Wednesday, December 19, 2007

எனக்கு தெரிந்த நல்ல நடுவர்கள்! இவர்களையும் சேர்த்துக்கோங்க!








"நாற்று "நடுபவர்கள்" எல்லாரும் நடுவர் தானே, ஏன் அவங்களை எல்லாம் நடுவர்னு சொன்னா குற்றமா? இவங்க எல்லாம் சேற்றில் கால் வைக்கலைனா நாம யாரும் சோற்றில் கை வைக்க முடியாது! வவ்வால் என்னும் பிலாக்காளி கண்டெடுத்த நடுவாளி(நடுவர்)

இந்த நடுவர்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

பலான படத்துக்கு போனாலும் அதிலும் ஒரு மெஸ்ஸேஜ் தேடும் வாசக அன்பர்களுக்காக , சும்மா படம் மட்டும் காமிக்காம ஒரு மெஸ்ஸேஜும் தருகிறேன்.(வவ்வால் மொக்கை போட்டாலும் கருத்தா மொக்கை போடுவான்னு நீங்க நினைப்புது எனக்கு புரியுது...(cool ..buddy")

இந்தியா விவசாயத்தில் நெல் நாற்று நடும் வேலையில் ஆண்களை விட பெண்களே அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதே சமயம் ஒரு ஆண் நாற்று நட்டால், அவருக்கு , பெண்ணை விட அதிகம் சம்பளம் அளிக்கப்படுகிறது(ஆணுக்கு 75 எனில் பெண்ணுக்கு 60 ரூபாய்). ஆணை விட பெண்ணே "நடுவராக" செயல்படுவதில் வல்லவர் என்பது விவசாயிகளுக்கு நன்கு தெரியும் , அப்படி இருந்தும் , இப்படி பாலியல் ரீதியான சமச்சீர் இன்மை சம்பள விகிதத்தில் இருக்கிறது.

இதில் எந்த உள், வெளி குத்தும் இல்லை... இது விவசாய குத்துங்கோ ....சும்மா கில்லியாட்டாம் இருக்கும்!

நாத்து நடும் வேளையில பாட்டு ஒண்ணு வேணும், பாட்டுக்குள்ள மாமனுக்கு சேதி சொல்ல வேணும்.... ஏலே லோ ...ஏலே...லோ....