Tuesday, March 25, 2008

sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு!

  சென்செக்ஸ் ஒருப்பார்வைஎன்ற பதிவில் பங்கு சந்தை குறியீடு பற்றி சொல்லி இருந்தேன்,பின்னர் ஏன் பங்கு சந்தை அடிக்கடி, சரிகிறது, நிமிர்கிறது, ஊசலாடுகிறது என்பதையும் சொல்ல சொல்லி மக்கள் கேட்டாங்க, சொல்வதாக சொல்லி இருந்தேன், நாம் ஒன்றும் இதில் பழம் தின்று கொட்டைப்போட்ட ஆள் அல்ல என்பதால் சொல்வது சரியாக வருமா என்று வாளாவிருந்தேன், தமிழ் படிக்க விருப்பம் இல்லாதவங்க எல்லாம் வீட்டில் "தமிழ் பேசியே" தமிழை வளர்க்கிற காலத்தில பங்கு சந்தை வேடிக்கைப்பார்க்கிற நாம் ஏன் பொருளாதார அறிவு வளர்க்க கூடாதுனு துணிச்சலா அடுத்த பாகம் போட வந்தாச்சு, இப்போவே சொல்லிடுறேன் பங்குசந்தையினை அவதனிப்பதன் மூலம் நான் உணர்ந்த என்னோட சுய அறிதலின் விளைவாக சொல்லும் கருத்து(கூகிள் வழி பல தளங்களைப்பார்த்தூ தான்), பெரிய நிபுணத்துவம் எல்லாம் இருக்காது., ஒரு வழி போக்கன் பாணியில் இருக்கும்!


பங்கு சந்தை சரியும் போதெல்லாம் hedge fund, FII, odi ,p-note , fdi , செய்த விளையாட்டு என்பார்கள் தொ.காவில், இவை எல்லாருக்கும் தெரிஞ்சாலும் அவற்றைப்பற்றி சும்மா சொல்லி வைக்கிறேன்,


hedge fund: கையில அதிகமா காசு இருக்கு அதை குறுகிய காலத்தில் ,ரொம்ப ரிஸ்க் எடுக்காம ஒரு மாற்று வகையில் முதலீடு செய்யனும் என்று நினைப்பவர்கள் வைத்திருக்கும் பணம் இது, இது பெரும்பாலும் வெளிநாட்டுக்காரங்க காசு தான்.எங்கே எல்லாம் காசு போட்டா குட்டிப்போடுமோ அங்கே எல்லாம் காச இறக்கி ஆடுவாங்க.


அமெரிக்காவை சேர்ந்த உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனம் ரெனைசன்ஸ் டெக்னால்ஜிஸ் இந்தியாவில் தற்போது தங்கள் கிளையை நிறுவியுள்ளார்கள் என்றால் இந்திய பங்கு சந்தையின் மதிப்பை உணர்ந்துக்கொள்ளலாம்.


FII: foreigne institutional investors ,


ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், நிதிஆலோசனை குழுமங்கள் , பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இப்படி முதலீடு செய்வது தான் fii எனப்�000; font-weight: bold;">

P-note: participatory note, என்ற ஒரு வகையின் ம�D இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது தான் வழி. ஹெட்ஜ் பண்ட் என்ற பணம் கையில் இருந்தாலும் யாரும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது . அந்த பணத்தை இப்படி fii வழியாகத்தான் அனுப்புவார்கள்.
உ.ம்:
Citigroup and Deutsche Group—the largest FIIs in Indian markets,
Morgan Stanley & Co. International,
Merrill Lynch Capital Markets,
CLSA Asia-Pacific,
Goldman Sachs Investments Mauritius
and JPMorgan


P-note: participatory note, என்ற ஒரு வகையின் மூலம் தான் fii தாங்கள் பெற்ற ஹெட்ஜ் பண்ட் நிதியை இந்திய பங்கு சந்தையில் இறக்குவார்கள். fii நேரடியாகவும் நிதி முதலீடு செய்யும். ஆனால் அதற்கான ரிசவ் பேங்க் நடைமுறைகள், வரி விகிதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனால் இந்த p-note முறையில் அவை எளிமையாகா இருக்கு. இந்த வகையில் பணம் முதலீடு செய்பவர் யார் , எந்த நாடு என்று வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கலாம்.


ODI: offshore derivatives investors . இது ஒரு தொகுப்பாக உள்ளது இதில் தான் p-note வகையும் அடக்கம், இதில் மேலும்,
equity-linked notes,
capped return note,
participating return note,
investment note and similar instruments


ஆகியவையும் இருக்கு.


FDI: foreigne direct investment, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் அரசின் அனுமதியுடன் ஒரு இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது. இந்திய நிறுவனத்தின் பங்கு தாரர் ஆகிவிடுவார்கள்.


பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக இருப்பது p-note வழியாக வரும் ஹெட்ஜ் பண்ட் கள் காரணமாக இருப்பதாக கருதக்காரணம் என்ன? ஏன் இந்த ffi கண்டு பங்கு சந்தைப்பயப்படுகிறது. இதுக்குலாம் யார் காரணம்?


இதுக்கு ஆரம்ப காரணம் நம்ம அரசாங்கம் தான், ஏன்னா 1992 க்கு முன்ன வரைக்கும் இந்திய பங்கு சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்ய முடியாது, அப்போ இருந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் பொருளாதார சீர் திருத்தம் செய்ய புகுந்த போது இப்படி fii, odi, p-note ஆகிய வழிகளை உருவாக்கி வெளியில இருந்து முதலீடு கொண்டு வர செய்தார்கள்.


உண்மைல அப்போ இருந்தவங்களுக்கு ஏன் இந்த p-note க்கு இப்படிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை தரோமே பின்னாடி பிரச்சினை வரும்னு தெரியாதா? அப்படிலாம் சலுகை ஏன் தரனும் ? அப்போது யாராவது நிர்பந்தப்படுத்தி சலுகை பெற்றார்களா? இது மில்லியன் டாலர் கேள்வி, இப்போ அய்யோ அம்மானா எப்படி.


அதுலயும் ப.சி போன்றவர்கள் தொ.கா ல பங்கு சந்தை உயர்ந்தால் வந்து அன்னிய சக்திகள் முதலீட்டு சந்தையில் நுழைந்து விட்டன என்பார், இப்படி ப.சி தொகா ல பேசியதற்காக அவர் மீது ஒரு நிதி ஆலோசகர் sebi vigilence இல் புகாரே கொடுத்துள்ளார், p-note என்பது ரகசியம் , அது யாருக்கும் சொல்லப்பட மாட்டாது என்று உறுதி தருகிறது செபி , அப்புறம் அது நிதி அமைச்சருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, செபி சொல்லி இருந்தால் ,அப்படினா அது தொழிற்தர்மத்துக்கு எதிரானது ஆச்சேனு.சந்தை சரிந்தால் இது வெறும் கரெக்ஷன் தான் என்பார் ! அரசுதூக்கி நிறுத்தும் என்பார்.


அப்புறம் இந்த fii க்கு, p-note க்கு கட்டுப்பாடு போடனும் என்று தொ.கா ல பேசிவைப்பார்,உடனே fii பங்குகளை விற்கும், விளைவாக பங்கு சந்தை சரியும் , ப.சி என்னதான் நினைத்திருக்கார்னு ஒன்னுமே புரியலை!


இதிலும் மேலும் இடியாப்ப சிக்கலை உருவாக்கிறா மாதிரி , இதற்கு முன்னர் fii ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 24 சத பங்கு களுக்கு மேல் வாங்க கூடாதுனு இருந்த கட்டுப்பாட்டையும் தளர்த்தி 49 சத பங்குகள் வாங்கலாம்னு 2004 இல் உத்தரவுப்போட்டாங்க, இதிலும் அதையும் தாண்டி கூட பங்குகளை வாங்கலாம் , அதற்கு ரிசர்வ் பேங்க்கிட்டே தனி அனுமதி வாங்கனும், கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாமாம். அரசாங்கம் செய்றதெல்லாம் செய்துட்டு அப்போ அப்போ இந்த p-note க்கு ஒரு செக் கொண்டு வரனும்னு செபி மூலமா அறிக்கை மட்டும் ஏன் விடுது? சும்மா கண் துடைப்புக்கா?






1992 ல எல்லாம் சென்செக்ஸ் ஒரு 2500- 3000க்குள்ள தான் இருக்கும் பெருசா யாருக்கும் நட்டம் வராது. இந்த fii உள்ள விட்டப்பிறகு தான் காளை ஓட்டம் அதிகம் ஆச்சு, அப்போதைய fii முதலீடு 827 மில்லியன் டாலர்கள் தான், , ஆனால் இப்போது அதன் மொத்த மதிப்பு 66.8 பில்லியன் டாலர்கள், கைமாறும் பங்குகளில் 60 சதம் fii மூலமே. 2007 இல் ஒரே ஆண்டில் வந்த fii முதலீடு மட்டும் 17.2 பில்லியன் டாலர்கள். 2000 ஆண்டுக்கு பிறகு வந்த ஆண்டுகள் பங்கு சந்தையில் fii களின் பொற்காலம்னே சொல்லலாம், அவங்களால தான் பங்கு சந்தை விண்ணைத்தொட்டது , அப்போ அப்போ மண்ணையும் கவ்வியது!


ஒரு காலத்தில் 100க்கும் குறைவான fii நிறுவனங்களுக்கு மட்டுமே செபி அனுமதி கொடுத்திருந்தது, இப்போ 2007 நிலவரப்படி 1219 fii நிறுவனங்கள் இயங்குது. இவர்கள் கொடுத்திருக்கும் p-note களின் எண்ணிக்கை 34 ,மட்டுமே ஆனால் 30.5 சத இந்திய பங்கு சந்தை மதிப்பை இந்த p-note வகையில் முதலீடு செய்தவர்கள் கையில் இருக்கு.


இப்படி முதலீடு செய்தவர்கள் எல்லாம் குறுகியகால நோக்கில் செயல்படுவர்கள் , எப்போது வேண்டுமானாலும் விற்பார்கள் மீண்டும் வாங்குவார்கள், இதனால் அவ்வப்போது பங்கு சரிவு ஏற்படும், ஏன் எனில் இவர்கள் தான் மொத்த எண்ணிக்கையில் பங்குகளை கை மாற்றுபவர்கள், எனவே இவர்கள் செயல் வைத்தே பங்கு சந்தை ஊசலாட்டம் இருக்கும், மற்ற உள்நாட்டு பொது மக்கள் வாங்கும் பங்குகள் சில்லரை வர்த்தகம்(retail investors) வகையில் வரும், அவர்களால் பங்கு சந்தையின் திசையினை நிர்ணயிக்க முடியாது, ஆனால் உண்மையில் அவர்கள் தான் பங்கு சந்தையின் முதுகெலும்பு .


மார்ச் 24 இல் பங்கு சந்தையில்


fii செயல்பாடு,


பங்கு வாங்கியது - 2884.39 கோடி,விற்றது= 2508.26 கோடி,


நிகர வாங்கிய தொகை= 376.13 க்கோடி.


விற்றதை விட வாங்கியது அன்று அதிகம்.


அதே நாளில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் dii , செயல்பாடு,


வாங்கியது = 836.61 கோடி , விற்றது = 1089.88 கோடி,
நிகர விற்றத்தொகை =253.27 கோடி,
வாங்கியதை விட விற்றது அதிகம்.


எனவே மார்ச்-24 , 2008 இல் பங்கு சந்தை சரிவில்லாமல் இருந்திருக்கும், ஆனால் எப்பொதெல்லாம் அதிகம் பங்குகளை fii விற்கிறார்களோ அப்போதெல்லாம் சரிவு வரும்.


இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் தனி ஒரு நிறுவனமாக அதிக அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பது அந்நிய நிறுவனமல்ல, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (lic) 50 பில்லியன் டாலர்களுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.


சில முன்னனி இந்திய பங்கு சந்தை பங்களிப்பாளர்கள்;


lic - 49.5


reliance mutal fund- 19.74


icici mutal - 13.93


uti mutual -13.24


hdfc mutual -11.87


சில முன்னனி fii முதலீட்டாளர்கள்;

citi group- 13.54

deutsche group- 13.16
hsbc global- 6.41
morgan stanly- 5.94
merrill lynch- 5.71


* amount in billion usd


பட்டியலைப்பார்த்தால் இந்திய பக்கம் அதிகம் முதலீடு இருக்காப்போல தோன்றும் அப்படி இருந்தும் , ஏன் fii கள் சந்தையை அசைத்து பார்க்கின்றன.


இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (dii)பரஸ்பர நிதி திரட்டி செயல்படுவர்கள் , ஹெட்ஜ் பண்ட்கள் கொண்டு அல்ல, நீண்டக்கால நோக்கில் முதலீடு செய்வார்கள், அடிக்கடி வாங்கி விற்றலில் ஈடுபடுவதில்லை.


அதே சமயம் fii க்கள் அப்படி அல்ல, ஆக்டிவாக விற்பனையில் இறங்கி செயல்படுவார்கள், அதனால் தான் தினசரி 60 சத பங்குகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் கைமாறுவதில் பங்கு பெறுகிறார்கள். இது தான் பங்கு சந்தையின் ஓட்டத்திற்கு பெரிதும் காரணம்.


அதே போல fii க்கள் எப்போது வேண்டுமானால் மொத்தமாக பங்குகளை ஒரே நாளில் விற்பார்கள்.


மேலும் fii க்கள் bse - 30 எனப்படும் அடிப்படை பங்குகளில்லோ nifty-50 எனப்படும் பங்குகளிலோ உள்ள முதன்மை பங்குகளில் அதாவது லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் அளவு குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக பங்கு சந்தை சரிவதற்கு முன்னர் அவர்கள் மெதுவாக இந்த முக்கிய பங்குகளில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதைக்காணலாம்.அவர்கள் பெரும்பாலும் மிட் கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள்.


மேலும் பங்கு சந்தை வளர்ச்சி என்பது அசுரத்தனமானது , இது ஒரு ஆரோக்கியமான நிலையே இல்லை எனலாம், நமது தேசிய உற்பத்தி வளர்ச்சி gdp 8 சதம் , ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நமது பங்கு சந்தை வளர்ச்சி 800 சதம் அதிகரித்துள்ளது, இது ஒரு வீக்கம் போன்றது தானே!


கடந்த காலங்களில் ஏற்பட்ட பங்கு சரிவுகளின் போது ஏற்பட்ட சென்செக்ஸ் மாற்றங்கள்
Top 5 market falls
Date Close Change % Chg
January 21, 08 17605.35 -1408.00 -7.41
March 3, 08 16677.88 -901.00 -5.12
January 22, 08 16729.94 -875.00 -4.97
February 11, 08 16630.91 -834.00 -4.78
May 18, 06 11391.43 -826.00 -6.76


ஜனவரி மாதம் ஏற்பட்ட சரிவில் மட்டும் 2,78,593 கோடி ரூபாய், சந்தை மதிப்பில் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளார்கள்.


2006 இல் 44.17 சதம் மிட் கேப்பில் fii முதலீடு செய்தார்கள் அதன் விளைவாக bse sensex 38.84 சதம் உயர்ந்து , குறியீட்டு எண் 12,454.42 இல் இருந்து 17,281.10 ஆக உயர்ந்தது. bse-30, nifty-50 இல் லார்ஜ் கேப், மிட் கேப் என எல்லாமே இருக்கும், அதில் இருக்கும் மிட் கேப் பங்குகள் இவை.


ஏற்கனவே சொன்னது போல லார்ஜ் கேப் புளு சிப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யக்காரணம் அவற்றின் விலை எப்போதுமே அதிகமா இருப்பது, எனவே குறைந்த "volume of shares" தான் வாங்க முடியும். மேலும் வளர்ச்சி விகிதம் வேகமாகவும், அதிகமாகவும் இருக்காது. அதே சமயத்தில் மிட் கேப் களில் அதிக "volume of shares" வாங்கலாம், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.


ஆனால் fii விற்க ஆரம்பிக்கும் போது பெரிய புளுசிப் ஷேர்களையும் விற்பார்கள், supply and demand தான் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கிறது , எனவே பெரிய அளவில் திடீர் என பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு , வாங்க கிடைத்தால் demand குறைவது இயல்பு தானே. எனவே ஒட்டு மொத்தமா பங்கு வணிகத்தின் நிலைத்தன்மை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு பயத்தில் சில்லறை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பொதுமக்களும் பங்குகளை விற்கப்பார்ப்பார்கள், எனவே சர்வ நாசம் ஏற்படுகிறது.இதுவே சரிவின் மூல காரணம்.


அதே போன்று fii முதலீடு அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்கு உடனே மேலே போகும், fii எப்படி தங்கள் முதலீட்டினை எப்படி பிரித்து முதலீடு செய்கிறார்கள்(pattern of investment or portfolio) என்பதைப்பார்த்தாலே எந்த பங்கு மேலே போகும் என்று சொல்ல முடியும்.


பங்கு சந்தை தரகர்கள் , ஆலோசகர்களுக்கு முன் கூட்டியே fii முதலீடு பாயப்போகும் திசை தெரிவதால் தான் அவர்கள் பாதுகாப்பாக இயங்குகிறார்கள், இதன் அடிப்படையில் தான் ஷேர் டிப்ஸ் தருவதும்.இணையத்தின் மூலம் பல பங்கு வர்த்தக தளங்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள fii மூலதனத்தின் அளவைப்பார்க்க முடியும்.ஆனால் இவை கடந்த கால நிலவரத்தை காட்டுவது, நாளை, இன்று எதை fii கள் வாங்க போகின்றது என்பதை யூகம் தான் செய்ய வேண்டும்.


அந்நிய முதலீடு என்று இல்லை உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின(DII) செயல்பாடும் தரகர்களுக்கு தெரியும், ஏன் எனில் அவர்கள் தானே யார் , யார் பங்கு வாங்க "quote "கேட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள், அவர்கள் தானே நமக்கு வாங்கி தருபவர்கள். எந்த செக்டாரில் அதிகம் நிறுவன பங்களிப்பு இருக்கோ அது மேலே போகும் இதை சில்லரை பங்கு விற்பனையாளர்களும் பயன்ப்படுத்திக்கொண்டால் லாபம் நிச்சமே, ஆனால் இந்த கணிப்பு எல்லாருக்கும் கை வருமா?


பங்கு சந்தையில் சாதரண பொது ஜனம் அடிப்பட காரணம், அவர்கள் நேரடியாக எதையும் வாங்க முடியாது தரகர்களிடம் சொல்லி நம் சார்பாக அவர்களை வாங்க வைக்க வேண்டும். முன்னர் எல்லாம் நாம் ஒரு பங்கினை வாங்க முயலும் போது அப்போது என்ன விலை இருக்கிறதோ அதை விட கொஞ்சம் உயர்த்தி தான் quote செய்ய வேணும் , அப்படி ஒரு விலைக்குறிப்பிட்டு சொன்னால் 24 மணி நேரங்களுக்கு பின்னரே விற்பனை உறுதீ செய்யப்படும். இந்த டைம் கேப்பில் அங்கே சந்தையில் நாம் கேட்ட பங்கு சரிந்தாலும் , அடுத்த நாள் நாம் முதல் நாள் கேட்ட விலைக்கு வாங்கியது என்று கொடுப்பார்கள்.


உதாரணமாக , முதல் நாள் 100 விலைக்கு போன ஒரு பங்கினை , 110 ரூபாய் என நாம் விலை வைத்து வாங்க சொல்லிவிட்டோம், நாம் சொன்ன பிறகு அந்த பங்கு அந்த நாளின் மாலையில் சரிந்து 90 ரூபாய் என்று ஆனாலும் அதற்கு முன்னரே நமது பங்கு தரகர் அதனை 110 ரூபாய்க்கு வாங்கி நமக்கு தந்து விடுவார். இது நமக்கு அடுத்த நாள் தான் தெரிய வரும். அப்போது நாம் பங்கினை வாங்கிய போதே ஒரு பங்கிற்கு 20 ரூபாய் நட்டத்தில் இருப்போம்.


இப்போது தான் இணையம் வழி வர்த்தகம் நடைப்பெறுகிறதே இந்த பிரச்சினை இருக்காதே எனலாம். இணையத்திலும் நமக்கு 1 மணி நேரம் காலக்கெடு விதிக்கிறார்கள், எனவே ஒரு மணி நேரத்தில் அந்த பங்கு சரிந்தால் அதே போன்ற நட்டம் ஏற்படும். நாம் வாங்கும் பங்கு நல்ல நிறுவனமாக இருந்தால் பின்னர் மேம்பாடு காணும் இல்லை எனில் கீழே தான் போகும்.எனவே இணையம் வந்ததால் பொது ஜனம் பங்கு சந்தையில் பெரிதாக பாதுகாப்பாக இல்லை, அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களே நேரடியாக பார்த்து பங்கு வணிகம் செய்கிறார்கள் என்று.


சரிவு ஏற்படும் போது , வாங்க சொன்னால் பங்கு தரகர்கள் அதான் சாக்கு என்று சரியும் பங்கினையும் வாங்கி தள்ளுவார்கள், ஆனால் சரியும் பங்கினை வைத்திருந்து நாம் விற்க சொன்னால் விற்று தர மாட்டார்கள். மேலும் ஸ்டாப் லாஸ் என்று ஒரு அமைப்பு இருக்கு அதனைக்கொண்டு நட்டம் ஏற்படுவதை தடுக்கலாம் என்பார்கள், அதாவது ஒரு பங்கு இந்த விலைக்கு கீழ் போகும் என தெரிந்தால் என் அனுதிக்கு காத்திராமல் விற்று விடுங்கள் என தரகருக்கு நாம் முன் கூட்டியே அனுமதி தருவது, ஆனால் சரிவின் போது அது வேலை செய்யாது, அதில் ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறார்கள் எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களின் போது ஸ்டாப் லாஸ் அமைப்பின் படி செயல் பட முடியாது!


gvk power infra structure இல் ffi இன் முதலீடு உயர்ந்தபோது 267% லாபம் தந்தது பங்கு வைத்திருந்தவர்களுக்கு, அதே சமயம் அம்புஜா சிமெண்டில் இருந்து fii முதலீட்டு விகிதம் குறைந்ததும் , 160 ரூபாய் என உச்சம் தொட்ட அப்பங்கு மிக குறைவாக 110 ரூபாய் தொட்டது, தற்போது 120 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் fii களின் முதலீட்டால் ஒரு பங்கினை மேலே கொண்டுபோக முடியும் என்பது தெரிய வரும்.


இந்திய நிறுவன பங்களிப்பு பங்கு சந்தையில் அதிகம் இருந்தாலும், அவர்கள் நினைத்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ரகசியம் காத்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மேனேஜர்கள் பில்லியனில் சம்பளம் வாங்குகிறார்களாம், ரெனைசன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற fii நிறுவனத்தலைவரின் ஆண்டு சம்பளம் 1.7 பில்லியன் டாலர்கள் என்று பங்கு வணிக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

30 comments:

வவ்வால் said...

தற்போது கொஞ்சம் மேலும் புதிய தகவல்கள் சேர்த்து போட்டிருக்கிறேன், முதலில் பதிவிட்டப்போது சில இடங்களில் சரியாக சொல்லாமல் விட்டது போல இருந்தது. ஏற்கனவே யாராவது படித்திருந்தால் என்ன இப்போ லேசா மாறி இருக்கேனு குழம்ப வேண்டாம் :-))

இப்படிக்கு
வவ்வால்

நையாண்டி நைனா said...

ஹூக்கும்......
ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா.....
இப்பவே கண்ணை கட்டு தே......

இதெல்லாம் போட்டதினாலே தான் வௌவாள் நீ தலை கீழா தொங்குரே...
இதெல்லாம் நான் படிச்சேன்?????... தூக்க மாட்டிக்கிட்டு நான் தொங்க வேண்டியது தான்.

இருப்பினும் நல்ல முயற்சி...... பாராட்டுக்கள்.
யாரேனும், என்னை விட நல்ல மூளை உள்ளவர்களுக்கு பயன்படும்.
குறிப்பாக... பங்கு சண்டையில் (இது தெரியாமல் வந்த தவறல்ல) காசை தொலைப்பவர்களுக்கு...........

வவ்வால் said...

//பங்கு சண்டையில் (இது தெரியாமல் வந்த தவறல்ல) காசை தொலைப்பவர்களுக்கு...........//

"நையாண்டி" ஓவர் தான் :-))

செல்வம் said...

வவ்வால்...பங்கு சந்தை குறித்து மிக எளிமையாக சொல்லிஉள்ளீர்கள்.பாமரன் குமுதத்தில் சொன்ன குரங்கு கதை தான் ஞாபகம் வருகிறது.மக்களவைத் தேர்தல் வரப்போவதால் (எப்போது என்பது தெரியாது :-) பங்குசந்தை மீண்டும் உயர்வது போல் காட்டப்போகிறார்கள் என்கிறார்கள்.

ம‌த்திய‌ அர‌சு ஊழிய‌ர்க‌ளுக்கு ஊதிய‌ உய‌ர்வு,விவ‌சாயிக‌ள் க‌ட‌ன் ர‌த்து என்ற‌ கிலுகிலுப்பைக‌ளுக்குத் த‌யார் ஆவோம்.

மங்களூர் சிவா said...

/

பங்கு சந்தையில் சாதரண பொது ஜனம் அடிப்பட காரணம், அவர்கள் நேரடியாக எதையும் வாங்க முடியாது தரகர்களிடம் சொல்லி நம் சார்பாக அவர்களை வாங்க வைக்க வேண்டும். முன்னர் எல்லாம் நாம் ஒரு பங்கினை வாங்க முயலும் போது அப்போது என்ன விலை இருக்கிறதோ அதை விட கொஞ்சம் உயர்த்தி தான் quote செய்ய வேணும் , அப்படி ஒரு விலைக்குறிப்பிட்டு சொன்னால் 24 மணி நேரங்களுக்கு பின்னரே விற்பனை உறுதீ செய்யப்படும். இந்த டைம் கேப்பில் அங்கே சந்தையில் நாம் கேட்ட பங்கு சரிந்தாலும் , அடுத்த நாள் நாம் முதல் நாள் கேட்ட விலைக்கு வாங்கியது என்று கொடுப்பார்கள்.

உதாரணமாக , முதல் நாள் 100 விலைக்கு போன ஒரு பங்கினை , 110 ரூபாய் என நாம் விலை வைத்து வாங்க சொல்லிவிட்டோம், நாம் சொன்ன பிறகு அந்த பங்கு அந்த நாளின் மாலையில் சரிந்து 90 ரூபாய் என்று ஆனாலும் அதற்கு முன்னரே நமது பங்கு தரகர் அதனை 110 ரூபாய்க்கு வாங்கி நமக்கு தந்து விடுவார். இது நமக்கு அடுத்த நாள் தான் தெரிய வரும். அப்போது நாம் பங்கினை வாங்கிய போதே ஒரு பங்கிற்கு 20 ரூபாய் நட்டத்தில் இருப்போம்.
/

இதெல்லாம் இப்ப இல்லை. வீட்டில் இருந்த படியே ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம். ரியல் டைம் Quotes தொலைகாட்சிகளிலும், மொபைல்களிலும், இணையத்திலும் கிடைக்கிறது.

FII data's பற்றி உறுதிப்படுத்திக்கொண்டு பின்னூட்டுகிறேன்.

மங்களூர் சிவா said...

/
யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.
/

மிகத்தவறான தகவல். அவர்களும் சந்தை சரிவின்போது loss book செய்கிறார்கள்.

/
பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்
/
:)))))))

வவ்வால் said...

செல்வம்,
நன்றி!

குரங்கு கதை என்னனு தெரியலை, ஆனால் இது ஒரு போல கண் கட்டு வித்தை தான், ஆனால் பங்கு சந்தையில் லாபம் பார்ப்பவர்கள் இதனை ஒரு கணித ஆட்டம் என்பார்கள். சரியா கணித்து ஆடினால் கெலிக்கலாம் என்பார்கள்.

ஆனால் இதில் எல்லாமே மாயம் தான், gdp வளர்ச்சி 8 சதம் ஆனால் பங்கு வர்த்தக வளர்ச்சி 800 சதம் என்பதில் இருந்தே தெரியுமே இந்த உண்மை.
----------------------------

ம.சிவா,
நன்றி!
//இதெல்லாம் இப்ப இல்லை. வீட்டில் இருந்த படியே ஆன்லைன் வர்த்தகம் செய்யலாம். ரியல் டைம் Quotes தொலைகாட்சிகளிலும், மொபைல்களிலும், இணையத்திலும் கிடைக்கிறது.//

என் பதிவிலேயே இணைய வர்த்தகம் பற்றியும் சொல்லி இருக்கிறேனே, பார்க்கவில்லையா, இணையம் மூலம் quote செய்வதை ரியல் டைம் என்று சொல்லிக்கொண்டாலும் அப்படி அல்ல ஒரு மணி நேரம் காலக்கெடு உண்டு அந்த ஒரு மணி நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாதிக்கும் என்று சொல்லி இருப்பேன் பாருங்கள்.

//மிகத்தவறான தகவல். அவர்களும் சந்தை சரிவின்போது loss book செய்கிறார்கள்.//

நான் சொன்னது வேறு fii சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்றால், அவர்களால் சரிவை உண்டாக்க முடியும் என்று பொருள்.

அவர்களும் நட்டம் அடைகி்றார்கள் என்றால் அது லாபத்தில் அடையும் நட்டம். நுழையும் போது 50 க்கு வாங்கிய பங்கினை 100 ரூபாய் விலைக்கு இருக்கும் போது 80 க்கு கூட விற்று சரிவை உண்டாக்கிவிடுவார்கள், அவர்களுக்கு அப்போது லாபத்தில் தான் நட்டம் முதலில் அல்ல.

மேலும் பெரிய fii எடுக்கும் முடிவு சில சமயம் சிறிய அளவிலான fii களுக்கு பாதகமாக போவதும் உண்டு அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் சொன்னது போல நடக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால் அதெல்லாம் ரொம்ப அரிதான சம்பவங்கள்.

அதிக அளவில் p-note வெளியிட்டு பெரிய அளவில் பணத்தினை உள் பாய்ச்சும் fii க்கள் கொஞ்சம் தான் அவர்கள் தான் நிர்ணயிக்கும் சக்தி எனலாம்.

fii நிர்வாகிகள் மிக அதிகம் சம்பளம் பெருவதன் ரகசியம் என்ன ? தெரிந்தால் சொல்லுங்கள்.

//:)))))))//

????

மங்களூர் சிவா said...

/
இணையம் மூலம் quote செய்வதை ரியல் டைம் என்று சொல்லிக்கொண்டாலும் அப்படி அல்ல ஒரு மணி நேரம் காலக்கெடு உண்டு அந்த ஒரு மணி நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாதிக்கும் என்று சொல்லி இருப்பேன் பாருங்கள்.
/

இல்லை வவ்வால் 1 மணி நேர காலதாமதம் எதுவும் இல்லை real time quote ல்.

மங்களூர் சிவா said...

/
அதிக அளவில் p-note வெளியிட்டு பெரிய அளவில் பணத்தினை உள் பாய்ச்சும் fii க்கள் கொஞ்சம் தான் அவர்கள் தான் நிர்ணயிக்கும் சக்தி எனலாம்.
/

ஆமாம்.


/
fii நிர்வாகிகள் மிக அதிகம் சம்பளம் பெருவதன் ரகசியம் என்ன ? தெரிந்தால் சொல்லுங்கள்.
/

இல்லைனா அத விட அதிகமா குடுக்கிற FII க்கு போயிடுவாங்கல்ல அதனாலதான் இன்றுகூட ஒரு செய்தி பிசினஸ் லைனில் இருந்தது பெயர் மறந்துவிட்டது சிடிகுரூப்பிலிருந்து ஆனந்த் ரதியில் இணைந்திருக்கிறார்.

Unknown said...

என்னய்யா வவ்வால்...

எப்போதல இருந்து முதலீட்டு ஆலோசகர் வேல.. சொல்லவே இல்ல...

நல்ல முயற்சி... கொஞ்சம் முதலீடும் பண்ணி விளையாடி பாரு...

இங்க எழுதி இருக்கிறதுக்கு மேலாகவே உன்ன படுத்தும். கம்பெனிகளின் மதிப்பு குறித்து எழுதவில்லை நீர். அடிப்படையே அதுதான். அங்கு கொஞ்சம் கவனம் செலுத்தனும்.

FII மட்டுமல்ல அனைத்து Institutionalized Investorக்குமே ஒரு வித அழுத்தம் இருக்கிறது. அது பங்குகளின் மதிப்பு மற்றும் Liquidity என பல பரிமாணங்களை கொண்டது.

இன்று கொஞ்சம் நட்டங்கலை சரிகட்ட முடிந்தது. அது வரைக்கும் திருப்தி. நாளை யாறரிவார்?? :)

வவ்வால் said...

ம.சிவா,
//இல்லை வவ்வால் 1 மணி நேர காலதாமதம் எதுவும் இல்லை real time quote ல்.//

ஒரு நபர் இணைய பங்கு வர்த்தகத்தில் ஒரு டிமாட் கணக்கு dp இடம் துவங்கி தான் செயல் படுகிறார், அவர் நேரடியாக bse இல் செயல்படுவதில்லை, dp இடம் quote செய்த பிறகு "match" ஆனால் தான் அது எக்ஸ்சேஞ்சுக்கு செயல்படுத்த அனுப்பப்படுகிறது இடையில் சிறிது நேரம் தேவையா இல்லையா?

இடையில் உங்கள் ஆர்டர்களை ரத்து செய்யவும் எப்படி நேரம் தருகிறார்கள். நான் முதலில் டிமாட் துவக்க icici direct இடம் பேசிய போது இப்படித்தான் ஒரு மணி நேரம் கால இடைவெளி இருக்கும் என்று தான் எனக்கு சொன்னார்கள்.

நான் ரொம்ப தோண்டி தோண்டி கேள்விக்கேட்டுக்கொண்டே இருந்தேன், இப்போ நான் வாங்கினதும் என் கணக்கில வந்திடுமா,விற்பனை உடனே நடக்குமா என்று ஏன் எனில் என் நண்பர்கள் சிலர் சொன்னாங்க அவர்கள் பரிவர்த்தனை செய்த போது இப்படி ஒரு "time lag" அங்கே மறைமுகமாக இருக்கு என்று.அன்று அவன் ரொம்ப நொந்து போய் இருப்பான் என்பது மட்டும் நிச்சயம். :-))

நீங்க சொல்றாப்போல அதிகம் சம்பளம் கொடுக்கும் இடத்திற்கு போய்விடுவது வேறு, எல்லா இடத்திலும் நடக்கும், ஆனால் இங்கே நினைத்து பார்க்க இயலாத சம்பளம், காரணம் , பல வித illegal பண முதலீட்டையு்ம் ரகசியமா செய்ய வேண்டி இருப்பதால் என்றே நினைக்கிறேன்.
------------------------

இம்சை,

பொருளாதாரம் லாம் time pass ku பேச மட்டும் தான் ஆலோசனைலாம் இல்லிங்கோ!

//நல்ல முயற்சி... கொஞ்சம் முதலீடும் பண்ணி விளையாடி பாரு...//

commodity அதாவது சரக்குல மட்டுமே முதலீடு செய்வேன் :-))

//இங்க எழுதி இருக்கிறதுக்கு மேலாகவே உன்ன படுத்தும். கம்பெனிகளின் மதிப்பு குறித்து எழுதவில்லை நீர். அடிப்படையே அதுதான். அங்கு கொஞ்சம் கவனம் செலுத்தனும்.
//

சொன்னது சரிதான்,சந்தைல நுழைவதற்கு அதை எல்லாம் பார்க்கணும் இங்கே நான் சொல்ல வந்தது எப்படி மேல கீழனு பங்கு சந்தை ஏறி இறங்குது அதுக்கு காரணம் என்னவாக இருக்கும்னு பார்க்க தான்.

நிறுவன மதிப்பு என்பது ஆரம்பக்கட்டத்தில் தேர்வு செய்ய வசதியா இருந்தாலும், சந்தை மதிப்புக்கு அங்கே அதன் செயல் பாடு , சந்தையில் கிடைக்கும் எண்ணிக்கை, அதன் பங்குக்கான டிமாண்ட் இவை தானே தீர்மானிக்கும்.

இன்னி வரைக்கும் டாடா தான் பெரிய ஆளா இருந்தது, ஆனா இன்னும் வெளில வராத செயல்படாத நிறுவனமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் 100 பில்லியனுக்கு புக் ஆகி டாடாவை விட மேல போய்டுசே, உண்மை மதிப்பின் அடிப்படையில் டாடா தானே அதிக மதிப்பு as on date வச்சு இருக்கு!

சில விஷயங்களை ரொம்ப அடிப்படையாகவும் பார்க்க முடியாது. கொஞ்சம் மாற்றுப்பார்வையும் தேவை தானே.

நட்டங்களை சரி செய்தால் அடுத்து லாபம் தான் :-))நாளைக்கும் நல்லாவே இருக்கும்!

மங்களூர் சிவா said...

/
ஒரு நபர் இணைய பங்கு வர்த்தகத்தில் ஒரு டிமாட் கணக்கு dp இடம் துவங்கி தான் செயல் படுகிறார், அவர் நேரடியாக bse இல் செயல்படுவதில்லை, dp இடம் quote செய்த பிறகு "match" ஆனால் தான் அது எக்ஸ்சேஞ்சுக்கு செயல்படுத்த அனுப்பப்படுகிறது இடையில் சிறிது நேரம் தேவையா இல்லையா?
/

Depositary is a intermediatory thats all.

ஆனால் ஆர்டர்களை route செய்ய VSAT மூலமான அதிவேக இணைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் செலுத்தும் ஆர்டர் வாங்குவதோ / விற்பதோ very very fraction ல் BSE/NSE க்கு செல்லும்.

Quote matching நடைபெறுவது BSE / NSE ல். ப்ரோக்கரின் சர்வர்களை பொறுத்து சில சமயங்களில் ஸ்லோவாக இருக்கும் உதாரணமாக சந்தை தொடர்ந்து விழும் சமயங்களில் அனைவரும் விற்க முனையும் போது.

மேட்ச் ஆகுவது வரை மட்டுமே உங்களால் ஆர்டரை மாற்றவோ கேன்சல் செய்யவோ முடியும். உதாரணத்துக்கு 80ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கும் ஷேரை 60ரூக்கு வாங்குவதற்கு ஆர்டர் கோட் செய்திருந்தால் 60 வரும் வரை பெண்டிங் ஸ்டேடஸ்ஸில் இருக்கும் 60 வரவில்லை எனில் மார்க்கெட் முடியும்போது ஆர்டர் கேன்சலாகிவிடும்.

இம்சை said...

வவ்வால் அண்ணா மிக்க நன்றி, புரியர மாதிரி இருக்கு ஆனாலும் இன்னும் சரியா புரியல, சரி விடுங்க நமக்கு புரியாதத சொல்லி தரத்தான் உங்கள மாதிரி நிறையா பேரு இருக்கீங்களே...நானும் ஒரு 5 வருசமா பங்கு வாங்கி வித்திருக்கேன் ஆனா எல்லாமே நண்பர்களோட பரிந்துரையில் மட்டுமே....

இம்சை said...

ஆனா ஒன்னு மட்டும் புரியலங்க எப்ப எல்லாம் நான் பங்கு வாங்கரேனோ அப்ப எல்லாம் பங்கு சந்தை மொத்தமா 20 - 25 பெர்சன்ட் கவுந்திருது அதுல பயந்து போய் திரும்ப மேல வந்த உடனே லாபம் பாக்காம வித்துடரேன் ஆனா பாருங்க நான் வித்தப்புரம் அதே பங்கு 100% வரைக்கும் 2 அல்லது 3 மாதத்தில அதிகமாகுது ... இதுக்கு எதாவது காரணம் இருக்கா.

இது ஒரு முறை நடந்து இருந்தா ஒக்கே ஆனா இது வரைக்கும் ஒரு 10 தடவை நடந்து இருக்கே.........

வவ்வால் said...

இம்சை,

நான் எல்லாம் என்னத்த சொல்லிடப்போறேன் , எனக்கு சும்மா குன்சா தான் தெரியும்.அதை வச்சுக்கிடே ஜல்லி அடிப்பேன் :-))

//ஆனா பாருங்க நான் வித்தப்புரம் அதே பங்கு 100% வரைக்கும் 2 அல்லது 3 மாதத்தில அதிகமாகுது ... இதுக்கு எதாவது காரணம் இருக்கா.

இது ஒரு முறை நடந்து இருந்தா ஒக்கே ஆனா இது வரைக்கும் ஒரு 10 தடவை நடந்து இருக்கே.........//

இது கண்டிப்பா தற்செயல் தான் அல்லது நீங்க தவறாக கணித்து இருக்கலாம்.

நான் அவசரமாக செல்லும் போதெல்லாம் குறிப்பிட்ட பேருந்து வரவே வராது, வந்தாலும் ரொம்பி வழிந்து கொண்டு வரும், ஆனால் அதே நேரத்தில் நான் அந்த இடத்திற்கு செல்லத்தேவை இல்லாத போது அதே எண் உள்ளப்பேருந்து காலியா காத்தாடிக்கிட்டே வரும். என்னடா நாம கிளம்பினா மட்டும் இந்த பேருந்துலாம் காலை வாரிக்கிட்டே இருக்கேனு நினைத்துக்கொள்வேன்.

மழைல ரெண்டு நாள் நனைந்த பிறகு புத்தி வந்து குடையுடன் போறேன் இப்போ ரெண்டு நாளா மழையே இல்லை இதை எல்லாம் என்ன சொல்றது :-))

சாதாரணமாகவே ஒரு பங்கினை அதன் விலை ஏற்றம் வைத்து தேர்வு செய்வதை விட அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பார்க்கலாம்.அதாவது அந்த நிறுவனத்தின் உண்மை நோக்கம் நல்லதாக இருக்கணும், சும்மா பங்குகளை விட்டு அதில இருந்து காசு சுருட்ட வரவங்களா இருந்தா கோவிந்தா தான்.

ஒரு சரிவுக்கு பிறகு அந்த பங்கு மீண்டும் நல்ல நிலைக்கு வருதா இல்லை அப்படியே கீழ போனது கிணத்துல போட்டக்கல்லாட்டம் கிடக்குதானு பார்த்தாலே தெரியும். அந்த நிறுவன பங்குகள் இனிமே எந்த காலத்திலும் தேறாதுனு.

இப்போ வங்கி பங்குகள் கீழ போனதில் sbi சரிவு கண்டது, ஆனால் அந்த பங்குகள் எப்படியும் மீண்டும் நல்ல நிலைக்கு வரும், காரணம் அதன் நிதி நிலை கட்டமைப்பு அப்படி, கீழ போனதை சில பல வேலைகள் செய்து , மீண்டும் கொண்டு வந்திடுவாங்க.

அதே போல ஏர் டெல் கூட சரிவை கண்டது , ஆனால் அவர்கள் எல்லாம் அதை அப்படியே விட்டு விட மாட்டார்கள் , மீண்டும் சரி செய்து விடுவார்கள்.

கீழ விழுந்த எழுந்து வரும் தெம்பு இருக்க பங்கா என்பதை பார்த்து உங்களுக்கு சரினு பட்டா சரியுதேனு விற்காமல் இருக்கலாம்.

இது கண்டிப்பான வெற்றிக்கான "கட்டை விரல் விதி" என்று சொல்ல மாட்டேன் ஒரு ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு வழி எனலாம்.

இப்போ டாடா போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் அப்போ அப்போ ஜாகுவார் வாங்கப்போரோம், லாண்ரோவர் வாங்கபோறோம்னு செய்தி தராங்க எல்லாம் " score board tickling" என்று சொல்வார்களே அது போன்ற உத்தி தான். அவர்கள் பங்குகளை சந்தையில் float la வைத்திருக்க.வெறுமனே செய்தி படிச்சதுமே கொஞ்சம் டிமாண் ஏறும்.

பங்கு சந்தை என்பதே "virtual money " ல நடக்கிற ஒரு வியாபார உலகம் எனலாம்.

g said...

இம்சையோட ராசி அப்படி

RATHNESH said...

வவ்வால்,

அருமையான தகவல்கள். தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள். இதெல்லாம் புரியாதவர்கள் பங்கு சந்தையில் நிறைய சம்பாதிப்பார்கள்.

இம்சை,

//ஆனா ஒன்னு மட்டும் புரியலங்க எப்ப எல்லாம் நான் பங்கு வாங்கரேனோ அப்ப எல்லாம் பங்கு சந்தை மொத்தமா 20 - 25 பெர்சன்ட் கவுந்திருது அதுல பயந்து போய் திரும்ப மேல வந்த உடனே லாபம் பாக்காம வித்துடரேன் ஆனா பாருங்க நான் வித்தப்புரம் அதே பங்கு 100% வரைக்கும் 2 அல்லது 3 மாதத்தில அதிகமாகுது ... இதுக்கு எதாவது காரணம் இருக்கா.

இது ஒரு முறை நடந்து இருந்தா ஒக்கே ஆனா இது வரைக்கும் ஒரு 10 தடவை நடந்து இருக்கே.........//

இந்தமாதிரி சொல்பவர்கள் பங்கு சந்தையில் பணம் போட்டிருக்கும் பத்தில் ஒன்பது பேர்.

என்னுடைய நண்பர் ஒருவர், டாலரின் மதிப்பு குறைந்து போனதற்கே அவர் INFOSYS பங்குகளை (அதிகம் அல்ல, வெறும் ஐந்து) வாங்கியது தான் என்று ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வவ்வால் said...

பிளேடு பக்கிரி,

நீங்க தான் தொ.கா வில் ராசிக்கல்/ராசிபலன் நிகழ்ச்சி நடத்துறிங்களா , ராசி பத்திலாம் சொல்றிங்க :-))
---------------------
ரத்னேஷ்,
//இதெல்லாம் புரியாதவர்கள் பங்கு சந்தையில் நிறைய சம்பாதிப்பார்கள்.
//

அப்படி ஒரு முறை நிறைய சம்பாதித்து ஒன்பது முறை இழப்பார்கள். கொஞ்சமாவது அடிப்படை புரிந்தால் மட்டுமே நிலைத்து நின்று பங்கு சந்தையில் ஆட முடியும். தெரிந்தவர்களுக்கே தண்ணிக்காட்டும் சூதாட்டம் அது!

//இந்தமாதிரி சொல்பவர்கள் பங்கு சந்தையில் பணம் போட்டிருக்கும் பத்தில் ஒன்பது பேர்.
//

உண்மைத்தான் நான் வித்த பிறகு ஏறுதுனு புலம்புவாங்க, இல்லைனா நான் வாங்கலாம்னு இருந்து கடைசில வாங்கமா விட்டேன், இப்போ அந்த ஷேர் எங்கேயோ போய்டுச்சு, எல்லாம் இவனால தான்னு அவர்களது நண்பர்களையோ குற்றம் சொல்பவர்களும் இருக்காங்க.
(நான் இப்படி சில பேருக்கு ஆலோசனைக்கொடுத்து வாங்கிக்கட்டிகொண்டதுண்டு, லாபம் வந்தா எதுவுமே சொல்ல மாட்டாங்க, ஆனா நட்டம் வந்தா பெரிசா சொன்னியேனு பிச்சுப்புடுவாங்க)

//என்னுடைய நண்பர் ஒருவர், டாலரின் மதிப்பு குறைந்து போனதற்கே அவர் INFOSYS பங்குகளை (அதிகம் அல்ல, வெறும் ஐந்து) வாங்கியது தான் என்று ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.//

அவர் பெரிய தீர்க்க தரிசியா இருப்பார் போல இருக்கே :-))

Anonymous said...

தோழர்
ரமேஷ் இதை பாருங்கள் .


//
NATPUTAN RAMESH said...
"புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.

March 22, 2008 2:35 AM //



இதற்கு தோழர் அசுரன்
இப்படி பதில்.



//
அசுரன் said...

அய்யா நட்புடன் ரமேசு,
தநா மாலேகா வுக்கும் மக இகவுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு உங்களது அரசியல் அறிவு இருப்பது நல்லதே ஏனேனில் இருக்கின்ற இடத்துக்கு இதுவே அதிகம். நிற்க.

செப்டம் 2006-ல் கோயில் நுழைவு போராட்டம் என்று நடத்திவிட்டு அதையே ஏதோ இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்று திரித்து வால் போஸ்டர் ஒட்டும் வெட்கமற்ற CPMகாரர்களின் யோக்கியதை பற்றி முதலில் பேசுங்கள்.

ஆறூமுகச்சாமி மகஇகவிடமும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திடமும்தான் இணைந்து போராடினார். நந்திகிராம் கொலைகாரர்களான பாசிஸ்டு CPM மோடு போராடவில்லை. இது சத்தியமாக மக இக வினுடைய, மனித உரிமை பாதுகாப்பு மையத்தினுடைய குற்றமல்ல. ஆறூமுகச்சாமியின் குற்றமுமல்ல. இதில் யாராவது குற்றம் செய்திருப்பார்கள் எனில் அது CPMதான்.

மாறாக, இந்த பிரச்சினையை பல்வேறு தளங்களில் எடுத்துச் சென்று நான்கு வருடங்கள் தொடர்ந்து போராடியவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். நீதிமன்றத்தில் சட்ட பூர்வமாக இதனை எதிர்த்தும், கையெழுத்து இயக்கம், தொடர் பொது கூட்டங்கள், கடைசியில் தீர்மானகரமான போராட்டம், அதற்கான விரிவான பிரச்சாரம், பல்வேறு அமைப்புகளை ஒருங்கே இணைத்து கூட்டமைப்புகள நடத்தியது என்று போராடி இந்த நிலையில் கொண்டு வந்தவர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும், மக இகவினரும் தான். இந்த போராட்டங்கள் எதிலும் அமைப்பு ரீதியாக கலந்து கொள்ளாத CPM இப்பொழுது குற்றம் சொல்வது உண்மையில் நகைப்பையே வரவழைக்கிறது.


இதில் என்ன புத்திய கண்டுவிட்டாய் அல்பையே? உன்னோட புத்தி எனன்வென்பதற்க்கு சாட்சியாக உனது தோழன் சந்திப்பு என்ற கோழை இங்கே தமிழ்மணத்தில் இருக்கீறார் அவரிடம் சென்று புத்திய பற்றி பேசு. உன்ன மாதிரி CPM அல்லக்கைகளால் சித்தாந்த ரீதியாக எதுவும் பேச முடியாது என்பதால்தான் இப்படி பொச்செரிப்பு புல்ம்பல்களை ஆங்காங்கே விட்டுச் செல்கிறீர்கள். தயவு செய்து கம்யூனிஸ்டு என்ற பெயரில் இந்த அல்பத்தனங்களைச் செய்யாதீர்கள். ஏனேனில் நேர்மை என்பதற்கும் உங்களுக்கும் சுத்தமாக அதாவது இயங்கியல் ரீதியான தொடர்பு கூட இல்லை என்ற அள்வில் வேறுபட்டு உள்ளது.

அசுரன்

March 25, 2008 7:09 AM \\


இதற்கு தோழர் ரமேஷ்
பதிலளிப்பார் என்று கருதுகிறேன்.



தோழர் ரமேஷ்
natputanramesh.blogspot.com

தோழர் அசுரன்
poar-parai.blogspot.com



தோழமையுடன்

பொதுவுடமை தோழர்களுக்காக என்றும் துணை நிற்பவன்.

Anonymous said...

ஐதிங்க் சாமியோவ்,

பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் demand / supply gap. உதாரணமாக சமையல் எண்ணை விலை உயர காரணம் உள்நாட்டு உற்பத்தி குறையலாம்; இறக்குமதி அளவும் குறையலாம். அப்பொழுது வாங்குபவர்கள் கூடுதல் விலை தர வேண்டும். உற்பத்தி விலையோ அல்லது இறக்குமதி விலையோ கூடும் போது இங்கும் விலையை கூட்ட வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் பங்கு சந்தையும் இயங்குகிறது. பொது ஜனம் தான் ரொம்ப குழம்பி போய் உள்ளனர்.

இன்னும் அறிவு பூர்வமான விளக்கங்களுக்கு என் வலைப்பதிவை திறக்கவும்.

வவ்வால் said...

எருமை அய்யா,

demand & supply பத்தியும் சொல்லியுள்ளேன், இப்போ கடலை எண்ணை ஒரு விலை வரைக்கும் ஏறினாலும் வாங்குவாங்க ஆனால் ஒரு அளவுக்கு மேல விலை ஏறிட்டால் அதுக்கு மாற்றாக ஒரு எண்ணையைத்தான் வாங்குவாங்க.அதே கடலை எண்ணை லிட்டர் 1000 ருபாய் என்றாலும் வாங்கி சமைக்க மாட்டார்கள்.

மேலும் ஒரு பங்கின் முகமதிப்புக்கு தான் டிவிடெண்ட் தருவான், சந்தை மதிப்புக்கு அல்ல, சந்தை மதிப்புக்கு வாங்கி, வாங்கி விற்றுக்கொண்டே இருக்கணும், ஆனால் ஆரம்பத்தில் வாங்கி நீண்ட கால முதலீடாக வைத்திருப்பவர்கள் நியாயமான லாபம் பெரலாம். சரி ஆரம்பத்தில் 100 ரூபாய் பங்கினை(face value 10 rs) மேலும் மேலும் விலை ஏற ஏற வாங்கி விற்கிறார்கள் , சந்தை சரியும் போது அதன் பாதிப்பு யாருக்கு, ஆரம்பத்தில் வாங்கி ஒரு குறிப்பிட்ட லாபத்தில் விற்றவான நட்டம் அடைவான், கடைசியில் வாங்கியவன் தானே!

சந்தையில் உண்மையான பொருள் என்பதே இல்லை, அப்படி இருந்தால் அது முதன்மை சந்தையில் (ipo) இல் மட்டுமே , அடுத்து வாங்குவது , விற்பது எல்லாம் இரண்டாம் நிலை சந்தை என்பார்கள், இதெல்லாம் தெரிந்தவர் தானே நீங்கள்!

ஒரு கம்பெனியை சட்டப்பூர்வமாக கலைக்கும் போது என்ன நடக்கும் என்பது தெரியுமா? உங்களுக்கு தெரிந்தால் பங்கு சந்தையின் சூதாட்டமும் புரியும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Ragztar said...
This comment has been removed by the author.
ரசாக் said...

கொஞ்சம் படிச்சுட்டு, கொஞ்சமே அனுபவப்பட்டு எழுதியிருக்கீங்க. பரவாயில்லை, நீங்களும் கத்துக்குறீங்க, நாலு பேருக்கு உங்களுக்கு தெரிஞ்சதை சொல்றீங்க.

பின்னூட்டங்களில் என்ன இப்படி குப்பை... அதை தவிர்ப்பது பற்றி தெரிந்து கொண்டு, ஒரு பதிவும் எழுதலாம் நண்பரே.

வவ்வால் said...

ரசாக்,

வாங்க, வணக்கம்,நன்றி!

எப்போ போட்ட பின்னூடம் இது, இது பழையப்பதிவு என்பதால் கவனிக்கவே இல்லை.மேலும் சில காலம் ,பதிவுக்கு வரவே இல்லை. அதான் கவனிக்கவில்லை. மேலும் எல்லாருக்கும் கட்டற்ற சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று மட்டுறுத்தல் வைக்கவில்லை,அதை சிலர் தவறாகப்பயன்ப்படுத்தி குப்பை பின்னூட்டங்கள் போட்டு விடுகிறார்கள்.மற்றப்படி தவிர்க்க தெரியாமல்ல் இல்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஏன் அனைவரையும் தொல்லைக்குள்ளாக வேண்டும்.

ஆமாம் கொஞ்சம் ,படிச்சு , கொஞ்சம் அனுபம் அவ்வளவு தான் , ஏதோ பொழுது போக்கிற்கு எழுதி வைக்கிறேன். :-))

Unknown said...

அருமையான பதிவுகள்!!!!!

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips
For earn money in free time visit Mcx Tips, Share Tips,
To earn daily 5000-10000 rupees by our Free Mcx Tips , Free Stock Tips and earn money by investing stock market