Sunday, January 20, 2013

மொக்கைத்தோரணம்-2

(அய்யோடா மொக்கையை ஆரம்பிச்சுட்டானே ...இனிமே எப்ப இத நிறுத்துவானோ?...)

# செல் மொழி.

செல்லெடுத்து செல்வான் சினங்கொள்வான் அவ்விடத்து
சிக்னல் இல்லை எனில்.
------------------
மண் மணத்துடன் சமையல்!

# பிராபல்யப்பதிவர்;என்ன சாம்பாரில் மண்ணு நொர நொரங்குது?

பி.பவின் மனைவி:நீங்க தானே மண் மணத்தோட சமையல் செய்ய சொன்னிங்க,அதான் கொஞ்சம் மண்ணள்ளி சாம்பாரில் போட்டேன்!!!
-----------------
அடியேன் பிழையா?

#பதிவர்-1: எதுக்கு அந்த பிராபல்யப்பதிவரை புத்தக சந்தையில் வச்சு அடிச்சீங்க, அவர் எழுதுவது புடிக்கலைனா படிக்காமல் இருக்கலாமே?

பதிவர்-2: நீங்க வேற, நான் அவர் பதிவுகளின் தீவிர வாசகன், அவர் தான் புத்தகக் காட்சியில் அடியேன்! அப்படினு பதிவு போட்டிருந்தார், ஆசையா அடிக்க சொல்லுறாரே அடிக்கல்லைனா தப்பா நினைச்சுப்பாருன்னு அடிச்சேன், அது தப்பா?

---------------------------

சிறப்புக்கழிவு உண்டு!

# பிராபல்ய பதிவரின் மனைவி: ஏங்க நேத்து புத்தகக் சந்தைக்கு போனத நம்ம வீட்டு பால்காரரிடம் சொன்னிங்களா?

பிராபல்ய பதிவர்:  ஆமாம் அதுக்கென்ன?

பி.ப.மனைவி: சொன்னதோட இருக்கக்கூடாது, புத்தக சந்தையில 10% சிறப்புக்கழிவு கொடுக்கிறாங்க, இவ்வளவு நாளா பால் வாங்குறேன் , நீ ஒன்னும் சிறப்பு கழிவு தறக்கூடாதுன்னு கேட்டிங்களாம், அதான் ஒரு கூடை சாணிய எடுத்து வந்து அய்யா கேட்ட சிறப்பு கழிவுனு கொடுக்கிறான் , தேவையா இது?

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி ..ஹி, அது வந்து ...
----------------------------

கிடைத்தால் கேட்பேன்!

# அப்ரண்டீஸ் பதிவர்; அண்ணே  அவரை எதுக்குன்னே கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க போனிங்க?

புத்தக சந்தையில் அப்பளம் விற்பவர்: பின்ன என்ன தம்பி, நானே பொண்டாட்டி நகைய அடக்கு வச்சு ,கடை வாடகைக்கு எடுத்து ,அப்பளம் சுட்டு விக்குறேன், அவரு ஏதோ பிராபல்ய பதிவராம் ,எங்கிட்டே வந்து ஒரு அப்பளம் வாங்கிட்டு , குடிக்க மினரல் வாட்டர் வேணும், நான் கிடைத்தால் கேட்பேன்னு முகநூல் சங்க தலைவர்னு சொல்லுறான், அதான் கடுப்பாயி , மருவாதியா போயிடு இல்லைனா கொதிக்கிற எண்ணைய எடுத்து மூஞ்சில ஊத்திருவேன்னு சொல்லி விரட்டிவிட்டேன் , ஆமாம் உனக்கு என்ன தம்பி வேணும் அப்பளம் மட்டும் போதுமா இல்ல....

அப்ரண்டீஸ் பதிவர்: ஹி...ஹி எனக்கு அப்பளம் மட்டும் போதும், நீங்க தூக்கிப்போட்டாக்கூடா கேட்ச் புடிச்சுப்பேன்( அய்யோடா நல்ல வேளை நானும் ஒரு பதிவர்னு சொல்லிக்கலை ,மூஞ்சு தப்பிச்சுது)
------------------------

எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும்!

#அப்ரண்டீஸ் பதிவர்: அண்ணே வணக்கம்னே, புத்தக சந்தைக்கு வந்தீங்களா?

பிராபல்யப்பதிவர்: ஆங்க் ...உழவர் சந்தைக்கு வந்தேன் கேள்வியப்பாரு?

அப்ரண்டீஸ்: ஹீ...ஹி சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டால் ஏன்னே கோச்சுக்கிறிங்க, அது சரி கையில சுருட்டி என்னமோ வச்சு இருக்கீங்களே ,என்னதுண்ணே,காலண்டரா?

பிராபல்யம்: நான் எதை செய்தாலும் பிளாண் பண்ணி செய்வேன், அதான் புத்தக சந்தைக்கும் பிளாணோட வந்திருக்கேன்.(பிளாணை காட்டுகிறார்)

அப்ரண்டீஸ்: என்னணே ஏதோ வீட்டு புளுப்பிரிண்ட் பிளாண் போல இருக்கு?

பிராபல்யம்: ஹி...ஹி பிளாணோட வந்திருக்கேன்னு தானே சொன்னேன், எந்த பிளாணா இருந்தா என்ன , எப்பவும் கையில ஒரு பிளாண் இருக்கணும் :-))

அப்ரண்டீஸ்:ஙே...
------------------------------

பார்க்கிங் கலாட்டா:

# பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்: சார் டூ விலர் நிறுத்தினா 10 ரூபா பார்க்கிங் கட்டணம்.

பிராபல்யப்பதிவர்: இது என்ன அநியாயக்கொள்ளையா இருக்கு, நான் யார் தெரியும்ல , கிடைத்தால் கேட்பேன் முகநூல் சங்கத்தலைவர், பிராபல்யப்பதிவர் எங்கிட்டேயேவா...

பா.க.வசூலிப்பவர்: நீங்க யாரா வேணா இருக்கட்டும் டூ வீலர் நிறுத்தினா 10 ரூபா கட்டணம் கொடுக்கணும்.

பிரால்யப்பதிவர்:  இன்னொருக்கா நல்லா சொல்லுங்க, 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணுமா?

பா.க.வசூலிப்பவர்: ஆமாய்யா...ஆமாம்.... 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணும்!

பிராபல்யப்பதிவர்: பேச்சு மாறக்கூடாது,வண்டிய நிறுத்தினா தானே காசு கொடுக்கணும், நான் வண்டிய நிறுத்தாமல் படுக்க வச்சிடுறேன் , இப்போ காசுக்கொடுக்க மாட்டேன் , நான் யாரு கிடைத்தால் கேட்பேன் தலைவரு என்கிட்டேவா ...எப்பூடி?

பா.க.வசூலிப்பவர்: நீ போ மோனே தினேஷா ...(மனதுக்குள் ,எஞ்சினை கழட்டி வித்துற வேண்டியது தான்)
------------------------------

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

#பிராபல்யப்பதிவர்; சார் ...சார்.. ஒரு பரதேசி எனக்கு போன் செய்தான் ,அதை அட்டண்ட் செய்றதுக்குள்ள என் பையன் காணாம போயிட்டான், செவப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், சோட்டா பீம்னு முதுகில் எழுதி இருக்கும்,

புத்தக சந்தை உதவி மைய அறிவிப்பாளர்; சார் கொஞ்சம் பொறுமையாக உட்காருங்க, நீலக்கலர் கட்டம் போட்ட சட்டை, கார்கோ பேண்ட் , பாக்கெட் புல்லா வாட்டர் பாட்டில்,சிப்ஸ்னு வச்சிருப்பார்னு சொன்னது எல்லாம் சரியா இருக்கு, இப்போ தான் உங்க மகர் வந்து நீங்க காணாமல் போயிட்டதாகவும் கண்டுப்பிடிச்சு வச்சிருக்க சொல்லிட்டு  புத்தக சந்தைய சுத்திப்பார்க்க போயிருக்கார், அவர் திரும்பி வர்ர வரைக்கும் இப்படி ஓராம உட்கார்ந்து வெயிட் பண்ணுங்க .

பிராபல்யப்பதிவர்: ஙே....
------------------------

புத்தக பட்டியல் போடுவதன் அவசியம்!

அப்ரண்டீஸ் பதிவர்: தல , எல்லாப்பதிவர்கள் கிட்டேயும் என்ன புத்தகம் வாங்கினீங்கண்ணு கேட்டு ,கேட்டு பட்டியல் போடுறிங்களே , அதை எல்லாம் வச்சு பதிவு போடத்தானே? இவ்வளவு கூட்டத்திலும் உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணு கலங்குது தல....

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி யார், யார் என்ன புத்தகம் வாங்கி இருக்காங்க, அதில் நல்ல புத்தகம் ,நான் படிக்காத புத்தகம் எதுனு தெரிஞ்சுக்கத்தான், அப்போ தானே பின்னாடி ஓசிக்கேட்க வசதியா இருக்கும் எப்பூடி?

அப்ரண்டீஸ்: தெய்வமே நீங்க எங்கேயே போயிட்டிங்க ...அவ்வ்வ்!!!
-----------------------

(எவ்ளோ புத்தகம் ... இதெல்லாம் வவ்வாலு தான் படிப்பான் ,நமக்கு ஆகாது)

# புத்தக சந்தையில் இப்படியும் ஒரு அறிவிப்பு(வைக்கப்படலாம்):

" புத்தகமே வாங்காமல் ,புத்தகங்களை மட்டும் வளைச்சு வளைச்சு படம் எடுக்கும் பதிவர்களின்  கேமரா, மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்படும்"!!!
----------------------

பின்குறிப்பு:

#இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும்  நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.

# படங்கள் உதவி கூகிள்,நன்றி!
------------------------------

19 comments:

VENG said...

அது ஏன் குறிப்பிட்ட ஒருத்தரை மட்டும்?

சார்வாகன் said...

வணக்கம் நண்பா,

பார்வைகள் பலவிதம்,[அசின்] பார்வையின் மொழி அறிவது அருமை!!
**
செல்லுக்கும் குறளா செல்லாது செல்லாது,குறளை மாத்தி சொல்லுங்க!!

**
தாசானு தாச சாம்பார் பதிவர்கள் மண்ணை உண்ணட்டும்,நாம் மாமிசம் வெளுத்துக் கட்டுவோம்,[நாம் யாரையும் சொல்ல்வில்லை ஹி ஹி]
**
சொல்லி அடிப்பது என்பது இதுதானா?
சொல்லி அடிப்பேனடி
அடிச்சாலுந்த நெத்தி அடிதானடி
(படம் :[ பதிவு]ப(பி)டிக்காதவன்
**
சிற(ரி)ப்புக் கழிவுன்ன இதுதானா!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

***
நாமும் வெளியில் பதிவர்னு சொல்வது இல்லை ஹி ஹி!! எல்லாம் அன்புக்கு பயந்துதான் ஹி ஹி!!
**
நம்ம ஆட்கள் ஃபமிலி ப்ளானிங் தவிர எல்லாத்துக்கும் ப்ளான் போட்டு எதுவும் விளங்குமா?.
**
புத்தகங்களை(த்தான்) மூடி வைக்கனுமா கூடாதா? பார்ப்பவர்கள் ஏதேனும் செய்து விடலாம் ஹி ஹி

சிந்திக்க மாட்டீர்களா!!

நன்றி!!!!

நாய் நக்ஸ் said...

அட வவ்வால் கிட்டயும் எதோ இருக்கு பாரேன்....

வவ்வால்....ஜட்டி பதிவர்,,சீலே பதிவர் பத்தி ஒன்னும் காணோம்...!!!!

அட இந்தாளு கிழட்டு பிசின விட மாட்டார் போலேயே ....
நீர் பால் எல்லாம் குடிச்சி,,,அஞ்சலி எல்லாம் செலுத்த மாட்டீரா????

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்த பிராபல்ய பதிவர் நீங்கதானோ?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அந்த பிராபல்ய
பதிவரையும்
அப்ரண்டீஸ்
பதிவரையும்
அன்றைக்கு
சுத்தி, சுத்தி
வந்தீங்களே,
இதுக்குத்தானா?

வவ்வால் said...

வெங்க்,
நன்றி!

யார் அந்த குறிப்பிட்ட பதிவர், இங்கே பொதுவாகத்தான் எல்லாம் சொல்லி இருக்கிறேன், நீங்க டிஸ்கி படிக்கலையோ?
-------------
சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

//பார்வைகள் பலவிதம்,[அசின்] பார்வையின் மொழி அறிவது அருமை!!//

நீ பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்,
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் ...

பி.பி.சிரினிவாஸ் என்றும் இனியவை!
---------
பல்லு இல்லாதவன் கிழவன்,செல்லு இல்லாதவன் செவிடனு ஆகிட்ட உலகில் செல்லுக்கும் குறள் எழுத வேண்டியது காலத்தின் கட்டாயம் :-))
---------
ஸ்ரி கிருஸ்ணாவே மண்ணள்ளி தின்னவர் தானே எனவே தாசானு தாசர்கள் மண் சோறு சாப்பிடுவதில் வியப்பில்லை :-))

சொல்லி அடிப்பேனடி பாடலின் மூலம் ,மாப்பிள்ளை படம், ஆனால் உங்களுக்கு வேற மாப்பு நியாபகம் வந்தால் அடியேன் பொறுப்பல்ல ,பகவானுக்கே எல்லாம் வெளிச்சம் :-))
------------

//சிற(ரி)ப்புக் கழிவுன்ன இதுதானா!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

தள்ளுப்படியில் கொடுத்தால் பழைய தார் டின்னை கூட ஏன் எதுக்குனு கேட்காம வாங்கும் மக்கள், எனவே சிறப்பு கழிவுக்கு எப்போதும் டிமாண்ட் உண்டு!!!
---------
//நாமும் வெளியில் பதிவர்னு சொல்வது இல்லை ஹி ஹி!! எல்லாம் அன்புக்கு பயந்துதான் ஹி ஹி!!
**
நம்ம ஆட்கள் ஃபமிலி ப்ளானிங் தவிர எல்லாத்துக்கும் ப்ளான் போட்டு எதுவும் விளங்குமா?.//

அப்போ நீங்க பிராபல்யப்பதிவரே தான் , வெளியில் சொன்னால் அன்பு மழை பொழிவது நிச்சயம் :-))

பிளாணிங் எல்லாம் பக்காவா இருக்கும் ஃபினிஷிங் தான் இருக்காது :-))
-------
//புத்தகங்களை(த்தான்) மூடி வைக்கனுமா கூடாதா? பார்ப்பவர்கள் ஏதேனும் செய்து விடலாம் ஹி ஹி//

தோள் கண்டேன் தோளே கண்டேன்,

தோளில் இரு கிளிகள் கண்டேன்...

வாள் கண்டேன் வாளே கண்டேன் ..

வட்டமிடும் விழிகள் கண்டேன்....

பி.பி.எஸ் என்றும் இனியவை!

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை ... சிந்திக்க மாட்டீர்களா!!!
-----------------
நக்ஸ் அண்ணாத,

வாங்க,நன்றி!

நம்ம கிட்டே இன்னும் நிறைய இருக்கு, பாவம் மக்கள் பயந்துடுவாங்கன்னு தான் அடக்கி வாசிக்கிறோம் :-))

அது யாரு ஜட்டிப்பதிவர்? சீலே பதிவர்னு அல்டிமேட்டை சொல்லுறிங்களோ? அல்டிமேட்டை பதிவர்னு சொன்னா அடிக்க வருவார் :-))

என்னது பால் ஊத்தி அஞ்சலி செய்யணுமா?

பால் திரிஞ்சு போனதுன்னு சொன்னாங்க, சொன்னவங்க குத்தமில்ல, சத்தியாமா அது உண்மையில்ல ... ஓ ...ஓ

அஞ்செலி, சுண்டெலி எல்லாம் மசால் வடை வச்சு தான் புடிக்கணும் :-))
-------------------

நிஸாமுதின் ,

வாங்க,நன்றி!

நீங்க தான் நிஸாமுதீன் எக்ஸ்பிரஸ் டிரெயின் ஓனரா?

ஹி...ஹி நான் அப்ரண்டீஸ் பதிவராச்சே, இன்னும் சந்தைக்கே போகலை,அதுக்குள்ள இப்படிலாம் கதைய கிளப்பிவிடுறிங்களே ...அவ்வ்வ்!
-------------------

ராஜ நடராஜன் said...

புள்ளி விபரம்தான் உங்களுக்கு கைவந்த கலை.அதையே தொடரலாமே!

ஆமா!அசின் ஒட்டு வேலை உங்க கைவண்ணமா? இல்ல லிப்ஸிடிக் பை ஒட்ட யாராவது அசிஸ்டன்ட் வச்சுருக்கீங்களா?

? said...
This comment has been removed by the author.
? said...

உம்ம கிட்ட வம்பிழுத்தவனுகளை எல்லாம் எல்லாம் வஞ்சம் வைச்சிருந்து பெட்ஷிட் போட்டு கும்மீட்டீங்கோ!

//ஸ்ரி கிருஸ்ணாவே மண்ணள்ளி தின்னவர் தானே//

ஆனா உம்ம கிட்ட இளைய கிருஷ்ண பதிவர் அடிவங்குனா மாதிரி தெரியலயே. அவரோட இரட்டையர் பதிவர் மட்டும்தான் அடிப்பட்டா போல இருக்குது?

==========

@ராச நட
//புள்ளி விபரம்தான் உங்களுக்கு கைவந்த கலை.அதையே தொடரலாமே! //

கேப்டனுக்கு அப்புறம் புள்ளிவிபரப்புலி நம்மாளுதான் போல! :)

R.Gopi said...

//இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும் நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.//

ஹா ஹா ஹா ஹா ஹா.....

ப்ராப்ள / பிரபல பதிவர் என்று தன்னைத் தானே சொல்லிட்டு நிறைய பேர் திரியறாய்ங்கப்பா நாட்டுல....

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் ஸிங்கத்தின் நினைவுபடுத்தலில் இசையும் வசையும் மீள் பார்வை செய்துட்டு வாரேன்.காலம் கடந்தும் நிரந்தரமா பரபரப்பா நீதி சொல்ற பதிவுகள் இரண்டும்.

@நந்தவனத்தான்!நானென்னமோ வவ்வாலுக்கு புள்ளிவிபரம் ஒண்ணும் கிடைக்கலைன்னு ஏதோ மொக்கை போடுறார்ன்னு நினைச்சேன்.

நீங்க சொல்லித்தான் இது உள்குத்து பதிவுங்கிற சந்தேகமே வருது:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

விட்டா என்னை இந்திய புள்ளியியல் துறை அமைச்சராக்கிடுவீங்க போல இருக்கே, நாம போடுவது பாதிக்கு பாதி மொக்கை தானே (எல்லாமே மொக்கை தானேனு மைண்ட்வாய்ஸ் கேட்குது)

இன்னும் தயாரிப்பு நிலையில் சில சமாச்சாரங்கள் இருக்கு முடிச்சிட்டு பதிவாக்குவோம், அது வரையில் சில கொடுமைகள் கூத்தாடுதல்,பிளிறல்கள் தொடரும் :-))

#படமெல்லாம் நானா எடுக்கிறேன்,கூகிள் எனும் சட்டியில் உள்ளதே அகப்பையில் வருகிறது :-))

------------------
நந்தவனம்,

வாங்கோ,நன்றி!

ஆகா கிளப்பிவிட்டாரே, விட்டா நாலு பேரு கையில தர்ம அடிக்கு வழி செய்துடுவார் போல இருக்கே, ஓய் நீர் சரியான அனுகூல சத்ருவா இருக்கீரே ...அவ்வ்வ் :-))

நாம திட்டம் போட்டு எதுவும் செய்யலங்க்ணா, சில பல பதிவுகளை படிச்சப்போ நம்ம கற்பனைக்குதிரை கட்டவிழ்த்து பாய்ந்ததில் உதித்த மொக்கை முத்துக்களே இவை!!!
----------------

கோபி,

வாங்க,நன்றி!

என்ன கொடுமை சார் இது?

மூளைய சூசா பிழிஞ்சு மொக்கை ஜோக் சொன்னா அதுக்கு கூட இம்புட்டு சிரிக்கக்காணோம், டிஸ்கிக்கு போய் 11.1 ஆரோ 3டி & டால்பி அட்மோஸ் இம்மெர்சிவ் சவுண்ட் எபெக்டில் சிரிக்கிறிங்களே , நெம்ப கிலியாக்கீது அவ்வ்வ் :-))

இந்த பிராபல்யப்பதிவர்கள் இம்சை இருக்கே ...முடியலை அவ்வ் :-))
---------------
ராச நட,

பழையப்பதிவுகளையும் மேய்ஞ்சிட்டு வரிங்களோ, உண்மையை உலகுக்கு உரக்க சொல்லவேண்டும், நாலுப்பேர் கூடி ஒரு பொய்யை சத்தமாக சொன்னால் உண்மைனு நம்பும் உலகிது. எழுத்தாளர் மாமல்லன் விரிவாக புத்தகமே போட்டிருக்கார், ,வாங்கணும்.

நந்தவனம் பத்தவச்சதை நீங்க காட்டு தீப்போல ஊதி பெருசாக்கிடனும் கிளம்பிட்டீர் போல இருக்கே?

எல்லாமே மொக்கைகளே ,மொக்கையன்றி வேறல்ல ,மொக்கைக்கு என அக்மார் ,ஐ.எஸ்.ஓ சான்றாவணங்களை காட்டினாத்தான் விடுவாங்க போல இருக்கே :-))

அக்கால மொக்கைத்தோரணம்

http://vovalpaarvai.blogspot.in/2008/01/blog-post.html

நாம தான் அக்கால மொக்கை ஸ்பெஷலிஸ்ட் ,தூங்கிட்டு இருக்கிற வவ்வாலை தட்டி எழுப்பிடாதிங்க, அப்புறம் மீண்டும் மொக்கைகளா போட்டு தாக்கிடுவேன் கபார்தார் :-))
(ம்க்கும் இனிமே தானானு சொல்லப்படாது)
-------------------

Sowmya said...

பிரபல்ய its not.. பிராபல்ய !

Good post :)

வவ்வால் said...

பெபி,

வாங்க,,வாங்க,நன்றி!

குடியரசு தின வாழ்த்துக்கள்!!!
(பொங்கல் சீக்கிரமா முடிஞ்சுப்போச்சு அதான் வாழ்த்து சொல்லமுடியலைனு அட்வான்ஸா குடியரசுக்கு சொல்லியாச்சு)

உங்களைப்போன்ற பிராபல்யமெல்லாம் நம்ம பதிவையும் படிப்பது கண்டு அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சி!!!

ஹி...ஹி அவ்வையார் உங்க ஒன்னுவிட்ட பாட்டியா? இப்படிலாம் தமிழை ஆராய்ச்சி செய்றிங்க :-))

பிராபல்யம்னு எழுதுவது ஒரு நகைச்சுவைக்காக ...ஹி...ஹி இதிலென்ன நகைச்சுவைனுலாம் கேட்கப்படாது :-))

அதெல்லாம் அப்படித்தான்!!!

Anonymous said...

படித்தேன்...சிரித்தேன்....சிந்தித்தேன்...ஏன் இப்படிஎன்று...ஹா ஹா ஹா ஹா ஹா.....



----By-
மாக்கான்.

Anonymous said...

இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும் நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.//

இது தான் டாப்பு...மத்ததெல்லாம் டூப்பு....-:)



Anonymous said...

உள்குத்து...

PATIENT DOA...-:)

வவ்வால் said...

மாக்கான்,

வாங்க,நன்றி!

நீங்க சிரிச்ச சிரிப்புக்கு எக்கோ இங்கே வரையில் கேட்குதே :-))
---------

ரெவரி ,

வாங்க,நன்றி!

இப்போ தான் உங்க அய்ந்தாம் ஆண்டு மலரும் நினைவுகளை படிச்சிட்டு வரேன், அப்புறமா வந்து "கருத்து"சொல்லலாம்னு இருந்தேன்.

விழாக்கால விடுமுறைகளை நல்ல முறையில் கழித்திருப்பீர்கள் என நினைக்கிறேன், தெம்பா வந்து ஆட்டத்தை ஆரம்பிங்க.

ஹி...ஹி என்ன கொடுமை சார் இது, பயங்கரமா சிந்தித்து மொக்கை போட்டதை விட போற போக்கில் போட்ட டிஸ்கி தான் டாப்புனு எல்லாம் சொல்றாங்க அவ்வ்வ் :-))

# பேஷன்ட் சுவனத்தில் நித்திய கன்னிகளுடன் குஜாலா இருக்காரு :-))

ஜோதிஜி said...

I like it