Wednesday, February 27, 2013

பரிணாமம் சாத்தியமே- அறிவியல் சான்று.


(ம்ம்..இங்க வச்ச சப்ளாக்கட்டைய காணோமே, யாருப்பா எடுத்தா?)


ஏமக்குறைப்பு நோய் என தமிழில் அழைக்கப்படும் எய்ட்ஸ்(AIDS) நோய் HIV( Human Immunodeficiency Virus) என்ற வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.

HIV வைரசின் முதல் தொற்று தாக்குதல் மேற்கு ஆப்ரிக்க நாடான காங்கோ, கேமரூன் பகுதிகளில் இருந்தே துவங்கியது என அறியப்பட்டுள்ளது, சுமார் 1888 இலேயே முதல் தொற்று தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கணிக்கிறார்கள், ஆனால் 1927 இல் தான் இப்படி ஒரு நோய் உள்ளது என்றும் ,1980 இல் தான் இந்நோய்க்கு காரணம் HIV, வைரஸ் என்றும் கண்டறிந்தார்கள்.

HIV, the Human Immunodeficiency Virus, என்பது மனிதர்களிடம் முதலில் உருவாகவில்லை, ஆப்ரிக்க சிம்பன்சிகளில் ஒரு வகையான Pan troglodytes troglodytes என்ற குரங்கினத்திடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்கிறார்கள்.

சிம்பன்சி வகைக்குரங்கிடம் காணப்படும் வைரஸ் SIVs (simian immunodeficiency viruses) எனப்படும், இது மனிதர்களுக்கு எவ்வித தொற்றும் உண்டாக்காது, மேலும் அக்குரங்குகளுக்கும் எவ்வித நோயையும் உண்டாக்குவதில்லை, ஆனால் காலப்போக்கில் குரங்குகளின் உடலிலேயே வைரஸ்கள் மியுட்டேஷன் அடைந்து மனிதர்களுக்கும் தொற்றும் வண்ணம் மாறியிருக்க வேண்டும் எனவும், அப்படி மாற்றமடைந்த வைரஸ் தொற்று உள்ள குரங்குகளை வேட்டையாடி ,மாமிசம் உண்டப்போது வேட்டையாடியவர்களின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களில் சிம்பன்சிகுரங்கின் இரத்தம் பட்டு மியூட்டேஷன் அடைந்த SIVs (simian immunodeficiency viruses) மனிதர்களுக்கு தொற்றினை உண்டாக்கி இருக்கிறது.

தொற்று உருவாகும் வழிகள் என கீழ்க்கண்ட காரணங்களை சொல்கிறார்கள் ,

# சிம்பன்சி வகைக்குரங்குகளை வேட்டையாடிய பொழுது வேட்டைக்காரர்கள் உடலில் இருந்த காயம் மூலம் உள்நுழைதல்.

# காங்கோ நாட்டில் அக்காலத்தில் வாய் வழி மூலம் கொடுத்த போலியோ சொட்டு மருந்து சிம்பன்சி வகை குரங்கின் சிறுநீரகத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது,எனவே போலியோ சொட்டு மருந்து மூலம் பரவியது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனை போலியோ சொட்டு மருந்து தயாரித்த அமெரிக்காவை சேர்ந்த "the Wistar Institute in Philadelphia" நிறுவனம் மறுத்துவிட்டது , macaque monkey kidney cells மூலமே மருந்து தயாரிக்கப்பட்டது ,அவற்றுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என சொல்லிவிட்டார்கள்,ஆனாலும் இக்காரணம் இன்றும் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

# காங்கோ பெல்ஜியத்தின் காலனியாகவும் கேமரூன் ஜெர்மனியின்  காலனியாகவும் இருந்தது ,அப்பொழுது அங்கு மலிவாக ரத்தம் சேகரிக்கப்பட்டு ,தேவையான நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது, மேலும் சுத்திகரிக்கப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது ,இதனாலும் பரவியிருக்கலாம் என்கிறார்கள்.

# விபச்சாரம்,போதை பொருள் எல்லாம் சகஜமாக உலவிய பகுதி என்பதாலும் எளிதில் பரவியது, அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாக நிலவியதால் பாலிகேமி எனப்படும் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்ற நிலையும் நிலவியுள்ளதும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

# அமெரிக்காவின் சி.ஐ.ஏ நடத்திய பரிசோதனைகள் மூலமே ஹெச்.ஐ.வி வைரஸ் பரவியது என்ற கூற்றும் உள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்கள்,கருப்பின மக்களை அழிக்க செய்ததாக அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்களாம்.

மனித உடலில் தொற்று உருவாதல்:

ஹெச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் நுழைந்ததும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தாக்கும் என அறிவோம்,ஆனால் அவற்றால் வெள்ளை அணுக்களில் எளிதில் நுழைய முடியாது அதற்கு ஒரு நுழைவு வாயில் தேவை ,அவ்வாறு செயல்படுவது CCR5 (C-C chemokine receptor type 5)எனப்படும் ரிசெப்டார்கள் ஆகும்,இது ஒரு கிளைகோ புரோட்டின் ஆகும். இதன் பின்னர் ஹெச்.ஐவி வைரஸ் CD4 (cluster of differentiation 4)  என்ற மற்றொரு கிளைக்கோ புரொட்டின் ரிசெப்டாரை தாக்கி இணையும், இதன் மூலமே மனித செல்லின் டிஎன்.ஏ வை ஹெச்.ஐவி வைரஸ் சென்றடையும். மனித செல்லின் டி.என்.ஏவின் பிரதி எடுக்கும் அமைப்பை வைரசின் ஆர்.என்.ஏ ரிவர்ஸ் டிரான்ஸ்கிரைப்டேஸ் மூலம் ஆர்.என்.ஏ பிரதி எடுக்கப்பயன்ப்படுத்திக்கொள்ளும், அப்பொழுது தான் பல வைரஸ்கள் பெருக முடியும், ஹெச்.ஐ.வி வைரசால் ஒரு உயிருள்ள செல் இல்லாமல் தனித்து வாழ முடியாது.


CD4 (cluster of differentiation 4) இன் வேலை என்னவெனில்  ஏதேனும் நோய் கிருமி உடலில் நுழைந்துவிட்டால் ,அதனை எச்சரித்து நமது நோய் எதிர்ப்பு அமைப்பினை இயக்குவதாகும். இவ்வாறு CD4 (cluster of differentiation 4) அறிவித்ததும் CD8 என்ற இன்னொரு கிளைகோ புரோட்டின் நோய்க்கிருமியை கொல்ல தேவையான ஆண்டிஜனை உற்பத்தி செய்யும். ஹெச்.ஐ.வி வைரஸ் சிடி4 இனை செயல்பட விடாமல் செய்து விடுவதால் ,நோய் எதிர்ப்பு ஆண்டிஜனை சிடி8 உற்பத்தி செய்யாமல் போய்விடுகிறது ,இதனால் தான் நமது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது, இதனையே எயிட்ஸ் என்கிறோம். எயிட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை செயல்படாமல் செய்யும் ஒரு தொற்று எனவே எயிட்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான வியாதிகளும் வந்து இறக்க நேரிடும், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படாததால் எந்த மருந்தும் வேலை செய்யாமல் போய்விடும்.

(HIV ON HUMAN CELL-ELECTRON MICROSCOP IMAGE)

இயற்கையில் எதிர்ப்பு:

CCR5 (C-C chemokine receptor type 5) டெல்டா-32 என்ற இன்னொரு வகை அல்லீல் ரிசப்டார்கள் சிலருக்கு இருப்பதை கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பிய காக்கேசியன் வகை இனக்குழு மக்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு இத்தகைய மாற்று அல்லீல் ரிசெப்டார்கள் உள்ளதாம். அவர்கள் இயல்பிலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியுள்ளவர்கள் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

டெல்டா-32 வகை அல்லீல் ரெசப்டார்கள் ஹெச்.ஐ.வி வைரசினை நுழைய அனுமதிப்பதில்லையாம், எனவே வைரசால் மனித செல்லுடன் இணைய முடியாமல் அழிந்து விடுகின்றன.

இத்தகைய நோய் எதிர்ப்பு தன்மை உருவாக காரணம் ஆரம்ப நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் பிளேக் மற்றும் தட்டம்மை நோய்கள் பரவலாக பரவியது ,அப்பொழுது அதற்காக தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அவை CCR5 (C-C chemokine receptor type 5) ரிசப்டாரில் தற்செயலாக ஒரு மியுட்டேஷன் ஏற்படுத்தி டெல்டா-32 என்ற CCR5 (C-C chemokine receptor type 5) ரிசெப்டார்களை உருவாக்கி இருக்கலாம் என கணிக்கிறார்கள்.

இத்தகைய அல்லில்கள் இருப்பது ஹெச்.ஐவிக்கு முற்றிலும் பாதுகாப்பு எனவும் சொல்லிவிடமுடியாது ஆனால் எளிதில் நோய் தொற்றாமல் செய்கிறது என்கிறார்கள், எச்.ஐவி யால் பாதிக்கப்பட்டு கேன்சர் வந்தவர்களுக்கு டெல்டா-32 அல்லீல் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜையினை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை அளித்த பொழுது, ஹெச்.ஐ.வி வைரசின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டுள்ளதாம்,எனவே டெல்டா-32 உள்ளவர்களின் ஸ்டெம் செல் கொண்டு சிகிச்சை அளித்தால் ஹெ.எச்.வியை குணமாக்கலாம் என ஒரு ஆய்வு நடக்கிறது.

வைரசின் பரிணாம வளர்ச்சி:

ஆரம்பத்தில் ஏற்பட்ட வைரஸ் தொற்றுக்களை மனித நோய் எதிர்ப்பு சக்தி முறியடித்துள்ளது,ஆனால் தொடர்ந்து சிம்பன்சி வகைகளை வேட்டையாடும் பொழுது தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, SIVs (simian immunodeficiency viruses) மேலும் மியூட்டேஷன் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதர்களை தாக்கும் வைரசாக மாற்றமடைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் ஹெச்.ஐ.வியிலேயே இன்னொரு வகை ஹெச்.ஐ.வி-2 என உருவாகி இருப்பதையும் 1999 ஆம் ஆண்டு கண்டுப்பிடித்தார்கள். இவ்வைரஸ்  sooty mangabey (the White-collared monkey) என்ற வகை குரங்கின் SIVs (simian immunodeficiency viruses) மூலம் உருவான ஹெச்.ஐ.வி வைரஸ் எனவே இதனை ஹெச்.ஐ.வி-2 என வகைப்படுத்தினார்கள்.

ஹெச்.ஐ.வி-1 வைரஸே மிக அதிக தொற்றினை உருவாக்கியுள்ளது, ஹெச்.ஐ.வி-2 மிக குறைந்த அளவிலேயே தொற்றினை உருவாக்கியுள்ளதாகவும், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து புது வகை வைரசினையும் உருவாக்கின்றது எனவும் கண்டுப்பிடித்துள்ளார்கள்,இவ்வாறு செய்வதை viral sex" என்கிறார்கள்.

SURVIVAL OF THE FITTEST:

ஹெச்.ஐவி-1 வைரஸ் ஒரே நாளில் பல பில்லியன் எண்ணிக்கையில் பெருக வல்லவை ,இவ்வாறு பல்கி பெருகும் போது ,ஹெச்.ஐ.வியின் மரபியல் பொருளான ஆர்.என்.ஆ வும் பிரதி எடுக்கப்படும், இவ்வாறு அதி வேகமாக ஆர்.என்.ஏ மறு பதிப்பு  செய்கையில் ஆர்.என்.ஏவில் பல பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது,இதனால் பல புதிய வகை ஹெச்.ஐ.வி வைரஸ்கள் உருவாகின்றன ,அவற்றில் மனித உடலில் வாழ தகுதியுள்ளவை பிழைத்து ,மீண்டும் புதிய வைரஸ்களை உருவாக்கும்.

இதனை ஹெச்.ஐ.வி வைரசின் பரிணாம வளர்ச்சி என்கிறார்கள். உலகிலேயே அதி வேகமாக பரிணாம வளர்ச்சி அடையும் வைரசாக ஹெச்.ஐ.வி உள்ளது. இதனாலேயே ஹெச்.ஐ.வி தொற்றுக்கு உரிய மருந்தினை கண்டுப்பிடிக்க முடிவதில்லை.

ஒரு வகை மருந்தினை கொடுத்தால் அதனால் பெரும்பாலான வைரஸ்கள் அழிந்தாலும் சில மட்டும் தப்பிப்பிழைக்கின்றன, அவ்வாறு பிழைக்கும் வைரஸ்கள் அம்மருந்திற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக்கொள்கின்றன,பின்னர் சில நாட்களில் பல்கி பெருகி நோயை முற்ற வைக்கின்றன.

இது போன்ற  எதிர்ப்பு சக்தியை பூச்சிகளும் உருவாக்கிக்கொள்ள வல்லவை,இதனாலேயே பூச்சி மருந்துகளுக்கு பல பூச்சிகளும் கட்டுப்படாமல் விவசாயத்தில் பெரும் பாதிப்பு உண்டாகிறது, இவ்வாறு எதிர்ப்பு தன்மையை உருவாக்குவதும் பரிணாம வளர்ச்சியே.

எனவே ஹெச்.ஐவி தாக்கிய நோயாளிக்கு பலவகையான நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட்டாக கொடுக்க வேண்டும், பின்னர் தொடர்ந்து கண்காணித்து மேலும் சில நோய் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து புதிதாக உருவாகிய வைரஸ்களை கட்டுப்படுத்த வேண்டும்,ஆனால் முற்றிலும் அழிக்க முடியாது.

படம்-1



ஒரு வகை மருந்தில் முதல் வகை வைரஸ் மட்டுமே அழிக்கப்படுகிறது ,தப்பிய மற்ற வகை வைரஸ் அப்படியே உள்ளது.

படம்-2



மேலும் சில வகை மருந்தினை கலந்து கொடுக்கப்படும் பொழுது மற்ற வகையும் அழிகிறது ஆனால் சில தப்பி பிழைத்து உள்ளது.

வகைகள்:

இவ்வாறு தொடர்ந்து மனித உடலில் ஹெச்.ஐவி வைரஸ் பரிணாமம் அடைந்து புதிய வகையினை உருவாக்கி வருவதால், எயிட்சை கட்டுப்படுத்த பரிணாம உயிரியியலாலர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வரையில் கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள ஹெச்.ஐ.வி வைரஸ்களின் வகைகள்.



ஹெச்.ஐ.வி வைரஸ் ஒரு பொது மூதாதையரிடம் இருந்து உருவாகி பல்கி பெருகியதை விளக்கும் பரிணாம மரம்:



இக்காலத்தில் ஒரு செல் கொண்ட நுண்ணுயிரான வைரஸ் பல பரிணாம மாற்றங்கள் அடைவதை ஹெச்.ஐவி வைரைஸ் மூலம் தெளிவாக பார்த்தோம், அப்படி இருக்கையில் ஆதிகாலத்தில் முதல் உயிரினமாக ஒரு செல் உயிரி உருவாகி தன்னிச்சையான மியூட்டேஷன் மூலம் பல உயிர்களாக பல்கி பெருகி இருக்க ஏன் முடியாது?

மேலும் வைரஸ் என்பதே உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் இடைப்பட்ட பாலமாக விளங்கும் ஒரு உயிர் அமைப்பாகும், சாதகமற்ற சூழலில் படிகமாக ஆகிவிடும், அப்பொழுது அது உயிரற்றது போன்றதாகும், மீண்டும் சாதகமான சூழலில் உயிர்ப்பெற்று விடும்,எனவே தான் வைரசினை எளிதில் அழிக்க முடியாது என்கிறார்கள்.

பேக்ட்டீரியா, வைரஸ் போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை உயிர் தொழி நுட்ப வல்லுனர்கள் ஆய்வங்களில் நிறுவியுள்ளார்கள்,எனவே உயிர்களிடமும் அத்தகைய பரிணாம வளர்ச்சி சாத்தியமேயாகும் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதுமானது, பொது அறிவு இல்லாமல் இன்னமும் கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு என்பவர்கள் ஹெச்.ஐவி வைரசுடன் வாழ்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்லவும் :-))

தொடரும்(வவ்வால் நாடினால்)....
----------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://evolution.berkeley.edu/evolibrary/article/medicine_04

http://www.avert.org/origin-aids-hiv.htm

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(12)61052-6/fulltext

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
------------------------------

Saturday, February 16, 2013

விஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை!


(ஹி...ஹி விஷேஷரூபம் இது)

விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமிதமாக லோகநாயகர் சொன்னப்பொழுது ரொம்ப மிகையாக விதந்தோம்புகிறாரோ என நினைத்தேன், ஆனால் அத்தகைய புரிதல் கொண்டவர்களால் மட்டுமே படத்தினை சரியாக  என்ன மாதிரியான படமென(genre) புரிந்துக்கொள்ள முடியும் என்பது படம் பார்க்கும் போது தான் தெரிந்தது, பலரும் பலவகையான விமர்சனங்களை வைத்துவிட்டார்கள்,ஆனால் அவர்கள் யாருக்கும் லோகநாயகர் வரையறுத்த முன் தகுதிகள் இல்லையென நினைக்கிறேன்,யாருமே இதுவரையில் சரியாக இது என்ன வகையான படம் என்றே சொல்லாமல் , மேம்போக்கா ஆக்‌ஷன் திரில்லர், ஸ்பை மூவி என எழுதி ஆங்காங்கே,ஆப்கான்,அமெரிக்கா,RAW,FBI, என துப்பிவிட்டு சென்றுள்ளார்கள்.

உண்மையில் விஷ்வரூபம் ,அமெரிக்க ராம்போ, பிரிட்டீஷ் ஜேம்ஸ் பான்ட் டைப் உளவாளிப்படங்களை ஸ்பூஃப்(Spoof) செய்து எடுக்கப்பட்ட நகைச்சுவைப்படமாகும்,ஆனால் சரியான முறையில் ஸ்பூஃபிங் காட்சிகளை சித்தரிக்கத்தவறிவிட்டார், இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் "ஹாட் ஷாட்ஸ், ஜானி இங்க்லீஷ் " போன்ற உலகத்தர ஸ்பூஃப் படமாக வந்திருக்கும் :-))

படமாக்கலின் போது இயக்குனர் லோகநாயகருக்கு ஸ்பூஃபிங் டைப்பில் எடுப்பதா, இல்லை சீரியஸான ஆக்‌ஷன் திரில்லர் வகையில் எடுப்பதா என மனக்குழப்பம் இருந்திருக்கும் போல ,படம் நெடுக அக்குழப்பம் பலக்காட்சிகளில் தெரிகிறது.

ஒரு காட்சியினை சீரியசாக எடுத்துவிட்டு அடுத்தக்காட்சியினை ஸ்பூஃப் செய்துள்ளார்,சில கிரேஸித்தனமான கிச்சு கிச்சு மூட்டும் வசனங்கள் ஆங்காங்கே தூவியுள்ளார் அவ்வளவே. இதனால் படம் பார்ப்பவர்கள் ஸ்பூஃப் அல்லது சீரியஸ் ஆக்‌ஷன் படமா என வகைப்பிரிக்க தெரியாமல் ,திரைப்படத்துடன் ஒன்றவியலாமல் போய்விட்டது.ஒரு நடிகராக தனது பணியினை சிறப்பாக செய்துள்ளார் ,ஆனால் ஒரு படைப்பாளியாக ,கதை, திரைக்கதை,இயக்கம்,வசனம் என கோட்டை விட்டுவிட்டார் எனலாம்.

இரண்டுங்கெட்டான் வகையில் படம் இருப்பதால் நாமும் நடுவாந்திரமாக படத்தினை அலசுவோம், யாரும் ஸ்பூஃப் படத்தில் ஏன் லாஜிக் பார்க்கிறாய் என்றெல்லாம் கேட்கப்படாது :-))

ஏன் எனில் படம் பார்க்கும் பாமர ரசிகனைப்பார்த்து உனக்கு உலக அரசியல் தெரியுமா, பொது அறிவு இருக்கான்னு ஒரு படைப்பாளி கேள்விக்குள்ளாக்கும் போது ,என்னைப்போல எந்த ஒரு பாமர ரசிகனும்,திருப்பி அதெல்லாம் கேள்விக்கேட்டவருக்கும் இருக்கான்னு உரசிப்பார்க்கவே செய்வான்!

படம் பார்க்கும் போது ஒரு கேள்வி என்னுள் எழுந்ததை ஏனோ தவிர்க்கவே முடியவில்லை, இந்திய அரசு ஸ்தாபனமான RAW(Research and Analysis Wing)இன் உளவாளியான நாயகன் அமெரிக்காவிற்கு உதவ ஆஃப்கான் போகிறார், தலிபான்களை அழிக்க உதவுகிறார்,சரி போகட்டும் ஏதோ நேசக்கரம் நீட்டுதல் எனலாம்,அப்புறம் அதன் தொடர்ச்சியாக நியுயார்க்கில் வைக்க இருக்கும் டர்ட்டிபாமை எடுக்க அமெரிக்க அரசுக்கோ, அதன் உளவு நிறுவனங்களுக்கோ தெரியாமல் ஏன் முயல வேண்டும்,இன்ன மாதிரி திட்டம்னு சொன்னா அவங்க பார்த்துக்க மாட்டாங்களா, அதைவிட்டுவிட்டு இந்திய அரசு பணத்தின் செலவில் ரா ஏஜண்ட் ராப்பகலா மாங்கு மாங்கு என நியுயார்க்கில் உழைக்க வேண்டிய அளவுக்கு  ராவுக்கு  அமெரிக்க விசுவாசம் இருக்குமா?

ரா என்பது இந்தியாவுக்காக வேலை செய்யும் அரசு உளவு நிறுவனமா இல்லை ,அமெரிக்காவிற்காக வேலை செய்யும் BPO Type உளவு நிறுவனமா?

(அமெரிக்க விஸ்வாசரூபம்)

ஹாலிவுட் ஹீரோக்கள் கூட அவங்க நாட்டு தேசப்பற்றினை விளக்கும் படத்தில் நடிக்கும் போது தான் பின்னணியில் அமெரிக்க கொடியுடன் போஸ்டர் போட்டுக்குவாங்க,லோகநாயகர்  இந்திய அரசின் உளவாளியாக நடிக்கும் போது அமெரிக்க கொடிப்பின்னணியுடன் போஸ்டர் டிசைன் செய்ய என்ன தேவையோ?அப்போத்தான் கதை அமெரிக்காவில் நடக்குதுனு மக்களுக்கு புரியும் என்றால்,பாதிக்கதை ஆப்கானில் நடக்குது,எனவே ஆப்கான் கொடிப்பின்னணியிலும் ஒரு போஸ்டர் டிசைன் செய்திருக்க வேண்டாமோ :-))

அமெரிக்கர்களுக்கு பிடிச்சமாதிரி ஸ்டோரி போர்ட்,போர்ட்ஃபோலியோ ஆல்பம் தயார் செய்யணும் என ஆசைப்பட்டால் இப்படித்தான்  அமெரிக்க கொடிப்போட்டு,ரா வை அமெரிக்காவிற்கு வேலை செய்ய வைத்து ஆக வேண்டும் :-))

லோகநாயகருக்கு ஹாலிவுட் ஆசை பெருக்கெடுத்துவிட்டதால், ஒரு படத்தினை 95 கோடியில்??!! எடுத்து அமெரிக்காவுக்கு  ஒரே அடியாக  சமர்ப்பணம் என சொல்லிட்டாரோனு நினைக்க தோன்றுகிறது.

ஸ்டார்ட் மியுஜிக்.....

இவன் யார் என்று தெரிகிறதா,

ஹாலிவுட் ஆசை புரிகிறதா,

தடைகளை தாண்டியே ஹாலிவுட் செல்வான் :-))

ஓஹ்ஹஹ.. ஹோ...ஹோஹோ,,,ஓ....

OPIUM WAR:

விஷ்வரூபம் திரைப்படம் தனது கதைக்களமாக  ஆஃப்கான், "தலிபான் தீவிரவாதம்-அமெரிக்கா" என எடுத்துக்கொண்டாலும் ,அதன் உண்மையான அரசியலையோ,பின் புலத்தையொ சற்றும் தொட்டுக்கூட பார்க்கவில்லை, வெறுமனே தலிபான் பயங்கரவாதம் அதை தடுத்து உலகப்போலீஸ் அமெரிக்காவையே காப்பாற்றும் இந்திய சூப்பர் ஹீரோவை!!??ப்பற்றிய படமாக அமைந்துள்ளது எனலாம்.

இந்த அண்டர் கவர் ஏஜண்ட்/போலீஸ் கதை எல்லாம் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் காலம் தொட்ட பழமையான கதையாகும், ஒவ்வொரு ஹீரோவும் ஏதேனும் அண்டர் கவர் ஆபரேஷன் படத்தில் ஒரு முறையாவது நடித்திருப்பார்கள், முன்னர் லோகநாயகரே காக்கி சட்டை, விக்ரம் படங்களில் இதே வேலையை செய்துள்ளார், இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படத்தில் சலாமியாவில் செய்த சாகசத்தை ஆப்கன் - அமெரிக்கா கூட தொட்டுக்கொள்ள ஊறுகாயாக தலிபான் என திருப்பி சுட்ட தோசை தான் விஷ்வரூபம் :-))

ஆப்கனில் நடக்கும் ஆயுத போரட்டங்களின் உண்மையான பின்னணி என்னவெனப்பார்ப்போம்.

பொதுவாக அறியப்படுவது என்னவெனில் ஆஃப்கனை சோவியத் ஆக்ரமித்து இருந்தது ,அவர்களை விரட்ட அமெரிக்கா முஜாகிதின்களை வளர்த்து சண்டையிட்டது, சோவியத் வெளியேறிய பின் அமெரிக்கா, ஆஃப்கானை கைக்குள் வைத்துக்கொண்டதால் இன்றும் ஆயுதப்போராட்டம் தொடர்கிறது என்பதாகும்.

மேம்போக்காக இச்சம்பவங்கள் சரி என்றாலும் இதன் அடிப்படைக்காரணம் வேறு ஒன்றாகும்,

சரி சோவியத் வெளியேறிய பின் அமெரிக்காவிற்கு ஆஃப்கானில் என்ன வேலை? அங்கே இருக்க என்னக் காரணம்?

வளைகுடா நாடுகள் போன்று எண்ணெய் வளமும் இல்லையே ,பின் ஏன்?

எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்லும் வழித்தடத்தில் உள்ளது என்பார்கள்?

அது உண்மையா என்றால் இல்லை, ஏன் எனில் அமெரிக்காவிற்கு எண்ணெயோ,எரிவாயுவோ ஆப்கான் வழியாக கொண்டு செல்ல முடியாது, தேவையும் இல்லை.

ஆஃப்கான் வழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு ,எண்ணெய் என்பது இரானில் இருந்து வருவது மட்டுமே,இரான் அமெரிக்காவிற்கு விற்க விரும்புவதும் இல்லை அப்படியே செய்ய வேண்டுமானாலும் பெர்சியான் வளைகுடா மூலமே நிகழும் பின்னர் எப்படி ஆஃப்கான் எண்ணெய் எடுத்து செல்ல முக்கியம் என அமெரிக்கா கருத வேண்டும்?

ஆஃப்கான் வழியாக இரானின் எரிவாயு/எண்ணெய் எடுத்து செல்லப்பட வேண்டும் எனில் அது சோவியத்,சீனா,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சாத்தியம் ஆகும். ஆக மற்ற நாடுகளுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களை செலவு செய்து சண்டைப்போட அமெரிக்கா ஒன்றும் கேணையல்ல :-))

இன்னும் சொல்லப்போனால் சோவியத்,சீனா எல்லாம் அமெரிக்காவின் நட்பு வட்டமேயில்லை,இந்தியாவோ கழுவும் மீனில் நழுவும் மீன், நெருக்கம் எனப்பார்த்தாலும் சோவியத் பக்கமே,மேலும் இரானுடன் எண்ணெய் வர்த்தகம் இந்தியா செய்யக்கூடாது என அமெரிக்க அன்பாக மிரட்டுவதும் வழக்கம், ஏன் எனில்  இரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்துவிட்டு ,அணு தொழில்நுட்பம் இந்தியா அளித்துவிடும் என்ற அச்சமேயாகும்.

எனவே  ஆஃப்கானில் தலிபான்கள் இருந்தாலே இரானின் எண்ணெய் வர்த்தக வழி தடைப்படும் என்ற நிலையில், அமெரிக்கா எண்ணெய் வர்த்தக வழிக்காக பெரும் சண்டையிடுகிறது என்பதில் வலுவான காரணங்களேயில்லை.உண்மையில் அங்கிருந்து கொண்டு இரானின் எண்ணெய் வளம் வியாபாரம் ஆகாமால் தடுக்கும் வேலையை தான் அமெரிக்கா செய்கிறது.

பின் ஏன் என்றால் ,போதைப்பொருள் வருமானமாகும், எண்ணெய்ப்பணம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிய வருமானம் அளிக்கக்கூடியது ஓபியம் மூலம் வரும் வருமானம்.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்,

1950 களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய போதை உற்பத்தி மையம் தென்கிழக்கு ஆசிய நாடுகளான, வியட்நாம், பர்மா,தாய்லாந்து,லாவோஸ் ஆகியனவாகும், இப்பிரதேசத்தினை கோல்டன் டிரையாங்கில் என்பார்கள். வியட்நாம்,லாவோசில் அமெரிக்கா போர்ப்புரிய ஒருக்காரணமே இப்போதை மருந்து வியாபாரப்பணம் என சொல்கிறார்கள்.

CIA பின்னிருந்து போதை மாபியாக்களை கட்டுப்படுத்தியது, உலகம் முழுக்க எவ்வளவு போதை மருந்து சப்ளை ஆக வேண்டும் என்பதையே நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கியது என பல போர் மற்றும் போதைமருந்து ஆய்வு எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

இதனை லேசாக டான்களைப்பற்றிய எனது பழையப்பதிவில் சொல்லியிருப்பேன். CIA தனது சொந்தக்கட்டுப்பாட்டில் கார்கோ விமான சேவையையே நடத்தி ,போதைப்பொருளை கோல்டன் டிரையாங்கிளில் இருந்து கொண்டு சென்றது என்றால் ,போதைமருந்து வியாபாரத்தின் வருமான அளவை ,முக்கியத்துவத்தினை புரிந்துக்கொள்ளலாம்.

இப்போ ஆஃப்கான் எப்படி போதை வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது எனப்பார்ப்போம், கோல்டன் டிரையாங்கிலை அமெரிக்கா கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போல, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சோவியத் யூனியன் கேஜிபி மூலம் கோல்டன் கிரெசெண்ட் எனப்படும் இரான்,ஆப்கான்,பாகிஸ்தான் பகுதிகளை கையகப்படுத்தி, போதை மருந்து வியாபாரத்தினை கட்டுக்குள் வைத்திருந்தது.

Hezb-i-Islami என்ற முஜாகிதின் இயக்கதின் தலைவர் "Gulbuddin Hekmatyar" மூலம் சோவியத் தனது செயல்ப்பாடுகளை செய்து வந்தது,எனவே அவர்களை ரெட் ஆர்மி என்பார்கள். ஆப்கானின் முக்கியமான ஓப்பியம் விளைச்சல் பகுதியான Helmand Valley ரெட் ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

என்ன கொடுமைய்யா இது பெரிய பெரிய நாடுகள் எல்லாம் போதை மருந்துக்கா அரசியல் செய்தன என நினைக்கலாம், ஆனால் உண்மை இது தான், அப்பெரிய நாடுகளின் உளவுத்துறைகளுக்கு பல்வேறு ராணுவ நடவடிக்கைகள்,இன்ன பிற அரசியல் வேலைகள் செய்ய ஆயுதம்,பணம் தேவை எனவே இத்தகைய வேலைகளை செய்துவந்துள்ளன. உளவுத்துறைகள் மட்டுமே செய்துவிட முடியுமா, அந்நாட்டு தலைவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாங்களா எனக்கேட்டால் ,அதெல்லாம் சர்வதேச ரகசியம் :-))



ஏதோ ஒரு அரசியல், ஆனால் 1950களில் கோல்டன் கிரெசெண்ட் சோவியத் கட்டுப்பாட்டுப்பகுதி, கோல்டன் டிரையாங்கில் அமெரிக்க கட்டுப்பாட்டுப்பகுதி எனப்புரிந்துக்கொண்டால் போதும்.

கோல்டன் டிரையாங்கில் பகுதியில் அமெரிக்காவிற்கு பலப்பிரச்சினைகள் மண்டையிடிக்கொடுத்த நிலையில் மாற்று இடம் தேடிய சூழலில் வியட்நாம் சண்டைக்கு பிறகு கோல்டன் டிரையாங்கிளில் அமெரிக்க கட்டுப்பாடு பெரிதும் தளர்ந்தப்போன சூழலில் ,அவர்கள் கண்ணை உறுத்தியது தான் சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த ஆஃப்கனை உள்ளடக்கிய கோல்டன் கிரசென்ட் பகுதி, நாம இந்த அல்லோகல்ல படுகிறோம் பங்காளி சோவியத் சத்தம் போடாமல் ஜமாய்க்கிறானே என்ற கடுப்பில் ஆஃப்கானில் அரசியலை துவங்கியது.

1960 -70 காலக்கட்டத்தில் ஆஃப்கன் முஜாகிதினில் தனக்கு என ஒரு பிரிவினை உருவாக்கிக்கொண்டு சோவியத்தினை எதிர்க்க வைத்தது. Mullah Nasim Akhundzada என்பவர் தலைமையில் ஹெமாண்ட் வேலி குழு என ஒன்று உருவாகி ரெட் ஆர்மியை விரட்டியடித்தது. அப்போ போராளியாக உருவாக்கப்பட்டவர் தான் முகமது ஓமர் , சோவியத் சிதைவுண்டப்பின் தானே வெளியேறிவிடவே, ஷேக் நஜிமுல்லா தலைமையில் ஒரு அரசை உருவாக்கி அமர்த்தியது அமெரிக்கா.

இடைப்பட்டக்காலத்தில் ஓமர் குண்டடிப்பட்டு ,பாகிஸ்தான் எல்லையில் சிகிச்சைப்பெற்று ,பின்னர் அங்கேயுள்ள மதாரசாவில் மார்க்கக்கல்வி பயின்று அங்கேயே மார்க்கப்பணியில் ஈடுபட்டார், அதனால் தான் முல்லா என அழைக்கப்பட்டார்.

அக்காலக்கட்டத்தில் ஆப்கானில் ஆட்சிப்புரிந்த ஷேக் நஜிமுல்லா ஷா, மக்களை சரியாக கவனிக்கவில்லை, ஊழல் பெருகி,பொருளாதாரம் சரிந்து அன்றாட வாழ்வு பெரும் சிக்கலாகிய சூழலில் ,மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப்போராட துவங்கினர் , அட இவனுங்க எதாவது செய்வானுங்கன்னு பார்த்தால் இன்னும் மோசமாக்கிட்டாங்களேனு முல்லாவாகிவிட்ட ஓமர் மீண்டும் ஆஃப்கானுக்கு வந்து சுமார் 60 நபர்களுடன் தலிபான் என்ற அமைப்பை உருவாக்குகினார். தலிபான் என்றால் பஷ்தூனில் "மாணவன்" என்று பெயர்.

பின்னர்ப்படிப்படியாக போராடி ,ஷேக் நஜிமுல்லாவை தொறத்திவிட்டு ,முல்லா முகமது ஓமர் ஆட்சியையே பிடித்து விடுகிறார், ஆனால் அதிபர் என சொல்லாமல் "ஸ்பிரிச்சுவல் ஹெட்" ஆக  Commander of the Faithful of the Islamic Emirate of Afghanistan என ஆட்சியும் செய்தார்.

அக்காலத்தில் பாகிஸ்தான்,ஈரான்,சவுதி,ஐக்கிய அரபிய எமிரேட்ஸ், இன்னும் சில நாடுகள், முல்லா முகமது ஓமரை  ஒரு அதிபராக அங்கிகரித்தன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி.814 நேபாளில் இருந்து காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது ஆப்கானில் அதிபராக இருந்தது முல்லா ஓமர் தான்.



அப்போது பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை ஆப்கானுக்கு அனுப்பி பேச்சுவார்த்தைக்கு தாலிபன்களை மீடியேட்டராகக்கொண்டு நடத்திய பேரத்திற்கு பின் இந்திய சிறையில் இருந்த Maulana Masood Azhar, Sheikh Omar and Mushtaq Zargar என்ற மூன்று பயங்கரவாதிகளை விடுதலை செய்த பின்னர் விமானம் மற்றும் பயணிகள் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தின் போது ரூபின் கத்யால் என்ற இந்தியப்பயணி விமானக்கடத்தல்கார்களால் குத்திக்கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஒசாம பின்லேடனுக்கே ஆஃப்கானில் அடைக்கலம் கொடுத்து, அல்கைதா மற்றும் தலிபான்கள் பெரிய அளவில் போராட பின் புலமே முல்லா ஓமர் தான், அவர் தான் ஆப்கானில் கிங்க்,ஓசாமா அல்ல அதனால் தான் ஓசாமா பிடிபட்ட பின்னரும் முல்லா ஓமரால் இன்னும் தப்பிப்பிழைக்க முடிகிறது.ஆனால் திரைப்படத்தில் ஓசாமாவின் ஒரு அல்லக்கை ரேஞ்சில் ஓமரைக் காட்டியிருப்பார்கள்.

அமெரிக்க நேட்டோ கூட்டுப்படையினர் தலிபான்களை தலைமறைவாக தொறத்தும் முன் வரையில் ஓபியம் உற்பத்தி மற்றும் வியாபாரத்தினை தலிபான்கள் கையில் வைத்திருந்தார்கள், 10 சதவீத விற்பனை வரி செலுத்திவிட்டு யார் வேண்டுமானாலும் ஓபியம் பயிரிடலாம், பின்னர் அவை அறுவடை செய்யப்பட்டு , எல்லைக்கடந்து கொண்டு செல்வது, வியாபாரம் எல்லாம் தலிபான்கள் மூலம் நடக்கும்.

இப்பணம் கொண்டே ஆயுதங்கள் வாங்கப்பட்டு போரிட்டார்கள். ஆஃப்கானில் மட்டும் சுமார் 2-3 பில்லியன் டாலர் மதிப்பில் ஓபியம் உற்பத்தியாகும்,ஆனால் அதன் சர்வதேச மதிப்பு சுமார் 180 பில்லியன் டாலர்கள். வழக்கம் போல உற்பத்தி செய்பவனுக்கு மிக குறைவான லாபமே.

ஓபியம்:




Papaver somniferum எனப்படும் பாப்பி (கசகசா செடி)செடியின் முதிராத காயின் மீது சில வெட்டுக்களை கீறிவிட்டால் வடியும் பால் போன்ற திரவத்தினை lachryma papaveris- பாப்பியின் கண்ணீர் என்பார்கள்,இதனை உலரவைத்தால் கிடைப்பது பழுப்பு நிற ஓபியம் ஆகும்.

இம்முறையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 4-5 கிலோ ஓப்பியம் மட்டுமே கிடைக்கும், இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஓபியம் மிக தரமானது.

இதன் பின்னர் பாப்பி பாட், தண்டு என அனைத்தையும் அமிலத்தில் கறைத்தும் ஓபியம் உற்பத்தி செய்யப்படும், இதனை பல முறை சுத்திகரித்தால் மட்டுமே சுமார் 50%  வீரியமுள்ள தூய ஓப்பியம் கிடைக்கும், பலரும் பல வகையில் ஓப்பியம் தயாரிப்பதாலும், பல வகை தரத்தில் ஓபியம் கிடைக்கும், ஆனால் சந்தையில் நுகர்வோருக்கு பெரும்பாலும் கலப்பட ஓபியம் தான் கிடைக்கும்,அதில் சுமார் 10% ஓபியம் மற்றதெல்லாம் தாவரக்கழிவு, விலங்குகளின் சாணியாகும் :-))

இன்றைய தேதியில் ஆஃப்கானில் இருந்து உலகத்தேவைக்கான அளவில் 80-90% ஓபீயம் கிடைக்கிறது என ஐக்கியநாடுகளின் போதை மருந்து மற்றும் குற்றவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.


(ஓபியம் பயணிக்கும் பாதை)

ஓப்பியம் என்பது பல மார்பைன் வகை போதைப்பொருள் மற்றும் மருந்து தயாரிக்க மூலப்பொருளாகும், அதன் வடிவம், தூய்மை அதிகரிக்க அதிகரிக்க விலை மிக உயரும்.

ஒரு கிலோ ஓப்பியத்தில் இருந்து 10 % ஹெராயின் உற்பத்தி செய்யலாம், 10%= 100 கிராம், ஒரு கிலோ ஓப்பியத்தின் விலையே சுமார் 1000-1500 டாலர்களே

ஆனால் ஒரு கிராம் 50% தூய  ஹெராயின் விலை சுமார் 150 டாலர்கள்,

அப்படி எனில் 100 கிராம் ஹெராயின் விலை 150,000 டாலர்கள்,ஒரு கிலோ ஒப்பியத்தின் மதிப்பை விட 100 மடங்கு கூடுதலாகிவிடுகிறது.எனவே பெட்ரோலிய, ஆயுத வியாபாரங்களுக்கு அடுத்து அதிக லாபம் தரக்கூடிய ஒரு வியாபாரம் ,அதுவும் மிக குறைவான விலைக்கு வாங்கி ,சர்வதேச சந்தையில் 100 மடங்கு விலையில் விற்கலாம்.

அமெரிக்க நேட்டோ படைகள் பெருமளவு ஆஃப்கானை கைப்பற்றிய பின்னரும் எப்படி இவ்வளவு உற்பத்தியாக முடியும் என்றால்  மேற்சொன்னக்காரணமே, அமெரிக்காவின் ஆசையே அதானே அப்புறம் உற்பத்தியாகாமல் என்ன செய்யும்?

(நேட்டோ டாங்க் ஓபியம் வயலில் ரோந்து செல்கிறது)

அமெரிக்கா ஆஃப்கானில் நுழைந்தவுடன் ஓப்பியம் பயிரிட்டவர்களை அழைத்து உங்கள் ஓபியம் பயிரை அழிக்க மாட்டோம், இன்னும் நிறைய பயிரிடுங்கள், நாங்கள் பாதுகாப்புக்கொடுக்கிறோம் என சொல்லியிருக்கிறது.மேலும் அடிக்கடி வானொலி மூலம் ஓப்பியம் பயிரிடுங்கள் வளமாக வாழுங்கள் என வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்கள் :-))

தலிபான்கள் கையில் இருந்த ஓபியம் வியாபாரம் இப்பொழுது அமெரிக்க ஆதரவுடன் நடக்கிறது, இதனால் 2001 இல் இருந்ததை விட 5 மடங்கு அதிக ஓபியம் ஆப்கானில் உற்பத்தியாகின்றதாம்,இதனையும் சொல்வது ஐக்கியநாடுகளின் அறிக்கை :-))

அமெரிக்க நுழைவுக்கு பின்னர் ஓபியம் உற்பத்தி அதிகம் ஆகி இருப்பதை வைத்து தான் சர்வதேச ஊடகங்கள் அமெரிக்காவின் பின்னணியில்லாமல் இது சாத்தியமில்லை என ஆய்வு செய்து எழுதியுள்ளன.

இப்பொழுது தலிபான்கள் அமெரிக்க ஆதரவு ஓபியம் வியாபாரத்திற்கு பத்வா விதித்து அழிக்கிறார்கள், அவர்களுக்கு வரிக்கட்டும் ஓப்பியம் விவசாயிகளை காப்பாற்றுகிறார்கள் அதே போல அமெரிக்கா செய்கிறது. இப்படித்தான் அங்கு சண்டை முடிவில்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

//"Respected people of Helmand. The soldiers of ISAF and the Afghan national army do not destroy poppy fields," it said. "They know that many people of Afghanistan have no choice but to grow poppy. ISAF and the Afghan national army do not want to stop people from earning their livelihoods."

The message was drafted by British officers and carried on two local stations in Afghanistan's largest province. It infuriated senior Afghan officials - including the president, Hamid Karzai - who demanded an explanation. The Afghan government has been under intense western pressure to rein in the burgeoning drugs trade. Opium cultivation soared 59% last year, earning local traffickers £1.2bn. The spike was concentrated in Helmand.//

link:

http://www.guardian.co.uk/world/2007/apr/27/afghanistan.declanwalsh


2001 இல் தலிபான்கள் விரட்டப்பட்டு ,ஹமீத் கர்சாய் தலைமையில் ஒரு அரசினை நேட்டோ படைகள் மூலம் அமெரிக்கா நிறுவியது, அப்பொழுது 2001 இல் தலிபான்கள் முந்தைய காலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் 4500 டன்கள் ஓப்பியம் நேட்டோ படைகள் வசம் சிக்கியது,பெயருக்கு கொஞ்சம் அழித்துவிட்டு பெரும்பகுதியை நேட்டோ ராணுவம் அமுக்கிவிட்டது என புலனாய்வுப்பத்திரிக்கைள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கொண்டு ஓப்பியம் விளைந்தால் நேட்டோ ராணுவமே பலனடையும் என தலிபான்கள் 2001ஆம் ஆண்டில் ஓப்பியத்துக்கு தடை விதித்ததால் ஓப்பியம் உற்பத்தி வெகுவாக ஆப்கானில் குறைந்தது.

படம்:

ஆனால் அதன் பின்னர் ஆண்டு தோறும் ஓப்பியம் உற்பத்தி அதிகரிக்கவே செய்தது, காரணம் அமெரிக்க நேட்டோ படை பல குழுக்களை உருவாக்கி ஓப்பியம் பயிரிட ஊக்குவித்ததே.ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் போதைப்பொருட்களுக்கு எதிராக போராடி வருவதாக செய்திகள் பரப்பி வந்தாலும் , உற்பத்தி என்னமோ குறையவேயில்லை என்பதை நியுயார்க் டைம்ஸ் மோப்பம் பிடித்து போதைமருந்து வியாபாரத்தின் பின்னால் ஹமித் ஹர்சாயின் சகோதரர் "அஹ்மத் வாலி ஹர்சாய்" மற்றும் அவருக்கு பின்னால் CIA உள்ளதாகவும் கட்டுரை வெளியிட்டது.

செய்தி:

//KABUL, Afghanistan — Ahmed Wali Karzai, the brother of the Afghan president and a suspected player in the country’s booming illegal opium trade, gets regular payments from the Central Intelligence Agency, and has for much of the past eight years, according to current and former American officials.//

http://www.nytimes.com/2009/10/28/world/asia/28intel.html?_r=2&

ஆப்கானில் இருந்து சரக்கு யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் கொண்டு சேர்க்க வேண்டிய வேலை அஹ்மத் ஹர்சாயுடையது இதற்காக சிஐஏ சம்பளமும் அவருக்கு கொடுத்துள்ளது ,என நியுயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

படத்திலும் தவ்பீக் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் எளிய விவசாயின் அன்பளிப்பு என ஓபியம் கொடுக்கும், ஆப்கானில் விவசாயம் என்றால் ஓபியம் பயிரிடுதலே,மேலும் ஓபிய வியாபாரி தான் பணம் கொடுக்கிறார் என ஓமர் பேசும் காட்சியும் உண்டு,ஆனால் கொஞ்சம் மிகையாக அல்லா கொடுக்கிறது தான் இந்த தவ்பீக் கொடுப்பது என ஒரு வசனம் வேறு பேசுவார், என்ன கொடுமை சார் இது ,இப்படி சொல்வது போதை பொருள் விற்பது அல்லாவின் ஆசியுடன் செய்வதாக ஆகாதா? மேலும் அல்லாவுக்கு இணை வைத்து தவ்பீக்கை உயர்வாக சொல்வது போலவும் இருக்கே :-))



தவ்பீக் விருந்து கொடுக்கும் வீட்டுக்கு செல்லும் வழியில் சில் அவுட்டில் ரோஜா தோட்டம் போல காட்டியிருப்பது ஓபியம் வயல்களே, ஓப்பியம் செடி தொலைவில் இருந்து பார்க்க ரோஜா போலவே இருக்கும். ஓபியம் வயலை தெளிவாக படம் எடுக்க வாய்ப்பில்லை என்பதால் ரோஜா தோட்டத்தினை சில் அவுட்டில் காட்டியிருக்கவும் வாய்ப்புள்ளது.

ஆப்கானில் அமைதியற்ற சூழல் நிலவ உண்மையான காரணம் என்னவென இப்பொழுது புரிந்திருக்கும், இவ்வுண்மையை பற்றி திரைப்படம் சிறிதும் பேசாமல் ,ஆஃப்கானில் ஓபிய வியாபாரத்தினை தலிபான்கள் மட்டுமே செய்வதாக காட்டியிருப்பார்.

# லோகநாயகர் அறிமுகக்காட்சியில் கதக் ஆடுவதை அனேகம் பேர் சிலாகித்து என்ன நளினம் என விதந்தொம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஒரு திரைப்பட நடனமாக எளிமையாக ஆடுவதாக நடித்திருக்கிறார் என்று மட்டுமே சொல்லலாம், அதுவும் நாட்டியம் சொல்லித்தரும் குருவும் கேமராப்பார்த்து அபிநயம் பிடிப்பார், பின்னால் ஆடுபவர்களும் கேமிராவை நோக்கி தான் ஆடுவார்கள், அப்படினா குரு என்ன அபிநயம் காட்டினார்னு மாணவிகள் எப்படி முதுகைப்பார்த்து  கற்றுக்கொள்வார்கள்?.

ரொம்ப சினிமாத்தனமான கேமிராக்கோணம் அது, வழக்கமா ஹீரோ ஆடியன்ஸ் பார்த்து "மெசேஜ் சொல்ல",.பஞ்ச் டயலாக் சொல்ல பயன்ப்படுத்தும் கேமிராக்கோணம் இது. இப்படிக்காட்டினால் தான் ஆடும் அழகான பொண்ணுங்க முகமும்,ஹீரோ முகமும் ஆடியன்ஸ் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்,ஆனால் உலகத்தரமான படத்தில இப்படிலாம் ஆர்ட்டிபிசியலா மசாலப்படங்களை போலவே கேமிராக்கோணங்களை வைக்கலாமா :-))

இதை விட இன்னொன்று என்னனா, நாயகர் ஒரு அபிநயம் முடிச்சு சிருங்கார பாவம் காட்டிட்டு இருப்பார், பின்னணி நாட்டியத்தாரகைகள் பூ எடுத்து போட்டு ,ஒரு சுத்து சுத்தி வேற என்னமோ ஆடிட்டு இருப்பாங்க , குரு ஆடுறாப்போல ஆட வேணாமோ :-))

# ஒரு பிரைவேட் டிடெக்டிக் பின்னாடி வர்ரான்னு தெரியுது,ஆனால் அதே வேர்ஹவுஸ் வரைக்கும் ஏன் போகனும் ,அம்மாம் பெரிய ஒளவாளிக்கு தெரிய வேண்டாமோ, அதை விட காமெடி, மாமா பின்னடியே தடியன் வரான்  என்ன செய்யன்னு அப்பாவியாக்கேட்பார், முட்டாள் ஓடுனு வேற இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பார் சேகர் கபூர், இம்புட்டு தத்தியாவா ரா ஏஜண்ட் இருப்பார், அப்பாவி வேடம் தான் போட்டு இருக்காரே ஒழிய கதைப்படி உண்மையில் அப்பாவியில்லை தானே ,ஒரு வேளை பாத்திரத்தோட ஒன்றிப்போய் விஷ்வநாத்தாக இருக்கும் போது முழுக்க தத்தியா இருக்கணும்னு நினைச்சுட்டாரா?

# நிருபமா(பூஜா)வின் ஆண் நண்பன் தீபக்குடன் வந்து நாயகரை விசாரணை செய்யும் காட்சியில் , ஃபரூக் என்பவருக்கு அழைப்பு விடுத்து அவர்கள் வரும் வரையில் ரா ஏஜண்ட் தேமே என இருப்பது ஏனோ?  இடைப்பட்டக்காலத்தில் ஏதேனும் செய்து தப்பியிருக்கலாம்.

ஃபரூக் குழுவினர் வந்தால் ஏதேனும் உண்மைக்கண்டுப்பிடிக்கலாம் என சும்மா இருந்தார் என்றால், அவர்கள் இருப்பிடம் எல்லாம் முன்னரே தெரியும் எனவே அங்கேயே போய் முன்னரே பிடித்து விசாரித்து இருக்கலாமே?

ஒரு வேளை வந்த குழு ,கண்டதும் சுட்டுக்கதையை முடித்து இருந்தால் என்னாவது? நமக்கு தெரியும் இது தமிழ்ப்படம், ஹீரோவை அப்படிலாம் பொட்டுனு கொன்றுட மாட்டாங்கன்னு ஆனால் உண்மையான சம்பவம் எனில் ,தீவிரவாத குழுவிடம் மாட்டினால் ,கதம்,கதம் தானே :-))

தமிழ் சினிமாவில் என்றில்லை உலக அளவில் எல்லா ஆக்‌ஷன் படங்களிலும் ,மற்றவர்களை பொட்டுனு போட்டு தள்ளும் வில்லன் ஹீரோவை மட்டும் கொல்லாமல் கட்டி வைத்து தனது சொந்தக்கதை,எதிர்கால திட்டம் என விலாவாரியாக  உலகத்து கதையை எல்லாம் பேசிட்டு, அப்பவும் கொல்லாமல் , 24 மணிநேரத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் வெடிக்கிறமாதிரி ஒரு சின்ன வெடிக்குண்டை,அதுவும் நல்லா டைம் தெரியிறாப்போல டைமருடன் செட் செய்து காலுக்கு அடியில் வச்சுட்டு ,கையை,காலை கட்டிப்போட்டுவிட்டு ,குட் பை சொல்லிட்டு போவது தான் வழக்கமாக இருக்கிறது :-))

அப்படிக்கட்டிப்போடும் போது தனியாக்கட்டிப்போடவே மாட்டாங்க கூட ஒரு பொண்ணையும் சேர்த்து கட்டிப்போடுவாங்க, போற வரைக்கும் பேச்சுத்தொணைக்கு போல :-))

ஹீரோ  வழக்கம் போல குண்டு வெடிக்க ஒக்கே ஒக்க செகண்ட் இருக்கும் போது ,குண்டை செயலிழக்க செய்து தப்பிச்சென்று, டேக் ஆஃப் ஆகும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ தாவிப்பிடிச்சு சண்டைப்போட்டு வில்லனை கொன்றொழிப்பார் :-))

அதைப்போலவே இப்படத்திலும் கட்டிப்போட்டு அடிச்சப்பிறகு ,ஹீரோ நமாஸ் செய்யணும் எனக்கேட்டதும் ,பண்பான மார்க்கப்பந்துவான வில்லன் கட்டவிழ்க்க ,அப்புறம் என்ன ஹீரோ விஸ்வரூபம் எடுப்பதை தவிர வேறென்ன செய்வார் :-))

ஆனாலும் சண்டைக்காட்சி கிரிஸ்ப்பா, யாரு அடிச்சாலும்,சுட்டாலும் ஹீரோ மேல படாத போல நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வில்லன் ஜேம்சை சுடும் முன்னர் உன் கடைசி ஆசை என்னனு அன்பா கேட்பார், ஜேம்ஸ் ஒரு தம் அடிச்சுக்கிறேன் என சொன்னதும் பெர்மிஷன் கிராண்டட் ஆகும், ஜேம்ஸ் "எம்.ஐ.6" கொடுத்த ஸ்பெஷல் ஃபில்டர் சிகரட்டை பத்த வச்சு ஒரு பஃப் இழுத்துட்டு வில்லன் குருப் மேல சிகரெட்டை போட்டதும் வெடிச்சிறும்,அப்புறம் என்ன ஜேம்ஸ் பாண்ட் எஸ்கேப் தான் :-))

கொல்வதற்கு முன் ஹீரோவின் கடைசி ஆசையை நிறைவேற்ற நினைக்கும் மெல்லிதயம் படைத்த நல்ல வில்லன்கள் இருக்கும் வரையில் ஹீரோவை யாராலும் ஒன்னியும் பண்ணிக்க முடியாது என்பது உலகப்பட நியதி :-))

#
படத்தில் ஆப்கானியர்களை கூட ஒழுங்காக சித்தரிக்கவில்லை,ஆப்கானியர்கள் அரேபியர்கள் அல்லர், அவர்கள் பஷ்தூன் இனக்குழுவினர்,அவர்களின் கலாச்சாரமே வேறு அனைவரும் ,தாடியுடன், மீசையும் வளர்ப்பார்கள்,ஆனால் படத்தில் அனைவரும் மீசையை மழித்துவிட்டு தாடியுடன் ,அரேபிய வகாபியப் பாணியில் இருப்பார்கள்.



ஓசாம பின் லேடன், முல்லா முகமது ஓமர் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும் ,தாடி ,மீசை தான் அவர்கள் கலாச்சாரம் என்பது.


இரானில் பதின்மர் ஷியா குழு வகையினர் ,அவர்களும் மீசை,தாடியுடன் தான் இருப்பார்கள், இன்னும் சொல்லப்போனால் அரசுப்பணி புரிய மீசை அவசியம் அங்கே.

 ஓமர் தமிழ்நாட்டில் இருந்தேன் என சொல்வதே அவர் தமிழ்ப்பேசுவதை ஜஸ்டிபை செய்ய என்றார்கள்,ஆனால் அவர் கூட இருக்கும் சலிம் என்ற பாத்திரமும் தமிழ் பேசும், போதாதற்கு அமெரிக்காவில் இருக்கும் ஜிகாதிகளும் தமிழ் பேசுறாங்க, ஃபாரூக் என்பவர் ஒப்பன்மவனேனு எல்லாம் லோக்கல் ஸ்லாங்கில் பேசி சிரிக்க வைக்கிறார் :-))

# ஒரு போஸ்டரைக்காட்டி இவரு பெரிய ஜிகாதி ,5,00,000 பரிசுனு ஒரு டயலாக் சொன்னதும்,தலிபான்கள் முதல்மரியாதை கொடுத்து நாயகரை குழுவில் சேர்த்துக்கொள்கிறார்கள், இதற்கு மண்டையில மூளை என்ற வஸ்துவே இல்லாதவர்கள் என  தலிபான்களை சொல்லி இருக்கலாம் ;-))

தலிபான் மற்றும் அல்கயிதாவில் ஊடுருவலை செய்ய  முடியமால் ஆனானப்பட்ட சிஐஏ வே முழிக்க காரணமே அவர்களின் செயல்படும் முறையே, எந்த ஒருவருக்கும் ஒரு நிலைக்கு மேல் அடுத்த நிலையில் யார்,என்ன செய்கிறார்கள் என்றே தெரியாது, முல்லா ஓமர், ஓசாமவின் புகைப்படங்கள் என காட்டப்படுவதே பல காலத்திற்கு முன்னர் எடுத்தவை ,தற்போது முல்லா ஓமர் எப்படி இருப்பார் என தெரியாது, இந்த படமே அவருதான்னும் தெரியாது என சிஐஏ அதிகாரிகளே குழம்பிப்போய் கிடக்கிறார்கள்,அந்த அளவுக்கு ரகசியமான, பாதுகாப்பாக இயங்கக்கூடிய குழு தலிபான்கள்.

ஜிகாதியாக செயல்ப்படும் நபர் ஒரு தனிநபரேயல்ல, அவர் ஏதேனும் ஒரு ஜிகாதி குழுவில் இருந்தேயாக வேண்டும்,எனவே ஒரு ஜிகாதிப்பற்றி குழுவில் இருப்பவருக்கு நன்கு தெரியும், அக்குழுக்களைப்பற்றி தலிபான்,அல்கயிதா போன்றோர்க்கு நன்கு தெரியும்,எனவே ஒரு ஜிகாதியைப்பற்றி எக்குழுவை சேர்ந்தவர் என்பதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

அப்படி இருக்கும் போது ஒரு தனி நபர் ரா தேடும் புகழ்ப்பெற்ற ஜிகாதியாக தனியே உருவாவது இஸ்லாமிய ஜிகாதி செயல்பாட்டில் இல்லை, அப்படியே யாரேனும் எந்த ஜிகாதிக்குழுவுக்கும் அறிமுகமே இல்லாமல் ,தன்னம் தனியே உருவாகி இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்து தங்களுடன் இணைத்து இருப்பார்கள், இப்படி ரா நோட்டீஸ் போட்டப்பிறகு தான் ஆள் யார்னே தெரிகிறது என்றால் நம்பவே மாட்டார்கள்.

அப்படியே திடீர் என முளைத்த ஒரு ஜிகாதி வந்தாலும் கண்காணிப்பில் தான் வைத்திருப்பார்கள்,ஆனால் வந்ததும் என்னமோ "National security guards commando Training" எடுத்து வந்த சிறப்பு அதிகாரிப்போல கூப்பிட்டு எல்லாருக்கும் பயிற்சிக்கொடுக்க வைக்க மாட்டாங்க,அதை விட எல்லா திட்டம் பற்றியும் புதுசா வந்த ஆளுக்கிட்டே எப்படி ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லுவாங்க, தலிபான்களின் முக்கிய தலைவருக்கு தவக்களை அளவுக்கு கூட மூளை வேலை செய்யாது என்பது போல படத்தில் காட்டியிருப்பார்.

ஷியாவோ,சன்னியோ,அகமதியாவோ அவர்கள்  இருக்கும் ஊர் ஜமாத்தில் இணைந்திருப்பார்கள், அங்கே குடும்ப விவரமும் இருக்கும், அப்படி செய்யவில்லை என்றால் ,இறந்த பின் புதைக்க இடம் கொடுக்க மாட்டார்கள்,மேலும் திருமணத்தையும் ஜமாத்தில் பதிவு செய்ய முடியாது.
இஸ்லாமிய சமுதாயத்தில் ஜாமாத் முறையில் உள்ள சிறப்பு என்னவென்றால் ஒருவர் எந்த ஊருனு சொன்னாப்போதும் ,அவரோட ஜாமத்தை தொடர்பு கொண்டால் போதும் மொத்த ஜாதகமும் வெளியில் வந்துவிடும்.

அரபி,உருது என எதுவுமே தெரியாத ஒருவர் ,விஸாம் அகமத் காஷ்மீரி, சயீத் காஷ்மீரி பையன் என சொன்னவுடன் உண்மையான தாலிபான்களா இருந்தா வாயப்பொளந்துக்கிட்டு ஒத்துக்க மாட்டாங்க, எந்த ஊரு ஜமாத்துனு கேட்டு மொத்த விவரமும் தெரிஞ்சுக்கிட்டு, உளவாளி இல்லைனு உறுதிப்படுத்திப்படுத்தாமல் கிட்டே சேர்க்கவே மாட்டாங்க, உளவாளினு தெரிஞ்சா  வெட்டி ஊறுகாய் போட்டிட மாட்டாங்க.இது போன்று ஜிகாதி அமைப்புகள் மிக நெருக்கமாக பின்னப்பட்ட வலையாக செயல்ப்படுவதால் தான் சிஐஏ போன்ற உளவு நிறுவனங்களால்,ஊடுருவி தகவல்களையே அறிய முடியமால் சிரமப்படுகின்றன.

#இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதும் ஆப்கானில் நடந்ததை சொன்னேன் ,எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு எனவே தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்க்க தேவையில்லை என்றார், அவர் சொல்வது உண்மை எனில் உயிருடன் இருக்கும் முல்லா ஓமர் கதாப்பாத்திரத்தை எப்படி வில்லனாக சித்தரித்தார்? இந்திய சென்சார் போர்டு விதிப்படி உயிருடன் இருப்பவரைப்பற்றி படம் எடுக்க வேண்டும் எனில் அவரிடம் இருந்து தடையில்லை என சான்று பெற வேண்டும்.

நாயகன் படம் எடுத்த போது, அப்பொழுது உயிருடன் இருந்த வரதா பாயின் கதை என சொன்னதால் சென்சார் போர்டு சான்றளிக்க மறுத்த சம்பவத்தினை ,சமீபத்தில் கூட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் நினைவு கூர்ந்தார்.
செய்தி:

//After the completion of shooting Kamal Haasan and Mani Ratnam had a press meet, where they made a statement that the movie was based on Varadaraja Mudaliar’s life. After this, the censor board at Chennai refused to permit the release of the movie, since it was based on a living person. I appealed to the revising committee at Bombay. They said that they would permit us to release the film if I got a letter stating that it was not based on Varadaraja Mudaliar’s life. I asked Kamal Haasan to help me. He simply refused, stating that he was busy shooting another movie. Hence, with great difficulty, I contacted Mathiolli Shanmugam, a writer and good friend of mine, and through him met Varadaraja Mudaliar, who gave us a letter. Only then did the Censor appellate board at Bombay permit us to release the film. To call the movie his “baby” and not be bothered about its release is a reflection on Kamal Haasan’s ‘sincerity’.//

அதனடிப்படையில் பார்த்தால் சென்சார் போர்ட் இப்படத்திற்கும் சான்றளிக்க மறுத்திருக்க வேண்டும், இதன் அடிப்படையில் தான் அரசு வழக்கறிஞர் உயர் நீதி மன்றத்தில் சென்சார் சான்று அளித்ததில் முறைகேடு என வாதிட்டு இருக்க வேண்டும்,ஆனால் மக்களோ சிரித்தார்கள்.

ஒரு வேளை வெளிநாடாகிய ஆப்கனில் ஒருவர் உயிருடன் இருந்தால் என்ன என சென்சார் போர்ட் நினைத்திருக்கலாம், அல்லது முல்லா ஓமருக்காக யாரும் வழக்குப்போட போவதில்லை என நினைத்திருக்கலாம்.

# வேர்ஹவுசில் இருந்து தப்பி வெளியில் ஓடிவரும் பூஜாவுக்கு என ஒரு கார் சாவியுடன் ,திறந்தே காத்து நிற்கிறது ,ஒரு வேளை  உதவி மனப்பான்மையுள்ள தீவிரவாதிகள் போல :-))

#வேர்ஹவுஸ் சண்டைக்காட்சிக்கு பின்னர் ,வீட்டுக்கு வந்து தையல் போட்டு,முடிவெட்டிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே எப்படி FBI சரியாக வர முடிந்தது,அக்காட்சிக்கு பின்னரே ஓமர் FBI யில் சொல்லலாம் என போன் செய்வதாகவும் காட்சி வருகிறது.

#அதனை தொடர்ந்து வரும் கார் சேசிங் காட்சியின் போது ஓமர் பக்கவாட்டில் ,நாயகர் குழுவினை விரட்டி வருகிறார், மிக முக்கிய புள்ளியான ஓமரே கண் முன்னே வரும் போது அவரை மடக்கி பிடிக்க நினைக்க வேண்டாமா?

பின்னால் FBI  வருகிறது எனலாம், ஆனால் கடைசியில் FBI  இடம் மாட்டிக்கொண்டு ,நான் ஆனானப்பட்ட ரா ஏஜண்ட் என இந்திய பிரதமரையே பேச வச்சு சொல்லும் வேலையை ,ஓமரைப்பிடித்துக்கொடுத்துவிட்டு ,சொல்லி இருக்கலாம், டர்ட்டி பாம் டென்ஷனே இல்லாமல் படம் அங்கேயே முடிந்து இருக்கும்,நமக்கும் தலைவலி மிச்சம் :-))

அல்லது FBI  விரட்டிக்கொண்டு இருக்கும் போதே ஓமர் குழுவினரை விரட்டி ஒரு டபுள் சேஸ் ஆக வைத்து செம ஆக்‌ஷன் சீனாக காட்டியிருக்கலாம்.

அது என்னமோ தெரியலை பரபரப்பான நகரத்தில் சேசிங் நடக்குது ஒரு இடத்தில் கூட டிராபிக் சிக்னல் இல்லை, ரெட் விழலை, ரோட்டில் டிராபிக் நெரிசல் இல்லை, ஃப்ரியா சொய்ங்க்...சொய்ங்க்னு கார் ஓட்டிக்கிட்டுப்போறாங்க :-))


டர்ட்டி பாம்:

# கிளைமாக்சில் சீசியம் டர்ட்டி பாம் என தெரிந்த பின்னும் FBI  சும்மா நாலுப்பேரோட போய் ரவுண்ட் அப் செய்கிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில்., அணு வெடிப்பொருள்,கதிர்வீச்சு சம்பந்தமான புலனாய்வு மற்றும் பாதுகாப்புக்கு என அமெரிக்காவில் தனியே
Department of Energy, Office of Intelligence and Counterintelligence என ஒருத்துறை உள்ளது.அதே போல 16 வகையான புலனாய்வு அமைப்புகள் அமெரிக்காவில் உள்ளன, அங்கே  FBI என்பது நம்ம ஊரு சிபிஐ போல கொஞ்சம் டம்மியான அமைப்பே ஆனால் கடைசி வரை  FBI தவிற வேறு யாரும் எட்டிப்பார்க்காதது போல காட்டியிருப்பார்கள்.

சீசியம்-132 என்பது அறை வெப்ப நிலையில் திரவமாக இருக்கக்கூடிய ஒரு உலோகம், இதன் ஐசோடோப்பான சீசியம்-137 க்கு தான் கதிரியக்க தன்மை உண்டு.

மேலும் அணுநிறை எண் -137, அணு எண்-55 உள்ள சீசியம் ஐசோடோப் ஒரு அணுப்பிளவை உபப்பொருள், அதற்கு அயனியாக்கும் காமா கதிர்வீச்சினை வெளியிடும் தன்மை உண்டே ஒழிய ,நியுட்ரானை வெளியிடும் தன்மையில்லை, அதனால் அணுப்பிளவை வினையினை தொடர்ந்து செய்ய முடியாது,அதாவது சீசியம்-137 கொண்டு அணுகுண்டு செய்ய முடியாது.அதற்கு செயின் ரியாக்‌ஷன் செய்யக்கூடிய யுரேனியம்,புளுட்டோனியம் போன்ற அணுப்பொருட்கள் தேவை.

யுரேனியத்தில் பல ஐசோடோப்புகள் உண்டு, யு-238 என்பது பொதுவாக கிடைக்கக்கூடியது அதற்கு அணுப்பிளவு ,கதிரியக்கம் இல்லை, ஆனால் யு-235 என்ற ஐசோடோப்புக்கு உண்டு, இது 0.75%  அளவே இயற்கையில் உள்ளது, எனவே யு-238 ஐ என்ரிச் செய்து 3-4% யு-235 கொண்டதாக மாற்றியே அணு உலைகள்,மற்றும் அணுகுண்டுகளில் பயன்ப்படுத்துகிறார்கள்.



அவ்வாறு அணுப்பிளவை நடக்கும் போது மட்டுமே சீசியம் -137 உருவாகும், இயற்கையில் ,அவ்வுலோகம் பூமியில் இல்லை. நியுக்ளியார் வெடிப்பின் போது ஏற்படும் Fall out இல் சீசியம் 137 இருக்கும், இதன் அரை ஆயுட்காலம் 30 ஆண்டுகள் ,அது வரையில் அணுகுண்டு வெடித்த இடத்தில் கதிர்வீச்சு இருக்கும்.



மேலும் அணு உலைகளில் பயன்ப்படுத்திய யு-235 அணு எரிப்பொருள் ராட்களில் இருந்து சீசியம்- 137  பிரித்தெடுக்கப்பட்டு ,புற்று நோய்க்கான ரேடியோ தெரபி மற்றும் ஸ்கேனிங் போன்றவற்றிற்கு பயன்ப்படுகிறது.

டர்ட்டி பாம் எனப்படும் சீசியம் -137 கொண்ட பாம் அணுகுண்டு அல்ல,  ஒரு சாதாரண வெடிப்பு பொருள்களான ஆர்.டிஎக்ஸ்,சி-4,டி.என்.டி  என ஏதேனும் ஒன்றினை கொண்ட ஒரு வெடி குண்டே, அதனுடன் சீசியம் குளோரைடு உப்பினை தூளாக இணைத்து தயாரிக்கப்படும் வெடிகுண்டாகும், வெடிப்பொருள் வெடிக்கும் போது காற்றில் சீசியம்-137 துகள்கள் பரவி கதிரியக்கத்தினை உண்டாக்கும். அதன் மூலமே மனிதர்களுக்கு தீங்கு உருவாகும்.

எனவே டர்ட்டி பாம் இருக்கு என தெரிந்தது அந்த இடத்துக்கு FBI  செல்லும் போது கூட "பாம் ஸ்குவாடினை' அழைத்து செல்லாமல் தேமே எனப்போவது போலக்காட்டியிருப்பது FBI  ஐ உள்ளூர் டி-1 போலிஸ் ஸ்டேஷன் போலீஸ் அளவுக்கு காமெடியாக காட்டுகிறது.

நியுக்ளியர் ஆன்காலஜி:

# இதில் இன்னொரு காமெடி நியுக்ளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்ற நாயகி FBI  அதிகாரியிடம் சீசியம் டர்ட்டி பாம் பற்றி தெரியும் என சொல்ல இரண்டாம் வாய்ப்பாடு சொல்வது போல அணு எண்,நிறை எண்,மெல்டிங் பாயிண்ட் என எல்லாம் சொல்வார், உடனே உங்களுக்கு நிறைய தெரியுது என FBI  ஆபிசர் பம்முவார், ஆனால் நாயகி மூச்சுவிடாமல் சொல்லுவது கதிரியக்கமற்ற சீசியம் 132 பற்றி ,அணு எண் 55, நிறை எண்-132.09 என சொல்வார் ,கொஞ்சம் டயலாக்கையும் கவனிங்க மக்களே :-))

நியுக்ளியர் ஆன்காலஜி படிக்க அடிப்படையில் மருத்துவம் படித்திருக்க வேண்டும், ஆன்காலஜி நர்ஸ் ஆக இருக்க நர்சிங் பட்டம் படித்திருக்க வேண்டும், விலங்குகளுக்கான ஆன்காலஜி படிப்பும் உள்ளது அதற்கு கால்நடை மருத்துவம் படித்திருக்க வேண்டும்.
(வெரி "ஷார்ப்" ஆன்காலஜிஸ்ட்)


ஆனால் படத்தில் நியுக்ளியர் ஆன்காலஜியில் தான் டாக்டர் அவருக்கு  மருத்துவம் தெரியாது என ,காயத்துக்கு தையல் போடும் காட்சியில் லோகநாயகர் சொல்கிறார் :-))

நியுக்ளியர் பிசிக்ஸ் போன்றவை தான் ஆய்வு மருத்துவப்படிப்பு,ஆன்காலஜிக்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும்.

//You will need a degree in medicine and obtain a license.  In addition, you will likely need to undergo residency training in oncology and a license to practice oncology.  Depending on where you live, you may first need to complete a Bachelor's degree before going into medical school to obtain the degree in medicine.  Students in certain countries may enter medical school directly from high school. //
link:
http://admissionsuccess.com/Types/medicalspecialties/oncologist.htm

நான் கேள்விப்பட்டதை வைத்து சொல்கிறேன்,யாரேனும் மருத்துவர்கள் சரியா எனக்கூறவும். இணையத்திலும் நான் சொன்னது போலவேயுள்ளது.


# ஆஃப்கானில் ஓப்பியம் வியாபாரியின் 'ஓப்பியத்தில்' டிராக்கர் டிவைசை மறைத்து வைக்கிறார், அந்த ஓப்பியம் வியாபாரி அதனை யாருக்கேனும் ஓப்பியம் என வழக்கம் போல அன்பளிப்பாகவோ,அல்லது விற்றோ இருந்தால் என்ன செய்ய? மேலும் அந்த ஓப்பிய வியாபாரி ஓசாமாவை பார்க்க கண்டிப்பாக வருவார் என என்ன நிச்சயம்,அல்லது வரும் போது ஓப்பிய பார்சலை மூட்டைக்கட்டிக்கொண்டு வருவான் எனவும் சொல்ல முடியாதே? அப்படி இருக்கும் போது ஓப்பியத்தில் வைத்து வியாபாரியின் பையில் வைப்பது நேட்டோ படைக்கு இடம் அறிய உதவுகிறது  என காட்டுவது ரொம்ப கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது.

மேலும் இப்பொழுது உள்ள நவீன மின்னணு தொழில்நுட்பத்திற்கு "பழைய கால டிரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோ" அளவுக்கா டிராக்கர் டிவைஸ் செய்வாங்க, அதுவும் ரெட் "led light" வேற கண்ணை சிமிட்டிக்கிட்டு இருக்கும்:-))

சின்னதா ஒரு பாரசிட்டமால் டேப்லெட் அளவுக்கெல்லாம் டிராக்கர் டிவைஸ் உள்ளதாக பழைய படங்களிளேயே காட்டியாச்சு, இவ்வளவு ஏன் சமீபத்தில் வந்த துப்பாக்கிப்படத்தில் விஜய் ஒரு டிராக்கர் டிவைசை உடம்புக்குள் இஞ்செக்ட் செய்வதாக தமிழ்ப்படத்திலேயே காட்டியாச்சு :-))

அமெரிக்காவை விட அட்வான்ஸ் டெக்னாலஜியை  இந்திய ராணுவ நுண்ணறிவு துறை பயன்ப்படுத்துகிறது என இக்காட்சியின் மூலம் லோகநாயகர் காட்டியதாக நாம் பெருமைப்படலாம் :-))

# ஆஃப்கானில் ரா ஏஜண்ட் வேலை செய்யும் போது அமெரிக்க நேட்டோ படைகளுடன் ஒரு கூட்டு வேலை என்பதாக காட்டிவிட்டு, நியுயார்க்கில் அமெரிக்க அரசுடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் தனியே ஏன் ரா வேலை செய்ய வேண்டும்? இங்கும் ஜாயிண்ட் ஆபரேஷன் என்றல்லவா காட்டியிருக்க வேண்டும்.

அப்படி தனித்தே ஒரு நாட்டின் உளவு அமைப்பு இன்னொரு நாட்டில் ஒரு வேலை செய்தால்  ,அது அந்த நாட்டை காக்க என சொன்னாலும் அதுவும் உளவு வேலையே,அப்படி எல்லாம் ரகசியமாக உளவு வேலை செய்தால் அதுக்கே ஆப்படிப்பாங்க,அந்தளவுக்கு ரகசியமாக உளவு வேலை செய்து அமெரிக்காவை காப்பாற்ற வேண்டிய அவசியம் இந்திய அரசு நிறுவனமான ராவுக்கு ஏன்? மேலும் கொஞ்சம் தவறி ரா ஏஜண்ட் கொல்லப்பட்டோ அல்லது சரியாக கண்டுப்பிடிக்காமல் போய் குண்டு வெடித்திருந்தால் ,பின்னர் நடக்கும் புலன் விசாரணையின் போது ரா தான் அந்த வேலையை செய்தது என்ற பழியோ அல்லது ரா ஏஜண்ட் டபுள் ஏஜண்டாகிட்டார்னோ கதை மாறிவிடும். சொதப்பலாக எடுக்கப்பட்ட தாண்டவம் படத்திலேயே இதை காட்டியிருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் தாண்டவம் படத்தின் கதைக்கும் விஷ்வரூபம் படத்தின் கதைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தாண்டவத்தில் விக்ரம் இஸ்லாமிய ஜிகாதியாக ஊடுருவி ஒரு ஆபரேஷன் செய்வதாக ஆரம்பத்தில் லேசாக காட்டியிருப்பதை, இங்கே தலிபான் குழுவில் ஊடுருவுவதாக் விலாவாரியாக காட்டியிருக்கிறார்கள், தாண்டவத்தில் குண்டு வெடித்த பின் பழி வாங்குவார், இதில் குண்டு வெடிப்பை தடுப்பார், இரண்டுமே ரா ஏஜண்ட் கதை என ஏகப்பட்ட ஒற்றுமைகள்.

# வேர்ஹவுசில் ஒரு குண்டு, அப்பார்ட்மென்டில் ஒரு குண்டு என வெடித்த பின்னும் FBI எந்த வித தீவிரமும் காட்டாமல் சாவகாசமாக செயல்படுகிறது,  நடுவில் காமெடியான விசாரணைகள் வேறு!. ஓமர் சாவகாசமாக பிரைவேட் ஜெட் பிடிச்சு , போன் செய்து வெடிக்க வைக்கப்பார்ப்பார் :-))

ஆனால் இயல்பில் உடனே தேசமே ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு ,தீவிரமாகிவிடுவார்கள்.

# நைஜீரியன் ,பேரு அப்பாசி, பணம் பரிமாறப்பட்டிருக்கு அப்போ அவன் தான் ஜிகாதி, டர்ட்டி பார்ம் வெடிக்க வைக்க போறான்னு ரொம்ப தீவிரமான நிலையிலும் "wild guess" செய்துக்கொண்டா இருப்பார்கள்,நாயகி அப்போ சந்தேகம் கேட்பதாக காட்டி சமாளித்தாலும், அப்படி செய்வது புலனாய்வு அமைப்புகளின் சரியான செயல்பாடா? பட்டியலில் இருப்பவர்கள் அத்தனைப்பேரையும் அள்ளிக்கிட்டு வந்து விசாரிக்க வேண்டாமா?

அப்பாசியை "மார்க்" செய்த பின்னரும் அவனை அப்படியே போக விட்டு அவன் செய்வதை எல்லாம் வேடிக்கையா பார்ப்பார்கள்,பார்த்தவுடன் கோழி அமுக்குவதை போல அமுக்கி விசாரிக்க வேண்டாமா? ஒரு வேளை வீட்டுக்குள் போனதும் பாம்மை வெடிக்க செய்திருந்தால் என்ன செய்வார்களோ?

மேலும் மிக முக்கியமான "மாஸ்டர் மைண்ட்" ஓமர் நியூயார்க்கில் இருப்பதை FBI க்கு சொல்லி அலர்ட் செய்திருந்தால் யாரும் தப்பிவிடாமல் கண்காணிக்க இயலும்,ஆனால் அப்படி செய்யாமல் இவர்கள் பாட்டுக்கு அப்பாசியை தேடிக்கொன்டு போய்விடுவார்கள்,உண்மையில் அப்பாசி ஜிகாதி இல்லை எனில் ஓமர் வெடிக்க வைத்துவிட்டு கிளம்பிவிட மாட்டாரா?

இரட்டைக்கோபுர வெடிப்புக்கு பின், ஓசாமா பின் லேடன் வேட்டைக்கு பின் ,ஓமர் ஜாலியாக நியுயார்க் வீதிகளில் SUV ல  ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து  சுத்திட்டு ,டர்ட்டி பாம் செட் செய்துவிட்டு ,பிரைவேட் ஜெட் புடிச்சு தப்பிக்கிறார், ஆனால் எந்த பதட்டமும் இல்லாமல் அமெரிக்க அரசு இயந்திரம் செயல்படுகிறது,இப்படிலாமா அசட்டையாக அமெரிக்க உளவுத்துறை செயல்படும், ஆனாலும் ரொம்ப ஓவரா FBI  ஐ ஸ்பூஃப் செய்திருக்கார் லோகநாயகர் :-))


# ஃபாரடே ஷீல்ட்:



மைக்ரோ வேவ் ஓவன் என்பது ஒரு இன்வெர்ட் ஃபேரடே கேஜ் வகையாகும், மைக்ரொ வேவ் ஓவனில் இருந்து கதிர்வீச்சு வெளியில் வராமல் தடுக்கவல்லது, ஆனால் உள்ளே செல்வதை 100% தடுக்காது.

மேலும் ஓவன் மூடி இருக்கும் போது தான் ஃபேரடே ஷீல்ட் ஆக செயல்பட முடியும், முழுவதும் மூடிய நிலையிலேயே 100% கதிர்வீச்சை தடுப்பதில்லை என்பதால், பேஸ் மேக்கர் போன்ற கருவிகள் பொருத்தியவர்கள், மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் போது அருகில் செல்லக்கூடாது என அறிவுறுத்தல் உண்டு.பொதுவாக மைக்ரோவேவ் ஓவன் செயல்படும் பொழுது ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருப்பது உடல் நலத்திற்கு நல்லது என்கிறார்கள்.


அப்படி இருக்கும் போது மைக்ரோ வேவ் ஓவன் மூடியை திறந்த நிலையில் ,டர்ட்டி பாமின் மீது கவிழ்த்துவிட்டு ,அது செல்போன் சிக்னலை தடுக்கிறது ,ஜீனியஸ் என்பதெல்லாம் காதுல பூக்கூடையை வைக்கும் வேலை :-))

நீங்களும் செய்யலாம் ஃபேரடே ஷீல்ட்:

செல்போனை ,அலுமினியம் ஃபாயில் கொண்டு நன்கு சுற்றி வைத்துவிட்டாலே போதும் ,சிக்னல் கிடைக்காது. அலுமினியம் ஃபாயில் எலெக்ட்ரோ மேக்னடிக் சிக்னல்கள் ஊடுருவ அனுமதிக்காது,எதிரொளித்து திருப்பிவிடும்!

ஏற்கனவே சொன்னது போல டர்ட்டி பாம் என்பது அணுகுண்டு அல்ல, அதில் உள்ள வழக்கமான வெடிப்பொருளை வெடிக்காமல் செயலிழக்க செய்ய பாம் ஸ்குவாடாலேயே முடியும் ,என்பதால் FBI  பாம்ஸ்குவாடினை அழைத்து சென்றிருந்தாலே போதும்.

ஆனால் படத்திலோ FBI  என்பது தெண்ட தீவட்டிகளின் கூடாரம் என்பதாக காட்டியிருப்பார்கள் ,அமெரிக்காவில் ரிலீசான படத்தை உண்மையான FBI  காரன் மட்டும்  பார்த்தான் ஃப்ளைட் புடிச்சு வந்து லோகநாயகரை என்க்கவுண்டர் செய்தாலும் செய்யக்கூடும் :-))

# தாலிபான்,FBI.CIA.Raw,டர்ட்டிபாம், சீசியம்,ஆன்காலஜி, என சீரியசாக சொல்லவேண்டிய சப்ஜெக்டினை காமெடியாக தப்பும் ,தவறுமாக சித்தரித்து படம் எடுத்திருப்பதே ஸ்பூஃப் செய்யத்தான் என்பதை  புரிந்துக்கொள்ள உலக அரசியல்,பொது அறிவு தேவை என்பதால் தான் லோகநாயகர் அப்படி சொன்னார் என்பது இப்பொழுது புரிந்து இருக்குமே :-))

# படத்தில் பாராட்ட ஒன்றுமேயில்லையா என நினைக்கலாம், ஆப்கான்,அமெரிக்கா என கொஞ்சம் மாறுப்பட்ட களத்தில் கதையினை காட்டியிருப்பது, ஹாலிவுட்  வார் ஆக்‌ஷன் படங்களை பார்த்தவர்களுக்கு ரொம்ப பழகி இருந்தாலும் மற்றவர்களுக்கு புதுசா தெரிய வாய்ப்புண்டு.

ஹெலிகாப்டர், டாங்க்,துப்பாக்கி ,ராகெட் லாஞ்சர் என காட்டி ஏகப்பட்ட பட்டாசு வெடிக்க நிறைய செலவு செய்திருக்கிறார், அரங்க அமைப்புக்கே நிறைய செலவு செய்து ஓரளவு தத்ரூபமாக காட்டியுள்ளார்.

பல ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் தனி ,தனி ஷாட்களாக எடுத்து இணைத்துள்ளார் ,ஏரியல் வியுவில் காட்டினால் செட் போட்டிருப்பது தெரிந்துவிடும் என தவிர்த்து முடிந்த வரையில் செட்டினை அறிய முடியாமல் ,செட்,பின்னணி லேன்ட் ஸ்கேப், ஹெலிகாப்டர் என தனி லேயர்களை கொண்டு கம்போஸிட்டிங் செய்து இயல்பாக காட்ட முயற்சித்து இருப்பது.

ஆப்கான் காட்சிகள்,லேண்ட் ஸ்கேப் என ஜோர்டான்,பெட்ரா ஆகியப்பகுதிகளில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து இணைத்துவிட்டு , முழுக்க அப்பகுதி என நம்ப வைத்தது.

சேகர் கபூர் தவிர அனைவருக்கும் ஒட்டு தாடி வாங்கிக்கொடுத்து, ஓரளவுக்கு இயல்பாக காட்டியிருப்பது, ஒட்டுத்தாடி பசையின் பிடுங்களுக்கும் நடுவில் அனைவரும் இயல்பாக நடித்திருப்பது என சொல்லலாம்.

#இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வரும்னு வேற மிறட்டுறார்,சோதனை மேல் சோதனை :-))

இப்போது  மார்க்கப்பந்துக்கள் உபயத்தால் கல்லாக்கட்டிட்டார், அடுத்தப்பாகத்தினை கண்டுக்காம விட்டாலே காணாமல் போயிடும்,செய்வார்களா?
-------------------------------


பிற்சேர்க்கை:

IMDB RATING:

படம் வருமுன்னர் டிடிஎச், பின்னர் மார்க்கப்பந்துக்கள் எதிர்ப்பு,தடை என்ற வகையில் விளம்பரம் அள்ளியது போல இப்பொழுது திடீர் என IMDB RATING வைத்து விளம்பரம் கிளப்ப சில விசிலடிச்சான் குஞ்சுகள் திட்டம் போடுவதாக தெரிகிறது, இந்த IMDB RATING பின்னால் உள்ள சூட்சமத்தினைப்பார்ப்போம்.

# IMDB  இணைய தளத்தில் ,ஒரு மெயில் ஐடி கொடுத்து யார் வேண்டுமானாலும் ஒரு பயனர் கணக்கு துவக்கிக்கொண்டு ,பிடிச்ச படத்துக்கு ஓட்டு குத்தலாம்.

# ஒரு மெயில் ஐடி- ஒரு அக்கவுண்ட்- ஒரு ஓட்டு என IMDB வகுத்துள்ளது, எனவே நிறைய மெயில் ஐடி உருவாக்கி,நிறைய கணக்கு துவக்கி ,நிறைய ஓட்டினை யார் வேண்டுமானாலும் போட முடியும்.

# இதனால் படம் வந்ததும் ,நிறைய ஓட்டுக்கள் விழுந்து எளிதில் முதலிடம் வரும் வாய்ப்புள்ளது.

# சில நாட்களுக்கு பின்னர் புதிய வாக்குகள் வரவில்லை எனில் ,ஆரம்பத்தில் இருந்த ரேட்டிங் குறைய ஆரம்பிக்கும்.

உ.ம்: ஆரம்பத்தில் சுமார் 10,000 வாக்குகளுடன், IMDB RATING -9.5 பெற்று ஒரு படம் முதலிடத்தில் இருக்கலாம்,ஆனால் தொடர்ந்து புதிய வாக்குகள் விழவில்லை எனில் ,ரேட்டிங் 9.5 இல் இருந்து சரிந்து 2,3 எனக்கூட முடியும்.

காரணம் IMDB RATING அமைப்பில்  weighed average ஓட்டிங் என்ற முறையை பயன்ப்படுத்துகிறார்கள்.

#  weighed average ஓட்டு என்பது எப்படி எனில் நீண்ட கால ,மற்றும் ரெகுலர் ஓட்டர்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் அனைத்து வாக்குகளும் சமமாக கணக்கிடப்பட்டு ரேட்டிங்க் காட்டுவார்கள், சில நாட்களுக்கு பின்னர்  weighed average ஓட்டுக்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய ரேட்டிங்கினை அறிவிப்பார்கள். இதன் மூலம் ஒருப்படம் வெளிவந்ததும் ஆர்வக்கோளாறில் பல கணக்குகள் துவங்கி ஓட்டுப்போட்டவர்களின் ஓட்டுக்களின் மதிப்பு குறைக்கப்படும்.

மேலும் தொடர்ந்து ஓட்டுக்கள் விழுந்துக்கொண்டிருந்தால் மட்டுமே , ரேட்டிங்க் தக்க வைக்கும் வகையில் IMDB RATING இயங்குகிறது.

# ஆல் டைம் பெஸ்ட் மூவிக்களுக்கு இம்முறையுடன், IMDB இணையதள நிர்வாகிகளிடமும் வாக்குகள் பெறப்படும்,அதன் அடிப்படையில் வெயிட்டட் ஆவரேஜ் கணக்கிட்டு ரேட்டிங் கொடுக்கிறார்கள்.

#IMDB RATING முறையில் அனைத்து வாக்குகளும் சம மதிப்பில் இல்லை,எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை வெளியிட மாட்டோம் என IMDB நிர்வாகம் அறிவித்துள்ளது.

எந்திரன் வெளியாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் அதன் ரேட்டிங்க் தற்சமயம் குறைவாகவே இருக்கும், தற்போது வெளியான படமென்பதால் விஷ்வரூபத்தின் ரேட்டிங் உயர்வாக இருக்கும், இன்னும் சில நாட்கள் போனதும் ,வெயிட்டட் ஆவெரேஜ் முறையில் ரேட்டிங் குறைந்து விடும் :-))

IMDB RATING செயல்படும் முறைப்பற்றி IMDB இணைய தளத்தில் விளக்கங்கள் உள்ளது.

இங்கு காணலாம்:

http://www.imdb.com/help/show_leaf?votestopfaq
---------------------


பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.larouchepub.com/other/1995/2241_golden_crescent.html

http://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html

http://www.un.org/apps/news/story.asp?NewsID=39186

http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/heroin/etc/history.html,

விக்கி,கூகிள்,IMDB. இணைய தளங்கள்,நன்றி!
------------------------------

Thursday, February 07, 2013

கற்றது தமிழ்-5

(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்)

தமிழென நினைத்து  பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,பிறமொழிச் சொற்களைப் நாம் பயன்படுத்தி வருகின்றோம்,அவற்றில் பல தமிழாகவே மாறிவிட்ட சூழலில் அச்சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது மிகவும் கடினமாகும்,அதே வேளையில் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களும் உள்ளன,அவற்றை  அடையாளங்காணும் சிறு முயற்சியே இத்தொடர்.

இப்பதிவில் நாம் அதிகம் பயன்ப்படுத்தும் மேலும் சில வடமொழி ,பிறமொழி சொற்களையும்,அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் காணலாம்.

#அகதி:

ஒரு சொல்லின் முன் "அ" சேர்ப்பதால் எதிர் மறை பொருளை உருவாக்கலாம், இம்முறை வடமொழி,தமிழ் என இரண்டிலும் நடைமுறையில் உள்ளது.

கதி(gati) என்ற வடமொழிச் சொல்லுக்கு ,

நிலை,
இடம்,
இலக்கு,
நுழைவு,
சரணடைதல்,
புகலிடம்,
நேரம்,
வேகம்,
இயக்கம்,
நகர்தல்.

என்றெல்லாம் பொருள் உண்டு.

சொல்லுக்கு முன் "அ"  சேர்த்தால் இவற்றிற்கு எதிரான பொருள் கொண்ட சொற்களை உருவாக்கலாம்.

அகதி என்ற சொல்லினை கொண்டு ,
யாருமற்றவன்,வறியவன்,நாடோடி,பற்றில்லாமல்,புகலிடம் இல்லாமல் இருப்பவர்களையும் குறிக்கலாம்.

மேலும் அகதி என்பதற்கு  திரும்புதல் என்று ஒரு பொருளும் இருப்பதால்,புலம் திரும்பியவர் என்றும் சொல்லலாம்.

அகதி என்பதற்கு தமிழ் இணைச்சொற்கள்: நாடோடி ,நாடற்றவர் ,புலம் திரும்பியோர் என்பதை கொள்ளலாம்.

புலம்பெயர்ந்தவர்கள் என்பது பொதுவாக 'migrated" என்பதையே குறிக்கும்.

#அகாலம்- 

காலம் என்ற வடமொழிச்சொல்லுக்கு நேரம் என்று பொருள், எதிர்மறையாக "அகாலம்" என்கிறார்கள்  இதற்கு இணையான தமிழ்ச்சொல் "நேரமற்ற நேரம்",வேளையற்ற வேளையில் எனலாம்.

அகாலநேரம் என்பது ,நடு சென்டர் என்பது போல இருமுறை நேரத்தினை சொல்வது.

#அங்குலம் : 

வட மொழிச்சொல், அங்குஷ்டம் என்றால் வட மொழியில் கட்டைவிரல் , ,எனவே ஒரு கட்டைவிரல் தடிமன் உள்ள அளவை அங்குலம் என்பார்கள்.
இணையான தமிழ்ச்சொல்: விரற்கடை அளவு.

#அஜாக்கிரதை

ஜாக்கிரதை என்ற வட மொழிச்சொல்லின் எதிர்ச்சொல்,

இணையான தமிழ்ச்சொல் : கவனமின்மை,விழிப்பின்மை.

# அசுத்தம்-

சுத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்,

இணையான தமிழ்ச்சொல்: அழுக்கு,தூய்மையின்மை.

#அநியாயம்:

நியாயம் என்ற வடச்சொல்லின் எதிர்ப்பதம்.

இணையான தமிழ்ச்சொல்:முறையின்மை,நடுவின்மை.

#அபத்தம்:

பத்தம் என்ற வடமொழிச்சொல்லின் எதிர்ப்பதம்.

பத்தம் என்றால் நேர்மை, உண்மை, எனப்பொருள். சுத்தபத்தமாக கடவுளை வணங்க வேண்டும் என்றால் ,தூய்மையாக ,நேர்மையாக ஒன்றி வணங்குதலை குறிக்கும்.

இணையான தமிழ்ச்சொல்: பொய்,தவறு.

#இலவசம்:

labhasa என்ற வட மொழி சொல்லுக்கு , பிச்சையாக, தானமாக கேட்டுப்பெறுதல் என்ற பொருள் ஆகும்.  தமிழில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் சொல்லின் முதல் எழுத்தாக பயன்ப்படுத்தக்கூடாது என்பதால், உயிர் எழுத்து "இ" சேர்த்து இலவசம் என முழுமையாக தமிழில் எழுதப்படுகிறது.

உ.ம்: லட்சுமணன் = இலட்சுமணன், ராமன் = இராமன்.

தமிழில் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக ,பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களும் வரலாம், அதுவல்லாமல், மெய் எழுத்துக்களில் ,க,ச,த,ந,ப,ம,வ,ய,ஞ,ங ஆகிய பத்து மெய்யெழுத்துக்கள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரலாம்.

இலவசம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்:விலையின்மை,விலையில்லா என்பதாகும்.

ஹி...ஹி முந்தைய முத்தமிழ் வித்தவர் ஆட்சியில் கொடுத்த இலவசப்பொருட்களை இப்பொழுது விலையில்லா பொருட்கள் என சொல்கிறார்கள். சரியாத்தான் மாற்று சொல் கண்டுப்பிடித்து இருக்காங்க :-))

# கோயில் அல்லது கோவில்:

பலரும் ஆலயத்தினை கோயில் அல்லது கோவில் என எழுதி,பேசி வருவதுண்டு, இரண்டில் எது சரியான தமிழ்ச்சொல் என குழப்பம் வருவது இயல்பே.

தமிழ் இலக்கண புணர்ச்சி விதிகளின் படி, நிலை மொழி இறுதியிலும்,வரு மொழி முதலிலும் உயிர் எழுத்து இருக்குமானால் , இரு சொற்கள் இணையும் போது ஒற்றெழுத்து மிகும், என்கிறது, இதனை உடம்படுமெய் - உடன் படுத்தும் - இணைக்கும் மெய் எழுத்து என்கிறார்கள்.

மேலும் நன்னூல் இலக்கணப்படி,

இ,ஈ,ஐ ஆகிய உயிர் எழுத்துக்கள் இருப்பின் யகர ஒற்று "ய்"மிகும்.

ஏனைய உயிர் எழுத்துக்கள் இருப்பின் "வகர" மெய் "வ்" மிகும்

ஏ எனும் உயிர் எழுத்து இருப்பின் இவ்விரு மெய்யும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

கோவில் = கோ +வ்+இல்

கோ என்ற சொல்லில் "ஓ"எனும் உயிர் எழுத்து ஒலிக்கிறது அதற்கு வகர மெய்"வ்" உடம்படுமெய் ஆக மிகலாம்.

எனவே கோவில் என்பதே சரியானது.

கோயில் =கோ+ய்+இல்

எனப்பிரித்தால் யகர ஒற்று "ய்" மிகுவதை காணலாம், இது உடம்படுமெய் என்ற விதிப்படி சரி,ஆனால் நன்னூல் விதிப்படி தவறு என்கிறார்கள்.

அதே சமயத்தில் இலக்கியங்களில் கோயில் என்ற சொல்லும் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது,எனவே நடைமுறையில் கோயில் என்று சொல்வதும் பிழையில்லை.


மேலும் சில ஒலி ஓசையில் ஒத்து குழப்பும் சொற்கள்.

முருக்கு- முறுக்கு:

முருக்கு என்றால் அழித்தல்.

முறுக்கு என்றால் திரித்தல் , வீட்டில் சுடுவது முறுக்கு,  ஒரு வேளை வீட்டில் சுட்ட முறுக்கு உங்கள் பல்லை அழிக்குமானால் அதனை "முருக்கு" எனலாம் :-))

ஆனால் முருங்கை மரம் என்பதற்கு "ரு" தான் பயன்ப்படுத்த வேண்டும்.

#ஒரு-ஒறு:

ஒரு என்பது எண்ணிக்கை ஒன்றை குறிக்கும்.

ஒரு ரூபாய், ஒருவன்,ஒருவள்.

ஒறு என்பது தண்டனையை குறிக்கும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

என்ற குறளில் வரும் ஒறுத்தல் "தண்டிப்பதையே" குறிப்பதை காணலாம்.

#முன்னாள்-முன்னால்-முந்நாள்

இன்றைய நாள் - இன்னாள், அதற்கு முன்னர் வந்த நாள் முன்னாள்,அல்லது முந்தைய காலம்.

ex.minister என சொல்ல முன்னாள் ,முன்னால் என எதனை பயன்ப்படுத்துவது எனக் குழப்பம் வரும்.

முன்னால் அமைச்சர்  என்றால் இந்த ஆட்சிக்காலத்துக்கு முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அல்லது இப்போதைய அமைச்சருக்கு முன்னர் அமைச்சராக இருந்தவரை மட்டுமே குறிக்கும்.
முன்னால் என்றால் in front of, previous என்ற பதம் இங்கு நாள் கணக்கில் வராது.ஒரு வரிசைக்கிரமத்தில் சொல்வதாகும்.

உ.ம்.
#முன்னால் நிற்கும் பேருந்தில் ஏறவும்.

#முன்னால் நிற்கிறேன்.

அதையே முன்னாள் நிற்கிறேன் என்றால் முதல் நாள் நிக்கிறேன் ஒரு வேளை முதல் நாளில் இருந்து நின்றால் அப்படி சொல்லலாமோ :-))

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்து இப்போ பதவியில் இல்லை என்றால் என்ன செய்வது, எனவே முன்னாள் அமைச்சர் என எழுதுவதே சரியானது.

முந்நாள் என சொல்வது மூன்று +நாள் என சொல்வதாகும்,

மூன்று நாள் =முந்நாள்.

# அல்லு-அள்ளு:

அல் - துன்பம்,தீமை,இரவு,இருள்.

அல்ல- இல்லை

அல்லல் ,அல்லவை,

சிலர் அல்லும் பகலும் வெறும்* தெருக்கல்லாய் இருந்துவிட்டு அதிஷ்டம் இல்லை என்பார்.

இங்கு அல் என்பது இரவை குறிக்கிறது.

*வெரும்- வெருப்பு- அச்சம்,பயம்,மிரட்சி.கோவம்,சினம் எனவும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம்.

வெறும் - வெற்று-வெற்றிடம்- ஒன்றுமில்லாமல்.

வெறுப்பு- dislike -hate,பகைமை, விருப்பமின்மை.

அள்ளு- அள்ளுதல், ஒன்றை அப்படியே வாரி எடுப்பது. மண் அள்ளுதல், தானியம் அள்ளுதல்.

ஹி...ஹி தெலுகுல அல்லுனா மாப்பிள்ளை என்கிறார்கள்(தெலுகு தெரிந்தவர்கள் சரியானு சொல்லுங்க), "அல்லுடு மஜாக்கானு"சிரஞ்சீவி ஒரு படம் கூட நடித்துள்ளார், ஒரு வேளை மாப்பிள்ளைகள் மாமனாரை வரதட்சணை,சீர் எனக்கேட்டு துன்புறுத்துவதால் மாப்பிள்ளையை "அல்லு"னு சொல்லுறாங்களா?

உதித்நாரயணன் போன்று மூக்கால் பாடுபவர்களுக்கு  எல்லாமே அல்லு அல்லு ...தல்லு ...தல்லு தான் :-))

#ஆனி-ஆணி:

ஆனி என்பது தமிழ்நாட்காட்டியில் உள்ள தமிழ் மாதமாகும்.

ஆணி என்பது வடிவேலு சொல்லும் "ஆணியே புடுங்க வேண்டாம்' இரும்பு ஆணி :-))

ஆணி என்ற சொல்லுக்கு இரும்பு ஆணி, வலிமை, இன்றியமையாத(முக்கியமான) என்ற பொருள்கள் உண்டு.

மரத்தின் ஆணி வேர்.

ஆணித்தரமாக கருத்தினை *கூறுதல்.

ஆணி என்பதற்கு இங்கு அழுத்தமாக ,வலிமையாக கருத்தினை சொன்னதாக பொருள்.

கூரு- கூர்- sharpness,கூரு கெட்டவன் என்றால் மொக்கையான மூளைத்திறன் உள்ளவர்னு சொல்றாங்க போல.

*கூறு,கூறல் - சொல்,சொல்லுதல்.

 ஒலிக்குறிப்பில் குழப்பும் மற்ற சொற்களை பிறகு பார்க்கலாம்.



மேலும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.

#அதிகம், வடமொழி , தமிழ் -மிகுதி,கூடுதல்.

#அதிசயம், வடமொழி, தமிழ் -புதுமை,வியப்பு.

#அஸ்திபாரம்:கடைக்கால்

#அலுவா- கோதுமை தேம்பாகு.

#அவகாசம்-ஒழிவு,ஓய்வு.

#அவசரம்-விரைவு, பரபரப்பு,பதைப்பு.

#அவசியம்- முதன்மை,கட்டாயம்,இன்றியமையாத

#ஆதிக்கம்-உரிமை,முதன்மை,மேன்மை,தலைமை.

#இதம்,ஹிதம்- இனிமை,நன்மை,அன்பு,அறம்.

#இருதயம்,ஹிருதயம்-நெஞ்சம்,அன்பு,உள்ளம்.

#கட்சி-பக்கம்,சார்பு.

#எதார்த்தம்-உண்மை,உறுதி

# கஷ்டம்- வருத்தம்,துன்பம்

#நிசி -இரவு

#தாமசம்,தாமதம்-தாழ்த்துதல்,அட்டி,மயல்.

#துரிதம்-விரைவு

#நிர்ப்பந்தம்-தொல்லை,நெருக்கடி,வலுக்கட்டாயம்,இடர்.

#நிரூபித்தல்- மெய்ப்பித்தல்,நிலைப்பெறுத்தல்.

# வாந்தி பேதி,- கக்கல்,கழிசல்
----------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத அகராதி,தமிழ் ஆட்சி சொல்லகராதி, தமிழ் அகரமுதலி,http://spokensanskrit.de/,கூகிள்,விக்கி, இணைய தளங்கள்,நன்றி!


Saturday, February 02, 2013

வில்லங்க ரூபம்!

(ஹி...ஹி இந்த வவ்வால் அடங்கவே மாட்டான் போல இருக்கே..அவ்வ்வ்)

லோகநாயகரின் வில்லங்க ரூபம் திரைப்படத்தினை பார்க்கும் வரையில் படம் பற்றி பதிவெழுத வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் லோகநாயகர் மும்பையில் உட்கார்ந்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை எனக்கு சோதனை வந்தால் மதச்சார்பற்ற ஒரு மாநிலம், அல்லது ஒரு நாட்டினை தேடிப்போவேன் என ஒரு டகால்ட்டி பேட்டிக்கொடுத்து சும்மா கிடந்த என்னை உசுப்பிவிட்டார் எனவே தான் இப்பதிவு.

பதிவினுள் செல்லும்முன் கவனிக்கவும்,

நான் இப்பதிவில் லோகநாயகரின் செயல்பாட்டினை நடு நிலையுடனே அலசவுள்ளேன் ,அப்படியும் முன் ஜென்ம விரோதம்,வாய்க்கா வரப்பு தகராறு என கற்பிதம் செய்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் ,மனமகிழ்வு தரும் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட செல்லலாம், நன்றி!

திறந்த மனதுடன் விமர்சனங்களை எதிர்க்கொள்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும்.

# லோகநாயகரின் திரைப்படத்திற்கு தடை விதித்திருக்க  கூடாது என்பதே  எனது கருத்தும் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுறுத்தி விடுகிறேன், இல்லை எனில் அரைகுறையாக படித்துவிட்டு சிலர் பொங்கல் வைக்க கிளம்பிவிடுவார்கள் :-))

உட்ப்பிரிவு-1:

இந்தளவுக்கு படம் வெளியிடுவதில் சிக்கலாக முதல் காரணமும் லோகநாயகரே ஆவார் என்பதையும் பதிவு செய்கிறேன்.

இனி மேற்கொண்டுப்பார்ப்போம்.

# திரைப்படம் தயாரித்து முடிந்ததும் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை  முதலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியிடம் லோகநாயகரே விற்றுள்ளார்.

//Have you already sold the satellite rights of the film?

Yes, to Jaya TV.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/marketing/we-have-to-embrace-technology-and-sail-with-that-kamal-haasan/article4188449.ece

அது ஏன்?

ஏன் எனில் படம் வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் வந்தால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்பதாலேயே,எனவே முன்னரே படத்திற்கு எதிர்ப்பு வரும் என கணித்தே லோகநாயகர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது.

இப்பொழுது தமிழ்நாட்டினை மதச்சார்பு மாநிலம் என பேசும் லோகநாயகர் ,சேட்டிலைட்ஸ் உரிமம் விற்க தேடிப்போனப்போது மதச்சார்பு தன்மை எல்லாம் தெரியாமல் இருந்தாரா?

இல்லை இவர் நாத்திகம் பேசுகிறேன் என சொல்லிக்கொண்டாலும் மதச்சார்ப்பற்று உண்மையில் இருந்துள்ளாரா?

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், தசாவாதாரம் போன்ற படங்களை மதச்சார்ப்பற்றவர் ஏன் எடுத்திருக்க வேண்டும், தனது வணிக நோக்கத்திற்காக மதம் சார்ந்தே படங்களை எடுத்து லாபம் பார்த்தவர் , எதிர்ப்பு என்றதும் ,மதச்சார்பற்ற மாநிலம் தேடுகிறேன் என்பது முரண்நகையாகும்.

ஹே ராம் , இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தியது என சிலர் மேம்போக்காக சொல்லலாம், ஆனால் அதன் அடிப்படை கதை , தனக்கு கெடுதல் செய்த இஸ்லாமிய சமூகத்தினை மன்னித்து நன்மை செய்யும் சகிப்பு தன்மையுள்ள இந்து என்பதே ஆகும்.

அதாவது பெரும்பான்மை இந்துக்கள் சகிப்பு தன்மையுடன் இஸ்லாமியர்கள் செய்யும் தவறை பொறுத்துப்போகிறார்கள் என சொல்லியிருப்பார்.

உன்னைப்போல் ஒருவனில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக போய் , பெரும்பான்மை உள்ள சமூகத்தில் சிறும்பான்மையினர் அடங்கியிருக்க வேண்டும், ஏதேனும் வன்முறை செய்தால் பெரும்பான்மை பதிலடி கொடுத்தால் தாங்க மாட்டீர்கள் என்ற செய்தியினை திரைப்படமாக்கியிருப்பார்.

தசாவதாரம் படத்தில் பயோவார் என்ற கதைக்கு வைணவ பின்னணியே தேவையில்லை, ஆரம்பத்தில் வரும் சிலை மூழ்கடிப்பு எல்லாம் இல்லாமலே அக்கதையை சொல்ல முடியும், ஆரம்பக்காட்சிகளை கட் செய்துவிட்டு படம் பார்த்தாலும் பயோ வார் கதை தெளிவாக புரியும்.

ஆனால் தேவையில்லாமல் சைவ-வைணவ பிரச்சினையை எடுத்துக்கொண்டிருப்பார், அறிவியல் ரீதியான பயோ வார் படத்திற்கு எதற்கு வைணவ முலாம்?

இப்படி மதம் சார்ந்து படைப்புகளை உருவாக்கி ,பணம் சம்பாதித்தவர், பணம்  பண்ண துடிப்பவர், இவர் எப்படி மதச்சார்புள்ள மாநிலம் என தமிழகத்தினை குற்றம் சொல்ல முடியும்?

மதம் மட்டுமல்ல ஜாதியத்தினையும் வணிக நோக்கிற்காக அவ்வப்போது பயன்ப்படுத்திக்கொள்பவரே லோகநாயகர், தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் எல்லாம் தேவரின புகழ்ப்பாடி வியாபாரமாக்கியிருப்பார்.

லோகநாயகருக்கு தமிழகத்தில் நிலவும் ஜாதிய பிரச்சினைகள்,சண்டைகள் தெரியாதா? அப்படி தெரிந்தும் இது போல படமெடுக்க காரணம் ,சர்ச்சைகளை பயன்ப்படுத்தி படத்தினை ஓட வைக்கவே என சின்ன குழந்தையும் சொல்லும், அப்படிப்பட்டவர் என்னமோ நாத்திகன்,நடுநிலையானவன் ,ஆனால் தமிழ்நாடு மத வெறியுடன் உள்ள மதச்சார்பு மாநிலமாகிவிட்டது என சொல்வதெல்லாம் உலக மகா காமெடி.

இவர் நாத்திகம் பேசுவதெல்லாம் சுயலாபத்திற்காக தான், தன் மீதுள்ள பிராமண சாயம் போகவும், தன்னை சாம்பார் நடிகர் என சொல்லிவிடாமல் இருக்கவுமே புரட்சிகர நாத்திக வேடம் போட்டுள்ளார். ஆனால் அடிப்படையில் உண்மையான நாத்திக உணர்வில்லாமையால் அவ்வப்போது அவரது மதவாத சுய ரூபம் திரைப்படங்களில் வெளியாகிவிடுவது வழக்கம்.

(அமீர்கான் தான் முன்மாதிரி போல)

# சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் வரையில் டிடிஎச் இல் வெளியிடும் எண்ணமே இல்லை , ஆனால் பின்னர் விநியோக முறையில் சரியான விலைக்கு விற்க முடியவில்லை என்றதும் , டிடிஎச் இல் வெளியிடும் திட்டம் தீட்டியுள்ளார், ஆனால் அதனை சேட்டிலைட்ஸ் உரிமம் விற்ற தொலைக்காட்சி நிறுவனத்திடம் உரியமுறையில் தெரிவிக்கவில்லை,

ஏன் சேட்டிலைட்ஸ் உரிமம் பெற்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?

ஏன் எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் என விற்றால் அதிலேயே டிடிஎச் , வீடியோ ஆன் டிமாண்ட்  முறையில் வெளியிடும் அனைத்து உரிமங்களும் அடங்கிவிடும், எனவே சேட்டிலைட்ஸ் உரிம ஒப்பந்தம் போடும் போடுதே "Basic satellites rights"  எனக்குறிப்பிட்டு விட வேண்டும் ,பின்னர் sub-clause ஒன்றில் டிடிஎச், வீடியோ ஆன் டிமாண்ட் இன்ன பிற உரிமங்கள் அளிக்கப்படவில்லை என ஒப்பந்தம் தயாரிக்கப்பட வேண்டும் , அப்படி ஒப்பந்தம் செய்யாமல் விற்கப்படும் சேட்டிலைட்ஸ் உரிமத்துடன் அனைத்து வகையான தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமங்களும் வாங்குபவருக்கு சேர்ந்து விடும்.

T.V. Rights என ஒப்பந்தம் போட்டுவிட்டால் , டிவிடி உரிமமும் சேர்ந்துவிடும், எனவே ஒப்பந்தங்களில் பயன்ப்படுத்தும் வார்த்தைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்.

நெகட்டிவ் ரைட்ஸ் என எழுதி கொடுத்துவிட்டால் படத்தின் அனைத்து உரிமங்களும் போய்விடும், பைனான்சியரிடம் நிதி உதவிப்பெரும் போது இப்படி நெகட்டிவ் ரைட்ஸை எழுதி வாங்கிக்கொண்டு தான் பணமே கொடுப்பது வழக்கம்.

நாயகன் படம் அக்காலக்கட்டத்தில் சுமார் 1.25 கோடிக்கு தயாரிக்கப்பட்டு சரியாக விலைப்போகாத சூழலில் ஜீவி நெகட்டிவ் ரைட்ஸ் என அனைத்து உரிமையும் வாங்கியதோடு அல்லாமல், விருது கிடைத்தாலும் எனக்கே தான் என நிபந்தனை விதித்து முக்தா சீனிவாசனிடம் இருந்து நாயகனை வாங்கினார்.

படம் விலையாகாத சூழலில் தயாரிப்பாளர் எப்படியெல்லாம் அடங்கிப்போக வேண்டியுள்ளது என்பதற்கு இது உதாரணம், ஆனால் அந்த தயாரிப்பாளரை தான் கஞ்சன் என 25 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சியேயில்லாமல் குதறினார் லோகநாயகர்.

சேட்டிலைட்ஸ் உரிமத்தினை விற்கும் போது சரியாக முன் திட்டமிடவில்லை, உரிம விவகாரத்தில் ஒரு புரொபெஷனல் அப்ரோச் இல்லாமலே செயல்பட்டுள்ளது தெரிகிறது.ஆனாலும் முதலில் டிடிஎச் இல் வெளியிட டாடா ஸ்கையுடன் பேச்சு வார்த்தை போதே அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனைக்கண்டுக்கொள்ளாமல் லோகநாயகர் தொடர்ந்துள்ளார்.

பின்னர் எதிர் தரப்பு தொலைக்காட்சியையும் டிடிஎச் ஒளிப்பரப்பு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே , தங்கள் அதிருப்தியை சொல்லி டிடிஎச் இல் முன்னரே வெளியிடப்படும் என ஏன் சொல்லவில்லை, டிடிஎச் இல் வெளியாகும் படத்திற்கு சேட்டிலைட்ஸ் உரிமமாக பெரும் தொகை எதற்கு என கேட்டுள்ளார்கள், இதை விட அதிக தொகைக்கு என்னால் விற்க முடியும் என முன்னர் செய்த ஒப்பந்தத்தினை நீக்கிவிட்டு ,பின்னர் விஜய் தொலைக்காட்சியிடம் விற்றுள்ளார்.

சேட்டிலைட்ஸ் உரிம இழுப்பறிப்பற்றி  ஜீவியிலும் செய்தி வந்துள்ளது.

சிலர் நினைக்கலாம் சேட்டிலைட்ஸ் உரிமம் தனி, டிடிஎச் உரிமம் தனி என்பது புரியாமலா ஆளும் தரப்பு சேனல் இருக்கும் என, ஆனால் டிராய் வழிக்காட்டுதலிலேயே சேட்டிலைட்ஸ் சேனலின் ஒரு அங்கமாக தான் டிடிஎச் வருகிறது. எனவே ஒப்பந்தம் செய்யும் போது சப்-கிளாஸ் போட்டு தெளிவாக சொல்லப்பட வேண்டும்.

மேலும் சேட்டிலைட்ஸ் சேனலின் விதி முறைகள் தான் டிடிஎச் ஒளிப்பரப்புக்கும் பொருந்தும், சேட்டிலைட்ஸ் ஒளிபரப்பு என்றால் அது டிடிஎச் ஒளிபரப்பும் தான் என சொல்லி  டிடிஎச் ஒளிபரப்பிற்கு கேளிக்கை வரியாக 30 சதவீதம் தமிழக அரசு விதித்தற்கு எதிராக ஒரு வழக்கினை போட்டு தடையாணை வாங்கியிருக்கிறார்கள், அந்த வழக்கின் பின்னணியில் உள்ளது கேடி பிரதர்ஸ் ஆகும்.

ஏன் எனில் தமிழ்நாட்டில் டிடிஎச் ஒளிபரப்பிற்கு அதிக வரி விதித்தால் பாதிக்கப்பட போவது அவர்களே, தமிழ்நாட்டில் சுமார் 80% டிடிஎச் மார்க்கெட்டினை வைத்துள்ளார்கள்.

செய்தி:1

The Jayalalitha government’s imposition of 30 per cent entertainment tax surpasses that of the state of Uttar Pradesh (25%), and is aimed at directly hurting the Kalanithi Maran-promoted Sun Group. Other DTH operators do not have a wide presence in Tamil Nadu, which accounts for approximately seven per cent of the subscriber universe.

http://www.indiantelevision.com/headlines/y2k11/sep/sep164.php


செய்தி-2:

//Allowing a batch of petitions filed by DTH service providers Bharti, Dish TV India Ltd, Reliance, Sun Direct and Tata Sky Network, a Division Bench of the Madras High court has held that the 30 per cent entertainment tax imposed on DTH (Direct-to-Home) services in Tamilnadu is unconstitutional.//

//” The Hon.Court further held that the tax on DTH was violative of Article 14 of the Constitution of India since there was no difference in the nature of DTH Services and Cable Network.//

http://spectralhues.com/television/2012/10/9252/


மேலும் அரசு கேபிள் டீவி வருவதற்கு எதிரான வேலைகளை தில்லியில் கேடி பிரதர்ஸ் செய்வதாகவும் ஒரு கடுப்புண்டு,எனவே இந்நிலையில் அவர்களுடன் டிடிஎச் ஒளிபரப்பில் கூட்டு சேர்ந்தது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்க்கும் செயலாக போய்விட்டது.

சேட்டிலைட்ஸ் உரிம விற்பனையில் செய்த குழப்படிகளே பின்னர் பிரச்சினை வளரக்காரணமாக அமைந்து விட்டது,இதனை கணிக்க தவறிவிட்டார்  என்றே சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சி தரப்பிற்கு சேட்டிலைட்ஸ் உரிமத்தினை தானாக தேடிப்போய் விற்றதே எதிர்ப்பினை சமாளிக்க தான், அப்படி இருக்கும் போது அந்த டீலை அவர் கடைசி வரையில் தொடர்ந்திருக்க வேண்டும்,ஆனால் டிடிஎச் மூலம்ம் கூடுதல் வருமானம் வரும் என்றதும் திசை மாறிவிட்டார், அப்படியே டிடிஎச் இல் வெளியிட விரும்பினாலும் அதனை உரிய முறையில் எடுத்து சொல்லி இருக்கலாம், அல்லது எதிர் தரப்பு சேனலுடன் கூட்டு சேராமல் இருந்திருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்ய தவறிவிட்டார்.

இதற்கு காரணம் நாம் என்ன செய்தாலும் ஆட்சேபணை தெரிவிக்க மாட்டார்கள் என ஓவர் காண்பிடென்ஸ் எனலாம். பாலுக்கும் காவல் ,பூனைக்கும் நண்பன் என இரண்டு தரப்பிலும் வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார் ஆனால் அதுவே எதிராக திரும்பிவிட்டது.

 வழக்கமாக ஆடியோ வெளியீட்டினை ஒளிப்பரப்புவதால் பெரிதாக விளம்பர வருவாய் வருவதுதில்லை எனவே பெரும்பாலான படங்களின் ஆடியோ வெளியீட்டினை சேனலின் அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவதுண்டு.
ஆனால் நல்ல விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதால்  படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டிலேயே மூன்று இடத்தில் நடத்தி நேரடி ஒளிபரப்பும் செய்துக்கொண்டார், சேட்டிலைட்ஸ் ரைட்ஸ் வாங்கிய படம் என்பதால் நேரடி ஒளிப்பரப்பினை அதிக செலவு செய்து ஆளுங்கட்சி தரப்பு சேனல் செய்துள்ளது,இந்நிலையில் டிடிஎச் ஒளிப்பரப்பினைப்பற்றி முன்னரே தெரிவிக்காமல் சேட்டிலைட்ஸ் உரிமத்தினை வாங்கியதால் இழப்பு என்ற மனக்கசப்பும் வெளியாக , உரிமம் கைமாறியது , இது படத்தினை விளம்பரப்படுத்த தங்களைப்பயன்ப்படுத்திக்கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றிவிடப்பட்டதாக நினைக்க வைத்தது.

நம்மோடு வியாபாரம் செய்ய வந்ததே எதிர்ப்பை சமாளிக்க தானே, படம் வெளியிடும் வரையில் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டு கடைசியில் நழுவியதை சந்தர்ப்பவாதமாக ஆளும்தரப்பு கருதிய வேளையில், மார்க்கப்பந்துக்களுக்கு படத்தினை போட்டுக்காட்டி இன்னொரு தவறினை செய்து விட்டார் லோகநாயகர்.

அரேபிய சித்தாந்தப்படி புதிதாக முளைத்துள்ள இயக்கங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஏதேனும் பிரச்சினை சிக்குமா என ஆர்வத்துடன் அலையும் வேளையில் ,படம் போட்டுக்காட்டியது "பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தார் "போன்ற வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படிப்போட்டுக்காட்டவில்லை எனில் மார்க்கப்பந்துக்கள் கடைசி வரையில் எங்களுக்கு படத்தினைப்போட்டுக்காட்டு என்ற கோஷத்துடன் தான் போராடியிருப்பார்கள், தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கோஷமே எழுந்திருக்காது,அதனை அரசும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்காது, அந்நிலையில் தடை விதிக்க வலுவான காரணங்களும் சொல்ல இயலாது.

படத்தை போட்டுக்காட்டு என பிரச்சினை நடைப்பெற்று கொண்டே இருக்கும் வேளையில் படத்தினை வெளியிட்டு இருக்கலாம், படம் வந்த பின்னர் எதிர்ப்பு காட்டினாலும், ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சில காட்சிகள் நீக்குகிறேன் என சொல்லி சமாளித்திருக்கலாம், படமே வெளியாகிடுச்சு,நாமளும் எதிர்ப்பை காட்டினோம்,நாம சொன்னதால் சிலக்காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கு எனவே நாமே வெற்றிப்பெற்றோம் என மார்க்கப்பந்துக்களும் மனத்திருப்தி அடைந்து இருப்பார்கள்.

இதற்கு வாய்ப்பிருக்கா என நினைக்கலாம், துப்பாக்கி படத்திற்கு எப்படி எதிர்ப்பு கிளம்பியது எப்படி முடிவுற்றது என்பதே நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ஆனால் அப்படி எல்லாம் ஏன் செய்யவில்லை? மார்க்கப்பந்துக்களுக்கு போட்டுக்காட்டினால் புரிந்துக்கொண்டு சமாதானமாக போய்விடுவார்கள் என எப்படி நினைத்தார்?  அவர்கள் போராடுவதே தங்களின் இருப்பை ஊடகத்திலும், மக்களிடமும் நிலை நிறுத்தத்தானே, எனவே என்ன தான் விளக்கினாலும் ஏற்றுக்கொள்ளப்போவதேயில்லை என்பது நன்கு தெரிந்த ஒன்று.

இந்நிலையில் சென்சார் பெற்ற படத்தினை மதவாத இயக்கங்களுக்கு போட்டுக்காட்டி அபிப்பிராயம் பெருவது அவசியமேயில்லை,ஆனால் அப்படி செய்து தவறான முன்னுதாரணத்தினை உருவாக்கிவிட்டார்.

குஸ்கா பிரியாணி சாப்பிட போனவங்களுக்கு லெக் பீஸ் அதுவும் ஆட்டு லெக் பீஸுடன்  பிரியாணி போட்டா சும்மா இருப்பாங்களா, இன்னும் அதிக வீரியத்துடன் படத்தினை தடை செய் என கிளம்பிவிட்டார்கள் ,ஏற்கனவே தங்களை சுயலாபத்திற்காக பயன்ப்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டதாக கடுப்பில் இருக்கும் ஆளும் தரப்பு,சேட்டிலைட்ஸ் உரிமம் எங்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது எனவே டிடிஎச் இல் வெளியிட கூடாது என நேரடியாக தடை விதிக்க கூட வாய்ப்பிருந்தும் செய்யவில்லை ஏனெனில்  அப்படி செய்தால் நேரடியான மோதலாக போய்விடும் என்பதால் ஆளும் தரப்பு காத்திருந்தது இவ்வேளையில் மார்க்கப்பந்துக்களின் புகார் ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது எனலாம் எனவே கிடைச்ச கேப்பில் கெடா வெட்டிவிட்டார்கள்.

# தனது இத்தனை ஆண்டுகால உழைப்பையும் முதலீடாக இப்படத்தில் போட்டுள்ளேன், படம் வரவில்லை எனில் எனது சொத்துக்கள் அனைத்தும் போய்விடும் எனவும் சொல்கிறார் ஆனால் அதில் உண்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே விவரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.

(பிவிபி சினிமா தயாரிப்பில் பங்குபெற்றதை காணலாம்)

படத்தின் தயாரிப்பாளராக முதலில் இருந்தது பிவிபி சினிமாஸ் என்ற நிறுவனமே, அவர்களிடம் சுமார் 50 கோடி பணம் பெற்று படத்தயாரிப்பு நடந்து வரும் போது பட்ஜெட் அதிகமாகிவிட்டது 100 கோடி ஆகும் என சொன்னதால் , இப்படத்துக்கு 100 கோடி செலவிடுவது வியாபார ரீதியாக ரிஸ்க் என மேற்கொண்டு பணம் தரவில்லை, எனவே லோகநாயகரே தயாரிப்பாளராக பொறுப்பில் எடுத்து முடித்தார் என சொல்கிறார்.

ஆனால் மேற்கொண்டு பெரிதாக பணமே முதலீடு செய்யாமல் 50 கோடியில் தான் படம் எடுத்துள்ளார் , 95 கோடி என சொல்வது எப்படி எனில் லோகநாயகரின் நடிப்பு,கதை,வசனம்,திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றிற்கு சம்பளம் என ஒரு பெருந்தொகையை சேர்த்து சொல்வதாகும்,இதற்கெல்லாம் சுமார் 40 கோடியை கணக்கில் சேர்க்கிறார். எனவே படத்தின் உண்மையான தயாரிப்பு செலவென்பது சுமார் 50-60 கோடிக்குள் மட்டுமே, 50 கோடி ரூபாய் பிவிபி மூலம் வந்துவிட்டது ,மேற்கொண்டு சில கோடிகள் செலவு செய்துவிட்டு மொத்த உழைப்பும் கொட்டியுள்ளேன்,கடன் வாங்கியுள்ளேன் என சொல்வதெல்லாம் கிடைத்த வாய்ப்பினை பயன்ப்படுத்தி அனுதாப அலையை உருவாக்கவே எனலாம்.

தற்போது தமிழகத்தில் வெளியாகாத சூழலில் கூட படத்திற்கு செலவிடப்பட்ட தொகையில் 90% சதவீதத்துக்கு குறையாமல் திரும்ப எடுத்துவிட்டார் (அதிகமாக எடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது படத்தின் உண்மையான பட்ஜெட் தெரியாத நிலையில் குறைவாக 90% எனக்கொள்வோம்)

எப்படி எனப்பார்க்கலாம்.

இந்தி விநியோக உரிமையை ஏக்தா கபூரின் Balaji Motion Pictures வாங்கியாகிவிட்டது , மிக குறைவான தொகை என சொன்னாலும் ஒரு பத்து கோடிக்கு கூடவா வியாபாரம் ஆகி இருக்காது?

அதே போல தெலுகு விநியோக உரிமையை தாசரி நாரயண ராவ் வாங்கியுள்ளார், அதன் மூலமும் ஒரு 10 கோடி கிடைக்கும் என வைக்கலாம்.

கேரளா,கர்நாடகா விநியோகத்தின் மூலம் 10 கோடி எனலாம்.

அமெரிக்க விநியோக விற்பனை -10 கோடி

யு.கே மற்றும் ஐரோப்பிய உரிமை- 10 கோடி

மலேசியா,சிங்கப்பூர்,அரபு தேசம்- 10 கோடி

சேட்டிலைட்ஸ் உரிமை- 12 கோடி

ஆடியோ உரிமை குறைந்த பட்சம் என்றாலும் -1 கோடி

மொத்தமாக சுமார் 73 கோடிக்கு தமிழகம் தவிர்த்து விற்பனை ஆகிவிட்டது.

மிகக்குறைவான தொகையையே கணக்கில் வைத்து சொன்னது இது, இதை விட குறைவான விலைக்கு தான் மேற்சொன்ன ஏரியாக்கள் விலை போகும் என்றால், உலகநாயகன் ,அயல்நாடுகளில் பெரிய மார்க்கெட் இருக்கு என இத்தனை காலமாக சொன்னதெல்லாமே பொய் என்றாகிவிடும்.

தமிழகத்தில் வெளியாகாத சூழலிலும் இவ்வளவு வருமானம் வர வாய்ப்புள்ள நிலையில் எனது சொத்துக்கள் அனைத்தும் இழந்துவிடுவேன் , நான் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்பதெல்லாம் மிகையான நடிப்பே என்பேன்.

தமிழக வெளியீட்டுக்கு பின்னர் கிடைக்கும் வருவாய் முழுக்க லாபமாகவே கருதப்படும்.

எனவே இத்தனை வருட சம்பாத்தியம் அத்தனையும் பணயம் வைத்துள்ளேன், இழந்துவிடுவேன் என சொல்வதில் உண்மையில்லை.

பின்னர் இப்படி எல்லாம் ஏன் பேசுகிறார் என்றால் ,வருங்காலத்தில் உதவும் என்பதும் மேலும் படம் சுமாராக இருப்பதாக பேச்சு நிலவுவதால் படம் சரியாக வசூலாகவில்லை என்றால் யாரும் திரும்பப்பணம் கேட்காமல் இருக்கவுமே, அப்படிக்கேட்டால் எதிர்ப்பால் சரியாக ஓடவில்லை, எனக்கு நஷ்டம் நான் எப்படி திரும்ப பணம் கொடுப்பேன் என சொல்லிவிடலாம் :-))

டிடிஎச் ,எதிர்ப்பு ,தடை என அமோகமாக விளம்பரம் கிடைத்தும் ,அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 44 திரையரங்குகளில் இருந்து சுமார் 3.4 கோடி அளவுக்கு தான் வசூலாகியுள்ளது, வார நாட்களில் வசூல் இன்னும் குறையும், மேலும் நாட்கள் செல்ல செல்ல குறையவே செய்யும், ஒரு வாரம் தாண்டி ஓடுவதே அமெரிக்கா போன்ற நாடுகளில் அபூர்வம் ,எனவே 10 நாட்கள் ஓடுவதாக வைத்துக்கொண்டாலும் , சுமார் 10 கோடி வசூலாவது கூட கடினமே, இது விநியோக செலவினை தான் ஈடுகட்டும், மேற்கொண்டு தியேட்டர் வாடகை, விளம்பர செலவு ஆகியவை எடுக்க இயலாது, விநியோகஸ்தரை பொறுத்த வரையில் நட்டம் என்ற நிலையினை தான் உருவாக்கும் சூழல் உள்ளது.

வெளிநாட்டு உரிமம் வாங்கியவர்களுக்கு பெரும்பாலும் திரையிடல் மூலம் போட்ட பணத்தினை எடுத்தால் போதும் என்ற நிலையே நிலவும், அவர்கள் லாபத்தினை டிவிடி வெளியிட்டு சரிக்கட்டிக்கொள்வார்கள்,அதனால் தான் வெளிநாட்டிலிருந்து வரும் டிவிடிக்குறித்து நம்ம தயாரிப்பாளர்கள் கண்டுக்கொள்வதேயில்லை, அதனைக்கேள்விக்கேட்டால் வெளிநாட்டு உரிமம் விலைப்போகாது!

உண்மையில் எதிர்ப்பு நிலவியதால் தான் வெளியான இடங்களில் இந்த அளவுக்கு ஆவது படம் ஓடுகிறது, எதிர்ப்பு, தடை ஆகியவை மிக நல்ல விளம்பரமாக அமைந்து விட்டது,அதற்கு தானே ஆசைப்பட்டார் லோகநாயகர் !

# அரசியல் ரீதியாவும்,மத ரீதியாகவும் தான் வஞ்சிக்கப்படுவதாகவும், தனக்கு ஆதரவாக திரையுலகமும், தமிழக மக்களும் திரள வேண்டும், கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு மதச்சார்புள்ள மாநிலமாக ,அரசியல் பழிவாங்கும் மாநிலமாக மாறிவிட்டதாக இப்பொழுது கூப்பாடு போடும் லோகநாயகர், இதற்கு முன்னர் எப்பொழுதாவது சக கலைஞர்களுக்கு இதே போன்ற பாதிப்பு வந்தப்போது குரலெழுப்பியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லோகநாயகரைப்பொறுத்த வரையில் மதம்,ஜாதியம் ஆகியவை படைப்புக்கு மூலப்பொருள்,சர்ச்சைகள் ,தடை எனில் விளம்பரம் என ஜெகஜோதியாக கல்லா கட்டும் வணிகர்.

தனிப்பட்ட முறையில் மூத்த திரைக்கலைஞன் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்றே அவருக்கு ஆதரவாக நினைக்கிறேன்,ஆனால் லோகநாயகர் மற்றவர்களுக்காக இவ்வாறு நினைப்பதில்லை என்பது மனதில் உறுத்தலாக நிழலாடுகிறது.

#உதாரணமாக வைகைப்புயல் வடிவேலின் நிலையை பார்ப்போம், அவர் என்ன சினிமா மார்க்கெட் இழந்தா வீட்டில் இருக்கிறார், தேர்தல் பிரச்சாரம் செய்தார், அது அவரது உரிமை, அவர் பாதிக்கப்பட்டப்போது தனக்கு அரசியல்ரீதியாக ஒரு ஆதரவு வேண்டும் என அப்போதைய ஆளுங்கட்சியிடம் உதவிக்கு சென்றார் ,அவரை பயன்ப்ப்படுத்திக்கொண்டார்கள், தேர்தல் முடிந்ததும் அவரும் தனது வேலையைப்பார்ப்பேன் என்றார்,ஆனால் ஏன் திரையுலகில் ஒருவரும் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லை, சில நாட்களுக்கு முன்னர் வடிவேலின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள், கதை விவாதத்தின் போதே வடிவேலுவை மனதில் வைத்தே சீன் பிடித்த இயக்குனர்கள் எல்லாம் திடீர் என  அவரை மறந்து போனது ஏன்?

ஆட்சியாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்தவரை பயன்ப்படுத்தி ஆளும்தரப்பை கோபப்படுத்தி விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதை தானே, ஏன் லோகநாயகரே அவரது படத்தில் பயன்ப்படுத்திக்கொள்ளவில்லையே ,அப்போ எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள், பழிவாங்கல்கள் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்தது எப்படி?

வடிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனிப்பட்ட விரோதமாக கருதி அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியது கேப்டனின் ஆட்கள் தானே, அதனால் தானே அரசியல் அடைக்கலம் தேடி போய், இப்போது பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் அதே கேப்டன் இப்பொழுது கருத்து சுதந்திரம் ,அரசியல் பழிவாங்கல் என சொல்லி லோகநாயகருக்கு ஆதரவாக பேசுவது எந்த வகையில் சேர்த்தி?

#நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இடைஞ்சல்கள் வந்தப்போது லோகநாயகர் குரல் எழுப்பினாரா? இல்லையே ஆனால் அதனை கிண்டல் செய்து உன்னைப்போல் ஒருவனில் ஒரு காட்சி மட்டும் வைத்துக்கொண்டார்?

ஒரு நடிகர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுகுவது அப்பொழுது காமெடியாக பட்டது ஆனால் இப்பொழுது அதே வேலையைத்தானே லோகநாயகர் செய்கிறார் :-))

காவலன் படம் வெளியிட பல சிக்கல்கள் உருவான போதும் முனை ஒடிந்த மன்மதன் அம்பாக கழக அரசியல் சக்தியிடம்  அல்லவா முடங்கி கிடந்தார் :-))

அவ்வளவு ஏன் வெகு சமீபத்தில் டொக்டர் விஜயின் துப்பாக்கிக்கு மார்க்கப்பந்துக்கள் பிரச்சினை கொடுத்தார்கள் ,அப்போதாவது வாயை தொறந்தாரா என்றால் இல்லை, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் மதவாதமே இல்லை, தலைவர் படத்துக்கு எதிர்ப்புன்னா தான் மதவாதம் கண்ணுக்கே தெரியும் :-))

அப்பொழுதெல்லாம் அரசியல் பழிவாங்கல் ,படைப்பாளியின் சுதந்திரம் பாதிக்கப்படுவது கண்ணுக்கே தெரியாமல் போன மாயம் என்னவோ?

# நான் கடவுள் படத்திற்கு முதலில் அஜித்தினை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது, ஆனால் ஆறுமாதமாகியும் படத்தயாரிப்பு துவங்கவேயில்லை, பின்னர் இந்த பாத்திரத்துக்கு நீங்க சரிப்பட்டு வர மாட்டிங்கன்னு சொல்லிவிட்டு கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கினார்கள், இதெல்லாம் அனைவருக்குமே நன்கு தெரியும், ஆனால் இதே போல பிரமிட் சாய்மீரா "மர்மயோகி" என்ற படம் தயாரிக்க லோகநாயகரிடம் 14 கோடி அட்வான்ஸ் கொடுத்தது ,படம் எடுக்க இயலவில்லை என்றப்போது அட்வான்ஸ் கொடுத்தால் படம் எடுக்கணும் ,இல்லைனா திரும்ப கொடுக்க முடியாது என சட்டம் பேசினார்.

அப்படி எனில் அஜித்திடம் கொடுத்த அட்வான்சை மிரட்டி வாங்கியதை பற்றி ஏன் லோகநாயகர் கவலையே படவில்லை ஏதேனும் குரல் கொடுத்தாரா அப்போது இல்லையே? ஏன் எனில் நான் கடவுள் படத்தினை ஆரம்பத்தில் தயாரித்தது தேனப்பன், லோகநாயகரின் முன்னால் நிர்வாகி,நண்பர் எனவே மிரட்டியதை அறிந்தும் கண்டுக்காமல் இருந்தார்,அதுவே தனக்கு என்றால் சட்டப்படி பேசுவார் :-))

தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சூசு :-))

அப்படியிருப்பினும் இச்சூழலில் அஜித் ,லோகநாயகருக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பெருந்தன்மையை காட்டியுள்ளார்.

அதே போலவே லோகநாயகரின் சந்தர்ப்பவாதங்களை புறந்தள்ளிவிட்டு அவருக்கு ஆதரவாக தான் நடுநிலையான தமிழக மக்களும் பேசிவருகிறார்கள், ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் கணக்கில் கொள்ளாமல் தமிழகமே மதவெறிக்கொண்டுள்ளது, வசிக்க தகுதியற்று போய்விட்டது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கும் வகையில் லோகநாயகர் பேட்டிக்கொடுத்துள்ளது, அவரது சுயநலத்தினையே காட்டுகிறது.

ஹி...ஹி எவ்வளவு தான் எங்களை கேவலப்படுத்தினாலும் நாங்க எல்லாம் உயிருக்கு உயிரான ரசிகர்கள் , எப்படியும் படம் பார்த்தே தீருவோம் எனவே தமிழ்நாட்டில் படம் ஓடவில்லை என்றாலும் பக்கத்து மாநிலத்துக்கு போயாவது பார்ப்போம் ஏன்னா நாங்க தமிழர்கள் ,தீவிர சினிமா அடிமைகள் :-))

ஹி...ஹி இம்புட்டு பேசினாலும் நானும் படம் பார்ப்பேனில்ல,ஏன்னா நானும் தமிழனாச்சே :-))

கொசுறு:

புதுவையில் படம் பார்க்கலாம்னு திட்டம் போட்டு சென்றேன்,அங்கு ரத்னா தியேட்டரில் பெரிய பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க, ஆனால் படம் தான் ஓடவில்லை அவ்வ் :-((

ரத்னா தியேட்டர்:


பேனர்.


அறிவிப்பு:


இப்படி ஒரு அறிவிப்பை வைத்துவிட்டு போஸ்டரே ஒட்டாமல் சமர் படத்தை வெற்றிகரமாக 20 ஆவது நாளாக ஓட்டிக்கிட்டு இருக்காங்க,அவ்வ்.

சமர் படத்தை பார்க்கலாம்னு நினைச்சா சப்பை திரிஷா கண்ணு முன்னால வரவே ,ரிஸ்க் எடுக்க மனமில்லாமல் நீராகாரம் சாப்பிட அருகில் இருந்த "நீராகார அங்காடி"யில் அடைக்கலமானேன் ,

(ஹி...ஹி டுபோர்க்ரூபம்!)

எறும்பு கடிச்சாப்போலவே இருக்கவே அடுத்த ஆட்டம் இது!

-----------------

பின் குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

இந்து ,தினமலர், விக்கி,கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-------------------------