Monday, October 24, 2011

கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை



கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை


அணு ஆற்றல் என்பது ஆபத்தான ஒன்றே அதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, அப்படியில்லை என்பவர்கள் எல்லாம் அரசியல் மற்றும் வியாபார புத்திசால 07;களே. அணு சக்திக்கு மாற்றாக உள்ள ஆற்றல் உற்பத்தி முறைகள்,

#அனல்
,#புனல்,
#கடல் அலை,
#காற்றாலை,
#சூரிய சக்தி,
#புவி வெப்ப சக்தி,
#இயற்கை எரிவாயு,
#குப்பைகள் மறுசுழற்சி எரிவாயு,

என பல பாதகமில்லா அல்லது குறைவான பாதகம் கொண்ட மாற்று ஆற்றல் உற்பத்தி முறைகள் உள்ளன, இணையத்தினால் நீங்களே அறிந 21;து; கொள்ள முடியும்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் போட்ட மாற்று ஆற்றல் குறித்த பதிவு.

கடலில் அலை அடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கூடன்குளம் அணுத்திட்டத்தின் மீதான எனது சந்தேகங்கள் சில இருக்கு,ரஷ்ய பொருளாதாரம் சரிந்த பின்னால் அங்கு ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டன அவற்றுக்காக தாயாரிக்கப்பட்ட அணு உலைகள் அப்படியே கிடக்கலாம் அவற்றை ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் ஆக இந்தியாவின் தலையில் கட்டுகிறார்களோ என்பது தான்.

மேலும் EVVR-1000 வகை அணு உலைகள் 1977 இல் டிசைன் செய்யப்பட்டவை, அதனை வடிவமைத்தவர் கூட விமான விபத்தில் போய் சேர்ந்துட்டார். இப்போதும் அவை இந்த காலத்திற்கு ஏற்றார் போல இருக்குமா? போன வருடம் வாங்கிய கணிணியே இந்த வருடம் புராதண பொருள் ஆகி விடுகிறது.

ஆனால் ரஷ்யா இந்த EVVR- 1000(water coold water moderated reactor) வகை அணு உலையை மேம்படுத்தி இருக்கோம் என்று சொல்கிறது ,யாரை வைத்து, எப்படி? வடிவமைத்தவர் தான் போய் சேர்ந்துட்டாரே? மேலும் இப்போ ரஷ்யா ஒரே ஒரு அணு உலை திட்டத்தை மட்டும் கையில் வைத்துள்ளது ஆனால் அதற்கு EVVR-1200 என புதிதாக சுட சுட வேறு வகை அணு உலை வடிவமைக்கிறார்கள். Ī;4;ம்மக்கிட்ட பழச வித்து அவங்க புதுசா செய்கிறார்கள் போல!

பொதுவாக எல்லா நாட்டு தயாரிப்பு அணு உலைகளும் ஆபத்தானவையே அதை விட ரஷ்ய தயாரிப்பு மீது தான் சந்தேகமா இருக்கு, காரணம் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் தரம் குறித்து அக்கரை கொள்பவர்கள் அல்ல. புள்ளையார் புடிக்க போய் கொரங்கு வந்தாலும் இதான்பா புள்ளையார் மாறு வேடத்தில இருக்கார்னு சொல்றவங்க.

மேலும் உலக அளவில் காப்புரிமை பெற்ற சில சிறப்பு தொழில்நுட்பங்கள் இருக்கு, அதனை எல்லாம் காசுக்கொடுத்து வாங்க மாட்டார்கள், அதற்கு பதில் ஜெனிரிக்கா இருக்கும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவர்களே ஒரு மாதிரி தயாரித்து பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

உதாரணமாக ரஷ்ய தயாரிப்பு தொலைக்காட்சிகளை அருகில் இருந்து பார்க்க கூடாது...ஏன் கண் கெட்டு விடுமா? இல்லை உயிரே போய் விடும் , எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும்.
தொலைக்காட்சிப்பெட்டியில் சிஆர்டி திரை சூடு ஆவதை தடுக்க ஒரு மின்சுற்று உள்ளது இது காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம், இதனை வாங்கி பயன்ப்படுத்தாமல், தூரமா உட்கார்ந்து பாருங்க, ரொம்ப நேரம் டீவி பார்க்காதிங்க 85;ு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுத்துட்டாங்க.நம்ம ஊரில் கூட சில சமயம் டீவி வெடித்து விட்டதுனு செய்தி வரும் ,காரணம் அந்த மின்சுற்று ஏதோ காரணத்தால் பழுதாவதால் தான். இப்போ திறந்த பொருளாதாரத்திற்கு வந்த பின் இறக்குமதி தொலைக்காட்சிப்பெட்டிகளை பயம் இல்லாமல் பயன்ப்படுத்துறாங்க.

அங்கே அதிகம் விற்பனையாகும் டீவி நம்ம ஊரு ஒனிடா டீவி தான். பத்துலட்சம் பெட்டிகளுக்கு மேல் விற்று சாதனைப்படைத்துள்ளது ஒனிடா! இதனை ஒனிடா டீவி தளத்தில் காணலாம்.

இதனை எதற்கு சொன்னேன் என்றால் சாதாரணமான டீவிக்கே இப்படினா அவங்க அணு உலை எப்படி இருக்கும்? அவங்க வெடிக்காதுனு சொல்றதுக்கு என்ன உத்திரவாதம்...கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க நாங்க என்ன பிரஷ்ஷர் குக்கரா விக்கிறோம்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

அதனால் தான் விபத்து ஏற்பட்டால் அது எங்களைக்கட்டுப்படுத்தாது, உங்க பொறுப்புனு இப்பவே நழுவிட்டாங்க.

சரி மக்களே இவ்வளவு நேரம் பாதகங்களைப்பார்த்தோம், இப்போ இங்கே நடக்கிறப்போறாட்டத்தின் பரிமாணத்தைப் பார்ப்போம், அதுக்குள்ள அரசியல்,சுயநலம், விளம்பர மோகம் எல்லாம் கலவையா ஒளிந்து இருக்கு.

கூடன்குளம் ஏன் கொதிக்கிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பொதுவாக ஒரு சந்தேகத்தினை எல்லாம் கேட்கிறாங்க, 1988 திட்டம் அறிவிக்கப்பட்டு 20 வருடமா இதோ அதோனு இழுத்து முடியப்போற நேரத்தில ஏன் இந்த போராட்டம் என்பதே?

போராட்ட்தில் கலந்து கொண்டவர்கள் படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன, அவர்களைப்பார்த்தால் அணு உலைக்கும் அடுப்பில வைக்கும் உலைக்கும் கூட வித்தியாசம் தெரியாது போல இருக்கு. பெரும்பாலும் இது போன்ற மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்றால் "அணு உலைனு சொல்றாங்க ஆபத்தானதுனு சொல்றாங்க ஆனால் அரசாங்கமே இதை செய்யுது, இனிமே நாங்க என்ன செய்றது.. எல்லாம் விதி...ஆண்டவன் இருக்கான் பார்த்துப்பான் என்று பெருமூச்சு விடுவார்கள் அவ்வளவே.



ஆரம்பத்தில் இத்தனை தீவிரம் இல்லாத போராட்டம் இப்போ மட்டும் ஏன் இப்படி தீவிரமாக? நியாயமான கேள்வி தான் ,வழக்கமாக சில ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு, சாலை சரியில்லை, பஸ் வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவார்கள், கடை அடைப்பு , ஏன் உண்ணாவிரதம் கூட இருப்பார்கள், சரியாக கண்டுக்கொள்ளப்படவில்லை எனில் தேர்தல் காலத்தில் , தேர்தல் புறக்கணிப்பு என ஒரு குண்டுப்போடுவார்கள், அவ்வளவு தான் மாவட்ட ஆட்சியர், எம்.எல் ஏ, மந்திரி என எல்லாம் ஓடி வந்து சமரசம் பேசி குறைகள் களையப்படும் என்று வாக்குறுதி அளிப்பார்கள்.

ஆனால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் சரி இப்போதைய உள்ளாட்சி தேர்தலின் போதும் சரி தேர்தல் புறக்கணிப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்ப்படுத்தவில்லை, ஏன் மந்திரம் மறந்து போச்சா? இதில் தேர்தலுக்காக ஒரு நாள் போராட்டத்துக்கு லீவ் எல்லாம் விட்டார்கள்.மாநில அரசை கோபப்படுத்தக்கூடாது என்பது போல அது இருந்தது.

இதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. அது என்ன?

எனவே எனக்குள் தூங்கிகொண்டிருந்த ' துப்பறியும் ஷெர்லாக்ஸ் ஜேம்ஸ் சாம்பு லால்"  விழித்துக்கொண்டான், என்னளவில் சிறிது முயற்சி செய்தேன், ஒரு தென்மாவட்ட நண்பரைப்பிடித்து கேட்டேன், அவர் லைட்டாக சொன்னாலும்,சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மேற்கொண்டு தெரிந்து கொள்ள சரி நாமும் இணையத்தை துழாவலாம் அது என்ன பூட்டியா இருக்குனு தேடினேன், அவர் சொன்னது உண்மை தான் என்பது போலவே செய்திகள் கிடைத்தன.

நான் பார்த்ததை பார்வைக்கு வைக்கிறேன், இதில் தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை, அப்படி நினைத்து யாரேனும் கச்சைக்கட்டிக்கொண்டு வந்தாலும் கவலை இல்லை!

கூடன்குளம் போராட்டம் திடீர் என்று ஒரு புதிய சக்தி பெற்றதற்கு பின்னால் இருப்பது ஒரு தனி மனிதரே,காரணம் மணல்!!! ஆம் மணல் தான் கார்னெட் மணல் தொழில். ஏற்கனவே 2007 இல் டாடா கார்னெட் மணல் , டைடானியம் டை ஆக்சைட் தொழில் தொடங்க வந்த போதும் விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்தி ஆனானப்பட்ட டாடாவுக்கே டாடா காட்டியவர் இந்த மணல் மனிதர்.

அனுசக்திக்கும் , கார்னெட் மணலுக்குமென்ன சம்பந்தம், அப்போ டாடா வை விரட்டினார் இப்போ ஏன் ?
பதில் இந்த செய்தியைப்பாருங்க, ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புதின் இந்தியா வந்த போது வெளியானது. கூடன்குளத்தில் அணு உலை அமைப்பதுடன் இந்திய-ரஷ்ய கூட்டுறவில் டைட்டானியம் டை ஆக்சைட் ஆலை அமைக்கப்படும் என்று 62;ப்பந்தம் கையொப்பம் ஆனதாக கூறுகிறது.

//Russian President Vladimir Putin arrived in India earlier in the day on a visit aimed at boosting trade ties and securing military and energy deals. Defense Minister Sergei Ivanov is also in the country, and has signed several arms deals, including an agreement on the licensed production two-day visit, the Russian president is expected to sign agreements on the construction of additional reactors for the Kudankulam NPP and of new nuclear plants in India under Russian designs, as well as setting up a Russian-Indian joint venture for the production of titanium dioxide and other titanium products.//

இப்போ தெரிஞ்சு இருக்குமே எலி ஏன் அம்மணமா ஓடுச்சுனு!

கஜினி முகம்மது, இந்தியாவின் மீது 17 முறை படை எடுத்தான் எனப்படித்துள்ளோம், உண்மையில் அவை படை எடுப்பே அல்ல கொள்ளை அடிக்க வந்த தாக்குதல்.முதல் முறை கஜினி முகம்மது வந்த போதே யாராவது இந்திய மன்னர்கள் செமத்தியாக கவனித்து இருந்தால் அவன் ஏன் 17 முறை மீண்டும் மீண்டும் படை/கொள்ளையடிக்க வந்திருக்கப்போகிறான்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கூடன்குளத்திற்கு முன்னரே தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டு செயல்ப்பட்டு வருகிறது இந்த அணு சக்தி எதிர்ப்பாளர்கள் அன்றே கல்ப்பாக்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி இருந்தால் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருக்கு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு வேளை எதிர்ப்பையும் மீறி கல்ப்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டிருந்தாலும் , மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் அணு உலை வைக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வந்திருக்காது. வேறு எதாவது மாநிலம் பார்த்திருப்பார்கள் கூடன் குளம் தப்பியிருக்கும்.கேரளாவில் 50;ரம்பத்திலேயே சரியாக எதிர்ப்பு காட்டினார்கள். எனவே தான் அங்கிருந்து அணு உலை கூடன் குளம் வந்தது.

நாம் அப்போது சரியான எதிர்ப்புக்காட்டவில்லை. இந்த 58;திர்ப்பாளர்களும் நேற்றுப்பிறந்து இன்று வளர்ந்து போராட்டத்தில் குதிக்கவில்லை. தொடர்ந்து கல்ப்பாக்கத்தில் போராடி இருக்கலாம். இப்போது கல்ப்பாக்கத்தில் உள்ள அணு உலை அதன் செயல்பாட்டின் இறுதி நிலையில் உள்ளது,ஒரு அணு உலையின் சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகளே, பின்னர் புதுப்பித்தால் மேலும் 15 ஆண்டுகள் ஓடும். புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். போதும் இதோடு மூடி விடுங்கள் என்று இவர்கள் போராடலாமே, ஒரு வேளை நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை போலும், கிடைத்தால் போராடுவார்களாயிருக்கும்!
----------------------------------------------

சரி ரஷ்யா கூட ஒப்பந்தம் போட்டா  என்ன அது இந்தியாவில வேற எங்காவது அமைக்கப்போறாங்க ,கூடன்குளத்துக்கா வருவாங்கனு கேட்கலாம், ஆம் அங்கே தான் வருவாங்க வேற வழியில்லை, தென் தமிழ் மாவட்ட கடல் ஓர கார்னெட் மணல் தான் இந்தியாவிலேயே தரமானது, ஏன் உலகத்திலேயே நல்ல தரமானதும் கூட.மேலும் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் டைட்டானியம் ஆலைகள் கடந்த சில ஆண்டுகளில் அரசின் ஆதரவில் வந்து விட்டது.

உலக டைட்டானியம் டை ஆக்சைட் தேவையில் 75% தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது, அதில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகம்.இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் தான் டைட்டானியம் அதிகம், தரமானதும் கூட. தமிழகத்தில ரொம்ப நாளா இந்த தொழில் நடக்கிறது.அந்த மணல் மனிதர் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பெரிய கார்னெட் தொழிலதிபர்.அவர்கள் தளத்தில் உங்களுக்கு எத்தனை டன் டைட்டானியம் வேண்டுமானாலும் எங்களால் சப்ளை செய்ய முடியும் எனப்பெருமையாக போட்டிருப்பதைக்காணாலாம்.

இது மட்டும் காரணம் அல்ல , சமிப காலமாக கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்கம், ஒரிசா , மேற்கில் கேரளா என புதிய கார்னெட் ஆலைகள் 49;ரசாலோ அல்லது தனியார் -ரஷ்ய கூட்டுடனோ; அமைக்கப்பட்டுவிட்டது.இப்போ அதிக வளமுள்ள தென் தமிழகத்தில் மட்டும் தனியார் ஒருவர் மட்டுமே கோலோச்சுகிறார். எனவே அங்கே ரஷ்ய-இந்திய ஆலை வர வாய்ப்பு மிக அதிகம்.

மேலும் சில டைட்டானியம் டை ஆக்ஸைட் ஆலைகள் பற்றிய செய்திகள்.

//Orissa titanium plant offers villagers jobs, work resumes
07-07-2008 18:32:04 by IANS ( 1 comment )
//Bhubaneswar, July 7 (IANS) The work at the site of a proposed titanium dioxide plant in Orissa’s Ganjam district was resumed after the company assured employment opportunities to villagers affected by the project, a government official said Monday. “The local villagers and administration allowed the company to resume work after it assured that it will provide work on priority basis to all the people who lost land due to the project,” additional district magistrate Madan Mohan Deo told IANS.//

//Kolkata-based Saraf Group and the Russian government are jointly setting up the plant in two phases in over 600 acres of land near Chhatrapur town, about 175 km from here.
The integrated plant will produce 40,000 tonnes per annum of titanium dioxide per year. The first phase of the project, with an investment of $250 million, is expected to turn commercial by the end of 2009.//
--------------------------------------------------

Kollam, Feb 27 (IANS) India Sunday join a select band of titamium sponge producers with Defence Minister A.K. Antony inaugurated a 500 tonne-capacity plant at Chavara near here.A select group of nations like the US, China, Japan and Britain have the technology for industrial-scale production of titanium sponge
-----------------------------------------------------

அதெல்லாம் இருக்கட்டும் அரசு ஆரம்பித்தால் என்ன அது ஒரு பக்கம் ,இவர் ஒரு பக்கம் நடத்தப்போறங்க எனலாம் . ஆனால் மணல் மனிதரின் பாராக்கிரமங்களைப் பார்த்தால் அவர் விட்டுக்கொடுக்க முன்வர மாட்டார் என்பது புரியும்.மேலும் மிக அதிக அளவில் முதலீடும் , 15 கிலோ மீட்டர் கடற்கரையை அரசிடம் இருந்து 40 ஆண்டு குத்தகை எடுத்துள்ளார்.


அங்கே
பீச் மினரல்ஸ் </span>என கம்பெனி வைத்துள்ளார், இது கூடன்குளத்தில் இருந்து கூப்பிடு தொலைவே.அது போக சொந்தமாக தேரிக்காட்டில் 2300 ஏக்கர் நிலம்
வளைத்துப்போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பினாமி நிலம், பொறம்போக்கு இடம் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில், இதனை எப்படி விடுவார். தூத்துக்குடியில் இருந்து கன்யாகுமரி வரை கடற்கரை அவரது கட்டுப்பாட்டில்.
மேலும் தற்போது அங்கே செயல்பட்டு வந்த கில்பர்ன் கெமிக்கல்ஸ் எனப்படும்
மற்றொரு டைட்டானியம்ம் டை ஆக்சைட் ஆலையும் வாங்கி விட்டார். இனி அவரது ஏக போகம் தான் அங்கே.

கார்னெட் மணல் அள்ளப்படும் இடங்களைக்காட்டும் படம்:





மணல் மனிதரின் கார்னெட் தொழில் சம்பந்தப்பட்ட செய்திக்குறிப்புகள்.



V.V. Mineral is the only company in India with a 15km stretch of beach area under a mining lease for 40 years. This ensures a continuous deposition of placer minerals from the Gulf of Mannar. The gulf's geological characteristics, typical wave action and beach structure make it a highly valuable zone for continuous deposition of heavy minerals like Garnet, Ilmenite, Rutile and Zircon. Another 2,300 acres of heavy minerals-rich land add to our total annual output of 150,000 metric tonnes of garnet ,2,25,000 metric tonnes of ilmenite, 12000 M.Tons of Zircon and 5000 M.Tons of Rutile.
---------------------------------------------------------------------------------------

Kilburn Chemicals sells TiO2 division
Kilburn Chemicals Ltd (KCL), a producer of anatase grade titanium dioxide, will sell its chemical division producing anatase grade titanium dioxide to S Vaikundarajan of partnership firm V V Mineral, one of the country’s largest producers of garnet & ilmenite, for an estimated Rs.110 crore, KCL said in a statement.


KCL has a manufacturing plant in Tuticorin, Tamil Nadu. KCL also manufactures the by-product ferrous sulphate. V V Minerals, established in 1989, is based in Tirunelveli, in Tamil Nadu and caters to Europe, Middle East, East Asia, Australia and USA.
Titanium Dioxide is a vital ingredient for diverse industrial applications and is one of the most commonly-used white pigment in the world. It is used for a variety of applications like manufacturing of paint, rubber, paper, detergents, cosmetics, printing inks, textiles, plastics among other products.
--------------------------------------------------------

 மணல் மனிதரின் ஆலையில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள், மேலும் சம்பளம் கொடுத்து ஊர் மக்கள் என முறை வைத்து ஆட்களை அனுப்புவதுடன், போராட்டத்தின் ஸ்பான்சரும் அவரே.கூடவே மிஷனரிகள், இன்ன பிறர் என சரியாக காய் நகர்த்தி கொண்டு போகிறார் என தோன்றுகிற;து.போராட்டம் நடத்தினால் தான் நாளைக்கு, வேலை ,அல்லது இழப்பீடு எல்லாம் கிடைக்கும் வரலைனா அரசாங்கம் கண்டுக்காது போன்ற நயமான அழைப்புகளும் உண்டு.

ஒரு வேளை அந்த மக்கள் பாவம் நல்ல மனுசன் அணு உலைக்கு எதிராக நல்லா ஆதரவு தருகிறார் என நினைத்துக்கொண்டிருக்கலாம்.அவர் மணலுக்காக ஆதரவு தருகிறார் என தெரியாமலே கூட இருக்கலாம்.மணல் மனிதர் பின் புலத்தில் இருப்பதால் தான் தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரம் போராட்டத்தில் பயன்ப்படுத்தப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலும் இப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலும் அம்மையாருக்கு மிக முக்கியமானவை, எனவே அம்மைக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார் அவர்.

ஒரு வேளைப்போராட்டம் வெற்றிப்பெற்றால் அணு உலையில் இருந்து மக்களும் தப்பிப்பார்கள், அவருக்கு மணலும் தப்பிக்குமĮ1;!

இந்திய அரசாங்கம் என்று இல்லை எந்த அரசுமே இந்த பிடிவாதம் கொண்டவையே,எனவே இவ்வளவு தூரம் வந்த திட்டத்தை கை விடாமல் மாற்று வழியில் மணல் மனிதரை மடக்கிடும் என தோன்றுகிறது, உங்க கார்னெட் பிசினெசுக்கு பங்கம் வராது, அங்கே ரஷ்ய கூட்டு ஆலை வராதுனு உத்திரவாதம் தந்தா போதும், அவர் கழண்டுப்பார், முன்னால் நிற்கும் சமூகப்போராளிகளுக்கு காத்து இறங்கிடும், நாங்க போரடினோம் என்னப்பண்றதுனு சொல்லி போராளிப்பட்டத்தை வாங்கிக்கிட்டு போய்டுவாங்க பாவம் மக்கள் தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும் வழக்கம் போல விதியை நொந்து வாழ்வார்கள்.

இதில் உள்ள அரசியல் என்னவென்றால், அம்மையாருக்கும் காங்கிரசுக்கும் ஆகாது, அம்மையாரின் ஆதரவு பெற்றவர் மணல் மனிதர், கடந்த சட்ட மன்ற தேர்தலில் "ரொம்ப" உதவியவர் மணல்மனிதர். தற்சமயம் காங்கிரசுக்கு குடைச்சல் கொடுக்க இது உதவும் என்பதால் தான் சாத்வீகமாக இருக்கிறார் அம்மையார். இல்லையென்றால் "இரும்புக்கரம்"பேசி இருக்கும்!

இப்போ காங்கிரசே பெங்களூரு வழக்கு விவகாரத்தில் சாதகம், திமுக கழட்டி விடல்,மேலும் சில முக்கிய புள்ளிகள் திஹார் கைது என அம்மைக்கு ஆதரவுக்காட்டினால் போதும், திமுகவின் இடத்தில் அம்மையார் ஒட்டிக்கொள்வார், மணல்மனிதரையும் தட்டி வைத்து விடுவார். பின்னர் சமூகப்போராளிகளும்" சமூகப்போராளிப்பட்டத்தை" தூக்கி தோளில் போட்டுகொண்டு போய்டுவாங்க பாவம் மக்கள் , வழக்கம் போல அவர்களுக்கு அல்வா தான்! ஆனால் இந்த தடவை ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா!

பின்குறிப்பு:

#எந்த ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ எண்ணி இப்பதிவிடவில்லை, எல்லாவற்றுக்குமே ஒரு மாற்றுப்பார்வை உண்டு அது போன்றதே இதுவும் எனவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

# இங்கு தரப்பட்டுள்ள செய்தி குறிப்புகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் சம்ப ந்தப்பட்ட இணைய தளங்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மை அவற்றை சார்ந்தே!

சுட்டிகள்:

# http://www.energy-daily.com/reports/Russia_To_Build_Four_More_Nuclear_Reactors_In_India_999.html

# http://www.vvmineral.com/mining.htm

#http://www.thaindian.com/newsportal/business/orissa-titanium-plant-offers-villagers-jobs-work-resumes_10068743.html

# http://www.chemindigest.com/news.html

53 comments:

ஜோதிஜி said...

ராஜ நடராஜன் மூலம் உள்ளே வந்தேன்.

ரொம்ப சிறப்பா எழுதியிருக்கீங்க.

கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

வவ்வால் said...

ஜோதிஜி,

மிக்க நன்றி, முதல் வரவா அல்லது முற்காலத்திலும் வந்தவரா , நியாபகம் இல்லை என் மறதிக்கு மன்னிக்கவும்.எனக்கு ஒரு தயக்கம் இருந்தது அதனாலேயே சுமார் 1 மாத காலமாக இது பற்றி பதிவுலகில் யாரிடமும் பேசவில்லை.சரி ரொம்ப நாள் பூட்டி வைக்க வேண்டாம்னு போட்டேன், நீங்க நல்லா இருக்குனு சொன்னது ... ஒரு ரிலிஃப் அ கொடுக்குது.(எங்கே கும்மிடுவாங்களோனு ஒரு நினைச்சேன்)

வவ்வால் said...

ஜோதிஜி,

இந்தப்பதிவை தமிழ் மணத்தில் கூட இணைக்க இயலவில்லை, சுமார் 2 ஆண்டு காலம் எதுவும் போடாததால் செயல் இழந்து விட்டது போல, எனது பதிவுகள்.

ஹிட்ஸ்காக பதிவு போடுவதில்லை என்பதால் யார் படித்தாலும் படிக்காவிட்டால்லும் பரவாயில்லைனு தான் போட்டேன்.

நீங்கள் கூகிள் பஸ் மட்டும் இல்லை எங்கே வேண்டுமானாலும் இணைக்கலாம், அல்லது பிரதியெடுத்து போடலாம்,(முடிந்தால் தமிழ் மணத்திலும் இணைக்கவும்) எல்லாருக்கும் இது பொருந்தும். அப்படியே நம்ம பேரையும் சொன்னா தன்யன் ஆவேன்!

ஹி ஹி ...ஒக்கெ ஒக்க டவுட்....இப்பவும் சரியா தான் எழுதி இருக்கனா? இல்லை சும்மானாச்சுக்கும் ராஜநட பதிவில் இருந்து இங்கே வந்தோம்னு ஆறுதலுக்கு சொல்றிங்களா?

கல்வெட்டு said...

சோறு ,வீடு தண்ணி என்று அடிப்படைப் பிரச்சனைகள் உள்ள மக்களை சுலபமாக எதற்குவேண்டுமானலும் பயன்படுத்திவிடலாம்.பல நேரங்களில் அவர்கள் தெரிந்தே ஏமாறுகிறார்கள். இயலாமை மற்றும் பல நிர்பந்தங்கள்.

:-((((((


கடவுளைக்கும்பிடவே என்றாலும் ஏமாற்றி, வற்புறுத்தி, காசுகொடுத்து கூட்டப்படும் கூட்டங்கள் ஏமாற்றுவேலை.

நல்ல காரியம் என்றாலும் தனது சுயநலனுக்காக மக்களை பகடைக்காயாக முன்னிறுத்துவது கேப்மாரித்தனம்.

மாற்றுப்பார்வையை பகிர்ந்த வவ்வாலுக்கு நன்றி!
கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை
http://vovalpaarvai.blogspot.com/2011/10/blog-post.html

அப்பப்ப வாங்க வவ்வால்

வவ்வால் said...

கல்வெட்டு,

ஆஹா.. உங்களைப்பார்த்ததில் மிக்க...மிக்க மகிழ்ச்சி, நலமா? நான் எல்லாம் பதிவு போட்டா யாரு படிக்கப்போறாங்கனு தான் நினைச்சேன்...நீங்கப்படிச்சதே 1000 பேர் படிச்சதுக்கு சமம்.(மொக்கைப்போட்டா எவன் படிப்பான்னு நீங்க கேட்பது எனக்கும் கேட்குது)

சில விஷயங்களை யாராவது பேசினா மாற்றுக்கருத்தே சொல்லக்கூடாதுனு எழதப்படாத சட்டங்கள் இருக்கு, எதாவது சொன்னா உனக்கு அந்த வலி, வேதனை தெரியுமானு எகிறாங்க.நீங்க நேர்மறையாக எடுத்துக்கொண்டு சொன்னதுக்கு மிக்க நன்றி, அவ்வப்போது வந்து கொண்டே இருப்பேன்... நமக்கெல்லாம் ஆற்றல் அழிவின்மை விதி தான் பாலப்பாடம்!

rajamelaiyur said...

நல்ல அலசல்

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்

இன்று என் வலையில்
இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
நன்கு எழுதியுள்ளீர்கள். நெடுநாளாகக் காணவில்லை. இப்படியான விடயங்களை எழுதுங்கள்,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ரவி said...

புட்டு புட்டு வெச்சிட்டீங்க வவ்வால்.. நன்றி...

ரவி said...

இது செந்தழல் ரவி ஐடி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து உண்மைகளை எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

யோஹன்,

வணக்கம்,
மிக்க நன்றி, இத்தனை நாட்களுக்கு அப்புறமும் நினைவில் வைத்திருக்கிறீர்களே. தொடர்ந்து எழுதவே எண்ணுகிறேன்.உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

வவ்வால் said...

செந்தழலாரா,

வணக்கம்,

பூர்வாசிரமப்பெயரில் உலாவ ஆரம்பித்துவிட்டீரா? உம்மை எல்லாம் மறக்கமுடியுமா? வருகைக்கும், ஆதரவான கருத்துக்கும் நன்றி, ஒரு புரட்சிப்புயலே புட்டு ..புட்டு வைத்து விட்டேன் என்று சொல்வதை கேட்க இனிமையாக இருக்கு! :-))

வவ்வால் said...

ரத்னவேல்,

வணக்கம்,

முதல் வருகையோ? வருகைக்கும் தங்கள் ஆதரவான கருத்துக்கும் மிக்க நன்றி.

Robin said...

வைகுண்டராஜன்?

வவ்வால் said...

ஆஹா, என்ன ஆச்சரியம், தமிழ்மணத்தில் இணைக்க முடியலைனு அப்படியே விட்டுடேன், ஆனால் இன்று தானாகவே தமிழ் மணத்தில் தெரியுது என்ப்பதிவு... யார் போட்ட மந்திரம் இது, எது எப்படியோ அந்த மந்திரம் போட்ட மஹானும் அவர் குடும்பத்தாரும் 1000 அணு உலை வெடித்தாலும் தமிழ்மணம் ஆத்தா அருளால் எஸ்கேப் ஆகிடுவாங்க!

வவ்வால் நீ ரொம்ம்ம்ப்ப்ப நல்லவண்டா..! ஹி..ஹி...(நமக்கு நாமே திட்டம்)

வவ்வால் said...

ரோபின்,
//வைகுண்டராஜன்?//

நன்றி,
நீங்கள் துப்பறியும் ரோபின் சார்... ஹி..ஹி.. பதிவில் ஒட்டியுள்ள ஆங்கில செய்தி குறிப்புகளைப்படிக்கலையா? பேர் எல்லாம் போட்டாச்சு... நான் தமிழில் மட்டுமே சஸ்பெண்ஸ் காட்ட அப்படி எழுதினேன்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! கூடங்குளம் பின்னணியை முன்னணியாக்கி தெளிவாகக் கூறியுள்ளீர்கள்.

கூடல் பாலா said...

நண்பருக்கு வணக்கங்கள் ,உங்கள் கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லை .கூடங்குளம் பகுதியை சார்ந்த ஏழை மீனவர்களும் விவசாயிகளும் நம் சந்ததியைக் காக்க எப்பாடு பட்டேனும் இந்த அணு உலையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் அன்றாடம் கஷ்டப் பட்டு உழைத்த பணத்தில் போராட்டத்துக்கு நன்கொடை வழங்கி போராட்டத்திலும் கலந்துகொண்டு வருகிறார்கள் .ஆனால் கற்பனையாக எண்ணி ஒரு பதிவிட்டு அனைவரது தியாகத்தையும் அசிங்கப் படுத்துகிறீர்கள் .கூடங்குளத்தில் வசிக்கும் நானும் இப்போராட்டத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளேன் .போராட்டத்திற்கு வெளி நாடுகளிருந்தோ தாங்கள் குறிபிட்டுள்ளது போல முதலாளிகளிடமிருந்தோ உதவி பெறப்படுகிறது என்பதை தாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்தால் நான் பதிவெழுதுவதையே நிறுத்திவிடுகிறேன் ....

கூடல் பாலா said...

கூடங்குளம் போராட்டம் இப்போதுதான் நடக்கிறது என்பது தவறான தகவல் .அணு உலை தொடங்கப் பட்ட காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன ...

இப்போது அணு உலை வேலை முடியும் தருவாயில் இருப்பதால் மீடியாக்களில் இது பிரபலமடைந்துள்ளது....

27-1-2007 அன்று அணுமின் நிலையம் முன்பு சுமார் 4000 பேர் மறியல் செய்து கைதானார்கள் .
அடுத்த சிலநாட்களில் மேதாபட்கர் தலைமையில் 10000 க்கும் அதிகமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள் .மேலும் இது போல பல போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன .

மீடியாக்களில் வந்தால்தான் அது போராட்டம் என நீங்கள் எண்ணினால் என்ன செய்வது ?

வவ்வால் said...

தி.த.இளங்கோ,

வணக்கம்,நன்றி, அடிக்கடி வாங்க, ஏதோ தெரிஞ்சதை எழுதி வச்சேன்.

வவ்வால் said...

கூடல் பாலா,

வணக்கம், வருகைக்கு நன்றி!

நான் தெளிவாக சொல்லிவிட்டேன் யாரையும் களங்கப்படுத்தும் நோக்கமில்லை என்று.எனக்கு தெரிந்ததை மாற்றுப்பார்வையாகவே வைத்துள்ளேன்.

எனது சில கேள்விகள் சுற்றி வளைக்காமல் பதில் சொன்னால் நான் இந்தப்பதிவையே எடுத்து விடுகிறேன்.
# ஏன் பாலபிரஜாபதி அடிகள் ஒதுங்கிக்கொண்டார்.?

#ஏன் முன்னரே அல்லது இப்போதும் கல்பாக்கத்தில் இந்த அணு எதிர்ப்பு போராளிகள்(உதயகுமாரன் உள்ளிட்டோர்) போராடவில்லை?

#மணல் மனிதர் இந்த போராட்டத்தின் பின்னால் இல்லை என்று நிறுபிக்க முடியுமா?

#ரஷ்ய-இந்திய கூட்டு கார்னெட் மணல் ஆலை அங்கு வர இருப்பது தெரியுமா தெரியாதா?

#ஏன் சட்ட மன்ற தேர்தலின் போதோ, இப்போது உள்ளாட்சி தேர்தலின் போதோ தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிக்கவில்லை? (மாவட்ட அளவில் மக்களுக்கு புடிக்கலையா உங்களை எல்லாம்)
நெல்லை, தூத்துக்குடி என இரண்டு மாவட்ட மக்களும் புறக்கணித்தால் தேசிய அளவில் பரபரப்பு கிளம்பி இருக்கும், அனைவரும் கவனித்து தீர்க்க முயன்றிருப்பார்கள்.சாதாரண கிராமங்களான பாப்பாபட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் தேர்தல் புறக்கணிப்பு, அல்லது ராஜினாம என அப்படி ஆட்டம் காட்டினார்கள்.
(இதில் தேர்தலுக்காக போராட்டத்தற்ிகு லீவ் வேறு, போராட்டம் என்ன அரசுப்பணியா?)

#உங்கள் மாவட்டத்தை சேர்ந்த சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து எதிர்ப்புக்காட்ட வைக்கலாமே? குறைந்த பட்சம் பச்சைமாலை ராஜினாமா செய்ய வையுங்களேன், அப்புறம் என்னிடம் சவால் விடலாமே?

நான் எடுத்த தகவல்கள் எல்லாம் இணையத்தில் இருந்தே எதுவும் எனது சொந்த தகவல் அல்ல.மேலும் 6 மாதம் கழித்து பார்ப்போம் இந்த போராட்டம் செல்லும் திசையை.

Thekkikattan|தெகா said...

ஹே வவ்வாலு, என்ன பேச்செல்லாம் பலமா இருக்கிது. யோவ், பதிவு போடுறதில்லைன்னு கடுப்பில இருக்கோம். வரும் போதே அவசியமான ஒரு பதிவோட வந்திட்டு இதென்னா இப்படியெல்லாம் டொய்ங்காயி பேசுறது...

... நான் எல்லாம் பதிவு போட்டா யாரு படிக்கப்போறாங்கனு தான் நினைச்சேன்.

நானும் பஸ்ஸிலும், ஃபேஸ்புக்கிலும் இணைச்சிக்கிடுறேன், சாமீயோவ்... :)

வவ்வால் said...

வாங்க தெகா, வணக்கம், நலமா?

அட டா உங்களை எல்லாம் பார்க்க போய் தான் தெம்பே வருது சாமி! (பின்ன நீங்கலாம் ஒருத்தர் படிச்சா ஒரு ஊரே படிச்சாப்போல ஆச்சே)

ஆஹா அதென்ன டொய்ங்காயி... நல்லாத்தான் இருக்கு எங்காயி!

உங்கள் இணைப்புக்கு அரவணைப்புக்கும் மிக்க நன்றி! நான் பதிவில் சொல்லி இருப்பதில் எதுவும் பிழை இல்லையே.?


புக் மார்க் என்று எதுவும் இல்லை, இப்போ தான் சேர்த்துக்கிட்டு இருக்கேன், நான் வர நேரத்தில் உங்க பதிவு மாட்டறது இல்லை. இல்லைனா உங்க வாசப்படில வந்து நின்னு இருப்பேன்!

கூடல் பாலா said...

நீங்கள் அதிகமாக கேள்வி கேட்பதைப்பார்த்தால் உங்களிடம் யாரோ தவறான தகவல்களை தந்துள்ளது தெரிகிறது .உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த பதில் உள்ளது .உங்களுக்கு விளக்கமாக புரியவேண்டுமானால் கூடங்குளத்திற்கு நேரில் வந்து இங்குள்ள சாதாரண மக்களிடம் விசாரியுங்கள் ...தூரத்திலுள்ள சில பதிவர்கள் ஏற்கெனவே போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டு உண்மைகளை பதிவாக இட்டுமிருக்கிறார்கள்...நன்றி!

வவ்வால் said...

கூடல் பாலா.

தங்கள் புரிதலுக்கு நன்றி!

//நீங்கள் அதிகமாக கேள்வி கேட்பதைப்பார்த்தால் உங்களிடம் யாரோ தவறான தகவல்களை தந்துள்ளது தெரிகிறத//

கேள்வி கேட்பது தப்பா? அல்லது அதிகமா கேள்வி கேட்பது தப்பா? ஒரு வேளை கொஞ்சமா கேள்வி கேட்டு இருந்தால் எனக்கு சரியான தகவல் அளிக்கப்பட்டதா சொல்வீர்களோ? :-))

//உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த பதில் உள்ளது .//

ஆமாம் நானும் அந்த" தகுந்த" பதிலைத்தான் எதிர்ப்பார்த்தேன். நீங்கள் பதிவுகள் மூலம் உங்கள் போராட்டத்தின் நிலைப்பாட்டினை சொல்லி வரும் போது பதிலையும் பதிவில சொல்லலாமே.

எல்லாரும் கூடன் குளம் வந்தா தான் தெரிஞ்சுக்கமுடியும்னா எப்படி சாத்தியம்.அலாஸ்காவிலோ அண்டார்டிகாவிலோ போராட்டம் நடந்திருந்தால் அங்கும் வர சொல்வீர்கள் போல!

இதற்கு முன்னரே அந்தப்பக்கம் வரலாம்னு தான் இருந்தேன் வாய்ப்பிருந்தால் வருவேன்.

நன்றி!

Anonymous said...

நல்லா துப்பறிஞ்சீங்க!ஜூவில போட்டத வச்சிகிட்டு கொஞ்சம் கற்பனைய கலந்து தட்டிட்டீங்க!சுட்டில மணல் மனிதர் போராட்டத்த தூண்டினாருன்னா இருக்கு!ஜப்பான் அணு உலை வெடிப்புக்கு பிறகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.பத்து பேர் இருக்கற குழுவுல கருத்துவேறுபாடு ஏற்பட்டு யாராவது விலகத்தான் செய்வாங்க!கார்னெட்டுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல! போராட்டம்னா தேர்தல புறக்கணிச்சாத்தான் அதுக்கு பேரு போராட்டமா? ஜப்பான் அணு விபத்தை டிவி,பத்திரிகைல பார்த்த பிறகு வந்த போராட்ட உணர்வுதான் .இருபது வருஷத்துக்கு முன்னால எத்தன பேரு வீட்டுல டிவி இருந்துச்சு? படிப்பறிவு எவ்வளவு? அன்னைக்கு சின்ன பசங்க எல்லாம் இன்னிக்கு காலேஜ் முடிச்சு விபரம் தெரிஞ்சிகிட்டாங்க!நீயா கற்பனைல ஒண்ணு சொல்லுவ அத மணல் அதிபர கூட்டி வந்து உங்கிட்ட நிரூபிக்கணுமா? அகில உலக புத்திசாலி.சிறப்பா எழுதிட்டீங்க!

Anonymous said...

இனிமே போராட்டம்னா தேர்தல புறக்கணிச்சாதான அது போராட்டம்.இல்லன்னா பச்சைமால ராஜினாமா செய்ய வைக்கணும்.சி எம்ம ராஜினாமா செய்ய வைக்கணும்.பாப்பாபட்டி சமாச்சாரம் வேற இதுவேற!போராட்டம்னா ஆர்ப்பாட்டம்,நடத்தறது,அடையாள உண்ணாவிரதம்,தொடர் உண்ணாவிரதம்னு எத்தனையோ இருக்கு!இத செஞ்சாதான் நான் காசு வாங்கலேன்னு சொல்லுவேன்னு சொன்னா கோளாறு.ஆறுமாசம் கழிச்சு சுப்ரீம் கோர்ட் சொல்றதவச்சின்னு ஆயிடும்.நீ என்னத்தபார்க்கறது.ஓட்டு போடறது குடிமகனோட கடமை.அதுக்காக லீவு விட்டாங்க! நாங்க உரிமைக்கு மட்டும் போராடமாட்டோம்.கடமையையும் செய்வோம்.

வவ்வால் said...

அனானி,

நான் என்ன உங்களை கொலையாப்பண்ணிடப்போறான், இப்படி வார்றீங்கோ?

ஹி..ஹி..ஜீவில எங்கப்பா நான் சொன்னத எல்லாம் போட்டூ இருக்கான், ஒரு வேளை நான் படிக்காத இஷ்யுவாக இருக்குமோ?


////ஓட்டு போடறது குடிமகனோட கடமை.அதுக்காக லீவு விட்டாங்க! நாங்க உரிமைக்கு மட்டும் போராடமாட்டோம்.கடமையையும் செய்வோம்.//

அடிச்சிங்க ஒரு பல்டி..ஒலக மகா காமடி சார் இது! அப்பா கடமை வீரர்களா ரோட்ல கல்லப்போடறதுலாம் கூட உரிமங்களா?இல்லை கடமைங்களா?

வவ்வால் said...

அனானி,

பாப்பாபட்டி,கீரிப்பட்டி,நாட்டார் மங்கலம் பிரச்சினை வேறு தான் ஆனால் அனு உலை அளவுக்கு முக்கியமே இல்லாத ஒன்று, அவங்களுக்கு போராட உரிமை இல்லாத பிரச்சினைக்கே அப்படி பண்ணாங்க.

அப்படி இருக்கும் போது எதிர்கால சந்ததியையே பாதிர்க்கும் முக்கியமான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க ஒரு நல்ல ஆயுதம் தேர்தல் புறக்கணிப்பு.

நீங்க சொல்றத வச்சுப்பார்த்தா தீர்வுலாம் எதுக்கு ,நாங்க போரடணும், அது வெளில தெரியணும் அது போதும்னு நினைக்கிறாப்போல இருக்கு. அப்புறம் சுப்ரிம்கோர்ட் தீர்ப்பு வந்துடும் இனிமே என்னாத்த செய்றதுனு போய்டுவோம்னு ஒரு மாஸ்டெர் பிளான் போட்டு தான் போரட்டத்த கைல எடுத்திருக்கிங்க போல . வாழ்க உங்க அரசியல் புரிந்துணர்வு!

கையேடு said...

இதிலே செய்திகள் பல துண்டுகளாக கோர்க்கப்பட்டுள்ளன..

என்னைப் போன்ற வாசகனுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?

அங்கே பந்தலில் பட்டினி கிடப்பவருக்கு என்ன சொல்ல முற்படுகிறீர்கள்?

வவ்வால் said...

கையேடு,

வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி!

//என்னைப் போன்ற வாசகனுக்கு சொல்ல வரும் செய்தி என்ன?//

ஓரளவுக்கு புரியும்படி எழுதி இருப்பதாகவே நினைகிறேன், இரண்டுப்பக்க நிலையும் சொல்லி தீப்பை படிப்பவர்கள் தீர்மனிக்க வேண்டும் என்பதே எனது என்னம், கூடவே எனது கணிப்பையும் கடையில் சொல்லி இருக்கேன். இப்போ நீங்க தான் ஜட்ஜ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கானு சொல்லணும் :-))

//அங்கே பந்தலில் பட்டினி கிடப்பவருக்கு என்ன சொல்ல முற்படுகிறீர்கள்?//

அவர்கள் அறிந்தோ ,அறியாமலோ பகடைக்காய்கள் ஆக்கப்படலாம் என்பதை சொல்லி இருக்கேன்.இந்த போராட்டம் தீர்வுக்காக நடக்குதா இல்லை கலைஞர் எழதும் கடிதம் போலவானு அவங்க தான் சொல்லணும்!

நிவாஸ் said...

ஒரு மக்கள் போராட்டத்த எப்படி எல்லாம் சாயம் பூசுகிறார்கள். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், 17 முறை கஜினி கொள்ளையடித்து விட்டுத்தான் போனான், அது தோல்விகள் அல்ல என்று தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், ஆங்கிலேயன் வீரபாண்டிய கட்டபொம்மன், பண்டார வன்னியன் போன்றவரை கொன்றபோது திருடன் என்று சொல்லித்தானே கொன்றார்கள் இதற்க்கு என்ன பதில் சொல்வீர்கள்.

இது மக்கள் குடும்ப குடும்பமாக ஆண் பெண் வித்தியாசம் பாராமல், தினப் பிழைப்பை விட்டு விட்டு, மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவது ஒரு தனிப் பட்ட மனிதரின் மணல் கொள்ளைக்காகவா! ஆகா என்ன ஒரு புத்திசாலி தனம்.

கேட்பவர் மடையார் என்றால் கேழ்வரகில் நெய் வடியுமாம் அப்படி இருக்கிறது. இப்படி பட்ட போராட்டத்தை எல்லாம் துப்பு துலங்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு முன்னாள் இந்திய உளவுப் பிரிவும், தமிழக உளவுப் பிரிவும் நிச்சயம் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு இது உண்மை என்று தெரிந்திருந்தால் இந்த போராட்டம் எப்போதோ வன்முறையாக்கப்பட்டு கலைக்கப் பட்டிருக்கும்.

நிவாஸ் said...

பிரச்சனைகளும் போராட்டங்களும் வந்தபிறகு இதுபோன்ற உறுதிமொழிகள் தந்து போராட்டத்தை திசை திருப்ப முயற்ச்சிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? நடந்தது, அதையும் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். பத்துவருடமாக அங்கு வேலை செய்துவந்த வெளிமாநில அன்பர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பேனும் நிகழ்ந்ததுண்டா? வேலைதான் காரணம் என்றால்? இத்தனை வருடம் இத்தனை வெளிமாநிலத்தவர் அங்கு வேளையில் இருக்கமுடிந்தது எப்படி?

இந்தியாவை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு மக்கள் அறவழிப் போராட்டம் நடக்கிறது, 1500 கோடி ரூபாய் அணு உலையை மூட சொல்கிறார்கள் என்றால் இவ்வளவு நேரம் தமிழக உளவுத்துறைக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இந்த சந்தேகம் வராமல் இருக்கும்? அப்படி இருந்தும் இதுவரை அந்தகாரணம் வெளிவராதது ஏன்? அரசாங்கம் இந்த போராட்டத்திற்கு மதிப்பளிப்பது ஏன்?
ஏன் என்றால்? இந்தப் போராட்டம் சுயனலத்திர்க்கோ, அல்லது காசுக்காகவோ, நிலத்திர்க்காகவோ, வேலைக்காகவோ, அரசியளுக்காகவோ செய்யப் படுவதில்லை. வாழ்வாதாரம் போய்விடுமோ என்ற ஒரு இனத்தின் பயம், உழைக்கும் வர்க்கத்தின் பயம், சந்ததிகளைப் பற்றிய பயம், பயம், பயம் மட்டுமே காரணம்.

இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பானை விட நாம் தொழில் நுட்பத்தில் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்ன? அவர்களே விழி பிதுங்கி நிற்கும் போது நாம் என்ன செய்ய முடியும். அப்படி தவறி எதாவது நடந்துவிட்டால், ஒரு அறிக்கை விட்டுவிட்டும் வருத்தம் தெரிவித்துவிட்டும் போய் விடுவார்கள் அப்போ நீங்கபோய் கொண்டு வருவீர்களா இந்த உயிர்களை?

சரி சுனாமி இனிமேல் இந்தியாவில் வராது என்று உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா?.

பதுக்கப்பனது என்று நினைக்கும் நீங்கள் அங்கு வாழ்த்தயாரா?

இந்தியாவில் இரண்டு அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் மட்டும் தான் அது ஏன்? கல்பாக்கம் ஒன்று போதுமே நமக்கு.

2000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க பயன்படுத்தப் படும் ரியாக்டரின் சக்தி என்னவென்று தெரியுமா? அதில் பயன்படுத்தப் படும் யுரோநியத்தின் அளவு தெரியுமா? இல்லை அடுத்த வருடம் மேலும் இரண்டு ரியாக்டர்கள் அதே கூடங்குளத்தில் நிறுவ இருக்கிறார்களே அது தெரியுமா? அப்படி நிறுவினால் மொத்தம் மூன்று ரியாக்டர்களின் அளவி நினைத்துப் பாருங்கள். அதன் கழிவுகளை நினைத்து பாருங்கள்.

சமீபத்தில் பிரான்சில் ஏற்ப்பட்ட அணுஉலை கழிவு பிரச்சனை என்னவென்று கொஞ்சம் இணையத்தில் தேடிப் பாருங்கள்

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் தென் தமிழ்நாடு முழுதும் புல்பூண்டு இல்லாமல் போய் விடும். இன்று காற்றுவாங்க மின்விசிரிக்கு, குளிரூட்டிக்கு மின்சாரம் இல்லை என்று கவலைப்படும் நீங்கள் காற்றுவாங்க கறியில்லாமல் போய்விடும். அனைத்தும் உருகி ஓடிவிடும்.

கூடங்குளம் 2000 மெகாவாட் தமிழகத்திற்குத்தான் என்று கனவு காணாதீர்கள், அதில் வெறும் 976 மெகாவாட் தான் அதும் போராட்டம் ஆரம்பித்தபிறகு அறிவித்தது. அதற்க்கு முன் அதைவிட மிக்க மிக குறைவு.

அணுசக்தி பயன்படுத்தாத நாடுகள் இருளில் மூழ்கிப் போய் விட்டனவா? இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் மின்சாரத் தேவையில் இந்த பத்து அணுமின் நிலையங்களின் பங்களிப்பு 4% தான் என்பதும் தெரியாதா?

அப்படி என்றால் இன்னும் எத்தனை எத்தனை அணுமின் நிலையங்கள் கட்டப் போகிறீர்கள்? அனைத்தையும் பாதுகாக்க என்ன என்ன நடவடிக்கைகள். போர் வந்து இந்த நிலையங்கள் தாக்கப்பட்டால் விளைவு?

உங்கள் வீட்டு மிசார வசத்திக்ககவும், நீங்கள் சீரியல், கிரிக்கெட் பார்ப்பதற்காகவும் எத்தனை மக்கள் உயிரை பணையம் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?

தமிழ் நாடு மொத்தத்தையும் காலி செய்துவிட்டு அணுமின் நிலையங்களாக நிறுவி விடலாமா?

காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா நதிநீர், ஒக்கேனைகல் குடிநீர்த்திட்டம், செய்து சமுத்திரத் திட்டம், தமிழர் மீனவர் பிரச்சனை இவற்றை தீர்த்துவைத்தால் பிறகு யோசிக்கலாம்?

இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலே போதும் தமிழ்நாடு வளமையோடும் செழிப்போடும் இருக்கும், இவற்றை கேட்க வக்கு இருக்கா நமக்கு? இல்லை என்றால் இந்த பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசக் கூடாது. வேடிக்கைப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

இந்தியன், ஜனநாயகம், தேசப் பற்று, சிந்தனையாளர் என்று நினைத்து நம் மக்களின் போராட்டத்திற்கு நீங்களே தடையாய் இருக்காதீர்கள். ஒற்றுமை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழன் இருக்கிறான். இல்லையென்றால் தமிழினம் என்பதை கல்வெட்டில் மட்டும் காணவேண்டிய நிலைமை வந்துவிடும்.

நிவாஸ் said...

அது எப்படிங்க வவ்வால்ங்குற பெயருக்கு ஏற்ற மாதிரி தலைகீழா சிந்திக்கிறீங்க, நல்லதுதான் ஆனா நீங்க ஒரு கண்நூட்டத்த முடிவு செஞ்சுகிட்டு சிந்திச்சா, இப்படி எதிர் மறையாத்தான் போகும்

வவ்வால் said...

நிவாஸ்,

வணக்கம், வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

ஹி..ஹி.. நீங்க எதுமே முழுசாப்படிக்க மாட்டிங்களா? பதிவுல பாதியளவுக்கு அணு உலை ஆபத்தப்பத்தி சொல்லி அது வேண்டாம்னும் சொல்லி இருக்கேனே.ஆரம்பமே அதான்.

நீங்க கேட்டாப்போல தான் கல்பாக்கம் இருக்க இங்கே ஏன் இரண்டாவது அணு உலைனு கேட்டு தான் கஜினி முகமது உதாரணம், நீங்க உதாரணத்த மட்டும் படிச்சீங்க போல.

இந்த போராட்டம் சரியா அணு உலைக்கு எதிராக நடக்கணும், வேறு நோக்கம் இருந்தா அதை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.

அப்புறம் உளவுத்துறைலாம் பேசி இருக்கிங்க, உளவுதுறை அளவுக்குலாம் நான் ஒர்த் இல்லிங்கோ!

மத்திய மாநில உளவுகள் இருக்கும் போதே தான் மும்பைல தாக்குதல் நடக்குது, ஜவேரி பசார்ல குண்டு வெடிக்குது, அதனால அவங்க எப்பவும் எல்லாத்தையும் கண்டுப்புடிப்பாங்கனு சொல்ல முடியாதே!

பதிவை மருக்கா ஒருக்கா படிக்கவும் நிவாசு அவர்களே!

நிவாஸ் said...
This comment has been removed by the author.
நிவாஸ் said...

ஐயா! வவ்வால் அவர்களே

உங்கள் பதிவை படிக்காமல் தான், நீங்கள் சொல்லி இருக்கும் தனிமனித மணல் கொள்ளைக்காகவே, அந்த தனி மனிதனால் நடத்தப் படும் போராட்டம் என்பதை பற்றி நான் சொல்லி இருக்கிறேனா?

உங்கள் பதிப்பு வேறு காரணம் தேடும் நோக்கத்தோடு இருப்பதாக தெரியவில்லை, வேறு நோக்கத்தை நீங்களே திணிக்க முயல்வதாகத்தான் தோன்றுகிறது. இரண்டு உண்மை விடையங்களை சொல்லிவிட்டு இறுதியில் பொய்யான தகவலை திணிக்கும் வித்தை மிகவும் பழையது, புதிதாய் முயற்சி செய்தால் நன்று


நீங்கள் கூறிய ஜூவி செய்தியும், நண்பர் தொலைபேசியில் கூறியதாக சொல்லும் செய்தியையும் நம்பும் நீங்கள் எப்படி இன்னொரு அணுகு முறையில் இந்த பிரச்னையை நோக்க முடியும்?

அப்படி அங்கே நீங்கள் நேரில் சென்று வந்து இப்படி ஒரு பதிப்பை வெளியிட்டாலும் ஒரு காரணம் இருக்கிறது. என்னோடு பணிபுரியும் லட்சம் லச்சமாக சம்பாதிக்கும் சில பொறியாளர்களின் குடும்பமும் இப்போது போராட்டக் களத்தில், இவ்வளவு பணம் வைத்திருக்கும் படித்திருக்கும் அவர்களுக்கு என்ன அவசியம்?

எனது பின்னூட்டங்களை நீங்கள் நன்றாக படித்துப் பாருங்கள், அது உங்கள் மனசாட்சியை கேளவிகேட்கும் அதற்க்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு எனக்கு பதிலிடுங்கள்

//அப்புறம் உளவுத்துறைலாம் பேசி இருக்கிங்க, உளவுதுறை அளவுக்குலாம் நான் ஒர்த் இல்லிங்கோ!//

ஹி ஹி அதுவரை உங்களை நீங்கள் புரிந்து வைத்திருந்தால் மகிழ்ச்சிதான்.

மீண்டும் எனது பின்னூட்டங்களை நன்கு படியுங்கள் முதலில் அந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் என்ன என்று யோசியுங்கள்

மிக்க நன்றி நண்பரே

வவ்வால் said...

நிவாஸ்,

புரிதலுக்கு நன்றி!

நீங்க அணு உலைப்பத்தி தெரியுமா, கல்பாக்கம் இருக்க இன்னொன்று ஏன் என்று நான் சொன்னதையே எனக்கே கேட்டதால் , சரியாகப்படிக்கலையோனு கேட்டேன்.

கூடல் பாலாவிடம் நான் சில கேள்விகள் கேட்டேன், பதில் வரும் ஆனா வராது என்பது போல சொல்லிட்டி எஸ் ஆகிட்டார், நீங்கள் நல்லவர்,வல்லவர், மனசாட்சி உள்ளவர் என்பதால் அதுல எதாவது சில கேள்விகளுக்கு பதில் தரலாமே?

இந்தப்பதிவு பேசுப்பொருளை விளக்க இன்னொரு பதிவு போடனும் போல , போட்டாப்போச்சு.

நிவாஸ் said...

என்னை பொறுத்தவரை ஒரே ஒரே நோக்கம்தான் வவ்வால்

பிரச்சனை எப்படி வந்தது என்று பார்த்தால் மக்களின் பயம் மட்டுமே காரணம்,

அது அறியாமை என்று நீங்கள் சொன்னாலும், மூடத்தனம் என்று சொன்னாலும் சரி, நம்மைவிட அதிகம் படித்த கேரள மக்களே ஒதுக்கித் தள்ளியதை நம்மக்களும் செய்வது தவறில்லை.

ஜப்பானின் விபத்திற்கு பிறகே இந்த்துனை பயம் மக்கள் மனதில் அவதானித்துள்ளது என்பதை நடக்கும் போராட்டத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்

பயத்தை போக்க என்ன வழிமுறைகளை கையாண்டாலும் சரி

எம்மக்களுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம், எம் மக்களுக்கு வேண்டும் என்றால் வேண்டும் என்பதே என் கருத்தும் நோக்கமும்.

இதைவிடுத்து தனிமனித திருட்டு, சுயநலம், சாதி சமய பூசல், காசு, வேலை வாய்ப்பு என்று எவ்வளவு சாக்கு போக்கு சொன்னாலும் சரி, அது எங்களுக்கு வேண்டாம் என்பதே எங்கள் அசைக்கமுடியாத ஒரே எண்ணம்.

இதுபோல் எதிர் நோக்க பதிவுகள் போட்டவர்களில் நீங்கள் ஒன்றும் புதியவரில்லை, அனைவரிடம் கிட்ட கேள்வியைத்தான் நான் உங்களிடமும் கேட்டேன். இதுவரை எவரிடம் இருந்தும் தகக் பதில்கள் வரவில்லை.

இந்த போராட்டம் நிச்சயம் வலுக்கும், ஒட்டுமொத்த தமிழ் நாடு தழுவிய போராட்டமாய் நிச்சயம் வெடிக்கும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் போல் இதுவும் ஒரு சரிட்டிஹ்திர போரட்டமாய் மாறி வெற்றி காணப் போவது உறுதி.

அதையே மக்கள் ஏற்றுக் கொண்டாலும், நானும் ஏற்றுக் கொள்வேன். எம் மக்களுக்கு வேண்டாதது எனக்கும் வேண்டாம்

அவ்வளவே!

கூடல் பாலாவுக்கு கூட அது சொந்த ஊர்

எனக்கு கிட்டத்தட்ட 350 கிலோ மீட்டர்

இப்பொழுது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

நன்றி!

வவ்வால் said...

நிவாஸ்,

//இதுபோல் எதிர் நோக்க பதிவுகள் போட்டவர்களில் நீங்கள் ஒன்றும் புதியவரில்லை, அனைவரிடம் கிட்ட கேள்வியைத்தான் நான் உங்களிடமும் கேட்டேன். இதுவரை எவரிடம் இருந்தும் தகக் பதில்கள் வரவில்லை.//

நீங்க இன்னும் என்ப்பதிவ சரியா படிக்கலை/ புரிஞ்சுக்கலை, நான் போட்டிருப்பது அணு உலைக்கு எதிரானப்பதிவே. அணு உலை தேவையில்லை என்று சொல்லி இருப்பேன்.மேலும் போராட்டம் சரியான திசையில் போகாமல் வெற்று முழக்கமாக மட்டும் போயிடுமோனு தான் இங்கே சுட்டியிருக்கேன்.

பதிவில் விரிவா நான் சொன்னதையே திரும்ப தெரியுமா..தெரியுமானு என்கிட்டவே கேட்டால் எப்படி, உண்மைல நான் கேட்ட கேள்விகளுக்கு தான் உங்க கிட்டே இருந்து பதிலே இல்லை.
எனவே பதிவை உள்வாங்காமல் பேசும் உங்களுடன் பேசுவது நேரவிரயமாகவே தோன்றுகிறது.

நன்றி!

கூடல் பாலா said...

வணக்கம்

பால பிரஜாபதி அடிகளார் பற்றிய தங்கள் ஐயம் தீர போராட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் பூவுலகு தளத்தில் அளித்துள்ள கருத்துரையைக் காணவும் நன்றி !

http://poovulagu.blogspot.com/2011/10/blog-post_26.html

நிவாஸ் said...

//நீங்க இன்னும் என்ப்பதிவ சரியா படிக்கலை/ புரிஞ்சுக்கலை//

இல்லை நண்பரே நன்கு புரிந்துகொண்டதால்தான் பேசுகிறேன்

//நான் போட்டிருப்பது அணு உலைக்கு எதிரானப்பதிவே//

இல்லை போராட்டத்திற்கு எதிரான பதிவே, நீங்கள் இட்ட இரண்டு பதிவுகளுமே, போராட்டத்தை தவறாக சித்தரிக்கும்படியே இருக்கிறது

முதலில் வெளிநாட்டு பணம் என்றீர்கள்
அடுத்து ஒரு தனிமனித மணல் கொள்ளை என்றீர்கள்

இவை இரண்டும் நேர்முக கருத்துக்களா இல்லை எதிர்மறைக் கருத்துக்களா?

//மேலும் போராட்டம் சரியான திசையில் போகாமல் வெற்று முழக்கமாக மட்டும் போயிடுமோனு தான் இங்கே சுட்டியிருக்கேன்.//

பயப்பட வேண்டாம் அது மக்களின் கவலை அங்கு போராடுபவர்கள் கவலை, அவர்கள் வேண்டாம் என்று விட்டால் விட்டதுதான், அவர்களே வேண்டாம் என்று விடட்டும் பரவாயில்லை அதற்காக நீங்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று திசைத்திருப்பும் பதிவுகளை இட வேண்டாம்.

//உண்மைல நான் கேட்ட கேள்விகளுக்கு தான் உங்க கிட்டே இருந்து பதிலே இல்லை. //

நீங்கள் கிடப்பது கேள்வி அல்ல, எம்மக்களின் எண்ணத்திற்கு எதிரான கருத்து, அதை எப்படி நாங்களே சொல்லமுடியும்?

//உங்களுடன் பேசுவது நேரவிரயமாகவே தோன்றுகிறது.
//

எனக்கு எப்போதோ தோன்றி விட்டது, இப்பொழுதுதான் வவ்வால் நேராக தொங்குகிறது என்று நினைக்கிறேன்

மிக்க நன்றி

வவ்வால் said...

கூடல் பாலா,

வணக்கம், நன்றி!

பார்க்கிறேன்.எனது நோக்கம் போராட்டம் அணு உலை நீக்கும் வரையில் தொடர வேண்டும் என்பதே, கூடவே கல்ப்பாக்கமும் மூடப்பட போரடணும்.

வவ்வால் said...

நிவாஸ்.

//நீங்கள் இட்ட இரண்டு பதிவுகளுமே, போராட்டத்தை தவறாக சித்தரிக்கும்படியே இருக்கிறது//

போச்சுடா எல்லாமே உங்களுக்கு ரெண்டு ..ரெண்டா தெரியுதா!போட்டிருக்கிறது ஒரே ஒரு பதிவு..ஒரு வேளை நீளமா இருப்பதால் ரெண்டு சொல்றிங்களா?

எதுக்கும் லெமன் சோடா குடிச்சுப்பாருங்க :-))

//முதலில் வெளிநாட்டு பணம் என்றீர்கள//
நான் எப்போ, எங்கே, எந்தப்பதிவில சொன்னேன், இந்தப்பதிவிலா, காட்டுங்கள் பார்ப்போம்!

//பயப்பட வேண்டாம் அது மக்களின் கவலை அங்கு போராடுபவர்கள் கவலை, அவர்கள் வேண்டாம் என்று விட்டால் விட்டதுதான், அவர்களே வேண்டாம் என்று விடட்டும் பரவாயில்லை //

இத..இதத்தான் நானும் எதிர்ப்பார்த்தேன், இப்படி கடைசில சொல்லிட்டு போரட்டத்த ஊத்தி மூடிருவாங்க சிலர்னு சொன்னேன்.இப்போ பூனைக்குட்டி தன்னால வெளில வந்துடுச்சு!

நிவாஸு, வவ்வால் தலைகீழா தொங்க கூட ஒரு பிடிமானம் இருக்கும், பிடி"மானமே" இல்லாமல் தொங்குறிங்களே எப்படி சாரே! :-))

SURYAJEEVA said...

மொத்தமா படிச்சேன்... பின்னூட்டமும் படிச்சேன்... நீங்க கடைசியா சேர்த்தீங்க பாரு ஒரு வரி, அணு உலை மூடும் வரை போராடனும், கல்பாக்கமும் மூடனும் அப்படி என்று... அதை பதிவின் கடைசியில் போட்டிருந்தால் இந்த அளவு பிரச்சினை வந்திருக்காது...
உங்க கேள்விக்கு பதில்,
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்..
தூண்டி விட்டு தான் போராடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோமே...
அவர்களை காயப் படுத்துவதை விட்டு விட்டு அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தால் மகிழ்ச்சி.. அதை விட்டு விட்டு அவர்களை நையாண்டி செய்தது நியாயம் அல்ல

வவ்வால் said...

சூர்யா,

வாங்க,வணக்கம்,நன்றி!

//நீங்க கடைசியா சேர்த்தீங்க பாரு ஒரு வரி, அணு உலை மூடும் வரை போராடனும், கல்பாக்கமும் மூடனும் அப்படி என்று... அதை பதிவின் கடைசியில் போட்டிருந்தால் இந்த அளவு பிரச்சினை வந்திருக்காத//

பதிவு முழுக்க கல்ப்பாக்கத்தில கோட்டை விட்டதால தான் கூடன்குளம் திட்டம் வந்தது அதை மூடனும் சொல்லி போரடி இருந்தா இந்நிலை வந்திருக்காது, கல்பாக்கத்தில போரடலையேனு கேட்டிருந்தேன்.

கேள்விகள் எழுப்புவதன் மூலம் சிந்திக்க வைக்கலாம் என்றுப்பார்த்தேன், நீங்க கையப்புடிச்சு கூப்பிட்டு போனாதான் வழி தெரியும்னு சொல்றிங்க!

//உங்க கேள்விக்கு பதில்,
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்..
தூண்டி விட்டு தான் போராடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோமே...
அவர்களை காயப் படுத்துவதை விட்டு விட்டு அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தால் மகிழ்ச்சி.. அதை விட்டு விட்டு அவர்களை நையாண்டி செய்தது நியாயம் அல்ல//

நையாண்டி செய்யவில்லை, நடப்பதாக அறீந்ததை பதீவிட்டேன். அரசியல் ரீதியாக தேர்தல் புறக்கணிப்பு என்பது மிக சக்தி வாய்ந்தது. நாம் உண்ணாவிரதம் இருந்தால் ,கிட உன் வயிறு
என்னக்கென்ன மயிறாப்போச்சுனு அரசியல்வாதிகள் கண்டுக்க மாட்டாங்க,அவங்களுக்கு தேவையான ஓட்டுக்கு கேடுனா மட்டுமே பதறுவாக. அதை சொன்னதும் எல்லாம் எங்களுக்கு தெரியும்னு ஓடிடாங்களே போராளிகள்.

----------------------

நிவாஸ் என்றப்பதிவர் படிக்காமலே பொலம்பி இருப்பார், அவரது பின்னூட்டத்தில பார்த்தா 1500 கோடி ருபா அணு உலைனு வேற சொல்லி இருப்பார் நான் அதை எல்லாம் பெருசா எடுத்துக்கலை.இது போல குத்து மதிப்பா பேசுறவங்க தான் இந்த பதிவில சொன்னத சரியா புரிந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் சரியாக எடுத்துக்கொண்டுள்ளார்கள்.

SURYAJEEVA said...

தேர்தல் புறக்கணிப்பு சக்தி வாய்ந்தது என்று சொல்வதால், எனக்கும் அது குறித்து சில சந்தேகம் இருப்பதால்... இது வரை தேர்தல் புறக்கணிப்பு என்று போராடிய போராட்டங்கள் எவை எவை, என்று பட்டியல் தர முடியுமா? என் மின்னஞ்சல் முகவரி jeevansure@gmail.com

என் அறிவை கூர் தீட்டி கொள்ள கேட்கிறேன், உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்

வவ்வால் said...

//தேர்தல் புறக்கணிப்பு சக்தி வாய்ந்தது என்று சொல்வதால், எனக்கும் அது குறித்து சில சந்தேகம் இருப்பதால்... இது வரை தேர்தல் புறக்கணிப்பு என்று போராடிய போராட்டங்கள் எவை எவை, என்று பட்டியல் தர முடியுமா? என் மின்னஞ்சல் முகவரி jeevansure@gmail.com//

வாங்க சூர்யா,

நாம என்ன அணு உலை ரகசியாம பேசப்போறோம், இங்கேவே பேசுவொம், நம்ம "சமூக போராளி "தோழர்களும் தெரிஞ்சுகட்டுமே!(தெரிஞ்சுகிட்டே கேட்கிறாப்போல இருக்கு)
இந்தியாவில பிரிட்டீஷ் காலத்தில 1920 இல் இருந்து தேர்தல் நடக்குது, அப்போ வெறும் பிராவின்சியல் அளவுக்கு தான்,ஆரம்பத்தில தேர்தலில் கலந்துக்க வேணாம் புறக்கணிக்கனும் என முடிவு செய்த காங்க் பின்னர் 1922 la ஸ்வராஜ் பார்டியாக கலந்து கொண்டது,அதாவது அப்போ கூட காங்க் தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தது. எனவே கோரிக்கையை வலியுறுத்த தேர்தல் புறக்கணிப்பு என்பது இந்தியாவில் தேர்தல் ஆரம்பித்த காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

1934 இல் தான் காங்கிரஸ் நேரடியாக கலந்துக்கொண்டது. பின்னர் இரண்டு முறை ராஜினாம செய்து எதிர்ப்பு காட்டியுள்ளது.

சமீபகாலத்தில் தெலுங்கானா பிரச்சினையில் புறக்கணிப்பு, அல்லது வென்றவுடன் ராஜினாமா என இன்னும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஏன் காங்கிரஸ் எம் எல் ஏ, எம்பிக்களே எதிர்ப்பு காட்டவில்லையா?

தமிழ்நாட்டில் ஜாதியக்காரணங்களுக்குகாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலத்தில் தேர்தலை புறக்கணிப்பு அல்லது ராஜினாமா என பூச்சாண்டிக்காட்டவில்லையா?

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவெனில் கூடன்குளத்தில் அணு உலை கட்டி , ஹாட் ரன் நடத்தப்பட்டு எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய நிலையில் இருக்கு. இந்த்அ நிலையில் வெறும் கோஷ்மோ , உண்ணாவிரதமோ ஆட்சியாளர்களை அசைக்காது, எல்லா அரசுக்குமே ஒரு பிடிவாதம் இருக்கும், அதனை அசைக்க ரொம்ப சக்தி வாய்ந்த போராட்ட அணுகு முறை தேவை.

தனி தெலுங்கானா பிறக்கவில்லை என்றாலும் உயிர் போகும் ஆபத்து இல்லை, ஆனாலும் எத்தனை தீவிரம் காட்டுகிறார்கள், ஆனால் இங்கே? இன்னும் சொல்லப்போனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் முழுதுமே பெரிதாக ஈடுபாடுக்காட்டவில்லை எனத் தோன்றுகிறது.

சமீபத்தில் தந்தியில் ஒரு விளம்பரம் பார்த்தேன், கூடன் குளம் அணு உலை அருகே, நாங்குநேரியில் ,தேசிய நெடுஞ்சாலை அருகில் வீட்டு மனைகள் விற்பனை என போட்டிருந்தார்கள்,விட்டா கிடைக்காது வாங்கோ என! அதாவது அணு உலை அருகே வீடு கட்டுங்கள் என அழைக்கிறார்கள், என்னமோ பக்கத்தில பஸ்டேன்ட் என்பது போல! இதே போல கல்ப்பாக்கத்திலும் கன ஜோராக ரியல் எஸ்டேட் பிசினஸ் போகுது. மார்க் பிராப்பர்டீஸ் பெரிய குடியிருப்பு வளாகம் கட்டி இருக்கிறார்கள், கல்ப்பாக்கம் அருகில் என்பதே அவர்கள் முழக்கம் :-))

அணு உலையோ , சுடுகாடோ எல்லாமே இப்போ லேண்ட்மார்க் தான்!

SURYAJEEVA said...

உங்கள் பதில்கள் படித்தேன், நன்றி... நான் ரகசியம் பேச அழைக்கவில்லை, உங்கள் பதில் உடனே என் கண்ணில் பட வேண்டும் என்று தான் கேட்டேன்... follow gadget சேர்த்தால் உங்கள் பதிவுகள் உடனுக்குடன் எங்களுக்கு கிடைக்க வழி கிடைக்கும், நடக்குமா?

வவ்வால் said...

சூர்யா,
நன்றி!

சும்மா தான் எல்லாருக்கும் தெரியட்டும்னு சொன்னது, ரகசியம் என்பதற்காக அல்ல,

ரொம்ப நாளா என் பதிவைப்பயன் படுத்தவில்லை, அதான் அப்படியே இருக்கு, நீங்க சொன்னத சேர்த்தூ விடுகிறேன்.பொதுவா விட்ஜெட், கேட்ஜெட்லாம் போட மாட்டேன் அவை பக்கம் திறக்க தாமதப்படுத்தும் என்பதால். டிராபிக் ஸ்டாட் கூட சேர்ப்பதில்லை.

sixth sence said...
This comment has been removed by the author.
swaminathan said...

Fine.