Friday, April 05, 2013

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

(ஹி...ஹி கச்சத்தீவு பொண்ணா, கட்டெறும்பு கண்ணா )


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டது கச்சத்தீவு ஆகும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார்  285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின்  செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.



பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை" எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின்  ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்" லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில  உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,

மூலம்:  http://katchatheevu.com/katchatheevu-is-ours-concrete-evdiences/

நன்றி!
-------------------------



இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்" என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா  ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)


இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள்  செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a law
relatable  to Art. 3 and legislation relatable to  Art. 368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368  can  make a  law to  give effect and  implement the
Agreement  in  question covering  both Berubari  and the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover  cases
of  cession of the territory of India and thereafter make  a
law under the amended Art. 3 to implement the Agreement.//


முழு தீர்ப்பையும் காண்க:

http://www.indiacourts.in/IN-RE--THE-BERUBARI-UNION-ANDEXCHANGE-OF-ENCLAVES-Vs.-REFERENCE-UNDER-ARTICLE-143(1)-OFTHE-CONSTITUT_81ff5700-42dc-491f-89ab-d6b539e75ba1

----------------
(Nehru and V.Krishna menon)


நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

 இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு" நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும்  நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான  தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில்  காங்கிரஸ் மீது எத்தகைய  வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார்,  அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான  ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை  தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

 அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்த சத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது  பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி  தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு" ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.
----------------------------

பின்க்குறிப்பு:

# சிற்சில தகவல் &காலப் பிழைகள்(நாள்,வருடம்) இருக்கலாம்,முடிந்த வரையில் சரியான தகவல்களை சேகரித்து அளித்துள்ளேன்,பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டால் திருத்தம் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.asiastudies.org/index.php?option=com_content&view=article&id=221&Itemid=79

# http://www.eurasiareview.com/08022010-a-tamil-nadu-perspective-on-india%E2%80%99s-bilateral-agreements-center-state-relations/

# http://katchatheevu.com/

# http://bsubra.wordpress.com/2007/05/10/katcha-theevu-issue-history-indian-naval-strategy/

# http://www.thehindu.com/news/national/jayalalithaa-seeks-early-hearing-on-katchatheevu/article3911978.ece

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!

**********************