Tuesday, August 07, 2012

சந்தர்ப்பவாத அப்பாடாக்கர்கள்.


முன் அறிவிப்பு:

இப்பதிவு எந்த ஒரு தனி நபரையோ அல்லது குழுமத்தையோ, வலைப்பதிவரையோ குறிப்பிட்டு எழுதப்படவில்லை, வலைப்பதிவுகள், ஊடகங்கள், மற்றும் மக்கள்,சமூகம் ஆகியவற்றின் பொதுப்புத்தி சார்ந்த கருத்தாக்கங்களின் மீதான எனது அவதானிப்பினை வெளிப்படுத்தவே இப்பதிவு.

யாரேனும் தங்களுக்கும் இப்பதிவின் கருத்திற்கும் தொடர்பிருப்பதாக நினைத்தால் அது அவர்களின் கற்பனையே, ஏன் எனில் இப்பதிவில் உலகமகா கருத்து என்ற "வஸ்து" எதுவும் இல்லை, முழுக்க மொக்கையாக கூட இருக்கலாம்.

எனவே விருப்பமில்லாதவர்கள் இம்முன்னறிப்புடன் வெளியேறிவிடலாம், இதனை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை. திறந்த மனதுடன் அனைத்து கருத்தினையும் அவதானிப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கலாம்.நன்றி!
**************

வழக்கமாக அல்லது பெரும்பாலும் அல்லது அனேகமாக பதிவர்கள் எப்படி எழுதுகிறார்கள், அவர்கள் நோக்கம் என்னவென்றெல்லாம் விமர்சித்து தனியே என் பதிவில் எழுதி பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்திக்கொள்வதில்லை.என்ன கருத்தாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சென்று துணிச்சலாக அவர்களிடமே தெரிவிப்பேன், வேண்டியவர்கள் ,வேண்டாதவர்கள் என்ற இரட்டை நிலைப்பாடு எல்லாம் கிடையாது, சரி எனப்பட்டால் சரி என்றும் தவறு என்றால் தவறு என்றும் சொல்ல தயங்கியதில்லை. கறுப்பு அல்லது வெள்ளை மட்டுமே நடுவில் சாம்பல் நிறம் என்று மழுப்புவதில்லை.

ஆனால் சமீபகாலமாக உண்மையை எதிர் கொள்ள அச்சப்படும் பதிவர்கள் சிலர் அதனை விரும்புவதில்லை , அவர்களுக்கு தேவையானது எல்லாம் , நல்லப்பகிர்வு , த.ம.9 என ஓட்டும், ஹிட்டும் மட்டுமே. அதை எல்லாம் வைத்து அண்ணா நகரில் வீடு வாங்கவோ அல்லது அடுத்த முதல்வராகவோ ஆக முடியுமா என்று தெரியவில்லை ஆனால் சிலப்பதிவர்கள் ஹிட்ஸ், ஓட்டு என வெறிப்பிடித்து , பொழுது விடிந்தால் செய்தித்தாளில் சம்பவங்களை தேடுகிறார்கள், தொ.காவில் என்ன சிக்கும் என ரிமோட்டை அழுத்தி தேய்க்கிறார்கள், ஏன் எனில் அப்போது தானே பரபரப்பாக எழுதி சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியும் :-))

சிலர் அவர்களுக்கு காலையில் மலசிக்கல் வந்து அடைத்துக்கொண்டாலும் அரசாங்கம் சரியாக ஆட்சி செய்யவில்லை அதனால் எனக்கு அடைத்துக்கொண்டது என்ற ரீதியில் புகார்ப்பட்டியல் வாசிக்கிறார்கள், அதற்கும் சிலர் உடனே ஓடிவந்து இப்படித்தான் 1947 இல் எனக்கும் அடைத்துக்கொண்டது ஆட்சி சரியாக இல்லைனா அடைத்துக்கொள்ளும் ,நல்ல சமூக விழிப்புணர்வுள்ளப்பதிவு என்று முதுகு சொறிந்து விடுகிறார்கள்.

அப்படியான பதிவைப்பார்த்துவிட்டு சும்மா போகாமல் மலச்சிக்கலுக்கும் அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம், கொஞ்சம் வெளக்கெண்னை குடிங்க சரியாகிடும்னு சொன்னால் போதும் , என் வயசென்ன தெரியுமா? ,என் அனுபவம் என்ன தெரியுமா? என் புகழ் என்ன தெரியுமா? எனக்கு கருத்து சொன்னவர் என் ஆருயிர் நண்பர் தெரியுமா? என என்ன, என்ன ,என்ன என அவ்வையார் போல நீட்டி முழக்குறாங்க.

என்ன கொடுமை சார் இது, இவருக்கு சொறிந்துவிட்டவர் இவரோட ஆருயீர் நண்பர்னு எனக்கு எப்படி தெரியும்,அப்படியே ஆருயிரோ ,ஓருயிரோவாக இருந்தால் என்ன சொன்ன கருத்து மொக்கையாக இருந்தால் மொக்கைனு சொன்னால் தப்பா சார் ?

முகம் தெரியாத முகமூடியான உன் பின்னூட்டம் வெளியிட்டு உனக்கு மகிழ்வூட்டுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை, உன்கிட்டே ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை ,பாஸ்போர்ட், ஆகியவை இல்லைனு வேற சொல்றாங்க, அடக்கொடுமையே என் பின்னூட்டம் இவர்கள் பதிவில் வருவதால் எனக்கு என்ன மகிழ்ச்சி? அவர்கள் பதிவு என்ன ஒலகப்புகழ்ப்பெற்ற டைம் மேகசினா அதில் என் கருத்து வெளிவந்தால் நான் மகிழ்வுற்று மேகம் ஒன்பதில் மிதக்க :-))

இந்த புண்ணியவான்கள் ,ஜீவா நடித்து வெளிவர இருக்கும் "முகமூடி"படம் கூட பார்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன் , ஏன் என்றால் படம் பேரு முகமூடின்னு இருக்கு என சொல்வார்களாயிருக்கும்.

மாஸ்க் ஆஃப் தி ஸாரோ, ஸ்பைடர் மேன் , மேட்மன் போன்ற முகமூடி நாயகர்கள் படம் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் :-))

ஒரு வலைப்பதிவு தமிழில் வைத்துக்கொண்டால் கடவுளாக நினைத்துக்கொள்கிறார்கள், நான் கடவுளையே விமர்சிப்பவன் இவர்கள் என்ன பெரிய சுண்ணாம்பு விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்களா?

இவர்கள் செய்வதெல்லாம் இது தான் , மாதம் முப்பது நாளுக்கு அறுபது பதிவு என எதையாவது எழுதித்தள்ளிவிட்டு பிரபலப்பதிவர் என சொல்லிக்கொள்வது , நடு நடுவே மானே தேனே போல வெள்ளிக்கிழமை ஆனால் வெளியாகும் ஏதேனும் மொக்கைப்படத்தினைப்பார்த்துவிட்டு விமர்சனம் , படம் எதுவும் வரவில்லை எனில் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைப்பற்றி, பின்னர் செய்தித்தாள், வார இதழ்கள் என அனைத்தையும் சுட்டுப்பதிவாக்குவது மட்டுமே , ஆனால் அவர்கள் பதிவில் ஏதேனும் ஒரு மாற்றுக்கருத்து சொல்லிவிட்டால் போதும் ஏய் ..ஏய் நான் எவ்வளவு பிரபலப்பதிவர் தெரியுமா..என் பின்னாடி தமிழ்ப்பதிவுலகமே இருக்குன்னு சொல்லிக்கொள்ள வேண்டியது .இது போன்ற அப்பாடாக்கர்களுக்கு தினம் குறைந்த பட்சம் ஒரு பதிவாவது எழுதவில்லை எனில் கை,கால் எல்லாம் உதற ஆரம்பித்து விடும் என நினைக்கிறேன்.

அவ்வப்போது இவர்களுக்கு சமுகப்பொறுப்புணர்வு நவத்துவாரத்திலும் பொங்கிட்டு வந்துவிடும் அது போன்ற சமயங்களில், ஒரு ஆட்டோவில் 10 பேருக்கும் மேல் பள்ளிக்குழந்தைகளை திணித்து அழைத்து செல்கிறார்கள், விபத்து ஆனால் என்ன ஆவது, இப்போது தான் ஒரு குழந்தை பள்ளிப்பேருந்தில் சிக்கி உயிர் இழந்தார், எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கும் மேல் குழந்தைகளை ஏற்றக்கூடாது என மனசாட்சியுடன் முடிவு எடுக்க வேண்டும்,அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரகடனம் செய்து பதிவுபோடுவார்கள் மேம்போக்காகப்பார்த்தால் சமூக அக்கறைப்பீரிட்டது போல தெரிந்தாலும் இதனைக்கட்டுடைத்துப்பார்த்தால் இத்தகைய நிலைக்கு இவர்களே காரணம் என்பது புரியும்,

எப்படி எனப்பார்ப்போம்,

வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியெல்லாம் தரங்கெட்டப்பள்ளி ,என் அந்தஸ்துக்கு அங்கு என்பிள்ளைகள் படிக்குமா என தூரமாக இருக்கும் ஏதேனும் பணம் பிடுங்கும் பள்ளியில் கொண்டு சேர்த்தது இவர்களே.

பெரிய கட்டிடம், எல்.கேஜில் கணினி , யோகா, குதிரையேற்றம் ,யானை ஏற்றம் முதல் அனைத்தும் கற்றுத்தரும் உலகத்தரப்பள்ளி ,அப்பா, அம்மா ரெண்டு பேரும் முனைவர் பட்டம் வாங்கி இருக்கணும் , பிள்ளைக்கும் பெற்றோருக்கும் நுழைவுத்தேர்வு என ஏகமாக மிரட்டிவிட்டு எக்கச்சக்கமாக நன்கொடை,மாதக்கட்டணம் எல்லாம் வசூலிக்கும் பள்ளியே தரமான பள்ளி என தேடிப்போய் சேர்த்து இருப்பார்கள்.

பின்னர் பள்ளிக்கு போக பேருந்து இவர்கள் பகுதிக்கு வரவில்லை என ஆட்டோவில் அனுப்ப முடிவு எடுப்பதும் இவர்களே, ஏற்கனவே 10 பேர் ஏற்றிச்செல்லும் ஆட்டோவில் 11 ஆவதாக பிள்ளையை இவர்களே திணித்து அனுப்பிவிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேருக்கு ஏற்றாமல் இருக்க வேண்டும், என்பதும், அரசாங்கம் நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்பதும் என்ன நியாயமோ தெரியவில்லை.

ஒரு ஆட்டோவில் 10 பேர் ஏற்றி செல்வதை கண்ணால் பார்த்துவிட்டு தானே அதில் இவர்கள் ஏற்றி அனுப்புகிறார்கள், அதற்கு காசும் கொடுக்கிறார்கள், அந்த ஆட்டோ டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியா இவர்கள் பிள்ளையை ஆட்டோவில் ஏற்றி சென்றார் ,இல்லையே.

நாம் தான் விருப்பப்பட்டு ஏற்றி அனுப்புகிறோம், பின்னர் ஏன் புலம்பல், குழந்தைகள் மீது உண்மையான அக்கரை இருக்குமானால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்த்து இருக்க வேண்டும், அல்லது தினம் பெற்றோர்களில் ஒருவர் பள்ளிக்கு அழைத்து சென்று அழைத்து வர வேண்டும்.அதெல்லாம் செய்யாமல் ஆட்டோ டிரைவரையும் அரசையும் திட்ட வேண்டியது.

மேலும் 10 குழந்தைகளை ஏற்றி செல்வதால் கிடைக்கும் வருவாயை 5 குழந்தைகள் ஏற்றி சென்றாலும் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் பேசி ஏற்பாடு செய்யலாம். குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என்றால் கூடுதலாக செலவு செய்ய முன்வர வேண்டும், பிரபல பள்ளிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு செலவா?

அல்லது சிக்கனமாக வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டால் நடந்தே போய்வருவார்கள். துவக்கப்பள்ளிக்காலத்தில் எங்குப்படித்தால் என்ன?அப்துல் கலாம் போன்ற சாதனையாளர்கள் எந்த காண்வென்டில் ஆட்டோவில் போய் படித்தார்? சாதிக்கவில்லையா? ஓரளவு குழந்தைகள் விவரம் வந்த பிறகு தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்பலாமே. அதை விட்டுவிட்டு 3 வயது பச்சிளம் குழந்தையை ஆட்டோவில் 10 பேருடன் திணித்து அனுப்பும் பெற்றோர்கள் ,அரசையும்,ஆட்டோ டிரைவரையும் பொறுப்பில்லாதவர்கள் என விமர்சிப்பது உலகமகா நடிப்புடா சாமின்னு தான் சொல்ல தோன்றுகிறது.

தாம்பரம் பள்ளிப்பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி இறந்த சம்பவத்தினை ஆராய்ந்தோமெனில் பல மட்டத்திலும் தவறுகள் மற்றும் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்திருப்பது தெரிய வரும்.

#முதல் குற்றவாளி பள்ளியினை நடத்தியவர்.

#இரண்டாவது குற்றவாளி அப்பேருந்துக்கு மிக சமீபத்தில் தகுதி சான்று வழங்கிய வட்டாரப்போக்குவரத்து அதிகாரி.

இந்தியன் படத்தில் இதனை ஒத்த ஒரு சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.

#மூன்றாவது குற்றவாளி அப்பேருந்தினை இயக்கிய ஓட்டுநர், மற்றும் பராமரிப்பாளர்கள், ஒரு ஓட்டையுடன் அட்டையைப்போட்டு மூடி பள்ளிக்குழந்தைகள் கொண்ட பேருந்தினை இயக்க முன்வந்திருக்கவே கூடாது.

பேருந்தில் சீட்டில்லாமல் நின்றுக்கொண்டே ஓட்டு என சொன்னால் அந்த ஓட்டுநர் ஓட்டியிருப்பாரா?

#நான்காவது குற்றவாளி அல்லது பொறுப்பற்ற செயலுக்கு சொந்தக்காரர்கள் அக்குழந்தையின் பெற்றோர்கள். ஆம் அவர்களே தான்.

அவர்கள் இருப்பது முடிச்சூரில் அது மேற்கு தாம்பரம் ,பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ இருக்கலாம், அக்குழந்தைப்படித்தப்பள்ளி சேலையூர் ,இது தாம்பரம் கிழக்கில் உள்ளது.

ஏன் அவ்வளவு தூரம் உள்ளப்பள்ளியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும், அதுவும் அப்பள்ளியில் எல்.கேஜிக்கு ரூபாய் 40,000 நன்கொடை, ஆண்டுக்கட்டணம் ரூபாய் 30,000 ,ஓட்டைப்பேருந்துக்கு ரூபாய் 10,000 கட்டணம்.

அப்பேருந்தில் ஓட்டையே இல்லை என்றாலும் எல்.கேஜி படிக்கும் 3 வயது குழந்தைக்கு பேருந்தில் தனியே பயணம் செய்யும் பக்குவம் வந்துவிடுமா? சீட்டில் ஏறி அமர்வதே அதற்கு இமயமலையில் ஏறுவது போல அல்லவா இருக்கும்.

மேலும் எதிர் பாராதவிதமாக பிரேக் அடித்தால் கவனமாக பிடித்துக்கொள்ள கூட தெரியாத வயது, ஓட்டை இல்லாத பேருந்தில் பயணித்து இருந்தாலும் இது போன்ற திடீர் நிறுத்தங்களின் போது முன் இறுக்கையில் இடித்துக்கொண்டு மூக்கு, பல் என உடைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு, ஏன் மண்டை கூட உடையலாம்.

பெரியவர்களே கூட பேருந்து பயணங்களின் போது இடித்துக்கொள்வதுண்டு, மேலும் மேடுப்பள்ளங்கள், வேகத்தடை என தூக்கிப்போட்டு இருக்கையில் இருந்து குழந்தைகள் விழ வாய்ப்புண்டு, எனவே ஒரு மூன்று வயது குழந்தையை தெரிந்தே தொலைதூரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பேருந்தில் அடைத்து அனுப்புவதே தவறு.

ஏன் முடிச்சூர் அருகில் ஒரு பள்ளிக்கூட இல்லையா,அங்கே அனுப்பினால் படிக்காமல் போய்விடுமா? கண்டிப்பாக துவக்கப்பள்ளியிலேயே பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என அக்குழந்தைக்கு ஆசையிருந்திருக்காது.எனவே இது பெற்றோரின் ஆசையே.

எனவே வீட்டுக்கு அருகில் உள்ளப்பள்ளியில் சேர்த்திருந்தாலே இச்சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.ஐந்தாம் வகுப்பு வரையில் வீட்டுக்கு அருகில் உள்ளப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் கல்வி ஒன்றும் பாழாகிவிடாது.எனவே குழந்தைகளை விவரம் தெரியும் வரையில் தொலைவாக உள்ள இடங்களுக்கு படிக்க அனுப்ப தேவையில்லை.

அரசு சட்டம் இயற்றுவதாக இருந்தால் ,எந்த பள்ளியும் துவக்க நிலை வகுப்புகளில் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மாணவர்களை சேர்க்க கூடாது என்று தான் சட்டம் இயற்ற வேண்டும். இதுவே பாதிப்பிரச்சினைகளை தீர்த்து விடும்.

பின்னர் வருவது பெற்றோர்களின் கடமையாகும், தங்கள் குழந்தைகளின் மீது உண்மையில் அக்கரையும் பாசமும் இருக்குமானால் அவர்களே பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு அழைத்து வர வேண்டும்.எந்த வித விழிப்புணர்வும் ,பக்குவமும் பெற்றிராத மழலைகளை அடுத்தவரை நம்பி பேருந்திலோ, ஆட்டோவிலோ திணித்து அனுப்ப கூடவே கூடாது.

இதை செய்வதை விட்டு விட்டு நான் பணம் கொடுக்கிறேன் , நீ பொறுப்பாக அழைத்து போக வேண்டும் என தங்கள் கடமையை ,பொறுப்பை பெற்றோர்கள் தட்டிக்கழித்து விடுகிறார்கள், பணத்திற்காக வேலை செய்பவர்களுக்கும் பாசத்துடன் கவனித்து செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.எவ்வளவு பணம் கொடுத்தாலும் பாச உணர்ச்சியையும்,பொறுப்புணர்வையும் ஒரு மூன்றாம் மனிதரிடம் உருவாக்கிவிட முடியாது. அவர்கள் எந்திரத்தனமாக கடமைக்கு என்று வேலை செய்யவே முற்படுவார்கள் என்பதை பொறுப்புள்ள பெற்றோர்கள் உணர வேண்டும்.

************
பின்குறிப்பு:

இப்பதிவினைப்படித்துவிட்டு என்னை திட்ட நினைப்பவர்களும், பாராட்ட நினைப்பவர்களும் தாராளமாக தங்கு தடையின்றி செய்யலாம், எனக்கு கனியும்,காயும் ஒன்றே,கனியிருப்ப காய்க்கவர்ந்தற்று என்றெல்லாம் வேதாந்த விசாரம் எல்லாம் பேசமாட்டேன். ஏன் எனில் தேங்காய் என்னதான் முற்றினாலும் தேங்காப்பழம் என்று சொல்வதில்லை, தேங்காய் என்றே சொல்கிறோம் எனவே காய் வேண்டாம் என்றால் இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி என்ற ருசியான சைட் டிஷ் நமக்கு கிடைத்திருக்காது :-))

----------------

56 comments:

ILA (a) இளா said...

நினைக்கிறேன், கண்டிப்பா இன்னிக்கு மழை வரும் பாருங்களேன்.

வவ்வால் said...

இளா,

வாங்க,நன்றி!

மழை வரும் அளவுக்கு பதிவு ஒன்றும் அமிர்த வர்ஷினி ராகத்தில் இயற்றவில்லையே :-))

முதல் பின்னூட்டமே உங்க கிட்டே இருந்து வந்திருப்பதால் வேண்டுமானால் மழை வரலாம், மழை அவசியம் தேவை ,ஏற்கனவே மேட்டூர் வறண்டுப்போச்சு, அடுத்த ஆண்டு அரிசி விலை ஏறிப்போகக்கூடும், மக்கள் அவதிபட நேரிடலாம்(சமூகக்கருத்து சொல்றேன்)

பதிவுலக நடப்பெல்லாம் பார்த்துக்கிட்டு தான் இருக்கிங்கப்போல :-))

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

பதிவு போட்டு ஒன்னும் செய்ய முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.ஏதோ என் போல் இரண்டு மூன்று ஒத்த சிந்த்னை ஆட்கள் கிடைத்தது மட்டும்தான் ஒரே பலன்.

மாற்று சிந்த்னை உடையோரும் பலருண்டு என்பதும் கண்ட உண்மை.

அவ்வளவுதான்.எனினும் பல அறியாத விடயங்களை எழுதும் உங்கள் போலும் சிலர் இருப்பதும் உண்மை.

தவறுகளுக்கு பிறரே காரணம்,நல்ல விடயங்களுக்கு நானே காரணம் என்னும் மனநிலை மனித இயல்பு.அது பதிவுலகில் வெளிப்படையாக தெரிகிறது.

நீ கமெண்ட் போட்டா தடை செய்வேன்[பாஸ்போர்ட் இல்லை ஹி ஹி],நான் கமெண்ட் போட்டா அப்படியே போடணும் என்பதும் ஹா ஹா ஹா


பதிவுலக பாஸ்போர்ட் சட்டம் விரைவில் வருகிறது!!!!!!!!!!

எதையும் கண்டுக்காதீங்க சகோ!!!!!!!!!!!!!!

நன்றி

குட்டிபிசாசு said...

எதிர்கருத்து சொல்பவரிடம் கடிந்து கொள்ளும் முதிர்ச்சியின்மை என்னிடமும் இருந்தது. தற்போது பரவாயில்லை. சற்று திருந்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.

…//எந்த பள்ளியும் துவக்க நிலை வகுப்புகளில் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மாணவர்களை சேர்க்க கூடாது என்று தான் சட்டம் இயற்ற வேண்டும்.//

…//தங்கள் குழந்தைகளின் மீது உண்மையில் அக்கரையும் பாசமும் இருக்குமானால் அவர்களே பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு அழைத்து வர வேண்டும்.//

…நான் சொல்ல நினைத்தவை.

//தேங்காய் என்னதான் முற்றினாலும் தேங்காப்பழம் என்று சொல்வதில்லை//

…நடைமுறையில் இல்லை. ஆனால் தெங்கம்பழம் என்ற சொல் தமிழில் இருக்கிறது.

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

//தவறுகளுக்கு பிறரே காரணம்,நல்ல விடயங்களுக்கு நானே காரணம் என்னும் மனநிலை மனித இயல்பு.அது பதிவுலகில் வெளிப்படையாக தெரிகிறது.//

அதே..அதே நான் பல வரிகளில் சொல்லவந்ததை ,நீங்க ரெண்டே வரில சொல்லிட்டிங்க , திருவள்ளுவரே தோத்தார் போங்க.

உண்மையில் இப்பதிவு எழுதும் போது இதையே நினைத்து எழுதினேன். சொன்னா நம்பவா போறீங்க, எனக்கு இன்னும் இம்மாநகரத்தின் சூழ்ச்சி மிகுந்த மனிதர்களின் சொல்லாடல் புரியவே இல்லை.

சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் சாப்டாச்சான்னு கேட்டார் அப்போ டைம் மதியம் 3 மணி, நான் எங்கே சார் சாப்பிட விடுறாங்க ஒரே இம்சைனு சொன்னேன், கடசியில் பார்த்தால் அவர் எனக்கு மேல இருக்கிறவரின் உறவினர், போற வழியில் கச்சிதமா போட்டுக்கொடுத்துட்டு போயிட்டார். அதுக்கு அப்புறம் நடந்த சம்பவம் எல்லாம் சென்சார்ட்.

மதியானம் லஞ்ச் டைம்கு மேலே சாப்டாச்சான்னு கேட்டால் ஆச்சு சார்னு பொய் சொல்லணும்னு இப்போ தான் கத்துக்கிட்டேன் :-))

சகோ.சார்வாகன் மனிதனின் நாகரீகம் என்பது ஆடை சார்ந்தும்,அவன் உணவு சார்ந்துமே இன்றளவும் இருக்கு,உண்மையான அறிவுசார் நாகரீகம் என்ன என டை கட்டிய குரங்குகளுக்கு இன்னும் புரியவில்லை ,குரங்குகள் என்னை மன்னிப்பதாக :-))

பாஸ்போர்ட் ஒன்னுதான் குறை, இதே நாதாரிகள் சில ,பல நாட்களுக்கு முன் அய்யா,அம்மா என் பதிவை படிச்சு கமெண்ட் போடுங்க என பிச்சை எடுத்ததை மட்டும் மறந்துவிடுகிறார்கள் :-))

-----------

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

//…நான் சொல்ல நினைத்தவை. //

ஒருத்தராவது இருக்கீங்களே, சந்தோஷம்.

ரொம்ப பணக்கார,செல்ல பிள்ளைகள் உருப்படாமல் போவது ஏன் தெரியுமா, அவர்களின் பெற்றோர் ,எவ்ளோ வேண்டுமானாலும் செலவு செய்வேன் ,யாராவத்உ கவனித்துக்கொள்ளணும், ஆனால் பசங்களை கவனிக்க எல்லாம் நேரம் இல்லை என பணத்தின் பின்னாடி போவதால் தான்.

இப்போ பணக்காரன் என்ற நிலைப்போய் நகரத்தில் உயர் நடுத்தர வர்க்கம் என்ற அளவில் ,நான் காசு கொடுக்கிறேன் , இப்படி செய்னு சொல்ல கிளம்பிட்டாங்க,காசு வாங்கினவன் எல்லாம் நியாயமா இருப்பானா? இல்லைனா அரசை குறை சொல்ல வேண்டியது.

இவர்கள் ஒருவர்கள் கூட பல கிலோமீட்டர் இன்றும் நடந்து போய் படிப்பவர்களையோ, அரசுப்பேருந்தில் இலவச பாசில் சென்று படிப்பவர்கள் பேருந்து நடத்துனரால் அவமதிக்கப்படுவதையோ கண்டுக்கொள்ளவே மாட்டார்கள்.

ஒருப்பேருந்தில் இலவச பாசில் ஏற வந்த மாணவன் ஏறும் முன்னர் நடத்துனர் விசில் அடித்து பேருந்து கிளம்பிவிடவே மாணவன் கீழே விழுந்துவிட்டான், நான் மட்டும் நடத்துனரிடம் என்ன அவசரம் , ஏறும் போதே விசில் அடிக்குறிங்க கேட்டதுக்கு (அப்போது 10-15 மாணவர்கள் ஏறினார்கள்) ஓசில எல்லாம் கிடைக்குதுன்னு பெத்துவிடுறாங்க செத்தா சாவட்டும் அப்போ தான் புத்தி வரும் என சொன்னார்.

இப்போ குமுறும் அதே பதிவர் நடத்துனர்கள் ரொம்ப நல்லவர்கள் என ஒரு பதிவுப்போட்டப்போ இந்த அனுபவத்தினை சொன்னேன், என்ன சொன்னார் தெரியுமா நடத்துனருக்கு வேலைப்பளு அதிகம் அவ்வப்போது டென்ஷன் ஆவது இயல்பே என்றார் :-))

ஹிட்ஸ்க்கு அலையும் பதிவர்கள் இந்த சமயத்தில் இது எழுதினால் ஹிட் கிடைக்கும் என கணக்கு செய்து எழுதும் போது ,நான் குறுக்க புகுந்து அதைக்கலைப்பதால் வரும் எரிச்சலுக்கு நான் என்ன செய்ய :-))

தெங்கம்பழம் என்ற சொல் இருக்கு ஆனால் பழம் ஆன தேங்காயில் என்ன இருக்கும் பார்த்து இருக்கிங்களா?

உங்கள் தகவலுக்காக ,ஒரு செந்தில் -கவுண்டமணி காமெடியில் தேங்காயை காட்டி வரும்,அதை வைத்தே சொன்னேன் :-))

தி.தமிழ் இளங்கோ said...

பதிவு போடுபவர்களில் ஆரம்பித்து பள்ளிக்கூடத்தில் முடித்து விட்டீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை.
ஒரு சாதாரண தொழிலாளி கூட, தனது பொருளாதார நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்காமல், வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் தனது பிள்ளைகளை சேர்த்துவிட்டு பின்னால் திண்டாடுகிறார்கள். கடனாளி ஆகிறார்கள்.

குட்டிபிசாசு said...

//பாஸ்போர்ட் ஒன்னுதான் குறை, இதே நாதாரிகள் சில ,பல நாட்களுக்கு முன் அய்யா,அம்மா என் பதிவை படிச்சு கமெண்ட் போடுங்க என பிச்சை எடுத்ததை மட்டும் மறந்துவிடுகிறார்கள் :-))//

…நீங்கள் ஒரு பிரபல பத்திரிகையாளராகவோ, சினிமா பிரபலமாகவோ இருந்தால் குறைந்தது ஐந்து வரிகளில் தெளிவான பவ்யமான பதில் அளிப்பார்கள்.

//ஹிட்ஸ்க்கு அலையும் பதிவர்கள் இந்த சமயத்தில் இது எழுதினால் ஹிட் கிடைக்கும் என கணக்கு செய்து எழுதும் போது ,நான் குறுக்க புகுந்து அதைக்கலைப்பதால் வரும் எரிச்சலுக்கு நான் என்ன செய்ய :-))//

……கிறுக்கித் தள்ளும் குப்பைகளை எல்லாம் காசாக்க சிலர் நினைக்கிறார்கள். யாரிடம் அதை விற்பனை செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் முன்னிலையிலேயே பதிவரின் டவுசரை கிழித்தால் எரிச்சல் வர தானே செய்யும்.

காரிகன் said...

சில பதிவர்களை பற்றி நீங்கள் சொன்னது சரிதான்.உங்கள் கருத்தை படிக்கும்போது எனக்கு ஒரு சில வேடதாரிகளின் நினைவு வருகிறது.இவர்கள் உலக தரம் என்கிற ரேஞ்சில் பதிவுகள் எழுதுவார்கள்.நாம் விமர்சனம் செய்தாலோ உடனே காட்டமாக பின்னூட்டம் போடுவார்கள்.பதிவுகள் எழுதும் போது நாகரீகமாக எழுதும் இவர்கள் ஒரு எதிர் விமர்சனத்தை கண்டதும் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்.லண்டன் ஸ்டோர்ஸ் நியுயார்க் கடை என்று பெயர் வைத்துகொண்டு உள்ளே லோக்கல் சரக்கை விற்கும் தெருமுனை பெட்டிக்கடை ஆசாமிகள்.நீங்கள் உங்கள் பதிவை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

காரிகன் said...

சில பதிவர்களை பற்றி நீங்கள் சொன்னது சரிதான்.உங்கள் கருத்தை படிக்கும்போது எனக்கு ஒரு சில வேடதாரிகளின் நினைவு வருகிறது.இவர்கள் உலக தரம் என்கிற ரேஞ்சில் பதிவுகள் எழுதுவார்கள்.நாம் விமர்சனம் செய்தாலோ உடனே காட்டமாக பின்னூட்டம் போடுவார்கள்.பதிவுகள் எழுதும் போது நாகரீகமாக எழுதும் இவர்கள் ஒரு எதிர் விமர்சனத்தை கண்டதும் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்.லண்டன் ஸ்டோர்ஸ் நியுயார்க் கடை என்று பெயர் வைத்துகொண்டு உள்ளே லோக்கல் சரக்கை விற்கும் தெருமுனை பெட்டிக்கடை ஆசாமிகள்.நீங்கள் உங்கள் பதிவை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

Anonymous said...

பதிவர்கள் பற்றி சொன்னது சரி தான்.. அதுலயும் அடுத்தவனுக்கு அட்வைசெல்லாம் தருவாங்க.. நாம ஒன்னும் சொல்லிட கூடாது.. அதுலயும், கேட்ட கிடைக்கும் சொல்ற பதிவர், பிற மொழி படங்கள திருடி எடுக்கற படத்துல வேலையெல்லாம் செய்வாராம்.. அதெல்லாம் கண்டுக்க மாட்டாரு.. அங்கெல்லாம் போய் ஏன் திருடரீங்கன்னு கேக்க வேண்டியது தானே.. [கேட்டா கெடைக்கும்னு அவர் செய்யறது நல்லது தான்.. இல்லைன்னு சொல்லல, ஆனா அந்த நேர்மை எல்லா விஷயதிலையும் இருக்கணும்]

//எந்த பள்ளியும் துவக்க நிலை வகுப்புகளில் இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மாணவர்களை சேர்க்க கூடாது என்று தான் சட்டம் இயற்ற வேண்டும்.//

இது ஒரு சில நாடுகள்-ல இருக்கு.. ஆனா அங்கெல்லாம் அந்த பள்ளிகளை நடத்துவது அரசாங்கம்.. அதனால வருமானத்த பத்தி கவலை இல்ல.. இங்க அப்படியா?அப்புறம் எப்படி பேருந்துக்கு காசு வாங்கறது.. அப்புறம் எப்படி 6000 பேர் 7000 பேர்னு பள்ளியில சேர்த்து நன்கொடை வாங்கறது.. அப்புறம் காசு இல்லைன்னு சொன்னாலும் கல்வி குடுக்கணும்.. நடக்க விடுவாங்கள??

சென்னையில் சில பள்ளிகள் மாணவர்கள் வீடு சில கிமி-க்குகள் இருந்தால் மட்டுமே சேர்த்து கொள்கின்றன என்று கேள்வி பட்டிருக்கிறேன்... சரியாய் தெரியல..

இந்த சட்டம் வந்தா... சில [so called] "நல்ல பள்ளிகள்" பக்கத்துல வாடகையெல்லாம் அசுர வளர்ச்சி கண்டிடும் :D :D :D

-SA

வவ்வால் said...

தி.த.இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

நான் சொல்வதில் உண்மை இருக்குன்னு உங்களைப்போன்ற அனுபவஸ்தர்களும் சொல்லும் போது தான் நாம் தவறாக எதுவும் எழுதவில்லைனு நிம்மதியாகிறது.

ஆமாம் சார் நாம என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை பிரபலப்பள்ளியில் சேர்க்கண்னும்னு இப்போ பெற்றோர்கள் போட்டிப்போடுறாங்க,அவங்க போட்டிப்போட்டுக்கிட்டு நிற்பதால் கல்வி வியாபாரம் ஜோரா ஓடுது.

இத்தனைக்கும் அது போன்ற பள்ளிகள் பெற்றோரை மனிதனாக கூட மதிப்பதில்லை சார், எதாவது ஒன்று என்றால் பள்ளிக்கு வர சொல்லி அரை நாள் உட்காரவைப்பாங்க, கடசியில் ஒரு நிமிஷம் தான் பேசுவாங்க,அதுவும் பயங்கர்ர அதிகாரமாக பேசுவாங்க,இத்தனைக்கும் பவ்யமா எல்லாத்துக்கும் தலையாட்டுபவர் பெரிய அதிகாரியாகவோ, தொழிலதிபராகவோ இருப்பார்.

இதுவே ஒரு அரசுப்பள்ளியில் கூப்பிட்டு பையனைப்பற்றி பேசணும் என்றால் எட்டிக்கூடப்பார்க்க மாட்டாங்க, அப்படியே பேசினாலும் ஆசிரியரையே மிரட்டுவாங்க.

பெரும்பாலான பிரச்சினைகளின் துவக்கப்புள்ளி தனிமனிதர்களின் செயல்பாடாகவே இருக்கும்,ஆனால் சமுதாயம்க்கெட்டுப்போச்சு ,அரசாங்கம் சரியில்லைனு சொல்வது வாடிக்கையாகிப்போச்சு.

அரசாங்கம் யோக்கியமானது என்று சொல்வதாக நினைக்கவேண்டாம், அரசினை உட்கட்டமைப்பு,சுகாதாரம்ம்,அடிப்படை வசதிகள்னு செய்ய சொல்லிக்கேட்காமல் எல்லாத்துக்கும் அதுவே காரணம் என சொல்வதை தான் சொல்கிறேன்.

அடிப்படையான வேலைகளில் கூட லஞ்சம் ஊழல்னு பெருகியதைப்பற்றி கவலையில்லை, லஞ்சம் கொடுத்தாலும் நம் வேலை சீக்கிரமாக முடியனும் என்று வாழும் கலையைக்கற்றுக்கொள்கிறோம் :-))

நானும் அவ்வாழும் கலையை விரைவாக கற்றுக்கொண்டு வருகிறேன் :-))

//ஒரு சாதாரண தொழிலாளி கூட, தனது பொருளாதார நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்காமல், வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் தனது பிள்ளைகளை சேர்த்துவிட்டு பின்னால் திண்டாடுகிறார்கள். கடனாளி ஆகிறார்கள்.//

இதை ஒருவரிடம் நேராக சொல்லப்போய் என் பையன் பெரிய பள்ளிக்கூடத்தில் படிப்பது உனக்கு பிடிக்கவில்லைனு என்னைத்தான் சொல்கிறார் :-((

எனக்கு கிடைக்கும் அறிவுரை வாயை வச்சுக்கிட்டு சும்மா இருடா..நம்ம வாய் சும்மாவே இருக்க மாட்டேன்கிறது :-))

Anonymous said...

த.ம. ஓட்டிற்கு அலையும் கூட்டம், ‘நல்ல பகிர்வு’ விநியோகஸ்தர்கள் பற்றி எழுதுகையில் பொதுவாக பெயர் போடாமல் எழுதலாம். ஆனால் இப்பதிவு கேபிள் மற்றும் மோகன்குமார் பற்றியது என்பது எனது கணிப்பு. கணிப்பென்ன? அதுதான் உண்மை.

Anonymous said...

சந்தர்ப்பம் அமைந்தால் சென்னை பதிவர் சந்திப்பிற்கு வரவும். :)

அஞ்சா சிங்கம் said...

ஆஹா இங்க தான் குறைந்த காற்றுஅழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கு .
இங்க இன்னைக்கு நிறைய மீன் சிக்கும்ன்னு நினைக்கிறன் . அதனால் நம்ம டேரா இன்னைக்கு இங்கதான் ..

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாங்க,நன்றி!

ஹா...ஹா சரியா சொன்னீங்க,இவர்கள் எல்லாம் தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொண்டு அலைகிறார்கள்.சகமனிதர்களை,பதிவர்களை சமமாக நினைக்காமல் செயல்ப்படும் இவர்கள்,அமெரிக்க ஓபாமா இவர்கள் சொன்னதை கேட்டு நடக்கவில்லை, அவருக்கு மக்களின் குரலை மதிக்க தெரியவில்லைனு எழுதும் கொடுமையும் உண்டு :-))

//கிறுக்கித் தள்ளும் குப்பைகளை எல்லாம் காசாக்க சிலர் நினைக்கிறார்கள். யாரிடம் அதை விற்பனை செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் முன்னிலையிலேயே பதிவரின் டவுசரை கிழித்தால் எரிச்சல் வர தானே செய்யும்.//

ஆக நீங்க என் பதிவை மட்டும் இல்லை பிற பதிவுகளில் போடும் பின்னூட்டத்தினையும் படிக்கிறீங்கன்னு தெரியுது, ரைட்டு... நான் கூட நினைத்துக்கொள்வது நமக்கு மட்டும் தான் அவர்களின் செயல் அப்படி தெரியுதா ,எல்லாருக்கும் அப்படி தெரியுதான்னு, நீங்களும் அப்படி உணர்கிறீர்கள் என்னும் போது ஒரு மகிழ்ச்சி தான் :-))
---------

காரிகன்,

வாங்க,நன்றி!

ஒரு தடவை முட்டிக்கொண்டோம், இப்போ ஒட்டிக்கொண்டோம்னு ஆகிடுச்சே :-))

கருத்தோடு கருத்து உரசினால் தான் நல்ல சிந்தனைகள் பிறக்கும், சண்டைப்போட வந்தாலும் சந்தோஷமா வரவேற்கணும் என நினைப்பவன்.எனவே அனைவரும் தடையற பேசலாம்.

//லண்டன் ஸ்டோர்ஸ் நியுயார்க் கடை என்று பெயர் வைத்துகொண்டு உள்ளே லோக்கல் சரக்கை விற்கும் தெருமுனை பெட்டிக்கடை ஆசாமிகள்.நீங்கள் உங்கள் பதிவை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.//

ஹி...ஹி நீங்க யாரை சொல்றீங்கன்னு தெரியுது. ஆனால் அது போன்றவர்கள் அவங்க சொல்றதை எல்லாரும் கேட்கணும்,ஆனால் மற்றவர்கள் சொல்வதைக்கேட்க மாட்டோம் என ஒருவழிப்பாதையிலே போறாங்க, ஆனால் பேசும் போது பார்த்தால் அரிச்சந்திரனும், தர்மரும் தோற்றான் போங்கோ :-))

நிஜ உலகில் உலவும் அதே பழைமைவாதிகள் நவீன கணினி உலகிலும் ஆக்ரமித்துக்கொண்டு முன்னே போகாமல் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறார்களே.
---------------

எஸ்.ஏ,

வாங்க,நன்றி!

உங்க கிட்டே யாரும் பாஸ்போர்ட் கேட்கலையா :-))

ஒரு விஷயத்தில் நியாயம் பேசிட்டு அதே நியாயத்தினை அடுத்த விஷயத்தில் குழி தோண்டிப்பொதைக்கிறாங்க,அதை சுட்டிக்காட்டினால் பொல்லாதவன் ,போக்கிரி, முகமூடின்னு பொல்லாங்கு பேசுறாங்க ,என்ன கொடுமை சார் இது :-))

ஆமாம் ,கல்வியாவாரிகளின் வியாபாரம் பாதிக்கவே செய்யும், மேல்லும் இந்த பெற்றோர்கள் தானே அது போன்ற பள்ளியில் சேர்க்க தலையால் தண்ணிக்குடிச்சு நிக்குறாங்க, அதுவும் அப்ளிகேஷன் வாங்க முதல் ராத்திரியே பள்ளிக்கூட கேட்டு முன்னாடி பெட்ஷீட் போட்டு படுக்கும் கொடுமை எல்லாம் நடக்குது :-))

தமிழ் நாட்டில் அண்ணா பல்கலை உட்பட அரசு பொறியியல் கல்லூரியில் 6000 இடங்களும், அரசு மருத்துவக்கல்லூரியில் 1600 இடங்களும் தான் இருக்கு அவற்றில் ஏதோ ஒன்றில் இடம் பிடிக்க எல்.கே.ஜியிலே பிளான் போடுகிறார்கள்.ஐ.ஐடி சேர்க்கவில்லை.

எல்.கே.ஜியில் இருந்து செலவு செய்யும் பணத்தினை சேர்த்து வைத்து 5 லட்சம் கொடுத்து ஒரு நிகர்நிலைப்பல்கலையில் சேர்த்து படிக்க வைத்துவிடலாம்.ஏன் சொல்கிறேன் எனில் சொற்ப சீட்டுக்காக ஏகப்பட்ட செலவு செய்து பள்ளியில் படிக்க வைத்து உயர்ப்படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனில் எப்படியும் தனியார் கல்லூரியில் காசுக்கொடுத்து தான் படிக்க வைக்கப்போறாங்க,அதுக்கு எதுக்கு எல்.கேஜியில் இருந்து பையனை வாட்டி எடுக்கணும், செலவு செய்யணும்!

சென்னையிலும் அப்படி சில பள்ளிகளிள் சொல்லுகிறார்கள், பின்னர் அதுக்கு ஏற்ற கூடுதல் கட்டணம் கொடுத்தால் செவ்வாய்கிரகத்தில் வீடு இருந்தாலும் சேர்த்துக்கொள்வார்கள் :-))
---------------

Anonymous said...

// ஒரு வலைப்பதிவு தமிழில் வைத்துக்கொண்டால் கடவுளாக நினைத்துக்கொள்கிறார்கள், நான் கடவுளையே விமர்சிப்பவன் இவர்கள் என்ன பெரிய சுண்ணாம்பு விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்களா?//

யோவ் அஞ்சாசிங்கம்.... எப்படி பஞ்ச்? இதை எழுத தெரியாம நாமளும் ப்ளாக்கரா அலையறோம்.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

ஆமா ஆமா நானும் கவனிச்சேன் அவரு பன்ச் அளவுக்கு நாம யோசிக்க முடியவில்லையே
இந்த கிரீட பதிவர்கள் மற்றவர்களின் பதிவில் வந்து பின்னூட்டம் இட மாட்டார்கள் ..
ஏன் .?

Anonymous said...

எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்க மதத்தின் மீதும் மத நம்பிக்கைகளின் மீதும் காரித்துப்பி பதிவுகள் எழுதுபவர்களையும், ஹிட்ஸ் வெறி பிடித்து மோசமான கதைகளை பகிர்ந்து வருபவர்களையும் விட்டுவிட்டீர்களே வவ்வால் சார்!

வவ்வால் said...

சிவகுமார்,

வாங்க,நன்றி!

ஆஹா பத்தவச்சுட்டியே பரட்டைனு சொல்ல வைக்குறிங்க ..ஹி...ஹி தப்பா எடுத்துக்காதிங்க உங்க சிகை அலங்காரத்தை வச்சு அப்படி சொல்லவில்லை, சூப்பரான டயலாக்கு என்பதால் சொன்னது.

கேபிள்ஜியோடு முட்டிக்கொண்டாலும் அவர் ஓரளவுக்கு நியாயமானவர் , திட்டினாலும் புடிச்சாலும் பின்னூட்டமெல்லாம் வெளியிட்டுவிடுவார்.

எனக்கும் நீங்க சொன்னவர்களுக்கும் வாய்க்கா வரப்பு தகராறா ,இல்லை என் சரக்கை தட்டிவிட்டாங்களா? நான் பேசுவது ,விமர்சிப்பது பொது வெளியில் ஒருவர் வைக்கும் கருத்தினை ,பொதுவில் வைத்தப்பிறகு அதனை விமர்சிக்க கூடாது என சொல்ல யாருக்குமே உரிமை இல்லை.

யாருமே விமர்சிக்காத கருத்திற்கு உரிமையாளராய் இருக்க வேண்டும் என்றால் அதனை யார் கண்ணிலும் படாமல் ஒளித்து வைத்துவிடுவதே உத்தமம் :-))

முதல்வர் சரியில்லை, பிரதமர் சரியில்லை அமெரிக்க அதிபருக்கு அறிவில்லை, மணிரத்னம்,ஷங்கர் ,ஜேம்ஸ் கேமரூன், கிரிஸ்ட்டோபர் நோலனுக்கு எல்லாம் படம் எடுக்க தெரியவில்லை என விமர்சிப்பதற்கான உரிமையோ தகுதியோ ஒருப்பதிவருக்கு இருக்கும் என நினைத்தால் எனக்கும் அவர்களின் பதிவை விமர்சிக்கும் தகுதி இருக்கு என நினைக்கும் உரிமை இருக்கு.

என்னைப்பொறுத்தவரையில் கருத்தோடு கருத்து ,வாளோடு வாள் (பெரிய பொன்னியின் செல்வரு வாளும் வேலும் வச்சிருப்பார்னு சொல்றது கேட்குது)என மோதினாலும் அனைவரும் நண்பர்களே , வாய்ப்பு கிடைத்தால் மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் என சியர்ஸ் சொல்லவும் தயங்கமாட்டேன் :-))

-----

சென்னைப்பதிவர் சந்திப்புக்கா, தனியா அடிச்சா வன்முறை கூட்டமா அடிச்சா கலவரம் என ஏதேனும் பிளான் கிளான் இருக்கா சிவா :-))

மேலும் பிரபலப்பதிவர்களுக்காகன சந்திப்பு போல (விளம்பரம் எல்லாம் அப்படித்தான் சொல்லுது "பிரபலப்பதிவர்களின் சென்னை சந்திப்பு"),அங்கே என்னைப்போல முகமூடி கற்றுக்குட்டியெல்லாம் நுழைய முடியுமா :-))

------
அஞ்சா ஸிங்கம்,

வாரும்,நன்றி!

ஏன் ..ஏன்ன் இந்த கொலவெறி , என்னைய புழுவா போட்டு மீன் பிடிக்கலாம்னு பார்க்கிற அச்சு அசல் காசிமேடு பார்ட்டியா இருக்கீர் :-))

சிலப்பேர் டெர்ரர் ஆ காமெடியா இருப்பாங்க நான் காமெடியா டெர்ரர் ஆஹ் இருப்பேன் அம்புட்டுத்தேன். வேண்டுமானால் சாயந்திரம் அஞ்சரைக்கு மேல வாங்க ஒரு கவித அரங்கம் போடலாம் ,:-))

ஏ கள்ளுக்கடை

ஓரத்திலே

கள்ளு ஒன்றாக

கள்ளு ரெண்டாக

கள்ளு மூன்றாக

மப்பாகி

மட்டையாகி போச்சு

புள்ளே..
ஆக் ஜிங் ஜாக்.. ஜிங் ஜாக் ....

Unknown said...

! சிவகுமார் ! said...
சந்தர்ப்பம் அமைந்தால் சென்னை பதிவர் சந்திப்பிற்கு வரவும். :)
/////////////////////
ஏய்யா..?எதாவது அடியாள் செட் பண்ணி வச்சிருக்கிங்களா...?

Unknown said...

மிஸ்டர் வவ்வால் ஒரு சம்பவம் இது நடந்தது கோவை மாவட்டத்தில் ஒரு சிறிய ஊரில்

அரசு பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை மூன்றாவது படிக்கின்றது தனியார் பேருந்து வயிற்றில் ஏறி குடல் சாலையில் தெரித்து விழுந்தது!இந்த விபத்தை நேரில் பார்த்தோம் நானும் என் நண்பனும்!

இது தினத்தந்தியில் ஒரு ஓரத்தில் வந்தது..! பல பத்திரிக்கையில் இந்த செய்தி வரவேயில்லை!

இந்த விபத்து சென்னையில் இல்லாமல் வேறு மாவட்டத்தில் நடந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக போயிருக்கும்....விபத்து என்பது நடந்து போனாலும் ஆகும்! மீடியாக்கள் இதை பெரிது படுத்தி பெற்றோர் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள்!

அரசு பள்ளிகளை கடுமையான விதிமுறைகளின் கீழ் கொண்டு வரவேண்டும்!இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான விபத்தை தடுப்பதை பற்றி சிந்திப்போம்!

நாய் நக்ஸ் said...

வணக்கம் வவ்வால்...

சிலவற்றை பேசலாம்...
ஒரு சிலதை புன்னகையால்...
நேக்கோடு பண்ணலாம்...

ஏன் இந்த...புகைச்சல்...??????????

ஆமா வவ்வால் சார்....

நீங்க சென்னைக்கு எதுக்கு வந்தீங்க...????

பிழைக்க தானே...????

அப்ப உருக்கமா,,ஓ__,,,கோ___,,,இப்படி பட்ட வார்த்தைகளை கலந்து....பதிவு போடுங்க....

அப்புறம்...இனி நீங்க...பீடி கூட வாங்க வேண்டாம்....
எல்லாத்தையும்..மத்தவங்க பார்த்துப்பாங்க....


தொடருவோம்...

வவ்வால் said...

சிவா,

//யோவ் அஞ்சாசிங்கம்.... எப்படி பஞ்ச்? இதை எழுத தெரியாம நாமளும் ப்ளாக்கரா அலையறோம்.//

என்ன இதுக்கே அசந்துப்புட்டீர்,

நான் எல்லாம் காது ஜவ்வு பஞ்சர் ஆகிற அளவுக்கு "பஞ்ச் "அடிப்பேன் :-))

பஞ்ச் சொன்னால் பவர் ஸ்டார் பதறணும்,

அல்டிமேட் ஸ்டார் அலறணும்,

அப்படி இருக்கும் பஞ்ச் , என்ன ஒன்னு ஆரம்ப்பிச்சா எப்படி நிறுத்துறதுன்னு தெரியாமல் ஓடிக்கிட்டே இருக்கும் :-))

-----
அஞ்சா ஸிங்கம்,

நாபிக்கமலத்தில இருந்து மூச்சு இழுத்து தம் கட்டி ஒரு வச்சா "பஞ்ச் " சூப்பரா வரும்யா :-))

ஆமாம் நீர் எந்த "பஞ்ச்" சொன்னீர் ?

-----
வீடு சுரேஷ்,

வாங்க,நன்றி!

அதே டவுட்டு தான் எனக்கும், பெரிய சதித்திட்டமே நடக்குது போல.

என்ன இன்னிக்குன்னுப்பார்த்து வராதவுக எல்லாம் வாரிக, ஒரே காபராவா இருக்கே(டான்ஸ் ஆடுவாங்ளா இல்லை என்ன ஓட வைப்பாங்க்களா)

ஏதோ ஒன்னு நான் எல்லாம் ஒரு தடவை முடிவு எடுத்திட்டா ...அப்புறம் என் பேச்சையே நான் கேட்க மாட்டேன் ,ஹி..ஹி காதுல பஞ்ச் வச்சுப்பேன்...சோ லெட்ஸ் ஸ்டார்ட் மியூஜிக் :-))

------------
அனானி,

நீங்க சொல்வது சரி தான் எழுத உருப்படியாக பலது இருக்கு,ஆனால் ஒருவர் என்ன எழுதவேண்டும் நாம் சொல்லவில்லை, விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறோம், மதவாதம் பேசுபவர்கள் கூட இப்படி விமர்சனங்களை புறக்கணிக்கவோ அதிகாரம் செய்வதோ இல்லை, வெளிப்படையாக பேச தயாராக இருக்கிறார்கள் ,கருத்து சுதந்திரத்தினை விரும்புகிறார்கள் என்பதை கவனிக்கவும்.

நன்றி!
------

நாய் நக்ஸ் said...

வவ்வால்...நீங்க எந்த திரட்டில இணைச்சிருக்கீங்க....????????

அதை எல்லாம் ஸ்கீர்ன் ஷாட் எடுத்து போடா வேண்டாமா...???

போயா....நீர் எதுக்கும் சரி பட்டு வர மாட்டீறு....

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

வவ்வால்...நீங்க எந்த திரட்டில இணைச்சிருக்கீங்க....????????

அதை எல்லாம் ஸ்கீர்ன் ஷாட் எடுத்து போடா வேண்டாமா...???

போயா....நீர் எதுக்கும் சரி பட்டு வர மாட்டீறு....//////////////////

ஆஹா நக்ஸ் மாமா வந்தாச்சா நல்லது .........வவ்வால் ஊருக்குள்ள இவரும் பிரபல பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு ஆனாலும் கமன்ட் மாடுரேஷன் வைக்கிற அளவுக்கு இவர் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பது நம் அவதானுப்பு ...............

வவ்வால் said...

வீடு சுரேஷ்,

//அரசு பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை மூன்றாவது படிக்கின்றது தனியார் பேருந்து வயிற்றில் ஏறி குடல் சாலையில் தெரித்து விழுந்தது!இந்த விபத்தை நேரில் பார்த்தோம் நானும் என் நண்பனும்!

இது தினத்தந்தியில் ஒரு ஓரத்தில் வந்தது..! பல பத்திரிக்கையில் இந்த செய்தி வரவேயில்லை! //

அதை தாங்க நானும் சொன்னேன் அரசுப்பள்ளியில் இலவசப்பாசோடு பேருந்தில் ஏறி இறங்க மாணவர்கள் உயிரைப்பணயம் வைக்கிறார்கள்,பேருந்து முழுசா பிரேக் அடிச்சு நிறுத்த மாட்டேன்கிறாங்க ,லேசா நகர்ந்துக்கிட்டே இருக்கும் அப்படியே சட்டுன்னு கிளம்பிடும், சென்னையில் மாநகரப்பேருந்தில் பீக் அவரில் பயணம் செய்துப்பாருங்க, தினமும் போய் வர்ரவங்களுக்கு பாரதரத்னா குடுக்கலாம்னு சொல்வீங்க :-))

தினத்தந்தியின் எழுத்தின் தரம் சுமாராக இருந்தாலும் லோக்கல் நியூஸ் கவர் செய்துவிடுவார்கள்.

மேலும் சென்னையில் நேரடியாக நிருபர்கள், ஓ.பீ வேன் எல்லாம் அனுப்பி விரிவாக கவர் செய்ய முடியும், வெளிமாவட்டங்களில் ஏதேனும் ஏஜண்ட்களைத்தான் நம்பி இருப்பாங்க, எங்க ஊரில் சன் டீவி கேபிள் ஆபரேட்டர் தான் நிருபர் :-))

அதே போல பத்திரிக்கைகளின் ஏஜண்ட் தான் நிருபர். எனவே சென்னை சம்பவம் என்றாலே நல்லா கவர் செய்துடுவாங்க.
--
அரசுப்பள்ளிகளை நன்றாக கொண்டு வரவேண்டும் என்பதில் எனக்கும் விருப்பமே.ஆனால் மக்கள் குடம் ,குண்டான் சட்டி என இலவசமா கொடுத்தால் போதும் என இருப்பதால் அரசு ஒன்றும் செய்யாமல் நிம்மதியாக ஓய்வெடுக்கிறது.

ஏதாவது செய்யணும் சார்.

----------
நக்ஸ்,

வாங்க,நன்றி!

தம் அடிச்சால் புகைய வெளியே விட்றனும் இல்லைனா நுரையீரலில் புகைப்படிஞ்சு , ஒட்டடை புடிச்சு , இத்து போயிடும், எதையும் உள்ளேயே வச்சுக்க கூடாது, வெளியேற்றிடணும்!

//நீங்க சென்னைக்கு எதுக்கு வந்தீங்க...????

பிழைக்க தானே...????//

இல்ல சார் சென்னைக்கு ஓடி வந்து ஏதாவது கட்சிக்கு போஸ்டர் ஒட்டி அப்படியே கவுன்சிலர் ஆகி, சி.எம் ஆகிடலாம்னு வந்தேன் ,ஆனால் இங்க வந்தப்பிறகு தான் தெரியுது தெருவுக்கு தெரு நிறைய ஆளப்பிறந்தவர்கள் இதே லட்சியவெறியோட அலையுறாங்கன்னு , சரி காம்பெடிஷன் ஓவர்ரா இருக்கேன்னு இப்படியே ஓரமா வந்து பிளாக்கில பொலம்பிட்டு இருக்கேன் :-))

//அப்ப உருக்கமா,,ஓ__,,,கோ___,,,இப்படி பட்ட வார்த்தைகளை கலந்து....பதிவு போடுங்க....

அப்புறம்...இனி நீங்க...பீடி கூட வாங்க வேண்டாம்....
எல்லாத்தையும்..மத்தவங்க பார்த்துப்பாங்க....//

அட இப்படிக்கூட பொழைக்க முடியுமா , என் அறிவுக்கண்னை தொறந்துட்டிங்க சார்(அறிவு இருக்கானு கேட்காதிங்க)

தொடருவோம்.
-----------------

நாய் நக்ஸ் said...

மிஸ்டர் வவ்வால்...நீங்க சுண்டல்,,
இப்படி ஏதாவது...பேப்பர்-ல் சுத்திதர பொருள் ஏதும் வாங்குரதில்லையா....??????

போச்சி...பல ஆயிரக்கணக்கான பதிவுகள் போச்சி....

என்ன இப்படி..சிறுபுள்ள தனமா விட்டுடீங்களே....

நாய் நக்ஸ் said...

வவ்வால்....உங்களுக்கு எல்லாம் குழந்தைங்க பிரக்களை போல....

((ஏன்னா...உலக மஹா பெண் குழந்தை ஒருத்தர் பெத்திருக்காறு....))

அதை பத்தி ஏதாவது உருக்கமா பதிவு போடுங்களேன்....அந்த குழந்தையை கட்டி கொடுக்குற வரைக்கும்...எல்லாத்தையும்...அள்ளிடலாம்....

நாய் நக்ஸ் said...

இன்று காலையில் நான் கக்குஉஸ்..போனேன்....இதைப்பற்றிய...ஒரு தெளிவான...டெமோ உங்கள் பார்வைக்கு...

வீடியோ-வை கண்டிப்பாக பார்க்கவும்...

(வில்பர் வீடியோ பார்க்கவும்)
....

இன்னும் நிறைய டெமோ இருக்கு...
டிராப்ட்-ல் 16877987465687987656565....
பதிவுகள் இருக்கு.....

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

ஏன்ணே நல்லாத்தானே போயிட்டு இருக்கு ஒருத்தர் விடாமல் எல்லார்க்கூடவும் என்னைக்கோத்து விட்டு என் சோலியை ஒரே அடியா முடிச்சிடலாம்னு இரகசிய திட்டம் கிட்டம் போட்டு இருக்கீரா?

நான் பல திரட்டிகளில் இல்லை, இன்ட்லி, மற்றும் இன்டிபிலாக்கரில் இருக்கேன், மற்றவர்கள் தானாக திரட்டினால் உண்டு,அதை படம் புடிச்சு போட்டுக்கிறேன் :-))

என்னது பல்லாயிரக்கணக்கான பதிவுகளா ,நானெல்லாம் தலைகீழா நின்னாலும் நினைச்சுப்பார்க்க கூட முடியாது(இப்பவே தலை கீழ் தானேன்னு கேட்காதிங்க)

2006ல இருந்து பதிவு போடுறேன்னு பேருதான் இன்னும் 200 கூட அடிக்கலை.நானெல்லாம் என்னிக்கு 1000 அடிச்சு மேன் ஆஃப் தெ சென்டுரி ஆவது?

------------
ஹி...ஹி சிட்டுக்குருவியே அழியுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் போது எங்க வீட்டுல சிட்டுக்குருவியே கூடுக்கட்டி இருக்கு அது முட்டைப்போட்டு குஞ்சு வந்தா ஆணா ,பொண்ணானு பார்த்து ஒரு பதிவு போட்டுக்க வேண்டியது தான் :-))

----------
ஏன்ண்ணே இந்த கொல வெறி, ஒரு ஆர்வத்துல கேமராவ அடில வச்சு மேல உட்கார்ந்துடிங்களா படமே தெரியலையே :-))
---------------------------------------
அஞ்சா ஸிங்கம்,

//ஆஹா நக்ஸ் மாமா வந்தாச்சா நல்லது .........வவ்வால் ஊருக்குள்ள இவரும் பிரபல பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு ஆனாலும் கமன்ட் மாடுரேஷன் வைக்கிற அளவுக்கு இவர் இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பது நம் அவதானுப்பு ...............//

நக்ஸ் அண்ணே பண்ற ரவுசைப்பார்த்தீரா? ரொம்ப ஒலகப்புகழா இருக்கும் அதான் மாட்ரேஷன் வச்சுக்கலைனு நினைக்கிறேன்.

ஆனாலும் தலிவரு ஒருத்தர் திடீர்னு மாடரேஷன் வச்சு அதிர்ச்சி கொடுத்துட்டார்,நீர் எதாவது வம்பு பண்ணிட்டீரா?

எனக்கு ஃப்ரியா ஒதுங்க ஒரு கடை இருந்துச்சு அதையும் ஒழிச்சிட்டீர். இனிமே ஓட்டல் கடைக்காரர் பதிவில போய் குமுறலாம்னு இருக்கேன் :-))
-------------------

naren said...

வவ்வால், என்னை பிரபல பதிவரா நினைச்சி, என்னை நினைத்து இந்த பதிவை எழுதி, அசிங்கப் படுத்திட்டீங்க.

அதனல், உங்க கிட்ட இரண்டு வாரம் டூ, காய்.))))

சில சமயம் வேறு பதிவுகளில் உங்க பின்னூட்டமே, பதிவை விட சூப்பராக இருக்குது. அதற்காகவே அங்கெல்லாம் போக வேண்டிய நிலமை. கருணாநிதியை விட, நிறைய பட்டங்கள் வாங்கியிருக்கீங்க, இனிமே உங்களுக்கு தர்றதுக்கு பட்டமே இல்லை.

பதிவுகளை எல்லாம், ஜாலியாகத்தான் படிப்பீர்கள் போலிருக்குது. இல்லை என்றால் கீழ்பாக்கம் பற்றிதான் பதிவு போட்டிருப்பீங்க.)))

பின்னூட்டங்களை பற்றி. சில பதிவர்கள்(பின்னூட்டங்களே வராத, ஆடிக்கும் தைக்கும், பதிவு எழுதும் என்னை சேர்த்துதான்)விமர்சனம் செய்யும் நபர் ஒரு கம்பர்ட் லேவலில் இருக்க வேண்டும் என நினைப்பது சாத்தியமே. அந்த நபர் என்னதான் திட்டி விமர்சனம் செய்தாலும் வெளியிடுவார்கள். பதிய நபர்கள் என்றால், விமர்சனம் செய்ய அனுமதிப்பார்கள், கிண்டல் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

சு.பி.யை எடுத்துக்கொள்ளுங்கள், நான் போட்ட முதல் மறுமொழியை வெளியிடவில்லை, இரண்டாவது மறுமொழியை, ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கெல்லாம் பார்த்தார். அதன் பிறகு என்ன எழுதினாலும் வெளியிட்டு பதில் போடுவார். மனதிற்குள் இந்துத்வவாதி என்று திட்டிகொண்டு செய்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு அது ஒரு கம்பர்ட் லேவல். சில பதிவர்கள் விமர்சனம் எழுதினால், அந்த விமர்சனத்தை விமர்சனம் செய்யவும் பிடிக்காது.

பல பிரபல பதிவர்கள் நீங்கள் சொன்னதை போலத்தான் இருக்கிறார்கள். இதை சொல்வதற்கு உங்களுக்கு தகுதி?? இருக்கிறது. ஏனென்றால் விமர்சனம் செய்தால், அந்த விமர்சனத்திற்கும் விமர்சனத்தை வரவேற்கிரீகள்.

இக்பால் செல்வன் பதிவொன்றில்,நான் போட்ட மறுமொழி ஒன்றில் நண்பர் ஒருவர் வந்து என்னை இந்துத்வாதி சமாளிப்புவாதி என்றார். நான் அவர் கருத்தை பார்த்து தாலிபான்வாதி சமாளிப்புவாதி என்றேன் மற்றும் இந்த மாதிரி கருத்துக்கள் அயோக்கித்தனம் என்றேன். அவர் தான் தாலிப்பான்வாதியல்ல தப்பாக புரிந்துகொள்கிறார்கள் என்றார். அதைப்போல என் கருத்தையும் தப்பாக புரிந்து கொள்கிறார்கள் என்றேன். உடனே, இது பொதுதளம் விமர்சனம் வரத்தான் செய்யும், நான் சொன்ன இந்த கருத்து அயோக்கியத்தனத்தில் அயோக்கியத்தனம், சகிப்புதன்மையை பற்றி ப்ரீ கிளாஸ் எடுக்க வேண்டம் என்றார். உடனே நானும், இதுவும் பொதுதளம் விமர்சனம் செய்யதால் விமர்சனத்துக்கும் விமர்சனம் வரும், இந்த இந்த கருத்துக்கள் அயோக்கியத்தனம், சமாளிப்பு என்று சுட்டிகாட்டி முதலில் விமர்சனம் செய்திருந்தால், பதில் சொல்லியிருப்பேன், எனக்கும் சகிப்புதன்மையை பத்தி ப்ரீ கிளாஸ் எடுக்க வேண்டாம் என்றேன்.

இப்படி ஒரு ஜாலியான அக்கப்போர்.

அதனால் உங்க விமர்சனத்தை அனுமதித்து அதையும் விமர்சித்தால் நன்றாக இருக்கும். அந்த விமர்சனத்தை எதிர்கொள்ளும் திறமை உங்களிடம் உள்ளது.

எனக்கு என்னமோ, அவர்கள் உங்களை வவ்வால் என்று பார்க்காமல் இரத்த காட்டேரி என்று பார்க்கிறார்கள் போலிருக்குது. ஒலக டிராகுளா சினிமா பார்த்த எபக்ட்.

நன்றி.

ராஜ நடராஜன் said...

அங்கே வடிச்சுக்கொட்டவே நேரம் பத்தல,அப்புறம் இங்கே வந்து எங்கே தாளிக்கிறது.பதிவை எங்கேயோ துவங்கி எங்கேயோ கொண்டு வந்திட்டீங்க.பின்னூட்டங்கள் ரொம்ப அமர்க்களமாக இருக்குது.யாருக்கோ விடுகதை போடுவதால் கூட்டம் சேருதான்னு தெரியல.தொழில்நுட்ப பதிவுக்கெல்லாம் எண்ணி 9 பின்னூட்டங்கள்தான் தேறும்.ஆனாலும் திரைமறைவில் உங்களுக்கு ஏகப்பட்ட விசிறிகள் என்பதும் தெரிகிறது.

பள்ளிக்கூட கரிசனை ரொம்ப நல்லாயிருக்குது.2 கி.மீட்டருக்குள் ஒரு பள்ளி என்பது வரவேற்க தக்க ஒன்று.அப்புறம் ஐந்தில் வளையாதது அப்புறமா வளையாது என்றுதான் ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுப்பது என்பதும் சுவற்றில் கீறுவதும் கூட கற்றலின் வெளிப்பாடே.

நீங்க என்னன்னா மொத்தமா காசு சேர்த்து வச்சு பின்னாடி கற்றுக்கொடுக்கலாமென்கிறீங்க.

அரசு பள்ளிகளுக்கான மாற்றங்கள் தேவை.இங்கிலிபீசு பேசுபவர்களுக்கும்,பேசாதவர்களுக்கும் ஆங்கில மொழிக்கல்வி மீதான மோகம் இருக்கவே செய்வதும் நர்சரி பள்ளிகள் மீதான நிறை,குறைகளுக்கும் ஒரு காரணம்.

ராஜ நடராஜன் said...

அங்கே வடிச்சுக்கொட்டவே நேரம் பத்தல,அப்புறம் இங்கே வந்து எங்கே தாளிக்கிறது.பதிவை எங்கேயோ துவங்கி எங்கேயோ கொண்டு வந்திட்டீங்க.பின்னூட்டங்கள் ரொம்ப அமர்க்களமாக இருக்குது.யாருக்கோ விடுகதை போடுவதால் கூட்டம் சேருதான்னு தெரியல.தொழில்நுட்ப பதிவுக்கெல்லாம் எண்ணி 9 பின்னூட்டங்கள்தான் தேறும்.ஆனாலும் திரைமறைவில் உங்களுக்கு ஏகப்பட்ட விசிறிகள் என்பதும் தெரிகிறது.

பள்ளிக்கூட கரிசனை ரொம்ப நல்லாயிருக்குது.2 கி.மீட்டருக்குள் ஒரு பள்ளி என்பது வரவேற்க தக்க ஒன்று.அப்புறம் ஐந்தில் வளையாதது அப்புறமா வளையாது என்றுதான் ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுப்பது என்பதும் சுவற்றில் கீறுவதும் கூட கற்றலின் வெளிப்பாடே.

நீங்க என்னன்னா மொத்தமா காசு சேர்த்து வச்சு பின்னாடி கற்றுக்கொடுக்கலாமென்கிறீங்க.

அரசு பள்ளிகளுக்கான மாற்றங்கள் தேவை.இங்கிலிபீசு பேசுபவர்களுக்கும்,பேசாதவர்களுக்கும் ஆங்கில மொழிக்கல்வி மீதான மோகம் இருக்கவே செய்வதும் நர்சரி பள்ளிகள் மீதான நிறை,குறைகளுக்கும் ஒரு காரணம்.

”தளிர் சுரேஷ்” said...

நேற்று மோகன் குமார் பதிவும் உங்களோட கமெண்டும்படித்தேன்! அதற்கு மோகன் குமார் பதில் கமெண்டும் படித்தேன்! உங்களின் கருத்தில் நியாயம் உள்ளது. நான் கூட நிறைய செய்திகளை காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தேன்! பரபரப்பான நிகழ்வுகளை பதிவாக்கிக்கொண்டிருக்கிறேன் இன்னமும். இப்படி எழுதினால் நிறைய பேர் படிக்கிறார்கள்! காப்பி பேஸ்ட் செய்வதால் தமிழ் மணம் என்னை நீக்கிவைத்துள்ளது. சில கருத்துக்களை ஏற்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். அந்த கருத்து உண்மையாக இருக்குமானால் ஒத்துக்கொள்ளுதல் உயர்ந்த பண்பு! அதற்கு மனமில்லாதவர்களை நாம் ஒதுக்கியோ மன்னித்தோ விடலாமே! வீண் சர்ச்சைகள் எதற்கு? உங்கள் பின்னூட்டங்களை கேபிள் வலைப்பூவில் தொடர்ந்துபடித்து ரசித்து இருக்கிறேன்! எதிர்மறை விமரிசனத்தை ஏற்கும் பக்குவம் இன்னும் பலருக்கு வரவில்லை! என்பதே உண்மை! ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது. உன்னைப்பற்றி ஒருவன் குறை கூறினால் உண்மையாக இருந்தால் திருந்தி விடு, இல்லையெனில் நகைத்துவிடு!
நன்றி!

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

ஹி...ஹி கண்டுப்புடிச்சிட்டிங்களே, நீங்களே தான் அந்த பிராபல்யபதிவர், அதுக்குண்னு கா, பழம்னு சொல்லலாமா?

நரேந்திர நாத் தத்தா என்கிற நரேன் வெகு பிரபலம் ஆனால் விவேகானந்தர்னு சொன்னால் தான் மக்களுக்கு புரியும், எனவே நீங்க உலகமகா பிரபலம் :-))

ஹி..ஹி நான் கூட ஒலகமாக பிரபலப்பதிவர் தாங்க, யாரு சொன்னாவா... ஒரு நாள் கண்ணு தெரியாமல் பாட்டுப்படும் ஒருத்தர் என்பதிவைப்படிச்சேன்னு மின்சார தொடர்வண்டியில் சொன்னாருங்கோ :-))

அதனால என்னையே நான் விமர்சித்துக்கொண்டேன் இப்பதிவில் :-))

பட்டமா எங்கே ...எங்கே சீக்கிரம் கொடுக்க சொல்லுங்க நான் அதை பட்டம் பற பறன்னு பறக்க விடவேணும் :-))

கெண்டக்கி சிக்கன் , பதிவுலகின் பில்லா-2 வே போன்ற பட்டங்கள் வாங்கும் அளவுக்கு தகுதி வளர்த்துக்கொள்ள நான் மஞ்ச துண்டு குடும்பத்தில் பொறந்து இருக்கணும் :-))

ஆமாங்க, ஸ்பீல் பெர்க்கு படம் எடுக்க தெரியவில்லை, தமிழகத்தில் முதல்வர் சரியில்லைனு சொல்ல அவங்க கூட எல்லாம் கம்ஃபர்ட் லெவல் வச்சு இருக்காங்க பிரபல்யப்பதிவர்கள் :-))

நீங்க சொல்கிற ஜாலியான அக்கப்போரை தான் நானும் செய்கிறேன் என்ன சிலர் மகுடம் சூடியதாக மனப்பிராந்தியில் இருப்பதால் காண்டாகிடுறாங்க :-))

இரத்தக்காட்டேரி ,ஓட்டேரி நரின்னு என்னை பார்த்து மிரள காரணம், அவ்வங்க ரொம்ப அரண்டு போயிருப்பதால் இருக்காலம் , மேலும் வாம்பையர் பேட்ஸ்னு நினைச்சு இருப்பாங்க போல :-))

-----------

ராஜ்,

வாங்க,நன்றி!

ஏங்க நானெல்லாம் பிராபல்யம் இல்லைனு யாரு சொன்னா, அந்தக்காலத்திலவே அடிச்சு ஆடினவன் தானே, நல்லாப்பாருங்கய்யா...

ஆனாலும் உங்களைப்போன்றவர்கள் தான் சரவணபவன் தோசை போல சாதா, ஸ்பெஷல் சாதானு பதிவர்களை தரம் பிரிச்சு பார்க்க வச்சுடுறிங்க.என்னைப்பொறுத்தவரை எல்லாரும் ஒன்று தான் எனக்கு மேலும் எவனும் இல்லை எனக்கு கீழும் எவனும் இல்லை, எல்லாம் ஒரே கோளார்த்தமே :-))

//அப்புறம் ஐந்தில் வளையாதது அப்புறமா வளையாது என்றுதான் ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுப்பது என்பதும் சுவற்றில் கீறுவதும் கூட கற்றலின் வெளிப்பாடே.

நீங்க என்னன்னா மொத்தமா காசு சேர்த்து வச்சு பின்னாடி கற்றுக்கொடுக்கலாமென்கிறீங்க.//

என்று தான் சொன்னதை சரியாப்புரிஞ்சுக்க போறிங்களோ, நான் என்னப்படிக்கவே வைக்காத்திங்கன்னா சொன்னேன், வீட்டுக்குப்பக்கத்தில் 10 பள்ளிகள் இருக்கும் அதை எல்லாம் விட்டுவிட்டு "பாத்திமா சேஷாத்திரியில் "படிச்சா தான் மார்க் எடுப்பான்னு போய் நிக்காதிங்கன்னு தான் சொல்கிறேன்.

வருஷத்துக்கு சுமார் ஒருலட்சம்னு பள்ளிப்படிப்புக்கே 15 லட்சம் செலவாகும்,அதனை சேமித்து வைத்து சுமாரான பள்ளியில் சுமாரா படிக்க வச்சு காசு கொடுத்து பொறியியல் சீட் வாங்கிட்டு போங்கன்னு சொல்கிறேன்.ஒரு வேளை பிரபலமில்லாத பள்ளியிலே நல்லாப்படிச்சு நல்ல மார்க்க் வாங்க்கிட்டால் காசும் மிச்சம்.

கபில் சிபல் 10 ஆம் வகுப்பு வரைக்கும் தேர்வே வேண்டாம் என்கிறார், அஞ்சில எக்சாம் எழுதவில்லைனா 10 இல் எழுதுமான்னு போய் கேளுங்க.

இங்கிலீப்பீசு மோகம் கூட பொறுத்துக்கலாம் பிரபல பள்ளியில் படிக்க வேண்டும் என்ற மோகம் தான் பிரச்சினையை உருவாக்குது.

முடிச்சூர்லவே சின்னதும் பெருசுமா நிறையப்பள்ளிகள் இருக்கும் போது சேலையூரில் ஆண்டுக்கு 50,000 செலவு செய்து சேர்த்தது யார் தப்பு, இத்தனைக்கும் அக்குழந்தையின் அப்பா ஒரு ஆட்டொ ஓட்டுநர், ஏன் இந்த பிரபலப்பள்ளி மோகம், இப்போ குழந்தையே போச்சே. எனக்கு அதான் மிக எரிச்சலை உருவாக்கிடுச்சு.

-----------------

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

கைய கொடுங்க சார், எவ்வளவு எளிமையாக நான் கூட அப்படித்தான் செய்கிறேன்னு உண்மைய ஒத்துக்கிறிங்க, இந்த மனசு நிறைய பேருக்கு வராது, எனக்கும் இல்லைனே சொல்வேன்.ஆனால் அவ்வப்போது என்னோட மனசாட்சி வந்து மண்டையில குட்டி அடங்குடா மவனேனு உண்மையை சொல்லும்,எனவே அப்படியும்,இப்படியும் என அல்லாடும் சராசரி ஜீவனே நான் :-))

//அதற்கு மனமில்லாதவர்களை நாம் ஒதுக்கியோ மன்னித்தோ விடலாமே! வீண் சர்ச்சைகள் எதற்கு//

உங்கள் கருத்து உண்மையே சர்ச்சை வேண்டாம் என ஒதுக்கலாம் தான். ராஜாவின் புதிய உடைனு ஒரு கதைக் கேள்விப்பட்டு இருப்பீங்க, உலகத்திலேயே இது வரையில் யாரும் உடுத்தா உடை அணிந்து இருப்பதான நம்பிக்கையில் ராஜா நிர்வாணமாக நகர்வலம் செல்வார், மக்களும் ராஜாவாச்சே எப்படி உண்மையை சொல்ல என ஆகா உடை சூப்பர்னு பாராட்டிவிட்டு மனசுக்குள் "கிறுக்கு ராஜான்னு" சொல்லிட்டு போவாங்க, ஆனால் ஒரு சின்னப்பையன் மட்டும் ஐ ராஜா அம்மணக்குண்டியா வராருன்னு உண்மையை சொல்லிடுவான் :-))

ஏன் அந்த சின்னப்பையன் மட்டும் உண்மைய சொல்லணும் சும்மா போய் இருக்கலாமே ஏன் எனில் அவனுக்கு லோகாதாய நிர்ப்பந்தங்கள் இல்லை, ஹி..ஹி அடியேனும் ஒரு சின்னப்பையன் தான் :-))

மேலும் நான் சொல்வது எதிர்மறை விமர்சனம் இல்லை யதார்த்தம் என நம்புகிறேன்.

நீங்கள் சொன்ன தத்துவங்கள் நன்றாக உள்ளது, ஒரு வேளை என் மனம் இன்னும் பக்குவப்பட்டால் "நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன மேலே விழுந்து புடுங்காத வரையில் சந்தோஷம்" என தத்துவமாக வாழப்பழகிக்கொள்வேன் என நினைக்கிறேன்.

நன்றி!

சார்வாகன் said...

சகோ வவ்வால்

//வருஷத்துக்கு சுமார் ஒருலட்சம்னு பள்ளிப்படிப்புக்கே 15 லட்சம் செலவாகும்,அதனை சேமித்து வைத்து சுமாரான பள்ளியில் சுமாரா படிக்க வச்சு காசு கொடுத்து பொறியியல் சீட் வாங்கிட்டு போங்கன்னு சொல்கிறேன்.ஒரு வேளை பிரபலமில்லாத பள்ளியிலே நல்லாப்படிச்சு நல்ல மார்க்க் வாங்க்கிட்டால் காசும் மிச்சம்.//

பொறியியலை விட நல்ல் படிப்புகள் உண்டு .ஒரு பொறியியல் பட்டப் படிப்பு சுய தொழில் செய்யும் அளவுக்கு மாணவர்களை உருவாக்குவது இல்லை.ஏன் விவசாயம் சார்ந்த படிப்புகளில் கூட அவர்கள் கற்ற‌ கல்வி மூலம் விவசாயம் செய்ய அர்சு அவர்கள்க்கு நிலம் குறிப்பிட்ட கால் அள்வுக்கு வழங்கலாம்,தரிசு நில அவர்களைக் கொண்டு மேம்பாடு செய்யலாம்.

இயற்கை வாழும் சூழல் சார் கல்வி வேண்டும் என கூறினால் நம்மை முறைக்கிறர்கள். பல்வேறு வகைகள் அற்ற ஒரே முகம் கொண்ட கல்வி முரண்களை ஏற்படுத்துமென்றால் நான் பெரிய அப்பா டக்கர் நான் போட்டி போட்டு ஜெயிப்பென் என்றால் என்ன சொல்வது!!!!!!!!!


எல்லாரும் அமெரிக்கா போய் பொட்டி தட்டி விமானத்தில் பறக்க வேண்டும் என்பதுதானே ஆசை!!!!!!!!!

அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலினால் குடியேறிகளின் மீதான பார்வை,நடைமுறைகள் மாறுகிறது என கூறினால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டியா என்கிறார்கள்!!!!!!!

என்னதான் சொல்வது!!!!!!!!!.குழப்பமா இருக்கு

நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி,

பொறியியல் மட்டுமே படிப்பில்லை, வேறுபல நல்லப்படிப்புகள் மலிவா இருக்கு. மக்களுக்கு டாக்டர், பல் டாக்டர், எஞ்சினியரிங்,இது தவிற வேறு எந்த படிப்பும் படிப்பாவே தெரியலை. +2 வில் ஜஸ்ட் பாஸ் ஆனாலும் நேரா போய் ஒரு கல்விதந்தையின் பொறியியல் கல்லூரி வாசலில் நிக்கிறாங்க, கடந்தாண்டு 21 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து மாணவர்களும் பாஸ் ஆனார்கள்,தமிநாட்டில் 500 பொறியியல் கல்லூரி இருக்கு, அப்போ மற்ற கல்லூரியில் எல்லாம் என்ன தரம் இருக்கும்?

எல்லாரும் காசு மட்டும் புடுங்கிடுவாங்க.பையன் படிப்பு அவன் பொறுப்பு :-))

இப்போ கூட பாருங்க ,அருகில் இருக்கும் பள்ளியில் படிக்க வைக்கலாமே ஏன் புகழ்ப்பெற்றப்பள்ளிக்கே போட்டியிட்டு போகணும் சொன்னதை,அப்போ படிக்க வைக்கவே வேண்டாமான்னு கேட்கிறார் நண்பர் ராசநடை, நாம ஒன்று சொன்னால் அவங்க ஒன்று அர்த்தப்படுத்திக்கிறாங்க,

இப்படித்தான் பெற்றோர்களும்,கம்மியா மார்க் எடுத்த பையனின் பெற்றோரிடம் காசு கொடுத்து எஞ்சினியரிங் படிக்க வச்சு வேலை கிடைக்கும்னு உத்திரவாதம் இல்லை, பி.ஃபார்ம் படிக்க வைக்கலாம்னு சொன்னேன், நான் என்னமோ அவங்க பையன் எஞ்சினியர் ஆவது பிடிக்காமல் அப்படி சொன்னதாக நினைச்சு இப்போ என்னோட பேசுவதே இல்லை :-))

//பொறியியலை விட நல்ல் படிப்புகள் உண்டு .ஒரு பொறியியல் பட்டப் படிப்பு சுய தொழில் செய்யும் அளவுக்கு மாணவர்களை உருவாக்குவது இல்லை.ஏன் விவசாயம் சார்ந்த படிப்புகளில் கூட அவர்கள் கற்ற‌ கல்வி மூலம் விவசாயம் செய்ய அர்சு அவர்கள்க்கு நிலம் குறிப்பிட்ட கால் அள்வுக்கு வழங்கலாம்,தரிசு நில அவர்களைக் கொண்டு மேம்பாடு செய்யலாம்.//

நல்ல ஐடியா ஆனால் அரசு சொந்த நிலத்தில் விவசாயம் செய்றவனையே அழிக்க நினைக்குதே,என் விவசாயப்பதிவுகள் படிச்சு இருப்பீங்களே ?

//இயற்கை வாழும் சூழல் சார் கல்வி வேண்டும் என கூறினால் நம்மை முறைக்கிறர்கள். பல்வேறு வகைகள் அற்ற ஒரே முகம் கொண்ட கல்வி முரண்களை ஏற்படுத்துமென்றால் நான் பெரிய அப்பா டக்கர் நான் போட்டி போட்டு ஜெயிப்பென் என்றால் என்ன சொல்வது!!!!!!!!!
//

அப்படி முறைச்சா கூட பரவாயில்லை,இவனுக்கு பொறாமை,நம்ம பையன் படிப்பது பிடிக்கவில்லை என்பார்கள்.

//அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கலினால் குடியேறிகளின் மீதான பார்வை,நடைமுறைகள் மாறுகிறது என கூறினால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டியா என்கிறார்கள்!!!!!!!

என்னதான் சொல்வது!!!!!!!!!.குழப்பமா இருக்கு//

ஹி...ஹி உங்க வாயும் என் வாய்ப்போலத்தானா, சரி வாங்க "வாயை வைத்து சும்மா இருக்காதோர் சங்கம்" ஆரம்பிக்கலாம் .

பத்து கி.மீ தூரமா இருக்கும் பள்ளிக்கு 3 வயசு குழந்தையை ஒரு ஆட்டோவில் 10 பேரோடு ஏன் திணித்து அனுப்ப வேண்டும் கேட்டால் ,நீ படிச்ச காலம் வேற இந்தக்காலம் வேற ,இதுல வேற அரசுப்பள்ளியில் படிச்சா எல்லாம் உருப்பட முடியாதுன்னு ஒரு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வேற, உனக்கு இதெல்லாம் தெரியாது உனக்கு அறிவு இருக்கான்னு கேட்கிறாங்க :-))

பதிவுலகில் மெத்தப்படித்தோரே ஒரு மாற்றுக் கருத்தினை விரும்புவதில்லை இதில் பொது ஜனத்தினை குறை சொல்லி என்ன பயன்.

வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும் இல்லைனா "நல்லப்பகிர்வு, முகநூலில் பகிர்ந்துள்ளேன், த.ம.9 என " ஒரே போடா போட்டுட்டு ஓடிப்போயிரணும்,அப்போ தான் இவன் ரொம்ப்ப நல்லவன்னு சொல்வாங்க :-))

பி.எஸ்.வீரப்பா டயலாக் தான் "இந்த நாடும் ,நாட்டு மக்களும் நாசமா போகட்டும்" சொல்லத்தான் வாய் வருது :-))

Cable சங்கர் said...

குட்.. நல்ல பதிவு.. ஆனால் பதிவின் முதல் விஷயத்தைத்தை விட உருப்படியானது.. ரெண்டாவது மேட்டர்.. அருமை.. அட்டகாசம். அஹா..ஓஹோ..:)

Unknown said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

கேபிள்ஜி,

நீங்களே தானா ?, வாங்க,நன்றி!

என்ன ஒரு அருமையான பின்னூட்டம் ,அட்டகாசம் ,அமர்க்களம், கவித மாதிரியே இருக்கு , மூன்று புள்ளி ஒரு ஆச்சரிய குறி வைத்திருக்கலாம் :-))

கூகிள் குரோம் பிரவுசரில் ஹோம் பேஜ் ஆக இந்த பதிவை வைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி!

--------
கடைசியில் நீங்களும் என் பின்னூட்டத்தினை மறைத்துவிட்டீர்களே, ரொம்ப வருத்தமாக இருக்கு போய் பகலிலேயே ஒரு கட்டிங்க் போடப்போறேன்.
----------
ஶ்ரீனி,

//Comment deleted
This comment has been removed by the author.

11:43 AM, August 09, 2012 //
என்ன ஒரு பின்னூட்டம் ,இது வரை இப்படி ஒன்று படித்ததே இல்லை,

இப்படி நீங்களாக போட்டு எடுத்து விளையாடினால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க, நீங்க ஏதோ ஆபாச பின்னூட்டம் போட்டு அதை நீக்கிட்டேன்னு நினைக்க மாட்டாங்க?

எனவே எதுவா இருந்தாலும் சொல்லுங்க,இல்லை நீங்களே அகற்றினேன் என மக்களுக்கு தெளிவாக்கிடுங்க.
----------------

அசோகபுத்திரன் said...

வவ்வால்...
நான் கமெண்ட் போடுவதற்காகவே அக்கவுண்ட் ஓபன் பண்ணின ஆள்... ஒரே ஒரு பதிவுதான் போட்டேன்... இப்போது என் பிளாகையே என்னால் ஓபன் பண்ண முடியவில்லை.. டெக்னிக்கல் அறிவு இல்லாததால் நானும் அப்படியே விட்டுவிட்டேன்..

எனக்கு ஒரு சந்தேகம்... பல நேரங்களில் நான் போடும் எதிர் கமெண்டுகளை சில பதிவர்கள் வெளியிடுவதில்லை... வெளிப்படையாகவே சொல்கிறேன்.. பெரும்பாலும் லக்கிதான் அது.. பெரும்பாலும் அந்த கமெண்ட்கள் நியாயமான கேள்விகளாகவே இருக்கும்... ஆமாம் சாமி கமெண்ட்கள் உடனே பிரசுரமாகும்.. பதில் சொல்ல முடியாத அல்லது தெரியாத கமெண்ட்கள் காற்றிலேயே காணாமல் போகும்... அப்படியானால் இங்கு ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமில்லையா? மனதார மதிக்கும் பதிவர் நீங்கள்.. அதனால் வெளிப்படையாக சொல்லுங்கள்..

வவ்வால் said...

அசோகபுத்திரன்,

வாங்க,நன்றி!

என்னங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு, நண்பன் என்று சொல்லுங்கள் போதும்.

//அப்படியானால் இங்கு ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமில்லையா?//

இந்தக்கேள்விக்கு எப்படிப்பதில் சொல்ல, உண்மைய சொன்னால் முட்டாள்,ஆர்வக்குட்டின்னு சொல்வாங்க பொய்யை சொன்னால் என் செல்லம் சமத்துன்னு சொல்வாங்க:-))

இருக்கு ஆனால் இல்லைனு சொல்லலாம் , அதாவது நம்மைப்போன்றவர்களுக்கு இடம் இல்லை, தலையில் மகுடம் சூடிக்கொண்டோருக்கு மட்டுமே கருத்து சொல்ல உரிமையுண்டு.

உதாரணமாக ஒரு மகுடப்பதிவர் படம் நல்லா இருக்குன்னு சொன்னால் " ஆமாம் படம் சூப்பர் நன்றி தல,என நீங்க பின்னூட்டம் போட்டால் வரும், அதை விட்டு படம் சூறமொக்கை அதைப்போய் நல்லா இருக்கு சொல்லிட்டிங்களேன்னு மட்டும் சொன்னிங்க ,வெளியிட மாட்டாங்க,அப்படியே வெளியிட்டாலும் காமிராவ கண்டுப்பிடிச்சதே நான் தான் எனக்கு தெரிஞ்சதை விட உனக்கு தெரியுமான்னு அர்ச்சனை தான் கிடைக்கும்.

இப்போ நீங்களே சொல்லுங்க மாற்றுக்கருத்துக்கும், விவாதத்திற்கும் இடம் இருக்கா இல்லையான்னு.

இவங்க எல்லாம் தமிழ் நாட்டு அரசியல்வியாதிகள் போல , மக்களை ஓட்டுப்போடவும், கூட்டம் சேர்க்கவும் பயன்ப்படுத்திக்கொண்டு கை கழுவி விடுவார்கள்,மக்கள் /பதிவர்கள் வேடிக்கை பார்த்துவிட்டு விரல் சூப்ப வேண்டியது தான் :-))

தமிழ்மணம் என்ற திரட்டியில்லைனா இவங்களை எல்லாம் யாருக்கு தெரியப்போகுது :-))

நீங்களும் தொடர்ந்து பதிவு ,சினிமா விமர்சனம் என எழுதலாமே ஒன்னும் இல்லை எதுனா படம் பார்த்துட்டு அது கதை அப்படியே சொல்லுங்க அதான் விமர்சனம் ,நடுவிலே மானே ,தேனே போல டாப் ஆங்கில், பிஜிஎம், அண்டர் பிளே ஆக்டிங், ரெட் ஒன், கேனன் 7டி என சில வார்த்தைகளை தூவிக்கணும் :-))

குறும்பன் said...

சில இடுகைகளில் பின்னூட்டம் தான் அவ்விடுகையையே மெருகூட்டும். அது ஆமாஞ்சாமி பின்னூட்டமாக இருக்காது. தருமியின் இடுகை அப்படிபட்டது. சார்வாகனை நிறைய கேள்வி கேட்டால் நாம் நிறைய தெரிஞ்சுக்கலாம். நான் படிப்பதோட சரி அதிகம் பின்னூட்டமெல்லாம் போடுவதில்லை. கேபிள் இடுகையில் உங்க பின்னூட்டம் இல்லைன்னா அது சப்புன்னு இருக்கும், உங்களுக்கு அவர் பதில் சொல்லும் போது தான் நிறைய தெரிஞ்சுக்கமுடியும். அவர் தவறாக சொல்வதாக நீங்கள் கருதும் போது ஏற்படும் விளையாட்டில் நாங்க இன்னும் நிறைய தெரிஞ்சுக்குவோம். கேபிள் குறிப்பா சொல்ராரு என்னோட இடுகைல அபாரம் அருமைன்னு மட்டும் பின்னூட்டமிடுன்னு :)) அவர் சொல்றத கேட்காதிங்க. :)

Unknown said...

குறும்பன் said...

கேபிள் இடுகையில் உங்க பின்னூட்டம் இல்லைன்னா அது சப்புன்னு இருக்கும், உங்களுக்கு அவர் பதில் சொல்லும் போது தான் நிறைய தெரிஞ்சுக்கமுடியும். அவர் தவறாக சொல்வதாக நீங்கள் கருதும் போது ஏற்படும் விளையாட்டில் நாங்க இன்னும் நிறைய தெரிஞ்சுக்குவோம். கேபிள் குறிப்பா சொல்ராரு என்னோட இடுகைல அபாரம் அருமைன்னு மட்டும் பின்னூட்டமிடுன்னு :)) அவர் சொல்றத கேட்காதிங்க. :)

Super ... குறும்பன் Ji

Unknown said...

வவ்வால் Ji

என்னால் தெளிவாக தமிழில் என் எண்ணங்களை வெளிப்படுத்த முடியவில்லை So i deleted

///Cable சங்கர் said...
குட்.. நல்ல பதிவு.. ஆனால் பதிவின் முதல் விஷயத்தைத்தை விட உருப்படியானது.. ரெண்டாவது மேட்டர்.. அருமை.. அட்டகாசம். அஹா..ஓஹோ..:)///

இந்த அருமை.. அட்டகாசம். அஹா..ஓஹோ..:) - எனக்கு ஒரு சந்தேகம்??

முட்டாப்பையன் said...

தில்,திராணி,இருந்தால் நாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வந்து பதில் கூறவும்

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

உங்க மேலான எண்ணம் புரிகிறது ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவில்லையே , எனது பின்னூட்டங்கள் இரண்டுப்பதிவுகளாக வெளியிடவில்லை,அவரவர் விருப்பம் தானே, ஆனால் பேசும் போது நாட்டையே திருத்த அவதாரம் எடுத்தார் போன்ற ஒரு "பில்ட் அப்"

மேலும் பலரும் எனது பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை. இதில் செம காமெடி என்னனா ,உன்னை யார் எனக்கு பின்னூட்டம் போடுன்னு கூப்பீட்டா என்கிறார்கள், அப்போ மற்றவங்களை எல்லாம் இவங்க போய் அழைத்து வந்து "அருமை,நல்லப்பகிர்வுனு சொல்ல வைக்குராங்களா :-))

இதுல இன்னொருத்தர்சொன்னது இன்னும் செம காமெடி "பிளாக் "இல்லாமல் வெறும் ஐடி வச்சுக்கிட்டு இருக்கேனாம் :-))

என் புரோஃபைல் வழியா வந்தாக்கூட என் பதிவுக்கு வரலாம், என்ன பேசுறோம்னே நிதானம் இல்லாம போச்சு பலருக்கு.

நான் கமெண்ட் போடாமல் இருந்தால் அவர்களுக்கு சந்தோஷம் எனில் அதை நானும் கெடுக்க விரும்பவில்லை.வலைப்பதிவு எழுதும் போதே இப்படின்னா ..நாட்டின் முக்கிய பொறுப்பில் இருந்தா என்ன செய்வாங்களோ?

----------
ஶ்ரீனி,

வாங்க,நன்றி!

அவ்வளவு தானா ,ஓ.கே ...ஓ.கே, மேலும் குறும்பனுக்கு சொன்னப்பதிலும் பார்க்கவும், அவ்வளவே.

----------

முட்டாப்பையர்,

வாய்யா, என்ன தானா பொங்குற, அடிப்படையா ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும்யா, இப்போ நான் கருத்து ஒன்றை சொல்ல சம்பந்தப்பட்ட பதிவை தேடிப்போறேன், அதே போல் நீரும் சொல்லணும்னா இங்கே வந்து சொல்லணும் என்ற கலாச்சாரத்தினை கற்றுக்கொள்.

உம்ப்பதிவில் நான் அவசியம் கருத்தினை பதிவு செய்யணும் என்றால் அழையா விருந்தினராக வருவேன் ,கவலையே பட வேண்டாம்.

எனவே குறிப்பிட்ட நேரத்துக்கு இவ்விடம் ஓடி வரவும், நான் ஒன்றும் கோழையைப்போல கருத்தினை இருட்டடிப்பு செய்ய மாட்டேன் , எனவே கவலை வேண்டாம்.

முட்டாப்பையன் said...

ஏண்ணே.நம்ம தளத்துக்கு வர்றது.
யாரும் பெரியவங்களை இட்டுட்டு வரீங்களா?

Robin said...

வவ்வால்,

பேசும் விஷயத்தைப் பற்றி தகவல்களை திரட்டி விவரமாக எழுதும் ஒரு சிலரில் நீங்களும் ஒருவர். நீங்கள் கலாய்த்துக்கொண்டு ஜாலியாக எழுவது நன்றாக இருக்கும். ஆனால் இடம், பொருள், ஏவல் தெரியாமல் எழுதும் சிறு பிள்ளைத்தனம் உங்களிடம் உண்டு. நாம் என்ன சொல்கிறோம் என்பது மட்டுமன்றி யாரிடம் எப்படி பேசவேண்டும் என்பதும் முக்கியம். சிலர் ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள், சிலர் எரிச்சல்படுவார்கள். அப்படி எரிச்சல்படுபவர்களிடம் ஒன்றில் கொஞ்சம் தன்மையாக எழுதலாம் அல்லது பதிலளிக்காமல் இருந்துவிடலாம்.

வவ்வால் said...

ராபின்,

வாங்க,நன்றி!

நான் பெருசா ஆராய்ந்து எழுதிட்டேன், எல்லாம் இணையத்தில இருப்பது தானே,ஹி...ஹி நானே அதை சொல்லி இருக்கேன்,ஆனால் சிலர் இப்போ புதுசா கண்டுப்பிடிச்சு எனக்கே சொல்றாங்க.

இணையத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது போல தெரிந்தாலும் ,என்ப்பதிவில் இருப்பது எந்த ஒரு இணையத்திலும் முழுசாக அப்படியே இருக்காது, மேலும் நான் பயன்ப்படுத்துவது ஒரு ரெஃபெரன்ஸ்க்கு தான், நிறைய உண்மை சம்பவங்கள்,மற்றும் இணைய தகவல் என இணைத்து எனது எழுத்தில் புதிய ஆக்கமாகவே இருக்கும். இணையத்தில் என்ன தான் தேடினாலும் ஒரே தளத்தில் நான் எழுதியது கிடைக்கவே கிடைக்காது என்பது இணையத்தில் தகவல்களை தேடிப்பார்த்தவர்களுக்கே தெரியும்.

ஒருப்பதிவுக்கு பல இணையத்தளங்களை படிக்க வேண்டியது இருக்கும்,அதுவும் நாம் எதிர்ப்பார்த்து தேடும் தகவல் கண்ணில் அவ்வலவு எளிதாக சிக்கவே சிக்காது. எத்தனையோ பேர் இதே தகவலை கூகிளில் தேடினேன் கிடைக்கவே இல்லையே என என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.கூகிள் செயல்ப்படும் விதம் அப்படி, தகவல் எடுத்ததும் முதல் பக்கத்திலேயே வந்துவிடாது.

உதாரணமாக கோக்கோ சாகுபடியில் இருக்கும் அபாயத்தினை சொல்லிவிட்டு சென்று இருக்கலாம் ,கோகோவின் வரலாறு, மற்றும் உற்பத்தியில் இருக்கும் நாடுகளின் நிலை, 2010 இல் இதே போல கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவம் என அனைத்தையும் தேடி ஏன் போட்டேன், படிப்பவர்களுக்கு முழுமையாக தகவல் கிடைக்க வேண்டும் என்று தானே.

ஆனால் படிப்பவர்கள் எல்லாம் இணையத்தில அப்படியே இருப்பது தானே என சர்வ சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள் :-))

நீங்க சொன்ன சிறுப்பிள்ளைத்தனம் என்பது கூட சரி தான், நான் எப்பொழுதும் ஜாலியாக நடந்துக்கொள்வேன் , இடியே பக்கத்தில் விழுந்தாலும் என்னமோ பக்கத்திலே விழுந்துச்சே என லேசாக திரும்பிப்பார்ப்பேன் :-))

ஆனாலும் பதிவர்கள் சிலர் எரிச்சல் ஆவதாக சொன்னீர்கள், ஏன் ஆக வேண்டும்? அவர்கள் என்னமோ மஹா சன்னிதானம் போல நடந்துக்கொள்கிறார்கள், அதனால் எரிச்சல் ஆகிறார்கள்,அவர்கள் ஒரு பக்க சார்புடன் கருத்தினை தெரிவிக்கும் போது மட்டுமே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

சமீபத்தில் நடந்த விஷயமே எடுத்துக்கொண்டாலும் , 10 பேரு போர ஆட்டோவில் தெரிஞ்சே பசங்கலை ஏற்றி அனுப்பிவிட்டு அரசு சட்டம் போட்டு தடுக்கணும் என்றால் என்ன நியாயம்னு கேட்டேன் , மேலும் வேனில் அழைத்து போவதாக சொல்லிப்பணம் வாங்கியவர் ஆட்டோவில் அழைத்து சென்றது ஏமாற்று வேலை தானே என்றேன்.

தெரியாமல் தான் கேட்கிறேன் , வேனுக்கும் ஆட்டோவுக்கும் ஒரே கட்டணமா , இல்லை ஆட்டோவுக்கு கார் அளவு கட்டணம் கேட்டால் கொடுப்பார்களா?

அட ஆட்டோவில் ஏறும் போது 40 ரூ சொல்லிட்டு இறங்கும் போத்உ 50 ரூ கேட்டாலே ஆட்டோக்காரன் கொள்ளை அடிக்குறான்னு தானே சொல்வார்கள், இதே பதிவரே ஆட்டோக்காரர்கள் அநியாயம் செய்றாங்கன்னு பதிவு கூட போட்டு இருக்கார் :-))

இந்த சம்பவத்தில் மட்டும் நான் அந்த ஆட்டோ ஓட்டுநரை எப்படி குற்றம் சொல்லலாம்னு கேட்கிறார் (அவருக்கு தெரிஞ்சவராம்) ஆளுக்கு ஒரு நியாயம் என அளவுகோல் வைத்திருப்பவர்கள் மட்டுமே எரிச்சல் ஆவது. எனவே அவர்கள் எரிச்சல் பற்றி எனக்கு கவலையில்லை.

சந்தர்ப்பவாதமாக நியாயம் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் சுட்டிக்கேட்பேன், சும்மா சபை நாகரீகம் என மனசுக்குள் ஒன்று நினைத்துக்கொண்டு வெளியில் ஒன்று பேச எனக்கு விருப்பம் இல்லை.

நன்றி!

மாயன் said...

யோவ் வவ்வால்

கருத்து சுதந்திரம் பிரதமருக்கே இல்லை... அவரே எழுதி கொடுக்கிறதை தான் படிக்கிறார்... உங்களுக்கு கிடைச்சுடுமா... இங்க என்ன கூட்டம் சேர்த்துட்டு கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க.. இந்த நேரத்துல உங்க ஸ்டைல்ல நல்ல ஆய்வு பதிவு ஏதாவது போடுங்க..

வவ்வால் said...

மாயன்.

வாங்க,நன்றி,

ஹி...ஹி இப்படிலாம் கூட்டம் கூட்டி கலாட்டா செய்தாத்தானே நீங்களாம் வரிங்க அதான் கூட்டம் சேர்க்க ஒரு வெளம்பரம் :-))

ஆமாம் பாஸ், பிரதமருக்கே வாயில உண்டைக்கட்டி வச்சிருக்க நாட்டில கருத்தொ ஸொதந்திரம் நமக்கு கிடைக்குமா?

அவரு செயல்படலைனா கூட நியுஸ் ஆகி டைம் மேகசினில் வர்ரவரு நாம அப்படியா ,பதிவில தான் சொய பொராணம் பாடிக்கணும் :-))

என்னோட டிராஃப்ட்டிலும் 300 பதிவுகள் இருக்கு(பிராபால்யம்னா அப்படித்தான்) நான் அவற்றை ஆய்(வு) செய்து தினம் வெளியிடுகிறேன் ;-))

Anonymous said...

Nalla padhivu... Googlea search adikkanumna google account iruntha thaan mudiyum yendral googlin valarchi yendro mudinthu poi irukkum. Public yendru vandhuvittal yedhaiyum yedirkollum pakkuvam vendum.

Nam tamil blogersta antha kuname illa

1. Annonynna aruvaruppa parparkal. Inge yellam register panni padikira alavukku appatakkar kidayathu
2. Ivangalukkunu oru circle irukkum (sompadipor sangam) anga sarva jakrathaiya irukkanum
3. Elakiyatha valakka porandinnu oru groups inayathil undu
4. Oorla appa amma kasu keta anupa matanga anna ilakiyatha valkkurathukka panam anupuvanga, avinga sarakadikira kasa mitcham pannunale elakiya viyathi periyalu agiiruppar
Note: romba bore adicha ivinga ilakkia vatam oru visit udunga nalla joly a time pass agum. Sarva jakiratahi pinnutam ingu idakkudathu adhu ungalukku vaikum aapu
5. Tholikku orthar update anuppuvar, alapiranthavar appuram mokkaiya magazinela varathu yellam copy paste pannum asami etc..
6. Yengalukku poluthu pokku padikirom, romba bore adicha pinutamiduvom. Yevarukkum yenakkum vaikka varappu thagararu kidayathu

Anonymous said...

Nalla padhivu... Googlea search adikkanumna google account iruntha thaan mudiyum yendral googlin valarchi yendro mudinthu poi irukkum. Public yendru vandhuvittal yedhaiyum yedirkollum pakkuvam vendum.

Nam tamil blogersta antha kuname illa

1. Annonynna aruvaruppa parparkal. Inge yellam register panni padikira alavukku appatakkar kidayathu
2. Ivangalukkunu oru circle irukkum (sompadipor sangam) anga sarva jakrathaiya irukkanum
3. Elakiyatha valakka porandinnu oru groups inayathil undu
4. Oorla appa amma kasu keta anupa matanga anna ilakiyatha valkkurathukka panam anupuvanga, avinga sarakadikira kasa mitcham pannunale elakiya viyathi periyalu agiiruppar
Note: romba bore adicha ivinga ilakkia vatam oru visit udunga nalla joly a time pass agum. Sarva jakiratahi pinnutam ingu idakkudathu adhu ungalukku vaikum aapu
5. Tholikku orthar update anuppuvar, alapiranthavar appuram mokkaiya magazinela varathu yellam copy paste pannum asami etc..
6. Yengalukku poluthu pokku padikirom, romba bore adicha pinutamiduvom. Yevarukkum yenakkum vaikka varappu thagararu kidayathu

வவ்வால் said...

அனானி,

வாங்க,நன்றி,

நீங்க யாரோ ,எவரோ தெரியாது ஆனால் ரொம்ப நாளாக பதிவுகளை படிக்கிறிங்கன்னு தெரியுது ,ஏன் நீங்களே ஒரு பதிவு வைத்திருக்கலாம், ஆனால் பேரோடு வந்து சொன்னால் சிலரின் பொல்லாப்புக்கு ஆளாகனும் என இப்படி வந்திருக்கலாம்.

உதாரணமாக ஒன்றை சொல்லலாம், பெரிய தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் ஆரம்பித்து கேள்விக்கேட்க கூடாது என முதாலாளியே ஒரு தொழிற்சங்கம் ஆரம்பித்து அவரது அல்லக்கை ஒருத்தரை சங்க தலைவர் ஆக்கிடுவார்.

தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு எதுவும் கிடைக்கவில்லைனு யாராவது கேள்விக்கேட்டால் முதலாளி ஆதரவு தொழிர்சங்க தலைவரை விட்டே அடிப்பார் முதலாளி.

இப்போ என்னாகும் எனில் தொழிலாளரை அடித்தது இன்னொரு தொழிலாளர் எனவே முதலாளி எதுவும் செய்யவில்லை என நீதி கற்பிக்கப்படும்.

இதே தான் இங்கே வலையுலகில் நடக்கிறதும் பிராபல்ய பதிவரை நாம் கேள்விக்கேட்டுவிட்டால் அவரால் வளர்க்கப்பட்ட சிலர் வேறுப்பெயரில் வந்து நம்மை அடிக்கப் பார்ப்பார்கள் ,கேட்டால் நீ மட்டும் கேள்விக்கேட்பாயா நானும் உன்னைக்கேட்கிறேன் என்பார்கள், ஆனால் இவர்கள் எப்போதும் பிராபல்யப்பதிவர்களை பகைத்துக்கொள்வது போல கேள்விக்கேட்க மாட்டார்கள் , ஒப்புக்கு சில கேள்விக்கேட்டுவிட்டு அப்படியே விடுவார்கள், ஏன் பதில் சொல்லவில்லை அந்த பிராபல்யம் என திரும்ப கேட்க வேண்டியது தானே கேட்டால் இவங்க பொழப்பு நாறிவிடும் :-))

வலைப்பதிவுகள் என்பது அனைவருக்கும் சமமான ஒரு இடம், பொதுவில் வைக்கப்படும் கருத்துக்கள் விமர்சனத்திற்கு உட்ப்பட்டது என்பது போய் பிராபல்ய பதிவர் என்ன சொன்னாலும் தேவ வாக்கு ,கேள்விக்குட்படுத்தக்கூடாது என அக்கால மன்னராட்சி போன்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.

கூகிள் வலைப்பதிவை ஆரம்பிக்க காரணமே சமூக வலை என்ற நோக்கில்,அனைவருக்கும் கருத்து சொல்ல ஒரு களம் என ஆனால் இங்கே அதனை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து மன்னராட்சி, வர்ணாசிரம அடுக்கு போல ஆக்கிவிட்டார்கள் :-))

கேள்விக்கேட்பவர்களையும் ,விமர்சிப்பவர்களையும் தனிப்பட்ட ரீதியில் தாக்க ஒரு கூலிப்படையும் உருவாக்கிட்டாங்க , ஆனால் நான் பனங்காட்டு வவ்வால் என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள் :-))

right now i can tear apart them into pieces :-))