Sunday, April 06, 2014

MH-370:THE MYSTERY.

(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா? ஹி..ஹி!)


கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 , திடீர் என நடுவானில் அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்து விட்டு மாயமானது குறித்து ஒரு பதிவு எழுதிட 'பதிவர் குறும்பன்" அவர்கள் நேயர் விருப்பம் தெரிவித்திருந்தார் , இதுகுறித்து ஒரு வார காலமாக அலசிக்கொண்டிருந்த வேளையில், அவ்விமானம் ஆஸ்திரேலியா அருகே விபத்துக்குள்ளாகி இந்தியக்கடலில் மூழ்கிவிட்டதை கண்டறிந்தும் விட்டார்கள்(இதுவும் கூட சந்தேகமே).

 ஹி...ஹி நம்ம சுறு சுறுப்பு அவ்ளோ வேகம் ,ஆனாலும் இந்நவீனக்காலத்தில் எப்படி  ஒரு முழு போயிங்க் 777-ER-200 (wide body long range jet aircraft)வகை விமானம் மர்மமாக எவ்வித தடயமும் இன்றி மறைய முடியும் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாகவே இன்னமும் உள்ளதால் , திரட்டிய தகவல்களை வைத்து பதிவிட்டு விடுவோம்,  என இப்பதிவு.

 குறும்பன் அவர்கள் தளத்தில் இட்டப்பின்னூட்டம்,

http://kurumban.blogspot.in/2014/03/mh370_16.html

"குறும்பன்,






நானும் இந்த விமான மர்மத்தினை கவனிச்சுட்டு தான் வரேன், இதில மலேஷிய அரசின் " வெளிப்படைத்தன்மை இன்மை" தான் சந்தேகத்துக்குள்ளாக்குது.

ஏன் எனில் விமானம் கடத்தப்பட்டிருந்தால் " டிமாண்ட்" ஏதேனும் கடத்தப்பட்டவர்களால் கேட்கப்பட்டிருக்கும். அதனை சொல்லாமல் மழுப்புறாங்களோனு டவுட்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு தான் அவ்விடங்களில் கூட சேட்டிலைட் கண்கானிப்பு இருக்கும் ,மற்ற யாருக்கும் இருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்கா உலகம் முழுக்க கண்காணிக்குது,சீனா அதன்ன் எல்லைப்பகுதி அருகாமைனு கண்காணிக்கும்.

மற்ற எல்லா நாடுகளும் அவற்றின் எல்லைக்குள் தான் கண்காணிப்பு வசதி வச்சிருக்கும்.

ரேடார் ரேஞ்ச் என்பது பெரும்பாலும் , நில எல்லையில் இருந்து 30 கி.மி தான் தெளிவா இருக்கும், அப்புறம் குத்து மதிப்புக்கு ஒரு லாங் ரேஞ்ச் ரேடார் தனியா வச்சு கவனிப்பாங்க.இதனால் தான் விமானங்களை தெளிவாக அடையாளம் காட்ட அவற்றில் இருந்து ரேடியோ சிக்னல் அனுப்பிட்டு இருப்பாங்க. விமானத்தில் இருந்து சிக்னல் வரலைனா தெரியாது,மலேஷிய விமானத்தில் அதான் நடந்திருக்கு.

ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கியாக , விமானத்தின் குறியீட்டு எண்ணை பிராட்காஸ்ட் செய்யனும். அதை வச்சு தான் ரேடாரில் இது இந்த நாட்டு விமானம் என அடையாளப்படுத்துவாங்க, அந்த எண் டிஸ்பிளே ஆகும்.அப்படி குறியீட்டு ரேடியோ சிக்னல் வராத பறக்கும் பொருளை "Un identified Flying Object-UFO" என சொல்லுவார்கள்.

ஒரு நாட்டு வானெல்லையில் அப்படி அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ரேடாரில் சிக்கினாலே "விமான படை மூலம்" செக் செய்வது வழக்கம்.

எனவே ஒரு விமானம் அடையாளம் இல்லாமல் ஒரு நாட்டையும் கடந்து பறக்கவே முடியாது.

இரு முறை அத்துமீறி "அடையாளமே" இல்லாமல் இந்திய வானெல்லையில் பறந்த அமெரிக்க போர் விமானங்களை இந்தியாவே மடக்கிப்பிடிச்சு தறையிறக்கி இருக்கு.

ரஷ்ய விமானங்களை நம்ம ஊரில் விமர்சிப்பாங்க ,ஆனால் அமெரிக்க எஃப்-16 ஐ இன்டெர்செப்ட் செய்ய ,ரஷ்ய விமானங்களால் மட்டுமே முடியும்,இல்லைனா இன்னொரு எஃப்-16 இருக்கணும். ப்ரென்ச் மிராஜ் வகை கூட இன்டர் செப்ட் செய்யும். இந்தியா கிட்டே ரஷ்யா மிக்,பிரென்ச் மிராஜ்ஜ் என ரெண்டுமே வச்சிருப்பதால் தான் அமெரிக்க ஃபைட்டர் ஜெட்டை மடக்க முடிஞ்சது.

எஃப்-32,f-35 இன்டர் செப்ட் செய்ய நம்ம கிட்டே விமானமில்லை அவ்வ்!

இந்தியாவை மட்டமா எடைப்போடுவாங்க ,ஆனால் அந்தமானை மலேஷியா விமானம் "சிக்னல் இல்லாமல்"கடந்திருந்தால் , புடிச்சிருக்கும், அந்தமானில் ரேடார் உண்டு. மிராஜ், மிக் லாம் இந்திய எல்லையில் இருந்து சுமார் முக்கால்-1 மணியில் அந்தமானை அடைந்துவிடும்.

என்னோட அனுமானம் என்னனா , ஏதோ ஒரு "ராணுவ ஆட்சி" நடைபெறும் நாட்டுக்கு கடத்தி போயிருக்கணும் இல்லைனா விபத்தில் சிக்கி இருக்கணும்.

//வானூர்தியை புறப்படும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை செய்மதி துணை கொண்டு கண்காணிக்க முடியாதா? குறிப்பிட்ட இடைவெளியில் வானூர்தி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்க முடியாதா. இது நடந்தால் தான் நாம் சிறிது நிம்மதியாக பயணம் செய்யலாம்.//

எல்லா இடத்திலும் சேட்டிலைட் கண்காணிப்பு தொடர்ச்சியாக செய்ய முடியாது ,கம்யூனிகேஷன் சேட்டிலைட் மூலம் சிக்னல் பரிமாற்றம் தான் நடக்கும், சிக்னல் கட் ஆச்சுனா இப்போ போல என்னாச்சுனு தெரியாது.

மற்ற ரிமோட் சென்சிங் டைப் சேட்டிலைட் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடத்தினை ஒரு நாளுக்கு இத்தனை முறைனு கடக்கும் ,அப்போ மட்டுமே "கண்காணிப்பு" இருக்கும். அப்படி உலகம் முழுக்க கண்கானிக்க அமெரிக்காவால் மட்டுமே பொருளாதார சாத்தியம் இருக்கு.

அவங்க சேட்டிலைட் கூட அந்த பகுதியை சில மணி நேரங்கள் தான் கண்காணிச்சு இருக்க முடியும், அதை வச்சு தான் சொல்லுறாங்க. அதுக்கு அப்புறம் என்னாச்சுனு தெரியாம போச்சு.


அப்பின்னூட்டத்தில் அப்போது சொன்னது ,இது கடத்தலாக இருக்காது ,விமானம் விபத்தில் சிக்கி இருக்கும் என ,ஏன் எனில் கடத்தல்காரர்கள் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் எப்படியும் தங்கள் கோரிக்கையை வைத்து விடுவார்கள்,மேலும் நீண்ட நாட்களுக்கு பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருப்பதும் கடினமான ஒன்று ,அவர்களுக்கான உணவு தேவைகள் ,இன்னப்பிற என சமாளிப்பது கடினமாகும்.

விமானம் விபத்துக்குள்ளானது என சொல்லப்பட்டாலும் அதிலும் இன்னும் ஒரு தெளிவு உருவாகவில்லை, இந்நிலையில் கடத்தல் என ஒன்று நடந்திருப்பதாக கொண்டால், இத்தனை நாட்களுக்கு மர்மமாக வைத்திருக்க தீவிரவாதிகளால் முடியாது,எனவே ஒரு ராணுவ வல்லரசு நாட்டின் செயலாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும் மன அழுத்தத்தினால் "உளவியல் பாதிப்புக்குள்ளான" விமான ஓட்டிகள் திடீர் என விமானத்தினை கடலில் அல்லது மலையில் மோதி "தற்கொலை" முயற்சியில் இறங்குவதும் உண்டு, அப்படிப்பட்ட சாத்தியக்கூற்றினையும் மறுப்பதற்கில்லை.

அனைத்து சாத்தியங்களையும் இப்பதிவில் காண்போம்.

விமான பறத்தலியல் குறித்து எனது முந்தைய பதிவுகள்.

# http://vovalpaarvai.blogspot.in/2012/02/blog-post_23.html

# http://vovalpaarvai.blogspot.in/2007/07/blog-post_4011.html

# http://vovalpaarvai.blogspot.in/2007/07/uss-cvn-68.html

இவற்றை ஒரு முறைப்படித்தால் விமானம் எவ்வாறு பறக்கிறது, இயல்பில் விமானங்கள் விபத்தில் சிக்க உள்ள வாய்ப்புகள் குறித்து ஒரு புரிதல் ஏற்படும்.

# போயிங்க் 777-ER-200 (wide body long range jet aircraft)




போயிங்க் 777 விமான வகையில் பல வகைகள் உள்ளன, அவற்றில் போயிங்க் 777-ER-200  என்பது wide body long range jet aircraft ஆகும், பொதுவாக Dreamliner என வர்த்தக ரீதியாக சொல்வார்கள், நீண்ட தூரம் பறக்க வல்லவை, மிகவும் நம்பகமானவையும் கூட. ஒரு முறை முழுதாக எரிப்பொருள் நிரப்பிவிட்டால் 14,500 கி.மீட்டர்களுக்கு நிற்காமல் பறக்க வல்லவை ,எனவே கண்டம் விட்டு கண்டம் பயணிக்கும் நீண்ட தூர விமான சேவைகளுக்கு அதிகம் பயன்ப்படுகின்றன.

விமானத்தின் பண்புகள்:

பயணிகள் எண்ணிக்கை -300-400

அளவு:

உடல் நீளம்-209 அடிகள்.

இறக்கை நீளம்: 199.11 அடிகள்(இறக்கையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை)

# உயரம்(tail height): 60.9

# உள்விட்டம்(கேபின்) :19.3 அடிகள்.
வெளிவிட்டம்:20.4 அடிகள்.

# மொத்த எடைத்திறன்:297.5 டன்கள்.

# எரி பொருள் கொள்ளளவு:171,170 லிட்டர்கள்.

#பறக்கும் தூரம்: 14,305 கி.மீ.
(லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரையில் நிற்காமல் பறக்கும்)

# விமான தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு:

விமானம் என்பது வெறும் பறக்கும் எந்திரமாக ஆதியில் இருந்தது , ஒரு காரை கிளப்புவது போல கிளப்பிக்கொண்டு போகலாம், மற்ற அனைத்தும் ஓட்டுனரே கவனித்து செய்துக்கொள்வார்.

ஆனால் அறிவியல் வளர வளர , பறத்தலை எளிதாக்க என பல மின்னணு கருவிகள், மீட்டர்கள் என இணைக்கப்பட்டன. அவை உண்மையில் எளிதாக்கியதா என்றால் சிக்கலாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் அவ்வ்!

ஆனால் பலவகையிலும் பாதுகாப்பான பறத்தலை உறுதி செய்தன என்றால் மிகை இல்லை ,அதே சமயம் அளவுக்கதிகமான மின்னணு சார்பு நிலை , வழமையான "மனித விழிப்புணர்வை" மழுங்கடித்தது என்றும் சொல்லலாம்,அத்தகைய ஒரு நிகழ்வினால் தான் மலேசிய விமானம் "காணாமல்" போனது!

விமானத்திற்கும் தரைக்கட்டுப்பாடு நிலையத்திற்கும் இடையே எப்பொழுதும் தகவல் பரிமாற்றம் மற்றும் "ஒலித் தொடர்பு" இருக்கும். உரையாட என மூன்று வகை நுட்பங்களை பயன்ப்படுத்துகிறார்கள். மேலும் சில இருக்கலாம், ஆனால் பொதுவாக பரவலாக பயன்ப்படுத்தப்படுவது 3 சேனல்கள்.

# உயர் அதிர்வெண் மைக்ரோ வேவ் தொலைத்தொடர்பு.

இம்முறையில் காக்பிட்டில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினை தொடர்பு கொள்ள செயற்கைக்கோள் பயன்ப்படுகிறது.

இதுவே முதன்மை தகவல் தொடர்பு அலைவரிசையாகும், பரந்த கடற்பறப்பு ,வனங்கள்,பாலை என தகவல் தொடர்பு கோபுரங்கள் இல்லாத இடங்களில், செயற்கை கோளின் வீச்சில் இருக்குமானால் இவ்வலைவரிசையில் தான் உரையாடுவார்கள்.

# நீண்ட அலைவரிசை வானொலி.

செயற்கைக்கோள் செயல்ப்பாடு இல்லாத இடத்திலும் , ரீ டிரான்ஸ்மிஷன் செய்ய இயலாத இடத்திலும் இம்முறை அதிகம் பயன்ப்படுகிறது. நீண்ட தொலைவினை இவ்வலைவரிசை கையாளக்கூடியது.

# மோர்ஸ் கோட்.

மேற்கண்ட இரு அலைவரிசையிலும் தகவல் தொடர்பை நிறுவ முடியாத சூழலில் மோர்ஸ் கோடைப்பயன்ப்படுத்தி தகவல் அனுப்புவார்கள். மோர்ஸ் கோட் மூலம் தகவல் அனுப்பும் போது நீண்ட தூர கவரேஜ் ,குறைவான ஆற்றலில் "ரீ டிரான்ஸ்மிஷன்" வசதி இல்லாமலே செய்ய முடியும்.

பெரும்பாலும் அவசரக்கால தகவல் தொடர்பாக இதனை வைத்திருக்கிறார்கள்.

மோர்ஸ் கோட் பற்றிய எனது முந்தையப்பதிவு.

http://vovalpaarvai.blogspot.in/2007/09/blog-post_423.html


விமானத்தின் இரு முதன்மையான தகவல் தொடர்பும் செயலிழக்காது அப்படியான நிலை வருமெனில் 'ஏதோ  பெரிய பிரச்சினை" என பொருள், எனவே மோர்ஸ் கோடில் "SOS"  (Save Our Soul)என அவசரகால  தகவல் கொடுப்பார்கள்.

விமானிகளுக்கு மோர்ஸ் கோட் எல்லாம் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை நேரடியாக  பயன்ப்படுத்தும் தேவை கூட இல்லை, மோர்ஸ் கோட் ஜெனரேட்டர் என ,மென்போருள் உடன் இணைந்த விசைப்பலகை தான் பயன்ப்படுத்துவார்கள். வழக்கம் போல ஆல்பா நியுமெரிக் கீ பேட்டில் தட்டச்சினால் "மோர்ஸ்கோடாக" அனுப்பிவிடும்.

விமானங்களில் "SOS"  (Save Our Soul)  செய்தி அனுப்ப ஒரு குறிப்பிட்ட பித்தானை அழுத்தினாலே போதும். ஏன் எனில் அவசரக்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் விபத்தாகலாம் எனவே ,மிகவேகமாக தகவல் அனுப்ப என அனைத்தும் முன்னேற்பாடக செய்திருப்பார்கள்.

தகவல் தொடர்பில் பிரச்சினை இல்லாத நிலையில் விமானத்தில் ஏதேனும் பழுது என்றால் "வாய்சில்" "மே டே" மே டே " ஃப்ளைட் எம்.எச்.370 என சொன்னாலே போதும். தரைக்கட்டுப்பாட்டு அமைப்பு விழிப்படைந்து , அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி உதவ சொல்வதோடு ,கடைசியாக தகவல் அனுப்பட்ட கோ ஆர்டினேட்டை நோக்கி மீட்புப்படையை அனுப்பிவிடுவார்கள்.

விமானத்தில் மின்னணு பழுது உருவாகிவிட்டது என்றால் விரைவில் தகவல் தொடர்பு இழப்பு உருவாகும் என கணித்து "தொடர்பில்" இருக்கும் போதே பிரச்சினையை தரைக்கட்டுப்பாட்டிற்கு சொல்லி விட வேண்டும் அல்லது ,  சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்த உடனே , லாங் வேவ் ரேடியோ தொடர்பில் "மே டே" என அறிவித்து விட வேண்டும்.

ANC - Aviate ,Navigate,Communicate என பொதுவாக பிரச்சினையைக்கையாள வழி சொல்வார்கள், பிரச்சினை உருவானதும் விமானத்தினை , தொடர்ந்து பறக்க வைக்க முயல வேண்டும், அடுத்து அருகாமையில் உள்ள விமான நிலையத்தினை நோக்கி செல்ல வேண்டும், பின்னர் பிரச்சினையை கட்டுப்பாட்டு அறைக்கு சொல்லிவிட வேண்டும்.

அதே சமயம் தகவல் தொடர்பு துண்டிக்கப்படும் முன்னரே , பிரச்சினையை சொல்லிவிட வேண்டும், டிரான்ஸ்பாண்டர்கள் செயலிழந்தன அல்லது யாரோ வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்கள் என்கிறார்கள், ஆனால் பிரச்சினை குறித்து விமான ஓட்டிகளிடம் இருந்து எந்த தகவல் தொடர்புமே வரவில்லை, ஒரே அடியாக "அமைதியாகிவிட்டார்கள்".

மின்னணு பழுதினை குறித்து தகவல் அளிக்க மலேசிய விமானிகள் முயற்சி செய்யவே இல்லை  என்பது கவனிக்க தக்கது.

முதலில் சேட்டலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்தது என்கிறார்கள்,ஆனால் அதன் பின்னர் பேசி இருக்கிறார்கள் பிரச்சினையை சொல்லாமல் "ஆல் ரைட் ,குட்நைட்" என்று சொன்னதாக மலேசிய அரசு சொல்கிறது.

விமானக்கண்காணிப்பு:

வானில் பறக்கும் விமானத்தினை தரையில் இருந்து இரு வழிகளில் கண்காணிக்கலாம். இதற்கு இருவகையான ரேடார்கள் பயன்ப்படுகின்றன.

செகண்டரி ரேடார்:




விமானம் பறக்கும் இடம், பாதை, உயரம் என அனைத்து தகவல்களையும் , விமானத்தின் குறியீட்டு எண்ணுடன் , செயற்கை கோள்  டிரான்ஸ்பான்டர்கள் மூலம்  முதலில் செயற்கைக்கோளுக்கு அனுப்பி பின்னர் தரைக்கு  தன்னிச்சையாக அனுப்பும்.

விமானம் அனுப்பிய தகவல்களை வைத்து ,ரேடார் மூலம் விமானப்பாதையை கண்காணிப்பார்கள்.

விமானக்குறியீட்டு எண்:

விமானத்தின் குறியீட்டு எண்  எனப்படுவது , இணையத்தளங்களின் டொமைனுக்கு வழங்கப்படும் ஐ.பி எண் போல தான். நான்கு இலக்கம் கொண்டது இக்குறியீட்டு எண்ணை IATA எனப்படும்  சர்வதேச பயணிகள் விமான கட்டுப்பாட்டு அமைப்பு , ஒவ்வொரு நாட்டு பயணிகள் விமானத்திற்கும் என ஒதுக்குகிறது,

இவ்வெண் சம்பந்தப்பட்ட நாட்டின் விமானக்கட்டுப்பாட்டு அறைக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு விமானத்தின் டிரான்ஸ்பான்டரிலும் அதற்கான குறியிட்டு எண் உள்ளீடு செய்யப்பட்டு விடும், அவை அனுப்பும் எல்லா சிக்னலிலும் அவ்வெண் இருக்கும்,அதை வைத்து , செகண்டரி ரேடாரில் இனங்கண்டுக்கொள்ள தக்க வகையில் "ரேடார் மென்ப்பொருட்கள்" வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதே போல மற்ற எல்லா நாட்டின் தரைக்கட்டுப்பாட்டு கணினி டேட்டாப்பேசிலும் குறியீட்டு எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனை செகண்டரி ரேடார்கள் படித்து ஒப்பீடு செய்து , மற்ற நாட்டின் அங்கீகாரப்பூர்வமான விமானம் தான் என அடையாளங்காட்டும்.

ஒரு நாட்டிற்குள் வந்து செல்லும் சர்வதேச விமானங்கள் எவை,உள்நாட்டு விமானங்கள் எவைனு பட்டியலிட்டு குறியீட்டு எண்ணை ரேடாருக்கான டேட்டாப்பேசில் முன்னரே வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்குமிடையே இத்தனை விமானங்கள் இயக்கலாம் என்பதற்கு என சில நடைமுறைகள் இருக்கு, உதாரணமாக ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு நான்கு விமானம் பறக்க விட்டது எனில் ,அதே போல அந்நாடும் நான்கு விமானத்தினை இயக்கலாம். ஏதேனும் ஒரு நாடு கூடுதலாக விமானத்தினை இயக்கனும் என்றால் அதற்கு பணம் கட்டணும் அல்லது அவர்களை இன்னொரு விமானம் இயக்க சொல்லிவிட்டு தான் இயக்க முடியும், இப்படித்தான் சர்வதேச பயணிகள் விமான சேவை இயங்குது. இப்படியான விதியால் தான் சில நாடுகளுக்கு மிக குறைவான எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இப்படியாக ஒரு நாட்டில் வானெல்லையில் எந்த நாடுகளின் ,எவ்வகையான விமானங்கள்,எத்தனை பறக்கலாம் என்பதெல்லாம் முன்னரே முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும்.ஒரு நாட்டின் ஏர் டிராபிக் பட்டியலில் இல்லாத ஒரு விமானம் அந்நாட்டின் வானெல்லையில்  முன் அனுமதியின்றி பறக்கக்கூடாது ,பறந்தால் சுட்டு வீழ்த்த அந்நாட்டுக்கு உரிமை உண்டு!

சுடுவதற்கு முன்னர் சில எச்சரிக்கைகள் விடுவார்கள், அப்படியும் கேட்கலைனா பைட்டர் ஜெட்களை அனுப்பி சுட்டு பொசுக்கிடுவார்கள்.


செகண்டரி ரேடார் முறையில் விமானம் சிக்னல்கள் அனுப்பினால் தான் ரேடாரில் காட்டும், டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்து விட்டால் ,விமானமே ரேடார் திரையில் இருந்து காணாமல் போய்விடும் அவ்வ்!

இவ்வகை விமானக்கண்காணிப்பு சிவில் ஏவியேஷன் எனப்படும் பயணிகள் விமானப்போக்குவரத்தில் பயன்ப்படுகிறது.

இந்த ஒரே முறை மட்டுமே பயணிகள் விமான போக்குவரத்தில் உள்ளதால் தான் மலேசிய விமானம் "காணாமல்" போனது.

பிரைமரி ரேடார்:




இந்த ரேடார் "எதிரொலிப்பு" முறையில் செயல்ப்படுகிறது.

அதாவது ஒரு உயர் அதிர்வெண் ரேடியோ சிக்னலை காற்றில் அனுப்புவார்கள், ஏதேனும் கடினமான ,எதிரொலிக்கும் பொருளின் மீது பட்டு மீண்டும் தரைக்கு வருவதை "ரேடர் ஸ்கிரீனில்" ஒரு ஒளிப்புள்ளியாக காட்டும்.

டாப்ளர் என்பவர் கண்டுப்பிடித்த எதிரொலி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் இவ்வகை ரேடார்களை "டாப்ளர் ரேடார் அல்லது டாப்ளர் பல்ஸ் ரேட் ரேடார்" என்பார்கள்.

பறக்கும் பொருள் உற்பத்தி செய்து சிக்னல் அனுப்பாத நிலையில், எதிரொலி சிக்னல் மூலம் அடையாளங்காணப்படுவதால்  என்ன வகையான பொருள் என அறிந்துக்கொள்ள முடியாது.

வெறுமனே ஏதோ ஒரு ஒன்று வானில் இத்தனை மீட்டர் உயரத்தில் , இவ்வளவு தூரத்தில் பறக்குது அல்லது இருக்கு என மட்டுமே அறியமுடியும்.

இவ்வகை பிரைமரி ரேடார்கள் "ராணுவப்பயன்ப்பாட்டிற்கு" என உள்ளவை, சிவில் ஏவியேஷனுக்கு "சேட்டிலைட் டிரான்ஸ்பாண்டர்" வகை ரேடார்களே.

ரேடியோ சிக்னலை அனுப்பும் போது அதிக சக்தியுடன் செல்லும்,ஆனால் எதிரொலித்து வரும் சிக்னல் அதே ஆற்றலுடன் இருக்காது எனவே மீண்டும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு  ரேடாரை வந்தடையும் என நிச்சயமே இல்லை அவ்வ்!

மேலும் சிக்னல் அனுப்பிய டிராஜெக்டரி வேறு, எதிரொலித்த டிராஜெக்டரி வேறாக இருக்கும் வாய்ப்பு அதிகம் எனவே ஒரு விமானத்தின் மீது பட்டு எதிரொலித்தாலும் சரியாக திரும்ப கிடைக்கும் என சொல்லவே முடியாது. மேலும் இடையில் மலைகள்,கட்டிடங்கள் என இருந்தால் ,ரேடாருக்கு சிக்னல் போய் சேராது.

இதனாலேயே ரேடாரில் சிக்காமல் பறக்க ,தாழ்வாக பறப்பார்கள், அப்படி செய்தால் ரேடார் அனுப்பும் அலை  பெரும்பாலும் படாது, அப்படியே பட்டாலும், எதிரொலி தாழ்வான டிராஜெக்டரியில் செல்லும் போது மலை ,கட்டிடம் என மோதி செயலிழந்து விடும்.

பெரும்பாலான ராணுவ ஃபைட்டர் ஜெட்கள் ரேடார் சிக்னலை எதிரொலிக்காத பூச்சு கொண்டவை, எனவே லாங் ரேஞ்சில் ரேடாரில் சிக்கவே சிக்காது ரொம்ப நெருக்கமாக வரும் போது எஞ்சின் போன்ற சில ரேடார் சிக்னலை எதிரொலித்து காட்டிக்கொடுத்தால் தான் உண்டு.

மேலும் விமானங்கள் வெளியிடும் மின்காந்த அலைகளை கொண்டும் கண்டுப்பிடிப்பார்கள்,இதெல்லாம் குறுகிய தொலைவில் தான் சாத்தியம்.


இதனாலேயே பிரைமரி ரேடாரில் ஒரு விமானம் சிக்க கொஞ்சம் நேரம் ஆகும், மேலும் ரேடாரின் ஆற்றலை விட திரும்ப வரும் எதிரொலியின் ஆற்றல் தான் முக்கியம் என்பதால் , பிரைமரி ரேடார்கள் அமைவிடத்திலிருந்து 240 கி.மீ வரையில் தான் சரியாக செயல்ப்படும் என வரையறுத்துள்ளார்கள்.



உயரம் அதிகமான இடத்தில் ரேடார்கள் வைத்தால் அதிக தொலைவிற்கு கண்காணீக்கும், கிடைமட்டத்தில் பார்த்தால் ஒரு "V" வடிவில் ரேடார் அலைகள் பரவும், அதாவது அதிக தொலைவில் அதிக பரப்பினை கவர் செய்யும்,ஆனால் அருகாமையில்,ரேடாரை விட உயரம் குறைவான இடத்தில்  ஒரு "ப்ளைண்ட் ஸ்பாட்" உருவாக்கும்.

எனவே அருகாமையில் பறப்பதை கண்காணிக்க குறைவான உயரத்தில் இன்னொரு ரேடாரை வைப்பார்கள் இதனை சர்பேஸ் ரேடார் அல்லது ஷார்ட் ரேஞ்ச் ரேடார் என்பார்கள்.

பயணீகள் விமான போக்குவரத்தில் "அப்ரோச்" ரேடார் /லேண்டிங் ரேடார் என சொல்வார்கள். சுமார் 30 கி.மீ பரப்பில் செயல்படும்,ஏன் எனில் தரை மட்டத்தோடு சிக்னலை அனுப்புவதால் பாதி கட்டிடங்கள் ,மலைகள் என மோதி வீணாகிவிடும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடாரே வேலை செய்யாதாம், அப்படியே வேலை செஞ்சாலும் 1 கி.மீ தான்  கிழக்கு திசையில் வேலை செய்யும், ஏன் எனில் விமான நிலைய ரேடார் டவரை விட உயரமா முன்னாடி திரிசூலம் மலை இருக்கு :-))

மீனம்பாக்க கதையை இங்கே மீண்டும் சொல்லி விடுகிறேன்,

மீனம்பாக்கம் விமான நிலையம் ,ஒரு தவறான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்றாகும், முன்னாடி மலைய வச்சிருக்கு அவ்வ்!

 "take off and landing against a hill is very difficult"  என்பது ஒரு பொதுவான காரணமாம். மேலும் அவசரக்காலத்தில் விமானம் வெகுவேகமாக உயரம் குறைந்து கொண்டே வரும், அப்பொழுது மலைக்கு மேலாக வந்து தரையிறக்குவது ஆபத்தானது.

மலை முன்னால் இருப்பதால் தரையிறங்கும் போது சேட்டிலைட் டிரான்ஸ் பாண்டர் வேலை செய்தால் மட்டுமே  அப்ரோச் ரேடார் வேலை செய்யும். கிழக்கு பக்கம் இருந்து விமானம் தாழ்வாக வரும் போது , பிரைமரி ரேடாரில் தெரியாது.

இம்மலை உள்ளதால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அல்லது டேக் ஆப் ஆகும் விமானங்கள் மேற்கே பம்மல் -திருநீர்மலை பக்கம் இருந்தே ரன் வேயை பயன்ப்படுத்துகின்றன.

கிழக்கில் இருந்து வரும் விமானங்கள் ஒரு அரைவட்டம் அடிச்சு பம்மல் பக்கமாக வந்து இறங்குகின்றன. கிழக்கு நோக்கி/இருந்து  டேக் ஆப்  ஆவது ,லேண்ட் ஆவது வெகு அரிதாக செய்வது. சிறிய ரக விமானங்கள்( ATR or smaller than ATR) வகைக்கு தான் அவை சாத்தியமாம்.

பிரைமரி ரேடார் தான் பயணிகள் விமான போக்குவரத்துல பயன்பாட்டில இல்லையேனு நினைக்கலாம், ஆனால் சென்னை ராணுவ பயன்ப்பாட்டிலும் குறிப்பிட தக்க ஒரு இடம், ராணுவ மையம் உள்ள இடம்.

சென்னை விமான நிலையத்தினை நோக்கி ஒரு "அடையாளம் தெரியாத" விமானம்  கிழக்கில் low altitude இல்  வந்தால் மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட் ரேடாரில் தெரியாது, அருகே உள்ள ராணுவ பிரைமரி ரேடாரிலும் காட்டாது அவ்வ்.

ஆனால் இதற்காக திரிசூலம் மலை மேல ஒரு ரேடார் வச்சிருக்காங்க என சிலர் சொன்னார்கள் அது உண்மையாக இருந்தால் மட்டுமே ,சென்னைக்கு அனானிமசாக வரும் விமானத்தினை அறியலாம்.
*****
,

விமானக்கண்காணிப்பின் தொழில்நுட்பங்களை பார்த்தோம், இந்நவீன உலகிலும் , விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் செயலிழந்து விட்டால் ,திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாகிவிடும் விமானம் அவ்வ்.

பிரைமரி ரேடாரில் சுமார் 240 கி.மீ வட்டத்தில் சிக்கினால் தான் உண்டு , பறந்த கடற்பறப்பில் பறக்கும் போது டிரான்ஸ்பாண்டர் அவுட் ஆனால் , அவ்ளோ தான் , எல்லாம் சிண்டை பிச்சுக்கணும் :-))

பயணிகள் விமானப்போக்குவரத்தினை "டிரான்ஸ்பாண்டர்" உதவியோடு கண்காணித்து வருவது போல , பொதுவாக வானெல்லையில் பறக்கும் அனைத்து விமானங்களை பிரைமரி ரேடார் மூலம் ராணூவம் கண்காணித்து வரும்.

உலகில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும் சக்தி வாய்ந்த மின்காந்த புல ரேடார்களை நிறுவியுள்ளன,அவற்றின் வீச்சு சுமார் 3000 கி.மீ,அதனைப்பற்றி பின்னர் காணலாம்.

பிரைமரி ரேடாரில் விமானத்தின் குறியீட்டு எண் தெரியாவிட்டாலும், அந்நேரத்தில் என்ன பயணிகள் விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது,அதன் பாதை என்ன என்ற விவரங்கள் உடனுக்குடன் , சிவில் விமான போக்குவரத்து தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து ராணுவ ரேடார் மையத்துக்கு அனுப்பப்பட்டு விடும், எனவே அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை கண்டால் ராணுவம் விழிப்படைந்து விடும்.

முதல் கட்டமாக " ஒரு எச்சரிக்கை செய்தியை" பிராட்காஸ்ட் செய்வார்கள், அதனை விமான ஓட்டிக்கேட்டு பதில் சொல்ல வேண்டும், தற்செயலாக தடம் மாறி வந்தால் ,காரணத்தினை சொல்லி உதவியும் கேட்கலாம், பதிலே சொல்லாமல் ஊமைக்கோட்டானாக "பறக்கும் பொருள்" தொடர்ந்து பறக்குமானால், அதனை நோக்கி மின்னலாய் "ஃபைட்டர் ஜெட் இண்டெர்செப்டர்கள்" அனுப்பப்படும்.

பயணிகள் விமானத்தின் அதிகப்பட்ச வேகம் 980 கி.மீ /மணி மட்டுமே, ஃபைட்டர் ஜெட்டுகளில் பல வகை இருக்கு ,ஆனால் அவை எல்லாமே பயணிகள் விமானத்தினை விட வேகமானவை  வழக்கமான சூப்பர் சானிக் ஃபைட்டர் ஜெட்கள் சராசரியாக 2000 கி.மி/மணி வேகத்தில் பறக்கவல்லவை.

(IAF மிராஜ்-2000)

இந்தியாவிடம் உள்ள மிக் 21,,29,சுகோய்-30mki(157 flights), மிராஜ்(Dassault Mirage 2000,42+7=49 flights) போன்றவை எல்லாம் சராசரியாக 2500 கி.மி/மணி உட்சபட்ச வேகத்தினை எட்டக்கூடியவை, எனவே அந்தமானில் ஒரு விமானம் ஊடுருவியதாக தெரிஞ்சால் , சுமார் 45 நிமிடத்தில் அதன் வாலை நுகர்ந்து நிற்கும் நம்மிடம் உள்ள சூப்பர் சோனிக் இன்டர்செப்டர்கள்.

(IAF-SUKOI.MKI30)

ஒரு சுதேச பீத்தல் என எடுத்துக்கொண்டாலும் , பெருமை பட்டுக்கொள்ள நம்மக்கிட்டேவும் சரக்கு இருக்கு, ஆசியப்பிராந்தியத்தில் சீனாவை தவிர வேற நாடு நம்மிடம் வாலாட்ட முடியாது.

நம்மிடம் உள்ள ஒரே பிரச்சினை போதுமான எண்ணிக்கையில் விமானங்கள் இல்லை ,மற்றப்படி பைலட்டுகளின் தரம் ,தொழில்நுட்பம் எல்லாம் உலகத்தரமே , சுகோய் விமானத்தின் ஏவியானிக்ஸ் எனப்படும் மின்னணு கருவிகள் எல்லாம் இந்திய வடிவமைப்பு, விமான உடல் மற்றும் எஞ்சின் ரஷ்யாவுடைது.

மிகக்குறைவான தூர ஓடுப்பாதையில் , மிக அதிக உயரத்தில் உள்ள இடத்தில் இருந்து டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் செய்யும் வித்தையில் இந்திய விமானிகள் கெட்டிக்காரர்கள், சியாச்சினில் உள்ள ஓடுப்பாதையில் இதனை செய்துள்ளார்கள் ,இன்றளவும் உலக ராணுவ விமானிகள் இடையே இது ஒரு சாதனையாகும்.

* உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ராணுவ விமான ஓடுப்பாதை சியாச்சின்.

* மிக உயரமான இடத்தில் உள்ள சிவில் விமான தளம் ,லடாக்.

ரஷ்ய தயாரிப்புகளை பற்றி பல விமர்சனங்கள் உண்டு ,ஆனால் அவர்களின் ஃபைட்டர் ஜெட்கள் தான் மிக அதிக உயரத்தில் ,குறைவான ஆக்சிஜன் உள்ள இடத்திலும் "எஞ்சின் முடங்காமல்" பறக்கும், இந்த விடயத்தில் அமெரிக்க வகைகள் கூட பின் தங்கியவை,ஆனால் அவற்றை மித உயரத்தில் அடிச்சுக்க ஆளேயில்லாதவை. மேலும் சிறப்பான ஆயுதங்கள், மின்னணு ஏவியானிக்ஸ் எனக்கொண்டவை.

மிக் வகைப்பற்றி பல கம்ப்ளையிண்ட்கள் உண்டு ஆனால் கிளப்பின நான்காவது  நிமிடத்தில் , வான எல்லை எனப்படும், ஸ்கைலிமிட்டை தொடக்கூடியவை, இன்றளவும் மிக்.25 விமானத்தின் ஹை ஆல்டியூட் கிளைம்பிங்க் ரெக்கார்ட் முறியடிக்கப்படவில்லை. இவ்வாறு செங்க்குத்தாக அதிஉயரத்தினை அடைவதை "ஸூம் கிளைம்பிங்" என்பார்கள்.

இப்போதைய மிக்-21 பிரச்சினைக்கு காரணம் விமானத்தின் தொழில் நுட்பமல்ல ,வயோதிகமே எல்லா விமானங்களுமே சுமார் 40 ஆண்டுகள் பழமையானவை, ஆனாலும் அவற்றுக்கு ஓய்வு கொடுக்காமல் இன்னும் ஓட்டிக்கிட்டு இருக்கோம் அவ்வ்.

சீனாவோ,அமெரிக்காவோ  நிறைய விமானங்கள் வச்சிருந்தாலும் இந்திய எல்லைக்குள் நீண்ட நேரம் பறந்து வாலாட்ட முடியாது ,ஏன் எனில் ஃபைட்டர் ஜெட்கள் அதிபட்சம் சுமார் 2 மணி நேரம் பறப்பதற்கான எரிப்பொருள் கொள்ளளவு கொண்டவையே . எனவே ஏதேனும் வம்பு செய்ய ஆசைப்பட்டால் இந்தியாவுக்கு அருகில் ஒரு பேஸ் ஸ்டேஷன் இருந்தால் மட்டுமே சாத்தியம் , இல்லை எனில் எத்தனை அதிக விமானம் வச்சிருந்தாலும்  நாட்டின் உள்ளே ஊடுருவி பறக்க எரிப்பொருள் போதாது.இதனால் தான் இலங்கையை சீனாவும், அமெரிக்காவும் "கள்ளப்பார்வை" பார்க்கின்றன, எல்லாம் இந்தியாவுக்கு ஒரு செக் வைக்க தான்.

மலேசிய விமானம் காணாமல் போன கடற்பரப்பு,வானெல்லை பல நாடுகளுக்கு சொந்தமெனினும் , சீனாவே முதன்மையான பாதுகாப்பு விதிகளை ஏற்படுத்தி கண்காணிக்கும் நாடு ஆகும், தென் சீனக்கடலுக்கு என சீனா ஒட்டுமொத்தமாக அறிவித்துள்ள விதிகள்.

south china sea

First, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must abide by these rules.

  Second, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must provide the following means of identification:

  1. Flight plan identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone should report the flight plans to the Ministry of Foreign Affairs of the People's Republic of China or the Civil Aviation Administration of China.

  2. Radio identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must maintain the two-way radio communications, and respond in a timely and accurate manner to the identification inquiries from the administrative organ of the East China Sea Air Defense Identification Zone or the unit authorized by the organ.

  3. Transponder identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone, if equipped with the secondary radar transponder, should keep the transponder working throughout the entire course.

  4. Logo identification. Aircraft flying in the East China Sea Air Defense Identification Zone must clearly mark their nationalities and the logo of their registration identification in accordance with related international treaties.

  Third, aircraft flying in the East China Sea Air Defense Identification Zone should follow the instructions of the administrative organ of the East China Sea Air Defense Identification Zone or the unit authorized by the organ. China's armed forces will adopt defensive emergency measures to respond to aircraft that do not cooperate in the identification or refuse to follow the instructions.

  Fourth, the Ministry of National Defense of the People's Republic of China is the administrative organ of the East China Sea Air Defense Identification Zone.

  Fifth, the Ministry of National Defense of the People's Republic of China is responsible for the explanation of these rules.

  Sixth, these rules will come into force at 10 a.m. November 23, 2013.

http://eng.mod.gov.cn/Press/2013-11/23/content_4476143.htm

டிரான்ஸ்பான்டர் செயலிழந்த (கட்டாயமாக நிறுத்தம்) நிலையில் தென் சீனக்கடலில் நீண்ட தூரம் செல்லாமல் ,மேற்காக திருப்பியதில் ஒரு திட்டமிட்ட செயல் இருக்கு என சந்தேகம் கிளம்புகிறது, இன்னும் கொஞ்ச நேரம் நேராக பறந்திருந்தால் சீன விமானப்படை பறந்து வந்திருக்கும், அதை நன்கு அறீந்தே மேற்காக திருப்பியுள்ளார்கள், எனவே அதனை தற்செயலான "விபத்தாக" நிகழந்த திருப்பம் என சொல்ல முடியாது.

ராணுவ பயன்ப்பாட்டில் பொதுவாக பிரைமரி ரேடார் மட்டுமே அதிகம் பயன்ப்பாட்டில் இருந்தாலும், அமெரிக்கா ,ஆஸ்திரேலியா போன்றவை "மின்காந்த அலை எதிரொலி" ரேடார் என ஒன்றினைப்பயன்ப்படுத்துகின்றன.

ஆஸ்திரேலியா Over-The-Horizon Radar (OTHR) என்றப்பெயரில் இதனை அழைக்கிறது, இம்முறையில் ஒரு சக்திவாய்ந்த ரேடியோ அலை வானின்  அயனோஸ்பியர் நோக்கி செலுத்தப்பட்டு  ,அங்கிருந்து கீழ் நோக்கி எதிரொலித்து வரும் அலை ,பறக்கும் பொருளின் மீது மோதி சேட்டிலைட்டினை அடைந்து மீண்டும் ,கட்டுப்பாட்டு அறையை அடையும், இம்முறையில் சுமார் 3000 சதுரகிலோ மீட்டரைக்கண்காணிக்கலாமாம்  , ஆனால் இந்த ரேடார் டேட்டாவினை ஆஸ்திரேலியா வெளியிட மறுப்பதாக சொல்கிறார்கள்.

படம்:
(Over-The-Horizon Radar (OTHR))

இதே போன்ற மின்காந்த ரேடார் கண்காணிப்பு டீகோ கார்சியாவிலும் உள்ளது ,ஆனால் அமெரிக்காவும் பெரிதாக வாயை திறக்க மாட்டேன்கிறது. இது போக அமெரிக்கா பல உளவு சேட்டிலைட்கள் வைத்துள்ளது அவற்றில் என்ன விவரம் பதிவாகியது எனவும் சொல்லவில்லை. இதில் அமெரிக்காவின் டீகோ கார்சியா ராணூவத்தளத்தின் மீது கூட சந்தேகம் உள்ளது..

பொதுவாக பயணிகள் மற்றும் ராணுவ விமான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு எப்படி எனப்பார்த்தோம், இனி மலேசிய விமானத்திற்கு என்னாச்சு எனப்பார்ப்போம்.

மலேசிய விமானம் MH-370 :

விமான வகை: போயிங்-777- 200ER.

பைலட்டுகள்:



தலைமை விமானி:Capt. Zaharie Ahmad Shah

துணை விமானி: Fariq Abdul Hamid

விமான சிப்பந்திகள்: 10

பயணிகள் எண்ணிக்கை:239

புறப்பட்ட நேரம்:12.41 ,மார்ச்-8,2014.

பயண தூரம்: கோலாலம்பூர் - பீகிங்- 3680 கி.மீ.

பயண நேரம் சுமார் 6  மணி நேரம். எனவே விமானத்தில் எரிப்பொருளை பயணநேரத்திற்கு கூடுதலாக சுமார் ஒரு மணி நேரம் அளவுக்கு சேர்த்து நிரப்புவார்கள்,எனவே சுமார் 7 மணி நேரம் பறக்க தக்க எரிப்பொருளே விமானத்தில் இருந்திருக்க வேண்டும்.

விமான பயணப்பாதை படம்.



12.41 டேக் ஆஃப்.

1.07 மணிக்கு  விமான டிரான்ஸ்பான்டர்கள் செயலிழப்பு.

1.19 மணியளவில் இறுதியாக , உதவி விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரையாடியுள்ளார்.

கே.எல் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ,இனி வியட்நாம் ,ஹோசிமின் நகர விமானக்கட்டுப்பாட்டு எல்லை ஆரம்பம் ஆகிறது ,அவர்களின் வழிக்காட்டுதலை பின்ப்பற்றவும் என கூறியதற்கு "ஆல் ரைட் ,குட் நைட் என பதில் அளித்துள்ளார் துணைவிமானி ,அத்துடன் "அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு எழும் சந்தேகம் என்னவெனில் ,கடைசி உரையாடலுக்கு முன்னரே சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள் செயலிழந்துள்ளன ,அது பற்றி பின்னர் உரையாடிய போது தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியும் கேட்கவில்லை, விமானியும் ,அவ்வாறு ஆனது என தெரிவிக்கவில்லை, ஏன்?

மலேசிய அரசு வழங்கிய "விமான உரையாடல்" தகவலின் நம்பகத்தன்மை கேள்விக்குறியது ஆகும்.

# விமானம் புறப்பட்டு சுமார் அரைமணிநேரத்தில் அனைத்து வித தகவல் தொடர்புகளும் அற்ற நிலையில் என்னவாயிற்று என தெரியவில்லை, ஆனால் உடனே மலேசிய விமானக்கட்டுப்பாட்டு நிலையம் எவ்வித அலெர்ட்டும் மற்ற நாடுகளுக்கு கொடுக்கவேயில்லை, காலையில் தான் இத்தகவலை அறிவிக்கிறார்கள்!!!

ஒரு வேளை அறிவிக்க நல்ல நேரம் பார்த்தார்களோ என்னமோ?

வியட்நாம் கடல் எல்லையில் தகவல் தொடர்பினை இழந்த விமானம் ,பின்னர் தன் பயணப்பாதையில் இருந்து மேற்காக சுமார் 90 டிகிரி திரும்பி மீண்டும் மலேசியா நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது, மலேசியா வானெல்லையில் பறந்து , தாய்லாந்து வானெல்லையிலும் பறந்து பின்னர் மலேசியாவின் மறுபுற  கடற்பரப்பை அடைகிறது.

அது வரையில் டிரான்ஸ்பான்டர்கள் செயல்ப்படாத ஒரு மர்ம பறக்கும் பொருளாகவே வானில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மேலும் மலேசிய மேற்கு கடற்கரையில் ,மலாக்கா நீர்ச்சந்தியில் "Pulau perek" தீவு அருகே சுமார் 2.40 மணி அளவில் மலேசிய ராணுவ பிரைமரி ரேடாரில் "அடையாளம் தெரியாத" விமானமாக பதிவாகியுள்ளது.




சுமார் இரண்டு மணி நேரங்கள் அளவுக்கு மலேசிய ,தாய்லாந்து வானெல்லையில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக எம்.எச்.370 பறந்துள்ளது, ஆனால் இரு நாட்டு விமானப்படையும் எவ்வித நடவடிக்கையிலும் இறங்கியதாக தகவலேயில்லை அவ்வ்!

இத்தனைக்கும் காணாமல் போனது மலேசிய விமானம் , காணாமல் போய் சுமார் 2 நேரம் கழித்து ஒரு மர்ம பறக்கும் பொருள் நம்ம எல்லையில் ரேடாரில் சிக்குதே எனவே ஒரு சந்தேகத்தின் அடிப்படையில் 2.40க்கு ரேடாரில் சிக்கிய விமானத்தினை தொறத்தி சென்று சோதித்து இருக்கலாம், இத்தனைக்கும் மலேசிய விமானப்படையில் நான்கு எஃப்-16 ஃபைட்டர் ஜெட்கள் உள்ளன.அவ்விமானங்களை வைத்துக்கொண்டு வேடிக்கைப்பார்த்துள்ளது மலேசிய ராணுவம்.



சுமார் ரெண்டு நாள் மற்ற நாடுகளை வியட்நாம் அருகே தேடவிட்டுவிட்டு தான் இந்த விவரங்களையே மலேசியா அரசு தெரிவித்தது ,அது கூட அவர்களாக தெரிவிக்கவில்லை, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "Inmarsat" எனப்படும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேட்டிலைட் மூலம் , போயிங்க் விமானத்தின் எஞ்சின் செயல்ப்பாடுகள் பற்றிய டேட்டா ACARS,( Aircraft Communications Addressing and Reporting System.) என்ற முறையில் சேகரிக்கப்பட்டு , போயிங்க் விமான நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.



விமானம் பறக்கும் போது எஞ்சினின் செயல்ப்பாடுகள், எஞ்சின் வேகம், பறக்கும் உயரம், அதன் சக்தி, காற்றழுத்தம் என அனைத்தையும் எஞ்சினுடன் இணைந்த கண்காணிப்பு கருவிகள் சேகரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சேட்டிலைட் மூலம் தரைக்கு அனுப்பிவிடும்.இவ்வமைப்பு தன்னியக்கமான ஒன்று இதற்கும் விமானத்தின் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்களுக்கும் தொடர்பில்லை, இதற்கென தனியான டிரான்ஸ்பான்டர்கள் விமான இறக்கையில் எஞ்சின் அருகிலேயே இருக்கிறது, இதனை விமானத்தில் இருப்பவர்களோ அல்லது விமானியோ கட்டுப்படுத்தி செயலிழக்க செய்ய முடியாது. சில விமானங்களில் ஒரே டிரான்ஸ்பான்டரே செயல்பாட்டில் இருக்கும் ஆனால் "Inmarsat" டேட்டா கனெக்‌ஷனை மட்டும் துண்டிக்க இயலாத வகையில் செய்திருப்பார்கள்.

விமானம் காணாமல் போய்விட்டது என தகவல் அறிவித்தவுடன் ,போயிங் ,அக்குறிப்பிட்ட விமானத்தின் எஞ்சின் தகவல்களை சரிப்பார்த்த போது , காணாமல் போனதாக சொல்லப்பட்ட நேரத்தில் இருந்து சுமார் ஆறுமணி நேரம் எஞ்சின் இயங்கியுள்ளது, சீராக இயங்கியதாக அவை தெரிவிக்கின்றன, எனவே உடனே விமானம் விபத்தில் சிக்கி இருக்க வாய்ப்பில்லை என அறிவித்தது ,அதன் பின்னரே ,மலேசிய ராணூவம் நாங்க கூட ரேடாரில் ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை பார்த்தோம் ,ஒரு வேளை அது மலேசிய விமானமாக இருக்கலாம் என சொன்னது.

இது ஒரு பொறுப்பற்ற செயல் ஆகும், செப்டெம்பர்-11 தாக்குதலுக்கு பின்னர் , பயணிகள் விமானத்தினைக்கூட ஒரு அபாயகரமான ஆயுதமாக மாற்றலாம் என உணர்ந்த சர்வதேச நாடுகள் "பயணிகள் விமானம்' கடத்தப்பட்டால், அவற்றினை வழிமறித்து உடனே தரை இறக்க வேண்டும், கடத்தல்காரர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், பயணிகள் உயிரினைப்பற்றியும் கவலைப்படாமல் சுட்டு வீழ்த்தலாம் என ஒரு தீர்மானமே இயற்றியுள்ளார்கள்.

செப்டெம்பர் -11 தாக்குதலுக்கு பின்னர் உலக நாடுகள் அனைத்துமே "அடையாளம் தெரியாமல் பறக்கும்" விமானங்கள் மீது கருணைக்காட்டுவதே இல்லை, வழிமறித்து சொன்ன இடத்தில் தரையிறங்க சொல்வார்கள் கேட்கவில்லை எனில் சுட்டு விடுவது தான் ஒரே "முடிவு"!




டிரான்ஸ்பாண்டர்கள் வேலை செய்யாத நிலையில் எம்.எச்.370. ,தாய்லாந்து ,மலேசியா, இந்தோனேசிய வானெல்லையில் சுமார் இரண்டு மணிநேரம் பறந்துள்ளது ,அப்படி இருந்தும் எவரின் "பிரைமரி ரேடாரிலும்" சிக்கவேயில்லை என்பது போல சொல்கிறார்கள் .அதுவும் இந்திய பெருங்கடல் நோக்கி செல்லும் போது கோலாலம்பூருக்கு வெகு அருகில் தான் பறந்துள்ளது,ரேடாரில் சிக்கவேயில்லை ,அது ரேடாரா இல்லை ரேடியோ பெட்டியா அவ்வ்!. தற்செயலாக இருமுறை மட்டும் ரேடாரில் தெரிந்தது , ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதாக "ரொம்ப முக்கியத்துவமே" கொடுக்காமல் பட்டதும் படாததுமாய் மலேசிய அரசு பேசுகிறது.

 உலகில் உயரமான கட்டிடங்களில் ஒன்றான பெட்ரோனாஸ் டிவின் டவர் மலேசியாவில் உள்ளது, படுகொலை எண்ணம் கொண்ட தீவிரவாதிகள் கையில் விமானம் சிக்கி இருந்தால் இன்னேரம் 'பெட்ரோனாஸ் டவர்" இருந்த இடம் மண்மேடாகி இருக்கும்,சில ஆயிரம் உயிர்கள் போயிருக்கும். அந்தளவு தான் மலேசிய ராணுவத்தின் விழிப்புணர்வு இருந்துள்ளது. இனியாவது விழித்துக்கொள்வார்களா?

மலேசிய ராணுவம் வாயத்தொறந்த பின் நாம சும்மா இருக்கக்கூடாது என தாய் ராணூவம் எங்க ரேடாரிலும் தெரிஞ்சது ஆனால் கொஞ்ச நேரத்தில் சிக்னல் மறைந்துவிட்டது எனவே கண்டுக்கலைனு சொல்லியிருக்கு என்ன கொடுமை சார் இது!

இன்ம்ராசாட்  குழுவின் ஒரு சேட்டிலைட் இந்திய பெருங்கடலில் உள்ளது ,அதன் வழியே தகவல் திரட்டியுள்ளது, சேடிலைட்டுக்கும் ,விமானத்துக்கும் இடையேயான தொலைவினை  மட்டுமே கணக்கிட முடியுமாம் அதன் அடிப்படையில் வட மேற்கு, தென்கிழக்கு என ஒரு ஆர்க்கில் தான் விமானம் பறந்திருக்க வேண்டும் என கணித்துள்ளார்கள்



இம்ராசாட் தகவல்கள் வைத்து  தெரிய வருவது என்னவெனில்,மலேசியா விமானம் தொடர்ந்து 6-7மணி நேரம்,  காலை 8.11 மணி வரையில் பறந்துள்ளது ,விமானத்தில் இருந்த எரிப்பொருள் அளவை வைத்து பறந்து செல்லக்கூடிய ரேஞ்சை கணக்கிட்டு,  மேற்கில் கசகஸ்தான் நோக்கியோ அல்லது தென்கிழக்கில் இந்திய பெருங்கடல் பகுதிக்கோ பறந்திருக்கலாம் என தோராயமாக்க கண்டுப்பிடித்தார்கள்.

(MH-370 பறந்து செல்லக்கூடிய எல்லை)

ஏன் இம்ராசாட் தகவல் வைத்து சரியான இடத்தினை அறியமுடியாதா என ஒரு சந்தேகம் வரலாம்,அவர்கள் வெறும் எஞ்சின் தகவல்களை மட்டுமே திரட்டுவார்கள், பறக்கும் கோ ஆர்டினேட்களை சேகரிப்பதில்லையாம், எல்லாம் ஒரு சிக்கன நடவடிக்கை :-))

இம்ராசாட் பறக்கும் இடத்தினையும் தன்னிச்சையாக காட்ட தனியாக "ஸ்விஃப்ட்" என ஒரு அமைப்பினை வைத்துள்ளது, அதனை மலேசியா விமானப்போக்குவரத்து வாங்க மறுத்துவிட்டது என அவர்களே சொல்கிறார்கள்.

இம்முறையில் விமானத்தின் இருப்பிடத்தினை தொடர்ந்து கண்காணிக்க , ஒவ்வொரு "பயணத்துக்கும்" 10 டாலர் என இம்ராசாட்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமாம், அந்த 10 டாலரை மலேசிய அரசு மிச்சம் செய்ய நினைத்துள்ளது அவ்வ்.

இவ்வளவு வேலையும் நடக்க சுமார் 10 நாட்கள் ஆகிவிட்டது அதன் பின்னரே தென்சீனக்கடலில் இருந்து இந்தியப்பெருங்கடல் பரப்பில் தேடத்துவங்கினார்கள். மலேசிய அரசுக்கு காணாமல் போன அன்றே , விமானம் விபத்தில் அந்தப்பகுதியில் சிக்கவில்லை என தெரியும் என நினைக்கும் வகையிலேயே அவர்களின் செயல்பாடுள்ளது, ஆனால் ஏனோ வேண்டுமென்றே தவறான இடத்தில் தேடவிட்டு வேடிக்கைப்பார்த்துள்ளார்கள், அது ஏன் என தெரியவில்லை?

மலேசிய விமானம் தென்கிழக்காக இந்திய பெருங்கடல் நோக்கி பறந்திருந்தால் ,இந்தோனேசிய வானெல்லையையும் கடந்திருக்க வேண்டும், ஆனால் அவர்களும் எதுவுமே தெரியாமல் அல்லது தெரியாதது போல அமர்ந்திருக்கிறார்கள் அவ்வ்.

இதில் உட்சப்பட்ச கொடுமை என்னவெனில் விமானம் காணாமல் போனதாக அறிவித்த அன்று , இந்தியாவின் ரேடார் அந்தமானில் இருக்கு அது சரிவர இயங்குவதில்லை,இந்தியா மட்டும் விழிப்புடன் இருந்திருந்தால் ,வடமேற்காக விமானம் சென்றிருந்தால் கண்டுப்பிடிச்சிருக்கலாம்  என மலேசிய பிரதமர் அறிவிப்பில் குறிப்பிட்டது தான்!

இந்தியா போன்ற பரந்த கடற்பரப்பினை கொண்ட நாடுகள் நிலப்பரப்பில் நிறுவிய ரேடார்களை மட்டும் நம்பியிருப்பதில்லை, கடற்படைக்கப்பல்களை கடலில் ரோந்து செல்லவிட்டு அவற்றின் ரேடார்கள் மூலம் வான் மற்றும் கடலினை ஸ்கேன் செய்துக்கொண்டே இருப்பார்கள்.

மேலும் சில ஸ்ட்ராடஜிக்கான இடங்களில் எப்பொழுதும் ஒரு கடற்படை கப்பல்களை நிறுத்தியும் வைத்திருக்கும். இவ்வளவு ஏன் அமெரிக்கா போன்ற  தொலைவில் உள்ள நாடுகளின் கடற்படை கப்பல்களும் இந்திய கடற்பிராந்தியத்தில் உலாத்தி கண்காணித்துக்கொண்டு தானுள்ளன.

இவ்வளவு இருந்தும் மலேசிய விமானம் மற்ற யாருடைய ரேடாரிலும் சிக்காமல் (மலேசியா, தாய்லாந்து தூங்கியது கணக்கில் இல்லை)இந்திய கடலில் ஆஸ்திரேலியா வரை எப்படி சென்றது என்பது மிகப்பெரிய மர்மம்.

இம்மர்மத்திற்கும் சில விளக்கங்கள் கொடுக்க இயலும், ஆனால் அவற்றின் சாத்தியம் வெகு அரிது.

விமானத்தினை மிக தாழ்வாக அதாவது சுமார் 5000 அடி உயரத்திற்கும் கீழ் பறக்க வைத்தால் ரேடாரில் அதிகம் சிக்காது,ஆனால் விமானம் எவ்வளவு தாழ்வாக பறக்கிறதோ அவ்வளவு அதிக எரிப்பொருளைப்பயன்ப்படுத்தும்,மேலும் போயிங்க் -777 போன்ற பெரிய அளவிலான விமானங்களை நீண்ட தொலைவிற்கு தாழ்வாக பறக்க வைக்க இயலாது.

வானில் இரு விமானங்களுக்கிடையே சுமார் 1000 அடி இடைவெளியாவது இருந்தால் தான் ரேடாரில் ,இரண்டு விமானங்களாக காட்டும்,எனவே ஒரு அங்கீகரிக்கப்பட்ட குறியீடு உள்ள விமானத்தின் பின்னால் 1000 அடிகளுக்குள்ளாக இன்னொரு விமானத்தினை வால்ப்பிடித்தார்ப்போல ஓட்டி சென்றால் ஏமாற்ற முடியும்.

சிறிய ரக விமானங்களில் தாழ்வாகப்பறந்து ரேடாரை ஏமாற்றிவிட்டு இன்னொரு நாட்டினுள் நுழைய முடியும். மிகுந்த ராணுவக்கண்காணிப்புள்ள ரஷிய வானெல்லையில் ரேடாரை ஏமாற்றி விட்டு நுழைந்து கிரெம்லின் முன்னால் தனது செஸ்னா விமானத்தை தரையிறக்கி உலகை ஆச்சர்யப்படுத்தினார் 19 வயதே ஆன மத்தியாஸ் ரஸ்ட் என்ற ஜெர்மன் இளைஞர்.



செய்தி:

"Mathias Rust, just 19, had single-handedly flown more than 500 miles (750km) through every Soviet defensive shield in a single-engine plane to land at the gates of the Kremlin."
http://www.bbc.co.uk/news/magazine-20609795

அடுத்து , விமானக்குறியீட்டு எண்ணை ஸ்பூப் செய்வது, இதற்கு விமான தொழில்நுட்பமும், கணினி அறிவும் பெரிய அளவில் தேவை. விமானத்தின் குறியீட்டு எண்  கணினியில் சேமிக்கப்பட்டு டிரான்ஸ்பான்டர் மூலம் வெளியிடப்படும், விமானக்கட்டுப்பாட்டு கணினியை ஹேக் செய்து உள் நுழைந்து , குறியீட்டு எண்ணை மாற்றினால் இன்னொரு விமானம் போல "செகண்டரி ரேடாரில்" காட்டும். இதற்கு ஹேக்கிங் அறிவு மட்டுமில்லாமல் ,அதே நேரத்தில் அவ்வான் வழி செல்லும் இன்னொரு விமானத்தின் குறியீட்டு எண்ணும் தெரிந்திருக்க வேண்டும், அல்லது பிரைவேட் சார்ட்டட் ஜெட் ஏதேனும் ஒன்றின் குறியீட்டு எண்ணை தெரிந்துக்கொண்டு அதனை உள்ளீடு செய்து மாற்றி இருக்க வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் விமானக்கட்டுப்பாட்டு கணினி எல்லாம் " அவ்வளவு எளிதில்" ஹேக் செய்ய இயலாது, பல தகவல்களும் "ரீட் ஒன்லி" வகையில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் கணினி என்றாலே ஹேக் செய்ய ஒரு வழி இருக்கும்,அதனை செய்யும் அளவுக்கு அதிதிறமைசாலி ஒருவர் விமானத்தில் பயணம் செய்திருந்தாலே இதெல்லாம் சாத்தியம்.  இதற்காகவே பயணிகளின் பின்ப்புலமும் விரிவாக ஆராயப்பட்டது.

எனவே இப்போதைய நிலையில் ,டிரான்ஸ்பான்டர்கள் செயல்படாமல் போனக்காரணம் தெரியவில்லை, ஏன் மேற்காக திரும்பியது என்பதற்கும் சரியான விளக்கமில்லை.

விமானத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க வேண்டும் எனவே அவசரமாக தரையிறக்க திரும்பியிருக்கலாம் என்கிறார்கள், ஆனால் மலேசியாவின்  லங்காவி விமான நிலையமே(Pulau Langkawi ,state of Kedah in Malaysia -Langkawi International Airport) அருகில் உள்ளது ,அங்கே செல்லாமல் அதனையும் தாண்டி மலேசிய மேற்கு கடற்கரையான மலாக்கா சந்தி வரையில் விமானம் பறந்துள்ளது கேள்விக்குறியது.

விமானத்தில் பழுதென்றால் லங்காவி ஏர்போர்ட் வரைக்கூட செல்லத்தேவையில்லை, தகவல் கொடுத்து விட்டு கடலிலேயே விமானத்தினை லேண்டிங் செய்யலாம். நீரில் இறங்குமாறு வடிவமைக்கப்படாத விமானம் எப்படி தண்ணீரில் லேண்ட் ஆகும் என நினைக்கலாம். ஆனால் முடியும்.



அனைத்து விமானங்களும் அவசரக்கால தரையிறக்கமாக நீரில் இறங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தண்ணீரில் லேண்டிங் செய்வதை  DITCHING   என்கிறார்கள்.

எல்லா விமானத்திலும் அவசரக்காலத்தில் தண்ணீரில் இறங்கும் போது பயன்ப்படும் என்று தான் "லைப் ஜாக்கெட்கள்" வைத்துள்ளார்கள்,பயணத்துக்கு முன்னர் பயணீகளுக்கு டெமொவும் கொடுப்பார்கள்.

விமானத்தில் வெடிப்பு , அல்லது நெருப்பு பிடித்து ஓட்டை விழவில்லை எனில் ,லேண்டிங் கியர் எனப்படும் விமான சக்கரங்களை வெளியில் எடுக்காமல் ,லாகவமாக சறுக்கினார்ப்போல நீரில் இறக்கினால் விமானம் சேதமடையாது,சுமார் அரைமணிநேரத்துக்கு மூழ்காமல் மிதக்கும் , ஏர் பஸ் போன்ற விமான நிறுவனங்கள் கடலில் இறக்கினால் தண்ணீர் உட்புகாதவாறு சிறப்பு வடிவமைப்பும் செய்துள்ளன, டிட்சிங்க் என "உள்ள கியரை" இயக்கினால் அனைத்து ஓட்டைகளும் மூடிக்கொள்ளும்.அந்நேரத்தில் லைஃப் ஜாக்கெட்டுகள் அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக கடலில் குதித்து ,மீட்புப்படை வரும் வரையில் காத்திருக்க வேண்டும்.



Chesley Sullenberger,என்ற  அமெரிக்க விமானி நியுயார்க்கில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு எஞ்சின் செயலிழந்து போனதையும், இன்னொரு எஞ்சினில் தீப்பிடித்துள்ளதையும் அறிந்து,உடனடியாக ஹட்சன் ஆற்றில் தண்ணீரில் இறக்கி அனைத்து பயணிகளையும் காப்பாற்றியுள்ளார்.

இதுப்போல் பலமுறை  விமானங்கள் தண்ணீரில் "தரை"யிறக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

செய்தி:

The pilot of a US Airways jet managed to avoid disaster and save the lives of all 155 people on board his stricken plane when he ditched into the icy waters of the Hudson river moments after taking off from New York's LaGuardia airport.

http://www.theguardian.com/world/2009/jan/16/us-airways-plane-crash-lands-on-hudson



விமானத்திற்கும் பெரிய சேதமில்லை, வெளியில் எடுத்து சிறிய அளவில் பழுதுப்பார்த்து மீண்டும் பயன்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள்!

ஆற்றில் தரையிறக்கியது போல கடலில், வயலில்,பீச்சில் ,ஏன் நடு ரோட்டில் எல்லாம் கூட விமானத்தினை தரையிறக்கியுள்ளார்கள்.

இந்தியாவில் முன்பொரு முறை ஏர் இந்தியா விமானி ஒருவர் எஞ்சினில் நெருப்பு பிடித்த நிலையில் அவசரக்கால தரையிறக்கமாக திருப்பதி அருகே நெல் வயலில் விமானத்தினை இறக்கி ,ஒரு உயிரிழப்புக்கூட இல்லாமல் அனைவரையும் காப்பாற்றியுள்ளார், அவ்விமானத்தில் சிரஞ்சீவி,விஜயசாந்தி போன்றப்பிரபலங்களும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே விமானம் விபத்தில் சிக்காமல் இருப்பது விமானியின் திறமையைப்பொறுத்தே ஆகும். அவசரம் எனில் கடல்,பீச், வயல் என தரை இறக்கி சமாளீக்க தெரிந்தவர்களே உண்மையான திறமைசாலிகள்.

எனவே விமானம் மேற்காக திரும்பியது அவசரக்காலமாக அல்ல திட்டமிட்ட ஒன்று ,அதனை செய்தது பைலட்டுகளா,அல்லது வேறு யாராவதா என்பது தான் விடைத்தெரியாத கேள்வி!

இந்த இடத்தில் இன்னொரு விடைத்தெரியாத கேள்வியும் தொக்கியுள்ளது, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் விமானிகளின் அறையோடு , விமான சிப்பந்திகள் தொர்பு கொள்ள வேண்டுமாம், மேலும் அடிக்கடி காக்பிட் உள் சென்று பார்த்து வர வேண்டும் , இது எதற்கு எனில் பைலட்டே "தற்கொலை" முயற்சியாக ஏதேனும் செய்து விமானத்தினை விபத்தில் சிக்க வைக்கலாம் என்பதனாலாயே.

பைலட்டுகள்  காக்பிட்டினை உட்புறமாக பூட்டிக்கொண்டாலும் அதனை திறக்க ரகசிய கோட் விமான சிப்பந்திகளுக்கு தெரியும். மேலும் உட்ப்புறமாக மெக்கானிக்கல் லாக் போட்டுக்கொண்டாலும் உள் நுழைய மாற்று வழி உண்டாம். நீண்ட நேரம் காக்பிட் கதவு திறக்கப்படாமல் இருந்தால் இண்டர்காம் வழியே தொடர்புக்கொள்வார்கள்,சரியான பதில் இல்லை எனில் விமான சிப்பந்திகள் ,ரகசிய கதவினை திறந்து உள் நுழையலாம்.

பைலட்டே ஏதேனும் சதியில் ஈடுப்பட்டால் முறியடித்துவிட்டு ஆட்டோ பைலட் மூலம் தரையிறக்கலாம். பைலட்டே இல்லாமல் அல்லது செயல்ப்படாமல் போனாலும் ஆட்டோ பைலட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் தான் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது

இப்படியான சர்வதேச பயணிகள் விமான புரோட்டோக்கால் உள்ள நிலையில் , விமானத்தினை தீவிரவாதிகள் கடத்திய அறிகுறியே இல்லை, ஆனால் விமானம் தொடர்ந்து தவறான பாதையில் பறந்துள்ளது , இது கண்டிப்பாக அனுபவம் வாய்ந்த விமான சிப்பந்திகளுக்கு தெரிந்திருக்கும்,ஆனால் அவர்களூம்  எதுவும் முயற்சித்தாற்போல தெரியவேயில்லை,

விமானத்தில் அனைத்து தகவல் தொடர்பு கருவிகள், கணீனிகள் எல்லாமே கார்கோ பகுதியில் தனியே ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கும்,ஏதேனும் அவசரம் எனில் அங்கிருந்து தகவல் தொடர்புக்கு முயற்சிப்பார்கள்,ஆனால் அப்படியான முயற்சி எதுவுமே எம்.எச்.370 இல் இருந்து மேற்கொள்ளப்படவில்லை.

எம்.எச்.370 இல் பைலட்டுகள் இருவர் , பத்து  பேர் விமான சிப்பந்திகள் ,வெளியாள் யாரும் கடத்த முயலாத நிலையில் ,பைலட்டுகளே சதி செய்கிறார்கள்  எனில் ஒரு விமான சிப்பந்தியாவது மாற்று வழியில் தகவல் தொடர்புக்கொள்ள முயன்றிப்பார்கள்,  விமான பணிப்பெண்கள், சிப்பந்திகள் ,உணவுக்கொடுக்க, சாக்லேட் கொடுக்க இருக்கிறார்கள் என நாம் நினைக்கலாம்,ஆனால் அவர்களுக்கு அவசரகால மருத்துவ சிகிச்சை,சிபி.ஆர், மற்றும் சில பாதுகாப்பு பணிகள் செய்ய கற்றுக்கொடுத்திருப்பார்கள், அவர்களது முக்கியமான பணியே விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பயணிகளைப்பத்திரமாக பாதுகாப்பது தான்.

மலேசிய விமானத்தில் பைலட்டுகள் மட்டுமல்ல விமான சிப்பந்திகளும் செயல்படவில்லை ,ஏன்? ஒரு வேளை அவர்களும் செயல் இழக்க செய்யப்பட்டார்களா?

அப்படி எனில் செய்தது யார்? அது கண்டிப்பாக விமானத்தில் பயணம் செய்த யாரோவாகத்தான் இருக்க முடியும். அந்த யாரோ எப்படி பைலட் மற்றும் சிப்பந்திகளை கட்டுப்படுத்தினார் என்பது புரியாதப்புதிர்.

விமான எஞ்சின் மற்றும் விமானத்துக்கு எவ்வித சேதமுமில்லை என்பது ,தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் சுமார் 6-7 மணி நேரங்கள் பறந்துள்ளது என்பதன் மூலம் அறியலாம், எனவே விமானம் யார்  கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும் பாதுகாப்பாக தரையிறங்க போதுமான வாய்ப்புகள் இருந்துள்ளது,ஆனால் அவ்வாறு செய்யவில்லை,எனவே மர்மமாக விமானம் மறையக்காரணம் திட்டமிட்ட  சதிச்செயலே என்பது உறுதி.

விமானிகள் மீதான சந்தேகம்:

தலைமை விமானி:Capt. Zaharie Ahmad Shah, நீண்ட பறக்கும் அனுபவம் கொண்ட மூத்த விமானி, இது வரையில் எக்குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை.

ஆனால் இவர் மலேசிய எதிர்க்கட்சி தலைவரான "இப்ராகிம் அன்வரின்" உறவினர். அன்வர் தற்சமயம் "பாலியல் வழக்கில்"சிக்கி சிறையில் உள்ளார். அவரை சில நாட்களுக்கு முன்னர்  சிறையில் சென்று பார்த்துள்ளார்.
மேலும் விமானி அஹம்த் ஷாவின் வீட்டில் "பயிற்சி விமான மென்ப்பொருள்" நிறுவி பயிற்சி செய்துள்ளார் ,அதில் மாலத்தீவு ,டீகோ கார்சியா விமான ஓடு தளங்களுக்கான பயிற்சியும் இருந்துள்ளதாம். இதனால் அவர் மீதும் சந்தேகப்பார்வை பாய்கிறது.

# துணை விமானி: Fariq Abdul Hamid  இளைஞர் ,எனவே கொஞ்சம் "ஷோக்கு"பேர்வழியாக இருந்துள்ளார், இதற்கு முன்னர் ஒரு முறை விமானப்பயணத்தின் போது , தென் ஆப்பிரிக்க அழகிகள் இருவரை பயண நேரம் முழுக்க "காக்பிட்டுக்கள்' அழைத்து கடலைப்போட்டு இருக்கார் , எனவே    பெண்களைக்காட்டி அவரை மயக்கி சதிவலையில் சிக்க வைப்பது எளிதென சொல்கிறார்கள்.

("காக்"பிட்டில் ஜாலிலோ ஜிம்கானா)

news:

"Jonti Roos, a South African currently living in Melbourne during a year-long stay in Australia, revealed last week she and her friend Jaan Maree were plucked from the queue while waiting to board a flight from Phuket to Kuala Lumpur and asked if they would like to ride up front.
Fariq Abdul Hamid, 27, the co-pilot of missing Malaysian Airlines flight MH370, spent the flight smoking in the cockpit and chatting with the two girls, Ms Roos claims."

http://www.dailymail.co.uk/news/article-2584129/Woman-spent-flight-MH370-pilot-says-life-hands.html




இங்கு இன்னொரு முக்கிய விடயமும் கவனிக்க ,கவலைக்கொள்ள தக்கதாக உள்ளது. பயணிகள் விமானங்கள் வழக்கமாக 35,000 அடி உயரத்தில் தான் பறக்கும், ஆனால் மலேசிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதும் ,உடனே 45,000 அடிகள் உயரத்திற்கு சென்று சிறிது நேரம் பறந்து விட்டு பின்னர் 25,000 அடிகளுக்கு விமானம் கீழிறங்கியுள்ளது.

விமானம் 45,000 அடி உயரத்தில் பறந்தால் பயணிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மூச்சு திணறும், எனவே தானியங்கியாக ஆக்சிஜன் மாஸ்க்குகள் விமானந்தின் லாஃப்டில் இருந்து வெளியாகும், அதனைக்கொண்டே சுவாசிக்க முடியும். ஆனால் அந்த ஆக்சிஜன் இருப்பு சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். பின்னர் தீர்ந்து விடும்.

எனவே ஆக்சிஜன் இல்லாமல் பெரும்பாலான பயணிகள் மயக்கமாகி விடுவார்கள், சுமார் 45,000 அடிகள் உயரத்தில் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் பறந்தால் பெரும்பாலோர் உயிரிழந்திருப்பார்கள் என்கிறார்கள்.

விமானிகளுக்கும் அதே போல நிலை தான் வரும் ஆனால் திட்டமிட்டு கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்து சென்றிருக்கலாம். அப்படி திட்டமிட்டு  அதிக உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகள் கொல்லப்பட்டிருந்தால், விமானம் விபத்தில் சிக்கும் முன்னரோ அல்லது மூழ்கடிக்கப்படும் முன்னரோ பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்க கூடும்.,அதனை செய்தது யார்? விமானிகளா அல்லது கடத்த திட்டமிட்டவர்களா என ஒரு சந்தேகத்தினையும் நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.

மேலும் சில சதிச்செயல்களுக்கான சாத்தியக்கூறுகளை காண்போம்.

ரிமோட் கண்ட்ரோல்:

விமானத்தினை தொலைவில் இருந்து கூட கட்டுப்படுத்த இயலும், இவ்வகையில் ஆள் இல்லாத உளவு விமானங்கள் இயக்கப்பட்டு எதிரி நாட்டினை உளவுப்பார்க்க பயன்ப்படுத்தப்படுகின்றன.

UAV (Unmanned aerial vehicle) அல்லது  Drone Flights என இவ்வகை விமானங்களை சொல்வார்கள்.

சேட்டிலைட்ஸ் மூலம் பறப்பதற்கான கட்டளைகள் கொடுக்கப்பட்டு விரும்பிய திசையில் விமானத்தினை பறக்க வைத்து படம் எடுப்பார்கள்.

இவ்வகை விமானங்களை எதிரி நாட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்துவது வாடிக்கை. தற்காலங்களில் இதற்கும் ஒரு மின்னணு தீர்வு கண்டுள்ளார்கள், ரிமோட் ஹைஜாக்கிங் எனலாம் , எதிரி நாடு சேட்டிலைட்ஸ் மூலம் அனுப்பும் சிக்னல்களை "ஜாம்" செய்து விட்டு  வேறு சிக்னல்களை  "Drone Flights " க்கு அனுப்பி தரையிறக்க செய்துவிடுவார்கள்.

இது போன்ற உயர் தொழில்நுட் ராணுவ செயல்ப்பாடுகள் சமீபகாலமாக அதிகரித்து விட்டது. அமெரிக்கா இது போன்ற ஆள் இல்லாத உளவு விமானங்களை அதிகம் பயன்ப்படுத்த துவங்கியதால் ரஷ்யா 'சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்" ஜாமிங் ரேடார்களை "the Avtobaza ground-based electronic intelligence and jamming system" என  பிரத்யோகமாக தயாரித்துள்ளது.

இவ்வகை ரேடார்களை ஒரு டிரக் அல்லது விமானத்தில் கூட பொருத்தி இயக்கலாம். எதிரி நாட்டு உளவு விமானம் கண்டறியப்பட்டதும் அதனை நோக்கி "ஜாமிங்" சிக்னல்களை அனுப்பி தகவல் தொடர்ப்பினை துண்டித்து விடுவார்கள், பின்னர் அவ்விமானம் எத்திசையில் பறக்க வேண்டும் ,எங்கு இறங்க வேண்டும் என்ற கட்டளைகளை , அதன் உரிமையாளர்கள் அனுப்புவதை போல அனுப்புவார்கள்,  தானியங்கியாக விமானம் பறக்க  ஜிபிஎஸ்  உதவுகிறது ,எனவே புதிய ஜிபிஎஸ் கோ ஆர்டினேட்களை அதே போல அனுப்பி "தானியங்கி விமானத்தினை" ஏமாற்றுவார்கள் ,இதனை "ஜிபிஎஸ்' ஸ்பூபிங் என்கிறார்கள்.

படம்:


ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய "the Avtobaza ground-based electronic intelligence and jamming system" உதவியுடன், இரான் , அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம்( "an American Lockheed Martin RQ-170 Sentinel unmanned aerial vehicle (UAV) ஒன்றினை மடக்கிப்பிடித்துள்ளது.

(இரானால் வளைக்கப்பட்ட அமெரிக்க உளவு விமானம்)

செய்தி:

"The original reports that Iran “shot down” a Lockheed Martin RQ-170 Sentinel appear to be misleading. Iranian news agency reports credited the army’s electronic warfare unit with bringing down the UAV, but apparently in a way that limited the amount of damage on landing or impact."

http://www.flightglobal.com/blogs/the-dewline/2011/12/avtobaza-irans-weapon-in-rq-17/

இம்முறை ஆளில்லாத விமானத்தினை கைப்பற்ற உதவும், ஆனால் பயணிகள் விமானத்தில் பைலட்டுகள் இருக்கிறார்கள், எனவே ஆட்டோ பைலட்டுக்கான சிக்னல்களை அனுப்பி திசைமாற்றினால் ,பைலட்டுகள் இடைமறித்து திசையை மாற்றி ஓட்ட முடியும், மனித இடையீட்டையே விமானம் முதலில் ஏற்கும்.

ஒரு வேளை பைலட்டுகள் முன்னரே செயலிழக்க வைக்கப்பட்டிருந்தால் இம்முறையில் விமானத்தினை கைப்பற்றி ,விரும்பிய இடத்திற்கு ஓட்டி செல்ல முடியும்!

அவ்வாறு யார் செய்திருக்க கூடும்?

அனேகமாக அமெரிக்காவாக இருக்கலாம் என "ஒரு வதந்தி" உலாவுகிறது.ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு  சரியான விடையில்லை.

மேலும் மாலத்தீவில் இருக்கும் சில தீவுகளில் வசிப்பவர்கள்,விமானம் மாயமான அன்று , மிக தாழ்வான உயரத்தில் ஒரு பயணிகள் விமானம் பறந்து சென்றதைப்பார்த்தாகவும் சொல்கிறார்கள்.மாலத்தீவீற்கு அருகில் தான் டீகோ கார்சியா தளமும் உள்ளது.இச்செய்தி மேலும் மர்மத்தினை அதிகரிக்கவே செய்கின்றது.

செய்தி:
"
Whilst the disappearance of the Boeing 777 jet, carrying 239 passengers has left the whole world in bewilderment, several residents of Kuda Huvadhoo told Haveeru on Tuesday that they saw a "low flying jumbo jet" at around 6:15am on March 8."

http://www.zerohedge.com/news/2014-03-18/did-missing-flight-mh370-land-maldives-or-diego-garcia-full-updated-summary

மேலும் இன்னொரு தகவலும் சொல்கிறார்கள் ,மலேசிய விமானத்தில் இன்னெதென அறிவிக்கப்படாத கார்கோ 20 டன்கள் ஏற்றப்பட்டிருந்தது எனவும் அதனைக்கைப்பற்றவே இந்த கடத்தல் விமானியின் துணையுட அல்லது செயலிழக்க செய்துவிட்டு நடைப்பெற்று இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இதன் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் அல்லது ஏதேனும் தீவிரவாத இயக்கமாகவும் இருக்கலாம், பொருளை எடுத்துக்கொண்டு விமானத்தினை மூழ்கடித்திருக்கலாம்.

கடைசியாக விமானம் காணாமல் போனதாக சொல்லப்படும்  இந்திய சமுத்திரத்தில் உள்ள இடத்தினை ,மலேசியா விமானம் அடையும் பாதையில் இருந்து "டீகோ கார்சியா" சுமார் 1000 கி.மி தொலைவில் தான் உள்ளது. அதே போல விமானம் கடலில் மூழ்கிய இடமும் அமைந்துள்ளது.

(சில இனங்காண இயலாத சிதைவுகள் சேட்டிலைட்டில் சிக்கியுள்ளன) 

சுமார் 1000 கி.மீ சுற்றளவில் பரப்பு உள்ளதே எனலாம், டீகோ கார்சியாவில் இருந்து ஒட்டுமொத்த இந்திய சமுத்திரத்தினையும் "கண்காணிக்கும்" வசதியை அமெரிக்கா நிறுவியுள்ளது.

கடற்பரப்பினையும்,கடலடியில் செல்லும் நீர்மூழ்கிகளையும் கண்காணிக்க , SOSUS, (Sound Surveillance System) மற்றும் Integrated Undersea Surveillance System -insignia" என அமைத்துள்ளது .இதன் மூலம் கடலில் நிகழும் அனைத்து "நடமாட்டங்களையும்" அமெரிக்கா கண்காணிக்கிறது. கடற்பரப்பில் பெரிய பொருள் ஏதேனும் மோதினால் கூட அதன் அதிர்வலைகளை வைத்து என்ன பொருள் எங்கே மோதல் நிகழ்ந்ததது என அமெரிக்காவால் அறிய முடியும்.எனவே அமெரிக்காவிற்கு தெரியாமல் மலேசிய விமானம் "இந்தியக்கடலில் பயணம் செய்திருக்க முடியாது, கடலில் வீழ்ந்தும் இருக்க முடியாது,அப்படி கடலில் மோதியிருக்குமானால் டீகோ கார்சியாவில் பதிவாகிவிடும்.

மேலும் கடலில் ஆங்காங்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் உலாவிக்கொண்டே இருக்கின்றன ,அவற்றின் ரேடாரில் இருந்து கண்டிப்பாக "எந்த விமானமும்,கப்பலும்" எளிதில் தப்ப முடியாது.

ஒரு வேளை ஏதோக்காரணத்தினால் மலேசிய விமானம் "டிரான்ஸ்பான்டர்கள்" இல்லாமல் இந்தியக்கடலில் வருகிறது என வைத்துக்கொள்வோம், அமெரிக்க ராணுவம் ஏதோ உளவு விமானம் என நினைத்து "ரிமோட் கண்ட்ரோல்" முறையில் கைப்பற்றி ,டீகோ கார்சியாவில் தரையிறக்க கூட செய்திருக்கும்.



தரையிறக்கிய பிறகு "பயணிகள் விமானம்" என்பதை அறிந்து ,வெளியில் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும், மேலும் கடத்தியதே திட்டமிட்டு என சொல்லிவிட்டால் என்ன செய்வது என "தடயத்தினை அழிக்க" கூட முயன்றிருக்கலாம்!

கடைசியாக வந்த தகவலின் படி "ஐபிஎம் நிறுவனத்தினை சார்ந்த பொறியாளர் மலேசியா விமானத்தில் பறந்ததாகவும், அவரை கடத்திக்கண்களை கட்டி வைத்துள்ள நிலையில் ஐ போன் மூலம் ஒரு இருண்டப்படத்தினை அனுப்பியுள்ளார் ,அதன் மூலம் கோ-ஆர்டினேட்களை கண்டுப்பிடித்தப்போது அது டீகோ கார்சியா என ஒரு தகவல் உலாவுகின்றது. அது உண்மையான தகவல் அல்ல எனவும் சில இணையத்தளங்கள் சொல்கின்றன.


EMP ATTACK.

Electro magnetic pulse attack , மிக உயர் அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகளை அனுப்பி எந்த ஒரு வாகனத்தின் "மின்னணுக்கட்டுப்பாட்டுக்ருவியையும் செயலிழக்க செய்ய முடியும்.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யுரியஸ் படத்தில் , வேகமாக செல்லும் காரினை நோக்கி ஒரு " மின்னணு அம்பு" செலுத்தப்படும் ,அது அனுப்பும் சிக்னல்கள் காரினை கட்டுப்படுத்தும் மின்னணுக்கருவிகளை செயலிக்க செய்து , இயங்காமல் முடக்குவதாக காட்டியிருப்பார்கள்.

அக்கருவி கற்பனை என  படம் வந்தக்காலத்தில் சொல்லப்பட்டாலும் அவ்வகை கருவி உண்மையில் உள்ளது. அமெரிக்க ராணூவ பாதுகாப்பு மையங்களிள் இக்கருவி நிறுவப்பட்டிருக்கும் எந்த வாகனமும் தடையை தாண்டி உள் நுழைந்தால் ,தானாக எஞ்சினை நிறுத்தி விடும்.

செய்தி:

"Police forces in Britain and the US have ordered tests of the new system that delivers a blast of radio waves powerful enough to knock out vital engine electronics, making the targeted vehicle stall and slowly come to a stop."

http://www.theguardian.com/science/2004/jul/12/sciencenews.crime

f2f


இதே வகையில்  மலேசியா விமானமும் செயலிழக்க செய்யப்பட்டிருக்கலாம்.

மலேசிய விமானம் ஏதோ ஒரு காரணத்தால் திசை மாறி பறந்தது , இந்தியக்கடலினை அடைந்தது  என வைத்துக்கொள்வோம் , இந்தியக்கடலில் பிரிட்டீஷ் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஒரு கடற்படை தளத்தினை டீகோ கார்சியாவில் நடத்துகின்றன. அங்கிருந்துக்கொண்டு வான் மற்றும் கடல் பரப்பு மற்றும் ஆழ்கடலை அவர்கள் கண்காணிக்கிறர்கள்.



டிரான்ஸ்பாண்டர்கள் இல்லாமல் மர்ம பறக்கும் பொருளாக வரும் விமானத்தினை அமெரிக்க ரேடார்கள் கண்டிருக்க கூடும்,  எச்சரிக்கை செய்து பார்த்திருப்பார்கள் ,கேட்காமல் முன்னேறும் நிலையில் சக்தி வாய்ந்த  மின்காந்த அலைகளை அனுப்பி "விமான என்சினை" செயலிழக்க செய்திருக்க கூடும்.

(diego carcia naval base)

பின்னர் மலேசிய அரசு , விமானம் காணாமல் போய்விட்டது என புலம்பியதை உணர்ந்து , தாங்கள் வீழ்த்தியது அவ்விமானம் தான் என அறிந்து , வெளியில் காட்டிக்கொள்ளாமல் ,மவுனம் கூட சாதிக்கலாம்.

இதற்கு முன்னர் 1983 இல் கொரிய பயணிகள் விமானம் அத்துமீறி ரஷ்ய எல்லையில் நுழைந்தது விட்டது அதனை உளவு விமானம் என எண்ணி  ,சுகோய்-15 இன்டெர்செப்டர் மூலம் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதில் பயணம் செய்த 269 பயணிகளும் பலியானார்கள்.

செய்தி:

"Korean Air Lines Flight 007 (also known as KAL007 and KE007[note 2]) was a scheduled Korean Air Lines flight from New York City to Seoul via Anchorage. On September 1, 1983, the airliner serving the flight was shot down by a Soviet Su-15 interceptor near Moneron Island, west of Sakhalin Island, in the Sea of Japan. The interceptor's pilot was Major Gennadi Osipovich. All 269 passengers and crew aboard were killed, including Lawrence McDonald, a sitting member of the United States Congress. The aircraft was en route from Anchorage to Seoul when it flew through prohibited Soviet airspace around the time of a U.S. reconnaissance mission.

The Soviet Union initially denied knowledge of the incident,[2] but later admitted the shootdown, claiming that the aircraft was on a spy mission."

http://en.wikipedia.org/wiki/Korean_Air_Lines_Flight_007

இது போல சந்தேகத்தின் பேரில் சுட்டு வீழ்த்தியிருந்தால் அதனை முடிந்த வரையில் மறைக்கத்தான் சம்பந்தப்பட்ட அரசு விரும்பும்.

# கசகஸ்தான் ,அல்லது ஆப்கானுக்கு விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சொன்னால் ,அப்படி செய்ய , இந்தியா,பர்மா, தாய்லாந்து, நேப்பாள் ,சீனா,மங்கோலியா,பாகிஸ்தான் என பல நாட்டின் வானெல்லையை "ரகசியமாக' கடக்க வேண்டும். மற்ற நாடுகளை ஏமாற்றியதாக வைத்துக்கொண்டாலும் ,சீனா அதிதீவீரமாக கண்காணித்து வருகிறது அவர்களை எப்படி ஏமாற்றினார்கள் என்பதற்கு சரியான விளக்கமில்லை.

மலேசிய விமானத்தின் முடிவு தான் என்ன?

கடத்தல் எனில் ,அதன் பின்னணி சர்வதேச அரசியல் காரணமாகவே இருக்க வேண்டும்,எனவே உண்மை எளிதில்  வெளியில் வராது.

விபத்து எனில் சுமார் 6-7 மணி நேரம் பறந்த பின் நிகழாது ,ஏதோ ஒருக்காரணத்திற்காக கடத்தப்பட்டு பாதை மாறி சென்ற விமானத்தினை "சந்தேகத்தின் அடிப்படையில்" சுட்டு வீழ்த்தியிருக்கலாம்.அல்லது சர்வதேச அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு கடத்தி மறைத்தும் வைத்திருக்கலாம்.

இதற்கான விடை அனேகமாக அமெரிக்காவிற்கு தெரியலாம்,அவர்கள் வெளிப்படையாக பேசினால் மட்டுமே உண்மை வெளிவரும்.
-----------------------------------------------


பின்குறிப்பு:


# முடிந்த வரையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது,பிழை திருத்தம் செய்யப்படவில்லை,விரைவில் செய்யப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி ,கூகிள் மற்றும்

http://www.bbc.co.uk/news/world-middle-east-26706417

# http://www.boeing.com/boeing/commercial/777family/pf/pf_200product.page?

# http://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93U.S._RQ-170_incident

#http://www.flightglobal.com/blogs/the-dewline/2011/12/avtobaza-irans-weapon-in-rq-17/

#http://beforeitsnews.com/conspiracy-theories/2014/03/flight-mh370-is-at-diego-garcia-heres-the-proof-2461078.html

#http://www.theguardian.com/science/2004/jul/12/sciencenews.crime

#http://channel.nationalgeographic.com/channel/american-blackout/articles/emp-attack/

#http://en.wikipedia.org/wiki/SOSUS

#http://www.theguardian.com/world/2014/mar/24/flight-mh370-inmarsat-aaib-analysis

#http://www.bbc.co.uk/news/magazine-20609795

நன்றி!
***********************

119 comments:

காரிகன் said...

வவ்வால்,
முடிந்தவரை எல்லா கோணத்திலும் இந்த மாய விமான நிகழ்வை படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். (அதுல ஆரம்பத்தில அசின் கூட உண்டு.) விமானம் எதோ சில வேற்றுகிரக வாசிகளால் கடத்தப்பட்டது, வானிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளது, போன்ற வினோத தியரிகளையும் கொஞ்சம் ஊறுகாய் அளவில் தொட்டிருக்கலாம். எத்தனை மெனக்கெடல் (வார்த்தை சரி என்றே நினைக்கிறேன்!.) நல்ல உழைப்பு. பாராட்டுக்கள். சிறு வயதில் படித்த (லாரன்ஸ்-டேவிட் சாகசமான) விண்ணில் மறைந்த விமானங்கள் என்ற கதை நினைவுக்கு வருகிறது. அடுத்த பதிவு அரசியல் பற்றியா?

Anonymous said...

//ஆனால் தாய்லாந்தின் லங்காவி விமான நிலையமே அருகில் உள்ளது//

மிடியல!

காரிகன் said...

வவ்வால்,
இன்னொரு தகவல்.
உலகத்தை சுற்றி வர விரும்பிய முதல் பெண் அமீலியா ஏர் ஹார்ட் கூட இவ்வாறான மர்மமான முறையில் பசிபிக் கடல் மேலே விமானத்தில் பறந்தபோது காணமல் போனவர்தான்.

Anonymous said...

ஐயா ராசா வவ்வாலு, கை விரல் ரேகை எல்லாம் தேயாம சரியா இருக்குதாப்பா? பாத்து. type பண்ணி type பண்ணி விரல் தேய்ந்சிறப்போவுது..... அவ்வ்

எப்படி வவ்வால் உங்களுக்கு இவ்வளவு பொறுமை. நமக்கெல்லாம் நாலு line comment type பண்றதுக்குலேயே டங்குவாரு அறுந்துருது... 45 minutes ஆயிருக்கு இந்த பதிவ படிக்கிறதுக்கு மட்டும்.
ஆனா, உங்களுக்கு prepare பண்ண எவ்ளவு நேரம் ஆச்சோ? அத டைப் பண்ண எவ்ளவு நேரம் ஆச்சோ?

நல்ல அலசல். எல்லா possibilities ஐயும் சொல்லிருக்கீங்க. பாப்போம்...என்ன நடக்குதுன்னு........

Anonymous said...

//விமானம் எதோ சில வேற்றுகிரக வாசிகளால் கடத்தப்பட்டது, வானிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளது,//

காரிகன்,
நீங்க என்னை சொல்லலையே??? அவ்வ்.....

காரிகன் said...

Alien:
(காரிகன்,
நீங்க என்னை சொல்லலையே??? அவ்வ்.....)

ஹா ஹா ஹா ..ரசித்தேன். உங்களைச் சொல்லவில்லை. ஆனால் உங்கள் கும்பல் ஆளுங்களில் சிலர் செய்திருக்கலாமோ என்ற சந்தேகம் சிலரிடம் இருக்கிறது.

Anonymous said...

Really very nice article.....

sornamithran said...

மிகவும் விரிவான சிறப்பான அலசல்.பாராட்டுக்கள்

ராஜ நடராஜன் said...

போன பதிவுல இன்னும் சொல்லியிருக்கலாம்ன்னு சொன்னதுக்காக இவ்ளோ நீட்டியா!

SOS என்பது டைட்டானிக் காலத்துக்கு முன்பிருந்தே வந்த Save our Ship.

அன்வார் இப்ராகிம் பாலியல் விவகாரத்தில் சிறை சென்றது முன்னாள் மலேசிய பிரைம் மினிஸ்டர் மகதிர் முகமது காலத்தில்

சி.என்.என் ல நிறைய பேர் அமெரிக்காவின் சதி திட்டம்ன்னு கமெண்டுறாங்க.நீங்களும் டிகோ கார்சியா கான்ஸ்பைரசி தியரியை விட்ட மாதிரி தெரியல.

எந்த லாஜிக்கிலும் சிக்காத ஒன்று எம்.எச்.370

1. இயந்திர கோளாறு.ஆனால் இயந்திர கோளாறு என்றால் கண்ட்ரோல் டவருக்கு செய்தி போயிருக்கும்.

2. கடத்தல் என்றால் 24 மணி நேரத்திற்குள் நாங்கதான் கடத்துகிறோம் என்று விள்ம்பரம் வந்திருக்கும்.

3.ரஷ்யா,ஈராக்,சிரியா என்றிருந்தால் கூட அரசியல் காரணங்களை கூறலாம்.அதற்கெல்லாம் சாத்தியமில்லாத மலேசியாவுக்கும்,சீனாவுக்கும் பயணிக்கும் அதிக பயணிகள்.சீனாக்காரன் விமானம் கடத்தியதாக இதுவரை வரலாறு கிடையாது.

எப்படி பார்த்தாலும் காக்பிட்டில் மட்டுமே விபத்தின் மையப்புள்ளி அமைந்திருக்கிறது.

ராஜ நடராஜன் said...

போன பதிவுல இன்னும் சொல்லியிருக்கலாம்ன்னு சொன்னதுக்காக இவ்ளோ நீட்டியா!

SOS என்பது டைட்டானிக் காலத்துக்கு முன்பிருந்தே வந்த Save our Ship.

அன்வார் இப்ராகிம் பாலியல் விவகாரத்தில் சிறை சென்றது முன்னாள் மலேசிய பிரைம் மினிஸ்டர் மகதிர் முகமது காலத்தில்

சி.என்.என் ல நிறைய பேர் அமெரிக்காவின் சதி திட்டம்ன்னு கமெண்டுறாங்க.நீங்களும் டிகோ கார்சியா கான்ஸ்பைரசி தியரியை விட்ட மாதிரி தெரியல.

எந்த லாஜிக்கிலும் சிக்காத ஒன்று எம்.எச்.370

1. இயந்திர கோளாறு.ஆனால் இயந்திர கோளாறு என்றால் கண்ட்ரோல் டவருக்கு செய்தி போயிருக்கும்.

2. கடத்தல் என்றால் 24 மணி நேரத்திற்குள் நாங்கதான் கடத்துகிறோம் என்று விள்ம்பரம் வந்திருக்கும்.

3.ரஷ்யா,ஈராக்,சிரியா என்றிருந்தால் கூட அரசியல் காரணங்களை கூறலாம்.அதற்கெல்லாம் சாத்தியமில்லாத மலேசியாவுக்கும்,சீனாவுக்கும் பயணிக்கும் அதிக பயணிகள்.சீனாக்காரன் விமானம் கடத்தியதாக இதுவரை வரலாறு கிடையாது.

எப்படி பார்த்தாலும் காக்பிட்டில் மட்டுமே விபத்தின் மையப்புள்ளி அமைந்திருக்கிறது.

Unknown said...

எனக்கு ஒரு ஆசை என்னன்ன.. அடுத்தமுறை இந்தரூட்டில் பிளென் விடும்போது.. நம்முர் அரசியல்வாதிள், கிரிக்கட் வீரர், சினிமா நட்சத்திரங்கள்(அசின் உட்பட), தொழில் அதிபர் எல்லாததையும் ஏற்றி அனுப்பிவிடலாம்.

டிக்கட் செலவுகூட நாம் பகிர்ந்து கொள்ளலாம். நாடு உண்மையில் விடுதலை அடையும்.

வவ்வால் said...

காரிகன்,

முதல் பின்னூட்டம் போட்டு ஆட்டத்தை துவக்கியதற்கு நன்றி!

//விமானம் எதோ சில வேற்றுகிரக வாசிகளால் கடத்தப்பட்டது, வானிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளது, போன்ற வினோத தியரிகளையும் கொஞ்சம் ஊறுகாய் அளவில் தொட்டிருக்கலாம். //

அது என்ன சுவாமி, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கேனு நாம ஒன்னை ஒதுக்கினா அதையே குறிப்பா சிலர் கேட்குறிங்க அவ்வ்!

வேற்றுகிரகவாசி, பிளாக்ஹோல் தியரிலாம் வேண்டாம்னு விட்டேன்.ஆனால் அது எங்கேனு கேட்குறீங்க இலை நிறைய பட்சணம் வச்சு விருந்து வச்சாலும் ,ஊறுகாய் வைக்க மறந்துட்டாங்கனு சொல்லுறீரே , சரி ஊறுகாய் என்ன ,காரமா ஊரவச்சிடுவோம் , பிளாக் பாக்ஸ் முதல் நிறைய விட்டிருக்கேன் அதை எல்லாம் வச்சு பார்ட்-2 போட்டிருவோம் :-))

#//எத்தனை மெனக்கெடல் (வார்த்தை சரி என்றே நினைக்கிறேன்!.) நல்ல உழைப்பு. பாராட்டுக்கள். //
நன்றி!
மேலும்,லாரன்ஸ் டேவிட் கதை எல்லாம் நியாபகம் வச்சிருக்கிங்களே, அழிவு கொள்ளை தீமை கழக உறுப்பினரா அவ்வ்! சும்மா டமாசு!!!

காரிகன் துப்பறியும் கதைகள் எல்லாம் நியாபகம் இருக்கா?

# நீங்க சொன்ன முதல் பைலட் முதல் எல்லா மாயமான விமான வரலாறும் பார்த்தேன் ,எல்லாத்தையும் எழுதினா எப்ப முடிச்சு பதிவ போடனு , முடிஞ்ச வரைக்கும் பதிவாக்கி இருக்கேன் அவ்வ்!
----------------

அனானி,

வயசாயிகிட்டா முடியாமத்தான் போவும்,எதுக்கும் வயாக்கிரா,கியாக்கிரா முயற்சி செய்து பார்க்கவும் :-))

# தவறை சுட்டியதற்கு நன்றி!

ஆனாலும் ஒரே ஒரு பிழைதான் கண்ணுக்கு சிக்கியதா?

நான் கூட நிறை பிழைகள் இருக்கும்னு பயந்துக்கிட்டு இருந்தேன் , இன்னும் எழுதின பதிவ நானே முழுசா படிக்கலை, டிராப்ட்ல இருந்தை காப்பி&பேஸ்ட் செய்துவிட்டு "பிழை திருத்தம்" விரைவில் செய்கிறேன் என அதான் "பின்குறிப்பு போட்டேன்!

இன்னும் கொஞ்சம் நல்லாப்படிச்சு இப்படியான பிழைகளை சுட்டிக்காட்டவும் , நாம எழுதினதுல பிழைக்கண்டுபிடிக்க நமக்கே ரொம்ப கஷ்டமப்பா அவ்வ்!

--------------------

வேற்றுகிரகவாசி,

வாரும் நன்றி!

//ஐயா ராசா வவ்வாலு, கை விரல் ரேகை எல்லாம் தேயாம சரியா இருக்குதாப்பா? பாத்து. type பண்ணி type பண்ணி விரல் தேய்ந்சிறப்போவுது..//

எதாவது டபுள் மீனிங்கா? பிச்சு பிச்சு!

# தினம் கொஞ்சம்னு டைப் செய்வது தான் , அதான் சில சமயம் , முன்ன பின்ன தகவல் பிழையாகிடுது அவ்வ்!

# உங்க கும்பலை குறி வைக்கிறாரே காரிகன்,அவருக்கிட்டே என்ன கரைச்சல் செய்தீர்?
------------------
அனானி,

நன்றி!

( சொம்பு திருடன், மங்கூஸ் மண்டையன், என எதாவது பேரைப்பொட்டு வையுங்கப்பா, ஒரே நேரத்துல எத்தனை அனானிய அனானி என்றே அழைப்பது அவ்வ்)
---------------
சொர்ணமித்ரன்,

நன்றி!
--------------

ராச நட,

வாரும்,நன்றி!

அன்வர் இப்ராகிம் எந்த ஆட்சில உள்ளப்போனால் என்ன , எதிர்க்கட்சித்தலைவர், குற்றவாளீ,அவருக்கு உறவினர் ,விமானி என ஒரு சந்தேகம் இருக்கா இல்லையா?

#//1. இயந்திர கோளாறு.ஆனால் இயந்திர கோளாறு என்றால் கண்ட்ரோல் டவருக்கு செய்தி போயிருக்கும்.

2. கடத்தல் என்றால் 24 மணி நேரத்திற்குள் நாங்கதான் கடத்துகிறோம் என்று விள்ம்பரம் வந்திருக்கும்.//

பதிவில் இம்புட்டு விரிவா பேசியும் அதையே எனக்கு எதுக்கு நம்பர் போட்டு காட்டுறீர்?

பதிவை படிச்சிட்டு பேசும்வோய்!

#//.ரஷ்யா,ஈராக்,சிரியா என்றிருந்தால் கூட அரசியல் காரணங்களை கூறலாம்.அதற்கெல்லாம் சாத்தியமில்லாத மலேசியாவுக்கும்,சீனாவுக்கும் பயணிக்கும் அதிக பயணிகள்.சீனாக்காரன் விமானம் கடத்தியதாக இதுவரை வரலாறு கிடையாது.

எப்படி பார்த்தாலும் காக்பிட்டில் மட்டுமே விபத்தின் மையப்புள்ளி அமைந்திருக்கிறது.//

உமக்கு சர்வதேச அரசியல்,ராணுவப்போட்டிலாம் புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்!
---------------
வினோத் குமார்,

நன்றி!

உம்மை தூக்கி சுண்ணாம்பு காளவாய்ல தான் போடனும், ஏன்னு உமக்கே புரியும்!
-----------------

Amudhavan said...

ஆகா, எத்தனைச் சிரமமெடுத்து எத்தனைத் தகவல்கள் திரட்டி எத்தனைக் குறிப்புகள் எடுத்து கம்ப்யூட்டரையே துருவி பிய்த்துப் பேன்பார்த்து இவ்வளவு அரிய பெரிய பதிவை எழுதியிருக்கின்றீர்.ஏராளத் தகவல்களும் என்ன ஆனதோ என்ன ஆனதோ கடைசியில் என்ன சொல்லப்போகிறாரோ என்ற பதைப்புடன் படிப்பவர்களை ஒரு மர்ம நாவல் படிக்கிற தன்மையுடன் இறுதிப் பகுதிக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்.

இது பதிவுதானா அல்லது ஒரு சின்ன புத்தகமா என்று தெரியவில்லை.

முடிவு எப்படியும் வெளிவருமா அல்லது வராமலேயே போய்விடுமா என்பதும் தெரியவில்லை. பாவம் அந்தப் பயணிகள்.........

இணையப் பின்னூட்டங்களில் சண்டைகள் சச்சரவுகள் சவால்கள் அடிதடிகள் என்று இருக்கும் வவ்வால் பதிவு என்று வரும்போது- அது எந்த விஷயமாக இருந்தாலும் படிப்பவர்கள் வியக்கும்வண்ணம் மற்றவர்களால் திரட்டமுடியாத தகவல்களுடன் வந்து அசத்துவது ஆச்சரியப்படவைக்கிறது.

அதுமட்டுமல்ல, இணையத்தில், அதுவும் தமிழில் இப்படியெல்லாம் கட்டுரைகள் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கிறீர் என்பதுதான் இதிலுள்ள பெருமைக்குரிய செய்தி. பாராட்டுக்கள்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

ஒரு வகையில் உங்கள் கருத்தினை எதிர்ப்பார்த்திருந்தேன் , ஏன் எனில் நீங்கள் சரியா , எது முக்கியமான பகுதி என்பதை உணர்ந்து ,அவ்விடத்தினை தொட்டு விடுவீர்கள், ஹி...ஹி எனக்கே அப்புறம் தான் அதில் முக்கியமான "கருத்து" இருப்பதாகப்படும் :-))

#// என்ன ஆனதோ என்ன ஆனதோ கடைசியில் என்ன சொல்லப்போகிறாரோ என்ற பதைப்புடன் படிப்பவர்களை ஒரு மர்ம நாவல் படிக்கிற தன்மையுடன் இறுதிப் பகுதிக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்.//

ஆஹா அப்போ எனக்கும் சுவாரசியமா எழுத வருதுனு சொல்லுறிங்களா?வழக்கமா நீட்டி வளைச்சு படிக்க முடியாதப்படி எழுதுவதாக பலரும் நினைப்பார்கள்,நானும் சீக்கிரம் நல்லா எழுதக்கத்துக்கணும் என நினைத்துக்கொள்வேன் அவ்வ்!

நன்றி!

#//இது பதிவுதானா அல்லது ஒரு சின்ன புத்தகமா என்று தெரியவில்லை.//

இதுக்கே நான் நிறைய விட்டுவிட்டேன், தட்டச்சு செய்ய முடியலை அதான். காரிகன் கூட ஊறுகா இன்னும் வரலை தம்பினு சொல்லியிருக்கார் :-))

#//முடிவு எப்படியும் வெளிவருமா அல்லது வராமலேயே போய்விடுமா என்பதும் தெரியவில்லை. பாவம் அந்தப் பயணிகள்..//

அதான் விடையில்லா கேள்வி ,ஆத்திக அன்பர்கள் வழக்கம் போல எல்லாம் பகவான் செயல் நாம என்ன செய்ய முடியும் ,பாவம் செய்தால் இதான் கதினு சொல்லக்கூடும் அவ்வ்.

#//இணையப் பின்னூட்டங்களில் சண்டைகள் சச்சரவுகள் சவால்கள் அடிதடிகள் என்று இருக்கும் வவ்வால் //

நானே ரொம்ப பயந்த சுபாவம்,பரமசாது , ஒரு பச்ச மண்ணப்போய் கொடூர வில்லன் போலவே எல்லாம் பார்க்குறிங்களே ,என்ன கொடுமை சார் இது?

#//அது எந்த விஷயமாக இருந்தாலும் படிப்பவர்கள் வியக்கும்வண்ணம் மற்றவர்களால் திரட்டமுடியாத தகவல்களுடன் வந்து அசத்துவது ஆச்சரியப்படவைக்கிறது.

அதுமட்டுமல்ல, இணையத்தில், அதுவும் தமிழில் இப்படியெல்லாம் கட்டுரைகள் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கிறீர் என்பதுதான் இதிலுள்ள பெருமைக்குரிய செய்தி. பாராட்டுக்கள்.//

ஏதோ நாம படிப்பதை முடிந்த வரையில் தமிழில் எழுதி வைக்கணும் என செய்வது ,அதிகம் எழுத முடிவதில்லை என்றாலும் எழுதியவரையில் நம்பகமாக ,தகவல்ப்பூர்வமாக இருக்க வேண்டும் என நினைப்பேன், சுவையான எழுத்துக்களாக இல்லாமல் இருக்கலாம்,ஆனால் ஒரு ஆவணப்பூர்வமான மதிப்பு இருக்க வேண்டும் என நினைப்பதால் , ஓரளவுக்கு தகவல்களை திரட்டியே எழுதுவது வழக்கம்.

நம்ம பதிவை பெரும்பாலும் மொக்கைனே நினைப்பவர்கள் தான் அதிகம், நீங்க என்னவென்றால் சிறப்ப்பாக இருப்பதாக சொல்கிறீர்கள், நல்ல மனசுக்கு நன்றி!

உங்க பின்னூட்டத்தை மட்டும் சில வயித்தெரிச்சல் கோஸ்டிங்க பார்த்தாங்க,உங்களையும் திட்ட ஆரம்பிச்சுடுவாங்க அவ்வ்!

குறும்பன் said...

என் பெயர் மட்டும் போடாம தொடுப்பு இணைத்து எனக்கு இலவச விளம்பரம் செய்திருக்கலாம் இஃகி இஃகி. ரேடார் செய்திக்காக இணையத்தில் நானும் தேடினேன் எனக்கு கிடைக்கலை உங்களுக்கு மட்டும் எப்படி கூகுள் காரன்கிட்ட வேலைக்கு செல்ல தகுதியானர் ஆயிட்டீங்க. கடத்தல், விபத்து என்று எது வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் இது காணாமல் போனது எப்பவும் மர்மவாகவே இருக்கும். ஆலிவுட் படத்துக்கு கதை தயார். நீங்க சொன்ன மாதிரி இப்போ தேடும் இந்தியக்கடல் பகுதியில் வந்திருந்தா அமெரிக்கா மற்றும் ஆசுத்திரேலியா கண்ணில் இருந்து தப்பி இருக்க முடியாது. மலேசியா அரசு எதிர்கட்சிகளை ஒழிக்க மட்டுமே தன் ஆற்றலை பயன்படுத்தி வீணாக்குதோ?

saamaaniyan said...

வவ்வாலுக்கு !,

உங்கள் வலைப்பக்கத்துக்கு நான் புதுசு ! முழுமையாக எழுதப்பட்ட அருமையான பதிப்பு. இதற்கு பின்னாலுள்ள உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. இத்தனை technical விசயங்களும் humourருடன் !

வலைப்பக்கத்துக்கு புதியவனான எனது வலைப்பூவினை வாசித்து உங்கள் கருத்துகளை பதிய வேண்டுகிறேன். நன்றி

saamaaniyan.blogspot.fr

Kalyankumar said...

ஆங்கிலப்படம் பார்த்த நிறைவு கிடைத்தது

Kalyankumar said...

ஆங்கிலப்படம் பார்த்த நிறைவு கிடைத்தது

சதுக்க பூதம் said...

மலேசிய விமான விபத்து பற்றி கேளிவி கேட்ட பல நண்பர்களுக்கு உங்களது பதிவை படிக்க பரிந்துரைத்தேன். விரிவான பதிவுக்கு நன்றி

sekar said...

உங்களுடைய பதிவுகள் அனைத்தும் வெகு நேர்த்தியாகவும் நிஜத்தைப் பிரதிபலித்தும் எழுதப்பட்டுள்ளது

ராஜ நடராஜன் said...

மிஸ்டர் டீகோ கார்சியா தியரிஸ்ட்!இன்னும் தேடினபாடா காணோம்.பாவம் பயணிகள்.தொடரும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

அருமையான பதிவு. வாழ்த்துகள்.....


--கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

உங்க பதிவின் சுட்டியத்தான் பின்னூட்ட காப்பி&பேஸ்ட் மேலாக போட்டிருக்கேனே, அப்பவும் விளம்பரம் பத்தலைனா எப்பூடி?

# கூகிள் தான் இருக்கே தேடினால் கிடைச்சிடும் என பலரும் நினைக்கிறார்கள் , ஆனால் அப்படி எளிதில் கிடைப்பதில்லை என்பது உங்களுக்கு புரியுதும், ஆனால் மத்தவங்களுக்கு புரியலையே அவ்வ்.

100க்கும் மேற்பட்ட தளங்களை அலசி கடைசியில் சிக்கியவையே பதிவாகி இருக்கு.

#//இது காணாமல் போனது எப்பவும் மர்மவாகவே இருக்கும். ஆலிவுட் படத்துக்கு கதை தயார். //

பொது ஜனத்துக்கு தான் மர்மம் ,இதன் விடை சிலருக்கு தெரியுமே. ஆனால் அவர்கள் வாயை திறக்கவே மாட்டார்கள் எனவே மர்மம் தொடரும் அவ்வ்.

இந்தியக்கடலில் சுனாமி வந்ததையே அமெரிக்க சேட்டலைட்டுகள் தான் முதலில் படம் எடுத்தன ,நமக்கு இரவே தகவலும் கொடுத்தார்கள்,ஆனால் அப்போ நம்ம அமைச்சகத்துல எல்லாம் தூங்க போயிட்டதால் இழப்பை தடுக்க முடியலை அவ்வ்.
------------

சாமனியன் சாம்,

வாங்க ,நன்றி!

ஏதோ நம்மால் முடிஞ்ச சின்ன வேலை ,மக்களுக்கு கொஞ்சமாச்சும் பயன்ப்படட்டுமே.
உங்கப்பதிவை படிக்கிறேன்.
---------------
கல்யாண் குமார்,

வாங்க,நன்றி!

நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டியாச்சா :-))

ஆங்கிலப்படங்கள் மட்டும் நல்லா இருக்கும்னு நினைக்கிறிங்க போல ,நெஞ்சில் ஓர் ஆலயம் படமும் நல்லா இருக்கும்!!!
-------------
பூதம்,

வாங்க,நன்றி!

ஆஹா படிச்சதோடு இல்லாமல் பகிரவும் செய்தீர்களா, இப்படியாச்சும் நாலுப்பேரை நம்ம பதிவு சென்றடைஞ்சா மகிழ்ச்சியே.
----------

சேகர்,

வாங்க,நன்றி!

நிஜத்தை பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டது, நாம சரியாத்தான் எழுதியிருக்கோம் என தெரிய வைக்குது நன்றி!

இதை ராச நட போன்றவர்கள் கவனிக்கவே மாட்டார்களே அவ்வ்!

------------

ராச நட,

வாரும்,நன்றி!

நாம சொன்னா தியரிஸ்ட் ,இந்தியாவே சுட்டு வீழ்த்தியிருக்கும்னு கூட பதிவை படிச்சீங்களே என்னாச்சு ?

அனுதாபம் தெரிவிப்பது மட்டுமே இப்போதைய சூழலில் சாத்தியம்.
---------
கொங்கு நாட்டார்,

வாரும்,நன்றி!

என்ன கொஞ்சக்காலமா காணோம், ராச நட வரவும் சோடிப்போட்டு வாரீர்? எதுவும் 'ரகசியம்" இருக்குமோ?
------------

sekar said...

எப்படிப் பல துறைகள் பற்றி உங்களால் நேர்த்தியாக எழுத முடிகிறது .
இயல்பான திறமையா? இல்லை எழுத்தின் மேல் உள்ள தாகத்தினால் அமைந்ததா? பாராட்டவேண்டிய திறமை உங்களுடையது.

ராஜ நடராஜன் said...

நான் உங்ககிட்ட சண்டை போடலாம்ன்னு வந்தா அதென்ன கொங்குநாட்டவரோடு சோடி போட்டுட்டு வாரேன்னு?அந்த மனுசனெல்லாம் நம்ம கடைப் ப்க்கமே வந்ததில்லை தெரியுமோ?

சரி வந்தது எதுக்குன்னா ஒருத்த்ரோட குணநலன்கள் எழுத்துல தெரிஞ்சதுன்னா ஒண்ணு ஒட்டிக்கனும் இல்லைன்னா வெட்டிக்கனும்.இதுதான் நம்ம பாலிசி.நீங்க என்னடான்னா எங்கோ கிடக்கறத எங்கயோ விட்டு சொரிஞ்சிக்கிறீங்க.

ராஜ நடராஜன் said...

இந்தியாவே சுட்டிருக்கும்ன்னு சுடுதண்ணி தியரி சொல்றது எதுனாலன்னா அவருக்கு கொஞ்சம் விமான நுணுக்கங்கள் தெரியும்.அதுக்காக டீகோ கார்சியா தியரிக்கு சப்போர்ட் செய்ய முடியுமா?

உங்க இருவரின் தியரி ஒப்பீடு சரியில்லை என்பதற்கான காரணம் பெரும்பாலனவர்க்ள் சீனப்பயணிகள்.உங்கள் இருவரில் ஒரு தியரி சரியென்றாலும் கூட சீனாக்காரன் நோண்டிருவான்.கார்சியாவை விடுங்க.ஏற்கனவே இலங்கையில் நங்கூரம் போட்டு உட்கார்ந்துகிட்ட சீனா இதுதான் சாக்குன்னு இன்னும் கொஞ்சம் நகர்ந்து திரிகோணமலைப்பக்கம் வந்து உட்கார்ந்துக்குவான் இந்தியாவை வேவு பார்க்க.

இந்த தியரி எப்படி இருக்குது:)

வவ்வால் said...

சேகர்,

வாங்க,நன்றி!

நாம படிக்கிறத பகிர்ந்துக்கணும் என எழுதுவது தான் ,நல்லா வந்தால் அது தற்செயல் நிகழ்வே , மத்தப்படி சிறப்பாக எல்லாம் ஒன்னும் இல்லீங்க,நன்றி!
------------

ராச நட,

சண்டைப்போடுற அளவுக்கு என்னா நடந்துச்சு?

கொங்கு நாட்டார் கூட உம்ம ரசிகராத்தான் இருப்பார் போல , அவரது பூர்வாசிரமம் தெரிஞ்சா விடைக்கிடைக்கலாம் அவ்வ்!

#//தெரிஞ்சதுன்னா ஒண்ணு ஒட்டிக்கனும் இல்லைன்னா வெட்டிக்கனும்//

வெட்டுவதும் பின்னர் ஒட்டுவதும் ,ஒட்டியதை மீண்டும் வெட்டுவதும் என பயணங்கள் முடிவதில்லை அவ்வ்!

#//நீங்க என்னடான்னா எங்கோ கிடக்கறத எங்கயோ விட்டு சொரிஞ்சிக்கிறீங்க.//

தினம் தினம் பசிக்குது தின்னா பசியது தீர்ந்திடுமா ,ஹி...ஹி அரிச்சா சொரிஞ்க்கிடத்தான் செய்யனும் என்னமோ போங்க "காயமே அது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பொய்யடா ,உலக வாழ்வை நினைத்து உய்யடா உய்யடா , நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே ... உய்யாலா ...கொய்யாலா ஜிங்க் ஜக்கா ஜிங்க்! அவ்வ்!

# //இந்தியாவே சுட்டிருக்கும்ன்னு சுடுதண்ணி தியரி சொல்றது எதுனாலன்னா அவருக்கு கொஞ்சம் விமான நுணுக்கங்கள் தெரியும்.//

இது உங்க அனுமானம், ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லை, சீனாக்காரன் எல்லைத்தாண்டி வந்தாக்கூட "பேசித்தீர்க்க" ஆசைப்படும் ஒரு நாடு டப்புனு சுட்டிருக்கலாம்னு "தியரி' சொன்னா ஏத்துக்கிறாப்போல இருக்காம், ஆனால் உலக சண்டியரா சுத்துர அமெரிக்கா சுட்டிருக்கும்னு சொன்னால் ஏத்துக்க முடியதாம் ,நல்லா நியாயம் சொல்லுறீர் அவ்வ்!

#// பெரும்பாலனவர்க்ள் சீனப்பயணிகள்.உங்கள் இருவரில் ஒரு தியரி சரியென்றாலும் கூட சீனாக்காரன் நோண்டிருவான்.//

உமக்கு நெற்றிக்கண் இருக்கு ,ஞானத்தில "அடையாளம் தெரியாத விமானத்தில் இருக்கவங்கலாம்" சீனர்கள்னு தெரியும் ,ஆனால் ரேடாரில் அடையாளம் தெரியாத விமானம்னு தான் காட்டுமே ஒழிய "அதுல இருக்க சீனர்களின்" பாஸ்போர்ட் எல்லாமா காட்டும் அவ்வ்!

எனவே யாரு சுட்டிருந்தாலும் "அவங்களுக்கு அதில இருப்பது சீனப்பயணிகள்" என தெரிய வாய்ப்பேயில்லை,எனவே சீனாக்காரன் நோண்டிருவான் என தயங்கலாம் மாட்டாங்க, ஏதோ சந்தேகத்துக்கிடமான விமானம் இதை விட்டால் ஆபத்து வரலாம்(செப்டெம்பர்-11 போல) எனவே சுடுறான்னு சொல்லிக்கூட இருக்கலாம்.

# தென் சீனக்கடலில் அடையாளம் இல்லாமல் எந்த விமானமும் பறக்கடக்கூடாது , மீறி பறந்தால் சுடுவோம்னு சீனா பொது அறிவிப்பு வெளியிட்டது, இது சீனாவின் வானெல்லையை தாண்டிய பிரதேசம் ,எனவே எப்படி அப்படி சொல்லலாம்னு அமெரிக்கா ரண்டு பி-51 பாமர் ராணுவ விமானங்களை ஃபுல் லோட்ல தென் சீனக்கடலில் பறக்க விட்டு "முடிஞ்சா சுட்டுப்பார்"னு போன வருஷம் தான் சவால் விட்டுது.

இந்த டக் ஆப் வார் சீனா,அமெரிக்கா இடையே இன்னும் போயிட்டு இருக்கு ,எனவே எதுவும் நடந்திருக்கலாம், இப்போதைக்கு சொல்ல முடியாது.

அமெரிக்கா, ஆசி, மலேசியா மூனு நாட்டுக்கும் தான் உண்மையான உண்மைகள் தெரிய வாய்ப்பிருக்கு, இதுல மலேசியா சொந்த நாட்டு விமான விவகாரத்துலவே அரசியல் செய்வது "மோசமான" முன்னுதாரணம்.

# விமானம் தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டதும் உடனே சுற்று வட்ட நாடுகளுக்கு அறிவிக்கவே இல்லை, அடுத்த ATC வியட்நாமின் ஹோசிமின் சிட்டி விமான நிலையத்துக்கு கூட சொல்லவில்லை , ஏன் அப்படி செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கமே கொடுக்கலை?

இரவே மலேசிய விமானத்துறை மற்ற நாடுகளுக்கு தகவல் கொடுத்திருந்தால் , தாய்லாந்து ,மலேசியா மீதாக பறந்து மலாக்கா சந்திக்கு வந்ததை விழிப்புடன் இருந்து கவனிச்சிருப்பாங்களே?

sekar said...

// நாம படிக்கிறத பகிர்ந்துக்கணும் என எழுதுவது தான் ,நல்லா வந்தால் அது தற்செயல் நிகழ்வே , மத்தப்படி சிறப்பாக எல்லாம் ஒன்னும் இல்லீங்க,//

நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொள்ள நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது .

உண்மையை எழுதுவதால் என்னைப் பக்கவாத்தியம் என்று நினைக்க வேண்டாம்.

மனதில் என்ன தோணியதோ அதை அப்படியே எழுதுவது என் பழக்கம்.

ராஜ நடராஜன் said...

அனுமானமல்ல!அவர் விமான தள கட நிறுவனம் சார்ந்தவர்.அவ்வளவுதான் சொல்லுவேன்.நோண்டி கேட்க கூடாது சொல்லிப்புட்டேன்.

சண்டை போடுறதுன்னாலும் கூட என்னை மாதிரி நாகரீகமா சண்டை போடுறவங்க கூட போடனும்:)

sekar said...

தினமும் எதாவது புதிவு வரும் என்று எதிர் பார்க்கும் எங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறீர்கள்.

உங்களின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் எங்களுக்குத் தகுந்த காரணத்தை எழுத்து மூலம் தெரியப் படுத்தவும், பதில் தராவிடில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ........ இப்படிக்கு. உங்கள் ரசிகர்கள்.

Anonymous said...

//நான் உங்ககிட்ட சண்டை போடலாம்ன்னு...///

King Walker,
உங்களுடைய பதிவுகளை தவறாமல் படித்துவருகிறேன். உங்கள் கடையில் "மட்டுறுத்தல்" உள்ளதால் தான் பின்னூட்டமிட முடியவில்லை. நீர் தான் சிறிது காலம் பதிவு எழுதாமல் இருந்தீர். எம்மை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.


வவ்ஸ்,

9/11 கான்ஸ்பிரசி தியரி பற்றி நீர் ஒரு தொடர் பதிவு எழுதவேண்டும் ஏனெனில் அவ்வளவு விடயங்கள் இருக்கிறது. நீர் எழுதினால் சிறப்பாக இருக்கும். நீர் விரும்பினால் சில சுட்டிகளை தருகிறேன். உமது எழுத்துப் பணி தொடர வாழ்த்துகள்.

-கொங்கு நாட்டான்.

Anonymous said...

very good post.
But I have only one clarification.
/செப்டெம்பர் -11 தாக்குதலுக்கு பின்னர் உலக நாடுகள் அனைத்துமே "அடையாளம் தெரியாமல் பறக்கும்" விமானங்கள் மீது கருணைக்காட்டுவதே இல்லை, வழிமறித்து சொன்ன இடத்தில் தரையிறங்க சொல்வார்கள் கேட்கவில்லை எனில் சுட்டு விடுவது தான் ஒரே "முடிவு"!//
I don't remember any such insidents (i.e, shot down of any such flights).But was there any insidents of /வழிமறித்து சொன்ன இடத்தில் தரையிறங்க சொல்வார்கள் ///
-Samson


ராஜ நடராஜன் said...

கொங்கு நாட்டாரே!என்ன கிண்டலா?கடையில அடுப்பு பத்த வச்சே ரொம்ப நாளாகுது.

பழைய வடைய சாப்பிடுவீங்க போல இருக்குதே!அவ்வ்வ்...ன்னு நானும் வவ்வால் மாதிரி போட்டுக்குறேன்:)

வவ்வால்!இது யாரு பேட்டைல புதுசா சேகர்ன்னு ஒருத்தர் வந்து வந்து எட்டிப்பார்த்துட்டுப் போறேன்னு:)

அவங்கவங்க தேர்தல்ல ஓட்டுப்போட்டு தோ!மோடி கூட இன்றைக்கு விரலை? தூக்கி காட்டிட்டார்.சேகருக்காகவது அந்த ஊசிப்போன அரசியல் வடையை எடுத்து விடறது?

ஆஸ்திரேலியா பிங்க் என்னாச்சு? இப்ப வங்களா விரிகுடாவில் விமான சிதறல்கள் கண்டு பிடிச்சதாக புது தகவல்.மனித இறப்பும் கூட அந்த நிமிடத்து பரபரப்பு மட்டுமே என்பதற்கு மலேசியா விமான விபத்தும் ஒரு உதாரணம்.

ராஜ நடராஜன் said...

//வழிமறித்து சொன்ன இடத்தில் தரையிறங்க சொல்வார்கள் ///
-Samson //

There you are Samson.வவ்வால் இறக்கையில் ஓங்கி ஒரு குத்து விடுங்க:)

Anonymous said...

//கடையில அடுப்பு பத்த வச்சே ரொம்ப நாளாகுது//

King Walker,

தவறாமல் "படித்து வந்திருக்கிறேன்" என்பதற்கு பதிலாக "படித்து வருகிறேன்" என்று எழுதி விட்டேன். சில மாதங்களுக்கு முன் வினவு தளத்தில் உமது பின்னூட்டாம் பாத்தவுடன், அட! நம்ம கிங் வாக்கர் பாருடான்னு வியப்பு. பழைய வடைகள் பிடிக்காது எப்பவும் சூடானவையே பிடிக்கும் வவ்வால் போல.

---கொங்கு நாட்டான்.

வவ்வால் said...

சேகர்,

வாங்க,நன்றி!

//நல்ல விசயங்களைப் பகிர்ந்துகொள்ள நல்ல உள்ளம் வேண்டும் அது உங்களிடம் இருக்கிறது . //

ரொம்ப நல்லவரா இருப்பாரோ?

ராச நட நோட் திஸ் பாயிண்ட்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதய்யா
வவ்வால் "வல்லவன்" வகுத்ததடா வழி
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா வவ்வால்,
வஞ்சகன் ராச நடையப்பா,

பதிவுக்கு நீ சொந்தமில்லை,

பின்னூட்டத்திற்கு நீ பந்தமில்லை,

செகண்ட் ஷோ சினிமாவுக்கு சென்றாயடா,

வீண்பழி சுமந்தாயடா வவ்வால் ,அவ்வ்!

#//உண்மையை எழுதுவதால் என்னைப் பக்கவாத்தியம் என்று நினைக்க வேண்டாம்.

மனதில் என்ன தோணியதோ அதை அப்படியே எழுதுவது என் பழக்கம்.//

பக்கா வாத்தியம்! நல்ல மனம் வாழ்க ,நாள் தோறும் பின்னூட்டமிடுக !!!

#//தினமும் எதாவது புதிவு வரும் என்று எதிர் பார்க்கும் எங்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தருகிறீர்கள்.

உங்களின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் எங்களுக்குத் தகுந்த காரணத்தை எழுத்து மூலம் தெரியப் படுத்தவும், பதில் தராவிடில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ........ இப்படிக்கு. உங்கள் ரசிகர்கள்.//

கந்து வட்டில கடன் வாங்கிட்டு தலைமறைவா ஓடினாக்கூட இப்படிலாம் வக்கீல் நோட்டீஸ் விட மாட்டாங்கப்பா அவ்வ்!
---------

ராச நட,

வாரும், மீள்கச்சேரி வைப்போம்!

# //அவர் விமான தள கட நிறுவனம் சார்ந்தவர்.அவ்வளவுதான் சொல்லுவேன்.நோண்டி கேட்க கூடாது சொல்லிப்புட்டேன்.//

மன்னு மோகன் கூடத்தான் பொருளாதார மேதை ,அதனால இந்திய பொருளாதாரத்தை நெட்டக்குத்தலா தூக்கி நிப்பாட்டினாருனு சொல்வீரா?

#//சண்டை போடுறதுன்னாலும் கூட என்னை மாதிரி நாகரீகமா சண்டை போடுறவங்க கூட போடனும்:)//

சுமேரிய நாகரிகம்,சிந்துசமவெளி நாகரீகம்னு படிச்சிட்டு வந்து சண்டைப்போடுவாரோ அவ்வ்!

--------------
கொங்குநாட்டார்,

//9/11 கான்ஸ்பிரசி தியரி பற்றி நீர் ஒரு தொடர் பதிவு எழுதவேண்டும் //

சம்பவம் நிகழ்ந்த காலத்தில் யூதசதி போன்றவை எல்லாம் படிச்சேன் , இப்போ அதெல்லாம் "காலாவதி" ஆகிடுச்சே, இப்போ போய் 9/11 பத்தி ஆரயனுமா?

எதுக்கும் தேடிப்பார்க்கிறேன், உங்க சுட்டிய போடுங்க.

# பில் கிளீண்டன் காலத்திய சமாச்சாரங்கள் சிலது படிச்சேன் , செமையான "மேட்டர்லாம்" இருக்கு ஆனால் அதெல்லாம் உண்மையானு டவுட்டாவும் இருக்கு,எனவே எழுத முயற்சிக்கலை.
---------------

சாம்சன்,

நன்றி!

#//I don't remember any such insidents //

If you want to remember any incidents ,first you should know it earlier!!!

டீ குடிக்கிற பழக்கம் கூட இல்லாதவர் போல , டீக்கடைக்கு போயிருந்தாலாவது தந்தி ,கிந்தி படிச்சு தெரிஞ்சிக்கலாம் அவ்வ்!

""The Paris-Bangkok-Singapore commercial passenger aircraft was not aware that it had mistakenly entered the Indian air space without following the laid-down procedures. Our radars picked up that a suspect aircraft had entered over Amritsar. The IAF scrambled its fighters which forced the aircraft to move out from the Indian airspace after it was confirmed that it violated procedures due to mistake," the Air Marshal added.

Sources said the pilot of aircraft was ordered by the fighter jets to ground his plane.
However, the pilot of the "suspect" aircraft identified that it was a Air France commercial flight which was on its way to Singapore through Pakistan air space, sources said. The pilot also confirmed that the aircraft had mistakenly entered Indian air space without following the set procedures."

http://www.deccanherald.com/content/21851/F

"MUMBAI: An American aircraft carrying 205 US Marines was forced to land at Mumbai airport on Sunday morning for allegedly violating Indian airspace. The chartered North American Airlines Boeing 767 was on its way to Bangkok from Fujairah in the UAE. "

http://timesofindia.indiatimes.com/city/mumbai/US-plane-with-marines-grounded-in-Mumbai/articleshow/5137387.cms

# எதாவது கொஞ்சமாச்சும் முயற்சி செய்து தெரிஞ்சிக்க பாருங்கய்யா ,என்னமோ எல்லா விஷயத்தையும் விரல் நுனில வச்சிட்டு இருக்கிறாப்போல " எனக்கு தெரிஞ்சி அப்படி ஒரு சம்பவம் நியாபகமே" இல்லையேனு புலிக்குட்டிப்போல கேள்விய மட்டும் தூக்கிட்டு வந்துற வேண்டியது அவ்வ்!

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ராச நட,

//There you are Samson.வவ்வால் இறக்கையில் ஓங்கி ஒரு குத்து விடுங்க:)//

இந்த குத்து போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

#//இப்ப வங்களா விரிகுடாவில் விமான சிதறல்கள் கண்டு பிடிச்சதாக புது தகவல்.மனித இறப்பும் கூட அந்த நிமிடத்து பரபரப்பு மட்டுமே என்பதற்கு மலேசியா விமான விபத்தும் ஒரு உதாரணம்.//

"மதவெறியர்களுக்கு"(ஊருல அப்படித்தான் பேசிக்கிறாங்க) எல்லாம் மண்டையில வெறும் சாம்பிராணி மட்டும் தான் இருக்குமா அவ்வ்!

ஒரு மாசத்துக்கு முன்னர் விபத்தானால் அந்த பாகங்கள் அதே இடத்துலவா கடலில் கிடக்கும்/

அலையில அடிச்சிட்டு இடம் மாறிடும். இப்போ வங்காள விரிகுடாவில கிடைக்கும் எனில் அது போன மாசம் வேறு எங்கோ வீழ்ந்திருக்கணும்.

ஆனால் இவனுங்க தோ இங்கே கிடக்கு,அங்கெ கிடக்குனே கதைய விடுறாப்போலவே தெரியுது , பொருளை வெளியில் எடுக்கட்டும் பார்ப்போம்.

# வங்காள விரிகுடாவில் ஒரு மாசம் முன்னர் விபத்தாகி இருந்தால் ,இன்னேரம் மெரினாவிலேயே சில பிளாஸ்டிக் பாகங்களாவது கரை ஒதுங்கி இருக்கும்.

விமானத்தில் சீட், லைஃப் ஜாக்கெட் ,இன்ன பிற பிளாஸ்டிக் பாகங்கள் உண்டு அவை எல்லாம் கடலில் மூழ்காமல் எங்காவது கரை ஒதுங்கும், ஒரு மாசமா அப்படிக்கூட கரை ஒதுங்கலையே?

#//மோடி கூட இன்றைக்கு விரலை? தூக்கி காட்டிட்டார்.சேகருக்காகவது அந்த ஊசிப்போன அரசியல் வடையை எடுத்து விடறது?//

கண் விழித்து பதிவு போடுவதில்லை

காத்திருந்தால் பின்னூட்டம் வருவதில்லை!

ஒரு பதிவு முடிய ,மறுப்பதிவு துவங்க

கணினி இதயமில்லை!

கடைசி பதிவு முடிந்த பின்னும்

பின்னூட்ட அழும்புகள் மறைவதில்லை அவ்வ்!

----------
கொங்குநாட்டார்,

//பழைய வடைகள் பிடிக்காது எப்பவும் சூடானவையே பிடிக்கும் வவ்வால் போல. //

சூடா இல்லைனா "சூடேத்தி" சாப்பிடுவோம்ல :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எல்லாத்தையும் மன்மோகன் கோட்டை விட்டாலும் பொருளாதாரத்தை கெட்டியா பிடிச்சிக்குவார்ன்னு நினைச்சதிலும் மண்ணை அள்ளிப்போட்டுட்டார்.

பிஜேபிக்கு எதிரா....இந்த தேர்தல்ல பிஜேபி எங்கே நிக்குது....மோடிக்கு எதிரா அம்மா,மகன்,மகள்ன்னு கட்டம் கட்டி ஆடுறாங்க.ஆளை விட்டாப் போதும் சாமின்னு மன்மோகன் இப்பவே வீட்டைக்காலி செய்கிறார்.4ஜி காலத்திலும் 2ஜி பற்றி பேசுற மாதிரி மோடியின் வளர்ச்சி,வீழ்ச்சியைப் பொறுத்தே மன்மோகனின் பொருளாதாரம் ஒப்பிடப் படும்.இப்போதைய ஊழல்கள் இன்னும் கொஞச காலத்தில் மக்களுக்கு செலக்டிவ் அம்னீசியாவாகிப் போகும்.பழையன் கழிதலும் பழையன மீண்டும் வருவதே இந்திய அரசியல்.

ஊரு முழுதும் சுத்தி சண்டை போடறது ஒரு ஆளு ஊர்ல பேசிக்கிறாங்கன்னு பட்டம் வாங்குறது ஒரு ஆளா!இது எப்படி இருக்குதுன்னா பெரியார் காசிப்பக்கம் போனபோது எடுத்த போட்டோ பார்த்து இந்தாளு ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்ன்னு சொல்ற மாதிரி இருக்குது:)

ஏழு கடல் நீள பதிவை தாண்டி ஒரே எட்டா பின்னூட்டம் வர்றவங்களுக்காக கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிகையையும் முக்கியமாக ஊர் சுத்தி எங்கே என்ன பொரணி பேசுறங்கான்னு ஒட்டுக்கேட்கும் உங்களுக்கும்....

பேசுவோர் பேசட்டும்
தூற்றுவோர் தூற்றட்டம்
ஏற்றதொரு கருத்தை
என் மனது உண்மையெனில்
நில்லேன்!அஞ்சேன்

தொடுப்பு கொடுத்துட்டா படிக்க மாட்டோமாக்கும்!நீங்க சொன்னது என்ன டைம்ஸ் ஆப்பு இந்தியா சொல்றது என்ன? உலக கால்பந்தாட்டுத்துல இப்படித்தான் சில சமயம் சேம்ஸைட் கோல் போட்டுடுவாங்க:)

இருக்குற மகராசி சீவி முடிஞ்சிக்கிறா மாதிரி இருக்குது!சூடேத்தி:)

கொங்கு நாட்டாரே!நோட் த பாயின்ட்.

வவ்வால் said...

ராச நட,

அதான் மன்னு மண்ணைக்கவ்விட்டாரே இன்னுமா "அவரு அப்படி செய்திருப்பார்னு நம்பினேன் என சொல்லிட்டு இருப்பீர்?

#//தொடுப்பு கொடுத்துட்டா படிக்க மாட்டோமாக்கும்!நீங்க சொன்னது என்ன டைம்ஸ் ஆப்பு இந்தியா சொல்றது என்ன? //

ஒரு சாதாரண செய்திய கூட புரிஞ்சிக்க முடியலையே ,இதுல பிபிசி விவரணப்படங்கள் எல்லாம் எந்த லட்சணத்துல பார்த்து புரிஞ்சி இருப்பார் அவ்வ்!

நான் சொன்னது தானே செய்தியில இருக்கு , இல்லை இவருக்கு மட்டும் செய்திய மாத்தி காட்டுதா டைம்ஸ் ஆஃப் இந்தியா ,

ஹே பஹ்வான் ஆர் யு ரியல்லி தேர் ,என்ன கொடுமை கடவுளே ,உமது பக்தன் ராச நடைய படைக்கும் போது ,ஏன் மூளைய வைக்க மறந்தீர் ,என் தேவனே என்னைப்பாருங்கள் இந்த ராச நடையை கொஞ்சம் கேளுங்கள் அவ்வ்!

# ஒலகக்கோப்பை கிரிக்கெட்ல சச்சின் எத்தினி கோல், அடிச்சார்னு கரெக்ட்டா சொல்லுவாரோ அவ்வ்!

sekar said...

வவ்வாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கி விடுவார்கள் என்று பல பேருக்குப் பயம் போல?

Anonymous said...

Thanks again.
பயணிகள் விமானம் கட்டு விழ்த்தப்பட்டதா செய்தி எதுவும் ஞாபகம் இல்லன்னு சொல்ல வந்தேன்.
மத்தப்படி தேடுறதுல கொஞ்சம் சோம்பல்தான் :-)

Anonymous said...

Thanks again.
பயணிகள் விமானம் கட்டு விழ்த்தப்பட்டதா செய்தி எதுவும் ஞாபகம் இல்லன்னு சொல்ல வந்தேன்.
மத்தப்படி தேடுறதுல கொஞ்சம் சோம்பல்தான் :-)

Anonymous said...

Thanks again.
பயணிகள் விமானம் கட்டு விழ்த்தப்பட்டதா செய்தி எதுவும் ஞாபகம் இல்லன்னு சொல்ல வந்தேன்.
மத்தப்படி தேடுறதுல கொஞ்சம் சோம்பல்தான் :-)

Anonymous said...

மகனே வவ்வாலு அங்கே கடையை மூடிட்டாங்கபா# அதனால இங்கே வந்து ஒரு வணக்கம் வச்சுகினு போலாமேன்னு# வரட்டா....நம்ம கடைக்கு வா கண்ணு கச்சேரி வைக்கலாம்.

ராஜ நடராஜன் said...

அனானி அண்ணாத்தே!என்னா கடை கிடைன்னு ஹேஷ்யமெல்லாம் சொல்றீக்:)

Anonymous said...

அதை வவ்வாலு சொல்லுவார்

அப்பாதுரை said...

எத்தனை விவரங்கள்! சபாஷ்.
நாலு விசிட் அடிச்சும் முழுசும் படிக்க முடியலே... உங்க பொறுமைக்கும் detail orientationக்கும் மறுபடி சபாஷ்.

எனக்கென்னவோ விபத்து தான் சாத்தியமாகப் படுகிறது. ரெண்டு மூணு வருசம் பொறுத்து திடீர்னு விபத்து விவரங்கள் வெளிவரும் பாருங்க. நீங்க சந்தேகப்படுற இன்னொரு கோணமும் சாத்தியம்:தவறிப்போய் ப்லேனை விபத்துக்குட்படுத்திட்டு சால்ஜாப்பு சொல்ல சைனா எடுக்கும் முயற்சி.. அதில் அமெரிக்கா உடன்பாடு.. wild but plausible.

மீனம்பாக்கம் பத்தி இத்தனை நாள் விவரம் தெரியாமல் போச்சே.. சென்னை விமான நிலைய ட்ரேபிக் அதிகமானால் இருக்குது பிரச்சினைனு சொல்லுங்க.

ஆக்சிஜன் இல்லாமல் செத்திருப்பாங்கன்ற கற்பனை.. ஜேம்ஸ் பாந்ட் மட்டும் இருந்திருந்தால்.. அட கமல்ஹாசன் இதை வச்சு விஸ்வரூபம் 3 எடுத்தாலும் ஆ படுறதுக்கில்லே.

Anonymous said...

வவ்வால் நீ பல IDயில் எல்லோரையும் அசிங்கப் படுத்துகிறாய். பல பேர் ஒரே IDயில்(அனானி)வந்து திருப்பித் தருகிறோம்.

நீ வந்த வழி நாங்க பயன்படுத்தியதால் உண்டான வழி.

#இனி யார் ... என்று சொன்னாலும் எங்கள் ஞாபகம் வரும் அதுதான் உனக்குச் சரியான தண்டனை# குட்பை செல்லம்

வவ்வால் said...

சேகர்,
நன்றி!

ரசிகர் மன்றமா/ இப்படிலாம் ஆசைய கிளப்பி விட்டு,என்னையும் அடுத்த முதல்வர் கனவில் மிதக்க விட்ருவாங்க போலயிருக்கே அவ்வ்!

ஹி...ஹி வருத்தப்படாத வலைப்பதிவர் சங்கம்னு ஒன்னு நாம வச்சிருக்கோம், அதுல சேர்ந்துடுங்க ,ஊருல இருக்க எல்லாரையும் கலாய்க்கலாம் :-))
-----------

சாம்சன்,

அதான் கொரிய பயணிகள் விமானத்தை ரஷ்யா சுட்டதை பதிவில் சொல்லி இருக்கேனே?

இந்தியா பல முறை பாக்கிஸ்தான் ராணுவ விமானங்களை எல்லை மீறி பறந்தது என சுட்டிருக்கு. ஒரு நாட்டின் லைன் ஆஃப் கன்ரோலில் இருந்து இரு புறமும் 100 கி.மி விமானங்கள் பறக்கக்கூடாது.

------------
ராச நட,

வாரும், வரும் போதே அனானியுடன் சோடிப்போட்டு வாரீர் ,என்னா சமாச்சாரம்?

அந்த அனானி அண்ணாத்தையா ,அண்ணியானு தெரியலை, இருங்க எதுக்கும் பாலின சோதனை செய்துடலாம் ,அப்போ தான் மல்லாக்க போடுறதா ,குப்புற போடுறதானு முடிவுக்கு வரலாம் , ஐ மீன் மல்லாக்க /குப்புற போட்டு மிதிக்க தான் அவ்வ்!
-----------------
அப்பாதுரை சார்,

வாங்க,நன்றி!

//நாலு விசிட் அடிச்சும் முழுசும் படிக்க முடியலே... உங்க பொறுமைக்கும் detail orientationக்கும் மறுபடி சபாஷ்.//

நெறையப்பேர் பதிவைப்படிக்காமலே ,படிச்சா போல கருத்து சொல்லுறாங்க( ராச நட உம்மை சொல்லவில்லை), ஆனால்ல் நாலு முறை முயற்சி செய்து படிச்சிருக்கிங்களே ,ஆர்வத்துக்கு மிக்க நன்றி!

# விபத்து என்பது தானாக நடந்திருக்காது, திட்டமிட்டு தான் செய்திருக்கணும்.

அந்தமான் சுற்றுவட்டத்தில் நெருக்கமாக பல தீவுகள் இருக்கு எனவே அங்கு விபத்தாகியிருந்தால் இத்தனை நாளில் ஏதேனும் பிளாஸ்டிக் பாகங்களாச்சும் கரை ஒதுங்கி இருக்கணும் ,அதுவும் இல்லை அதான் பலத்த சந்தேகம்.

மிகப்பரந்த கடற்பரப்பில் தான் ஏதேனும் நடந்திருக்கணும்.

# சென்னைக்கு புதிய விமான நிலையம் ,காஞ்சிபுரம்- ஶ்ரீபெரும்புதூர் அருகே கட்டப்போறாங்க,இடம் கையகப்படுத்துவதில் தான் சிக்கல். திட்டம் காகித அளவில் ஒப்புதலாகி இருக்கு.

# விசுவரூபம் -3 ஆஹ் ,தமிழக மக்கள் ரொம்ப பாவம் அவ்வ்!
-------------

வவ்வால் said...

எலே அனானி,

நீ அதே குனிஞ்சு கொடுத்த அனானி தானா?

ஒரு கொசுவுக்கு இருக்க மூளை கூட இருக்காடி, எத்தன தட சொல்றது , அனானியா வந்தாலும் ,சொம்பு திருடி/டன் ,சாயாக்கடை சரசு என எதுனா பேரப்போடுனு சொன்னா , முண்டக்கலப்பைங்க அனானி முண்டமாவே வரிங்களே ,திருந்துங்கடா நொண்ணைங்களா!

# நம்ம கடைக்கு வானு சொல்லுறியே ,வெலாசம் எதுவும் சொல்லாம போனா எப்பூடி?

அனாமத்தா வந்துட்டு ,வாய் மட்டும் வாழப்பாடி வரைக்கும் கிழியுதே அவ்வ்!

#அனானிங்கிறது ஒரு ஐடியா அவ்வ்! அறியாத தகவல் :-))

எலே மூதேவி , உனக்கு முன்னமே பலப்பேர் சொந்தப்பேருலவே மோதிப்பார்த்துட்டு மண்டைய உடைச்சிட்டு போயாச்சு,நீ அனானி அனாமத்து உன்னால ஒன்னியும் கிழிக்க முடியாது , போனாப்போவுதுனு நானா உன்ன விட்டாத்தான் நீயெல்லாம் பொழைச்சுப்போக முடியும், ஓடிப்போங்கொய்யாலே ,ஆத்தாவ கேட்டதா சொல்லு :-))

Anonymous said...

#நீ வந்த வழி நாங்க (போட்டதால் வந்தவன் நீ ) உண்டான வழி#

Anonymous said...

ஆத்தா கிட்ட சொன்னேன் அந்த 9து கிடக்குது ஒரு அனாத பய செருப்படி வாங்கிட்டு வெளியே போனவன் இந்தப்பக்கம் வர்றதில்லை அப்படினு சொல்லிட்டாங்க. இப்போ நான் யாருன்னு கண்டுபிடி முடியான நீ அதுதான்...........

Anonymous said...

வவ்வால் இது உன்னோட சொந்த பெயரா? இல்லையல்ல அப்புறம் என்ன? முதலில் நீ உன் சொந்த பெயரில் வா பிறகு நானும் சொந்த பெயரில் வருகிறேன்.

பொய்யா ஒரு பெயரை வைத்து நகரீகமற்ற முறையில் எழுதுவது உன்னை மாதிரி ஆளுக்கு தான் நல்லா இருக்கும்.

வவ்வால் said...

எலே அனானி,

இன்னுமாடி உசுரோட இருக்க இன்னேரம் டெமக்ரான் வாங்கி குடிச்சுட்டு செத்து போயிருப்பனு நினைச்சேன் அவ்வ்!

//வவ்வால் இது உன்னோட சொந்த பெயரா? இல்லையல்ல அப்புறம் என்ன? முதலில் நீ உன் சொந்த பெயரில் வா பிறகு நானும் சொந்த பெயரில் வருகிறேன்.

பொய்யா ஒரு பெயரை வைத்து நகரீகமற்ற முறையில் எழுதுவது உன்னை மாதிரி ஆளுக்கு தான் நல்லா இருக்கும்.//

எலே ஒரு பொய்யான பேருல தான் ஒரு பிலாக்கை உருவாக்குறது ,கூகுள்காரன் என்ன காசாக்கேட்கிறான் ,அதை செய்யுடா வெண்ணைனா என்னமோ பேசிட்டு.

நீ யாரா வேணா இருந்துட்டு போ " இங்கே நீ அதான்" நான் சொல்றது தான் உன் நிலை, நீ என்ன கூப்பாடு போட்டாலும் உன் கதைய யாரும் கேட்கப்போறதில்லை சரியா?

என்னைப்பொறுத்து எனக்கு சிக்கின அடிமை நீ , உன்னை வச்சு டைம் பாஸ் செய்துப்பேன் ஹி...ஹி!

காசுக்கொடுத்து கூப்புட்டா கூட இந்த காலத்தில் எவன்/எவள் இப்படி வரப்போறா ,உன் இணையம் ,உன் கணினி, உன் நேரம் அதை செலவு பண்ணி "வாங்கிக்கட்டிக்க" வரும் உன்னப்போல நல்ல மனசு யாருக்கு வரும்டி :-))

நீ அடிக்கடி வரணும் , இல்லைனா கடையில நடமாட்டமே இல்லாம "ஜிலோனு" காத்தாடும்ல ,

உனக்காக இப்பாடல்,

குத்தடி குத்தடி சைலக்கா
குனிஞ்சு குத்தடி சைலக்கா

குடத்த வச்சு கும்மியடி

குழாய்ல வச்சு தண்ணியடி

ஆஹ் ஜிந்தாக் இந்தாக் :-))

Anonymous said...

#நீ என்ன கூப்பாடு போட்டாலும் உன் கதைய யாரும் கேட்கப்போறதில்லை# அப்போ எதுக்கு ராசா எனக்கு பதில் சொல்லிட்டு இருக்கே அதுதான் விதி?

#போனாப்போவுதுனு நானா உன்ன விட்டாத்தான் நீயெல்லாம் பொழைச்சுப்போக முடியும், ஓடிப்போங்கொய்யாலே ,ஆத்தாவ கேட்டதா சொல்லு :-))#

#காசுக்கொடுத்து கூப்புட்டா கூட இந்த காலத்தில் எவன்/எவள் இப்படி வரப்போறா ,உன் இணையம் ,உன் கணினி, உன் நேரம் அதை செலவு பண்ணி "வாங்கிக்கட்டிக்க" வரும் உன்னப்போல நல்ல மனசு யாருக்கு வரும்டி :-))#

#நீ என்ன கூப்பாடு போட்டாலும் உன் கதைய யாரும் கேட்கப்போறதில்லை# அப்போ எதுக்கு ராசா எனக்கு பதில் சொல்லிட்டு இருக்கே அதுதான் விதி?

#போனாப்போவுதுனு நானா உன்ன விட்டாத்தான் நீயெல்லாம் பொழைச்சுப்போக முடியும், ஓடிப்போங்கொய்யாலே ,ஆத்தாவ கேட்டதா சொல்லு :-))#

#காசுக்கொடுத்து கூப்புட்டா கூட இந்த காலத்தில் எவன்/எவள் இப்படி வரப்போறா ,உன் இணையம் ,உன் கணினி, உன் நேரம் அதை செலவு பண்ணி "வாங்கிக்கட்டிக்க" வரும் உன்னப்போல நல்ல மனசு யாருக்கு வரும்டி :-))#

மறைமுகமாக சரணடைந்த உன்னை தொடர்வது கேவலம். பாய்....

வவ்வால் said...

அனானி மூதேவி,

சினிமாலாம் பார்க்கிறதேயில்லையா?

ஹீரோ எவ்ளோ தான் வல்லவன் ,நல்லவனா இருந்தாலும் ,அவனை சும்மா புகழ்ந்து சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி "பவர்" தெரியும்?

எனவே ஒரு வில்லன் ,பத்து அல்லக்கைனு வச்சு ,அவங்களை அடிச்சு தொம்சம் பண்ன வச்சு 'ஹீரோவின் பவரைக்காட்டுவாங்க,

ஹி...ஹி எனக்கு வில்லனா யாருமே வரவே பயப்படுறாங்க, வில்லனே இல்லாம நாம எப்படி "பவரைக்காட்ட" அதான் சிக்குன உன்னைய வச்சு நம்ம "பவரைக்காட்டிக்கிறோம்"

ஆனாலும் நீ ரொம்ப நோஞ்சானா இருப்ப போல ,ஆ வூனா போறேன்னு கிளம்பிடுற ,வாடீ வந்து எனக்கு கம்பெனி குட்றி செல்லம் ... இது வவ்வால் கோட்டைடி ..வீக் எண்ட் வேற ,இன்னிக்கு என் போதைக்கு நீ தாண்டி ஊறுகாய் :-))

ராஜ நடராஜன் said...

வவ்வாலு!எந்த சந்துல போய் சண்டியராகி அனானிய இங்கே கூட்டிகிட்டு வந்தீக! நிழல் யுத்தம்ன்னு சொல்றாங்களே அது இதுதான!

லூஸ்ல விடுவீங்களா,அத விட்டுப்புட்டு அஜால் குஜால் பாட்டெல்லாம் பாடிகிட்டு:)

வால்பையன் said...

மகனே வவ்வால் நேத்து ஊறுகாய் கிடைத்ததா என்னாச்சு கடைசி வரை நாயா பேய எல்லா தளத்துக்கும் அலைந்தாய் போல நடக்கட்டும் டும் டும் .......

வவ்வால் said...

ராச நட ,

வாரும்!

பாகவதர் பதிவுல வந்து மாட்டிச்சு , நாம யாருக்கோ விரிச்ச வலையில தானா வந்து சிக்கிடுச்சு , கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருந்தா சரிதான்னு ,அனானி ஆட்ட இங்கே ஓட்டிக்கிட்டு வந்துட்டேன் :-))

#ஹி...ஹி "லூசா விட்டதுக்கே இப்படி பொலம்புது, டைட்டா விட்டிருந்தா ரத்தக்களரி ஆகியிருக்கும் அவ்வ்!

# இதெல்லாம் சும்மா டைம்பாஸ் ,நல்லா வெறியேத்திவிட்டு பொலம்ப வச்சிட்டு , அப்படியே தூக்கி ஸ்பாம்ல போட்டா போதும் , ஊமையன் கனாக்கண்டா போல வெளியில கூட சொல்லிக்க முடியாம வெந்து சாவும் :-))
------------------

எலே அனானி,

எதுக்குய்யா வால்பையன் பேருல ஃபேக் ஐடி போடுற? அவரு நல்லவருய்யா,அவர் பேர கெடுக்காத.

இதுலாம் பிலாக்லாம் பிளாக் &ஒயிட்டா இருந்த காலத்து டெக்னிக்கு ,இப்போ 70 எம்.எம் ல டால்பி அட்மோஸ் ,டிஜிட்டல்னு ஆகிடுச்சு ஆனாலும் இன்னும் அதே பழைய டெக்னிக்க பயன்ப்படுத்துறியே கொஞ்சமாச்சும் முன்னேறுங்கடா மூதேவிங்களா அவ்வ்!

Anonymous said...

வால் பையன்னு ஏற்கனவே ஒரு ஐடி இருக்கிறது எனக்கு தெரியாது.....சாமீ.....

Anonymous said...

#ஊமையன் கனாக்கண்டா போல வெளியில கூட சொல்லிக்க முடியாம வெந்து சாவும்#
எப்பிடி நீ... சாகாம இருக்கே? நாய் மாதிரி ரோட்டிலேயே எல்லா வேலையையும் செய்வதாலா?

அப்பாதுரை said...

வவ்வால் அனானி இப்படி பிச்சு உதறுரீங்களே..
இன்னொருத்தர் ஐடியில் கமெண்ட் போட முடியுமா?!

Jayadev Das said...

வவ்ஸ்,

http://www.wvavaal.blogspot.in/

பார்த்தீரா?

Where is my earlier comment in this connection??!!

அப்பாதுரை said...

அப்பாதுரை சார்,

வாங்க,நன்றி!

சும்மா தமாசுக்கு அனானியோட 'ஓடிப்புடிச்சு" விளையாண்டுக்கிட்டு இருக்கேன் ,இவர்களைப்போன்ற கோமாளிகள் இல்லையெனில் "பதிவுலக வாழ்க்கை' போர் அடிக்க ஆரம்பிச்சுடும் :-))

# இன்னொருத்தர் பேருல "கமெண்ட்' போடலாம் ,சும்மா ஒரு பிலாக் கிரியேட் செய்து, "டிஸ்பிளே நேம்" ஆக இன்னொருத்தர் பேர வச்சிக்கலாம். ஆனால் புரொஃபைல் பார்த்தால் என்னிக்கு உருவாக்குனது எனக்காட்டிக்கொடுக்கும்.

இதை விட எளிய வழி இருக்கு அனானிக்கு அது தெரியலை, சரி நாமளே சொல்லிக்கொடுப்போம், அதை வச்சி என்ப்பேருல கமெண்ட் போட்டாலும் யாரும் நம்ப மாட்டாங்க,

பின்னூட்டம் போடும் போது,

Name/URL என இருக்க ஆப்ஷனை தேர்வு செய்து , விருப்பப்பட்ட பேரு ,அவங்க பிலாக் அட்ரஸ் என கொடுத்து கமெண்ட் போட்டால் ,இன்னொருத்தர் போல காட்டும்,ஆனால் அதுவும் கண்டுப்பிடிச்சுடலாம்.


# ஹி...ஹி அந்த டெக்னிக்கில் உங்க பேருலவே நான் போட்ட பின்னூட்டம், இதெல்லாம் அந்தக்காலத்து பிளாக்& ஒயிட் டெக்னிக் அவ்வ்!

வவ்வால் said...

அப்பாதுரை சார்,

இப்போ உங்க "கலர்சட்டை" என்ற பதிவின் சுட்டியக்கொடுத்து செய்தேன் , இதே போல 'உங்க புரோஃபைல்" காட்டும் சுட்டிய கொடுத்து செய்தால் இன்னும் பக்காவா இன்னொரு ஆள் போல இம்பெர்சொனேட் செய்யலாம், இதெல்லாம் ரொம்ப நாளா இருக்க டெக்னிக் , எனவே யாராவது இப்படி ஆள் மாறாட்டம் செய்து 'மட்டமா" கமெண்ட் போட்டால் பேரைப்பார்த்து நம்ப வேண்டாம்,சம்பந்தப்பட்டவர்களிடமே ,நீங்க தான் சொன்னிங்களா என ஒரு வார்த்தைக்கேட்டு விடவும்.

நம்மப்பதிவில் என்ன மாதிரியான கமெண்ட் ஆப்ஷன் வச்சிக்கலாம் என்பதை தீர்மானிச்சு , அனானி, நேம் ,யுஆர்.எல் வகை கூட நீக்கிக்கவும் செய்யலாம்.

# இந்த அனானிலாம் நேத்து பெய்த மழை ,இன்று காளான், கொஞ்சம் தோண்டினா இவனோட பூர்வாசிரம வரலாறே எடுத்துடுவேன் ,எதுக்கு நம்ம நேரத்தை வீணாக்கிட்டு விட்டு வைக்கிறேன் :-))

வவ்வால் said...

பாகவதரே,

அந்த அனானி வேலைய பார்த்தேன் ,நேத்து கொஞ்சம் வேலை அலைச்சல் அதான் ஒன்னும் சொல்லாம விட்டுடேன்.

# நம்ம கடையில மட்டுறுத்தலே இல்லையே ,எதப்போட்டாலும் உடனே வந்துடும்.

சினிமாவுக்கு எனிமா பதிவில் "சுட்டிய போட்டிருக்கீர்,அதுவா? பதிவ மாத்தி கமெண்ட் போட்டுட்டீர் நினைக்கிறேன்.

# மாமா கொடுப்பதெல்லாம் ஓசி விளம்பரம் என என்சாய் செய்யணும் ,நோ டென்ஷன் ,ரிலாக்ஸ் ப்ளீஸ் தான் :-))

குட்டிபிசாசு said...

//Name/URL என இருக்க ஆப்ஷனை தேர்வு செய்து , விருப்பப்பட்ட பேரு ,அவங்க பிலாக் அட்ரஸ் என கொடுத்து கமெண்ட் போட்டால் ,இன்னொருத்தர் போல காட்டும்,ஆனால் அதுவும் கண்டுப்பிடிச்சுடலாம்.//

Name/URL ஆப்ஷன் நாம கொடுத்தால்தான் அவன் போட முடியும். ஆனாலும் கொஞ்சம் அனுபவம் இருந்தால் அவன் எழுதுற லட்சனத்தை வச்சி இன்னாரென்று கிட்டதட்ட சொல்லிடலாம். :)

ராஜ நடராஜன் said...

நீங்க வாலா இல்ல வ்வ்வாலா!

நீங்களும் தாசும் எதிர் தரப்பு வக்கீல்களா இருந்ததா ஞாபகம்!இப்ப பார்த்தா ஒருத்தரு கேசுக்கு இன்னொருத்தர் ஆஜராகிறீங்க்:)

வவ்வால் said...

கு.பி,

வாரும்,நன்றி!

பின்னூட்டத்தைக்கூட முழுசா படிக்க மாட்டீரா?

//நம்மப்பதிவில் என்ன மாதிரியான கமெண்ட் ஆப்ஷன் வச்சிக்கலாம் என்பதை தீர்மானிச்சு , அனானி, நேம் ,யுஆர்.எல் வகை கூட நீக்கிக்கவும் செய்யலாம்.
//

அதான் நீக்கிடலாம்னும் சொல்லி இருக்கேனே அவ்வ்.

எழுதுறத வச்சி மட்டும் இல்லை "புரொஃபைல் இமேஜ்" காட்டாது, மேலும் பிலாக்கர் ஐ.டி எண் என ஒன்று இருக்கு அதன் மூலமும் அறியலாம்.ஒரே எண் இருப்பதிவருக்கு கிடையாது.

பேரு மேல மவுஸ் வச்சால் பிரவுசர் ஸ்டேட்டஸ் பாரில் புரொஃபைல் எண் காட்டும், இதனை எலிக்குட்டி சோதனை எனக்காலஞ்சென்ற "டோண்டு"ராகவன் குறிப்பிடுவார்.

இப்போ மக்கள் பழசை எல்லாம் மறந்துட்டாங்க போல இருக்கே அவ்வ்!
--------------

ராச நட,

நமக்கு எதிரிகளே இல்லை ,எல்லாம் நண்பர்கள் அல்லது முன்னால் நண்பர்கள் தான் :-))

தனினித்தனியா தான் கேஸ் நடக்குது, ஆனால் "குறுக்கு விசாரணை" ஒரே ஆள்கிட்டே அம்புட்டு தான் அவ்வ்!

குட்டிபிசாசு said...

//எழுதுறத வச்சி மட்டும் இல்லை "புரொஃபைல் இமேஜ்" காட்டாது, மேலும் பிலாக்கர் ஐ.டி எண் என ஒன்று இருக்கு அதன் மூலமும் அறியலாம்.ஒரே எண் இருப்பதிவருக்கு கிடையாது.

பேரு மேல மவுஸ் வச்சால் பிரவுசர் ஸ்டேட்டஸ் பாரில் புரொஃபைல் எண் காட்டும், இதனை எலிக்குட்டி சோதனை எனக்காலஞ்சென்ற "டோண்டு"ராகவன் குறிப்பிடுவார்.

இப்போ மக்கள் பழசை எல்லாம் மறந்துட்டாங்க போல இருக்கே அவ்வ்!//

கரீட்டு! எலிக்குட்டி சோதனை இப்பத்தான் ஞாபகத்தில் வருது. வரவர தமிழ்நாட்டு ஜனங்களபோல பழைசு எல்லாம் மறந்துபோகுது.

குட்டிபிசாசு said...

//நீங்களும் தாசும் எதிர் தரப்பு வக்கீல்களா இருந்ததா ஞாபகம்!இப்ப பார்த்தா ஒருத்தரு கேசுக்கு இன்னொருத்தர் ஆஜராகிறீங்க்:)//

நட்டு,

இந்த நாட்டாமை வேலைய என்னைக்கு விடப்போரிங்களோ

அப்பாதுரை said...

My goodness..இத்தனை சாகசம் இத்தனை எளிமையாக.. நானெல்லாம் not worthy not worthy..

ஒரு ஐடியா கொடுத்தீங்க.. ஹ்ம்ம்ம்.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

ஓ! இப்பதான் முழுசா இங்க கமெண்ட்ஸ் பார்த்தேன். நீ இங்க போட்ட போடுலதான் அனானியாக வந்த அந்த முண்டம் அங்க அமுதவன் சார் தளத்துல வந்து அழுவுதா.

Anonymous said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

பிசாசே!நான் பதிவே போடறது கிடையாது.இதுல நாட்டாமை வேறயாக்கும்:)இந்த ராசாவுக்கு பதிலா அமுதவன் சாரை அனுப்பினேனே!

நேரம் கிடைச்சா அசின்பிரியன்கிட்ட வந்து ஏதாவது நோண்டுறது மட்டும்தான்.

ஆமா!பேட்டையில யாரு புதுசா அ.ரா என்ற அனானி?

குட்டிபிசாசு said...

//Anand Ramakrishnan said...

நண்பர் குட்டி பிசாசுக்கு நீங்க உரிமையா என்னை முண்டம் என்று சொன்னது சந்தோசம். உங்களுக்கும் விளம்பரம் போட்டுடறேன்
//

ரொம்ப அக்கரை தம்பி உனக்கு. ஆனா ரொம்ப நல்லவன் மாதிரி பேசுரையே. நான் அமுதவன் சார் தளத்தில் சென்று உன்னை போல வாந்தி எடுக்கமாட்டேன். இங்க நீ போட்ட கமென்டை நீயே பாரு. தப்பு யாருடையது என்று தெரியும்.

குட்டிபிசாசு said...

//ஆமா!பேட்டையில யாரு புதுசா அ.ரா என்ற அனானி?//

தெரியல, யார் பெத்த புள்ளைய இங்க வந்து வவ்வால் கிட்ட வாங்கிகட்டிகுது.

குட்டிபிசாசு said...

அனானி அனந்து,

நீ ஆக்டிவா இருந்தால் தான் நீயாருனு முழுசா எனக்குத் தெரிய வரும். கண்டினுயு.

அப்புறம் எனக்கு வெளம்பரம் கொடுக்கிறது இருக்கட்டும். உங்க ஆளு (அல்லது பெர்சனாலிட்டி) பதிவை ஸ்கிரின்ஷாட் போடணும்மென்றால் மொத்த பதிவையும் போடனும். ஏன்னா அவன் மத்தவனை ஆபாசமா திட்டிதிட்டி தான் மொத்த பதிவையும் எழுதிவச்சி இருக்கான்.அவன் திட்டாத ஆளில்லை.எல்லாமே தனிநபர் தாக்குதல்தான்.

Anonymous said...
This comment has been removed by the author.
குட்டிபிசாசு said...

// Blogger Anand Ramakrishnan said...

நான்தான் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டேனே பிறகு ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்........அருணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..மேலும் உங்கள் அளவுக்கு பக்குவம் இருந்தால் ஏன் இப்படி செய்கிறேன்...இப்போ நான் என்ன செய்யட்டும் அதை சொல்லுங்கள்//

உன்னையாருப்பா புடிச்சிகிட்டு விடமாட்டேங்குராங்க. தாராளமா போ.

குட்டிபிசாசு said...

வவ்வாலு நீ கூர்கான் போய் இருக்கியா?

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

//கரீட்டு! எலிக்குட்டி சோதனை இப்பத்தான் ஞாபகத்தில் வருது. வரவர தமிழ்நாட்டு ஜனங்களபோல பழைசு எல்லாம் மறந்துபோகுது.//

ஹி...ஹி அடியேன் மட்டும் காலத்தின் கலங்கரை விளக்காய் நின்று சுழல்கிறேன் பழமைக்கும் புதுமைக்கும் ஒளிக்கீற்று பாலமாய் :-))

#//நட்டு,

இந்த நாட்டாமை வேலைய என்னைக்கு விடப்போரிங்களோ//

நாட்டாமை பாதம் பட்டா வெள்ளாமை வெளையுமுங்க

நாடு சனம் விளங்கமுங்க , ஜிங்குனாக்கு ஜிகுனா ..அவ்வ்!

#//ஓ! இப்பதான் முழுசா இங்க கமெண்ட்ஸ் பார்த்தேன். நீ இங்க போட்ட போடுலதான் அனானியாக வந்த அந்த முண்டம் அங்க அமுதவன் சார் தளத்துல வந்து அழுவுதா.//

ஹி...ஹி அதான் ,ஆனால் பாவம் பயப்புள்ள பீதியில என்ன செய்றோம்னே தெரியாம, இந்த கமென்டை அமுதவன் சார் தளத்துல காப்பி& பேஸ்ட் போடுது, இதுல என்ன வில்லங்கத்தை பார்த்துச்சோ அவ்வ்!

#//ஆனா ரொம்ப நல்லவன் மாதிரி பேசுரையே. //

அதானே கு.பி, செய்றதெல்லாம் செஞ்சுட்டு , பால்குடிமாறா பச்சப்புள்ள போல மூஞ்சு வெச்சிக்கிறது , பன்னாடைக்கு பொன்னாடையா போர்த்துவாங்க , பனங்கறுக்க எடுத்து விளாசிட மாட்டோம் :-))

#//உங்க ஆளு (அல்லது பெர்சனாலிட்டி) பதிவை ஸ்கிரின்ஷாட் போடணும்மென்றால் மொத்த பதிவையும் போடனும். ஏன்னா அவன் மத்தவனை ஆபாசமா திட்டிதிட்டி தான் மொத்த பதிவையும் எழுதிவச்சி இருக்கான்.அவன் திட்டாத ஆளில்லை.எல்லாமே தனிநபர் தாக்குதல்தான்.//

1+1 =1 என்ற கணிதப்புதிர் கேள்வி பட்டிருக்கீறோ :-))

அக்கியூஸ்டுங்களே இப்படிலாம் பேசுதே அப்போ நாமலாம் "உண்மையிலே ரொம்ப நல்லவய்ங்க" என சொன்னா குத்தமா அவ்வ்!

#//நீ ஆக்டிவா இருந்தால் தான் நீயாருனு முழுசா எனக்குத் தெரிய வரும். கண்டினுயு.//

இதான் நானும் சொல்லி அனுப்பினேன் , இப்படியே செய்திட்டு இருந்தா தான் "மடக்க' வசதியா இருக்கும்னு!

#//உன்னையாருப்பா புடிச்சிகிட்டு விடமாட்டேங்குராங்க. தாராளமா போ.//

ஹி..ஹி அதானே ,தானா வந்துச்சு 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை மண்ணு"ல வாழ்பவனாச்சே ,எனவே வரவேற்பு கொடுத்தேன் , இப்போ என்னமோ நாம கதவை மூடி வச்சு சாத்துறாப்போல பொலம்புதே அவ்வ்!

# //வவ்வாலு நீ கூர்கான் போய் இருக்கியா?//

கூர்கான் வழியா முன்ன போயிருக்கேன் , நிறைய இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ் இருக்கும், நல்ல டெவெலப் ஆகி இருக்கு எக்ஸ்பிரஸ் வேலாம் இருக்கு, ராத்திரில ஒரே கசா முசாவா இருக்கும்னு சொல்லுவாங்க ,என்ன மேட்டர்?
------------

ராச நட,

அனானி ஆனந்து உங்க மாவட்டத்துக்கார் தான் , காவேரில புதுப்பாலம்லாம் கட்டியாச்சா, ஒரு கிரவுண்டு என்ன விலைனு விசாரிச்சு வச்சிக்கிரும் அவ்வ்!

Anonymous said...

//...ஒரு கிரவுண்டு என்ன விலைனு...//

வவ்வால்,
எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. சென்னையில 2400 sq.ft -ஐ ஒரு கிரௌண்ட்-னு சொல்றாங்க . Earth surace எல்லாமே கிரௌண்ட் தானே! சென்னையில் மட்டும் ஏன் அரை கிரௌண்ட், கால் கிரௌண்ட்?

குட்டிபிசாசு said...

பிறகு சொல்கிறேன்.

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

வேற்றுகிரகம் ,

சந்தேகம் கேட்க நல்லா இடம் பார்த்தீர் அவ்வ்!

பூமியின் மேற்பரப்பு எல்லாமே கிரவுண்டு தான்ன் ஆனால் விற்பனைக்கு என ஒரு அளவு சொல்ல வேண்டாமா?

துணி வாங்கினாலும் இத்தனை மீட்டர் என நீளம் இருக்குல்ல ,அது சரி நீளம் மட்டுமே அளக்கிறோமே ,ஏன் அகலம் அளப்பதில்லை, என யோசித்து இருக்கிரா?

தறியின் அகலமே நிலையாக துணியின் அகலம் "அக்காலமுறையில் ஒரு 2 கஜம் ,6 அடி தான் ஸ்டேண்டர்ட் அதிகப்பட்ச அகலம். பாரம்பரியமான நெசவு புடவைனா 54 அங்குல அகலம் ,16 கஜ நீளம் இருக்கணுமாம் அவ்வ். இப்போ ஸ்டேண்டர்ட் புடவை சைஸ், நீளம் எட்டு கஜம் மட்டுமே (அதையே குறைச்சிடுறாங்க), அகலம் அதே.

புடைவைக்கு நிலையான நீள ,அகலம் வரையறுப்பது போல வீட்டு மனைகளுக்கு வரையறுக்கு நகரமைப்பு திட்டம்னு ஒன்னு நாட்டுக்கு நாடு இருக்கு , நம்ம நாட்டு சட்டப்படிஒரு ஏக்கரில் 16 வீட்டு மனை ,அதற்கு இடையே சாலையுடன் அமைக்கனும் , யு.கே இல் 12 வீட்டு மனை தான் அதிகப்பட்சம் பிரிக்கலாம்.

நம்ம ஊரில் வசிப்பிட மனைப்பிரிவு சாலைகளின் அளவு 8 அடி ,16 அடி , 32 அடி என வகைப்படுத்தப்பட்டுள்ளது(இதே முறையில் தான் ஊர்ச்சாலைகளும் இருக்கும்,எல்லாமே எட்டின் மடங்கில் போகும், மேலை நாட்டில் சர்வேயர்ஸ் ராட் அடிப்படையில்) இரு வீட்டுக்கு முகப்பிற்கு இடையில் "16 அடி சாலை' அவசியம் இருக்கணும்.

இதனடிப்படையில் ஒரு ஏக்கரில் 16 அடிச்சாலையுடன் , 16 வீட்டுமனைகளே உருவாக்க முடியும்,

43,560 சதுர அடிகள் = ஒரு ஏக்கர்.

ஒரு ஏக்கரைப்பிரிச்சால் ,


அதில் 16 வீட்டு மனை தலா 2,400 சதுர அடி, அதுக்கிடையிடையில் 16 அடி அகல சாலை என பிரித்தால் 43,520 சதுர அடிகள் வரும்.

இதன்ப்படி ஒரு ஸ்டேண்டர்ட் வீட்டு மனை = ஒரு யூனிட் இன் அளவு 2400 சதுர அடி தான் வரும். இதனையே ஒரு கிரவுண்ட் என்கிறார்கள்.

இப்படி பிரிக்கப்பட்ட மனைகளைதான் DTP (Directrate of Town Planing)அங்கிகரிக்கப்பட்ட மனைகள் என்பார்கள்.

# ஏன் டிடிபி அப்ரூவ்டு மனைகள் விலைக்கூட இருக்குனு ,வீட்டு மனை புரோக்கரிடம் ஒரு முறை தோண்டியப்போ சொன்னார், ஓ இதான் டிடிபி அப்ரூவ் மனையின் ரகசியாமானு அப்போ தான் தெரிஞ்சது,

அம்முறையில் சாலைக்கே அதிக இடம் போயிடுமாம், மேலும் மெயின் ரோட் 32 அடியில் இருக்கணும் , விளையாட்டு திடல், பள்ளி, வழிப்பாட்டு தளம்னு பொதுப்பயன்ப்பாட்டு இடம் எல்லாம் ஒதுக்கணும் ,அப்படி போகும் இடத்துக்குலாம் சேர்த்து விலைப்போடுவது தான் நாம கொடுக்கும் விலை.


--------

கு.பி

என்னய்யா ரகசியம் எல்லாம் வச்சு திகிலூட்டுறீர் அவ்வ்!


Amudhavan said...


\\அதில் 16 வீட்டு மனை தலா 2,400 சதுர அடி,\\

வவ்வால், இதெல்லாம் மாநிலத்துக்கு மாநிலம் தனித்தனியா சட்டம் வெச்சுக்கிட்டு அதுக்கேற்ப பிரிச்சுப்பாங்க போல. ஏனெனில் பெங்களூர்ல எல்லாம் வீட்டு மனை என்றாலேயே 1200 சதுர அடிதான். முப்பதுக்கு நாற்பது என்பதுதான் இங்கே ஸ்டாண்டர்ட். சுஜாதாகூட ஒரு கதையில பெங்களூர்ல முப்பதுக்கு நாப்பதுல ஒரு வீடு கட்டிக்கறதுதான் இங்குள்ளவர்களின் வாழ்நாள் கனவு என்பதுபோல் எழுதியிருப்பார்.
இங்கே பிரபல காண்ட்ராக்டராயிருக்கும் என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு ஏக்கர்ல நாங்கள் 22 வீடுகள் கொண்ட லே அவுட் அமைப்போம் என்று ஒருமுறை சொன்னது ஞாபகம் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

பிசாசு,வவ்வால் மற்றும் அமுதவன் சார்!

நிலம் விற்கிற விலைக்கு அடி,சதுர அடி,செண்ட்,ஏக்கர்ன்னு கூறு கட்டி விற்கிறீங்களே!இதுக்கு தாசு சண்டையே பரவாயில்லை போல இருக்குதே:)

வவ்வால்!நாம முன்னாடியே பின்னூட்டம் விவாதம் செய்யும் போதே உங்க ரெண்டு பேருக்கும் முட்டிகிச்சு.அப்படியும் நான் நாட்டாமை செஞ்சு பார்த்தேன்.இப்ப நான் நாட்டாமை செஞா அது என்னையும் பிராண்ட வரும்ன்னுதான் பேசாம ஒதுங்கிகிட்டேன்.

உங்களுக்கும் கொஞ்சம் வால் நீளம்தான்.ஆனால் சரக்கோட & சரக்கோட என்பதால் நாட்டாமை தராசு உங்க பக்கம் சாய்வதால் சரக்கோட & சரக்கே இல்லாமல் இங்கிலிபீசு எச்சில் மொழி வச்சிக்கிட்டே காலம் தள்ளுறவங்களுக்கு நம்ம நாட்டாமை சரிப்பட்டு வராது.ஒரு விதத்துல பார்த்தா தாசு மருத்துவம்தான் இதுக்கெல்லாம் கேட்கும்:)

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

பின்னூட்டங்கள் எல்லாம் கூட கவனிக்கிறீங்களே ,அதுவும் பழையப்பதிவில், அருமை!!!

# மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக்கூடும்னு தான் நினைக்கிறேன் ,ஆனால் சென்னை மாநகர் வளர்ச்சிக்கழகம், தேசிய நகர்ப்புற திட்டத்தின் கைட் லைன்ஸ் பின்ப்பற்றுவதாக சொன்னார்கள்.

பஞ்சாயத்து அப்ரூவ் மனைகளில் எல்லாம் எட்டு அடி சாலை, மெயின் ரோட் 12 அடி இருந்தா போதுமாம்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் சாலை அகலம் மற்றும் மனையின் அளவை வைத்தே "கட்டிட உயரத்தின் எல்லை அதாவது எத்தினி "ஃப்ளோர்" என நிர்ணயிக்கிறார்கள்.

எனவே 1200 ச.அடி மனையில் 1+1 தளங்கள் தான் கட்டலாம்னு நினைக்கிறேன்.

ஆனால் யாரு ஸ்ட்ரிக்ட் ஆ ரூல்ஸ் ஃபாலோவ் செய்றார், காசக்கொடுத்து இஷ்டம் போல கட்டிக்கலாம், 16 அடி சாலையில் 1+2 தளங்கள் தான் கட்டலாம்னு சி.எம்.டி.ஏ சொல்லுது ஆனால் ரங்கநாதன் தெருவில் சுமார் 12 அடி சாலை வச்சுக்கிட்டு 6,7 மாடிக்கட்டி வச்சிருக்காங்க அவ்வ்!

# 660 அடி நீளம் வரைக்குமே வரிசையா மனைப்பிரிவுகளோ ,வீடுகளோ கட்டி செல்லலாம், அடுத்து ஒரு சாலை வச்சே ஆகணும் எனக்கூட விதி இருக்கு. இதான் ஒரு பிளாக்.

கடந்த 3-4 வருடங்களா பல இடங்களில் இடம் தேடியலைந்த அனுபவம் அம்புட்டு இருக்கு,அதை வச்சி ரியல் எஸ்டேட் பத்தி எழுதணும்னு கூட நினைச்சிட்டே ,காலத்த போக்கிட்டு இருக்கேன் அவ்வ்!

ராஜ நடராஜன் said...

பிசாசு!இன்னுமொரு சந்தேகம்!இன்னுமொரு அப்பாவிதுரைன்னு ஒருத்தர் வவ்வலோட சுத்துறாரே!அவரு யாரு?

எனக்கு பதிவுலக டச்சு விட்டுப்போனதால உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னுதான்:)

கூடவே எனக்கு இன்னுமொரு சந்தேகம்.அதேன் வவ்வாலு கடைக்கு மட்டும் மழை காலத்து ஈசல் மாதிரி திடிர் திடிர்ன்னு பின்னூட்டக்காரங்க காளான் மாதிரி முளைக்கிறாங்க.

காளான்னு சொன்னதும் இரண்டு வித காளான் நினைவுக்கு வருது( வவ்வாலின் அசரீரி குரல்....காளான் எத்தனை வகைப்படும் தெரியுமா:))நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரு நல்ல காளான் மத்தது வில்லன் காளான்.இங்கே உயர் அங்காடிகளில் டப்பாவுக்குள் வச்சு காளான்கிற பேருல வினிகருக்குள் முக்கி வச்சி விற்கிறாங்க.அதெல்லாம் காளானின் சேர்த்தியே இல்ல.மழைக்காலத்தில் சும்மா மல்லிகைப்பூ மாதிரி ஒரு காளான் பூக்கும்.பெரும்பாலும் வயல்காடு,ஊட்டி,ஆனைமலை அடிவாரம்,வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் இவை பூக்கும்.கோழிக்கொளம்புக்கு மாற்றான சைவ கொளம்பு இந்த காளான் வகையாக்கும்.

வில்லன் காளான்களை அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!இருக்குற வேலைய விட்டுட்டு நான் இங்கே மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் தட்டுறேன்.நீங்க என்னடான்னா தூங்கிகிட்டிருக்கிற அமுதவன் சாருக்கு பதில் சொல்லிட்டிருக்கீங்க!

ஆமா!இன்னைக்கு என்னமோ மோடி அர்னால் கோஸ்வாமிகிட்ட இங்கிலிபீசு பேசப்போறாரு!யாரும் மிஸ் செய்திடாதீங்கன்னு டைம்ஸ் நவ் ஸ்கோரலர் ஓட்டிகிட்டுருந்துச்சு.பேசுனாரா?

அப்புறம் இன்னுமொரு விசயம்.இப்பவெல்லாம் தொலைக்காட்சி கூட அதிகமா பார்க்கிறதில்லை.அப்புறம் பின்னூட்டம் கூட தொலைக்காட்சியை பார்த்துத்தான் போடறேன்னு புலம்பகூடாது...சொல்லிப்புட்டேன்:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!என்னோட ஒரு பின்னூட்டத்துக்கும் இன்னொரு பின்னூட்டத்துக்குமான இடைவெளி 7 நிமிடங்கள் மட்டுமே!

வவ்வால் said...

ராச நட,

வாரும் என்ன குறுக்கே பாய்சிருக்கீர், புலியா, பூனையா ஓய் அவ்வ்!


இப்பதான் உம்மைக்கூட நினைச்சேன் ,ஒருக்கா ரியல் எஸ்டேட் பத்தி ராச நடக்கூட பேசினோமேனு ,அப்போ கூட ஒரு 980 ச.அடி அடுக்ககம் 50 லட்சம் சொல்லி வயத்தெரிச்சல் பட்டேன், நினைவிருக்கா, ஹி...ஹி நல்ல வேளை அந்த அடுக்ககத்தில் நம்ம உறவினர் வாங்கலை, அங்கே வாங்கினப்பார்ட்டி இப்ப ரீசேல் செய்தப்போ வாங்கின விலைய விட 2 லட்சம் கம்மியா போயிருக்காம், அதுவும் 3 வருடம் கழிச்சு அவ்வ்!

#//வவ்வால்!நாம முன்னாடியே பின்னூட்டம் விவாதம் செய்யும் போதே உங்க ரெண்டு பேருக்கும் முட்டிகிச்சு.அப்படியும் நான் நாட்டாமை செஞ்சு பார்த்தேன்.இப்ப நான் நாட்டாமை செஞா அது என்னையும் பிராண்ட வரும்ன்னுதான் பேசாம ஒதுங்கிகிட்டேன்.
//

எங்கே போனாலும் ,அதுவா வந்து முட்டிக்குது ,ஆனால் நான் கொஞ்சம் கலாய்ச்சா அப்புறம் 'நான் என்னமோ கெட்ட வார்த்தை பேசிட்டேனு" ஒப்பாரியும் வைக்குது அவ்வ்!

உம்மை யாரு ஓய் நாட்டாமை செய்ய சொன்னா, நம்மள "கைய கட்டாமா" இருந்தா போறாதா!


# வால் ,கீல்னு சொல்லி என்னை அனுமன் சேனாவாக்கிடப்பார்க்கிறீரே அவ்வ் , நாம ஒரு ஆம் ஆத்மிங்க ,ஆமாம் அவரு கேஜ்ரி"வால்" நாம "வவ்"வால்" ரெண்டு பேருலவும் "வால்' இருக்கே , இது எப்பூடி இருக்கு அவ்வ்!

# என்ன பொல்லாத இங்கிலீப்பீசு ,அது பேசுறதெல்லாம் "அமெரிக்க பிச்சக்காரன்' பேசுற இங்கிலீசு அவ்வ்!

american english ல "Slang" என்றால் "கொச்சை மொழி ,நம்ம மக்கள் தான் அமெரிக்கன் ஸ்லாங் பேசுனா பெருமைனு பீத்தினு அலையுதுங்க, அங்கே புரோஃபெசர் வேலை செய்தவர் ஒருக்கா ,நம்ம மக்களோட ஆட்டியூட் பத்தி சொல்லும் போது சொன்னார், அமெரிக்கன் ஸ்லாங்ல பேசனும்னு நினைச்சுட்டு இந்தியாவில இருந்து வர புது ஸ்டூடண்லாம் கொச்சையா பேசி வாங்கி கட்டிப்பாங்களாம் :-))

ஆக்சுவலா "அமெரிக்கன் அக்சென்ட்ல" பேச முயற்சிக்கனும்,பேசனுமாம் ,அதை தான் நம்ம மக்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டு 'ஸ்லாங்கில்" இறங்கிடுதுங்க :-))

ராஜ நடராஜன் said...

வவ்வால்!ஆர்வம் தாங்காம மோடி இங்கிலிபீசு எப்படியிருக்கும்ன்னு டைம்ஸ் நவ் போனேன்.ஊர்ல இருக்குறவனையெல்லாம் அதட்டி வச்சே நேர்காணல் செய்யுற அர்னால் கோசுவாமி ஒரு கேள்வி கேட்டுகிட்டு மோடிகிட்ட விட்டுட்டாரு.அவரு இங்கிலிசு தொந்தரவே வேண்டாம்ன்னு இந்தியில் பேசுறாரு!அதுல வேற வெட்டி ஒட்டு வேலை வேற.

சிலர் இங்கிலிசு பேசுனானலும் தப்பா இருக்குது.இவர் இங்கிலிசு பேசாம இருந்தாலும் தப்பா தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

அப்புறமா இன்னொரு விசயம் சொல்லனும்.மணி ரத்னம் முதற்கொண்டு ஆங்கில படத்தை காப்பி செஞ்சு படம் செய்றாங்க என்கிற விமர்சனம் சில சினிமா மேதாவி விமர்சகர்கள்கிட்ட பதிவுகளில் பார்க்கலாம்.உதாரணம் கஜனி படம் பற்றிய விமர்சனங்கள்.ஆங்கில பட கருவாக இருந்தாலும் அதை நேட்டிவிட்டிக்கு கொண்டு வருவது ஒரு தனி மனிதனின் உழைப்பு.அது மாதிரிதான் உங்க மீது விக்கியிலிருந்து திருடுறீங்கன்னு புலம்பல்.ஆங்கிலத்தில் இருப்பதையும் தமிழுக்கு கொண்டு வருவதில் எவ்வளவு தேடல்,மொழி,நேரம்,உழைப்பு தேவைப்படுது என்கிற பகுத்தறிவு இருந்தா இந்த மாதிரியெல்லாம் பேச தோணுமா?எத்தனை பேர் சுட்டி,தரவுன்னு போட்டெல்லாம் பதிவுகள் கொண்டு வருகிறார்கள்?அந்தப் பாராட்டுக்காக நாம ஏதோ கிறுக்கி வச்சாலும் கூட நம்ம மேலேயும் ஏற வர்ருது.சண்டைக்கு காரணம் என்னன்னு இரு பக்க பழைய பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் பார்த்தேன்.எனக்கு ஹைட்ரஜன் சண்டை கூட தெரியாது.இப்பத்தான் தாசு பதிவுகளை மேயும் போது இரு பக்கத்தையும் பார்வையிட்டேன்.இப்பவும் யார் சொல்ற சிவப்பு வட்டம் சரிங்கிறது கூட தெரியல:)

தாசு சு.பி சுவாமிகள் கூட்டத்தையும் கோயிந்தா கூட்டத்தையும் சேர்த்து புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கிப்போறேன்னு சொல்லிகிட்டிருந்த மனுசனுக்கு ஏன் இந்த ஹைட்ரஜன் ஆராய்ச்சியெல்லாம்:)

ராஜ நடராஜன் said...

நான் நாளைக்கு வந்து பின்னூட்டங்களையும் அனானி அன்பர்களையும் மேயுறேன்!பை நவ்.

வவ்வால் said...

ராச நட,

ஒரு பின்னூட்டம் போடும் கேப்பில ,மள மள மருதமலைனு பல பின்னூட்டங்கள் தட்டிவிட்டு இருக்கீங்கலே அவ்வ்!

# நான் தட்டச்சு செய்யும் கேப் தான் அந்த 7 நிமிடங்கள் :-))

# அப்பாவிதுரையா அவ்வ், அப்பாதுரை சார் பார்த்தால் "உமக்காக ஒரு ராச நட வெண்பாப் பாடக்கூடும், அவர் நசிகேச வெண்பா என தொடர் எழுதி புக்கா எல்லாம் போட்டிருக்க "எழுத்தாளர்" எனவே சாக்கிரதையா பேசவும் ,அப்புறம் வெண்பாவில் அறம் பாடினால் "பேதி" ஆகக்கூடும் அவ்வ்!

# சிப்பிக்காளான்(ஆய்ஷ்டர் மஷ்ரூம்), பட்டன் மஷ்ரூம் வகையறா மட்டுமே சாப்பிடலாம்,அதுவும் மாசு இல்லாமல் இருந்தால்ல் தான் இல்லைனா பரலோலபிராப்தி தான்.

காளான் விஷத்தன்மையா ,இல்லையா என அறிய சிம்பிள் டெஸ்ட் ,அதை இரண்டா உடைச்சா உள்ள " வெண்மை அல்லது பழுப்பு" நிறமாக மட்டுமே தெரியனும், பின்க், புளு ,ரோஸ் போல தெரிஞ்சால் அவை விஷக்காளான் , அதுல மஷ்ரூம் பனீர் மசாலா போல செஞ்சு துண்ணா "பாலூத்தி படமாக்கிடுவாங்க" அவ்வ்!

# மேஜிக் மஷ்ரூம் பத்தி உம்ம கிட்டே தான் பேசினேனா இல்லை வேற யார்க்கிட்டேயா?

# அர்னால்ட் மோடி கூட அர்னா(ப்)ல் கோஸ்வாமியா அவ்வ்!

மோடி இந்தி பேசி ,அர்னால்(ப்) கோஸ்வாமியையும் இந்தி பேச வச்சிட்டாரா அவ்வ்!

//சிலர் இங்கிலிசு பேசுனானலும் தப்பா இருக்குது.இவர் இங்கிலிசு பேசாம இருந்தாலும் தப்பா தெரியுதே:)//

ஆங்கிலம் பேசாமல் போனால் என்ன? ஆனால் உண்மையை,நன்மைய பேசினா போதுமே ,அதெல்லாம் மோடிக்கு எந்த மொழியிலும் பேச வராதே அவ்வ்!

எல்லாச்சேனல்களுக்கும் பின்னால் "ஒரு அரசியல்" கை இருக்கும்,அதற்கேற்பவே "கருத்து பிரச்சாரம்" செய்வார்கள், மீடியாவில் நடுநிலை மீடியாவே கிடையாது ,அந்தக்காலம் எல்லாம் மலையேறி வைகுந்தமே போயாச்சு :-))

# தொலைக்காட்சிய நீர் பார்க்கலை சரி ,தொலைக்காட்சி உம்மை பார்க்குதா அவ்வ்!

# ஹி...ஹி என்னைய 'சினிமா மேதாவிகள்" என சொல்ல மாட்டீர் ,அப்போ அத்உ வேற யாரோ, அவங்களாம் காப்பினு சொன்னா தப்புத்தான் அவ்வ்!

காப்பி அடிப்பது என்பது குற்றமே,அனுமதியுடன் அல்லது கிரெடிட் கொடுத்து 'மறு ஆக்கம்' செய்யலாம்.

நான் எங்கேயப்பா விக்கியில் திருடினேன் , அவற்ரை ரெபரென்ஸ் ஆக வைத்து எனது படைப்பை தான் வெளியிடுகிறேன்.

நீர் என்னமோ நான் அப்படியே மொழிப்பெயர்த்து எழுதியது போல சொல்கிறீரே ,நான் எழுதியவைகள் எதுவேணும் ஒரே ஒரு விக்கி கட்டுரையில் அப்படியே உள்ளது எனக்காட்ட முடியுமா?

பல்வேறுப்பட்ட 10கட்டுரைகளில் இருப்பவற்றை மூலமாக கொண்டு , எனது கருத்தினை சொல்லி தான் எழுதி இருப்பேன்.

இப்படி பல சான்றுகளையும் வெளிப்படையாக சொல்லி எழுதுவதால் எல்லாமே அதில் இருக்கு என நினைப்பவர்களை விட 'அடிமுட்டாள்கள்" உலகில் யாருமே இல்லை ஏன் எனில் அவர்களுக்கு எனத்உ கருத்தும் புரியவில்லை, மூலக்கட்டுரையில் இருப்பதும் புரியவில்லை எனலாம் அவ்வ்!

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# என்னை குறை சொல்லக்காரணமே என்ன தெரியுமோ ,அவங்கலாம் எதை ரெபர் செய்தார்கள் என்ற மூலத்தினை சொல்லாமல் "சொந்தமாக" ரூம்ப்போட்டு யோசித்து எழுதியது போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படியான சூழலில் ஒருவன் இதெல்லாம் ஆதாரங்கள் இதன் அடிப்படையில் "எனது கருத்து' என ஒன்றினை முன் வைக்கும் போது என்னை மறுக்கவே முடியாத சூழல், பிழை என என்னை சொன்னால் அது மூலத்தில் உள்ள பிழையே ஆகும் என்பதால் என்னை குறை சொல்லவே இயலாத காரணத்தால் இது விக்கியில் திருடப்பட்டது என பொதுவாக சொல்கிறார்கள்.

திருட்டு என்றால் என்ன என எனக்கு தெரியவில்லை, ரகசியமாக செய்தால் தான் திருட்டு, ஆனால் நான் தான் இதான் ஆதாரம் என வெளிப்படையாக சுட்டியே கொடுக்கிறேனே அப்புறம் எங்கே திருடும் நோக்கம் எனக்கு இருக்கு?

# ஹி...ஹி விக்கியில் இருந்து திருடி எழுதியது என சொன்னால் அது மாமா தான், விக்கிப்பீடியாவில் உள்ளப்படம் மற்றும் தகவலே அவை ,ஆனால் விக்கியில் இருந்து தகவல் எடுத்தாளப்பட்டது என பதிவில் எங்கும் கிரெடிட் கொடுக்கவே இல்லை

http://en.wikipedia.org/wiki/Proton%E2%80%93proton_chain_reaction

மேற்கண்ட சுட்டியில் தான் அப்படமும்,தகவலும் உள்ளது ,ஆனால் அதனை பதிவில் தெரிவித்தாரா? இல்லையே? ஏன்னா அவரே படம் வரைஞ்சு பாகம் குறிச்சாருன்னு ஊர ஏமாத்தவா? இதுக்கே விக்கியில் இருப்பதை தப்பா மொழிபெயர்த்து எங்கிட்டே மாட்டிக்கிட்டார்,அதான் கோவத்துல பொங்குறார் :-))

#நாம செய்வதெல்லாம் தகவல் மூலங்களை அடிப்படையாக வைத்து எனது கருத்தினை முன் வைப்பது ,நிறைய தரவுகள் கொடுப்பதால் எல்லாமே " அவற்றில்" இருப்பது மட்டும் என நினைத்துக்கொள்கிறார்கள், சரி அப்படியே நினைத்தாலும் வெளிப்படையாக சுட்டி அளிப்பதால் அதில் திருடும் நோக்கமும் இல்லையே?

இப்போ ஒரு ஏக்கரில் , 2400 ச.அடியாக 16 மனைகள் தான் பிரிக்கலாம்னு பின்னூட்டத்தில் சொன்ன தகவல் எந்த விக்கிப்பீடியாவில் இருக்கு? சி.எம்.டி.ஏ தளத்தில் இருக்கலாம், அங்கே இருக்கும்னு முதலில் தெரிய வேண்டாமா?

கூகிள் செர்ச் செய்தால் கிடைக்கும்னு நினைக்கலாம் ,தேடிப்பார்க்கவும், உடனே கிடைச்சால் அதிஷ்டம் :-))

ஆனால் நகரமைப்பு முறைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதனும் என்றால் இணையத்தில் மேற்கொண்டு தேடி, பல்வேறு நாட்டின் சட்டங்கள் என தெரிந்துக்கொண்டால் மட்டுமே மேற்கொண்டு விரிவாக எழுத முடியும், எனவே ஒரு "புள்ளி" எனக்கு தெரிகிறது எனில் கோலம் போட இணையம் உதவுகிறது ,அதில் விக்கியும் ஒன்று,அவற்றை எல்லாம் ஒன்னு விடமா தரவாகவும் கொடுத்து விடுகிறேன் , என்னை அறிவாளியாக காட்டிக்கனும் என ஆசை இருந்தால் நான் ஏன் சுட்டிய தரப்போறேன்? மறைச்சுட்டு எழுதும் பலப்பேர் போல எழுதினால் யாரு என்னைக்கேட்க முடியும்? கேட்டால் "ஹி..ஹி எல்லாம் என் ஞானம்" என சொன்னால் என்ன செய்ய முடியும்?

இல்லை மாமா ஏன் சுட்டிகளே இல்லாமல் கட்டுரை எழுதனும்? அப்போ உண்மையில் யாருக்கு திருடும் நோக்கம் இருக்கு? ஏமாற்றும் நோக்கம் இருக்கு, மக்களே முடிவுக்கட்டிக்கட்டும்.

#//எவ்வளவு தேடல்,மொழி,நேரம்,உழைப்பு தேவைப்படுது என்கிற பகுத்தறிவு இருந்தா இந்த மாதிரியெல்லாம் பேச தோணுமா?//

தேடல்,நேரம்,உழைப்பெல்லாம் விடுங்க , மொழிக்காக எத்தனை மெனக்கெட்டு சரியான தமிழ்ச்சொல்லை பிடிக்கிறேன் என பலருக்கும் தெரிவதில்லை, இதற்காகவே துறை வாரியாக அகராதிகள் வைத்துள்ளேன் ஒரு சில ஆங்கிலம்- ஆங்கிலம், ஒரு சில ஆங்கிலம்-தமிழ் ,அப்படியும் சரியான சொல்க்கிடைக்காத பட்சத்தில் "சுயமாக" உருவாக்கியவை ஏராளம். ஆனால் அவற்றை பெரும்பாலோர் கவனிப்பதேயில்லை என்ற வருத்தம் உண்டு. நீங்கள் சில முறை தூய தமிழ்ச்சொற்கள் என சொல்லி இருக்கீங்க.

ஹி..ஹி செயமோகர் போல பீத்திக்கொள்வதாயிருந்தால் " நான் உருவாக்கிய" இணையான தமிழ்ச்சொற்கள்" இல்லாமல் இனி இணையத்தில் யாரும் நல்ல கட்டுரைகளே எழுத முடியாது எனலாம் ,என்ன கொடுமைடேனு சொல்றது எனக்கும் கேட்குது :-))

இன்வெர்ட்டர் என்பதை "தலைகீழ் மின்மாற்றி சேமகலம்" என முதலில் தமிழாக்கியது எனக்கு தெரிஞ்சு அடியேன் தான் , இதனை தினமலரில் வந்த ஒரு கட்டுரையில் பின்னாளில் பார்த்தேன் ,அக்கட்டுரையின் ஆசிரியரும் நம்மைப்போல யோசிச்சிருப்பார்னு நினைச்சிக்கிட்டேன் அவ்வ்!

ஒரு கூடுதல் தகவல் ,நம்ம கட்டுரைகள் சிலவே விக்கியில் கூட ரெபரென்ஸ் ஆக கொடுக்கப்படுது, சுட்டக்கட்டுரைகளை எல்லாம் கொடுப்பாங்களா?, பலரும் ரெபரன்ஸ் ஆக பயன்ப்படுத்திக்கிட்டு இருக்காங்க, சமீபத்தில் சொல்வனம் இணைய தளத்தில் புங்க மரம்ப்பற்றிக்கட்டுரை வந்திருந்தது , நாம எழுதின மேட்டராச்சேனு நினைச்சுக்கிட்டே படிச்சால் ,அடியில் நம்ம கட்டுரையும் ரெபரென்ஸ் ஆக போட்டிருக்காங்க அவ்வ்!

வவ்வால் said...

ஹி...ஹி 100!

ரொம்ப நாளா விக்கியில் இருந்து எழுதுறேன் எனச்சொல்பவர்களுக்கு பதில் சொல்லனும் என நினைச்சுக்கிட்டே இருந்தேன் ,சரிஎதுக்கு வீணா விளக்கிட்டுனு விட்டுவிடுவேன் ,இன்னிக்கு உங்கப்புண்ணியத்துள்ள சொல்லியாச்சு அவ்வ்!

Amudhavan said...

ரொம்ப நாளாக நீங்கள் சொன்ன இந்த விளக்கங்களையெல்லாம் உங்களுக்காக நான் எழுதவேண்டும் என்றிருந்தேன். இன்றைக்குப் பார்த்தால் ராஜநடராஜன் எதையோ சொல்லப்போக நீங்களே உங்கள் விக்கிமீடியா பற்றிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

காப்பியடிப்பது என்பது இதில் வராது.நூலகத்தில் நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேடுவது போல்தான் இது.
நமக்குக் குறிப்பிட்ட விஷயம் வேண்டும் என்றால் அதை எங்கே தேடுவது என்பதும் எந்தப் பிரிவில் தேடுவது என்பதும் மிக முக்கியம்.
சும்மா போய் அந்த இடத்தில் நின்றுகொண்டு பிறாண்டிக்கொண்டிருந்தாலெல்லாம் தேடுவது கிடைத்துவிடாது.

எந்த விஷயமாயிருந்தாலும் அந்த விஷயம் பற்றிய அடிப்படை ஞானம் துளியாவது இருக்கவேண்டும்.

அப்படி இருந்தால்தான் இது இந்த இடத்தில், இந்தத் தொகுதியில், இந்தப் பிரிவில் கிடைக்கும் என்ற தெளிவு உருவாகும்.

அப்படிக் கிடைத்தாலும் அதில் எது எதை எடுத்து உபயோகிக்கலாம் என்ற ஞானம் இன்னொரு தனிப்பகுதி.

உதாரணமாக தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே என்ற வரியைக் கண்ணதாசன் எழுதினார் என்றால் அதனை எங்கிருந்து எடுத்தாண்டிருக்கிறார் என்று சொல்வதற்கு இருபத்திரண்டாயிரம் புத்தகங்களையா தேடமுடியும்? அது எங்கிருக்கிறது என்று தெரிந்தவர்களால்தான் சட்டென்று அந்தப் புத்தகத்தை எடுத்து குறிப்பிட்ட அந்த வரியை மேற்கோள் காட்டி அவர் எப்படிச் சொல்லியிருக்கிறார், இவர் அதனை எப்படி எடுத்தாண்டிருக்கிறார் என்பதைச் சொல்லமுடியும்.

இது ஒரு அரிய கலை.

அதனை வவ்வால் அரிதாகச் செய்கிறார் பிரமாதமாகச் செய்கிறார்.

மற்றபடி அவருடைய 'பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.

aravi said...

ஹி...ஹி 100!


1:41 AM, May 09, 2014


தேடல்,நேரம்,உழைப்பெல்லாம் விடுங்க , மொழிக்காக எத்தனை மெனக்கெட்டு சரியான தமிழ்ச்சொல்லை பிடிக்கிறேன் என பலருக்கும் தெரிவதில்லை
This words touched my heart.wish you long live,continue your service.

Anonymous said...

விளக்கத்திற்கு மற்றும் தகவல்களுக்கு நன்றி வவ்வால்.

"Unit of Area" விற்கு எந்த Unit Converter-லயும் Ground அப்படிங்கற வார்த்தை இல்லை. மீதி எல்லா units (acre, square feet, square meter, hectares) உம் இருக்கிறது. அதான் கேட்டேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

#உங்களின் மேலான எண்ணத்திற்கு ஒரு ராயல் சல்யூட்,நன்றி!

#//ராஜநடராஜன் எதையோ சொல்லப்போக நீங்களே உங்கள் விக்கிமீடியா பற்றிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள்//

ராச நட இருக்காரே ஒரு அனுகூல சத்ரு அவ்வ்!

கூடவே இருந்துக்கிட்டு கச்சிதமா குழிப்பறிப்பாரு , அதோட மட்டுமா குழியில தள்ளி ,மண்ணும் அள்ளிக்கொட்டிருவாரு ,அம்புட்டு நல்லவர்ரு அவ்வ்!

பின்ன என்ன சார், போறப்போக்கில் விக்கியில் இருந்து திருடுறீங்கனு சொல்றாங்கனு புதுசா ஒன்னக்கிளப்பிட்டு போறார் ,அவர் சொல்றத பார்த்தால் திருடுனாலும் திருமங்கையாழ்வார் போல சேவை செய்றிங்கனு சொல்வதாகிடுது, சுட்டியெல்லாம் போட்டு ஆதாரமாத்தான் விக்கிய காட்டுறோம், அதுவும் பத்து தளங்களை காட்டுறோம் அதுல ஒன்னுதான் விக்கிஅவ்வ்!

இதுல என்ன நகைச்சுவைனா ,என்னப்பத்தி சொல்றவங்களுக்கு ,நான் என்ன எழுதி இருக்கேன்னும் புரியலை, விக்கியில என்ன இருக்குனும் புரியலை ,:-))

நான் சொல்லும் கருத்துக்கு சான்றாவணம் தான் அவை, பிறப்பகுதிகள் எல்லாம் நம்ம கருத்தே,எதையாவது சொல்லணும் என நம்ம மேல அப்படி பாய்வது, நாம மறைச்சு வச்சா பாயலாம் அதான் வெட்ட வெளிச்சமாக சுட்டிய போட்டு சொல்லும் போது பாய்வதில் நியாயமேதும் இல்லையே ?

#மற்ற உங்கள் கருத்துக்கள் எவ்வாறு எனது கட்டுரைகளை அணுக வேண்டும் என்பதற்கு மிக அருமையான உதாரணம், நானும் அப்படி தான் நினைத்துக்கொள்வதுண்டு.

# நிறைய பேரு அப்படியே ஈ அடிச்சான் காப்பியா எடுத்து எழுதிவிட்டு , எங்கே இருந்து எடுத்தோம்னு மூச்சே விடுவதில்லை ,ஆனால் அவர்களை பற்றி யாரும் வாயும் திறப்பதில்லை , மெத்தப்படிச்ச இணையவாசிகளும் "ஆள் பார்த்து" தீர்ப்பு சொல்லும் போது , இவர்கள் சமூகத்தில் உள்ள சாமனியன் 'கவர்ச்சி வாக்குறுதிகளூக்கு" ஏமாந்துவிடுகிறான் ,காசுக்கு விலை போய்விடுகிறான் என கிண்டலடிப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை :-))

#//பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.//

நான் எங்கே சண்டைப்போட்டேன் ? இது எப்படி சரியாகும் என கேட்டால்,அவர்கள் விளக்கணும் அல்லது எனக்கு தெரிஞ்சத சொன்னேன் என ஒத்துக்கணும் ஆனால் அதை விட்டுவிட்டு நீ எப்படி அதைக்கேட்கலாம்னு இல்ல பாய்றாங்க அவ்வ்!

கேள்விக்கேட்பதற்கு பெயர் தான் சண்டைனா ,நான் இன்னும் நிறைய சண்டை போடுவேன் :-))

"ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை


பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே


(ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் , கவிஞர் வாலி எழுதி ,எம்.எஸ்.வி இசையில் எம்சிஆர் தோன்றியப்பாடல்)

ஹி...ஹி பாட்டுக்கு நடுவே வரும் இந்த வசனம் அருமையோ அருமை !!!

நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

-----------

அரவிந்தன் அரங்கநாதன்,

வாங்க,நன்றி!

//This words touched my heart.wish you long live,continue your service.//

இதயத்தில் இருந்து வரும் இவ்வார்த்தைகளுக்கு இணையேது, மிக்க நன்றி!

நம்மையும் வாழ்த்த நாலுப்பேர் இருக்காங்க ,அப்போ சுவனம் நிச்சயம் அவ்வ்!
-----------------
வேற்றுகிரகம்,

வாரும்,நன்றி!

//"Unit of Area" விற்கு எந்த Unit Converter-லயும் Ground அப்படிங்கற வார்த்தை இல்லை. மீதி எல்லா units (acre, square feet, square meter, hectares) உம் இருக்கிறது. அதான் கேட்டேன்.//

அது ரியல் எஸ்டேட்டுக்கு இருக்க தனிப்பட்ட "அளவைச்சொல்' அது மற்ற பொதுவான நில அளவையில் இருக்காது.

ரியலெஸ்டேட்டில் ஒரு யூனிட் ஏரியா ஒரு கிரவுண்ட் என வைப்பது ,அதன் அளவு இதெல்லாம் ஒரே நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுது.

நம்ம ஊரில் பல அளவை முறைகள் இருக்கு, நிலம் சார்ந்து மா,வேலி,குழி ,காணி , முகத்தல் அளவையில் சேர்,படி,வீசை,ஆழாக்கு ,குறுணி போன்ற அளவுலாம் கேள்விப்பட்டிருக்கீரா?

மதுரையில் (தல்லாக்குளமென நினைக்கிறேன்)இருக்க ஒரு பிள்ளையாருக்கு முக்குறுணி பிள்ளையார் :-))

முக்குறுணி அரிசில ஒரே கொழுக்கட்டையா செஞ்சு படைப்பாங்களாம் அதான் அப்பெயர் அவ்வ்!

*1 குறுணி= 8 படி.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

தனியாக போடவேண்டிய ஒரு பதிவை இப்படி பின்னூட்டமாக போட்டு வீணடிக்காதீர்.
ரியலெஸ்டேட் அளவை பற்றிய தகவல்களை தனி பதிவாக போடும். தெரியாதவகளுக்கு உபயோகமாக இருக்கும்.

//அப்புறம் வெண்பாவில் அறம் பாடினால் "பேதி" ஆகக்கூடும் அவ்வ்!//

//அதுல மஷ்ரூம் பனீர் மசாலா போல செஞ்சு துண்ணா "பாலூத்தி படமாக்கிடுவாங்க" அவ்வ்!//

:))

// அது மூலத்தில் உள்ள பிழையே ஆகும் என்பதால் என்னை குறை சொல்லவே இயலாத காரணத்தால் இது விக்கியில் திருடப்பட்டது என பொதுவாக சொல்கிறார்கள்.//

இணையத்தில் சிலர் பிழைவிட்டதைக் கேள்வி கேட்டால், அவர் கேள்விக்கு பதில் சொல்லலாம். இல்லாவிடில் தெரியாது என்று சொல்லலாம். நான் யார் தெரியுமா எனக்குத் தெரிந்தது உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்கள். இப்படி செய்பவர்கள் பேசாமல் கருத்துப்பெட்டியை எடுத்துவிடலாம்.

ரெபெரன்ஸ் இல்லாமல் எதையும் எழுத இயலாது. ஒரு விஞ்ஞான ஜர்னல் எடுத்துக் கொண்டாலும், ரெபரன்ஸ்கள் உண்டு.

//நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்.
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது//

இப்பாடலில் இன்னுமொரு வசனமும் வரும். மேற்குவங்கத்தில் படிக்கும்போது பேராசிரியர் அவருடைய ப்ராஜக்ட் வேலையெல்லாம் கொடுத்து ஊருக்கு போகவிடமாட்டார். அப்போது பாடிக்கொள்வோம்.

ஆண்1: காலா காலத்துக்கும் இப்படியே இந்த ப்ரபசர்ருக்கு உழைச்சிக்கிட்டே இருந்து
இந்த வெஸ்ட்பெங்கால் மண்ணுக்கே எருவாக வேண்டியது தானா?

ஆண்2: நம்ம தமிழ்நாட்டுக்கு போவதெப்போ?

ஆண்3: பொங்கல் கொண்டாடுவது எப்போ?
ஆண்4: இன்னும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருக்குறது?

தலைவர்: ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
****************************
நட்டு,

வெளிநாடுகளில் கிடைக்கும் காளான்கள் பொதுவாக பிரத்யேகமாக பசுமைக்குடிலில் வளர்க்கப்படுபவை. அதனால் ஆபத்தில்லை. வினிகரில் காளான் மட்டுமல்ல மிளகாய், வெள்ளரிக்காய், ஆலிவ் என பல பொருட்கள் விற்கப்படுகின்றன. சில காளான்கள் வற்றல் போலவும் கிடைக்கும்.ஐரோப்பிய நாடுகளில் காளான் காட்டில் சென்று காளான் சேகரிப்பது ஒரு பொழுது போக்கு. கருப்பு நிறத்தில் பூமிகடியில் இருந்து ஒரு காளான் எடுப்பார்கள், அதை நாயை கொண்டு கண்டுபிடிப்பார்கள். பன்றியை கொன்டும் கண்டுபிடிப்பதுண்டு, ஆனால் சிலசமயம் கண்டுபிடிப்பதை அதுவே தின்றுவிடும்.:)

நான் காளானை இறைச்சி சமைப்பது போல செய்து தேங்காய் பால்விட்டு"காளான் குர்மா" வைத்துவிடுவேன்.
***********************************
அமுதவன் சார்,

//மற்றபடி அவருடைய 'பதிவுலகச்சண்டைகளை' நான் ஆதரித்துக் கருத்துத் தெரிவிக்கிறவனில்லை என்பதையும் சேர்த்தே இங்கே சொல்லிக்கொள்ளுகிறேன்.//

இப்படி சண்டைக்கு வருபவர்களிடம் ஒதுங்கிப் போவதில் சிலப் பிரச்சனைகள் உண்டு.

"என் கேள்விகளுக்கு பயந்து ஓடிவிட்டார்" "செருப்பால் அடித்தேன், ஓடிவிட்டார்" என போகும்வரும் இடம் எல்லாம் சொல்லித்திரிவார்கள்.

குட்டிபிசாசு said...

//ஒரு கூடுதல் தகவல் ,நம்ம கட்டுரைகள் சிலவே விக்கியில் கூட ரெபரென்ஸ் ஆக கொடுக்கப்படுது, சுட்டக்கட்டுரைகளை எல்லாம் கொடுப்பாங்களா?, பலரும் ரெபரன்ஸ் ஆக பயன்ப்படுத்திக்கிட்டு இருக்காங்க, சமீபத்தில் சொல்வனம் இணைய தளத்தில் புங்க மரம்ப்பற்றிக்கட்டுரை வந்திருந்தது , நாம எழுதின மேட்டராச்சேனு நினைச்சுக்கிட்டே படிச்சால் ,அடியில் நம்ம கட்டுரையும் ரெபரென்ஸ் ஆக போட்டிருக்காங்க அவ்வ்!//

டி.எஸ்.பாலைய்யா பற்றி எழுதினேன். அதை எந்தப் புண்ணியவானோ விக்கியில் ரெபரென்ஸாக சொல்லி இருக்காங்க. உருப்படியாக எதாவது எழுதினால் நாமும் எதாவது தமிழுக்கு செய்தோமென்று நினைக்கலாம்.

Anonymous said...

-Samson
விமான விபத்து பத்தி பின்னூட்டம் போடலாம்னு வந்தா விஷயம் எங்கெங்கோ போயி எங்கயோ வந்து நிக்குது.. ம்.. எல்லாமே சுவாரஸ்யம்தான் ..நடக்கட்டும் வவ்வால் .
சரி நான் சொல்ல வந்த மேட்டர் என்னன்னா நீங்க சொன்ன மாதிரி 9/11 (2001) க்கு பின்னாடி பயணிகள் விமானம் எதுவும் சுட்டு விழ்த்தப்படல (1989 ல நடந்தது மாதிரி ) மத்தப்படி தரையிறங்க சொன்னது Ok..

http://en.wikipedia.org/wiki/List_of_airliner_shootdown_incidents

Anonymous said...

1 மரக்கால் = 8 படி.

எங்க ஊருல இன்னும் மரக்கால்/ படி அளவைதான்

-Samson

ராஜ நடராஜன் said...


முதலாவதாக அப்பாதுரை அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.பதிவுலக டச் விட்டுப்போனதால் யார்,எதை,எங்கே என்ன சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

வவ்வால்!நேற்று பின்னூட்டம் போடும்போதே எண் 97 காட்டுச்சு.சரி ஒரு ரன் எடுக்கட்டுமேன்னு விட்டுட்டுப் போனா 100 அடிச்சு அதுக்கு மேலேயும் நிக்குதே பின்னூட்டம்.

//சிப்பிக்காளான்(ஆய்ஷ்டர் மஷ்ரூம்), பட்டன் மஷ்ரூம் வகையறா மட்டுமே சாப்பிடலாம்//

நான் சொல்லல...வவ்வாலின் அசரீரிக் குரல் கேட்குதுன்னு:)

//கூகிள் செர்ச் செய்தால் கிடைக்கும்னு நினைக்கலாம் ,தேடிப்பார்க்கவும், உடனே கிடைச்சால் அதிஷ்டம் :-))//

ரொம்ப நாளாவே எனக்கு மட்டுமல்ல பலருக்கும் உங்கள் தகவல் சேமிப்பு ரகசியம் வியப்பே.உங்கள் தேடல்களும்,அமுதவன் சார் தேடும் முறைகளை நூலகத்தோடு ஒப்பிட்டது மிகவும் சிறப்பு அந்த மெக்னாஸ்கோல்டு ரகசியத்தை பகிர்ந்தா பலருக்கும் உதவுமே.கூகிள் தேடலில் நாம பொறுப்பா ஒன்றை தேடனும்ன்னு போனா நகைச்சுவை காட்சிகளில் வழி கேட்பவருக்கு வழி சொல்ற கதை மாதிரி அந்து சந்துல போய் வலது பக்கமா திரும்பினாங்கின்னா ஒரு புள்ளையார் கோயில் வரும் அதுக்கு இடது பக்கமா திரும்பினீங்கன்னா ஒரு மெக்கானிக் கடை இருக்கும்,அதையும் கடந்து போய் இடது பக்கம் திரும்பி வலது பக்கம் திரும்பினா மண்ணடி குறுக்கு சந்து வந்திடும்ங்கிற மாதிரி எங்கோயோ இழுத்து விட்டுடும்!நீங்க சொன்ன மாதிரி தேடுனது கிடைச்சா அதிர்ஷ்டம்தான்:)

நான் சொல்லவந்தது சொல்ல வரும் கருத்துக்கு ஆதாரம் தேடுவதில் உள்ள உழைப்பை மட்டுமே.நான் எங்கே விக்கியில் திருடுறீங்கன்னு சொன்னேன்.நீங்க சொன்ன மாதிரி ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே ஈயடிச்சான் காப்பியா நானும் தமிழுக்கு கொண்டு வந்து பதிவு போட்டிருக்கேன்.

தமிழிலாவது ஆங்கிலத்துக்கு ஒப்பு வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.நீங்க உருவாக்கின மாதிரி புது வார்த்தைகள் உருவாக்க இயலும்.சில மொழிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடையாது.

நான் முன்னாடியே உங்கள் சொல் அகராதி பற்றி சொல்லியிருக்கிறேன்.அசின் படம் மாதிரி தொடர்ந்து பின்னூட்டங்களில் மட்டும தெரிவதால் சொற்பதங்கள் கோர்வையாக இல்லை.உதாரணமாக முக்குறுணி அரிசி மாதிரி பதங்களை ஓரிடத்தில் சேமிக்கலாம்.அல்லது விக்கிபீடியாவில் கூட சேர்த்து விடலாம்.பலருக்கும் போய் சேரும்.







ராஜ நடராஜன் said...

//இதுல என்ன நகைச்சுவைனா ,என்னப்பத்தி சொல்றவங்களுக்கு ,நான் என்ன எழுதி இருக்கேன்னும் புரியலை, விக்கியில என்ன இருக்குனும் புரியலை ,:-))//

தேடும் ஆர்வம்,உள் வாங்கிக் கொள்ளும் பொறுமை வேண்டும்.அதை விட்டுட்டு நான் அந்தக் கடைக்கு போறதே கிடையாதுன்னு சொல்லிகிட்டு பிராண்டினா:)

ஒருவரின் கருத்தில் உடன்பாடில்லாமல் போனால் கூட அதை மென்மையாக சொல்லலாம்.இல்லைனா கருத்து சொல்வதை கடந்து போகலாம்.அப்படியும் சண்டை போடுவதற்கும் வரைமுறைகள் வைத்துக்கொள்ளலாம்.

பிசாசு குட்டி!கல்கத்தா பத்தியெல்லாம் கொஞ்சம் கதைக்கிறது?நான்,ஒரு பெங்காலி,ஒரு சேட்டன் என கல்கத்தாவில் இருந்தோம்.கையில் காசு இல்லாமல் பாக்கெட்டில் கிடந்த சில்லறைகளையெல்லாம் சேர்த்து பெல்பூரி,தயிர் வடை,சமோசான்னு ஒரு கலவையா சாப்பிட்டு வயிறு நிரப்பினோம்.மொத்த செலவே பத்து ரூபாய்க்கும் கீழே என்று நினைவு.அது ஒரு ஜோதிபாசு காலம்.பழைய பிரிட்டிஷ் கட்டிடங்கள்,நாக்கை நீட்டும் காளி,அதன் பக்தர்களான தாதாக்கள்,பாலுமகேந்திரா படத்தில் வரும் பனிமாதிரியான மார்கழிப் பனிமூட்டம்.ஓடிப்போய் ஏறிக்கொள்ளும் வேக ட்டிராம் வண்டி,அழுக்கு கட்டிடங்கள்,தி.மு.க கால இந்தி ஒழிக மாதிரி ஆங்கிலம் ஒழிக என்ற தார் பூசல்.

வவ்வால்!சமீபத்தில் கம்யூனிஸ்ட்கள் எத்தனை வகைப்படுவார்கள் என்ற நையாண்டியை ரசித்தேன்.இருந்தாலும் வருமானத்துக்குள் செலவு செய்ய இயலும் நிலையை ஜோதிபாசு அரசு செய்தது.இந்திய உலகமயமாக்கலில் வங்காளத்தில் கம்யூனிசம் தோற்றுவிட்டது.நம்ம சேட்டன்கள் கூட கப்பை கிழங்கு,சாராயக்கடை என்ற நிலையிலிருந்து கோயம்புத்தூரிலிருந்து அரிசி திருடுவதில் துவங்கி அரேபிய நாடுகளுக்கு குடியேறி அச்சன் அச்சுதானந்தத்தை கவிழ்த்து விட்டார்கள்.தமிழகம் மாதிரி வாரிசு அரசியலை கருணாகரன் நிறுவ முயன்று தோற்ற போதிலும் காங்கிரஸ் வலுவானதற்கு கேரளாவின் கம்யூனிச சங்கங்கள் செயல்பட்ட முறை ஒரு முக்கிய காரணம்.

ராஜ நடராஜன் said...

சாம்சன்!ரேடாரில் பச்சைக் கலருல தெரிஞ்ச உடனேயெல்லாம் சுட மாட்டாங்க!விமானிக்கு தகவல் தொடர்பு செய்து கீழே இறங்க சொல்லியும் ஆள் மசியலேன்னா ஒரு வேளை சுடலாம்.எனக்கு தெரிஞ்சு 9/11க்குப் பின்பு பெரிசா எந்த விமானமும் கடத்தவில்லை.காரணம் ஏன் என்றால் விமான கடத்தலில் பழம் தின்று விமான டஸ்ட்பின்னுக்குள்ளேயே கொட்டை போடும் ஈரான் ராக்கெட் விடும் ஆர்வம் வந்த பின் திருவிழா துப்பாக்கியெல்லாம் வேண்டாம் என மாறிவிட்டது.எகிப்து இஸ்லாமிய சகோதர இயக்கமெல்லாம் உள்ளூர் ஜனநாயக,ராணுவ இழுபறிக்கே நேரமில்லாமல் இருக்குது.ஜேம்ஸ்பாண்ட் பட ரக வில்லன்களான சதாம்,கடாபி போன்றோர்களை அமெரிக்க ராணுவம் அதகளப்படுத்தி விட்டது.விமான கடத்தலில் பி.எச்.டி வாங்குன ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் கூட்டு தலிபான் கூட்டம் ஒசாமாவின் காசு இல்லாமல் சிதறிவிட்டார்கள்.இன்னுமொரு வில்லங்கமான ரஷ்யாவெல்லாம் தொழிட்நுட்பம் மாறி விட்டதால் கடத்த்ல் ஜுஜிபிக்கெல்லாம் போவதில்லை.

கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது? முதல் கேள்வி
வங்காள விரிகுடாவில் அதுவும் ஏழுமணி நேரம் கடந்து ஏன் விழுந்தது என்பது இரண்டாம் கேள்வி.

டிகாசியா கான்ஸ்பைரசி சரிப்பட்டு வரலை.காரணம் அதிக பயணிகள் சீனர்கள்.

குட்டிபிசாசு said...

//கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது?//

பாரதிராஜா நோட் திஸ் பாயிண்ட் :)

//பிசாசு குட்டி!கல்கத்தா பத்தியெல்லாம் கொஞ்சம் கதைக்கிறது?//
"கீ தாதா! கீ கொர்ச்சி! பாலோஅச்சி!"

ஜோதிபாசு காலத்தில் மட்டுமல்ல, புத்ததேப் காலத்திலும் அப்படித்தான் இருந்தது. ஒரு ரூபாய்க்கு டீ சட்டியில் கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

கு.பி,

வாரும்,நன்றி!

அப்படி தனியாக பதிவாக போடெனும்னு நினைச்சிக்கிறது தான் ,ஆனால் சோம்பேறித்தனத்தால் அப்படியே கிடப்பில் போட்டுறது, எப்பவாச்சுமிப்படி தானா பின்னூட்டமாக வந்துடும் அவ்வ்!

இப்படியே பலவும் பின்னூட்டங்களிலேயே கதைத்து விட்டு போயிடுறது , என்ன இப்போ எப்படியோ நாலுப்பேருக்கு படிக்க கிடைச்சா சரி தானே!

நம்ம கடையில பின்னூட்டசேவை செய்ததை விட ஊரார் கடையில் செய்தது அதிகம் அவ்வ்!

ஆனால் கடைசில நமக்கு தான் கெட்டப்பேரு ,நாம் என்ன மாதிரியான கருத்து சுதந்திர சமூகத்தில் வாழ்கிறோம் அவ்வ்!

#//ரெபெரன்ஸ் இல்லாமல் எதையும் எழுத இயலாது. ஒரு விஞ்ஞான ஜர்னல் எடுத்துக் கொண்டாலும், ரெபரன்ஸ்கள் உண்டு. //

ஆணி அடிச்சிட்டீர்!!!

//இப்பாடலில் இன்னுமொரு வசனமும் வரும். மேற்குவங்கத்தில் படிக்கும்போது பேராசிரியர் அவருடைய ப்ராஜக்ட் வேலையெல்லாம் கொடுத்து ஊருக்கு போகவிடமாட்டார். அப்போது பாடிக்கொள்வோம்.//

நீரும் அதெல்லாம் கவனிப்பீரா பலே!

//கருப்பு நிறத்தில் பூமிகடியில் இருந்து ஒரு காளான் எடுப்பார்கள், அதை நாயை கொண்டு கண்டுபிடிப்பார்கள். பன்றியை கொன்டும் கண்டுபிடிப்பதுண்டு, ஆனால் சிலசமயம் கண்டுபிடிப்பதை அதுவே தின்றுவிடும்.:)//

அதான் மேஜிக்மஷ்ரூமா?

ஷ்ரூம் என ஒருப்படம் , அதுல இங்கிலாந்து உட்லேண்ட்ஸ்ல போய் மேஜிக் மஷ்ரூம்(போதை தரும் மஷ்ரூம்) எடுத்து டீ டிக்காஷனில் கொதிக்க வச்சு "டீப்போட்டு குடிச்சு மப்பாகிற ஒரு கேங்கில் தொடர் கொலை நடக்கும்.

அந்த மஷ்ரூம் இப்படித்தான் காட்டுல கிரேகலரில் இருக்கும் , அளவு அதிகமா சாப்டா "பாபா மர்க்கயா" தான்.

#//"என் கேள்விகளுக்கு பயந்து ஓடிவிட்டார்" "செருப்பால் அடித்தேன், ஓடிவிட்டார்" என போகும்வரும் இடம் எல்லாம் சொல்லித்திரிவார்கள்.//

சரியா புரிஞ்சு வச்சிருக்கிரே :-))

#//அதை எந்தப் புண்ணியவானோ விக்கியில் ரெபரென்ஸாக சொல்லி இருக்காங்க. உருப்படியாக எதாவது எழுதினால் நாமும் எதாவது தமிழுக்கு செய்தோமென்று நினைக்கலாம்.//

அஃதே அஃதே!

----------

சாம்சன்,

உங்களை என்ன செய்றது அவ்வ்!

இறங்கலைனா சுடுவாங்க அப்படி முடிவெடுத்து உலக நாடுகள் தீர்மானம் போட்டிருக்கு என்றால் ,எங்கே சுட்டாங்கனு கேட்டால் என்ன செய்ய?

தரையிறங்கிட்டா அப்புறம் ஏன் சுடப்போறாங்க ,இப்ப சமீபத்தில் அப்படி சம்பவம் நடக்கல,இறங்க மறுத்தால் சுடுவது நிச்சயம்,அதற்காக பயணிகள் விமானத்தினை சுட்டது தப்பு என இப்போ உள்ள சூழலில் சம்பந்தப்பட்ட நாடே குற்றமும் சொல்ல முடியாது ,அதனை தான் பதிவில் சொல்லி இருக்கேன்.

சட்டம் போட்டிருக்காங்க என சொன்னால் ,அதால் யாரை புடிச்சாங்கனு கேட்கிறீர் அவ்வ்!

உங்களுக்குலாம் பதில் சொல்வது நேர விரயம் ,இனி எக்கேடோ கெட்டு போங்க தேவையான அளவுக்கு சொல்லியாச்சு!

# மரக்கால்,படி ,கலமெல்லாம் எங்க கிராமத்துல இன்னும் இருக்கு, நகரத்துல தான் வழக்கில் இல்லை.

முந்திரியே ,மல்லாட்டைய இன்னும் கிராமத்துல படியில விக்குறாங்க அவ்வ்!
----------

வவ்வால் said...

ராச நட,

வாரும்,

//நான் சொல்லல...வவ்வாலின் அசரீரிக் குரல் கேட்குதுன்னு:)//

கேட்கும் கேட்கும் ,சரக்கு ஓவராப்போனாசுவன சுந்தரிகள் பாடுறது கூடகேட்கும் :-))

#//மெக்னாஸ்கோல்டு ரகசியத்தை பகிர்ந்தா பலருக்கும் உதவுமே//

நல்ல தேடல் சொல்லை பயன்ப்படுத்தணும்,அதற்கு அது பற்றி முன்னரே கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும்.

விமானம் பத்தி அறிய , ரேடார், ஏர் டிராபிக் மேனேஜ்மெண்ட் , ஆட்டோ பைலட் , வாட்டர்லேண்டிங் என பல சொற்களைப்போட்டு தனித்தனியாக தேடி சேர்க்கணும், அவ்ளோ தான்!

#//சில மொழிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடையாது.//

அதுக்கு நான் என்ன செய்யணும் என நினைக்கிறீங்க? நேரடியாக பேசவே வராதோ?

# //முக்குறுணி அரிசி மாதிரி பதங்களை ஓரிடத்தில் சேமிக்கலாம்.அல்லது விக்கிபீடியாவில் கூட சேர்த்து விடலாம்.பலருக்கும் போய் சேரும்.//

விக்கியில் அதெல்லாமேற்கனவே இருக்கு ,அதில் இல்லாத போது தான் நானுருவாக்குவது, ஒன்னுக்கு பத்து தடவை ஏற்கனவே என்ன புழக்கத்தில் இருக்குனு பார்த்துடுவோம்ல!

அதெல்லாம் தானாவரது தான் ,எனவே சேர்த்து வைக்கணும் என ஒழிச்சா வைக்க முடியும்.

#//தேடும் ஆர்வம்,உள் வாங்கிக் கொள்ளும் பொறுமை வேண்டும்.அதை விட்டுட்டு நான் அந்தக் கடைக்கு போறதே கிடையாதுன்னு சொல்லிகிட்டு பிராண்டினா:)//

inappropriate and unwanted at this circumstances!

#// காங்கிரஸ் வலுவானதற்கு கேரளாவின் கம்யூனிச சங்கங்கள் செயல்பட்ட முறை ஒரு முக்கிய காரணம்.//

ஆம் அதுவும் ஒருக்காரணம் , அடுத்து கம்யூனிச அரசுகளால் கம்யூனிச கொள்கையை நிறுவி செயல்ப்பாட்டில் கொண்டு வர இயலாமையும் கூட, இந்தியா போன்ற நாட்டில் மத்தியில் கம்யூனிசம் இல்லாமல் மாநிலத்தில் கம்யூனிசமே செயல்ப்படுத்த இயலாது,எனவே மாநில அரசு வழக்கம் போல செயல்படும் போது ,கம்யூனிசமும் அதே அரசியலாக தான் தெரியும்!!!

#சாம்சனை ரெக்கையில் குத்த சொல்லிட்டு ,இப்போ நான் சொன்னதை அவருக்கு சொன்னா எப்படி?

நீங்க தெளிவா விளக்கி புரிய வைக்க வேண்டாம் அவ்வ்!

#//வங்காள விரிகுடாவில் அதுவும் ஏழுமணி நேரம் கடந்து ஏன் விழுந்தது என்பது இரண்டாம் கேள்வி.//

வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது என சொல்லும் தரவுகள் கொடுக்கவும்!

#//டிகாசியா கான்ஸ்பைரசி சரிப்பட்டு வரலை.காரணம் அதிக பயணிகள் சீனர்கள்//

ஒரு விமானம் மர்மமாக பறக்கும் போது ரேடாரில் 'அதில் பயணிப்பவர்களை" பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து சிறிது விளக்கவும்,அறிந்து கொள்கிறேன்!
-------------

கு.பி,

//கீ தாதா! கீ கொர்ச்சி! பாலோஅச்சி!"//

ராச நடையை ஏன் திட்டுறீர் அதுவும் புரியாத மொழியில் அவ்வ்!

ராச நட படமெடுத்தால்"கிழக்கே போகும் விமானம் ஏன் மேற்கு நோக்கி திரும்பியது?" இதான் பேரு அவ்வ்!

#//. ஒரு ரூபாய்க்கு டீ சட்டியில் கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.//

பசிச்சா டீ மட்டுமே குடிச்சி வாழலாம் போல இருக்கே, ஆமாம் கரம் மசாலா தூத் எல்லாம் கிடைக்காதா, வடிவேலு குடிச்சி மப்பாவாரே அதை!
-------------------

ராஜ நடராஜன் said...

//வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது என சொல்லும் தரவுகள் கொடுக்கவும்!//

வவ்வால் நீங்க பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடுறீங்களோ அதே மாதிரி விமானம் 370 விழுந்த பின் கொஞ்ச நாட்களாக கார்டியன்,சி.என்.என்,என்.டி.டி.வி என செய்திகளை தொடர்ந்தேன்.முதலில் ஆஸ்திரேலியா பக்கம் விழுந்ததால் ஆஸ்திரேலியா தேடுச்சுன்னாங்க.அப்புறமா சில விமான பாகங்கள் வங்காள விரிகுடா பக்கம் தெரிஞ்சதுன்னு சி.என்.என்னில் பார்த்ததாக ஞாபகம்.இதுக்கெல்லாம் சுட்டியெல்லாம் கேட்டா உங்க மாதிரி,வடிவேலு மாதிரி அவ்வுன்னுதான்
கத்தனும்:)

//ஒரு விமானம் மர்மமாக பறக்கும் போது ரேடாரில் 'அதில் பயணிப்பவர்களை" பார்க்கும் தொழில்நுட்பம் குறித்து சிறிது விளக்கவும்,அறிந்து கொள்கிறேன்!//

இதற்கு தொழில்நுட்பம் என்பதை விட லாஜிக் முக்கியம்.காரணம் இந்திய க்டல்பகுதியை இந்தியாவும்,சீனாவும் கண்கொத்தி பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களை தாண்டி டிகாசியாவிலிருந்து ராக்கெட் விடுறது ரொம்ப கடினம்.

மேலும் உலக ஜர்னலிஸ்ட்டுகள் அமெரிக்காவே செய்திருந்தாலும் உண்மையை வெளியே கொண்டு வந்திடுவாங்கன்னு நம்புறேன்.

மூன்றே கோணங்கள்தான் மர்மத்தின் முடிச்சு.

1.இயந்திர கோளாறு என்றால் சத்தம்,தகவல் தொடர்பு இல்லாமல் விபத்து நடக்க சாத்தியமில்லை.

2.விமானியின் தற்கொலை முயற்சி என்பதற்கான வலுவான காரணம் இல்லை.

3.கிழக்கே போகும் விமானம் மேற்கே திரும்பியதற்கு தீவிரவாத விமான கடத்தல் சாத்தியமிருக்கிறது என்றாலும்
அதற்கான நாந்தான் செய்தேன் என்று எந்த தீவிரவாத இயக்கங்களும் இதுவரை முன் வரவில்லை.

//ஆமாம் கரம் மசாலா தூத் எல்லாம் கிடைக்காதா, வடிவேலு குடிச்சி மப்பாவாரே அதை!//

கல்கத்தா பக்கம் சட்டியில் இனிப்பா தயிர் வேற கிடைக்குமே!அதை குடிச்சுட்டுத்தான் வடிவேலு மப்பாயிருப்பார்ன்னு நினைக்கிறேன்.


Anonymous said...

வவ்வால், நீங்க ஏதோ பெரிய நிபுணர் மாதிரி தோற்றத்தை வெளிப் படுத்துகிறீர்கள் ஆனால்? அவ்வளவுதான் சரக்கா. ஈரோடில் ஏழாவது படிக்கிற பையனே இதை கண்டுபிடித்து விடுவான்.. விலாசம் வேணுனா சொல்லுங்க நேருக்கு நேர முடிவு பண்ணிக்கிலாம். என்னால ஈரோடு பேரு கேட்டுற கூடாது.
..................................................................................................................................................
நான் கிராமத்துக்காரன் எங்க ஊருலே சண்டியர் தனம் பண்ணுனா பளார்
என்று அப்பி போய் உன் வேலையை பாருங்கடான்னு சொல்லறதுதான் வழக்கம் அதைதான் நான் செய்தேன்.
................................................................................................................................................
எனக்கு எதிர்காலம் பற்றிய கனவு இல்லை,ஏன் என்றால் எனக்கு எதிர்காலமும் இல்லை.
...................................................................................................................................................
நீங்க கடலூரில் இருந்து பொழைக்கிறதுக்கு சென்னைக்கு போயிருகிங்க.
எத்தனையோ கனவுகள் இருக்கும். இப்படி இருக்கும் போது யார் என்ன செய்தால் நாமக்கு என்ன என்று அவரவர் வேலையே பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
..............................
நான் ஏதோ சின்ன பையன் என்று நினைத்து ரொம்ப சிண்டி விட்டுடீங்க...நீங்க வராவிட்டாலும் நானே விரைவில் தேடி வருகிறேன்......

Anonymous said...

குபி,
(உங்க ஆளு (அல்லது பெர்சனாலிட்டி) பதிவை ஸ்கிரின்ஷாட் போடணும்மென்றால் மொத்த பதிவையும் போடனும். ஏன்னா அவன் மத்தவனை ஆபாசமா திட்டிதிட்டி தான் மொத்த பதிவையும் எழுதிவச்சி இருக்கான்.அவன் திட்டாத ஆளில்லை.எல்லாமே தனிநபர் தாக்குதல்தான்.)
....................................................
எதை வைத்து சொல்கிறீர்கள்?. என்னை பொறுத்த வரை வவ்வாலின் தளத்தை தான் அதிகம் பார்வையிடுகிறேன். இனி மேலும் அவருக்கு நான் பார்வையாளனே, ஏன்னா நான் ஒய்வு பெற்றவன் அதனால் எனக்கு பொழுது போக்கு இதுதான். நன்றி

வவ்வால் said...

ராச நட,

//அப்புறமா சில விமான பாகங்கள் வங்காள விரிகுடா பக்கம் தெரிஞ்சதுன்னு சி.என்.என்னில் பார்த்ததாக ஞாபகம்.இதுக்கெல்லாம் //

உங்கப்பாழாப்போன நியாபகம் ஏன் ,அங்கேஇருந்துஒரு குண்டூசி கூட எடுக்கப்படாதை சொல்ல மாட்டேங்குது?

அவ்ளோபெரிய விமானத்தின் ஒரு சின்ன பாகம் கூடவா "வங்காள விரிகுடாவில்"கிடைக்காம போச்சு?

ஒன்னுமே கிடைக்காத போது,அங்கே இருந்து கண்டுப்பிடிச்சிட்டா போல ஏன் பினாத்துறிங்க?

//இதற்கு தொழில்நுட்பம் என்பதை விட லாஜிக் முக்கியம்.காரணம் இந்திய க்டல்பகுதியை இந்தியாவும்,சீனாவும் கண்கொத்தி பாம்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களை தாண்டி டிகாசியாவிலிருந்து ராக்கெட் விடுறது ரொம்ப கடினம்.//

சுத்தம் விளங்கிடும் அவ்வ்!

//கல்கத்தா பக்கம் சட்டியில் இனிப்பா தயிர் வேற கிடைக்குமே!அதை குடிச்சுட்டுத்தான் வடிவேலு மப்பாயிருப்பார்ன்னு நினைக்கிறேன்.//

ஆடு மேயுதானுகேட்டால் மாடுமேயுதுனு பதில் சொல்றவர் போல அவ்வ்!
----------
அனானிமுண்டமே,

அதான் ஆனந்த ராமகிருஷ்ணன்னுபேரு வச்சியேஅதுஎங்கே போச்சு காக்கா தூக்கிட்டு போச்சா ,

போயா போ .... கர்ர்ர்ர் த்த்தூ!

உனக்குலாம் பதில் சொல்வது நேரவிரயம் ,வந்தியா "நீயா குனிஞ்சு காட்டிட்டு" ஓடிப்போயிடு அவ்வ்!

குட்டிபிசாசு said...

வவ்வால்,

//ஷ்ரூம் என ஒருப்படம் , அதுல இங்கிலாந்து உட்லேண்ட்ஸ்ல போய் மேஜிக் மஷ்ரூம்(போதை தரும் மஷ்ரூம்) எடுத்து டீ டிக்காஷனில் கொதிக்க வச்சு "டீப்போட்டு குடிச்சு மப்பாகிற ஒரு கேங்கில் தொடர் கொலை நடக்கும்.

அந்த மஷ்ரூம் இப்படித்தான் காட்டுல கிரேகலரில் இருக்கும் , அளவு அதிகமா சாப்டா "பாபா மர்க்கயா" தான்.//

அது வேற காளான், அது தின்றால் சரக்கடித்தது போல மப்பாகாது. ஹாலுசினேசன் போல ஆக்கிவிடும். கஞ்சா அடிச்சா வருமே அது போல குழப்பிவிடும்.

நான் சொல்வது வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். உணவாகப் பயன்படுவது. அதன் பெயர் truffle. ஒரு கிலோவின் விலை 4000 ஐரோ என்கிறார்கள்.

நட்டு இரண்டு மாசமா படிச்ச நுயுஸையெல்லாம் இங்க வந்து ஒப்பிச்சுட்டு இருக்கார்.

*********************************************

நட்டு,

வடிவேல் குடிப்பது ஜிகர்தண்டா டீ. நான் குடித்ததில்லை. ஆனால் பாங் குடித்துள்ளேன். நீங்கள் சொன்ன இனிப்புத் தயிர் பெயர் "மிஷ்டி தொயி".