Tuesday, January 29, 2013

கருத்து சுதந்திரமும் ,அறமும்.


(ஹி...ஹி இவ்வளோ கருத்து சுதந்திரம் கொடுக்கணும்னு சொல்றாங்களோ?)

ஒரு திரைப்படம் என்பது கலையாக்கமாகவோ அல்லது வணிக படைப்பாகவோ இருக்கலாம், ஆனால் அது பொது மக்களின் பார்வைக்கு உரியதா , பொது ஊடக வெளியில் அனைவரும் பார்க்கும் தகுதி ஒரு படைப்புக்கு இருக்கிறதா என தகுதி நிர்ணயம் செய்ய என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு ஒன்று உள்ளது ,அதன் பெயர் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்.

ஒரு திரைப்படம் பொதுமக்கள் பார்வைக்கு தகுதியானது என சான்றளிக்கப்பட்ட பின்னர் ,அதனை தடை செய்யவோ அல்லது மற்றவர்களின் கருத்துக்கேட்போ அவசியமில்லை. இது தொடருமானால் வருங்காலத்தில் எல்லாப்படத்துக்கும் ஏதேனும் ஒரு லெட்டர் பேடு இயக்கம் ,எதிர்ப்பு காட்டிக்கொண்டேயிருக்கும், அனைவருக்கும் படத்தினை போட்டுக்காட்டி அனுமதி வாங்கிக்கொண்டிருக்க முடியுமா?

அப்படியே ஆட்சேபம் இருப்பின் நீதி மன்றம் மூலமாக மட்டுமே முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் லெட்டர் பேடு வைத்திருப்பவர்கள் எல்லாம் நாங்க ஒரு இயக்கம் ,எங்கள் பின்னால் ஒரு கூட்டம் இருக்கு ,எனவே எங்களுக்கு திரையிட்டு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கிளம்புவது , மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாகுவதாகும்.

லோகநாயகரின் விஷ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய இயங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து , படம் வெளியிட தடை கோரியதும்,அவர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டியது தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது , இப்பொழுது பல லெட்டர் பேடு இயக்கங்கள் ,இதே பாணியில் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

ஆனால் இந்நிலையில் இயக்குனர் அமீர் இத்தனை நாளாக ஏதோ அம்னீசியாவில் இருந்தது போல திடீர் என துயில் களைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் வெறும் இயக்குனராக இருந்திருந்தால் அவர் எப்போ அறிக்கை விட்டால் என்ன என சொல்லலாம், ஆனால் அவர் தான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர், மேலும் ஃபெப்சி அமைப்பின் தலைவர், இவ்விரண்டு பொறுப்புகளும் தமிழ் திரைப்படத்துறையின் மிக முக்கியமான பதவிகளாகும்.

இப்படியாப்பட்ட பொறுப்புகளை வகிக்கும் இயக்குனர் அமீர், 25 ஆம் தேதி தடை என கேள்விப்பட்டதும் தான் இப்பிரச்சினை குறித்தே அறிந்தது போல , இப்படம் குறித்து மொன்னையாக ஒரு அறிக்கை விட்டுள்ளார் அதில் , சட்டம் ஒழுங்கு கெடலாம் என தமிழக அரசு தடை விதித்துள்ளது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை தாக்குகிறதா என தீர்மானிக்க வழக்கு நிலுவையில் உள்ளது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை எனவே பார்க்காமல் கருத்து சொன்னால் வேறுவிதமாக பிரச்சினைகள் உருவாகலாம் என்று சொல்லியிருக்கிறார்.

என்ன கொடுமை சார் இது ? அவரே முழுமையாக தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றளிக்கப்பட்ட படம் எனவும் சொல்லியுள்ளார்,அப்போ சென்சார் போர்டு சான்று எல்லாம் படத்தின் தகுதியை நிர்ணயிக்க போதுமானது என இயக்குநர் சங்க செயலாளராக இருப்பவருக்கு தெரியாதா? ஒரு இயக்குநராக தனிப்பட்ட முறையில்  எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லியிருக்கலாம்,ஆனால் ஒரு திரைப்பட அமைப்பின் பொறுப்பில் உள்ளவராக , அதன் அங்கத்தினராக உள்ள லோகநாயகரின் திரைப்படத்திற்கு  சென்சார் சான்றுக்கு பின்னும் ஏற்படுத்தப்பட்ட தடைகள்  செயற்கையானது என தெரிய வேண்டாமா?

சட்டப்படி ஒரு படைப்பு பொது மக்கள் பார்வைக்கு தகுதியானது என தீர்மானிக்கப்பட்டாயிற்று எனவே அதனை மட்டுமே கொண்டு ஆதரிக்க இயக்குனர் சங்க செயலாளருக்கு தார்மீக உரிமை உள்ளது, எனவே அவர் இத்தடையை கண்டித்து தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும், மேலும் லோகநாயகருக்கு இயக்குனர் சங்கம் அனைத்து வகையிலும் தார்மீக ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் இயக்குனர் அமீரோ பட்டதும் படாதுமாக , விளக்கெண்ணையில் ஊறிய வெண்டைக்காய் போல வழ வழ கொழ கொழ என அறிக்கை வெளியிட்டு தனது இருத்தலை மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளார்.

இஸ்லாமிய இயக்கங்களை அடியொற்றி இப்பொழுது ஒரு லெட்டர் பேடு இந்துத்வா இயக்கமும் இயக்குனர் அமீரின் ஆதிபகவன் திரைப்படத்துக்கு எதிராக கிளம்பியுள்ளது , இப்பொழுது அமீர் இதனை தனியாக ,தனது சொந்தப்பிரச்சினையாக எதிர்க்கொள்வார இல்லை  திரையுலகின் ஆதரவை நாடுவாரா?

இஸ்லாமிய இயக்கங்களின் புகாரின் பேரில் விஷ்வரூபத்திற்கு தடை என ஒரு முன்னுதாரணம் உருவாகிவிட்டதால் , அதனடிப்படையில் அரசு அமீரின் படத்திற்கும் தடை விதித்தால் அமீர் நீதிமன்றத்தினை நாடி , தன்ப்பிரச்சினையை தீர்த்துக்கொள்வார அல்லது அறச்சீற்றம் காட்டுவாரா?

தடை என்னும் சூழல் வந்தால் இது மதச்சார்பற்ற நாடா, கருத்து சுதந்திரம் இல்லையா? சென்சார் போர்டு சான்று எதற்கு என கிடைக்கும் மேடையில் எல்லாம் மைக் புடிச்சு சாமியாடிற மாட்டாரு :-))

இஸ்லாமிய அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை,இந்துத்வா அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஒரு தடை என கணக்கை நேர் செய்யும் நோக்கில் அரசு செயல்படாலாம் ஆனால் இதன் பின்னால் ஒரு நுண்ணரசியலும் உள்ளது ,அது என்னவெனில் அப்படத்தினை தயாரித்து இருப்பது ஒரு கழக பிரபலம், எனவே ஆதிபகவான் திரைப்படம் வெளியாவதில் கண்டிப்பாக பிரச்சினை வெடிக்கும், அப்பொழுது திரையுலகினர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள், இயக்குனர் அமீர் எப்படி பொங்குகிறார் எனப்பார்ப்போம் :-))

கொசுறு:


படத்தின் விளம்பரத்தில் இது " ஒரு மாஃபியுசோ ஆக்‌ஷன்காதல் கதை" என "tag line" போட்டுள்ளார், ஆகா இப்பவெல்லாம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் உலகத்தரத்தில் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்களே என புல்லரிக்குது.

ஹி...ஹி நாம ஏற்கனவே மாஃபியுசோ வரலாற்றை எல்லாம் ஆய்வு செய்து பதிவிட்டிருக்கிறோம், இன்னும் சில பாகங்கள் எழுதும் அளவுக்கு சரக்கு இருக்கிறது விரைவில் தொடர்வோம். எனவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் கூடுகிறது,ஆனால் எனக்கென்னமோ ஆதிபகவன் நவீன தேவர் மகனாக "காட்ஃபாதர்" கட்டமைப்பில் இருக்குமோனு உள்ளுக்குள் ஒரு பக்‌ஷி கூவுது!

மாஃபியுசோ டான்கள் பற்றிய பதிவுகள்:

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- A guide to understand gangster films.

#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: The DON- 2:A guide to understand gangster films

-----------------------
பின் குறிப்பு:

படம் மற்றும் தகவல் உதவி, கூகிள் மற்றும் தினமலர் ,இணைய தளங்கள்,நன்றி!
--------------------------

67 comments:

சார்வாகன் said...

சகோ வவ்வால்,

இந்த விசுவரூப திரைப்பட பிரச்சினையில் பல பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்ததுதான் மிச்சம்.

இஸ்லாமிய இயக்கங்களின் மூர்க்கத்தனமான போக்கு அதிர்ச்சி தருகிறது. காவல்துறை,உளவுத் துறை எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அமைதிப்பூங்கா என்பது கனவாகி விடும்!!.
**
கம்ல் பிடிக்குமா இல்லையா என்பதை விட படங்கள் வரும் , இரு வாரம் பின்பு மறக்கப்படும் அவ்வளவுதான்!!. எனக்கு கமல் நம்ம மூமின் தலைகளை கூப்பிட்டு போட்டுக் காட்டி இருக கூடாது.

நம்ம் தமிழ் பதிவுலக் சகோகள் பெருமையாக சொல்லும் சில விடயங்கள் பீதி கிளப்புகிறது.

ஒரு சவுதி இளவரசி, காதலனை கைப்பிடிக்க முயன்று , ஓட முயன்று பிடிபட்டி இருவரும் விபச்சாரம் புரிந்ததாக வழக்கம் போல் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிக் கொல்லப் பட்டனர்.

இதையும் பெருமையாக சொன்னால் என்ன உண்மையில் சொல்ல வருகிறார்கள்?

படியுங்கள் விக்கி
http://en.wikipedia.org/wiki/Misha'al_bint_Fahd_al_Saud

தமிழக அரசு விசுவரூபத்தில் நடந்த முறை எனக்கு கோவையில் அல் உம்மாவை வளர்த்து விட்ட அரசியலை ஞாபகப் படுத்துகிறது!!

Where are we going??

நன்றி!!!

Anonymous said...

Oh!my god...What can i do??....Vovs always rocks.....:-))))




By---
Maakkaan.

suvanappiriyan said...

//Where are we going??//

வர்ணாசிரமம் தலைதூக்காதிருக்க சிறந்த திசையை நோக்கியே பயணிக்கிறது தமிழகம். நாம் அனைவரும் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒருநாள் ஒன்றாக ஐக்கியமாவோம். கவலை வேண்டாம. சில நேரம் மருந்து கசந்தாலும் உடல் நலன் கருதி சாப்பிட்டே ஆக வேண்டும்.:-(

சார்வாகன் said...

சகோ சு.பி,

உங்களுக்கு விடயம் புரியவில்லை. மூன்றாம் உலக்ப்போர் நோக்கி செல்கிறோம். அதில் மார்க்கத்தின் மூர்க்க வெறி ஏறி எம் தமிழ் சொந்தங்கள் பலி ஆகக் கூடாது எனவே பதிவிடுகிறோம்.

மாலியில் ஃப்ரான்ஸ் படைகள் அல் கொய்தாவை ஓட ஒட விரட்டி அடிக்கின்றனர்.

நம் ஊரில் வந்து அல் கொய்தாவை தேட வைக்காதீர்கள் அய்யா!!

மதம் என்பது தனிப்பட்ட நம்பிக்கை. இதைத் தாண்டி அனைத்து விவகாரங்களிலும் த்லையிடுவது சரியல்ல!!

கேரளாவில் 86 திரையரங்குகளில் விஸ்வரூபம் வெற்றி நடை போடுகிறது. மாநிலம் விட்டு ,மாநிலம் சென்று தமிழர் படம் பார்க்கிறார்.

தமிழக அரசு வருவாய் இழந்ததுதான் மிச்சம்.ஆகவே நட்டப்படுவார் கமலஹாசன் என்ற முஸ்லிம் தலைவர்களின் கனவு பலிக்காது!!

முஸ்லிம்கள் செய்யும் பொதுவான செயல்களுக்கும் பல்ர் தடை வாங்கலாம். பல்ர் பிழைப்பில் மண் அள்ளிப் போட்டு விட்டீர்கள் வஹாபிகளே!!


இஸ்லாமியர்களின் பேரை பி.ஜே,ஜவிகருல்லா கெடுத்ததுதான் மிச்சம். இவர்கள் இன்னொரு முகமது அலி ஜின்னா எனப்தே என் கருத்து!!

ஜவிகருல்லாவின் அரசியல் வாழ்க்கை இனி ஹி ஹி.

பி.ஜே பரவாயில்லை வாயுள்ள பிள்ளை பிழைக்கும், ஆனாலும் பல முஸ்லிம்களுக்கு இந்த ஆள் உளரலினால் பிரச்சினை வருகிறது என‌
உணர ஆரம்பித்து விட்டார்கள்!!

பணம் கொடுப்பதை அவர்கள் நிறுத்தினால் அண்ணனால் உழைத்து பிழைக்க முடியுமா?


ஆகவே ஹி ஹி



நன்றி!!

Dinesh Kumar said...

All these muslim guys are doing wonderful job in developing bjp,rss in Tamilnadu. Even a neutral hindu like me started thinking about that Gujju. Thanks TMMK

Vinay said...

வவ்வால்,

…இதே அமீர் மொழி படவிழாவில் ஞானி சொன்னதற்கு எதிராக படத்தில் நல்ல படம் கெட்ட படம் இல்லை. எனக்குப் பிடிக்கும் படங்களை நான் பார்ப்பேன். அதை தடுக்கவோ குறைகூறவோ யாருக்கும் உரிமையில்லை. ஆனால் நான் எடுக்கும் படம் என்ன்னுடைய திருப்திக்காக எடுக்கிறேன் என்றார். சிவாஜி படம் பத்தி சொல்லும்போது ஒரு தமிழ் படம் உலகம் முழுக்க கொண்டாடப்படுவதை நினைத்து குறைசொல்லாம பெருமைபடுங்க என்றார். (http://www.youtube.com/watch?v=WswDvFJqjvA) நானும் நல்ல சொல்லுராரேனு நெனச்சேன். இப்பத்தான் சாயம் வெளுக்குது.

எல்லாத்துக்கும் வக்கனையா பேசும் கமல் இப்படி அம்மாஞ்சியா அசமந்தமா இருக்காரே!

Anonymous said...

Mr.saarvakan Can you upload that video in youtube we want see that

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

நன்றி!

தலைவெட்டப்பட்ட சவுதி இளவரசியின் கதை மிக கொடூரம். இஸ்லாமியர் என்றால் அனைவரும் சமம்னு சொல்வது பொய் என மீண்டும் நிருபணம் ஆகியுள்ளது.

# படம் சுமாரான படமே,மார்க்குகளின் எதிர்ப்பால் தான் ,எதிர்ப்பார்ப்பு அதிகம் ஆகி ஓரளவு ஓடுகிறது.

# ஏக இறைவன் என சொல்லிக்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு 24 இயக்கம் தமிழ்நாட்டில் இருக்காம்,எல்லாம் ஒன்னு சேர்ந்து தான் புகார் கொடுத்திருக்காங்க,எனக்க்கு ஒரு டவுட்டு ஏக இறைவனுக்கு ஏன் ஏக இயக்கம் காண முடியவில்லை :-))
-------------

மாக்கான்,

நன்றி!

என்னை வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்வ்.

ஆனா ஒன்னு இதைப்பார்த்துப்புட்டு ராச நட காது,மூக்கு வழியா எல்லாம் புகை விடப்போறார் :-))
------------

சு.பி.சுவாமிகள்,

வாங்க,நன்றி!

//வர்ணாசிரமம் தலைதூக்காதிருக்க சிறந்த திசையை நோக்கியே பயணிக்கிறது தமிழகம். //

தொழில் அடிப்படையில் குலம்,ஜாதி என்பது பின்னர் பிறப்பின் அடிப்படையில் என மாறியதே வருணாசிரமம்.

இப்போ இஸ்லாமில் இப்படிலாம் இல்லைனு சொல்ல வரிங்களா?

அப்புறம் எப்படி மரைக்காயர், ராவுத்தர்னு பேரு போட்டுக்கிறாங்க.

மேலும் குரைஷி, ஹக்கீம்(மருத்துவர்) என்றெல்லாம் வம்சாவளியிலும் பேர் வைத்துக்கொள்வது ஏன்?

இஸ்லாமிலும் வருணாசிரமம் ,அதன் அடிப்படையில் திருமண பந்தங்கள் செய்யப்படுவதை என்னால் ஆதாரத்துடன் காட்ட முடியும்.

எனவே இஸ்லாமில் இணைந்தால் வேறு வகையான வருணாசிர முறையில் இணைவதாக தான் சொல்ல முடியும்.

ashrafi muslims- upper caste

ajlaafi muslims- lower caste

என வகைப்படுத்தியுள்ளதை அறிய மாட்டீர்களா?

பேருக்கு பின்னால் அஷ்ரஃப் என போட்டுக்கொள்வது அப்படி வந்தது தான், இஸ்லாமிக் சர் நேம்கள் பற்றி விரிவாக தோண்டினால் பல ஜாதியக்கூறுகளை காணலாம்.

ஒட்டகம் கண்ணை மூடிக்கிட்டு லோகமே இருண்டுப்போயித்துனு நினைச்சுதாம் :-))
------------

சகோ.சார்வாகன்,

//மதம் என்பது தனிப்பட்ட நம்பிக்கை. இதைத் தாண்டி அனைத்து விவகாரங்களிலும் த்லையிடுவது சரியல்ல!!//

நச் பாயிண்ட்!
-----------

தினேஷ் குமார்,

நன்றி1

//me started thinking about that Gujju. Thanks TMMK//

இதத்தான் அவங்க செய்துக்கிட்டு இருக்காங்க, மற்ற மதத்தினரை விமர்சிப்பதன் மூலம் ,அவர்களை மேலும் தீவிரமாக மத உணர்வு கொள்ள வைக்கிறார்கள். இது மதச்சண்டையினையே உருவாக்கும் என்பதை அறிவதில்லை.

-----------

விநய்,

நன்றி!

அமீர் எப்போ பார்த்தாலும் கருத்து கந்தசாமியா பொங்குவார்,இப்போ மட்டும் தாமதமா அதுவும் வெளெக்கெண்னை அறிக்கை விடுறாரேனு தான் இந்தப்பதிவே.

எல்லா இயக்குனரும், திரையுலகினரும் கருத்து சொல்லணும்னு அவசியம் இல்லை,ஆனால் திரையுலகின் ஒரு அமைப்பின் பொறுப்பில் உள்ளவருக்கு தார்மீக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அறம் உள்ளது.

இஸ்லாம்மிய இயக்கங்கள் தடை வாங்கி காட்டியிருக்கு,எனவே நாங்க மட்டுமா சொம்பையானு இந்துத்வா இயக்கமும் போட்டிக்கு தடைக்கேட்குது, அமீர் படத்துக்கு தடை விதிச்சா, இதே போல விளக்கெண்ணையா பேசுவாரா? உடனே நாட்டிலே கருத்து சுதந்திரமே செத்துப்போச்சுனு போராளி ஆகிட மாட்டாரு :-))

லோக நாயகர் , ஓவர் கண்பிடன்ஸில் நிறைய செய்கிறார், மார்க்கப்பந்துக்களுக்கு படம் போட்டு காட்டியிருக்கவே தேவையில்லை,ஆனால் நாம எவ்வளோ பெரிய ஹீரோ நம்ம படத்தையா தடை செய்திட போறாங்கன்னு நினைச்சிக்கிட்டு ,ஓசி விளம்பரம் கிடைக்கும்னு படம் போட்டுக்காட்டி ,சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டார்.

Anonymous said...

இந்த படம் பார்த்து தான் தமிழன் இஸ்லாமில் ஊறிய தீவிரவாதத்தை புரிந்து கொள்வான் என்று இவர்கள் நினைத்தால் அது அறியாமையின் உச்சம்...

Anonymous said...

"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது."

---குறள் 647.

வவ்ஸ் வாக்கு நின்று பேசும்....

----Maakkaan.

Dinesh Kumar said...

ஜெயலிதா கையில் தமிழகம், மனநிலை பிரண்டவன் கையில் பூமாலையைப் போல் ஆகி விட்டது. ( இதற்க்கு முன் இந்த பூமாலை ஒரு குரங்கு கையில் இருந்தது வேறு விஷயம்.) ஒரு படத்தின் ஒலிபரப்பு உரிமையை தன தொலைக்காட்சிக்கு தரவில்லை என்பதற்காக மக்களின் வரிபணத்தை ஒரு ஒன்றுமில்லா சினிமாவை தடை செய்ய உபயோகிப்பது வடிகட்டிய முட்டாள்தனம். இவர் இனியும் திருந்துவார் என எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் இவர்கலை தேர்ந்தெடுக்கும் நாம்தான் முதல் அயோக்கியர்கள்.
ஒரு புறம் இதுபோன்ற மதவாத அமைப்புகள் மற்றொரு புறம் ராமதாஸ் போன்றோர்கள் கையில் எடுத்திருக்கும் சாதீய அரசியல். எங்கு செல்கிறது தமிழகம்.

குறும்பன் said...

வவ்வால் நான் படம் பார்த்துவிட்டேன். இப்ப உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உள்ளதாம் தமிழகத்தில் பார்த்து இரசியுங்கள்.

இந்த படத்தை ஏன் நம்ம மார்க்கபந்துக்கள் எதிர்க்கறாங்கன்னு புரியலை. ஆனா இவர்களின் தீவிர நடவடிக்கையால் பாஜக வளருவதற்கு துணை போகிறார்கள் என்பது உறுதி.

அமீர்க்கு வந்தா அது இரத்தம் என்று புரிஞ்சுக்குங்க.



குறும்பன் said...

படத்தில் மன்னிக்க இடுகையில் கருத்து சுதந்திரம் நன்றாக உள்ளது எல்லா இடுகைகளிலும் கருத்து சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோம் :)

சதுக்க பூதம் said...

மதம் பிடிக்காத மனிதர்களிடம் கமல் ஹேராம் போன்ற படங்கள் மூலம் தூவ முயன்ற இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை , தற்போது இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் எளிதாக பரப்பிவிட்டன.

Jayadev Das said...

\\நுணலை தன் வாயால் கெடும்\\ நீர் தமிழ் வாத்தி தானா என்ற சந்தேகம் எனக்குள் அவ்வப்போது தலை தொக்குகிறது தலைகீழாய் தொங்குபவரே!! அது "நுணலை" அல்ல "நுணலும்". தவளை தனது வாயை வைத்துக் கொண்டு சும்மாயிராமல் கத்தி பாம்புக்கு தன் இருப்பிடத்தை காட்டியதைப் போல என்பார்கள். அந்த எடுத்துக் காட்டு உலகில் உம்மை விட வேறு யாருக்கு சாலப் பொருத்தமாக இருக்கப் போகிறது!! தமிழ் வாத்தின்னு சொல்லிக்கிட்டு தமிழே படிக்கத் தெரியலை, இந்த யூக்கியதையில அதைப் படிச்சேன் இதைப் படிச்சேன்னு பீலா வேற விடுறீரு.

\\இந்து மறபில் பல தரப்பட்ட சித்தாங்களும் இருக்கு நீர் வைணவ பகவத்கீதையை மட்டுமே வச்சி மற்றதெல்லாம் போலினு வரையறை கொடுத்தால் எப்படி விடுவாங்க.\\ ஒரு தரமான சித்தாந்தம் என்றால் அதனுடைய இறுதித் தீர்ப்பில் [Conclusive truth] இருவேறு கருத்துக்களுக்கு இடமே இருக்கக் கூடாது. ஆகையால், பகவத்கீதையில் ஒரு முடிவும், மற்ற நூல்கள் மூலம் இன்னொரு முடிவும் எட்ட முடியும் என்றால் அதற்குப் பெயர் சித்தாந்தம் அல்ல, செத்த அந்தம். பகவத் கீதையின் முடிவையே மற்ற நூல்களும் ஆதரிக்கின்றன, அது எப்படி என்றால் உமது மூளையை பயன்படுத்தி கொஞ்சம் படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், வெறுமனே மரத்தில் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருந்தாள் வேலைக்கு ஆகுமா?

\\அத்வைத கருத்தை உமது பதிவிலே சொல்லி கேள்வியும் நான் கேட்டாச்சு, நீர் அப்போவும் ராமனுஜர் சொன்னதை படிக்க சொல்லுறீர், அப்போ வைணவம் மட்டுமே இந்து மதமா? \\ அது ரெண்டுமே ஒத்துப் போகுதான்னு தான் நான் இப்போ உம்மை கேட்கிறேன் அதற்க்கு பதிலைக் காணுமே? முடிவு ரெண்டாக இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப கயிப் புடிச்சி இழுத்தியா என்று கேட்காதீர்.

\\எனவே உமக்கு இந்து மத அறிவேயில்லை என்பது புலனாகிறது,ஆனால் யார் போலினு லிஸ்ட் போட கிளம்பிட்டீர் :-))\\ நானும் தலைகீழாய் தொங்கிப் பார்க்கிறேன் உம்மைப் போல ஞானம் வருதான்னு.

\\நாத்திகர்களாகிய நாங்கள் கூட அனைத்து வகையும் படிக்கிறோம், ஆத்திகன்னு சொல்லிக்கிட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுறீர் :-))\\ எவளோ ஒருத்தி அவ புருஷனுக்கு மட்டும் பணிவிடை செய்துகொண்டு, அவனை மட்டும் சந்தோஷப் படுத்திகிட்டு ஒழுக்கமாக வாழ்ந்துகிட்டு இருந்தாளாம், அதே சமயம் தாராளமா வாழ்ந்திகிட்டு இருந்த சில பெண்கள் அவ கிட்ட போயி, நீ ஏண்டி குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறாய், ஒருத்தனுக்கே நேர்மையாய் இருக்காதே, தாராளமா இரு, எல்லோரும் ஆம்பிளைங்க தானே, பாகுபாடு பார்க்காம எல்லோரையும் ஏத்துக்கோ, போறவன் வர்றவன் எல்லோருக்கும் மடியை விரி என்று அறிவுரை சொன்னார்களாம். அந்த மாதிரி ஒரு அறிவுரையை நீர் சொல்கிறீர். அது உமக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் எனக்கல்ல. நீர் வேண்டுமானால் எல்லாவற்றையும் படியும் எனக்கு ஒன்றே ஒன்று தான்.

ராஜ நடராஜன் said...

அய்யோடா!என்னைத் தேடுலேன்னா பின்னூட்டம் போட்ட மாதிரியே இருக்காதே:)

அமீரின் தர்ம சங்கடமான நிலைமையை தெரியாமல் புகை ஊதி விடுறீங்களே!அவர் ஏதாவது நடுநிலைமையா சொன்னாக்கூட பந்துகளால் பத்திக்கும்ன்னு அவர் அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லதுதான்.

முடிந்தளவு அமீர்,மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் குரல் இஸ்லாமிய சமூகத்தில் ஒலிக்காத வரை அவர்களுக்கு விடிவு காலமில்லை.
ஜவருல்லா பற்றியெல்லாம் 10 நாளைக்கு முன்னாடி வரைக்கும் யாருன்னே தெரியாது.இப்ப விசாரிச்சா கட்டப்பஞ்சாயத்து மார்க்கம் செஞ்சே முன்னுக்கு வந்ததா அவரோட ஊர்க்காரர் ஒருவர் சொல்கிறார்.ஜாதி,மதம்,மரம், போன்றவை ஒரு தனிமனிதனை உருவாக்கும் என்பதற்கு தமிழக அரசியல் சான்று.

ராஜ நடராஜன் said...

ஆப்கானில்தானே கதை நடக்கிறெதென்ற எண்ணத்தில் மதவாத இயக்கங்களையும் படம் பார்க்க கமல் அனுமதித்திருக்க கூடும்.அவர் எங்கே கண்டார் இவர்கள் தலிபான்,ஒசாமா பின் லேடன் பக்தர்கள் என்று?

மதம் சார்ந்து இணையத்தில் மட்டுமே சில இஸ்லாமியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.இவர்களின் மத,அரசியல்,தீவிரவாதத்தின் தன்மை இன்னும் நீண்டு விரிகிறதென்பதை விஸ்வரூபத்துக்கான தடை வெளிப்படுத்துகிறது.

தனது அரசியல் சுயநலங்களுக்காக ஆடிய ஜெயலலிதாவின் உச்ச உயர் ரத்த அழுத்த ஹிஸ்டீரியா மன நிலை பாராளுமன்ற 40 கனவை சிதைக்கப் போகிறது.

வவ்வால் said...

ரெவரி,

வாங்க,நன்றி!

ரெண்டு வரியில பெரிய ரகசியத்தையே சொல்லீட்டிங்க, வள்ளுவரை விட பெரிய ஆள் தான்!
----------------------
மாக்கான்,

நன்றி!

அட டா குறல் எல்லாம் உதாரணமாக காட்டுறிங்க, பயமா இருக்கு :-))

ஏற்கனவே இங்கே ஒருத்தர் காண்டுல இருக்கார் இனிமே என்னாகுமோ ....அவ்வ்வ்!
------------------
தினேஷ் குமார்,

நன்றி!

குரங்கோ,கொள்ளிவாய்ப்பிசாசோ, ரெண்டுமே தமிழ்நாட்டைப்படுத்திக்கிட்டு தான் இருக்கு, நமக்கு வாய்ச்சது அம்புட்டுதேன்!

லோகநாயகர் செய்த சந்தர்ப்பவாதம் இப்போ அவருக்கு எதிராகவே பாய்கிறது, பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.
-----------------
குறும்பன்,

நன்றி!

படம் பார்த்த பலரும், எதிர்க்காமல் விட்டால் ஒரு வாரம் கூட ஓடாதுனு சொல்லுறாங்க,மார்க்கப்பந்துக்களுக்கு அரசியல் செய்ய ஒரு விவகாரம் தேவை, விஷ்வரூபம் அதற்கு வாய்ப்பாக வந்துவிட்டது, ஆயிரம் லோகாதாயம் பேசும் லோகநாயகர் எதற்கு ரீலிஸுக்கு முன்னர் போட்டுக்காட்ட வேண்டும்? ஏற்கனவே அவருக்கு எதிராக அரசியல் சக்தி திரும்பிவிட்டது அவருக்கு முன்பே தெரியும், எல்லாருமே அரசியல் செய்வதாக படுகிறது.

அமீருக்கு தவிர்க்கமுடியாத நிலைனு பின்னாடி ராச நடைப்பேசினதே கேட்டீங்களோ :-))

அப்போ அமீர் எதற்கு ஃபெப்சி,இயக்குனர் சங்க பொறுப்பில் இருக்கணும் விலகிடலாமே?

கருத்து சுதந்திரத்தை பதிவில பார்க்காம படத்தில பார்க்கும் உங்க கண்ணில மிளகா பொடித்தான் போடனும் :-))
---------------
பூதம்,

நன்றி!

மக்களின் மதவாத உணர்வுகளை வியாபாரத்துக்கு பயன்ப்படுத்த நினைத்தார், இப்போ அவருக்கே ஆப்பாக போய்விட்டது.
------------------
ராச நட,

வாரும்,நன்றி!

கலாய்க்க தோதாக வேற யாரும் தலையைக்கொடுப்பதில்லை அதான் :-))

அமீருக்கு தர்ம சங்கடம் எங்கேயிருந்து குதித்தது? அவர் எதற்கு ஃபெப்சி,இயக்குனர் சங்க பொறுப்பில் இருக்கணும்? ஒன்று ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு கடமை செய்யணும்,இல்லை தன்னுடைய மதத்துக்கு ஆதரவு கொடுத்திடணும்.

இப்போ அமீர் படத்துக்கு தடைனு வந்தால் , அது கருத்து சுதந்திரத்துக்கு தடைனு சொல்லாமல் இருப்பாரா? இல்லை திரையுலக ஆதரவு வேண்டாம்னு சொல்வாரா?

#ஜவாகிருல்லா என்று இல்லை எல்லா இஸ்லாமிய இயக்கங்களுக்கும் ஏதேனும் ஒரு பிரச்சினை கிடைத்தால் தான் அதை வைத்து மக்களை உசுப்பேத்த முடியும், சினிமா பிரச்சினை என்றால் நல்ல விளம்பரம் கிடைக்கும் என பயன்ப்படுத்திக்கொண்டார்கள்.

லோகநாயகர் அதற்கு நல்வாய்ப்பினை தாம்பாளத்தில் வைத்து கொடுத்துவிட்டார்.

#இன்னும் நீங்க 40 பத்தியே பேசிக்கிட்டு இருங்க, அதற்கான நாட்கள் வெகு தொலைவில் உள்ளது,அதற்குள் வேறுப்பிரச்சினை முளைத்துவிடும், இதனை மதம் சாராத பொதுமக்கள் மறந்துவிடுவார்கள்.

தனிப்பட்ட பொதுமக்கள் இப்பிரச்சினையை பெரிதாக கணக்கில் கொள்ளவே போவதில்லை,ஆனால் இஸ்லாமிய சமூகம் மட்டும் கணக்கில் கொள்ளும், எனவே இப்பிரச்சினை அம்மையாருக்கு பூஸ்டாக தான் இருக்கும்.

எப்படிப்பார்த்தாலும் இந்துத்வா நாட்டம் உள்ளோர் அம்மையார் பக்கம், நடு நிலையினர் கழகம் பக்கம் என்ற நிலைப்பாடு தான் பொதுவாக நிலவும், இப்போ ஊழல் கறையினால் நடுநிலை வாக்கு வங்கி கழகத்திற்கு தேய்மானமான நிலையில்,இப்பிரச்சினையை வைத்து திமுகவின் சிறுபான்மை நட்பு நிலையை சிதைக்க ஒரு வாய்ப்பாக அம்மையார் பயன்ப்படுத்திக்கொண்டார் எனலாம்.

இப்பிரச்சினையின் ஆரம்பம் லோகநாயகரிடம் இருந்து தான் துவங்கியது எப்படி என பல முரை நானே சொல்லிவிட்டேன், பின்னர் மீண்டும் தனியாக பதிவிடுகிறேன்.

நீக்கப்பட்ட தடை மீண்டும் விதிக்கப்பட்டுவிட்டது ,இது தான் தற்போதைய நிலை.
------------------

வவ்வால் said...

ஓய் பாகவதர்,

இங்கே என்ன பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டு?

நுணலும் என்பது கூட தெரியாமலா இருக்காங்க, ஆனாலும் நான் எழுதியது தட்டச்சு பிழை என்றாலும், பொருள் என்ன என்பது புரிந்தால் சரி.

// ஆகையால், பகவத்கீதையில் ஒரு முடிவும், மற்ற நூல்கள் மூலம் இன்னொரு முடிவும் எட்ட முடியும் என்றால் அதற்குப் பெயர் சித்தாந்தம் அல்ல, செத்த அந்தம்.//

வெண்ணை வைணவ சித்தாந்தம் வேறு, சைவ சித்தாந்தம் வேறுனு முதலில் புரிந்துக்கொள்ளும்.

எனவே பகவத் கீதையில் சொன்னதை சைவ சித்தாந்தம் ஏற்க தேவையே இல்லை, சைவ சித்தாந்த மறபின்படி மோட்சம் என்பது சிவனை அடைவது, பகவத்கீதையில் சிவனை அடையவா சொல்லி இருக்கு.

அப்போ எப்படி இரு வேறு நிலை உருவாச்சு? முதலில் சமயம் என்றால் என்னனு தெரிஞ்சுக்கிட்டு பேச வாரும், டிஸ்கவுண்டில் வாங்கின புக்கை படிச்சிட்டு என்னனே தெரியாம பினாத்தாதீர் :-))

//அது ரெண்டுமே ஒத்துப் போகுதான்னு தான் நான் இப்போ உம்மை கேட்கிறேன் அதற்க்கு பதிலைக் காணுமே?//

விளக்கெண்னை ரெண்டும் ஒத்து போயிருந்தா ஏன் சைவம்,வைணவம்னு பிரிஞ்சிரிக்க போகுது? இதைக்கூட நான் சொல்லித்தான் தெரியணுமா?

நீர் தான் அத்வைதம் பேசும் சாமியார்கள் போலினு சொன்னது, ஆனால் அத்வைத கருத்தை ஆதி சங்கரர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிட்டார், எனவே எப்படி போலினு நீர் தான் விளக்கணும், முடிஞ்சா விளக்கும்.

//எனக்கு ஒன்றே ஒன்று தான்.//

அப்போ அடுத்த கருத்தை போலினு சொல்லாமல் வேலையை மட்டும் பார்க்கலாமே? ஆன்மீகத்தில் எது போலினு எல்லாம் தெரிஞ்சாப்போல பேசி மாட்டிக்கிட்டது நீர் தான் :-))

நல்லா விளக்கம் கொடுக்கீர், அப்போ கிருஸ்ணா காதல் லீலை புரிந்தார் என்றால் ,உம்ம வம்சத்து பெண்களிடமும் புரிந்தார்னு சொல்லிடலாமா :-))

நாறத்தனமா எதுனா பேசினா , கம்முனு போற ஆள் நானில்லை,அப்பாலிக்கா ரொம்ப நாறிடும் உம்ம கதை ,எனவே நம்மிடம் பேசும் போது நாவடக்கம் தேவை, இல்லை எனில் பின் விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல :-))

Jayadev Das said...

\\நுணலும் என்பது கூட தெரியாமலா இருக்காங்க, ஆனாலும் நான் எழுதியது தட்டச்சு பிழை என்றாலும், பொருள் என்ன என்பது புரிந்தால் சரி.\\ தட்டச்சு பிழையைப் பொறுத்துக்கலாம், இது தட்டச்சால் வந்ததல்ல உமக்குத் தெரியவில்லை. ஒரு தமிழ் வாத்திக்கு இந்த மாதிரி அடிப்படை பழமொழியில் கூட தடுமாற்றம் என்பது வெட்கக் கேடு. உம்ம கிட்ட படிக்கிற பசங்க கதி என்னாவது யோசியும்.

\\வெண்ணை வைணவ சித்தாந்தம் வேறு, சைவ சித்தாந்தம் வேறுனு முதலில் புரிந்துக்கொள்ளும்.

எனவே பகவத் கீதையில் சொன்னதை சைவ சித்தாந்தம் ஏற்க தேவையே இல்லை, சைவ சித்தாந்த மறபின்படி மோட்சம் என்பது சிவனை அடைவது, பகவத்கீதையில் சிவனை அடையவா சொல்லி இருக்கு.\\

எல்லா சித்தாந்தங்களும் வியாசரின் இலக்கியங்களில் இருந்து உருவானவை. எனவே ஒன்னு அங்க ஒன்னு என்று மாத்தி மாத்தி எழுதியிருந்தா அது பின்பற்றத் தக்க இலக்கியமே அல்ல. The conclusive truth from Veda Vyasa's Literature is one and only one, it can not be two. It appears to be two because of your imperfect vision and lack of proper training.

\\அப்போ எப்படி இரு வேறு நிலை உருவாச்சு?\\ அதுக்குத்தான் தெரிஞ்சவங்ககிட்ட கத்துக்கணும் என்பது. இல்லாட்டி இப்படியே காலத்துக்கும் கேட்டுகிட்டே இருக்க வேண்டியது தான்

\\விளக்கெண்னை ரெண்டும் ஒத்து போயிருந்தா ஏன் சைவம்,வைணவம்னு பிரிஞ்சிரிக்க போகுது? இதைக்கூட நான் சொல்லித்தான் தெரியணுமா?\\ இதுக்கு மேலேயே சொல்லிட்டேன். வியாசரால் எழுதப் பட்ட இலக்கியம் என்பதால் இருவேறு conclusions இருக்க முடியாது. இருப்பதாக பார்ப்பது உமது அறியாமை.

\\நீர் தான் அத்வைதம் பேசும் சாமியார்கள் போலினு சொன்னது, ஆனால் அத்வைத கருத்தை ஆதி சங்கரர் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிட்டார், எனவே எப்படி போலினு நீர் தான் விளக்கணும், முடிஞ்சா விளக்கும்.\\ அத்வைதம் போலி இல்லை காஞ்சீபுரத்தான் போலி, தகுதியற்றவன். அத்வைதம் இன்றைக்கு ஏற்றது இல்லை. விரைவில் இது குறித்து பதிவு வெளியிட இருக்கிறேன்

\\அப்போ அடுத்த கருத்தை போலினு சொல்லாமல் வேலையை மட்டும் பார்க்கலாமே? ஆன்மீகத்தில் எது போலினு எல்லாம் தெரிஞ்சாப்போல பேசி மாட்டிக்கிட்டது நீர் தான் :-))\\ அதுக்காக முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?

\\நல்லா விளக்கம் கொடுக்கீர், அப்போ கிருஸ்ணா காதல் லீலை புரிந்தார் என்றால் ,உம்ம வம்சத்து பெண்களிடமும் புரிந்தார்னு சொல்லிடலாமா :-))\\ நீர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு அப்பனே. கொஞ்சமாச்சும் ABCD ஆரம்பியும் அப்புறம் ஒவ்வொன்னா விளங்கும்.

\\நாறத்தனமா எதுனா பேசினா , கம்முனு போற ஆள் நானில்லை,அப்பாலிக்கா ரொம்ப நாறிடும் உம்ம கதை ,எனவே நம்மிடம் பேசும் போது நாவடக்கம் தேவை, இல்லை எனில் பின் விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல :-))\\ வெண்ணை, விளக்கெண்ணெய் இதெல்லாம் நாவடக்கம் உள்ள ஆசாமி பேசுவதா....... உமது காமடிக்கும் அளவே இல்லையா?

\\இங்கே என்ன பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டு?\\ இன்னொருத்தர் கடையில வாக்குவாதம் பண்ணி அவங்க சுடுதண்ணியைப் பிடிச்சு ரெண்டு பேத்து மேலயும் ஊத்த வேண்டாமே. உமக்குத்தானே பதில், அதனால் தான் இங்கே சொன்னேன். ஆட்சேபனை இருந்தால் என் கடையில் வந்து பேசும், மூன்றாம் நபர் கடையில் வேண்டாம்.

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

நீர் வடிவேலு காமெடிலாம் பார்ப்பதில்லையா, வெண்ணை, வெளக்கெண்ணை எல்லாம் காமெடியா கலாய்ப்பதுய்யா:-))

அடுத்தவங்க பதிவில வேண்டாம்னு சொல்லலாம்,ஆனால் அந்த பதிவு தானே உமக்கு எதிர்ப்பதிவு,நான் சொன்ன கருத்தினை சொல்லும் பதிவு, ஏற்கனவே உம்ம பதிவிலும் சொல்லிட்டேன் ,அதே கருத்தினை சொல்லும் பதிவு என்பதால் அங்கும் சொல்லி இருக்கிறேன்.

சரி விட்டு தொலையும் ,உம்ம கதைய பார்ப்போம்,

//எல்லா சித்தாந்தங்களும் வியாசரின் இலக்கியங்களில் இருந்து உருவானவை. எனவே ஒன்னு அங்க ஒன்னு என்று மாத்தி மாத்தி எழுதியிருந்தா அது பின்பற்றத் தக்க இலக்கியமே அல்ல. The conclusive truth from Veda Vyasa's Literature is one and only one, it can not be two. It appears to be two because of your imperfect vision and lack of proper training.//

மீண்டும் ஒரு கத்துக்குட்டின்னு நிருபிக்கிறீர்?

வியாசருக்கு முன்னர் வேதமே இல்லையா அப்போ?

வியாசர் பொறக்கும் முன்னரே அவரோட அப்பா பராசரர் எப்படி ரிஷியா இருந்தார், என்ன வேதம் படிச்சு இருப்பார்?

பராசரரர் அப்பா வஷிஷ்டர் என்ன வேதம் படிச்சு இருப்பார்?

சரி அதுவும் தொலையட்டும், மகாபாரதம் எழுதும் முன்னர் எழுதியது ராமாயணம் , அதை ஏன் வியாசர் எழுதலை ஏன்னா அவரு அப்போ பொறக்கவேயில்லை, ஆனால் ராமாயணம் காலத்திலும் வேதம் பேசி இருக்காங்க :-))

அப்போ வியாசர் சொன்னது தான் இறுதியானது என்றால் வியாசருக்கு முன்னர் யாரு சொன்னதை பின்ப்பற்றி இருப்பாங்க :-))

வியாசர் எல்லாம் வைணவ வழி வந்தவர், அவர் சொன்னதை சைவ சித்தாந்தம் கூட தொடர்பு படுத்துவதும் தவறு,அப்புறம் வியாசர் சொல்வதே வேதம் என்பதும் தவறு.

வியாசர் செய்தது அவர் காலத்தில் வேதம் எனப்பட்டதை ஒரு காபி செய்து வைத்தார். அம்புட்டுத்தேன்.

வேதம் எல்லாம்ம் புருடானு நான் சொன்னால் நீர் கேட்க மாட்டீர், இப்போ உமக்கு ஒரு சவால் ரிக் வேதத்தில் பெருமால், (அ)விஷ்ணு வை சுப்ரீம் காட் ஆக சொல்லி இருக்கிறதா?

ரிக் வேதமே அனைத்து வேதத்திலும் பழமையானது எனப்படுகிறது, அதையும் வியாசர் தானே பின்னர் காப்பி எடுத்து வச்சார், அதானே இப்பவும் இருக்கு, அதில் பெருமால்/விஷ்ணு பற்றி என்ன இருக்குனு தெளிவாக சொல்ல முடியுமா?

உண்மைய சொன்னால் உமக்கு ஆன்மீகம் தெரியும்னு ஒத்துக்கலாம் ,இல்லைனா போலி ஆன்மீகப்பதிவர், கத்துக்குட்டி,கிணற்று தவளை என ஏற்றுக்கொண்டு ஓடிப்போயிடனும்:-))

வேதம்,வியாசர்னு பேசி தானா ஒரு ஆடு வந்து மாட்டிக்கிச்சே :-))

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

//அதுக்காக முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
//

இது நான் கேட்க வேண்டிய கேள்வி :-))

நீர் எப்படி அவாளை போலினு சொல்லுறீரோ அதே போல உம்மையும் உம்ம இஸ்கோன் கூட்டத்தையும் போலினு சொல்லுறேன், நீர் போலினு சொல்ல கண்டுப்பிடித்த ஆதாரமே உம்மை போலினு சொல்லுது ,அதான் செம காமெடி :-))

நீர் அவாளை போலினு சொல்லு, அவாள் உம்மை போலினு சொல்லுவா, ஆக மொத்தம் எல்லாமே போலி சாமியார்கள், இதைத்தான் நான் ஆரம்பத்தில இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன், எனவே எனது கருத்தினை மெய்ப்பிக்க உதவியமைக்கு நன்றி! :-))

சிவப்பெருமானை கும்பிட்டு கபால ஓட்டில் ரத்த சோறு சாப்பிட்டால் உமக்கு மோட்சம் கிட்டும் சிவனே பரம்பொருள் என்பதை அறியாத பக்திமானாக இருக்கீரே :-))

இல்லை என்னைப்போல நான் கடவுள்னு சொல்லிடும் :-))

Jayadev Das said...

\\வியாசருக்கு முன்னர் வேதமே இல்லையா அப்போ? \\ இதைப் பத்தி சொன்னால் நீர் ஏற்றுக் கொள்வீரோ மட்டீடீரோ தெரியவில்லை எனினும் சொல்கிறேன். நீர் சொல்வது போலவே வியாசருக்கு முன்னரே வேதங்கள் இருந்தன சொல்லப் போனால், ஒவ்வொரு தயாரிப்புடனும் அதைப் பற்றிய Manual வருவதைப் போல இந்த படைப்பு உருவாக்கப் பட்ட போதே இந்த படைப்பைப் பற்றிய புத்தகமே வேதங்கள். ஆரம்பத்தில் ஒழி வடிவில் மட்டுமே இவை இருந்தன. வேதமும் ஒன்று மட்டுமே இருந்தது. முன்னர் செவி வழியாகவே அவை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு வந்தது. கால ஓட்டத்தில் எல்லாமே குட்டிச் சுவராவது போல, மக்களின் நினைவித் திறன் குறைய ஆரம்பித்த தருணத்தில் அது நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு வேதவியாசரால் எழுத்து வடிவம் கொடுக்கப் பட்டது.

\\வியாசர் எல்லாம் வைணவ வழி வந்தவர், அவர் சொன்னதை சைவ சித்தாந்தம் கூட தொடர்பு படுத்துவதும் தவறு,அப்புறம் வியாசர் சொல்வதே வேதம் என்பதும் தவறு.\\ வியாசர் வேதங்களை compile செய்தார் உருவாக்க வில்லை. வேதங்கள் படைப்புடன் வந்தவை, இன்ன தேதியில் இருந்து அவை ஆரம்பித்தன என யாரும் தேதியிட்டுக் கூற முடியவில்லை. [இதை நீர் நம்பமாட்டீர், அனால் பெரியவங்க இதைத்தான் சொல்லுகிறார்கள்.] சைவம் வினம் என்ற பிரிவே அறியாமை. அப்புறம் எதுக்கு வியாசர் சிவா புராணம் எல்லாம் compose செய்தார்?? ஸ்ரீமத் பாகவதத்தில் சிவன் வருவது எப்படி? யோசியும்.

\\வேதம் எல்லாம்ம் புருடானு நான் சொன்னால் நீர் கேட்க மாட்டீர், இப்போ உமக்கு ஒரு சவால் ரிக் வேதத்தில் பெருமால், (அ)விஷ்ணு வை சுப்ரீம் காட் ஆக சொல்லி இருக்கிறதா?\\ எங்கேயாவது யாகம் செய்யும் பொது பொய் உட்கார்ந்து கவனியும் ஒவ்வொரு யாகமும் இறுதியில் விஷ்ணுவுக்கே அர்ப்பணம் என்னும் மந்திரத்தை இறுதியில் சொல்வார்கள்.

oṁ tad viṣṇoḥ paramaṁ padaṁ sadā paśyanti sūrayaḥ

வேதங்களைப் படிப்பதன் இறுதி நோக்கம் என்ன?

sarvasya cāhaḿ hṛdi sanniviṣṭo

mattaḥ smṛtir jñānam apohanaḿ ca

vedaiś ca sarvair aham eva vedyo

vedānta-kṛd veda-vid eva cāham

I am seated in everyone's heart, and from Me come remembrance, knowledge and forgetfulness. By all the Vedas, I am to be known. Indeed, I am the compiler of Vedānta, and I am the knower of the Vedas. [B.G. 15.15]. வேதமெல்லாம் படிச்சு ஆரியப் பட வேண்டியவன் நானேன்னு கண்ணன் சொல்றார், அப்புறமென்ன?
\\உண்மைய சொன்னால் உமக்கு ஆன்மீகம் தெரியும்னு ஒத்துக்கலாம் ,இல்லைனா போலி ஆன்மீகப்பதிவர், கத்துக்குட்டி,கிணற்று தவளை என ஏற்றுக்கொண்டு ஓடிப்போயிடனும்:-))\\ கத்துக்குட்டி சரி, கிணற்று தவளை- பெண் கணவனுக்கு மட்டுமே நேர்மையாக இருப்பதற்குப் பெயர் கிணற்றுத் தவளை அல்ல.


Jayadev Das said...

\\நீர் எப்படி அவாளை போலினு சொல்லுறீரோ அதே போல உம்மையும் உம்ம இஸ்கோன் கூட்டத்தையும் போலினு சொல்லுறேன், நீர் போலினு சொல்ல கண்டுப்பிடித்த ஆதாரமே உம்மை போலினு சொல்லுது ,அதான் செம காமெடி :-)) \\ யாரை யார் வேண்டுமானாலும் குற்றவாளி என்று சொல்லலாம், ஆனால் இறுதியில் எது குற்றவாளியைத் தீர்மானிக்கும்? சட்டப் புத்தகங்களும், நீதிமன்றமும். இங்கே நான் சொல்வது போலி என்றால் அதை பகவத் கீதை வாயிலாக நிரூபியும், ஒப்புக் கொள்கிறேன். அல்லது மற்றவர்கள் தாங்கள் யோக்யர்கள் என்பதை அவ்வண்ணமே காட்டட்டும் பார்ப்போம்.

\\சிவப்பெருமானை கும்பிட்டு கபால ஓட்டில் ரத்த சோறு சாப்பிட்டால் உமக்கு மோட்சம் கிட்டும் சிவனே பரம்பொருள் என்பதை அறியாத பக்திமானாக இருக்கீரே :-))\\ அது சரி என்று மனதுக்கு தோன்றுபவர்கள் செய்துகொள்ளட்டும். எனக்கு கீதை கட்டும் வழி போதும்.

\\இல்லை என்னைப்போல நான் கடவுள்னு சொல்லிடும் :-))\\ நான் பிரதமர் ...... இல்லை நான் தான் பிரதமர்னு .......... பச்சை சட்டை போட்டதுங்க கீழ்ப் பாக்கத்துல பேசும், அதெல்லாம் கணக்கில் வராதுங்கோவ்............

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் உண்மைத்தமிழன் தளத்தில் உங்களை குத்துமதிப்பா ஒரு குத்து விட்டுட்டு வந்திருக்கிறேன்.

நீங்க எங்கே பார்த்தாலும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு படம் போட்டுக்காட்டியே இருக்க கூடாதுன்னு சொல்றீங்க.கமல் இவர்களுக்கு படம் போட்டுக்காண்பிக்காமல் இருந்திருந்தாலும் கலாட்டா செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிகிட்டிருக்கிறவங்க பிரச்சினையை வேறு திசையில் திருப்பியிருப்பார்கள்.அப்ப இவர்களுக்கு கமல் படம் போட்டுக்காண்பிக்காமல் இருந்ததுதான் பிரச்சினையென நாக்கு திசை திரும்பிக்கும்.இப்பொழுது கலாச்சார தீவிரவாதம் என பெயர் வாங்கிக் கொள்பவர்கள் மதத்தின் பெயரால் குண்டு வைத்திருந்தால் என்னாகியிருக்கும்?

எங்கோ ஒட்டகம் மேய்க்கும் எனக்கே ஜார்ஜ் போன்றவர்களுக்கு நமக்கும் தெரியாத உளவு செய்திகள் தெரிந்திருக்கும் என முன்னாடி சொல்ல தெரிந்திருக்கிறது எனபதையே இன்றைக்கு ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை சொன்னதால்தான் இந்த முடிவு எடுத்தேன் என்கிறார்.ஒரு மாநில முதலமைச்சராக அவர் சொல்வது சரிதான் என்று வைத்துக்கொண்டாலும் கூட நீதிமன்றம் விஸ்வரூபத்துக்கான தடையை நீக்கியும் கூட அதையே சாக்காக வைத்துக்கொண்டு தப்பித்துக்கொள்ளத் தெரியாமல் இரவு 11 மணிக்கு இன்னொரு நீதிபதியின் தூக்கத்தை கெடுத்து தடை வாங்கியதில் பிரச்சினை மத அமைப்புகளுக்கும்,கமலுக்குமென்பது மாறி ஜெயலலிதாவின் ஈகோவும்,வன்ம குணங்களும் வெளிப்படுகிறது.

இதோ இத்தனை பிரச்சினைக்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளும் கூட கமல் எங்கள் எதிரியல்ல என ஜெயலலிதா மாதிரி அறிக்கை விட்டால் கமலுக்கான பொருளாதார,மன அழுத்தங்களின் இழப்பை ஈடு கட்டுவது யார்?

ராஜ நடராஜன் said...

இங்கே சைக்கிள் கேப்புல பாஸுக்கும்,தாஸுக்கும் என்னா நடக்குது?

ராஜ நடராஜன் said...

வவ்வால்!கமல் மதவாதத்தை வியாபாரம் செய்யனுமின்னு நினைச்சிருந்தா நீங்க சொல்லிகிட்டிருக்கிற மாதிரி இஸ்லாமிய அமைப்புகளுக்கு படம் போட்டுக்காண்பித்திருக்க மாட்டார். என்னென்னமோ காம்ப்ரமைஸ் செய்திருப்பார்.

கமலின் நடிப்பையும்,திரைப்படங்களையும் உணர்வால் உணரணும்.அலெக்ஸ் பாண்டியன் வீடியோ பார்சல் கேட்கும் ரசனைக்கெல்லாம் அது புரியாது:)

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

//வியாசருக்கு முன்னரே வேதங்கள் இருந்தன //

அப்போ வியாசர் சொல்லிட்டார் ,அதான் இறுதி தீர்ப்பு போல பேசினது :-))

வியாசர் எப்படி அவர் காலத்தில் காப்பி அடிச்சு வச்சாரோ,அதே போல பின்னாடியும் செய்தார்கள். எனவே வியாசரை அல்டிமேட் அத்தாட்சியாக இனியும் தூக்கிக்கிட்டு அலையாதீர்.

எல்லாம் நான் சொல்லி தான் உமக்கு தெரிய வருது போல :-))

#//சைவம் வினம் என்ற பிரிவே அறியாமை.//

அது என்னய்யா வினம்?

அடுத்தவங்க தட்டச்சு பிழை செய்துட்டா அய்யோ ,அம்மான்னு குதிக்கிறது :-))

//எங்கேயாவது யாகம் செய்யும் பொது பொய் உட்கார்ந்து கவனியும் ஒவ்வொரு யாகமும் இறுதியில் விஷ்ணுவுக்கே அர்ப்பணம் என்னும் மந்திரத்தை இறுதியில் சொல்வார்கள்.//

நான் கேட்டது ரிக் வேதத்தில் இருக்கான்னு ,எவனாவது உம்மை போல போலி மந்திரவாதி யாகம் செய்யும் போது சொல்வதல்ல :-))

நீரே வியாசர் காலத்தில வேதத்தினை தொகுத்து எழுதினார்னு சொல்லிட்டார், அப்போ கண்டிப்பாக , பெருமால்/விஷ்ணு பற்றி இருக்கும்ல சொல்லுறது?

முடிஞ்சா காட்டணும், தந்தூரி அடுப்பு பத்த வச்சு மந்திரம் சொல்வான் கேளு கதை எல்லாம் வேண்டாம்.

//வேதமெல்லாம் படிச்சு ஆரியப் பட வேண்டியவன் நானேன்னு கண்ணன் சொல்றார்,//

குற்றவாளி குற்றமே செய்யலைனு சொல்லுறான் அப்புறமென்ன,நம்பிட வேண்டியது தான் :-))

//கத்துக்குட்டி சரி, கிணற்று தவளை- பெண் கணவனுக்கு மட்டுமே நேர்மையாக இருப்பதற்குப் பெயர் கிணற்றுத் தவளை அல்ல.//

இந்த நாறத்தனமான உதாரணம் நிறுத்தவே மாட்டீரா?

என் புருஷன் நல்லவன்,அவன் கூட வாழ கொடுத்து வச்சிருக்கணும்னு ஒரு கிணற்று தவளையா சொன்னால் தப்பில்லை, அதே போல நீங்களும் வாங்கன்னு எல்லா பொண்ணுங்களையும் கூப்பிட்டா எப்பூடி?

அப்புறம் பாகவதரே,நீர் பெண்ணா? சொல்லவே இல்லை, எப்போ பார்த்தாலும் புருஷன் கூட வாழ்வதை பத்தியே சொல்லிட்டு இருக்கீர் :-))

எனக்கு கூட ராதா,ருக்குமணி,பாமா போல ஃபிகர் தேவைப்படுது ,எங்கே கிடைக்கும்னு சொல்லுறது :-))

// இங்கே நான் சொல்வது போலி என்றால் அதை பகவத் கீதை வாயிலாக நிரூபியும், ஒப்புக் கொள்கிறேன்//

ஆட்டிசம் வந்த ஆடு போலவே பேசும், நான் பகவத்கீதையே செல்லாது சொன்னப்புறம்,அதை வச்சு நிருபிக்கணும்னு சொல்லுறீர் :-))

சிவபுராணம் எல்லாம் வியாசருக்கு முன்னமே இருக்கு , இன்னும் சொல்லப்போனால் வைணவ சமயம் தோன்றும் முன்னரே சைவ சமயம் தோன்றி மக்கள் பயன்ப்பாட்டில் இருந்தது, சைவத்திற்கு போட்டியாக உருவானது தான் வைணவம், போய் சமய வரலாறு படிக்கவும்.

வியாசர் பாகவதம் எல்லாம் எப்போ எழுதினார், வியாசர் பொறக்கும் முன்னே எழுதப்பட்ட ராமாயணத்தில் சிவன் வருவதை அறிய மாட்டீரோ, சீதையின் சுயம்வரத்தில் உடைக்கப்படும் தனுசு- வில் பெயர் சிவ தனுசு :-))

இராமாயணம்,மகாபாரதம் எல்லாம் சைவ சமயத்திற்கு போட்டியாக்க எழுதப்பட்டவை. அப்படியே கீதையும்.

இப்படியே பேசிக்கிட்டு திரிஞ்சா கூடிய சீக்கிரம் பச்சை சட்டை இல்லைனா பச்சை புடவை உமக்கு நிச்சயம் :-))

நீர் எந்த அளவுக்கு அறைவேக்காடுனு உம்ம பதில்களே காட்டிக்கொடுக்குது நான் எல்லாம் உம்மை அம்பலப்படுத்தவே வேண்டாம் :-))

இப்பவும் நான் போட்ட சவால், ரிக் வேதம் அப்படியே நிக்குது, ரிக் வேதத்தில் பெருமாலைப்பற்றி சொல்லி இருப்பது என்ன? கமான் டெல் மீ:-))

தானா வந்து சிக்கியாச்சு ,இப்போ என்ன பண்ணுறதுனு தெரியாம முழிக்கிறது நல்லா தெரியுது,விதி வலியது :-))
-----------------

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

என்னை குத்துறன்னே சொல்லியே உமக்கு டயர்டாகி போய் இருக்குமே :-))

"இவன் யார் என்று தெரியுமா,

தீ என்று புரியுமா"

ஹி...ஹி என்னை குத்தணும்,கொட்டணும்னு நினைச்சா கை தான் வலிக்கும், நான் காற்றை போல் சிக்க மாட்டேன் ,கல்லை போல் கடினமானவன் மோதியவர்களுக்கே மூக்குடையும் :-))

//பெயர் வாங்கிக் கொள்பவர்கள் மதத்தின் பெயரால் குண்டு வைத்திருந்தால் என்னாகியிருக்கும்?//

லோகநாயகரின் தீவிர அடிப்பொடியாக இருக்கலாம்,அதற்காக தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் வீட்டில வடை போண்டா சுடுவது போல வெடிகுண்டு செய்றாங்கன்னு நினைக்கும் உம்மை எல்லாம் கட்டிப்போட்டு "மன்மதன் அம்பு" திரைக்காவியத்தை 1000 தடவை பார்க்க வைக்கணும் :-))

இந்தியாவில் மத்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் எப்படியோ தமிழ்நாட்டில் எல்லாம் சைவம் ,அதாவது தீவிரமானவர்கள் இல்லைனு சொல்லுறேன்.

இப்போ வகாபிய தாக்கத்தால் கொஞ்சம் சத்தம் மட்டுமே பலமாக வருது, அதற்கே குண்டு ,துண்டுனு புரளியை கிளப்பாதீர்.

//எங்கோ ஒட்டகம் மேய்க்கும் எனக்கே ஜார்ஜ் போன்றவர்களுக்கு நமக்கும் தெரியாத உளவு செய்திகள் தெரிந்திருக்கும் என முன்னாடி சொல்ல தெரிந்திருக்கிறது எனபதையே இன்றைக்கு ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை சொன்னதால்தான் இந்த முடிவு எடுத்தேன் என்கிறார்.ஒரு மாநில முதலமைச்சராக அவர் சொல்வது சரிதான் என்று வைத்துக்கொண்டாலும் கூட//

இந்த கதைய விடவே மாட்டீரா? இதெல்லாம் சொன்னால் நம்பும் அளவுக்கு நான் ஒன்றும் பச்சைகுழந்தை அல்ல.

எப்படிய்யா சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்? அப்படி வராமல் செயல்பட வேண்டியது தான் ஆட்சியாளர்கள் கடமை.

ஆண்டு தோறும் டிசம்பர்-6 பாபர் மசூதி இடிப்பு நாள் வரத்தான் செய்யுது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்னு காலண்டரில் இருந்து டிசம்பர் 6 ஐ தூக்கிட்டாங்களா? அன்றைய தினம் பாதுகாப்பு வழங்குவதில்லையா?

அம்மையாரின் ஈகோ என்பது தான் சரி ,ஆனால் அப்படி ஈகோ புடிச்சவங்க எனக்கு சேட்டலைட்ஸ் உரிமம் வேணும்னா கேட்டாங்க, நீயா போய் வலிய குடுக்க வேண்டியது,அப்புறம் குத்துதே குடையுதேன்னா எப்பூடி.

சேட்டிலைட்ஸ் உரிமம் என்றால் அதனுள் டிடிஎச் உரிமம் அடங்கிவிடுகிறது, டிடிஎச் இல் போடும் திட்டம் வருமுன்னரே விற்றதால் ,அதனை சொல்லவில்லை என எதிர்ப்பு தெரிவித்து அதனாலேயே பிரச்சினை ஆரம்பித்தது.

சேட்டிலைட்ஸ் உரிமம் விற்கும் போது தெளிவாக சப் கிளாஸ் போட்டு டிடிஎச் உரிமம் பற்றி சொல்லி இருக்க வேண்டும், சொல்லவில்லை எனில் சேட்டிலைட்ஸ் உரிமம் வாங்கியவர்களுக்கே டிடிஎச் உரிமம் சேரும்.

நெகடிவ் ரைட்ஸ் என எழுதிக்கொடுப்பது கூட உண்டு அப்படி கொடுத்துவிட்டால் ,படத்தின் அனைத்துவகையான உரிமங்களும் போய்விடும். சினிமா ஒப்பந்தங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கவும்.

சாதரணமான இடமாக இருந்தால் முன்னுக்கு பின் முரணாக நடந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள், அரசியல் செல்வாக்குள்ள இடம், என்ன சொப்பு வச்சு விளையாடுற ஆட்டமா இதுனு இப்போ போட்டு வாங்குறாங்க.

// கமலுக்கான பொருளாதார,மன அழுத்தங்களின் இழப்பை ஈடு கட்டுவது யார்?//

பொருளாதார இழப்பு வரும் வாய்ப்பு குறைவு,ஆனால் லாபம் என ஒன்றும் கிடைக்காமல் போகலாம், லோகநாயகர் சொல்வது போல 100 கோடி எல்லாம் செலவாகவில்லை, பிவிபியிடம் வாங்கிய 50 கோடிக்குள் படம் எடுத்தாகிவிட்டது, இப்போ இந்த பிரச்சினையை வைத்து பிவிபிக்கு பிரமீட் சாய்மீரா போல ராமம் போட லோகநாயகர் திட்டமிடலாம், அடுத்தக்கட்ட பஞ்சாயத்து அதுவாகத்தான் இருக்கும் :-))

மன அழுத்தமெல்லாம் இவராக வாங்கியது, போதுமான லாபத்தில் படத்தினை விற்க வாய்ப்பிருந்தும், இன்னும் நிறைய கிடைக்கும் என பேராசைப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

# //கமலின் நடிப்பையும்,திரைப்படங்களையும் உணர்வால் உணரணும்.அலெக்ஸ் பாண்டியன் வீடியோ பார்சல் கேட்கும் ரசனைக்கெல்லாம் அது புரியாது:)//

நெட்டுப்புளிக்குதுல படம் பார்க்கும் உலக ரசனைகளின் சொந்தக்காரர் சொல்லீட்டாரு :-))

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

\\அப்போ வியாசர் சொல்லிட்டார் ,அதான் இறுதி தீர்ப்பு போல பேசினது :-))

வியாசர் எப்படி அவர் காலத்தில் காப்பி அடிச்சு வச்சாரோ,அதே போல பின்னாடியும் செய்தார்கள். எனவே வியாசரை அல்டிமேட் அத்தாட்சியாக இனியும் தூக்கிக்கிட்டு அலையாதீர்.\\வேதங்களை கம்போஸ் பண்றது அவ்வளவு ஈசியா? காப்பியடிச்சார் என்பது தவறு நான்கு பிரிவுகளாக்கி எழுத்து வடிவத்தில் தந்தார். அவரால் தொகுக்கப் பட்ட இலக்கியங்கள் என்றால் அவரது சொந்தக் கருத்து என்றாகி விடுமா?

\\எல்லாம் நான் சொல்லி தான் உமக்கு தெரிய வருது போல :-))\\ உங்களுக்குத் தெரியாதது உலகத்திலேயே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே!!



\\அது என்னய்யா வினம்? \\ வைணவம்.

\\அடுத்தவங்க தட்டச்சு பிழை செய்துட்டா அய்யோ ,அம்மான்னு குதிக்கிறது :-))\\ தட்டச்சு பிழை ஆயிரத்தை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம், நீர் பழமொழி தெரியாம வேற வார்த்தையைப் போட்டுட்டு, கேமராவில் மாட்டின சாமியார் மார்பிங் பண்ணிட்டங்கன்னு டபாய்ச்ச மாதிரி டபாய்க்கிறீரே, அதை... அதைத்தான்.... நம்புவதற்கில்லை.

\\நான் கேட்டது ரிக் வேதத்தில் இருக்கான்னு ,எவனாவது உம்மை போல போலி மந்திரவாதி யாகம் செய்யும் போது சொல்வதல்ல :-))\\ எல்லா யாகங்களிலும் விஷ்ணுவுக்கு இது அர்ப்பணம் என்றே முடியும். மேலும் என்னவோ ரிக் வேதத்தையே கரைச்சு குடிச்சா மாதிரி அதிலிருந்தே ஆதாரம் கேட்டுகிட்டு இருக்கீரு!! சாரி.... எனக்கு அதெல்லாம் தெரியாது, உமக்கு தெரிஞ்சா சொல்லலாம்.

\\குற்றவாளி குற்றமே செய்யலைனு சொல்லுறான் அப்புறமென்ன,நம்பிட வேண்டியது தான் :-))\\ கீதை வியாசரால் எழுதப் பட்ட இலக்கியம் தானே? கண்ணன் தானே எழுதியதல்லவே?!!

\\என் புருஷன் நல்லவன்,அவன் கூட வாழ கொடுத்து வச்சிருக்கணும்னு ஒரு கிணற்று தவளையா சொன்னால் தப்பில்லை, அதே போல நீங்களும் வாங்கன்னு எல்லா பொண்ணுங்களையும் கூப்பிட்டா எப்பூடி?\\ எல்லாத்துக்கும் கடவுள் ஒருத்தர் தானே? ஆளுக்கொரு கணவன் மாதிரி ஆளுக்கொரு கடவுள இல்லையே?

\\எனக்கு கூட ராதா,ருக்குமணி,பாமா போல ஃபிகர் தேவைப்படுது ,எங்கே கிடைக்கும்னு சொல்லுறது :-)) \\ அசின் படத்தை இந்த பாடு படுத்தும் போதே சந்தேகப் பட்டேன்!! இன்னமும் அலைஞ்சுகிட்டுத் தான் இருக்கீரா?

\\ஆட்டிசம் வந்த ஆடு போலவே பேசும், நான் பகவத்கீதையே செல்லாது சொன்னப்புறம்,அதை வச்சு நிருபிக்கணும்னு சொல்லுறீர் :-))\\ நாம போட்ட பதிவு கீதையை பிராச்சாரம் செய்து கொண்டு பித்தலாட்டம் செய்து கொண்டு இருக்கும் நாதாரிகளைப் பற்றியது, எனவே அதை ஆதாரமாக காட்ட வேண்டியிருக்கிறது.

\\சிவபுராணம் எல்லாம் வியாசருக்கு முன்னமே இருக்கு , இன்னும் சொல்லப்போனால் வைணவ சமயம் தோன்றும் முன்னரே சைவ சமயம் தோன்றி மக்கள் பயன்ப்பாட்டில் இருந்தது, சைவத்திற்கு போட்டியாக உருவானது தான் வைணவம், போய் சமய வரலாறு படிக்கவும்.

வியாசர் பாகவதம் எல்லாம் எப்போ எழுதினார், வியாசர் பொறக்கும் முன்னே எழுதப்பட்ட ராமாயணத்தில் சிவன் வருவதை அறிய மாட்டீரோ, சீதையின் சுயம்வரத்தில் உடைக்கப்படும் தனுசு- வில் பெயர் சிவ தனுசு :-))

இராமாயணம்,மகாபாரதம் எல்லாம் சைவ சமயத்திற்கு போட்டியாக்க எழுதப்பட்டவை. அப்படியே கீதையும்.\\ எப்படி வேண்டுமானாலும் மாத்தி மாத்தி பேசலாம், உண்மையாக இருக்க வேண்டுமே!!

\\தானா வந்து சிக்கியாச்சு ,இப்போ என்ன பண்ணுறதுனு தெரியாம முழிக்கிறது நல்லா தெரியுது,விதி வலியது :-))\\ பகவத் கீதையை ஏற்க வில்லை விதியை ஏற்க முடியுது!!! அது தான் விதிங்கிறது!!

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

//எல்லா சித்தாந்தங்களும் வியாசரின் இலக்கியங்களில் இருந்து உருவானவை. எனவே ஒன்னு அங்க ஒன்னு என்று மாத்தி மாத்தி எழுதியிருந்தா அது பின்பற்றத் தக்க இலக்கியமே அல்ல. The conclusive truth from Veda Vyasa's Literature is one and only one, it can not be two. It appears to be two because of your imperfect vision and lack of proper training.//

இப்படி சொன்னது நீர் தான் அதனால் தான் வியாசருக்கு முன்னரே வேதம் இருந்தது சைவ சமய சித்தாந்தம் இருந்தது என சொல்லி இருக்கிறேன்.

அப்புறம் அவர் சைவம் பத்தி சொல்லவில்லை அதனால் சைவம் இல்லைனு எங்கே இருந்து கண்டுப்பிடித்தீர்?

இப்போ என்ன சொல்லுறீர் வியாசர் கம்போஸ் தான் செய்தார்னு சொல்லுறீர், அப்போ கம்போஸ் செய்தவர் உள்ளதை உள்ளப்படி தானே செய்தார், புதுசா எப்படி சைவ சித்தாந்தம் வியாசர் சொல்லவில்லைனு சொல்லுறீர்.

வியாசர் செய்தது காப்பி அடிக்கும் வேலையே ,

1*2=2
2*2=4
3*2=6
4*2=8

இந்த ரெண்டாம் வாய்ப்பாடு முன்னரே இருக்கு, இதே போல 3,4,5.. என நிறைய வாய்ப்பாடு இருக்கு, இதை எழுதி வச்சா என்னனு சொல்வது?

#//உங்களுக்குத் தெரியாதது உலகத்திலேயே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே!!//

ஏன் எனில் நான் கடவுள், ஏக இறைவன் வவ்வாலின் கடாட்சம் என் மீது இறங்கியுள்ளது :-))

# வினம் = வைணவமா அப்போ ,ரெண்டுக்கும் என்ன தொடர்பு, தட்டச்சு பிழையா எழுதினாலும் இப்படியா எழுதுவாங்க ,அப்போ உமக்க்கு வைணவம்னா என்னனே தெரியாது, கிருஸ்ணா யாருனும் தெரியாது, பகவத் கீதையும் தெரியாது, :-))

அடுத்தவங்க தட்டச்சு பிழை செய்தா கொலை நீர் செய்தால் கலையா?

#//மேலும் என்னவோ ரிக் வேதத்தையே கரைச்சு குடிச்சா மாதிரி அதிலிருந்தே ஆதாரம் கேட்டுகிட்டு இருக்கீரு!! //

தெரியலைனா இப்படித்தான் உளரத்தோன்றும் :-))

அப்போ நீர் பகவத் கீதையே கரைச்சு குடிச்சீரா, இல்லை வியாசர் எழுதியது எல்லாம் கரைச்சு குடிச்சீரா, அவர் சொல்லிட்டார்,அதிலே இருக்கு, அதை வச்சு நிருபீனு கேட்டது நீர் தானே?

பதிலுக்கு கேட்டதும் பம்முறீர் இம்புட்டு தானா உம்ம டக்கு :-))

இனிமே எங்கேயாவது பகவத் கீதையில இருக்கு, வியாசர் சொன்னாருனு பேசிக்கிட்டு அலைவீர் நீர்?

வியாசர் சொன்னது தான் சித்தாந்தம்னு உம்ம வாயாலே சொல்லிட்டு அவரே காப்பி அடிச்சு எழுதி வச்ச ரிக் வேதம் பத்திக்கேட்டால் இப்படி பினாத்துறீர், அப்போ எந்த தைரியத்தில வியாசரை துணைக்கு கூப்பீட்டீர், சும்மா வியாசர் ,பாகவதம்னு அடிச்சு விட்டால் ஆஹா ரொம்ப படிச்சு இருப்பார் போலனு யாரும் உம்மை கேள்விக்கேட்க மாட்டாங்கன்னு நெனப்பு :-))

அதுக்கு வச்சோம்ல ஆப்பு, யாருக்கிட்டே :-))

// கீதை வியாசரால் எழுதப் பட்ட இலக்கியம் தானே? கண்ணன் தானே எழுதியதல்லவே?!!//

ஹெ..ஹெ..ஹெஹ்ஹ ஹே ...தானா வந்து ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தாச்சு , பகவத் கீதை வியாசர் எழுதின இலக்கியம்னு சொன்னால், அங்கே கிருஸ்ணா என்ற கடவுளுக்கு என்ன வேலை, அந்த கடவுளே வியாசர் எழுதிய பாரதம், பாகவதத்தில் வரும் கதாப்பாத்திரம் தானே :-))

எனவே கிருஸ்ணா என்ற பெயரும் வியாசரின் இலக்கிய படைப்பே :-))

பகவத் கீதை இறைநூல் இல்லை, ஒரு இலக்கியம், வியாசர் எழுதியது, அவ்வளவு தான் ...கதம் ...கதம்!!!!

வியாசர் என்பவர் சுஜாதா,கல்கி,ராஜேஷ்குமார்,புஷ்பா தங்கதுரை போன்ற எழுத்தாளரே, அவர் எழுதிய நூலை உலக ஆதாரமாக சொல்லிக்கொண்டு அலைவது சின்னப்புள்ளத்தனமான ஒன்று!

கிருஸ்ணா என்ற கதாபாத்திரமே வியாசர் தன்னை ஒரு ஹீரோவாக நினைத்து படைத்துக்கொண்டது ஏன் எனில் வியாசரின் பேரு தான் கிருஸ்ணா :-))

கிருஸ்ண த்வைபாயன வியாசர் என்பதே அவர் முழுப்பெயர்!!!

//விதியை ஏற்க முடியுது!!! அது தான் விதிங்கிறது!!//

வெளக்கெண்ணை ,விதி என்பது எல்லா கலாச்சாரத்திலும் , மதம், மெய்யியலிலும் உண்டு, புத்த மதமே விதியை தான் முன்னிறுத்துகின்றது,சமண மதத்திலும் உண்டு.

எனவே விதியை பற்றி சொல்ல பகவத் கீதை தேவையில்லை, கொஞ்சம் வாசிப்பனுவம் இருந்தாலே போதும்,நீர் தான் கிணற்று தவளை ஆச்சே ,சப்ளாக்கட்டை அடிச்சிட்டு , இஸ்கானில் குத்தாட்டம் போடவே நேரம் சரியாப்போயிடும் :-))

Jayadev Das said...

\\அப்புறம் அவர் சைவம் பத்தி சொல்லவில்லை அதனால் சைவம் இல்லைனு எங்கே இருந்து கண்டுப்பிடித்தீர்?\\ சிவா புராணம் அப்படின்னா என்ன வாத்தி?

\\இப்போ என்ன சொல்லுறீர் வியாசர் கம்போஸ் தான் செய்தார்னு சொல்லுறீர், அப்போ கம்போஸ் செய்தவர் உள்ளதை உள்ளப்படி தானே செய்தார், புதுசா எப்படி சைவ சித்தாந்தம் வியாசர் சொல்லவில்லைனு சொல்லுறீர்.\\ சிவா புராணம் அவர் தொகுத்ததே என்று சொன்னேனே. அப்புறமென்ன?


\\வியாசர் செய்தது காப்பி அடிக்கும் வேலையே ,\\ டாகடர் இதய ஆபரேஷன் பண்ணினால் இருக்கும் இதயத்தைத் தான் பண்ணுவார், ஆனாலும் அதைச் செய்ய தகுத்யடைவது எளிதா?

\\அடுத்தவங்க தட்டச்சு பிழை செய்தா கொலை நீர் செய்தால் கலையா?\\ தெரிச்சே தான் நீர் அந்த வார்த்தையைப் போட்டீர்........ பிழையாக அல்ல.

\\அப்போ நீர் பகவத் கீதையே கரைச்சு குடிச்சீரா, இல்லை வியாசர் எழுதியது எல்லாம் கரைச்சு குடிச்சீரா, அவர் சொல்லிட்டார்,அதிலே இருக்கு, அதை வச்சு நிருபீனு கேட்டது நீர் தானே?\\ ஒரு முறை படிச்சிருக்கேன் நிறைய ஸ்லோகங்கள் தெரியும். நீர் ஒருதடவையாவது ரிக் வேதத்தை முழுசா படிச்சிருக்கீரா? கீதையில் எந்த வாதத்தை வைத்தாலும் நொடியில் சம்பந்தப் பட்ட ஸ்லோகத்தை எடுக்க முடியும், ரிக் வேதத்தில் அது மாதிரி எதையாவது உம்மால் காட்ட முடியுமா? [இப்பவும் நான் புருடா உட்டா அது சரியான்னு கூட உம்மால கண்டு புடிக்கத் தெரியாது, வெறும் கேள்வி எதுக்கு?!]

\\பகவத் கீதை வியாசர் எழுதின இலக்கியம்னு சொன்னால், அங்கே கிருஸ்ணா என்ற கடவுளுக்கு என்ன வேலை, அந்த கடவுளே வியாசர் எழுதிய பாரதம், பாகவதத்தில் வரும் கதாப்பாத்திரம் தானே :-))
எனவே கிருஸ்ணா என்ற பெயரும் வியாசரின் இலக்கிய படைப்பே :-))
பகவத் கீதை இறைநூல் இல்லை, ஒரு இலக்கியம், வியாசர் எழுதியது, அவ்வளவு தான் ...கதம் ...கதம்!!!!
வியாசர் என்பவர் சுஜாதா,கல்கி,ராஜேஷ்குமார்,புஷ்
பா தங்கதுரை போன்ற எழுத்தாளரே, அவர் எழுதிய நூலை உலக ஆதாரமாக சொல்லிக்கொண்டு அலைவது சின்னப்புள்ளத்தனமான ஒன்று!\\ புராணம் என்ன கதையா? ரிக் வேதத்தை கேட்கும் உமக்கு இந்த வார்த்தையின் அர்த்தம் திரியாதது வியப்பாய் இருக்கு. புராணம் என்றால் வரலாறு, பழைய போன்ற பொருள் கொண்ட வார்த்தை. அவர் எழுதியது கதை இல்ல நைனா, historical recording. அதுக்குத்தான் சொல்றது, விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட இருந்து கத்துக்கணும்னு. இல்லாட்டி இப்படி பினாத்திகிட்டு இருக்க வேண்டியது தான்.

\\நீர் தான் கிணற்று தவளை ஆச்சே \\ சரி எல்லாம் தெரிஞ்சவரே!!

வவ்வால் said...

பாகவதரே,

மீசையில மண் ஒட்டியிருக்கு தொடைச்சுக்கும் :-))

சிவபுராணம் இருக்கு தானே அப்புறம் என்ன , சிவனை அடைவதே மோட்சம் என நினைப்பவர்கள் பகவத் கீதையோ, கிருஸ்ணாவையே நம்ப தேவையில்லை, நீர் சைவ சித்தாந்தத்தை போலினு சொன்னதால் தான் இந்த விவாதமே வந்தது, இப்போ அப்படியே உல்டாவா இருக்குனு ஒத்துக்கொண்டீர் , இனிமே எங்கேயாவது எல்லாம் பகவத்கீதை படி குருவே தேடணும்னு சொல்லூவீரா?

என்னால் மோட்சத்துக்கு வழி காட்ட முடியும், என்னை அனுகி மோட்சம் செல்லும் வழியை அறிந்துக்கொள்வீராகா :-))

//டாகடர் இதய ஆபரேஷன் பண்ணினால் இருக்கும் இதயத்தைத் தான் பண்ணுவார், ஆனாலும் அதைச் செய்ய தகுத்யடைவது எளிதா?//

மக்கு பாகவதரே, நல்லா இருக்கும் இதயத்தை சும்மா டைம்பாசுக்கு ஆபரேஷன் செய்வார்ரா டாக்டர் :-))

இதயம் பழுதடைவதை தான் சரி செய்வார், ஆபரேஷன் செய்து இதயத்தை நுரையீரலாக மாற்றுவதில்லை.

நீர் என்ன சொன்னீர் வியாசர் சொல்றபடி சித்தாந்தம் இருக்கானு கேட்டீர், அது வியாசருக்கு முன்னமே இருக்குனு சொல்லவே அவர் செய்த வேலை காப்பி அடிச்சது என்றேன்,எனவே நீர் வியாசரை அளவு கோலாக முன் வைப்பது பிழை என்பது புரிந்திருக்கும்.

///தெரிச்சே தான் நீர் அந்த வார்த்தையைப் போட்டீர்........ பிழையாக அல்ல.//

அது எப்படி ஓய் எனக்கு என்ன தெரியும்னு உமக்க்கு தெரியும் :-))

அப்போ நீரும் தெரிஞ்சே தான் வினம் என எழுதினீர்,ஏன் எனில் உமக்கு வைணவம்னா என்னனே தெரியாது என்பது எனக்கு தெரியும் :-))

//இப்பவும் நான் புருடா உட்டா அது சரியான்னு கூட உம்மால கண்டு புடிக்கத் தெரியாது, //

புருடா விடுறது தானே உம்மோட வேலையே :-))

நீர் புருடா விட்டால் நொடியில் என்னாலும் அம்பலப்படுத்த முடியும் :-))

அத்வைத கருத்தினை வைத்து புருடா விட்டதை அம்பலப்படுத்தவில்லையா, அதே போல உம்ம போலி ஆன்மிக கருத்துக்களை அம்பலப்படுத்துவது ஒன்றும் பெரிய விடயமில்லை.

//அவர் எழுதியது கதை இல்ல நைனா, historical recording. //

கொஞ்ச நேரமுன்னர் "இலக்கியம்"னு சொன்னது எந்த வாயி,நாற வாயா:-))

மறுபடியும் வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டீர்,

புராணம் என்றால் வரலாற்று ஆவணம் என நிருபிக்கவும் :-))

ஆதாரமில்லாமல் புனையப்படும் பழங்கதையே புராணம்,அது நம்பிக்கை அடிப்படையிலானது, ராமர் பாலம் குறித்து உச்ச நீதி மன்ற தீர்ப்பினை படித்து பார்க்கவும் :-))

கண்ணா(சூப்பர் ஸ்டைலில் படிக்கவும்) நம்மக்கிட்டே ஆதாரமில்லாமல் வாய் ஜால வித்தையெல்லாம் செல்லாது!!!

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ...

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் கொள்ள,

அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல

அடி தாங்கும் உள்ளமிது இடி தாங்குமா

இடி போல வவ்வால் வந்தால் யார் தாங்குவார் :-))

பாட்டு டெடிக்கேட்டட் டு பாகவதர் :-))

// சரி எல்லாம் தெரிஞ்சவரே!!//

ஏக இறைவன் வவ்வாலின் மகிமையை இப்போவாது புரிஞ்சுக்கிட்டீரே :-))

Anonymous said...

Excellent Vovs...very nice rivet to Dass...I am also an atheist and your comments are really good. Dass must read From Volga to Ganga.

Anonymous said...

Excellent Vovs...very nice rivet to Dass...I am also an atheist and your comments are really good. Dass must read From Volga to Ganga.

by---
Maakkaan.

Jayadev Das said...

சிவா புராணம் எழுதியதால சிவன் தான் சுப்ரீம்னு அர்த்தமா? வாத்தி முதலில் நீர் திருக்குறள் சரியாகப் படியும், அப்புறம் ரிக் வேதம் குக் வேதமெல்லாத்துக்கும் போகலாம். நாலு இடத்தில் நாலு விதமாய் சொல்ல வியாசர் நீர் நினைப்பது போல கள்ளத் துறவி அல்ல. அவர் எழுதியது அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் முடிவு ஒன்றே தான் வரும். இவற்றை என் பதிவில் நான் மேற்கோள் காட்டியது அவற்றை நம்பாத நாதீகர்களுக்காக அல்ல, அவற்றை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போதிக்கும் போலிகளுக்காக. வியாசரின் இலக்கியங்கள் நாங்கள் ஏற்கமாட்டோம் என்ற யாரையும் நான் போலிகள் லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

மற்றபடி, ஆதி சங்கரர் பற்றி பதிவு வெளியாகும்.

நுணலும் என்பதை அறியாமல் இருக்கும் தமிழ் வாதியை நினைத்தால், கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்................. பழமொழிதான் ஞாபத்துக்கு வருகிறது. கல்வி என்பதை கலவி என்று போதிப்பதை நிறுத்தவும். வரட்டா!!

வவ்வால் said...

பாகவதரே,

உம்ம த்வைத சரக்கு காலியாகிடுச்சுன்னு நினைக்கிறேன்,திருக்குறளுக்கு வந்திட்டீர் :-))

நுணலும் என்பதை தவறாக தட்டச்சு செய்துவிட்டேன் என நானே சொன்னப்பிறகும் ,அதையே பிடித்து தொங்குவதில் இருந்து உமது தரப்பில் சொல்ல கூற்றுகளே இல்லை, எல்லா பக்கமும் அடி வாங்கியது உறுதியாகிவிட்டது.

நீர் சொன்ன வினம் என்றால் என்னனு சொல்லிட்டு போறது :-)) வியாசரின் இலக்கியத்தில் அப்படி இருக்கா?

பகவத் கீதையாவது ஒழுங்கா படியும் , அதில் சொல்லி இருப்பதும், ஏகத்துவம் தான், கிருஸ்ணா நானே அனைத்தும்னு தான் சொல்லி இருக்கார், எனவே அத்வைதமே அனைத்து இறையியல் தத்துவத்திலும் இறுதியானது.

வியாசர் கூட த்வைதம் மட்டுமே இருக்குனு சொல்லவில்லை, த்வைதம் கருத்தை மட்டுமே முன்னிருத்தியது மத்வாச்சாரியார் தான் ,வியாசர் அல்ல, எனவே ஒழுங்கா புராணத்தை படியும் இல்லைனா மூடிக்கிட்டு சப்ளாக்கட்டை அடியும், அதைவிட்டு போலி ஆன்மீகம் பேசினால் இப்படித்தான் அம்பலப்பட்டு அசிங்கப்படுவீர் :-))

நீர் எப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறீர் என்பது உமது பின்னூட்டங்களே சான்று, முதலில் இலக்கியம் என்றீர் ,அப்போ கதை தானே என்றால் வரலாற்று ஆவணம் என்றீர், எங்கே ஆதாரம் காட்டு என்றதும் வாயே திறக்கவில்லை :-))

வியாசர் எழுதியது எல்லாம் படிச்சு வச்சிருக்கேன் என்றீர் ,ரிக் வேதத்தில் என்ன சொல்லி இருக்கு என்றால் தெரியாது என்றீர், ஆனால் ரிக் வேதத்தையும் காப்பி அடிச்சு வச்சவர் வியாசர் தான் என்பது தெரியவில்லை :-))

நீர் யாரை ஆதாரமாக காட்டுகிறீரோ அவர் எழுதி வச்சதையும் படிப்பதில்லை,ஆனால் வாய் தான் வங்காள விரிகுடா போல :-))

உமக்கு பகவத் கீதை எல்லாம் படிச்சாலும் புரிவதில்லை என்பது தெளிவாகிறது, உமக்கு புரியக்கூடியது "காமசூத்திரா" தான் படிச்சு சித்தியடையும் :-))

என்னை குருவாக ஏற்று ஏக இறைவன் வவ்வாலை சரணடைந்தால் ஞானம் பெறலாம், முக்தி கிடைக்கும் வழியை காட்டுகிறேன் :-))

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!

//Excellent Vovs...very nice rivet to Dass...I am also an atheist and your comments are really good. Dass must read From Volga to Ganga.
//

நீங்களும் ஒரு பகுத்தறிவுவாதியா, சந்தோஷம், வாங்க நம்ம முகாமில் சேர்ந்து போலி ஆன்மீக மதவாதிகளை சுளுக்கெடுக்கலாம்:-))

ராகுல சாங்கிருத்யன் நூல் படிச்சிருக்கேன் இன்னும் முழுசா முடிக்கலை, அவரோட வாழ்க்கை வரலாறு கூட பாதி படிச்சேன்,சுவாரஸ்யமாக இருக்கும்,இந்திய கலைச்சிற்பிகள் என்ற வரிசையில் சாகித்ய அகதமி வெளியிட்டது,வல்லிக்கண்ணன் தமிழில் மொழிப்பெயர்த்தது.

அதை வச்சு ஒரு பதிவு எழுதினேன்,அப்புறம் பாதியில விட்டுட்டேன், டிராப்ட்ல இருக்கு போடுகிறேன்.

Jayadev Das said...

\\நுணலும் என்பதை தவறாக தட்டச்சு செய்துவிட்டேன் என நானே சொன்னப்பிறகும்\\ தட்டச்சு பண்ணும்போது நேர்ந்த தவறு அல்ல, அந்த வார்த்தையே உமக்குத் தெரியவில்லை, உமது மண்டையிலேயே நுணலை என்ற வார்த்தைதான் இருந்தது அதைத்தான் தட்டச்சு செய்தீர். தமிழ் வாத்திக்கு நுணலும் தன வாயால் கெடும் என்ற அடிப்படை பழமொழியே தெரியவில்லை, அதுக்கு தலைகீழாய் தொங்குவதை விட தூக்கு போட்டுக்கிட்டு தொங்கலாம்/நாக்கை புடுங்கிகிட்டு சாகலாம்.

தமிழ் வாத்தி என்றால், "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று சொன்னதையாவது முதலில் வாழ்வில் பின்பற்ற வேண்டும். நீர் திருக்குறளுக்கு ஊருபட்ட வியாக்கியானம் எழுதிவிட்டு கடைசியில் மிருங்களை அடித்து தின்னுவதால் என்ன தப்பு என்று பலமுறை எம்மிடம் சண்டைக்கு வந்துள்ளீர். தமிழன் அறிந்திருக்க வேண்டிய திருக்குறளை, ஒரு தமிழாசிரியனாய் இருந்தும் அறியாத நீர், நுணலும் என்ற எல்லோருக்கும் தெரிந்த வார்த்தையைக் கூட அறியாத நீர், ரிக் வேதம் குக் வேதம் பற்றி வாதிடலாம் வா ..... என்பது காமடியாக இல்லையா? சரி, எனக்கு ரிக் வேதம் தெரியவில்லை அதில் என்னதான் சொல்லியிருக்கிறான் என்று எதையாவது சொல்கிறீரா என்றால் அதுவும் இல்லை. முதலில் கூரை மீதேறி கோழியைப் பிடிக்கப் பாரும் அப்புறம் வானத்தின் மீதேறி வைகுந்தம் இருக்கிறதா என்று பார்க்க முயற்சி செய்யும்.

\\முதலில் இலக்கியம் என்றீர் ,அப்போ கதை தானே என்றால் வரலாற்று ஆவணம் என்றீர், எங்கே ஆதாரம் காட்டு என்றதும் வாயே திறக்கவில்லை :-)) \\புராணம் என்ற வார்த்தையின் பொருளே வரலாறு என்பதுதான். அதற்க்கு நீர் வேறு அர்த்தம் கற்ப்பித்தால் நான் பொறுப்பல்ல. ஏன் ஒரு இலக்கியம் வரலாற்றை சொல்லக் கூடாது என்று சட்டம் எங்கேயாவது போட்டுள்ளார்களா? வரலாற்று ஆவணம் என்றால் இன்றும் குருஷேத்ரம் உள்ளது, துவாரகை உள்ளது, விருந்தாவனம் உள்ளது, காந்தகார் உள்ளது, வேறு என்ன வேண்டும்?

வவ்வால் said...

பாகவதரே,

நீர் என்ன தான் கிடந்து குதிச்சாலும் வெளுத்த உமது சாயம் மீண்டும் ஏறாது :-))

அவுட் ஆஃப் கான்டெக்ஸ்ட்டில் பேச ஆரம்பித்த போதே உம்ம சரக்கு காலியாகிவிட்டது அனைவருக்கும் புரிந்து இருக்கும் :-))

அப்புறம் வினம் என்றால் என்னனு கேட்டேன் ,உம்ம மண்டையில வினம் ஏறிக்குந்திக்கொண்டதா :-))

//வரலாற்று ஆவணம் என்றால் இன்றும் குருஷேத்ரம் உள்ளது, துவாரகை உள்ளது, விருந்தாவனம் உள்ளது, காந்தகார் உள்ளது, வேறு என்ன வேண்டும்?//

ஆன்மீகம் தெரியாதுன்னு நினைச்சா உமக்கு எதுவுமே தெரியாது போல, இலக்கியம்,வரலாற்று ஆவணம் என எல்லாமே பால பாடம் எடுக்கணும் போல இருக்குதே, என்ன கொடுமை பாகவதரே :-))

சுஜாதா எழுதிய கதைகளில் கூட சிரிரெங்கம்ம், தேர்முட்டி என வரும்,அவை எல்லாம் இருக்கு ,அப்போ சுஜாதா கதைகள் எல்லாம் வரலாற்று ஆவணம் தானே :-))

உமக்கு புடிக்குமேனு "வினம்"!!?? சேர்ந்த சுஜாதா பேரை சொல்லி இருக்கேன் :-))

போய் மீண்டும் எலிமெண்டரி ஸ்கூலில் சேர்ந்து படியும், இல்லைனா ரெண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாம கஷ்டப்படுவீர் :-))

Anonymous said...

// "சிவா" புராணம் எழுதியதால சிவன் தான்...//


//"சிவன்" புராணம் எழுதியதால//..என்று இருக்கவேண்டும். தாஸ், தமிழிலே உமக்கு தற்குறி.....

--By, Maakkaan.

Jayadev Das said...

மிஸ்டர் மாக்கான்,

siva என்று போட்டால் சிவா என்று வருகிறது, என்ன செய்வேன்?!

தட்டச்சு பிழைகள் ஆயிரம் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம். இவர் பிழையாக எழுதவில்லை, நுணலும் என்பதை நுணலை என்று நினைத்துக் கொண்டு எழுதிவிட்டார், எனவே அவரது தட்டச்சு திறமை மீது அநியாய பழி போடாதீர். அது வேறு இது வேறு. பழி அவரது மண்டையில் தான் உள்ளது. தமிழிலேயே நுணலை என்று நினைத்துக் கொண்டுதான் எழுதியிருக்கிறார்தமிழ் வாத்தி ஒருத்தருக்கு இவ்வளவு எளிதான பழமொழி தெரியாமல் ஊரைச் சுற்றி உதார் விட்டுக் கொண்டு திரிவது வெட்கக் கேடு. நீர் மாக்கான் அல்ல, அசினுக்காக பிசினை வீணடிப்பவர் என்று நினைக்கிறேன். சரி தானே?!

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!

பாகவதருக்கு அடிச்சு அடிச்சு கை வீங்கிப்போச்சு ,சப்ளாக்கட்டையை அடிக்கிறத தான் சொன்னேன், அதான் தப்பு தப்பா வருது எல்லாம் :-))

-------------

ஓய் மக்கு பாகவதரே,

அப்போ வினம் என்றால் என்னய்யா ,அதான் உம்மண்டையில ஏறி இருக்கா?

படிக்கிறது பகவத் கீதையாம் "வைணவம்"னு கூட எழுத தெரியாதாம் :-))

நீர் ராதா,ருக்குமணி,பாமானு ஓயாம அடிக்கிறீர் சப்ளாக்கட்டையை :-))

Jayadev Das said...

\\அப்போ வினம் என்றால் என்னய்யா ,அதான் உம்மண்டையில ஏறி இருக்கா?\\

உமக்கும் எமக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. வினம் என்று நான் எழுதியதை வைணவம் என்று நீர் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. என்னிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டீர். ஆகையால் நான் தவறாக தட்டச்சு செய்தேன் என்பது உறுதியாகிறது.


ஆனால் நீர் தவறாக தட்டச்சு செய்ததை நீர் சொல்லாமலேயே நான் கண்டுபிடித்தேன், ஒருவேளை நீர் தவறாக தட்டச்சு செய்திருந்தால், "நுணலை" என்ற வார்த்தையைப் போட்டிருந்தால், தமிழின் நலம் கருதி, அதை திருத்தம் என்று அடுத்த பின்னூட்டத்தில் நீராகப் போட்டிருக்கவேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்ததால் புரிந்துகொண்டேன் புரியாதவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அவர்களுக்கும் நீர் தவறான ஒரு வார்த்தையை அறிமுகப் படுத்தி, தமிழை கொலை செய்கிறீர். [அதித்தான் எப்பவுமே செய்கிறீர் என்பது வேறு விஷயம்].

மேலும் என்னைப் போல தமிழை முதன்மையாக படிக்காதவர்கள், தமிழில் தவறு செய்யலாம் நீர் தமிழ் வாத்தி செய்யலாமா? சாதாரண வார்த்தையாக இருந்தால் பரவாயில்லை முக்கியமான பழமொழியில் செய்யலாமா? நீர் செய்த தவறு தட்டச்சில் அல்ல, உமக்கு தமிழ்ப் பழமொழியே தெரியவில்லை, உம்மை என்ன செய்வது? கல்வி என்பதை கலவி என்று உம மாணவர்களுக்குப் போதித்து, சரோஜாதேவி புத்தகத்தை தினமும் உற்று உற்று படித்து கண்ணு நிறங்களை பிர்த்தறியும் திறனை இழக்குமளவுக்கு போய்விட்டது. அத்தோடு விட்டீரா? கண்ட கண்ட அசின் படத்தை கட் பண்ணி உமது வீட்டுச் சுவர் பூராவும் ஒட்டி உமது பையன் பள்ளி பாடம் செய்ய வாங்கிவைத்திருந்த பிசின் [Gum ] எல்லாத்தையும் வீனடித்திருக்கிரீர், உம்மை என்ன செய்ய?

வாத்தி, மற்றவர்கள் தப்பு செய்யலாம், நீர் செய்யக் கூடாது. தமிழ் வார்த்தை தெரியாமல் வேறொன்றை போட்டுவிட்டு, தப்பா தட்டச்சு போட்டேன்னு டபாஇக்கக் கூடாது, உமது விரல்களே கோபம் வந்து உமது குரல்வளையை நெரிக்கும்.

மாக்கான் வேற ஆள் மாதிரி எனக்குத் தெரியவில்லை.

Jayadev Das said...

\\பாகவதருக்கு அடிச்சு அடிச்சு கை வீங்கிப்போச்சு\\ உமது கையில் உள்ள கைரேகைகள் சுத்தமா அழிச்சு போச்சு, லென்ஸ் வச்சும் ரேகை இருந்ததுக்கான தடயம் கொஞ்சமும் இல்லை, ஆனாலும் அசின் எனக்கு கிடைப்பாலான்னு இந்தாளு தினமும் என்கிட்ட வந்து கிளி ஜோசியம் கேட்டு உசிர வாங்கிறான்னு உம்ம தெருவில் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் கிளி ஜோசியக்காரன் என்கிட்ட சொல்லி அழுவரான்யா. திருந்துய்யா...... திருந்து.

வவ்வால் said...

பாகவதரே,

இத்தனை நாளா நீர் புழுகி வந்த புருடா புராணத்தை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஊதி தள்ளீட்டேன்னு கோவத்துல உமக்கு கண்ணு மண்ணு தெரியாம போச்சு , இட்ஸ் ஓகே, புதுசா எதாவது புக்கு வாங்கி வேற கதைய ஆரம்பியும்,இனிமே பகவத் கீதை,வியாசர், பாகவதம்னு நீர் சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கோ :-))

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!!

Anonymous said...

//நீர் மாக்கான் அல்ல, அசினுக்காக பிசினை வீணடிப்பவர் என்று நினைக்கிறேன்.//


தாஸ், இதுதான் ஆன்மீகவாதியின் நாகரீகமான சொற்கள்களா?...வெட்கக்கேடு.

By---
Maakkaan.

Anonymous said...

//நீர் மாக்கான் அல்ல, அசினுக்காக பிசினை வீணடிப்பவர் என்று நினைக்கிறேன்.//


தாஸ், இதுதான் ஆன்மீகவாதியின் நாகரீகமான சொற்களா?...வெட்கக்கேடு.

By---
Maakkaan.

Jayadev Das said...

அக்கவுண்டே இல்லாம இவ்வளவு கச்சிதமா பின்னூட்டம் போட்டு, அதைத் தொடர்ந்து பார்க்க முடியுமா. எனவே நீர் வேறு யாரும் அல்ல பிளாக் ஒனரேதான் என்பது எனது சந்தேகம்.

சரி ஆன்மீகவாதி ஒருத்தன்தான் நாகரீகமாக இருக்கனுமா? மத்தவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா? என்னை இப்படி கேட்ட உலக மகா யோக்கியனான நீங்க வவ்வாலைப் பார்த்து, \\பாகவதருக்கு அடிச்சு அடிச்சு கை வீங்கிப்போச்சு\\ என்று எழுதியது அநாகரீகம் என்று கேட்க வாய் வரவில்லையே ஏன்? எதற்கு உமக்கு இந்த மாதிரியான மானங்கெட்ட பொழப்பு? நியாயம்னா எல்லார் பக்கமும் அதே நியாத்தை பேசணும், அதை விட்டுட்டு ஒருத்தன் பக்கம் மட்டும் நியாத்தைக் கேட்கும் இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையில்லை.

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

நான் கலாய்ச்சதிலே மெண்டலாயிட்டீரா?

மாக்கானை பார்த்து அசிங்கமாக கமெண்ட் செய்தது நீர்,அதற்கு தான் கேள்வி கேட்கிறார், எனக்காக கேட்கவில்லை, என்னமோ பொதுவா பேசினதுக்கு கேட்டாப்போல நியாயம்னா ரெண்டுப்பக்கமும் கேட்கணும்னு வசனம் பேசிக்கிட்டு?

நீர் இப்போ செய்வது அவர் மீதான தனிமனித தாக்குதல்,எனவே மாக்கான் ,அவருக்காக தான் கேட்டுள்ளார், நியாயமாப்பார்த்தா மன்னிப்பு கேட்டுவிட்டு வாயை மூடிக்கொள்ளும்.

இதுவே உம்மை போன்ற கும்பலை சேர்ந்தவர்களாக இருந்தால், அய்யோ ,அம்மான்னு கூப்பாடு போட்டு பஞ்சாயத்து வச்சிருப்பாங்க :-))

Jayadev Das said...

வாத்தி,

இந்த பின்னூட்டத்தில் இருந்து உமக்கு சிங்கியடிக்க ஆரம்பிச்சிருக்கார்.

\\Excellent Vovs...very nice rivet to Dass...I am also an atheist and your comments are really good. Dass must read From Volga to Ganga.

by---
Maakkaan.\\

நடுநிலையான ஆள் என்றால் உம்மிடமுள்ள நிறைகளைச் சொன்ன இவர், தவறிழைக்கும் போதும் இடித்துரைத்திருக்க வேண்டும், செய்தாரா? நீர் கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப் படுத்தும் பொது வாயில் கொழுக்கட்டையை அல்லவா வைத்திருந்தார்? உமக்கு பதில் சொன்ன என்னை மட்டும் இவரு யோக்யமாய் இருக்கச் சொல்கிறார். எனக்கென்னமோ, நீர்தான் அனானியாக பதில் போடுவது போல இருக்கு. எந்த அனானியும் இப்படி தினமும் ஃ பாலோ செய்த மாதிரி தெரியவில்லை.

Anonymous said...

//உமக்கு பதில் சொன்ன என்னை மட்டும்...//

//நீர் மாக்கான் அல்ல, அசினுக்காக பிசினை வீணடிப்பவர் என்று நினைக்கிறேன்.//

The above comment was against me not Vovaal, so asked you.

//எந்த அனானியும் இப்படி தினமும் ஃ பாலோ செய்த மாதிரி தெரியவில்லை.//

I read daily 10 blogs one of which is Vovs, so don't be silly. I read Vovaal's site nearly 6 to 8 months and also comment in it, if you have any doubt verify.

By---
Maakkaan.



Jayadev Das said...

Dear Mr.Maakkaan,

You are different from Mr.Vovaal, let it be. No issues.

From the beginning, you have taken the side of Mr.Vovaal and appreciating his 'talents'. And you are reading scrutinizingly all the comments, and giving your own comments also. The moment you found Mr.Vovaal writing, \\பாகவதருக்கு அடிச்சு அடிச்சு கை வீங்கிப்போச்சு\\ you should have told him, that it is indecent way of expressing views. Did you do that? what prevented from doint it? Was there "kolukkattai" in your mouth?

Be honest man...........

Anonymous said...

First reply from you: //நீர் மாக்கான் அல்ல, அசினுக்காக பிசினை வீணடிப்பவர் என்று நினைக்கிறேன். சரி தானே?!//

For this type of reply vovaal's comment: //மாக்கான்,

நன்றி!

பாகவதருக்கு அடிச்சு அடிச்சு கை வீங்கிப்போச்சு ,சப்ளாக்கட்டையை அடிக்கிறத தான் சொன்னேன், அதான் தப்பு தப்பா வருது எல்லாம் :-))
------------------------------
Tell me who is crossing the limit first? (with me).

I'm reader of this blog and I have been insulted by your reply, thats why Vovs commented like that.

----by--
Maakkaan.


Jayadev Das said...

Before your first comment itself vavaal used foul language,

\\எனக்கு கூட ராதா,ருக்குமணி,பாமா போல ஃபிகர் தேவைப்படுது ,எங்கே கிடைக்கும்னு சொல்லுறது :-)) \\

and you appreciated his wonderful 'job'.

In addition you yourself used the word 'rivet' to an unknown person, is it decency?

Do you think only spiritual fellows should posses all virtues, and you will do all non-sense and still have the rights to question?

வவ்வால் said...

பாகவதரே,

மாக்கான் என்னை பாராட்டினது தான் இப்போ உம்ம பிரச்சினையா?

//\\எனக்கு கூட ராதா,ருக்குமணி,பாமா போல ஃபிகர் தேவைப்படுது ,எங்கே கிடைக்கும்னு சொல்லுறது :-)) \\

இதுக்காகவா பாராட்டுவார் ,நான் சொன்ன தர்க்க ரீதியான கருத்துக்களுக்கு தான் பாராட்டினார்,நீர் ஏன் சின்னத்தனமா இதை மட்டும் எடுத்து சொல்லுறீர்.

சரிங்க மாக்கான் நல்லா நச்சுனு என்னை நாலு வார்த்தை திட்டுங்க,பாகவதர் ஆசைப்பட்டு கேட்கிறார் இல்ல :-))

ஒருத்தர் பாராட்டுவது அவர் சுய விருப்பம், பாராட்டினியே ஏன் திட்டலைனு கேட்பது என்ன பொழப்பு?

நமக்குள்ள பேசியதற்கு மாக்கான் என்ன செய்வார்? நீர் தான் கேட்க்கணும் என்னை.

மேலும் நீரும் இங்கே வேதம் சொல்லிக்கிட்டு இல்லை எல்லா அநாகரிக வசைகளையும் பயன்ப்படுத்தியாச்சு,நான் திருப்பி கொடுக்கிறேன்,உமக்கு வலிக்குது :-))

இதைத்தான் நான் அப்போவே சொன்னேன் நீர் தொட்டாச்சிணுங்கியாச்சேனு ,அதுக்கு அப்படிலாம் இல்லைனு வேற சொல்லிக்கிட்டீர்.

நான் பேசுவதற்கு என்னிடம் தான் கேள்விக்கேட்க்கனும்,அவரிடம் கேட்பதில்லை பொருளேயில்லை.

என்னிடம் மாட்டிக்கொண்டு நீர் விழிப்பதை பார்த்து நான் ரிவெட் அடிப்பதாக என்னிடம் சொன்னார் , நீர் தான் வல்லவர் ,நல்லவர் ஆச்சே எப்படி ரிவெட் வாங்குவீர்னு சும்மா இருக்கிறது,அப்போ உமக்கும் அந்த ஃபீலிங் தான் :-))

சரி விடும் வேறு ஒரு பதிவில் இதே போல பேசியதேயில்லையா? அதை எல்லாம் நான் கேட்டுள்ளேனா,நானே பதில் கொடுத்துவிட்டு சென்று விடுவேன், உம்மை போல ஒப்பாறி வைப்பதில்லை.

கொஞ்சம் வளரும்,சின்னப்புள்ளத்தனமா கில்லிட்டான்னு அழாதீர்.
-------------

மாக்கான்,

கூல்,பாகவதர் சின்னப்புள்ளத்தனமா பேசியதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்.

Anonymous said...

\\எனக்கு கூட ராதா,ருக்குமணி,பாமா போல ஃபிகர் தேவைப்படுது ,எங்கே கிடைக்கும்னு சொல்லுறது :-)) \\


If I appreciate for the above comment, why should I add these lines..."I am also an ATHEIST and your comments are really good. Dass must read From Volga to Ganga."

"ATHEIST" and "must read From Volga to Ganga" book.

These are the core of my comment as Vovs understands this well, so he told,...

//இதுக்காகவா பாராட்டுவார் ,நான் சொன்ன தர்க்க ரீதியான கருத்துக்களுக்கு தான் பாராட்டினார்//...

Try to understand Mr. Das.


-----by---
Maakkaan.



Jayadev Das said...

\\நான் சொன்ன தர்க்க ரீதியான கருத்துக்களுக்கு தான் பாராட்டினார்\\ இது உமக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? எவ்வளவு உதை வாங்கினாலும் வலிக்காத மாதிரியே கடைசி வரை சமாளிக்கும் நீர் நான் புலம்புவதாக நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்ளலாம், ஒருவேளை அது உமக்கு மன ஆறுதலைத் தருகிறது என்றால் OK. அது உண்மையா என்பது தான் கேள்வி!

Jayadev Das said...

Mr.Maakkaan,

If you & Mr.Bat are not identical personalities, then it is fine. Mr.Bat is the only guy who wastes Gum for Asin in the whole world of Tamil Bloggers. Many had advised him that she is no longer young and has lost all her charm but he never listens to any of them and adamantly wastes the Gum purchased for his son's school project work. If you are different person, then that comment is not applicable to you, don't worry. Don't make friendship with bad people, people may through buffalo dung at them, you may get your share, if you associate with them. Be watchful.

Jayadev Das said...

\\through\\ throw

வவ்வால் said...

பாகவதரே,

உம்ம சாயம் வெளுத்துப்போன கடுப்பில் என்னமோ பினாத்துறீர், மாக்கான் மற்றும் நான் இதை பெருசா எடுத்துக்கலை.

அவரு தான் நான் சொல்வது ,நீர் எம்மாம் பெரிய கத்துக்குட்டினு வெளிச்சம் போட்டுக்காட்டுது.

இதே போல உம்ம பதிவில் கமெண்ட் போடுற ஒருத்தர் தான் நீர்னு சொன்னா ,அப்புறம் தூக்கம் கெட்டுப்போச்சு அழுவீர் :-))


நீர் நொந்துப்போய் புலம்புவதை பார்த்தால் எனக்கு பார்த்திபன் படத்தில் வரும்"புலாவ் சுலாக்கி" காமெடி தான் நியாபகம் வருது :-))

அது என்ன ஓய் , உமக்கு திராணியில்லாம மாட்டிக்கிட்டதும்,என்ப்பதிவுக்கு வருபவர்களை மிரட்டிறீர், படிக்கிறவங்க அவங்க இஷ்டம் நீர் என்ன சொல்வது எதை படிக்கணும் ,படிக்க கூடாதுனு கலாச்சார காவலர் வேடம் போட்டுக்கிட்டு, இதே போல உம்ம பதிவுக்கு வருபவர்களை நான் கலாய்ச்சா என்னாகும் தெரியுமில்ல, நிறைய பேரு தூக்கம் போயிடும் :-))

டோட்டல் டேமேஜ் ஆகிடும் சொல்லிட்டேன்,

"இவன் யார் என்று தெரிகிறதா

தீ என்று புரிகிறதா "

வவ்வாலின் விஷ்வரூபம் பார்க்கணும்னு ஆசை பட வேண்டாம், பார்த்தால் தாங்க முடியாது :-))

Jayadev Das said...


\\இதே போல உம்ம பதிவில் கமெண்ட் போடுற ஒருத்தர் தான் நீர்னு சொன்னா ,அப்புறம் தூக்கம் கெட்டுப்போச்சு அழுவீர் :-))\\ வாத்தி நீ எதை வேண்டுமானாலும் செய்யத் துணிஞ்ச ஆளுதான்யா, இதையும் செய்வீரு............. ஆச்சரியம் ஒன்னும் இல்லை.

\\என்ப்பதிவுக்கு வருபவர்களை மிரட்டிறீர், படிக்கிறவங்க அவங்க இஷ்டம் நீர் என்ன சொல்வது எதை படிக்கணும் ,படிக்க கூடாதுனு கலாச்சார காவலர் வேடம் போட்டுக்கிட்டு, இதே போல உம்ம பதிவுக்கு வருபவர்களை நான் கலாய்ச்சா என்னாகும் தெரியுமில்ல, நிறைய பேரு தூக்கம் போயிடும் :-))\\ உம்ம பதிவில் சும்மா இருப்பவர்களையா நான் கலாய்ச்சேன்? நீர் பண்ணும் அட்டூழியங்களைப் பார்த்து பாராட்டி விட்டு, என்னைப் பார்த்து ரிவிட் அடிப்பேன்னு சொல்லலாமா? உம்மை பார்த்து ரிவிட் அடிப்பேன்னு சொன்ன நீர் மட்டும் சும்மா இருப்பீரா? அனானி இவ்வளவு கச்சிதாமா ஃ பாலோ பண்ண முடியாதுன்னு சின்ன டவுட்டு, [அது இன்னமும் இருக்கு. ]

\\டோட்டல் டேமேஜ் ஆகிடும் சொல்லிட்டேன்,

"இவன் யார் என்று தெரிகிறதா

தீ என்று புரிகிறதா "\\ விசை படத்து பஞ்சு டயலாக் மாதிரி இருக்கு. அசின் கூட அவர் நடிச்ச படத்த பார்த்து ரசிச்சிருப்பீரோ!!

\\வவ்வாலின் விஷ்வரூபம் பார்க்கணும்னு ஆசை பட வேண்டாம், பார்த்தால் தாங்க முடியாது :-))\\ அவ்வளவு கேவலமாவா இருக்கும்??!!

Anonymous said...

//அனானி இவ்வளவு கச்சிதாமா ஃ பாலோ பண்ண முடியாதுன்னு சின்ன டவுட்டு.//

உங்க டவுட்டுல தீயை வைக்க.

//I read Vovaal's site nearly 6 to 8 months and also comment in it, if you have any doubt verify.//

Thats my yesterday's reply to you.

See old posts'comment section. :-)

---by---
Maakkaan.

Jayadev Das said...

மிஸ்டர் மாக்கான், உங்க தலையில ஐஸை வைக்க, டவுட்டுதானே இருக்கு, SURE ஆக இல்லையே, கவலையை உடுங்க. வவ்வால் எதை வேணுமின்னாலும் செய்யுற ஆளு. தமிழை கொலை பண்ணிட்டு தட்டச்சு மேல பலியை போடுறாரு. அதான் டவுட்டு.

வவ்வால் said...

மக்கு பாகவதரே,

நான்,உமக்கு ரிவிட் அடிச்சதா தான் சொல்லி இருக்கார் மக்கான்(உண்மை தானே), அவர் அடிப்பேன்னு சொல்லவில்லை,நல்லாப்படிச்சி பாரும்.

ரொம்ப கலாய்ச்சிட்டேன் போல,பாகவதருக்கு மூளை கலங்கி போச்சூ போல :-))

டவுட்டா இருக்குன்னு சொல்லி சட்டையை கிழிச்சிக்கிடு அலையுறார் போல ,அய்யோ பாவம் :-((

# அது விசய் பஞ்சில்ல ஒய், ஓர் அய்யங்கார் சொன்ன பஞ்சு :-)) உமக்காக ஸ்பெஷலா எடுத்துப்போட்டேன் :-))

அப்போ விஷ்வரூபம் படம் கேவலமா இருக்கும்னு சொல்லுறீர் ,ரைட்டு :-))

Anonymous said...

அப்பாவி இந்துக்களை கோத்ராவில் எரித்து கொன்ற கயவர் கூட்டத்தை பழி வாங்கிய குஜராத் மக்களுக்கு மோடி எப்படி பொறுப்பாவார் ? எப்பவுமே மோடியை குறை கூறும் நீங்கள், எண்டா கோத்ர ரயில்வண்டி எரிப்பை பற்றி வாய் , கு..டி மூடி பேச மாட்டேங்கிரீர்கள் ? உனக்கு ஒரு நீதி, மோடிக்கு ஒரு நீதியா? உன்னைபோன்ற நாசகாரிகளுக்கு மோடிதான் வரவேண்டும். உன் வாலை அமெரிக்காவில் போய் ஆட்டிபாருடா..