Monday, October 21, 2013

Bt COTTON- ஒரு மாற்றுப்பார்வை!


(அய்யோடா இது பிடி காட்டன் இல்லை ..ஹி...ஹி)

பி.டி காட்டனை அமெரிக்க நிறுவனமான மோன்சாண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியப்போது முதல் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது,அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பி.டி பருத்தி இந்தியாவில் ஊடுருவாமல் போய்விட்டது எனப்பலரும்நினைக்கலாம் ஆனால் உண்மையில் நிலை வேறு இந்தியா முழுக்க மிக அதிக அளவில் பி.டி வகை பருத்தி தான் பயிரிடப்படுகிறது, நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் ல்..ஹி....ஹி அந்தப்போராட்டங்களே ஒரு செட்டப்பு தானே அப்புறம் எங்கே இருந்து பி.டி பருத்தி பி.டி உஷா போல ஊரவிட்டு ஓட, நல்லா ஸ்ட்ராங்கா அஸ்திவாரம் போட்டு இந்தியாவில் உட்கார்ந்துக்கிச்சு பி.டி பருத்தி, இந்தியாவில் இனிமே பி.டி பருத்தி இல்லைனா வேட்டீ இல்லை  எவனுக்கும் அவ்வ்!

சுமார் 65 லட்சம் விவசாயிகள் பி.டி பருத்தி சாகுபடி செய்கிறார்கள்,தேசிய உற்பத்தில் இவர்களின் பங்களிப்பு 94.5 சதவீதமாம், மிச்சம் இருக்க அய்ந்து சொச்சம் சதவீதமும் விரைவில் பீ.டி பருத்தியாகிடும் என்பதில் சந்தேகமேயில்லை, வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!!

காண்க செய்தி....

//

Bt cotton now accounts for 94.75 p.c. of total cotton cultivation: T.M. Manjunat (www.cottonyarnmarket.com)
The area under Bt cotton cultivation in the country has rapidly increased from 29,000 hectares in 2002 when commercial cultivation of the variety was permitted to 11.2 million hectares in 2012, according to biotechnology experts.
Participating at an interaction programme organised by the University of Agricultural Sciences-Bangalore on Monday, Biotechnology and Integrated Pest Management Consultant T.M. Manjunath said Bt cotton now accounts for 94.75 per cent of the country’s entire cotton cultivation. He was interacting with about 150 innovative farmers and Bt experts from public and private sectors on various issues related Bt crops.
Similarly, the number of farmers engaged in cultivation of Bt cotton has increased from about 20,000 in 2002 to 65 lakh in 2012, he said. Referring to the opposition from various quarters to Bt crops and the apprehensions on its impact on health and environment, he said there would not have been a rapid increase in the number of farmers cultivating Bt cotton and its area if the variety was not useful to them. It is cultivated mainly in Maharashtra, Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Madhya Pradesh, Haryana, Punjab, Rajasthan and Gujarat, he said.//


நம்ம போராளிகள் நடத்தியப்போராட்டத்தின் நுண்ணரசியலை காண்போம்,

ஆரம்பத்தில் மோன்சாண்டோ நேரடியாக பி.டி விதியினை சந்தைப்படுத்த களம் இறங்கியது,அப்பொழுது  நம்மப்போராளீகள் பொங்கி எழுந்தார்கள்! ஏதடா வம்பாப்போச்சேனு சற்றே சிந்தித்த மோன்சான்டோ ஒரு மாற்றுவழியைப்பிடித்தது, மகாராஷ்ட்ராவில் பருத்தி விதை விற்பனையில் முன்னணீ நிறுவனமான மாஹிகோவை ( Mahyco or Maharashtra Hybrid Seeds Co)வாங்கி அதன் பெயரில் விற்க ஆரம்பித்தது,கூடவே  வேளாண் பல்கலைகளின் புதிய வகை பருத்தி ஆய்வுகளுக்கு நிதியை அள்ளீவிட்டது, எனவே நம்ம ஊரு வேளாண்பல்கலைகள் எல்லாமே பி.டி வகை பருத்திகளையே புதிய ரகமா வேறு வேறூ பெயர்களில் வெளியிட ஆரம்பித்தன.

மேலும் மிக எளிதில் தங்களது பிடி மரபணு நுட்பத்தினை இந்தியாவில் பரப்ப இந்திய வேளாண் பல்கலைகளை பின்வாசல் வழியாக "மாகிகோ(மோன்சான்டோ) பயன்ப்படுத்துகிறது, சமிபத்தில் The National Biodiversity Board (NBA) அனுமதியில்லாமலே  கத்திரிக்காயில் பிடி நுட்பத்தினை புகுத்தி உள்ளூர் ரகமாக செய்ய கர்நாடக தார்வாட் வேளாண் பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டு வேலை செய்த விஷயம் வெளியாகி , கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "கிரிமினல் வழக்கே' மாகிகோ மீது பதிவாகியுள்ளது.

செய்தி,

//The National Biodiversity Board (NBA) and the Karnataka Biodiversity Board (KBB) filed a case for criminal prosecution of 13 individuals, including some top management officials of Mahyco or Maharashtra Hybrid Seeds Co. Limited which is partly owned by Monsanto, for biopiracy. The authorities complained in 2012 that the company along with others had genetically modified local varieties of eggplant without the mandatory approvals and then laid illegal proprietary claim to the genetically modified seeds. In other words, they were accused of biopiracy under the Biodiversity Act 2002.//

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

மேலும் பிடி விதைகளை பரப்பவும், புதிய பிடி விதைகளை உருவாக்க , ஏற்கனவே உள்ள சுதேச விதைகளை பிடியாக மாற்ற என பிராந்திய அளவில் செயல்ப்டும் நூற்பாலை சங்கங்களையும் வளைத்துப்போட்டு அவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு எஞ்சிய பருத்தி வகைகளையும் பிடியாக மாற்ற மாகிகோ(மோன்சான்டோ) தீவிரம் காட்டி வருகிறது.

தென்னிந்திய நூற்பாலை சங்கத்துடனும்அப்படியான ஒப்பந்தத்தில்  மாகிகோ ஈடுப்பட்டுள்ளது.

//V. Muthusamy, Research Manager at SIMA CD&RA, said that the renovated Suvin seeds have been distributed for field trials by farmers’ fields in Andhra Pradesh and Karnataka. The seeds have been distributed in north Gujarat also, he added

Rajkumar said that the association has inked an agreement with Kaveri Seed Company, Hyderabad (a sub-licensee of Mahyco Monsanto Biotech (India)) for co-marketing KCH-999 BGII hybrid cotton seed as SIMA GKD 1.//

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு :-))

அனைத்து மாநிலங்களிலும் முன்னணி விதை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் போட்டு மோன்சாண்டோ பி.டி விதைகளை காங்கா,காவேரி என உள்ளூர் பெயரில் விற்க வச்சிடுச்சு,இப்படியாக 94.5 சதவீத பருத்தி மார்க்கெட்டும் மோன்சாண்டோ கைக்கு போய் ரொம்ப நாளாச்சு, மோன்சாண்டோவுக்கு எதிராகக்கொடிப்புடிச்ச போராளிகள் ஏன் அதே பி.டிவிதைகளை உள்நாட்டு விதை நிறூவனங்கள் விற்றப்போது செய்யவில்லையே ஏன்?

காரணம் ரொம்ப சிம்பிள் உள்நாட்டு யாவாரிகள் ஒவ்வொருவரும் அந்த அந்த மாநிலத்துலவும் ஜாதி மற்றும் அரசியல் ரீதியில் செல்வாக்கானப்பின்ப்புலங்கள் கொண்டவர்கள், அவங்களுக்கு எதிராகப்பேசினால்  வாயிலவே குத்துவாங்க, மேலும் பல இயக்க தலைவர்களுடன் நல்ல "அண்டர்ஸ்டேண்டிங்கும்" உண்டு, ஜாதி,அரசியல்,மதம் என ஏதோ ஒரு வகையில் தொடர்பும் இருக்கும்,தேர்தல் அல்லது கட்சி செலவுகளுக்கு கவனிப்பும் உண்டு, அப்படி இருக்கும் போது "புரட்சி புண்ணாக்கு" எல்லாம் செய்வாங்களா என்ன?

ஆனால் ஒன்னு இப்பவும் மோன்சாண்டோ எதாவது மாநிலத்தில நேராடியாக பி.டி விதைகளைவிற்கலாம்னு திட்டம் போட்டு ஃபீல்ட் ஒர்க்கில் இறங்கினால் உடனே கொடியப்பிடிச்சுக்கிட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிடுவாங்க, அதுக்கு உள்ளூர் வியாபாரியின் ஆசிர்வாதமும் உண்டு!

பி.டி விதைக்கான எதிர்ப்பு என்பது சுதேச விதை வியாபாரிகளின் விதை வியாபாரத்தைகாக்க மட்டுமே ,அது எப்புடி மரபணு மாற்றப்பட்ட பி.டி விதைய வெள்ளைக்காரன் நம்ம ஊருல விக்கலாம், மக்கள் பாதிக்கப்படுவாங்களே என புரட்சிபேசுபவர்கள் அதே பி.டிவிதையை கங்கா,காவேரினு நம்ம ஊரு விதை விற்பனையாளர்கள் விக்கும் போது பாதிப்பே வராது என கண்மூடிக்கொள்ளும் வில்லேஜ் விஞ்சானிகள் தான் நம்ம ஊரு சேகுவேராக்கள் அவ்வ்!!!

எல்லா களவாணித்தனத்திலும் நம்மாட்களும் கூட இருக்காங்க ஆனாலும் பழிய மட்டும் தூக்கி "மோன்சாண்டோ" மேல போட்டு அவன் என்னமோ  தன்னந்தனியா இந்த வேலைய செய்துட்டாப்போல ஒரு காட்சித்தோற்றத்தினை உருவாக்க வேண்டியது!

நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))

பி.டி தொழிருட்பத்தில் தயாரிக்கப்ப்பட்ட விதைகள் எவ்வித தீங்கும் தராது,பாதுகாப்பானது என மெத்த படித்த விஞ்"சாணி"கள் கொண்டு பரப்புரையை மோன்சாண்டோ கன கச்சிதமாக செய்து வருகின்றது, பல ஊடகங்களும்  "கவனிக்கப்பட்டு விடுவதால் பிடி பருத்தியால் தான் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகமானது, என பல புள்ளி விவரங்களை அள்ளி விடவும் செய்கின்றன. ஆனால் உண்மை நிலவரம், பிடி பருத்தி எல்லாம் இந்தியவுக்கு வரும் முன்னர் இருந்தே இந்தியா உலக அளவில் பருத்தி உற்பத்தியில் எப்பொழுதும் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை பிடித்தே இருந்தது.

இன்றும் உலகில் பருத்தி உற்பத்தியில் இரண்டாம் இடம், சாகுபடி பரப்பில் முதலிடம் வகிக்கிறது,ஆனால் பழைய வரலாற்றினை கண்டுக்கொள்ளாமல் அதெல்லாம் தற்போது பிடி பருத்தியால் தான் சாத்தியமாயிற்று என சொல்வது மிகப்பெரும் பித்தலாட்டம் ஏன் எனில் ஆரம்பத்தில் இருந்த சாகுபடி பரப்பு நாளாக ஆக அதிகரித்து வருகிறது, எனவே இப்பொழுது மொத்த உற்பத்தி பேல்களில் அதிகமாக இருப்பதை மட்டும் காட்டி சொல்கிறார்கள், சதவீத அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா கிட்டத்தட்ட ஒரே நிலையினை வகித்து வந்தது.

வெள்ளைக்காரன் ஆண்டக்காலத்திலேயே மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் பெயர் வாங்கிடுச்சு, ஏன் எனில் பிரிட்டீஷ் இந்தியாவில் அவ்வளவு பருத்தி உற்பத்தி இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதியானது.

பி.டி தொழிற்நுட்பத்தால் தீங்கு உண்டா?


BT- Bacillus thuringiensis என்ற பேக்ட்டீரியாவின் நச்சு தன்மையுள்ள புரதத்தினை ,மரபணு மாற்றத்தின் மூலம் தாவர மரபணுவுடன் - பருத்திஉடன் இணைத்து செய்யப்படும் மரபணுகலப்பு விதையே பிடி பருத்தியாகும்.

பேக்டீரியா என்பது நுண்ணுயிர் விலங்கு எனலாம்கெனவே அதன் மரபணு தாவர மரபணுவுடன் இயற்கையாக சேராது, அதனை ஆய்வகத்தில் செயற்கையா ரசாயனங்கள் உதவீயுடன் இணைக்கப்படுகிறது,எனவே பி.டி நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தாவர பொருளில் பி.பி மரபணு மட்டுமில்லாமல் ரசாயன எச்சமும் இருக்கும்,எனவே நுகர்விற்கு பின் எம்மாதிரியான பக்க விளைவுகள் வரும் என சொல்லவியலாது ,ஆனால் செயற்கையாக செய்யப்பட்ட அனைத்தாலும் பக்க விளைவுகள் உண்டாகும் என்பது மட்டும் உறுதி.

தற்போது தெளிவாக உயிர் சுற்றுச்சூழலில் உண்டாகும் பாதிப்பினை காணலாம்.

//When consumed by insects, the protein is converted to its active, toxic form (delta endotoxin), which in turn destroys the gut of the insect. Bt preparations are commonly used in organic agriculture to control insects, as Bt toxin occurs naturally and is completely safe for humans.

More than 100 different variations of Bt toxin have been identified in diverse strains of Bacillus thuringiensis. The different variations have different target insect specificity. For example, the toxins classified under Cry1a group target Lepidoptera (butterflies), while toxins in the Cry3 group are effective against beetles.//


http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html


http://en.wikipedia.org/wiki/Pink_bollworm


http://en.wikipedia.org/wiki/Helicoverpa_armigera


http://insected.arizona.edu/ladyinfo.htm



பருத்தியில் அதிகம் சேதம் விளைவிப்பது காய் துளைப்பான் எனப்படும் பூச்சியாகும், இதில் பொதுவான காய் துளைப்பான், பிங்க் காய் துளைப்பான் என இரண்டு உள்ளது, இதற்கு பொல்கார்ட் ‍‍‍‍‍–1,2 என இரண்டு வகையினை மோன்சாண்டோ உற்பத்தி செய்துள்ளது.

(pinkbollworm moth)

கிரை‍‍–1 என்ற டாக்சின் உள்ள விதைகளாகும், இவை லெபிடாப்டிரா வகை பூச்சிகளுக்கு எதிரானவை, இரண்டு காய் துளைப்பானும் அவ்வகையே.

ஆனால் லெபிடாப்டிரா வகையில் சுமார் 1774,250 க்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளன, அவற்றுள் சில வகையே விவசாய "பெஸ்ட்" எனலாம், மற்றவை சாதாரணமானவை, வண்ணத்துப்பூச்சிகளும் லெபிடாப்டிரன் வகையே, மகரந்த சேர்க்கைக்கு இயற்கையான வெக்டார்கள் வண்ணத்துப்பூச்சிகளே! இவ்வகை பூச்சிகளை " நன்மை பயக்கும் பூச்சிகள் " என்பார்கள்.

அதிலும் சில லெபிடாப்ட்ரன்கள் அபூர்வமானவை,
மேலும் மொனார்ச் வண்னத்துப்பூச்சி ஒரு அரிய வகை இனமாகும்,

(monarch butterfly)
காய்த்துளைப்பானுக்கு விஷம் எனப்பயிரிடப்படும் பி.டி பருத்தியின் பூக்களில் தேன் உண்னும் மற்ற லெபிடாப்டிரா வகை வண்ணத்துப்பூச்சிகளூம் பாதிப்புக்குள்ளாகி இறந்து விடும்.

பருத்தி என்ற ஒரு வணிக்கப்பயிரில் ஏற்படும் பூச்சி தாக்ககுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உருவாக்கப்பட்ட ஒரு உயிர் தொழில்நுட்பம் ஒரு உயிர்வகைப்பாட்டியியல் ஆர்டரில் உள்ள பல்லாயிரம் பூச்சிக்களுக்கும் எமனாக இருப்பதை பலரும் உணரவேயில்லை, ஒரு வேளை வருங்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அருகிவிட்டால் அப்போதான் விழித்துக்கொண்டு ஒலக வண்ணத்து பூச்சி டே" என ஒன்றை உருவாக்கி தமது கடமையை முடித்துக்கொள்வார்களாயிருக்கும் :-))

அதான் ஏற்கனவே சிட்டுக்குருவி தினம் ,சுண்டெலி தினம்னு உருவாக்கி நமக்குலாம்ம் விழிப்புணர்ச்சி ஊட்டுற அறிவு சீவிங்க இதை செய்ய மாட்டாங்களா என்ன அவ்வ்!

மேலும் பல பூச்சிகள் இயற்கை பிரிடேட்டர்கள் ஆகும்,அவை தீமைசெய்யும்பூச்சிகளின் முட்டை, புழு ஆகியவற்றை உண்பதன் ,மூலம் இஅயற்கையான பூச்சிக்கட்டுப்பாடாக உள்ளன. பி.டி விஷம் உள்ள பருத்தியில் உண்டு வளர்ந்த காய் துளைப்பானின் முட்டை ,புழு ஆகியவற்றை உண்ணும் நன்மை பயக்கும் பூச்சிகளூம் இறந்து விடும்.

கிரை –3 டாக்சின் பீட்டில் வகைப்பூச்சிகளூக்கு நஞ்சாகும், பெரும்பாலான பீட்டில்கள் நன்மை பயக்கும் பிரிடேட்டர் ஆகும், அவையும் பி.டி பருத்தி உண்ட காய்த்துளைப்பானின் புழுக்களை, முட்டைகளை உண்டோ, அல்லது பருத்தியின் பொருளாதார முக்கியம் இல்லாத பகுதிகளை உண்டோ பாதிப்புக்கு உள்ளாகலாம்.

உதாரணமாக லேடி பர்ட் பீட்டில் என்பது ஏபிட்ஸ் எனப்படும் சாறுண்ணிகளின் பிரிடேட்டர், பருத்தியில் உள்ள பிடி டாக்சின் ஏபிட்ஸ்களைப்பாதிக்காது, எனவே பிடி பருத்தியின் சாறுண்ட ஏபிட்ஸ்களை உண்ணும் லேடிபர்ட் பீட்டில்களுக்கு மட்டும் பாதிப்பு உண்டாகும், இதனால் இயற்கை பூச்சிக்கட்டுப்பான லேடி பர்ட் பீட்டில் அழிந்து ,சாறுண்ணீ பூச்சிகளின் இனம் பல்கிப்பெருகிடும், இது கதையல்ல நிஜம் என்பதற்கு கண் கூடாக சான்று, பி.டி பருத்தியில் காய் துளைப்பான் தாக்குதல் குறைந்து "சாறுண்ணி பூச்சி" தாக்குதல் அதிகரித்துள்ளதாக விவசாயிகளே சொல்வதிலிருந்து அறியலாம்.

பீ.டி பருத்தி காய்த்துளைப்பானுக்கு எதிராக மட்டுமே நல்லப்பலனைக்கொடுக்கும்,ஆனால் காலப்போக்கில் இயற்கை சமநிலை சிர்க்குலைவதால் பிறப்பூச்சி தாக்குதல் அதிகரிக்கவே வகை செய்யும். பல அரிய வகைப்பூச்சியினங்கள் முற்றீலும் அழியவும் காரணமாகலாம்.

# மேலும் நம் நாட்டில் பருத்தி என்பது இழைகளுக்காக மட்டும் பயன்ப்படுத்தப்படவில்லை, இழைகள் நீக்கப்பட்ட பருத்திக்கொட்டை என்பது கால்நடை தீவனமாக பயன்ப்படுகிறது, பிடி பருத்திக்கொட்டைகளை உண்ட பசுமாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் பிடி யின் தாக்கம் என்னவாக இருக்கும் என இதுவரையில் ஆய்வுகள் ஏதும் நடைப்பெற்றதாக தெரியவில்லை, எனவே அவ்வகை பாலை அருந்தும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு வரும் எனவும் தெரியாது.

நிறைய இடங்களில் பருத்திப்பால் எடுத்து மனிதர்களும் சாப்பிடுகிறார்கள், பருத்தி அல்வா என்று கூட உண்டு, இவ்வாறு உணவாக பிடி பருத்தியினைப் பயன்ப்படுத்தினால் என்ன பின்விளைவுகள் வரும் என  சரியான ஆய்வுகள் இதுவரையில் நடக்கவில்லை.

இந்தியாவில் சாலையை கடப்பதே உயிர் ஆபத்தான ஒன்று அதையே கவலைப்படாமல் செய்கிறோம், பிடிக்குலாம் பயப்படலாமா...ஸ்டீல் பாடி உடம்புலே இதுனு நம்ம மக்கள் தெம்பா பிடி பருத்திப்பால் குடித்துக்கொண்டு , தொலைகாட்சியில் சூப்பர் சிங்கரோ, மானா மயிலாடவோ பார்த்து இன்புற்று வாழ்வார்கள்!

--------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece
http://www.simamills.com/news.asp?id=3639

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள் நன்றி!

98 comments:

? said...
This comment has been removed by the author.
Anonymous said...

நந்தவனத்தாரே, உங்கள் கமெண்டுக்கு பதிலாக நீங்கள் ஒரு பதிவே போட்டிருக்கலாம். அவ்வ்...அவ்ளோ பெர்சு.

வவ்வாலாரே, நீங்க தான் பெருசு பெருசா பதிவ எழுதி தள்ளுரீங்கன்னு பாத்தன்னா, உங்கள் ரசிகர்களும் பெருசு பெருசா கமெண்ட் எழுதுறாங்க.

Anonymous said...

நீங்க போன ஜென்மத்தில ஒரு நுண்ணுயிரியா இருந்திருபீங்களோ என்னவோ? ஹி...ஹி...ஹி... ஒரு இடம் விடாம பூந்து விளையாடுறீங்க போங்க. Physics, Chemistry, Biology ன்னு ஒன்னையும் விடுறது இல்ல.

நமக்கு Biology அறிவு ரொம்ப கம்மி. அதனால் விவாதிக்கிற அளவுக்கு knowledge இல்ல. ஒரு புதிய topic ஐ தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு விரிவான பதிவு! காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் போல நம்மவர்கள்! வெட்கக்கேடு!

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,விரிவான கருத்துக்கு நன்றி!

காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் இது தெரியுமடானு ஒரே பாட்டு கேட்டிருக்கீரா அம்புட்டு தான்!

//என்றால் ம.மா காய்கறி ஓகேதான். சாப்பிடும் போதே வயிற்றில் எல்லாமே அழிந்துதான் போகும். ஆடுமாடு கோழி என எல்லாவற்றின் டிஎன்ஏவும்தான் வயித்துக்குள்ளாற போவுது, கூடவே இன்னொன்னு போனா என்னவாம்?//

வயிற்ரில் எல்லாமே அழிஞ்சு பொவும் தான் ஆனால் ஏன் இந்த வெள்ளைக்காரனுங்க மரப்பணு மாற்றப்பட்டது எங்க நாட்டுக்கு இறக்குமதி செய்யக்கூடாதுனு தடைப்போடுறாங்க.

வெளிநாட்டில் பலரும் மரபணு மாற்றப்பட்டதை தவிர்க்கனும்னு பிரச்சாரம் எல்லாம் செய்றாங்க, அப்போ அவங்களுக்கு மட்டும் செரிக்கலையா?

நான் ரசாயனம் என பொதுவாக சொன்னதை ஜீன் மாடிஃபையர்னு சொல்லுறாங்க, மரபணு மாற்றப்பட்ட உணவில் ஜீன்மாடிஃபையர் கெமிக்கல் இருக்கலாம் என பொதுவாக அஞ்சப்படுகிறது.

பேக்ட்டீரியாவை நுண்ணுயிர் விலங்கு என என சொன்னது , தாவர ஜீன் உடன் ஒத்துப்போகாத ஒன்று என புரிய வைக்க, டெக்னிகலாக விலங்கு/அல்லது தாவரம்னு சொல்ல முடியாது. ஆனால் தாவர ஜீன்களில் இருந்து வேறுபட்டது,இயற்கையாக இணையாது, நாம தான் ஒரு ஜீன் கேரியர், அப்புறம் ரசாயனம் எல்லாம் கொடுத்து மாத்தி ஒட்ட வைக்கனும்.
என்ன தான் கிளீனாக்கினாலும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கவே செய்யும், வெளிநாட்டில் மெத்த படிச்ச சனங்களே இன்னும் நம்பலை ஏன் நாம மட்டும் கண்ணை மூடிக்கிட்டு நம்பனும்?

# //மரபணு விதை இல்லாவிட்டாலும் பூச்சிக்கொல்லி மருந்தினை விவசாயி உபயோகபடுத்தும் போது பிற பூச்சிகளும் பட்டாம்பூச்சி உட்பட எல்லாமும் சாகத்தானே போகிறது? பூச்சிகொல்லி பயன்படுத்தாமல் விவசாயம் செய் என்றால் இப்போது யாராவது கேட்பார்களா?//

பூச்சி மருந்தடிக்கும் போதும் நான் டார்கெட் பூச்சிகளும் இறக்கும்,ஆனால் அதெல்லாம் கலவையாக குறிப்பிட்ட ஒரே வகை ஆர்டரில் உள்ள பூச்சிகளை மட்டும் அழிக்காது.

மேலும் பூச்சி மருந்துகளின் ஹால்ஃப் லைஃப் பீரியட் பொதுவாக குறைவாக இருக்கும், பெரும்பாலும் 24 மணி நேரத்தில் இருந்து ஒரு வாரத்திற்குள் செயல் திறன் போய்விடும், மேலும் லீத்தல் டோஸ் அளவும் பூச்சிக்கு பூச்சி மாறும் என்பதால் பெரிய அளவில் அழிச்சு விடாது.

பி.டி காட்டனில் டாக்சின்கள் வளர்ச்சிக்காலம் முழுவதும் ஒரே சீராக இருக்கும்,மேலும் லெபிடாப்டிரா என்ற ஒரு ஆர்டரை மட்டும் குறிவைத்து பாதிப்பதால் கால போக்கில் அந்த ஒரு ஆர்டரில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழியக்கூடும்.

# பிடி காட்டன் என ஒரே வகையினை நாடு முழுக்க பயிரிட ஆரம்பித்தால் சுதேச விதைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும், வருங்காலத்தில் முழுக்க முழ்க்க மான்சான்டொவையே சார்ந்து இருக்கும் சூழல் உருவாகி, அவர்கள் வைப்பது தான் விதை விலை என்றாகிடும்.

என்ன வகையான உயிர்சூழல் மாற்றம் உருவாகும் என சரியாக தெரியாமல் எதுக்கு முழுக்க பிடி வகை பயிரிடுதலுக்கு மாற வேன்டும் என்று தான் கேட்கிறேன்.

# டெர்மினேட்டர் ஜீன் பற்றி எதுவும் தெளிவாக சொல்லவும் இல்லை, என்ன தான் நடக்கும்னு தெரியாத நிலையில் பிடிக்கு கொடி பிடிக்க ஏன் அவசரப்படுறுகிறொம்னு தெரியலை.
---------------

வேற்றுகிரகவாசி ,

வாரும்,நன்றி!

எல்லாம் ஒரு ஒத்திசைவு தான் ,பெருசா பதிவு ,பெருசா பின்னூட்டம் :-))

# நுண்ணுயிரா அவ்வ், ஏற்கனவே தலைக்கீழ் வவ்வாலுக்கு அறிவு இருக்கானு சந்தேகப்படுறாங்க, நுண்ணுயிர்னு சொல்லிட்டா சுத்தமா அறிவேயில்லைனு முடிவுக்கட்டிருவாங்களே அவ்வ்!

-----------------------

சுரேஷ்,

வாங்க,நன்றி!

தற்காலிகமா பலன் கிடைத்தால் போதும் என்ற நிலையில் தான் எல்லாரும் இருக்காங்க, பாவம்,புண்ணியம், தர்மம், எல்லாம் படிக்க மட்டுமே, காசே தான் கடவுளடா! கோயிலில் காசு கொடுத்தால் தான் கடவுளையும் வேகமா போய் பார்க்க முடியும் அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

மீள்வருகைக்கு நன்றி!

//இதே மாதிரி தேவை எனில் ஆன் ஆஃப் பண்ணுவது போன்ற பிடி தாவரங்களை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது. உருவாக்கி விட்டார்களா என தெரியவில்லை.//

இன்னும் நடக்கலையே, அதுக்குள்ள முழுக்க பிடி தான் ஒஸ்தினு சொல்லிக்கிட்டு மாறினால் என்ன செய்ய?

//எப்படியோ நல்ல பூச்சிகள் சாகுமே?//

லெபிடாப்டிரா ஆர்டரை மட்டும் குறி வைத்து சாகடிக்காமல் இருக்குமே, அப்படி ஒரு குறிப்பிட்ட ஆர்டரை மட்டும் டார்கெட் செய்து அழிக்கும் தொழில்நுட்பம் இயற்கை சமநிலையை பாதிக்கும் என்பதை தான் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்,அதை நான் எடுத்தாண்டுள்ளேன் அஃதே!

//இது நடக்ககூடாது என்பதால்தான் அரசு விதைகளை உருவாக்குவது நல்லது என்கிறேன். //

இதெல்லாம் நடக்கிற காரியமா? அப்படி பார்த்தால் எல்லாமே அரசே எடுத்து நடத்திவிட்டு போயிடலாமே?

//வெளிநாட்டுகாரன் செய்வதை எல்லாம் நாம் செய்யனுமா?//

நல்லக்கேள்வி ,அதே போல பிடி யும் வெளிநாட்டுக்காரன் கொண்டாந்தது தான் அவன் கொண்டு வரதை எல்லாம் ஏற்கனுமா, இல்லை சொல்வதை எல்லாம் செய்யனுமா? எனக்கேள்விக்கேட்டால் என் மேல பாய்வீங்க அவ்வ்!

இப்பவும் வெளிநாட்டுல இருந்து பிடி இல்லாத ஆர்கானிக் காட்டன் வேண்டும்னு கேட்கிறாங்க, அதுவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகுதாம் வழக்கமான காட்டன் விட பல மடங்கு விலையில்,ஆனால் நம்ம மக்கள் மாஸ் புரடக்‌ஷனில் அப்படி ஈடுபடவில்லை என்பதும் வருத்தமானதே.

சரி அப்போ வெளிநாட்டில இருந்து எதுக்கு பிடி இல்லாத ஆர்கானிக் காட்டன் வேண்டும்னு இறக்குமதி செய்து துணி தயார் செய்யனும்?

பெங்கால் தேசிக்காட்டன் என்ற வகை அப்படி ஏற்றுமதி ஆகிறதாம், என்னமோ போங்கப்பா வெளிநாட்டுக்காரன் நம்மள ஒன்ன செய்யுனு சொல்லிட்டு அவனுங்க மட்டும் ஆர்கானிக்,நான் பிடினு கேட்கிறாங்க அவ்வ்!

//நான் விலை அதிகமானாலும் (பெரும்பாலும் இரட்டை விலை) பூச்சிக்கொல்லியினால் பாதிக்கப்பட்டிருக்கும் என அஞ்சப்படும் காய்களை- உதாரணமாக கீரை, உருளை இவற்றை ஆர்கானிக்காக பார்த்து வாங்குவேன்.//

ஆரம்பத்தில் இந்தியாவில் காய்கறிகளுக்கு பூச்சி மருந்தே அடிப்பதில்லை, பூச்சி மருந்து அடிச்சா நல்லா விளையும்னு பிரச்சாரம் பண்னி வித்ததே பன்னாட்டு நிறுவனங்கள் தான், இப்போ அங்கே ஆர்கானிக்னு பிரச்சாரம் செய்றாங்க, நீங்களும் ஆர்கானிக் தான்ன் வேண்டும்னு நிக்குறிங்க, ஆனால் பூச்சி மருந்தை கையில் எடுத்த இந்தியனால் விட முடியலை அவ்வ்!

வருங்காலத்தில் பிடிக்கும் அப்படி நினைச்ச நேரத்தில "யு டர்ன்' அடிக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்.

//பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படுத்தும் கெடுதலை தவிர்க்கவும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளில் சத்தான உணவுகளை (கோல்டன் ரைஸ்) பெறவும் இது சிறந்த வழி என கருதுகிறேன்//

பூச்சிக்கொல்லினா என்னனு தெரியாம தானே இருந்தோம், கொண்டு வந்து அறிமுகப்படுத்தி அடிமையாக்கிட்டாங்க, மீள முடியலை அவ்வ்.

கோல்டன் ரைஸ் ஆக இருந்தாலும் வாங்கும் விலையில் ஏழைக்கு கிடச்சா தானே? அப்புறம் என்ன ஊட்ட சத்து குறைவுள்ள நாடுகளில் அதனால் பலன் கிடைக்கும் என்பது போல ஒரு பிரச்சாரம்?

மலிவு விலையில் கிடைக்காத பொருள் அமிர்தமே ஆனாலும் அதனால் சாமானியனுக்கு என்ன பயன்?

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

வழக்கமாக்க எல்லாரும் வளர்ந்த நாடுகளில் நடப்பதெல்லாம் மிகச்சரியாக இருக்கும்னு நம்புவது போல நீங்களும் நம்பறிங்க :-))

இந்தியாவில் மொத்த அளவில்(வால்யூம்) பூச்சி மருந்து ,உரம் ஆகியவற்றின் பயன்ப்பாடு அதிகம் ஆனால் ஒரு ஹெக்டேருக்கு பயன்ப்படுத்தும் பெர் கேப்பிடா கன்சம்ப்ஷன் ரொம்ப கம்மி, மொத்த அளவு கூட இருக்க காரணம் இந்தியாவில் சாகுபடி பரப்பு அதிகமா இருக்கு.

ஆமாம் உலகிலேயே மிக அதிக பரப்பளவில் பருத்தி சாகுபடி ஆவது இந்தியாவில் தான் ,இது போல கரும்பு நெல் என பலவற்றில் உலகின் முக்கிய இடம்ம் வகிக்கிறது.

ஒரு ஹெக்டேருக்கு 0.45 கி.கி தான் பூச்சி மருந்துப்பயன்ப்படுத்துகிறோம், அதே சமயம் ஜப்பானில் 12 கி.கி/ஹெக்டேர்.

எனவே நாம் அந்த அரை கிலோ பூச்சி மருந்தையும் நிறுத்தினால் பெரிய உற்பத்தி இழப்பு ஆகாது, கண்ட்ரோல்ட் ஃபீல்ட் மற்றும் அன் கன்ட்ரோல்ட் பீல்ட் டெச்ட் மூலம் உறுதிய செய்யப்பட்ட ஒன்று.

விவசாயிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கலைனா பயிர் சேதம் ஆகிடும் என்ற பயத்தில் அடிக்கிறாங்க,, மருந்தே அடிக்காமல் விட்டால் வரும் இழப்பு பெரிய அளவில் இருக்காது என்பது உணர்வதில்லை.

காண்க,

//The Indian pesticide industry has also achieved the status of second largest basic pesticide manufacturer in Asia (after Japan). However, average per hectare pesticide consumption in India (0.5 kg/ha) compared with averages in other Asian countries like Korea (6.60 kg/ha) and Japan (12.0 kg/ha) are quite low. According to the pesticides industry statistics, India spends $3/ha on pesticides compared with $24/ha spent by Philippines, $255/ha spent by South Korea and $633/ha by Japan (TERI, 2000; Pathak et al., //

http://punenvis.nic.in/index3.aspx?sslid=251&subsublinkid=3466&langid=1&mid=1

எனவே முழுக்க ஆர்கானிக் ஆக பயிரிட பெரிதாக மெனக்க்கெட தேவையில்லாத நிலவளம் கொண்ட நாடு தான் இந்தியா. இன்னமும் தொழு உரம் போட்டு சந்தேகத்துல கூட ரசாயன உரமும் விவசாயிகள் போடுறாங்க,அதெல்லாம் தேவையில்லைனு சொல்லி புரிய வச்சா போதும்.

# இஸ்ரேல்,அமெரிக்கா,சீனாவில் எல்லாம் அரசு நிறைய பணம் செலவழிக்கிறது, ஆனால் இந்தியாவில் நேரடி மாநியம் கூட இல்லை, உற்பத்திக்கு சரியான விலையும் இல்லை.

சீன முறை விவசாயம் பற்றி தனியாக பதிவே இடலாம் என நினைக்கிறேன். அங்கே ஒருவர் விவசாயம் செய்கிரேன் என தானாக முன்வந்தால் நிலம் இலவசமாக கிடைக்கும்!

சீனாவில் நிலம்ம் என்பது அரசு சொத்து, விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை, பலரும் கிராமம் விட்டு நகருக்கு ஓடி விடுகிறார்கள், என அரசாங்கம் ஏகப்பட்ட கெடுபிடி காட்டுது. அப்படி ஓடிப்போனவங்க என்னிக்கு கிராமத்துக்கு போனாலும் நிலம் கிடைக்கும் என்பது தான் சீனாவின் சிறப்பு. அங்கு நடக்கும் விவசாயம் "கம்யூனிட்டி விவசாயம்' ஒரு கிராமத்தில் இருக்கும் மொத்த நிலத்தினை அங்கு இருக்கும் மக்கள் தொகை பிரித்து விவசாயம் செய்ய வேண்டும்,ஆனால்ல் இது கட்டாயம் என்பதால் பலரும் விவசாயம் செய்ய பிடிக்காமல் நகருக்கு ஓடிப்போயிடுறாங்களாம். அங்கே ஒரு ஏக்கர் கூட தரிசாக கிடக்க கூடாத்உ என அப்படி யாரேனும் நிலத்தை விட்டு ஓடினால் அதையும் பிரித்து மற்றவர்கள் விவசாயம் செய்வார்கள். அதாவது செய்ய வைத்துவிடுவார்கள் :-))

நம்ம ஊரில் நிலமற்றவர்களுக்கு நிலம் கொடுத்து செய்ய சொன்னால் பலரும் விவசாயம் செய்வார்கள்,ஆனால் நிலம் கொடுக்க மாட்டோம்கிறோம்.

சீனாவை சர்வாதிகாரம்ம் என பலரும் கண்ண மூடிக்கிட்டு குற்றம் சொன்னாலும், எல்லாருக்கும் வாழ்வாதாரம் செய்து கொடுக்க வேண்டும் என அரசு முனைப்பு காட்டுவதை மறுக்க முடியாது, சீனாவில் பாராட்டவும், கண்டிக்கவும் பல அம்சங்கள் இருக்கு, முதலாளித்துவ மீடியாக்கள் தான் சீனாவின் கருப்பு பக்கங்களையே அதிகம் வெளிச்சம்ம் போட்டுக்காட்டுக்கின்றன என நினைக்கிறேன்.

Anonymous said...

திரு வவ்வால்
தயவுசெய்து படிக்கவும்

http://tamilnenjamhifs.blogspot.in/2010/02/blog-post_05.html

மரபணு மாற்றம் என்பதே தவறு, மரபணு திருத்தம் என்பதுதான் சரி. இது எழுத்ப்பட்டது 2008 ல். Published in arriviyal.info, joined maintained by Prof. Arunn, IIT Madara. Later, It has been taken up by this blog writer, & he changed the title according to his understanding as a fellow blog writer ;))
Annoymous

Amudhavan said...

ரொம்ப நாட்களாக பி.டீ பருத்தி, பி.டீ பருத்திக்கெதிராக ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் செய்திகள் படித்துவரும்போது அது என்ன வகைப் பருத்தி, அதை எதிர்க்க ஏன் ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் யோசித்ததுண்டு. தேடிச்சென்று படித்ததில்லை. உங்க பதிவில் நீங்களும் நந்தவனத்தானும் சாதக பாதகங்கள் என்று எல்லாம் அலசியதில் அதைப்பற்றி நிறையவே தெரிந்துகொள்ளமுடிந்தது.

வவ்வால் புண்ணியத்தில் இணையத்தில் வலம் வருகிறவர்களுக்கெல்லாம் இலவச பாடத்திட்டத்தில் சகல சப்ஜெட்டுக்களும் கற்றுத்தரப்படுவது மகிழ்ச்சியே.ஆனால் என்னவொன்று ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். சும்மா படிக்கும்போதே மேலோட்டமாய் எண்ணியதில் 28 பிழைகள் கண்களில் பட்டன.

\\நம்ம நாட்டில் நடக்கும் போராட்டங்கள்,எதிர்ப்புகள் எல்லாமே ஏதேனும் உள்நோக்கம் கொண்டவையாக இருப்பதே சாபக்கேடு, யாரோ ஏதோ தீமையை எதிர்த்து போராடுராங்க அந்த தீமை போயிடும்னு மக்கள் நம்பிக்கிட்டு சும்மா இருந்துடுவாங்க, கடைசியில் எது நடக்காது என நினைத்தார்களோ அதான் நடந்திருக்கும் :-))\\
உங்களின் இந்த வார்த்தைகள் சொல்லும் நிஜம்தான் இந்தியாவின் சாபக்கேடு. கூடங்குளத்தின் உதயகுமார் தவிர மற்ற எல்லா போராட்டக்காரர்களும் இந்த லிஸ்டில்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

நந்தவனத்தான் சொன்னதுபோல் எல்லாவற்றையும் ஆர்கானிக்கில் வாங்கி கட்டுப்படியாவதில்லை. இந்த உருளைக்கிழங்கில் இனிப்பைக்கொண்டுவந்து நுழைத்த மேதாவிகளையெல்லாம் என்ன செய்வதென்று தெரியவில்லை.உணவின் ருசியையே அடிச்சி துவம்சம் செய்துவிட்டார்கள்.(பின்விளைவுகள் தனி)எங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மட்டும் 'நாம்தாரி'யில் ஆர்கானிக் வகையை வாங்கிவந்துதான் பயன்படுத்துகிறோம். முந்தைய ருசி இல்லாவிட்டாலும் கடைகளில் கிடைக்கும் மற்ற கிழங்குகளைவிடவும் எவ்வளவோ மேல்.

அடுத்தது என்ன சரித்திரப் பாடமா?

ஜோதிஜி said...

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழு (Genetic Engineering Approval Committee) இந்த வேலைகளைக் கவனித்து வருகிறது. (தற்போது இதன் பெயர் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு - Genetic Engineering Appraisal Committee-GEAC). அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறையின் கீழ் மரபணு மாற்றங்களுக்கான மறு ஆய்வுக் குழு (Review Committee on Genetic Modification – RCGM ) இயங்கினாலும் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப மதிப்பீட்டுக்குழு தான் கட்டுப்படுத்தும் முழு அதிகாரம் பெற்ற அமைப்பு.

ஆனால் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள குழு பல சந்தர்ப்பங்களில் மரபணு மாற்றுத் தொழில் நுட்ப அங்கீகாரக் குழுவிற்குத் தெரிவிக்காமலேயே, அதன் அனுமதி பெறாமலேயே சோதனைகள் செய்ய நிறுவனங்களுக்கு உதவியிருக்கிறது..

http://deviyar-illam.blogspot.in/2013/09/blog-post.html

நீங்க சொல்ற மாதிரி உள்ளே அந்தந்தமாநிலங்களில் இருக்கும் கூட்டுக்களவாணிகளை விட மேலே இருந்து இப்படி ஆரம்பித்தால் எப்படி வௌங்கும்?

ஜோதிஜி said...

பிடி கத்திரி பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக செய்து மகிஹோ-மான்சான்டோ சமர்ப்பித்த ஆய்வறிக்கையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட போதுது. மகிஹோ-மான்சான்டோவின் ‘வணிக இரகசியம்’, அதன் வணிக நலனைப் பாதிக்கும் எனக் கூறி தர மறுத்தது. கடும் சட்டப் போராட்டதிற்குப் பின் கிரீன் பீஸ் அமைப்பு பெற்றது.

‘கேட்காமலேயே தந்திருக்க வேண்டிய தகவல்களை கேட்டபின்னுபும் தரமறுப்பது சரியல்ல’ என்று கண்டிக்கப்பட்டதும் நடந்தது.

கடும் போராட்டத்திற்குப் பின் பெறப்பட்ட மகிஹோ-மான்சான்டோ சமர்பித்த பிடி கத்திரி அறிக்கையை பரிசீலனை செய்த தனியார் நிறுவனங்களைச் சாராத சுந்திரமான நிலையில் ஆய்வுகள் செய்யும் (Independent Scientists) பன்னாட்டு விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்தனர்.

‘கட்டாயம் செய்திருக்க வேண்டிய பல ஆய்வுகள் செய்யப்படவில்லை,’ என்றும், ‘சாதகமான முடிவுகளை தரும் வகையில் ஆய்வுகள் பல வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும், ‘பாதிப்புகள் தெரியாத வகையில் முடிவுகள் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றும் கூறினர். மேலும், ’’செய்யப்பட்ட பல ஆய்வுகள் கத்துக்குட்டிகள் செய்த ஆய்வுகள் போல உள்ளது,’ என்றும் பல வாரியான விமர்சனங்களை வெளியிட்டனர்.

இது நம்ம மேதைகளின் தொடக்கம். வாங்குன கூலிக்கு வஞ்சகம் இல்லாத உழைத்த உழைப்பாளி வர்க்கம்.

ஜோதிஜி said...

மதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே,

இது உங்களை அல்ல.

http://deviyar-illam.blogspot.in/2013/09/5.html

இந்த பதிவில் வரும் வார்த்தைகள்................

நீங்க ஏற்கனவே என் பதிவில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வாசகத்தை எழுதியிருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஒரு விசயத்தை எழுதும் போது அதன் உண்மைத்தன்மையை விட உங்கள் பாணியில் எப்படி முடிக்கப்பட வேண்டுமோ அப்படியே கொண்டு போய் உண்மையைப் பற்றி சொல்லாமல் அப்படியே நழுவி விடுவது தான் வாடிக்கை.

நினைவில் உள்ளதா?

ஆனால் உங்கள் இந்த கட்டுரையில் அங்கங்கே எடுத்த இணைப்பும், துணுக்கு போல சொல்லப்பட்டவிசயங்களும் என்ன முடிவாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றே எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.

நீங்க சொன்ன மாதிரியே என் விருப்பமின்றி எது உண்மையோ அதைப்பற்றி உங்கள் பாணியில் ஆதாரப்பூர்வமான இணைப்புகள் எல்லாம் கொடுத்து எழுதி அனுப்பியவர் சேர்க்காததை இணையத்தில் தேடி எடுத்து வேலை மெனக்கிட்டு ஐந்து பதிவாக இதனைப் பற்றி முழுமையாக எழுதிய எந்த பதிவுக்கும் உங்கள் விமர்சனம் இல்லை என்ற போதே நினைத்தேன்?????????????????????????

பேரவைத்தலைவர் ரொம்ப உசாரான பார்ட்டீடீடீடீடீ தான் என்று.

முதல் முறையாக நந்தவனம் கூட கூர்மையான தெளிவான விமர்சனம் கொடுத்து புரிய வைக்காமல் இருப்பது ஆச்சரியமே.

நந்தவனம் நம்ம பேரவைத்தலைவர் புத்திசாலி. அமுதவன் சொன்ன மாதிரி அடுத்து வரலாறு குறித்து எழுத குறிப்பு எடுத்துக் கொண்டு இருப்பார்.

மரபியல் துறை சம்மந்தப்பட்டவர் என்று சொல்லியிருப்பதால் இந்த கட்டுரையில் உள்ள சராம்சத்தைப் பாருங்க.

கீழே இருப்பவனுங்க, உள்ளூர் காரனுங்க என்ன பண்ணுவாங்க? விதைன்னு வந்தா விற்கத்தான் செய்வார்கள். அவங்க பொழைப்பை பார்க்கனுமே?

இது உள் அரசியல் முழுக்க டெல்லியிலேயே முக்கால் வாசி முடிந்து விட்டது.

ஆனா தலைவரு ஒரு விசயத்தை சரியா சொல்லியிருக்காரு. 95 சதவிகிதம் இப்போது எல்லா இடங்களிலும் பரவியிருப்பது மரபணு விதைகள்.

தொடர்வேன்...........

கொலவெறி பேரவை

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

திரு அனானி,

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

நீங்க சொன்ன பதிவை படிக்கிறேன்.

genetically modified crop- மரபணு மாற்றப்பட்ட என சொல்ல்லி பின்னர் மரபணுமாற்றம் என சுருக்கமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள், மனாவுக்கு மானா என இயைபாகா வருதுல்ல :-))

மாற்றப்பட்ட= திருத்தம் கிட்டத்தட்ட சரி ஆனால் சரியல்ல, திருத்தம் என்றால் அதில் உள்ளதை மட்டுமே சரி செய்வது , மாற்றம் என்றால் புதிதாக ஒன்றை புகுத்துவது.

உ.ம்: தேர்வுத்தாள் திருத்துகிறார்கள்- திருத்தப்படுகிறது, மாற்றப்படுவதில்லை :-))
------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

// உங்க பதிவில் நீங்களும் நந்தவனத்தானும் சாதக பாதகங்கள் என்று எல்லாம் அலசியதில் அதைப்பற்றி நிறையவே தெரிந்துகொள்ளமுடிந்தது.

வவ்வால் புண்ணியத்தில் இணையத்தில் வலம் வருகிறவர்களுக்கெல்லாம் இலவச பாடத்திட்டத்தில் சகல சப்ஜெட்டுக்களும் கற்றுத்தரப்படுவது மகிழ்ச்சியே.//

ஏதோ கூகிளாண்டவர் கடாட்சத்தில் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறோம், அதை பகிர்ந்துப்போமேனு சிலதை எழுதி வைக்கிறது தான் ,மற்றபடி நம்ம ஒரு கயலான்கடை போல , ஒரே "குப்பையா" குவிஞ்சுக்கிடக்கும் இடம் :-))

//ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள். சும்மா படிக்கும்போதே மேலோட்டமாய் எண்ணியதில் 28 பிழைகள் கண்களில் பட்டன.//

ஆஹா நாம எழுதியதை படித்து எண்ணிப்பார்ப்பார்கள் என நினைப்பேன், அந்த எண்ணிப்பார்ப்பது இதானா அவ்வ்!

எழுத்துப்பிழைகள் அதிகமாகிக்கொண்டே வருவதை நானும் கவனித்துக்கொண்டு தான் வருகிறேன், குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன், பிழைகளுக்கு மன்னிக்கவும்!

பிழைகள் இருப்பதற்கு முதல் காரணம் எழுதியதை "பிழை திருத்தம்" பார்க்காமலே அப்படியே வெளியிடுவேன், அடிக்கடி பின் குறிப்பில் பிழை திருத்தம் இன்னும் செய்யவில்லை என ஒரு முன் ஜாமீனும் போடுவேன் , அப்புறமா நேரம் கிடைக்கும் போது பிழை திருத்தம் செய்துவிடுவதுண்டு,சமீபகாலமாக ஹி..ஹி எல்லாருக்கும் நம்ம "Mode of operation"பழகி இருக்கும்னு அந்த முன் ஜாமினும் போடுறதில்லை அவ்வ்!

# இன்னொரு காரணம் சமீப காலமாக "டச் பேடில்"(டேப்லட்) தட்டச்சு செய்கிறேன் அதில் தட்டச்சு செய்வதே பெரும்பாடாக எனக்கு இருக்கு, அதை விட கொடுமை ஒரு ஆன் லைன் தமிழ் தட்டச்சு தளத்தினைப்பயன்ப்படுத்துகிறேன், அதுல தம்மாத்துண்டு "விண்டோ" தான் காட்டுது அவ்வ்,முன்னரே ஒரு முறை உங்கள் பதிவில் இதனை சொல்லியும் இருக்கிறேன் என நினைக்கிறேன்.

"ர்" ற்,"ல்" "ள்","ன்","ண்" இன்னும் பல எழுத்துக்களுக்கு ஷிப்ட் பிடிக்க தடுமாற்றமாக இருக்கு டச்சில் மேலும் குறில்,நெடில் என தப்பா போயிடுது, பல சமயம் பிரிடிக்டிவ் வேர்ட் கம்ப்ளீஷன் வந்து கழுத்தை அறுத்துடுது.

இதில் பெரிய இம்சை என்னனா ,சரி செய்யலாம்னு கர்சரை அந்த இடத்துக்கு கொண்டு போக முடியலை, ஏன்னு தெரியலை அந்த சொல்லைத்தான் செலக்ட் செய்யுது, ஒரு எழுத்தை மட்டும் தேர்வு செய்ய முடியலை, இதனால் பிழைத்திருத்தம் செய்வதே பெரும்பாடாக இருக்கு.

ஹி..ஹி இதுக்கும் மேல ஒரு காரணம் நம்ம மொழி அறிவோ அல்லது பொறுமையின்மையோவும் ஆகும்!

ஹி...ஹி இதுல முக்கியமான விடயம் என்னனா அந்த ஐபேடும் ஓசி, எனவே அதுல ரொம்ப ஆராய்ச்சியும் செய்வதில்லை , அப்படியே ஓடட்டும்னு விட்டாச்சு.

இவ்வளவு இம்சையிலும் எதுக்கு பதிவு போடனும், என நினைத்து தான் கொஞ்ச நாளா ஓரங்கட்டியிருந்தேன்,ஆனாலும் தமிழ் வலையுலகம் என்னோட அரும்பெரும் சேவையில்லாமல் கலையிழந்து போயிடுமேனு "ஒரு நல்லெண்ணத்தில்" தமிழ் சேவையாற்றுகிறேன், இதுக்கு எதாவது நோபெல் பரிசு, ஆஸ்கார் அவார்டுனு கொடுப்பாங்களா, கொடுத்தா நன்றியுடையவனாயிருப்பேன் அவ்வ்!

அடப்பாவி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையானு என்னோட மனசாட்சியே என்ன திட்டுது அவ்வ்!

#//உங்களின் இந்த வார்த்தைகள் சொல்லும் நிஜம்தான் இந்தியாவின் சாபக்கேடு. கூடங்குளத்தின் உதயகுமார் தவிர மற்ற எல்லா போராட்டக்காரர்களும் இந்த லிஸ்டில்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.//

அந்த சாபக்கேட்டை விமர்சிப்பது தான் பதிவின் மையநோக்கு, அதனை சரியாக கவனிச்சி உங்க அனுபவத்தினை காட்டிட்டிங்க,நன்றி!

பின்னாடி ஒருத்தர் பதிவில் என்ன சொல்ல வந்த, கருத்தேயில்லையேனு கேட்டுக்கிட்டு இருக்கார் ,அவரை போய் கவனிக்கணும் :-))

கூடாங்குளம் போராட்டம் கூட ஒரு உள்நோக்கு கொண்டது தான் , முன்னரே அதுப்பற்றியும் எழுதிவிட்டேன், அதன் தொடர்ச்சி விரைவில் வருது!
-----------------------

வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

வாங்க,நன்றி!

செம கொலவெறியில வந்திருப்பீங்க போல தெரிதே அவ்வ்!

# நீங்க சொன்ன குழுக்கள் என்ன செய்தது என்பதெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றால் , அதெல்லாம் 2002க்கு முன்னரே செய்திருக்க வேண்டும், 2002 இல் அரசு அனுமதி கொடுத்து கமர்சியலாக கல்டிவேஷனே ஆரம்பம் ஆகிடுச்சு, அப்பவும் பிடியை அழிப்போம்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க, இப்பவும் சொல்லிக்கிட்டு இருக்காங்க,ஆனால் பிடி மட்டும் எப்படி 94.75% நாட்டில் பரவிச்சு, அப்போ போராளிகள் வெறுமனே மீடியாவுக்காக தான் ஆக்ட் கொடுத்தாங்கலா?

குழுக்கள் அனுமதிச்ச பின்னர் ,மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டி புறக்கணிக்க செய்திருக்க வேண்டாமா?

பிரிட்டீஷ் ஆட்சியில் அன்னியத்துணிய அரசு கொண்டு வந்தது,அரசு கொண்டு வந்துச்சுனு இல்லாமல் "புறக்கணிப்பு" போராட்டம் " கதர் இயக்கம்" நடத்தினார்கள், அதே போல நான் -பிடி பருத்தி சாகுபடியை பரப்பி இருக்கணும், ஆனால் எதுவும் செய்யலை, உள்ளூர் வியாபாரிகள் கங்கா,காவேரினு பிடி விற்க ஆரம்பித்ததும் போராளிகளின் சுதி இறங்கியது ஏன்?

மோன்சாண்டோ, பேயர், டுபாண்ட் , ஐ.டிசி என பன்னாட்டு விதை நிறுவனங்களின் மார்க்கெட் பிடிக்கும் சண்டையே பிடி போராட்டம் ஆகும்,இந்தியாவில் அவர்களின் ஏஜண்டுகளாக உள்ளூர் விதை வியாபாரிகள் செயல்பட்டார்கள்,மான்சாண்டோ நல்ல மார்ஜின் கொடுத்தவுடன் உள்ளூர் வியாபாரிகள் மான்சாண்டோ பக்கம் போயாச்சு, எனவே பிடி போராட்டம் பிசு பிசுத்துவிட்டது இதான் உண்மை.

இதுவே மான்சாண்டோ நேரடியாக விதை விற்கனும் என நினைத்திருந்தால் பிடி இந்த பத்தாண்டுகளில் 95% பரவியே இருக்காது.

# //ஆனால் உங்கள் இந்த கட்டுரையில் அங்கங்கே எடுத்த இணைப்பும், துணுக்கு போல சொல்லப்பட்டவிசயங்களும் என்ன முடிவாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றே எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.//

அய்யா சாமி , உங்களுக்கு satire, irnoy என்றால் என்னனு புரியலைனா அதுக்கு நான் என்ன செய்ய?

என்ன முடிவாக சொல்ல வருகிறேன் என்பதை பதிவில் சொல்லி இருக்கிறேன், அது மனோகரா படம் வசனம் போல இல்லை அவ்வளவு தான் , மேலும் "ஜட்ஜ்மெண்ட்" எழுதுவது போல ஒரு தீர்ப்பினை பதிவின் முடிவில் எழுதி என்ன சொல்ல வந்தேன் என நாட்டாமை தீர்ப்பை வழங்க வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன்,வழக்கமாக/பெரும்பாலும் அவ்வாறு எழுதுவதில்லை, ஒரு "ஓபன் எண்ட்" ஆகவே எனது கட்டுரைகள் இருக்கும், படிப்பவர்கள் தாங்களாகவே ஒரு "கருத்தை" உணர வேண்டும் என நினைப்பேன்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் கட்டுரை எழுதும் போது முன்னுரை, பொருளுரை, முடிவுரை என ஒரு வடிவில் எழுதுவது போல எதிர்ப்பார்க்கிறீர்கள், ஆனால் நான் ஒரு கருத்து,தகவல் தொகுப்பினை வழங்கி, அதில் என்னுடைய "point of view" கருத்துக்களை "I will just guide the reader to infer from the article ,thats all"

இப்போ மீண்டும் படிச்சு பாருங்க, என்ன நடந்தது, எது தீமை, என்ன நடக்க வாய்ப்புள்ளது, எங்கே தவறாக பிடி போராட்டம் சென்றது என சொல்லி , இதனால் என்ன பின்னடைவு என்பதையும் சொல்லி ,நம்ம நாட்டின் நிலையையும் சொல்லியுள்ளேன்,

அமுதவன் சார், குறிப்பிட்டு சொல்லிவிட்டார், உங்கள் கண்ணுக்கு புலப்ப்படவில்லை. நந்தவனம் கூட புரிந்துக்கொண்டுள்ளார், ஆனால் அவரைப்பிடிச்சு இழுக்கிறிங்க :-))

மேலும் முக்கியமான ஒன்று உங்களை போல அப்படியே அலேக்காக ஒரு "உண்மையை திசை திருப்பி' எழுதுவதில்லை.

அதனால் தான் உங்கள் கட்டுரையில் உணர்ச்சிகரமாக வாதம் இருக்கும் ஆனால் அடிப்படையான உண்மை தவறி நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது என்றேன்.

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி..

சமீபத்திய உதாரணம்,

பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் பஞ்சுக்கு தட்டுப்பாடாகி நூற்பாலைகள் மூடிக்கிடக்கு என எழுதினீர்கள்,

ஏற்றுமதிக்கு பிறகும் 32 லட்சம் பேல் பஞ்சு சும்மா கையிருப்பு இருக்கு, நூற்பாலைகள் முடங்க பஞ்சுத்தட்டுப்பாடு காரணம் அல்ல , நேரடியாக நூல்களை பின்னலாடை மற்றும் துணி ஆலைகள் இறக்குமதி செய்வது என்பதை குறிப்பிட்டேன், ஏன் எனில் உங்களைப்போன்ற பின்னலாடை ஏற்றுமதி ரகத்துக்கு நீண்ட இழை பஞ்சு ,அல்லது ஃபைன் கிரேட் நூல் தேவை, அவ்வகை பஞ்சு இந்தியாவில் உற்பத்தி குறைவு ,பல காலமாக அவ்வகை பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டு நூலாக்கப்பட்டது,ஆனால் சமீபகாலமாக நூலாகவே இறக்குமதி ஆகிறது,அதனை செய்பவர்கள் உங்களைப்போன்ற அதிபர்களே, அதனால் தான் ஏற்றுமதி அதிகம் நடக்கும் பகுதிகளில் மட்டும் நூற்பாலைகள் மூடப்படுகின்றன, இதனை எல்லாம் உங்கள் பதிவில் குறிப்பிட்டேன் ஆனால் நீங்கள் தான் வழக்கம் போல வழுக்கினீர்கள்.

இந்தியாவில் உள்ள மொத்த துணி உற்பத்தி ஏற்றுமதி உட்பட எல்லாம் போக உபரியாக குட்டை,மித இழை பஞ்சும்,நூலும் இருக்கிறது. அதனால் தான் பருத்தி விவசாயிகளிடம் குறைவான விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என சொல்கிறீர்கள் அப்படி தடை விதிக்கப்பட்டால் , விவசாயிகள் மட்டுமல்ல பல நூற்பாலைகளும் பாதிக்கப்படும், இதான் உண்மை நிலை,ஆனால் உபரி இருப்பதே தெரியாமல் ஏற்றுமதியால் தட்டுப்பாடு என "புனைவாக" எழுதுகிறீர்கள் :-))

# // ஐந்து பதிவாக இதனைப் பற்றி முழுமையாக எழுதிய எந்த பதிவுக்கும் உங்கள் விமர்சனம் இல்லை என்ற போதே நினைத்தேன்?????????????????????????

பேரவைத்தலைவர் ரொம்ப உசாரான பார்ட்டீடீடீடீடீ தான் என்று.//

இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு அவ்வ்!

அய்யா நானே கடந்த சில மாதங்களாக பதிவே போடவில்லையே ஏன்னு என்னிக்காச்சும் நினைச்சு பார்த்தீங்களா, எனக்கு இணையம் கனெக்ட் ஆகவே மாட்டேன்னு அடம்பிடிக்குது,சிக்னல் கிடைச்சு ,நான் பதிவுகளை படிச்சு ,எப்போ பின்னூட்டம் போட்டுனு ,ஒரே இம்சையா போச்சு, இதில் எங்கே பதிவு போடனு ஓரங்கட்டி வேடிக்கைப்பார்த்துக்கிட்டு இருக்கேன், பதிவே போடலைனாலும் கொஞ்சம் அடிச்சு பிடிச்சு முயற்சித்து பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன், அப்படி இருந்தும் , உங்க பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவது "நேர விரயமோ" என என்னை நினைக்க வைத்துவிட்டீர்கள், அதனை அப்பொழுதே சொல்லிவிட்டு , சரி இனிமேல் பின்னூட்டமிடவில்லைனு சொல்லி இருந்தேன், அப்படியான காலத்தில் உங்க பதிவுகளை படிக்கவும் இல்லை,எனவே நீங்கள் என்ன எழுதினிங்கனு எனக்கும் தெரியாது.

அது என்ன சாமி ஒரு பதிவில் ஒன்றை கேட்டால்,இன்னொரு பதிவில் பின்னூட்டமிடவில்லையேனு கேட்குறிங்க, அப்படி நானும் கேட்டால் ,நீங்க என்னோட எல்லாப்பதிவிலும் பின்னூட்டமிட்டு இருக்கீங்களா? இல்லையே ஏன் அப்போ நீங்க உஷாரா இருக்கிங்களா?

# //கீழே இருப்பவனுங்க, உள்ளூர் காரனுங்க என்ன பண்ணுவாங்க? விதைன்னு வந்தா விற்கத்தான் செய்வார்கள். அவங்க பொழைப்பை பார்க்கனுமே?//

வால் மார்ட் வந்தால் என்னனு அப்படியே விடலாமே, அப்போ மட்டும் போய் ஏன் வால்மார்ட் அலுவலகத்தினை முற்றுகை இடனும், நேரா போய் அனுமதி கொடுத்த மத்திய அமைச்சரகத்தை முற்றுகை இட வேண்டியது தானே.

விற்கிறவன் விக்கிறான் சரி ,இந்த "போராளி புளிகள்' மோன்சான்டோ ஆரம்பிச்சப்போ பெருசா சத்தம் போட்டாங்க, ஆனால் உள்ளூர் காரன் மூலமாக விக்கும் போது சத்தம் குறைஞ்சு போச்சேனு தான் ஆன் கேட்டுள்ளேன்.

//இது உள் அரசியல் முழுக்க டெல்லியிலேயே முக்கால் வாசி முடிந்து விட்டது. //

அப்போ டெல்லியில் முடிஞ்சுப்போச்சுனா அப்படியே விடுறாங்களா கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் கூட எல்லாம் டெல்லியிலேயே முடிஞ்சுப்போச்சு எதுக்கு கூடங்குளத்துல முற்றுகை போராட்டம்?

அப்போ மட்டும் எங்கே "பிரச்சினை" இருக்கோ எங்கே திட்டம் நடக்குதோ அங்கே போராட வேண்டியது அவ்வ்!

டாஸ்மாக்கை மூடுனு போராடுற உங்க டொக்டர் ராமதாசர் ஏன் டாஸ்மாக் தலைமை அலுவலத்துக்கு போய் பூட்டு போடுவேன்னு சொல்லாமல் டாஸ்மாக் கடைக்கு போய் பூட்டு போடுவேனு நிக்கிறார், கடைனு திறந்தால் வேலை செய்றவன் விக்க வேண்டியது அவன் " பணி - கடமை" செய்றான்னு மூடிக்கிட்டு போகலாம்ல :-))

தி.தமிழ் இளங்கோ said...


// நம்ம போராளீகள் எப்படி விட்டிருப்பாங்கனு நினைக்கலாம் //

// வழக்கம் போல நம்ம போராளிகள் ஊடகங்களில் மட்டும் "புரட்சி வெடி" வெடித்துக்கொண்டிருப்பார்கள் !!! //

// வெள்ளைக்காரன் தனியா வந்து நம்மை ஆண்டு விடவில்லை அப்பொழுது அவனுக்கு துணை நின்றதே நம்மாட்கள் தான் அதே போல தான் மோண்சான்டோவும் தனியா எதுவும் செய்துவிடவில்லை, காசு கிடைக்குதேனு நம்ம ஆட்களும் கூட சேர்ந்து தான் எல்லாம் செய்றாங்க, ஆனால் போராளிகள் பொங்குவதெல்லாம் வெளிநாட்டுக்காரன் செய்துப்புட்டான்னு //

பி டி பருத்திபால் நிறைய சாப்பிட்டுவிட்டு நன்றாகவே கிண்டலடிக்கிறீர்கள்.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

தொழிலதிபதிவர் உங்களைத்தான் துணைக்கு கூப்பிட்டுக்கிட்டு இருக்கார், பதிவில் "நாட்டாமை தீர்ப்பு" என ஒன்றே இல்லைனு வருத்தப்படுகிறார், எனவே எனவே ஏன் இல்லைனு கேட்டு ஒரு கச்சேரிய வையுங்க அவ்வ்!

அமெரிக்க கதையும் சொல்லி இருக்கீங்க,ஆனால் அமெரிக்கா விட கம்மியா பூச்சி மருந்து பயன்ப்படுத்தும் ,பாரம்பரியமாக ஆர்கானிக்கா விவசாயம் செய்த நாட்டில் அதெல்லாம் நடக்கவே நடக்காதுனும் சொல்லிக்கிட்டு இருக்கீங்க, ஏற்றுமதிக்கு என முறையான சான்றுடன் ஆர்கானிக்கில் பயிரிடுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு விட்டேன், அந்த தர நிர்ணயம் எல்லாம் ,வாங்குற நாட்டின் தரமே, அது சாத்தியமெனில் இங்கேயும் சாத்தியமே. விலையை மட்டும் கொஞ்சம் அதிகப்படுத்தினால் போதும் நடக்கும்.

# //உரத்தைவிட ஆபத்து பூச்சிக்கொல்லிகள்தான். புற்றுநோய் உண்டாக்கும் மரபணு மாற்றம் தரும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இந்தியாவில் விவசாயம் பண்ண முடியுமா?! //

இப்பொழுது நாம் பயன்ப்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவு உலக அளவில் குறைவானதே, இந்தளவும் பயன்ப்படுத்தாமல் தான் 1976 வரையில் விவசாயம் செய்தோம், 80- 90 களில் கூட குறைவான பூச்சி மருந்தே பயன்ப்படுத்தப்பட்டு வந்தது. பூச்சி மருந்து நிறுவனங்கள் தான் தொடர் விளம்பரம் மூலம் எல்லாரையும் வாங்க வச்சது.

கண்ட்ரோல்ட் பீல்டு டெஸ்ட்- அன் கண்ட்ரோல்டு ஃபீல்டு டெஸ்ட் முடிவு பெருசா பூச்சிக்கொல்லியால் பயனில்லைனு சொல்லிடுச்சுனு முன்னரே சொன்னேன் கவனிக்கலை.

உண்மையில் வயலில் பூச்சியினை பார்த்ததும் ஒரு பயத்தில் தான் பூச்சி மருந்து அடிக்கிறார்கள் , வயலில் பூச்சிகளின் எண்ணிக்கை "திரெஷ் ஹோல்ட்" லெவல் என ஒன்று இருக்கு ,அதற்கு மேல் போனால் தான் பூச்சியினால் உற்பத்திக்கு பாதிப்பு இருக்கு எனலாம்,ஆனால் ஒரு பூச்சி பார்த்தாலே மருந்தடினு கிளப்பிவிடுறது பூச்சி மருந்து விக்கிறவங்க தான் :-))

நம் நாட்டில் பூச்சி மருந்து பெர் கேப்பிட்டா கன்சம்ஷன் கம்மி,(அமெரிக்காவில் கூட அதிகம் தான்) ஆனால் மொத்த நுகர்வு அதிகம், காரணம் அதிக பரப்பளவில் விவசாயம் நடக்குது, அந்த மொத்த அளவை வைத்து நாட்டில் எல்லாம் பூச்சி மருந்து அதிகமா அடிக்கிறாங்கனு " புரளிய" சர்வதேச ஆய்வாளர்கள் தான் கிளப்பிடுறது.

எனவே அந்த 0.45 கி.கி பூச்சிக்கொல்லி இல்லாமல் "இன்டெகரெட்டட் பெஸ்ட் மேனேஜ்மெண்ட் "பற்றி விழிப்புணர்வு ஊட்டி , இயற்கையாகவே நல்ல உற்பத்தியினை எடுக்க முடியும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் பூச்சி மருந்தில் 40% பருத்தியில் தான் பயன்ப்படுத்தப்படுகிறது, பிடி பருத்தி வந்த பின்னும் இதான் நிலை எனில் பிடி யால் பூச்சி மருந்து பயன்பாடு குறைந்தது என்பதே மாயை தானே!

நம்ம நாட்டில தரக்கட்டுப்பாடு இல்லாமல் எப்படினு நினைக்கலாம், தரக்கட்டுப்பாடு இல்லைனாலும் ,இப்போ இருப்பதை விட பூச்சி மருந்து உபயோகம் குறையும், அந்த அளவே அமெரிக்காவில் ஆர்கானிக் என சொல்லி விற்கும் தரக்கட்டுப்பாட்டுக்கு தானா வந்திடும்.
----------------------------
தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //நிலம் கொடுத்தால் விவசாயம் செய்ய பலர் தயார்தான். ஓசியில் நிலம் கிடைத்தால் யார் வேண்டாம் என்பார்கள்? ஆனால் சிறுநில விவசாய்கள் நகருக்கு ஏன் கூலி வேலைக்கு ஓடுகிறார்கள்?

சிறு அளவில் செய்யப்படும் விவசாயத்தை லாபமாக மாற்றுவது கடினம், //

சீனாவை சொல்லுறிங்களா,இல்லை பொதுவா சொல்லுறிங்களானு தெரியலை, சீனாவில் நகர்ப்புற வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஓடுறாங்களாம்.

சீனாவில் விவசாயிக்கு நஷ்டமே வருவதில்லை, என்ன உற்பத்தி ஆனாலும் அரசு , காஸ்ட் ஆஃப் கல்டிவேஷன் கணக்கீட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துவிடும் ,என்ன லாபம் குறைவாக இருக்கலாம்.

அங்கே உரம் ,பூச்சி மருந்து எல்லாவற்றின் விலையும் அரசு தான் தீர்மானிக்கும், எல்லாமே விலை ரொம்ப கம்மி.

இந்தியாவில் அரசு கொள்முதல் சரியாக இல்லை, மேலும் விலை நிர்ணயம் உற்பத்தி செலவுக்கு ஏற்ப இல்லை. எனவே இந்தியாவில் தான் சிறு விவசாயிகள் பாடு திண்டாட்டம்.

வளர்ந்த நாடுகளிலேயே விவசாயத்துக்கு மாநியம் உண்டே? அப்போ இந்தியாவில் மாநியம் கொடுத்தா என்ன?

அரசு நடத்தும் ஐ.ஐ.டி. மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் ஆகியவை நடத்த ஆகும் ஆபரேஷனல் காஸ்ட் படி கணக்கு போட்டு மாணவர்களிடம் ஃபீஸ் கேட்டால் லட்சக்கணக்கில் போகும், ஆனால் குறைவாக கட்டணம் வாங்கிக்கொண்டு கல்வி தருவது மாணவர்களுக்கு அரசு அளிக்கும் மாநியம் ஆகும், ஆனால் அப்படி படிச்சிட்டு எல்லாம் வெளிநாட்டுக்கு போவது தனிக்கதை,அது அரசின் கடமை என்றால் சாப்பிட சோறு கிடைக்க விவசாயத்துக்கு மாநியம் கொடுத்தால் என்ன? அப்போ மட்டும் உங்க மூளை விவசாய பொருளாதாரத்தில் சாத்தியமானு லாஜிக்கா கேள்வி கேட்பதேன்?

ஒன்னும் வேண்டாம் , விவசாய விளைப்பொருட்களுக்கு சந்தை விலை நிர்ணயம் செய்தாலே போதும் , இல்லைனா எங்கே விலை கிடைக்குதோ அங்கே விற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கட்டும், ஏற்றுமதிக்கு தடையில்லா நிலை வரட்டும், அரிசிய ஒரு வியாபாரி மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு போய் விக்கலாம், ஏற்றுமதி செய்யலாம்,விவசாயி செய்ய முடியாது அது ஏன்?

விவசாயிகளுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி வரவில்லை, அவங்க சொந்தப்பயன்ப்பாட்டுக்கு மட்டும் அரிசி உற்பத்தி செய்துவிட்டு ,மற்ற நிலத்தினை தரிசா போட்டுவிட்டால் போதும் நாடே நாறிடும், உடனே இறக்குமதி செய்வார்கள்,ஆனால் தொடர்ந்து இறக்குமதி செய்ய அன்னிய செலவாணி இருக்காது அப்புறம் தெரியும் கதி!

எப்படி தொழிற்சாலைகளில் கதவடைப்பு செய்றாங்களோ அதே போல நாடு முழுக்க ஒரு ஆண்டுக்கு விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு விட்டு, கிடைக்கிற கூலி வேலை செய்வோம்னு விவசாயிகள் கிளம்பிட்டால் போதும் , எல்லா பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வந்திடும், ஆனால் விவசாயிகளிடையே அந்த ஒற்றுமை உருவாவது கடினம், அதனால் தான் இன்னும் எல்லாம் ஏறி மேய்க்கிறாங்க.

? said...
This comment has been removed by the author.
Anonymous said...

வவ்வால், முந்தைய பின்னூட்டம் மரபணு திருத்தம் மற்றும் மாற்றம் என்பதெல்லாம் தமிழில் தவறென்று (or) தவறாக எழுதிவிட்டீர்களென்று சொல்வதற்காக - எழுதப்படவில்லை.

மரபணு திருத்தம் என்பதே சரி, அத்தொழிநுட்பத்தினை புரிந்து கொண்டால். அதற்காக மட்டுமே அந்த இனணப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை, இணைப்பு [தொடுப்பு :)] தொழில்நுட்பத்தினை புரிந்து கொள்ள மட்டுமே. பள்ளபட்டியிலும் பாகற்காயும் கண்டிகையிலும் கத்திரிக்காயும் பயிடுவதற்கு ஆதரவாகவும், அது தொடர்பான குழாயடிச் சண்டையில் சட்டையினை கிழித்து கொள்ளவும் அல்ல.

உலகத்தை தமிழினை கொண்டு பெ(பு)ரட்டுற தமிழ் பதிவர்களும், இப்பூவுலகின் ஒரே ஒரு நண்பர்களும் அதுதம் ஆதரவாளர்களும் ஒரு தொழிநுட்பத்தினையும் ஒரு தொடபாக பேசவரும் நந்தவனத்தான் போன்றவர்களையும், எப்படி ஓட ஓட விரட்டுகிறார்களென்று பார்த்து சிரித்தாலும், நீங்கள் தொழில்நுட்டத்தினை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையின் விளைவாகவே அந்த பதில் பின்னூட்டம்.

Anonymous said...

பள்ளபட்டியில் பாகற்காயும் கண்டிகையில் கத்திரிக்காயும் -- எழுத்து திருத்தம் (உ.ம்.)

வவ்வால் said...

தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

நீண்ட பின்னூட்டங்களாக போட்டுக்கொண்டிருதேனா, இடையில் உங்கள் பின்னூட்டம் பாய்ந்ததை கவனிக்க தவறிட்டேன்,

நான் என்ன சொல்ல வருகிறேன் ,எப்படி சொல்லி இருக்கிறேன்னு உங்களுக்கு புரிஞ்சு போச்சு போல :-))

இந்த புரட்சிப்போராளிகள் மீடியாவில மட்டும் டுமீல் விட்டுக்கிட்டு இருக்காங்களே ஒழிய ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யலை என்பதையே கலாய்த்திருக்கேன் ஆனால் சிலருக்கு அது புரியலை அவ்வ்!

ஹி...ஹி பிடி பருத்திப்பால் ,ஆவின் பால்,அமலாபால்னு எதாலயும் நம்மள அசைச்சுக்க முடியாது ஸ்டீல் பாடி :-))
-----------------------
நந்தவனம் ,

வாரும்,நன்றி!

பூச்சிக்கொல்லி இல்லாமல் விவசாயம் சாத்தியமே ஆனால் வணிக காரணங்களுக்காக அவ்வாறு நடக்க விட மாட்டார்கள்,பூச்சிக்கொல்லி வியாபாரம்ம் என்பது பில்லியன் டாலர்கள் சமாச்சாரம், எனவே மருந்தடிக்கலைனா சாகுபடி தேறாது என பயமுறுத்தியே வாங்க வைத்துவிடுவார்கள்.

இந்திய விவசாயிகள் பெரும்பாலோனோர் கல்வியறிவு பெறாதவர்கள் என்பதால் எளிதில் நம்பிவிடுவார்கள்.

நானே பார்த்துள்ளேன் , ஒரு பூச்சி மருந்து அடிச்சு பூச்சி கட்டுப்படியாகவில்லை என்றால் இன்னொரு பூச்சி மருந்து பேரு சொல்லி அடிக்க சொல்வாங்க,ஆனால் ரெண்டுக்கும் பிரான்ட் நேம் தான் வேறாக இருக்கும் "ஆக்டிவ் இன்கிரடியன்ட்" ஒன்றாகவே இருக்கும்,மக்களும் அந்த கம்பெனி சரி இல்லை போலனு இந்த கம்பெனி மருந்த வாங்கியடிப்பாங்க அவ்வ்!

கிராமப்பகுதியில் எல்லாம் "பண்ணை சர்வீஸ்" என்றபெயரில் இயங்கும் உரம்,பூச்சிமருந்து கடைகள் தான் விவசாய ஆலோசனை மையம் ,கடைக்காரன் சொல்றது தான் "விவசாய அறிவியல் ஆலோசனை" அவ்வ்!

இப்படித்தான் நம் நாட்டில் பூச்சி மருந்து நுகர்வு அதிகரிக்குது, தெளிவாக எடுத்து சொல்ல ஆள் இல்லை, மேலும் நம்ம விவசாயிகளும் எல்லாத்துக்கும் எளிய தீர்வு எதிர்ப்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.

முன்னர் எல்லாம் வேப்பம் சோப்பு எனப்படும் "காதி சோப்பினை" தண்ணியில் கரைச்சு ,மண்ணெண்ணை கலந்து அடிச்சே பூச்சிய கட்டுப்படுத்துறத பார்த்திருக்கேன், பலப்பூச்சிகள் மண்ணெண்ணை பட்டாலே சுருண்டு விழுந்து விடும் என்பதே உண்மை, அஸ்வினி எனப்படும் ஏபிட்ஸ்க்கு வெறும் அடுப்பு சாம்பலை தூவியே ஓட விடுவார்கள், அது போன்ற இன்டிஜீனஸ் மெத்தட் எல்லாம் காணாமல் போயிடுச்சு.

# கூர்மையா ஒன்னும் சொல்லலையேனு "தொழிலதிபதிவர்"வருத்தப்படுறார்ல, கத்தி, கடப்பாறைனு எதாவது கூர்மையா சொல்லிட்டு போங்க :-))
------------------------------------------------

அனானி,

வாங்க,நன்றி!

மறுபடியும் மரபணு திருத்தம் என்பதே சரினு சொல்லிட்டு வரிங்க, சரி தான் அவ்வ்!

எனக்கு இந்த மரபணு மாற்றம் என்றால் என்னனு புரியலைனு நீங்களா நினைச்சுக்கிட்டிங்களோ, அது என்ன மாதிரினு ஓரளவுக்கு புரிந்துக்கொண்டுள்ளேன் என நினைக்கிறேன்.

அப்புறம் நீங்க மரபணு மாற்றப்பட்ட விதைகள் தேவைனு சொல்லுறிங்களா, வேண்டாம்னு சொல்லுறிங்களானு சொல்லவேயில்லை, நீங்க கொடுத்த சுட்டியில் இதெல்லாம் தேவைனு சொல்வதாக உள்ளது.

என்னைப்பொறுத்த வரையில் இதெல்லாம் வணிக தேவையாக திணிக்கப்படுகிறது, இவை இல்லாமலும் உற்பத்தி செய்ய முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட பயிரில் ஒரே வகையினை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்ய துவங்கினால் ஏனைய வகைகள் வழக்கொழிந்து அழிந்துவிடும் "பயோ டைவர்சிட்டி" பாதிக்கப்படும். இயற்கை சமநிலை சீர் குலைவு ஏற்படும்,மேலும் பதிவில் சொல்லியபடி ஒரு குறிப்பிட்ட ஆர்டரில் உள்ள பூச்சியினங்கள் ,நன்மை பயக்கும் பூச்சிகள் உட்பட அழியலாம்.

ஏற்கனவே நெல்லில் இப்படி செய்து "கலப்பினமல்லாத" தூய சுதேச நெல் வகைகளை வழக்கொழிய வைத்தார்கள், இதனால் நமது பாரம்பரிய தாவரங்களின் மரபணு வளம் தான் இல்லாமல் போகும் என்பதால் ஒரே அடியாக "லார்ஜ் ஸ்கேல்' பிடி பருத்தி பயிரிடுதல் என்பதை தவிர்க்கவே செய்யனும் என்பது எனது கருத்து!

ஜோதிஜி said...

இவர்களுக்கும் சுயநலம் முக்கியமாகிவிட்டால் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்! நம்நாட்டில் பொறுப்பின்மையும் சுயநலமும்தான் பிரச்சனை.

சுருங்கச் சொல்லி பெரிய அர்த்தம் எடுத்துக் கொள்ளும் கலையை நம்ம பேரவைத்தலைவருக்கு கொஞசம் கற்றுக் கொடுங்களேன்.

பாதிப்பேரு உள்ளுருக்குள் இருந்து கொண்டு நீ பாட்டுக்கு கன்னாபின்னாவென்று எழுதிக்கிட்டு இருக்கே. கொஞ்சம் ஜாக்ரதையா இருடா ராஜா? என்று கடல் கடந்து இருப்பவர்கள் கூட பல முறை மிரட்டிகூட பார்த்த போதிலும் கொஞ்சமாவது விபரங்களை எழுதாமல் இருக்கக்கூடாது என்பதற்காக திருப்பூர் பற்றி எழுதுவதைத் தான் நம்ம அசின் பார்ட்டீ பிசின் மாதிரி இன்னமும் தொங்கிட்டுருக்காரு.

அவருக்கு அவரை வெளிக்காட்டிக் கொள்ள ஆசையில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனா மூஞ்சி மொகறை எல்லாத்தையும் காட்டிக்கிட்டே இது போன்ற விசயங்களை எழுதுறவனுக்குத்தான் அதன் பாதிப்பு தெரியும்.

அசின் பார்ட்டீயை முதலில் எதற்கெடுத்தாலும் வீக்கி பீடியா தள ஆதாரத்தை எடுத்து போடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு எத்தனையோ பேர்கள் எழுதியிருப்பதை வைத்து அவர் கருத்தை எழுதச் சொல்லுங்க.

குறை சொல்வது எழுதுபவர்களை வளர்க்க உதவும் என்பதைப் போல. மற்றவர்களை அவர்கள் எழுதிய நல்ல பதிவுகளை நாம் ஊக்குவிப்பதன்மூலம் இன்னும் பலருக்கும் அடையாளம் காட்ட உதவிகரமாக இருப்பதும் இத்தனை விசயங்கள் தமிழிலில் எழுதக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதையும் காட்ட உதவும்.

உணர்ந்தால் உத்தமம்.

ஜோதிஜி said...

டேப் லெட் பிசி (இதற்கு தமிழிலில் எப்படி சொல்ல வேண்டும்) மூலம் இடைவிடாது தமிழ் சேவை செய்யும் என் மானமிகு பேரவைத் தலைவரை வாழ்த்த வயசில்லாது போனாலும் வணங்கி விடைபெறுகின்றேன்.

வவ்வால் said...

தொழிலதிபதிவரே,

வாங்கோ,நன்றி!

யாருக்கோ இங்கே வந்து மனுப்போட்டுக்கிட்டு இருக்கீங்க,ஆனாலும் நாமத்தான் "வாலண்டியர் வவ்வாலாச்சே", எனவே ஆஜர் ஆகிக்கிறேன் :-))

//சுருங்கச் சொல்லி பெரிய அர்த்தம் எடுத்துக் கொள்ளும் கலையை நம்ம பேரவைத்தலைவருக்கு கொஞசம் கற்றுக் கொடுங்களேன்.//

நல்லா சொன்னீங்க , ஆனால் அதை நந்தவனத்துக்கிட்டே சொல்லுற மாதிரி இருக்கு,அதான் செம்ம காமெடியா போயிடுச்சு அவ்வ்!

அவரே பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுறவர் ,பட் மி லைக் தட், நீங்க என்னடானா சுருங்க சொல்லி பெரிய அர்த்தமா சொல்லுறார்னு புளகாங்கிதம் அடையிறிங்க அவ்வ்!

இதுல எனக்கு வேற சொல்லித்தர சொல்லுறிங்க, ஹி...ஹி கிளிஞ்சது கிர்ஸ்ணகிரி தான் :-))

ஒருவரை உயர்த்திப்பிடிக்க அவர் என்ன செய்தாலும் ஆஹா அபாரம் என்பதும் ஒருவரை மட்டம் தட்ட என்ன செய்தாலும் அடச்சே என்னும் கலையை (அதுவும் மேஜர் சுந்தரராஜன் போல மிடுக்கா சொல்ல)எனக்கும் சொல்லித்தாரது :-))

# //பாதிப்பேரு உள்ளுருக்குள் இருந்து கொண்டு நீ பாட்டுக்கு கன்னாபின்னாவென்று எழுதிக்கிட்டு இருக்கே. கொஞ்சம் ஜாக்ரதையா இருடா ராஜா? என்று கடல் கடந்து இருப்பவர்கள் கூட பல முறை மிரட்டிகூட பார்த்த போதிலும் கொஞ்சமாவது விபரங்களை எழுதாமல் இருக்கக்கூடாது என்பதற்காக திருப்பூர் பற்றி எழுதுவதைத் தான் நம்ம அசின் பார்ட்டீ பிசின் மாதிரி இன்னமும் தொங்கிட்டுருக்காரு.

அவருக்கு அவரை வெளிக்காட்டிக் கொள்ள ஆசையில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனா மூஞ்சி மொகறை எல்லாத்தையும் காட்டிக்கிட்டே இது போன்ற விசயங்களை எழுதுறவனுக்குத்தான் அதன் பாதிப்பு தெரியும்.//

ஓ ..இந்தியாவில் பஞ்சுக்கு தட்டுப்பாடில்லைனு உண்மைய சொன்னால் கொல மிரட்டல் வருமா தெரியாம போச்சே , ஆனாலும் நீங்க எம்மாம் பெரிய "இணைய சேகுவேரா"உங்க எழுத்தால் பாதிக்கப்பட்டு எஸ்கிமோக்கள் கூட புரட்சி ஓங்குகனு சொல்லிக்கிட்டு எப்போ வேண்டுமானாலும் புரட்சி வெடிக்க வைக்க தயாரா இருக்காங்க , ஆனால் இந்த உள்ளூரு கூட்டம் உங்களையே மிரட்டுதே ,நாம் என்ன மாதிரியான சமுகத்தில் வாழ்கிறோம் என நினைக்கையில் அடிவயிறு கலங்குது ,அவசரமா கக்கூஸ் போகணும் போல இருக்கு அவ்வ்!

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //எதற்கெடுத்தாலும் வீக்கி பீடியா தள ஆதாரத்தை எடுத்து போடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு எத்தனையோ பேர்கள் எழுதியிருப்பதை வைத்து அவர் கருத்தை எழுதச் சொல்லுங்க.//

ஆமாங்க நான் விக்கியிலும் ரெபரென்ஸ் பார்க்கிறேன் ,அதில் மட்டுமல்லாமல், இன்னும் பல தளங்களிலும் பார்க்கிறேன் , இந்த ஒருப்பதிவிலேயே நான் கொடுத்துள்ள தரவுகளின் எண்ணிக்கை இது, இன்னும் குறிப்பிடாமல் விட்ட தளங்கள் பல இருக்கு

www.cottonyarnmarket.com

http://www.thehindu.com/news/national/criminal-prosecution-of-mahyco-for-biopiracy-revived/article5244950.ece

http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/cotton-research-body-to-restore-suvin-cultivation/article5135206.ece

http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/breeding_aims/147.pest_resistant_crops.html

http://insected.arizona.edu/ladyinfo.htm

http://www.monsanto.com/newsviews/Pages/india-pink-bollworm.aspx

http://www.simamills.com/news.asp?id=3639

தரவுகளே கண்ணில் காட்டாமல் தானே ரூம்ப்போட்டு யோசித்து சொந்தமாக எழுதியது போல காட்டிக்கொள்ளும் "சுத்த சுயம்பிரகாசஜோதி"களும் இணையத்தில் நிறைய இருக்காங்க ,அவங்களை என்னிக்காவது பார்த்தால் விசாரிச்சு பாருங்க :-))

# இணையத்தில் எத்தனையோ பேர்கள் எழுதி இருப்பதை வைத்து தானே நான் இப்பவும் எழுதிட்டிருக்கேன், இதெல்லாம் கூகிளா டைப்படிச்சு எனக்கு அனுப்புதுனு நினைச்சுட்டிங்களா அவ்வ்!

# //குறை சொல்வது எழுதுபவர்களை வளர்க்க உதவும் என்பதைப் போல. மற்றவர்களை அவர்கள் எழுதிய நல்ல பதிவுகளை நாம் ஊக்குவிப்பதன்மூலம் இன்னும் பலருக்கும் அடையாளம் காட்ட உதவிகரமாக இருப்பதும் இத்தனை விசயங்கள் தமிழிலில் எழுதக்கூடியவர்களும் இருக்கின்றார்கள் என்பதையும் காட்ட உதவும்.//
முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவும் நான் செய்வது "கருத்துரையாடல்" அது குறையல்ல,, பிழையை சுட்டிக்காட்டி மேற்கொண்டு சரியான தகவலும் நானே கொடுத்து பேசுவேன்,சும்மா அது தப்புனு சொல்லிட்டு போயிடுறது இல்லை.

அடுத்தவனுக்கு எதுக்கு பின்னூட்டம் போடனும்,இவனுக்கு பின்னூட்டம் போட்டால் நமக்கு பின்னூட்டம் போடுவானா, தமிழ்மணத்தில் ஓட்டுப்போடுவானா என கணக்குலாம் பார்க்காமல் நானாக தேடிப்படித்து கருத்து சொல்லும் என்னை எல்லாம் உங்களால் புரிந்துக்கொள்ள முடியாது, உங்களுக்கு தேவை "அருமையான பகிர்வு ,பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி "என்ற பாராட்டு மட்டுமே,

இனிமே உங்களுக்கும் "நிறைய" பாராட்டு" பின்னூட்டங்கள் போடுறேன் எஞ்சாய் :-))

எது உண்மையான விமர்சனம் என "உணர்ந்தால் உத்தமம்"

# டேப்லட் பிசி = குளிகை கணினி :-))

நேரடி இலத்தின் வேர்ச்சொல்லில் இருந்து நாமே உருவாக்கிக்கொள்வதானால், அட்டைக்கணினி, தட்டைக்கணினி, தொடுதட்டினு கூட சொல்லலாம் :-))

கணினி தோன்றி இணையம் தோன்றா காலத்தே முன் தோன்றிய உங்களுக்கே வாழ்த்தவயசில்லையா... அப்போ நானெல்லாம் இன்னும் பொறக்கவேயில்லைனு சொல்லலாம்,அவ்வ்!

குட்டிபிசாசு said...

வவ்வால்,

…படித்தவுடனே பின்னூட்டம் போடமுடியவில்லை. இப்ப போடலாமென்று பார்த்தால், நீங்களும் நந்துவும் நீண்டதொரு உரையாடல் நடத்தி இருக்கிறீர்கள். மரபணுமாற்ற விளைவைப் பற்றி ஏற்கனவே சார்வாகன் பதிவிட்டிருந்தார். http://aatralarasau.blogspot.com/2012/08/blog-post_18.html

நந்தவனம் கூட ஒரு ஆய்வுக்கட்டுரையை மேற்கோள்காட்டி பிடி காட்டன் இந்தியாவில் லாபம் தருவதாக கூறியிருந்தார். ஆனால் அந்த கட்டுரையை மறுத்துக்கூறிய வேறொரு கட்டுரையையும் அங்கு கொடுத்திருந்தேன்.

நீங்கள் சொன்னது தான். ஒன்றை நல்லது என்று அறிமுகம் செய்வார்கள். பிறகு அதையே தீங்கானது என்பார்கள். ஆனால் அப்போது நம்மால் அதைவிட்டு வெளிவர இயலாது. பூச்சிக்கொல்லி, பிளாஸ்ட்டிக் எல்லாம் அப்படியே. அதனால் எதையும் அவசரமாக ஏற்ற்க்கொள்வதைவிட. சரிவர தெளிந்தபின் படிப்படியாக ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். சீனா செய்கிறது, அமெரிக்கா செய்கிறது என அவசர்ப்படத்தேவையில்லை.

குட்டிபிசாசு said...

ஜோதிஜியோட என்ன நடக்குது?

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

சார்வாகன் பதிவை படிக்கிறேன்.

எந்த அறிவியல் மாற்றமும் தீமைகளும் கொண்டதே, ஆனால் நம்ம போல வளரும் நாடுகள் சிக்கிக்கொண்டால் மீள்வது கடினம், ஆனால் மேலை நாடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் " யு டர்ன்' அடித்துக்கொள்வார்கள்.

நம்ம நந்தவனத்திடம் கூட மேலை நாட்டிலே இன்னும் "GMO" ஏற்றுக்கொள்ளவில்லையேனு சொன்னேன் வெள்ளைக்காரன் செய்வதை நாம ஏன் பின்ப்பற்றனும்னு காமெடி செய்கிறார், இந்த மரபணுவே வெள்ளைக்காரன் செய்த வேலை தானே அதை ஏன் நாம செய்யனும்னு வசதியாக மறந்துவிடுகிறார் :-))

இப்போ பருத்திக்கே வருவோமே நம்ம நாட்டு தேவையை விட 132 லட்சம் பேல் கூடுதலாக உற்பத்தி ஆகுது,அதுல 100 லட்சம் பேல் ஏற்றுமதியாகுது(நூல்& பஞ்சு வடிவில்), அப்படியும் 32 லட்சம் பேல் யாரும் வாங்காம மக்கி போகிறது என்பது தான் நிஜம், இப்படி நாம கூட உற்பத்தி செய்வதால் அடிப்படையாக பருத்தி கொள்முதல் விலையும் குறைவாக இருக்கு, அப்படி இருக்க என்ன எழவுக்கு மெனக்கெட்டு பிடி காட்டன் போடனும்?

நாம ஏன் உபரியாக உற்பத்தி செய்ய பிடி என்ற ரிஸ்க் எடுக்கனும், மேலும் அப்படி உபரியா உற்பத்தி ஆனாலும் ஏற்றுமதி செய்யாதேனு உள்ளூர் முதலாளீகள் (ஜோதிஜி) சொல்லுறாங்க, ஆனால் நீ பிடி போட்டால் தான் உற்பத்தி பெருகும்னு சயிண்டிஸ்ட்(நந்தவனம்) சொல்லுகிறார்கள், அப்போ என்ன இழவுக்கு பிடி வேனும், உற்பத்தி ஆனாலும் ஏற்றுமதி செய்ய தடைய போட்டு குனிய வச்சு குத்தப்போறாங்க, அதுக்கு பிடி இல்லாமலே உற்பத்தி செய்தாப்போதுமே அவ்வ்!

எனவே தேவையே இல்லாம 100% பிடிக்கு ஏன் போகனும், உண்மையில பிடி க்கு எதிராக போராடி இருந்தால் இந்த 10 ஆண்டுகளில் ஒரே நிறுவனத்தின் விதைகள் எப்படி 94.75 % இந்தியாவில் பரவியிருக்க முடியும்,எல்லாம் மீடியாவில் புரட்சி வெடி வெடித்த வெண்ணைகள்னு நான் சொல்கிறேன் தட்ஸ் ஆல்!

//ஜோதிஜியோட என்ன நடக்குது?//

# ஜோதிக்கு ஆஹா சூப்பராக கலக்கிட்டிங்கனு நான் பின்னூட்டம் போடலனு வருத்தம் போல , இந்தியாவில் பஞ்சுக்கு தட்டுப்பாடு ,ஏற்றுமதிக்கு தடை விதிக்கனும்னு அவர் பதிவு போட்டிருந்தார், 32 லட்சம் பேல் பஞ்சு வாங்க ஆள் இல்லாம கிடக்கேனு புள்ளி விவரம் கொடுத்தேன் அந்த கடுப்பு :-))

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

எதுக்கு இந்த பி.எஸ் வீரப்பா சிப்பு?

நீர் பக்கம் பக்கமா பின்னூட்டம் போட்ட லட்சணம் இப்போ தானே தெரியுது, பதிவையே படிக்காம பினாத்திட்டு இருந்தீர் போல அவ்வ்!

நான் 2012 இல் இந்தியாவில் 94.75% பருத்தி பயிரிடும் பரப்பு, அதாவது 11.2 மில்லியன் ஹெக்டேர் ,பிடி பருத்தி பயிரிடப்படுகிறது என பதிவில் தெளிவாக கொடுத்திருக்கேன் ,கொஞ்சம் மேல போய் பாரும்.

ஆனால் நீர் எனக்கே திரும்ப வந்த என்ன சொல்லி இருக்கீர் எனில்,

//China with 6.9 million acres, and South Africa with 1.0 million acres in 2003. Together,these six countries grew 99 percent of the global GM crop area last year. Australia, Mexico, Roma nia, Bulgaria, Spain, Germany, Uruguay, Indonesia, the Philippines, India, Columbia, and Honduras also planted significant acreage in GM crops in 2003.

http://www.pewtrusts.org/uploadedFiles/wwwpewtrustsorg/Fact_Sheets/Food_and_Biotechnology/PIFB_Genetically_Modified_Crops_Factsheet0804.pdf

http://www.gmo-compass.org/eng/agri_biotechnology/gmo_planting/343.genetically_modified_cotton_global_area_under_cultivation.html இந்த லிங்குல போய் எந்த நாட்டில் மமா பருத்தி அதிகம் விளையுது என பாரும்- சீனாவிலும் அமெரிக்காவிலும்தான் இந்தியாவை விட அதிகம். //

2003 இல் வெளியான டேட்டாவை காட்டி சீனா இந்தியாவை விட அதிக பிடி பருத்தி போட்டிருக்கு என சொல்லிக்கிட்டு இருக்கீர் அவ்வ்.

11.2 மில்லியன் ஹெக்டேர் பெருசா, 6.9 மில்லியன் ஹெக்டேர் பெருசா, சரி அதான் 2003னு சொல்லி தப்பிக்கலாம் என்றால், நான் 2012 புள்ளி விவரம் கொடுத்த பின்னும் என்ன கருமத்துக்கு 2003 ஐ தூக்கிட்டு வந்து போட்டு அந்த சிரிப்பு சிரிச்சீர் :-))

சரி உமக்கு ஃபேவரிட்டான அமெரிக்க தளத்தில் பார்ப்போமா,

உலகத்திலேயே அதிக பரப்பளவில் பருத்தி பயிரிடும் நாடு இந்தியானு தெரியும்,

http://www.fas.usda.gov/psdonline/psdreport.aspx?hidReportRetrievalName=BVS&hidReportRetrievalID=958&hidReportRetrievalTemplateID=1

எப்படி பார்த்தாலும் இந்திய பரப்பளவை விட அமெரிக்காவும், சீனாவும் கம்மியாத்தான் இருக்கு அதுவும் 2012 இல்.

இதில எங்கே இருந்து இந்தியாவிட அதிக பரப்பில் அமெரிக்கா,சீனா எல்லாம் பிடி பருத்தி பயிரிட்டிட போறாங்க.

அமெரிக்கா,பிரேசில்,அர்ஜென்டினா ஆக்கிய நாடுகளில் பல ம.மா பயிர்கள் பயிரிட்டு இந்தியாவுக்கு முன்னர் இருக்கு,ஆனால் இந்தியா பருத்தியில மட்டும் மிக அதிகமா பயிரிட்டு முன்னணில இருக்கு, சீனா ரொம்ப பின்னாடி இருக்கு, இது 2011 நிலவரம்ம், காண்க,

http://www.isaaa.org/resources/publications/briefs/43/executivesummary/default.asp

எனவே நீர் உட்டாலக்கடியா சீனா எல்லாம் இந்தியாவுக்கு முன்னர் இருக்குனு 2003 விவரம் காட்டும் ரகசியம் என்ன, உமக்கு 2003 க்கு அப்புறம் உலகம் விடியவே இல்லையா ?

எப்படி பார்த்தாலும் 2012 நிலவரப்படி இந்தியாவே உலகின் மிகப்பெரிய பிடி பருத்தி விவசாய நாடு.

அது தான் தேவை இல்லை,பயோ டைவர்சிட்டி பாதிக்கும்னு சொல்லி இருக்கேன்.

# // ஆனால் உங்களை மாதிரி ஆட்களால் விவசாயத்திற்கு அனுமதி இல்லையாம். ஆனால் எல்லா கண்டுபிடிப்புக்கும் - சூரியன் மையம் என்ற போதும் பரிணாமத்தை சொன்ன போதும்- சிலர் சொம்பை தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள். இப்போதும் தூக்குகிறார்கள்... ஆல் இன் தி கேம்//

இந்த ம.மா பயிரை ஆவேசாம எதிர்ப்பதே மேலை நாட்டில் தான் ,உம்மை கேட்டால் அவனுங்க எல்லாம் லூசுனு சொல்வீர், எனவே இன்னும் பரிபூரண ஆதரவு மேலை நாட்டிலே இல்லாதப்போ நாம் ஏன் இத்தனை வேகமா அதனை ஒரே பயிரில் பரப்ப வேண்டும்?

பூச்சி மருந்து போட்டு விவசாயம் செய்யனும்னு சொன்ன மேலை நாடுலாம் இன்னிக்கு ஆர்கானிக்குனு ஏன் மாறினாங்க,1976க்கு முன்னர் பூச்சி மருந்தே அடிக்காம இருந்த இந்தியனுங்களை உம்மை போல மேதாவிகள் ஏளனம் செய்து பூச்சி மருது அடிக்க வச்சிட்டு இன்னிக்கு அவனுங்க மட்டும் ரொம்ப எளிதா ஆர்கானிக்குனு பாதை மாறிட்டாங்க,நாம மாற முடியாம தவிக்கிறோமே ஏன்,ஏன்?

அதே போல சரித்திரம் மீண்டும் பிடி.பருத்தி வகையில் திரும்பினால் உமது பதில் என்ன...என்ன..என்ன?

? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

நாரதர் கலகம் நன்மைக்கே. அறியாத பல இணைப்புகள் தந்தமைக்கு நன்றி.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

வாங்க,நன்றி!

தற்போது எனது தளத்தின் "ஃபான்ட் சைஸ்-14, கொரியர் ஃபான்ட், இதில் படிப்பதில் ஏதேனும் சிரமம் இருக்கிறது என நினைக்கிறேன், வேண்டுமானால் இன்னும் ரெண்டு பாயிண்ட் ஃபான்ட் சைஸ் கூட்டி வைக்கவா?

வயதானால் கண்ப்பார்வை குறைப்பாடுகள் வருவது சகஜமே, எதுக்கும் "வாசன் ஐ கேர்" போய் கண்ணு ரென்டையும் லேசா தொடைச்சு பாலிஷ் போட்டுக்கும், பளிச்சுனு தெரியும்,ஏன் எனில் அந்த தளங்கள் எல்லாம் இந்த பதிவில் இருப்பது கண்ணுக்கு தெரியலையா ,விக்கிய மட்டும் சொல்லுறீர்னு மீண்டும் தனியாக எடுத்துப்போட்டுள்ளேன்,அப்பவும் வந்து இப்பத்தான் முத முறையாக பார்த்தது போல "அறியாத பல இணைப்புகள் தந்ததுக்கு நன்றி"னு சொல்லிக்கிட்டு இருக்கீரே அவ்வ்!

ஒரு வேளை உமது பதிவில் வரும் பின்னூட்டங்கள் எல்லாம் டெம்ப்ளேட்டாக "அறியாத பல தகவல்களை பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றி!" என்றே இருப்பதால் அதன் பின் விளைவோ இது அவ்வ்!

பின்குறிப்பு: ஹி...ஹி அடிக்கடி அந்த தளம் வாசித்தேன், இந்த புத்தகம் வாசித்தேன்னு சொல்லுவீரே அதெல்லாம் மெய்யாலுமே வாசித்துட்டு சொல்வதா,இல்லை சும்மா தலைப்பை மட்டும் படிச்சிட்டு வாசிச்சதா சொல்லிப்பதா, பப்ளிக்கா சொல்ல கூச்சமா இருந்தா ,அப்புறமா மெயில் ஐடி தரேன் அதுலவாச்சும் சொல்லுங்க, கூகிளாண்டவர் மேல ஆணையா சொல்லுறேன் யாருக்கிட்டேயும் சொல்ல மாட்டேன் ,ரகசியமா வச்சுப்பேன் :-))

(ஷ்ஷ்ப்பா ரெண்டு வரிப்பின்னூட்டத்துக்கு கூட எம்புட்டு எயுத வேண்டி இருக்கு ,மெய்யாலுமே நந்தவனம் இஸ் கிரேட் ,சுருங்க சொல்லி விளங்க வச்சிடுவார் அவ்வ்!)
------------------

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

//நீர் மட்டும் பின்னூட்டத்தை படிக்காம பினாத்தலாம், நீர் எழுதும் தலைகாணி சைஸ் பதிவ படிக்காம பினாத்த கூடாதாக்கும்?//

ஹி...ஹி அடுத்த சோடாப்புட்டி நீர் தான், நீர் வேற முதியோர்கல்விலாம் கற்ற அறிஞர் என்பதால் பெரிய சோடாப்புட்டியா தான் இருப்பீர் :-))

#//அமெரக்காவில் பெரும்பாலான பயிர் GMதானே? இந்த பாயின்டை கண்டுக்கவே இல்லை//

பதிவுக்கு தெளிவா "BT- COTTON -ஒரு மாற்றுப்பார்வை" என தலைப்பு வச்சு பருத்தியில் பிடியின் சதவிகிதம் 94.75% இந்தியாவில் பயிரிடப்படுவது பயோ டைவர்சிட்டிய பாதிக்கும், குறிப்பா உயிர்ச்சூழலில் லெபிடாப்டிரா வகை பூச்சியினங்கள் மட்டும் குறிப்பாக பாதிக்கும் என முழுக்க முழுக்க பிடி பருத்தியின் விளைவை மட்டுமே பேசுகிறது.

இந்திய வரலாறு படிக்க சொன்னா உலக வரலாறு படிப்பாரு போல, அவ்வ்!

நீர் தான் தேவையே இல்லாமல் மற்ற ஜி.எம் கிராப் எல்லாம் இழுத்து வந்து திசை திருப்பிட்டு இருக்கீர், சரி அமேரிக்கா அறிஞர் மெனக்கெட்டு பேசுறாரேனு நானும் பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன்,ஆனால் கடசீல நாம திருப்புறோம்னு பிளேட்டை திருப்பிடுறீர் அவ்வ்!

சரி இப்படியே பேசிட்டு இருந்தா பதிவின் பேசுப்பொருள் விட்டு வீம்புக்கு சுத்தி சுத்தி வருவீர் , பிடி பருத்தி, அதன் சதவீதம் அடிப்படையில் என்ன விளைவு வரும்னு மட்டும் தயவு செய்து பேசுறீரா?

பிடி பருத்தியால் உற்பத்தி கூடியது, பூச்சி மருந்து பயன்ப்பாடு குறைந்தது என்பதெல்லாம் மாயைனு பதிவிலும் சொல்லி இருக்கேன் ,விரைவில் இதை மட்டும் வச்சு ஒரு பதிவும் போடுறேன்,அப்போ தான் ஊர ஏமாத்துற கதை புரியும்!

# நான் மேலை நாடுனு பொதுவா சொன்னா ஏன் ஓய் உம்ம அமேரிக்க விசுவாசத்தினை காட்ட அமேரிக்காவையே புடிச்சு இழுத்துட்டு வரீர், ஐரோப்பிய யூனியன் எல்லாம் ஜி.ம் கிராப் இறக்குமதிக்கே தடை விதிச்சு இருக்கே ஏன்னு சிந்திக்க மாட்டீரா?

ஐரோப்பிய நாடுகள் முதல் பல நாடுகள் ஆர்கானிக் விவசாயத்துக்கு திரும்பிக்கொண்டுள்ளார்கள், அதன் வளர்ச்சி போகப்போகக்கூடும்,இந்தியாவில் தான் ஆர்கானிக் விவசாயிகளின் "எண்ணிக்கை" கூடவாம்(ஏரியா கம்மி)

மேலும் விவரங்களுக்கு,

http://www.fibl.org/en/themen/themen-statistiken.html

# அப்புறம் அமெரிக்காவில அதிக பூச்சி மருந்து அடிக்கிறாங்க,ஆனால் அதையே கம்மி போல காமிச்சுக்கிறாங்க, இந்தியாவில் பெர்கேப்பிடா கன்சம்ஷன் கம்மியா இருந்தாலும் டோட்டல் வால்யும் கூட என்பதை வச்சு இந்தியாவில் பூச்சி மருந்து அதிகம்னு மாயை கிளப்புறங்கனு உமக்கு சொன்னேன் நல்லா படிச்சு பாரும் அவ்வ்!

வீம்புக்குனு பழைய டேட்டாவ காமிச்சுக்கிட்டு , வறட்டு வாதம் பண்ணிக்கிட்டு இருக்கீரே , இப்படிலாம் பேசினால் உம்மை அறிஞர், எக்ஸ்பெர்ட்னு நாலு பேரு சொல்லுவாங்கனா, சரி நீர் தான் இணையத்தின் ஆகச்சிறந்த மாபெரும் "எக்ஸ்பெர்ட் ,அறிஞர் "என ஒத்துக்கிறேன் , இனிமே இப்படி மொக்கைப்போடாதீர் அவ்வ்!

#// நாளைக்கு கடவுள்தான் உலகை படைச்சாருன்னு விஞ்ஞானம் மூலம் தெரிஞ்சால் உன் நிலை என்ன? உமது பதில் என்ன...என்ன..என்ன?//

ஹி...ஹி அவரு தான் மிகப்பெரிய சயிண்டிஸ்ட், உற்பத்தியாளர்னு சொல்லிடுவேன் ,அவருக்கு பேரு கடவுளாகவும் இருந்துட்டு போகட்டுமே ,ஆனால் நான் மிஸ்டர் சயிண்டிஸ்ட்ன்னு தான் கூப்பிடுவேன் :-))

ஹி...ஹி அப்படியே வாரும் ஒரு கட்டிங் போட்டு வரலாம்னும் கூப்பிடுவேன் ,ஆண்டவன பார்க்கனும் அவனுக்கும் ஊத்தனும் அப்போ நான் கேள்விக்கேட்பேனே சர்வேசா.... தலையெழுத்தென்ன மொழியடா டொடொடொய்ங்!

ஜோதிஜி said...

வவ்வால் மட்டும் அவரின் மின் அஞ்சலை வைத்தால் இனி நான் சேர்க்கப்போகும் சொத்துக்களை அவருக்கு எழுதி வைக்கின்றேன். காரணம் இது வரைக்கும் எதுவும் சேர்க்கவில்லை என்பதால்.

Anonymous said...

// எதுக்கும் "வாசன் ஐ கேர்" போய் கண்ணு ரென்டையும் லேசா தொடைச்சு பாலிஷ் போட்டுக்கும், பளிச்சுனு தெரியும்//

ரூ 8000, 12000, 18000, 24000 சாளேஸ்வரத்துக்கு எந்தப் பேக்கேஜ் வேணும்? வாசன் தொடைச்ச லட்சணம், லேசிக் செஞ்சுகிட்ட ஆளுக்கு கண்ணு பார்வை கெட்டுப் போச்சி.

Anonymous said...

வவ்வால், நந்தவனத்தான்,

முதலில் இந்த பதிவிற்கு சம்பந்தமிலாத கேள்விக்கு மன்னிக்கவும்.

நாம் சாப்பிடுகிற ப்ராயிலர் மற்றும் வொயிட் லெக்கான் கோழிகள் கூட மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழிகள் தானா? லெக்கான் கோழி முட்டைகளை அடைகாத்தால் குஞ்சு பொரிப்பதில்லை. ப்ராயிலர் கோழி முட்டை இடுவதில்லை. (அதனால் தான் இந்த சந்தேகம்.) பின் எவ்வாறு அதனுடைய கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன? In Laboratory?
From where did these chicken originate?

வவ்வால் said...

அனானி,

"காம்ரேட் தொழிலதிபதிவர் " திருப்பூர் சாயப்பட்டறை நீர் பாய்ந்த "தூய்மையான " நொய்யல் ஆத்து தண்ணி குடிச்சு,குளிச்சு வளர்ந்தவரு, ஆசிட் ஊத்தி கழுவுனா கூட கண்ணு பளிச்சுனு தெரியும், "வாசன் ஐ கேர் "கம்பி விட்டு ஆட்டினாலும் கம்பி தான்யா வளையும் அவ்வ்!
------------------------

வேற்றுகிரக வாசி,

உம்ம கேள்விக்கு நான் எனக்கு தெரிந்த பதில் ஏதேனும் சொல்வேன் ஆனால் நம்ம மரபணுமாற்ற தந்தை,சுருக்க விளக்க சுனாமி, 'நந்தவனம்" வந்து 2003 தொழில்நுட்பப்படி ஏதேனும் சொல்லக்கூடும், நாம இதான்யா 2013ல நடக்குதுனு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள நொறை தள்ளிடும்,எனவே அன்னாரே சொல்லட்டும் அடியேனும் கற்றுக்கொள்கிறேன்!

Let's learn from expert!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

சுருக்கமாவும்,விளக்கமாவும் சொல்வதில் எக்ஸ்பெர்ட் நந்தவனம் அதனால் தான் அவரே சொல்லட்டும்னு சொன்னேன், ஆனால் மனிதர் அதுக்கு என்னமோ சண்டக்கோழி போல சிலுத்துகிறார் அவ்வ்.

# கறிக்கோழியை பிராய்லர் என்பார்கள், பிராய்லர் என்பது பார்பிக்யூ போல வறுப்பதாகும், எனவே வறுக்க தோதான கோழி பிராய்லர் கோழினு பெயராயிடுச்சு :-))

இது ஒரு வகையான கலப்பினம், குறைவான காலத்தில் Feed to weight conversion ratio அதிகமா இருக்கும் படி தேர்வு செய்து கலப்பினம் செய்வது

முட்டைக்கோழியை லேயர் பர்ட் என்பார்கள், இது ஒரு வகையான கலப்பினம், ஒரே ஆண்டில் அதிக முட்டையிடும் வகையினை மீண்டும தேர்வு செய்து பல முறைகலப்பினம் செய்து உருவாக்குவார்கள்.

இந்த ரெண்டு வகையிலும் வளமான கோழிகளை தேர்வு செய்து "பேரண்ட்" என வைத்திருப்பார்கள், அவற்றை கொல்லாமல் முட்டையிட வைத்து , கழிக்கோழி, முட்டைக்கோழி குஞ்சு தயாரித்து பண்ணைகளுக்கு அனுப்புவார்கள், அவங்க தான் ஹேட்ச்சரிஸ்.

இதுல ஹேட்சரிஸ்ல நிறைய கோழிக்குஞ்ச உருவாக்கனும், எல்லா கோழியும் மேட்டிங் செய்ய வச்சிட்டுருக்க முடியாதுனு ஆர்டிஃபிசியல் இன்செமனேஷன் தான் செய்வாங்க.

இது இயற்கை முறை ஆனால் டிரான்ஸ்ஜெனிக் கோழிலாம் வந்து போச்சு, மாட்டின் குரோத் ஹார்மோன் கோழியில் சேர்த்து சீக்கிரம் வெயிட் போட வைக்கிறாங்க.

நிறைய நிறுவனங்கள் வெளியில சொல்லாமல் டிரான்ஸ் ஜெனிக் வேலை செய்திருக்க கூடும், ஏகப்பட்ட ஆய்வுகள் நடப்பதாக செய்திகள் இருக்கு.

இப்போ இந்தியாவிலும் டிரான்ஸ்ஜெனிக் கோழி உருவாக்கிட்டாங்களாம், 1990 ல இருந்து மேலை நாடுகளில் டிரான்ஸ் ஜெனிக் முறையில் குரொவ்த் ஹார்மோன் செலுத்தி உருவாக்கப்பட்ட கோழிகள் தான் விற்பனையாகிறது.மேக்ரொ சிக்கன் என்ற பெயரில் பேட்டண்ட் வாங்கி இருக்காங்கலாம்.

இந்த சுட்டிகளை படிக்கவும்,

மேனகா காந்தி எழுதிய கட்டுரையில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்,

http://www.ekantipur.com/the-kathmandu-post/2010/05/31/oped/murder-most-fowl/208904/

ஹைதராபாத்தில் உள்ள தேசிய கோழி ஆய்வு மையத்தில் டிரான்சஸ்ஜெனிக் சிக்கன் உருவாக்கி இருக்காங்க, நிறைய முட்டை போடுமாம்,

http://online.wsj.com/news/articles/SB10001424052702303828304575179812834664070
-----------------------

நந்தவனம்,

வாரும்,

ஹி..ஹி என்ன ஓய் நொந்தவனமாக்கிட்டீர் அதுக்குள்ள , சோடாபுட்டி என்றால் பெரிய படிப்பாளினு அர்த்தம் சாமி, அதுக்கே இப்படி சாமியாடுறீர் அவ்வ்!

பி.பி நிறைய இருக்கும் போல, ஒமேகா-3 இருக்க சமையல் எண்ணை பயன்ப்படுத்தினா எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைஞ்சு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், தினமும் உம்மை கியர் வச்ச பைக்கில் ஒரு 10 கி.மீ ரவுன்ட் போகவும்!

இதுல நகைமுரண் என்னவெனில் நீர் நடத்தியதில் எத்தனை தனிமனித தாக்குதல் என எண்ணிப்பாரும் அவ்வ்!

சரி போறப்போக்குல சல்லீசா எனக்கு ரிடயர்மென்ட் வாங்கி கொடுத்தீர் அப்படியே பென்ஷன் கின்ஷன் வாங்கி கொடுக்கிறது ஹி...ஹி சரக்கு வாங்க காசு வோணும்ல!

? said...
This comment has been removed by the author.
Anonymous said...

நன்றி நந்தவனத்தான்,

வேற கிரகத்திலிருக்கிரவங்க எல்லாம் பூமியிலிருக்கிற நம்மை பார்த்து Aliens என்று தானே கூப்பிடுவார்கள். அதானால் நான் அவர்களுடைய point of view ல இருந்து பார்த்து, என்னை நான் Alien என்று வைத்து கொண்டேன். ஹி..ஹி..ஹி..(எல்லோரும் என்னைப் பார்த்து பைத்தியம் என்று கூறாமல் இருந்தால் சரி.. அவ்வ்.....)

நன்றி வவ்வால்,

நீங்க ஸ்கூல் படிக்கும்போது Head Master ருக்கே பாடம் எடுத்திருபீங்கன்று நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

நீங்க ஸ்கூல் படிக்கும்போது Head Master ருக்கே பாடம் எடுத்திருபீங்கன்று நினைக்கிறேன்.

நந்நதவன்

பாருங்ககோ இங்கே.

சும்மா கிடந்த ஆள ஒருத்தரு வந்து கிளப்பிட்டாரய்யா கிளப்பிட்டாரு.

நாம் ரெண்டு பேரும் மேற்கொண்டு இதுக்கு தனியா பட்டப்பெயர் சூட்ட மண்டையை உடைக்கோனும்.

Paramasivam said...

திரு வவ்வால் அவர்களுக்கு
நான் சில மாதங்களாக உங்கள் பழைய பதிவுகள் படித்து வருகிறேன். நல்ல ஆழமான பதிவுகள் (அசின் புகைப்படம் தவிர்த்து)
இந்த BT cotton பற்றி எனது எண்ணங்கள் இது வரை வேறு மாதிரி இருந்தது. தங்கள் பதிவு கூறுவது வேறு மாதிரி உள்ளது.
எனது வங்கியில் முதன்மை மேலாளர் ஆக சேலம் ஆத்தூரில் பத்து வருடங்களுக்கு முன் பணி புரிந்த போது அங்கும், மற்றும் வாழப்பாடி, கள்ளக்குறிச்சி, வரகனுர், பெரம்பலூர் போன்ற இடங்களில் விவசாயிகள் BT cotton விதை வாங்க அல்லோகலப் பட்டார்கள். 9 மணி கடை திறக்கும் எனில் 6 மணியில் இருந்து க்யு இருக்கும். நல்லது கிடைக்காமல் இவ்வாறு கஷ்டம்பட்டு வாங்கி விவசாயம் செய்வார்களா தெரியவில்லை.
எங்களிடம் கடன் மனு கொடுக்கும் பொது என்னிடம் கூறிய வரையில்,
இது விலை அதிகம் தான், ஆனால் பின்னால் தெளிக்க வேண்டிய பூச்சி மருந்துகள் வெகுவாக குறைவு தான் மற்றும் சாகுபடி ௨௦ முதல் ௨௨ சதவீதம் அதிகம் எனவும் கூறினார்கள். அங்கு, RASI SEEDS என்ற நிறுவனம் அவர்களுக்கு நல்ல வழி காட்டுதலும் கொடுத்து வந்தது.
இப்போது இந்த பதிவு படித்த பின், பின்னூடங்கள் படித்த பின், ஒரு குழப்ப நிலையில் உள்ளேன்.
BT Cotton நல்லதா கேட்டதா?
அது விவசாயிக்கு நல்லதா கேட்டதா?
அது சுற்று சூழலுக்கு நல்லதா கெட்டதா? பொது மக்களுக்கு நல்லதா கெட்டதா? பொது மக்களுக்கு கேட்டது எனில், என்ன செய்வது? P.I.L in court?போராட்ட வாதிகளை நம்ப முடிவதில்லை (உதய குமாரனையும் சேர்த்து தான்)
தீர்வு தான் என்ன?

Paramasivam said...

திரு வவ்வால் அவர்களுக்கு
நான் சில மாதங்களாக உங்கள் பழைய பதிவுகள் படித்து வருகிறேன். நல்ல ஆழமான பதிவுகள் (அசின் புகைப்படம் தவிர்த்து)
இந்த BT cotton பற்றி எனது எண்ணங்கள் இது வரை வேறு மாதிரி இருந்தது. தங்கள் பதிவு கூறுவது வேறு மாதிரி உள்ளது.
எனது வங்கியில் முதன்மை மேலாளர் ஆக சேலம் ஆத்தூரில் பத்து வருடங்களுக்கு முன் பணி புரிந்த போது அங்கும், மற்றும் வாழப்பாடி, கள்ளக்குறிச்சி, வரகனுர், பெரம்பலூர் போன்ற இடங்களில் விவசாயிகள் BT cotton விதை வாங்க அல்லோகலப் பட்டார்கள். 9 மணி கடை திறக்கும் எனில் 6 மணியில் இருந்து க்யு இருக்கும். நல்லது கிடைக்காமல் இவ்வாறு கஷ்டம்பட்டு வாங்கி விவசாயம் செய்வார்களா தெரியவில்லை.
எங்களிடம் கடன் மனு கொடுக்கும் பொது என்னிடம் கூறிய வரையில்,
இது விலை அதிகம் தான், ஆனால் பின்னால் தெளிக்க வேண்டிய பூச்சி மருந்துகள் வெகுவாக குறைவு தான் மற்றும் சாகுபடி ௨௦ முதல் ௨௨ சதவீதம் அதிகம் எனவும் கூறினார்கள். அங்கு, RASI SEEDS என்ற நிறுவனம் அவர்களுக்கு நல்ல வழி காட்டுதலும் கொடுத்து வந்தது.
இப்போது இந்த பதிவு படித்த பின், பின்னூடங்கள் படித்த பின், ஒரு குழப்ப நிலையில் உள்ளேன்.
BT Cotton நல்லதா கேட்டதா?
அது விவசாயிக்கு நல்லதா கேட்டதா?
அது சுற்று சூழலுக்கு நல்லதா கெட்டதா? பொது மக்களுக்கு நல்லதா கெட்டதா? பொது மக்களுக்கு கேட்டது எனில், என்ன செய்வது? P.I.L in court?போராட்ட வாதிகளை நம்ப முடிவதில்லை (உதய குமாரனையும் சேர்த்து தான்)
தீர்வு தான் என்ன?

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

ஒரு வழியா பிளட் பிரஸ்ஸர் கொறைஞ்சு போச்சு போல நல்லது, நான் வேறப்பயந்துட்டேன் , எங்கே ஹார்ட் அட்டாக் கீது வந்து , அப்பறம் சீரியசா போயி, ஹார்ட் அட்டாக் வரும் போது என்ன செய்துட்டு இருந்தார்னு விசாரிச்சி , என் பதிவ தான் படிச்சிட்டு இருந்தார்னு தெரிஞ்சி ...உமக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட்டேன்னு என்மேல "fbi" வச்சி கேசுக்கீசு போட்டுட்டா என்ன பண்ணுறதுனு பயந்து போயிட்டேன் ...ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம் பாருங்க அவ்வ்!

# //2000-ல் சிக்கனை மரபணு மாற்றியது ஜூஜூபி செய்தி//

ம்க்கூம் நாம 1990னு எழுதினா ,2000னு இவரு கண்ணுக்கு மட்டும் தெரியுதே அவ்வ்...அது என்ன மாயமோ மர்மமோ தெரியல எப்பப்பார்த்தாலும் ஒரு 10 வருடம் முன்னாடி இல்லனா பின்னாடி போயிடுறார் அவ்வ்!

*//1990 ல இருந்து மேலை நாடுகளில் டிரான்ஸ் ஜெனிக் முறையில் குரொவ்த் ஹார்மோன் செலுத்தி உருவாக்கப்பட்ட கோழிகள் தான் விற்பனையாகிறது.மேக்ரொ சிக்கன் என்ற பெயரில் பேட்டண்ட் வாங்கி இருக்காங்கலாம்.//

மரபணு மாற்றப்பட்ட உயிரியை ,பேரண்ட் உயிரியுடன் பலமுறை பேக் கிராஸ் அல்லது மார்க்கர் அசிஸ்டட் பேக்கிராஸ்(introgression of transgenes into an adapted variety ) செய்து கிட்டத்தட்ட பேரன்ட் போல உருவாக்கி,அதில் குறிப்பிட்ட "ஜீன்" பண்புகளை புகுத்தி விட்டால் அது டிரான்ஸ்ஜெனிக் ஆகவும் இருக்கும், எளிதில் கண்டும் பிடிக்கவும் முடியாது, இப்படித்தான் பலரும் செய்து பிராய்லர் சிக்கனை குறுகிய காலத்தில் அதிக எடையுடன் வளருவது போல செய்திருக்க வேண்டும், கடந்தக்காலங்களை விட இப்பொழுதெல்லாம் 6 வாரத்தில் சுமார் 2-2.5 கிலோ எடை சிக்கனை உருவாக்க இப்படி ஏதேனும் கோல்மால் செய்யாமல் இயற்கையான பிரீடிங்க்கில் வாய்ப்பு இருப்பதாக தெரியலை, ஆனால் அதனை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

இது வெறும் குரோவ்த் ஹார்மோன் அளவில் என்பதால் ,அந்த ஹார்மோன் செலுத்தப்பட்டதா அல்லது உயிரியின் உடம்பில் உற்பத்தியானதா என்பது எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது, இதனால் ஃப்ரீ ராஞ்ச் சிக்கன் என்றால் ஹார்மோன் இருக்க கூடாதுனு சிலநாடுகளில் தடை விதித்து வைத்திருக்கிரார்களாம்.

#//வவ்வால் அளவுக்கு லேட்டஸ்ட் டீடெயில் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்காது என்ற போதும்) //

நொந்துப்போய் ரொம்ப உசாராகிட்டார் போல அவ்வ்!
----------------------
வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

//நீங்க ஸ்கூல் படிக்கும்போது Head Master ருக்கே பாடம் எடுத்திருபீங்கன்று நினைக்கிறேன்.//

ஏன்யா ஏன் ? சும்மா கிடந்த என்க்கிட்டே எதாவது கேட்டு வாயப்புடிங்கிட்டு ,அப்புறம் இப்படி எதாவது சொல்லிட்டுப்போயிடுவீர், அப்பாலிக்கா இந்த "ரெட்டை" நாயனம் ஒன்னுக்கூடி என்னப்பார்த்து இதெல்லாம் விக்கிப்பீடியாவில் தானே இருக்குனு ஒத்து ஊதிக்கட்சேரி வைக்கவா ... கட்சேரி வைக்கிறது தான் வைக்கிறாங்க கொஞ்சம் சுதி சுத்தமா வைக்கிறாங்களானா அதுவும் இல்லாம ஒரே ஒப்பாரிக்கச்சேரியா வைச்சு தொலையுறாங்க ....காது ரெண்டும் "கொய்ங்னு" கேட்குது ஷ்ஷ்பா முடியல அவ்வ்!

# நந்தவனத்துக்கு சொன்னதையும் படிங்க ஓரளவுக்கு தெளிவாகும்.
-------------------

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

ஒரு வழியா பிளட் பிரஸ்ஸர் கொறைஞ்சு போச்சு போல நல்லது, நான் வேறப்பயந்துட்டேன் , எங்கே ஹார்ட் அட்டாக் கீது வந்து , அப்பறம் சீரியசா போயி, ஹார்ட் அட்டாக் வரும் போது என்ன செய்துட்டு இருந்தார்னு விசாரிச்சி , என் பதிவ தான் படிச்சிட்டு இருந்தார்னு தெரிஞ்சி ...உமக்கு ஹார்ட் அட்டாக் வரவச்சிட்டேன்னு என்மேல "fbi" வச்சி கேசுக்கீசு போட்டுட்டா என்ன பண்ணுறதுனு பயந்து போயிட்டேன் ...ஏன்னா நான் கொஞ்சம் பயந்த சுபாவம் பாருங்க அவ்வ்!

# //2000-ல் சிக்கனை மரபணு மாற்றியது ஜூஜூபி செய்தி//

ம்க்கூம் நாம 1990னு எழுதினா ,2000னு இவரு கண்ணுக்கு மட்டும் தெரியுதே அவ்வ்...அது என்ன மாயமோ மர்மமோ தெரியல எப்பப்பார்த்தாலும் ஒரு 10 வருடம் முன்னாடி இல்லனா பின்னாடி போயிடுறார் அவ்வ்!

*//1990 ல இருந்து மேலை நாடுகளில் டிரான்ஸ் ஜெனிக் முறையில் குரொவ்த் ஹார்மோன் செலுத்தி உருவாக்கப்பட்ட கோழிகள் தான் விற்பனையாகிறது.மேக்ரொ சிக்கன் என்ற பெயரில் பேட்டண்ட் வாங்கி இருக்காங்கலாம்.//

மரபணு மாற்றப்பட்ட உயிரியை ,பேரண்ட் உயிரியுடன் பலமுறை பேக் கிராஸ் அல்லது மார்க்கர் அசிஸ்டட் பேக்கிராஸ்(introgression of transgenes into an adapted variety ) செய்து கிட்டத்தட்ட பேரன்ட் போல உருவாக்கி,அதில் குறிப்பிட்ட "ஜீன்" பண்புகளை புகுத்தி விட்டால் அது டிரான்ஸ்ஜெனிக் ஆகவும் இருக்கும், எளிதில் கண்டும் பிடிக்கவும் முடியாது, இப்படித்தான் பலரும் செய்து பிராய்லர் சிக்கனை குறுகிய காலத்தில் அதிக எடையுடன் வளருவது போல செய்திருக்க வேண்டும், கடந்தக்காலங்களை விட இப்பொழுதெல்லாம் 6 வாரத்தில் சுமார் 2-2.5 கிலோ எடை சிக்கனை உருவாக்க இப்படி ஏதேனும் கோல்மால் செய்யாமல் இயற்கையான பிரீடிங்க்கில் வாய்ப்பு இருப்பதாக தெரியலை, ஆனால் அதனை வெளிப்படையாக சொல்லிக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

இது வெறும் குரோவ்த் ஹார்மோன் அளவில் என்பதால் ,அந்த ஹார்மோன் செலுத்தப்பட்டதா அல்லது உயிரியின் உடம்பில் உற்பத்தியானதா என்பது எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது, இதனால் ஃப்ரீ ராஞ்ச் சிக்கன் என்றால் ஹார்மோன் இருக்க கூடாதுனு சிலநாடுகளில் தடை விதித்து வைத்திருக்கிரார்களாம்.

#//வவ்வால் அளவுக்கு லேட்டஸ்ட் டீடெயில் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்காது என்ற போதும்) //

நொந்துப்போய் ரொம்ப உசாராகிட்டார் போல அவ்வ்!
----------------------
வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

//நீங்க ஸ்கூல் படிக்கும்போது Head Master ருக்கே பாடம் எடுத்திருபீங்கன்று நினைக்கிறேன்.//

ஏன்யா ஏன் ? சும்மா கிடந்த என்க்கிட்டே எதாவது கேட்டு வாயப்புடிங்கிட்டு ,அப்புறம் இப்படி எதாவது சொல்லிட்டுப்போயிடுவீர், அப்பாலிக்கா இந்த "ரெட்டை" நாயனம் ஒன்னுக்கூடி என்னப்பார்த்து இதெல்லாம் விக்கிப்பீடியாவில் தானே இருக்குனு ஒத்து ஊதிக்கட்சேரி வைக்கவா ... கட்சேரி வைக்கிறது தான் வைக்கிறாங்க கொஞ்சம் சுதி சுத்தமா வைக்கிறாங்களானா அதுவும் இல்லாம ஒரே ஒப்பாரிக்கச்சேரியா வைச்சு தொலையுறாங்க ....காது ரெண்டும் "கொய்ங்னு" கேட்குது ஷ்ஷ்பா முடியல அவ்வ்!

# நந்தவனத்துக்கு சொன்னதையும் படிங்க ஓரளவுக்கு தெளிவாகும்.
-------------------

வவ்வால் said...

காம்ரேட் தொழிலதிபதிவரே,

வாரும்...வாரும்...

//நாம் ரெண்டு பேரும் மேற்கொண்டு இதுக்கு தனியா பட்டப்பெயர் சூட்ட மண்டையை உடைக்கோனும்.//

ஒத்தையில வந்து ஒத்து ஊதினா எப்பூடி ... கூட சுதி சேர்க்க நந்தவனத்தையும் கூட்டாரது அவ்வ்!

ஆக மொத்தம் டாலர் நகரமும், டாலர் தேசமும் கூட்டணில தான் எல்லாம் நடத்துறிங்க, நடத்துங்க நடத்துங்க, என்னய மட்டும் மூஞ்சி தெரியல முதுகு தெரியலனு கொற சொல்லிட்டு நந்தவனம் மூஞ்சி தெரியமா, பிலாக் எழுதாம இருந்தாலும் கண்டுக்காம இருக்கும் போதே எனக்கு "மைல்ட்" ஆ டவுட் வந்துச்சு ,இவங்களுக்குள்ல ஏதோ அண்டர்கிரவுண்ட் டீலிங் இருக்கும்னு , அது சரி ...உமக்கு "கோஸ்ட் ரைட்டரா" அறிவியல் சமாச்சாரங்களை எழுதி கொடுப்பது நந்தவனம் தானே,

எப்பூடி நாங்களும் பீதிய கிளப்புவோம்ல :-))
----------------------

தெரியாதவர் (unknown)

வாங்க,நன்றி!

//நல்ல ஆழமான பதிவுகள் (அசின் புகைப்படம் தவிர்த்து)//

ஹி..ஹி அழகாவும் பதிவு இருக்கனும்னு தான் ஒரு அழகியல் நோக்கில் படங்கள் போடுறது...

"ஆழமா" எழுதுறவங்க எல்லாம் "எழுத்து சித்தர்கள்" நாம மேம்போக்கா தான் ,அதுவும் எல்லாம்ம் விக்கிப்பீடியாவில் இருக்காமே அதை தான் எழுதுறோம் அவ்வ்!

//இது விலை அதிகம் தான், ஆனால் பின்னால் தெளிக்க வேண்டிய பூச்சி மருந்துகள் வெகுவாக குறைவு தான் மற்றும் சாகுபடி ௨௦ முதல் ௨௨ சதவீதம் அதிகம் எனவும் கூறினார்கள்//

நேரடியான அனுபவம் எல்லாம் கொண்டவராக இருக்கிறீர்கள்,நன்று!

விவசாயிகள் முண்டியடித்து பிடி பருத்தி விதைகள் வாங்கியதில் ஆச்சர்யமில்லை, தற்சமயம் பலன் தருகிறது, எதிர்க்காலம் என்ன என்பதே கேள்வி?

நீங்க சொன்னது பற்றி இன்னொரு பதிவு போடலாம்னு இருக்கேன் ,ஆனால் அதைப்பார்த்து ஒரு அமெரிக்க அறிஞர் ஏனோ பயப்படுகிறார்கள் அவ்வ்!

பின்னூட்டங்களில் சாத்தியமில்லை,இன்னொருப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Anonymous said...

//நாம் ரெண்டு பேரும் மேற்கொண்டு இதுக்கு தனியா பட்டப்பெயர் சூட்ட மண்டையை உடைக்கோனும். //

வாங்க ஜோதிஜி,
வணக்கம். இதுதான் நம் முதல் உரையாடல்.
ரங்கராஜன் சுஜாதாவா மாறினது போல நீங்களும் உங்கள் மனைவி பெயரை வச்சிகிடீங்களா?
வவ்வாலுக்கு பட்டப்பெயரா? நானும் உங்க கூட join பண்ணிக்கிறேன். (அவர் ஏற்கனவே தனக்கு பட்டப்பெயரைத்தான் வைத்திருக்கிறார் என்று நினைக்கறேன்).

வவ்வால்,
ஜோதிஜியை நம்பாதிங்கோ. இதுக்கு நான் காரணமல்ல....(அய்யய்யோ......நான் escape ஆயிட்டேன்பா).

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

//ரங்கராஜன் சுஜாதாவா மாறினது போல நீங்களும் உங்கள் மனைவி பெயரை வச்சிகிடீங்களா?//

என்ன இப்பூடி கேட்டுப்புட்டீர், நேரு மாமாவ எப்பூடி ஆசியாவின் ஜோதினு கூப்பிடுவாங்களோ அத்தே போல தான் தொழிலதிபதிவர "திருப்பூரின் ஜோதினு" கூப்பீடுவாங்க (பரங்கிமலை ஜோதிக்கு அப்புறமா தமிழ்நாட்டில பயங்கர ஃபேமசான ஜோதி இவருதான்) , ஊருல கரன்ட் கட்டாகிடுச்சுனா, நம்ம தலைவர புடிச்சு கரன்ட் கம்பத்து மேல தலைக்கீழா கட்டித்தொங்கவிட்டா சும்மா தகத்தகனு செகச்சோதியா சொலிப்பார் , லைட்டே தேவைப்படாது, அதனால தான் ஜோதிஜினு என்றும் மரியாதையுடன் அழைக்கப்படுகிறார் :-))

# எனக்கு பட்டம் கொடுக்க எம்பூட்டு பேரு கூடுறாய்ங்க, ஊருல அவனவன் காசுக்கொடுத்து பட்டம் வாங்கிப்போட்டுக்கிறாங்க ,ஆனா தானா பட்டம் கொடுக்க துடிக்கும் மக்களின் பாசத்தை நினைச்சா கண்கள் பனித்தது ,இதயம் இனித்தது அவ்வ்!

ஜோதிஜி said...

ஊருல கரன்ட் கட்டாகிடுச்சுனா, நம்ம தலைவர புடிச்சு கரன்ட் கம்பத்து மேல தலைக்கீழா கட்டித்தொங்கவிட்டா சும்மா தகத்தகனு செகச்சோதியா சொலிப்பார் , லைட்டே தேவைப்படாது, அதனால தான் ஜோதிஜினு என்றும் மரியாதையுடன் அழைக்கப்படுகிறார் :-))

தீப்பொறி திருமுகம் மாதிரியா?

நண்பா நீங்க ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க. இது ரத்த பூமி. நந்தவனம் இவரு சிபிஐஐஐஐஐ ஆபிசரா இருப்பாரோ?

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

வாரும்,வாரும்,

திருப்பூரின் தியாகச்சோதி, தீப்பொறித்திருமுகம் தாங்கள் தான் என தானே முன்வந்து ஒப்புக்கொண்டமைக்கு மிக்க நன்றி!

# ஹி...ஹி நாங்கல்லாம் ரத்தப்பொறியலே சாப்பிட்டு வளந்தவங்க, ஆமாம் அந்த "கோஸ்ட் ரைட்டர்" மேட்டருக்கு ஒன்னியும் பொங்க வைக்க காணோம்,அப்போ மெய்யாலுமே நாஞ்ச்சொன்னது தான் நடக்குதா அவ்வ்!
----------------------

நந்தவனம்,

வாரும்,நன்றி!

ஆஹா மறுபடியும் பிளட் பிரஸ்ஸர் குபீர்னு தூக்கிடுச்சு போல "அட்டக்கத்தி,மொட்டக்கத்தினு கூவ ஆரம்பிச்சிட்டார் அவ்வ்!

ஆனாலும் "ஸ்ட்ராங்க் பாடினு" சொல்வதை கேட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கு, ஏன்னா நாம பாட்டுக்கு யதார்த்தமா ஏதோ சொல்ல அதுக்கே பிளட் பிரஸ்ஸர் எகிறி ஆர்ட் அட்டாக்கு வந்து புட்டுக்கிச்சுனா ,கொலப்பழி நம்ம மேல விழுந்திடும்,அப்புறம் அந்த பாவத்த அடியேன் எந்த கங்கையில போய் கழுவ அவ்வ்!

அதுவுமில்லாமல் நாம வேற ரொம்ப அப்பாவி, பயந்த சுபாவம், கொண்ட அடிப்படையில மனச்சாட்சிக்கு பயப்படும் ஒரு சாமானியன் "நம் சொல்" ஒருவரை கொன்றது என்ற குற்ற உணர்ச்சியால் மனம் துடிதுடிக்கும் ,அத எல்லாம் நம்மாள தாங்க முடியாது ,ஏற்கனவே என்னால் நிறைய பேரு இணயம் விட்டு ஓடிப்பூட்டாங்கனு நீர் சொன்னது கேட்டே குற்ற உணர்ச்சியால் மனம் துடிக்குது, ஏன்னா நாம பாட்டுக்கு தமாசா இந்தப்பக்கம் சொல்லிட்டு போயிடுவோம் அந்த பக்கம் என்ன நடந்ததுனு தெரியாதுல்ல, நீர் தான் யாருக்கு என்னாச்சுனு கவனிக்கும் "watch DOG of the internet" சரியா யாருக்கு என்னாச்சுனு சொல்லிடுவீர் ஆனால் உமக்கே அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துப்போச்சுனா எனக்கு யாரு சேதி சொல்லுவா அவ்வ்!

# ஹி...ஹி அம்பது ஓவாக்கு சிக்கன் வாங்க்கிட்டு அம்பதாயிரம் கொடுத்து மரபணு சோதனை செஞ்சிட்டு சாப்பிடுவார் போல இருக்கு, ஆனால் சாமனியன் எல்லாம் அப்படி சோதனையா செஞ்சிட்டு இருக்க முடியும்,ஏதோ சல்லீசா கிடைச்சா சரித்தேந்நு வாங்கி வறுத்து துண்ணுப்புட்டு போயிடுவான் :-))

மரபணு மாற்ற தந்தையே அப்படிலாம் இல்லைனு சொல்லிட்டார் எனவே நம்பி சிக்கன் வாங்கி சாப்பிடுங்க வேற்றுகிரகவாசி!

# //உம்மை நீரே மொபைல் யுனிவர்சிடி-ன்னு நினைச்சுகிட்டு இஸ்டத்துக்கு அடிச்சு விடக்கூடாது!//

ஆமாங்க்ணா என்னப்போல கூமுட்டைங்க இப்படிலாம் எதுனா கப்சாவா சொல்லி மக்கள் மனசை மாசுப்படுத்துறாங்க, அதுக்கு காரணம் என்னனா உண்மையான அறிவியல் அறிஞர்கள் யாருமே இணையத்துல வந்து மக்களுக்கு புரியிறாப்போல எயுத மாட்டேங்கிறாங்க, உம்மை பார்த்தாலே தெரியுது உலகமகா சயிண்டிஸ்ட்டுனு எனவே நீரே ஒரு பிலாக் ஆரம்பிச்சு மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஊட்டலாமே, நானும் படிச்சு தெளிவடைவேன்,

ஆனால் அத மட்டும் செய்ய மாட்டாங்க ,வீட்டுல மாவாட்டுற வேலை இருக்கு, துணி தொவைக்குற வேலை இருக்கு, பாத்திரங்கழுவனும், அத எல்லாம் செய்யலைனா வூட்டுக்காரம்மா "மாப் எடுத்து மண்டைய ஒடைச்சு மாவெளக்கு போட்டுரும்னு ஓடிருவாங்க" அவ்வ்!!!

# உமது தகவலுக்காக, குரோவ்த் ஹார்மோன், டிரான்ஸ்ஜெனிக் சிக்கன் பற்றிய கட்டுரைய எழுதியது மேனகா காந்தி என்பதையும் சொல்லியிருந்தேன், சுட்டிக்கொடுத்தேன் படிச்சாத்தானே அவ்வ், கூடுதலாக அடியேன் ஒரு சிறு விளக்கம் மட்டுமே அளித்தேன், ஆனால் என்னமோ நானே சொல்லிட்டதா எம்மேல பாயுறீர், பாயிறதா இருந்தா மேனக காந்தி மேல பாயும், டவுசர கிளிச்சுப்புடுவாங்க :-))

வவ்வால் said...

நந்தவனம்,

உமது தகவலுக்காக,

''AviGenics is developing this technology to
mark its proprietary lines, for instance in FibrGroTM Advantage broiler lines. This
technology may also be made available to poultry breeders.” …”In this way “AviGenics and
its partners can control the proliferation of the proprietary genetics.” 29

Carl Marhaver of Avigenics said: "Avigenics Inc. can make all the genetically altered
omelettes they can eat as per their patent award in Europe covering transgenic poultry.
The company has been producing genetically altered chickens for the last four years,
using a process called Windowing Technology, which introduces genetic material into
eggs through a hole or 'window' in their shells. … The Windowing Technology enables the
rapid and efficient production of transgenic chickens." The company had received a $ 2
million grant from the United States Department of Commerce for the development of the
world's first cloned bird//

சுட்டி:

http://www.greenpeace.de/fileadmin/gpd/user_upload/themen/landwirtschaft/greenpeace_livestock_genetics_companies.pdf

பிடிஎஃப் ஃபைலாக திறக்கும் பொறுமையா படிச்சி பாரும், நாலு வருஷமா ஜெனிடிகலி மாடிபைட் சிக்கனை ஏவிஜெனிக்ஸ் உற்பத்தி செய்து வித்துக்கிட்டு இருக்காம், உடனே கிரீன் பீஸ் சொல்றத எல்லாம் நம்ப முடியாதுனு சொல்லிடாதீர் அவ்வ்.

மேலும் அமெரிக்காவில 2007 ல இருந்து குலோனிங் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கால்நடைகள் மூலம் உருவான பால், கறில்லாம் விக்கலாம்னு "FDA" அனுமதி கொடுத்து வித்துக்கிட்டு இருக்காங்க.

குளொனிங்கில் ஜெனிட்க் மாடிபிகிஷன் செய்து உருவாக்கிய விலங்குகள் மூலம் ஆஃப்ஃஸ்பிரிங்க் உற்பத்தி செய்து , பரவலாக பயன்ப்பாட்டில் இருக்கு.

http://www.telegraph.co.uk/earth/earthnews/3321922/US-first-to-approve-food-from-cloned-animals.html

http://www.fda.gov/newsevents/newsroom/PressAnnouncements/2008/ucm116836.htm

எனவே அமேரிக்காவில எல்லாம் பாதுகாப்பா இருக்குனு நம்பிக்கிட்டு அலைபவர்களை ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தால் காப்பாற்றட்டும் அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

டாலர் கவுண்ட் செய்ய கவுண்டிங் மெசின் வச்சிருக்கும் நீர் எல்லாம்ம் ஏழைங்கள் என சொல்லும் போது,எனக்கும் அதே கவுண்டமணி சொல்லும் "ஏழைங்களா ' வசனம் தான் நியாபகம்ம் வருது அவ்வ்!

#//சும்மா நீர் ஓட்டியதால் நானும் ஓட்டிவிட்டேன். இதுக்கு போய் ஜங்கு ஜங்குன்னு குதிக்கிறீர். நீர் என்னை கேவலமாக பேசுறதும். நான் உம்மை ரொம்பக் கேவலமாக பேசுவதும் அதை நாம ஜாலியாவே எடுத்துக்கறதும் புதுசா என்ன?//

எனக்கு வின்னர் கைப்புள்ள தான் நியாபகம் வருது அவ்வ்!

நான் கூட கொஞ்சம் கவலைப்பட்டுட்டேன் , என்னடா பின்னூட்ட முட்டை போடுற வாத்தை ஒரேயடியா "அறுத்துட்டோமோனு" ஹி...ஹி ஆனாலும் நீர் ரொம்ப நல்லவனய்யா..எம்புட்டு கலாய்ச்சாலும் ஹி...ஹி வலிக்கலையேன்னு எடுத்துக்கிறீர் , ஐ லைக் யுவர் ஸ்பிரிட் ஆஃப் பெர்சிஸ்டண்ஸ்!

# குளோனிங் செய்ய அனுமதியல்ல, அதனை வணிக ரீதியாக உணவாக விற்க அனுமதி!

அப்புறம் ஏவிஜெனிக்ஸ் பேர மாத்திக்கிட்டா என்ன , செய்யுற வேலை அதானே, மேலும் மருத்துவத்துக்கு என்றால் ஏன் FibrGroTM Advantage broiler lines" என குறிப்பிட்டு பிராய்லர்" என போட வேண்டும், சும்மா கோழினு போட்டிருக்கலாம்.

சரி நீர் தான் உலகறிஞ்ச சயின்டிஸ்ட் உமக்கு தெரியாத மேட்டர்லாம் எனக்கெங்கே தெரிய போகுது( இல்லைனா மறுபடியும் 2003 ல இருந்து புள்ளிவிவரம் அள்ளிவிட்டுருவார் அவ்வ்)

நானெல்லாம் விக்கிப்பீடியாவ படிச்சிட்டு "மொபைல் யுனிவர்சிட்டி போல பீலாவுடும் சாமனியன்", சிக்கன் சாப்பிட்டா சிக்குன் குனியா வருமோனு நினைக்கும் அப்பாவி ,உம்மோட எல்லாம் மல்லுக்கட்ட முடியுமா,அதெல்லாம் தொழிலதிபதிவர் போல 600 வார்த்தையில் எழுத தெரிஞ்ச எழுத்து சித்தர்களால் தான் முடியும் ,அவ்வ்!

# எங்கே அந்த வேற்றுக்கிரகவாசி ,பருத்தில சிக்கன மேயவிட்டுட்டு என்னையும் ஒரு சயிண்டிஸ்ட்டான பின்னூட்ட பயங்கரவாதிக்கிட்டே கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிட்டார்,வரட்டும் கவனிச்சிக்கிறேன் அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாங்கண்ணா,வணக்கங்ண்ணா!

//அடி கொஞ்சம் ஜாஸ்தியோ? கண்ணாடில பார்த்தா அப்படித்தான் கைப்புள்ள ஞாபகம் வரும். டோன்ட் வொரி, சீக்கிரம் சரியாயிடும்!//
அடடா இதை ஒரு கைப்புள்ளையே சொல்லுதே அவ்வ்!

#//வக்கீல் மாதிரி வளைச்சு வளைச்சு கேக்குறீர். விடாம பதில் சொல்லுவோமில்லை... இந்த வகை கோழி பயோடெக் கம்பனிகள் இரண்டு வித நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.

1. மருத்துவ சிகைச்சைக்கான மனித புரதங்களை கோழியில் உருவாக்குதல். முட்டையில் இப்புரதம் வருமாறு மரபணு மாற்றம் செய்தல்.

2. கறிக்கோழிகளில் தேவையாக குணங்களை சேர்த்து டெர்மினேட்டர் தொழில்நுட்பத்தை இணைத்து பண்ணைகளுக்கு விற்றல்.

ஆனால் இரண்டாவது சமாச்சாரத்திறகு அரசு அனுமதி அளிக்க வில்லை. நீங்கள் சொல்லும் FibrGroTM Advantage broiler line கறிக்கோழிகள் பண்ணைகளுக்காக 2000-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் FDA அனுமதி அளிக்காத காரணத்தில் இக்கம்பனிகள் முதலாவது வேலையை மட்டும் செய்கின்றன. //

ங்க்கண்ணா, அப்போ மேனகா காந்தி மற்றும் கிரீன் பீஸ் மேல கேசு போடுங்க்ண்ணா ஏன்னா அதுல எல்லாம் கமெர்சியலா விக்குறதா தான் எழுதி இருக்கு, நீர் அத முழுசா படிக்கலைனு தெரியுது.. உமக்கு கிட்ட/தூர பார்வைனு சொன்னா கோச்சுக்கிறீர்,வேற வழியில்லை யாரையாவது படிக்க சொல்லி கேட்டுட்டு உடனே நடவடிக்கை எடுத்தால் மில்லியன்ஸ் ஆஃப் டாலர் உமக்கு கிடைக்கலாம் அவ்வ்!

#//மேலும் வெள்ளியன்று வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி. இந்திய அரசு GM உணவு இறக்குமதிக்கு தடையாமே?//

ஏனுங்க்ணா அது 2003 ஆம் ஆண்டு வெள்ளித்தானே அவ்வ்!

ஏன்ய்யா இப்படி 2003ல வந்த செய்திய எல்லாம் சொல்லி கொலையா கொல்லுறீர் அவ்வ்! இப்போ 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடக்குதுனு யாராவது சயின்டீஸ்ட்டுக்கு எடுத்து சொல்லுங்கப்பா அவ்வ்!

#//'போரும் அமைதி'யும் என சென்டிமென்ட பதிவு போட்டு அமைதி கிட்டாதான்னு //

உள்ளேன் அய்யானு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டாச்சுல்ல, நாள பின்ன வந்து நான் பதிவு போட்டேன் படிக்கலை,பின்னூட்டம் போடலை, வவ்வாலு ரொம்ப உசாருனு சொல்லிடப்புடாதில்ல அவ்வ்!

இந்த கேள்விய எல்லாம் நம்பளத்தான் கேட்பாங்க,அவங்கலை கேட்க முடியாது, கேட்டால் ஓடிருவாங்க அவ்வ்!

# ஏலியனை வாருரது இருக்கட்டும், நீர் தான் தொழிலதிபதிவருக்கு "கோஸ்ட் ரைட்டரானு" கேட்டோம் ,ரெண்டுப்பக்கம் இருந்தும் சத்தமே காணோம், என்னதான் உங்க அண்டர்கிரவுண்ட் டீலிங்க்ஸ்னு ஒன்னியுமே பிரியலையே அவ்வ்!

ஹி...ஹி எல்லாத்துக்கும் பதில் சொல்லும் திராணி உமக்கு இருக்குனு தெரியும்,அப்படி இருந்தும் நீர் பதில் சொல்லாமல் நழுவுவதாலே மீண்டும் கேட்டு வச்சேன்!

வவ்வால் said...

சயிண்டீஸ்ட் நந்தவனம்,

//Scientists found the wheat was a strain field-tested from 1998 to 2005 and deemed safe before St. Louis-based biotech giant Monsanto withdrew it from the regulatory approval process on worldwide opposition to genetically engineered wheat.

"No GM wheat varieties are approved for general planting in the U.S. or elsewhere, the USDA said. "

The EU has asked Monsanto for a detection method to allow its controls to be carried out.

With high consumer wariness to genetically-modified food, few countries allow imports of such cereals for direct human consumption. However, the bulk of U.S. corn and soybean crops are genetically modified.

With high consumer wariness to genetically-modified food, few countries allow imports of such cereals for direct human consumption
With high consumer wariness to genetically-modified food, few countries allow imports of such cereals for direct human consumption

The latest finding revives memories of farmers unwittingly planting genetically modified rapeseed in Europe in 2000, while in 2006 a large part of the U.S. long-grain rice crop was contaminated by an experimental strain from Bayer CropScience , prompting import bans in Europe and Japan.

The company agreed in court in 2011 to pay $750 million to growers as compensation.//

சுட்டி:

http://www.dailymail.co.uk/news/article-2333381/GM-wheat-crops-America-facing-wheat-export-crisis-Europe-Japan-lead-way-rejecting-genetically-modified-crops.html

மேற்கண்ட செய்து கி.பி 2013 ஆம் ஆண்டு மே -31 இல் டெய்லி மெயிலில் வந்துள்ளது.

அமெரிக்காவிலேயே ஜி.எம், கோதுமை பயிரிட தடை இருக்காம், டிரையல் தானாம், ஐரோப்பிய யூனியனில் இறக்குமதிக்கு தடை, ஜப்பான் ,கூட அமெரிக்க கோதுமையை தடை செய்திருக்காம்.

மேலும் ஜி.எம் சீட் கலப்பு இருக்குனு கண்டுப்பிடிக்கப்பட்டதால் 750 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு பேயர் கம்பெனி கொடுக்க ஒத்திருக்காம், , என்னமோ மரபணு மாற்ர உணவுக்கு அமெரிக்கா,ஐரோப்பா எல்லாம் பச்சைக்கம்பளம் விரிச்சாப்போல பேசிட்டு , ஏன் அமெரிக்க ,ஐரோப்பிய கம்பெனிகளின் கண்டுப்பிடிப்பை அவனுங்களே சாப்பிட மாட்டேங்கிறாங்க அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி எழுதுனதுக்கு எனக்கு கிரடிட் குடுக்குறீர். அதுக்கு நான் ஏன் சத்தம் போடோனும். அவருதான் உம்மை திட்டனும்.


நந்தவனம் நமக்கு ஞாயிற்றுக்கிழமையென்றால் முழு நாளும் எழுத்துப்பணி தான். வாசிக்க விட்டுப் போனதும், வசதியாக யோசிக்க முடியக்கூடிய நாளும் இதே தான்.

வவ்வால் உங்களுக்கு எனக்கும் உங்களுக்கும் அண்டர்கிரவுண்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்குன்னு சொன்னதே எனக்கு ஒரு வகையில் பெருமை தான். உங்களை மாதிரி கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச ஆளுங்களோட என்னை ஒப்பிட முடியுற வவ்வாலுக்கு நான் தான் பாராட்டு சொல்ல வேண்டும்.

உங்க மின் அஞ்சல் மட்டும் எனக்குத் தெரிந்தால் உங்களை அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். காரணம் கடந்த நாலைந்து மாதமாகத்தான் இந்த யூ டியூப் மேய்ச்சல் தீவிரமாக போய்க் கிட்டு இருக்கு. இன்னமும் குறிப்பிட்ட விசயத்தை வைத்து தேடத் தெரியாமல் தவிக்கின்றேன்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக் கைதிகளை ஒரு தீவில் கொண்டு போய் அடைத்து வைத்த சிறையில் பாலியல் ரீதியான தொந்தரவு செய்து பத்திரிக்கை நாற அடித்ததே அதை தேடிக் கொண்டு இருக்கேன். சிக்கினபாடில்லை. அந்த யூ டியூப் லிங்க் இருந்தா கொடுங்க.

ஜோதிஜி said...

எல்லாரும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்பாங்க. ஆனால் இன்று காலையில் கேட்டுக் கொண்டு இருப்பது வவ்வாலுக்கு தேவைப்படுகின்ற

http://www.ted.com/talks/parul_sehgal_an_ode_to_envy.html?utm_source=newsletter_weekly_2013-10-26&utm_campaign=newsletter_weekly&utm_medium=email&utm_content=talk_of_the_week_button

Anonymous said...

//# எங்கே அந்த வேற்றுக்கிரகவாசி ,........... எஸ்கேப் ஆகிட்டார்,வரட்டும் கவனிச்சிக்கிறேன் அவ்வ்!//

தலைவா!, (நந்தவனம் இந்த நேரத்துக்கு tension ஆயிருப்பார். ஹி..ஹி..) நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன். ஒருநாள் கூட rest எடுக்க விடமாட்டேன்க்ராங்க. அம்புட்டு பாசம் நம்ம மேல. சரி பதிவு ரொம்ப series ஆ போய்கொண்டிருக்கிறதே, ஜாலி மூடுக்கு கொண்டுவர கொஞ்சம் வேற மாதிரி கேள்வி கேட்டு உங்க ரெண்டு பேரையும் off பண்ணலாம் என்று பார்த்தால், ம்ஹூங்....விட மாட்டேக்கிறீங்க நீங்க ரெண்டு பேரும். அதை விட்டுட்டு இதை ஆரம்பிச்சிடீங்க. ம்ம்ம்....continue பண்ணுங்க.

//அவருதான் சொல்லச் சொன்னாரு... நான் போடற பதிவுக்கெல்லாம் வா, பத்துபத்து ரூபாயா (டாலரா?) தர்றேன், இந்த மாதிரி புகழ்ந்து எழுதி, அதுவும் அந்த நந்தவனத்தான் கண்ணுல பட்றா மாதிரி எழுதுன்னு அவருதாங்க எழுத சொன்னாரு"ன்னு ஏலியன் சொல்லாரு. நீர் பிளேட்டை அவரு மேலயே திருப்பி விடுறீர்.பலே கில்லாடிங்கானும் நீர்!//

ஏன்யா நந்தவனம், ஒரு மனுஷன அவரு எழுதின பதிவபத்தி பாராட்டி எழுதினதுக்கு இவ்வளவு அக்கப்போரா? முடியல...இருந்தாலும் உமக்கு ரொம்ப தான் ஞாபக சக்தி. எப்பவோ பாராட்டினதைஎல்லாம் (நானும் அவருமே அதை மறந்துட்டோம்) இப்போ இந்த பதிவில ஞாபகபடுத்துகிறீர். அமெரிக்கா போனா Long Term memory gain ஆயிடுமோ?

வவ்வால் said...

நந்தவனம்,

# //ஜோதிஜி கஷ்டப்பட்டு சொந்தமா யோசிச்சி எழுதுனதுக்கு //

"ரூம்ப் போட்டு" என்பது மிஸ்ஸாகிடுச்சு,சேர்த்துக்கவும், அடடா நந்தவனமும், தொழிலதிபதிவரும் பேசுறத பார்த்தா அப்படியே ஐன்ஸ்டீனும்,அப்துல்கலாமும் பேசிக்கிறா மாதிரியே இருக்கு ...

கவுண்டமணி: டேய் விளக்கெண்ண தலையா... இங்கவா ,இதுக்கு முன்ன ஐன்ஸ்டின நேரா பாத்திருக்கியா?

வவ்: ஹி...ஹி இல்லிங்க்ணா

கவுண்டர்: சரி போகட்டும் எலே பெட்ரோமாக்ஸ் தலையா ,அப்துல்கலாமையாவது நேரா பார்த்திருக்கியா?

வவ்: ஹி...ஹி இல்லிங்க்ணா...

கவுண்டர்: அடேய் ஆப்ஃபாயில் வாயா ,அப்புறம் எதுக்குடா அப்படி சொன்ன?

வவ்: ஹி...ஹி சும்மா ஒரு பேச்சுக்குங்க்ணா...

கவுண்டர்: அடிங்கொக்கா மக்கா ,அது என்னங்கடா சும்மா ஒரு பேச்சுக்கு ,சொமந்துக்கிட்டு ஒரு பேச்சுக்குனு, இப்போ நீ மட்டும் உண்மைய சொல்லலை ,அல்லையில மிதிச்சுப்புடுவேன் அக்காங்க்!

வவ்: ஹி...ஹி அது வந்துங்க்ணா ...இப்படிலாம் புகழ்ந்துப்பேசினா ,பனியன் கொம்பெனி மொலாளி ஒரு சோடி எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஜட்டி,பனியன் கொடுப்பாருங்னு சொன்னாங்க ..அதான்...

கவுண்டர்: மகா ஜனங்களே ...நான் இந்த பழிப்பாவத்துக்கு ஆளாக விரும்பவில்லை, நல்லா கேட்டுக்கோங்க...ஆஃப்டர் ஆல் ஒரு சோடி ஜட்டி பனியனுக்காக எல்லாம் எப்பேர்ப்பட்ட மேதைங்க ஐன்ஸ்டீன், அப்துல்கலாம் அவங்க பேர எல்லாம் நாறடிக்கிறானுங்க, இத பார்த்துட்டு இனிமேலும் சும்மா இருக்கனுமா சொல்லுங்கய்யா...

சரி நீ போ, அந்த பனியன் கொம்பெனிய கவனிக்கிறேன்...

கவுண்டர்: செய்யிறத எல்லாம் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத மாரி மூஞ்ச வச்சுக்கிட்டு...காலையிலே சுப்ரபாதம்... சப்புரபாதம்னு சொல்லிக்கிட்டு வந்திட்டாரு... ஏனுங்க்ணா அந்த அரசியல்வாதிங்க தான் ஆ..வூனா எதாவது ஒரு மாநாடு போட்டு ராஜா ராஜ சோழன்... முத்தமிழ் வித்தவர்னு விளம்பரம் பண்ணிக்குறாங்க, உமக்கு ஏன்யா இந்த வேலை?

தொழிலதிபதிவர்: ஹி...ஹி எல்லாம் ஒரு வெளம்பரம் தான்...

கவுண்டர்: அடங்கொன்னியா..அந்த பக்கம் டாலர் டான்ஸ் ஆடுது..ரூபா தாளம் போடுதுனு பொலம்ப வேண்டியது, இந்தப்பக்கம் வந்து ..வெளம்பரம் கேட்குதா... இன்னொருக்கா இப்படி செய்யிறத பார்த்தேன் ... குனிய வச்சு தவில் வாசிச்சுருவேன் சொல்லிட்டேன் ,ஆங்க் ...ரெண்டுப்பேரும் ஓடிருங்க சொல்லிட்டேன்!!!

நந்தவனம்: ங்க்ண்ணா நானும் ஓடனுமா...

கவுண்டர்: ஆமாம் நீ யாருப்பா...

நந்தவனம்: நான் தானுங்ண்ணா "சய்யிண்டிஸ்ட்" நந்தவனம்...

கவுண்டர்: அடங்க்கொக்கா மக்கா மொதல்ல உன்னிய தான் குப்புற போட்டு மிதிக்கனும்... செய்யிறதயும் செஞ்சிட்டு கேள்விய பாரு ... வீணா என்ன கொலைக்கேசுல மாட்டிவிடாதா,சொல்லிட்டேன் ...ஓடிரு... (நந்தவனம் மின்னலாய் ஓடி தப்பிக்கிறார்)
----------------------------------------

#//வெள்ளை பேப்பரில் ஒரு துளி இங்க் விழுந்தா இங்க் மட்டும் உங்க மாதிரி ஆளுக கண்ணுக்கு தெரியும். பேப்பர் பூராவும் இங்க் ன்னு சொல்லுவீர்! //

அமெரிக்க விசுவாம் ரொம்ப முத்திப்போச்சு...அமெரிக்கா அரசே ஜி.எம் கோதுமைக்கு அனுமதிக்கொடுக்கலைனு ஜகா வாங்கிடுச்சு,,,அதை சொன்னால் ,,அப்பவும் சப்பைக்கட்டு கட்டிட்டு அலையிறாரே அவ்வ்!

ஐரோப்பா,சப்பான்லாம் தடை செய்த ஒன்ன இந்தியா தடை செய்தா மட்டும் கோமாளித்தனமா தெரியுதாம்,என்ன ஒரு தேசப்பற்று அவ்வ்!

இன்னும் சொல்லப்போனால் பொலிவியா மெக்டொனால்ட் போன்ற அமெரிக்க ஃபாஸ்ட் ஃபுட் கடைங்களை கூட மூட சொல்லிருச்சு..ஒலகத்தில என்ன நடக்குதுனே தெரியாமல் 2003லவே இருக்காரே அவ்வ்!
----------------------------------

வவ்வால் said...

"காம்ரேட்" தொழிலதிபதிவரே,

வாரும், வர்ர டைமிங்க பார்த்தால்...ஓரமா ஒளிஞ்சு நின்னுப்பார்த்துக்கிட்டு இருந்தா மாரி இருக்கு :-))

ஆனாலும் நதவனம் ரொம்ப உசாரு...ஆப்பு ஸ்ட்ராங்கா எறங்கும்னு தெரிஞ்சதும் எஸ்சாகிட்டார்... ஆனாலும் உம்ம கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணுக்கலங்குது... நந்தவனம் வசமா சிக்கிட்டு முழிப்பிதுங்கிறது தெரிஞ்சதும் ,ஜாமீன் எடுக்க அதிகாலையிலேயே ஓடிவந்திட்டீரே அவ்வ்!

# ஹி...ஹி ஏதோ என்ற பேர சொல்லி நீர் படம் பார்க்கிற ஆசைய தீர்த்துக்கிறீர் போல இருக்கே?

//எல்லாரும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம் கேட்பாங்க. ஆனால் //
வெங்கட் பாடினப்பாட்டா, எந்த படத்துல வருது...காலையிலேயே சினிமா பாட்டுலாம் நான் கேட்கிறதில்ல!
------------------

வேற்றுகிரகவாசி,

வாரும்,

நந்தவனம்...எப்பவும் "ஃபுல் டெங்க்சன்" தான் :-))

பிரஸ்சர் குக்கரை விட கூடுன பிரஸ்ஸர் உள்ள உடம்பு அவருக்கு அவ்வ்!

# அப்பிடியே நந்தவனத்தையும் கிரேட் சயின்டிஸ்ட்... அடுத்த ஆஸ்கார் உங்களுக்கு தான்,வாழ்த்துக்கள்னு நல்லதா நாலு வார்த்தை சொல்லியிருந்தா இப்படி காண்டாகியிருக்க மாட்டார் ,அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,இப்போ உடம்பு எப்படி இருக்கு பரவாயில்லையா? ரொம்ப முடியலைனா கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே, இப்படித்தட்டுத்தடுமாறி இணையச்சேவை ஆற்றி என்னமோ போங்கய்யா எல்லாம் உங்க நல்லதுக்கு தான் சொல்கிறோம்!

# //நீங்க கொடுத்த லிங்கில் பேசுன அம்மா சொல்லிச்சு, பொறாமை வந்தா பல வித கற்பனைகளை தோன்றி காட்சிகள் விரியும்ன்னு. அதே மாதிரி வவ்வாலுக்கு நீங்க எழுதறது எல்லாம் நான் எழுதறா மாதிரி தெரியுது பாருங்க!//

ஆஹா ஒரு அரிய உண்மைய எனக்கு விளங்க வச்சுட்டீர், அப்போ நான் பல இணையத்தளங்களை படித்து ,அதன் சுட்டிலாம் கொடுத்து எழுதுனது எல்லாம் விக்கிப்பீடியாவில இருக்காப்போல உங்களுக்குலாம் தெரியக்காரணம் அந்தப்பாழாப்போன '"பொறாமையால்" விரிந்த கற்பனைக்காட்சிகளால் தானா?

எப்பவும் கண்ணாடி வீட்டில இருந்து கல்ல எறியக்கூடாது :-))

பின்குறிப்பு:

உமது நோக்கம் வேறு வகையில் இருப்பதை முன்னரே அறிவேன், ஆனாலும் தானா வந்து மாட்டுற எதையும் நான் வேண்டாம்னு ஒதுக்குவதே இல்லை, எல்லா வேஸ்ட் மெட்டிரியலுக்கும் ஒரு வேல்யூ இருக்கும்,எனவே வேஸ்ட்டுனு இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!!!

# //நீர் எழுதுன மொக்கை காமடியில் லாஜிக்கே இல்லை//

யே யப்பா காமெடியில லாஜிக் பார்க்கும் "லாஜிக் லபக்கு தாசா" இருப்பாரு போல அவ்வ்!

ஜோக்கு சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது!!!

ஹி..ஹி 2013 இல் எழுதியப்பதிவில், 2012 ஆண்டு வரையிலான புள்ளி விவரத்தை கொடுத்தால் அங்கே 2003 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தை சொல்லி சவடாலா பேசுறோமே கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கானு ஒரே ஒரு செகண்ட் யோசிச்சி இருக்கக்கூடாதா "லாஜிக் லபக்கு தாசு நந்தவனம்" அவர்களே அவ்வ்!

# //தலைவா!,://

உமக்கு ஒரு நல்ல அடிமை சிக்கீருச்சு, பாத்து ஓய் பழக்க தோசத்துல அந்தாளு மேலயே ஒரு பின்னூட்ட குண்டை போட்டுடாதீர்!//

ம்ம் பொறாமை அதிகமாய்டுச்சு போல அவ்வ்!

# இன்னொரு பிடி பருத்திப்பதிவு வேற ரெடியாகுது,அதப்படிச்சா மனுசன் டெங்க்சன்ல என்ன பண்ணுவாரோ அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

நந்தவனம்

இதே தான். மிக்க மிக்க நன்றி.

? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நெனச்சா போலயே ஒட்டுக்கா வந்து அட்டெண்டன்ஸ் போடுறாய்ங்கப்பா அவ்வ்!

ஆகட்டும் ..ஆகட்டும் நாளிக்கு பார்க்கலாம்!

Anonymous said...

.......உங்க தலைவரு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் தருவாரு ஓகே? //

ஹி..ஹி..ஹி...
Humourous conversation with you and vovs.
நந்தவனமே, நாம் அடுத்த பதிவுல மீண்டும் சந்திப்போம்/தொடர்வோம்...

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

ஹி...ஹி நீர் டெங்க்சன் ஆகலையே அப்போ ஓ.கே.

சிலப்பேர் காமெடி செய்வாங்க,நாம டெங்க்சன் ஆகிடுவோம், சிலபேர் டெங்க்சன் ஆவாங்க ஆனால் நமக்கு நல்ல காமெடியாக இருக்கும், நம்ம நந்து டெங்க்சன் ஆவுறதும் அப்படி தான் நமக்கு நல்லா காமெடியா இருக்கும்,

சினிமால பிரகாஷ்ராஜ் ...டேய்...டேய்..டேய் உன்ன எல்லாம் அப்ப்டியே செதில் செதிலா வெட்டிக்கூறுப்போட்றுவேண்டா..இது முத்துப்பாண்டி கோட்டைடினு டெங்க்சனா வசனம் பேசுவார் ஆனால் தியேட்டர்ல எல்லாம் ஹா...ஹா னு சிரிப்பாங்க ,அது போல நம்ம நந்து ஒரு இணைய பிரகாசராசு :-))
(கூடவே சுத்திக்கிட்டு "முறைச்சு பார்த்தப்படியே" ஒரு கேரக்டர் வேற வரும்)

வாட் எ ஹியுமரஸ் பெர்சன் அவ்வ்!

? said...
This comment has been removed by the author.
? said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

நந்தவனம்,

வாரும் ,நன்றி!

சவுக்கியமா... :-))

நீர் அந்த காலத்து ஆசாமினு நல்லா கன்ஃபர்ம் செய்றீர், நான் உம்மை இதுவரைக்கும் திட்டவேயில்லை, செய்ததெல்லாம் நீர் மட்டுமே அவ்வ்.

இதுல எனக்கு சொல்லுறீர் அவ்வ்!

உம்ம மனம் போல் பேசிக்கும், நான் அதை எல்லாம் வச்சு காமெடி பண்ணிப்பேன் அம்புட்டு தான் ,ஆனா நானாக எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் நீரா எதுவும் ஃபீல் பண்ணிக்கிட்டா அடியேன் பொறுப்பல்ல அவ்வ்!

#//உம்ம பாத்தா டென்சன் ஆவாது, சிப்பு சிப்பா வரும்!//

ஹி..ஹி வலிச்ச பிறகு தான் வலிக்கவேயில்லைனு சொல்வாங்களாம் அவ்வ்!

என்னைப்பார்த்தா சிப்பு வருதா அதான் எனக்கும் வேணும் ,ஐ'ம் ஹேப்பி!

# ஹி ...ஹி சோதிஜிய எல்லாம் சொல்லிக்கிட்டு அவரு ஏற்கனவே தனியா பதிவு போட்டு "பெரியப்புள்ளத்தனமாக" பேசிட்டு இருக்காரே தெரியாதா ஓய்!

வர்ரட்டா!!!

Anonymous said...

பதிவும் பின்னூட்டமும் நல்லா இருக்குன்னு சொல்ல கூட பயமா இருக்கு....எங்கே "மெக்சிகோவுக்கு" நாடு கடத்தி விடுவார்கள் என்று பயமா இருக்கு....:-)))


---கொங்குநாட்டான்..

வவ்வால் said...

நந்தவனம்,

(நீர் ஒன்னுமே சொல்லாம சைலன்ட் ஆகிட்டதால ,உசுப்பிவிட இப்பின்னூட்டம் அவ்வ்!)

//ஆனா பில்ட் போட சரி இதுவரைக்கு ஒண்ணையும் உடைச்சதில்ல!
9:20 PM, October 28, 2013 //

ஹி...ஹி நீர் பாளையங்கோட்டையில கல்லு உடைச்ச பரம்பரையோ?,நமக்கு உடைச்ச பெருமை எல்லாம் ஒன்னும் இல்லை உம்ம உடைச்ச பெருமை என்னானு எனக்கும் ,சமூகத்துக்கும் தெரியலையே அதை கொஞ்சம் விலாவாரியா சொல்லுறது :-))

நாங்களும் உங்க உடைச்ச பெருமையை தெரிஞ்சிப்போம்ல :-))

# என்னோட பின்னூட்டத்தினை வெளியிடலை, இனிமே பின்னூட்டமே போடாதனு சொல்லி கேட்டவங்க இருக்காங்கனு நீரே சொல்லிட்டீர் ஆனால் அதே இடத்தில் உம்ம பின்னூட்டத்துக்கு என்ன கதி ஆச்சுனு சொல்லி இருக்கலாமே :-))

யோவ் உம்மோட பின்னூட்டத்த என்ன தவிர எவனும் வெளியிட மாட்டான், அப்படியே உம்ம பின்னூட்டம் வரனும்னா ஜால்ரா அடிச்சு போட்டாத்தான் வரும், எங்கே என்ன விமர்சித்தா போல நீர் யாரைரையாவது விமர்சித்து வந்த பின்னூட்டம் எதுனா ஒன்னையாச்சும் காட்டும் பார்க்கலாம், எல்லா இடத்திலவும் உம்மை , கமெண்ட் மாடரேஷன்லவே வடிக்கட்டி அனுப்பிடுவாங்க(உம்ம கெத்து அம்புட்டுத்தான்),அங்கலாம் வாயே தொறக்காம,முழு சுதந்திரம் கொடுக்கிற இங்கே மட்டும் என்னய்யா வாய தொறக்குறீர் அவ்வ்!

போய் வழக்கம் போல துணி துவைச்சு,காய வச்சு இஸ்த்ரி போட்டு ,கிச்சன கிளீன் செய்து வையும் இல்லைனா வூட்டுக்காரம்மா "நைட்" பட்னி போட்ர போறாங்க அவ்வ்!

Anonymous said...

நந்தவனத்தாரே, உங்களுடைய Anti-Vavvaal Effort -க்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டதைய்யா.. பாரும் கொங்கு நாட்டாரே உம்மைப்பார்த்து பயந்து வவ்வாலை பாராட்டுவதை விட்டுவிட்டார்.

(எங்கய்யா கொங்கு நாட்டு அனானி கம்மெண்டு. மெயில் -ல வந்திருக்குது, ஆனால் பதிவுல காணோம்?)

Anonymous said...

//இப்படியே சீனியஸ்ன்னு பின்னூட்டம் போடுற வரைக்கும் ஓகே, உடம்புக்கு சேதாரமாகாது. எப்பவாவது மறந்து போய் எதிர் கருத்து போட்டால் அன்னைக்கு இருக்கு உமக்கு கச்சேரி.//

நந்தவனத்தாரே (நந்தவனமே!!! நீயே என் சொந்தவனம் - கவித கவித),
வவ்வாலோடு என் முதல் உரையாடலே அவரோட ஒரு எதிர் கருத்துல தான். அதிலிருந்து தான் நாங்கள் கோப்பெருஞ்சோழர் - பிசிராந்தையார் மாதிரி (அதாங்க ஒருவரை ஒருவர் இன்னும் பார்க்காத நட்பு) ஆயிட்டோம். நம்பள்கியோட "["மாமா பொண்ணை கட்டும் பொது சித்தப்பா பொண்ணையும் கட்டலாமே"]" என்கிற பதிவுல தான். நீங்க அங்க வந்திருந்தீங்களா என்று எனக்கு ஞாபகம் இல்ல. முடிஞ்சா நேரம் கிடைக்கும் பொது படிச்சி பாருங்க.

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

வாரும்,நன்றி!

ஏன்யா எப்ப பார்த்தாலும் ஸ்பாம் பொட்டிக்குள்ள போயிடுறீர்?

வேற்றுகிரகவாசி பின்னூட்டம் பார்த்துட்டு ,ஸ்பாம் செக் செய்தேன்.

அடடா ஒரு கொங்குநாட்டு சிங்கத்துக்கே பீதிய கிளப்பிட்டாரே நந்தவனம் ,பலே கில்லாடித்தான் அவ்வ்!

மெக்சீகோவுக்கு நாடுக்கடத்திட்டா நல்லது தான், நான் கூட மெக்சிகோவுக்கு வரலாம்னு தான் பார்க்கிறேன்... ஹி...ஹி மெக்சிகோல சலவைக்காரிங்களாம் இன்னும் இருக்காங்களானு பார்க்கத்தான் ,ஹி...ஹி அங்கே செனோரிடாஸ் எல்லாம் சும்மா கும்முனு இருப்பாங்களாம் அவ்வ்!
-----------------------

வேற்றுகிரவாசி,

வாரும்,நன்றி!

// உங்களுடைய Anti-Vavvaal Effort -//

இதான் நந்தவனத்தோட வாழ்நாள் லட்சியமா இருக்குமோனு டவுட்டா இருக்கு அவ்வ்!

பாவம் என் மேல இருக்க காண்டுல வர்ரவங்கள எல்லாம் புடிச்சு பிறாண்டி வைக்கிறார் அவருக்கென்ன மனப்பிராந்தியோ தெரியலை!

# உமக்கு தெரியுது , நாம மாற்றுக்கருத்து சொன்னாலும், ஆதரவுக்கருத்து சொன்னாலும் ஒரே போலத்தான் நடந்துக்கொள்வோம்னு ,ஆனால் எது சொன்னாலும் கடிச்சு குதறிடனும்னு ஒற்றை பார்வையுடன் இருப்பவர்களுக்கு அந்த உண்மை புரிவதில்லையே ஏ ஏ...ஏ.... ஏன் ...ஏன்..ஏன்?

வேற்றுகிரவாசி நீர் நந்தவனத்துக்கிட்டே இருந்து தப்பிக்க ஒரு ஐடியா சொல்லுறேன், இதுலாம் விக்கிப்பீடியாவில இருக்கு எங்களுக்கு தெரியாதா... அய்யோ அய்யோனு சொல்லி என்னை கலாய்ச்சிடும், நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன் அவ்வ்!

# //நந்தவனமே!!! நீயே என் சொந்தவனம் - கவித கவித//

ஆஹா வேற்றுக்கிரகத்தாரையே கவித எழுத வச்சிட்டாரே நந்தவனம் ,ஹி இஸ் ரியல்லி கிரேட்!

நந்தவனம் போல நாலுபேர் இருந்தா போதும் ,செம்மொழியாம் தமிழ்மொழி சீரும் சிறப்புடன் செழித்தோங்கி வளரும்!

தானாக வளராத தமிழையும் தடியால் அடித்து வளர வைக்கும் நந்தவனமே நின் தாளடிகள் போற்றி...போற்றி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து

நந்தவனத்தார் நடக்கிறார் என்றெதிர்

பூரண பொற்குடம் வெய்த்து புறமெங்கும்

தோரணம் கட்டி வரவேற்போம் நந்தவனமே!

ஹி..ஹி வவ்வால் துருமொழி ,பாசுரம் -2013!

ஹி..ஹி இனிமே நானும் நந்தவனத்தை போற்றி கவித எழுத பழகிக்கோனும் ,அப்போ தான் இணையத்தில பொழச்சிக்க முடியும் அவ்வ்!

தி.தமிழ் இளங்கோ said...

என்னாங்க சார்! தீபாவளி கொண்டாடும் வழக்கம் உண்டா? எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

தி.தமிழ் இளங்கோ சார்,

வாங்க,நன்றி!

உங்க அன்புக்கு நன்றி! நமக்கு தீவாளியும் ஒன்னுதான் திங்க கிழமையும் ஒன்னு தான்!

லீவு கிடைக்குது ,சாப்புட்டு தூங்க முடியுதுனு ஒரு சின்ன குதுகளம் மட்டுமே.

தங்களுக்கு கொண்டாடும் வழக்கம் உண்டெனில் மகிழ்வான தீவாளி நல்வாழ்த்துக்கள்!

#புதுசா ஒருப்பதிவு போட்டாச்சேனு அத மட்டும் பார்த்துக்கிட்டு இருதேன் ,உங்க பின்னூட்டத்தை கவனிக்கலை இப்போத்தான் பார்த்தேன் அதான் தாமதம்.