Monday, October 21, 2013

Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!


(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA) அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே' மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்" உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு" எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ" மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்" எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை " நன்மை பயக்கும் பூச்சிகள் " என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே" என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி" தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!

Wednesday, October 09, 2013

புதுவை புத்தகச்சந்தை- 2013!

(புத்தகம்னா ரொம்ப புடிக்கும்,புத்தகம் படிக்கிறவங்களையும் ரொம்ப புடிக்கும்,பொதுவாத்தான் சொன்னேன்...ஹி..ஹி)


வாரக்கடைசியில ஊர்ப்பக்கமா போயிட்டு வரலாமேனு கிளம்பினேன் , கடற்கரையோரமா போனால் காத்து சிலு சிலுனு ஜில்பான்ஸா அடிக்கும் , அப்பிடியே போற வழியில புதுவையில தொண்டைக்கு இதமா நல்லத்"தண்ணி" கிடைக்கும் தொண்டைய கொஞ்சம் நனைச்சிக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வச்சால் என்னிக்கு நாம நினைச்சது நடந்திருக்கு இன்னிக்கு நடக்கனு நொந்துக்க வேண்டியதா போச்சு, கடைசி நேரத்துல நம்ம வாகன ஓட்டி வேற வேலை இருக்குனு காலை வாரிட்டார்(சீப்பு வச்சு வாரினாரானுலாம் கேட்கப்படாது)சரினு கடைசியில பஸ்ஸ புடிக்கலாம்னு கிளம்பினா , ஊருல இருக்க எல்லாருமே அன்னிக்குனு ஊருக்கு கிளம்பிடுறாங்கய்யா அவ்வ்!

ஒரு வழியா தமிழர்களின் கலாச்சாரப்படி சன்னல் வழியா துண்டப்போட்டு எடம்புடிச்சு ,ஏறியாச்சு ,புதுவையில இறங்கியும் ஆச்சு, இறங்கியதும் நம்ம கண்ணில பளிச்சுனு ஒரு வெளம்பரம் பட்டுச்சு , புத்தி வேண்டாம்னு சொன்னாலும் ,மனசு மசால் வடை தேடிப்போற எலி மாதிரி சொன்னப்பேச்சு கேட்க மாட்டேங்குது அவ்வ்!



யே யப்பா ஏதோ அஜால் குஜால் விளம்பரம் பார்த்து எங்கியோ போய் மாட்டிக்கிட்டான்னு குஜாலாக வேண்டாம், நான் பார்த்த வெளம்பரம் "புதுவை புத்தகக் கண்காட்சி-2013" என்பது தான்!

ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மைதானத்தில் நடப்பதாக போட்டிருந்தது, இவ்விடத்தில் தான் புதுவையில் பெரும்பாலான பொருட்காட்சி &கண்காட்சிகள் (கண்ணை தோண்டி வச்சிருப்பாங்களானு கேட்கப்படாது) நடக்கும் ,அல்லது பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா திடலில் நடக்கும்.

சரி இம்புட்டு தூரம் வந்தாச்சு ,ஒரு எட்டு புத்தகச்சந்தைக்கு  போயிட்டு அப்பாலிக்கா தாகசாந்தி செய்துக்கலாம்னு ஒரு தானீயங்கி மூவுருளிய புடிச்சா , ரொம்ப நியாயமா ஒரு கொள்ளைரேட்டு சொல்லுறாங்க,  பேருந்து நிலையத்தில இருந்து ஏ.எஃப்டி மில் திடல் சுமார் 1.5 கி.மீ தான் இருக்கும் அதுக்கு  ரூ 60 னு சொல்லுறாங்க, ஹே...ஹே நாம கேட்ட ஆளு எப்புடினு பாவம் பயப்புள்ளைக்கு தெரியலை , போட்ட பிளேடுள , வேற எதாவது வண்டிப்புடிச்சுக்கோங்க , ஆளைவிடுனு அப்பீட் ஆகிட்டாப்படி, அப்புறம் 30 ரூவாய்க்கு சல்லீசா ஒரு தானியப்புடிச்சு சந்தைக்கு போயாச்சு, இனிமே சந்தை நிகழ்வுகளை ஒளிப்படங்களாக காணுங்கள்!

ஏ.எஃப்.டி திடல் என்பது புதுவை கடலூர் சாலையில் , புதுவை உயர்நீதிமன்ற கிளைக்கு எதிரில் உள்ளது.

புத்தகச்சந்தையின் முகப்பு ,மஞ்சள் வெயில் மாலையிலே சும்மா தகத்தகனு எம்சிஆரு மாதிரி சொலிக்குது :-))




வலப்புறம் உணவகம் என்ற பெயரில் ஒரு தகர கொட்டாயில இமாச்சலப்பிரதேஷின் ஆப்பிள் சூசு கடையும்,பஜ்ஜி,போண்டா கடையும் வச்சிருக்காங்க. சாப்பிடத்தூண்டும் வகையில் பெருசாவோ,சிறுசாவோ அல்லது திரிசாவோ இல்லை,எனவே ஒரு ஆப்பிள் சூசு மட்டும் குடிச்சு பார்த்தேன் , 20 ரூபா , காசுக்கு பழுதில்லைனு சொல்லலாம்.




#இந்த மஞ்சக்கலர் போர்டை படிக்காம உள்ள போயிட்டு , வரும் போது ஒரு சலசலப்பை கிளப்பிட்டேன் , ஹி...ஹி கடமையே கண்ணா படம் மட்டும் எடுத்திருந்தேன் அவ்வ்!

# போர்டில் என்னா போட்டிருக்குனு படிச்சு வச்சுக்குங்க,நான் என்னா பண்ணேன்னு கடசீல சொல்லுறேன்!

ஆப்பிள் சூசு கடை, கப்பு சூசு 15ரூ, அட்டை டப்பா 20ரூ ,கண்ணாடிக்குடுவை 30 ரூ





# இந்த கடையில ,பொன்னியின் செல்வன்,காவற்கோட்டம், பாலகுமரனின் உடையார்னு ஏகப்பட்ட சரித்திர புதினங்களாக இருந்துச்சு ,ஆனால் விலை தான் என்ன போல தரித்திரங்கள் வாங்க முடியாத வகையில இருக்கு , சரி போட்டா எடுக்க காசா ,பணமானு போட்டா மட்டும் புடிச்சிக்கிட்டேன், வேற வழி அவ்வ்!






# ஹி...ஹி இந்த கடையிலயும் நிறைய புத்தகங்கள் தான் இருந்துச்சு, மிக்சி ,கிரைண்டர்னு எதுவுமே இல்லை...அடேய் புத்தக சந்தையில இருக்க கடையில வேற என்ன இருக்கும்னு நினைச்சேனு டெங்க்சன் ஆவாதிங்கோ, என்ன எழுதுறதுனு தெரியாம ச்சும்மா ஒரு மொக்கை ஹி...ஹி!

# இந்த கிளக்கு படிப்பகம் காரங்களுக்கு ஆனாலும் ரொம்ப குசும்பு, புத்தக சந்தையை புதுச்சேரி கலைப்பண்பாட்டு துறை நடத்துகின்றது,ஆனால் இவங்க என்னமோ "சிறப்பா" தனியா நடத்துறாப்போல ஒரு பேனர் வச்சிருக்காங்க அவ்வ்!

கடையில சுஜாதா எழுதிய அந்தக்கால புத்தகங்களை மறுபதிப்பு போட்டு கொள்ளை விலையில விக்குறாங்க, ஆனால் அதே புத்தகங்களே வேற பதிப்பகங்களில் மலிவாக கிடைக்குது, இதையும் குறிப்பிட்டு கேட்டேன் ,பேப்பர் குவாலிட்டியா இருக்காம், ம்ஹூக்கும் அப்படியே வாங்கிட்டு போய் ஃப்ரேம் போட்டு வைக்கவா போறோம், படிச்சு கிழிக்க பேப்பர் எப்படி இருந்தா என்ன?

ஒரு காலத்தில "மணிமேகலை பிரசூரம்" உங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி முதல் ,நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள் வரை எல்லா தலைப்பிலும் புத்தகங்களை போட்டு தள்ளுவாங்க, அப்போ நினைச்சுக்கிறது இதெல்லாம் யாரு வாங்குவாங்கனு ,அதே போல கிளக்கும் எல்லா தலைப்பிலும் புத்தகம் போடுறதுனு கிளம்பிடுச்சு ,எல்லாருக்கும் வாழ்க்கை வரலாறு, மேலும் ஆயக்கலைகள் 64 க்கும் புக்கு இருக்கும் போல :-))




# பாரதியார் கலைக்கூடம்னு ஒரு நுண்கலை பயிற்சி மையம் அரியாங்குப்பம் அருகே இருக்கு, அவர்கள் ஒரு கடைப்போட்டிருக்காங்க,, அங்கே போய் உட்கார்ந்து "போஸ்' கொடுத்தா நம்மளை அழகா படம் வரைஞ்சு கையிலவே கொடுத்தனுப்புறாங்க, ஏற்கனவே நாம சுமார் மூஞ்சி என்பதால் ,படம் வரையிறவங்களை சோதனைக்குள்ளாக்காமல் நழுவிட்டோம், அங்கே ஒரு குட்டிப்பையனும் படம் வரைஞ்சிக்கொடுத்துக்கிட்டு இருக்காரு ,வருங்காலத்துல ஹீசைன் போல்ட்(ஹி...ஹி தப்பா சொல்லிட்டேன்னு பின்னூட்டத்தில் என்னை திருத்தவும்) போல பெரிய ஓவியரா வருவாராக்கும்!


#எதிர் வெளியீடு (பொள்ளாச்சி) பேரே ஒரு மார்க்கமாக இருக்குனு  யாரும் கடைக்குள்ள போகவேயில்லை போல , நான் போய் ஒரு புக்கு வாங்கினால் , சார் நீங்க தான் முதப்போணி சில்லறையில்லைனு சொல்லிட்டார்(அப்போ மணி மாலை 5 அவ்வ்) பெரும்பாலான கடைகளில் இதான் நிலை சில்லறையில்லைனு சொல்லி அனுப்பிடுறாங்க, வர்ரவன் எல்லாம் 50 ரூவா புக்கு வாங்கிட்டு ஆயிரம் ரூவா தாளை நீட்டுனா என்ன செய்யனு என்ன முன்ன போக விட்டு பின்னாடி பொலம்பினத நானும் கேட்டுட்டு கேட்காத மாரியே வந்துட்டேன் அவ்வ்!

ஹி...ஹி அப்படியும் ஒரு கடையில பிடிவாதமா சரி ரெண்டு புக்கு வாங்குறேன்னு சில்லறைய மாத்தி கொடுக்க வச்சிட்டோம்ல!






# விகடன் வெளியீடு கடையில சுஜாதா, மதன் எழுதிய நூல்கள், விகடனில் தொடரா வந்தது எல்லாம் போட்டு கடைய ரொப்பி வச்சிருக்காங்க, பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளரும், பதிவருமான அமுதவன் அவர்கள் சமீபத்தில் எழுதிய " என்றென்றும் சுஜாதா" என்ற புத்தகத்தினை விகடன் வெளியிட்டு இருக்குனு சொன்னாரேனு தேடு தேடுனு தேடினேன் ஆனால் இல்லவே இல்லை , போட்ட புக்குலாம் வித்து தீர்ந்து போச்சூ போல. ஆனால் அங்கே இன்னொரு புக்கு கண்ணில் சிக்கியது, திருப்பூரின் பிரபல தொழிலதிபதிவரான 'ஜோதிஜி" எழுதிய டாலர் நகரம் தான் , ஆனால் விலை தான் டாலரில் சம்பாதிக்கிறவங்களுக்கு ஏத்தாப்போல வச்சிட்டாங்க , சரி போட்டாவாச்சும் எடுத்துப்போம்னு எடுத்துக்கிட்டேன்.

டாலர் நகரம் பக்கத்தில சோடிப்போட்டாப்போல அம்மையாரின் புகைப்பட ஆல்பம்னு ஒரு புக்கு இருந்துச்சு,அட்டையில இருந்த ரெண்டுப்படமும் பார்த்தால் "டாலர் நகரம்" படிக்கும் முன்,படித்த பின் காட்டும் ரியாக்‌ஷன் போலவே இருந்துச்சு ! நல்லாத்தான் சோடிப்போட்டு வச்சிருக்காங்க அவ்வ்!






"We tamilan" செபாஸ்தியன் சீமான் செவுளிலேயே அப்பிடுவேன் என்பது போல கைய ஒங்கிட்டு படம் போட்ட ஒரு புக்கு, ஏன் இம்புட்டு கோவமா இருக்கார்ன்னு பார்த்தால் ,பக்கத்தில "லிங்கூ' என்ற ஒலக மகா கவித புக்கு அவ்வ்!

 உண்மையில விகடனுக்கு அசாத்திய துணிச்சல் தான் ஓசில கொடுத்தாக்கூட வாங்க மாட்டாங்க  லிங்கூ புக்க ,அதுவும் விலை 60 ஓவா, பக்கத்துக்கு நாலு வரி கவித, எதிர் பக்கத்தில , மசிய பூசிட்டு எச்சித்தொட்டு அழிச்சாப்போல ஒரு படம்,

சாம்பிளுக்கு ஒரு சில பக்கங்கள் புரட்டி பார்த்தேன், தேர் வடம் புடிக்க நீ நடந்து வந்தாய், தேர் நகர்ந்தது...! இத மடக்கி ஒன்னுக்கீழா ஒன்னா எழுதி  மூனு புள்ளி ஒரு ஆச்சர்ய குறி போட்டிருக்கு , கவிதயாம் , முடியலடா சாமி! செபாஸ்தியன் சீமான் கோவமா கைய ஓங்கிட்டு நிக்குறதுல தப்பேயில்லை :-))

சின்ன குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் கொண்ட கடை,அடியேன் மனசளவில் இன்னும் ஒரு கொழந்தை தான் என்றாலும் ,அங்கே வச்சிருந்த டிர் டிர் கிளு..கிளுப்பைக்கூட வாங்க என்னிடம் காசில்லையே அவ்வ்வ்!

நாளு புக்கு 200 ரூவானு போர்டு தொங்கிச்சேனு பார்த்தேன் ,எல்லாம் ஆங்கில பாக்கெட் நாவல்கள், இதெல்லாம் பைகிராப்ட்ஸ் ரோட்டில 25 ரூவாய்க்கே கிடைக்கும்!



புதுமைப்பித்தன் ,இப்பவும் புதுசாத்தான் இருக்கார்!



# ஜெமோவின் எழுத்தாள பிம்பம் அவரை விட பெருசா வளர்ந்து போச்சு போல , என்னமோ கவர்ச்சி நடிகை படம் போட்டு விக்குற வார இதழ்கள் போல அவரு படத்தை வித விதமா டிசைன் செய்து எல்லா புக்கிலும் போட்டிருக்காங்க, ஆனால் யாரும் எடுத்துக்கூட பார்த்தாப்போல தெரியலை.

இதே கடையில "பிரபல இலக்கியப்பதிவர்"ராஜா சுந்தர்ராஜனின் "நாடோடித்தடம்" புக்கும் கண்ணில பட்டிச்சு , அட்டைப்படம் தான் அந்தக்கால 'ராணி முத்து" போல ஒரு பொண்ணு படத்தை பெருசா போட்டிருக்கு ,வரைஞ்ச படம் போல, இன்னும் அதே போல "அடாசான" அட்டைப்பட வடிவமைப்பில ரமணிச்சந்திரன் நாவல்கள் மட்டும் தான் வந்துக்கிட்டு இருக்குனு நினைச்சேன், ஏன் நானும் இருக்கேன்லனு ராஜா சுந்தரராஜன் ஆஜாராகிட்டார் அவ்வ்!

அடுத்தப்பதிப்பில "இலக்கியத்தரமாக " அட்டைப்படம் போடுங்க சார், இல்லை பொண்ணு படம் தான் போடுவேன்னு அடம்பிடிச்சிங்கனா ,ஹி...ஹி நான் சொல்லுற படத்த போடுங்க! நானே எல்லாரையும் புக்கு வாங்க சொல்லி ரெக்கமண்ட் செய்வேன்!



# கண்ண தாசன் புத்தக நிலையத்தில், கவிஞர் கன்னத்தில கைய வச்சு ரொம்ப தீர்க்கமா சிந்திச்சுக்கிட்டு இருந்தார், அப்பாலிக்கா தான் நாம எதுக்கு வந்தோம், என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு உறைச்சது ஹி...ஹி!


# மஞ்ச போர்டை படிக்காம ,படம் மட்டும் எடுத்துட்டு போனாதால ,சல சலப்பாச்சுனு சொன்ன மேட்டருக்கு வருவோம்.




வெளியில் வரும் வழியில் , புக்கு எல்லாம் வாங்கி ,பில்லு இருக்கானு செக் பண்ணுறாங்க, பில்லின் ஒரு காப்பியும் வாங்கி வச்சிக்கிறாங்க, சரி அது போகட்டும், ஆனால் புக்கு மேல "மறு விற்பனைக்கல்ல, 15% தள்ளுபடி"னு ரப்பர் ஸ்டாம்ப் வச்சி சீல் போட்டு தராங்க, அது என்ன தள்ளுபடில கொடுத்தாலும் ,என்னமோ இலவசமா கொடுக்கிறாப்போல இப்படி முத்திரைக்குத்துறிங்களேனு கேட்டால் ,அதான் வாசலில் போர்டு வச்சிக்கீறோமேனு சொல்லுறாங்க, அப்படியும் விடாம சீல் போடக்கூடாதுனு சொன்னேன், சீல் போடலைனா 10% மட்டும் தள்ளுபடி, சீல் போட்டால் 15% கூடுதல் தள்ளுபடியாம், சீல் வேண்டாம் என்றால் 15%  இல்லைனு தான் போர்டுல போட்டிருக்கு, 15% பணத்தினை திரும்ப செலுத்த வேண்டும் என வெளக்கினார்கள், அவ்வ்!. மேலும் சில விவரங்களும் சொன்னார்கள்,

புதுவை புத்தகச்சந்தையில் மொத்தம் 25% தள்ளு படி அளிக்கிறார்கள், இதில் 10% தான் புத்தக விற்பனையாளர்கள் அளிப்பது, மீதி 15% ஐ புதுவை அரசு அளிக்கிறது, முதலில் இப்படி சீல் எல்லாம் போடாமல், பில்லின் ஒரு காப்பியை மட்டும் வாங்கிக்கொண்டு தான் இருந்தார்களாம், ஆனால் புத்தக விற்பனையாளர்கள், சும்மா பில் போட்டு வெளியில் எடுத்து போய்விட்டு மீண்டும் உள்ளே எடுத்து வந்து விற்கிறார்கள், இதன் மூலம் புத்தகங்களை விற்காமலே , 100 ரூவாக்கு 15 ரூபா லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதை தடுக்கவே , வெளியில் எடுத்து செல்லும் புத்தகங்களில் சீல் போடுவதாகவும் சொன்னார்கள்.

புதுவை அரசு படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கவும், மக்களுக்கு மலிவாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும் எனவும் , நிதி ஒதுக்கி தள்ளுபடி அளிக்க செய்வதிலும் ,இந்த புத்தக விற்பனையாளர்கள் குறுக்கில் புகுந்து கைய வைக்கிறாங்களே, அப்புறம் என்ன அறம்,முறம்னு பினாத்த வேண்டியது,அரசு புத்தக வெளியீட்டாளர்களுக்கு உதவியே செய்யலைனு பொலம்ப வேண்டியது?

தமிழகத்தில் எல்லாம் இப்படி கூடுதல் தள்ளுபடி கொடுக்க அரசு நிதியே ஒதுக்குவதில்லை, புதுவையில் ஏதோ பெரிய மனசு செய்து நிதி ஒதுக்குறாங்க, அதிலும் இப்படி குழப்படி செய்தால் ,வருங்காலத்தில் ஒரே அடியாக அரசு சார்பான தள்ளுபடியே இல்லை என அறிவிக்க கூடும், இது மக்களுக்கு தான் இழப்பு, புத்தக வெளியீட்டாளர்கள் வழக்கம் போல 10% தள்ளுபடியில் கடைப்போட்டுக்கொண்டு ,மக்களிடையே படிக்கும் பழக்கம் குறைஞ்சுப்போச்சுனு சொல்வதில் அர்த்தமேயில்லை!
-------------------------------------------------------------

பின் குறிப்பு:

யாருக்காச்சும் நன்றினு சொல்லியாகனும் இல்லைனா , சண்டைக்கு வந்தாலும் வருவாங்க போல எனவே,

# வாகன உதவி, த.நா போக்குவரத்து கழகம்,குடந்தைக்கோட்டம்,

# தள்ளுபடி அளித்துதவியவர்கள், பபாசி மற்றும் புதுவை அரசு கலைப்பண்பாட்டு துறை!

# ஒளிப்படங்கள் உதவி,அடியேன்!

# பதிவேற்ற உதவி, பிலாக்கர்.காம் இணைய தளம்.

நன்றி!
--------------------------

Saturday, October 05, 2013

திரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே?


(இப்படி சாய்வாக படுத்தால் நிழல் விழாதுனு தெரிஞ்சி இருக்கும் போல ஹி...ஹி)


முன்குறிப்பு:

கொஞ்ச நாள் இடைவெளி விட்டுப்போனதால், ஸ்டார்ட்டிங் டிரபிள் ஆகிடுச்சு,எனவே ஆரம்ப பத்திகளில் கொஞ்சம் அனத்தி வச்சிருக்கேன் ,படிக்க சலிப்பூட்டலாம் எனவே கோடிட்ட பகுதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை தவிர்த்துவிட்டு ,நேராக பதிவுக்கு செல்ல விரும்புவர்கள் செல்லலாம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சில பல நாட்களாக பதிவெதுவும் எழுத இயலவில்லை... வெட்டி முறிக்கிற வேலையெல்லாம் இல்லை என்றாலும் ஏனோ வெட்டித்தனமாக பதிவெழுதாமல் சும்மா உலாத்திக்கொண்டேயிருந்தேன்,ஆனாலும் பாருங்க நம்ம பாசக்கார சனங்கள் மறந்து விடாமல் நம்ம கடைக்கு வந்து போயிட்டு இருந்தாங்க ,எனக்கே அது பேராச்சர்யமாகத்தான் இருக்கு , நம்மளையும் மதிச்சு நாலுப்பேர் வந்து படிச்சிட்டு போறாங்களே ,அதுவும் பழைய பதிவகளை!

சொன்னா நம்ப மாட்டிங்க,ஆனாலும் நானே சொன்னப்பிறகும் நம்பாம போனிங்கன்னா நல்லா இருக்காது ,எனவே கொஞ்ச நேரம் நம்புணாப்போல ஒரு ஆக்ட் கொடுங்க போதும், கோடான கோடிப்பேர்கள் ஏன் பதிவெழுதவில்லைனு கவலையோட நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஹி..ஹி நம்புற மாதிரியே இல்லையேனு நினைக்கப்படாது...நம்பணும்! அட அதுக்கூட பரவாயில்லைங்க, வேற்றுக்கிரகத்தில இருந்தெல்லாம் ,ஏன் பதிவெழுதவில்லைனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, இதையும் நம்ப மாட்டிங்களே, ஏலியன் என்றால் வேற்றுகிரகவாசி தானே? நம்ம பதிவ ஏலியன்ஸ் கூட படிக்கிறாங்க, பின்னூட்டமெல்லாம் போடுறாங்க!(ஹி..ஹி பதிவர் ஏலியன் பின்னூட்டத்தில் விசாரிச்சதை தான் இப்படி சொல்லிக்கிட்டேன்!)

நட்பக்கூட கற்பைப்போல எண்ணும் நல்ல மனசுக்காரன் (அது யாரா? ஹி...ஹி அடியேன் தான்)என்பதால், நண்பர்களின் அவாவிற்கிணங்க மீண்டும் அடியேனது பதிவுலக பரா(அ)க்கிரமங்கள் தொடங்குகிறது, பயணங்கள் முடிவதில்லை!

தொடர்ந்து ஆதரவளித்து ,என்னை(யும்) எழுத வைக்கும் தெய்வங்களான "பதிவுலக அன்பர்களுக்கு" கோடான கோடி நன்றிகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிமே தான் மெயின் ரீல் ஓடப்போகுது... படிங்க ..படிங்க!

பதிவர் "தி.ந.முரளிதரன்"(http://tnmurali.blogspot.in)பதிவில் உச்சி வெயில் நேரத்தில் ஒரு கட்டமைப்பின் நிழல் தரையில் விழாது என்ற தொடர்பில் ஒரு சிறிய உரையாடலை துவக்கிவிட்டேன் (உண்மையில் உரையாடல் துவங்கிய இடம் நம்பள்கி பதிவாகும்),அப்பொழுது பூமத்திய ரேகைப்பகுதியில் மட்டும் தான் அப்படி நிகழும் என்பதான கருத்தினை  முன் வைத்தார்கள்,இந்தியாவிலும் நிழல் விழாமல் இருக்கும், சிறு குச்சியை வைத்து செய்துப்பார்க்கலாம் என சொன்னதை , நேரடியாக செய்துப்பார்த்து படமெல்லாம் எடுத்துப்போட்டு பதிவிட்டு கலக்கியிருந்தார் "தி.ந.மு".

அதனை ஒட்டி நாமளும் ஒரு "நிழல் பரிசோதனை "செய்து பார்த்து படமெல்லாம் எடுத்தாச்சு ,ஆனால் பதிவாக்க இப்போது தான் முடிஞ்சது, ஹி...ஹி இனிமே சோதனை உங்களுக்கு தான் படிங்க...படிங்க!

பூமி:




நாம் வாழும் பூமியானது சூரிய குடும்பத்தில்(ஹி...ஹி யாரும் மஞ்சத்துண்டு குடும்பத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) மூன்றாவதாக உள்ள ,உயிர் வாழும் சூழல் உள்ள ஒரே கிரகம் ஆகும்.

முழுக்கோளமாக இல்லாமல் துருவப்பகுதிகளில் தட்டையாக உள்ள "oblate spheroid" வடிவ கோளம், தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த சாய்வுக்கும் ஒரு விவாதம் இருக்கு விரைவில் தனியாவர்த்தனமாக சொல்கிறேன்!

சுமார் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தன்னை தானே சுழன்றுக்கொண்டு ,365.25 நாட்களில் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மீது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் கற்பனையான கோடுகள் வரைந்து பகுதி வாரியாக பிரித்து குறிப்பிடுவது வழக்கம்,இம்முறையினை அறிவியல் முறைப்படி முதன் முதலில் செய்தவர் கிரேக்க ரொமானிய வானவியல் நிபுணர் 'தாலமி" (Claudius Ptolemy-AD 90 – c. AD 168)ஆவார்.பிறப்பால் இவர் ஒரு பூர்வீக எகிப்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்க்க ரேகை( longitude):




செங்குத்தாக வரையப்பட்ட கோடுகள், ஒரு கோளம் 360 டிகிரிகளை கொண்டது என்பதால் 360 கோடுகள் வரையப்பட்டுள்ளன. துருவங்களில் குறுகியும், நிலநடுக்கோட்டில் அகன்றும் இருக்கும்.

பூமி ஒரு சுற்று சுழன்றால் =360 டிகிரி

இதற்கு தேவையான நேரம்= 24 மணிகள்

எனவே ஒரு டிகிரி கடக்க ஆகும் நேரம்= 24*60/360
                                                                     =4 நிமிடங்கள்.

எனவே ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும்( longitude) இடையே நான்கு நிமிட வித்தியாசம் இருக்கும்.

ஒருவர் கிழக்கு நோக்கி சென்றால் ,ஒவ்வொரு டிகிரி கடக்கும் போதும் நான்கு நிமிடம் முன்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், அதே போல மேற்கு நோக்கி சென்றால் ஒவ்வொரு டிகிரிக்கும் நான்கு நிமிடம் பின்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், எனவே செல்லும் திசை,கடக்கும் டிகிரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரத்தினை திருத்தி வைத்துக்கொள்வார்கள்.

180 டிகிரி தீர்க்க ரேகையை "சர்வதேச நாட்க்கோடு என்பார்கள். சர்வதேச நாட்க்கோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கழித்துவிடுவார்கள், மேற்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கூட்டிக்கொள்ள வேண்டும். இதனை மையமாக வைத்து "Around the world in 80 dayS' என்ற ஜீல்ஸ்வெர்ன் நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும்.

நிழல் விழுமா ,விழாதானு சொல்ல எதுக்கு ,அட்ச ரேகை,தீர்க்க ரேகைனு சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டுனு பொலம்பாதிங்க, கொஞ்சம் அடிப்படை சொல்லிட்டா ,பின்னர் சொல்வது எளிதாக புரியும் என்பதாலே சொல்ல விழைகிறேன்!

ஒரு நாளில் பகற்பொழுதின் நீளம் சுமார் 12 மணி நேரம் என வைத்துக்கொண்டால், அதற்கான தீர்க்க ரேகை கோணத்தின் அளவு 180 டிகிரிகள் ஆகும், சூரிய உதயம் 0 டிகிரியில் ஆரம்பித்து , 180 டிகிரியில் அஸ்தமனம் என ஒரு அரைவட்டமாக அமையும் என புரிந்துக்கொண்டால் போதும்.(நாம இருக்கும் இடத்திற்கு ஏற்ப தீர்க்க ரேகை டிகிரி இருக்கும், ஆனால் துருவ வட்டங்கள் நீங்கலாக மற்ற எல்லா இடத்திலும் பகற் பொழுதுக்கு மொத்தம் 180 டிகிரி ,அரைவட்டம் ஆக அமையும், என்பதால், ஆரம்பம் 0,முடிவு 180 டிகிரி என உதாரணமாக சொல்லியுள்ளேன்)

அட்ச ரேகை( Latitude):

கிடைமட்டமாக பூமியின் மீது வரையப்பட்ட கோடுகள், இவை வட்ட வடிவில் பூமியினை சுற்றி அமைந்திருக்கும். துருவத்தில் சிறிய வட்டமாகவும், மையத்தில் பெரிய வட்டமாகவும் இருக்கும்,ஒன்றுக்கொன்று இணையான கோடுகள். மிகப்பெரிய வட்ட வடிவ கோடே "நிலநடுக்கோடு" எனப்படுகிறது.

நில நடுக்கோடு பூமியினை வட,தென் துருவ அரைக்கோளங்களாக பிரிக்கிறது. தீர்க்க ரேகைப்போல 360 டிகிரிகளாக இல்லாமல் வட துருவம் முதல் தென் துருவம் வரையில் 180 டிகிரிகளுக்கு மட்டுமே வரையப்பட்டவை அட்ச ரேகைகள்.

நில நடுக்கோட்டினை  0 டிகிரியாக வைத்து வட துருவ கோளம் 90 டிகிரிகள், தென் துருவ கோளம் 90 டிகிரிகள் ஆகும்.

பூமி பரப்பில் எந்த ஒரு இடத்தினையும்,அட்ச,தீர்க்க ரேகைகளை குறிப்பிட்டே சொல்லிவிட முடியும், இவை ஒரு கிரிட் ஆக மொத்த பரப்பினையும் பிரிக்கிறது.

வட கோள பகுதி அட்ச ரேகைகள் "+" குறியீடாக அல்லது வடக்கு என குறிப்பிட்டும், தென் கோள அட்ச ரேகைகள் "-" குறியீடாக அல்லது தெற்கு என குறிப்பிட்டும் சொல்லப்படுகிறது.

தீர்க்க ரேகைகளை வைத்து ,கிழக்கு,மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பூமிக்கோளமானது வட கிழக்கு,வட மேற்கு, தென் கிழக்கு,தென் மேற்கு என நான்கு கால் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அட்சக்கோடுகள் இணையானவனை , எனவே ஒவ்வொரு அட்ச டிகிரிக்கும் இடைப்பட்ட தூரம் 111 மைல்கள். ஒரு டிகிரி என்பது 60 நிமிடங்கள், ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் என சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தின் அட்ச ரேகையை இன்னொரு இடத்தின் அட்ச ரேகையுடன் ஒப்பிட்டு ,இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவினை கணக்கிட முடியும்.

கடற்பயணத்தின் போது தொலைவினை இப்படித்தான் கணக்கிடுவார்கள். கோணத்தில் சொன்னால் ஆர்க் டிஸ்டன்ஸ் அதனை மைலாகவோ,கிலோ மீட்டராகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு நிமிடம் என்பது 1.57 மைல்கள் ஆகும், இதனையே நாட்டிகல் மைல் என சொல்கிறார்கள்.

சூரியனின் நிலை:

சூரிய உதயம் ,அஸ்தமனம் என ஒரு நாளில் கிழக்கு ,மேற்காக சூரியன் தீர்க்க ரேகை மார்க்கத்தில் பயணிக்கிறான்(இது ஒரு தோற்ற நிகழ்வே ,சூரியன் நிலையானது ,பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது என்பதை அனைவரும் அறிவோம்)

அதே போல வடக்கு ,தெற்காகவும் சூரியன் பயணிப்பதாக ஒரு தோற்ற நிகழ்வு உண்டு.

நிலநடுக்கோட்டில் இருந்து 23.5 டிகிரி வடக்கில் செல்லும் அட்ச ரேகையினை கடக ரேகை என்பார்கள், இக்கோடு இந்தியாவின் வழியேயும் செல்கிறது, இந்தியாவை நீள் வாக்கில் சரிபாதியாக பிரிக்கிறது எனலாம்.



கிழக்கே மிசோராமில் இருந்து மேற்கே குஜராத்தின் புஜ் பகுதி வழியாக "கடக ரேகை" செல்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் தான் இந்தியாவின்(நிலப்பரப்பில்) கிழக்கு முனை உள்ளது இந்தியாவின் முதல் சூரிய உதயம் அங்கு தான் நிகழும்,அருணன் = சூரியன், அஜலம்= மலை, கடக ரேகையில் சூரியன் இருக்கும் போது நேராக மலையில் இருந்து எழுவது போல அப்பகுதியில் தெரிவதால் அருணாச்சல பிரதேசம் எனப்பெயர் வைத்திருக்கக்கூடும்.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழுக்கும் அஸ்ஸாம் ஸ்டேண்டர்டு டைம் எனப்பயன்ப்படுத்துகிறார்கள். IST  விட சுமார் இரண்டு மணி முன்னர் இருக்கும்,

(போபால் அருகே சாலையை கடக்கும் கடக ரேகை)

இந்தியா நில நடுக்கோட்டிற்கு வடக்கே உள்ள நாடு ஆகும்.

தென் கோளத்தில் நில நடுக்கோட்டிற்கு தெற்கே 23.5 டிகிரி தெற்கில் செல்லும் கோட்டினை "மகர ரேகை" என்பார்கள். இக்கோடு ஆஸ்திரேலியாவை இரண்டாக பிரித்தவாறு செல்கிறது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக* சுழல்வதாக சொல்லப்படுவதால் , சூரியன் கடக ரேகையில் இருந்து , மகர ரேகைக்கு செல்வது போல ஒரு தோற்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைப்பெறும், அதாவது கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு செல்ல 6 மாதங்கள், பின்னர் அங்கிருந்து மீண்டும் கடக ரேகைக்கு வரும். ஒரு ஆண்டில்  வடக்கு-தெற்கு- வடக்கு என சூரியன் பயணித்து ஒரு சுற்றினை பூர்த்தி செய்கிறது. அதாவது கடக- மகர ரேகைக்கிடைப்பட்ட பகுதிகளின் வழியாக ஆண்டுக்கு "இரு முறை" சூரியன் செல்கிறது.

23.5 டிகிரி கடக ரேகை முதல் 23.5 டிகிரி மகர ரேகை வரையில் மொத்தம் "47" டிகிரிகள் ,இதனை கடக்க ஆறுமாதம் எனில் ஒரு டிகிரியை கடக்க சூரியனுக்கு தேவைப்படும் நாட்கள் எத்தனை?

ஒரு டிகிரி அட்ச ரேகை கடக்க

= (365/2)/47
                                   

 =3.85 நாட்கள்.


ஆண்டுக்கு இரு முறை கடப்பதால் , 2*3.85 நாட்கள்= 7.7 நாட்கள்.

இதன் மூலம் அறிய வருவது என்னவெனில்,

கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட ஒவ்வொரு டிகிரி பகுதியிலும் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு சூரியன் 'நட்டக்குத்தாக' உச்சி வெயில் நேரத்தில் தோன்றுவான் :-))

நாம் கடிகார நேரப்படி பகல்  12.00 மணியை "நண்பகல்" என்கிறோம், இது இந்திய தர நிர்ணய நேரத்தின் படியே , உண்மையில் நாம் இருக்கும் இடத்திற்கு 90 டிகிரியில் சூரியன் தோன்றுவதையே நண்பகல் என சொல்ல வேண்டும். இதனை "solar noon" என்பார்கள்.

சூரியன் வட,தென் கோளத்தில் இருந்தால் முறையே இட,வலமாக ஆனால் தரைப்பரப்பிற்கு 90 டிகிரியில் சூரியன் நண்பகலில் தோன்றும்.

ஆனால் கடக- மகர ரேகை இடையே ஒவ்வொரு இடத்திற்கும் ஆண்டுக்கு சுமார் 7.7 நாட்கள் மிகச்சரியாக உச்சியில் 90 டிகிரியில் தோன்றும் "perfect solar noon" உண்டு!

அது போன்ற நாட்களில் ஒரு கட்டமைப்பின் நிழல் உச்சிவெயில் நேரத்தில் ,கிழக்கு,மேற்கு, வடக்கு,தெற்கு என எந்தப்பக்கமும் விழாது!!!

நம்ம நாட்டில் உள்ள ஒரு இடத்தில் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாது எனலாம், ஆண்டு முழுவதும் நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியுமா?

உண்மையில் பார்த்தோமானால் நிழல் விழாத கட்டிடம்/அமைப்பு உருவாக்க முடியாது, தரையோடு தரையாக படுக்க வைத்தால் மட்டுமே சாத்தியம்.

ஆனால் மனித மூளை அபரிமிதமான சிந்தனாசக்தி கொண்டது, கொஞ்சம் கணக்குலாம் போட்டுப்பார்த்தால் செய்ய முடியும் ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு என ஆதிகாலத்திலேயே மனிதன் கண்டுப்பிடித்துவிட்டான்.

ஆண்டு முழுவதும்  ஒரு நாளின் குறிப்பிட்ட காலத்திற்கு நிழலே விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

உதாரணமாக ஆண்டு முழுவதும், காலை ஒன்பது மணி முதல் ,மாலை மூன்று மணி வரை நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், ஏன் அதன் அருகாமை பகுதியிலும் கூட அமைப்பது சாத்தியமே.

கீழ் கண்ட படத்தினை காண்க:




சூரியனின் கதிர்கள் ஒரு பொருளின் மீது விழும் கோணத்தினை "Angle of incident" என்பார்கள். காலை ,மாலையில் சாய்வான கோணத்திலும் , நண்பகலில் செங்குத்தாக 90 டிகிரியிலும் விழும். சூரியனின் கதிர் வீச்ச்சு கோண அளவு 0-180 டிகிரிக்குள் அமையும்.

சூரிய உதயம்,அஸ்தமனம் பொறுத்து கிழக்கு மேற்கான நிகழ்வில் இது தினசரி நடப்பது.

இதே போல வடக்கு -தெற்காக சூரியனின் நகர்வால் இட,வலமாக ஒரு சாய்வுக்கோணம் ஆண்டு முழுவதும் உண்டு, இந்த "Angle of incident" இன் எல்லை 23.5 டிகிரி வடக்கு முதல் 23.5 டிகிரி தெற்கு வரையாகும்.

படம் -1:

காலை சூரிய உதயம் 6 மணி எனக்கொள்வோம், சூரியன் ஒன்பது மணிக்கு தரைத்தளத்தோடு 45 டிகிரி கோணத்தில் கிழக்கில் வானில் இருக்கும்.

ஒரு டிகிரி தீர்க்க ரேகைக்கு 4 நிமிடம் எனில் , ஒரு மணி நேரத்துக்கு 15 டிகிரி தீர்க்க ரேகை, எனவே 6-9 =3 மணி நேரத்தில் 45 டிகிரி எனக்கணக்கு.

கிழக்கில் 45 டிகிரி "Angle of incident" இல் சூரிய கதிரிகள் நேராக உள்ள குச்சி மீது விழுகிறது. எனவே மேற்கு பக்கமாக நிழல் விழும். சூரியன் தென் கோளார்த்தத்தில் இருந்தால் நிழல் தென் மேற்காக விழும்.

படம்:2.

சூரியக்கதிர்கள் விழும் கோணத்தினை '"Angle of incident"  என்பது போல அக்கோணத்திற்கு இணையாக வருவது போல தரையில் உள்ள பொருளை சாய்த்தால் உருவாகும் கோணத்தினை "slope of angle" என்பார்கள்.

"Angle of incident" க்கு ஏற்றார்ப்போல சாய்த்து "slope of angle" வருவது போல வைத்து விட்டால் சூரிய கதிர்கள் பொருளுக்கு இணையான தொடுக்கோணத்தில் விழும்,இந்நிலையில் நிழல் விழாது!!!

படம் இரண்டில் கிழக்கில் 45 டிகிரிக்கு "slope of angle' வருமாறு சாய்ந்து உள்ளதால் நிழல் விழாது.

படம்-3, படம் நான்கில் , சூரியனின் நிலைக்கு ஏற்ப "slope of angle" இல் குச்சி சாய்த்து வைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படி நான்கு திசைக்கும் சாய்த்து கொண்டே இருக்கணுமா? நிரந்தரமாக செய்ய முடியாதா எனலாம்? முடியும்.

இந்நான்கு சாய்வு குச்சிகளையும் உச்சியில் இணைத்தால் தெரியும் வடிவம் என்ன?

ஒரு பிரமிட் போல தெரியுமே?



ஆம் அப்படி இணைத்தால் கிடைக்கும் வடிவமைப்பு பிரமிடே தான், பிரமிடின் பக்கங்களில் "slope of angle" ஐ வடக்கு தெற்காக சூரியன் நகர்வின் அதிக பட்ச எல்லைக்கு ஏற்ப அமைத்து விட்டால் , வடக்கு- தெற்கு நகர்வால் உண்டாகும் நிழல் உருவாகாது, அதே போல அக்கோணத்திற்கு ஏற்ப கிழக்கு -மேற்கில் சூரியன் இருக்கும் போதும் நிழல் விழாது.

உதாரணமாக பிரமிடின் நான்கு பக்கங்களின் "slope of angle" 45 டிகிரி இருப்பது போல அமைத்தால் வருடம் முழுவதும் காலை 9 முதல் மாலை -3 மணி வரையில் நிழல் தரையில் விழாது!

45 டிகிரி "slope of angle" உள்ள பிரமிட்டை சென்னையில் அமைத்தால் வருடம் முழுவதும் 9-3 இடையில் நிழல் விழாது, ஏன் எனில் வடக்கு தெற்கு ஆக சூரிய நகர்வு எப்பொழுதும் 45 டிகிரிக்கு மேல் சென்னையில் இருக்க வாய்ப்பேயில்லை.

சென்னையின் அட்ச ரேகை 13 டிகிரி வடக்கு ஆகும்,சென்னைக்கு வடக்கே கடக ரேகை 23.5 டிகிரியில் உள்ளது, எனவே வடக்கு நோக்கி சூரிய நகர்வு அதிக பட்சம்ம் 10.5 டிகிரிகள் மட்டுமே.

தெற்கில்  மகர ரேகை 23.5 டிகிரியில் உள்ளது அதனுடன் 13 டிகிரியை கூட்டினால் 36.5 டிகிரி மட்டுமே இது 45 டிகிரி "slope of angle' பிரமிடின் கோணத்திற்குள் வந்துவிடுவதால் , ஆண்டு முழுவதும் வடக்கு தெற்கு நிழல் விழாது.

தினசரி 45 டிகிரிக்கு கீழாக சூரியன் கிழக்கு- மேற்கில் இருக்கும் போது மட்டுமே நிழல் விழும்.
அதாவது காலை ஒன்பதுக்கு முன்னாலும், மாலை -3 மணிக்கு பிறகுமே நிழல் விழும்!!!

இதற்கு மேல் பிரமிட் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் தொடரலாம், நிழல் கதை இத்தோடு முடிந்துவிட்டது!


இந்த அரிய உண்மையை நான் கண்டுப்பிடிக்கலைங்க, சுமார் கி.மு 2580 இலேயே எகிப்தியர்கள் கண்டுப்பிடிச்சுட்டாங்க.


கிஸா பிரமிட் அப்போது தான் கட்டப்பட்டது. எகிப்தின் கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரியில் பிரமிட் உள்ளது, இது கடக ரேகைக்கு வடக்கே மேல உள்ளதால் சூரியன் எக்காலத்திலும் கெய்ரோ தாண்டி செல்லாது என்பதால் வடக்கு பக்கமாக இருந்து நிழல் விழாது, தெற்கில் இருந்து மட்டுமே சாத்தியம், தெற்கே மகர ரேகை 23.5 டிகிரி + கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரி கூட்டினால் 54.5 டிகிரி , அந்த கோணம் தான் கிசா பிரமிட்டின் பக்கங்களின்  "slope of angle" ஆகும்.

வடக்கு - தெற்காக சூரியன் நிலைப்பொறுத்து நிழல் தவிர்க்கப்பட்டாச்சு, கிழக்கு- மேற்காக பார்த்தால் 54.5 டிகிரி என்பது சுமார் 9.36 நிமிடம் போல வரும் எனவே காலை 9.36 மணி முதல் மாலை 2.24 வரையில் கிஸா பிரமிடின் நிழல் ஆண்டு முழுவதும் தரையில் விழாது.

எகிப்தியர்கள் அக்காலத்திலேயே வானியல் அறிவில் தேர்ச்சி பெற்றிருந்தற்கு பிரமிட் கட்டமைப்பே சான்றாகும்.

எகிப்தியர்கள் கட்டிடக்கலை, வானியல் ,கணிதம், முக்கோணவியலில் நிபுணர்களாக இருந்ததால் மட்டுமே பிரமிட் போன்ற கட்டமைப்பினை உருவாக்கி இருக்க முடியும்.

நிக்கோலஸ் கோபர் நிகஸ் எல்லாம் சூரியன் மையம், பூமி சுழல்கிறது, கலிலியோ உலகம் உருண்டை என சொல்வதற்குலாம் முன்னரே எகிப்தியர்களுக்கு இவ்வுண்மைகள் தெரிந்துள்ளது.

எனது கணிப்பு என்னவெனில் கிருத்துவ மதப்பரப்பலின் போது எகிப்திய நாகரீகம் மற்றும் அறிவியல் எல்லாம் அழிக்கப்பட்டு , பைபிள் அடிப்படையிலான கருத்தாக்கங்களாக பூமி தட்டை, மையம் என பரப்பிவிட்டிருக்க வேண்டும், பின்னர் மீண்டும் கோபர் நிகஸ்,கலிலியோ போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஆய்வை துவக்கி சொல்லி இருக்கக்கூடும்.

எகிப்திய பிரமிட் வடிவில் கட்டமைப்பு அமைத்தால் நிழல் விழுமா என அறிய ,ஒரு சிறிய மாதிரி பிரமிட் ஒன்றினை அட்டையில் செய்து , வெயிலில் வைத்து பார்த்தேன் .

படம்-1:


காலை ஒன்பது மணிக்கு எடுக்கப்பட்டது மிகச்சிறிய அளவில் நிழல் மேற்கு பக்கமாக விழுகிறது. சுமார் 10 மணி அளவில் நிழல் விழவில்லை.

படம் -2:




சுமார் 11.30 அளவில் எடுக்கபட்டது, பக்கவாட்டிலும் நிழல் இல்லை, உச்சி நிலையிலும் நிழல் இல்லை.

# தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் பிரமிட் போல சம பக்க முக்கோணங்களை கொண்டிருக்கவில்லை, அதன் உயரம் மற்றும் அடித்தளம் சரியான விகிதத்திலும் இல்லை, மேலும் சதுர அடித்தளமாகவும் இல்லை என்பதால் நிழல் விழும்,ஆனால் வருடத்தில் சுமார் 7.7 நாட்களுக்கு ,தஞ்சையின் அட்சக்கோடு வழியாக சூரியன் கடக்கும் போது ,உச்சிவெயில் நேரத்தில் நிழல் விழாமல் இருக்க வாய்ப்புண்டு!

பிரமிட்:

பிரமிட் என்பது நான்கு முக்கோண பரப்புகள் பக்கங்கள் ஒன்றாக இணைந்து இருக்கும் அமைப்பு, அடிப்பரப்பு செவ்வகம் எனில் எதிர் எதிர் பக்கங்களின் உள்ள முக்கோணங்கள் மட்டுமே சமமாக இருக்கும்.

அடிப்பரப்பு சதுரம் எனில் நான்கு முக்கோணங்களும் சமமாக இருக்கும்.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள "கிஸா: பிரமிட் அடிப்பரப்பு சதுரமாகவும், நான்கு பக்கத்திலும் சம பக்க முக்கோணங்களை கொண்டுள்ளது.



இவ்வாறு ஏன் கட்ட வேண்டும்?

ஏன் எனில் சமபக்க முக்கோணங்களை கொண்ட பிரமிட்டை எவ்வளவு உயரமாக கட்டினாலும் அதன் "slope of angle" 54.5 டிகிரியாக தானாகவே அமைந்து விடும்!!!

தற்போதுள்ள பிரம்மிட்டின் "slope of angle" அளந்து பார்த்தப்போது 51.5 டிகிரி தான் இருக்கிறது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், ஆனால் சிலர் இப்பொழுது உள்ளது பிரமிட்டின் உள்பகுதி ஆகும் இதன் பக்கங்கள் மீது "பாலிஷ் செய்யப்பட்ட" கற்கள் பதிக்கப்பட்டிருந்தது பல நூற்றாண்டுகளில் அவை உதிர்ந்து விட்டது, மேலே போர்த்தப்பட்டிருந்த கற்களின் தடிமனையும் சேர்த்து கணக்கிட்டால் 54.5 டிகிரி இருக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.

உயரம்-146.5 மீட்டர்கள்.

அடிப்பகுதி சதுரத்தின் அகலம்- 230.4 மீட்டர்கள்

பயன்ப்படுத்தப்பட்ட கற்களீன் எண்ணிக்கை- 2.3 மில்லியன்கள்.

மொத்த எடை -5.9 மில்லியன் டன்கள்.

கட்ட எடுத்துக்கொண்ட காலம் - 20 ஆண்டுகள்.

பயன்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை- சுமார் ஒரு லட்சம்.

மேற் சொன்ன அளவுகளின் படி பார்த்தால் சராசரியாக ஒரு நாளைக்கு 800 டன்கள் கற்களை பிரமிட்டில் பொறுத்தினால் மட்டுமே 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியும். அக்காலத்தில் வாகனங்களோ, கிரேன்களோ இல்லாமல் மனித ஆற்றலை வைத்தே நகர்த்தி , கட்டி இருக்கிறார்கள் என்பதே மிகபெரிய ஆச்சர்யம்.

இதில் மேலும் ஆச்சர்ய மூட்டும் தகவல் என்னவெனில் பிரமிட்டின் உயரம்,அகலம் என முடிவு செய்ய பை மதிப்பினை பயன்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

பையின் மதிப்பு 3.14 என 17 நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொதுவாக சொல்கிறார்கள், ஆனால் கி.மு 2580 இல் பை மதிப்பினை பயன்ப்படுத்தி பிரமிடுகளை எகிப்தியர்கள் கட்டியுள்ளார்கள்.

பிரமிட்டின் சதுர அடித்தளத்தின் சுற்றளவை அதன் உயரத்தால் வகுத்தால் 2π  என வருகிறது.

பிரமிடின் பக்கம்= A

உயரம் =H

எனில் , சுற்றளவு = 4 A

4 A/H =2π

 இதன் மூலம் என்ன உயரம் தேவை என முடிவு செய்து விட்டால் , என்ன அடிப்பரப்பு என கண்டுப்பிடித்து விடலாம், இல்லை , இத்தனை அடிப்பரப்பில் கட்டினால் என்ன உயரம் வரும் என முடிவு செய்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு கனமான ஒரு கட்டமைப்பினை மணற்பாங்கான இடத்தில் கட்டினால் அதற்கான அஸ்திவாரம் ஆழமாக போட வேண்டும்,ஆனால் அப்படி செய்யவில்லை, மாறாக பாலைவனத்தில் இருந்த ஒரு குன்றினை சமன் செய்து அக்குன்று பிரமிட்டின் உள்பகுதியில் வருமாறு குன்றின் மீதே பிரமிடினை கட்டியுள்ளார்கள். இதனால் நிலையாக பிரமிட் நிற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

பிரமிட்கள் மற்றும் எகிப்திய வரலாறு என நிறைய சொல்ல இருக்கிறது அவற்றை பிரிதொரு சந்தப்பத்தில் காணலாம்.
----------------------------------------------------------------------------


நீங்களும் பிரமிட் செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

# மெல்லிய அட்டை(சார்ட் பேப்பர்)

அட்டையின் அகலம் நாம் செய்ய இருக்கும் பிரமிடின் அடிப்பாக அகலத்தினை போல குறைந்தது மூன்று பங்கு அகலம் இருக்க வேண்டும்.

# பென்சில், காம்பஸ்,ஸ்கேல், கத்திரிக்கோல், ஃபெவிகிவிக், செலொபன் டேப், வெள்ளைக்காகிதம்.

 சமபக்க முக்கோணங்களை உடைய ,சதுர அடிப்பரப்பு கொண்ட பிரமிடினை எளிதாக செய்ய கீழ் கண்ட படத்தில் உள்ளது போல முயற்சிக்கலாம்.



# 10 செ.மீ அடிப்பாகம் கொண்ட பிரமிட் செய்ய , 10 செ.மீ பக்கம் கொண்ட சதுரம் வரையவும். நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் ,அப்பொழுது தான் சதுரம் :-))

# ஒவ்வொரு பக்கத்தின் மைய புள்ளியை குறிக்கவும். 5 செ.மி அளவில் புள்ளி வைத்தால் அதான் மையம்.

# நான்கு மைய புள்ளிகளின் வழியாகவும் செல்லு மாறு கோடுகளை வரையவும், கோடுகளின் நீட்சி ஒவ்வொரு பக்கத்திலும் 10 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

# பிரமிடின் முக்கோணங்கள் சம பக்கம் ஆக நாம் அமைக்க இருக்கிறோம், முக்கோணத்தின் ஒரு பாகம் தான் ,சதுரத்தின் ஒரு பக்கம், எனவே முக்கோணத்தின் மற்ற பக்கங்களும் 10 செ.மீ தான் இருக்க வேண்டும், அப்பொழுது தான் சம பக்க முக்கோணம் ஆகும்.

எனவே 10 செ.மீ அளவினை காம்பஸ் மூலம் எடுத்து , சதுரத்தின் ஒரு பக்கத்தின் முனையில் வைத்து அதன் மையக்கோட்டினை வெட்டவும், அதே போல இன்னொரு பக்கத்தில் வைத்து வெட்டினால் உருவாகும் புள்ளியே ,முக்கோணத்தின் உச்சி ஆகும்.

முக்கோணத்தின் உச்சியினை அதன் அடிப்பாகத்தின் இரு முனைகள் அதாவது சதுரத்தின் பக்கத்தின் முனைகளுடன் இணைத்து கோடு போடவும். இப்பொழுது ஒரு சமபக்க முக்கோணம் சதுரத்துடன் இணைந்து உருவாகி இருக்கும்.

இதனையே மற்ற பக்கங்களுக்கும் செய்யவும்.

# பின்னர் எதிர் எதிர் பக்கமாக உள்ள முக்கோணத்தின் பக்கங்களில் சுமார் 1 செ.மீ வருவது போல பிளாப்கள் வரைந்து கொள்ளவும், இது பக்கங்களை மடித்து ஒட்ட உதவும்.

# படத்தில் கண்டவாறு வரைந்து முடித்த பின் , கத்திரிக்கோல் வைத்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

# பின்னர் கோடுகள் மீது ஸ்கேலினை வைத்து உட்பக்கமாக மடித்து விடவும், ஸ்கேல் வைத்து மடித்தால் நேரான மடிப்பு வரும், அப்பொழுது தான் இணைக்க சரியாக வரும்.

# பிளாப்கள் உள்பக்கமாக வருவது போல மடித்து பசை தடவி , அருகில் உள்ள முக்கோணத்துடன் இணைத்து ஒட்டவும்.

ஹி..ஹி பசை காயும் முன்னர் கையை எடுத்துவிட்டால் , தேர்தல் முடிந்தவுடன் பிச்சிக்கொள்ளும் கூட்டணி போல  இரு பக்கங்களும் தனியே பிரிந்து விடும், எனவே செலோப்போன் டேப்பினால் பக்கங்களின் மீது ஒட்டி விடவும் :-))

# அளவுகள் சரியாக இருக்குமானால் நான்கு பக்கங்களையும் இணைத்தால் பிரமிடின் உச்சி (vertex) சரியாக இணைந்து விடும்.  பசையால் ஒட்டியவுடன் ,செலொபன் டேப்பினை வைத்து உச்சிக்கு சற்றுக்கீழே சுற்றி வருவது போல ஒட்டினால் உச்சிப்ப்குதி நெருக்கமாக அமைந்து வரும்.

# இப்போ அழகு செய்ய ஆசைப்பட்டால் வண்ணக்காகிதம் ஒட்டலாம், இல்லைனா வெள்ளைக்காகிதத்தினை ஒட்டினாலே நல்லா பளிச்சுனு அழகா இருக்கும்.

இந்த பிரம்மிட் எகிப்திய தொழில் நுட்பத்தில் உருவானது என்பதால் , இதன் ஸ்லோப் ஆஃப் ஆங்கில் தானாகவே 54.5 டிகிரியில் இருக்கும், சென்னையில் வைத்து என்று இல்லை  கடக ,மகர ரேகைக்கிடையே எங்கே வச்சாலும் காலையில் சுமார் 9.36 முதல் மாலை 2.24 வரையில் நிழலே விழாது!

இதன் தொடர்ச்சியாக பூமி சாய்ஞ்சுக்கிட்டு சுத்துதா ,நேராக சுத்துதா , உண்மையில் எப்படித்தான் சுற்றுகிறது என ஒரு வெட்டி ஆய்வு ஒன்று செய்துள்ளேன் ,அதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...
-------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, விக்கி,கூகிள் இணைய தளங்கள், நன்றி!
--------------------------------------