Thursday, June 22, 2006

ஆராரோ ஆறு யாரோ ....



ன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பென்ச் மேல் நிக்க வைக்கும் டீச்சர் போல் எங்கே அந்த ஆறு என்று என்னை கடுமையாக விரட்டி விரட்டிக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடாங்க பொன்ஸ்(உன்னை எல்லாம் ஆறு போட சொல்லி கூப்பிடனே என் புத்திய... அப்படினு புலம்புறாங்க) ,இதுக்கு மேலே தாமதம் செய்தால் யானைக்காலால் இடறி சிரச்சேதம் செய்தாலும் செய்வார்கள் என்று உடனே போட்டு விட்டேன் எனது ஆறை.ஒரு வவ்வாலையும் ஆட்டத்திற்கு அழைத்தற்கு நன்றி! ஆர்.டி.ஓ கிட்டே கூட 8 போட்டு லைசென்ஸ் எளிதாக வாங்கிடலாம் போல இருக்கு இந்த ஆறு செமையா படுத்துது.ஒரு தடவை தட்டச்சு செய்து பிளாக்கர் சொதப்பலால் காணாம போய்டுச்சு (சி.பி.ஐ கிட்டெ தேட சொல்லனும்)ஒரு வழியா நானும் களத்தில் ஆறோட குதிச்சுட்டேன்!

I)பிடித்த நூல்கள்/எழுத்தாளர்கள்:

1)காதெலுனும் தீவினிலே- குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி:

குமுதத்தில் தொடராக வந்த நாவல்.குமுதம் ஆசிரியர் அதிகம் எழுதிக்குவிப்பவர் அல்ல ஆனால் எழுதிய சிலக்கதைகளில் முத்திரைப்பதித்தவர்.ஏழைக்காதலன் பணக்காரப்பெண்ணை காதலிக்கும் எவர் கிரீன் பார்முலா தான் ஆனால் வித்தியாசமா இருக்கும்.

2)சங்கர்லால் கதைகள்- தமிழ்வாணன்:

தமிழ்வாணனின் தொப்பி,கருப்புக்கண்ணாடி படு பிரசித்தம் அவரது சங்கர்லால் போல. தமிழ் நாட்டின் ஷெர்லாக் ஹோம்ஸ் சங்கர்லால்.அடிக்கடி தேநீர் அருந்துவது ,சத்தம் கேட்காத ரப்பர் காலணி என்று ஒரு மார்க்கமான துப்பறியும் நிபுணர் ஆக வருவர்.நியுயார்க்கில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் என உலகம் சுற்றி துப்பறிந்தவர்.

3)கடல் புறா - சான்டில்யன்:

சாண்டில்யனின் அனைத்து நாவல்களும் பிடிக்கும் ,அதுவும் அவரது பெண்களைப்பற்றிய வர்ணனை தீப்பிடிக்க வைக்கும்.புரவி,மரக்கலம் எல்லாம் இல்லாமல் ஒரு சமூக நாவல் கூட எழுதியுள்ளார் படித்துள்ளேன் பெயர் நினைவில்லை.இவரைப் பின்பற்றி கோவி.மணிசேகரன், மு.மேத்தா(சோழ தீபம்) எல்லாம் எழுதிப்பார்த்தார்கள் சாண்டில்யனின் நிழலை கூட தொடமுடியவில்லை.

4)கரித்துண்டு- மு.வரதராசன்:

கரித்துண்டு சாலையோரத்தில் படம் வரைந்து ஜீவனம் செய்யும் ஒரு ஓவியனின் கதை.இதில் ஒரு உளவியலை சொல்வார் அவன் வரையும் படங்களில் கால் இருக்காது ஏனெனில் அவனுக்கும் கால் இல்லை என.இப்பொழுதும் சாலையில் படம் வரைந்து காசு கேட்கும் ஓவியர்களைப்பார்த்தால் இந்த கதை தான் நிழலாடும்.பெரும்பாலும் கடவுள் படங்களையே வரைகிறார்கள் இத்தகைய ஓவியர்கள்

5)சுஜாதா கதைகள்:

இவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை சகலகலா வல்லவர்.இவரின் அனைத்து கதைகளும் பிடிக்கும். ஸ்ரிரங்கத்து தேவதைகள் கதைகள் சிலிர்ப்பானவை.சுஜாதாவும் மெக்ஸிகோ சலவைக்காரியும் பிரிக்க முடியாதவர்கள் :-)).விஞ்ஞானக்கதைகளில் வித்தகர்.கணேஷ்- வசந்த் என்ற இரட்டையர்களை வைத்துக்கொண்டு சமகாலத்தையும் பேசுவார் சோழர் காலத்தில் பெண்கள் மார்கச்சை அணிவதில்லையாம் பாஸ் என்றும் ஜொள்ளுவார் வசந்த் மூலமாக!

6)வீரப்பிரதாபன் கதைகள்- வாண்டுமாமா:

வாண்டுமாமா என்ற குழந்தைகள் கதாசிரியர் பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஜே.கே ரவ்லிங் கின் ஹாரிப்பாட்டர்களுக்கு எல்லாம் தாத்தா இவர்.வீரப்பிரதாபனின் குதிரையின் காதில் ஒரு மந்திரம் சொன்னால் வானில் பறக்கும்.ஒரு குளிகையை வாயில் அடக்கிக் கொண்டால் மாயமாக மறையலாம். ஆலோசனை சொல்ல கூட ஒரு கட்டை விரல் சைஸ் குள்ளன் வேறு இருப்பான்.

II) பிடித்த திரைப்படங்கள்

1)கர்ணன் - சிவாஜி:

சிவாஜியின் கலக்கலான நடிப்பில் வந்த படம்.கர்ணன் கதாப்பாத்திரம் ஒரு சூழ்னிலைக் கைதி அதனை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பர்

2) முள்ளும் மலரும்-ரஜினி:

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற கிரீடம் எல்லாம் சூட்டப்படாத காலத்திய படம் இயல்பான நடிப்பைக் காட்டி இருப்பார். செந்தாழம் பூவில் ...என்ற பாடல் கேட்டால் காதுகளை விட்டு நீங்காது ஒலிக்கும்

3)ரத்தக்கண்ணீர்-எம்.ஆர்.ராதா :

வில்லத்தனமாக நடித்தே சமூகத்திற்கு மெஸ்ஸேஜ் தந்தவர்.அள்ளி அள்ளி கொடுத்தேனே அடியே காந்தா ... வசனமும் குற்றம் புரிந்தவன் ..பாடலும் மறக்க முடியாதவை

4)ஒரு தலை ராகம்:

சோகமான காதலை இனிமையான பாடல்களுடன் சொன்னப் படம் .இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ராஜேந்தரா இப்படியெல்லாம் படம் எடுத்தார் என்று ஆச்சரியப்படுவார்கள்.இப்போது முரளி செய்த வேலையை அப்போது செய்தவர் சங்கர்

5) மூன்றாம் பிறை-கமல்:

உணர்வுப்பூர்வமான படம், கமலின் கிளைமாக்ஸ் நடிப்பு பிரமாதம் என்பார்கள் ஆனால் அந்த கிளைமாக்ஸ் எனக்கு நாடகத்தனமாகவே தோன்றியது. இயக்குனர்களை கமல் இயக்காத காலத்தில் வந்த படம் என்பதால் பாலுமகேந்திராவின் இயக்கதில் ராஜாவின் இசையில் இயல்பாக இருக்கும் .கண்ணே கலைமானே... எந்த காலத்திலும் தெவிட்டாத பாடல்

6)காதலுக்கு மரியாதை-விஜய் :

காதலியுடன் கனவுப்பாட்டு பாடும் போது ,அது வரைக் குடும்ப குத்து விளக்காக காட்டிய நாயகியை குறைந்த பட்ச உடையில் ஆடவிடுவார்கள்.அப்படியில்லாமல் நாகரீகமாக காதலை சொல்லி மரியாதை செய்து மரியாதை வாங்கிய படம்.என்னை தாலாட்ட வருவாளா... பாடல் காதுகளுக்கு உண்மையான தாலாட்டு.

III)பிடித்த விளையாட்டு

1)கோலிக்குண்டு :

கோலிகுண்டில் பேந்தா என்று ஒரு வகை சுவற்றுக்கு பக்கத்தில் செவ்வக பெட்டி போல கோடு போட்டு இரண்டு சின்ன கோலி ஒரு பெரிய கோலி வைத்து ஆடுவார்கள் அதில் அய்யா சூரப்புலி. ஒலிப்பிக்கில் இதை எல்லாம் சேர்க்க மாட்டேன்கிறார்கள். சேர்த்தால் ஒரு தங்கம் நிச்சயம்.ஆட்ட விதி, பந்தய தொகை என சந்தேகம் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்!

2)காத்தாடி விடுவது:

காத்தாடி விட்டு டீல் விடுவதிலும் எக்ஸ்பெர்ட் தான். இப்போ கூட பலரது வலைப்பதிவில் போய் பின்னூட்டமிட்டு டீல் விடுவதெல்லாம் அங்கே கத்துகிட்டது தான் :-))

3)கிரிக்கெட்:

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் நாம். அதிலும் ஸ்பெஷல் ஒரு ஓவரில் 3 பந்துகளை வலது கையாலும் 3 பந்துகளை இடது கையாலும் வீசி ரொம்ப டார்ச்சர் தருவேன்.(எனக்கு நோ பால் தந்துடுவானுங்க ரூல்ஸ் தெரியாத தத்திங்க)

4)சதுரங்கம்:

விஸ்வநாதன் ஆனந்த் வரவில்லை என்றால் அவர் இடத்தை நான் தான் நிரப்பி இருப்பேன் :-))

5)டேபிள் டென்னிஸ்: இந்த இரண்டு விளையாட்டும் நேரம் கிடைத்தால் ஆடுவது.
6)பேட்மின்டன்

IV)பிடித்த உணவு

1) பழைய சாதம், மோர், மாங்கா ஊறுகாய்:

மோர் ஊத்தி பழைய சாதத்திற்கு மாங்கா ஊறுகாய் தொட்டுகிடு சாப்டா ஜம்ம்னு இருக்கும். உடம்புக்கும் நல்லது.


2)முட்டை தோசை:

முட்டை தோசை மேல மிளகு பொடி தூவி ,காரசட்னி வைத்துகொண்டு சாப்டா சும்ம நச்சுனு இருக்கும்

3) இட்லி காரசட்னி:

இட்லி கூட கார சட்னி இல்லைனா கத்திரிக்கா கொத்ஸ்து இருந்தா ஒரு டஜன் இட்லி சகஜமா உள்ள இறங்கும்.

4)மாகி நூடுல்ஸ்(நானே செய்வதால் நல்லா இருக்கும்):

ஆபாத்பாந்தவன் இந்த மாகி நூடில்ஸ் அதனாலேயே நமக்கு புடிக்கும்

5)ரசம் சாதம் -தக்காளி ரசம் அரிசி வத்தல் அல்லது உருளை கிழங்கு வருவல். எதேஷ்டம். நல்லா எளிதா ஜீரணம் ஆகும்.

6)பிரெட் ஆம்லெட் :

இதுவும் அப்படி தான் எப்போ வேனா பசிக்கு உடனே தயார் ஆகிடும் சமயத்தில சைட் டிஷ் ஆகவும் பயன்படும்.

V)பிடித்த பானங்கள்:

1)ஏலக்காய் போட்ட டீ:

மழைக்காலத்திலே கொதிக்க கொதிக்க ஊதி ஊதி குடிக்கணும். தம் டீ என்று கேன் ல இருக்க டீ சொல்வாங்க நாங்க எல்லாம் ஒரு தம் அடிச்சுட்டு டீ குடிக்கிற ஆளுங்க!(கடைசில மறக்காம ஒரு ஹால்ஸ் இல்லைனா மெந்தோ போட்டுகணும் வாய்ல)

2) சுக்கு காபி/பிளாக் காபி:

சுக்கு காபியும் தொண்டைக்கு இதமானது. வீட்டில போட்டு குடிக்கிறது சமயத்தில ரோட்ல சைக்கிளில் சுக்கு காபி வித்துகிட்டு போவங்க அதையும் வாங்கி குடிக்கிறது.(அவங்க எப்படி போடுவாங்கனு ஆராய்ச்சிலாம் பண்ணா குடிக்க முடியாது)

3) சாதம் வடித்த கஞ்சி:

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சூடான கஞ்சி தண்ணி குடிக்கிறது உண்டு. சாதத்தில இருக்க சத்தெல்லாம் தண்ணில போகுது அதனால அதை மீண்டும் அடைய ஒரு வழி. சூப்பரா இருக்கும்

4)மோரில் எலுமிச்சம் பழம் பிழிந்து:

இப்படிக்குடித்தால் உடல் குளிர்சியடையும் ,காலையில் வெறும் வயிற்றில் குடிக்கணும்.

5)ராயல் சேலஞ்ச் (விஸ்கி):

நம்ம வசதிக்கு இதான் சரிப்படும் அயல்னாட்டு சரக்குலாம் கைய கடிக்கும். இதிலும் நான் பல பரிசோதனைகள் செய்து இருக்கேன் அதெல்லாம் சொன்னா இடம் போதாது. சாம்பிளுக்கு சில. மிக்ஸிங்கு கோக்/பெப்சி லாம் பயன்படுத்த மாட்டேன் ,கொய்யா ஜூஸ்,(பொன்ஸ் உங்களுக்கும் கொய்யா ஜூஸ் மட்டும் தானே பேவரைட்) ஆப்பிள் ஜூஸ், மாதுளம் ஜூஸ் என்று பழச்சாறுகளை தான் பயன் படுத்துவேன்.
ஆல்கஹாலின் தீமையை குறைக்க :-))

ஒரு நாள் கொஞ்சம் வித்தியாசமாக குளுக்கோஸ் ஆரஞ்ச் கலந்து கூட குடிச்சாச்சு (இப்படி குடித்தா அதிகமா கிக் வந்து தூக்கிடும் கவனமா ட்ரை பண்ணனும் )

6)புல்லட் பீர்:

புல்லட் பீர் நல்லா ஸ்ட்ராங்க் ஆக இருக்கும் சமயத்துல அதுல வே சரக்கையும் மிக்ஸ் பண்ணி இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்க் ஆக்கிடுவேன் :-))

VI) அழைக்க விரும்பும் ஆறு

1)சுப்பிரமணிய பாரதி
2)இராமலிங்க அடிகளார்
3)கவிஞர் கண்ண தாசன்
4)நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்
5)ஆல்பிரெட் ஐன்ஸ்டீன்
6)நெப்போலியன் போனபார்ட்.

இவர்களை எல்லாம் அழைக்க முடியாது ,அழைத்தாலும் வரமுடியாத இடத்தில் இருக்கிறார்கள்.வலைபதிவுலாம் இல்லாத காலத்திலேயே நிம்மதியா போய் சேர்ந்துட்டாங்க!
எனவே வலையுலகில் இருக்கும் ஆறு பேரை அழைக்கிறேன்..

1)வெளிகண்ட நாதர்
2)திராவிடதமிழர்கள்

3)பத்ரி
4)மா.சிவக்குமார்
5)யாத்திரிகன்
6)பாடும் நிலா பாலு சுந்தர்

இப்படி ஆறு பேரை அழைப்பதில் தான் பெரும் சிக்கலே யாரை அழைக்க ,விட என முடிவெடுக்க முடியவில்லை.முன்பே சிலரை அழைத்து விட்டார்கள். எனவே என்னால் முடிந்த வரை ஒரு 6 பேரை அழைக்கிறேன் பெரிய மனசு பண்ணி வந்து உதவுங்கள்.

45 comments:

பொன்ஸ்~~Poorna said...

//வீரப்பிரதாபன் கதைகள்- வாண்டுமாமா://
இது நான் படிச்சதில்லை.. மத்ததெல்லாம் படிச்சிருக்கேன்..

காதலுக்கு மரியாதை தலைவர் விஜய் ஓகே..

//பொன்ஸ் உங்களுக்கும் கொய்யா ஜூஸ் மட்டும் தானே பேவரைட்//
கொய்யா ஜூஸ் இனிமே சாப்பிட முடியும்?!!! இது தான் நினைவுக்கு வரும்!!! ம்ஹும்.. கொடுமை!!!

ஏதோ.. நான் சொன்னதுக்கு ஆறு போட்டுட்டீங்க. நன்றி வவ்வால். இனிமே உங்களை ஏதாச்சும் செய்யச் சொல்வேன்?!!

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

நன்றி! உங்களை உங்கள் பதிவில் வந்து அழைக்கலாம் என்று இருந்தேன் வந்துவிட்டிர்கள். இத்தனை சுறு சுறுப்பாக இருப்பதால் உங்களுக்கு "வலைப்பூ தேனீ" என்று ஒரு பட்டமே தரலாம்!

நீங்க வேற பிளாக்கர்கே நான் ஆறு போடுவது பிடிக்கலை போல காலை வாரிடுச்சு தட்டச்சு செய்தது எல்லாம் வீனா போய்டுச்சு அப்புறம் மீண்டும் தட்டச்சு செய்து டிராப்ட் இல் சேமித்து வைத்துக்கொண்டு வலையேற்றுவதற்குள் ரெண்டு நாளாகிடுச்சு.

தாமதத்திற்கு மன்னிக்கவும்.உங்களின் சமீபத்திய வலைபதிவு யானை பலகையை உடைக்கிறது அது கூட எனக்கு ஓபன் ஆகவில்லை.பிளாக்கர் திருவிளையாடல் போலும்.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

வாண்டுமாமா கதைகள் எல்லாம் சின்ன வயசில் படிச்சது ,சிறுவர்களுக்கான மாயஜாலக்கதைகள் , நல்லா இருக்கும்.அதையே ஆங்கிலத்தில் எழுதி இருந்தா ரவ்லிங்க போல பெரும் பணம் கிடைச்சு இருக்கும்.

நீங்க கொய்யா ஜூஸ் மட்டும் தானே தாராளமா குடிக்கலாமே.ஹி...ஹி..ஹி

VSK said...

ஆமையைத் திருப்பிப் போட்டு அடிச்சா செத்துப்போகுமே; இப்படி ஓட்டுமேல அடிச்சால்லாம் சாவாது. அது சரி, அதை என் வாயாலே ஏன் சொல்லணும்"ன்னு ஒருத்தன் சொன்னானாம்!

அது மாதிரி இருக்கு, நீங்க சொல்லியிருக்கிறது~!

இப்பல்லே புரியுது; இந்த ராவடியெல்லாம் எப்படி வந்ததுன்னு.!

நல்லா இருந்தது, வவ்வால்!

Sivabalan said...

உங்கள் "6" சூப்பர்.

// கோலிக்குண்டு //
எனக்கும் மிக பிடித்த விளையாட்டு. ஆனால் பெட் கட்டி விளையாடியதில்லை.

நன்றி

வவ்வால் said...

வாங்க எஸ்.கே அய்யா!

நன்றி!

இந்த ஆமைக்கதை ஒண்ணும் புரியலையே என் சிற்றறிவுக்கு!

//இப்பல்லே புரியுது; இந்த ராவடியெல்லாம் எப்படி வந்ததுன்னு.!//

என்னைப்போல ஒரு பரம சாதுவ பார்த்து ராவடி பண்றதா சொல்றது
அபாண்டம்

வவ்வால் said...

வாங்க சிவபாலன்!

முதல் முறையா வருகை தரிங்கனு நினைக்கிறேன் நன்றி. அடிக்கடி வாங்க! கோலிகுண்டெல்லாம் பால்யகாலத்தில் ஆடிய ஆட்டம். உங்களுக்கும் பிடிக்குமா சந்தோஷம்! குறைந்த பட்சம் சிகரெட் அட்டை கூட பணயம் வைக்க மாட்டிங்களா?

Sivabalan said...

சார்,

சிகரெட் அட்டை, இலந்தை வடை, கம்பர்கெட், தேன் முட்டாய்.. இதெல்லாம் கண்டிப்பாக உண்டு.

வவ்வால் said...

//சிகரெட் அட்டை, இலந்தை வடை, கம்பர்கெட், தேன் முட்டாய்.. இதெல்லாம் கண்டிப்பாக உண்டு. //

அப்போ எல்லாம் மொறையா தான் விளையாண்டு இருக்கிங்க :-))

ஆமாம் அது யாரு சார், நான் வேற பின்னால் திரும்பிபார்த்துகிறேன் வேற யாரையாவது சார்னு சொல்றிங்களானு,சார் எல்லாம் கட் பண்ணுங்க சிவபாலன்!

அருண்மொழி said...

கோலி, காத்தாடி உண்டு - கில்லி இல்லையா?

manasu said...

//இட்லி கூட கார சட்னி இல்லைனா கத்திரிக்கா கொத்ஸ்து இருந்தா ஒரு டஜன் இட்லி சகஜமா உள்ள இறங்கும்//

சூடான அந்த் இட்லி தலலைல கொஞ்சம் நெய் ஊத்தி..... ஆஹா அபாரம்...

திராவிட தமிழர்கள் said...

வந்தோம் அய்யா

வவ்வால் said...

வாங்க அருண்மொழி!
//கில்லி இல்லையா?//


தங்கள் வருகைக்கு நன்றி! கில்லிலாம் உண்டுங்க விட்டுப்போச்சு. எல்லாத்தையும் பட்டியல் போட 6 பத்தாது 60 தான் வேணும்.அடிக்கடி வாங்க அருண்மொழி!

வவ்வால் said...

வாங்க திராவிடத்தமிழர்கள்!

உங்களைபோன்ற புரட்சிகர எண்ணம் கொண்டோர் இந்த வலைப்பதிவிற்கு வருவது குறித்து பெருமை கொள்கிறேன். நன்றி அடிக்கடி வாங்க. அப்படியே ஒரு வித்தியாசமான ஆறு போட்டு அசத்துங்க!

வவ்வால் said...

வாங்க மனசு!
//சூடான அந்த் இட்லி தலலைல கொஞ்சம் நெய் ஊத்தி..... ஆஹா அபாரம்... //

நன்றி! ஆகா கேட்கும் போதே நாக்கு சப்புக்கொட்டுதே , நல்லா ரசிச்சு தான் சாப்பிட்டு இருக்கிங்க. அடிக்கடி வாங்க!

வவ்வால் said...

வாங்க கீதாலதா!

//அழகி படத்தை விட்டுடீங்களே...//

வருகைக்கு நன்றி. ம்ம் அந்த படமும் நல்ல படம், நிறைய நல்ல படங்கள் இருக்கு ஆனால் ஒரு 6 தான் சொல்லனும் அதான் இதுல விதி, அழகியும் பிடித்த படம் தான் ஆனால் எனக்கு உடனே தோன்றுவது நான் குறிப்பிட்ட படங்களே அதன் பட்டியல் போட்டுவிட்டேன்!

வவ்வால் said...

வாங்க அருண்மொழி!
//கில்லி இல்லையா?//


தங்கள் வருகைக்கு நன்றி! கில்லிலாம் உண்டுங்க விட்டுப்போச்சு. எல்லாத்தையும் பட்டியல் போட 6 பத்தாது 60 தான் வேணும்.அடிக்கடி வாங்க அருண்மொழி!

வவ்வால் said...

வாங்க திராவிடத்தமிழர்கள்!

உங்களைபோன்ற புரட்சிகர எண்ணம் கொண்டோர் இந்த வலைப்பதிவிற்கு வருவது குறித்து பெருமை கொள்கிறேன். நன்றி அடிக்கடி வாங்க. அப்படியே ஒரு வித்தியாசமான ஆறு போட்டு அசத்துங்க

வவ்வால் said...

வாங்க மனசு!
//சூடான அந்த் இட்லி தலலைல கொஞ்சம் நெய் ஊத்தி..... ஆஹா அபாரம்... //

நன்றி! ஆகா கேட்கும் போதே நாக்கு சப்புக்கொட்டுதே , நல்லா ரசிச்சு தான் சாப்பிட்டு இருக்கிங்க. அடிக்கடி வாங்க!

மா சிவகுமார் said...

வவ்வால்,

சாண்டில்யனின் சமூகக் கதையின் பேர் நங்கூரம். இரண்டு வாரங்கள் முன்புதான் என் அம்மாவின் புத்தக அலமாரியில் பார்த்ததால் நினைவில் இருக்கிறது.
வாண்டுமாமாவின் மந்திரக் கம்பளம் என்ற கதை ஆறிலிருந்து அறுபது வரை கவர்ந்து விடக் கூடிய ஒன்று. நீங்கள் படித்திருக்கிறீர்களா?

அன்புடன்,

மா சிவகுமார்

வவ்வால் said...

வணக்கம் சிவகுமார்!

வாண்டுமாமா கதைகள் எல்லாம் சின்ன வயசில் தேடி படிச்சது பேர் நியாபகம் இல்லை ஆனால் மந்திர கம்பளம் படித்து இருப்பேன் என நினைக்கிறேன்.

நங்கூரம் ஆ சாண்டியல்னின் சமூக நாவல் பெயர் நான் படித்து இருக்கிறேன் அது ரொம்ப சோகமா இருந்தது அதை படித்தது எனது ஆறாம் வகுப்பில் இருந்த கால கட்டத்தில் என நினைக்கிறேன் ,அப்போது படித்தது தான் பொன்னியின் செல்வன், யவன ராணி போன்ற நாவல்கள்.

தகவலுக்கு நன்றி சிவகுமார். உங்களிடம் நிறைய புத்தக தொகுப்பு இருக்கும் போல் தெரிகிறதே .நங்கூரம் எல்லம் வைத்துள்ளீர்கள். மிக நல்ல பழக்கம் .

வவ்வால் said...

சிவகுமார்,

மறக்காமல் நேரம் கிடைக்கும் போது உங்கள் ஆறு போடுங்கள், வித்தியாசமான சுவையான ஆறு கிடைக்கும் என தெரிகிறது.

பொன்ஸ்~~Poorna said...

//எனது ஆறாம் வகுப்பில் இருந்த கால கட்டத்தில் என நினைக்கிறேன் ,அப்போது படித்தது தான் பொன்னியின் செல்வன், யவன ராணி போன்ற நாவல்கள்.
//
ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வன் படிச்சி பவர் கண்ணாடி போட்டது நான் ஒருத்தி தான்னு நினைச்சிகிட்டு இருந்தேன்!! :)

//உங்களின் சமீபத்திய வலைபதிவு யானை பலகையை உடைக்கிறது அது கூட எனக்கு ஓபன் ஆகவில்லை.//
அது இன்னும் ட்ராப்டில் உள்ளது.. இப்போதைக்கு இல்லை :)

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

//ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வன் படிச்சி பவர் கண்ணாடி போட்டது நான் ஒருத்தி தான்னு நினைச்சிகிட்டு இருந்தேன்!! :)//

நீங்க ரொம்ப பவர்ஃபுல் ஆன நபர்னு இங்கே ஒரு பேச்சு அடிபட்டுது அது உங்க பவர் கண்ணாடிய வச்சு தானா :-))

ஆமாம் ஆறாம் வகுப்பு படிக்க சேர்ந்ததும் நான் அரசு சார் நூலகத்தில் உறுப்பினர் ஆக சேரப் போனேன் சின்ன பயல் என சேர்க்க தயங்கினார்கள் கொஞ்சம் போராடி ,கெஞ்சி தான் சேர்ந்தேன் எனக்கு பெரும்பாலும் அங்கே தான் பழியாக கிடப்பேன் ஒரு கட்டத்தில் அங்கே புதிதாக நூல்கள் வந்தால் தான் இனிமேல் படிக்க முடியும் என்பது போல் ஆகிடிச்சு(ரொம்ப சின்ன நூலகம் அதான்). துவக்கபள்ளிகூட காலத்திலேயே நாவல் படிக்கும் அளவு அறிவுபசி எனக்கு அதிகம் :-))

நரியா said...

வணக்கம் வவ்வால்,
எனக்கு பிடித்த பல விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி.

ம்ம்...நிறைய புத்தகங்கள் படித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கர்ணன் படத்தில் சிவாஜியைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கும். நல்ல நடிப்பு!

சரி பானங்களுக்கு வருவோம் :).

ராயல் சேலஞ்ச் மற்றும் புள்ளட் பீர் ல எது முதல்ல முயற்சி செய்ய? ஒரு யோசனை சொல்லுங்க. எத குடிச்சா ரெண்டு ரெண்டா தெரியும் ?? :))

உங்களுக்கு ஒரு பாராட்டு இந்த தளத்தில் போட்டுள்ளேன். பாருங்க.
http://geethalatha.blogspot.com//

நன்றி!!
நரியா

வவ்வால் said...

நன்றி நரியா!

நான் வாசித்த பல புத்தகங்கள் என் பள்ளிபருவத்தில் தான்.இப்பொழுது வெகுவாக குறைந்து விட்டது. மாதத்திற்கு ஒன்று படித்தாலே அதிகம்!

கர்ணன் படத்தில் உண்மையில் சிவாஜி அந்த சூழ்னிலைக்கைதியான நிலையை நன்றாக காட்டி இருப்பார்.அவருக்கே உரிய அந்த கம்பீரமும் வெளிப்பட்டு இருக்கும்.சரித்திர/புராணபடங்களில் சிவாஜி நன்றாகப் பொருந்துவார்.அவர் அளவுக்கு வேறு யாரும் அப்படி நடிக்க முடியாது! மிகையான நடிப்பு என்பார்கள் ஆனால் அந்த கதாப்பாத்திரங்களில் அது நன்றாக எடுபடும்.

//ராயல் சேலஞ்ச் மற்றும் புள்ளட் பீர் ல எது முதல்ல முயற்சி செய்ய? ஒரு யோசனை சொல்லுங்க. எத குடிச்சா ரெண்டு ரெண்டா தெரியும் ?? :))//

மெய்யாலுமே கேட்கறிங்களா :-))

Anonymous said...

ohh...!!

வவ்வால் said...

பெபி,

ஹ்ம்ம் ...

நரியா said...

அடங்கொப்புறானே மெய்யாலுமே தான் கேட்ட்கிறேன். காபி, டீ ல எதுவுமே ரெண்டு ரெண்டா தெரியலைங்க :))

Thekkikattan|தெகா said...

வவ்வாலு,

ரொம்ப லேட்-ஆ வந்து நீங்க தலைகீழா தொங்கி சொன்னத எல்லாத்தையும் படிச்சிட்டேன்... கிட்டிப்புல்லு(ள்) எல்லாம் விளையாட மாட்டீங்களா... அப்புறம் ஓணான் பிடிக்கிறது... நீங்க பண்ண சேட்டை (உண்மையெ சொன்ன நிஜமாலுக்குமே வாழ்ந்திருக்கிறது) எல்லாம் நானும் பண்ணியிருக்கிறேன் அப்படின்னு தெரியுது.

ஆமா, கலவை நுட்பம் எல்லாம் அசத்திப் புட்டீகளே... இன்னும் ஏதாவது இருந்த patent right வாங்கி உங்க தாலூகாவிலெ பதிஞ்சுருங்க இல்லென்னா, அமெரிக்கா காரன் அது என்னொட கண்டுபிடிப்புன்னு திருடிபுடப் போறான் ;-)))

வவ்வால் said...

ம்ம் நரியா அப்போ ஒரு முடிவோட தான் இருக்கிங்களா , சொல்லுங்க எப்படி என்னனு விலாவாரியா சொல்லிபுடுறேன்.(அப்புறம் வீட்டுல உதை கிடைச்சா என்ன குறை சொல்லக்கூடாது

வவ்வால் said...

வாங்க தெ.கா,
நன்றி! அடிக்கடி இந்த பக்கம் வாங்க.உங்களை எல்லாம் கூப்பிடலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள உங்களை ஆறுக்கு அழைத்து விட்டார்கள்.

இதெல்லாம் ஒரு டிரெய்லர் போல தான் சொல்லாத திருவிளையாடல்கள் தான் அதிகம் :-))

கிட்டிபுள் எல்லாம் ஆடி மண்டை உடைத்த / உடைத்துக்கொண்ட அனுபவம்லாம் இருக்கு . எல்லாத்தையும் சொல்ல முடியலை.நீங்களும் அப்படித்தானா பரவாயில்லை நான் மட்டும் தான் கெட்டப்பயலா இருந்தேனு நினைச்சேன் கம்பெனி இருக்கு.

ஓணான் பிடிச்சு அது வாய்ல பீடி பத்த வச்சு அதுக்கும் தம் அடிக்க கத்துக்கொடுத்து இருக்கேன் :-))
நீங்களும் பலே ஆளா இருப்பிங்க போல!

கலவை தொழில் நுட்பம்ல தினசரி ஒரு புது நுட்பம் கண்டுபுடிக்கிறோம்ல அதனால நம்ம பக்கதுல அமெரிக்கா காரன் கூட வர முடியாது.(ஆமாம் இதுக்கெல்லாம் காப்புரிமை தருவங்களா?)

மா சிவகுமார் said...

வவ்வால்,

ஒரு ஆறு பதிவு போட்டு விட்டேன். ஆறு ஆறாக எழுதாமல் எதையோ படித்து எதையோ எழுதி விட்டேன் :-).

என்னிடம் பெரிய புத்தகக் கலெக் ஷன் எல்லாம் இப்போது இல்லை. நிறைய வாங்கி இரண்டு சந்தர்ப்பங்களில் முற்றிலும் தொலைத்து விட்டேன். (விட்டுப் போகும் இடத்தில் விட்டு வந்து விட்டேன்). படித்தவை நினைவில் இருப்பதுதான் மிச்சம். இப்போதும் புத்தகக் கடைக்குள் நுழைந்து புது புத்தகஙகளின் மணத்தை இழுத்து விட்டுக் கொண்டு கையில் இருக்கும் காசுக்கு வாங்கிக் கொண்டு வந்து விடும் பழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது.

நான் பொன்னியின் செல்வன் படித்தது இரண்டாம் வகுப்பில், மூன்றாம் பாகத்தில் ஆரம்பித்து. கரித்துண்டில் பாதி புரியாமல் படித்துக் கொண்டிருந்தது அதற்கும் முன்னால். ஒரு நாள் மதியம் தூங்க விடாமல் தொந்தரவு செய்யாதே என்று கரித்துண்டைக் கையில் திணித்த அம்மாவின் புண்ணியம். "நான் செத்துக் கிடந்தாலும் இவன் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டுதான் உக்காந்திருப்பான்" என்று அம்மா புலம்பும் அளவுக்குப் புத்தகப் புழுவாகியிருந்தேன் ஒரு காலத்தில்.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

Vanakkam , rombha pin thanghi vanthiruken...mostly enaku pidischathu unghalukkum pidischirukku...may ba padathilum, alcohol drinks ilum verupaadu..

puthagathil Saandilyan and Varatharasan sir patri yeluthineengha ...unmaiyil paarat koodiya visayam...Saandilyan yeluthiya.."Chithranjani", "Jalamoghini", "Nagadevi" and "Palavathilagham" padithiruken..avara varnipathu pol yaarum varnikamuiyathu...ippo latesta thaan padischen, kaanum kaatschiyai vida oru puthagham ivlavu vullathu vunarvughalai thatti yelupumanu aachariyapatten..
Athey pol samuthayathai maiyamaai kondu varthrasanar yeluthiya..."Agal vilakku", " petramanam", "Nenjil or mull", & "Kayamai"

melum lakshmi avarghal, sivashankariyin "surameenghal" mighavum aluthamanavai..
ivargaloda puthanghal yenghu peramudiyum endru kooramudiyuma...enaku yellavatraiyum padikavendum endru aarvam.nana paditha anithum, enaku therintha penmani, 15 varudathuku mun vanghi irukaal...ipoluthum peramudiyuma?

Anonymous said...

Yenna Guru athukulla maranthuteengha pola, keeravaani id...hmm holidays ku scotland poi iruthen pa...pc pakakm thalai kaatalai athaan..reply pannugha boss.

வவ்வால் said...

வணக்கம் சிவக்குமார்,

நன்றி,உங்க ஆறு இப்போ தான் படிச்சிட்டு வரேன். நல்லா இருக்கு.(ரொம்ப தாமதாமா சொல்றேன் :-)) )

//இப்போதும் புத்தகக் கடைக்குள் நுழைந்து புது புத்தகஙகளின் மணத்தை இழுத்து விட்டுக் கொண்டு கையில் இருக்கும் காசுக்கு வாங்கிக் கொண்டு வந்து விடும் பழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது. //

ம்ம் நீங்களும் நம்மை போலத்தானா, நான் இந்த லேன்ட்மார்க்,ஹிக்கின்பாதம்ஸ்ல எல்லாம் போய் சும்மா பொத்தகம் டைட்டில் மட்டும் பார்த்து வருவேன் ,அப்படியே ஓசில ஒரு 10 பக்கம் படிச்சுடுவேன் :-)) (வாங்கிற மாதிரியா விலை வைக்கிறாங்க)

அங்கே பார்த்த புத்தகம் எல்லாம் மலிவா வாங்க திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் ரோட் போய் நடைப்பாதைகடைலே தேடிப்பார்ப்பேன் ,அங்கே புதிய புத்தகமாகவே பைரேட் காப்பி கிடைக்கும் அதன் காகிதம் மெலிசா மட்டமா இருக்கும் ஆனால் விலை பாதி தானே,நாம படிக்க தானே வாங்குறோம் நூலகமா வைக்கப்போறோம்.பழைய ஒரிஜினல் எடிஷன் தரமானதாவும் அங்கே கிடைக்கும்.

தேடிய புத்தகம் இல்லைனா கூட புத்தகத்தின் பெயர், ஆசிரியர்,பதிப்பகம் பெயர்லாம் சொல்லிட்டு வந்தா பொறுப்பா தேடி எடுத்து வைப்பாங்க அப்புரம் அடுத்த நாள் போய் வாங்கிகலாம்.எல்.ஐ.சி எதிர்க்க கூட ஒரு கடை இருக்கு அங்கேயும் நல்ல தொழில்னுட்ப ரீதியான புத்தகம்லாம் கிடைக்கும். உங்களுக்கு இந்த இடம்லாம் தெரிந்து இருக்கும் . எதுக்கும் சொல்லி வைத்தேன்.

//நான் பொன்னியின் செல்வன் படித்தது இரண்டாம் வகுப்பில், மூன்றாம் பாகத்தில் ஆரம்பித்து. கரித்துண்டில் பாதி புரியாமல் படித்துக் கொண்டிருந்தது அதற்கும் முன்னால்.//

ஆகா நீங்க எனக்குலாம் பயங்கரமான முன்னோடியா இருக்கிங்களே.நான் அந்த வயசிலேயே தினத்தந்தி படித்ததை சாதனையா இத்தன நாளா நினைச்சுகிட்டு இருந்தேன் ,அடிக்கடி வேற சொல்வேன் நீங்க எல்லாம் அ , ஆ.. எழுதுக்கூட்டி படிச்ச காலத்தில் நான் தினதந்தியே படிச்சவனாக்கும்னு பந்தா காட்டுவேன் இனிமே அடக்கி வாசிக்கனும் :-)) நீங்க பொன்னியின் செல்வன் படிச்சேன்னு சொல்லி என்னை ஊதிதள்ளிடிங்களே!

கன்னிதீவு கதையை அப்போ விடாம படிப்பேன் ,கொஞ்ச நாள் படிச்சிட்டு இது என்ன முடியாம போகுது எப்போ முடியும்னு கேட்டேன் அப்போ எங்க வீட்டுக்கு வந்திருந்தவங்க ஒருத்தர் சொன்னார் நான் உன் வயசில இருக்கிரப்போல இருந்தே படிக்கிறேன் , இன்னும் முடியலை இந்த கதைனு சொல்லி குண்டு போட்டார், இன்னும் அந்த கதை முடியலை :-))

வவ்வால் said...

வாங்க கீரா,

நானும் இத்தனை நாளா ஊர்ல இல்லை ,ம்ம் ஹாலிடே கொண்டாட்டம்ல இருந்துடிங்களா, நான் இங்கே வெயில்ல அலைஞ்சிட்டு வரேன் ஹ்ம்ம்! உங்களை ரொம்ப நாளா காணோமேனு நினைச்சுகிட்டே இருந்தேன். மறந்துட்டனானு கேட்கறிங்களே நியாயமா இது!

சாண்டில்யனின் புத்தகம் நிறைய படிச்சுடிங்க போல , மு.வ எல்லாம் படிச்சு இருக்கிங்க பெரிய ஆள்தான் நீங்க.ஆனா அடக்கமா ஒன்னும் தெரியாத போல பேசறது!

லஷ்மி,சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன் நாவல் கூட படிச்சு இருக்கேன் ஆனா ஒன்னு கூட மனசில நிக்கலை. பெண் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரே போல எழுதுறாங்க ,அதுவும் ஒரே கதைக்கரு வச்சு :-))

இப்போ சமிபத்தில அகஸ்துமஸ்தா அனுராதா ரமணன் எழுதின நாளெல்லாம் நாடகம்னு ஒரு கதைப் படிச்சேன். இதெல்லாம் ஒரு கதையானு திட்டிகிட்டே முழுசா படிச்சிடேன் :-)) அவங்க க்ரைம் கதை வேற எழுதி இருக்காங்க அதும் அதே புத்தகம்லவே இருந்துச்சு கொடுமையேனு அதையும் படிச்சேன் :-))

Anonymous said...

vartharsanar and sandilayn oda matra puthagham padikanumnu iruken...yengey kidaikumnu ketenla...reply kanam..online il tamil books order pannamudiyuma?ungha email id vera illai...en id ku email panni thaangha pls..messenegr la yellam naan varamaaten athana mail pannasoldren..mess la add panathuley yahoo.com ku anupungha..
take care

G Gowtham said...

கையைக் கொடுங்கய்யா..
போலித்தனம் இல்லாம இருக்குய்யா உங்க பட்டியல்!
அதனால நானும் அந்த உண்மையைச் சொல்லிடுறேன்...
உங்க லிஸ்ட்ல பல விஷயங்கள்ல் நானும் ஒத்துப்போறேன்னாலும்,
குறிப்பா அந்த ஆர்.சி. மேட்டர்லதான் உங்க மேல பாசம் வந்துடுச்சுய்யா!
நீங்களும் நம்ம ஜாதி!

வவ்வால் said...

வாங்க கீரா,

புத்தகங்களை ஆன் லைனில் வாங்க கேட்கரிங்களா , படிக்கவா, சாண்டில்யன் நூல்கள் எல்லாம் இலவசமா எந்த சைட்லயும் இல்லைனு நினைக்கிறேன். வாங்குவதற்கு இந்த சைட் முயற்சி செய்து பாருங்க... " http://www.tamilnool.com/"

வவ்வால் said...

வணக்கம் கெளதம்,

முதல் முறையாக வருகிறீர்கள் நன்றி அடிக்கடி வாங்க!

பிளாக்கர் பிரச்சினையில் உடனே பதில் அளிக்க இயலவில்லை. ஓரளவிற்கு தான் போலிதன்மையில்லாமல் ஆறு போட்டேன். சிலதை மறைத்தே இருக்கிறேன். பல விஷயுங்கள் ஒத்துப்போகிறதா சந்தோழமான தகவல்.

உங்களுக்கும் ஆர்.சி தான் பிடித்தமானதா. பாண்டியில் ஆர்.சி பீர் கிடைக்கும் அதுவும் நம்ம மனம் கவர்ந்த பானம் தான் கிக் கம்மியா இருக்கும் புதுசா பழகுறவங்களுக்கு ஏற்றது.இப்போ பயோ பீர்னு வாயு தொல்லை இல்லாமல் ஒரு சரக்கும் வந்து இருக்கு :-))

Anonymous said...

Yenna sir ,
email pannavey illai...ungha mail id yaavathu thaangha..komment la poi offline tharavachuteengaley lol.

Anonymous said...

Looking for information and found it at this great site... Are surveillance cameras at universities legal diet pill ritalin drug Car gps car cash loan title Online pharmacy online consultation Not for profit web conferencing Lcd panel pc small business health insurance ny Jeep commanchee Guide protonix 40 Pregnancy concerta Order tadalafil ship http://www.aviscarrental0.info Tcp tenuate

Anonymous said...

Il semble que vous soyez un expert dans ce domaine, vos remarques sont tres interessantes, merci.

- Daniel

ஜோதிஜி said...

படித்து முடித்து சிரித்துக் கொண்டே இருக்கேன். இம்பூட்டு வெளிப்படை ஆகாது சாமியோவ்