Friday, June 23, 2006

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்கும் பணி மீண்டும் அரங்கேறுகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(NLC தமிழகம்) தேசிய அலுமினியம் கம்பெனி(NALCO),ஒரிசா ஆகியவற்றில் உள்ள அரசின் பங்குகளில் 10 சதவீதம் பொது விற்பனைக்கு விற்க இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது.இதன் மூலம் 2500 கோடி(NALCO-1400 CR, NLC-1100 cr) மூலதனம் திரட்டப்படும்.இதில் 75% சமுதாயப்பணிகளுக்கும் 25% நலிவடைந்த பொது துறை நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் செலவழிக்கப்படும் என சொல்கிறார்கள்.

இதில் தமிழகத்தை சார்ந்த NLC யின் பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்க தி.மு.க,பா.ம.க போன்ற தமிழக கட்சிகள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பது வருத்தம் அளிக்க கூடியது மட்டுமல்ல ,அவர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்க தக்கதும் கூட.

தமிழக கட்சிகள் ஒரு காலத்தில் NLC யை தனியார் மயம் ஆக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடத்தின ,இப்போழுது அந்த போராட்டக்குணம் எங்கே போயிற்று.

பங்கு சந்தை சரிவைக்கண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் பங்கு சந்தை சரிவை தடுக்கலாம் என்பது நிதியமைச்சரின் குறுகிய கால கணக்காக இருக்கலாம். NLC யின் மிகப்பெரிய தொழிற் சங்கமான தொ.மு.ச. தி.மு.க சார்புடையதே அவர்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனப்பார்க்க வேண்டும்.ஏனெனில் அவர்கள் தேர்தல் காலங்களில் தனியார் மயம் ஆதலை தடுக்க எங்களுக்கே வாக்கு போடுங்கள் என கோரியவர்கள்.சமீபத்தில் தேர்தல் எதுவும் வராது எனவே சத்தம் போடாமல் அடக்கி வாசிப்பார்களோ!

லாபத்தில் நடப்பதை விற்று காசு வாங்குவதற்கு பதில் நஷ்டத்தில் இயங்குவதை விற்று நிதி திரட்டலாம்,மேலும் அரசின் செலவீனங்களும் குறையுமே! நலிவடைந்த நிறுவனம் விலைப்போகாது என்று சொல்லலாம் அதையும் வாங்க ஆள் இல்லாமலா போவார்கள்.

43 comments:

Unknown said...

வவ்வால்
நான் அரசு வணிகம் நடத்துவதை ஆதரிக்கவில்லை.வெகு சில துறைகளை தவிர(எ.கா:ஆயுத தயாரிப்பு) மற்ற அரசு கம்பனிகள் தனியார் மயமாவதையே விரும்புகிறேன்.நெய்வேலி விவகாரத்தில் பங்குகளை விற்றபின்னும் 76% பங்குகள் அரசின் வசமே இருக்கும்.இப்படி 5,10% என விற்றால் நல்ல விலை கிடைக்காது.சர்வதேச டெண்டர் விட்டு முழு கம்பனியையும் விற்றால் அதிக பணம் கிடைக்கும்.ஒட்டுமொத்தமாக அனைத்து அரசு கம்பனிகளையும் விற்றால் ஏகப்பட்ட பணம் கிடைக்கும்.

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

அரசு தொழில் நடத்த வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் கூற முடியுமா? ஏன் நடத்த வேண்டும் என நான் கூறுவேன். தனியார்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கரையும் கிடையாது,லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். வியாபராத்தில் லாபம் பார்க்காமல் இருக்க சொல்லவில்லை லாபத்தை மட்டும் பார்க்க வேண்டாம் என்கிறேன்.

தனியார்களிடம் மட்டுமே ஒரு தொழில் இருக்குமானல் விலையை கண்டபடிக்கு ஏற்றுவார்கள் உதாரணம் தற்போது சிமெண்ட் உற்பத்தியில் அரசு பெரும் பங்கு வகிக்காததால் சிமெண்ட் விலை கடுமையாக ஏற்றப்பட்டுவிட்டது.இதனால் கட்டுமானத்தொழிலே இந்தியாவில் ஸ்தம்பித்து விட்டது. எனவே எதனை நம்பி தனியாரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்க சொல்கிறீர்கள்

Unknown said...

வணக்கம் வவ்வால்
அரசு நடத்திய பெரும்பாலான கம்பனிகள் திவாலாகி நச்டத்தில் தான் ஓடுகின்றன.ஏன் அப்படி நடக்கிறது என காரணம் சொல்ல முடியுமா?

மக்களுக்கு செலவௌ செய்யப்படவேண்டிய பணம் நச்டத்தில் ஓடும் கம்பனி ஊழியர்களுக்கு சம்பளம் தரவே சரியாய்ப்போகிறது.பின் எதற்கு அரசு வணிகத்தில் ஈடுபடவேண்டும்?

தனியார் விலையை ஏற்றினால் சிமென்ட் இறக்குமதிக்கு அனுமதி தந்தால் அவர்கள் ஆட்டம் அம்பேல்.ஒழுங்கான போட்டியை அரசு தன் சட்டங்கள் மூலம் உருவாக்கினால் தனியாரால் ஒன்றும் செய்ய முடியாது

வவ்வால் said...

செல்வன்!

லாபம் மட்டும் பார்ப்பதல்ல அரசு என்று சொல்லியுள்ளேன் அதிலேயே ஏன் நஷ்டம் என்பதற்கும் விடையுள்ளது!

இப்பொழுதும் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை ஏதும் இல்லை. யார் வேண்டுமானலும் இறக்குமதி செய்யலாம் சட்டம் போட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் யார் இறக்குமதி செய்வது அதும் ஒரு தனியார் தானே! அவர்கள் மீண்டும் எவ்வாறு விலைக்குறைத்து விற்பார்கள்.

இவ்வாறு சிமெண்ட் விலை முன்னர் ஏறியப்போது அப்போதைய தமிழ் மாநிலக் காங்கிரஸ் தானே கொஞ்சம் சிமெண்ட் இறக்குமதி செய்து விற்று காட்டியது. அது வெறுமனே ஒரு அரசியல் வேடிக்கையா தான் இருந்தது! எனவே இந்தியாவைப் பொருத்த வரை நுகர்வோர் எபோதும் இளிச்சவாயர்கள் எனவே தான் அரசின் துணை தேவைப்படுகிறது.சிமெண்ட் ஆலைகள் எல்லாம் ஒரு சிண்டிகேட் வைத்து விலையேற்றம் செய்வதை தடுக்க கூட அரசால் முடிவதில்லை.

Muthu said...

//இப்பொழுதும் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை ஏதும் இல்லை. யார் வேண்டுமானலும் இறக்குமதி செய்யலாம் சட்டம் போட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் யார் இறக்குமதி செய்வது அதும் ஒரு தனியார் தானே! அவர்கள் மீண்டும் எவ்வாறு விலைக்குறைத்து விற்பார்கள்.//


நல்ல விவாதம்.செல்வனின் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

Muthu said...

//இப்பொழுதும் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை ஏதும் இல்லை. யார் வேண்டுமானலும் இறக்குமதி செய்யலாம் சட்டம் போட வேண்டிய அவசியமே இல்லை. //

குறிப்பாக இந்த கேள்விக்கு...

வவ்வால் said...

வாங்க முத்து(தமிழினி)

நன்றி! சிமெண்ட் இறக்குமதிக்கு தடை ஏதும் இல்லாத நிலையிலும் யாரும் முன்வரவில்லை ஏனெனில் இந்த சிமெண்ட் வியாரபரம் முழுவதும் சில ஆலைஅதிபர்களால் மட்டும் கட்டுப்படுத்தப்படுகிறது.வேறு யாரும் இந்த தொழிலில் இறங்குவதை அனுமதிப்பதே இல்லை.

சிமெண்ட் விலையுயர்வை எதிர்த்து முன்னர் மூப்பனார் இருந்த போது த.மா.கா சார்பாக பீட்டர் அல்போன்ஸ் சிமெண்ட் இறக்குமதி செய்து விற்று கொஞ்சம் சல சலப்பு ஏற்படுத்தினார்.

இறக்குமதி செய்தால் ஒரு மூட்டை 100 ரூபாய்க்கே தரலாம்.இப்பொழுதும் பெரிய கட்டுமானபணிகளில் ஈடுபடுவோர் நேரடியாக இறக்குமதி செய்துகொள்கிறார்கள். கோதுமை நிறைய இங்கேயே விளையும் போதே இறக்க்குமதி செய்து விவசாயிகளை அழிக்கப்பார்க்கும் அரசு சிமெண்ட் விஷயத்தில் ஏன் அப்படி ஏதும் செய்ய முன்வரவில்லை?

அரசு செயல்படாத துறைகளில் தனியார்கள் தனிக்காட்டு ராஜாவாக அட்டகாசம் செய்து வருவதை சிலர் தெரிந்தாலும் இல்லை என்றே பேசுவார்கள்.எல்லாம் தனியார் மயம் ஆகிவிட்டால் நாடு சுபிட்சம் ஆகும் என்பார்கள்.

Unknown said...

//இப்பொழுதும் சிமெண்ட் இறக்குமதிக்கு தடை ஏதும் இல்லை. யார் வேண்டுமானலும் இறக்குமதி செய்யலாம் சட்டம் போட வேண்டிய அவசியமே இல்லை.//

அவ்சியமே இல்லை என்று சொல்ல முடியாது.மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முக்கிய பிரமுகருக்கும், தமிழ்நாட்டின் மிகப்பெரும் சிமென்ட் நிறுவனம் ஒன்றுக்கும் என்ன சம்பந்தம்,சிமென்ட் விலை ஏறினால் பலனடைவது யார் என்பதும் ஊருக்கே தெரியும்.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சிமென்ட் விலை எப்படி விழுந்தது,ஆட்சியை விட்டு இறங்கியதும் எப்படி ஏறியது என்பதும் ஊருக்கே தெரியும்.

குஜராத் அம்புஜா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சிமென்ட் விற்க முடியாமல் தடை செய்யப்பட்டது ஏன்,அவர்கள் நிறுவனத்துக்கு 9 மாதம் கரன்ட் தராமல் அன்றைய தமிழக அரசு இழுத்தடித்தது ஏன் என்பதை அன்றைய பத்திரிக்கைகள் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

இப்போதைய சிமென்ட் விலை குறைய ஒரே வழி உண்டு.135 ரூபாய்க்கு மேல் விற்கும் சிமென்டுக்கு 24% வரி என ஜெயலலிதா சட்டம் கொண்டுவந்தாரே அதே போல் தற்போதைய தமிழக அரசு சட்டம் கொண்டுவருமா?அப்படி ஒரு சட்டம் வரும் என மூச்சு விட்டாலே சிமென்ட் விலை சரிந்து விடும்.அப்போது சிமென்ட் விலையை எதிர்த்து போராடிய பீட்டர் அல்போன்ஸ் இப்போது மவுனமாக இருப்பது ஏன்?

மத்திய,மாநில அரசுகளை பகைத்துக்கொண்டு யாரும் சிமென்ட் இறக்குமதி செய்ய துணிய மாட்டார்கள்.இப்போது நடப்பதும் அதுதான்.

வவ்வால் said...

செல்வன்,
//தனியார் விலையை ஏற்றினால் சிமென்ட் இறக்குமதிக்கு அனுமதி தந்தால் அவர்கள் ஆட்டம் அம்பேல்.ஒழுங்கான போட்டியை அரசு தன் சட்டங்கள் மூலம் உருவாக்கினால் தனியாரால் ஒன்றும் செய்ய முடியாது//

//மத்திய,மாநில அரசுகளை பகைத்துக்கொண்டு யாரும் சிமென்ட் இறக்குமதி செய்ய துணிய மாட்டார்கள்.இப்போது நடப்பதும் அதுதான்.//

இந்த இரண்டும் நீங்கள் கூறியது ரொம்ப முரண்படுகிறதே! அரசு தான் சட்டம் போடனும்னு சொன்னிங்க உடனே வந்து அரசு தான் தடுக்கிறது என்பது போலவும் சொல்றிங்க.:-))

நீங்கள் கூறியது போல் ஒரு அரசியல்வாதி பின்னால் இருந்து விலையேற்றத்திற்கு காரணம் என்றால் அவருக்கேவா எல்லா சிமெண்ட் ஆலைகளும் சொந்தம்,மற்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் எல்லாம் விலையை குறைத்து அந்த அரசியல்வாதிக்கு பாடம் கற்பிக்கலாமே.BSNL கு போட்டியாக டாடா,ரிலையன்ஸ்,ஏர் டெல் எல்லாம் கட்டணம் குறைத்து போட்டியிடவில்லையா தொலைபேசி மார்க்கெட்டில்.

தமிழகத்தில் அதிகம் விற்பனை ஆகும் சிமெண்ட், பிர்லா, ராம்கோ,கொரமண்டல், ஏ.சி.சி எல்.& டி ஆகியவை அவர்கள் எல்லாம் அதிக விலை வைத்து விற்கிறார்களே அந்த பணமும் அந்த அரசியல்வாதிக்கா போய்சேரும். :-))
(சந்தேக வட்டத்தில் உள்ள அந்த சிமெண்ட் சங்கர் சிமெண்ட் தானே?)

எங்கெல்லாம் அரசின் பங்களிப்பு இல்லையோ அந்த துறைகளில் எல்லாம் தனியார் சர்வாதிகாரமாக விலை வைத்து சுரண்டுகிறார்கள் என்பது தான் எனது கருத்து.எனவே தான் ஒரு கண்காணிக்கும் காவல் நாய் ஆகவாது அரசு சில தொழில்களை செய்ய வேண்டும்.

எல்லாம் தனியார் மயம் ஆக கூடாது என சொல்கிறேன். எப்பொழுது தனியார் அதிக லாபம் பார்க்க வேண்டாம் என நியாய விலைக்கு விற்க முன் வருகிறார்களோ அப்போது அரசு எந்த தொழிலும் செய்ய வேண்டாம். நீங்கள் கூறியவாறு வேறு வேலைப்பார்க்கலாம்.இந்தியாவில் தனியார் தொழில் அதிபர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளாதவரையில் அது சாத்தியம் இல்லை.

Unknown said...

//இந்த இரண்டும் நீங்கள் கூறியது ரொம்ப முரண்படுகிறதே! அரசு தான் சட்டம் போடனும்னு சொன்னிங்க உடனே வந்து அரசு தான் தடுக்கிறது என்பது போலவும் சொல்றிங்க.:-))//

எப்படி முரண்படும் வவ்வால்?அரசு தான் சட்டம் போடணும்.ஆனால் அரசு அதை செய்யாமல் இருக்கிறது,தொழிலதிபர் ஒருவரே மத்தியிலும் மாநிலத்திலும் பதவியில் இருந்தால் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது.free market என்பது இருந்தால் இந்த செயற்கை விலை ஏற்றம் சாத்தியமில்லை.அரசியல்வாதிகளால் free trade கான்செப்ட்டுக்கு விரோதமாக ஒரு cartel உருவாக்கப்பட்டு பகல் கொள்ளை இங்கே நடக்கிறது.


//நீங்கள் கூறியது போல் ஒரு அரசியல்வாதி பின்னால் இருந்து விலையேற்றத்திற்கு காரணம் என்றால் அவருக்கேவா எல்லா சிமெண்ட் ஆலைகளும் சொந்தம்,மற்ற தனியார் சிமெண்ட் ஆலைகள் எல்லாம் விலையை குறைத்து அந்த அரசியல்வாதிக்கு பாடம் கற்பிக்கலாமே.BSNL கு போட்டியாக டாடா,ரிலையன்ஸ்,ஏர் டெல் எல்லாம் கட்டணம் குறைத்து போட்டியிடவில்லையா தொலைபேசி மார்க்கெட்டில்.
//

33% சிமென்ட் மார்க்கெட்டை பிடித்துள்ள கம்பனி அவருக்கு சொந்தம் என்கிறார்கள்.மத்திய,மாநில அரசுகளை பகைத்துக்கொண்டு மற்ற கம்பனிகள் செயல்பட முடியாது.

//எங்கெல்லாம் அரசின் பங்களிப்பு இல்லையோ அந்த துறைகளில் எல்லாம் தனியார் சர்வாதிகாரமாக விலை வைத்து சுரண்டுகிறார்கள் என்பது தான் எனது கருத்து.எனவே தான் ஒரு கண்காணிக்கும் காவல் நாய் ஆகவாது அரசு சில தொழில்களை செய்ய வேண்டும்//

அரசு மிக மோசமான ஒரு நிர்வாகி வவ்வால்.அரசு கம்பனிகள் எதுவும் உருப்படியாக செயல்பட்டதில்லை.அரசு மொத்தமாக தொழில் துறையில் தலைஇடுவதை நிறுத்தினால் தான் இப்பிரச்சனை தீரும்.நேர்மையான சந்தை போட்டிக்கான வழிமுறைகள் அமெரிக்காவிலும்,ஐரோபாவிலும் செயல்படுத்தப்படுகின்றன.அவற்றை இந்தியாவுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களுடன் அமுல்படுத்தினால் தான் இப்பிரச்சனை தீரும்.

//எல்லாம் தனியார் மயம் ஆக கூடாது என சொல்கிறேன். எப்பொழுது தனியார் அதிக லாபம் பார்க்க வேண்டாம் என நியாய விலைக்கு விற்க முன் வருகிறார்களோ அப்போது அரசு எந்த தொழிலும் செய்ய வேண்டாம். //

மனிதனின் அடிப்படை உணர்வான சுயநலத்துக்கு மதிப்பு கொடுக்க மறுக்கும் எந்த கொள்கையும் தோல்வியையே தழுவும்.தனி மனிதனின் சுயனலத்தை பொருதுநலத்துக்கு சாதகமாக திருப்புவதே இனி புதிய பொருளாராம்.

அம்பானியின் சுயநலத்தை பயன்படுத்தி இந்திய நாட்டை இழையால் இணைக்க முடிந்தது. டாடாவின் சுயனலத்தை பயன்படுத்தி நாட்டின் இரும்பு வளத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது. நாராயண மூர்்த்தியின் சுயனலம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி கற்கும் போதே எதிர்காலத்தில் நம்பிக்கை உணர்வை தருகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய அடிப்படை தேவைகளான உண்டி, உடை, உறையுள் என்ற மூன்றும் வழங்குவது சோசலிஸமா?அல்லது நாட்டின் இருக்கின்ற செல்்வத்தை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்வதுதான் சோசலிசமா?முன்னது சாத்தியம். பின்னது இல்லை?

வவ்வால் said...

செல்வன்,
// அரசியல்வாதிகளால் free trade கான்செப்ட்டுக்கு விரோதமாக ஒரு cartel உருவாக்கப்பட்டு பகல் கொள்ளை இங்கே நடக்கிறது.
//

கண்ணைக் கொஞ்சம் திறந்துகொண்டு பேசுங்களேன், தனியார் சிமெண்ட் அதிபர்கள் ஒன்று கூடி ஒரு சிண்டிகேட் உருவாக்கிக் கொண்டு விலையேற்றம் செய்து வருகிறார்கள் என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன்! அதையே கொஞ்சம் மாற்றி நீங்கள் அரசியல்வாதி என்கிறீர்கள்.

அரசு நிறுவன தொலைப்பேசிக்கு(BSNL) எதிராக போட்டிப் போட்டு விலைக்குறைக்கும் போது ஏன் அரசுகு எதிராக சிமெண்ட் விலைக்குறைக்க கூடாது என தெளிவாக கூறியுள்ளேன் பின்னரும் ,

//மத்திய,மாநில அரசுகளை பகைத்துக்கொண்டு மற்ற கம்பனிகள் செயல்பட முடியாது//

என்று சொன்னால் என்னவென்பது வரட்டு வாதம் தான் இது!

33% மார்க்கெட் வைத்துள்ளது என சொல்கிறீர்கள் எந்த சிமெண்ட் கம்பெனி அது என பெயர் சொலலாமே.நீங்கள் குறிப்பிட்ட அளவு மார்க்கெட் பங்குள்ளது ஏ.சி.சி சிமெண்ட் தான்(35%) அது தான் குஜராட் அம்புஜாவின் கூட்டணி நிறுவனம். அப்போ அது தான் அரசியல்வாதிக்கு சொந்தமா :-))
அதே குஜராட் அம்புஜா சிமெண்ட் விற்கவிடவில்லை என நீங்களே முன்னர் சொல்லி இருக்கிறீர்கள்.

நான் சந்தேக வட்டத்தில் இருப்பதாக சொன்ன சங்கர் சிமென்ட் ,இந்தியா சிமெண்டின் தயாரிப்பு அதன் மார்க்கெட் பங்கு 28 சதவீதம்.

அரசியல்வாதியின் சிமெண்ட் நிறுவனம் எனசொல்வது எல்லாம் அரசியல்கட்சிகளின் புழுதிவாரிவீசும் வேலை அதையே நீங்களும் சொல்கிறீர்கள்.அப்படியே இருந்தால் ஆந்திராவில் சிமெண்ட் விலை குறைவாக இருக்க காரணம் என்ன? ஏன் இந்த அரசியல்வாதி சொல்வது கேட்டு மற்ற சிமெண்ட் விற்கும் நிறுவனங்கள் விலை ஏற்றுகின்றன. உங்கள் கூற்றுபடி தனியார்கள் எல்லாம் நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஆயிற்றே :-))

ஒரு அரசியல்வாதிப்போலவே சகட்டுமேனிக்கு ஆதாரமற்ற தகவல்களை அள்ளி வீசுகிறீர்கள்!

இவையெல்லாம் கூகிளில் சிமெண்ட் மார்கெட் ஷேர் எனப்போட்டாலே கிடைக்கும் சரிப்பார்த்து கொள்ளுங்கள்.

//அரசு மொத்தமாக தொழில் துறையில் தலைஇடுவதை நிறுத்தினால் தான் இப்பிரச்சனை தீரும்.நேர்மையான சந்தை போட்டிக்கான வழிமுறைகள் அமெரிக்காவிலும்,ஐரோபாவிலும் செயல்படுத்தப்படுகின்றன//

அமெரிக்க,ஐரோப்பாவில் எல்லாம் சாத்தியமானது தானே என்பது அண்டார்டிகாவில் எல்லாம் எப்பொழுதும் குளிர்தாக்காமல் இருக்க முழுக்க மூடிய குளிர் உடைபோடுவார்கள் அவர்களுக்கு அது சிரமமே இல்லை சென்னையில் போட்டால் மட்டும் சிரமம் வருமா எனக் கேட்பது போல இருக்கு!

நீங்கள் சொல்லும் சிறிய மாற்றம் என்ன? அது தான் நான் கூறிய அரசின் கண்காணிப்பு நாய் வேலை! அதை செய்ய அரசும் இங்கே தொழிலில் இருக்க வேண்டிய நிலை!

//தனி மனிதனின் சுயனலத்தை பொருதுநலத்துக்கு சாதகமாக திருப்புவதே இனி புதிய பொருளாராம்.//

நானும் இதைத் தான் சொல்கிறேன் தனிமனிதனின்(பல தனி நபர்கள் சேர்ந்தால் பொதுமக்கள்) சுயநலமாகிய பொதுமக்களின் நலத்தை காக்க தொழிலதிபர்களின் சுயநலத்தை சாதகமாக திருப்ப அரசு செயல்பட வேண்டும். அரசு எப்படி செயல்படும் அவர்களுக்கு ஒரு செக் வைக்க அதே தொழில் செய்தால் தானெ இவர்கள் அடங்கி நடப்பார்கள்.

எப்படி அடுத்தவங்க சொல்றத இல்லைனு சொல்லிகிட்டே அவங்க சொல்றதவே வேற வார்த்தைல ஆமாம்னு சொல்விங்களா :-))

//அம்பானியின் சுயநலத்தை பயன்படுத்தி இந்திய நாட்டை இழையால் இணைக்க முடிந்தது. டாடாவின் சுயனலத்தை பயன்படுத்தி நாட்டின் இரும்பு வளத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது//

இவங்களை எல்லாம் யார் கையைப்புடிச்சு இழுத்து வந்து இதை செய்ய சொன்னாங்க? காசு பார்க்கலாம்னு அவங்கலா தானெ வந்தாங்க, யாரும் அவங்கல பயன்படுத்தல அவர்களாக சுயனலத்தோடு வந்தார்கள் எனச்சொல்லுங்கள்.அப்படி இருக்கிறப்போ ஏதோ பொதுமக்கள் எல்லாம் அவங்களை பயன்படுத்திகொண்டாற்போல சொல்றிங்க. உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு எல்லையே இல்லையா?

//ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய அடிப்படை தேவைகளான உண்டி, உடை, உறையுள் என்ற மூன்றும் வழங்குவது சோசலிஸமா?அல்லது நாட்டின் இருக்கின்ற செல்்வத்தை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்வதுதான் சோசலிசமா?முன்னது சாத்தியம். பின்னது இல்லை?//

உண்டி,உடை,உறையுல் எல்லாருக்கும் கிடைக்க தான் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டி இருக்கு. எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் இருப்பவன் மட்டுமே வாழ்வான் இல்லதவன் சாவான். அப்படி இருக்கும் போது பின்னது சாத்தியம் ஆனால் முன்னது தானே நடக்கும்.

நீங்கள் கூறுவது போன்ற வரட்டு வாதத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நான் எதிர்ப்பார்ப்பது புரிந்து கொள்ளுதல் ,அது உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன்(சாத்தியமற்ற ஒன்று என்றப் போதிலும்)

Unknown said...

வணக்கம் வவ்வால்,

//கண்ணைக் கொஞ்சம் திறந்துகொண்டு பேசுங்களேன், தனியார் சிமெண்ட் அதிபர்கள் ஒன்று கூடி ஒரு சிண்டிகேட் உருவாக்கிக் கொண்டு விலையேற்றம் செய்து வருகிறார்கள் என ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன்! அதையே கொஞ்சம் மாற்றி நீங்கள் அரசியல்வாதி என்கிறீர்கள்.//

அந்த தனியார் சிண்டிகேட்டின் தலைமை பதவியில் உள்ள கம்பனியின் முதலாளி ஒரு அரசியல்வாதி.அவரது அரசியல் செல்வாக்கால் தான் இந்த சிண்டிகேட் சாத்தியமானது.

/33% மார்க்கெட் வைத்துள்ளது என சொல்கிறீர்கள் எந்த சிமெண்ட் கம்பெனி அது என பெயர் சொலலாமே./

ஜூனியர் விகடனிலும் மற்ற பத்திரிக்கைகளிலும் ஏன் பெயரை சொல்லாமல் மறைமுகமாக சுற்றி வளைத்து சொல்கின்றனர்?அதே நிலை தான் இங்கும்.

/அரசியல்வாதியின் சிமெண்ட் நிறுவனம் எனசொல்வது எல்லாம் அரசியல்கட்சிகளின் புழுதிவாரிவீசும் வேலை அதையே நீங்களும் சொல்கிறீர்கள்./

தொழிலதிபர்களின் சிண்டிகேட் என நீங்கள் சொல்லுவதற்கு வீடியோ ஆதாரம் வைத்துள்ளீர்களா?இருந்தால் காட்டுங்களேன்.நீங்கள் சொன்னால் அது ஆதாரபூர்வமான செய்தி.நான் சொன்னால் புழுதி வாரி தூற்றுவது.நல்ல நியாயம் இது:-)

/நீங்கள் சொல்லும் சிறிய மாற்றம் என்ன? அது தான் நான் கூறிய அரசின் கண்காணிப்பு நாய் வேலை! அதை செய்ய அரசும் இங்கே தொழிலில் இருக்க வேண்டிய நிலை!/

கண்காணிக்க அரசு தொழிலில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.அமெரிக்காவில் எந்த தொழிலும் அரசு இல்லை.கண்காணிப்பு எப்படி சாத்தியமாகிறது?

//நீங்கள் கூறுவது போன்ற வரட்டு வாதத்தை எத்தனை நாள் வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் நான் எதிர்ப்பார்ப்பது புரிந்து கொள்ளுதல் ,அது உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன்(சாத்தியமற்ற ஒன்று என்றப் போதிலும்) //

உங்களுடன் எத்தனை முறை வாதம் புரிந்திருப்பேன்?உங்கள் வாத முறையை என்றேனும் குறை கூறி பார்த்துள்ளீர்களா?

எந்த தலைப்பையும்,எந்த பொருளையும் விவாதிக்கலாம்-எதிராளியை விமர்சிக்காமல் இருந்தால்.ஆளை விமர்சித்து வாதமிடும் சபைகளில் வாதுபுரிந்து பயனேதும் இல்லை.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டுபவர்

வவ்வால் said...

செல்வன்,
சிமெண்ட் உற்பத்தி தொழிலை செய்பவர்கள் விலை ஏற்றி இருக்கிறார்கள் ஒட்டு மொத்தமாக எனவே அது அவர்களின் சிண்டிகேட் என்று தானே கூற வேண்டும் வேறு யாரைக்கூற வேண்டும். விலையேற்றம் இது போன்ற சிண்டிகேட் செய்தவர்களின் வேலை என அனைத்து நாளிதழ்/பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது.மேலும் அத்தியாவசி பொருள்களின் விலைக்கண்காணிப்பு அமைப்பு என ஒன்று அரசால் நடத்தப்படுகிறது அவர்களே இதை தான் சொல்லியுள்ளார்கள். விலைக்குறைக்க சிமெண்ட் உற்பத்தியாளர்களின் கூட்டணியிடம் பேசப்போவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா? இந்திய பத்த்ரிக்கைகல் படிப்பது இல்லையா? ஒரு வேளை நீங்கள் படிப்பது எல்லாம் நியுயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், போன்றவை தானா :-))

//கண்காணிக்க அரசு தொழிலில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.அமெரிக்காவில் எந்த தொழிலும் அரசு இல்லை.கண்காணிப்பு எப்படி சாத்தியமாகிறது?//

மீண்டும் கண்திரவாமை...

ஏற்கனவே நான் கூறியது -->

//அமெரிக்க,ஐரோப்பாவில் எல்லாம் சாத்தியமானது தானே என்பது அண்டார்டிகாவில் எல்லாம் எப்பொழுதும் குளிர்தாக்காமல் இருக்க முழுக்க மூடிய குளிர் உடைபோடுவார்கள் அவர்களுக்கு அது சிரமமே இல்லை சென்னையில் போட்டால் மட்டும் சிரமம் வருமா எனக் கேட்பது போல இருக்கு!
//

இங்கே உள்ளத் தொழிலதிபர்கள் அந்த அளவுக்கு தாரளமாக இல்லையே என்ன செய்வது! ஒட்ட கரப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

//உங்களுடன் எத்தனை முறை வாதம் புரிந்திருப்பேன்?உங்கள் வாத முறையை என்றேனும் குறை கூறி பார்த்துள்ளீர்களா?

எந்த தலைப்பையும்,எந்த பொருளையும் விவாதிக்கலாம்-எதிராளியை விமர்சிக்காமல் இருந்தால்.ஆளை விமர்சித்து வாதமிடும் சபைகளில் வாதுபுரிந்து பயனேதும் இல்லை//

நல்லா சொன்னிங்க செல்வன், உண்மைலே எனக்கும் இதெல்லாம் சொல்லாமல் இருக்கவே விருப்பம்.எனினும் சொல்லும் படி இருந்தது உங்கள் வாதம்.

உங்களை மடக்கவேண்டும் என சொல்லவில்லை. நீங்கள் இவ்வாறு வேறு சில எதிராளியை விமரிசித்து கூறியுள்ளீர்கள், என்னையும் கூறியுள்ளீர்கள்,சில சமயங்களில் என்னை கம்யுனிசம் பேசுகிறேன் எனவே அப்படிதான் என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆதாரம் எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம்.எஸ்.கேவின் திருப்புகழ் பற்றிய பதிவில் போய்ப் பின்னூட்டத்தை பாருங்கள். நீங்கள் விமரிசித்ததை அவர் எடுத்தாண்டு இருப்பார்.நான் அதனை எல்லாம் பொருட்படுத்துவது இல்லை.குறையாகவும் நினைப்பதில்லை நீங்கள் ஏதோ நான் மட்டும் செய்துவிட்டேன் என விசனப்படுவதால் சொல்லும் சூழ்நிலை.

Unknown said...

//நீங்கள் இவ்வாறு வேறு சில எதிராளியை விமரிசித்து கூறியுள்ளீர்கள், என்னையும் கூறியுள்ளீர்கள்,சில சமயங்களில் என்னை கம்யுனிசம் பேசுகிறேன் எனவே அப்படிதான் என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆதாரம் எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம்.எஸ்.கேவின் திருப்புகழ் பற்றிய பதிவில் போய்ப் பின்னூட்டத்தை பாருங்கள். நீங்கள் விமரிசித்ததை அவர் எடுத்தாண்டு இருப்பார்.//

கம்யூனிசம் பேசுகிறீர்கள் என்று சொன்னால் என்ன தப்பு வவ்வால்?நீங்கள் கூட கார்பரேட் விசுவாசிகளை பற்றி சொன்னீர்கள்.எதிராளியை கம்யூனிஸ்ட் என்பதற்கும் கார்பரேட் விசுவாசி என்பதற்கும் வித்யாசம் உண்டா இல்லையா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

எஸ்.கே பதிவில் அவர் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்.ஆனால் நான் என்ன சொன்னேன் என சொல்லவே இல்லை.நீங்கள் எடுத்துகாட்டி "இப்படி பேசி இருக்கிறாய்" என சொன்னால் அடுத்த நிமிடம் என் தவறை உணர அது வழிவகுக்கும்.வாதின் சூட்டில் பின்னூட்டம் இட வந்தவரை பேசுவது மிகவும் தவறு.நான் செய்தாலும்,வேறு யார் செய்தாலும் தான்.

நிற்க..இந்த பிரச்சனையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.உங்கள் பின்னூட்டங்களில் அருமையான கருத்துக்கள் என்றும் இருக்கும்.என்னை அறியாமல் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் அதற்கு என் மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.

என்றும் அன்புடன்
செல்வன்

வவ்வால் said...

செல்வன்,

மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தைகள் எதற்கு அது எல்லாம். நான் இதனை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை.நீங்கள் சுட்டிக்காட்டவே சரி நான் மட்டுமே இதை செய்ய வில்லை என எடுத்துக்காட்ட சொல்லும் படி ஆகிவிட்டது. இதனால் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் எனில் மன்னிக்கவில்லை என்றாலும் மறந்து விடுங்கள்.

ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒன்றைக்கவனிக்காமல் மீண்டும் கேள்வி எழுப்பியதால் அதை சுட்டிக்காட்டவே கண்திறவாமை, வறட்டு வாதம் என சொன்னேன்.உங்களை தனிப்பட்ட முறையில் அல்ல அது போல பேசுவோர் அனைவரும் பொருந்தும் அது, எனக்கும் அது பொருந்தும் சரியாக படிக்காமல் மீண்டும் பேசினால்.வழக்கம் போல் உங்கள் பங்களிப்பை தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி!
நட்புடன்
வவ்வால்

Machi said...

பின்னூட்டம் மூலமா நெய்வேலி சுரங்க பதிவு இந்தியா சிமெண்ட் பதிவா மாறிடுச்சு. சுவாரசியமான வாதம்.
மாநிலவாரியா சிமெண்ட் விலை பட்டியல் ஏதாவது இருக்குங்களா?

அமெரிக்காவில் மருந்து விலை அதிகம் ஆனா அதே நிறுவனத்தின் அதே மருந்து கனடாவில் குறைவு. இதன் காரணமாக பல மாநில அரசுகள் குறிப்பா குடியரசு கட்சி அரசுகளும் கனடாவில் இருந்து மருந்து வாங்கின / வாங்குகின்றன.
செயற்கையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு அரசே அதில் உள்ளாளுனா என்ன செய்வது?

Machi said...

பின்னூட்டம் மூலமா நெய்வேலி சுரங்க பதிவு இந்தியா சிமெண்ட் பதிவா மாறிடுச்சு. சுவாரசியமான வாதம்.
மாநிலவாரியா சிமெண்ட் விலை பட்டியல் ஏதாவது இருக்குங்களா?

அமெரிக்காவில் மருந்து விலை அதிகம் ஆனா அதே நிறுவனத்தின் அதே மருந்து கனடாவில் குறைவு. இதன் காரணமாக பல மாநில அரசுகள் குறிப்பா குடியரசு கட்சி அரசுகளும் கனடாவில் இருந்து மருந்து வாங்கின / வாங்குகின்றன.
செயற்கையான விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு அரசே அதில் உள்ளாளுனா என்ன செய்வது?

Unknown said...

ok,voval.lets continue.

/./சிமெண்ட் உற்பத்தி தொழிலை செய்பவர்கள் விலை ஏற்றி இருக்கிறார்கள் ஒட்டு மொத்தமாக எனவே அது அவர்களின் சிண்டிகேட் என்று தானே கூற வேண்டும் வேறு யாரைக்கூற வேண்டும். //

அந்த சிண்டிகேட்டின் தலைமை பதவியில் இருப்பவர் மத்திய,மாநில அரசியலில் இருக்கும் ஒரு பெரும்புள்ளி.மிகவும் செல்வாக்கான பதவியில் இருப்பவர் என்று பத்திரிக்கைகள் சொல்கின்ரன.பீட்டர் அல்போன்ஸ் முன்பு நேரடியாக அவர் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்தால் சிமென்ட் விலை வீழ்வது ஏன் என யோசியுங்கள்.விடை கிடைக்கும்.

//இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா? இந்திய பத்த்ரிக்கைகல் படிப்பது இல்லையா? ஒரு வேளை நீங்கள் படிப்பது எல்லாம் நியுயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், போன்றவை தானா :-))//

நான் சொல்வதும் இந்திய பத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.நீங்கள் படிக்கவில்லையா?

///ஏற்கனவே நான் கூறியது -->

அமெரிக்க,ஐரோப்பாவில் எல்லாம் சாத்தியமானது தானே என்பது அண்டார்டிகாவில் எல்லாம் எப்பொழுதும் குளிர்தாக்காமல் இருக்க முழுக்க மூடிய குளிர் உடைபோடுவார்கள் அவர்களுக்கு அது சிரமமே இல்லை சென்னையில் போட்டால் மட்டும் சிரமம் வருமா எனக் கேட்பது போல இருக்கு!
//
சென்னையில் ஜெயலலிதா சிமென்ட் விலை எப்படி ஒரே நாளில் இறக்கி காட்டினார் என்பதை படித்தாலே போதும்,இப்போதைய பிரச்சனைக்கு விடை கிடைக்கும்.

சிமென்ட் விலை 135 ரூபாய் தாண்டினால் 24% வரி.இதுதான் ஜெயலலிதா போட்ட சட்டம்.

ஒரே நாளில் சிமென்ட் விலை 200ல் இருந்து 130ஆக வீழ்ந்தது.

இப்போதைய அரசு அதை செய்தாலும் சிமென்ட் விலை வீழும்.

செய்வார்களா?

இதை செய்ய அரசு சிமென்ட் வணிகத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வவ்வால் said...

வணக்கம் குறும்பன்,

முதல் முறையாக வருகிறீர்கள் நன்றி!

பொதுவாக அரசின் பங்களிப்பு தொழிற்துறையில் இருப்பது தனியாரின் எதேச்சதிகாரத்தை கட்டுப்படுத்தும் என்பது தான் மையப்பொருள்,எனவே அது நிலக்கரியானால், என்ன , சிமெண்ட் ஆனால என்ன , அவ்வளவாக தடம் மாறவில்லை என்பேன்.

நிலக்கரிக்கும் சிமெண்ட்க்கும் நெருங்கிய தொடர்புண்டு, சிமெண்ட் ஆலைகளில் உள்ள பர்னாஸ்களில் நிலக்கரி பயன்படுகிறது,மின்சாரம் சொந்தமாக உற்பத்தி செய்துகொள்வார்கள் சிமெண்ட் ஆலைகளில் அதற்கும் பயனாகிறது, நிலக்கரி எரித்த சாம்பல் சிமெண்ட் தயாரிப்பில் பயன் படுகிறது. நாம் பயன்படுத்தும் சிமெண்டில் 35% இந்த சாம்பல் தான்.

வவ்வால் said...

வாங்க செல்வன்,

நீங்கள் பெரும்புள்ளி என்று சொன்னதை தான் சந்தேகவட்டத்தில் இருக்கும் சிமெண்ட் கம்பெனியா என இந்தியா சிமெண்ட் ஆலைப்பற்றி சொல்லி இருந்தேன்! நீங்கள் அதன் மார்க்கெட் ஷேர் 35% என்ற போதே 28% இருக்கிறது என்றும் சொல்லி இருந்தேன் அதையும் பார்த்து இருக்கலாம்.இதெல்லாம் இங்கே வரும் செய்திதாள்களைப்பார்த்து தெரிந்து கொண்டது தான். ஊகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை.

அந்த அரசியல்வாதிதான் காரணம் என்றால் அவன் சொல்வதை ஏன் மற்ற ஆலைகள் கேட்க வேண்டும் என்பதே என் கேள்வி,அரசுக்கு பயப்படுகிறது என்றால் அரசு தொலைப்பேசி துறைக்கு எதிராக எப்படி விலைக்குறைப்பு செய்து போட்டி போடுகிறார்கள் எனவும் நான் பல முறைக்கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் அதை எல்லாம் கவனமாக தவிர்த்து விட்டீர்கள்!.

//ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்தால் சிமென்ட் விலை வீழ்வது ஏன் என யோசியுங்கள்.விடை கிடைக்கும்//
//சிமென்ட் விலை 135 ரூபாய் தாண்டினால் 24% வரி.இதுதான் ஜெயலலிதா போட்ட சட்டம்.//
உண்மையில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சிமெண்ட் விலை என்ன என்று நீங்கள் பார்த்தீர்களா இல்லை வாங்கியோர் சொன்னார்களா? அம்மையாரின் ஆட்சிகாலத்தில் நான் சிமெண்ட் வாங்கியுள்ளேன் எனக்கு 165 ரூபாய் விலைக்கு தான் தந்தார்கள்.அப்படி எனில் எனக்கு மட்டும் கூடுதல் விலையில் விற்று விட்டார்களா? இன்னும் சொல்லப் போனால் ஒராண்டு காலம் கட்டுமானப்பனி நடந்தது சிமெண்ட் விலை 155 முதல் 180 வரை மாறிக்கொண்டே இருந்தது ஆனால் ஒரு முறை கூட 135 ரூபாய்க்கு வரவில்லை.

ஒரு வேலை சட்டம் போட்டு விட்டு அதை அமுல் படுத்த மறந்து விட்டார்களா அம்மையார். மத மார்ற சட்டம் ,பொடா போன்றவை என்றால் உடனே அமுலுக்கு வந்து இருக்கும் :-))

நீங்கள் என்னை கூட நம்ப வேண்டாம் . கடந்த 5 ஆண்டுகளில் சிமெண்ட் விலை என்ன என்று தமிழகத்தில் உள்ளோர் யாரை வேண்டுமானாலும் கேட்டு சரிப்பார்த்து கொள்ளலாம்.இன்று வரையில் குறைந்த விலையில் விற்கப்படுவது அரசு சிமெண்ட் எனப்படும் தமிழக அரசின் சிமெண்ட் தான். ஆனால அந்த சிமென்ட் அரசின் கட்டுமானப்பணிகளுக்கு தான் மிச்சம் இருந்தால் பொது மக்களுக்கு ,எனவே எளிதில் கிடைக்காத அளவுக்கு அதற்கு டிமாண்ட் அதிகம்.

அது போல மத்திய அரசின் சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் சிமெண்ட்கள் விலைக்குறைவு ஆனால் அரசு கட்டுமான பணிகளுகு தான் பெரும்பாலும் விற்கப்படுகிறது.உற்பத்திக்குறைவென்பதால் மக்களுக்கு கிடைப்பது அரிது.

135 ரூபாய்க்கு விற்க வைத்தார் ஜெயலலிதா என்பதே தவறான தகவல்.அப்படி இருக்கும் போது எப்படி இப்போது மட்டும் ஆட்சி மாறியதால் விலை ஏறியது என்கிறீர்கள்.

Unknown said...

//அந்த அரசியல்வாதிதான் காரணம் என்றால் அவன் சொல்வதை ஏன் மற்ற ஆலைகள் கேட்க வேண்டும் என்பதே என் கேள்வி,அரசுக்கு பயப்படுகிறது என்றால் அரசு தொலைப்பேசி துறைக்கு எதிராக எப்படி விலைக்குறைப்பு செய்து போட்டி போடுகிறார்கள் எனவும் நான் பல முறைக்கேட்டு விட்டேன் ஆனால் நீங்கள் அதை எல்லாம் கவனமாக தவிர்த்து விட்டீர்கள்!.//

அரசுக்கு எதிராக வணிகம் செய்வது வேறு.அரசியல்வாதிக்கு எதிராக வணிகம் செய்வது வேறு.தூர்தர்சனுக்கு எதிராக எளிதில் வணிகம் செய்ய முடியும்.ஆனால் **டிவிக்கு எதிராக அரசியல் செய்த ராஜ்டிவியின் கதி என்ன ஆனது?

//இன்னும் சொல்லப் போனால் ஒராண்டு காலம் கட்டுமானப்பனி நடந்தது சிமெண்ட் விலை 155 முதல் 180 வரை மாறிக்கொண்டே இருந்தது ஆனால் ஒரு முறை கூட 135 ரூபாய்க்கு வரவில்லை.//

2001ல் 130க்கு கீழே வந்தது.அதற்கு முன் 200 ரூபாய் இருந்தது.சிமென்ட் விலை நாளுக்கு நாள் மாறும்.ஜெயலலிதா அரசு அந்த சிண்டிகேட்டை உடைத்தெறிந்தது.அந்த சட்டம் அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியலை.ஆனா திருப்பி கொண்டுவருவது எளிது

வவ்வால் said...

செல்வன்,

நீங்கள் சொன்னவாறு அரசியல்வாதியை எதிர்த்து வியாரபாரம் பண்ணுவது கடினம் என்பது எந்த அளவு உண்மை எனப்பார்ப்போம்.

டாடாவை மிரட்டினார் என்பது வதந்தியா உண்மையா எனத்தெரியாது அதற்கே எந்த அளவு அந்த மத்திய மந்திரி மிரண்டு போனார் என்பது அனைவரும் அறிந்ததே அப்படி இருக்கையில் சிமெண்ட் ஆலை அதிபர்களை மிரட்ட முடியுமா?

ஏனெனில் ,இந்தியாவில் தனியொரு சிமெண்ட் ஆலையாக உற்பத்தியின் அடிப்படையில் முன்னனியில் இருப்பது பிர்லா சிமெண்ட் தான் ,அவர்கள் டாடாவிற்கு இணையானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர்களை மிரட்டினால் சும்மா விடுவார்களா?

கூட்டாக முதலிடம் அம்புஜா சிமெண்ட் - ஏ.சி.சி சிமெண்ட் உள்ளது,மெர்ஜர் ஆகிவிட்டார்கள். அவர்களையும் மிரட்ட முடியாது.

இந்தியா சிமெண்ட் அளவுக்கு உற்பத்தியுள்ள மற்றொரு சிமெண்ட் ஆலை செட்டினாடு சிமெண்ட்.இருவர்களின் உற்பத்தி திறனும் 9 மில்லியன் டன் அளவுக்கு உள்ளது. அவர்களின் பாரம்பரியம் எல்லாம் அறிந்ததே.

மிரட்டினால் பயப்படும் அளவுக்கு ரொம்ப எளிதானவர்கள் இல்லை யாரும்.

அப்படி இருக்கும் போதும் சிமெண்ட் விலை அதிகமாக இருக்கிறது என்றால் அது யார் வேலை,கண்டிப்பாக அது தொழிலதிபர்கள் செய்த வேலை தானே.

அம்மையார் சட்டம் போட்டு குறைத்து இருந்தால் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக விற்று இருக்க வேண்டும் அப்படி இல்லை.இப்பொழுது கூட தேர்தலுக்கு கொஞ்சம் காலம் முன்னர் 153 ரூபாயில் விற்கப்பட்டது தேர்தல் சமீபத்தில் 183 ஆனது இப்பொது 200 ஆகிவிட்டது என தான் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.(இதில் சிமெண்ட் கிரேட் பொருத்து விலை மாறும் இந்த விலைகள் குறைந்த கிரேட்கானது) இதனை நீங்கள் எங்கு வேண்டுமானலும் சரிபார்த்து கொள்ளலாம். அந்த காலத்தில் அம்மையார் தான் ஆட்சியில் இருந்தார் ஏன் கவனிக்கவில்லை.

இந்த விலையேற்றம் முழுக்க முழுக்க தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களின் கூட்டு களவாணித்தனம் என்பேன்.

Unknown said...

வணக்கம் வவ்வால்,

டாட்டாவை மிரட்டி மந்திரி பயந்தார் என்பது உண்மையல்ல.டாட்டவையே மிரட்டும் அளவு துணிவிருப்பவர் பிர்லாவை,செட்டிநாட்டை மிரட்டுவது அவ்வளவு கடினமல்ல.மத்திய மாநில அரசுகளை யாரும் பகைத்துக்கொண்டு வணிகம் செய்ய துணிய மாட்டார்கள்.

இது தொழிலதிபர் சதி என்பதை விட அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு என்று சொல்வதே சரி.

அம்மையார் ஆட்சியில் 150 சராசரியாக இருந்த சிமென்ட் இப்போது 200 ஆக காரணம் அரசியல் லீலைகளே என்று சொல்வேன் நான்

Anonymous said...

ippadi argue seivathinal..oruvaruku oruvar yerpadum palangal enna ennabathai therinthu kolla thondrugirathu...karuthu bethathayum etru kolvathu than nalla karuthaliyin sinthanayaga irukka mudium..

வவ்வால் said...

செல்வன்,

டாடாவை மிரட்டினார் என வதந்திக்கே அவர் அமைச்சர் பதவி பறிபோகும் நிலை உருவானது என்பது உங்களை தவிர அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது.

அப்படியே நீங்கள் சொல்வதே சரி எனப்பார்த்தாலும் டாடா அந்த மிரட்டலுக்கு பணிந்தாரா? இல்லையே, எனவே அது போல இவர்களும் தில் ஆக இருக்க வேண்டியது தானே. இவர்களுக்கு லாபம் வர வேண்டும் என்பதால் தானே.

சரி சிமெண்ட் ஆலை அதிபர்கள் எல்லாம் அப்பாவிகள் மிரட்டலால் தான் மக்கள் விரோத நடவடிக்கை செய்கிறார்கள் என்கிற உங்களது கற்பனையைக்கூட ஒத்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு சுனிதா நாரயணன் தெரிந்து இருக்கும் கோக்கில் பூச்சி மருந்து இருக்கிரது என வெளிப்படுத்தியவர். அவர் சிமெண்ட் ஆலைகள் எவ்வாரு சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுத்துகிறது என அறிக்கை தயாறித்தார் அதில் இந்த முதன்மையான நான்கு ஆலைகளுமே மோசமான ஆலைகள் என தெரிய வந்து இருக்கிறது.

அவர்கள் அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை ஏமாற்றி சூழலை மாசுப்படுத்துகிறார்கள் இதில் ஒரு காமெடி அவர்களுக்கு அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மாசற்ற தொழிற்சாலை விருது எல்லாம் தருகிறது.

நடுனிலையான ஒரு அமைப்பு ஆய்வு செய்தால் வேறு மாதிரி வருகிறது ,எனவே அரசுக்கு எல்லாம் தொழிலதிபர்கள் பயப்படுகிறார்கள் என்பதே நம்ப முடியாத ஒன்று.

வவ்வால் said...

செல்வன்,

சரசரியாக 150 விலையில் அம்மையார் ஆட்சி முழுவதும் இல்லை அதிகபட்டசமாக 183 ரூபாய் வரை போனது என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். 183 ரூபாய் என்பது குறைந்த விலையா.அதனை ஏன் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை.

அம்மையார் ஆட்சி காலத்தில் தனியாருக்கு தன் முதலிடம் என்பதற்கு ஒரு சான்று திரைஅரங்குகளி முதல் 10 நாட்களுக்கு அவர்களே கட்டணம் உயர்த்திக்கொள்ளலாம் என ஒரு சட்டம் போட்டார் அதன் விலைவாக் 40 ரூபாய் டிக்கெட் 80 ரூபாய் என கவுண்டரிலேயே விற்கப்படும். இப்படி விலையேற்றம் செய்ய தான் அம்மையார் செயல்பட்டுள்ளார்.

இப்பொழுது முந்தைய காலத்தை விட காய்கறிகள் விலை குறைந்து உள்ளது இதற்கான பெருமையையும் அந்த அமைச்சர் மிரட்டி குறைக்க வைத்தார் என தருவீர்களா :-))

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
வவ்வால் said...

வாங்க பெபி,

சும்மா நீங்க சொல்றதும் சரி தான் அவர் சொல்றதும் சரி தான்னு பேசினா அதுனால என்ன பயன்.அர்த்தமற்ற பேச்சு தான் கிடைக்கும். உண்மைகளை போராடி தான் நிலை நிறுத்த முடியும்,ஆமாம் சாமி போட்டு அல்ல!

யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நமக்கு பகுத்தறிவு இருப்பதாக சொல்லிக்கொள்வது வீண்.நாம் சொல்வதை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ இல்லை. அவர் அவர் கருத்து அவருக்கு.

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
ரவி said...

////சர்வதேச டெண்டர் விட்டு முழு கம்பனியையும் விற்றால் அதிக பணம் கிடைக்கும்.ஒட்டுமொத்தமாக அனைத்து அரசு கம்பனிகளையும் விற்றால் ஏகப்பட்ட பணம் கிடைக்கும். ///

அப்புறம் அங்கே வேலை செய்பவர்களுக்கு ஆப்பு கிடைக்கும்...லாபம் மொத்தமும் பணமுதலைகளுக்கு மட்டுமே கிடைக்கும்...

வவ்வால் said...

வாங்க செந்தழல் ரவி!

முதல் வருகை என நினைக்கிறேன் நன்றி ,அடிக்கடி வாங்க!

உண்மைய தான் சொல்றிங்க ஒரே அடியா ஆப்பு தான் அப்படி செய்தா, ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தப்போ இந்தியாவுக்கு ஆன கதை தான் இப்படியே செய்தோம்னா ஆன சில நவீனப் பொருளாதார மேதைகளுக்கு இதெல்லாம் புரியமாட்டேன்குது :-))

Unknown said...

அப்புறம் அங்கே வேலை செய்பவர்களுக்கு ஆப்பு கிடைக்கும்...லாபம் மொத்தமும் பணமுதலைகளுக்கு மட்டுமே கிடைக்கும்... //

அரசு நடத்தினால் லாபமே வராது.நஷ்டம் தான் வரும்.லாபம் வராமல் நஷ்டம் வரும் கம்பனியில் உள்ளவர்களுக்கு ஆப்பு தான் கொடுக்க வேண்டும்.

தனியார் எடுத்தால் கம்பனி ஊழியர்களை குறைப்பார்கள்.ஆனால் வேலை நடக்கும்.லாபம் வரும்.உற்பத்தி பெருகும்.

Unknown said...

//அப்படியே நீங்கள் சொல்வதே சரி எனப்பார்த்தாலும் டாடா அந்த மிரட்டலுக்கு பணிந்தாரா? இல்லையே, எனவே அது போல இவர்களும் தில் ஆக இருக்க வேண்டியது தானே. இவர்களுக்கு லாபம் வர வேண்டும் என்பதால் தானே. //

எல்லாருக்கும் டாட்டாவின் தில் வராது.He is in a class of his own.

//சரசரியாக 150 விலையில் அம்மையார் ஆட்சி முழுவதும் இல்லை அதிகபட்டசமாக 183 ரூபாய் வரை போனது என்பதையும் குறிப்பிட்டுள்ளேன். 183 ரூபாய் என்பது குறைந்த விலையா.அதனை ஏன் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை.//

சராசரி 150 எனும்போது பிரச்சனை முடிந்தது.183க்கும் போயிருக்கு,அப்ப அதை கட்டுப்படுத்தியதால் தான் சராசரி 150க்கு வந்திருக்கு.

//அம்மையார் ஆட்சி காலத்தில் தனியாருக்கு தன் முதலிடம் என்பதற்கு ஒரு சான்று திரைஅரங்குகளி முதல் 10 நாட்களுக்கு அவர்களே கட்டணம் உயர்த்திக்கொள்ளலாம் என ஒரு சட்டம் போட்டார் அதன் விலைவாக் 40 ரூபாய் டிக்கெட் 80 ரூபாய் என கவுண்டரிலேயே விற்கப்படும். இப்படி விலையேற்றம் செய்ய தான் அம்மையார் செயல்பட்டுள்ளார்.//

அம்மையார் சிமென்ட் விஷயத்தில் மட்டும் தான் ஒழுங்கு.ஏனெனில் அது அவருக்கு ஆகாதவர்களின் கம்பனி

Unknown said...

இப்பொழுது முந்தைய காலத்தை விட காய்கறிகள் விலை குறைந்து உள்ளது இதற்கான பெருமையையும் அந்த அமைச்சர் மிரட்டி குறைக்க வைத்தார் என தருவீர்களா :-)) //

காய்கறி விலை குறைந்தால் விவசாயிக்கு லாபம் இல்லை என அழுவான்.விலை ஏறினால் குடும்ப தலைவர் அழுவார்

வவ்வால் said...

வாங்க செல்வன்,

நான் சொன்னது....

//லாபத்தில் நடப்பதை விற்று காசு வாங்குவதற்கு பதில் நஷ்டத்தில் இயங்குவதை விற்று நிதி திரட்டலாம்,மேலும் அரசின் செலவீனங்களும் குறையுமே! நலிவடைந்த நிறுவனம் விலைப்போகாது என்று சொல்லலாம் அதையும் வாங்க ஆள் இல்லாமலா போவார்கள்.//

நீங்கள் சொல்வது....

//அரசு நடத்தினால் லாபமே வராது.நஷ்டம் தான் வரும்.லாபம் வராமல் நஷ்டம் வரும் கம்பனியில் உள்ளவர்களுக்கு ஆப்பு தான் கொடுக்க வேண்டும்.//

நல்ல அரசுக்கு அழகு லாபம் மட்டும் பார்ப்பதல்ல, லாபம் ஈட்டாத தொழிற்சாலைகளை மீண்டும் லாபகரமாக செயல்ப்படுத்த தான் பார்க்க வேண்டும் .

மேலும் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறிவிட்டீர்கள், அரசு விற்பது நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளை அல்ல என்பதை நான் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளேன்.லாபத்தில் இயங்குவதை ஏன் விற்க வேண்டும் என்கிறேன்.

//சராசரி 150 எனும்போது பிரச்சனை முடிந்தது.183க்கும் போயிருக்கு,அப்ப அதை கட்டுப்படுத்தியதால் தான் சராசரி 150க்கு வந்திருக்கு.//

150 ரூபாய்க்கு விலையை அவர் கொண்டுவரவில்லை ,அம்மையார் ஆட்சி விட்டு போகும் போது விற்ற விலை 183 , அது எப்படி அவர் குறைத்தார் என சொல்கிறீர்கள்.

//அம்மையார் சிமென்ட் விஷயத்தில் மட்டும் தான் ஒழுங்கு.ஏனெனில் அது அவருக்கு ஆகாதவர்களின் கம்பனி//

எந்த விஷயத்திலும் ஆதாயம் தேட தான் அம்மையார் முனைந்தாரே ஒழிய பெரிதாக அக்கரை காட்டவில்லை.
சிமெண்ட் விஷயத்தில் கூட ஆரம்பத்தில் ஏதோ வேகம் காட்டி இருக்க கூடும் ஆனால் உண்மையில் அவருக்கு விலையை கட்டுப்படுத்தும் எண்ணம் இருந்து இருந்தால் தொடர்ந்து விலையை குறைத்தே வைத்து இருக்க முயன்று இருப்பார் .

ஒரு வேலை அவர் எதிர்பார்த்தாற்போல சிமெண்ட் ஆலை அதிபர்களை கட்சி "வளர்ச்சிப்பணிக்கு நிதி" அளித்து விட்டார்கள் போலும்.

//காய்கறி விலை குறைந்தால் விவசாயிக்கு லாபம் இல்லை என அழுவான்.விலை ஏறினால் குடும்ப தலைவர் அழுவார்//

அதற்கு தான் ஒரு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் யாரும் பாதிக்கப்படாமல் என சொல்கிறேன்.ஆலை அதிபர்களைப்பொருத்தவரை அவர்களுக்குள் கூடி பேசி என்ன விலை வேண்டுமானலும் வைத்துக்கொள்கிறார்கள். அதைக்கட்டுப்படுத்த அரசு முயல வேண்டும்.

ஆனால் விவசாயிகள் நிலை அப்படியா கிடைத்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம்.எப்பொழுதும் ஏழை சொல் அம்பலம் ஏறாது.

வவ்வால் said...

//எல்லாருக்கும் டாட்டாவின் தில் வராது.He is in a class of his own.//

நீங்கள் டாடா பெரிய ஆள் அவர் அஞ்ச மாட்டார் ,வளையாமல் எதிர்த்து நிற்பார் என சொல்கிறீர்கள் ,இதுப் போல் சொல்வீர்கள் என தெரிந்தே தான் நான் முன்னரே இவ்வாறு சொல்லியுள்ளேன்.

//இந்தியாவில் தனியொரு சிமெண்ட் ஆலையாக உற்பத்தியின் அடிப்படையில் முன்னனியில் இருப்பது பிர்லா சிமெண்ட் தான் ,அவர்கள் டாடாவிற்கு இணையானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர்களை மிரட்டினால் சும்மா விடுவார்களா?//

டாடாவிற்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல பிர்லா குழுமம்,அவர்கள் இந்த அரசியல்வாதிக்கு பயந்து விலை ஏற்றினார்களா?

Unknown said...

//டாடாவிற்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல பிர்லா குழுமம்,அவர்கள் இந்த அரசியல்வாதிக்கு பயந்து விலை ஏற்றினார்களா? //

டாட்டா - பிர்லான்னு நம்மூரில் சேர்த்து வைத்து பேசுவதால் இருவரும் ஒரே மாதிரி சிந்திக்கணும்,நடந்துக்கணும்னு சொல்ல முடியுமா?என்ன கொடுமை இது.முலாயமுக்கு கைகால் அமுக்கி விடும் ரேஞ்சுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கு.இதுக்கும் ரிலயன்ஸ் டாட்டா,பிர்லாவை விட பணக்காரங்க.அதே சமயம் இன்போசிஸ் நாராயனமூர்த்தி பெங்களூர் அரசோடு சண்டை போடுகிறார்.ஏன் நாரயணமூர்த்தி மாதிரி ரிலயன்ஸ் இல்லை,ரெண்டு பேரும் பணக்காரங்க தானேன்னு கேக்க முடியுமா?

ஒரு அளவுக்கு தான் குறும்பு செய்யணும்.ஒரே அடியா பண்ண கூடாது.சரியா?:-)))

Unknown said...

150 ரூபாய்க்கு விலையை அவர் கொண்டுவரவில்லை ,அம்மையார் ஆட்சி விட்டு போகும் போது விற்ற விலை 183 , அது எப்படி அவர் குறைத்தார் என சொல்கிறீர்கள்.//

ஆட்சியை விட்டு போகும்போதுதானே 183?வந்தபோது 130க்கு இறக்கி காட்டினார் அல்லவா?

ஒரே விலையை வைத்து தொங்கிக்கொண்டிருக்க கூடாது.இறங்கி வரணும்.நீங்க 183ல நிக்கறீங்க.நான் 130ல் நிற்கிறேன்.இறங்கி வந்து டீலை 150ல் முடிச்சுக்கலாம்.சரியா?:-)))

//அதற்கு தான் ஒரு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் யாரும் பாதிக்கப்படாமல் என சொல்கிறேன்.//

கத்திரிக்கா 10 நிமிஷத்துக்கு ஒரு விலைன்னு விக்கும்.அதுக்கு என்னன்னு விலை நிர்ணயம் பண்ண?அதுக்கெல்லாம் விலை நிர்ணயம் பண்ணா மக்கள் கத்திர்க்காவுக்கு பதில் வெண்டைக்காய்ன்னு வெச்சு குழம்பு வெச்சிடுவாங்க.

நடக்கற கதையா சொல்லுங்க.கத்திரிக்காவுக்கும்,வெண்டைகாய்க்கும் அரசு விலை நிர்ணயம் பண்ண முடியுமா?அதிக விலைக்கு வித்து நாலு காசு பாக்கத்தான் விவசாயி விரும்புவான்.

வவ்வால் said...

வாங்க செல்வன்!

இரண்டும் பேரும் ஒரே மாதிரி நினைக்க வேண்டியது இல்லை. ஆனால் இத்தனை பயம் ஏன்,உண்மையில் பயந்துக்கொண்டு தான் விலை ஏற்றுகிறார்கள் என்றால் நீங்கள் சொல்லிய அரசியல்வாதியின் கையில் இருப்பதாக சொல்லும் சிமெண்ட் ஆலையின் தயாரிப்பு ஆந்திராவில் தமிழகத்தை விட விலை குறைவாக விற்கப்படுகிறது, எல்லா சிமெண்ட் ஆலைகளின் சிமெண்டும் அங்கே விலைக்குறைவாக தான் விற்கப்படுகிறது. ஏன் ஆந்திராவில் மட்டும் அவர்களுக்கு பயம் போய்விட்டதா,அவர் தான் மத்திய அமைச்சர் ஆயிற்றே. :-))

//அதற்கு தான் ஒரு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் யாரும் பாதிக்கப்படாமல் என சொல்கிறேன்.ஆலை அதிபர்களைப்பொருத்தவரை அவர்களுக்குள் கூடி பேசி என்ன விலை வேண்டுமானலும் வைத்துக்கொள்கிறார்கள். அதைக்கட்டுப்படுத்த அரசு முயல வேண்டும். //

நான் விலைநிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொன்னது சிமெண்டிற்கு தான். கத்தரிக்காவிற்கு அல்ல என்பதைப்பாருங்கள். தொழிலதிபர்கள் போல விவசாயிகளும் செய்ய முடியவில்லையே என ஆதங்கப்பட்டு சொன்னது அது!

Unknown said...

//நீங்கள் சொல்லிய அரசியல்வாதியின் கையில் இருப்பதாக சொல்லும் சிமெண்ட் ஆலையின் தயாரிப்பு ஆந்திராவில் தமிழகத்தை விட விலை குறைவாக விற்கப்படுகிறது, எல்லா சிமெண்ட் ஆலைகளின் சிமெண்டும் அங்கே விலைக்குறைவாக தான் விற்கப்படுகிறது. ஏன் ஆந்திராவில் மட்டும் அவர்களுக்கு பயம் போய்விட்டதா,அவர் தான் மத்திய அமைச்சர் ஆயிற்றே. :-))//

இந்தியாவிலேயே அதிக அளவில் லைம்ஸ்டோன் கிடைப்பதும் சிமென்ட் உற்பத்தி அதிகமாக இருப்பதும் ஆந்திராதான்.மிக அதிக எண்ணிக்கையில் சிமென்ட் உற்பத்தியாளர்கள் அங்கு உள்ளனர்.அதிக உற்பத்தி மற்றும் நிறைய உற்பத்தியாளர்கள் இருக்கும் இடத்தில் விலை கட்டுப்பாடு செய்வது மிக,மிக கடினம்.மேலும் அங்கு மாநில அரசு இவர் கையில் இல்லை.இங்கே மத்திய,மாநில அரசுகள் இரண்டும் இவர் கையில்.இதே போல் நிலைமை 1999ல் இருந்தபோது சிமென்ட் விலையை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

//நான் விலைநிர்ணயம் செய்ய வேண்டும் என்று சொன்னது சிமெண்டிற்கு தான். கத்தரிக்காவிற்கு அல்ல என்பதைப்பாருங்கள்//

விலை கட்டுப்பாடு செய்ய அரசு அந்த தொழிலில் இருக்கவேண்டும் என்கிறீர்கள்.நான் இல்லை என்கிறேன்.ஜெயலலிதா போல் சட்டம் போட அரசுக்கு தில் இருந்தால் போதும்.அத்துறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பொன்ஸ்~~Poorna said...

பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்:

வவ்வால்,
திடீர்னு உங்களுக்கு என்னாச்சு? அப்பப்ப காணாம போய்டறீங்க?
நிறைய பஞ்சு மிட்டாய் வாங்கி பேப்பர் பேப்பரா படிச்சிகிட்டு இருக்கீங்களா ? :)))

வவ்வால் said...

வணக்கம் செல்வன்,

கொஞ்ச நாள் ஊர்ல இல்லை அதான் தாமதம் ஆகிடுச்சு ,இபோ தான் இந்த பக்கம் வறேன். அரசாங்கம் தொழிலில் இருக்க வேண்டாம் என்றால் இப்போது ந்ல்c விவகாரத்தில் லேட்டஸ்ட் செய்திகள் எல்லாம் பார்த்து இருப்பிங்களே இந்த அளவு மக்களும் ,ஏன் நீங்க பாராட்டும் அம்மையாரும் கடுமையா எதிர்ப்பு காட்டி இருக்காங்களே! கடைசியா கருணானிதி ஆதரவு விலக்கி கொள்வேன் என்று மிரட்டும் அளவு சென்றுள்ளாரே(அந்த மிரட்டலே ஒரு நாடகம் என்பது தனிக்கதை)

மேற்கத்திய நாடுகளின் நிலை வேறு அதனை எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக கொள்ள முடியாது!

இப்பொழுது அரசாங்கம் சாதாரண கல் உப்பிற்கு தடை விதித்துள்ளது அது கூட தொழிலதிபர்களின் நலனுக்காக தான்.என்று இப்பொழுது புதிய பிரச்சனை கிளம்ப்பியுள்ளது பார்த்தீர்களா. இது பற்றி தனிப்பதிவே போடலாம் என இருக்கிறேன்.

வவ்வால் said...

வாங்க பொன்ஸ்! தாங்களும் தங்கள் யானையும் நலமா?

மறந்திடாம தேடி வந்து விசாரிக்கரிங்க மிக்க நன்றி! வலைப்பதிவு உலகில் நடைபெறும் சண்டைப்பார்த்து பயந்து ஓடிட்டனு நினைச்சிங்களா ! வெளியூர்ப்பயணம் அடிக்கடி போக வேண்டிய நிலை எனக்கு , அதான் அடிக்கடி தற்காலிகமா காணாமல் போறேன். ஆனால் வர வேண்டிய நேரத்தில வந்துடுவேன் :-))

//நிறைய பஞ்சு மிட்டாய் வாங்கி பேப்பர் பேப்பரா படிச்சிகிட்டு இருக்கீங்களா ? :))) //

பரோட்டா பார்சல் கட்டி தந்த பேப்பர் குருமா ல ஊறின பிறகும் படிச்சுட்டு வந்திருக்கேன் :-))