Sunday, October 14, 2012

மின்சாரக்(கொடுங்)கனவுகள்.


தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.

மின்வெட்டு என்று சொன்னால் மின்சாரம் வந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் தடை ஏற்படுவதாகும், முழுக்க மின்சாரம் இல்லாத நிலையில் சிறிது நேரம் மட்டுமே மின்சாரம் வருவதனை  மின்வெட்டு என சொல்வது எப்படி சரியாகும், ஏம்பா நான் சரியாத்தான் பேசுறனா?

சரி எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிய எதுக்கு வார்த்தை விளையாட்டுல சொல்லிக்கிட்டு, இப்போதைய மின்சார தட்டுப்பாடான நிலைக்கு அடிப்படையான சில காரண ,காரியங்களை பார்க்கலாம்.

முதல் காரணம் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 500 மெகா வாட் அளவுக்கே மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 4000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு மின்நுகர்வு-தட்டுப்பாடு பட்டியல்.

in MW
Month     Jun - 10  July -10  Aug -10  Sep -10  Oct -10 Nov -10
Avg.
Demand  10850    10860     10500    10650 10990     9850
Avg.
Availability  9160    9130       9040     8500   7940      7250
Deficit -      1690   -1730     -1460    -2150 -3050      -2600

in MW

Month     Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand  10770  11080    11160    11580   11760     11840
Avg.
Availability 8150   7650     9150      9050     9400       10270
Deficit       -2620 -3430    -2010    -2530    -2360      -1570


The deficit varies from 1400MW to 3400MW
The availability Vs demand and the deficit during Day time
(6.00 to 18.00 Hrs)
in MW

Month       Jun - 10 July -10 Aug -10 Sep -10 Oct -10 Nov -10
Avg.
Demand   10300          10300   9980      10130     9890        8880
Avg.
Availability   8580       8400       8290      7780      6780        6400
Deficit        -1720      -1900      -1690 -    2350    -3110       -2480

in MW
Month        Dec -10 Jan -11 Feb -11 Mar -11 Apr -11 May - 11
Avg.
Demand     9150       11080      11160      11580      11160     11840
Avg.
Availability   7290       7450        8940         8740       9200      10160
Deficit -       -1860       -3630      -2220         -2840    -1960      -1680

-----------------

மின் தட்டுப்பாடு இவ்வளவு உக்கிரமாக இருக்கும் போது மின்வாரியம் ஏன் விரைந்து செயல்படவில்லை என பார்த்தால் அதனுள் ஏகப்பட்ட அரசியல் அதுவும் நிர்வாக அரசியல் என விரவிக்கிடக்கிறது, ஆள்வோருக்கு சரியான நேரத்தில் உண்மையான நிலவரத்தினை சொல்ல தவறிவிடுகிறார்கள், பொய்யான காகித கணக்குகளை காட்டி விரைவில் சரியாகிவிடும் என்பதே அதிகாரிகளின் பதில் ,அதனையே தலைமையும் நம்புகின்றது,ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என அவர்கள் அறிவதே இல்லை, ஊடகங்களில் வரும் செய்தியினைக்கூட அரசியல் காழ்ப்புணர்வு செய்தி எனப்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு மின்வாரியம் ஆமை வேகத்தில் வழக்கமாக செயல்ப்பட்டுக்கொண்டிருந்தது ,அதனை மேலும் சிக்கலாக்கி இன்னும் நத்தை வேகத்தில் செயல்படுமாறு சில மாற்றங்களை செய்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சேரும் எனலாம்.

முதன் முதலில் தமிழ்நாடு மின்வாரியம் 1957 இல் மாநில மின்விநியோக சட்டம் 1948 இன் கீழ் உருவாக்கப்பட்டது , இதன் பணி மின் உற்பத்தி, மின் பகிர்வு,மின் விநியோகம் ஆகும்.

1993 வரையில் மின்சார வாரியம் பொதுப்பணித்துறையின் ஒரு அங்கமாக செயல்ப்பட்டு வந்தது, பின்னர் மின்சக்தி துறை என தனியாகப்பிரிக்கப்பட்டு தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பின்னர் மீண்டும் 2003 இல் மின்சார துறையை நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதாக சொல்லிக்கொண்டு , மின் உற்பத்தி, கடத்துதல்,விநியோகம்,கட்டுமானம், நிதி என தனித்தனியாக பிரிக்கப்போவதாக ஒரு சட்ட திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் 2003 இல் தனி துறைகளாக பிரிக்க வேலைகள் காகித அளவில்  துவங்கினாலும் பிரிக்கப்படவில்லை அல்லது வேலை மெதுவாக நடந்து வந்தது எனலாம், இந்த இரண்டு வேலைகளையும் துவங்கியது அம்மையார் ஆட்சிகாலத்தில் என்றாலும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

பின்னர் 2010 இல் முத்தமிழ் வித்தவரான மஞ்சத்துண்டு அய்யா ஒரே வீச்சில் பல துறைகளாகவும், அவற்றை அரசு வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாகவும் மாற்றியமைத்துவிட்டார்.

இப்படி தனித்தனியாக பிரிப்பது நல்ல விளைவினை ஏற்படுத்தும் திட்டம் போல தோன்றினாலும் , மின்வாரியம் செயல்ப்படும் வேகத்தினை குறைக்கவே செய்யும் என்பது அரசு நிர்வாகம் செயல்படும் விதம் தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

மேலும் இது துறை ரீதியாக பிரிக்கப்பட்டது என சொன்னாலும் அனைத்து பிரிவினையும் தனி லிமிட்டட் கம்பெனிகள் என்றே உருவாக்கியிருப்பதையும் கவனிக்க வேண்டும்,அரசு துறை வேறு ,அரசு நிறுவனம் என்பது வேறு, நிறுவனமாக பிரிக்கப்பட்டால் எப்போது வேண்டுமானலும் தனியார் முதலீட்டினை அனுமதித்து தனியார் மயமாக்கலாம், பங்குகளை விற்கலாம், மேலும் லாப,நட்டம் என பார்த்து செயல்படும் ஒரு அமைப்பாக மாறிவிடும், சேவை என்பதற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

தற்போது எண்ணை நிறுவனங்கள் அரசு நிறுவனங்களாக இருந்த போதிலும் , சர்வதேச சந்தை விலைக்கு எண்ணை விலையை நிர்ணயிக்க உரிமை கொடுத்துவிட்டு, விலை ஏற்றினால் அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பேட்டிக்கொடுக்கிறார்கலே ,அது போல வருங்காலத்தில் மின் நிறுவனங்களும் செயல்படலாம்.

தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட தமிழ் நாடு மின்வாரியத்தின் பிரிவுகள்.

I. Erstwhile TNEB which has been reorganized as,

i. TNEB Limited.

ii. Tamil Nadu Generation and
Distribution Corporation Limited
(TANGEDCO),

மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், நுகர்வோருக்கு மின்சாரம் அளித்தல்.

iii. Tamil Nadu Transmission Corporation
Limited (TANTRANSCO) and

மாநிலத்தின் உள் பகிர்வு வலை(கிரிட்) மற்றும் வெளியில் இருந்து வாங்கும், விற்கும் மின்சாரத்தினை மின் பகிர்வு வலை மூலம் செயல்படுத்துதல்.

II. Tamil Nadu Energy Development Agency
(TEDA)

உற்பத்தி, தேவை, எதிர்கால திட்டம் என வடிவமைத்தல்.

III. Chief Electrical Inspector to Government
(CEIG)

மின் திட்டங்கள், மின் பகிர்வு,விநியோகம் என கண்காணித்தல்.

IV. Tamil Nadu Power Finance and Infrastructure
Development Corporation Limited.

மின் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்குதல், திரட்டுதல்.

இப்படித்தனியாக  பிரிக்கப்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலை வாங்குவதே மிகப்ப்பெரிய வேலையாக இருக்கும்.

முன்னர் மின்வாரிய தலைவர் என ஒருவர் இருப்பார் அவர் முடிவு செய்து மற்றவர்களை செயல்ப்படுத்த சொன்னால் போதும், இப்போது அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு மேலாண் இயக்குனர், அனைவரும் சம அதிகாரம் கொண்ட உயர் அதிகாரிகள், 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க வேண்டும் என கொள்கை முடிவு எடுக்க அனைவரும் ஒற்றுக்கொண்டு செயல்ப்படுத்த வேண்டும், இவர்களை எல்லாம் கூப்பிட்டு வைத்து வட்டம்,வட்டமாக மீட்டிங் போடுவதற்கே மின்சாரத்துறை அமைச்சருக்கு நேரம் சரியாக போய்விடும்.

கடைசியில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ,மெது பகோடா ,காப்பி சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே மீட்டிங் கலைந்துவிடும்.

இப்படி தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் , ஒவ்வொன்றாக தனியார் முதலீட்டுக்குள் நுழைக்கலாம், ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பினை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என எளிதாக காரியத்தினை முடிக்க முடியும்.

உதாரணமாக மின்பகிர்வு நிறுவனம் தனது கம்பிவட கட்டமைப்பினை ஒரு தனியார் மின் உற்பத்தியாளருக்கு குத்தகைக்கு விடலாம், அதனை மின் உற்பத்தி நிறுவனம் எதிர்க்க முடியாது. எல்லாம் அரசு நிறுவனம் தானே அமைச்சர் , முதலமைச்சர் இருக்காங்களே கேட்க மாட்டாங்களா என்றால், அவர்களுக்கு தெரிந்து தானே நடக்கிறது , அப்படியே  யாரேனும் கேள்வி கேட்டாலும் அந்நிறுவனங்கள் லாபகரமாக நடக்க என்ன செய்யவேண்டுமென முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது,அதில் அரசு தலையிடாது என டிப்ளமேட்டிக்காக சொல்வார்கள்,ஆனால் அந்த அதிகாரத்தினை கொடுத்ததே அமைச்சரவை என்பதை மறைத்துவிடுவார்கள்.

------------------------

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் பகிர்வு கட்டமைப்பு விவரம்,

• EHT & HT Substations:-

400 KV SS-துணை மின்நிலையம் : 13

230 KV SS  துணை மின் நிலையம்: 77

மேற்கண்ட வகை துணை மின்நிலையங்கள் கிரிட் மின்பகிர்வில் பயன்ப்படுபவை.

110 KV SS துணை மின்நிலையம்: 707

66 KV SS துணை மின்நிலையம் : 33

33 KV SS துனை மின்நிலையம்: 513
                                                    Total : 1343

மேற்கண்டவை முறையே மாநகர, தொழிற்சாலை, நகரம், சிற்றூர்களுக்கு மின் விநியோகம் செய்யப்பயன்படுபவை.

     
• EHT/HT Lines : 1.77 lakhs Ckt. Km

கூடுதல் உயர் அழுத்த.உயர் அழுத்த கம்பிவட அமைப்பு ,உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு மின்பகிர்வுக்காக மின்சாரம் கொன்டு செல்ல பயன்படுகின்றன.

• LT Lines : 5.58 lakhs Km
குறைவழுத்த மின் கம்பி வட அமைப்பு வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு மின்விநியோகம் செய்ய.

• ஊர்களின் பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்ய 2.05 lakhs Distribution Transformers பயன்படுகின்றன.
-------------

தமிழ்நாட்டில் அரசு சார்பில் இயக்க்ப்படும் அனல், புனல்,காற்றாலை, எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள்.




கவனிக்கவும்:-

* மேட்டூர் ,போன்ற நீர் மின் நிலையங்களில் நீர் இருக்கும் அளவைப்பொறுத்தே மின் உற்பத்தி என்பதால் ,காவிரியில் நீர் வராத நிலையில் இப்பொழுது மின் உற்பத்தி 50%க்கும் கீழே போய்விட்டது.

*எண்ணூர் அனல் மின்நிலையம் 50% மின் உற்பத்தி திறனில் செயல்ப்படும் நிலையில் இருப்பதால் பாதி மின் உற்பத்தி தான் செய்கிறது.

*அனல் மின் நிலையங்களுக்கு என ஆண்டுக்கு மொத்தம் 15 .5 மில்லியன் டன் நிலக்கரி ஒதுக்கப்படுகிறது, அதில் 13.5 மில்லியன் டன் மத்திய அரசின் கோல் இந்தியா அளிக்கும் மீதி 2 மில்லியன் டன் வெளியில் வாங்கப்படுகிறது,எனவே நிலக்கரி கையிருப்புக்கு ஏற்ப மின் உற்பத்தியின் அளவு ,குறைக்கப்படுவது வழக்கம், எனவே பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் 80-90% மட்டுமே மின் உற்பத்தி செய்யும்.

*குத்தாலம், வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படா நிலையில் உள்ளது.

*பேசின் பிரிட்ஜ் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் நாப்தா மூலம் இயக்கப்படுவதால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே இயங்கும்.

மேற்கண்டப்பட்டியல் மூலம் அறிய வருவது என்னவெனில்,அரசு மின்னுற்பத்தி வெறும் 5,677 மெகாவாட்டுகள் மட்டுமே. மொத்த மின் தேவையோ 14,000 மெகாவாட்டுக்கு அருகில், சராசரியாக 11,000 மெகாவாட் மின்சாரம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

ஆனால் அரசு மின் உற்பத்தில் முதலீடு செய்யாமல் தனியார் உற்பத்திக்கு முன் உரிமை அளித்து வருகிறது,இப்படியே போனால் வெகுவிரைவில் மின் உற்பத்தியில் தனியாரின் கை ஓங்கி, மின்சாரத்தின் விலை வெகுவாக உயரும், அரசின் பெரும்பணம் மின்சாரம் வாங்கவே செலவாகும் அல்லது சிக்கன நடவடிக்கை என மேற்கொண்டால் தற்போதுள்ளது போன்று கடும் மின்வெட்டு ஏற்படும்.

• Gross energy consumption during

2010-11 was 74990 MU.

• Total energy generated from State
owned stations during 2010-11 was
25784 MU.

• Energy purchased from Central
Generating Stations, Wind, Open
Market, Exchange etc., during 2010-11
was 49206 MU.

தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொத்த மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியே அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் செய்துள்ளன. மூன்றில் இரண்டு பகுதி மின்சாரம் வெளியில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டு ,விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி விநியோக விலை ரூ3.81 ,

ஆனால் அரசின் கொள்முதல் விலை யூனிட்டிற்கு ரூ 5.31

எனவே சராசரியாக ஒரு யூனிட் மின்சாரம் விற்பதனால் மின்வாரியத்திற்கு 1.50 ரூ நட்டம்.

இதன் மூலம் ஆண்டுக்கு ஏற்படும் நிகர நட்டம் ரூ 38,000 கோடி ஆகும்.

மேலும் கடந்த காலங்களில் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட கடன் 45,000 கோடிகள்.

இந்த லாப-நட்ட கணக்குகளின் காலம் 2011 ஆகும், பின்னர் ஆட்சிக்கு  வந்த அம்மையார் நட்டமில்லாமல் மின் நிறுவனங்கள் செயல்பட என்ன செய்வது என "உயர் அதிகாரிகளை" ஆலொசனை கேட்க கட்டணம் உயர்த்த வேண்டும் என்று சொல்ல ,கட்டணமும் உயர்த்தப்பட்டது,அப்படியும் நட்டமே வர , கூடுதலாக பணம் செலவழிக்க அரசால் முடியாது, எனவே முடிந்த வரை நட்டமில்லாமல் இயங்க சொல்ல , "உயர் அதிகாரிகளும்" கூடுதல் விலைகொடுத்து  மின்சாரம் வாங்கி, குறைவான விலையில் விநியோகித்தால் தானே நட்டம் வரும் என அதி அற்புதமாக கண்டுப்பிடித்து மின்சாரம் வாங்குவதை குறைத்து விட்டார்கள், அதன் விளைவே மின்வெட்டு.

மூன்றில் இரண்டு பங்கு மின்சாரம் வெளியில் வாங்கப்படுகிறது ,அதனை முழுவதுமாக நிறுத்தி இருந்தால் 8 மணி நேரம் மட்டுமே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும், அப்படி எல்லாம் மக்களை வதைக்க கூடாது என கருணை உள்ளத்துடன் மேலும் கொஞ்சம் நேரம் மின்சாரம் கொடுப்போம் என குறைந்த அளவுக்கு மின்சாரம் வாங்கி சுமார் 12 மணி நேரம் மின்விநியோகம் செய்கிறார்கள்.

நடுநிலையானவர்கள் நட்டத்தில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும், மக்கள் தொகை அதிகம்ம் ஆகிடுச்சு ,நிறைய மின் இணைப்பு கொடுத்தாச்சு, அதற்கேற்ற மின் உற்பத்தி பெருகவில்லை, அரசும் என்ன தான் செய்யும் என அப்பாவியாக நினைக்கலாம்.

உண்மையில் மக்கள் அனுபவிக்கும் மின்சாரம் என்பது மொத்த மின்விநியோகத்தில் குறைவான அளவே,

வகை வாரியாக மின்நுகர்வு அளவு.



மேல் கண்ட அட்டவனையில் இருந்து அறியப்படுவது என்னவெனில்,

தமிழ்நாட்டில் மொத்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 223.44 லட்சம்.

அவற்றின் மூலம் நுகரப்படும் மின் சாரத்தின் அளவு=60,357  மில்லியன் யூனிட்கள்.

ஆனால் இதில் வீட்டு மின் இணைப்பு 148.77 லட்சம், அவற்றின் மூலம் நுகரப்படும் மின்சாரத்தின் அளவு 16,387 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

இந்தளவானது அரசின் மின் உற்பத்தி அளவான 25,734 மில்லியன் யூனிட் மின்சாரம் என்ற அளவை விட குறைவு.

மேலும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 19.73 லட்சம்.
நுகரப்படும் மின்சாரத்தின் அளவு= 12,632 மில்லியன் யூனிட்கள்.

பொது மக்கள் +விவசாயிகள் மின்நுகர்வு=      29,019 மில்லியன்ன் யூனிட்கள்.

அரசு தயாரிக்கும் மின்சாரத்திற்கும் ,மக்கள்,மற்றும் விவசாயிகள் பயன்ப்படுத்தும் மின்சாரத்திற்கும் உள்ள இடைவெளி=4,715 மில்லியன் யூனிட்கள் மட்டுமே.

அரசு ஒரு யூனிட் கொள்முதல் விலை சராசரியாக 5.31 ரூ எனவும் ,அதனை சராசரியாக 3.81 ரூவிற்கு விற்பதால் நட்டம் வருகிறது என சொல்கிறதே ,ஆனால் நிகர நட்டம் 38,000 கோடி என்கிறார்கள் அப்படியானால் மக்களுக்காக வாங்கும் மின்சாரம் வெறும் 4,715 மில்லியன் யூனிட்கள் தானே அவற்றின் விலையா 38,000 கோடி என ஒரு கேள்வி பாமரனுக்கும் வரனுமே ?

வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரம் 49,203 மில்லியன் யூனிட்டில் 4,715 மி.யூ போக மீதம் 44,500 மி.யூனிட்களுக்கு செலவாகும் பணமும் மக்கள் பெயரில் கணக்கு வைக்கப்படுகிறது.

இந்த மின்சாரம் தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் ,இதரவற்றிற்கு.

தொழிற்சாலை இணைப்புகளின் எண்ணிக்கை 5.37 லட்சம் மட்டுமே ஆனால்  21,075 மில்லியன் யூனிட்கள் என மொத்த மின்நுகர்வில் 34.92 சதவீதம் மின்நுகர்வினை அனுபவிக்கின்றன.

இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்கள்,மென் பொருள் நிறுவனங்கள்.சிறு குறு தொழிற்சாலைகள் மின் வெட்டினை அனுபவிக்கவே செய்கின்றன.

வெளியில் வாங்கும் மின்சாரம் சுமார் 8 ரூ -முதல் 17.50 ரூ வரையில் ஒரு யூனிட்டுக்கு ஆகிறது,

அரசு தயாரிக்கும் மின்சாரம் யூனிட்டுக்கு 2.50 ரூ மட்டுமே ஆகும், இதை எல்லாம் கூட்டி சராசரியாக 5.31 ரூ என யூனிட்டுக்கு கணக்கு சொல்லி ,அதன் மூலம் வரும் நட்டத்தினை அனைவருக்கும் பரவலாக்கிவிடுகிறார்கள்.

அதாவது 5.37 லட்சம் தொழிற்சாலை இணைப்புகள் பெருமளவு மின்சாரம் பயன்படுத்திக்கொண்டு, பெருமளவு பொதுமக்கள் 143 லட்சம் இணைப்புகள் மூலம் குறைவான மின்சாரம் பயன்ப்படுத்தினாலும் அனைவருக்கும் சராசரியாக ஒரே விகிதத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் வெளிமார்க்கெட்டில் வாங்கும் மின்சாரத்தின் பெரும் பங்கினை அனுபவிப்பது தொழில்,வணிக துறைகளே, அவர்களையே நேரிடையாக வெளிமார்க்கெட்டில் மின்சாரம்ம் வாங்கிக்கொள்ளுங்கள் என சொன்னால் அரசுக்கு கூடுதலாக செலவாவது குறையும்.

அப்படியும் அரசு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்கி,மின்வாரிய மின்பகிர்வு கிரிட் மூலம் கொண்டு வந்துக்கொள்ளலாம் என அனுமதிக்கொடுத்தும் யாரும் அப்படி செய்யவில்லை ,காரணம் அவர்களே வாங்கினால் ஒரு யூனிட் மின்சாரம் சுமார்12 ரூக்கு குறைவாக வாங்க முடியாது. அரசு கூடுதல் விலைக்கு வாங்கினாலும் ரூ 5.31க்கு மேல் விற்காது என்பதால் , அரசின் மின்வாரியமே வாங்கிக்கொடுக்கட்டும் என இருக்கிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17.50 ரூ என்றெல்லாம் அநியாய விலை நிர்ணயம் செய்து வாங்கியதில் மஞ்சத்துண்டின் கைங்கர்யமும் உண்டு.

மேலும் மின் உற்பத்தியில் 18.5% மின்கடத்தி இழப்பாக போய்விடுகிறது, இது அல்லாமல் மின் திருட்டு  என கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது.

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் போது மின்சாரத்தின் விலை மட்டும் அல்லாமல் அவற்றை கிரிட் வழியாக கொண்டு வரவும் கட்டணம் உண்டு, இதனை வீலிங் சார்ஜ் என்பார்கள்.

மாநிலங்களுக்கு இடையே கிரிட்டில் மின்சாரம் கொண்டு வரும் போது எத்தனை சப் ஸ்டேஷன்களை கடக்கிறதோ அவ்வளவு மின் இழப்பு ஏற்படும்.

ஒரு சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என தேசிய மின்வாரியம் சொல்கிறது.

உதாரணமாக குஜராத்தில் இருந்து 800 மெ.வாட் மின்சாரம் தமிழ்நாடு வாங்கியது ,ஆனால் தமிழக எல்லையில் 450 மெ.வாட் தான் கிடைத்தது ,350 மெ.வாட் கடத்தி இழப்பு,வீலிங் இழப்பாக போய்விட்டது.

தொலை தூரத்திலிருந்து மின்சாரம் வாங்கினால் இப்படி இழப்பு அதிகம் ஆகும்.

ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி ,சுமூகமான உறவு இல்லை எனவே மின்சாரம் தரமாட்டார்கள். கர்நாடகாவில் தண்ணீரே தருவதில்லை, மின்சாரம் தரப்போவதில்லை.

மத்திய மின் தொகுப்பில் வழக்கமாக கொடுக்கும் மின்சாரம் வருவதிலேயே பிரச்சினை எனவே கூடுதலாக விலைக்கு கேட்டால் தர வாய்ப்பில்லை அல்லது தர விருப்பம் இல்லை எனலாம்.

இந்நிலையில் தனியாரிடம் வாங்கி சமாளிக்கலாம் என்றால் விலை மிக அதிகம், இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மாநில மின்வாரியம் உற்பத்தி திறனை பெருக்க வேண்டும்.ஆனால் அவர்களுக்கோ அதில் ஆர்வமில்லை, தனியாரை தயாரிக்கவிட்டு , விலைக்கு வாங்கி அரசின் கஜானாவை காலி செய்யலாம் இல்லை எனில் மின்கட்டணத்தினை உயர்த்தி கொள்ளலாம் ,அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மின்வெட்டு தான் என மக்கள் விரோத சிந்தனைகளில் ஆட்சியாளரும்,அதிகாரிகளும் சிந்திக்கும் ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

மின் வாரியத்தின் லாப நட்ட கணக்கு மற்றும் கடன் ,கடந்த ஐந்தாண்டுகளில்.



2006 இல் 9,000 கோடியாக இருந்த மின்வாரிய கடன் 2011 இல் 45,000 கோடியாக உயரக்காரணம் ,தனியாரிடம்ம் மின்கொள்முதல் செய்ய அதிக விலை நிர்ணயம் செய்ததும் ஒரு காரணம். பல தனியார் மின் உற்பத்தியாளர்களும், காற்றாலை அதிபர்களும் அரசியல் பினாமிகள் என்பதால் ,யாரு வீட்டு பணம் எடுத்துக்கோ என கண்ணை மூடிக்கொண்டு விலை நிர்ணயம் செய்து மின்வாரியத்தினை கடனுக்குள் தள்ளி , அதன் வளர்ச்சியினை முடக்கியதில் மஞ்சத்துண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

இப்பொழுதும் கூடுதல் பணம் செலவழித்தால் மின்சாரம் வாங்கி ,மின் தடையை நீக்கலாம், ஆனால் நிர்வாக மேம்பாடு என சொல்லி  நிதி ஒதுக்கீட்டினை குறைத்துவிட்டு மின்வெட்டினை அதிகரித்துவிட்டார்கள்.

மக்களுக்கு குறைவான விலையில் மின்சாரம் கொடுப்பதால் ஆகும் வருவாய் இழப்பு



மேற்கண்ட அட்டவணையிலிருந்து , பொதுமக்கள், விவசாயிகள், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என அனைத்திற்கும் சேர்த்து அரசு அளிக்கும் மின்மானியம் சுமார் 2071 கோடிகள் மட்டுமே என்பது புலனாகிறது.

ஆகவே ஆண்டுக்கு 38,000 கோடி வருவாய் இழப்பு மின்வாரியத்திற்கு ஏற்படக்காரணம் மக்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

ஆனால் மின்வாரியத்திற்கு நட்டம், எனவே மின்சாரம் வாங்க இயலவில்லை என மின்வெட்டு மட்டும் மக்களுக்கு?

ஆட்சிக்கு வந்தால் உடனே மின் வெட்டு தீரும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதே எப்படி எனப்பார்த்தால்,

வட சென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின்நிலையம், ஆகியவற்றில் கூடுதல் மின் நிலையம் அமைத்தல் ,திருவள்ளூர் அருகே வள்ளூர் மின் திட்டம் அனைத்தும் 2011 இறுதியில் செயல் பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி நடைபெறாமல் காலை வாரிவிட்டது.

எதிர்பார்க்கப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்.



அனைத்து திட்டங்களும் இறுதிக்கட்டத்தில் இருந்தும் வேலை முடியாமல் இழுத்துக்கொண்டுள்ளது ,அதனை விரைந்து முடிக்க வைக்க அதிகாரிகள் அக்கரைக்காட்டியிருந்தாலே இப்போதைய மின்வெட்டினை சமாளித்து இருக்கலாம். அதனை செய்ய தவறிவிட்டார்கள். எதற்கெடுத்தாலும் சாட்டையை வீசும் அம்மையார் இதற்கு ஏன் சாட்டையை சொடுக்க மறந்தார்கள் என தெரியவில்லை.

இதில் மத்திய அரசின் கை இருக்குமோ எனவும் ஒரு சந்தேகம் இருக்கிறது, இத்திட்டங்களுக்கான பாய்லர், இன்ன பிற உபகரணங்களை வழங்க வேண்டியது பாரத மிகு மின் நிறுவனம் ஆகும், காலத்தே வழங்கி இருந்தால் இந்நேரம் மினுற்பத்தி நடந்து இருக்கும்.

கூடங்குளம் அணு மின்நிலையம் துவங்க மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும், எனவே மின் தட்டுப்பாடு இருந்தால் மட்டுமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என ,  ,மத்திய அரசு அழுத்தம் கொடுத்து பாரத மிகு மின் நிறுவனத்தினை தாமதப்படுத்துவதாக செய்திகளில் அடிபடுகிறது.

எது எப்படி இருந்த போதும் மாநில அரசு மக்களின் நலன் கருதி இதனை சரி செய்திட போராடி இருக்க வேண்டாமா? மத்திய அரசை எதிர்த்து கேள்விக்கேட்காதவரா அம்மையார், ஒரு வேளை பெங்களூர் வழக்கெல்லாம் இருக்கும் நிலையில் ரொம்ப முறுக்கிக்கொள்ளக்கூடாது என நினைக்கிறாரோ என்னமோ?

-------------------
பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள்,தமிழ்நாடு மின்வாரிய இணைய தளம்.நன்றி!
********

26 comments:

R.Puratchimani said...

வவ்வால் மிகவும் அருமையான அலசல், மின் கம்பியில தலைகீழா தொங்கிகிட்டு இந்த ஆராய்ச்சிதான் செய்தீர்களா :) . நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்க்கே வழங்கலாமே இதை ஏன் செய்வதில்லை. இதற்க்கு ஏதேனும் காரணம்?
நன்றி

வவ்வால் said...

புரட்சி மணி,

வாங்க,நன்றி!

கரண்டு வராத கம்பியில தொங்குறத தவிற வேற என்னத்த செய்ய :-))

நெய்வெலி அனல் மின் நிலையம் பற்றி சேர்க்கணும்னு நினைச்சேன், பதிவு பெருசா இழுக்கவே விட்டுவிட்டேன்.

சுருக்கமாக சொன்னால் ,

நெய்வேலியில் 2450 மெ.வாட் உற்பத்தி திறன் உள்ளது ,ஆனால் 2000 மெவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் தமிழ்நாடு ,கர்நாடகா,கேரளா, புதுவை,ஆந்திரா, ஒரிசா,கோவாவுக்கு பங்குண்டு.

தமிழ்நாட்டுக்கு தான் அதிக பங்கு 1115 மெ.வாட்.

ஏன் பல மானிலத்திற்கும் பங்கு கொடுக்கப்படுகிறது எனில் ,மத்திய அரசுக்கு பல மாநிலத்திலிருந்தும் கிடைக்கும் வரிவருவாயை கொண்டே என்.எல்.சி அமைக்கப்பட்டுள்ளது, எனவே அனைத்து மாநிலத்துக்கும் பங்கு கொடுக்கப்படுகிறது.

நிறுவிய மாநிலம் என்பதால் 60% அளவுக்கு ஷேர் கொடுக்கப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பணம் தமிழ்நாடு கொடுத்தே வாங்க வேண்டும், அரசு மின்சாரம் என்பதால் யூனிட் சுமார் ரூ 2.50க்கு கிடைக்கும்.

நெய்வேலியில் மொத்த மின் உற்பத்தியே 2000 மெ.வா தான், ஆனால் மத்திய நிதியில் இருந்து தமிழ்நாடு 2850 மெவாட் பெறுகிறது, எப்படி எனில் இதே போல ஆந்திராவில் உள்ள ராமகுண்டம், சிம்மாத்திரி அனல் மின்நிலையங்கள்,கர்நாடகாவில் உள்ள கைகா அணு மின் நிலையம்,ஆகியவற்றில் இருந்து தமிழ் நாட்டிற்கும் மின்சாரம் கொடுக்கப்படுகிறது.

இப்பொழுது ராம குண்டம் அனல் மின் நிலையம் செயல்படா நிலையிலும், சிம்மாத்திதிரி வேலைகள் இழுத்துக்கொண்டும் இருப்பதால் மத்திய மின் பகி�0��ோ அல்லது உரிமை என சண்டையிட்டோ வாங்காமல் சும்மா இருக்கிறார்கள்.

தூத்துக்குடி,எண்ணூர், மேட்டூர், திருவள்ளூர் மின் திட்டங்�B2் இதனை பேசி வேறு வகையில் வாங்க முடியும், ஆனால் தற்போது பேசியோ அல்லது உரிமை என சண்டையிட்டோ வாங்காமல் சும்மா இருக்கிறார்கள்.

தூத்துக்குடி,எண்ணூர், மேட்டூர், திருவள்ளூர் மின் திட்டங்கள் 99% முடிவடைந்துவிட்டது என்றும் ஆனால் ஏனோ இழுக்கிறார்கள் ,இதன் பின்னால் மத்திய அரசின் திருவிளையாடல் இருக்கலாம் என சொல்லி இருக்கிறேன், உரிமையை கேட்டு பெற வேண்டியவரோ பம்மிக்கொண்டு இருக்கிறார் ,எல்லாம் எதிர்கால பயம் :-))

நாய் நக்ஸ் said...

Where is asin
photo...?????

Anonymous said...

அரசு பொதுமக்கள் தங்களின் மின் தேவையைத் தாங்களே நிறைவு செய்து கொள்ளத் தூண்டுகிறதோ என்னவோ?

http://onameen.blogspot.in/2012/10/blog-post_14.html

http://www.thehindu.com/news/cities/chennai/article2935894.ece

R.Puratchimani said...

வவ்வால் தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி :)

குட்டிபிசாசு said...

வவ்வால்,

மின்சாரம் வராமல் இருக்கு என்றால். அதற்கு காரணம் மக்களும், விவசாயிகளும் தான் என்பதை மறைமுகமாக எப்படியோ நம்ப வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் அதற்காக கொடுத்துள்ள படம் பதிவுலகில் உள்ள சிலருக்காவது தெளிவை ஏற்படுத்தும். மின்சார திருட்டில் சில சிறு தொழிற்சாலைகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

குறும்பன் said...

கவர்ச்சி கன்னி படம் இல்லாம என்னய்யா இடுகை இது ச்சி ச்சி. வவ்வால் ஒழிக. படிச்சிட்டு அப்புறம் பதில் போடுறேன். கனவுகன்னி படம் போடாததால் இப்ப படிக்க விருப்பமில்லை. பிசினையே போடாதிங்க மாற்றம் தேவை.

Anonymous said...

This is very intriguing, You are a quite skilled blogger. I have joined your rss feed and look forward to looking for far more of your wonderful post. Also, I've shared your internet web site in my social networks!

இந்திரா said...

விளக்க்க்க்கமான பதிவு..
நன்றியும் வாழ்த்துக்களும்.

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப விரிவாக உங்கள் கருத்தை பட்டியலிட்டு சொல்லிருகிர்ரிர்கள்...பாராட்டுக்கள்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தி.தமிழ் இளங்கோ said...

//தமிழ்நாட்டில் மின் வெட்டு என்று சொல்வது மிக தவறான ஒரு குற்றச்சாட்டாகும் ,தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை என சொல்வதே சரியான சொல்லாடலாக இருக்கக்கூடும்.//

“மின்சாரம் இல்லை” என்று சொன்னால் அவதூறு வழக்கு வரலாம். எல்லாவற்றையும் ஒருநாள் தனியாரிடம் கொடுத்து விடுவார்கள். அப்புறம் செல்போனில் தனியார் செய்யும் மாய்மாலங்கள் இங்கும் தொடங்கும்.

KARTHIK said...

கார்ப்ரேட் சாமிகளுக்கெல்லாம் தடையில்லா மின்சாரம் என்னத்த சொல்ல :-(

அஜீம்பாஷா said...

மிக அருமையான விளக்கம், நன்றி.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

பதிவு அருமை. பல புதிய தகவல்கள்.

//நெய்வெலி அனல் மின் நிலையம் பற்றி சேர்க்கணும்னு நினைச்சேன், பதிவு பெருசா இழுக்கவே விட்டுவிட்டேன்.//

அடுத்த பதிவில் தொடரவும்.

Raja said...

i am planning to vacate from the state and settle down in karnataka :)

முரட்டுக்காளை said...

ஹா ஹா ஹா ஐதிங்கு

எம்மாம் பெருசா கீது பா போஸ்டு, இன்னா கட்டிங் கட்டிங்கா ராத்திரி புல்லா ஃபுல்லை போட்டுக்கிநீரா ஹி ஹி ஹி

aravi said...

Dear Vaval
Im very much Impressed with your hard work.
Very usefull details for a common man like us.
Im going to send this post/link to all my friends.
Please keep it up.
Aravindan ranga.cuddalore.

aravi said...

Dear Vaval
Im very much Impressed with your hard work.
Very usefull details for a common man like us.
Im going to send this post/link to all my friends.
Please keep it up.
Aravindan ranga.cuddalore.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணாத,

நன்றி,

படம் போட்டால் ஏன் போட்ட கேட்க வேண்டியது ,படம் போடலைனா எங்கே படம்னு கேட்பது,

என்ன கொடுமை சார் இது?

அடுத்த பதிவில் படம் போட்டு கலக்கிடுறேன்!
----------
அனானி,

நன்றி,

மைக்ரோ லெவல் மின் உற்பத்தி திட்டங்களில் மக்களை ஈடுபட வைத்து, பொது மின் உற்பத்தி தேவையை குறைக்க வேண்டும் என்பதே உலக அளவில் அரசாங்கங்களின் நோக்கம் ஆகும். எனவே தான் மாநியம் எல்லாம்.
-------------
புரட்சி மணி,

நன்றி!
---------
குட்டிபிசாசு,

நன்றி!,

மின் திருட்டு மற்றும் மின் பகிர்வின் போது ஏற்படும் இழப்பினை குறைத்தாலே மின்வெட்டு பெருமளவு குறையும்.
---------------
குறும்பன்,

நன்றி!

கவர்ச்சி படம் அல்ல கலைப்படம் அது,அழகியல் நோக்கில் நோக்கவும், அடுத்தப்பதிவில், உங்க ஆசைக்கு ஒன்று,என் ஆசைக்கு ஒன்று என ரெண்டு படம் போட்டுவிடுகிறேன் :-))

படம் இல்லைனு பதிவை படிக்காம போனதற்கு எனது கண்டனங்கள்!
-----------
இந்திரா,

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!
---------
ஈசி,

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!
----------
தி.தமிழ் இளங்கோ சார்,

நன்றி!

மின்சாரம் இல்லை என்ற உண்மையை சொன்னால் அவதூறு வழக்கா ? ந்நீங்களே மாட்டி விடுவீங்க போல இருக்கே ...அவ்வ்வ்!
----------
கார்த்திக்,

நன்றி!

கார்ப்பரேட்களுக்கு தடையில்லா மின்சாரம், அதுவும் மாநியத்தில்.

மின்வாரியம் நட்டத்தில் இயங்க பெருமளவு மின்சாரம் வெளியில் வாங்கி கார்ப்பரேட்களுக்கு கொடுப்பதே.
-------------
அஜீம்பாஷா,

வருகைக்கும், கருத்துக்கும்,நன்றி!,
---------
திரு.சு.பி.சுவாமிகள்,

நன்றி,

என்.எல்சி பற்றி இன்னொரு மின்ப்பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

என்.எல்சியால் சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் பாதிப்பு, அவ்வளவு பாதிப்பும் பொறுத்து போகும் மக்களுக்கு மின்சாரம் இல்லை.
-----------
ராஜா,

நன்றி,

ரொம்ப நொந்துட்டிங்க போல இருக்கே, கர்நாடகா விடா கோவா,குஜராத்தில் மின்சாரம் தாரளமா இருக்காம்.

நான் கூடப்பாண்டிக்கு இடப்பெயர்ச்சி செய்யலாமான்னு பார்க்கிறேன்.
----------
புல்ஸ் சுவாமி,

வாரும்...வாரும் ,

என்ன நீண்ட நாட்களாக காணோம், ஷேமமாக்கீறீரா?

ரெண்டு மணி நேர மின்வெட்டுக்கே பொலம்புவீர், இப்போ எப்பூடி?

வீட்டில் ஜென்செட் போட்டு இருப்பீரே.

சரக்கு விலை எல்லாம் ஏறிப்போச்சு, ஃபுல்லுக்கு பதிலா ஆஃப் ஆ சுருங்கிப்போச்சு. மனிதனுக்கு தாகத்துக்கு தண்ணீக்கூட இல்லாத நாடு தமிழ்நாடு :-((
---------------
அரவிந்தன்,

வாங்க,நன்றி!
அட நம்ம ஊரு,மாவட்டத்துல இருந்து வரிங்க,அடிக்கடி வாங்க.
தாரளமாக பகிரலாம்.உங்கள் ஊக்கத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி!
-------------

குறும்பன் said...

அருமையான இடுகை. பல தகவல்களை தெரிந்துகொண்டேன். மின்கடத்தியின் இழப்பு என்பது மின்திருட்டையும் சேர்த்தல்லவா? மின் திருட்டு மட்டும் எவ்வளவு விழுக்காடு என்று நிறைய தளங்களில் தேடிவிட்டேன். நீங்கள் பார்த்திருந்தால் பகிருங்கள். சில நாடுகளின் மொத்த மின்கடத்தி இழப்பே 6 % தான், சீனாவில் இவ்வளவு தான் இழப்பு இது திருட்டையும் சேர்த்தது. சப்-ஸ்டேஷன் கடக்கும் போது 5% மின் இழப்பு என்பது சப்-ஸ்டேஷன் எந்த அளவு பராமரிப்பில் உள்ளது என்பதை காட்டுகிறது. இது மிக மிக அதிகம். ஆந்திரா, மகாராட்டிரம், கர்நாடகம் எல்லாம் உபி, டெல்லி .... அளவுக்கு மின்கடத்தியின் இழப்பில் மோசமில்லை.

கீற்றின் இந்த கட்டுரை நிறைய விசயங்களை சொல்லுது. அதிலுள்ளதில் பெரும்பாலானதை விரிவாக உங்க கட்டுரை சொல்லுகிறது.

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=21549

கூடங்குளத்தில் இருந்து 2000 மெவா மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் நமக்கு 925 கிடைக்கும் ஆனால் அதன் செயல்படும் உச்ச அளவு என்பது 80% (1600 மெவா) என்கிறார்கள். அதாவது நமக்கு 740 மெவா தான் கிடைக்கும். சில திட்டங்கள் முடிந்துவிட்டது என்கிறார்கள் (--கீற்று) அது உண்மையா என தெரியவில்லை. ஆத்தாவின் தப்பை தான் தாத்தா மலை போல் நம்பி இருக்கிறார், ஆத்தாவை நம்பினார் கைவிடப்படார். :))

வவ்வால் said...

குறும்பன்,

வாங்க,நன்றி!

மின் கடத்தி இழப்பு என்பது மின் திருட்டை சேர்க்காமல்.

மொத்தமாக எவ்வளவு மின் இழப்பு ஏற்படுகிறதென்று நாமே கண்டு பிடிக்கலாம்.

74,990 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி,

ஆனால் மின்வாரியத்தினால் விற்பனை செய்யப்பட்டது 60,357 மில்லியன் யூனிட்கள்.

எனவே வித்தியாசம் =14,663 மில்லியன் யூனிட்கள்.

தமிழ் நாட்டில் மின் கடத்தி இழப்பு 18.5% என அரசு சொல்கிறது, எனவே

74,990 மி.யூ இல் 18.5% என்பது= 13,817.15 மில்லியன் யூனிட்கள்.

உற்பத்திக்கும், விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் =14,663 மி.யூ.

மின் கடத்தி இழப்பு 18.5%= 13,817.15 மி.யூ.

இதனை கழித்தால்

மின் திருட்டு=789.85 மில்லியன் யூனிட்கள்.


எது எப்படியோ மொத்தமாக 14,663 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் விரயமாகிறது என்பதையும் ,மொத்தமாக கணக்கிட்டால் 19.55% மின்சாரம் விரயமாகிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் சொன்னது போல் சீனாவில் 6% மின் விரயம் என்றால் கோயில் கட்டி கும்பிடலாம்.

தேசிய அளவில் 30% மின் கடத்தி விரயமாம். அப்போ எவ்வளவு மின்சாரம் வீணாக போகிறது என்பதனை புரிந்துக்கொள்ளலாம்.

நம்ம ஊரில் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்றால்,

நடைமுறைமின் உற்பத்தி -நடைமுறை மின்நுகர்வு=மின் இழப்பு.

எவ்வளவு மின்சாரம் விற்பனையில் வருமானம் ஈட்டவில்லையோ ,அவ்வளவும் மின்கடத்தி மற்றும் மின் திருட்டு இழப்பு.

தமிழ்நாடு அரசு 18.5% மின் கடத்தி இழப்பு என சொன்னதால் அதனை வைத்து மின் திருட்டு 789.85 மில்லியன் யூனிட்கள் என கனக்கிட்டுள்ளேன்.
--------------

//அதன் செயல்படும் உச்ச அளவு என்பது 80% (1600 மெவா) என்கிறார்கள். //

80% என்பதே அவுட் புட்டின் அளவு ஆன 1000 மெ.வாட் தான்.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு அணு உலையின் திறன் 1600 மெ.வா, அது செயல்படும் போது 1000 மெ.வா மின்சாரம் தரும் என்பதே உண்மையான கணக்கு.

டிஸ்கவுண்ட் செய்யப்பட்ட அளவின் மீது மீண்டும் அதே 20% டிஸ்கவுண்டில் 80% என சொல்வது , அணு உலையை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில்.

அனல் மின்சார நிலையத்திலும் 1200 மெ.வாட்டில் நிறுவினால் தான் 1000 மெ.வா கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

நெய்வேலியில் இன்ஸ்டால்ட் கெப்பாசிட்டி 2480 மெ.வா ஆக்சுவல் மின் உற்பத்தி 2000 மெ.வா. என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

அணு மின்சாரத்தில் 1600 மெ.வாட்டில் நிறுவி 1000 மெ.வா எடுக்கிறார்கள்.

இதில் உலை செயல்படத்தேவையான மின்சாரமும் அடக்கம், என்பதால் அப்படி.



குறும்பன் said...

பொய் சொல்றதே நம்ம அரசாங்கத்துக்கு பழக்கமாயிடுச்சு :)) மின்கடத்தி இழப்பு என்பது மின் திருட்டையும் சேர்த்து தான். துல்லியமா திருட்டு அல்லாமல் கடத்தி இழப்பை மட்டும் கணக்கிடும் முறை எங்கும் இல்லை. இருந்தா திருட்டு இத்தனை %, கடத்தி இழப்பு % என்று சொல்லிடுவாங்க. திருட்டை கண்டுபிடித்தாலும் அவர் இதுவரை எவ்வளவு திருடியிருப்பார் என்பது ஊகமாகதான் கணிக்கமுடியும். முதல் முறை திருடி மாட்டினாலும் பல நாள் திருடனதாக தான் கணக்கு.
----
\\கூடங்குளத்தில்(நெய்வேலி, ....) நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு அணு உலையின் திறன் 1600 மெ.வா, அது செயல்படும் போது 1000 மெ.வா மின்சாரம் தரும் என்பதே உண்மையான கணக்கு.\\

ஏதாவது சுட்டி இருந்தா தேவலை, பசங்க கூட பேசறப்ப வசதியா இருக்கும்.

வேண்டுகோள்:
அட்டவணையை கட்டம் கட்டி (border) போடவும் அல்லது ஒவ்வொரு வரிசைக்கும் இடையே நிறைய இடம் விடவும், அது படிக்க எளிமையாக இருக்கும் இப்போது கடினப்பட்டு தான் அட்டவணையை படிக்க முடிகிறது.

வவ்வால் said...

குறும்பன்,

நீங்க சொன்னது போல மின் திருட்டும் ,கடத்தி இழப்பும் சேர்ந்து தான், ஆனால் நம்ம ஆளுங்க 18.5% கடத்தி இழப்பு என சொல்வதால் உபரியாக காணாமல் போகும் மின்சாரத்தினை மின் திருட்டு என கணக்கில் எடுத்து சொன்னேன்.

12%க்கு மேல் மின் இழப்பு போனாலே அந்த மினமைப்பு நஷ்டத்தில் தான் இயக்க முடியும் என பொதுவாக சொல்வார்கள்.

---------

கூடங்குளம் அணு உலையின் நிறுவப்பட்ட வெப்ப ஆற்றல் அதிகமாகவே இருக்கு,

விக்கியில் 1600 மெகாவாட்ஸ் தெர்மல் எனர்ஜி எனவும்,

அணுசக்திகழகத்தின் ஒரு அறிக்கையில் 3000 மெவாட்ஸ் தெர்மல் எனர்ஜி எனவும் போட்டு இருக்கிறார்கள்.

1000 மெவாட் என்பது மின்னுற்பத்தி மட்டும் குறிப்பிடுவது,1000M.W.e என சொல்வார்கள் ஏக்குவலண்ட் என குறிக்க "ஈ" என வாட்ஸ் அருகில் போட்டு இருப்பார்கள்.

கூடங்குளம் பற்றிய நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளது,

Salient Normal Operating Parameters of KKNPP Reactors:
 Electrical Power 1000 MWe
 Thermal Power   3000 MWt  
 No. of FAs     163   
 Coolant inlet temp   291C
 Coolant outlet temp   321C
 Coolant Pressure   15.7 MPa  
 No. of Loops      4
 No. of Control Rods    103
 Pressure Maintenance by Pressurizer  

http://www.pibchennai.gov.in/karuvoolam/Releases%202011/November%202011/KKNPP%20(ENGLISH).pdf

-----------

அட்டவணையை காப்பி & பேஸ்ட் செய்வதால் அப்படி ஆகிவிடுகிறது, அடுத்த முறை படமாகவே போட்டுவிடுகிறேன்.
----------

Anonymous said...

GREAT publish and impressive in turn …will bear a try all the tips..Thanks……

ஜோதிஜி said...

இணைய வாசிப்பாளர்கள் எப்போதும் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதுண்டு.

நீண்டதாக எழுத வேண்டாம்.

படிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது சவுக்கு எழுதிய கட்டுரையை வரிக்கு வரி படித்தேன்.

தேடல் உள்ளவர்களுக்கு நிச்சயம் எதுவும் பெரிதல்ல.

ஆனால் படிப்பவர்களை கொஞ்சமாவது அங்கிட்டு இங்கிட்டு ஆட அசைய அனுமதிக்க வேண்டும்.

உங்கள் பாணியில் வைகோவிற்கு உரை எழுதி கொடுத்து இருப்பீங்களோ என்பதாக இருந்தாலும் கூட.

உங்கள் பதிவை விட பல சமயம் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் கொடுக்கும் போது தான் ஆச்சரியப்பட்டு உள்ளேன். உள்ளே வருபவர்களும் தாங்கள் பங்குக்கு லிங்க் கொடுத்து உரையாடுவதே எழுதிய நோக்கம் நிறைவேறி உள்ளது என்ற அர்த்தம்.

லே அவுட் என்பது தற்போது ரொம்பவே முக்கியம். ஆனால் தொடக்கம் முதல் நீங்க கண்டு கொள்ளவே இல்லை என்பது குறும்பன் போல எனக்கும் உள்ளே உள்ள வருத்தம்.

தகவல்களை தேடி எழுதும் இருக்கும் உங்கள் ஆர்வத்தில் அதை முறைப்படி படிப்பவர்களுக்கு கொடுப்பதில் உங்களுக்கு இல்லை அல்லது பொறுமை இல்லை என்ற குற்றச்சாட்டை இந்த மாமன்றத்தில் வைக்கின்றேன்.

இணைப்பு கொடுக்கப் பட வேண்டிய கட்டுரை இது.

வவ்வால் said...

ஜோதிஜி,

நன்றி!

பெரும்பாலும் சரியாக வருமாறு பதிவிடவே முயல்கிறேன். சமயத்தில் ரொம்ப நேரம் எடுக்கிறது என்பதால் , சரி வந்த வரைக்கும் போடுவோம்னு அப்படி செய்வது.

பெரும்பாலும் எனக்கு ஏற்படும் சிரமங்கலை குறையாக சொல்வதே இல்லை, பல முறை நன்கு எடிட் செய்து , பிலாக்கரில் போட்டு வரமால் சொதப்பி ,பின்னர் மீண்டும் , ஆரம்பத்தில் இருந்து செய்துள்ளேன், வேர்டில் இருக்கும் கோப்பு ஒரு ரஃப் ஆக தான் இருக்கும்,வெளியிடும் அளவுக்கு சரி செய்ய நிறைய நேரம் பிடிக்கும்.

இன்று கூட பிலாக்கர் சொதப்பி டிராப்டில் இருந்தது , போனது என 25 பதிவுகள் பப்ளிஷ் ஆகிவிட்டது, பின்னர் எல்லாம் பார்த்து டெலிட் செய்தேன்.

பிலாக்கரும்,இணையமும் படுத்தும் பாட்டில் இந்த அளவுக்கு தான் கவனம் செலுத்த முடிகிறது, இன்னும் சிறப்பாக செயல் பட முயற்சிக்கிறேன்.

இந்தப்பதிவுக்கு இணைப்பு ஒரு பிடி எஃப் பைல் சுட்டி தான் கொடுக்க வேண்டும், ஆனால் டவுன் லோட் செய்தவுடன் மூடிவிட்டதால் சுட்டி போடமுடியவில்லை ,மின்வாரிய தளத்தில் இருக்கு பார்த்து போடுகிறேன்.

---------

//இணைய வாசிப்பாளர்கள் எப்போதும் இரண்டு குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதுண்டு. நீண்டதாக எழுத வேண்டாம்.

படிக்க மாட்டார்கள்.
//

நீங்க இப்படி சொல்லுறிங்க, நெய்வேலியை பத்தியும் சொல்லாம விட்டுடீங்களே என கேட்கிறாங்களே என்ன சொல்வது :-))

பெரிதாக எழுதனும் என திட்டமெல்லாம் போடுவது ,அதுவா இழுத்துக்கிட்டு போகும், ஒருகட்டத்தில் போதுமப்பா முடின்னு தோன்றி முடிக்கிறது தான் :-))

வைகோ விற்கு உரை எழுதுவது போல என்றது ,உணர்ச்சி பூர்வமாக இருக்கு லாஜிக் இல்லை என்பதால் சொன்னது.

நான் எழுதுவது அழகியல் ரீதியாக நன்றாக இல்லாமல் போகலாம், ஆனால் தர்க்கவியல் ரீதியாக சரியாக பொருந்தும் என நினைக்கிறேன்.

நன்றி!