Monday, April 30, 2012

காங் மக்களவை உறுப்பினரின் விஷம பேட்டி!



புலம் பெயர் தமிழர்கள்தான் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை-காங் எம்.பி, மாணிக் தாகூர் பேட்டி!

இலங்கை சென்று வந்த குழுவில் இடம்ப்பெற்றிருந்த எம்.பிக்களில் ஒருவரான விருதுநகர் காங்கிரஸ் எம்.பி ,மாணிக் தாகூரிடம் குமுதம் ரிப்போர்ட்டர் (3-05-2012)எடுத்த பேட்டியில் தான் அப்படி சொல்லி இருக்கிறார், ஆஹா காங்கிரஸ் இப்படி ஒரு குழுவை அனுப்பியதே இது போல கதைகளை அவிழ்த்து விடத்தானா? இது தெரிஞ்சு தான் அம்மையாரும் பின் கடைசி நேரத்தில் அய்யாவும் கழண்டுக்கொண்டார்களா என நினைக்க தோன்றுகிறது.

ஏன் எனில் காங்கிரஸ் போதைக்கு தமிழக கட்சிகளும் ஊறுகாயாக தான் இத்தனை நாளும் இருந்து வருகிறார்கள் ஆனால் இம்முறை என்னமோ சூதனமாக ஒதுங்கிக்கொண்டார்கள்.

மேலும் அப்பேட்டியில் இலங்கை அரசுக்கு புனரமைப்பு செய்ய இது வரையில் 25 ஆயிரம் கோடிகள் வழங்கப்பட்டுள்ளது என்று சொல்லி இருக்கிறார் அடப்பாவிகளா அவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததை பற்றி ஏன் பாராளுமன்றத்தில் பேசவே இல்லை ரகசியமாக கொடுத்தார்களா? மேலும் இந்த மத்திய பட்ஜெட்டில் இலங்கைக்கு 580 கோடிகள் கொடுத்ததாக குறிப்பிட்டு இருந்ததை சுட்டிக்காட்டி இதெல்லாம் ஏன் எம்.பிக்கள் விவாதிப்பதே இல்லை என எனது பட்ஜெட் பம்மாத்து என்ற பதிவில் சுட்டிக்கேட்டு இருந்தேன்.

அதாவது சிறிய தொகையாகத்தான் ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது ஆனால் இவரோ 25 ஆயிரம் கோடி என்கிறார் அப்படியானால் பட்ஜெட்டில் சொல்லாமல் இரகசியமாக பணம் கொடுத்து வருகிறார்கள் என்று ஆகிறது ,சிலர்  இப்படி சொல்லலாம் ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த தொகையாக இருக்கலாம் என்று ஆனால் 2009 இல் தான் போர் உக்கிரமாகி முடிந்தது புனரமைப்பு எல்லாம் பின்னர் துவங்கியது அப்படி எனில் இந்த மூன்று ஆண்டுகளில் கொடுத்த தொகை என்றல்லவா ஆகிறது.

பட்ஜெட் அறிக்கை உண்மை என்றால் காங்.எம்பி சொன்ன தொகை பொய்யானது அவர் காங்கிரஸ் அரசு புனரமைப்புக்கு நிதிக்கொடுத்தது என்பதை பெரிது படுத்த சொன்னதாகிறது. எம்.பி சொன்னது உண்மை எனில் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் பொய் சொல்லி நாடாளுமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றியதாக ஆகிறது. ஏன் எனில் ஆண்டுக்கு 500 கோடி என கொடுத்தால் 25 ஆயிரம் கோடி உதவி தொகை கொடுக்க 50 ஆண்டுகள் ஆகும். எது உண்மையோ தெரியாது இவர்களை நம்பிய மக்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு வருவது மட்டுமே கலப்படமில்லாத அக்மார்க் உண்மை :-))

இந்திய மக்களின் வரி வருவாயை இஷ்டம் போல செலவு செய்துள்ளது தெரிகிறது, அட புனரமைப்புக்கு தானே கொடுத்து இருக்கு காங்கிரஸ் அதை போய் குறை சொல்லலாமா என்றெல்லாம் அல்லக்கைகள் கேட்கலாம் அடப்பதருகளா இலங்கையில் என்ன புனரமைப்பு செய்து இருக்காங்க அப்போ அதையாவது காட்டுங்க, அந்த எம்.பியே சொல்லி இருக்கிறார் இது வரைக்கும் அங்கே 500 வீடு தான் கட்டிக்கொடுத்து இருக்காங்க அதை ஏன் எனக்கேட்டு விட்டு வந்திருக்கிறோம்னு என்ன கொடுமை சார் இது 25 ஆயிரம் கோடி பணம் வாங்கி அதில் 500 வீடு தான் கட்டி இருக்கு இலங்கை அரசு அப்போ மீதிப்பணம் என்னாச்சு? அதை எல்லாம் ஏன் கேட்க மாட்டேன்கிறார்கள் யாரும்?

மேலும் சொல்லுகிறார் இனிமேல் கொடுக்கும் உதவிப்பணத்தை மக்களுக்கே நேரடியாக காங்கிரஸ் அரசு கொடுக்குமாம் அதான் எக்கச்சக்கமாக ராசபக்சேவுக்கு கொடுத்துட்டிங்களே அது என்னாச்சு என கேட்காமல் இனிமேல் கொடுப்போம் என்றால் இது வரைக்கும் கொடுத்தப்பணம் கோவிந்தா ஆச்சு அதைப்பற்றி ஒன்றும் கேட்கவோ செய்யவோ முடியாது என்று ஒப்புக்கொள்வது போல அல்லவா இருக்கு?

இந்தியா கொடுத்த 25 ஆயிரம் கோடி பணம் இலங்கை அரசுக்கு இராணுவ செலவுகளுக்கு தான் பயன்ப்பட்டிருக்க வேண்டும் , நம் நாட்டிடம் பணம் வாங்கி நமது உறவுகளை அழித்து இருக்கிறது இலங்கை அந்த உண்மையை போகிறப்போக்கில் மறைத்து விட்டு அரசியல் செய்கிறது மத்திய அரசு இவர்களை நம்பி ஆட்சியில் உட்கார வைத்தால் என்னவெல்லாம் செய்கிறார்கள் .

7.2 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ் நாட்டுக்கு பட்ஜெட் போடவே சுமார் ஒரு லட்சம் கோடி போதும் அப்படி இருக்கும் போது சுமார் 20 லட்சம் தமிழ் மக்களுக்கு புனரம்மைப்பு செய்ய இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி கொடுத்தால் என்னவெல்லாம் செய்திருக்கலாம் ஆனால் 500 வீடுகள் தான் கட்டி இருக்கிறார்கள் என அவர்கள் சொன்னதைக்கேட்டுவிட்டு அப்படியே வர எதற்கு ஒரு குழு ,ஏன் இந்தியா தான் கொடுத்த தொகைக்கு கணக்கு கேட்க கூடாது?

20 லட்சம் மக்களுக்கு தலா நபருக்கு 125000 என 25 ஆயிரம் கோடியை பிரித்துக்கொடுக்க முடியும் அப்படி கொடுத்திருந்தால் அவர்களே சொந்தமாக ஏதேனும் செய்திருப்பார்கள் .ஆனால் எதுவுமே உருப்படியாக நடக்காமல் ராச பக்சேவுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய்  மொய் எழுதிவிட்டார்கள்! உலகிலேயே மிக பெரிய மொய் இதுவாக்க தான் இருக்கும் :-))

கேட்கலாம் ஆனால் காங்கிரஸ் அரசு கேட்காது ஏன் எனில் கொடுக்கும் போதே இராச பக்சே பணத்தை வாங்கி என்ன செய்வார் என தெரிந்தே தானே கொடுத்தது இன அழித்தொழிப்புக்கு ஒரு ஜனநாயக நாடே பண உதவி செய்திருக்கிறது ஆனால் அதற்கு பெயர் புனரமைப்பு நிதி. இதை எல்லாம் ஏன் தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு வரவில்லை, இலங்கை பிரசினைக்காக ,தமிழர்களுக்காக கூட பேச வேண்டாம் ,இந்திய மக்களின் பணம் இப்படி அநியாயமாக செலவு ஆகி இருப்பதை கூடவா கேட்க கூடாது? எல்லா எம்.பிக்களுக்குமே கேள்விக்கேட்க உரிமை இருக்கிறது, ஏன் அது கடமையும் கூட அரசு ஒழுங்காக செயல் படுகிறதா எனக்கண்காணிக்க , கேள்விக்கேட்க தானே மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்து அனுப்புகிறார்கள்.

 தமிழகத்தினை சேர்ந்த காங்  எம்.பி ஒருவர்  காங்கிரஸ் அரசு செய்ததை ஒப்புதல் வாக்குமூலம் போல அறிந்தோ அறியாமலோ சொல்லி ஒப்புக்கொள்கிறார், மேலும் புலம் பெயர் தமிழர்கள் தான் இலங்கையில் அமைதி ஏற்படாமல் தடுக்கிறார்கள் என விஷமத்தனமாக பேட்டிக்கொடுக்கிறார் ,ஆனால் இதனை தமிழக ஈழ ஆதரவு அரசியல்கட்சிகளும் பெரிதாக கண்டுக்கொண்டார் போல தெரியவில்லை, பதிவுலக அறிவு ஜீவிகள் ,இனமான காவலர்கள் எது எதுக்கோ அறச்சீற்றம் காட்டி பொங்கி பொங்கி பதிவ போடுபவர்கள் இதற்கு  பெரிதாக ரியாக்ட் செய்தார் போல தெரியவில்லை. என்ன கொடுமை சார் இது!

Wednesday, April 25, 2012

மின்வெட்டு குறையும்!





கடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு "வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.

ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை  நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.

ஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.

புதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய  மின் தொகுப்பில்  கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.

அந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.

என்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.

இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த  ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம "ஆபரேஷனை" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.

"ஆப்பரேஷன்" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))

நாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு  அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.

FACTU..FACTU...FACTU...

"Last year, we purchased 1,500MW of electricity from private players at high prices and somehow managed the situation. But this time, we are not able to buy as we still owe 10,000 crore to suppliers," said the power manager.

மேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும்  கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.

இப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்களில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.

அரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.

இப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))

பின்குறிப்பு:

நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))

Tuesday, April 24, 2012

ஓகே.ஓகே சர்ச்சை மற்றும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச்சலுகை தேவையா?





தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரிச்சலுகை, என்பது பின்னர் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் படங்களுக்கு என்றெல்லாம் மாறி வரிச்சலுகை தொடர்கிறது.

இத்தகைய வரிச்சலுகை திரைப்படங்களுக்கு தேவையா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்,திரையுலகில் புழங்கும் பணம் பெரும்பாலும் கருப்பு பணமே, மேலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யாரும் உண்மையான வருமானத்துக்கு ஏற்ப வருமான வரியும் செலுத்துவதில்லை, அப்படி இருக்கையில் கேளிக்கை வரியும் கட்டாமல் முழுக்க அனுபவிக்க திரையுலகம் துடிப்பதும், அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செவி சாய்ப்பதும் ஜனநாயக கேளிக்கூத்தே.

சில திரைப்படங்களில் இது போல காட்சி வரும் ,ஹீரோ ஏதோ கோல்மால் செய்து பெரிய வியாபாரக்காந்தம் ஆகிடுவார் , போட்டியாளர் அல்லது வில்லன் குருப் வருமான வரித்துறைக்கு போட்டுக்கொடுத்துவிடும், அவர்களும் வந்து சோதனை செய்து விட்டு உங்க கணக்கு எல்லாம் சரியா இருக்கு ஆனால் தொழில் தொடங்க மூல தனம் எப்படி வந்தது, யார்க்கொடுத்தா , அதுக்கு வரிக்கட்டி இருக்கீங்களா என கிடுக்கி போடும். ஆனால் நிஜத்தில் அப்படிலாம் கிடுக்கிப்போடுவதேயில்லை , அப்படிப்போட்டா இந்த ஓ.கே.ஓகே தயாரிப்பாளர் என்ன சொல்லுவாராம் எல்லாம் எங்க நைனாக்கொடுத்த துட்டு என்றா :-))(ஏன்பா வருமான வரித்துறை ஆப்பீசர்ஸ் இதெல்லாம் கண்டுக்க மாட்டிங்களா?)

திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் கேளிக்கை வரி என்பது உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி போன்றவற்றிற்கான ஒரு வரி வருவாய்.அற்ப தொகையாக இருந்தாலும் நிர்வாக செலவுகளுக்கு பயன்ப்படும் , அது மக்களுக்கு பயன்ப்படும் அதனைப்பறித்து செல்வந்தர்களான சினிமாக்காரர்களுக்கு கொடுக்க எதற்கு ஒரு மக்களாட்சி அமைப்பு?

 மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள சிறப்பான கருத்தாக்கம் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கலாம், அப்படி அளிக்கப்படும் விலக்குக்கு ஏற்ப கட்டணம் குறைக்கப்பட்டே முன்னர் எல்லாம் டிக்கெட் விற்கப்படும் ,ஆனால் இப்போது அளிக்கப்படும் வரிசலுகைக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதேயில்லை அப்படி இருக்கும் போது எதற்கு வரிச்சலுகை?டிராபிக் ராமசாமிகள் எது எதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, வரிச்சலுகைக்கு ஏற்ப அரங்க கட்டணம் குறைக்கப்படனும்னு ஒரு பொது நல வழக்குப்போட்டால் என்ன?

எனக்கு தெரிந்து வரிச்சலுகைக்கு ஏற்ப கட்டணம் குறைத்து வசூலிக்கப்பட்ட கடைசி தமிழ் திரைப்படம் பாரதி தான், அப்படத்திற்கு பள்ளிகள் எல்லாம் தாங்களே மாணவர்களை அழைத்து வந்த்துக்காட்டின.

இப்போது வரிச்சலுகை அளிக்கப்படும் படங்களுக்கு மாணவர்கள்,சிறார்களை அழைத்து செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த அளவுக்கு ஆபாசம் காட்சியிலும் வசனத்திலும்.சந்திரனின் மேடுப்பள்ளங்களை உயர்சக்தி தொலை நோக்கியில் தெளிவாக காட்டுவது போல கதாநாயகியின் மேடு,பள்ளங்களை சூம் வைத்து அட்சரசுத்தமாக குளோஸ் அப்பில் காட்டுவதே கேமிரா மேன்களின் தலையாயப்பணியாக இன்றைய  திரைப்படங்களில் உள்ளது.அதுவும் நாபிக்கமலத்தின் மீது தீராக்காதல் கொண்டு கேமிரா அங்கேயே சுற்றி சுற்றி வரும் :-))
அதுக்கும்  கீழ காட்ட தணிக்கை அனுமதிப்பதில்லை, அனுமதித்தால் எல்லாமே வெட்ட வெளிச்சமா 70 எம் எம் ,சினிமாஸ்கோப்பில் காட்ட கலைவியாபாரிகள் தயாரே :-))

லிட்டர் கணக்கில் ரத்தம் தெரிக்க கொலை வெறியுடன் சண்டைக்காட்சிகளில் வன்முறை கொடிக்கட்டிப்பறக்கிறது.ஒரே அடியில் ஒன்பது பேர் பறந்து போவார்கள், யாரு அடிச்சா பூமி அதிர்ந்து , தலை சுத்துதோ அவன் தான் ஹீரோ என பஞ்சர் டயலாக் வேறு :-))

சரி ஓ.கே ஓகே சமாச்சாரத்துக்கு வருவோம், கொலை வெறிப்படத்துக்கு எல்லாம் வரி விலக்கு அளித்துவிட்டு எங்க படத்துக்கு தரவில்லை , விதி என்றால் எல்லாருக்கும் பொருந்தும், எங்களை புறக்கணித்தது அரசியல் பழி வாங்கல் என பேட்டி எல்லாம்  கொடுக்கிறார் ஜூனியர் தளபதி நடிகர்.

கேட்கும் போது அட பாவமே என தோன்றத்தான் செய்கிறது, கடந்த ஆட்சிக்காலத்தில் சிவாஜி எல்லாம் பெயர்ச்சொல் எனவே மொழியில்லை என்றும், தசாவதாரம் எல்லாம் தமிழ்ச்சொல் என்றும் கண்டுப்பிடித்து வரிச்சலுகை கொடுத்தார்கள் :-))

ஆனால் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட ஒச்சாயி என்றப்படத்திற்கு வரிச்சலுகை தராமல் அலையவிட்டார்கள் ,வழக்கு கூட தொடுத்தார்கள் என நினைவு , பல வகையிலும் போராடி ,பின்னர் திருமாவளவன், தா.பாண்டியன் சிபாரிசு எல்லாம் வாங்கி பின்னர் ஒரு வழியாக வரிச்சலுகையும்  பெற்றார்கள் ஆனால் அதற்குள் படமும் தியேட்டரை விட்டு ஓடிவிட்டது.

அப்போது வந்த செய்திக்கான சுட்டி:

ஒச்சாயி

புதுமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களைக்கொண்டு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால் ஊடகங்களும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, இப்போது ஓ.கே.ஓகே படத்திற்காக ஆராய்ச்சி மணியை அடிக்கும் பிராபல்ய பதிவர்களும் ,அப்போது ஒச்சாயியை கண்டுக்கொண்டாற்போல் தெரியவில்லை.சின்ன பட்ஜெட் படங்களை கண்டாலே வெறுப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி தோன்றும்.

இப்போதைய சூழலில் படங்களின் தரம் மற்றும் இன்றும் வரிச்சலுகை இருக்கும் போது அரசியல்ப்பார்க்காமல் ஓ.கே.ஒ.கே விற்கு வரிச்சலுகை கொடுத்திருக்கலாம். பின்னர் எதுக்கு இதெல்லாம் சொன்னேனா, நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு சீன் போடுகிறார்களே அப்போ ஆட்சியில் இருக்கும் போது இவர்களும் வரிச்சலுகையில் அரசியல் செய்து விளையாடினார்கள் என்பதை நினைவுப்படுத்த தான் :-))

ஹி..ஹி ஒச்சாயியோட சாபம் தான் ஓ.கே.ஓகேவுக்கு வரிச்சலுகை கிடைக்க விடாம செய்துவிட்டது என நினைக்கிறேன் :-))

புவி தினம் ஏப்ரல்-22 எனும் ஏகாதிபத்தியங்களின் ஏய்ப்பு!





அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி  தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை  முட்டாள் என சித்தரிப்பதே  இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .

ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை  வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.

நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?

அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?

வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.

எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு  பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.

புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த  நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.

புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.

தொடரும்.

Friday, April 20, 2012

என்ன கொடுமை சார் இது!-5





ஜோசியம் பார்க்கலையோ ..ஜோசியம்!

ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வருவான்னு ஜோஸ்யம் சொல்வாங்க சில மரத்தடி கிளி ஜோதிடர்கள், கல்யாணம், காதுகுத்து, வியாபாரம் செய்ய எல்லாம் ஜோதிடம் பார்க்கிறாங்க. செவ்வாய் வக்கிரமா பார்க்கிறான் ,புதன் உக்கிரமா பார்க்கிறான் புண்ணாக்கு வியாபாரம் செய்தா பின்னிடலாம்னு துணிக்கடை வச்சிருக்கிறவர் பையனுக்கு தொழில் தொடங்க ஆலோசனை சொல்லும் ஜோதிட சிகாமணிகளும் நாட்டில நிறைய இருக்காங்க.

அதை எல்லாம் அலேக்கா தூக்கி சாப்பிடுவது போல என்ன ஜாதகர் என்ன ஷேர் வாங்கலாம், ஜோதிட முறையில் பங்கு வணிகத்தில் பணம் அல்ல பங்கு வணிக ஜோதிடம்னு சுவாமி ஓம்கார்னு ஒருத்தர் கிளம்பிட்டார் .அடப்பாவிங்களா வெள்ளைக்காரன் கஷ்டப்பட்டு கணினி ,மென்பொருள்னு கண்டுப்பிடிச்சா அதை வச்சு நோகாம ஜோசியம் பார்க்க கிளம்பிடுறிங்களே ...என்ன கொடுமை சார் இது!

*****
சென்னை - ஊட்டி வழி கும்பகோணம்!


சென்னையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டது தாங்க அது.

சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம், நடத்துனரை விசாரித்தேன் ,அப்படி போக சொல்லி உத்தரவாம். யாருக்காவது ஒரே பஸ் டிக்கெட்டில் தமிழ் நாட்டை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் அணுகவும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தினை.

ஊட்டிக்கு டிக்கெட் வாங்குறவன் முழுசா ஊட்டிப்போய் சேர்வாங்கிறிங்க :-))

என்ன கொடுமை சார் இது!

*****
ஓ.கே.ஓகே.(விமர்சனமல்ல)

கையில காசு மித மிஞ்சி இருந்தா எல்லாம் படம் எடுக்க கிளம்பிடுறாங்க, படத்துக்கு கதை சொல்ல வரவங்க கொஞ்சம் குஷிப்படுத்துவோம் அப்போ தான் தயாரிப்பாளார் மசிவார்னு , தயாரிப்பாளரப்பார்த்து "சார் உங்கள ஒரு சைடுக்கா பார்த்தா தல போல இருக்கிங்க இன்னொரு சைடுக்கா பார்த்த தளபதி போல இருக்கிங்கனு " சரவண பவன் சர்வர் போல இருக்கிற தயாரிப்பாளர உசுப்பேத்தி விட்டுட்டு போயிடுறாங்க.

பலப்பேரு இந்த காக்காப்பிடிக்கு எல்லாம் அசராம தயாரிப்ப மட்டும் பார்ப்போம்னு ஆசைக்கு அணைப்போட்டு விடுவார்கள்.சிலப்பேரு தூண்டிலில் சிக்கி எத்தனை நாளைக்கு தான் அடுத்தவன் டூயட் பாட நாம செலவு செய்றது, நாமளும் டூயட் பாடிப்பார்ப்போம்னு அரிதாரம் பூசி ஹீரோவாக அவதாரம் பூசிக்கொண்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்கள், அவங்களுக்கு மட்டுமா சூனியம் பார்க்கிறவங்களும் சேர்த்துள்ள பயப்புள்ளைகள் சூன்யம் வைக்குதுங்க :-))

போலீஸ் டி.சி பொண்ணை தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கும் பையன் ஓ.கே செய்து ஓ.கே சொல்ல வைப்பது தான் ஓ.கே.ஒகே எனும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தோட ஒன் லைன் கதை , சுருக்கமா சொன்னாலும் அவ்வளவு தான் விரிவா சொன்னாலும் அவ்வளவு தான் கதை.

ஒரு கல்லும் ,கண்ணாடியும் உடையாம மோதிக்கொண்டால் காதலாம்,
 குண்டு துளைக்காத கண்ணாடியா இருந்தா கல்லாவது கடப்பாரையாவது.

படம் முழுக்க மயிலாப்பூர் சபா நாடகம் போல வாய் வலிக்க பேஷிண்டே இருக்கா ஷந்தானம் அண்ட் அவரோட அல்லக்கையா நடிக்கும் உதயநிதி.ஹீரோவ அல்லக்கைனு சொல்ல்லிட்டேன்னு மொறைக்காதேள் படம் பார்த்தா நோக்கும் அப்டிதாண்ணா தோனும் :-))

படம் முழுக்க ரெண்டுப்பேரும் மெட்ராஸ் ஐ வந்தவாள் போல கருப்புக்கண்ணாடியோடவே அலையுறாங்க ,டைட்டில்ல கண்ணாடினு வர்றதே அதுக்காகவோ?

படத்தில ஷந்தானம் மயிலாப்பூர் பார்த்தான்னு ஷொல்லிண்டு இப்படித்தான் ஏதோ பாஷைல படம் பூரா பேஷிண்டு இருக்கார்.இரண்டரை மணி நேர படத்தில ரெண்டே முக்கால் மணி நேரம் பேசுறார்ப்பா .அதெல்லாம் காமெடி வஜனம்னு சொல்றா அப்படி ஷொன்னா தான் தெரியுது காமெடினே.

லொள்ளு சபானு பழைய சினிமாவ எல்லாம் ஷந்தானம் தொலைக்காட்சில கலாய்ச்சுண்டு இருப்பார் முன்ன அப்போ மீந்து போன பழைய ஸ்கிரிப்ட் ஆ இயக்குனர்க்கிட்டே கொடுத்து இருப்பார் போல.

கிளைமாக்ஸில உதயநிதி விடுற பீட்டர ஷந்தானம் மொழிப்பெயர்ச்சி செய்வார் ,இதெல்லாம் பெண்ணின் மனதை தொட்டு படத்தில விவேக் டீம் செய்தது.கொஞ்ச காலமா கவுண்டரை இமிடேட் செய்தார் , இப்போ விவேக் எல்லாம் ஓய்ஞ்சுட்டதால அவரையும் இமிடேட் செய்ய ஆரம்பிச்சுட்டார்.இப்படியே போனால் ஷந்தானம் வந்த வேகத்தில காணாமல் போக வேண்டியது தான்.

ஒரே கதைய அடுத்தடுத்து படமெடுத்தாலும் படம் ஓடுதுனா இயக்குனர் மேல குற்றமா என்ன எடுத்தாலும் பார்ப்போம்னு போகிற மக்கள் மேல குற்றமானு சாலமன் பாப்பையா,திண்டுக்கல் லியோனி வச்சு பட்டி மன்றம் தான் போடனும்.

தாத்தா பிறந்த நாள் என்றால் உண்டியல் வச்சு நிதி திரட்டுவார், பேரன் ஹீரோவா நடிச்சு நிதிதிரட்டுறார், படம் ஓடும் எல்லா ஏரியாவிலும் கட்சிப்பிரமுகர்களே மொத்தமா டிக்கெட் வாங்கிடுறாங்க, எப்படியும் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்டு தான் எல்லா தியேட்டர்லயும், படத்தின் உண்மை நிலவரம் இரண்டாவது வாரத்துக்கு பிறகே தெரியும்.

கலைக்குடும்பத்தின் கலையார்வத்துக்கு கலை தொண்டு செய்தே கழக உடன்பிறப்புகள்  கடன்காரர்கள் ஆகிடுவாங்க போல இருக்கே.

என்ன கொடுமை சார் இது!

*****
என்னமா சிந்திக்கிறாங்க!

இந்த சமாச்சாரம் ரொம்ப நாளுக்கு முன்னரே எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும், எப்படிலாம் ஒத்த சிந்தனை வேலை செய்யுதுனு உதாரணம் காட்ட இதை விட நல்ல உதாரணம் கிடைக்காது என்பதால் பயன்ப்படுத்திக்கொண்டேன் , சும்மா பார்த்து எஞ்சாய் செய்யுங்க!

அந்தக்காலம்:



இது இந்தக்காலம்:



(ஹி..ஹி கவுண்டமணி,கார்த்திக் ஆபிஸ் காமெடி கிடைக்கலை ,படம் இது தான் ,கிடைச்சா சொல்லுங்க போடலாம்)
*****

இராசதந்திரம்:

தமிழ் தாத்தா தனது தொண்டரடிப்பொடிகளுடன் ஞானசன்னிதியில் அரசியல் மந்திராலோசனையில் இருக்கிறார்.

பேருந்துக்கட்டணத்தினை உயர்த்தியது மக்கள் விரோத போக்குனு அறிக்கை விட்டு போராட்டம் நடத்தலாமாய்யா?

ம்ம்க்கும் தலைவரே கடந்த பல ஆண்டுகளாக பேருந்துக்கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவே நஷ்டம் போக்குவரத்துக்கழகத்தினை மூட வேண்டிய நிலையில் கொண்டுவந்து விட்டதே நீங்க தான்னு அம்மையார் கவுண்டர் அறிக்கை விடுவாங்க...

யோவ் அந்தம்மா விடுதோ இல்லையோ நீயே போட்டுக்கொடுப்பய்யா.

ம்ம் பால் விலை ஏத்துனாங்களே அதை கண்டிச்சு அறிக்கை விடலாமே ...

அதுக்கும் அதே தான் நீங்க கடந்த காலங்களில் விலை ஏற்றவில்லை பால்வளத்துறை நட்டம், சரி செய்தேன் பதில் வரும் ...தலைவரே...

யோவ் என்னைய்யா எந்த பக்கம் போனாலும் கேட்டப்போடுறிங்க...இப்படியே போனால் நாம எதிர்க்கட்சியா அரசியல் கடமையே செய்ய முடியாது போல இருக்கே...

ஹி...ஹி தலைவரே நமக்கு  எதுக்கு அந்த கவலை ,எதிர்க்கட்சி இப்போ கறுப்பு எம்ஜிஆர் கட்சி தானே ...நமக்கு பிரச்சினை இல்லை... கவலைய விடுங்க...

யோவ் உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாவே இல்லையாய்யா எதிர்க்கட்சியா கூட உட்கார விடாமல் அடிச்சு துவைச்சுட்டாங்க மக்கள் அந்த கவலை கொஞ்சமாச்சும் இருக்காய்யா உனக்கு ..உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு நான் எப்படி அரசியல் நடத்தி ..என் லட்சியத்தியத்தை நிறைவேற்றுவேன்.

(மனசுக்குள்.. உங்க லட்சியம் உங்க மகன தலைவராக்கிப்பார்க்கிறது தானே நடத்துங்க யாரு வேணாம் சொன்னா) ஹி..ஹி இப்படி செய்தா என்ன தலைவரே...

எப்படிய்யா?

கடுமையான மின் வெட்டு, கூடவே வரலாறு காணாத மின் கட்டண உயர்வு என காரசாரமா அடுக்கு மொழில கண்டிச்சு ஒரு அறிக்கை விடுங்க தலைவரே ...அந்தம்மா ஆடிப்போயிரும்ல...

போய்யா நீயும் உன் ஆலோசனையும், கடந்த காலத்தில் மின் உற்பத்தியே செய்யவில்லை, மின்வாரியத்துக்கு 500000 கோடி கடன்னு ரிவிட்டா அடிக்கும்யா ....

என்ன தலைவரே நீங்களே இப்படி பேச ஆரம்பிச்சுட்டிங்க....

உங்களை எல்லாம் நம்பி பயனில்லை, நான் அண்ணாவுக்கு பின்னால் நின்றும் ,காமராஜருக்கு முன்னால் நின்றும் அரசியல் செய்தவன் ,எப்போது ,எப்படி அரசியல் செய்யனும்னு தெரியும்,

தனி ஈழம் அமைக்க பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா உதவி செய்யணும் ஒரு அறிக்கை விடப்போறேன் , 1980 இல் இருந்து கழகம் விட்ட அறிக்கைகளின் தேதி,கிழமை எல்லாம் பட்டியல் போட்டு பத்து பக்கத்துக்கு அறிக்கையை விட்டா ச்சும்மா அதிரும்ல...

தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், இப்போ மட்டும் அம்மையார் பதிலுக்கு கவுண்டர் கொடுக்க மாட்டாங்களா?

எப்படிய்யா முடியும் .... நம்மை அரசியல் செய்ய விடாம முடக்க மட்டுமே ஈழப்பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்க வேண்டும்னு சொல்வாங்க ,தனி ஈழம்னு எந்த காலத்திலும் அம்மையார் பேச்சுக்கு கூட பேச மாட்டாங்க,அப்படியே சந்தர்ப்பவசமா அவங்களும் தனி ஈழம் பற்றி அறிக்கை விட்டா ,நாம தான் முன்னாடி அறிக்கை விட்டோம்னு சொல்லிக்கலாம்ல எப்பூடி!

ஆஹா தலைவரே பிரமாதம் அசத்திட்டிங்க, இதுவல்லவோ இராசதந்திரம்... என கோரஸ்சாக தொண்டரடிப்பொடிகள் கூவுகிறார்கள்!

என்ன கொடுமை சார் இது!

Friday, April 13, 2012

சித்திரை-1 இல் புத்தாண்டு கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்




பெரும்பாலோனோர் ஜனவரி -1 அன்று புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் ,ஏனில் பொதுவாக உத்தியோகப்பூர்வ நிமித்தமாக ஆங்கில நாட்காட்டியினை பின்ப்பற்றுவதால் ஏற்பட்ட பழக்கம் ஆகும். ஆனால் அது ஆங்கில காலண்டரும் அல்ல ஆங்கில ஆண்டுப்பிறப்பும் அல்ல போப் கிரிகோரி ரோமன் நாட்காட்டி அடிப்படையில் அமைத்ததுவே நாம் பொதுவாக பயன்ப்படுத்தும் நாட்காட்டி, எனவே ரோமன் ஆண்டுப்பிறப்பே ஜனவரி ஒன்றில் வருவது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில்  ,பஞ்சாங்க நாட்காட்டி அடிப்படையில் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக கொண்டு ,சித்திரை ஒன்றில் ஆண்டு பிறப்பு கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் சித்திரை ஒன்றில் புழங்கும் 
வருடப்பிறப்புகள்;

காஷ்மீர் -நவரேக்

மஹாராஷ்டிரா- குடி பட்வா

கோவா- குடிபட்வா

பஞ்சாப்&ஹரியானா- பைசாஹி

பீஹார்- வைஷாகா

மேற்கு வங்கம்-போஹேலா பைசாஹி

இராஜஸ்தான் -தப்னா

மணிப்பூர்-சஜிபு நோங்மா பன்பா

பாலி ,இந்தோனேசியா,மொரிஷியஸ் ஹிந்துக்கள்-நியேபி

அஸ்ஸாம்-போஹாஹ் பிஹு

சிந்தி- சேத்தி சந்த்

ஆந்திரா -உகாதி

கர்நாடகா-உகாதி

கேரளா- விஷு

தமிழ்நாடு- சித்திரை புத்தாண்டு

இதில்

#ஆந்திரா,கர்நாடகாவில் சித்திரை ஒன்று மார்ச்-23 இல் வருவதாக கணக்கிட்டு அன்று உகாதி கொண்டாடுகிறார்கள்.

#மஹாராஷ்டிரா,கோவாவில் குடி பட்வா சித்திரை ஒன்று மார்ச் 23 இல் வருவதாக கொண்டாடப்படுகிறது.

மற்ற இடங்களில் சித்திரை ஒன்று ஏப்ரல்-13 இல் வருகிறது, இது சாலிவாகன சகாப்தம் அடிப்படையில் வரும் சாகா சகாப்த காலண்டர் முறையில்.

வட இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த புத்தாண்டு அனைத்தும் அவர்களது அறுவடை திருநாளை ஒட்டி என்பதை கவனிக்கவும். ஆனால் தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றுடன் அறுவடை தொடர்புடையது அல்ல , தை முதல் தேதியே அறுவடைக்கு அருகில் வரும்,அன்று பொங்கல் என கொண்டாடுவதே புத்தாண்டு ஆகும். ஆனால் அப்படி நாம் இது நாளும் சொல்லிக்கொள்ளவில்லை அல்லது மறந்து விட்டோமோ அல்லது மறக்கடிக்கப்பட்டமோ. ஆதலால்  சித்திரை ஒன்று என்று இந்திய(இந்துத்வ) வருடப்பிறப்பை கொண்டாடி வருவது வழக்கமாகி போய் இருக்கலாம்.

ஆகவே மக்களே சித்திரை ஒன்றில் கொண்டாடப்படுவது தமிழ் புத்தாண்டா அல்லது இந்திய-இந்துத்வ புத்தாண்டா நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்.


சித்திரை ஒன்றில் புத்தாண்டு கொண்டாடுவோரையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம் எனவே வாழ்த்துவோம்...ஏக் கவாலி கானா பாடுவோம்... பங்க்ரா ஆட்டம் ஆடுவோம் ஓஹ் பல்லே ..பல்லே ...

ஜாத்தா ஆயி பைசாஹி !!!
----
பின்குறிப்பு:

#தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,

தை-1 தமிழ் புத்தாண்டு

# படங்கள் தகவல்கள் உதவி ,கூகிள், விக்கிப்பீடியா,நன்றி!

Tuesday, April 10, 2012

மின்வெட்டு எல்லாம் ரொம்ப சகஜமப்பா!





நம்ம நாட்டில் தான் மின் வெட்டு ,புழுக்கம், எரிச்சல் எல்லாம் வெளிநாட்டில் எல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் தடையே இல்லாமல் பாயும் என்று பொதுவாக நினைத்து நாம் ஏக்கப்பெரும்முச்சு விடுவதுண்டு, ஆனால் அங்கும் உண்டு , நம்மை ஆண்டுவிட்டு போன வெள்ளைக்கார துரைமார்களின் தேசமான இங்கிலாந்தில் கடுமையான மின் வெட்டு அதுவும் நான்காண்டுகளுக்கு தொடர்ந்து இருந்தது என்றால் நம்ப முடியாதில்லையா? ஆனால் அது உண்மையே ஆனால் இப்போ இல்லை அது 1970  களில் , ஹி..ஹி அதை எதுக்கு இப்போ சொல்றேன்னு  பார்க்கறிங்களா, எல்லாம் மின்வெட்டில் வெந்து நொந்த மக்கள் மனசை தேற்ற தான் :-))

மூன்று நாள் வாரம்:
(three day week)

கி.பி 1970 இல் இங்கிலாந்தில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சங்கம் ஊதிய உயர்வு , பணிப்பாதுகாப்பு இன்ன பிற கோரிக்கைகளை வைத்து போராட்டத்தினை அறிவித்தது, வேலை நிறுத்தம் செய்யாமல் விதிப்படி வேலை என்று அறிவித்து போராடினார்கள்.

அது என்ன விதிப்படி வேலை போராட்டம்,  
(work by rule)

# எட்டு மணி நேர வேலை என்றால் எட்டு மணி நேரம் மட்டுமே, கூடுதல் பணம் கொடுத்தாலும் கூடுதல் நேரம் வேலை செய்ய மாட்டார்கள்.

# ஒருவருக்கு என்ன வேலையோ அவ்வேலையை மட்டும் செய்வார்கள்.அதாவது ,வாகன ஒட்டுநர் வாகனம் மட்டுமே ஓட்டுவார் டயர் பஞ்சர் ஆகிவிட்டால் மாற்ற மாட்டார்.அது அவர் வேலை இல்லை. இதான் விதிப்படி வேலை செய்வது.

#எட்டு  மணி நேரம் வேலை செய்வார் ஆனால் எவ்வளவு செய்வார் என்றெல்லாம் கேட்க முடியாது. உ.ம்: ஒரு அடிப்பள்ளத்தையே அளந்து அளந்து எட்டு மணி நேரமும் வெட்டிக்கொண்டு இருக்கலாம் :-))

நம்ம அரசு அலுவலகத்தில இப்பவும் இதான் செய்கிறார்கள் :-)) காலையில் இருந்து மாலைவரை ஒரே கோப்பை புரட்டிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பிவிடுவார்கள்!

சுரங்க தொழிலாளர்கள் விதிப்படி வேலை செய்ததால் நிலக்கரி உற்பத்திக்குறைந்து  ,மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கிடைக்கும் நிலக்கரி கொண்டு மூன்று நாட்களுக்கு தான் மின் உற்பத்தி முழுசாக செய்ய முடியும் என்பதால். வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மின் விடுமுறை அறிவித்து விட்டது ஆங்கில அரசு. மருத்துவமனை, சூப்பர் மார்க்கெட், பத்திரிக்கை அலுவலகங்கள் போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு.இதனை மூன்று நாள் வாரம் என்று சொன்னார்கள்.

மின்சாரம் கிடைக்கும் மூன்று நாட்களிலும் பல கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகள் முழுதும் இயங்க கூடாது, தொலைக்காட்சி ஒளிபரப்பு  இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்படும் என்பது போல பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலை 1970 முதல் 1975  வரை நீடித்தது, மின்வெட்டைக்காரணம் காட்டி , மெழுகு வர்த்தியை போஸ்டர் ஒட்டி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் நடந்தது. ஆட்சியும் மாறியது. பின்னரே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நின்று முழு அளவில் மின்சாரம் கிடைத்தது.

ஆனானப்பட்ட சூரிய அஸ்தமனமில்லா ஆங்கில தேசத்திலும் மின்வெட்டு இருந்திருக்கு, மக்கள் போராடி ஆட்சியை மாற்றி இருக்காங்க, ம்ம் இங்கேயும் தான் ஆட்சியை மாற்றிப்பார்த்தோம் மின்வெட்டு குறையாம கூடிப்போச்சு :-))

கூடுதலாக ஒரு தகவல் , இப்போ இங்கிலாந்தில் நிலக்கரி உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது, பல சுரங்கங்களிலும் கரி இல்லாமல் மூடப்பட்டுவிட்டது.இப்போதைய சுரங்களில் இருக்கும் நிலக்கரி கையிருப்பும் 2020 வரைக்கும் தான் வரும், அதன் பிறகு அங்கு ஒரு கிலோ நிலக்கரிக்கூட இருக்காது இறக்குமதி செய்தால் தான் உண்டு. அப்படி செய்தால் விலை அதிகம் ஆகிவிடும் என மரபு சார ஆற்றலைப்பயன்ப்படுத்த முடிவு செய்து அதற்காக பல திட்டங்கள் தீட்டிவருகிறார்கள்.

மிக அதிக அளவில் காற்றாலையிலும் , கடலலை மின்சாரத்திலும் முதலீடு செய்ய திட்டமிட்டு செயல்படுத்தியும் வருகிறார்கள்.

உலக அளவில் இன்னும் 144 ஆண்டுகளுக்கு தான் நிலக்கரி படிமம் பயன்ப்படுத்த கிடைக்கும் என கணக்கிட்டுள்ளார்கள்.சிலர் 114 ஆண்டுகள் என்கிறார்கள், ஆனால் ஆண்டுக்கு ஆண்டு பயன்ப்படுத்தும் வேகம் அதிகரிப்பதை பார்த்தால் அதற்கு முன்னரே  நிலக்கரி படிமங்கள் தீர்ந்துவிடலாம் என்றும் கணிக்கிறார்கள்.

சரி இந்தியாவின் நிலை என்ன , நம் நாட்டில் இன்னும் 140 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி படிமம் இருப்பதாக இந்திய நிலக்கரி கழக ஆய்வு சொல்கிறது. ஆனால் அது மிகைப்படுத்தப்பட்ட மற்றும் துல்லியம் இல்லாத ஒரு ஆய்வு , இன்னும் 40 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என பிசினஸ் ஸ்டேண்டர் பத்திரிக்கை ஒரு கணக்கை காட்டுகிறது.

நம் நாட்டில் மரபு சாரா எரிசக்தி ஆய்வுகளும், பயன்பாடும் ஆமை வேகத்தில் போகிறது. வருங்காலம் ஒளி வீசுமா ,இருண்டு போகுமா என்பது ஆட்சியாளார்களின் கொள்கை முடிவெடுப்பதிலும், விரைந்து செயல்ப்படுத்துவதிலும் தான் இருக்கிறது. நாளை  என்ன நடக்கும் யார் அறிவார்?

இங்கிலாந்தில் மின் தட்டுப்பாடு காலத்தில் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது போல இப்போது  சில சிக்கன நடவடிக்கைகள் எடுக்கலாம் என நினைக்கிறேன்.

# திரையரங்குகளில் தினசரி இரண்டுக்காட்சிகளுக்கு மட்டும் அனுமதிக்கலாம்.தமிழ் நாட்டில் சுமார் 1500 அரங்குகள் இருக்கலாம் எனவே நிறைய மின்சாரம் மிச்சம் ஆகும் , மக்களுக்கும் பணம் மிச்சம் ஆகும்.

# தொலைக்காட்சி ஒளிப்பரப்பை இரவு 10 மணியோடு நிறுத்த செய்யலாம்.

# ஐ.பி.எல் போன்ற பகலிரவு விளையாட்டுப்போட்டிகளுக்கு  தடை விதிக்கலாம்.

#வணிக வளாங்களில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு கொண்டுவரலாம்.துணிக்கடை ,நகைக்கடைகளில்  பகலிலும்  அதிக விளக்குகள் எரிவதை காணலாம்.அப்போது தான் அவர்கள் பொருள் பள பளக்குமாம்.

#இரவு 9 மணிக்கு மேல் கடைகள் ,வர்த்தக நிறுவனங்களை மூட செய்யலாம்.

# தமிழ் நாடு முழுக்க தெரு விளக்குகளாக பயன்ப்படுத்தப்படும் அதிகம் மின்சாரம் குடிக்கும் சோடியம் வேப்பர் விளக்குகளுக்கு தடை விதிக்கலாம். வழக்கமான குழல் விளக்குகளை தெருவிளக்குகளாக பயன்ப்படுத்த வேண்டும்.மக்களை மட்டும் குண்டு பல்ப் பயன்ப்படுத்த வேண்டாம்னு சொல்லிட்டு அரசாங்கம் செய்யுற வேலைய பாருங்க :-))

#அரசியல் கட்சி கூட்டம், மாநாடு எல்லாம் பகலில் மட்டும் நடத்த வேண்டும், சீரியல் லைட் , கிலோ மீட்டர் கணக்கில் விளக்கு புடிப்பதை எல்லாம் தடை செய்யலாம்.

இன்னும் நிறைய சிக்கன நடவடிக்கை  எடுக்கலாம், உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் சொல்லுங்கள்.

அடுத்தப்பதிவில் விரிவாக நிலக்கரி ,அனல் மின்சார உற்பத்தி , மற்றும் மரபு சாரா மின் உற்பத்தி சாத்தியங்களை முடிந்தவரை விளக்கலாம் என இருக்கிறேன்.

------
பின்குறிப்பு:

தகவல்கள், படம் ,கூகிள்,விக்கி,நன்றி!

Friday, April 06, 2012

வெடிக்கும் தொலைக்காட்சி பெட்டிகளும் துடிக்கும் சீரியல் பக்தைகளும்



(EXPLODING T.V BOX)


சென்னை ,ஏழுகிணறு பகுதியை சேர்ந்த நாக லிங்கம் என்ற குடை வியாபார நிறுவன பொறுப்பாளர் , தனது வீட்டில் மின் தடையின் போது "தலைகீழ் மின்மாற்றி சேமகலத்தின் (inverter)உதவியுடன் தொலைக்காட்சி பார்த்த பொழுது ,தொலைக்காட்சிப்பெட்டி வெடித்து இறந்து போனார்.
-இன்றைய தின மலர் செய்தி:
man died due to tv explosion

மேலும் த.சே மூலம் தொ.கா பார்த்ததால் தான் வெடித்திருக்க வேண்டும் என்றும் யூகம் சொல்கிறார்கள்.ஆனால் சம்பவத்தின் போது த.சே சிறிதும் சேதமில்லாமல் இருந்துள்ளது.

மின்சாரம்,மின் தடை, த.சே என பதிவெல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம் இந்த சம்பவத்திற்கான காரணம் என்னவென ஓரளவுக்கு தெரிகிறது, மின் தடை தலை விரித்துப்போட்டு ஆடும் இக்காலத்தில் பலரும் த.சே வாங்கி இருப்பார்கள்,பலர் வாங்க திட்டமிட்டு இருப்பார்கள் அப்படி இருக்கும் போது பலருக்கும் ஒரு அச்சம் வரலாம் எனவே நம்ம அறிவுக்குதிரையை தட்டி இந்நிகழ்விற்கான காரணத்தை விளக்கி மக்களுக்கு பயம் நீக்கி /உருவாக்கி ஒரு சேவை செய்யலாம்னு இப்பதிவு :-))

மேலும் இன்வெர்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கி நான் முன்னர் போட்ட பதிவின் சுட்டி கீழே,

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி

#தொ.கா வெடிக்குமா?
(T.V explosion)


வெடிக்கும், குண்டு சி.ஆர்.டி (CRT)வகை தொ.கா மின் சுற்று (electric circuit)கோளாறுகளால் சில சமயங்களில் வெடிக்கும். ஒரு காலத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தொ.கா கள் பெருமளவு வெடித்து பீதியை கிளப்பின. அது குறித்து முன்னர் நான் எழுதிய கூடன்குளம் அணு உலைப்பதிவிலும் குறிப்பிட்டு தொ.கா வே வெடிக்கிறாப்போல தான்  தயாரிக்கிறாங்க,அவர்களால் எப்படி பாதுகாப்பான அணு உலை தயாரிக்க முடியும் என்று சொல்லியிருப்பேன்.(வழக்கம் போல நீங்களும் படிக்காமலே போய் இருப்பிங்க)

வெடிக்கும் ரஷ்ய தொ.கா பற்றிய செய்தி:
(exploding russian made tv sets)

Soviet television sets tended to explode, because of faulty manufacturing. The surprising and alarming propensity of Russian receivers to blow up, and by extension the apprehension it causes in Soviet viewers, was one of the stranger features of Soviet life. By one estimate, sixty percent of all apartment fires in Moscow are caused by mass-produced Soviet television sets, which hada tendency to explode. Of the 715 apartment fires in Moscow in November 1987, 90 were blamed on exploding television sets, a statistic the Soviet press viewed as an alarming commentary on Soviet technology. Police said three television models notorious for defective wiring are being removed from the market, and millions of warning leaflets have been mailed to television owners.

exploding tv sets

ஏன் தொ.கா கள் வெடிக்கிறது என்று பார்ப்போம், தொ.காவில் காட்சி திரையானது(display) ஒளிரும் பூச்சுக்கொண்ட முகப்புள்ள  வெற்றிட குழாயால்(vacuum crt) ஆனது அதனுள் எலக்ட்ரான் கற்றையை (electron beam)செலுத்தி காட்சி உருவாக்கப்படுகிறது.இதற்காக எலக்ட்ரான் துப்பாக்கி(electron gun) என்ற அமைப்பும் உள் இருக்கும். சாதாரணமாக வீட்டு மின் அழுத்தம் 220 ஓல்ட் தான் அதைக்கொண்டு எலக்ட்ரான் கதிரை உருவாக்க முடியாது என்பதால் தொ.காவில் ஒரு உயர் அழுத்த மின்மாற்றி (step up transformer,smps)சுற்று இருக்கும், அது சுமார் 12000 ஓல்ட் அளவுக்கு மின்னழுத்தத்தினை உயர்த்தும். அப்படி பாயும் கதிர் சி.ஆர்.டி (crt)யில் பட்டு பிம்பமாக உருவாகி உங்களுக்கு திருமதி செல்வமாக கண்ணீர் விடலாம், அல்லது ஐ.பி.எல் உற்சாக ஆட்ட பெண்டீராக (IPL cheers gals)மாறி இடுப்பைக்குலுக்கலாம் என்ன நிகழ்ச்சியோ அதுவாக காட்சிப்பெறும்.

இப்போ இப்படி பாயும் எலக்ட்ரான் கற்றையின் எல்லா எலக்ட்ரான்களும் பிம்பமாக மாறிவிடாது சில தறுதலை எலக்ட்ரான்கள் (scattered electrons)தெறித்து அங்கும் இங்கும் போய் குழாயில் ஒட்டிக்கொண்டு நிற்கும் ,மணிக்கணக்கில் தொ.கா பார்க்கும் போது போது நிறைய தறுதலை எலக்ட்ரான்கள் சேர்கையில், கள்ள ஓட்டுப்போட்டு தமிழ் மண மகுடம் பிடிக்கும் பதிவர்கள் போல பெரும் மின்சக்தியாக உருவாகிவிடும் (build up power), இப்படி கூறுக்கெட்டத்தனமாக குவியும் மின்சக்தியை வடிக்கட்டி வெளியேற்ற வேண்டும் இல்லையானால் தொ.கா வெடித்து விடும். வெடிப்பிலும் வித்தியாசமாக வெடிக்கும், வெற்றிட குழாய் என்பதால் உள்நோக்கி (implosion)நொறுங்கும். ஆனால் எப்படி வெளியில் சிதறுகிறது என்றால் அதுக்கு இன்னொரு வெடி உள்ள இருக்கு என்பதாலே.



இப்படி குவியும் எலக்ட்ரான் மின்சக்தியை வடிக்கட்டி வெளியேற்ற ஒரு மின்சுற்று(draining circuit) குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கும், அது அவ்வப்போது மின்சக்தியை ஒரு மின் தேக்கிக்கு (capacitor)அனுப்பி பின்னர் அதனை தொ.காவின் உள்ளீடு மின்சாரத்துடன்(input power) சேர்த்து பயன்ப்படுத்திக்கொள்ளும்.அதாவது விரயம் ஆகும் மின்சாரத்தினை மறு சுழற்சி செய்துக்கொள்ளும் (feed back power)படி தொ.கா வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் பெரும்பாலும் வெடிப்பதில்லை.

குழாயில் இருந்து மின்னூட்டத்தினை வடிக்கட்டும் மின் சுற்று மற்றும் அதனைப்பெற்று பயன்படுத்தும் மின் தேக்கியில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் ,மின்சாரம் வடிக்கட்டப்படாமல் குவிந்துக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் குழாய் (crt)வெடிக்கும் அப்படி குழாய் வெடிக்கும் போது , உடன் மின் தேக்கி(capacitor) உயர் அழுத்த மின் மாற்றியும் (smps)சமயங்களில் சேர்ந்து வெடிக்கும் அப்படி எல்லாம் சேர்ந்து வெடிக்கும் போது பெரும் விளைவாக இருக்கும் அப்படியான தருணங்களில் தீ விபத்து , உயிர் இழப்பும் ஏற்படலாம்.

இப்போதைய நவீன தொ.கா பெட்டிகளில் இது அரிதான ஒரு விபத்து ,வழக்கமாக நடக்காது, ஆனால் பல ஆயிரம் தொ.காவில் ஏதேனும் ஒன்றில் தயாரிப்பின் போதே பழுதுடன் வரலாம், அல்லது பயன்ப்பாட்டின் போது மின் சுற்று பழுதாகலாம். அது அவரவர் அதிஷ்டம் பொருத்து.

இதற்கு த.சே காரணமாகுமா என்றால் ஆக வாய்ப்பு வெகு குறைவு ஏன் எனில் குறைவான மின் அழுத்தமே அதனால் கொடுக்க முடியும் ஆனால் மட்டமான த.சேக்கள் சரியாக தூய முழு அலை மாறு மின்சாரம்(pure sine wave) வழங்காமல் போகும் பட்சத்தில் அது தொ.காவின் உள் மின்சுற்றுகளை பாதிக்க வைத்து பின்னர் மின்வடி சுற்றினை செயல்படாமல் போக வைக்க சாத்தியம் உண்டு. இப்படி தொ.காவில் மின் சுற்று பழுதானாலும் உடனே வெடித்து விடாது நீண்ட நேரம் இடைவிடாமல் தொ.கா பார்க்கும் போது தான் வேலையைக்காட்டும்.

மேலும் மின்சாரம் நின்று வரும் போது ஏற்படும் திடீர் உயர் மின்னூட்டமும் (surge current)தொகா.மின் சுற்றினை பழுதடைய செய்யலாம், உடனே விளைவுகள் தெரியாமல் போவாதால் நாம் தொடர்ந்து சீரியல் சிற்றின்பத்திலோ அல்லது கிரிக்கெட் கிளு கிளுப்பிலோ  கிறங்கி கிடக்கும் போது மின்னூட்டம் பெருகி வெடிப்பாக விளையலாம். அப்படி திடிர் மின் உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க surge protector தொ.காவுக்கென வாங்கிப்பயன்படுத்தலாம்.

ஆயுட்காலம் முடிந்த  பின்னும் மறுசுழற்சி(waste recycling) செய்யாமல் தொ.கா வை பிளாஸ்டிக் கவர் போட்டு பொத்தி பொத்தி வைத்து பார்க்கும் போதும் எத்தனை நாளு தான் நானும் நல்லவனாகவே நடிக்கிறது என்று தொ.கா பொங்கியும் வெடிக்கலாம்.

அப்போ என்ன தான் தீர்வு,

 #தொ.கா உள்ளே மின் சுற்று ஒழுங்கா இருக்கானு தெரியாத நிலையில் நீண்ட நேரம் தொ.கா பார்ப்பதை தவிர்க்கலாம் .

#ஐ.பி.எல் உற்சாக ஆட்டப்பெண்டீரின் இடுப்பு சரியா தெரியலைனு ரொம்ப கிட்டே போய் தொ.கா பார்க்காமல் ஒரு பத்தடி தள்ளி உட்கார்ந்து பார்க்கலாம்,


#பணம் நிறைய இருந்தாலோ அல்லது இப்போ தான் கல்யாணம் ஆன புது மாப்பிள்லை  எனில் மாமனாரை கறந்து ஒரு 42 இஞ்ச் லெட் (LED T.V)அல்லது எல்சிடி தொ.கா (LCD  T.V)வாங்கி சுவற்றில் மாட்டிக்கொள்ளலாம். (நானா தொ.கா பார்க்கிறேன் உங்க பொண்ணு தான்  பொழுதன்னிக்கும் தொ.காவே கதினு கிடக்கா அவ நல்லா இருக்க தானே கேட்கிறேன் என மாமாவிடம் பிட் போடலாம்)

#எல்லாவற்றையும் விட எளிய பாதுகாப்பான வழி அந்த முட்டாள் பொட்டியைப்(IDIOT BOX)பார்க்காமலே இருக்கலாம் :-))

--------
பின்குறிப்பு:

படங்கள், தகவல்கள் உதவி, கூகிள்,விக்கி,தி இந்து, தினமலர் தளங்கள்.நன்றி!

Thursday, April 05, 2012

என்ன கொடுமை சார் இது-4






என்ன கொடுமை சார் இது-4

மங்குனி உத்திரம்:

பங்குனி வெயில் பல்லைக்காட்டுது இதுல ஆறுமுகனுக்கு அரோகரானு ஒரு கோஷ்டி பால் காவடி ,பன்னீர் காவடினு தூக்கிக்கிட்டு ஜிங்கு ஜிங்குனு ஆடிக்கிட்டு போகுதுங்க ,கேட்டா பங்குனி உத்திரமாம், எனக்கு தெரிஞ்சு உத்திரம்னா ஓட்டு வீட்டுல நடுவில போடுற மர பீம் இவங்க எங்கே போய் பீம் போட போறாங்களோ :-))

என்னமோ செய்துவிட்டு போகட்டும், ஆனால் ஒரு 2-3 நாளாவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி போட்டு லூர்து மேரி ராஜேஷ்வரி, தொளுகுவா மீனாட்சி சவுந்தர ராஜன் ஆகியோர் பாடிய பக்தி பழரச பாடல்களை உச்சஸ்தாயில அலரவிட்டு என் காது ஜவ்வுல கடப்பாரைய விட்டு ஆட்டிட்டாங்க மை லார்டு முருகா , இதெல்லாம் இல்லைனா நீ அருள் பாலிக்க மாட்டியா ? இதுக்கே மின் வெட்டினால் அவங்க பக்தி சேவை பாதிக்க கூடாதுனு ஜெனெரேட்டர் வேற வச்சு பாட்டுப்போடுறாங்க வேலைய்யா ,இது என்னய்யா நியாயம்.

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி ஒலி மாசு செய்வது என்று தடைசெய்தார்கள்னு சொல்றாங்க ,ஆனால் ஆன்மீக ,அரசியல் கூட்டங்களில் அதான் கிழியுது ,அதுக்கு காவல் துறை பாதுகாப்பு வேற, என்ன தடையோ ,சட்டமோ அது எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.

ஆறுமுகம்னு சொல்றாங்களே அந்த படம் எப்படி இருக்கும்னு தேடிப்பார்க்கலாம்னு தேடினா பாடாவதி சினிமாக்களான சின்ன தளபதி பரத்தின் ஆறுமுகம், குயிக் கன் முருகன், மூலக்கடை முருகன் போன்ற  படங்கள் தான் முதலில் வருது. மூலக்கூடை முருகன் படம் பவர் ஸ்டாரோடது ஸ்டில்லே செம டெர்ரரா இருக்குனா படம் எம்புட்டு டெர்ரரா இருக்கும் ,அத பார்க்கிறவன் உசுரோட வருவான்னு நினைக்கிறிங்க :-))



சரி சமாச்சாரத்துக்கு வருவோம், ஆறு தலையோட ஒரு படத்த பார்த்தேன், ஆனால் பாருங்க ஒரு கழுத்து தான் இருக்கு ,அதுக்கு இடப்பக்கம் ரெண்டு  தலை, வலப்பக்கம் மூன்று தலை. அடப்பக்தி பதருகளா நடுவில ஒரு தலைய வச்சு ஒரு பக்கம் 2, இன்னொரு பக்கம் 3 வச்ச எப்படியா பேலன்ஸ் ஆவும், ஒரு சைடுக்க இழுக்காதா? வச்சது தான் வச்சிங்க ஒரு 7 தலைய வைக்க என்ன கேடு? , ரெண்டுப்பக்கமும் தலா மூன்று தலைனு பேலன்ஸ் ஆகும்ல :-))

வாரத்துக்கு ஏழு நாள் , அதான் ஏழு தலை எனவே எங்க மதம் அறிவியல் மதம்னு இந்த மதவாதிகள் பதிவு போட உதவி இருக்குமே :-))

எனக்கு தெரிஞ்சது கூட கடவுளை கற்பனை செய்தவங்களுக்கு தெரியலையே என்ன கொடுமை சார் இது!

*****


பாக்தாத் கஃபே:

ஜெர்மனிய ஹாலிவுட் தயாரிப்பு படம் 1987 இல் வந்தது ,ஆஸ்கார் நாமினேஷேன் வரைக்கும் போன ஒரு ஃபீல் குட் படம்.


ஜெர்மானிய சுற்றுலா பயணியான ஒரு பேரிளம் பெண் ஆன் தி வேயில் கணவனுடன் சண்டைப்போட்டுக்கிட்டு , அமெரிக்க மொகாவோ பாலை , சாலை வழிப்பயண சிற்றுண்டி விடுதிக்கு வருகிறார். அந்த சாப்பாட்டுக்கடைப்பேரு தான் பாக்தாத் கஃபே :-))

பாக்தாத் கஃபே ஏற்கனவே நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கு, சரியான பராமரிப்பு இல்லை, போனா போவுதுனு சில பேர் வந்து பீர் ,காபி குடிக்கிறாங்க அத வச்சு  கணவனை பிரிந்த ஒரு பெண்மணி ஒரு மகனோடு வாழ்க்கையை ஓட்டுகிறாள்.



இப்படியான சூழலில் அங்கு வரும் கதாநாயகி அங்கே வேலைக்கு சேர்ந்து சுத்தம் செய்து வாடிகையாளர்களை அன்பாக கவனித்து வியாபாரத்தினை பெருக்குகிறாள்.கொஞ்சம் மேஜிக் வித்தையும் தெரியும் என்பதால் அனைவரையும் கவர்கிறாள்.இதுக்கு நடுவே அங்கே வரும் சினிமா செட் ஆர்டிஸ்ட் கு லேசா ஒரு காதல் வருது.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ஹீரோயின் வயசான பெண்மணி, அதே போல ஆர்டிஸ்டும் தான். அதாவது மெச்சூர்டான லவ்வாம், காதலுக்கு கண்ணு மட்டும் இல்லை வயசும் இல்லைனு இயக்குநர் சொல்ல வரார் :-))

பாலைவனத்துல அழுது வடிஞ்ச சாப்பாட்டுக்கடை திடிர்னு ஜெக ஜோதியா ஜொலிக்குதேனு அந்த ஊர் ஷெரிப் சந்தேகப்பட்டு வந்துப்பார்த்தா ஜெர்மனிய பெண்மணி தான் காரணம்னு தெரியுது. சுற்றுலா விசா தான் வச்சு இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு இன்னும் 24 மணி நேரத்துல நாட்டை விட்டு போகணும், இல்லை நானே நாடு கடத்துவேன் போல ஒரு மிரட்டல் .

நாட்டுக்கு திரும்ப போறதா ,இங்கேயே எப்படி இருப்பதுனு ஒரு குழப்பம்,அப்போ ஆர்டிஸ்ட் ஒரு ஐடியா குடுக்கிறார் ,என்னை கண்ணாலம் கட்டிக்கோ குடியுரிமை கிடைச்சிடும்னு, அப்புறம் என்னாச்சா போங்கப்பா போய் யுடியுப்பில் படம் இருக்கு பாருங்க ,இலவசமா தான்..

இந்த படத்தோட கதைய கேட்டதும் மாதவர் நடிச்ச நள தமயந்திக் கதை நியாபகம் வந்தா அதற்கு அடியேன் பொறுப்பல்ல,எல்லாம் ஒரு ஒத்த சிந்தனையா இருக்கும்னு எடுத்துக்கணும் :-))

இந்த பாக்தாத் கஃபே  படம் மெட்ராஸ் கஃபே, மெரினா கஃபே னு இன்னும் பல வடிவம் தமிழில் எடுக்கும்னு தோன்றுகிறது.

டிவிடி, இணைய படங்கள் எல்லாம் தடை செய்துட்டா தமிழ்ல படம் எடுத்துட்டு ஒலகப்படம் எடுத்தேன்னு சொல்லிக்கிறவங்களாம் காணாமல் போய்டுவாங்க :-))

தமிழ் சினிமாவில மட்டும் தான் தமிழ்ல நடிச்சுட்டு "லோக நாயகன்" எனப்பட்டம் போட்டுக்க முடியும், என்ன கொடுமை சார் இது!

*****
மின் வெட்டு அரசியல்:

மின்சாரம் குறித்து பதிவுகள் சில போட்டிருந்தாலும் , இன்னும் சொல்ல நிறைய இருக்கு, மின் வெட்டு அரசியல் பற்றி இன்னொரு பதிவு வரும், அதுக்கு முன்ன ஒரு டீசர் டிரெய்லர் இது :-))


ஒரு பதிவரின் வலைப்பதிவில் மின்வெட்டு அரசியல் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது , இப்போதைய மின் வெட்டுக்கு பெரிய காரணம் கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படலை, 2-3 ஆண்டுகளில் புதிய தலைமை செயலகம் கட்ட காட்டிய வேகத்தில் ஒரு 1500 மெ.வாட் மின் திட்டம் கட்ட காட்டியிருக்கலாம்னு சொன்னேன்.

பிரகாசமான அரசியல் எதிர்காலம் உள்ளவரும் ,பிரபல பதிவருமான அண்ணன் எம்.எம்.அப்துல்லா திடிரென பிரசன்னம் ஆகி ,  இல்லை நிர்வாகம் செய்ய தெரியலை அம்மையாருக்குனு சொன்னார்.

நான்: 2001 -2006 காலத்தில்  தமிழகத்தில் மின்சாரம் உபரியாக இருந்தது, ஆனால் 2006-11 காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது அதன் உச்சம் இப்போது எனவே கடந்த 5 ஆண்டுகாலமாக புதிய மின் உற்பத்தி செய்யாததே காரணம் என்றேன்.புள்ளி விவரங்களும் அளித்தேன்.

அதற்கு அப்துல்லா அண்ணன் சொன்னார் பாருங்க ஒரு பதில் அது போல பிரபல அரசியல்வாதிகளால கூட சொல்ல முடியாதுனா பார்த்துக்கோங்க,

2000 க்கு முன்னர் அய்யா காலத்தில போட்ட மின் திட்டங்களால் தான் 2001 -2006 இல் மின் தட்டுப்பாடு இல்லாம இருந்துச்சாம், ஆகா ...ஆகஃக்கா :-))

அப்போ மின் தட்டுப்பாடு இல்லைனா அது அப்போவே அய்யா செய்த சாதனைனு சொல்லிக்கிறார் சரி ஓ.கே வச்சுப்போம், இப்போ மின் தட்டுப்பாடுக்கு காரணம் முந்தைய காலத்தில் எதுவும் செய்யலைனா அப்போ மட்டும் எங்க ஆட்சி காரணம் இல்லைனா எப்படி?

2000க்கு முன்ன 5 ஆண்டுகளில் செய்தார் எனில் ஏன் 2006-11 இல் எதுவும் செய்யலைனு சொன்னா அதையும் ஒத்துக்க வேண்டாமா அப்போ மட்டும் இல்லைனா எப்படி அண்ணே.

எந்தக்காலத்தில் நல்லது நடந்தாலும் அதுக்கு காரணம் நாங்க தான்னு பெருமை தேடும் போது கெட்டது நடந்தா மட்டும் இவங்க தான் காரணம்னு சொல்வது தான் கழக அரசியலா என்ன கொடுமை சார் இது :-))

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பணம் கொடுக்காமல் உள்ள நிலுவை தொகை மட்டும் சுமார் 10000 கோடி, எனவே இப்போது  தேவைக்கு மின்சாரம் வாங்க முடியாமல் 150 மெ.வாட் மட்டுமே வாங்குகிறது மின்வாரியம். மேலும் காற்றாலை மின்சாரம் குறைந்து விட்டதால் மின் தட்டுப்பாடு 4000 மெ.வாட் ஆகும் எனவே அதிக மின்வெட்டு.

கடந்த 5 ஆண்டுகளில் தனியாரிடம் மின்சாரம் வாங்கிவிட்டு காசுக்கொடுக்காமல் டபாய்த்தால்,இப்போ மின்சாரம் வாங்க முடியவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த செய்தி. சுட்டி


மின்சாரக் கடன்


இப்போவும் கையில காசு கொடுத்தா மின்சாரம் கிடைக்கும் ,அரசு என்னமோ அன்னக்காவடிப்போல செயல்ப்படுது,  மின்க்கட்டணம் உயர்த்திய பிறகாவது மின் தடை நீங்குதா என பார்ப்போம்.

எனக்கு என்னவோ , மின் கட்டணம் உயர்த்தினா மக்கள் அதிக எதிர்ப்பு காட்டாமல், கூட வேண்டும்னா காசு தரோம் மின்சாரத்தை கொடுங்கனு சொல்ல கூடிய மன நிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே கடுமையான மின்வெட்டினை செயல்படுத்தினார்களோ என்று தோன்றுகிறது.

அரசு நினைத்தார் போல தான்  இப்போ நடந்திருக்கு, மக்களும் ரொம்ப பெருசா எதிர்ப்பு காட்டவில்லை.இதற்கு பெயர் தான் அரசியல் இராஜ தந்திரமா?

 என்ன கொடுமை சார் இது!

---------------
பின்குறிப்பு: படங்கள் ,செய்திகள் உதவி கூகிள்,விக்கி,IMDB,இணைய தளங்கள்,நன்றி!


Tuesday, April 03, 2012

INDIA INC.,





இந்திய பொருளாதாரத்தை பற்றி சொல்லும் போது ரொம்ப உயர்வாக,  யானை ,தூங்கும் புலி என டெர்ராக சொல்வார்கள் பொருளாதார வல்லுனர்கள் ,அதை கேட்கும் போதெல்லாம் மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும் ,நாம ஏழை நாடு இல்லை ஏழையாக்கப்பட்ட நாடு, எதிர்காலத்துல இந்தியா சும்மா தக தகன்னு ஒளிரும், யானை போல பிளிரும் என்றெல்லாம் 70  எம்.எம் இல் 7.1 டால்பி சர்ரவுண்டு சவுண்டில் கலர் கலராக கனவு வரும் , வயலுக்கு அறுவடை செய்ய ஆடிக்காரில் போகும் காலம் வெகு தூரமில்லை , கவலைப்படாதடா கைப்புள்ள, நீ தூங்குனு இழுத்துப்போர்த்திக்கிட்டு கனவுக்கண்டுக்கொண்டிருந்தேன்.

கனவு மெய்ப்பட காலம் இன்னும் வரவில்லையோ இல்லை என்னைப்போல கனவு நம்ம ஆட்சியாளர்களுக்கு வரவில்லையோ தெரியவில்லை, அவங்க போடுற திட்டமெல்லாம் பார்க்க பிரமாண்டமாகவும் கேட்க பிரமிப்பாகவும் இருக்கு, ஆனால் அதன் பலன் மட்டும் நம்ம வீட்டுக்கு வராம அம்பானி , ஆதித்ய பிர்லானு விலாசம் மாறிப்போயிடுது. அடுத்த தடவை நமக்கும் யோகம் வரும் அப்போ  ராச லட்சுமி வாசக்கதவ  தட்டுவான்னு காத்திருந்தால் ,தபால்காரார் கபால்னு ஒரு காகிதத்த வீசிட்டுப்போறார் , வீட்டக்காலி செய் , 8 வழி விரைவு சாலை வரப்போகுதுனு சொல்லுது சர்க்கார் காகிதம்.

வயக்காடு இங்கே கிடக்க வீட்டை கொடுத்துட்டு எங்கே போக என கவலை கருவண்டா மனசைக்குடைய , ராசா அப்படிலாம் உன்னை கஷ்டப்பட விட மாட்டோம்   , உன் வயலையும் கொடு அங்கே சிறப்பு பொருளாதார மண்டலம் வருது , ஊரைக்காலி செய்துட்டு நிம்மதியா பஞ்சம் பொழைக்க எங்கே வேண்டுமானாலும் போய்க்கோனு அடுத்த நாளே இன்னொரு ஓலை வருது.அதைப்பார்த்ததும் என் ஆடிக்கார் கனவு ஆடிக்காத்துல பறந்த கூளமா பறந்துப்போச்சு!

என்ன தான் நடக்குது நாட்டுல?  யார் , ஏன் இப்படி என்னை ஆடிக்கார் வாங்க விடாம தடுக்கிறாங்க ?எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமினு சர்க்கார் ஆபிசுக்கு போனா , நாட்டோட வளர்ச்சிக்கு தான்  தம்பி எல்லாம், இதெல்லாம் செஞ்சா தான் நாடு நல்லா இருக்கும், நாலு பேர் நல்லா இருக்கணும்னா இதெல்லாம் செய்யணும் , இதை விட பெருசு பெருசா திட்டமெல்லாம் நாடு முழுக்க வரப்போகுது தம்பிப் போப்பா போ ...போனு பத்தி விடுறாங்க! அப்போ அந்த நாலு பேருல நானும் ஒருத்தன் இல்லையா ? நான் நல்லா இருக்க வேண்டாமா? நானும் இந்த நாட்டுக்குடிமன் தானே , என்னைய விட்டுப்புட்டு யாரோ நாலு பேரு நல்லாருக்கணும்னு சொல்லுறாகளே ,சரி அந்த நாலு பேரு யார் ,என்ன தான் திட்டம் போடுறாங்கனு தெரிஞ்சுக்காம விடக்கூடாதுனு நம்ம குல தெய்வம் கூகிளாண்டவரை  வழக்கம் போல உதவிக்கு கூப்பிட்டேன் ,அவரும் நம்பினார் கெடுவதில்லைனு அருள்பாலித்தார்.நான் கண்ட பாரத பொருளாதார பெருவளர்ச்சி திட்டங்களில் ஒன்று தான் "டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்" இங்கு அழுத்தி முழு விவரம் காண்கவும்.
DMIC



டெல்லி மும்பை இண்டஸ்ட்ரியல் காரிடார்:

டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே டெல்லி,யு.பி,ஹரியானா, இராஜஸ்தான்,குஜராத், மஹாராஷ்ட்ரா என ஆறு மாநிலங்கள் வழியாக சுமார் 1500 கி.மீ நீளத்திற்கு 10 வழி விரைவு சாலை மற்றும் இணையாக சரக்கு ரயில் இருப்பு பாதை போட்டு ஒரு மஹா பொருளாதார சிறப்பு மண்டலம் உருவாக்க இருக்கிறார்கள்.

அதன் சிறப்பு அம்சங்கள்:

#1500 கி.மீ 10 வழி சாலை மற்றும் இருப்பு பாதை.

#சாலை மட்டும் அல்ல சாலைக்கு இரு புறமும் தலா 150 கி.மி அகலத்திற்கு இடம் கையகப்படுத்தப்படும். அங்கு 6 மண்டலங்களாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்ப்படும்.

#மொத்த நிலப்பரப்பு 1500*300=450000 ச.கி.மீ.

# வெளியேற்றப்படும் மக்கள் எண்ணிக்கை 180 மில்லியன் அதாவது 18 கோடி. தமிழ் நாட்டின் மக்கள் தொகையைப்போல இரண்டரை மடங்கு. இந்தியாவில் மிக பெரிய அளவில் மக்களை புலம்பெயர வைக்கும் திட்டம் இது ஒன்று தான் என நினைக்கிறேன்.


#திட்ட மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 450000 கோடி ரூபாய்.
இது ஒரு அரசு, தனியார் கூட்டு நிறுவனம் , அரசுக்கு 49% பங்கு, தனியாருக்கு 51%

# திட்டத்தின்  தலைவர் மத்திய நிதியமைச்சர், இயக்குநர்கள் 6 மாநில முதல்வர்கள்,மற்றும் தனியார் நிறுவங்களை சேர்ந்தவர்கள்.

கேட்க நல்லாத்தானே இருக்கு ,நாடு வளர இதெல்லாம் செய்ய வேண்டாமா என்று பொதுவாக நினைக்க தோன்றும், கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் விளைவுகளின் தாக்கம் தெரியும்.

18 கோடி மக்களை வெளியேற்றி கொண்டு வரும் திட்டத்தால் பலன் அடைய போவது யார்? இப்படி  ஒரு திட்டம் அவசியம் தேவையா? கேட்டால் கிடைக்குமா பதில்!

18 கோடி மக்கள் எங்கு குடியேற்றம் செய்யப்படுவார்கள், அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும்.அவர்களுக்கு அங்கு கண்டிப்பாக வேலைக்கொடுக்க போவதில்லை.

#18 கோடி  மக்களை இடம் பெயர செய்து விட்டு எத்தனைப்பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் ? எதுவும் விவரம் சொல்லப்படவில்லை.

#வனங்கள்,இயற்கை சூழல் பாதிப்பு பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள், அதுவும் விவரம் இல்லை.

# பொருளாதார ரீதியாக இதன் பலன் நாட்டுக்கு கிடைக்குமா? கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. 100 சதவீத வரி சலுகை , இன்ன பிற சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் திட்டத்துக்கு நிதி  திரட்டுவதிலேயே ஒரு டகால்டி செய்கிறார்கள்.

அதாவது 51% நிதி கொடுக்கும் தனியார்கள் அதனை கடன் மூலம் திரட்டுவார்கள் ,ஜப்பானிய வங்கி கொடுக்கிறது, அதே சமயம்  அவர்களும் பங்கு தாரர்கள்.

இது எப்படி எனில் கிடைக்கும் வருவாயில் கடன் தவணையை கட்டி அடைக்க வேண்டும் பின்னர் எஞ்சியதை 49:51 என பங்கு தாரர்கள் பிரித்துக்கொள்வார்கள்.கொடுத்த கடனையும் வட்டியோட வசூலித்துக்கொண்டு லாபத்திலும் பங்கு(அப்படித்தான் அவர்கள் தளத்தில் இருக்கு, சுட்டியில் சரிப்பார்த்துக்கொள்ளவும், எனக்கு இந்தளவு தான் புரிந்தது.)

# பொருளாதாரம், மற்றும் தொழில் வளர்ச்சி பெருக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது சரியே.

ஜி.எஸ்.டி சாலை 4 வழியாக போட்டார்கள் , தங்க நாற்கர சாலை எல்லாம் வந்தது, ஆனால்  சாலையின் இரு புறமும் இருந்த இடத்தின் மதிப்பும் உயர்ந்தது. அது நிலத்தின் உரிமையாளருக்கு தானே பலன் அளித்தது. தொழிற்சாலையோ ,வீட்டு மனையோ எதுவாகினும் நில உரிமையாளரை சென்றடையும்.

ஆனால் டெல்லி மும்பை திட்டத்தில் மட்டும் , சாலையை நாங்கள் போடுகிறோம் எனவே அதன் பயனும் எங்களுக்கு தான் என 300 கி.மி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்துகிறார்கள்.

மக்கள் நல அரசு எனில் உட்கட்டமைப்பு வசதியை செய்துக்கொடுத்து பலனை மக்களை அனுபவிக்க விட வேண்டும் ஆனால் இப்போதைய அரசு ஏதோ தனியார் முதலாளியைப்போல போட்டக்காசுக்கு பலன் எனக்கு தான் என செயல்படுகிறது .
உண்மையில் இது மக்களால் ,மக்களுக்காக,மக்களாலாயே உருவான மக்களாட்சியா அல்லது இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற கம்பெனிக்கு ஆட்சியை குத்தகைக்கு விட்டிருக்கிறோமா? என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை.

மேலும் 4.5 லட்சம் கோடியையும் ஒரே ஆண்டில் முதலீடு செய்யப்போவதில்லை அப்படி இருக்க ஏன் கடன் , மற்றும் கடன் கொடுத்தவரும் பார்ட்னர் என லாபத்திலும் பங்கு என இரண்டு முறை பணம் கொடுக்க வேண்டும். பேசாமல் அரசே  ஆண்டுக்கு 1 லட்சம் கோடி என ஒதுக்கி திட்டத்தை முடிக்கலாம். முழுப்பயனும் அரசுக்கும் , மக்களுக்கும் என ஒரு திருப்தியாவது இருக்கும்

18 கோடி மக்களிடம் இருந்து நிலத்தை அடி மாட்டு விலைக்கு பறித்து ஒரு சில தொழிலதிபர்கள் பயன் பெற அரசே முன்னின்று தரகு வேலைப்பார்ப்பது மக்களாட்சியை மகா கேவலப்படுத்துவதாக உள்ளது.அக்காலத்தில் மேலை நாடுகள் தங்களது தொழில்,வியாபாரத்தை பெருக்க நாடுப்பிடித்து காலனி அமைக்க கப்பலில் ஆயுதங்களுடன் வந்தார்கள் ,இப்போது அவர்களது ஏஜண்ட்களையே அந்நாட்டின்  முக்கியமான பொறுப்பில் அமர வைத்து அதே காலனியாதிக்கத்தை தொடர்கிறார்கள் என்று சொன்னால் மிகையல்ல.

விடுகதை நேரம்:

இப்போது ஒரு புதிர், இதற்கு விடை தெரிந்தும் கூறாவிட்டால் அவர்களது வலைப்பதிவு எந்த திரட்டியிலும் இணையாது , பின்னூட்டங்களும் வராது, ஹிட்ஸ் கிடைக்காது, எதிர் மறை ஓட்டுக்கள் கிடைக்கும்.! உஷார்!


"The United Nations Conference on Trade and Development" என்பது WTO,IMF,WORLD BANK  போன்ற சர்வதேச நிதியமைப்புகளுக்கு கொள்கை வகுத்து ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் ஒரு அமைப்பு ஆகும் , அதில் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்மிகு பல்கலைகளில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு இந்திய மேதைக்கு  வேலைக்கிடைத்தது. பின்னாளில் அவர் இந்தியாவுக்கு வந்து வேறு ஒரு நல்லப்பணியில் அமர்ந்தாலும்  அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது அவருக்கு இன்னமும் பழைய பாசம் போகவில்லையோ என நினைக்க வைக்கிறார்.அவர் யார்?
---------------------------

பின்குறிப்பு:

தகல் மற்றும் படங்கள் உதவி dmic,rediff இணைய தளங்கள் ,நன்றி!