dotEPUB

Saturday, July 07, 2007

புறக்கணிப்பின் வலி

வெயிலில் நிற்கும்

மரங்கள் தரும்

நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!

நானோ நிழலை புறக்கணித்து

வெயிலில் நடக்கிறேன்,

எனக்கென துணையாய்

பின் தொடரும்

என் நிழலை புறக்கணிக்க

என்னாலாகாது!

எனக்கு தெரிந்த

புறக்கணிப்பின் வலி

என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!

பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!