Tuesday, November 29, 2011

வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!



வால்மார்ட் வருகையும் போலி சுதேசமும், பொருளாதார சித்தாந்தங்களும்!


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீதமும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீதமும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் அல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் என அனைத்தும் எதிர்ப்பு காட்டியுள்ளது.

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்பது சரியா, தவறா? இதில் என்ன லாப ,நட்டங்கள் இருக்கு என்பதை தெளிவாக யாரும் சொல்லவில்லை. ஏதோ "அன்னிய" என்ற சொல்லினை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு எதிர்ப்புக்காட்டுவதாகவே தெரிகிறது.

இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள இந்திய சில்லரை வர்த்தகத்தினை ஒரு பார்வை பார்க்கலாம்.

இந்திய சில்லரை வர்த்தகத்தின் தோராய மதிப்பு 496 பில்லியன் டாலர்கள் ஆக 2012 இல் இருக்கும் என ஒரு மதிப்பீடு இருக்கு.இது ஒரு மிகப்பெரிய தொகை ஆகும். ஆனால் இந்த அளவு பணம் புழங்கும் சில்லரை வர்த்தகம் பெரும்பாலும் முறை சாரா வணிகமாகவே இருப்பது தான் இந்தியாவின்  பெரிய பலவீனமே.

முறைப்படுத்தப்பட்ட இந்திய சில்லரை வர்த்தகம் சுமார் 3 % மட்டுமே, 97 % முறை சாரா வணிகமாகவே நடக்கிறது.சில்லரை வர்த்தகம் என்பது உற்பத்தியாளர்/பெரும் வினியோஸ்தரிடம் இருந்துஒரு வணீகர் வாங்கி நுகர்வோரின் இறுதி நுகர்வுக்கு விற்பனை செய்வது. அது பதப்படுத்துதல்,அல்லது மறு விற்பனைக்கு அல்ல.



முறை சார் சில்லரை வணிகம்
என்பது ரிலையன்ஸ் பிரெஷ், மோர், ஸ்பென்சர்ஸ் புட் ஓர்ல்ட், நீல் கிரீஸ் வகை சங்கிலித்தொடர் அல்லது தனி பல்ப்பொருள் அங்காடிகள் ஆகும்.இவர்களுக்கு வணீக எண், விற்பனை வரி,வருமான வரி,  தணிக்கை எல்லாம் உண்டு.

முறை சாரா சில்லரை வணிகம்:

இது தெருவுக்கு தெரு இருக்கும் அய்யனார் ஸ்டோர்ஸ் ,சண்முகம் செட்டியார் பொது வணிகம் வகை கடைகள் ,இவர்கள் பெரும்பாலும் டின் எண், விற்பனை வரி,வருமான வரி , தணீக்கை போன்ற சடங்குகளுக்கு ஆட்படுவதில்லை.

உணவுப்பொருள் சில்லரை வர்த்தகத்தில் உதாரணமாக தக்காளி கடைசியாக ஒரு நுகர்வோரை எவ்வாறு வந்தடைகிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் காய்,கனி உற்பத்தியில் திண்டுக்கல் மாவட்டம் முன்னிலை வகிக்கிறது, அங்கே ஒட்டன் சத்திரம் முக்கியமான உற்பத்தி மையம் ஆகும், அங்கு தக்காளி சாகுபடி செய்யும் விவசாயீ கூடைகளில் தக்காளி எடுத்துக்கொண்டு நேராக கமிஷன் மண்டிக்கு செல்வார், அங்குள்ள கமிஷன் ஏஜண்ட் விலை நிர்ணயம் செய்வார், எடை எல்லாம் இல்லை ஒரு கூடை இன்ன விலை என சென்னைக்கு என்ன விலைக்கு அனுப்பலாம் என்பதைக்கணக்கிட்டு நிர்ணயிப்பார். ஒரு கூடையில் சுமார் 8-10 கிலோ தக்காளி இருக்கும்.

சென்னையில் தக்காளி உட்சபட்ச விலையில் இருக்கும் போது கூட திண்டுக்கல்லில் விவசாயிக்கு கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் கிடைப்பது குதிரைக்கொம்பு.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து 10 டன் தான் அனுப்ப கமிஷன் மண்டிக்காரர்களுக்கு தேவை இருக்கும் போது 20 டன் தக்காளி வந்து விட்டால் கிலோ 50 பைசாவுக்கு கூட போகும், சமயத்தில் அதுக்கு கூட விலைப்போகாது. விற்க முடியாமல் விவசாயி ரோட்டில் கொட்டி செல்வதுண்டு.ஏன் எனில் திரும்ப கொண்டு சென்று மீண்டும் வர ஆகும் செலவுக்கு கூட காசு தேறாது , மேலும் அடிப்படுவது, அழுகுவது என தக்காளி வீண் ஆகும்.

இப்படி ஒரு கமிஷன் ஏஜண்டால் திண்டுகல்லில் கொள்முதல் செய்யப்பட்டு , சென்னை வரும் தக்காளி ,மீண்டும் சென்னையில் இன்னொரு கமிஷண் ஏஜண்ட் கை மாறும் அவர் மொத்த வியாபாரிக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து கை மாற்றி விடுவார், அந்த மொத்த வியாபாரி சில்லரை வியாபாரிக்கு கை மாற்றி விடுவார், இப்படியாக கடைசியில் நுகர்வோர் ஆகிய நம் கைக்கு வந்து வாய்க்கு போகும்.

இதற்கு இடையில் அனைவரின் லாபம், ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, பயண செலவு எல்லாம் சேர்ந்து 5 ரூபாய் தக்காளி 50 ரூபாய் ஆக மதிப்பு கூடி இருக்கும்.

இந்த விலை நிர்ணயத்தில் மேலும் போக்குவரத்தின் போது ஏற்பட்ட அழுகல், நசுங்கல், முந்தைய நாள் விற்காமல் தேங்கிய தக்காளியால் ஏற்பட்ட நட்டம் என அனைத்தையும் சேர்த்தே வைப்பார்கள் வியாபாரிகள்.

அதாவது நாம் வாங்கும் ஒரு கிலோ தக்காளியில் கண்ணுக்கு தெரியாமல் உற்பத்தி,கையாளுதல் ஆகியவற்றின் போது  விரயம் ஆன  தக்காளியின் விலையும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் எனில் ஒரு பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது, அது குறைவான விரயத்தில் இறுதி நுகர்வோரை அடைந்தால் மட்டுமே விலைக்குறைவாக சந்தையில் கிடைக்கும் என்பதை நினைவுறுத்தவே.முறை சார் சங்கிலித்தொடர் சில்லறை வர்த்தகர்கள் இவ்வாறு ஆகும் சேதாரத்தைக்கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.

தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் என போட்டே விற்பார்கள், கய்,கனி வியாபாரத்தில் மறைந்து இருக்கும்.

சந்தைப்படுத்துதலில் உற்பதியை சிறப்பாக கையாண்டு, சேதாரம் குறைவாக , நுகர்வோருக்கு கொண்டு சேர்க்க வேண்டும், மேலும் உபரி உற்பத்தியை சேமித்து சீராக தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.அப்போது தான் சப்ளை அன்ட் டிமாண்ட் சீராக இருக்கும், திடீர் விலை ஏற்றம் இருக்காது.நுகர்வோரையும் பாதிக்காது.

மேற் சொன்ன முறையான வழுமை எதுவும் இந்திய சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இங்கே சந்தை ஒரு முறைப்படுத்த படாமல் " laizze fair market" ஆக எந்த ஒரு வகைக்கும் அடங்காமல் தன்னிச்சையாக இருக்கிறது. இதனாலேயே திடீர் என வெங்காயம் விலை கண்ணீரை வர வைக்கிறது.

இது போன்று இல்லாமல் நுகர்வோர் நலனுக்கு ஏற்ப சில்லரை வர்த்தகம் இருக்க வேண்டும் எனில் முறைப்படுத்தப்பட்ட சில்லறை வர்த்தக சங்கிலித்தொடர் வியாபார நிறுவனங்கள் அவசியம் ஆகிறது.ஆனால் அவர்கள் வந்தால் பாரம்பரியமாக நாட்டில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பார்கள்.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வணிகம் வந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று வேறு சொல்கிறார்கள், இது பெரிய நகைச்சுவை, இப்போது மட்டும் விவசாயிகள் நன்றாக வாழுகிறார்களா?, தக்காளி உதாரணத்திலேயே விவசாயிகளின் நிலை பரிதாபமானது என்பது புரிந்து இருக்கும், இப்போதைய முறைசாரா வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜண்ட்கள் கூட்டணியில் விவசாயிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்பட்டே வருகிறார்கள். நுகர்வோருக்கும் சிரமம்.

ஆரம்ப்பத்தில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயி கடைசி வரை கடன் காரனாகவே இருக்கான், ஆனால் கடன் வாங்கி சில்லரை வர்த்தகம் செய்பவர் சில காலத்தில் பெரிய அளவில் முதலாளி ஆகி விடுகிறாரே அது எப்படி?

எனவே முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்தால் விவசாயிக்கு ஆபத்து என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை தான்.

முறைப்படுத்தப்பட்ட வணிகம் பெரிய அளவில் நடந்தால் அவர்கள் பல கிளைகளுக்கும் தேவையானதை குளிர்பதன கிடங்குகள் அமைத்து சேமித்து வைத்து சீராக விநியோகம் செய்வார்கள், மேலும் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் விளைவித்து நேரடியாக கொள்முதல் செய்யவும் வாய்ப்புள்ளது.விரயம் தவிர்க்கப்படும் எனவே விலை குறைவாகவே இருக்கும்.

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகத்தில் நுகர்வோர் கொடுக்கும் பணத்தில் 2/3  பங்கு விவசாயிக்கு சேர்கிறதாம், ஆனால் முறை சாரா சில்லரை வர்த்தகத்தில்  அந்த அளவு சென்று சேர்வதில்லை சுமாராக 1/5 அளவுக்கு சேர வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பந்த விவசாயம் சிக்கல் இல்லாதது என சொல்ல மாட்டேன் அதிலும் வணிகர்களுக்கே சாதகமான நிபந்தனைகள் தான் இருக்கும், ஆனால் தற்போது விளைவித்தால் விற்பனை ஆகுமா காசு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலை நிலவுகிறதே அது இருக்காது, எப்படியோ கடைசியிலொரு குறைந்த பட்ச விலைக்காவது விற்று விட வாய்ப்பு இருக்கு, வீணாக ரோட்டில் கொட்ட வேண்டியது இருக்காது.

இந்த ஒப்பந்த முறை விவசாயம் ஓரளவு சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது உதாரணமாக கரும்பு விவசாயத்தினை சொல்லலாம்.சரியான குறைந்த பட்ச ஆதரவு விலை இல்லாத போதும் விவசாயிகள் தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யக்காரணம் எப்படியும் விற்பனை ஆகிவிடும் என்பதால் தானே!

முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் நுகர்வோர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என கூறுகிறார்கள். இப்போது மட்டும் நுகர்வோருக்கு முழு சுதந்திரம் இருக்கா, கடையில் அவர்கள் என்ன வைத்துள்ளார்களோ அது தானே நம் மீது திணிக்கிறார்கள். உதாரணமாக இராவணன் மசாலா என்பது கிழக்கு தாம்பரம் பகுதியில் தயாரிக்கப்படுகிறது ஆனால் அது எங்கள் அருகில் உள்ள கடையில் இல்லை, ஆச்சி மசாலா, சக்தி மசாலா தான் வைத்துள்ளார்கள்.பெரிய உற்பத்தியாளர் சில சலுகைகள் தருகிறார்கள் என்பதால் கடைக்காரர்கள் அதனையே வாங்கி விற்கிறார்கள், நுகர்வோர் தேவையை ,விருப்பத்தை கணக்கில் எடுப்பதே இல்லை.

நுகர்வோருக்கு வாங்கும் அனுபவம் நல்லதாக,இனிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் முறை சாரா சில்லரை வர்த்தகர்களிடையே இல்லையே, அவர்கள் வசதிக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். தெரிந்தவர்களை முதலில் கவனிப்பார்கள், அதிகம் வாங்குபவர்கள் மீது அன்பு காட்டுவார்கள்! மற்றவர்கள் ஏதோ ரேஷன் கடையில் நிற்பது போன்று நிற்க வேண்டும்.இதற்கு நாம் விருப்பபடி தேர்வு செய்து பில் போட்டுக்கொள்ளும் பல்பொருள் அங்காடி அமைப்பு மேலானதாக இருக்கே.

மேலும் முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்கள் வந்துவிட்டால் , முறைசாரா வணிகர்கள் ,அவர்களிடம் பணிபுரிபவர்கள் வேலை இழப்பார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.இது நடக்க வாய்ப்புள்ளதா? அப்படி ஆனால் அந்த பெரிய கடைகளுக்கு வேலைக்கு ஆட்களே தேவை இல்லையா, அங்கே வேலை கிடைக்காதா? கிடைக்கும் ஆனால் எல்லாருக்கும் கிடைக்கும் இப்போது உள்ளது போல ஒரு சில குறீப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் என்ற சிறப்பு போய்விடும்.

இப்போது உள்ள முறை சாரா சில்லரை வர்த்தக கடைகளை நடத்துபவர்கள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினரே, அவர்கள் கடையில் குடும்ப உறுப்பினர்களே அதிகம் வேலை செய்வார்கள், மேலும் ஆட்கள் தேவை எனில் அவர்கள் ஊரை சேர்ந்த சொந்தம் அல்லது, அவர்கள் சார்ந்த வகுப்பினரை மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்.வேறு யாரும் வேலைக்கு சேர்ந்து வியாபார நுணுக்கம் கற்றுக்கொள்ள முடியாது.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகம் வந்தால் இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள் எல்லாருக்கும் வேலை தருவார்களே!

இப்போது உள்ள முறை சாரா சில்லரைக்கடைகளில் வேலை செய்பவர்களூக்கு என்று பணி நிர்ணயம், சம்பள நிர்ணயம் என எதுவும் இல்லை.கொத்தடிமை வாழ்க்கை தான் இன்னும் சொல்லப்போனால் சம்பளம் என்பதே இல்லை, தீபாவளி,பொங்கல் என்றால் புது துணி ஊருக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் பணம் தருவார்கள் மற்றப்படி தினம்  மூன்று வேளை சோறு , அவ்வளவு தான். கேட்டால் தொழில் படிக்கிறான் இல்ல அது போதும் என்பார்கள். அந்த அப்ரண்டீசும் சில வருடங்களில் தனியாக கடைப்போட்டு பிழைத்துக்கொள்வார்.ஆனால் இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கிடையே மட்டுமே. மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

ரங்கநாதன் தெருவில் இயங்கும் பெரிய அளவிலான சில்லரை வர்த்தக நிறுவனங்களில் கூட இதே நடை முறை தானே என்ன சம்பளம் என்ற ஒன்று உண்டு மற்றப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பு பணியாளர்கள், கொத்தடிமை போன்ற நிலை தான்.

முறைப்படுத்தப்பட்ட பெரிய அளவிலான சில்லரை வர்த்தகம் வரும் போது அனைவரும் வணிக வேலை செய்யலாம், பணி, வேலை நேரம், சம்பளம் எல்லாம் ஒரு வரையரைக்குள் கொண்டு வரப்படும்.தொழிலாளர் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகும்.

அப்படியானால் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்து விட்டு அரசு ஓரமாக போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்றால் அதுவும் கூடாது அதிலும் கவனிக்க வேண்டியவை இருக்கு.

அன்னிய நுழைவுக்கு முன்னரே இந்திய அளவிளான முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகத்தில் நன்கு வளர்ந்து இருக்க வேண்டும், துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் பெரிதாக வளரவில்லை. இப்போதைக்கு 3 % சந்தையே முறைப்படுத்தப்பட்ட வணிகமாக இருக்கிறது.மேலும் எனக்கு தெரிந்து இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் முதலீடு செய்யவும், குளீருட்டப்பட்ட கிடங்குகள் அமைக்கவோ, கிராம பொருளாதாரத்துக்கு உதவியாக ஒப்பந்த விவசாயம், நேரடிக்கொள்முதல் என எதுவும் பெரிய அளவில் செய்ய தயாரில்லை.அவர்களும் பெரும்பாலும் தங்கள் தேவைக்கு கமிஷண் மண்டிகளையே நாடுகிறார்கள். சிறிய அளவில் நேரடிக்கொள்முதல் நடைப்பெறவும் செய்கிறது.

இது போன்ற பெரிய சில்லரை வணிகர்கள் கிராமப்புறக்கட்டமைப்புக்கும் உதவ வேண்டும் அல்லது அங்கே குளிரூட்டப்பட்ட கிடங்குகள், விவசாய தொழில்நுட்ப ஆலோசனை மையங்கள், இன்ன பிற வசதிகளை செய்ய அரசு நிர்பந்திக்க வேண்டும்.சும்மா அவர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டு வேடிக்கைப்பார்க்க கூடாது.

உதாரணமாக காட்பரி என்ற தனியார் சாக்கலேட் உற்பத்தியாளர்கள் கோக்கோ பயிரிட ஆலோசனை, வழிக்காட்டுதல், உற்பத்திக்கு பின் கொள்முதல் என தாங்களே முன் வந்து செய்கிறார்கள்.இதன் மூலம் தங்களுக்கான மூலப்பொருளை சீராக பெருகிறார்கள்.விவசாயிக்கும் சந்தைப்படுத்தலில் உள்ள சிரமம் களையப்படுகிறது.

மேலும் அன்னிய சில்லரை வர்த்தகர்கள் பொருட்களை இங்கேயே கொள்முதல் செய்ய வேண்டும் இறக்குமதி சரக்குகளை இங்கே விற்று தள்ளக்கூடாது என்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பெரிய அளவிலான முறைப்படுத்தப்பட்ட சில்லரை வர்த்தகர்களை அவர்கள் உள்நாடாக இருந்தாலும் சரி வால் மார்ட் போல வெளிநாடாக இருந்தாலும் சரி இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட கண்காணிப்புடன் அனுமதித்தால் , தொழிலாளர்கள்,நுகர்வோர்கள் ,விவசாயிகள் பயன் அடைவார்கள்.மேலும் விற்பனை வரி ,வருமான வரி வருவாய் முறையாக அரசுக்கும் வந்து சேரும்.




Wednesday, November 23, 2011

அறிவியல் தேசம் இந்தியா!





அறிவியல் தேசம் இந்தியா!


இந்தியா பல சிறப்புகளை உடைய ஒரு தேசம் , உலகத்திற்கே முன்னோடியான நம் நாடு இன்று அணு சக்தி முதல் இன்ன பிற தொழில்நுட்பங்களுக்காக அயல்நாட்டிடம் பரிதாபமாக கையேந்தி நிற்கிறது.அந்த காலத்தில் வெற்றிலையில் மை தடவி " LED tv " க்ளை விட சிறப்பாக தொலைக்காட்சிகளை கொண்டு வந்த விஞ்ஞானிகள் நம் நாட்டில் இருந்துள்ளார்கள். ஆனால் இன்றோ எல்லாம் அன்னிய மயமாகி விட்டது. காரணம் நாம் நம் திறமை மீது நம்பிக்கை வைக்காததும், பழம் பெருமைகளை மறந்து விட்டதுமே ஆகும், போதி தர்மனை எல்லாம் மறந்தூ விட்டோம்.

ஏஆர்.முருகதாஸ் மட்டும் இல்லை என்றால் நம்மில் எத்தனைப்பேருக்கு போதி தர்மனை தெரிந்து இருக்கும்.
எனவே  நமது கலாச்சார விஞ்ஞான வேர்களை அடையாளம் காட்டவே இப்பதிவு.

# முதல் கண் தானம், மற்றும் கண் அறுவை சிகிச்சை செய்தது இந்தியாவில் தான், கண்ணப்ப நாயனார், கேடராக்ட் வந்த சிவனுக்கு தனது கண்ணை தானமாக கொடுத்து , அவரே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

#பயோ டெக்னாலஜியை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, பாலை உறையூற்றி தயிராக ஆக்கினர், அந்த தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்துள்ளனர்,ஆதாரம் கிருஷ்ணர் வெண்ணை திருடி தின்றதே.

# திசு வளர்ப்பு, குளோனிங் ஆகியவற்றை கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே, காந்தாரிக்கு சிசு பிறக்காமல் ஒரு திசுவாக பிறந்தது அதனை 101 துண்டுகளாக்கி 101 கலசங்களில் இட்டு குழந்தைகளாக மாற்றினார் துர்வாசர் , அவர்களே கவுரவர்கள். கவுரகர்களின் ஒரே தங்கை துசாலை தான் 101 வது உடன்பிறப்பு.

#ஒரு மிகப்பெரும் நிகழ்வினை நேரடி வர்ணனையாக சொல்லும் ரன்னிங் கமெண்டரி கொடுக்கும் முறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தது இந்தியர்களே, மகாப்பாரத போரை களத்துக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே திருதராஷ்டிரனுக்கு லைவ் கமெண்டரி கொடுத்தார் விதுரர்.  சஞ்சயன் .இதை அடிப்படையாக வைத்தே பின்னாளில் வானொலி ,தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்கும் வழக்கம் வந்தது.

#முதன் முதலில் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜ் ஆக பணிப்புரிந்ததும் ஒரு இந்தியரே, மகாப்பாரதபோரில் பாண்டவர்கள் வெற்றி அடைய யார்க்காரணம் என தீர்ப்பு வழங்கியது , போரினை ஆரம்பம் முதல் கடைசிவரைப்பார்த்த பார்பரிக்கா என்பவரே(பீமனின் பேரன்,கடோத்கஜன் மகன்). இவரே உலகின் முதல் போர்ப்பார்வையாளர் ஆவார். இதன் பின்னரே மானாட மயிலாட போன்றவற்றில் கெமிஸ்ட்ரி பற்றிப்பேச ஆரம்பித்தார்கள் நீதிபதிகள்.

# உலகின் முதல் டிரான்ஸ்ஜெனிக் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ததும் இந்தியாவில் தான், சிவன் , யானை தலையை ,மனித உடலுக்கு பொருத்தி வினாயகரை உருவாக்கினார்.

#முதல் பறக்கும் எந்திரம் கண்டுப்பிடித்ததும் இந்தியாவில் தான் , இராவணன் புஷ்பக விமானம் வைத்திருந்தார், அவரே உலகின் முதல் பைலட் லைசென்ஸ் வாங்கியவர்.

#கொரில்லா தாக்குதல் எனப்படும் மறைந்து இருந்து தாக்கும் உத்தியைக்கண்டுப்பிடித்ததும் இந்தியர்களே ,இராமன் மறைந்திருந்து வாலியை தாக்கியதே உலகின் முதல் கொரில்லா தாக்குதல்.(வாலி வானரம், இராமன் மனிதன் என்பது ஒரு முரண்நகை)

#உலகின் முதல் கடல்ப்பால சிவில் கட்டுமான வடிவமைப்பாளர் இராமன் அவர்களே, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் கட்டியுள்ளார்.

# உலகின் முதல் போர் நிறுத்த அமைதி தூதர் அனுமன், இராவணனுக்கும் , இராமனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போட தூது சென்றுள்ளார்.

#உலகிலே ஸ்டெனோகிராபர் என்ற தொழிலை கண்டுப்பிடித்தது இந்தியர்களே, வியாசர் மஹாபாரதம்  எழுத விநாயகரை ஸ்டெனோகிராபராக பணிக்கு வைத்துள்ளார்.

#உலகின் முதல் நில அளவையாளர் வாமனன் அவர்களே ,கால்களாயே உலகை அளந்துள்ளார்.

#உலகிலேயே தொலைநிலைக்கல்வி முறையை முதலில் அறிமுகப்படுத்தியது இந்தியாவே, ஏகலைவன், துரோணரிடம் தொலைநிலைக்கல்வி கற்றுள்ளார்,(கட்டணம் ரொம்ப அதிகம்)

# கெலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ்க்கு முன்னோடியான ரைஸ் பிளேக்ஸ் எனப்படும் அவலைக்கண்டு பிடித்தது இந்தியா தான், குசேலர் , கண்ணனுக்கு அவல் கொண்டு சென்றதே ஆதாரம்.

இப்படி பல பல அறிய ,பெரிய அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டறிந்த நம் நாடு இப்போது பின் தங்கியிருக்க காரணம் நாம் வரலாறு , கலாச்சாரம்,அறிவியல் பின்புலம்  ஆகியவற்றை மறந்து விட்டது தான், எனவே இனியும் மறக்காமல் நம் பழம் பெருமையை மிட்டு எடுப்போம்! இத்தகைய அறிவியலை வேண்டாம் என்பது பிற்ப்போக்குத்தனமே! :-))

இன்னும் எத்தனையோ பல அறிவியல் சிறப்புகள் இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியதை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன் ,விடுபட்டவை மற்றும்  உங்களுக்கு தெரிந்தது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்!

Tuesday, November 22, 2011

விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!



விலையுயர்வை சமாளிக்க சில வித்தக குறிப்புகள்!


அந்தக்காலத்தில வெண்ணிர ஆடைப்படத்தில் செவப்புக்கலர் புடவைல உங்கள பார்த்தப்போதே அடுத்த முதல்வர் கிடைத்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்த நம்ம மக்கள் தற்ப்போது மீண்டும் ஒரு மாற்றம் வேண்டும் என ஆட்சியை அலேக்காக தூக்கீ அம்மா கையில் கொடுத்தார்கள,அவரும் ஏமாற்றாமல் மக்கள் திக்கு முக்காடும் வகையில் அதிர்ச்சியளித்தார் .

ஆனால் இவ்வளவு மிக நல்ல மாற்றம் வரும் என மக்கள் கனவிலும்  எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள்.
அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் உலகமே வியக்கும் வகையில் திடீர் என தமிழக மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்தது எல்லாரும் மானாவாரியாக செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், இதனால் பணவீக்கம் அதிகரித்து அதற்கு அயோடக்ஸ் போட வேண்டிய நிலை வந்தது.

பணவீக்கத்தைக்கட்டூப்படுத்த பல பொருளாதாரப்பெருச்சாலிகளும் திணறிய நிலையில் அம்மா சுலபமாக பேருந்து,பால்,மின்சாரம் என கொஞ்சம் மட்டும் விலை உயர்த்தி பணப்புழக்கத்தினைக்கட்டுப்படுத்தி இந்தியாவை பெரும் பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். இதனைப்பாராட்டி மண்டைல சிக்கு அலுவால் அம்மாவுக்கு ரகசியமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் அதில் ரூபாய் 32 இருந்தாலே ஒரு மனிதன் இந்தியாவில் சுகபோகமாக வாழ முடியும்,அதை விட அதிகம் பணம் கையில் இருந்தால் ஆடம்பரமாக செலவு செய்வான், பணவீக்கம் அதிகம் ஆகும், உங்கள் செயல்பாடுகள் பணவீக்கத்தினை வடிய வைக்க உதவுகிறது எனப் பாராட்டியதே அம்மாவின் நிர்வாகதிறனுக்கு சான்று.

தங்க தாரகையின் ஆட்சில இவ்வளவு நல்லது ஒரு பக்கம் நடந்தாலும் , நன்மையிலும் தீமைப்போல கொஞ்சம் பேருக்கு இதனால பாதிப்பும் வந்து இருக்கு , சுமாராக 6.5 கோடி பேர் மட்டுமே இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பாதாக செய்தி, இந்த மைனாரிட்டிகும்பலுக்கு விலையுயர்வை சமாளிக்க தெரியலை.எனவே அவர்களுக்காக சில தொழில் ரகசியங்களை இலவசமாக சொல்லித்தரலாம்னு இருக்கேன்.

பேருந்துக்கட்டண உயர்வு சமாளிப்பு வித்தை:

ஃபிராட்வே தொழில்நுட்பம்:

# உதாரணமாக நீங்க பல்லாவரத்தில இருந்து பிராட்வேக்கு போகனும் என்று வைத்துக்கொள்வோம், முன் வாசல் வழியே பிராட்வே பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், டிக்கெட் எடுக்காமலே கொஞ்சம் நேரம் கடத்துங்கள் அதற்குள் கிண்டி நெருங்கி இருக்கும், இப்போ அரியாசணத்தில் அமர்ந்திருக்கும் நடத்துனரிடம் போய் தாம்பரத்துக்கு ஒரு டிக்கெட் என கேளுங்கள்! அவரும் ரொம்ப அன்பா,மரியாதையா யோவ் அறீவு இருக்கா இது பிராட்வே வண்டி என கத்திக்கொடுப்பார் பாட்டு, ஹி..ஹீ நான் ஊருக்கு புதுசு பஸ்ல தாம்பரம்-பிராட்வே போட்டு இருந்துச்சா ஏறிட்டேன் என சமாளித்து , தாம்பரம் எப்படி போறது என அவரிடமே வழிக்கேட்டு ,ஒருவழியாக சமாளித்து முடிக்கும் போது கிண்டி வந்திருக்கும் , இறங்கிக்கொள்ளுங்கள்!

மேற்சொன்ன கதைய அடுத்து அடுத்து இரண்டு, மூன்று பேருந்தில் சொல்லி அப்படியே பிராட்வே வரைக்கும் நீட்டிப்பது உங்கள் வாய்ஜாலத்தில் இருக்கு. வாயுள்ள பிள்ளை பிழைக்குமாம்!

#ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்:

உங்க  மாமனார் கிட்டே சீதனமாக நீங்க வாங்கிய ரெண்டு சக்கரமோ, இல்லை தவணைல வாங்கிய நாலு சக்கரமோ உங்களிடம் இருந்தால் கிடைத்த விலைக்கு வித்துடுங்க.கிடைக்கிற காசுல ஒரு பழைய ஆட்டோ ,ஷேர் ஆட்டோனா இன்னும் வசதி வாங்கிக்கோங்க, வண்டி வாங்கியதும் ஆட்டோ பின்னாடி அம்மா படத்தை பெருசா போட்டுக்கோங்க, ஆட்டோக்கு பெர்மிட் இல்லைனா சமாளிக்க உதவும்!

இல்லை எனில் பிரைவேட் என போட்டுக்கொள்ளலாம், ஆட்டோ எதுக்கா இனிமே அலுவலகம், இன்ன பிற சவாரிலாம் ஆட்டொல தான். இப்போ செயல் முறைக்கு வருவோம். அலுவலகம் கிளம்பிப்போற டைம் பீக் அவர்ஸ் என்பதால் எப்படியும் வழில நிறையப்பேர் கடன் வாங்கியாவது பஸ் காசு வைத்துக்கொண்டு நிற்பாங்க, உங்க அலுவலகம் போர ரூட் வரவங்களா பார்த்து சவாரிப்பிடிங்க அப்படியே ஆங்காங்கே பிக் அப் ,டிராப் னு அலுவலகம் போய் சேருங்க.திரும்ப மாலையிலும் இதே சவாரி தான்!

இப்போ கூட்டிக்கழித்துப்பார்த்தா கணக்கு லாபமாகவே இருக்கும் பெட்ரோல் காசும் கிடைச்சுடும். உங்களுக்கு அலுவலகம் போக வர ஆகிற செலவும் மிச்சம்.

இரண்டு சக்கரம் என்றால் மனைவி(கள்), குழந்தைகள்னு தாரளமாக கூட்டிப்போக முடியாது இப்போ ஆட்டோவில் தாரளமாக போய் வரலாம்.மேலும் உங்க பசங்களை பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வரும் வேலையும் சேர்த்து செய்தால் (அக்கம் பக்கம் குழந்தைகளையும் சவாரிப்பிடித்தால் இரட்டிப்பு லாபம்), வழக்கமாக ஆட்டோக்கோ ,வேனுக்கோ கொடுக்கும் காசும் மிச்சம் ஆகும்.மேலும் வார இறுதிகளில் உபத்தொழிலாக ஆட்டொ சவாரி ஓட்டினா நல்ல வருமானம் உறுதி.

இல்லைனா இருக்கவே இருக்கு சங்க கால லிப்ட் பாலிசி, கூடுதலாக ஒரு ஹெல்மட் வாங்கி வைத்துக்கொண்டு கைய காட்ட வேண்டியது தான்!

பாலுக்கு கல்தா:

பால் விலைக்கொடுத்து வாங்க முடியாத பிலோவ் பால் லைன் மக்களா(BPL) நீங்க , உங்களுக்காக சில வித்தைகள்.

முதல் வழி பாலைக்கட் (கவரை அல்ல)செய்து விட்டு , கடுங்காபி என்கிற வரக்காபி குடிக்கப்பழகிக்கொள்ளலாம்.

காகிதம் பொறுக்கு காபி குடி:

காபிக்குடிக்கலைனா கக்கா போக முடியாது என்ற தீவிர குடி வெறியர் எனில், காலைத்தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டி இருக்கும், சீக்கிரமாக எழுந்து பக்கத்து வீட்டுக்கு போங்க , அவங்க வீட்டுக்கு போட்டு இருக்க செய்தித்தாளைக்கைப்பற்றிக்கொண்டு வரவும்..

பின்னர் கொஞ்ச நேரம் கழித்து ஒன்றும் தெரியாத பாலகன் போல பக்த்து வீட்டுக்கு போய் ஹி..ஹி உங்க பேப்பரை எங்க வீட்டுல தெரியாம போட்டுட்டாங்க, இந்தாங்க என்று சொல்லிக்கொடுத்து விட்டு , அப்படியே காபி வாசம் மூக்கை தொலைக்குதே ஹி..ஹி பில்டர் காபியா என்று அடிப்போடவும்,கூடவே என் பொண்டாட்டியும் காபினு ஒன்னு போடுவா கழனி தண்ணிப்போல என்று சொல்லி வாய் மூடி இருக்க மாட்டிங்க, உங்க சம்பாஷணையை ஒட்டுக்கேட்டுகொண்டிருக்கும் ,பக்கத்து வீட்டு மாமி கையில் காபியுடன் உங்க முன்னர் பிரசன்னம் ஆகிடுவாங்க!எல்லாம் பெண்களின் ஈகோ தான் உங்க மனைவிக்கு காபி போட தெரியலைனு கேள்விப்பட்டதும் அவங்களுக்கு அதில ஒரு அல்ப சந்தோஷம்.

இந்த பேப்பர் பொறுக்கும் தத்துவம் எல்லா நாளும் கைக்கொடுக்கும்னு சொல்ல முடியாது, அடிக்கடி ,பக்கத்து வீடு, எதிர் வீடு என்று மாற்றி ,மாற்றி செய்ய வேண்டும்.

ஆபீஸில் சகலாகலா வல்லவன்:

பெரும்பாலும் கஷ்டமான வேலை,இல்லை மத்தவங்களூக்கு தெரியாத ஒன்றை செய்து காட்டி சகலகலா வல்லவன் என்று அடுத்தவர் பாராட்ட வேண்டும் என்று ஒரு ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் இப்படி எக்ஸ்ட்ராவாக எனர்ஜி காட்டி பல்ப் வாங்குவோம். சரி ஆனால் இப்போ நாம அவங்களுக்கு பல்ப் கொடுக்கலாம்.

ஆபீஸ் பாயை விட்டு பிளாஸ்கில் காபி வாங்கி வர சொல்லும் வழக்கம் உங்கள் அலுவலகத்தில் இருக்கா , அப்போ இனிமே நீங்க தான் காபி பாய், காபி குடிக்கும் நேரமாக பார்த்து , ஆபிஸ் பாய் காபி நல்லாவே வாங்கி வர மாட்டேன்கிறான் ,நானே வாங்கி வரேன்னு வாலண்டியர் வடிவேலாக கிளம்புங்கள்.காபிக்கடைக்கு போய் 10 காபி வேண்டும் எனில் 8 காபி மட்டும் வாங்கிக்கொண்டு(2 காபி காசு உங்களூக்கே) , அங்கேயே ஒரு கப் ஊற்றிக்குடிச்சுட்டு வரவும்.சிலக்கடைகளில் கடைக்காரனே ஒரு கப் காபி தருவான்.

அலுவலகம் திரும்பியதும் உஸ்ஸ் அப்பாடா என்றபடியே மீண்டும் ஒரு காபியை உள்ளே இறக்குங்கள்! உங்களுக்காக ஸ்பெஷல் காபி வாங்கி வந்தேன் என்று பில்ட்-அப் கொடுக்கவும் தவறக்கூடாது. இனிமே என்ன ஆசைப்பட்டாப்போல சகலகலா வல்லவன் பட்டமும் கிடைச்சாச்சு, ஓசிக்காபியும் ஆச்சு! ஒரே கல்லில ரெண்டு காபி!

மின் கட்டண உயர்வு ஏப்ரலில் தானாம் அதுவரைக்கும் ஜமாய்க்கலாம், அப்போ உங்களூக்காக சில அதிநவீன தீவட்டி டெக்னாலஜிகள் வழங்குகிறேன்.

Friday, November 18, 2011

சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?




சிறந்த வலைப்பதிவு திரட்டி எது?



என்னைப்பொருத்த வரைக்கும் மோசமான வலைத்திரட்டி தமிழ்10 (எவனாவது சண்டைக்கு வந்தா உதைப்படுவான்)

காரணம் இணைக்கும் போது ஏதும் சொல்லாமல் இணைந்த பிறகு 10 பேருக்கு ஓட்டு போட்டால் தான் உங்க பதிவை இணைப்போம்னு சொல்றாங்க!

அந்த திரட்டி நிர்வாகிகள் அவங்க பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்யும் போது மண மகனிடம் இப்படி 10 பேரை என கண்டிஷன் போடாமல் இருக்க கூகிளாண்டவர் அருள் புரியக்கடாவது!

அப்புறம் மக்கள் னு ஒரு திறட்டி அங்கே போனா ரொம்ப கொடுமையா இருக்கு, எல்லாம் ஏதோ கில்மா டோரண்ட் போல பதீவ போடுறாங்க, கொடுமை என்னான பதிவில தமிழ் தப்பா இருக்குனு சண்டைக்கு வருவாங்க,அங்கே திரட்டிலவே தப்பா இருக்கு தமிழ்!

இண்டலி .என்னையா இது அகில இந்திய பாரதிய வித்யாபவன், போல ஆரம்பிச்ச்சுட்டு, ஓவரா கடிக்கிறாங்க! அவங்க கேப்சாவிலா தப்பா போட்டா கூட தப்புனு மெசேஜ் வர மாட்டேங்குது , ரொம்ப பயங்கரமான டெக்னாலஜியா இருக்கும் போல :-))


யுடான்ஸ் லேட்டஸ்டாக ,பதிவர்களுக்காக ,பதிவர்களால் என்று கிளம்பி இருக்கு, இது நல்லா இருக்காப்போலவும் இருக்கு இல்லாதது போலவும் இருக்கு :-))

ஏன் கேட்டிங்கண்ணா பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுது, எவன் படிப்பான், இல்லை என் பதிவை எத்தன பேரு படிப்பான்னு எனக்கு தெரியாதா?

ஆனால் எனக்கு ஒரு கமெண்ட் கூட இருக்காது, அதே சமயத்தில் தமிழ் மணத்தில் இணைத்தவுடன் கமெண்ட் வரும்!(ஓட்டுக்கு யுடான்ஸ், கமெண்டுக்கு தமிழ்மணமா)

இது எப்படி உனக்கு தெரியும் நீ என்ன ஜேம்ஸ்பாண்டா என்றெல்லாம் கேட்காதிங்க, என் பதிவு தமிழ் மணத்தில 30 நிமிடம் தாமதமாக வரும் காரணம் நான் அப்போ 2006 ல பதிவு பண்ண ஆளூ,நடுவில வரலை,எனவே இப்போ மெதுவா தமிழ் மணத்தில காட்டும். எனவே யுடான்ஸ்ல 2 டூ 3 ஓட் வாங்கின பிறகு தான் தமிழ்மணத்தில வரும், சில - ஆர் + ஓட்டுகள் காட்டும், கமெண்டுகள் காட்டும்.

என்னைப்பொறுத்த வரைக்கும் - ஆர் + ஒன்றுமே இல்லை, எல்லாம் என் ஓட்டு பொட்டில விழுந்த பிறகு அதுல என்ன மைனஸ் ஹி..ஹி!(எல்லாம் என்னோட ஓட்டு,மொத்தமா கூட்டிப்பேன்)

யுடான்ஸ்ல பதிவை இணைத்ததும் ஒரு ஓட்டு காட்டுவது எப்படி, அது நம்ம ஓட்டா? தமிழ் மணம் சேர 30 நிமிடம் ஆகும் அதுக்கு இடையில 2-3 என யுடான்ஸ்ல ஓட்டு மட்டும் வரும் ஆனால் கமெண்ட் வராது. ஆனால் தமிழ் மணத்துல சேர்ந்த உடன் சில கமெண்ட்ஸ் வரும்.எனவே என்ன பொறுத்த வரைக்கும் தமிழ்மணம் தான் சரியா என்னை கொண்டு போய் சேர்க்கிறது.

என்னோட தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தமிழ் மணம் எல்லாப்பதிவருக்கும் இலகுவா இருக்கு, அந்த அளவுக்கு மற்ற வலைத்திரட்டிகள் இல்லைனே சொல்வேன்.

அடுத்து யுடான்ஸ் இருக்குனு நினைக்கிறேன்! காரணம் நான் இந்த இரண்டில் மட்டுமே எளிதாக சேர்ந்துள்ளேன்! மற்ற இணைய உலக ஜாம்பவான்கள் என்னை புறக்கணிக்க வேண்டும்!

Thursday, November 17, 2011

பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!



பேருந்து,மின்சாரம், பால் இன்ன பிற விலையுர்வை செய்த மாண்புமிகு தமிழக முதல்வரைப்பாராட்டுவோம்! ஆதரிப்போம்!




மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா, அவர்களை துணிவுள்ளம் கொண்ட இரும்பு பெண்மணி என்று வர்ணிப்பார்கள் , அவர் எதை செய்தாலும் தீர்க்கமாக செய்வாராம். அவர் அளவுக்கு துணிவுள்ள அரசியல்வாதி இந்தியாவில் இல்லை என்றால் அது மிகை ஆகாது.

சட்டமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து , மக்கள் சேவை செய்ய வாய்ப்பை பெற்றவர், ஊழல் செய்தவர்கள் வெற்றிகரமாக வீட்டுக்கு அனுப்பியவர் , ஆனால் உள்ளாட்சியிலோ கூட்டில் இருந்தவர்களுக்கு விடுதலை அளித்து , சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொடுத்த ராசதந்திரி, துணிச்சலாக தனியாக களம் கண்டு பெருவாரியாக வென்றுக்காட்டிய வித்தகர்.

தொலைநோக்கு கொண்ட சிறந்த அரசியல்நிர்வாகியான அவர் , இனிமேல் பாராளூமன்ற தேர்தல் மட்டுமே அடுத்து வரும் என்பதையும் சிறப்பாக கணித்து உள்ளார். அடுத்த சட்ட மன்ற தேர்தலோ நான்கு ஆண்டுகளுக்கு அப்பால் தான். இடைப்பட்டக்காலத்தில் அதிரடிக்காட்ட வாய்ப்பில்லாமல் போய் விட்டதே, துணிச்சலைக்காட்ட என்ன செய்யலாம் , என மற்றவர்களைப்போல் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் , , கணிதம்,புள்ளியியல் ,பொருளாதார அறிவினை செயல்ப்படுத்தி துணிச்சலாக பால், மின்சாரம், பேருந்துக்கட்டணம் ஆகியவற்றை மிகவும் நியாயமாக உயர்த்தியுள்ளார்!

முதல்வராக இருக்கும் போதே வழக்கு மன்றத்தில் மரக்கூண்டு
(" குற்றவாளி"க்கூண்டுனு சொன்னா கோவி திட்டு வார்)ஏறி துணிச்சலாக நீதிபதிகளே வியக்கும் வண்ணம் பதில் கூறி சாதனைப்படைத்தவரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினமாக விலையுர்வு அறிவிப்பு ஜொலிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல!

இந்த விலையுயர்வினை அனைவரும் மனம் திறந்து பாராட்டி; வரவேற்க வேண்டும், எதிர்ப்பவர்கள் பொருளாதார அறிவில்லாதவர்கள், நம் நாட்டின், குறிப்பாக தமிழ் நாட்டின் கலாச்சாரம், வரலாறு அறியாதவர்கள் ஆவார்கள்.

மாட்டு வண்டி, குதிரை வண்டியில் கட்டு சோறுக்கட்டிக்கொண்டு பயணித்தை மறந்து அடிக்கடி பேருந்தில் ஏறி பயணம் செய்யலாமா, நம் பாரம்பரியம் என்னாவது. மாடு,குதிரை புகை விடாது, சாணிப்போடும் அவை இயற்கை உரம், அப்படி இருக்கையில் புகை கக்கும் பேருந்தில் போக ஆசைப்படுவது சுற்று சூழலுக்கு கேடு.

சுற்று சூழல் காக்க வேண்டும்,புவி வெப்பமாதல் தடுக்க வேண்டும் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள், என்பதால் , கட்டணத்தை உயர்த்தினாலாவது பேருந்து பயணம் தவிர்ப்பார்கள் ,மேலும் பலர் பூட் போர்டில் தொங்கி கையைக்காலை உடைத்துக்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டுல எல்லாம் மலிவா இருப்பதால மத்திய அரசு எவ்வளவு தான் பெட்ரோல் விலை ஏத்தினாலும் கவலைப்படாம வாங்கி ஊத்திக்கிட்டு,பக்கத்து தெருவிற்கு போக கூட மாமானார் வாங்கிக்கொடுத்த பைக்கிலோ, அல்லது தவணையில் தறான்னு வாங்கிய வண்டியிலோ போறாங்க,இதனால் இளம் வயதிலே தொப்பை,கொழுப்பு எல்லாம் வருது, வாக்கிங் போக சொன்னா கேட்பதில்லை,என்பதால் தான் மதியூகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளார் நம்ம முதல்வர்.

இதனால் இப்போ எத்தனை நன்மைகள்,தமிழனோட பணம் தமிழ் நாட்டிலயே செலவாகும், இனிமே மத்திய அரசை நிதிக்கேட்க தேவையில்லை, மத்திய அரசுக்கு விலை ஏற்ற இருக்கும் உரிமை மாநில அரசுக்கும் இருக்குனு காட்டி மாநில உரிமையை வலுவாக்கி இருக்கோம். என்பதை மானமுள்ள தமிழர்கள் சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த காலத்தில் வீட்டுக்கு குவளையில் பால் எடுத்து வந்து ஊற்றிய கோவிந்த சாமி, கோபால் போன்ற நம்ம ஊரு பால்காரர்களை நன்றீக்கெட்ட தனமாக மறந்து விட்டு இரண்டு நாளுக்கு முன்னர் கறந்து ,வெண்ணை எடுக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பழையப்பாலை பாலித்தீன் கவரில் அடைத்து விற்றால், அதை வாங்கிக்குடிக்க எப்படி பழகிக்கொண்டோம். இது ஏகாதிபத்திய நாடுகளின் சதி, இதனால் பாலித்தீன் உறைகள் அதிகரித்து மண்ணை மாசுப்படுத்துகிறது.

மேலும் வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர் வரை வரக்காபி தான் குடித்து வந்தோம் என்பதையும் மறந்து விட்டோம். திடீர் என வெள்ளைக்காரனைப்பார்த்து வெள்ளைப்பால் வாங்கி குடித்தோம் ,மானகெட்ட தமிழனை எப்படி திருத்துவது. பழசை எப்படி நினைக்க வைப்பது , எனவே போட்டார்கள் மதியூக மந்திரிகள் கூட்டத்தை , ஏற்றினார்கள் பால் விலையை என்ன ஒரு துணிச்சல்,ராச தந்திரம். இது போன்ற திறமைகள் இந்தியாவில் ஏன் உலகத்திலேயே நம்ம முதல்வர் அம்மாவை தவிர வேற யாருக்காவது இருக்குமா?

இதன் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் விளைந்துள்ளது, பழைய பாரம்பரியம் மீண்டும் நியாபகம் வந்துள்ளது.வரக்காபியில் சுக்கு, மிளகு,பன வெல்லம் போட்டு குடித்தால் தொண்டைக்கு நல்லது., சளீ காய்ச்சல் ,தும்மல், இருமல் வராது, நமக்கு மருத்துவ செலவு மிச்சம் ஆகும்.ஆரோக்கிய வாழ்வு லைப்பாய் சோப் போட்டுக்குளிக்காமலே அனைவருக்கும் வரும்.

மேலும் பாலித்தீன் உறையில் அடைக்கப்பட்ட பழைய பால் வாங்குவது குறையும், அப்படியே பால் ஊத்திக்காப்பி குடிக்க ஆசைப்படும் பேராசைக்காரர்களும் உள்ளூரில் மாடு வைத்து பால் கறந்து விற்கும் கோவிந்தன், கோபாலனை நாடுவார்கள், இதனால் உள்ளூர் வேலை வாய்ப்பு பொருளாதாரம் கூடும்.பாக்கெட் பால் விற்பதால் ஏகாதிப்பத்திய பெரு முதலாளீகள் மட்டுமே கொள்ளையாக லாபம் ஈட்டுவார்கள்.

மேலும் இலவச,ஆடு,மாடுகள் வழங்கப்பட இருக்கிறது அதை வைத்து எளிதாக பிழைக்க முடியும். மாட்டுப்பால் கிடைக்காத போது காந்திய வழியில் ஆட்டுப்பாலும் வாங்குவார்கள்.பாலித்தீன் பாக்கெட்கள் குறையும், சுற்று சூழல் பாதுகாக்கப்படும்.

இதெல்லாம் சரி மின்சாரக்கட்டணம் ஏன் ஏற்ற வேண்டும் என்றுக்கேட்கலாம். பின்ன என்ன மின்சாரம் தாராளமா ,மலிவாக்கொடுத்தா அறிவு வளர மாட்டேன்குது , மக்கள் டீவி தான் பாக்குது. அந்த காலத்தில எல்லாம் நல்லாப்படிச்சு பெரிய ஆளானவங்கள கேட்ட நான் தெருவிளக்கு வெளிச்சத்தில படிச்சு பெரிய ஆளானேனுசொல்வாங்க, இப்ப யாராவது அப்படி சொல்றாங்களா? மீண்டும் அப்படி பெருமையா சொல்ல வைக்க வேண்டாமா?

நிறையப்பேரு சும்மா மின்விசிறி, விளக்கு எல்லாம் போட்டு வைக்கிறாங்க, ஆஃப் பண்ன மாட்டேன்கிறாங்க, மின்சாரத்தை சேமிக்க சொன்னா கேட்கிறாங்களா? விலையை ஏத்தினா அப்படி செய்வாங்களா? அதான் ஒரு திட்டம் போட்டு மின்சாரத்த சேமிக்கவும், புவி வெப்பமாதலை தடுக்கவும் 4 மணி நேரம் மிந்தடை செய்துப்பார்த்தோம் அப்பவும் அடங்காம காசு  இருக்கும் திமிரில் இன்வெர்ட்டர் வாங்கிப்போட்டு மின்விசிறி,விளக்கு எறிய வைக்கிறாங்க.சிலபேர் அப்போ கூட டீவி சீரியல் பாக்கிறாங்க!

இன்வெர்ட்டர் வாங்குகிற அளவுக்கு காசு இருக்க மக்கள் கஷ்டப்படுகிற அரசாங்கத்துக்கு வருமானம் வர வழி செய்யக்கூடாதா அதான் மின் கட்டணம் உயர்வு.இனிமே மின்சாரம் விரயமாகாது, புவி வெப்பம் ஆகாது, நிறைய அறிஞர்கள் தெரு விளக்கில் படித்து உருவாகுவார்கள்.

இப்படி எதை செய்தாலும் துணிவுடனும், மக்கள் நலனுக்காகவும் பல நோக்கு பார்வையில் தாயுள்ளத்துடன் செய்பவர் தான் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், அவர்களை நாம் அனைவரும் மனம் திறந்து பாராட்ட வேண்டும் தினம் "அம்மானா சும்மா இல்லைடா "என துதிக்க வேண்டும்.அப்படி செய்யாம பதிவுப்போட்டு வசைப்பாடினா ,பதிவுகளுக்கு சேவை வரி விதிக்கப்படும்.குறிப்பா சினிமா பதிவுகளுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படும்.



Wednesday, November 16, 2011

புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!





புதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி? GRP ரகசியம்!


சன் செய்திகளை விட புதிய தலைமுறை செய்திகள் சேனல் முன்னிலை வகிப்பதாக ஏ.சி.நீல்சன் சர்வேயின் அடிப்படையில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டார்கள். அதாரமாக GRP புள்ளிகளை காட்டியிருந்தார்கள்.

பொதுவாக டிஆர்பி என்ற ஒன்றே அதிகம் கேள்விப்பட்டிருப்போம், அது என்ன GRP ?

ஒரு நிகழ்ச்சி அல்லது விளம்பரம் அதிகம் பார்க்கப்படுகிறதா என்பதை டீஆர்பி புள்ளிகள் மூலம் கண்டுப்பிடிப்பார்கள்.

இது எப்படி எனில்,

சேனல் A, சேனல் B இரண்டு சேனல்கள் ஒரு பகுதியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், அப்பகுதியில் 100 வீடுகள், 100 டீ.விகள் இருக்கு. எத்தனைப்பேர் எந்த சேனல் எப்பொழுது பார்க்கிறார்கள் எனப்பார்க்க ஒரு மீட்டர் இருக்கு(மக்கள் மீட்டர்). அத்தனை வீட்டிலும் மீட்டர் வைப்பது சாத்தியம் இல்லை என்பதால் 10 வீட்டுக்கு ஒன்று என 100 வீட்டுக்கு 10 வீட்டில் மட்டும் வைப்பார்கள். இங்கே சாம்பிளிங் ரேட் 10 சதவீதம், எனவே கிடைக்கும் டீஆர்பி புள்ளிகளை 10 ஆல் பெருக்கினால் எத்தனைப்பேர் பார்த்தார்கள் என தெரிந்து விடும்.

சேனல் A,

10 மீட்டர் வீடுகளில் 8 பேர் பார்க்கிறார்கள் எனீல்

டீஆர்பி = 8*10=80%

இங்கே ஒரு துணைக்கேள்வியாக ஒவ்வொருவரும் எத்தனைமுறைப்பார்க்கிறார்கள் எனக்கேட்தாக வைத்துக்கொண்டால் GRP வந்து விடும்.

உ.ம்,
ஒவ்வொருவரும் ஒரு முறை என்றால்,8 பேருக்கும் சராசரி= 1+1+1+1+1+1+1+1/8=1

GRP =8*1*10=80 % என்றே வரும்.

சேனல் B :

10 மீட்டர் உள்ள வீடுகளில் 4 பேர் மட்டும் பார்ப்பதாக காட்டினால்,

டீஆர்பி= 4*10=40%




துணைக்கேள்வியாக எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்று கேட்பதற்கு ஒவ்வொருவரும் தலா இரு முறை பார்ப்பதாக கூறுகிறார்கள்,
எனவே, சராசரி 4 பேருக்கு =2+2+2+2/4=2

GRP =4*2*10=80% என வரும்.

8 பேர் பார்க்கும் சேனலுக்கும் GRP 80, 4 பேர் மட்டுமே பார்க்கும் சேனலுக்கும் GRP 80,ஆனால் டீஆர்பியில் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும்!

அதாவது ஒரு சேனல், நிகழ்ச்சியை எத்தனைப்பேர், பார்க்கிறார்கள் என்பதை விட எத்தனை முறை என்ற ,பிரிகுவென்சியை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடுவது தான் GRP புள்ளிகள் ஆகும்.

TRP= TARGET (TELEVISION) RATING POINT,

GRP= GROSS RATING POINT

இதன் அடிப்படையில் நம்பர் 1 என சொல்லிக்கொள்வது ஊரை ஏமாற்றும் தந்திரம்.

பதிவுகளிலேயே பார்த்திருக்கலாம், நல்லப்பதிவர்களின் தரமான பதிவுக்கு பத்து பேர் படித்து பத்து பின்னூட்டம் போட்டு இருப்பார்கள், சில அடாசுப் பதிவுகளுக்கு நான்கு பேர் தான் படித்து இருப்பார்கள் அவர்களே வளைத்து வளைத்து ,மாமா, மாப்ஸ்,மச்சான் என்று பல பின்னூட்டங்கள் போட்டு 100 தாண்டி இருப்பார்கள். பின்னூட்டங்கள் எண்ணிக்கையில் பார்த்தால் 100 க்கு மேல வாங்கியதை தான் தரமானது என்று சொல்ல வேண்டியது இருக்கும், அது தான் சூடான இடுகையிலும் இருக்கும்.ஆனால் தரமான பதிவோ பத்து பேர் படித்து 10 பின்னூட்டம் மட்டுமே வாங்கி இருக்கும், அது முன்னிலையில் இராது.

வெறும் நான்கு பேர்ப்படித்து 100 பின்னூட்டம் சரியா , 10 பேர் படித்து பத்து பின்னூட்டம் சரியா? அப்படிப்பட்ட சர்வே தான் புதிய தலைமுறை நம்பர் 1 என்பதும்.

இது புதிய தலைமுறை சேனலை குறைத்துக்காட்ட சொல்லவில்லை, சன் ஆதிக்கம் தகர்ந்தால் நல்லது தான் ,ஆனால் உண்மையில் அப்படி இல்லை என தெளிவுப்படுத்தவே சொல்கிறேன்.





Friday, November 11, 2011

11-11-11

                                                       

                                                         11-11-11


இதில் ஏதேனும் சிறப்பு இருக்கா? இருக்கு என்று சொல்பவர்கள் (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்களாக மட்டுமே இருக்க முடியும், ஆனால் இது வெறும் எண்களீன் தற்செயல் நிகழ்வு என்பவர்கள் கணிதத்தின் அடிப்படையில் சொல்பவர்களாக இருக்க வேண்டும்.

11-11-11 போலவே 10-10-10 என போன ஆண்டும் வந்துள்ளது, இது போல 1 முதல் 12 வரைக்கும் எல்லா நூற்றாண்டிலும் வரும் ஏன் எனில் வருடத்திற்கு 12 மாதம் இருக்கில்லையா?

ஆனால் ஒரே போல என் திரும்ப வர 100 ஆண்டுகள் ஆகும், ரொம்ப முக்கியமாக எண் ஒத்துப்போவது என்றால் 11-11-1111,12-12-1212,22-2-2222 என்பது போன்றது தான் இது போல வர 1000 ஆண்டுகள் ஆகும், உ.ம் 10.10.1010  போல இதெல்லாம் வெறும் தற்செயலே.(ஆனால் எல்லா எண்களும் ஒத்து வருவது தனிச்சிறப்பு என்போறும் உண்டு)

ஆனால் இந்த 11-11-2011 ஐ கூட்டினால் நியுமராலஜிப்படி 8 வருது அது சனி எண், 11 என்பதைக்கூட்டினால் 2 அது நிலவின் எண், எனவே நிலவும், சனியும் சேர்ந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று ஜோசியக்காரர்கள் ஜல்லியடிக்க கூடும்!

11 மணிக்காலை , நவம்பர் 11 தான் முதல் உலகப்போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதாம் எனவே எல்லா வருடமும் 11-11 அப்போது போர் நினைவு தினம் ,நேரம் கடைபிடிக்கப்படுகிறது.

2011 ஆண்டில் ஒருவரது வயது என்னவோ அதனுடன் அவர்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கத்தை கூட்டினால் 111 என்று மட்டுமே வருமாம்!(ஏன்பா அப்போ ஒருத்தர் 111 வயசுக்கு மேல வாழ்ந்து கூட்டினாலும் அப்படி வருமா?)

11 ஐ வைத்து ஒரு பாலிண்ரோம்(மலையாளம் போல)

11*11=121

111111*111111=12345654321

111111111*111111111=12345678987654321

முன்னாலிருந்தும்,பின்னாலிருந்தும் ஒரே போல வருமாம்!

அப்புறம் எதையும் விட்டு வைக்காத ஹாலிவுட் 11-11-11 என ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை அதே பெயரில் அதே நாளில் வெளியிடுகிறது!(கூடிய சீக்கிரம் உலக சினிமா விமர்சகர்கள் தங்கள் பொன்னான விமர்சனத்தை அறங்கேற்றுவாī2;்கள்(சீன் இருந்தால் உடனே வரும்)

ஏதோ என்னால் முடிஞ்ச ஜல்லி! ஜோதிடக்காரங்களுக்கு நாளைக்கு பேப்பர் பார்த்த பிறகு தான் பதிவு போட மூடு வரும்!

Wednesday, November 09, 2011

அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?





அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?


கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை அழுத்த நீர் அணு உலை ஆகும் ( Pressurized water reactors (PWRs) , இதன் முக்கிய கலன், அணு உலை அழுத்த கலன் (  reactor pressure vessel )எனப்படும், இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது.இதற்குள் தான் யுரேனியக்கோர் எல்லாம் இருக்கும். இந்த கலனில் இரண்டு வெல்டிங் இணைப்புகள்  கோர் பெல்ட் பகுதியில் இருக்கும்.

//The original design of reactor pressure vessel (RPV) did not contemplate welds in the core region. However, the vessel now used has two welds in the core region. The effect of lifetime neutron fluence on these welds was evaluated and found to be acceptable.//

கூடன்குளம் அணு கலன் பற்றிய இந்திய அணுசக்தி துறையின் தளம்:

http://www.constructionupdate.com/News.aspx?nId=Kncid8W53rVC5RiVKpBKog==

வெல்டிங்க் செய்யாமல் கலனை இணைக்க முடியாது, அவ்வாறு இணைக்கும் பகுதியில் பற்ற வைப்பு உலோகம், மற்றும், கலனின் அடிப்படை உலோகம் என இரண்டு உலோகம் இருக்கும். எனவே இந்தப்பகுதி தான் வலிமை குறைந்த பகுதியாகும்.

அணு உலை செயல்ப்படும் போது வெளிப்படும் நியுட்ரான்கள் தொடர்ந்து இணைப்பில் தாக்குவதால் உலோகப்பகுதி வலுவிழக்கும் இதற்கு எம்பிரிட்டில்மெண்ட் என்பார்கள். அதாவது கடினத்தன்மையை இழப்பது, எனவே காலப்போக்கில் அழுத்தம் தாங்கும் திறன் குறையும்.

பற்றவைப்பு பகுதி படம்:



//Embrittlement

Reactor pressure vessels, which contain the nuclear fuel in nuclear power plants, are made of thick steel plates that are welded together. Neutrons from the fuel in the reactor irradiate the vessel as the reactor is operated. This can embrittle the steel, or make it less tough, and less capable of withstanding flaws which may be present. Embrittlement usually occurs at a vessel’s “beltline,” that section of the vessel wall closest to the reactor fuel.//

அழுத்த நீர் அணு உலைகளில் தான் இந்த நெகிழ்வு தன்மை அதிகம் ஏற்படும், கொதிநீர் அணு உலைகளில் குறைவான பாதிப்பே ஏற்படும்.

//Pressurized water reactors (PWRs) are more susceptible to embrittlement than are boiling water reactors (BWRs). BWR vessels generally experience less neutron irradiation and therefore less embrittlement. //

இந்த உலோக நெகிழ்வு தன்மையின் பாதிப்பு மிக அதிக அளவில் PWRs இல் அதிக எதிர் விளைவுகளை உண்டாக்கும் ஏன் எனில் வெப்ப அழுத்த அதிர்ச்சி, என்பது விபத்துக்காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டு, எவ்வாறு எனில், திடீர் என அணு உலையில் குளிரீட்டும் அமைப்பு செயல்படவில்லை எனில் விபத்தினை தடுக்க அதிக அளவில் கடல் நீர் உள்ளே பாய்ச்சப்படும். உதாரணம் புக்‌ஷிமா அணு உலை சம்பவம்.

இப்படி குளிர்ந்த நீர் திடீர் என உள்ப்பாயும் போது உலோகம் விரைவாக குளிரும், இதனால் விரைவாக சுருங்கும், அதே நேரம் தொடர் யுரேனியப்பிளவையால் வெப்பம் உண்டாகி அழுத்தம் அதிகரிக்கும், இப்படி ஆவதால் உலோகத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே நெகிழ்வான இணைப்புகள்,அதிக அழுத்தம், உலோகத்தின் மீது ஏற்படும் வெப்ப அழுத்தம் என மூன்றும் சேர்ந்து அணு உலைக்கலன் வெடிக்கவோ,வீறல் விடவோ செய்யும். இப்படித்தான் புக்‌ஷிமாவில் அணு உலை வெடித்தது.

இதனை விளக்கும் யூடூயுப் வீடியோ:


விடியோ1:





விடியோ2;





//Another reason reactor vessel embrittlement is more of a concern for PWRs is because PWRs may experience pressurized thermal shock (PTS). PTS can occur under some accident scenarios that introduce cold water into the reactor vessel while the vessel is pressurized. Introduction of cold water in this manner can cause the vessel to cool rapidly, resulting in large thermal stresses in the steel. These thermal stresses, along with the high internal pressure and an embrittled vessel, could lead to cracking and even failure of the vessel.//

அணு உலைகளில் அடுத்து வரும் தொழிற்நுட்ப குறைபாடு:

கண்ட்ரோல் ராட் செலுத்தும் பகுதி,அதற்கான நாசில்கள் ஆகியவையும் அணு உலைக்கலனுடன் வெல்டிங் செய்தே இணைக்கப்பட்டிருக்கும். அங்கும் நியுட்ரான் தாக்குதலால் நெகிழ்வு,மற்றும் நீரால் ஏற்படும் உலோக அரிப்பு ஆகியவை ஏற்பட்டு அணுக்கசிவு ஏற்படும். வலிமை குறைந்த பகுதி அதிக அழுத்தகாலத்தில் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.

//Control rod drive mechanism nozzles and other vessel head penetration nozzles welded to the upper reactor vessel head are subject to another phenomenon – primary water stress corrosion cracking. The issue is a potential safety concern because a nozzle with sufficient cracking could break off during operation. This would compromise the integrity of the reactor coolant system pressure boundary – one of three primary barriers that protect the public from exposure to radiation. The break may also result in the ejection of a control rod, which could damage nearby components.//

அமெரிக்காவில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பினை வரைப்படுத்தவும் கண்காணிக்கவும் அமெரிக்க அணு உலை ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அவர்கள் ஆய்வின் படி 2001 இல் 3 மைல் தீவு உலை,கிரிஸ்டல் ரிவர் உலை, வடக்குஅன்னா உலை ஓசொனி உலை ஆகியவற்றில் கண்ட்ரோல் ராட் செலுத்தும் இடத்தில் கதிரியக்க கசிவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

//Inspections by licensees during the fall of 2001 revealed vessel head penetration nozzle cracks at Three Mile Island Unit 1, Crystal River Unit 3, North Anna Unit 1, and Oconee Unit 3.//

//Inspections performed at several PWRs in 2002 including those performed at the Davis-Besse Nuclear Plant, found leakage and cracks in vessel head penetration nozzles or J-groove welds that have required repairs or prompted the replacement of the vessel head. As a result of continuing concerns regarding licensee inspection programs in this area, the NRC issued an Order on February 11, 2003, to all PWR licensees in the U.S. The Order requires specific inspections of the vessel head and associated penetration nozzles based on their susceptibility to primary water stress corrosion cracking.//

இதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆய்வில் 26 அணு உலைகளில் மேற்குறிப்பிட்ட அணு உலைப்பகுதியில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.

//Twenty-six units were identified by the Electric Power Research Institute's Materials Reliability Program as having a high susceptibility to nozzle cracking. Inspections by licensees performed after issuance of the latest bulletin and order, revealed nozzle or J-groove weld cracks and/or leaks//

மேலும் டேவிஸ் பேஸ் அணு உலையில் நாசில்ப்பகுதி அருகில் ஒரு கால்ப்பந்து அளவுக்கு ஓட்டையும், ஒரு வெடிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

//In early March of 2002, during an inspection prompted by Bulletin 2001-01, Davis-Besse Nuclear Power Station identified a football-sized cavity in the units reactor vessel head. The cavity was next to a leaking nozzle with a through-wall crack and was in an area of the vessel head that had been covered with boric acid deposits for several years. Inspections at Oconee Unit 1 and Millstone Unit 2 also identified nozzle cracking. The discovery of leaks and nozzle cracking at Davis-Besse and other PWR plants called for more effective inspections of reactor pressure vessel heads and associated penetration nozzles.//

அமெரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் சுட்டி:http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/prv.html

இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணு உலை, பாதுகாப்பு அம்சங்கள் அதிகம், சிறப்பாக பராமரிப்போம் என்றெல்லாம் கூடன்குளத்தில் அதிகாரிகள் சொல்கிறார்கள். அவை  நம்பும் வகையில் இல்லையே.

சிறப்பாக செயல்படும் அமெரிக்க அணு உலைக்கூடங்களிலேயே பராமரிப்பு நிலை இது தான், அப்படி எனில் இந்தியாவில் என்ன கதி என்று யோசித்தால் மயக்கம் வருகிறது.

என்ன தான் சிறப்பாக  வடிவமைத்து ,பாதுகாப்புடன் பராமரித்தாலும் அணு உலைக்கலன்களுக்கு என்று சில கட்டுமான பலவீனங்கள் உள்ளது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையே இவைக்காட்டுகின்றன.இதை எல்லாம் அறிந்த அப்துல்கலாம் போன்றவர்கள்.தீங்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

பின்குறிப்பு:

தமிழில் மட்டும் எழுதி சுட்டியைப்போட்டால் சில அறிவுஜீவிகள் சுட்டியைப்படிக்காமல் மீண்டும் வந்து கேள்விகேட்டு இம்சையைக்கூட்டுது, அதான் மேஜர் சுந்தரராஜன் போல தமிழ் & ஆங்கிலம்( தளத்தில் இருந்து காபி& பேஸ்ட்) என அடுத்து அடுத்து போட்டாச்சு, சுட்டியும் இருக்கு போய் தெளிவா படிங்க!

Tuesday, November 08, 2011

சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.



சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.



பெரும்பாலும் கீழ் காணும் மூன்று முறைகளில் சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாகவோ எரிசக்தியாகவோ பயன்ப்படுத்துகிறோம்,

# போட்டோ ஓல்டிக் பேனல்

#சூரிய வெப்ப சக்தி

#சூரிய அடர் சக்தி


போட்டொ ஓல்டி பேனல்:

சூரிய சக்தி தயாரிப்பில் விலை அதிகம் ஆன தொழில் நுட்பம் இது, காரணம் இதற்கான பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி ஆவதே. இதுவே அமெரிக்காவில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 சென்ட்கள் போதும். இந்தியாவில் 15 ரூபாய் ஆகிறது(இங்கே அதிக பட்ச மதிப்பீடையே அளிக்ககிறேன் குறைந்த பட்சமாக 3 ரூபாய்க்கும் தயாரிக்க முடியும்)

ஏன் எனில் 15 ரூபாய்க்கு தயாரிக்கும் பிளாண்ட் என்பது முழுக்க தானியங்கியாக, இரவு பகல் எப்போதும் மின் உற்பத்திக்கு பயன்படும், அதி நவீனமானது. தோராயமாக 1 மெகா வாட் திறனில் பிளாண்ட் அமைக்க 25 கோடி அதிகபட்சம் ஆகும்,சுமார் 10 ஏக்கர் இடம் தேவைப்படும். அப்படி எனில் அணு சக்தி மின்சாரமான 2.7 சதவீதம் ஆன சுமார் 7000 மெகா வாட் தயாரிக்க இந்தியாவுக்கு சுமார் 175000 கோடி ரூபாயும், சுமார் 70000 ஏக்கர் இடமும் தேவைப்படும். 176000 கோடி 2ஜி ஸ்ப்பெக்ட்ரம் ஊழல் பணமே போதும். அவ்வளவு ஊழல் செய்யும் ஒரு நாட்டில் பாதகமற்ற மின்சாரத்துக்கு செலவு பண்ண முடியாதா? தார்ப்பாலைவனத்தின் பரப்பளவு 200,000 km2 ஆகும்.

மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட விலை எல்லாமே மிக அதிகப்பட்ச விலை ஆகும், உண்மையில் இதில் பாதி போதுமானது. குறைவான தொகை கணக்கில் வைத்து சொன்னால் கூடுதலான விலையை மட்டுமே கணக்கில் வைத்து விதாண்டா வாதம் பேசினால் கூட செல்லுபடியாக கூடாது என்பதற்கே.

போட்டொ ஓல்டிக் பேனல் வீடியோ:



இந்த 15 ரூபாய் என்பதே ஒரு தர்க்க ரீதியான விலை, பயன்ப்படும் காலத்தில் எரிபொருள் செலவு இல்லை, சுற்று சூழல் மாசு இல்லை என்பதற்கான விலையை கழித்தால் குறைவான தொகையே நாம் செலவிட்டதாக ஆகும்.

போட்டோ ஓல்டிக் பேனல்கள் என்பது சிலிகான் கொண்டு தயாரிக்கபடுவது, அவற்றின் மீது கண்ணாடிப்பூச்சு இருக்கும்.மேல் படும் சூரிய ஒளியை நேரடியாக மின்சாரம் ஆக மாற்றீ மின்சார சுற்றுக்கு அனுப்பும். போட்டொ ஓல்டிக் விளைவுக்காகவே ஆல்பிரட் ஐன்ஸ்டின் நோபெல் பரிசு பெற்றார்,இதனை 1905 இல் கண்டுப்பிடித்தார்.

சூரிய வெப்ப சக்தி:

இது கொஞ்சம் சாதாரணமான தொழில் நுட்பம்,இதுவும் சூரிய அடர்வு சக்தி முறை தான் எப்படி செயல்ப்படுத்துகிறோம் என்பதனை பொறுத்து மாறுபடும். நேரடியாக சூரிய வெப்பத்தைக்கொண்டு நீரை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்து டர்பைன்களை இயக்க செய்து , அனல் மின் நிலையம் போல மின் உற்பத்தி செய்வது.

பேராபோலிக் வடிவ நீள் தகடுகளை அமைத்து அதன் மயத்தில் வெப்பம் கடத்தும் திரவம், எளிதான முறை எனில் நீரையும், அல்லது மினரல் ஆ 91;ில் போன்றவற்றையும் பயன்ப்படுத்துவது. விலைக்கூடிய முறை எனில் உருகிய உப்பினை கொண்டு வெப்பத்தினை கடத்தி நீராவி உற்பத்தி செய்து மினுற்பத்தி செய்வார்கள். இந்த முறையில் சில இடங்களில் அடர்வு/ வெப்ப சக்தி என மாற்றிப்பயன்படுத்துவார்கள்.

இதிலும் தானியங்கி முறை உண்டு.இரவிலும் பயன்ப்படும், ஏன் எனில் வெப்பம் சேமிக்கும் சாதனமாக உருகிய சோடியத்தை பயன்ப்படுத்தலாம்.

கீழே யூட்யுப் விடியோ கானவும்.





அடர்வு சூரிய சக்தி:

இதில் ஒரு சூரிய சக்தியினை குவிக்கும் கோபுரம் அமைப்பார்களில் (ஹீலியோஸ்டாட்)அதில் பல குவி ஆடிகள் இருக்கும் இதன் மூலம் சூரிய ஒளியை குவித்து வெப்பத்தை உருவாக்கி உருகிய உப்பு/ வெப்பம் கடத்தும் மினரல் ஆயிலை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்வார்கள். இதுவும் தானியங்கி அமைப்பு, 24 மணி நேரமும் பயன்ப்படக்கூடியது.

கீழே யூட்யூப் வீடியோ:வீடியோ1:



வீடியோ 2:




இந்தியாவில் இப்போது வணிக ரீதியாக தனியார் முதலீடு கொண்டு சூரிய பண்ணைகள், நகரங்கள் அமைக்கப்படுகிறது, அதானி குருப், மோசர் பேயர் போன்றவை 50 மெகா வாட் அளவுக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சுட்டியில் இந்தியாவில் எப்படி வணிக சூரிய மின் உற்பத்தியாளர்கள் செயல்ப்படுகிறார்கள் என அறியலாம்;

commercial solar power production in india

கீழ்க்காணும் சுட்டியில் மேல் விவரங்கள் காணலாம்;

solar power stations

solar power

solar energy


__________________________

சூரிய ஆற்றலும் தீங்கானது என சிலர் சொல்கிறார்கள்,அவர்கள் கூறும் வாதம் இது தான்.

# சிலிக்கான் பேனல்களில் இருந்து சிலிக்கான் தூசு வரும் என்று, அது சிலிக்கோசிஸ் என்ற நுரையீரல் நோய் உண்டாக்கும் என்பதாகும்.

இது முற்றிலும் கற்பனா வாதம், ஏன் எனில் பேனல்கள் மீது கண்ணாடி பூச்சு உள்ளது.சிலிக்கான் தூசு எப்படி வெளியில் வரும். அப்படிப்பார்த்தால் சில்லிக்கான் கொண்டு தான் கணினி, கைப்பேசி, என பல மின் அணு சாதணங்கள் செய்யப்படுகிறது, எல்லாருக்கும் சிலிக்கோசிஸ் நோய் வந்து விட்டதா?

# அடுத்தது , சூரிய வெப்பம் கடத்தப்பயன்படும் வெப்பக்கடத்தி திரவம் , மினரல் ஆயில் மூலம் நோய் வரும் என்பது இதுவும் தவறான பிரச்சாரம் ஆகும்.

காரணம் , இந்த எண்ணை மூடப்பட்டக்குழாய்களில்  தனிச்சுற்றாக  சுற்றி வரும் வெளியில் வராது. ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மூலமே நீரை சூடாக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஆரம்பத்தில் தெர்மினால் (பாலி குளோரோ பைபினைல் கலவை)என்ற எண்ணை பயன்ப்படுத்தப்பட்டது அது தான் ஆபத்தானது அதனை 1976 லேயே தடை செய்து தற்போது தீங்கற்ற எண்ணை, அல்லது விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என உருகிய உப்பினை பயண்ப்படுத்துகிறார்கள். உருகிய உப்பு என்பது நாம் பயன்ப்படுத்தும் சாதாரண உப்பே.

# மேலும் பூச்சிகள் சூரிய சக்தியினை குவிக்கும் ஆடிகளால் பாதிக்கப்படும் என்கிறார்கள், இதுவும் தவறானது, சூரிய ஒளியை குவிக்கும் போது அதன் வழியாக சென்றால் எல்லாம் பூச்சிகள் சாகாது நீண்ட நேரம் அதில் இருக்கும் போது தான் வெப்பம் தாக்கும், எந்த பூச்சியும் அங்கேயே கூடுகட்டி குடி இருக்காது. வேண்டுமானால் ஒரு குவி ஆடி வைத்து சூரிய ஒளியை குவித்து அதில் உங்கள் கையை வைத்து சூடு செய்துப்பாருங்கள், சற்று நேரம் ஆனால் தான் வெப்பம் நாமே உணர்வோம். ஆடியில் பட்டதுமே பற்றிக்கொள்ளும் வெப்பத்தினை சூரிய ஒளி உருவாக்காது.

சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.

 # அதிக இடம் தேவைப்படும் என்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் உள்ள தார்ப்பாலைவனம் ஒன்றே போதும் தேவையான மீன்சாரம் உற்பத்தி செய்ய. ஆனால் தற்ப்போது நம்மிடம் நிதி ஆதாரம் இல்லை ,முழுக்க பயன்ப்படுத்த , எனவே அணு மின்சாரம் 2.7% உற்பத்தி செய்கிறோம் அதற்கு மட்டும் தற்போது மாற்றூ செய்துக்கொள்ளலாம், போக போக போட்டோ ஓல்டிக் பேனல்கள் விலை குறையும் அப்போது அதிகமாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம். ஏன் எனில் கணினி அறிமுகம் ஆனப்போது என்ன விலை, இப்போது மலிவாக கிடைக்கவில்லையா,அப்படித்தான் போட்டொ ஓல்டிக் பேனல்களூம் வருங்காலத்தில் விலைக்குறையும்.

செலவு அதிகம் ஆகும் என்பவர்கள் இந்த சுட்டியைப்பார்க்கவும்:

cost of solar power

பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் அமெரிக்க கலிபோர்னிய மாகாணத்தில்  மஜோவா பாலையில  ஒரே இடத்தில் 500 மெகாவாட் சூரிய மினுற்பத்தி மையம் அமைத்துள்ளார்கள். இப்படி பத்து மையம் அமைத்தால் 5000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

சுட்டி:

solar power-land requirement

Monday, November 07, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு , வேண்டுதல்!.



தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,
வேண்டுதல்!.



நட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும் நட்சத்திரமாக தேர்வானவர்கள் காபி&பேஸ்ட்*(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.

இது வரைக் காபி & பேஸ்ட் பதிவு போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா?

அரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம் நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே!

பின்குறிப்பு:

இது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு பதிவு நேர்,எதிர் என ஓட்டு வாங்கி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*a copy and paste is always copy &paste!

இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா? என்று. ஏன் எனில் இணையத்தில் தமிழ் பற்றி தேடும் போது கண்ணில் படும் பல இலக்கியம் குறித்தான மடல்குழுக்களின் விவாதங்கள் ,வலைப்பதிவுகளீன் உள்ளடக்கம் ஆகியவை , பல தவறான பொழிப்புரைகளை கொண்டுள்ளதாகவே எனக்குப்படுகிறது. ஆமாம் இவர் பெரிய நக்கீரர் குற்றம் கண்டுப்பிடிக்க வந்துட்டார்னு நினைக்காம எனக்கு சந்தேகம் தீர்க்க உதவுங்கள்.

சாதாரணமா தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு எப்படி என்று எழுத அதை செய்யாதவங்க முன்வர மாட்டாங்க, ஆனால் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் எழுதியவற்றுக்கு விளக்க உரைக்கொடுக்க எந்த தயக்கமும் கொள்வதில்லை,வீட்டுல தமிழ் பேசுறேன் , தமிழ் பதிவுப்போடூறேன் அப்போ , எனக்கு தமிழ் தெரியாதா, இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டாமா என்பார்கள்.

சரி தான் , இணையத்தில் தமிழ் இலக்கியம் வளரணும் ஆனால் சரியான விளக்க உரையுடன், நான் தேடியப்போது கிடைப்பதெல்லாம் எனக்கே பிழையாக தெரியுது (நான் கத்துக்குட்டி என்பதை நினைவில்கொள்க).நாமே ஆஃப்பாயில் இதுல அவங்க சொன்னா சரியா இருக்கும்னு அப்படியே விட்டா காலப்போக்கில் பிழையானவையே தேடலின் போது கிடைக்கும்.

சிலர் சிறப்பாக செய்யலாம் ஆனால் கூகிள் தேடலின் போது முதலில் வருவதில்லை. ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் கிடைக்க 1000 பக்கங்கள் திறக்க வேண்டியது இருக்கு.

தமிழ் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் , இணையத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன், மேலும் அவர்கள் மடல் குழுக்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.அந்த பக்கமும் போய் விவாதங்கள், சந்தேகம் தீர்ப்பது என செயல்ப்பட வேண்டும்.

குறிப்பாக நான் நாலு வருஷமா தமிழில் பேசுறேன் எனவே தமிழ் இலக்கணம்,இலக்கியம் தெரியும்னு சொல்லாம, நல்லா தமிழ் இலக்கியம்,இலக்கணம் படிச்சவங்க,தெரிந்தவங்க இதை செய்யலாமே

கம்பரும் கொம்பரும் என்ற ஒருப்பதிவில், இலவசக்கொத்தனார் என்ற தமிழ் ஆர்வமுள்ளப்பதிவர் இப்படி விளக்கம் போட்டு இருந்தார்(அவருக்கும் யாரோ சொன்னதாம்) அந்த விளக்கம் கீழே,

சுட்டி:
http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html

//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? //

எனக்கு வழக்கம் போல சந்தேகம் வரவே என் சந்தேகத்தினையும், எனது விளக்கத்தையும் ,பின்னூட்டமாக போட்டிருந்தேன்,அது கீழே,

சந்தேகத்தின் சாராம்சம் இதான் நெய்த்து = நெய்ப்பூசிய என வருமா என்பது தான், ஏன் எனில் இது மலர் பற்றிய வரி, மலருக்கு ஏன் நெய்ப்பூச வேண்டும்.என் பின்னூட்டம் படிச்சுப்பாருங்க.

-------------------------------------------------------------------------------

இ.கொ,

பாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்!

அப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு வறுத்து சாப்பிடணுமா> இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது? :-))

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,

சரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூடும்.

பிச்சி = முல்லை,

தட்பம்= குளிர்,

கச்சக =அழகாக,

சுற்று= சுற்றி இருப்பது,

தனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா?

நெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர் படிச்சு இருப்பாரா?
துணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எ 75;ுத்துக்கலாமோ?

அடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.

கள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ? :-))

Sunday, November 06, 2011

பிவிட்டர்-1#வவ்வால்

                                 பிவிட்டர்-1#வவ்வால்                                          

கூகிள்காரன் பதிவுனு ஒன்று ஆரம்பித்ததும் எல்லாம் ஓடி வந்து ஆரம்பித்துக்கொண்டோம்,பெருமையாகவும் நினைத்துக்கொண்டோம்!

அப்புறமா டிவிட்டர் , கூகிள் பஸ், முகநூல் என எது வந்தாலும் ஓடிபோய் ஏற மக்கள் தாயாராயிட்டதும் ,எல்லாம் சமூகவலையாச்சு(இதுல அதுல சேராதவங்கள கற்கால மனிதன் போல பார்த்ததுகள் சிலது) . ஆனா என்னா ஆச்சுனா ஆரம்பத்தில ஆர்வமா பஸ்ல தொங்குனவங்க, டிவிட்டுனவங்க,எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு , இதுல போடுறது எல்லாம் ரொம்ப நாள் இருக்காது பதிவுல பதிய வச்சா தான் காலா காலத்துக்கும் இருக்கும்னு அங்கே போட்ட அதே மொக்கைய இங்கே காபி&பேஸ்ட் பண்றாங்க!(ஏன் கல்வெட்டுல செதுக்கி தஞ்சை பெரியகோவிலில் வைக்கிறது தானே)

இதுல இருந்து தெரிவது என்ன என்றால் வாழ்கை மட்டும் வட்டமில்ல , இணையமும் வட்டம் தான்.

ஹி..ஹி இவங்களாம் அங்கே போய் அனுபவப்பாடம் கத்துக்கிட்டு அப்புறமா இங்கே வந்து அத காபி & பேஸ்ட் பண்றாங்க,அனுபவம் நல்ல ஆசான், ஆனால் அடுத்தவங்க அனுபவம் நல்ல கைட்!

எனவே கோணார் நோட்ஸ் படிச்சு தமிழ்ல பாஸானவன் என்ற காரணத்தால் ,இவங்க செய்த அதே வேலைய சுளுவா இப்போ நான் செய்யப்போறேன்.

சின்ன சின்ன குறுஞ்செய்தியா போட்டா அது டீவிட்டராம்,பஸ்ஸாம்(எங்க ஊர்ல பஸ்ஸுக்கு சக்கரம்ல்லாம் இருக்குமே) எனவே நான் குறு(ம்பு)ஞ்செய்தியா நேரடியா பதிவில போட்டுக்க போறேன், (எவன்/எவள் படிச்சா எனக்கு என்னா) அதனால அப்படி குறுஞ்செய்தி பதிவில போட்டா ஒரு நாமகரணம் வைக்கணுமே, இதெல்லாம் சப்ப மேட்டர், டீவீட்டர் போல  பிலாக்ல  போட்டா அதுக்கு பேரு பிவீட்டர் னூ வைக்காம வேற என்ன வைக்க?

இனிமே நம்ம பிவீட்டர்கள் ,என் உற்சாகத்துக்கு ஏற்ப வரும்! படித்து துன்புறுங்கள்! உங்களை எந்த ஆண்டவனும் இரட்சிக்கவே மாட்டான்/ள்.

--------------------------

#விசய்,அசித் பட பஞ்ச் டயலாக்கை பதிவில் கேளி செய்பவர்கள் டீவிட்டரிலும்,பஸ்ஸிலும் பஞ்ச் டயலாக் செய்வதே வேலையாக இருப்பதேன்#வவ்வால்

#பதிவுக்கு வரும் போது ,அய்யா சாமி பின்னூட்டம் போடுங்க என கெஞ்சுபவர்கள் ,சில நாட்களீல் இது என் பதிவு,என் பின்னூட்ட பெட்டி என நமக்கே பாடம் நடத்துவது ஏன்#வவ்வால்

#அன்புள்ள விசய்க்குனு மொக்கைப்படத்துக்கு கூட அன்புடன் விமர்சனம் எழுதும் சிகாமணிகள்,சூர்யா படத்துக்கு அப்படி அன்புள்ள என்றேல்லாம் விளிப்பதில்லையே ஏன்?#வவ்வால்

#ஓசியில் படம் பார்த்தால் 10 ஆண்டு பொட்டியில் தூங்கிய படம் என்றாலும் சூப்பர் என்னும் சிகாமணீகள், புத்தம் புதிதாக வரும் படத்தை காசு கொடுத்துப்பார்த்தால் 35/120 என காசுக்கு மார்க் போடுறாங்கப்பா!#வவ்வால்

#சிலர் தப்பு தப்பாக மொழிப்பெயர்த்து கொண்டு "நடு சென்டர் "போல பேசிக்கிட்டு பதிவுல அலையுறாங்க அதை சொன்னால் ஷைத்தான் என்கிறார்கள் என்னை! அவர்கள் மீது சாணியும்,சந்தனமும் பரவுவதாக!#வவ்வால்

--------------------------------

இது முதல் பிவீட்டர் என்பதால் இத்தோட கடைய மூடி,லைட் ஆப் பண்றேன்..இம்சை தொடரும்!

Saturday, November 05, 2011

கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!





கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!



குமரி மாவட்டம், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருந்தது,அய்யா வைகுண்ட சாமி,மார்ஷல் நேசமணி போன்றோர் போராடி, தமிழகத்துடன் 1956 இல் இணைத்தனர், இந்த நவம்பர்  1உடன் 55 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதிக தகவல்கள் வேண்டுவோர் இணையத்தினை நாடலாம்.

இப்போ இதுக்கு என்னா என்கிறீர்களா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்(6.11.2011) ஒரு கட்டுரை வந்துள்ளது, அதன் சாரம்சம் இதுவே,

குமரி கேரளாவுக்கே சொந்தம் என ஒரு அமைப்பு கேரளாவில் போராடி வருகிறதாம் (பெயர் போடவில்லை) இவர்களுடன் வகுண்டசாமி தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பும்(தலைவர் சந்திர சேகரன்) சேர்ந்து கேரளா சட்டம்மன்றம் எதிரே நவம்பர் 1 ஆம் தேதி தர்ணா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும் அவர்கள் இது நாள் வரை நவம்பர் ஒன்றை துக்க தினமாக அனுசரித்து வந்தார்களாம்!

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு குமரி மாவட்டத்திற்கு  சாலை முதலான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்(ஒரு மெடிக்கல் காலேஜ் கூட அங்கே புதுசா வந்துச்சே)

இது பற்றி பாலப்பிரஜாப்தி அடிகளிடமும் கேட்டு இருக்கிறார்கள்,இவரும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள்,

#தமிழ் நாட்டில் குமரி மாவட்ட இணைப்புக்காக போராடியவர்களுக்கு சிலை வைக்கவில்லை(அட டா சிலை வச்சா காக்கா உச்சா தானே போகும் என்ன ஒரு கோரிக்கை),

#தமிழகத்துடன் குமரி இணைந்ததை தமிழ் நாட்டில் யாரும் கொண்டாடவில்லை,

#ஆனால் கேராளாவில் குமரி பிரிந்து போனதற்காக வருந்துகிறார்கள்,

அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் பாசம் இருக்கு, எனவே இங்குள்ள மக்கள் விரும்பினால் குமரி கேரளாவுடன் சேரலாம், வேணாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லி இருக்கார்.சேர வேண்டாம்னு போராடினால் அதிலும் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றார்.(ரொம்ப தெளிவு)

இதே கருத்தை தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் அவர்களும் பிரதிபலித்தாராம்(கருங்கல்லு பிரதிபலிக்குமா அது என்ன கிரானைட்டா)

ஜான் ஜேக்கப், கிள்ளியூர் காங் எம் எல் ஏ மட்டும் இது ஜாதி, மதம் சார்ந்து கிளம்புற பிரச்சினை இதுக்கு ஆதரவு தர மாட்டேன்னு வெளிப்படையா பேசி இருக்கார்(காங் ல கூட வெளிப்படையா பேச ஆள் இருக்குப்பா)

போறப்போக்க பார்த்தா குமரி மாவட்டத்த லெமுரியா கண்டத்துக்கூட இணைக்கனும்னு யாரேனும் போராடுவார்களோனு பயமா இருக்கு! :-))

சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த மியுஜிக்!

பின் விளைவு குறிப்பு:

 ரிப்போர்ட்டர் என்ற வார பத்திரிக்கையில் வந்தசெய்தியே இது , முழுதுமாக காபி ,பேஸ்ட் செய்யப்படவில்லை, இது ஒரு " gist news" எனவே சந்தேகம் இருப்பவர்கள் அந்த பத்திரிக்கையைப்படித்து தெரிந்து கொள்ளவும்.