Monday, July 23, 2007

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)
இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்
இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.
( low head dam)


பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.

15 comments:

முரளிகண்ணன் said...

useful information

வடுவூர் குமார் said...

எப்பவோ படித்தது.. கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறது.
நல்ல விபரங்கள்.

வவ்வால் said...

வ.முரளி , மற்றும் வ.குமார்,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Anonymous said...

தொடர்ந்து செறிவுடன் கூடிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.

வவ்வால் said...

வாங்க வெயிலான்,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்ற்! தொடர்ந்து இதே போல நான் எழுதினா மொக்கை பதிவுனு படிக்க வற ஒன்றிரண்டு பேரும் ஓடிருவாங்க, அப்போ அப்போ இப்படி கடி போடுறேன்!

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

ஆற்று நீரை எப்படி அளக்கிறார்கள் என்பது நன்கு புரிந்தது இப்போது. ஒரு மாதத்திற்குப் பின் மறக்காமல் இருக்க வேண்டும். :-) அப்படி மறந்துவிட்டால் மீண்டும் வந்து படிக்க வேண்டும்.

தமிழில் இது போன்ற பதிவுகள் இல்லை என்ற குறை பலருக்கும் உண்டு. அந்தக் குறையை இது போன்ற இடுகைகள் நீக்கும். நன்றி.

கருநாடகத்திலிருந்து மேட்டூருக்குத் தண்ணீர் வரும் போது குறைவது நீர் ஆவியாவதாலும் கரைகளிலும் படுகையிலும் நீர் ஊறி உட்செல்வதாலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 20% என்பது அந்த விரயத்திற்கு மிக அதிகமோ? அதனால் தான் தாவாவோ? விளக்குங்கள்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா? தமிழ்மணப்பட்டையைக் காண முடியவில்லையே?!

வவ்வால் said...

வாங்க குமரன்,

நன்றி!

தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி குமரன்,

20% நீர் அளவில் வேறுபாடு எல்லம் மிக அதிகம் , அந்த அளவிற்கு வித்தியாசம் வரக்கூடாது , ஒரு கன அடியில் 23.4 லிட்டர் நீர் இருக்கும் எனில் ஒரு டி.எம்.சி , 1000 மில்லியன் கன அடியில் எத்தனை லிட்டர் இருக்கும் , மிகப்பெறிய அளவு அது.1 ட்ம்c நீர் இருந்தால் சென்னை மாநகருக்கு 6 மாதம் குடி நீர் வழங்கலாம்.வீராணம் ஏரியின் கொள்ளளவு ஒரு ட்ம்cக்கும் குறைவே அது தான் சென்னைக்கு குடினீர் வழங்கிவருகிறது தற்போது.

ஆவியாதால், கரைகளில் நீர் கசிவு, நிலம் உறிஞ்சியது போன்ற காரணங்களால் ஏற்படும் இழப்பு சிறிய அளவே இருக்கும்,இருக்க வேண்டும், கர்நாடகா மற்றும் மேட்டுரில் பயன்படுத்துவது பழைய முறையிலான அளவிடும் முறை. புதிதாக மாற்ற வேண்டும்.

அப்போது தான் 20 சதவித மாறுபாடு ஏன் வருகிறது எனக்கண்டுபிடித்து தவிர்க்கலாம்,

//நீங்கள் தமிழ்மணத்தில் இணையவில்லையா?//
மறுமொழி மட்டுறுதல் செய்தால் தான் தமிழ்மணக்கருவி நிறுவமுடியும் என்று சொன்னர்கள். எந்த கட்டுப்பாட்டையும் படிப்போர் மீது திணிக்க விரும்பவில்லை.எனவே தமிழ்மணக்கருவி தேவை இல்லை நமக்கு அது என்று விட்டு விட்டேன். எனவே மறுமொழி திரட்டியிலும் வராது எனது பதிவு!

Anonymous said...

Sir, This information has cleard my long lasting doubts.It's a very nice article.Expecting more like this in future.Mahesh

வவ்வால் said...

வாங்க மகேஷ்,

வருகைக்கு நன்றி,அடிக்கடி வாங்க, ஏதோ எனக்கு தெரிஞ்சத பகிர்ந்து கொள்கிறேன்

நாஞ்சில் பிரதாப் said...

தெரியாத ஒரு விசயத்தை தெரியவைத்ததற்கு நன்றி...

வவ்வால் said...

நன்றி பிரதாப்குமார், அடிக்கடி வாங்க!

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி வவ்வால்.

நினைத்தேன். நீங்கள் அதனால் தான் தமிழ்மணத்தில் இணையவில்லை என்று. அது பழைய கட்டுப்பாடு. இப்போது அந்தக் கட்டுப்பாடு இல்லை. நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்திருக்கத் தேவையில்லை. அதனால் நீங்கள் இப்போது தாராளமாக இணையலாம். நீங்களாக இணைகிறீர்களா? நான் உங்கள் பதிவை இணைக்கட்டுமா? (ச்ச்சும்மா ஒரு மிரட்டல்) :-)

வவ்வால் said...

குமரன்,

நன்றி!

கட்டுப்பாடு எல்லாம் எடுத்தாச்சா, நான் கொஞ்சகாலம் வலைபதியவில்லை அதனால் இதனை அறிந்திருக்கவில்லை. பதிவு கருவிப்பட்டையை வைப்பதில் எனக்கென்ன ஆட்சேபம் இருக்க போகிறது. உடனே எங்கே இருக்குனு தேடிப்பார்த்து மாட்டிக்கிறேன்! தகவலுக்கு நன்றி குமரன்.

jansi kannan said...

Good Information.