Showing posts with label சர்ச்சை. Show all posts
Showing posts with label சர்ச்சை. Show all posts

Monday, November 11, 2013

தமிழின் நவீனத்துவம்.

(அழகின் நவீனத்துவம் ...ஹி...ஹி)

"பாஷை , வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல,சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில் வெறும் சப்தம் தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோகிக்கிற ஒப்புதல்களை இயல்புப்படுத்துதல் ஆகும்.

ஒரே சப்தம் ,ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை, இதனால் தான் இயல்பான ஒப்புதல் என்பது "வழங்கப்படுதல்" என்ற நிலைமைக்கு சார்பாகி,"வழக்கொழிந்த சொற்கள்" என்று ஒரு பகுதியை பிரித்து விடுகிறது. இதன் தவிர்க்க முடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த்தன்மையற்றதாகவே இருக்கும்.

உபயோகம்தான் மொழியின் இயக்கம்,- உயிர்  - என்று கொள்ளும் போது ,"வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல", இயக்கத்தின் இயற்கை ஏந்தி வரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள் இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின் தங்கிவிட்டவை. இதனாலாயே ,பழந்தமிழ் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம் ,இயற்கை தன்மையோ உயிரோ அற்று ,நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.

இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச்சொற்கள் இன்றைய தமிழில் நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன - அதாவது இன்றைய காலத்தில்  - படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல ,இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்தியமாகிறது.

மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் 'தூய்மை பாராட்டியவர்கள், சிந்தனை அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை ,இவர்களது எழுத்துக்களில் ,பழம்பெருமை, பொதுப்புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை "அழகாக" கூறுவதாக எண்ணிக்கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன., இருக்கின்றன.

இவர்களது சமகாலத்திய சிருஷ்டி,கர்த்தாக்களிடமோ ,வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள்,நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்தியத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கின்ற விசாரணைகளும் ,இவற்றை எவ்விதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திர இயல்புக்கு ஏற்ற மொழிப்பிரயயோகத்தில் எழுதப்பட்டன.

கருத்தைப் பிரதானமாக வைத்துப் புதுமைப்பித்தன் எழுதியவை இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ் , இதனாலாயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்றாகிறது.

இன்னொரு புறம், பரவலான வாசகத்தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை. ஆழமற்ற சில்லறைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்பட  வைத்துள்ளன. இதை பத்திரிக்கைத்தமிழ் என்று அதன் உடனடிப்பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும் போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுக்கொள்ள வேண்டும்.

உணர்ச்சி வெளியீட்டைப் பொறுத்தவரையில் கூட தனித்தமிழ் ,சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்று தளங்களும் சுத்தமாகப் பிரிந்து நிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும் , உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன.ஒரு வகையில் உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து ,அனுபவம்,சிந்தனை, ஆகிய துறைகளில் இந்தப்பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.
-------------------

தமிழ்ப் பழமை வழிபாடு எவ்வளவுக்குப் பாமரத்தனமானதோ , அவ்வளவு பாமரத்தனம் தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும் இரண்டுமே இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேருன்றிப்பிறந்தவை. எனது உனர்வின் நவீனத்துவம் இத்தகைய விஷநிலத்தில் இருந்து  விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு நான் தனித்தமிழ் இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும் இதையே கண்டுக்கொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு "உபயோகமாக" ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக என் நேர்ப்பேச்சுக்கள் தென்ப்பட்டுள்ளன.

--------------------------

ஒரு மொழியின் சிறப்பு ,அதன் உபயோகத்தைச் சார்ந்தது, கிரீசின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்து ரோம சாம்ராஜ்யத்தில், கிரீசின் மொழியான கிரேக்கம் தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கணிப்பை புறந்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள், தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம் வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப்பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் , லத்தீனையன்றிச் சுயமொழியையே ,சிருஷ்டிகளுக்கும் ,இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று .

இதன் அடிப்படை, சுய அனுபவத்தினை - தர்சனத்தை - தனது மன இயக்கத்துடன் நெருங்கித்துடிக்கிற ஒரு சுய மொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை ,பிரெஞ்சை, ஜெர்மனை ,ரஷ்யனை விட லத்தீன் உயர்வானது என்றோ லத்தீனை விட கிரீக் உயர்ந்தது என்றோ ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில் லத்தீனியப்பூணூல் ,கிரேக்கப்பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலங்கழிப்பதை நாம் காண முடியாது. ஆனால் தமிழை விடச் சமஸ்கிருதம் உயர்ந்தது, தமிழ் காட்டுமிராண்டி பாஷை என என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே என்று கதை அளக்கும் நவீன சநாதனிகளை நான் கண்டிருக்கிறேன், - நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில் இவர்களது குழுக்கள் 'நவீன இலக்கிய இயக்கங்களாக"க்கூட முனைப்புப் பெற்றுள்ளன

ஒரு மொழியை விட இன்னொரு மொழி உயர்வானது என்று கூறுவதை விட மொழிகளின் உபயோக சாத்தியத்தைப்பற்றிப்பேசுவதே பொறுந்தும். தமிழ் இன்றைய மொழி , அதாவது நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது.இன்றைய மொழி எனும் பொழுது, அது பழந்தமிழாக அன்றி ,"சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது" என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப்புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை, உதாரணமாக அது இன்றைய அனுபவங்களைச் சரளமாக பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை.

---------------------

அக உலக கலைஞர்கள்:

'அகநானூறு போன்ற துணுக்குக் கவிதைகளில் செய்யப்பட்ட மன உலகப் பரிசோதனைகள், தமிழிலக்கியத்தின் இடைக்கால இருளின் முன் மறுப்பட்டுவிட்டன. இன்று ஒரு புது விழிப்பு ஏற்பட்ட பிறகும், அது முழுதாக உணரப்படவில்லை ,காரணம், அந்த இடைக்காலத்தின் பின்பு வந்துள்ள தமிழ்ப்பண்டிதப்படிப்பு எதுவும் அந்த அக உலக ஓட்டத்தை எட்டவில்லை,எனினும் இயல்பிலேயே சுரணையுள்ள படைப்பாளிகள் அதை உணர்ந்துக்கொண்டார்கள்.

அதனால் தான் புதுமைப்பித்தன் அன்று மவுனியிடம் சொன்னார், 'அகநானூற்றின் மன உலகம் இந்தப்பண்டிதர்களுக்குத் தெரிந்திருந்தால் இன்று உன் கதைகளையும், என் கதைகளையும் புரியவில்லை, தெளிவில்லை என்று இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

.....

தமிழ் பண்டிதர்கள் போனாலும் போனார்கள் ,இன்று இங்கிலீஷ் பண்டிதர்கள் அவர்கள் இடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். பாஷை என்னவானாலும் பண்டிதர் பண்டிதர் தான் என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள். இங்கிலீஷ் இலக்கிய பரிச்சயம் என்ற போர்வை ,இவர்களது குறுகிய பார்வைகளுக்குப் போர்வையிடுகிறது. இங்கிலீஷ் மணமே தெரியாத வெற்றிலை கடைக்காரர்களும், ஜவுளிக்கடைக்காரர்களும் உணர்ந்து ரஸிக்கிற எழுத்தை ,இவர்கள் தங்கள் பாண்டித்யத்தின் மேடையில் நின்று விசிறிவிடுகிறார்கள்.

--------------------

மேற்சொன்ன எழுத்து விவரணங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அடியேனது அல்ல ...ஹி...ஹி அதான் எங்களுக்கு தெரியுமே ... உனக்கு விக்கிப்பீடியாவை காப்பி அடிச்சு மொழிப்பெயர்த்து எழுதத்தானே வரும், இது போல முதல் தரமான இலக்கிய சம்பாஷணைகள் எல்லாம் செய்ய வராதேனு ,மனசுக்குள்ள நீங்க சொல்லுற அந்த "மைண்ட் வாய்ஸ்' எனக்கும் கேட்குது அவ்வ்!

(கவிஞர்.தருமு சிவராம் என்கிற பிரமீள்)

சுமார் கி.பி 1960 களில் எழுத்தாளர் மற்றும் படைப்பாளியுமான மறைந்த, சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திவந்த "எழுத்து "என்ற இலக்கிய தரமான தமிழ் பத்திரிக்கையில் நவீன புனைவாளர்,கவிஞர், கட்டுரையாசிரியர் ,இலக்கிய விமர்சகருமான  மறைந்த"தருமு அரூப் சிவராம்" என்கிற பிரமீள் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "தமிழின் நவீனத்துவம்" என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது, வெளியீடு நற்றிணை பதிப்பகம், (விலை 140 ரூ).



தருமு அரூப்  சிவராம்(கி.பி 1939-1997) , இலங்கை திருகோணமலையில் பிறந்து , தமது 20 ஆம் வயதுகளின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு வந்து , நவீன தமிழ்ப்படைப்புலகில் சல சலப்பை உண்டு பண்ணும் பல படைப்புகளை தந்தவர்.  இக்காலத்திலும் பின்நவீனத்துவ படைப்பாளிகளின் ஆதர்சமாக விளங்கக்கூடியவர். நவீன தமிழிலக்கியத்தின் நடமாடும் துன்பியல் சின்னமாக அக்காலத்தில் அலைந்து திரிந்து கி.பி 1997 இல் வேலூர் அருகே கரடிக்குடி எனும்  இடத்தில் அநாதரவாக  இயற்கை எய்தினார்.

சு.ரா அவர்களின் சமகாலத்தவர், நட்பாக இருந்து ,பின் பூசலாக மாறி போட்டுக்கொண்ட இலக்கிய சண்டைகள் பற்றி எழுத்துலகில் மர்மக்கதை போல ஒரு அத்தியாயம் இன்னும் ஓடிக்கொண்டிருப்பது சிறப்பு! இந்த கட்டுரையில் கூட "ஜவுளிக்கடை முதலாளிகள்' என ஊமக்குத்தாக குத்தியிருப்பது சு.ராவையே :-))

எதுக்கு இந்த பழங்கதைய இப்போ பேசிட்டு ,இதெல்லாம் இலக்கியவியாதிகள் சமாச்சாரமாயிற்றே ... வடை சுடுற எடத்தில வவ்வாலுக்கு என்ன வேலைனு கேட்கலாம் , மேட்டர் இருக்கே,  தற்காலத்தில் தமிழை நவீனப்படுத்தவும் ,சாஸ்வதமாக நிலைத்திருக்க செய்யவும் லத்தின் லிபியில் தமிழ் எழுதப்பட வேண்டும் போன்ற செயமோகத்தனமான ஆலோசனைகளுக்கு , இக்கட்டுரையில் ஒரு பதில் உள்ளது, எனவே தான் அடியேன் சிரமம் பாராது அந்நூலில் இருந்து எடுத்தாண்டுள்ளேன்( டேய் ...காப்பி அடிச்சுட்டு என்னா பேச்சு பேசுற அவ்வ்)

# தருமு சிவராம் அவர்கள் , ஆரம்பத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் ஆர்வமுடன்  பங்கேற்றுவிட்டு , தனித்தமிழ் என்பது சிருஷ்டி எழுத்துக்களுக்கு தடையாக இருக்கும் என பின்னர் முடிவெடுத்து , தனித்தமிழ் இயக்கத்தினை விமர்சித்து அதற்கு எதிராக செயலாற்றியவர், அப்போ தமிழின துரோகியானு அவசரப்பட்டு 'ரப்பர் ஸ்ஸ்டாம்ப்" எடுக்காதிங்க அவ்வ்!

 தமிழ் புதிய சொற்களை சுவீகரித்துக்கொள்ள வேண்டும், அப்படி இருந்தும் தமிழ் - தமிழாகவே நிலைத்திருக்கும் , தமிழே சிறப்பான நவீனப்படைப்பிலக்கிய மொழி என்பதே அவரின் பார்வையாகும்.

அவரின் பலக்கருத்துக்கள் சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று முரணாகவும் இருக்கும், இக்கட்டுரைத்தொகுப்பிலும் அத்தகைய முரண்கள் உள்ளன.

# நவீன படைப்பாளிகள் அக உலகத்தர்சனத்தின் அடிப்படையில் எழுதுபவர்கள், மொழி அடிப்படையில் வெற்று வார்த்தை கோர்வைகளாக பார்க்காமல் ' அவற்றில் உள்ள "மீ மொழி" (meta language)யை வாசகன் கண்டுக்கொண்டால்  அக உலக தர்சனம் கிட்டும் என்கிறார். அக உலக தர்சனத்தினை காண கைய புடிச்சு அழைத்து செல்வது மட்டுமே எழுத்தாளனின் வேலை ,வாசகனுக்கு அங்கே என்ன அனுபவம் கிடைக்கும், தர்சனத்தின் முடிவென்ன என்பதெல்லாம் அல்லவாம்!

ஆனால் அக உணர்வுகளின் வெளிப்பாட்டை "பழந்தமிழ் அதாவது தனித்தமிழ்' வெளிப்படுத்தாது என்பதே அவரின் குறைப்பாடு,ஆனால் புதுமைப்பித்தன் ,மவுனியிடம் ,அகநானூற்றின் அக உணர்வு நிலையை தான் உதாரணம் காட்டி நவீன எழுத்தாளர்களின் அக உணர்ச்சி படைப்புக்களை ஒப்பீட்டு பேசியுள்ளார் எனக்குறிப்பிடுகிறார், எனவே பழந்தமிழிலும் அக உலக தர்சனம் காட்டக்கூடிய எழுத்துக்கள் இருந்துள்ளது,ஆனால் நம்ம நவீன எழுத்தாள மக்களுக்கு தான் "பழந்தமிழ் சொல்லறிவு" மட்டுப்பட்டு விட்டமையால் , அக உலக பார்வையில் பழந்தமிழில் எழுத இயலாமல் போச்சு, ஆகவே குறைபாடு என்பது மொழியில் இல்லை அதனை பிரயோகிப்பவரிடம் தான் உள்ளது என்பதை எளிதாக உணரலாம்.

# 1960 களில் அக உலகப்பார்வையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களே மேன்மையானது , மற்றவை எல்லாம் சில்லறை வியாபார எழுத்துக்கள் என குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் எழுத்துக்களை எல்லாம் அப்படித்தான் ஒதுக்கி தள்ளுகிறார்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவெனில் இருவருமே தனித்தமிழ் என்ற "கான்செப்ட்"டை விரும்பாதவர்கள். ஆனால் தருமு சிவராமுக்கு கல்கியின் எழுத்துக்கள் ' வர்த்தக பரிவர்த்தனை ,சில்லறை எழுத்துக்களாகவே" பட்டிருக்கு.

ஆனால் தருமு சிவராம் ,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தினை விட தமிழ் மேலான மொழி எனவும் கருத்தாக்கம் கொண்டவர், இதனை அவரது விமர்சனக்கட்டுரைகளில் பல இடங்களில் காணலாம்.

நிகழ்காலத்தில் செயமோகர் போன்றவர்களும் தமிழில் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது , எனவே இலத்தின் எழுத்துருவில் பதிப்பிக்கணும் என்கிறார், உண்மையில் வாசிக்கும் பழக்கம் , புத்தக விற்பனை குறைவாக இருக்கானா ,அப்படிலாம் இல்லை, பல நூல்கள் நல்லாத்தான் விற்பனை ஆகிட்டிருக்கு. அப்புறம் ஏன் இப்படியான புலம்பல்கள் என்றால் ,எல்லாம் அவரவர் படைப்புக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்தே "கணிப்பு" சொல்கிறார்கள், போதாக்குறைக்கு அதை வச்சே ஒட்டு மொத்தமாக தமிழுக்கே ஒரு புதிய மாற்றம் வேண்டும் என்கிறார்கள்.

தருமு சிவராமால் சில்லறை எழுத்து என புறம் தள்ளப்பட்ட கல்கியின் படைப்புகள் இன்றும் புத்தக சந்தையில் அதிகம் விற்பனையாகி ,தமிழ் வாசகர்களின் இடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டுகிறது என்பது மிக ஆச்சர்யமான ஒரு முரண் நகை.



சில்லறை எழுத்தோ அல்லது அக உலக உணர்ச்சிகளை காட்டும் உன்னத சிருஷ்டி எழுத்தோ , ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தமிழ் படைப்புலகில் இருந்துக்கொண்டுதானுள்ளது, அதனதன் சந்தைக்கு எவ்வித பங்கமும் இல்லை, ஆனால் இந்த அறிவு சீவி எழுத்தாளர்கள் தான் எல்லாக்காலத்திலும் ஏதேனும் ஒரு முறைப்பாட்டுடன் புலம்பி வந்துள்ளார்கள், அது இன்றும் செயமோகனத்தனமாக தொடர்வது காலத்தின் கட்டாயம் அவ்வ்!

நாம் கூட ,பொன்னியின் செல்வன் முழுத்தொகுதி - 240 ரூ (மலிவுப்பதிப்பு), சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - 240 ரூ(மலிவுப் பதிப்பு) ஆகியவற்றை புத்தக சந்தையில் வாங்கினேன், ஒவ்வொரு புத்தகமும் சுமார் 500 பக்கங்கள், அதுவும் ஏ-4 அளவில், கெட்டி அட்டையுடன் உள்ளது. கொடுத்த காசுக்கு மதிப்பு ,மீண்டும் படிக்கவும் தூண்டுகிறது.  எனவே தமிழன்(ஹி..ஹி அடியேனே) இப்பவும் தமிழில்  படிக்க ஆர்வமாத்தான் உள்ளான் , அவனுக்கு புரியும் படியும், நியாயமான விலையிலும் புத்தகங்கள் வந்தால் , ஆர்வத்துடன் வாங்கிப்படிக்கவே செய்வான்,ஆனால் அதை எல்லாம் விட்டுப்புட்டு தலகாணி சைசில் புரியாத வார்த்தை ஜோடனைகளில் எழுதிவிட்டு , 500 ரூபானு விலை வச்சால் எப்படி வாசிக்க முன்வருவான்?



எனவே உத்தம படைப்பாளிகள் தங்களுக்கான சந்தை என்ன , வாசகர்கள் யார் என உணர்ந்து அதற்கேற்ப படைப்புகளை செம்மையாக வழங்க முனைப்புக்காட்டினால் படைப்புலகில் அழியாப்புகழ் கிடைக்கும் என்பதே யதார்த்தம்!
-----------------------------------------

பின்குறிப்பு;

# எலக்கியம் பத்திலாம் அதிகம் பேசாமல் வாசிக்க மட்டுமே விரும்புவேன் ,ஆனால் இந்த எலக்கியவியாதிகள் கடைசீல என்னையும் எலக்கியம் பேச வச்சிடுறாங்களே அவ்வ்!

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கிப்பீடியா, கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!

# கவிஞர் பிரமீள் குறித்து இணையத்தில் காணக்கிடைத்த சில கட்டுரைகளின் சுட்டிகள்,

# http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=158&Itemid=34

# http://solvanam.com/?p=24488

# http://www.blog.beingmohandoss.com/2007/10/blog-post_30.html

# http://ravisrinivas.blogspot.in/2008/07/blog-post_03.html

நன்றி!


Sunday, February 26, 2012

எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!





எலக்கிய நாற்றம் எட்டுதிக்கும்!


சாகித்ய அகதமியின் விருதுக்கு நூல்களை தேர்வு செய்யும் முறை:

# ஐந்து பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மொழி வாரி ஆலோசனைக்குழு ஒவ்வொரு மொழிக்கும் பரிந்துரைக்கும்.

# அந்த ஐந்தில் இருந்து இருவரை அகதமி தலைவர் தேர்ந்தெடுப்பார்.

#இரு நபர் குழு அம்மொழிக்கான அடிப்படை நூல்ப்பட்டியலை தேர்வு செய்து மாநில மொழி ஆலோசனைக்குழுக்கு அனுப்பும்.

# மாநில மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அவர்கள் சார்பாக தலா இரண்டு நூல்களை பரிந்துரைத்துக்க வேண்டும்  , நிபுணர்க்குழுவின் அடிப்படையில் இருக்கலாம் , அல்லது ஒன்று நிபுணர் குழு நூல் ஒன்று சுய தேர்வு அல்லது இரண்டுமே சுய தேர்வாகவும் இருக்கலாம்.மாநில மொழி ஆலோசனைக்குழு இலக்கிய அமைப்புகளின் பரிந்துரைகளையுன் பரிசீலிக்கும். பின்னர் இந்நூல்களின் பெயர்கள்  தொகுக்கப்பட்ட  பட்டியலாக சேர்த்து அகதமிக்கு அனுப்புவார்கள்.

# மாநில வாரியாக 10 நபர் கொண்ட ஒரு முன் தேர்வுக்குழு அமைக்கப்படும். அவர்களுக்கு இந்த பட்டியல் அனுப்பப்படும்.

#இந்த தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும்  மொழி ஆலோசனைக்குழு  மற்றும் நிபுணர்க்குழுவால் தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து தலா இரண்டு நூல்களோ அல்லது அவர்கள் விருப்பப்படி இரண்டு நூல்களையோ குறிப்பிட்டு பரிந்துரைப்பார்கள்.

#இப்போது ஒரு இறுதிப்பட்டியல் உருவாகி இருக்கும், இது 3 பேர்க்கொண்ட தேர்வாளர்கள்(ஜூரி) வசம் ஒப்படைக்கப்படும்.இந்த தேர்வாளர்கள் மாநில ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ,அகதமி தலைவர் முடிவு செய்து தேர்வு செய்வார்.

#இப்போது 3 ஜூரிகளும் ஒருமித்த முடிவாக ஒரே நூலை தேர்வு செய்யலாம் அல்லது மூன்றில் இரண்டுப்பேர் ஓட்டுப்பெறும் நூலையும் தேர்வு செய்யலாம். இதுவே விருதுக்கான நூலாகும்.

ஜூரிகளுக்கும் ,அகதமிக்கும் இடையே  இணைப்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் இருப்பார். விருதுக்கான பரிந்துரை அகதமி செயல் குழு முன் வைக்கப்பட்டு ,ஒப்புதல் பெறப்பட்டு விருது அறிவிக்கப்படும்.

சாகித்ய அகதமி சுட்டிகள்:

விருதுக்கு தேர்வு செய்யும் முறை:


தேர்வு விதி முறைகள்

மாநில ஆலோசனைக்குழுப்பட்டியல்:


மாநில ஆலோசனைக்குழு

ஜூரிகள் மற்றும் விருதுப்பட்டியல்:

விருதுப்பட்டியல்

இப்போது தமிழக சாகித்ய அகதமி அமைப்பில் உள்ளவர்களைப்பார்ப்போம், இவர்கள் தான் தமிழகத்திற்கான விருது வழங்குவதில் முக்கிய பங்காற்றுபவர்கள்.

மாநில அகதமி பொறுப்பாளர்:

முனைவர்.ஆர்.குருநாதன்
சென்னை.

மாநில ஒருங்கிணைப்பாளர்:


முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்
பொள்ளாச்சி.
சிற்பி

தமிழ்நாடு மொழி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்:

#முனைவர்.ஆர்.குருநாதன் ,சென்னை.(மாநிலத்தலைவரும் இவரே)
#
மகரந்தன் (ஐ.கணபதி),புதுவை.
#பேரா.இரா.மோகன்,மதுரை.
#பேரா.இரா.மீனாக்‌ஷி,ஆரோவில்,தமிழ்நாடு.
#
சுப்ரபாரதிமணியன்,திருப்பூர்.
#இந்திரன்,சென்னை.
#இரா.நடராஜன்,சென்னை.(முன்னால் சென்னை வானொலி இயக்குநர்)
#என்.ஆவுடையப்பயன், நூலக இயக்குனரகம்,சென்னை.
#தங்கம் மூர்த்தி(காவியா மூர்த்தி),புதுக்கோட்டை.
#முனைவர்.சிற்பி.பொ.பாலசுப்ரமணியன்,பொள்ளாச்சி.(ஒருங்கினைப்பாளரும் இவரே)

மூன்று நபர் விருது (ஜூரி)தேர்வுக்குழுவினர்.


#கவிஞர் தமிழ்நாடன்,


இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், வானம்பாடி கவிஞர் குழுமத்தில் ஒருவர். தமிழ்நாடு வளர்கலை ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்தவர்.
ஏழு கார்ட்டூன்களும்  ஒரு வண்ண ஓவியமும் - என்ற நூலை ஒரியாவில் இருந்து தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தமைக்கு 2000 ஆம் ஆண்டு சாகித்ய அகதமி மொழிமாற்ற விருது பெற்றுள்ளார்.


அவரைப்பற்றி அப்போது இந்து நாளேட்டில் வநத செய்தி ,
 THIS YEAR'S Sahitya Akademi Award winner for Tamil translation, Mr. A. Tamilnadan, is a ``non- conformist'' among writers, with Leftist leanings.



#குறிஞ்சி வேலன்



இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். நிறைய மொழிமாற்ற நூல்கள் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகதமி விருது -1994 -இல் விஷக்கன்னி(மலையாளம்) நாவலுக்கு பெற்றுள்ளார்.

இரண்டாம் இடம்   என்ற மொழிமாற்ற நூலுக்காக -2001 இல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கவிருது பெற்றுள்ளார். பின்னர் மீண்டும்
முழுமையைத்தேடும் முழுமையற்றப்புள்ளிகள் என்ற நூலுக்கும் பெற்றார்.
link:

book

இவர் ஆசிரியராக இருந்து திசைகள் எட்டும்  என்ற காலாண்டு மொழிமாற்ற இதழ் நடத்தி வருகிறார்.

திசைகள் எட்டும் குறித்த அறிமுகம் ஆரண்யநிவாஸ் என்பவரின் வலைப்பதிவில் இருக்கிறது பார்க்கலாம்.

திசைகள் எட்டும்

முன்னால் சென்னை வானொலி இயக்குநர், இரா.நடராசன், மற்றும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களுடன் இணைந்து " நல்லி திசைகள் எட்டும் "என்றப்பெயரில் மொழி மாற்ற நூல்களுக்கான விருதினை ஆண்டு  தோறும் வழங்கி வருகிறார்.

தமிழக சாகித்ய அகதமி ஒருங்கிணைப்பாளர். சிற்பி.பொ.பால சுப்ரமணியனும் நல்லி திசைகள் எட்டும் விருதுப்பெற்றுள்ளார்.
http://www.hindu.com/2010/08/08/stories/2010080859780400.htm">திசைகள் எட்டும் விருது

# முனைவர்.பேரா.கே.செல்லப்பா


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவராக திருச்சிப்பாரதிதாசன் பல்கலையில் பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர்.“Ilango and Shakespeare: A Comparative Study,”  என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இயக்குனராக கனடா கல்வி மையம், பாரதிதாசன் பல்கலையிலும் பணிப்புரிகிறார்.

இதெல்லாம் எதற்கு இப்பொழுது என்று ஒரு கேள்வி எழலாம்,  விஷயம் இருக்கு,

மூன்று ஜூரிகளில் இரண்டுப்பேர் இடது சாரி சிந்தனையாளர்கள், மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை கழகத்தில் ஈடுபாடுக்கொண்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.

மாநில ஒருங்கிணைப்பாளரும் , மற்ற சில மாநில ஆலோசனைக்குழுவினரும் திசைகள் எட்டும் ஆசிரியர், ஜூரியான குறிஞ்சி வேலனுடன் நட்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

மாநில ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருக்கும் சுப்ரபாரதி மணியன் ( thiruppuur) ,மகரந்தன் (புதுவை)எனப்பலரும் த.மு.எ.க.க ஆர்வலர்களாகவே தெரிகிறது.

காவல் கோட்டம் ஆசிரியர் சு.வெங்கடேசன் , இடதுசாரி சிந்தனையாளர் சிபிஐ(எம்) சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலிலும் நின்றுள்ளார். மேலும் த.மு.எ.க.க மாநில செயலாளர் என்பதால் ஒத்த சிந்தனைக்கொண்டவர்களின் ஆதரவினைப்பெருவதில் வியப்பேதும் இல்லை.மூன்று ஜூரிகளில் இருவர் இடதுசாரி சிந்தனையாளராக இருக்கும் போது சாதகம் தானே.

இன்னும் கொஞ்சம் உள்ளேப்போய் பார்த்தால் போக்குவரத்து , சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின்  தலைவர் சீத்தாராம் யெச்சூரி சிபிஐ(எம்)  கட்சியை சேர்ந்தவர்.  அந்த நிலைக்குழு தான் சாகித்ய அகதமி கொள்கைகளையும் விமர்சித்தது.விருதிற்கான தேர்வு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும்http://www.pravasitoday.com/parliamentary-panel-recommends-transparency-in-sahitya-akademi-awards"> பாராளுமன்றத்தில் யெச்சூரி பேசியுள்ளார். அக்குழுவின் ஆய்வுக்கு உட்பட்டது தான் சாகித்ய அகதமி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சீத்தாரம் யெச்சூரி தலைமையில் தான் செம்மலர் ஆண்டு விழாவினை த.மு.எ.க.க வினர் மதுரையில் நடத்தினார்கள்.

இடது சாரி சிந்தனையாளருக்கு சாதகமான சிந்தனையாளர்களே அகதமியில் அதிகம் இருக்கும் நிலையில் காவல் கோட்டம்  நாவலுக்கு பரிசீலனைகளின் போது சாதகமாக இருந்திருக்க வேண்டும்.

ஏன் மற்ற இலக்கியவாதிகள் காவல் கோட்டத்தினை 1000 பக்க அபத்தம் என சொல்கிறார்கள் எனில் அவர்களின் நாவல்கலை அகதமி மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் யாரும் பரிந்துரைக்கவில்லை என்ற ரகசியம் அவர்களுக்கு தெரிந்து இருப்பதே ஆகும்.

மேலும் முதல் கட்ட பரிசீலனைக்கு ஏதேனும் ஒரு இலக்கிய அமைப்பு ,சங்கம் என பரிந்துரை செய்ய வேண்டும் அதுவே பின்னர் மாநில ஆலோசனைக்குழுவினர் மூலம் முன் தேர்வுக்குழுவின் அடிப்படை பட்டியலுக்கு போகிறது.

எஸ்.ரா ஆரம்பக்காலத்தில் இருந்தே த.முஎ.க..க .வில் ஈடுபட்டு வருபவர், ஆனால் அப்படி இருந்தும் எஸ்ரா போன்றவர்களின் நூலினை முந்திக்கொண்டு சு.வெங்கடேசனுக்கு த.மு.எ.எ.க பரிந்துரை கிடைத்து இருக்கலாம், அதுவே சீனியரான எஸ்.ராவிற்கு கடுப்பேற்றி இருக்கலாம் என தோன்றுகிறது.

இடது சாரி சிந்தனையாளர்களின் தாக்கம் கொண்ட குழுவில் ஜெ.மோ கதை எல்லாம் செல்லுபடி ஆகி இருக்காது என நினைக்கிறேன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு கிடைக்கிற கேப்பில் எல்லாம் பொங்கித்தள்ளுகிறார் போல தெரிகிறது.

ஓரளவுக்கு அனைவராலும் எழுத்தாளுமை உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெ.மோ, எஸ்.ரா போன்றவர்களுக்கே போதுமான ஆதரவு இல்லாத போது காமநெடி பீசான சாருவுக்கு யார் பரிந்துரை செய்திருக்க போகிறார்கள். அதான் காண்டாகி தனியாக அவர் கூட்டம் போட்டு அடுத்தவங்களை காச்சுகிறார் :-))

த.மு.எ.க.க வின் ஆர்வலராக இருந்தும் ஒரு புதுமுக எழுத்தாளருக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் புறக்கணிக்கப்பட்டதால் எஸ்.ராவிற்கு ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை. அதை நேரடியாக வெளிக்காட்டவும் முடியவில்லை அதான் தனக்கு தானே திட்டமாக சூப்பர் ஸ்டாரை வைத்து கொடியை பறக்க விட்டுக்கொண்டார்.

ஆனால் சாரு ஏன் எஸ்.ரா வின் மீது பாய்கிறார்  எனத்தெரியவில்லை. வேண்டுமானால் அவரும் லோகநாயகனையோ இல்லை பொழுது போகாமல் சும்மா குந்தி இருக்கும் ஒரு நடிகரை/நடிகையை இழுத்து வந்து விழா நடத்திக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள். பல்லு இருக்கவன் பட்டாணி  தின்றான் இவருக்கு ஏன் வலிக்குது :-))

காவல்கோட்டம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று அப்போதெல்லாம் இல்லாத சர்ச்சைகள் விருதுக்கு பின்னர் வருகிறது என்றால் என்னக்காரணம் , ஒவ்வொருவரும் நம்ம பேர் லிஸ்ட்ல இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்து இலவு காத்து ஏமாந்து போயிருப்பார்கள் போல .அதான் இப்போது பூதக்கண்ணாடி வைத்து குற்றவியல் ஆய்வு செய்கிறார்கள்.

சாகித்ய அகதமி ஆங்கிலம் உட்பட 24 மொழிகளுக்கு ,மொழி வாரியாக நூல்களை தேர்வு செய்தே விருதளிக்கிறது.தேசிய அமைப்பால் கொடுக்கப்படும் ஒரு பிராந்திய விருதே அது,அகில இந்திய அளவில் சிறந்த நூலுக்கானதும் அல்ல.ஏன் எனில் போட்டியே ஒவ்வொரு மொழிக்குள் மட்டுமே. அப்படி இருக்கும் போது  ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ஞானபீட விருதே உச்சமான அகில இந்திய இலக்கிய விருதாகும்.

சிறந்த தேசிய படமென விருதுப்பெருவதற்கும், சிறந்த மாநில மொழிப்பட விருதிற்கும் வித்தியாசம் இருப்பது போலவே அகதமி விருதுகளும்.

---------

பின்குறிப்பு-1:

காவல் கோட்டம் சு.வெங்கடேசன் மட்டுமில்லாமல் தமிழகத்தை  சேர்ந்த மேலும் இரண்டுப்பேர் சாகித்ய அகதமி விருதினை மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கு பெற்றுள்ளார்கள்.

#
இந்திரன் - எழுத்தாளர்.

சென்னையில் வசிக்கும் புதுவையை சேர்ந்த இந்திரன் என்கிற பி.ஜி.இராஜேந்திரன் , பறவைகள் ஒரு வேளை தூங்கிப்போயிருக்கும் என்ற பெயரில் ஒடிய மொழி நூலை மொழிப்பெயர்த்தமைக்கு பெற்றுள்ளார்.

#முனைவர்.தமிழ்செல்வி(சென்னைப்பல்கலை) அவர்கள் லிவிங்க் ஸ்மைல் வித்யா (வலைப்பதிவரும் கூட) எழுதிய நான் சரவணன் இல்லை வித்யா என்ற தமிழ் நூலை  கனடத்தில் மொழிப்பெயர்த்தமைக்கு சாகித்ய அகதமி விருதினைப்பெற்றுள்ளார்.

பின்குறிப்பு-2:

இந்த எலக்கிய சண்டை , விருது வாங்கிற அக்கப்போரை எல்லாம் பார்த்த பிறகு நாமும் கொஞ்சம் தம் கட்டி ஒரு ஆயிரம் பக்கத்துக்கு எழுதிட்டு  மானே, தேனே ,பொன்மானே போல அதுக்கூட கொஞ்சம் மக்கள் தொகை புள்ளிவிவரம், டெலிபோன் டைரக்டரி, இராபர்ட் கிளைவ்னு வரலாறு ,கொல்லிமலைப்பாவை னு எல்லாம் தூவிட்டா மாபெரும் வரலாற்று இலக்கிய காவியம் உருவாகிடும்னு தோன்றுகிறது. எவ்வளோவோ செய்துட்டோம் இத செய்ய மாட்டோமா :-))

இந்த லட்சணத்துல இலவசமாக இணையம் இருக்குனு எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை மாட்டு மூத்திரத்தை காய்ச்சி குடிச்சுட்டு 35 வருஷமா எழுதறவங்க எழுதுவது தான் எலக்கியம்னு சொல்லிக்கிறார் ஒரு எலக்கியவாதி.
தூங்கிட்டு இருந்த ஒரு வவ்வாலை தட்டி எழுப்பிட்டாங்க எனவே இனிமே நானும் எழுதி விருது வாங்கிக்காட்டுறேன்டா !...டா..டா! எனவே மக்களே யாருக்குலாம் விருது  வாங்க ஆசை இருக்கோ எல்லாம்  வாங்க ஒரு எலக்கிய  புரட்சிய ஒன்று கூடி உருவாக்கலாம், இந்த எலக்கிய டம்மி பீசுகளுக்கு பாடம் கற்பிக்கலாம்.

பின்குறிப்பு-3:

இந்தப்பதிவில் இருப்பவை பத்திரிக்கை செய்திகள் மற்றும் இணையத்தில் கிடைத்த தகவல்களின்  அடிப்படையிலே எழுதப்பட்டுள்ளது, எந்த தனிநபரையோ , அமைப்பையோ களங்கப்படுத்தும் நோக்கத்தில்  உள்நோக்கத்துடனோ எழுதப்படவில்லை.அப்படி யாரேனும் தாங்களாகவே நினைத்துக்கொண்டால் அடியேன் பொறுப்பல்ல :-))


Thursday, January 12, 2012

குமுதம் யாருக்கு சொந்தம்?



                                                    

          குமுதம் யாருக்கு சொந்தம்?




திரு எஸ்.ஏ.பி அவர்களால் நிறுவப்பட்டு, வளர்க்கப்பட்ட குமுதம் வார இதழ், அவரது மறைவுக்கு பின்னர் பல சர்ச்சைகளின் மையமாக திகழ்கிறது என்பதை வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிவார்கள்.இப்போது மேலும் முற்றிய நிலைக்கு போய்விட்டது மிகவும் வருந்த தக்கது.

ஏனோ இந்த பிரச்சினைக்குறித்து ஊடகங்களும் ஒரு திருட்டு மவுனம் பூண்டு(வெங்காயம் மிஸ்ஸிங்கோ?) இருக்கின்றன. என்றே தோன்றுகிறது. வழக்கமாக சிறிய விஷயத்தையும் ஊதிப்பெரிதாக்கும் துப்பி எறியும் பத்திரிக்கைகளும் மவுனகுருவாக இருக்கின்றன. நடிகர்,நடிகையரின் அந்தரங்கம் என்றால் காணாததையும் கண்டதாக எழுதுவார்களாயிருக்கும். :-))

இதை விட ஆச்சர்யம் எல்லாத்துக்கும் கருத்து கண்ணாயிரமாக பதிவுப்போட்டுத்தள்ளும் பதிவர்களும் கோந்து அல்வா சாப்பீட்ட கோவிந்தனாக கம்மென்று இருக்கிறார்கள். ஒரு வேளை எல்லாம் எனக்கு தெரியாம  பதிவுப்போட்டு இருக்காங்களோ?

சரி இந்த வார குமுதம் பத்திரிக்கையில் வந்துள்ள பகிரங்க அறிக்கையில் இருந்து மேட்டர்(இது சமாச்சாரத்த சொன்னதுப்பா) என்னனு பார்ப்போம்...

திரு .ஜவகர் பழனியப்பன் த/பெ. எஸ்.ஏ.பி, அவர்கள் அமெரிக்க பிரஜ்ஜை என்பதால் குமுதம் நிறுவனப்பங்குகளுக்கு உரிமைக்கோர இயலாது, அது இதழியல்/ அச்சக சட்டங்களுக்கு முரணானது.

திருமதி.கோதை பழனியப்பன் ,தன்னிச்சையாக குமுதம் நிர்வாகத்திற்கு சேர்மன், மற்றும் நிர்வாக இயக்குநராக அறிவித்துக்கொண்டாராம்..மேலும் ஓரு இடைக்கால தடையும் வாங்கினாராம்.(எதுக்கான இடைக்கால தடை?) அந்த தடை நிர்வாகத்தினைப்பாதிக்கும் என வரதராஜன் நிறுத்தி வைக்க உத்தரவு வாங்கினாராம்.

பின்னர் கம்பெனியின் இயக்குநர்கள் கூட்டம் முறையாக அறிவிக்கப்பட்டு மூன்று முறைக்கூடியுள்ளதாம். இப்போது யார் நிர்வாக இயக்குநர்,, சேர்மன் என்ற சர்ச்சை நீடிக்கும் போது யாருக்கு கூட்டம் கூட்ட அறிவிப்பு கொடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பது ஒரு நல்ல கேள்வி இப்போ நீங்க கேட்கணுமே? கேட்டாச்சா...சரி அடுத்துப்போவோம்.

முறையே 20-9-2011,10-10-2011, மற்றும் 2--01-2012 ஆகிய நாட்களில் கம்பெனி இயக்குநர்களின் நிர்வாக கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அதில் திரு.ஜவகர் பழனியப்பன், திருமதி.கோதை பழனியப்பன் ஆகியோர் கலந்துக்கொள்ள தவறியதால் ,அவர்கள் இயக்குநர்கள் என்ற பொறுப்பையும் இழந்துவிட்டார்களாம். எனவே இனிமேல் மேற்கொண்டவர்களுடன் யாரும் குமுதம் தொடர்பாக தொடர்புக்கொள்ளக்கூடாதாம்.

இப்போது என்னுள் சிலக்கேள்விகள்,

# கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கு இப்போது ஒரு நிர்வாகம் அதே பிரச்சினையின் மீதே இயக்குநர்கள் கூட்டத்தினை வைத்தே தீர்ப்பு சொல்ல முடியுமா? பின்னர் கோர்ட் எதுக்கு?

#மேலும் மிக குறுகிய காலத்தில் ஏன் மூன்று இயக்குநர்கள் கூட்டம் நடத்தப்பட்டது? அவர்கள் கலந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதற்காகவா? இங்கு கவனிக்க வேண்டியது குமுதம் அலுவலகம் செல்ல காவல் துறைப்பாதுகாப்பினை இருவரும் கேட்டு மறுக்கப்பட்டுள்ள ஒரு சூழல்.

# சர்ச்சைக்குறிய நிலையில் இக்கூட்டத்தை கூட்டும் அதிகாரம், தலைமை தாங்கும் பொறுப்பு யாருக்கு?

# கணவரின் சொத்துக்கு மனைவி பாத்தியதை இல்லையா?

#தந்தையின் சொத்துக்கு மகன் பாத்தியதை இல்லையா, அவர் வெளிநாட்டில் வாழ்ந்து ,அங்கேயே குடியுரிமைப்பெற்றிருந்தாலும்.

#நியமிக்கப்பட்ட ,அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிர்வாக இயக்குநர்,ஆனால் அது அவரது சொத்து அல்ல என்றாலும் உரிமைக்கொண்டாட முடியுமா?

# இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துரிமை சட்டம் இதில் செல்லாதா?

இப்போ குமுதம் யாருக்கு தான் சொந்தம்? தெரிஞ்சா சொல்லுங்க யாராவது.


பின் குறிப்பு:

மேல் நிலைப்பள்ளி, கல்லூரிக்காலங்களில் பலப்பத்திரிக்கைகளுக்கும் அதிகம் எழுதி அனுப்புவேன்(5 ஆம் வகுப்பிலேயே இந்த வேலையை ஆரம்பிச்சுட்டேன், எப்போவாது கல்கண்டு, சூப்பர் நியூஸ் (சூப்பர் நாவல்,-சுபா வகை) அதில் வரும்) பெரும்பாலும் கிணறு-கல் தான். ஆனால் குமுதத்தில் மட்டும் அவ்வப்போது வரும், ஒரு நம்பிக்கையை தரும். பல பத்திரிக்கைகளிலும் பெரும்பாலும் வாசகர் கடிதம் வரும். பிலாக் ஆரம்பித்த காலத்திலிருந்து அனுப்புவதில்லை, நாம எழுதி, இவனுங்க என்ன பரிசீலனை செய்றது என்ற ஒரு எண்ணம் தான்(கொஞ்சம் ஓவர் குசும்பு உனக்குனு சொல்வது கேட்கிறது).அக்காலத்தில் அச்சில் அடிக்கடி நம்ம பேரைப்போட்ட குமுதத்தில் புகைச்சல் என்பது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாக நெருடவே செய்கிறது.

Saturday, October 29, 2011

சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?



சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?


தமிழகத்தில் இஸ்லாமியர்கள் முகமன் கூற "சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று கூறுவதாக பதிவுலகில் பலரும் சொல்கிறார்கள். இதன் அரேபிய மூலம் அசலாமும் அலைக்கும் என்பதாகும். இதனை வைத்து தமிழ்மணத்தில் ஒரு பிரச்சினை எழுந்து அடங்கியது.

இதனிடையே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது(இவர் பாண்டிய மன்னரு!), சாந்தி என்றால் அமைதி...அமைதிக்கு பெயர் தான் சாந்தி என்று பாடல் கூட உள்ளது. அமைதி என்றால் சைலண்ட், மேற்கு தொடற்சி மலையில் கேரளாவில் "சைலண்ட் வாலி" என்று ஒரு பள்ளத்தாக்கு உள்ளது அந்த வனப்பகுதி இரவிலும் சப்தமில்லாமல் இருக்கும் ஏன் எனில் அங்கே சிக்காடா என்ற வண்டு இனம் இல்லை, சிக்காடா என்பது சில்வண்டு, சுவர் கோழி, மோல் கிரிக்கெட் எனப்படும் பூச்சியே. இது இரவு நேரங்களில் கிர்ரிச் கிர்ரீச் என சத்தமிடும். உலகிலேயே சிக்காடா இல்லாத வனம் சைலைண்ட் வாலி தான். இதை தமிழில் அமைதிப்பள்ளத்தாக்கு என்பார்கள்.

சமாதானம் என்பது ஆங்கிலத்தில் பீஸ்(peace) ஆகும்." peace treaty" இதை தமிழில் சமாதான உடன்படிக்கை (அ) ஒப்பந்தம் எனலாம்.சில சமையம் அமைதி உடன்ப்படிக்கை( அ) ஒப்பந்தம் என்று சொல்லவும் கேட்டு இருக்கிறோம்.

அப்படியானால் சாந்தி(=அமைதி), சமாதானம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக்குறிக்கும் இரு சொற்கள் ஆகிறது. அன்னை, தாய் என்பது போல.

எனவே சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக என்று சொல்வது இரண்டு முறை சாந்தி என்றோ இரு முறை சமாதானம் என்றோ சொல்வதாகிறதே எப்படி அப்படி சொல்வார்களா?

ஆகவே அதன் அரபிய மூலமான "அசாலாமு அலைக்கும் வ" என்பதன் பொருளைத்தேடினேன்.
அதற்கு உலகெங்கும் பொதுவாக சுருக்கமாக "Peace be upon you" என்று சொல்வதாக போட்டிருந்தார்கள். இதன் பொருள் சமாதானம் நிலவுவதாக என்பதாகும்.

இரானில் "peace and health upon you" என்ற பொருளில் பயன்ப்படுத்துகிறார்களாம். தமிழில் அமைதியும் (அ)சமாதானமும் ஆரோக்கியமும் நிலவுவதாக என்பதாகும்.

ஆனால் இதுவே முழு முகமன் கிடையாது , முழுசாக "அசலாமு அலைக்கும் வ ரகமத்துல்லா வ பரக்கத்து" என சொல்லப்படுகிறது.
இதனை தமிழில் மொழிப்பெயர்த்தால் "சமாதானமும் அல்லாவின் கருணையும் (அ)இறையருளும் நிலவுவதாக" என்றோ அல்லது "அமைதியும் ஆரோக்கியமும் இறையருளும் நிலவுவதாக" என்றோ தான் மொழிப்பெயர்த்து பயன்ப்படுத்தி இருக்க வேண்டும்.
பரக்கத் என்பதற்கு அபிவிருத்தி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. சாப்பிடும் போது சொல்லும் வாக்கியத்தில் பரக்கத் என்பது அபிவிருத்தியாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

ஆகவே அரேபிய மூலத்தில் இல்லாத ஒன்றை தமிழில் அடுக்குத்தொடர் போல் ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைப்பயன்ப்படுத்தக்காரணம் தவறான மொழிப்பெயர்ப்பே என நினைக்கிறேன்.

அந்த காலத்தில் தவறாக மொழிப்பெயர்த்திருந்தாலும், சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை சரிப்பார்க்க வாய்ப்பிருந்திருக்காது, ஆனால் இது இணைய உலகம், எதனையும் அறிந்து கொள்ள முடியும். சாந்தியும் சமாதானியும் சண்டையின் போது யாருமே அலசி ஆராயாமல் சண்டைப்பிடிக்க ஒரு வாய்ப்பு விடக்கூடாது என்று பாய்ந்ததாகவே இப்போது எனக்குப்படுகிறது.

இந்தப்பதிவிலும் ஏதேனும் பிழைகள் இருக்கலாம் சுட்டிக்காட்டவும், மேலும் அரபியும், தமிழும் தெரிந்தவர்கள் எது உண்மை என்று விளக்கினாலும் நன்றே!

மற்றப்படி சிலம்பாட்டம் ஆட ஆசைப்படுபவர்களை "பிதா சுதன் புனிதப்பேயோ, அல்லா ரக்காவோ ,அனுமானோ இரட்சிப்பாராக..ஆமென்!
-------------------------------------------------------------------------------------

விளக்கம் தேடியப்போது எனக்கு கிட்டியவை, ஆங்கிலத்தில் இதில் இருப்பதைத்தான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிகளும் உள்ளது , படித்துப்பாருங்கள்.


Assalamu Alaikum Wa (السلام عليكم و رحمة الله و بركاته)
Rahmatullahi Wa Barakatuh (السلام عليكم و رحمة الله و بركاته)
Grammar: greeting; 6 words;
"Peace be unto you and so may the mercy of Allah and His blessings". It is the full version of the Islamic greeting.

http://www.islamic-dictionary.com/index.php?word=assalamu%20alaikum%20wa%20rahmatullahi%20wa%20barakatuh
-----------------------------------------------------------------------------------


Definition: A common greeting among Muslims, meaning "Peace be with you." The appropriate response is "Wa alaikum assalaam" (And upon you be peace.)

Extended forms include "Assalamu alaikum wa rahmatullah" (May the peace and mercy of Allah be with you) and "Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh" (May the peace, mercy, and blessings of Allah be with you).

http://islam.about.com/od/glossary/g/gl_salaam.htm
---------------------------------------------------------------------------------------------

The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)

http://www.iqrasense.com/muslim-character/assalamu-alaikum-origin-and-meaning-of-the-muslim-greeting.html
----------------------------------------------------------------------------------------------------