இருபதுக்கு இருபதை அள்ளிவந்த நூற்றுக்கு நூறு சாம்பியன்களுக்கு மும்பையில் மிக ஆராவாரமான , உற்சாக வரவேற்பு நேற்று அளிக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராட்டு விழா நடைப்பெறும் வான்கடே மைதானம் வரையில் திறந்த பேருந்து ஒன்றில் வீரர்கள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். வழி நெடுக ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் தான் கூட பேருந்தில் இருந்தாவாறே ஆடி ஒத்துழைப்பு தந்து உற்சாகப்படுத்தியது வேகப்பந்து நடனப்புயல் ஸ்ரீசாந்த் மற்றும் சிக்சர் சிங்கம் யுவராஜ்.
திறந்தவெளிப்பேருந்தில் வீரர்களின் ஊர்வலம்:
அரசியல்வாதிகள் வழக்கம் போல தங்கள் வித்தையை இதிலும் காட்டி விட்டார்கள், வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் வீரர்களை பின் வரிசைக்கு தள்ளி விட்டனர், முன் வரிசையில் அரசியல்வாதிகளும் , கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுமே ஆக்ரமித்துக்கொண்டனர்.ரசிகர்கள் வந்தது T20 சாம்பியன் வீரர்களை பார்க்க தானே அன்றி இவர்களின் முகத்தை அல்ல. அரசியல்வாதிகளான சரத் பவார், மகாராஸ்டிர துணை முதல்வர் ஆகியோர் மைக் பிடித்து இதனை தங்கள் அரசியல் சாதனையாக்கி கொண்டதோடு அல்லாமல் காத்திருந்த ரசிகர்களின் பொறுமையையும் ஏகத்துக்கும் சோதித்து விட்டனர்.
தோனியின் சிறப்புரை வீடியோ:
செய்தி மற்றும் வீடியோ உபயம் ரெடீப், நன்றி: