Friday, November 15, 2013

கற்றது தமிழ்-6

(சூடானம்மிணி...ஹி...ஹி!)

2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவாக்கப்பட்டு பயன்ப்பாட்டிலும் இருந்துள்ளன,காலப்போக்கில் இயல்பு வாழ்க்கையில் மக்களின் அலட்சியத்தினால் பலச்சொற்கள் பயன்ப்படுத்தாமல் விடப்பட்டதால் ,வழக்கொழிந்து போன நிலையில் , தமிழில் பல சொற்கள் இல்லை எனவே  அவற்றை எல்லாம் பிற மொழியில் இருந்து கடன் வாங்க வேண்டிய நிலை நிலவுவது போன்று ஒரு மாயை உருவாகிவிட்டது, எனவே பழந்தமிழ் சொற்கள் அல்லது அக்கால சொற்களை முடிந்தவரையில் தேடிப்பார்த்து தொகுக்கலாம் என அவ்வப்போது இணையத்தில் துழாவி வருவது வாடிக்கை ,அப்படி கிடைக்கப்பெற்ற சில அக்கால சொற்களின் தொகுப்பை இப்பதிவில் காணலாம்.

சூடாமணி நிகண்டு:

வீரமண்டல புருடர் என்ற சமணத்துறவி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் பல தமிழ்ச்சொற்களுக்கு உள்ள இணைச்சொற்களை தொகுத்து சூடாமணி நிகண்டு என்ற நூலாக வெளியிட்டுள்ளார். நிகண்டு என்பதற்கு உரிச்சொல் பனுவல் என்ற பெயரும் உண்டு, இவை அகரமுதலிகளுக்கு முன்னோடியாக கருதப்படுகின்றன. ஒரு சொல்லுக்கு பலப்பொருள் விளக்கம் அளிக்க வல்ல நூலாகும்.

சூடாமணி நிகண்டில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் பல்வகை பெயர்களை மட்டும் தொகுத்து "தமிழம்" என்ற இணையத்தளத்தில் வழங்கியுள்ளார்கள், மேலும் புதிய சொற்கள்,பொதுப்பெயர்கள்,படங்கள் இணைத்து அதனை மேலும் மேம்படுத்தி  பகிர்ந்துள்ளேன்.

மூல நூல் புராஜெக்ட் மதுரை இணையத்தளத்திலும் உள்ளது.

விலங்கின் பெயர்த் தொகுதி மற்றும் அவயங்கள் பெயர்கள்:

#சிங்கத்தின் பெயர்
(சிங்கம் டபுளாவும் வரும்!)

வயப்போத்து, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன், வயமா, மடங்கல், கண்டீரவம், பஞ்சானனம்.

யானையாளியின் பெயர்

யாளி, அறுகு, பூட்கை

#புலியின் பெயர்


(கணக்குல படிக்காமலே பட்டம் வாங்கியவர்)

வல்லியம், வயமா, சித்திரகாயம், வெல்லுமா, உழுவை, பாய்மா, வியாக்கிரம், தாக்கு, வேங்கை, குயவரி, சார்த்தூலம், புல், புண்டரீகம், கொடுவரி,

#யானையின் பெயர்

(ஆனை ஆனை அழகர் ஆனை)

தும்பி, மாதங்கம், தூங்கல், தோல், கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்லிலங்கு, நாகம், கும்பி, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உவா, கரி, கயம், களிறு, கைம்மா,
சிந்துரம், வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா, மதகயம், போதகம்,

யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்

யூதநாதன்

(தலைவா! (ஹி...ஹி ஆனால் பெரும்பாலும் யானைக்கூட்டத்துக்கு பெண் யானைகள் தான் தலைமையாம் அவ்வ்)

மதகயத்தின் பெயர்

மதோற்கடம்

யானைவாலின் பெயர்

தாலவட்டம்

யானைவானுனியின் பெயர்

வேசகம்

யானைமுதுகின் பெயர்

மஞ்சு

யானை மத்தகத்தின் பெயர்

மதகம், கும்பம்,

யானை மதம் பாய்சுவட்டின் பெயர்

கரடம்

யானைக் கைந்நுதியின் பெயர்

புட்கரம்

யானைமதத்தின் பெயர்

ஸ்ரீ கடம், கடாம், தானம்

யானைக்கொம்பின் நடுவின் பெயர்

பிரதிமானம்- இரு தந்தங்கள் இடையே தெரியும் முகத்தின் அளவு.

யானைத் தந்தத்தின் பெயர்

கோடு, எயிறு

யானைக்கடைக்கண்ணின் பெயர்

நிரியாணம்

யானைச் செவியடியின் பெயர்

குளிகை

யானைக் கவுளின் பெயர்

கதுப்பு

யானைத் துதிக்கையுமிழ்நீரின் பெயர்

விலாழி

யானைப் பல்லடியின் பெயர்

கரீரம்

யானைமுன்காலின் பெயர்

காத்திரம்

யானைப்பின்காலின் பெயர்

அபரம்

யானைத் துதிக்கையின் பெயர்

தொண்டை, தொண்டலம், சுண்டை

யானைப் பிடியின் பெயர்

வடவை, அத்தினி, கரிணி

யானைத்திரளின் பெயர்


(போவாமா ஊர்கோலம் ...காடெங்கும்...)
கடகம்

#யானைக்கன்றின் பெயர்

கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி

யானைபடுகுழியின் பெயர்

பயம்பு

யானை நோயின் பெயர்

பாகலம்

##குதிரையின் பெயர்


(சிட்டாப்பறக்கும் செவலைக்குதிரை)

பரி, தூகம், பாடலம்., கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி, அயம், இவுளி, மா, அச்சுவம், புரவி, கோரம், குரகதம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை
கத்துகம், கனவட்டம், பத்திரி, துரங்கம், குந்தம், அத்திரி,

குதிரை மயிரின் பெயர்

மேசகம், சுவல், குசை

குதிரைக்குளம்பின் பெயர்

குரம், குரச்சை

குதிரை போமார்க்கத்தின் பெயர்

மாதிகம்

#பசுவின் பெயர்
(புல்லுக்கொடுத்தா பாலு கொடுக்கும்)

கூலம், கோ, குடம், சுரபி, ஆ, நிரை, தேனு, பெற்றம்

தெய்வப்பசுவின் பெயர்

கபிலை, தேனு

மலட்டுப்பசுவின் பெயர்

வசை

ஈன்றபசுவின் பெயர்

வற்சலை

பசுவின் கன்றின் பெயர்

வற்சம்

ஒரீற்றுப்பசுவின் பெயர்

கிட்டி

நற்பசுவின் பெயர்

பத்திரை

பசுவின் முலைப் பெயர்

சுரை

உதைகாற்பசுவின் பெயர்

சுதை

முலை மடியின் பெயர்

செருத்தல், ஆபீனம்

பசுக்கூட்டத்தின் பெயர்



நிரை, தொறு, காலி, கோட்டம், காலேயம்

எருத்தின் பெயர்
(முன்னால பாயும் முரட்டுக்காளை )

பாறல், சே, பெற்றம், பூணி, பாண்டில், கொட்டியம், இறால், ஏறு, மூரி, புல்லம்,

எருத்தின் முரிப்பின் பெயர்

இமில்

பேரெருத்தின் பெயர்

பாறல், பகடு, தூர்வகம்

இடபத்தின் பெயர்

ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

பொதியெருத்தின் பெயர்

தூர்வகம், துரியம்

எருமையின் பெயர்

காரான், வடவை, மேதி, சைரிபம், கவரி, காரா, மூரி, மகிடம்

எருமையாண் பெயர்

கடா, பகடு

மலட்டெருமையின் பெயர்

மை

#ஆட்டின் பெயர்


(ஆத்தா ஆடு வளத்தா பேரு வைக்கலையே அவ்வ்- ஜமுனாபாரி ஆடு)

அருணம், செம்மறி, மோத்தை, அசம், உதள், உடு, கொச்சை, துருவை, ஏழகம், வற்காலி, துள்ளல், பள்ளை, வெள்ளை, வருடை, மேடம், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், புருவை, தகர்

செம்மறியாட்டின் பெயர்

துருவை, மை, கொறி

செம்மறியாட்டாணின் பெயர்

தகர், கடா, திண்ணகம், ஏழகம், கம்பளம்

ஆட்டுக்குட்டியின் பெயர்

குட்டன், சோரன், மறி, பறழ்

வெள்ளாட்டின் பெயர்

வெள்ளை

வெள்ளாட்டாணின் பெயர்

செச்சை, சாகம், மோத்தை

#வரையாட்டின் பெயர்




(தமிழ்நாட்டு "தேசிய விலங்கு")

சரபம், வருடை,கேளையாடு,சருகு மான்

#பன்றியின் பெயர்

கேழல், அரி, குரோடம், கிரி, கிடி, கிருட்டி, ஏனம், மோழல், இருளி, வல்லுளி, களிறு, மைம்மா, கோட்டுமா, போத்திரி, வராகம், கோலம், குகரம், எறுழி

#முட்பன்றியின் பெயர்

சல்லியம், முளவுமா, எய், சல்லகம்



(கவுண்டரின் வளர்ப்பு!)

*முட்பன்றி முள்ளின் பெயர்

சலம், சவலம்

#கரடியின் பெயர்
(இங்கே யாருப்பா டீ.ஆர் வரச்சொல்லு ஒரு கைப்பார்க்கிறேன்)

பல்லுகம், உளியம், எண்கு, பல்லுகம், எலு, பல்லம், குடாவடி


#மானின் பெயர்


(அந்த "மானை"ப்பாருங்கள் அழகு!)

அரிணம், சாரங்கம், நல்லி, உழை, பிணை, குனம், மிருகம், மறி, குரங்கம், ஏணம்

#கவரிமா(ன்) பெயர்.


"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்"


மயிர் நீப்பின் உயிர் வாழா "கவரிமா" எனத்தான் வள்ளுவர் சொல்லி இருக்கார் ,மான் என்றல்ல,கவரிமான் என ஒரு மானே இல்லியாம்.

கவரி - மயிர், மா- பெரிய விலங்கு.

இதன் அடிப்படையில் "கவரி"மா என சொல்லப்படுவது திபெத்திய "யாக்" வகை மாடு ஆகும்.வயதாகி மயிர் உதிர்ந்துவிட்டால் குளிர் தாங்காமல் யாக் இறந்துவிடும்,அதை தான் திருவள்ளுவர் ஒப்பிட்டு இருக்கனும். வள்ளுவர் திபெத்துக்குலாம் போயிருப்பாரா?

(எந்த குறளும் எனக்கு தெரியாது "குளிர்" தான் தெரியும் அவ்வ்)

படகம், பட்டம், மனமா, எகின்

#சாமரத்தின் பெயர்

பவரி, சீகரம், கவரிமா(ன்) வகை


#காட்டுபசு,எருதுவின் பெயர்




கவயமா, கவயல்,ஆமா,கடமா,காட்டா,மரை,காட்டேணி,காட்டுப்போத்து.


#கத்தூரிமானின் பெயர்


(இந்திய கஸ்த்தூரி மான்)

துருக்கம், நானம், மான்மதம், நரந்தம்.

(இமயமலை கஸ்த்தூரி மான்)


(கஸ்தூரி மான்குட்டி கண்ணீரை ஏன் சிந்துதாம்?)

வாசனை திரவியம் கஸ்தூரிக்காக பெருமளவு வேட்டையாடப்பட்டுவிட்டதால் அழியும் நிலையில் உள்ள அரிய இனமான் ஆக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

#கலைமானின் பெயர்(blackbuck)





கரும் இரலை, வச்சயம், புல்வாய், கருமான்

#  வெள்ளை வெளிமான் பெயர்




வெள்ளை இரலை,புல்வாய்,ஏணம்,சூனம், உழை மான்.

#கழுதையின் பெயர்

வாலேயம், கர்த்தபம், காளவாய், அத்திரி, கோகு, வேசரி, கரம்

#கோவேறு கழுதையின் பெயர்


(கற்பூர வாசனை தேடுறரோ?)

வேசரி

#ஒட்டகத்தின் பெயர்


(இந்தியனெல்லைப்பாதுகாப்பு ராணுவத்தின் ஒட்டகப்படை)

தாசேரம், அத்திரி, நெடுங்கழுத்தல்

#நரியின் பெயர்

(ஓடுற(வேக) நரியில ஒரு நரி குள்ளநரித்தான் ஆ ஜிங் ஜக்கா ஜிங்!)

ஒரி, கோமாயு, ஊளன், ஒண்டன், இகலன், சம்பு, பூரிமாயன், குரோட்டா, சிருகாலன்

#கீரியின் பெயர்

காத்திரி, நகுலம், தீர்வை

#குரங்கின் பெயர்

வலிமுகம், கடுவன், வானரம், அரி, மந்தி, பிலவங்கம், கோகிலம், கோடாரம், யூகம், மர்க்கடம், நாகம், கவி,

கருங்குரங்கின் பெயர்

காருகம், யூகம்


#அனுமன் குரங்கின் பெயர்




முசு,ஒரி, கோலாங்கூலம், மைம்முகன், கள்வன், கலை

#நாயின் பெயர்


(கொஞ்சம் ஸ்சூனு விரட்டிட்டு போறது  அவ்வ்)

சூரன், முடுவல், பாசி, புரோகதி, சுனகன், குக்கல், கூரன், எகினன், அக்கன், குரைமுகன், ஞமலி, ஞாளி, சாரமேயன், கணங்கன், சுவர்

பெண்ணாயின் பெயர்

முடுவல்

செந்நாயின்(cuon alpinus) பெயர்

(செவப்பா இருக்கிறதால பொய் சொல்லாது அவ்வ்)

விருகம், கொக்கு

#பூனையின் பெயர்


(வேட்டையில் காட்டுப்பூனை)

வெருகு, அலவன், ஓதி, விடாரகம், விலாளம், பூசை, மார்ச்சாலம், பாக்கன், இற்புலி


#நாவியின் பெயர்

மறுவி



#ஒந்தியின் பெயர்


,பச்சோந்தி,சாயானதம், சரடம், காமரூபி, தண்டு, ஓமான், ஓதி, கோம்பி, முசலி, ஒத்தி,


#எலியின் பெயர்

சிகரி, ஆகு, இரும்பன்

#மூஞ்சூற்றின் பெயர்

சுவவு, சுண்டன், சுசுந்தரி


#காரெலியின் பெயர்

கருப்பை

#பெருச்சாளியின் பெயர்

களதம், துந்துளம், ஆகு, முடுடிகம், உந்துரு

#அணிலின் பெயர்


(ஹி...ஹி ஜில்லா விட்டு ஜில்லா வந்த அணில்)

வரிப்புறம், வெளில்

#உடும்பின் பெயர்

தடி, முசலி, கோதா,

#முயலின் பெயர்

சசம்

#பாம்பின் பெயர்

அரவு, கட்செவி, போகி, அகி, அரி, வியாளம், சர்ப்பம், உரகம், பன்னகம், நாகம், மாசுணம், சக்கிரி, புயங்கம், பாந்தள், அங்கதம், பணி,

சாரைப்பாம்பின் பெயர்

அண்டம், இராசிலம்

மண்டலப் பாம்பின் பெயர்

கோளகல்

கண்குத்திப் பாம்பின் பெயர்

மாலுதானன்

பெரும்பாம்பின் பெயர்

மாசுணம், பாந்தள்

நாகத்தின் பெயர்

மூர்க்கன்

கருவழலைப் பாம்பின் பெயர்

இராசமாநாகம்

பறவை நாகத்தின் பெயர்

குக்குடசர்ப்பம்

பாம்பின் படத்தின் பெயர்

பணம், பை,

படப் பொறியின் பெயர்

உத்தி, துத்தி

பாம்பின் நச்சுப் பல்லின் பெயர்

தட்டம்

பாம்புயிர்ப்பின் பெயர்

அதட்டம்


#மயிலின் பெயர்

(அழகு மயிலாட  அபிநயங்கள் கூடும்)


சிகி, ஞமலி, தோகை, சிகாவளம், சிகண்டி, மஞ்ஞை, ஓகரம், மயூரம், பிணிமுகம், கலாபி, நவிரம், பீலி, கேகயம்

மயிற்பீலியின் பெயர்

சரணம், சிகண்டம், கூந்தல், சந்திரகம், கலாபம், கூழை, தோகை, தொங்கல், தூவி

மயிற்குரலின் பெயர்

அகவல், ஆலல், ஏங்கல்

இறகின் முள்ளின் பெயர்

முருந்து.

# அன்னத்தின் பொதுப்பெயர்


(அன்னமே மதுக்கிண்ணமே அவ்வ்)

எகினம், ஓதிமம், மராளம், விகங்கம், வக்கிராங்கம்


அன்னச்சிறகின் பெயர்

தூவி

* அன்னப்பறவை ,பாலும் ,நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பிரித்து பருகும் என சொல்லப்படுவதெல்லாம் ச்சும்மாச்சுக்கும் "கப்சா' அல்லது அப்படியான பறவை இல்லை,அழிந்து போயிருக்கலாம்,தற்சமயம் உள்ளதெல்லாம் "வாத்து"வகை அன்னங்களே.

#சாதகப்புள்ளின் பெயர்


(பாடும்வானம்பாடி...பாட வா நீ...)

சாரங்கம்,வானம்பாடி,சாதகப்பட்சி(பறவை),நெல்குருவி.

#எண்காற்புள்ளின் பெயர்.
(கிரீஷ்-4 இல் கிராபிக்ஸ் செய்தாலும் செய்வாங்க ...ஹி..ஹி)


சிம்புள், வாருண்டம், வருடை, சம்பரம், துரோணம், சரபம்,வெம்பறவை,கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை ,இது ஒரு இதிகாசப்பறவை,இயல்பில் இல்லை.சிவன் சரபப்பறவை அவதாரம் எடுத்து நரசிம்மவதாரத்தை அடக்கினார் என புராணம் சொல்கிறது.

வெட்டுக்கிளிக்கும் இப்பெயர் உண்டு.


#கருடன் பெயர்


(கருடா சவுக்கியமா?)

கலுழன், வைனன், வைனதேயன், பன்னகவைரி, தார்க்கியன், பறவைவேந்தன், உவனம்


#கழுகின் பெயர்
(நீலகிரி "இரவுக்கழுகு" ஜீவில ரகசிய ரிப்போர்ட்டரா வேலை! அவ்வ்)

புண்டரம், கங்கம், எருவை, பவணை, உவணம், சகுந்தம்,

#பருந்தின் பெயர்


(பாறு-நீலகிரி வல்லூறு -Gyps indicus)

சேனம், பாரசிகை, பாறு, கங்கம்

# அசுணமாவின் பெயர்

கேகயம்(மயில் அல்லது பருந்து/வல்லூறு)

#கிளியின் பெயர்.


(பழம் கொடுத்து வளர்த்த கிளி கச்சேரிக்கு வருமா?)

சாரு, அரி, வன்னி, தத்தை, சுகம், கிள்ளை, கீரம், சுவாகதம், அவந்திகை

மலபார் நீலக்கிளி.
(மலபார் என்றாலே அழகு தான்...ஹி...ஹி)

#கருங்கிளியின் பெயர்

(கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..)

கீரம், கிள்ளை

#சக்கரவாகப்புள்ளின் பெயர்


(பறவையின் சிறகில் பாஸ்போர்ட் இல்லை ...)

நேமிப்புள், கோகம், யானைக்குருகு(பறக்கக்கூடிய அன்னமும் சக்ரவாகமே,நிலமுகி வகையே)


#நிலாமுகியின் பெயர்


(லக லக ....சந்திரமுகி!)

சகோரம்,அன்னம்,சக்கரவாகம்,(brahmany goose- swan)

#செம்போத்தின் பெயர்




குக்கில்

#குயிலின் பெயர்


(இந்திய பொது குயில்)

கோகிலம், களகண்டம், கோரகை, பிகம், பரபுட்டம்

கருங்குயில்.

(கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வரியா..வரியா)

மாங்குயில்.


(மாங்குயிலே ...பூங்குயிலே சேதி ஒன்னு கேளு..)


செண்பக்குயில்.

இந்தக்குயிலைத்தான் பூங்குயில்னு சொல்லுறாங்களோ?


(பூங்குயிலே பாட்டுஓன்னு பாடு)

#மைனாவின் பெயர்
(மஞ்சக்காட்டு "மைனர்"மைனா)

பூவை, சாரிகை,நாகணவாய்ப்புள்(மைனா.)

# கரிச்சான் குருவியின் பெயர்


வலியன்,கஞ்சனம், கிகினி, வயவன், கஞ்சரீடம், பாரத்துவாசம்,கரிக்குருவி,கரிச்சான்,கயவாய்,ஆனைச்சாத்து.

#காரிப்பிள்ளையின் பெயர்

வஞ்சுளன், வயவன், வயான்



#மீன்கொத்தியின் பெயர்(king fisher)


(மோர் கூட குடிக்காத என்ன பீர் பாட்டிலில் எதுக்குய்யா போட்டாங்க அவ்வ்)

கிச்சிலி,சிநல், கவுதம், பொன்வாய்ப்புள், தித்திரி


#ஆந்தையின் பெயர்.

இருடி, பிங்கலை, கின்னரம்

ஆந்தை எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

(இந்திய பொது ஆந்தை -bubo bengalensis)

மண்ணில் குழித்தோண்டி வலையமைத்து வாழும் ஆந்தை மண்ணாந்தை எனப்படும் அல்லது குழி ஆந்தை.

(நாங்க எவ்ளோ ஸ்மார்ட் ஆனால் மடத்தனத்துக்கு எவனோ மண்ணாந்தைனு சொல்லிட்டானே அவ்வ்)


#கோட்டான் பெயர்




கூகை, உலூகம், குடிஞை, குரால்

* கூகை,கோட்டான் இரண்டுமே நீண்ட ஒலி எழுப்பி "கூவும்- கூகை" ஆகும்,ஆனால் தலையில் கொம்பு போல (கொம்பு- கோடு) உள்ளது "கோட்டான் ஆகும்.

#கூகையின் பெயர்








பெரும்புள், கெளசிகம், ஊமன்

#கோழியின் பெயர்.


(கொண்டை சேவல் கூவக்கிளம்பிட்டார் ..இனிமே விடிஞ்சிடும் அவ்வ்)

குருகு, காலாயுதம், குக்குடம், ஆண்டலைப்புள், வாரணம்

#வரகுக்கோழி.

அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.


(வறுத்து சாப்பிட்டே வரகுக்கோழியை காலிப்பண்ணிட்டாங்களே அவ்வ்)

#காட்டுக்கோழி.

சேவல்.
(கொக்கரக்கோ சேவல்)

பெண் காட்டுக்கோழி.


நீர்ச்சேவல்கோழி.

(தரைமேல் பிறக்க வைத்தான் தண்ணீரில் நடக்க விட்டான் அவ்வ்)

ஏசுக்கோழி:


(இலை மலர்ந்தால் ஈழம் வரைக்குமே நடப்பேன் அவ்வ்)


தாமரை இலைகளின் மேல் நடக்க வல்லது ,தொலைவில் இருந்து பார்க்கும் போது தண்ணீர் மேல் நடப்பது போல தெரிவதால் அபூர்வ சக்திக்கொண்டது என்ற பொருளில் "கிருத்து (அ) ஏசுக்கோழி என அழைப்பர்.

தாமரைக்கோழி எனப்பொதுவாக அழைக்கப்படுகிறது.

#ஊர்க்குருவியின் பெயர்


(சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?)


சிட்டுக்குருவி,குலிங்கம், சடகம், புலிங்கம்


நெற்குருவி:

(நல்லவேளை இன்னும் பிடி நெல் வரலை அவ்வ்)



#கானங்கோழியின் பெயர்.


(கண்ணியில சிக்காதய்யா காணாங்கோழி)

கலிங்கம், கம்புள்

#காடையின் பெயர்

(கடாய் ஃப்ரை காடை இதானா அவ்வ்)

குறும்பூழ்.

#சிவலின்(ஒரு வகை கவுதாரி) பெயர்




கோரசம், புல், இதல்

#கவுதாரியின் பெயர்

சிரவம்,கதுவாலி,

#பகண்டையின் பெயர்


சில்லை,சிவப்புக்குருவி.

#பொய்யாப்புள்ளின் பெயர்
(எனக்கு பொய் சொல்லப்புடிக்காது அதனால தான் இன்னும் "பிலாக்" ஆரம்பிக்கலை அவ்வ்))

சலாங்கு,ஒரு வகை அன்னம்.(அ)நீர்க்கோழி.



#புறாப் பொதுப் பெயர்

தூதுணம், கபோதம், களரவம்

மரகதப்புறா(emerald dove)

(தமிழ்நாட்டின் "தேசிய பறவை")

#கரும்புறாவின் பெயர்

பாராவதம், கபோதம்


#மாடப்புறாவின் பெயர்


(மயக்கும் மாடப்புறா )

கன்மேய்வு, காளபதம்

#உள்ளான் பெயர்
(நெடுங்கால் உள்ளான்- பிரியாணி ரெடி)


(குட்டைக்கால் உள்ளான்-Common Sandpiper )
உள்ளல்

#தூக்கணங்குருவியின் பெயர்


(தூக்குனா குருவி ...எறக்குனா அருவி!)

சிதகம்

#சம்பங்கோழியின் பெயர்


கம்புள்,காட்டுக்கோழி,காட்டுகவுதாரி.


#நீர்வாழ் பறவையின் பொதுப்பெயர்

உன்னம், கிராமம், உற்குரோசம், கின்னரம்


#அன்றிலின் பெயர்


(ஒன்னு இங்கே இருக்கு ,இன்னொன்னு எங்க?)
கவுஞ்சம்

#கொக்கின் பொதுப்பெயர்

குரண்டம், வாலாகம், பகம்.


#கொய்யடி நாரையின்(grey heron) பெயர்




குருகு, வண்டானம்,சாம்பல் நாரை.

"வண்டானம்" என்ற ஊர் தூத்துக்குடி அருகே உள்ளது ,வண்டானம் உலகநாதப்பிள்ளை.சிதம்பரம் என்பதே "வ.உ.சி"யின் முழுப்பெயர். கடற்கரையோர ஊர் என்பதால் இவ்வகை நாரைகள் அங்கு நிறையக்காணப்பட்டதால் அவ்வூருக்கு பெயர் வதிருக்கலாமோ?

#பொருநாரையின்(greater adjutant- (Leptoptilos dubius) பெயர்


(பெரியண்ணன்)

பிதா, போதா

சிறு பொருநாரை-Lesser Adjutant (Leptoptilos javanicus)


(சின்ன தம்பி)

சிறு போதா, சிறு பிதா.

# பெரும் பூநாரை.(Greater Flamingo)




சிறு பூநாரை: Lesser Flamingo :





#செங்கால்நாரை.

 சங்கப்பாடலில் "நாரைவிடு தூது" ஆக பாடல்ப்பெற்றது செங்கால் நாரை. சத்திமுத்து  என்ற ஊரின் பெயரால் அறியப்படும் புலவர் ,தன் மனைவிக்கு தூதாக செங்கால் நாரையை அனுப்புவதாக பாடிய பாடல் புகழ்ப்பெற்ற ஒன்று.

"நாராய் நாராய் செங்கால் நாராய்


பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்

நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

"எங்கோன் மாறன்வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

இப்பாடலை தற்செயலாகக்கேட்ட பாண்டிய மன்னன் "வழுதி மாறன்" பரிசில் அளித்து ,புலவரின் துயர் துடைத்தானாம்.



(காம்ளான் குடிச்சு நானும் பூநாரை போல உசரமா ஆகிக்காட்டுறேன்)


purple heron- செந்நாரை.

(இது மேக்கப் இல்லிங்ணா எல்லாம் ஒரிஜினல்)

செந்நீலநாரை எனவும் அழைப்பதுண்டு.

#வெள்ளை நாரையின் பெயர்


(கிரேன் பாக்கு கம்பெனி ஓனர்)

சாரசம்

#கருநாரையின் பெயர்


(ஃபேர்&லவ்லி போட்டு நானும் வெள்ளையாகி காட்டுறேன்)

சிகரி


மடையான் -I(ndian Pond Heron )


 (எந்த மடையனோ எனக்கு போய் மடையானு பேரு வச்சிட்டனே ...அவன)

குருட்டு கொக்கு,குளக்கொக்கு.

#கரை கொக்கு.(reef heron)

(வளரும் கொக்கு இவன் அப்படியே சாப்பிடுவான் அவ்வ்)

#நீர்க்காக்கையின் பெயர்


(எவ்ளோ "தண்ணி"யிலும் தள்ளாடாத "தண்ணீர்"காகம்)

அர்க்கம், காரண்டம்

ஆலாப்பறவை(seagull)




கடல் புறா, வலசை பறவை.

#வண்டின் பெயர்

அரி, அளி, ஞிமிறு, மந்தி, அறுபதம், சிலீமுகம்,சஞ்சரிகம், சரகம், சஞ்சானிகம், சுரும்பு, கீடம், பிரமரம், மா, கீதம், பிருங்கம்,பிரசம், புள், புண்டரீகம், தும்பி, மதுபம்

பெண்வண்டின் பெயர்

கரும்புள், கேசவம், தேன்

ஆண்வண்டின் பெயர்

சுரும்பு, மதுகரம், தும்பி

#வீட்டு வவ்வால். பெயர்

ஆலாலம்,துருஞ்சில்.

#வாவலின் பெயர்(ஹி..ஹி வவ்வால்)


அஞ்சலிகை

.#கரையான்-ஈசல் பெயர்




ஈயல், மூதா,இந்திரகோபம்.

#தேனீயின் பெயர்

சரகம், பிரசம்

#சிள் விட்டின்(cricket) பெயர்




சிதடி, சில்லிகை, சில்லை, சிமிலி

#விட்டிற் பறவையின் பெயர்




சலபம், பதங்கம்,வெட்டுக்கிளி.


#விலாங்கின் பெயர்

பூழ்

#அளம்பின்(கொசு) பெயர்

நிலத்தி

#மின்மினியின் பெயர்

கச்சோதம்

#கொதுகின்(சிறு கொசு) பெயர்




கொசு,மசகம், துள்ளல், அசவல்,உலங்கு,ஒலுங்கு,சுள்ளான்,முஞல்,நுளம்பு.

#முதலையின் பெயர்



இடங்கர், சிஞ்சுமாரம், வள்மீன், கராம்

ஆண்முதலையின் பெயர்

சாரம்

#ஆமையின் பெயர்


(அரிய வகை கிரீன் ரிட்லி ஆமை)

கூர்மம், உறுப்படக்கி, கச்சபம், கமடம்

#பெண்ணாமையின் பெயர்

துளி

#விலாங்கின் பெயர்

நூறை

#கிளிஞ்சலின் பெயர்

ஏரல், எருந்து, ஊரல்

#இறால்மீனின் பெயர்

இறவு

#ஆரான்மீனின் பெயர்

ஆரல்

#கெண்டை மீனின் பெயர்

சபரம், சேல்

#நத்தையின் பெயர்

கருநந்து, நாகு

#அட்டையின் பெயர்

உரு

#மீன் பொதுப்பெயர்

மயிலை, மற்சம், பழல்

#பல்லியின் பெயர்

புள்ளி, கெவுளி, கோகிலம்

#நாகாவண்டின் பெயர்

நொள்ளை


#சிலந்தியின் பெயர்

,காலந்தி,உலூதை(எறும்புக்கும் இப்பெயருண்டு)

#எறும்பின் பெயர்

பிலஞ்சுலோபம், பிபீலிகை

#பூநாகம் பெயர்

நாங்கூழி

#செல்லின் பெயர்

சிதலை, கறையான்

#தேளின் பெயர்

நளிவிடம், தெறுக்கால், துட்டன், விருச்சிகம்,

#நண்டின் பெயர்


அலவன்,களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்,வானரப்பகை,

#மரப்புழுவின் பெயர்

உசு,உளு(கொசுவுக்கும் இப்பெயர் உண்டு)

#தவளையின் பெயர்

மண்டூகம், தேரை, அரி, நுணலை, நீகம், பேகம்,

#புழுவின் பெயர்

கிருமி, பொட்டு

#புழுவின் பெயர்

கீடம்,,உலண்டு கோற்புழு

#மலைத்தேனியின் பெயர்

பிரசம்,கோற்றேன்,கோற்றேனி

#தேன்கூட்டின் பெயர்

இறால்.

#நாகத்தின் பெயர்

கரடம், வாயசம், அரிட்டம், கரும்பிள்ளை, கொடி,

------------------------------------------------

இதர உறுப்புகள் மற்றும் பண்புகளின் பெயர்:

விலங்கினாண்பெயர்

கடுவன், மா, ஒருத்தல், போத்து, கலை, தகர், களிறு, சே, பகடு, உம்பல், ஏறு, ஓரி

கடுவனென்னும் பெயர்

குரங்கு, பூஞை, இரண்டுக்குமாம்

மாவென்னும் பெயர்

யானை, பன்றி, புரவி

ஒருத்தலென்னும் பெயர்

கரடி, புல்வாய், மான், யானை, கவுரி, எருமை, பன்றி, புலி, மரை

போத்தென்னும் பெயர்

மரை, பசு, புலி, பூஞை, புல்வாய்

கலையென்னும் பெயர்

முசு, மான்

தகரென்னும் பெயர்

துரவாடு, வேழம், யாளி, சுறா

களிறென்னும் பெயர்

நரி, சுறவு, பன்றி

சேவென்னும் பெயர்

குதிரை, பெற்றம், புல்வாய்

பகடென்னும் பெயர்

எருமை, யானை, பெற்றம்

உம்பலென்னும் பெயர்

இபம்

ஏறென்னும் பெயர்

ஆன், எருமை, பன்றி, கவரி, சங்கு, மான், மரை, புல்வாய், சுறவு

ஓரியென்னும் பெயர்

நரி, முசு

விலங்கின் பெண்பாற்பெயர்

பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணா, ஆ, நாகு, பாட்டி

பிடியென்னும் பெயர்

குஞ்சரம், கவரி, ஒட்டகம்,

பிணையென்னும் பெயர்

உழை, புல்வாய், நாய், வராகம்,

பெட்டை யென்னும் பெயர்

ஒட்டகம், கழுதை, வாசி, சிங்கம், மரை

மந்தியென்னும் பெயர்

முசு, ஊகம், குரங்கு

பிணாவென்னும் பெயர்

புல்வாய், நாய், பன்றி

ஆவென்னும் பெயர்

எருமை, பெற்றம், மரை

நாகென்னும் பெயர்

எருமை, மரை, பெற்றம், நீர்ச்சாதி

பாட்டியென்னும் பெயர்

நரி, பன்றி, நாய்

பிணாப்பெண்ணென்னும் பெயர்கள்

பெண்பாலெவற்றிற்குமாம்

விலங்கின் பிள்ளைப பெயர்

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம்

பறழ் குருளை குட்டியென்னும் பெயர்கள்

புலி, முயல், வராகம், நரி, நாய்

பிள்ளை யென்னும் பெயர்

நாயொழிந்தவற்றிற்காம்

மறியென்னும் பெயர்

ஆடு, அழுங்கு, மான், குதிரை

பறழ், பிள்ளை, குழலி, குட்டி, பார்ப்பென்னும் பெயர்கள்

குரங்கு முதன் மரக்கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளைகட்காம்

கன்றென்னும் பெயர்

கடமை, மான், எருமை, பெற்றம், கவயம், ஒட்டகம், யானை, பரி, மரை, கராம், கவரி

குழலியென்னும் பெயர்

கடமை, மான், எருமை, யானை

போதகமென்னும் பெயர்

புலி, சிங்கம், யானை

பறழ் குட்டி பிள்ளை யென்னும் பெயர்கள்

கீரி, பூனை, முயல், அணில்

பறழ் குட்டி யென்னும் பெயர்கள்

பாக்கன், அணில்

பறழ் பிள்ளையென்னும் பெயர்கள்

பார்ப்பு, தவழ்சாதி

குருளைகன்றென்னும் பெயர்கள்

மான்

குழவிகுருளை யென்னும் பெயர்கள்

யாளி

குழலிகுருளை யென்னும் பெயர்கள்

முசு

விலங்கின் பொதுப்பெயர்

மா, மான், மிருகம், குரங்கு

விலங்கின் கூட்டத்தின் பெயர்

சாலம், வியூகம், யூதம், குலம், விருந்தம், கணம்

விலங்கின் வாலின் பெயர்

கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி

விலங்கின் வாற்கீழிடத்தின் பெயர்

வெருகம்

விலங்கின் கொம்பின் பெயர்

மருப்பு, சிருங்கம், கோடு, உலவை, விடாணம்

கொம்பில்லா விலங்கின் பெயர்

குமரம்

தோலின் பெயர்

கிருத்தி, புறணி, போர்வை, அதள், ஒலியல், தொக்கு, துருத்தி, சருமம், பச்சை, துவக்கு, உரி, வடகம்

ஊனின் பெயர்

தசை, புலால், புலவு, புண், தடி, புளிதம், தூ, பிசிதம், வள்ளுரம், விடக்கு

புலாலின் பெயர்

முடை, ஊழ்த்தல், பூதி, தசை

பசுவினிறைச்சியின் பெயர்

வள்ளுரம்

இரத்தத்தின் பெயர்

எருவை, நெய்த்தோர், சோரி, உதிரம், புண்ணீர், குருதி, செம்பால், புலானீர், சோணிதம், செந்நீர், சுடுவன்கறை

கொழுப்பின் பெயர்

நிணம், விளர், விழுக்கு

கருப்பத்தின் பெயர்

கரு, சினை, பீள், சூல், வயாவு

வழும்பின் பெயர்

வழுக்கு

ஈரலின் பெயர்

ஈருள்

முடையின் பெயர்

புலவு, ஊத்தை

மாசின் பெயர்

மலம்

உண்மாசின் பெயர்

உபமலம்


மயிலும் ஏழாலுமல்லனவாகிய புள்ளினாண்பெயர்

சேவல்

கோழி கூகைகளின் பெண் பெயர்

அளகு

பறவைப்பெண்ணின் பெயர்

பெடை, பெட்டை, பேடை

புட்பொதுவின் பெயர்

லிகங்கம், ஆசுகி, வீ, விகிரம், குடிஞை, பக்கி, சகுந்தம், பத்திரி, பதங்கம், பிணிமுகம், சுகம், பறவை, பதகம், போகில், குரீஇ, வயானம்

இறகின் பெயர்

சிறகு, சதனம், வாசம், சிறை, பிஞ்சம், கூரல், பக்கம், பறை, சதம், தூவி, தோகை, பத்திரம், குரல், கூழை, இறை

முட்டையின் பெயர்

அரிட்டம், கோசம், அண்டம், சினை

பறவைக் குஞ்சின் பெயர்

பிள்ளை, பார்ப்பு

பறவை மூக்கின் பெயர்

சுச்சு, சுவவு, துண்டம், அலகு

புட்சிறகடித்துப் புடைத்தலின் பெயர்

ஓசனித்தல்

புள்ளீட்டத்தினோசையின் பெயர்

துழனி

பறவைக் கூட்டத்தின் பெயர்

தொழுதி

மகாமீனின் பெயர்

கலை, சுறா, மீனேறு

பெருமீனின் பெயர்

யானை மீன், திமி

யானைமீனை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலம்

திமிங்கிலத்தை விழுங்குமீனின் பெயர்

திமிங்கிலகிலம்

சங்கின் பெயர்

நந்து, சுத்தி, நாகு, வளை, கம்பு, கோடு, வாரணம், வண்டு, இடம்புரி, வெள்ளை

வலம்புரிச் சங்கின் பெயர்

கொக்கரை

சலஞ்சலத்தின் பெயர்

பணிலம்

இடம்புரி

இப்பியாயிரஞசூழ்ந்தது

வலம்புரி

இடம்புரிச் சங்காயிரஞ் சூழ்ந்தது

சஞ்சலம்

வலம்புரியாயிரஞ் சூழ்ந்தது

பாஞ்சசன்னியம்

சலஞ்சலங்களாயிரஞ் சூழ்ந்தது

-------------------------

தொடர்புடைய சில பழையப்பதிவுகள்:

வனவிலங்குகளின் அறிவியல்ப்பெயர்கள்-1

#அறிவியல்ப்பெயர்கள்-1

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்-2

#அறிவியல்ப்பெயர்கள்-2


காணாமல் போகும் நாட்டுக்காளைகள்.

#காளை-1

#காளை-2


-------------------------
பின்குறிப்பு;

#முடிந்த வரையில் படங்கள் இணைத்துள்ளேன், பிறப்படங்கள் கிடைப்பதைப்பொறுத்து  இணைக்கப்படும்.


# பிறகு பிழை திருத்தம் &விளக்கம், மேம்பாடு செய்யப்படும்.

# http://www.thamizham.net/pezhi/sangam/nikandu03-u8.htm

# http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0118.html

# பிடிஎஃப் கோப்பாக வேண்டுவோர் நூலகம் இணையத்தளத்தில் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்.

http://noolaham.net/project/48/4782/4782.pdf

நன்றி!


தகவல் மற்றும் படங்கள்,

விக்கி & கூகிள் இணையத்தளங்கள்,நன்றி!
---------------------------------------------

23 comments:

suvanappiriyan said...

ஆஹா.... பல புதிய தகவல்கள்.

Anonymous said...

இன்னாபா இது....அஞ்சலிகைன்னு இருக்கு...அசின்னு இருக்கும் என்று நினைத்தேன்....:-)))



-----கொங்குநாட்டான்

வவ்வால் said...

திரு.சு.பி.சுவாமிகள்,

வாங்க,நன்றி!

இப்படிலாம் புதுத்தகவல்கள் போட்டாத்தான் வருவேன்னு அடம் புடிக்குறிங்களே அதான்!!!
-------------------

கொங்குநாட்டார்,

வாரும்,நன்றி!

ஹி...ஹி அன்னப்பறவைக்கு அந்த பேர வச்சிடலாம்!

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அஞ்சலிகை அண்ணாச்சி,
நலமா?
அருமையான தகவல்கள் நன்றி.
யப்பா எவ்வளவு பெயர்கள்!!!!!!!!!!!!!!

"வயமா" - என்கிற வார்த்தை சிங்கம், புலி மற்றும் யானையின் பொது பெயரா?

ஒரு மிருகத்திற்கு எப்படி இவ்வளவு நிறைய பெயர்கள் வந்தது? நம் முன்னோர்கள் அவர்களிடையே இருந்த Ego காரணமாக, அவன் வைத்த பெயரை நான் உபயோகப்படுத்த மாட்டேன் என்று அவரவர்கள் தனக்கென்று ஒரு புது பெயரை வைத்துக்கொண்டார்களா? அல்லது, நிஜமாகவே ஒரே மிருகத்திற்கு பல பெயர்கள் இருப்பதால் நன்மை இருக்கிறதா?

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

ஹி...ஹி நம்ம பேரு ராசிக்கு அஞ்சலிகைனு போட்டு வச்சிட்டாங்க அவ்வ்!

# "வயமா"னு ஏன் எல்லாத்துக்கும் பொதுவா பேரு வச்சிட்டாங்கனு சுலுவா கேட்டுப்புட்டீர் அதுக்கு பின்னால தமிழ் இலக்கணமே இருக்கு ,அதான் தமிழோடப்பெருமை ...அட டா கேப்பு கிடைச்சா போருமே தமிழ் ,கிமிழ்னு மொக்கை போடுறானேனு மக்கள் திட்டுறதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை அவ்வ்!

இந்தப்பதிவுல பேரு மட்டும் தான் போட்டிருக்கு ,படங்கள் இருக்கு என்ன கஷ்டம்னு நினைக்கலாம்,ஆனால் நாம வழக்கம் போல இருப்பதை எடுத்து அப்படியே போடுவதில்லை என்பதால் உள்ள பூந்து ஆராய்ந்தாச்சு , அப்போ தான் தெரியுது, தமிழ்னு இல்லை ஆங்கிலத்திலும் முறையாக விலங்குகள் பறவைகள் என ஒரே தளத்திலே பெயரோட,படங்களோட இல்லைனு, பறவைக்குனு தனியா தான் இருக்கும், அப்படி இருப்பதிலும் நீர்ப்பறவை,நிலப்பறவைனு தனி தளமா போயிடுது, அதுல நாடு, மாநிலம் சார்ந்துனு பிரிந்து போயிடுது.

தமிழ்ப்பேர வச்சிக்கிட்டு இணையத்தில படம் தேட நான் பட்டப்பாடு இருக்கே அய்யய்யோ செம கொடுமைடா சாமினு ஆயிடுச்சு, இன்றைய தேதிக்கு தமிழ் பெயர்கள் + படத்தோட இருக்கிற ஒரே தளம்னு தமிழ்ல தளங்களே இல்லை, ஹி...ஹி இப்பொ நான் போட்டிருப்பது தான் மிக அதிக எண்ணிககையில் பெயர்கள்,படங்கள் கொண்ட தமிழ் தொகுப்பு ..என்ன ஒரு தற்பெருமைனு திட்டுறதுக்கு முன்ன முடிச்சுக்கிறேன் அவ்வ்!

இன்னும் கொஞ்சம் படங்கள் இருக்கு , அப்லோட் செய்ய பொறுமை இல்லாததால் அப்படியே கிடக்கு ,மேலும் பெயர்கள் வேறு சரிப்பார்க்கனும்,எனவே பிறகு பதிவேற்றம் செய்கிறேன்.

சரி வயமாவுக்கு வருவோம், தமிழில் பெயர்களை ,காரணம்(காரணப்பெயர்)பண்பு,குணம், தோற்றம், உறுப்பு என ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் வைப்பதுண்டு, இவற்றை ஆகுபெயர்கள் என்பார்கள். பொதுவாக உலகம் முழுக்கவே இப்படி உண்டு,ஆனால் விளக்கமா இலக்கணம் வகுத்தது இல்லை, ஏதோ ஒரு காரணத்துடன் "காரணப்பெயர்" அளவில் இருக்கும்.

சூடாமணி நிகண்டில் தொகுக்கப்பட்ட பெயர்கள் எல்லாம் சங்க கால இலக்கியம் தொட்டு புலவர்களால் சூட்டப்பட்டு வந்தப்பெயர்களே,புலவர்கள் சங்கப்பாடலில் ஒலிநயம், இயைப்புக்கு ஏற்ப பெயர்களை பயன்ப்படுத்தி வந்துள்ளார்கள், எனவே ஒரே பண்பின் அடிப்படையில் பல மிருகங்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள், அப்பாடலுடன் படிக்கும் போது தான் இப்பெயர் இன்ன விலங்குக்கு என பொருள் தரும்.

வயம் - வலிமை , மா - பெரிய.

இலங்கையை ஆண்ட தமிழ் மன்ன பேர் கூட வயவன் என இருக்கு.

பெரிய வலிமையான விலங்கு என சொல்வது, எனவே சிங்கம்,புலி,யானை என எல்லாவற்றையும் வயமா என பண்பாகுபெயராக சொல்லியுள்ளார்கள், பாடலில் உள்ள இதர வர்ணனைகளுடன் படித்து பொருள் கொண்டால் தான் இன்ன விலங்கு என அறிய முடியும்.
இன்னும் சொல்லப்போனால் கரிச்சான் குருவிக்கு வயவன் என்று பெயர் உண்டு ,காரணம் கரிச்சான் குருவியின் குஞ்சை தாக்க ,தூக்க கருடன்,கழுகு பருந்து என வந்தாலும் எதிர்த்து நின்று சண்டைப்போடுமாம், பயங்கர வேகமா பறந்து போய் கழுகு மேல "புல்லட்" போல மோதி அடிக்குமாம். அப்பொ அடி பலமா பலமாக விழுமாம்,ஆனை அடிச்சா போல அடி இருக்கும் என ஆனைச்சாத்தன் எனவும் பண்பாகு பெயர்.

சின்ன குருவி என்றாலும் வேகமா பறந்து தாக்கும் 'வலியவன்" என சொல்ல "வயவன்' என்ற பெயர் கரிச்சானுக்கு உண்டு.

சூடாமணி நிகண்டு என்ற நூலில் பெயர்களை பாடலாக எழுதி வச்சிட்டு போயிட்டார்,அதுக்கு விளக்க உரை போடுறேன்னு , தனி தனியா பிரிச்சு மட்டும் எழுதி புக்கு போட்டிருக்காங்க ,விளக்கமே இல்லை , ஒரு வேளை நல்ல விளக்காமா வேற புக்கு இருக்கலாம், இப்போ அதை வச்சிக்கிட்டு தனியா தேடி தேடி பார்த்து கிட்டிருக்கேன் அவ்வ்.

நாம எப்பவுமே ஏதோ ஒரு மூலத்தில இருக்குனு அப்படியே எடுத்துப்போட்டுவிடுவதில்லை ,கொஞ்சம் பின்ப்புலமெல்லாம் ஆய்வு செய்துவிடுவதுண்டு (போதுமே உன் சுயப்புகழ்ச்சி அடங்குடானு யாரோ திட்டுறாப்போல இருக்கே அவ்வ்)

# புலவர்கள் இப்படி பலப்பெயரை பயன்ப்படுத்தி வந்தது அவர்களின் கற்பனை வளம், மொழி ஆளுமையை காட்டவே, மேலும் இதனால் மொழியின் வொகாபுலரி( சொல் வளம்) கூடவே செய்யும், இதெல்லாம் 2000 ஆண்டுகளா நடந்த வேலை என்பதை மறக்க கூடாது!

Amudhavan said...

பாதிவரைப் படித்தேன். மீதியைப் பார்த்தேன். நிறைய உழைப்பு தெரிகிறது. எப்படி இத்தனையைத் தேடிப்பிடித்துப் பதிவேற்றினார் என்ற ஆச்சரியம்.ஒவ்வொன்றைப் பற்றியும் ஆதிவரைக்கும் போய் அலசினால்தான் தைரியமாகச் சில விஷயங்களைப் பேச முடியும். அதனைச் செய்திருக்கிறீர்கள்.
'பறவையின் சிறகில் பாஸ்போர்ட் இல்லை' என்ற வரியும் 'தூக்குனா குருவி எறக்கினா அருவி' என்ற வரியும் அழகான ஹைக்கூக்கள். நீங்கள் கவிஞர்கூடவா? இத்தனை நாட்கள் தெரியாதே. வாழ்த்துக்கள்.

குட்டிபிசாசு said...

வவ்வால் அவர்களே,

…அறியாத பல தகவல்களை திரட்டி அறியத் தந்தமைக்கு நன்றியோ நன்றி! வாழ்க உமது புகழ்! வளர்க உமது தமிழ்த்தொண்டு!

குட்டிபிசாசு said...

//'பறவையின் சிறகில் பாஸ்போர்ட் இல்லை' என்ற வரியும் 'தூக்குனா குருவி எறக்கினா அருவி' //

…அணில் படத்தைப் பார்த்து சிரிப்பு தாங்கல. வவ்வால் பஞ்ச்.

Anonymous said...

//பறவையின் சிறகு வாடகைக்குக் கிடைத்தால் உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு பறவைகள் எதற்கும் பாஸ்போர்ட் இல்லை கண்டங்களைத்//

அமுதவன்...அது ஜீன்ஸ் பட பாடல் வரிகள்...:-)))


-----கொங்குநாட்டான்

Amudhavan said...

\\அமுதவன்...அது ஜீன்ஸ் பட பாடல் வரிகள்...:-)))


-----கொங்குநாட்டான்\\
இளையராஜா ஆரம்பித்துவைத்த பாணிக்குப் பிறகு எந்தப் பாடலிலும் சரியாக வார்த்தைகளைக் கேட்க முடிவதில்லையா அதனால் வந்த வினை.(காது மந்தம் அது இது என்று பதில் சொல்லப்போகவேண்டாம். இசையின் இரைச்சல் வார்த்தைகளை அமுக்கிவிடவேண்டும் என்பதுதான் இசையமைப்பாளர்களின் சித்தாந்தம்)

இதையும் மீறி நம்ம வவ்வால் கவிதையெல்லாம் சொல்லமாட்டாரா என்ன!

Anonymous said...

//பாதிவரைப் படித்தேன். மீதியைப் பார்த்தேன். //

அமுதவன்,
நீங்கள் ரொம்ப open type. உண்மையை தைரியமாக சொல்லிட்டீங்க. நிறைய பேர் பாதி படித்துவிட்டு மீதியை பார்க்கத்தான் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நானும் முதலில் பாதிவரை படித்துவிட்டு மீதியை பார்க்கத்தான் செய்தேன். பிறகு இரண்டாவது வாட்டி, அஞ்சலியின் sorry அஞ்சலி-கையின் உழைப்பை நினைத்து, திரும்பவும் முழுவதும் உட்கார்ந்து படித்தேன்.

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!,

பாதிப்படிச்சாலும்,போரடிக்குதுனு மூடாமல் முழுசா பார்த்தீங்களே அதுவே பெரிய விடயம்...பதிவ பார்த்தா கூட போதும்!

# எதையும் அப்படியே "அலேக்" செய்து போடும் வழக்கம் நமக்கு இல்லை,கிடைத்த தகவல்களை கொஞ்சம் ஆராய்ந்துவிட்டே பதிவாக்குவது,அதனால் தான் கொஞ்சம் விரிவாக எழுத முடிகிறது.சூடாமணி நிகண்டில் பெயர் மட்டுமே,இருக்கு அதில் உள்ளவற்றுக்கு பொதுப்பெயர் கூட இல்லை.

# //நீங்கள் கவிஞர்கூடவா? இத்தனை நாட்கள் தெரியாதே. வாழ்த்துக்கள்.//

ஹி...ஹி எனக்குள்ள தூங்கிட்டு இருந்த கவித காண்டாமிருகத்த தட்டி எழுப்பிட்டிங்களே, இனிமே எத்தனை கவித வரப்போகுதோ, எத்தனைப்பேருக்கு மண்டை வெடிக்கப்போகுதோ அவ்வ்!

# ஒருத்தர நம்மள கொஞ்சம் பாராட்டிடக்கூடாதே உடனே கொங்குநாட்டுல இருந்து வண்டிக்கட்டிக்கிட்டு வந்துட்டார் ஒருத்தர், வைரமுத்து எழுதினது பாட்டு ,நான் எழுதினது கவித --குறுங்கவித... இப்போ பூவ பூனு சொல்லலாம், மலர்னு சொல்லலாம்...புசுப்பம்னும் சொல்லலாம் ...அதே போல நம்மளுது கவித...கவித ஹி...ஹி!

ஆதீகாலத்தில் கவித எல்லாம் எழுதி போட்டு வச்சிருக்கோம்,ஆனால் அவசரப்பட்டு அத எல்லாம் படிக்க போயிடாதிங்க ,கொலவெறியாகிடுவீங்க அவ்வ்!
----------------

குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

கோ ஆப்டெக்ஸ் துண்டு விட நம்ம தொண்டு பெருசா போயிடும் பொல இருக்கே அவ்வ்வ்!

# அணில்னா சும்மாவா ஆட்சியே மாத்த வைக்கிற "பவர்ஃபுல்" அணில் ஆச்சே அவ்வ்!

அணில் சேமியா பாயாசம் கூட நல்லா இருக்கும்,ஆனால் அதுல அணீல் எல்லாம் போட மாட்டாங்க ஒன்லி சேமியா தான் அவ்வ்!
--------------------

#கொங்குநாட்டார்,

வாரும்,நன்றி!(நற ...நற)

ஏன்யா ஏன் இந்த கொலவெறி ..வைரமுத்து அம்மாம்ம் பெருசா எழுதினத நான் ரெண்டே வரில நச்சுனு சொல்லி இருக்கேன் ... அப்போ அது நம்ம சரக்கு தானே அவ்வ்!

"யார் தருவார் இந்த அரியாசணம்

இவனா பெருவான் சரியாசணம்"

இந்த வரிகள் பழைய மகாகவி காளிதாஸ் படத்துல ஜிவாஜி பாடி இருப்பார்(ஹி..ஹி நான் எல்லாம் அவரே பாடுவார்னு நம்ம்புவேன் அவ்வ்)

வைரமுத்து அதே வரிகளை கொஞ்சம் கூட மாத்தாமல் வச்சு "வட்டாரம்" படத்திலும் பாட்டு எழுதியிருப்பார், ஆகவே அடியேன் செய்தது எனது சுயக்கற்பனையே அவ்வ்!
---------------------

# வேற்றுகிரவாசி,

//நிறைய பேர் பாதி படித்துவிட்டு மீதியை பார்க்கத்தான் செய்திருப்பார்கள் //

அதுக்கு பேரு தாம்யா "படிச்சு - பார்க்கிறது" :-))

எப்படியோ பதிவ படிச்சு பார்க்கிறாங்களே அதுவே போதும்,அதுக்கு மேல என்ன வேணும்?

உம்மையும் முழுசா படிக்க வச்சதோட இல்லாம புதுசா "அஞ்சலிகை"னு ஒரு தமிழ் வார்த்தையும் கத்துக்க வச்சிட்டோம்ல ...ஹி...ஹி!
---------------------------

குறும்பன் said...

படிக்க முடியலை மன்னிக்க scroll பண்ண முடியலை இடுகை அவ்ளோ பெரிசு. எப்படி வவ்வால் இவ்ளோ பெரிய இடுகைய போட முடியுது? உங்களுக்கு போட்டியா பதிவுலகில் உண்மைத்தமிழன் தான் இருக்கார். வேற யாரும் கிட்ட நெருங்க முடியாது.
கொஞ்சம் தான் படிச்சேன் அப்புறம் scroll பண்ணி இடுகையின் இறுதிக்கு வரதுக்கே அரை மணி நேரம் ஆயிட்டது. அமுதவன் வேற ஐகூ கவிதை அப்படி இப்படின்னு பீதிய கிளப்பறார். அவர் சொல்றத நம்பாதிங்க, சும்மா பேச்சுக்கு அப்படி சொன்னார். சிங்கம் டபுளாவும் வரும் என்று படம் போட்டு காட்டுனதுக்கு நன்றி.
யானைக்கு பிடின்னு ஒரு பெயர் உண்டே? வீரமண்டல புருடர் எழுதாம போயிட்டாரே. ஆமா அவரு சொன்னதெல்லாம் புருடா இல்லையே இஃகி இஃகி.

வவ்வால் said...

குறும்பர்,

என்னா அக்குறும்புய்யா இது? உ.த.அண்ணாச்சியோட என்ன ஒப்பிடுறீர் ,அவர் மலை ,நான் மடு, என்னால அவர் அளவுக்கு "இம்சை" செய்ய வராது அவ்வ்!

# மவுஸ் ஸ்க்ராலிங் வீலை சுத்தினா விரலுக்கு "பயிற்சியாம்" மூட்டு வலி போயிடுமாம் அவ்வ்.

# மத்தவங்க எழுதுறதுலாம் "பொய்க்கூ" நான் எழுதுறது தான் ஹைக்கூ :-))


சாம்பிள் பார்க்குறீரா,

"இருள் நிலவொளியில்

நிழலாய் கண்சிமிட்டுகிறது

கலங்கரை விளக்கம்"...!

நான் மட்டும் களத்துல குதிச்சேன் ..அல்லு சில்லு தெறிக்கும் சொல்லிப்புட்டேன்!

#//யானைப் பிடியின் பெயர்

வடவை, அத்தினி, கரிணி
//

பெண் யானைக்கு பிடினு போட்டு சொல்லாமல் நேராக பிடி எனப்போட்டு,அதன் வகைகளை சொல்லி இருக்கே பார்க்கலையா?

பதிவை படிச்சு பார்க்காமல் கேள்வி வேற அவ்வ்!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்க அகராதி புடிச்சவர்ங்கிறதை நிரூபிச்சிட்டீங்க:)

பள்ளிப் பாடங்களில் இடம்பெற யாராவது முயற்சி செய்தால் வரும் தலைமுறைக்கு பயன்படும்.

மனமுவந்த வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்க அகராதி புடிச்சவர்ங்கிறதை நிரூபிச்சிட்டீங்க:)

பள்ளிப் பாடங்களில் இடம்பெற யாராவது முயற்சி செய்தால் வரும் தலைமுறைக்கு பயன்படும்.

மனமுவந்த வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நீங்க அகராதி புடிச்சவர்ங்கிறதை நிரூபிச்சிட்டீங்க:)

பள்ளிப் பாடங்களில் இடம்பெற யாராவது முயற்சி செய்தால் வரும் தலைமுறைக்கு பயன்படும்.

மனமுவந்த வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

சு.பி சுவாமிகள் வனவாசம் போயிட்டாரோன்னு நினைச்சேன்.

எனக்கு கல்லூரிக்கால ராகிங்தான் நினைவுக்கு வருது.யார் நல்லா கலாய்ச்சு காயடிக்கிறாங்களோ அவங்கதான் பின்பு நண்பர்களாக இருப்பார்கள்:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி,

தொழிலதிபரா ஆனாலும் ஆனீர் ரொம்ப பிசியாகிட்டீர், நல்லா பிக் அப் ஆகிடுச்சா?

#பள்ளிப்பாடங்களில் இன்னும் அம்மா இங்கே வா வா தான் ஓடிக்கிட்டு இருக்கு :-))

வாழ்த்துக்கு மிக்க அன்றி!

அது என்ன வேதம் ஓதுறாப்போல மும்முறை வாழ்த்தியுள்ளீர் அவ்வ்!

# சுபி சுவாமிகள் அசராமல் பதிவுகளா போட்டுக்கிட்டு தான் இருக்கார், நம்மால தான் வேகமா படிக்க முடிவதில்லை.

திரட்டியில் இல்லைனா படிக்க மாட்டிரோ?

ஹி..ஹி என்னை பொருத்து எல்லாரும் நண்பர்களே, இந்த கான்செப்டை சுபி சுவாமீகள் நன்கு புரிந்துள்ளார் என நம்புகிறேன்.

காரிகன் said...

வவ்வால்,
பல அரிய தகவல்கள். படிப்பதற்குள் மூச்சு வாங்குகிறது. தாவித் தாவி எப்படியோ கடைசி வரி வந்துவிட்டேன். இதுதான் நம் ஸ்டைல் என்று யாரும் கட்டம் கட்டிவிடமுடியாதபடி எந்த தலைப்பையும் விட்டு வைக்காமல் அதகளம் செய்கிறீர்கள். வளர்க உமது தமிழ்த் தொண்டு. வாழ்த்துக்கள்.

Dr.Dolittle said...

Hats off . நல்ல பதிவு .

ஒரு சில திருத்தங்கள் ...

1. கேளை ஆடு என்பது வரை ஆடு அல்ல . barking deer, http://en.wikipedia.org/wiki/Indian_muntjac தான் கேளையாடு .

2.கருடன் என நீங்கள் படமிட்டு குறிப்பிட்டது brahminy kite .

short toed snake eagle தான் கருடன் . //Garuda is known as the eternal sworn enemy of the Nāga serpent race and known for feeding exclusively on snakes, such behavior may have referred to the actual Short-toed Eagle of India. //

http://en.wikipedia.org/wiki/ருட

3. பருந்து தான் வல்லூறா? சலீம் அலி தமிழ் பதிப்பில் vulture தான் வல்லூறு என குறிப்பிட்டுள்ளனர்

4.வரகுக்கோழி(Lesser Florican ) இன்னும் உள்ளது .http://www.birdlife.org/datazone/speciesfactsheet.php?id=2783

5.ஆலாப்பறவை(seagull) .

படத்தில் உள்ளது (seagull) அல்ல ,Tern (probably river or caspian tern )

Unknown said...

கரையானின் சங்ககால பேர் என்ன