Thursday, October 19, 2006

இதயம் விடுதலையாகுமோ!

தேன்கூடு அக்டோபர் மாத போட்டிக்கான ஆக்கம்(இப்படிலாம் வேற விளம்பரம் போடனுமா??!!)


மொட்டு மலர்ந்தால்
மறைந்திருக்கும்
மணம் விடுதலையாகும்!
மனம் மலர்ந்தால்
கட்டவிழும்
கவிதை விடுதலையாகும்!
கனவு மலர்ந்தால்
மனக்கவலை விடுதலையாகும்!
ஆனால்
காதல் மலர்ந்தால் மட்டும்
இதயம் சிறைப்படுவதேன்!

6 comments:

Sivabalan said...

//இதயம் சிறைப்படுவதேன்!//


சூப்பர்...

வவ்வால் said...

வணக்கம் சிவபாலன்,

மின்னல் வேகத்தில் பின்னூட்டம் போட்டுவிட்டிங்க , மிக்க நன்றி!

BadNewsIndia said...

கவிதைக்கு தனியா ஒரு பிரிவு வெக்கணும்.

சிவபாலன் சொன்னதை போல - சூப்பர்.

Anonymous said...

mmm nice nice

வவ்வால் said...

வாங்க இந்தியாவின் மோசமான செய்தி( bad news india .. அட என்னா மாதிரி ஒரு புனைப்பெயர் கேட்டாலே புல்லரிக்குது)

உங்க கற்பனை குதிரை தறிக்கெட்டு ஓடும் போல இருக்கே... ஹே ஹே ..ஹெ.

தங்கள் வருகைக்கு நன்றி இருக்க ஒரு பதிவையே கவனிக்க முடியலை தனியா ஒண்னு வேற போடனுமா தாங்காது ராசா...

வவ்வால் said...

வணக்கம் காண்டிபன் , நன்றி!