Sunday, February 26, 2012

எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!





எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!


சாகித்ய அகதமியின் விருதுக்கு நூல்களை தேர்வு செய்யும் முறை:

# ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மொழி வாரி ஆலோசனைக்குழு ஒவ்வொரு மொழிக்கும் பரிந்துரைக்கும்.

# அந்த ஐந்தில் இருந்து இருவரை அகதமி தலைவர் தேர்ந்தெடுப்பார்.

#இரு நபர் குழு அம்மொழிக்கான அடிப்படை நூல்ப்பட்டியலை தேர்வு செய்து மாநில மொழி ஆலோசனைக்குழுக்கு அனுப்பும்.

# மாநில மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக தலா இரண்டு நூல்களை பரிந்துரைத்துக்க வேண்டும்  , நிபுணர்க்குழுவின் அடிப்படையில் இருக்கலாம் , அல்லது ஒன்று நிபுணர் குழு நூல் ஒன்று சுய தேர்வு அல்லது இரண்டுமே சுய தேர்வாகவும் இருக்கலாம்.மாநில மொழி ஆலோசனைக்குழு இலக்கிய அமைப்புகளின் பரிந்துரைகளையுன் பரிசீலிக்கும். பின்னர் இந்நூல்களின் பெயர்கள்  தொகுக்கப்பட்ட  பட்டியலாக சேர்த்து அகதமிக்கு அனுப்புவார்கள்.

# மாநில வாரியாக 10 நபர் கொண்ட ஒரு முன் தேர்வுக்குழு அமைக்கப்படும். அவர்களுக்கு இந்த பட்டியல் அனுப்பப்படும்.

#இந்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  மொழி ஆலோசனைக்குழு  மற்றும் நிபுணர்க்குழுவால் தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தலா இரண்டு நூல்களோ அல்லது அவர்கள் விருப்பப்படி இரண்டு நூல்களையோ குறிப்பிட்டு பரிந்துரைப்பார்கள்.

#இப்போது ஒரு இறுதிப்பட்டியல் உருவாகி இருக்கும், இது 3 பேர்க்கொண்ட தேர்வாளர்கள்(ஜூரி) வசம் ஒப்படைக்கப்படும்.இந்த தேர்வாளர்கள் மாநில ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ,அகதமி தலைவர் முடிவு செய்து தேர்வு செய்வார்.

#இப்போது 3 ஜூரிகளும் ஒருமித்த முடிவாக ஒரே நூலை தேர்வு செய்யலாம் அல்லது மூன்றில் இரண்டுப்பேர் ஓட்டுப்பெறும் நூலையும் தேர்வு செய்யலாம். இதுவே விருதுக்கான நூலாகும்.

ஜூரிகளுக்கும் ,அகதமிக்கும் இடையே  இணைப்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருப்பார். விருதுக்கான பரிந்துரை அகதமி செயல் குழு முன் வைக்கப்பட்டு ,ஒப்புதல் பெறப்பட்டு விருது அறிவிக்கப்படும்.

சாகித்ய அகதமி சுட்டிகள்:

விருதுக்கு தேர்வு செய்யும் முறை:


தேர்வு விதி முறைகள்

மாநில ஆலோசனைக்குழுப்பட்டியல்:


மாநில ஆலோசனைக்குழு

ஜூரிகள் மற்றும் விருதுப்பட்டியல்:

விருதுப்பட்டியல்

இப்போது தமிழக சாகித்ய அகதமி அமைப்பில் உள்ளவர்களைப்பார்ப்போம், இவர்கள் தான் தமிழகத்திற்கான விருது வழங்குவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்.

மாநில அகதமி பொறுப்பாளர்:

முனைவர்.ஆர்.குருநாதன்
சென்னை.

மாநில ஒருங்கிணைப்பாளர்:


முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்
பொள்ளாச்சி.
சிற்பி

தமிழ்நாடு மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:

#முனைவர்.ஆர்.குருநாதன் ,சென்னை.(மாநிலத்தலைவரும் இவரே)
#
மகரந்தன் (ஐ.கணபதி),புதுவை.
#பேரா.இரா.மோகன்,மதுரை.
#பேரா.இரா.மீனாக்‌ஷி,ஆரோவில்,தமிழ்நாடு.
#
சுப்ரபாரதிமணியன்,திருப்பூர்.
#இந்திரன்,சென்னை.
#இரா.நடராஜன்,சென்னை.(முன்னால் சென்னை வானொலி இயக்குநர்)
#என்.ஆவுடையப்பயன், நூலக இயக்குனரகம்,சென்னை.
#தங்கம் மூர்த்தி(காவியா மூர்த்தி),புதுக்கோட்டை.
#முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்,பொள்ளாச்சி.(ஒருங்கினைப்பாளரும் இவரே)

மூன்று நபர் விருது (ஜூரி)தேர்வுக்குழுவினர்.


#கவிஞர் தமிழ்நாடன்,


இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், வானம்பாடி கவிஞர் குழுமத்தில் ஒருவர். தமிழ்நாடு வளர்கலை ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்தவர்.
ஏழு கார்ட்டூன்களும்  ஒரு வண்ண ஓவியமும் - என்ற நூலை ஒரியாவில் இருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தமைக்கு 2000 ஆம் ஆண்டு சாகித்ய அகதமி மொழிமாற்ற விருது பெற்றுள்ளார்.


அவரைப்பற்றி அப்போது இந்து நாளேட்டில் வநத செய்தி ,
 THIS YEAR'S Sahitya Akademi Award winner for Tamil translation, Mr. A. Tamilnadan, is a ``non- conformist'' among writers, with Leftist leanings.



#குறிஞ்சி வேலன்



இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். நிறைய மொழிமாற்ற நூல்கள் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகதமி விருது -1994 -இல் விஷக்கன்னி(மலையாளம்) நாவலுக்கு பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம்   என்ற மொழிமாற்ற நூலுக்காக -2001 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கவிருது பெற்றுள்ளார். பின்னர் மீண்டும்
முழுமையைத்தேடும் முழுமையற்றப்புள்ளிகள் என்ற நூலுக்கும் பெற்றார்.
link:

book

இவர் ஆசிரியராக இருந்து திசைகள் எட்டும்  என்ற காலாண்டு மொழிமாற்ற இதழ் நடத்தி வருகிறார்.

திசைகள் எட்டும் குறித்த அறிமுகம் ஆரண்யநிவாஸ் என்பவரின் வலைப்பதிவில் இருக்கிறது பார்க்கலாம்.

திசைகள் எட்டும்

முன்னால் சென்னை வானொலி இயக்குநர், இரா.நடராசன், மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுடன் இணைந்து " நல்லி திசைகள் எட்டும் "என்றப்பெயரில் மொழி மாற்ற நூல்களுக்கான விருதினை ஆண்டு  தோறும் வழங்கி வருகிறார்.

தமிழக சாகித்ய அகதமி ஒருங்கிணைப்பாளர். சிற்பி.பொ.பால சுப்ரமணியனும் நல்லி திசைகள் எட்டும் விருதுப்பெற்றுள்ளார்.
http://www.hindu.com/2010/08/08/stories/2010080859780400.htm">திசைகள் எட்டும் விருது

# முனைவர்.பேரா.கே.செல்லப்பா


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராக திருச்சிப்பாரதிதாசன் பல்கலையில் பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர்.“Ilango and Shakespeare: A Comparative Study,”  என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இயக்குனராக கனடா கல்வி மையம், பாரதிதாசன் பல்கலையிலும் பணிப்புரிகிறார்.

இதெல்லாம் எதற்கு இப்பொழுது என்று ஒரு கேள்வி எழலாம்,  விஷயம் இருக்கு,

மூன்று ஜூரிகளில் இரண்டுப்பேர் இடது சாரி சிந்தனையாளர்கள், மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை கழகத்தில் ஈடுபாடுக்கொண்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

மாநில ஒருங்கிணைப்பாளரும் , மற்ற சில மாநில ஆலோசனைக்குழுவினரும் திசைகள் எட்டும் ஆசிரியர், ஜூரியான குறிஞ்சி வேலனுடன் நட்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாநில ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் சுப்ரபாரதி மணியன் ( thiruppuur) ,மகரந்தன் (புதுவை)எனப்பலரும் த.மு.எ.க.க ஆர்வலர்களாகவே தெரிகிறது.

காவல் கோட்டம் ஆசிரியர் சு.வெங்கடேசன் , இடதுசாரி சிந்தனையாளர் சிபிஐ(எம்) சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலிலும் நின்றுள்ளார். மேலும் த.மு.எ.க.க மாநில செயலாளர் என்பதால் ஒத்த சிந்தனைக்கொண்டவர்களின் ஆதரவினைப்பெருவதில் வியப்பேதும் இல்லை.மூன்று ஜூரிகளில் இருவர் இடதுசாரி சிந்தனையாளராக இருக்கும் போது சாதகம் தானே.

இன்னும் கொஞ்சம் உள்ளேப்போய் பார்த்தால் போக்குவரத்து , சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின்  தலைவர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ(எம்)  கட்சியை சேர்ந்தவர்.  அந்த நிலைக்குழு தான் சாகித்ய அகதமி கொள்கைகளையும் விமர்சித்தது.விருதிற்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும்http://www.pravasitoday.com/parliamentary-panel-recommends-transparency-in-sahitya-akademi-awards"> பாராளுமன்றத்தில் யெச்சூரி பேசியுள்ளார். அக்குழுவின் ஆய்வுக்கு உட்பட்டது தான் சாகித்ய அகதமி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சீத்தாரம் யெச்சூரி தலைமையில் தான் செம்மலர் ஆண்டு விழாவினை த.மு.எ.க.க வினர் மதுரையில் நடத்தினார்கள்.

இடது சாரி சிந்தனையாளருக்கு சாதகமான சிந்தனையாளர்களே அகதமியில் அதிகம் இருக்கும் நிலையில் காவல் கோட்டம்  நாவலுக்கு பரிசீலனைகளின் போது சாதகமாக இருந்திருக்க வேண்டும்.

ஏன் மற்ற இலக்கியவாதிகள் காவல் கோட்டத்தினை 1000 பக்க அபத்தம் என சொல்கிறார்கள் எனில் அவர்களின் நாவல்கலை அகதமி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்ற ரகசியம் அவர்களுக்கு தெரிந்து இருப்பதே ஆகும்.

மேலும் முதல் கட்ட பரிசீலனைக்கு ஏதேனும் ஒரு இலக்கிய அமைப்பு ,சங்கம் என பரிந்துரை செய்ய வேண்டும் அதுவே பின்னர் மாநில ஆலோசனைக்குழுவினர் மூலம் முன் தேர்வுக்குழுவின் அடிப்படை பட்டியலுக்கு போகிறது.

எஸ்.ரா ஆரம்பக்காலத்தில் இருந்தே த.முஎ.க..க .வில் ஈடுபட்டு வருபவர், ஆனால் அப்படி இருந்தும் எஸ்ரா போன்றவர்களின் நூலினை முந்திக்கொண்டு சு.வெங்கடேசனுக்கு த.மு.எ.எ.க பரிந்துரை கிடைத்து இருக்கலாம், அதுவே சீனியரான எஸ்.ராவிற்கு கடுப்பேற்றி இருக்கலாம் என தோன்றுகிறது.

இடது சாரி சிந்தனையாளர்களின் தாக்கம் கொண்ட குழுவில் ஜெ.மோ கதை எல்லாம் செல்லுபடி ஆகி இருக்காது என நினைக்கிறேன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் பொங்கித்தள்ளுகிறார் போல தெரிகிறது.

ஓரளவுக்கு அனைவராலும் எழுத்தாளுமை உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெ.மோ, எஸ்.ரா போன்றவர்களுக்கே போதுமான ஆதரவு இல்லாத போது காமநெடி பீசான சாருவுக்கு யார் பரிந்துரை செய்திருக்க போகிறார்கள். அதான் காண்டாகி தனியாக அவர் கூட்டம் போட்டு அடுத்தவங்களை காச்சுகிறார் :-))

த.மு.எ.க.க வின் ஆர்வலராக இருந்தும் ஒரு புதுமுக எழுத்தாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் புறக்கணிக்கப்பட்டதால் எஸ்.ராவிற்கு ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. அதை நேரடியாக வெளிக்காட்டவும் முடியவில்லை அதான் தனக்கு தானே திட்டமாக சூப்பர் ஸ்டாரை வைத்து கொடியை பறக்க விட்டுக்கொண்டார்.

ஆனால் சாரு ஏன் எஸ்.ரா வின் மீது பாய்கிறார்  எனத்தெரியவில்லை. வேண்டுமானால் அவரும் லோகநாயகனையோ இல்லை பொழுது போகாமல் சும்மா குந்தி இருக்கும் ஒரு நடிகரை/நடிகையை இழுத்து வந்து விழா நடத்திக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். பல்லு இருக்கவன் பட்டாணி  தின்றான் இவருக்கு ஏன் வலிக்குது :-))

காவல்கோட்டம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று அப்போதெல்லாம் இல்லாத சர்ச்சைகள் விருதுக்கு பின்னர் வருகிறது என்றால் என்னக்காரணம் , ஒவ்வொருவரும் நம்ம பேர் லிஸ்ட்ல இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்து இலவு காத்து ஏமாந்து போயிருப்பார்கள் போல .அதான் இப்போது பூதக்கண்ணாடி வைத்து குற்றவியல் ஆய்வு செய்கிறார்கள்.

சாகித்ய அகதமி ஆங்கிலம் உட்பட 24 மொழிகளுக்கு ,மொழி வாரியாக நூல்களை தேர்வு செய்தே விருதளிக்கிறது.தேசிய அமைப்பால் கொடுக்கப்படும் ஒரு பிராந்திய விருதே அது,அகில இந்திய அளவில் சிறந்த நூலுக்கானதும் அல்ல.ஏன் எனில் போட்டியே ஒவ்வொரு மொழிக்குள் மட்டுமே. அப்படி இருக்கும் போது  ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ஞானபீட விருதே உச்சமான அகில இந்திய இலக்கிய விருதாகும்.

சிறந்த தேசிய படமென விருதுப்பெருவதற்கும், சிறந்த மாநில மொழிப்பட விருதிற்கும் வித்தியாசம் இருப்பது போலவே அகதமி விருதுகளும்.

---------

பின்குறிப்பு-1:

காவல் கோட்டம் சு.வெங்கடேசன் மட்டுமில்லாமல் தமிழகத்தை  சேர்ந்த மேலும் இரண்டுப்பேர் சாகித்ய அகதமி விருதினை மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு பெற்றுள்ளார்கள்.

#
இந்திரன் - எழுத்தாளர்.

சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்த இந்திரன் என்கிற பி.ஜி.இராஜேந்திரன் , பறவைகள் ஒரு வேளை தூங்கிப்போயிருக்கும் என்ற பெயரில் ஒடிய மொழி நூலை மொழிப்பெயர்த்தமைக்கு பெற்றுள்ளார்.

#முனைவர்.தமிழ்செல்வி(சென்னைப்பல்கலை) அவர்கள் லிவிங்க் ஸ்மைல் வித்யா (வலைப்பதிவரும் கூட) எழுதிய நான் சரவணன் இல்லை வித்யா என்ற தமிழ் நூலை  கனடத்தில் மொழிப்பெயர்த்தமைக்கு சாகித்ய அகதமி விருதினைப்பெற்றுள்ளார்.

பின்குறிப்பு-2:

இந்த எலக்கிய சண்டை , விருது வாங்கிற அக்கப்போரை எல்லாம் பார்த்த பிறகு நாமும் கொஞ்சம் தம் கட்டி ஒரு ஆயிரம் பக்கத்துக்கு எழுதிட்டு  மானே, தேனே ,பொன்மானே போல அதுக்கூட கொஞ்சம் மக்கள் தொகை புள்ளிவிவரம், டெலிபோன் டைரக்டரி, இராபர்ட் கிளைவ்னு வரலாறு ,கொல்லிமலைப்பாவை னு எல்லாம் தூவிட்டா மாபெரும் வரலாற்று இலக்கிய காவியம் உருவாகிடும்னு தோன்றுகிறது. எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா :-))

இந்த லட்சணத்துல இலவசமாக இணையம் இருக்குனு எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை மாட்டு மூத்திரத்தை காய்ச்சி குடிச்சுட்டு 35 வருஷமா எழுதறவங்க எழுதுவது தான் எலக்கியம்னு சொல்லிக்கிறார் ஒரு எலக்கியவாதி.
தூங்கிட்டு இருந்த ஒரு வவ்வாலை தட்டி எழுப்பிட்டாங்க எனவே இனிமே நானும் எழுதி விருது வாங்கிக்காட்டுறேன்டா !...டா..டா! எனவே மக்களே யாருக்குலாம் விருது  வாங்க ஆசை இருக்கோ எல்லாம்  வாங்க ஒரு எலக்கிய  புரட்சிய ஒன்று கூடி உருவாக்கலாம், இந்த எலக்கிய டம்மி பீசுகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.

பின்குறிப்பு-3:

இந்தப்பதிவில் இருப்பவை பத்திரிக்கை செய்திகள் மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல்களின்  அடிப்படையிலே எழுதப்பட்டுள்ளது, எந்த தனிநபரையோ , அமைப்பையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில்  உள்நோக்கத்துடனோ எழுதப்படவில்லை.அப்படி யாரேனும் தாங்களாகவே நினைத்துக்கொண்டால் அடியேன் பொறுப்பல்ல :-))