே கொத்து பரோட்டா போடுராங்களே அப்புறம் இந்த வவ்வால் எதுக்குன்றேன்!) அது வரைக்கும் சும்மா நேரம் போக மீண்டும் ஒரு கவித !

மழை மேகம்!

வானம் எங்கும் வெண்மேகங்கள்

என் தலைக்கு மேலே கடந்து செல்கின்றன

தினம் தோறும் மழை வருவதில்லை

வீதி எங்கும் பல வண்ண உடைகளில்

பெண்கள் மறைகிறார்கள்

என் பார்வையை விட்டு

மனதில் பதியவில்லை எவர் முகமும்!

மழைமேகம் வர கூடும்

மனதில் பதிந்த முகம் வருமா?

கோடை வெயிலில் ஆவியாகிவிட்டது என் வினா!

தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை



ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)

நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........

படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)


பிரிவும்...சந்திப்பும்

அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில்


அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்

ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ

அல்லது நீ யாரோ நான் யாரோ என்று

வேறு திசை நோக்கி பயணிப்போமா?

பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...

மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..

காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை

கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்

உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்

பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!

ஆப்கான் படு கொலை- சொல்பேச்சு கேளாமையின் விளைவே





ஆப்கானில், ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பொறியாளர் ஒருவரை தலிபான் தீவட்டிகள் தலை துண்டித்து கொன்று தஙகள் ரத்த வேட்கையை தீர்த்து கொண்டுள்ளார்கள்.இது ஒரு சோகம் என்றால் அந்த மாண்டு போன பொறியாளர் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் விசாக பட்டினதில் வளைத்து போட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்.அந்த பெண்ணை மணந்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே சாட்சியாக உள்ளது.தினத்தந்தி பாஷையில் சொல்வதானால் கள்ளக் காதலி ஆகிவிடுவார் அப்பெண்.

சட்ட ரீதியான மனைவிக்கு தான் அனைத்து பொருளாதார உதவிகளும் போய் சேரும்...இப்பெண்ணின் கதி என்ன (எந்த வெள்ளி திரையிலும் காண முடியாது இதன் கிளைமாக்சை)

என் மனதில் சில கேள்விகள் சுட்டெரிக்கின்றன........

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள் இது போன்று கடத்த பட்டனர் அப்போதே ஆப்கான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை செய்ய போக வேண்டாம் என அரசால் அறிவுறுத்த பட்டது ...அதை எல்லாம் காதில் வாங்காமல் செல்லும் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது ..கூடுதல் பணம் கிடைக்கும் எனில் நரகலையும் தின்ன போவார்களா...இவர்களுக்காக பரிதாப படுவதே கேலி கூத்தாகிறது.அறிவுரைகளை மதியாமல் செல்லும் இவர்களை என்னவென்பது?

ஒரு மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி இருக்கிறார் இதனால் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்
இப்படி பட்ட பணத்தாசை மிக்க ,வாழ்வியல் தர்மதிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க கூட மனம் விரும்ப மறுக்கின்றது.இதுபோன்ற படித்த முட்டாள்களை என்ன செய்வது ? இவர்களை நினைத்து இரக்க படுவதா எரிச்சல் படுவதா?(இதை படித்து என் மீது எரிச்சல் பட வேண்டாம் வெயில் காலம் பாருஙக! கொஞ்சம் கூலா இருங்க)

Tuesday, May 02, 2006

நானும் வந்துவிட்டேன்!

எல்லாம் பிலாக்...பிலாக்னு பினாத்துராங்களே அப்படி என்ன தான் இருக்குனு எட்டி பார்க்க வந்தேன் .தமிழ் வலை பதிவுகளை படித்த வரையில் எனக்கு தோன்றிய நிதர்சனம் என்னவென்றால் பெரும்பாலும் குழு மன பாண்மையோடு தான் அனேக வலை பதிவாளர்கள் செயல் படுவதாக எனது சிற்றறிவுக்கு எட்டியது ... சரி விடுரா விடுரா உனக்கும் ஒரு குழுவ செட் பண்ணிட்டா இந்த ஏக்கம் எல்லாம் போய்டும்னு தோனுது ... சீக்கிரமே நானும் ஒரு குழுவ எனக்குனு சேர்த்து கிட்டு மனம் வீசும் வலைப் பூக்களை என் பங்க்கு கொஞ்சம் நாறவைப்போம்னு ஒரு விபரீத ஆசை வந்து போச்சு (யாரோ வினாச காலெ விபரித புத்தினு சொல்ராங்க !) சரி வெகு விரைவில் கொஞ்சம் சரக்கு தேத்தி கிட்டு முடுக்கா வரேன் மக்களே! அது வரைக்கும் ஆசுவாச படுதிக்கோங்க என்னடா பிளாக்கு வந்த சோதனைனு.......... வருகிரேன் விரைவில்......