Tuesday, October 10, 2006

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

கொசுக்கடி தாங்காமல் அர்த்த ராத்திரியில் என் கவிதை உள்ளம் விழித்துக்கொண்டதால் , கடித்த கொசுவை பழி வாங்கும் வன்மம் என் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததன் விளைவே இந்த சிக்குன் குன்யா கவிதைகள்.


கொசுவை பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை ஏன்யா பழி வாங்குறனு புலம்புறது கேட்கிறது என்ன பண்றது கொசுவுக்கு கடிக்க மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாதே.... உங்களுக்கு படிக்க தெரியுமே... ஹே... ஹே ஹே.
கொசு கடியை விட இந்த வவ்வால் கடி பெரும் கடியா இருக்கேனு திட்டாம ,சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகளைப்படித்து விட்டு சிக்கனமா ரெண்டு வரி பின்னூட்டமாவது போடுங்க மகா ஜனங்களே!.
********************************************************************

* நாட்டில பாதி பேரு ஆண்யா

பெண்கள் தலைல இருக்கு பேன்யா

கொசு கடிச்சா எல்லாருக்கும் சிக்குன் குன்யா..

இது ஏன்யா?

******************************

* குடிச்சா கிக் தருவது

'ரம்'யா

கொசு கடிச்சா வருவது

சிக்குன் குன்யா!

*****************************
* சிக்குனு உடைப்போட்டா

அது டென்னிஸ் சான்யா

பக்குனு கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

****************************
* பெண் டைகர் போல

ஏஸ் அடிச்சா

அது டென்னிஸ் சான்யா!

ஏடிஸ் டைகரிஸ்

பெண் கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

*****************************

* சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடிச்சா

வரும் சிக்ஸ் ரன்யா!

கொசு ஓங்கி கடிச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* பார்ல கடிச்சுக்க வச்சா

போன்லெஸ்

சிக்கன் துன்யா!

போன்லெஸ் கொசு

கடிச்சு வச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* அரட்டை அரங்கம்

நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை

கடிப்பது கொசு!