Tuesday, November 05, 2013

தமிழ்ப்புரட்சி வேந்தர் செயமோகர்!

(இவன் தமிழ் படிச்சா குளு..குளுனு இருக்கு ஹி...ஹி)


ஆசான் செயமோகரு பல மயிர்க்கூச்செறியும் உள்ளொளி புறப்பாடு  கிளப்பும் சமகால நவீன மாயதந்திர மெய்யியல், உபமெய்யியல் உட்ப்பொதிந்த இலக்கியம் படைக்கும் மாபெரும் இலக்கிய சமையல் கலைஞர் என்பதை மறுக்க இவ்வாழி சூழ் உலகில் யாருக்கும் திராணியோ தெம்போ இல்லை என்பதை நாத்திகத்தையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஆசானுக்காக ,சோட்டாணிக்கரை பகவதியம்மன் சாட்சியாக சூலத்துல தேங்கா உடைச்சு சாம வேதம் ஓதி உரத்துச்சொல்லக்கூட அடியேன் தயார்.

ஷ்ப்பா முடியல ... இப்பவே கண்ணக்கட்டுதேனு யாரும் ஓடிப்போயிராதிங்க, ஹி...ஹி எத்தினி நாளைக்கு தான் மோன்சான்டோ ,பவண்டோனு பேசிட்டு இருக்கிறது நாமளும் கொஞ்சம் எலக்கியம் பேசி ... எலக்கியவியாதியா மெட்டாமார்பாசிஸ் ஆகலாம்னு ஒரு அல்ப ஆசை தான் அவ்வ்!

சரிங்க்ணா நெம்ப டெங்க்ஸன் ஆவாம மேக்கொண்டு படிங்க்ணா...

 இங்கீலீப்பீசு பத்திரிக்க அச்சடிச்ச  இந்து அச்சாபீசு தமிலு வளக்கனே வேல மெனக்கெட்டு தமிலுல ஒரு பத்திரிக்கை அச்சடித்து விக்க ஆரம்பிச்சதும் ...தான் அவுங்க கொண்டையில சே மண்டையில ஒரு பலுப்பு எரிய ஆரம்பிச்சு இருக்கும் போல , தமில இங்கீலீப்பீசு எயுத்துல எழுதிக்கினு இருந்தா என்னாதுக்கு நாம தனியா தமிழு பத்திரிக்க அச்சடிக்க போறோம், ஆனா இந்த பொயப்பத்த தமிலு மக்க விடாம தமிலுளவே எயுதிக்கினு படிச்சிக்கினு இருக்கறதால தானே நமக்கு இம்புட்டு கஸ்டம்னு நினைச்சிருப்பாய்ங்க போல,  செய மோகர கூப்பிட்டு ...இந்த மாரி...இந்த மாரி ஒரு நெலமை அதனால நீங்க அந்த மாரி ...அந்த மாரி ஒரு கட்டுரைய எயுதிக்கொடுங்க ... செமத்தியா கவனிக்கிறோம்னு  சொல்லிருப்பாங்க போல ,ஆசான் ஆச்சே சொம்மாவே கெரகம் எடுத்து ஆடுவார் ... தி இந்து(தமிலு) வே கூப்டு சொன்னதும் டண்டனக்கா டனக்குனக்கானு ஒரு கெதக்களியே ஆடிப்புட்டாரு எயுத்துல :-))

மோன்சான்டோ பிடி பருத்தியை விட செயமோகன்டோ பிடி(வாத) தமிழ் பருத்தி ரொம்ப டேஞ்சரா கீதுப்பா , தமிலுக்கு என்னாத்துக்கு தனி எலுத்து அதாங்க் இங்லீப்பீசு கீதுல்ல அதுலவே எயுதிட்டு போலாம், இங்லீப்பீசுல 26 எயுத்து தான் கீது ஆனாங்காட்டி தமிலுல பாக்கச்சொல்லோ 247 எயுத்து வச்சு கொலையா கொல்லுறய்ங்க படிக்கிற பச்ச கொயந்தய்ங்க இன்னா பாடு படுது தெர்தாப்பா ...ஆக்காங் ஒனக்கு எங்கே தெர்ய போவுது நீ நாலு எயுத்து பட்சிருந்தா தானேனு கொமட்டுல குத்தி கும்டி அடுப்பு கணக்கா பொகையுறாருப்பா அவ்வ்!

மெட்ராசு தமில் பேசிக்கினு ,தஞ்சாவூர் -கடலூர் கலந்த தமிலுல எயுதிக்கினு ... நடுவால இங்கிலீப்பீசுல பீட்டர் வுட்டுக்கினு எம்புட்டு வேலைய நானு செய்ய வேண்டியதிருக்கு எனக்கே ரொம்ப குஷ்டமா ச்சே கஸ்டமாயிருக்குப்பா ...பேயாம ஞானும் ஆசான் செயமோகரு வழியில் சுலுவா இங்கிலீப்பீசு லெட்டரில் தமிலு எயுதினு போயிடலமானு ஆசயா இருக்குபா  அப்பாலிக்கா தி சோ கால்டு தமிலு வெறியர்கள் என்ன தமிலு எனத்துரோவினு சொல்லி கல்லக்கொண்டு எறிஞ்சா இன்னாப்பண்றதுனு நெனைச்சாலே அடிவவுத்துல தண்ணியில்லாம போவுது அவ்வ்!

எனக்கு இன்னா டவுட்டுன்னா ஆசான் செயமோகரு தமிலு நாட்ட விட மலையாளக்கரையில நெம்ப ஃபேமசாம்...இதெப்படி ஒனக்கு தெரியும்னுலாம் கேட்கப்படாது அத அவரே சொல்லிக்கீரார் அவ்வ்!

ஆகவே மகாசனங்களே எனுக்கு ஒன் இஸ்மால் டவுட்டு வந்துடுச்சு, ஆசான் இந்த அரிய தத்துவத்தை ஏன் மலையாள மொழில செய்ய சொல்லி மலையாளப்பத்திரிக்கையில எயுதுலனு ?

ஹி...ஹி மலையாளத்துல கண்டியும் எய்தி இருந்தார்னு வச்சிக்கோ இன்நேரம் கஞ்சிக்காச்சி கயுவி ஊத்தியிருப்பாங்க :-))

செரி மலயாளத்துல எயுதினாத்தான் கஞ்சிக்காச்சுவாங்க ,ஆசான் தான் ஆறுமாசத்துக்கு ஒருக்கா டெலிபோன் டைரக்டரி போல பொஸ்தவம் எயுதுறாரே அதையாச்சும் இப்பிடி பொரட்சியா இங்கிலீப்பிசு லெட்டரில் எயுதி முன்னோட்டங்காட்டியிருக்கலாம்ல.... சும்மாவா அப்பிடி ...டெலிபோன் கும்பெனில கம்பி கட்டினவர் ஆச்சே!

 ஹி...ஹி அப்பிடிலாம் எயுதுனா இப்ப கெடைக்கிற லைப்ரரி ஆர்டர் 1500 பொஸ்தவுமும் கேண்ஜலாகிடும்னு ஆசானுக்கு தெர்யும்ல...கூடவே சுத்திட்டிருக்க கைப்புள்ளிங்க கூட ஒரு புக்கும் வாங்காது... அப்பாலிக்கா சுண்டல் மடிக்க எடக்கு தான் போடனும்னு தெரிஞ்சு தான் உசாரா நமக்கு அட்வைசு கொடுக்கார்... சொல்லுதல் யார்க்கும் எளியவாம்னு தாடிக்கார தாத்தா அன்னிக்கே இதத்தான் சொல்லிட்டு செலையா நிக்கார் குமரிலனு ...நாவர்க்கோயில்க்காரருக்கு தெரியாமலா இருக்கும் அவ்வ்!

செரிப்போவட்டும் காசுக்கு விக்குற புக்குல எல்லாம் வெசப்பரிச்ச செய்ய முடியாது ,பொஸ்தவ கும்பெனி கோச்சுக்கும்னு வச்சிக்கலாம்.. எணையத்துல சொம்மா எயுதுக்கினு கீறார் அதுலவாச்சும் இதமாரி பண்ணிக்கீறாரானு பார்த்தா அதுவும் இல்ல... ஆசானாலேயே செய்ய  முடியாத, புடிக்காத ஒன்ன எங்கள மாரி அரடிக்கெட்டுக்கள செஞ்சு பாக்க சொல்றிங்களே ,இது எந்த ஊரு நாயம்?

இதுல கெல்வெட்டு ஆராய்ச்சியாளர் கணக்கா ... தமில் ஆராய்ச்சிலாம் செஞ்சி ... இப்படி எயுதினா சரியாத்தான் வருங்கீறார்... அத பாருங்களேன்..

//மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். க என்ற எழுத்தைப் பார்த்ததும் அந்த ஒலி நினைவுக்கு வருவதற்கு நாம் இளமையிலேயே குழந்தைகளைப் பழக்குகிறோம். நமக்கு அது இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

எழுதுவது என்பது இன்னும் சிக்கலானது. சமூகவியல் ஆய்வாளரான மிஷேல் ஃபூக்கோ “எழுத்து என்பது கைகளுக்கு அளிக்கப்படும் கழைக்கூத்தாட்டப் பயிற்சி” என்கிறார். நம் குழந்தைகளுக்கு அதைக் கட்டாயமாக ஆக்கியிருப்பதால் அவர்கள் இளமையில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையில் அது மிகக் கடினமான ஓர் உழைப்பு. மிருகங்களையும் பறவைகளையும் வித்தைக்காகப் பழக்குவதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உண்மையில் இல்லை.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு எழுத்துருக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. இரண்டு மடங்கு உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது. க என்றாலும் ka என்றாலும் ஒரே உச்சரிப்புதான் என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது.//

நெம்ப நல்லா ஆய்ந்துக்கீறார்..எறா ஆயுறவங்க கூட இம்புட்டு சொத்தமா சோலிய செய்யமாட்டாங்க அவ்வ்!

"க" என ஒலி வர எளமையிலே பழக்குகிறோமாம், தமிலே படிக்காம தமிலுல எய்தினா இப்புடித்தான் தோனும், தமிலு ஒரு எலக்கண மொழி... எல்லாத்துக்கும் எலக்கணம் வச்சிக்கீது... எண் எலக்கணம்,எழுத்திலக்கணம், புணர்ச்சி விதி னு ஏகப்பட்டது கீது... புணர்ச்சிவிதினா வேறதெவும் நெனைச்சிப்புடாதிங்க அப்பாலிக்க அல்டிமேட் கதை கணக்காகிடும் அவ்வ்!

நம்ம தமிலுல ஒரு எழுத்து உருவாகிறதுக்கு கூட எலக்கணம் இருக்கு, இப்பிடி ...இப்பிடினு சொல்லிக்கீறாங்க...

க்+அ = க னு பிரிச்சு காட்டி ..."க" இப்படி தான் வருதுனு சொல்லி "க" ஒலியை உள்வாங்க வைப்பாங்கோ... சொம்மா "A" தான் "A" , A for Apple னு சொல்லிட்டு எயுத்த சொல்லித்தர மாட்டாங்கோ.

இங்கிலீப்பீசுல தமில் போல சாப்ஜாடா அப்படி சொல்லித்தரவும் வய்யே இல்ல, அதுல எலுத்தோட "ஒலி உச்சரிப்புக்கும்" சொல்லோட ஒலி உச்சரிப்புக்குமே தொடர்பேயில்லாம புட்டுக்கினு நிக்கும்.

"CAR" = கார்(kaar)

"CARE"=கேர் (kaer)

"CA" என்ற ரெண்டெலுத்து ஒரே மாதிரி அடுத்தடுத்து ரெண்டு சொல்லிலும் வந்தாலும் ஒரெடுத்துல "கார்"னும் இன்னொரு எட்த்தில "கேர்'னும் படிக்கணும் , இப்படி "ஒலி உச்சரிப்பு" எப்படி மாறுதுனு அடையாளங்காட்ட ஒரு சுட்டி ,சட்டினு எதுவும் உடனே சிக்காது ...படிக்கச்சொல்லவே இப்பிடி..இப்பிடி சொல்லவோணோம்னு "மண்டையில புகுத்தி "வச்சத்தான் உண்டு.

அதான் கடசில ஒரு "ஈ" உக்காந்திருக்கே அத வச்சு ஒலி உச்சரிப்பு அடையாளம் பார்க்கலாம்னு சொன்னா மன்டையில போடுவேன் ... "ஈ" கடசீல தான கீது அது எப்படி முதல்ல வரச்சொல்ல ஒலி மாறுபாட காட்டும்?

ஏன்னா தமிலு எழுத்தொலிக்கு முக்கியம் கொடுக்க மொழி, இங்கிலீப்பீசு சொல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, ஏதோ ஒரு  இஸ்பெல்லிங்க கூட எயுதிட்டு இத இப்படிக்கா உச்சரிக்கணும்னு வாத்தியாருங்க நம்மள "மனப்பாடம்" தான் செய்ய வைக்க முடியும், ஒலித்திரிபுக்கு எலுத்து அடிப்படையில காரணமே சொல்ல முடியாது.

அதனால தான் நம்மாளுங்க  இங்கிலிப்பீசு பேசச்சொல்லோ "புரநவுண்சியேஷன்"ல தப்பு பண்ணிடுறது,ஆனா கரிக்ட்டா இஸ்பெல்லிங்க் எல்லாம் எயுதிடுவாங்க.

ஹி...ஹி.. இஸ்பெல்லிங்க்,இஸ்கோல் ..ஐஸ்லேன்ட் எல்லாம் இப்படிக்கா "S" எஸ்னு சொல்லி ஒலிய கொடுக்கபோய் வரது. வெள்ளக்காரய்ங்க படிக்க சொல்ல இங்கிலீப்பீசுல எழுத்தின் ஒலி வடிவத்தை பின் தள்ளிட்டு "சொல்லின்" ஒலி வடிவம்னு "கட்டமைச்சு" சொல்லிக்கொடுத்திடுவாங்க எனவே அவங்களுக்கு அது எளிது,நமக்கு தான் நொறத்தள்ளும் அவ்வ்!

அதனால ஆசான் சொல்லுறாப்போல இங்கிலீப்பீசு லெட்டரில் எலுதினா ரொம்ப சுலுவாகிடும் என்பதல்லாம் கப்சா!

எலுத்துக்குனு இல்ல, ரெண்டு சொல்லு பக்கம் பக்கமா வந்து ஜாயின்ட் அடிக்க சொல்லக்கூட இப்படி ஒன்னா ஒட்டி இன்னொரு எலுத்தா மாறி அதுக்கு ஏத்தாப்போல உச்சரிக்கிற "புணர்ச்சி" விதிலாம் தமிலுல இருக்கு, இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்லாம எல்லா எலுத்தும் தனியா நிக்கும் ,ஆனா சேத்து சொல்லறப்போ இன்னொரு ஒலி வடிவதை நம்ம மனப்பாடம் செய்யனும் ... அதாவது தமிலுல ஒவ்வொரு எலுத்தா எலுத்துக்கூட்டி அதே ஒலில சொல்லிக்கிட்டே ஒரு சொல்ல சொல்லி முடிச்சாலும் "சொல்லின் ஒலி வடிவமும்" அதாவே வரும்.

அ+ம்+மா = அம்மா +இ+ங்+கே =இங்கே + வா +வா ,

பிரிச்சு சொல்லிப்படிச்சுட்டு அப்படியே ,

சேர்த்து படிச்சு பாருங்க = அம்மா இங்கே வா வா என அயகா சொல்ல முடியும்!

எலுத்தா படிக்கும் போது சொல்லுற அதே ஒலில சொல்லாவும் சொல்லலாம், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.

ஆனால் இங்கிலீப்பீசுல அப்படிலாம் இல்ல எல்லா எலுத்தும் தனித்தனியா நிக்கும், எலுத்தெலுத்தா சொல்லிட்டு அதே ஒலில சொல்லலாம்னு பார்த்தா சொல்ல முடியாது அவ்வ்!

புள்ளி வச்ச எலுத்து புள்ளி வைக்காத எலுத்து , குறில் ,நெடில் என எதுமே கெடையாது எல்லாம் இப்படித்தான் சொல்லனும்னு "சொல்லை" சொல்லும் போதே" திணிக்கனும்" அவ்வ்! இப்படி இதான் உண்மை,அப்படித்தான் சொல்லணும் அப்படியே ஏத்துக்கிட்டு படினு சொல்லுறது "AXIOM" * என்ற வகையில நம் மண்டையில ஏத்துறதாகும்.

*"An axiom, or postulate, is a premise or starting point of reasoning. As classically conceived, an axiom is a premise so evident as to be accepted as true without controversy"

புணர்ச்சி,உணர்ச்சி... ஒரு மண்ணும் கெடையாது... சொல்லித்தரவங்க தான் எல்லாத்தையும் சொல்லித்தரணும் அது எப்படினு கேள்விக்கேட்டா விளக்கமே இருக்காது. கூட்டு குடும்பமாக சொல்லில் தான் எல்லாத்தையும் வச்சிருப்பாங்க, எழுதுக்குனு ஒன்னியும் இல்லை.

தமிலு எழுத்து, எண் என எல்லாம் பிரிச்சு மேய்ஞ்சி எலக்கணம் போட்டு எளிதாக உள்வாங்க வழி செய்த மொழி ,இது போல ஒலகத்துலவே வெகு சில மொழிங்க தான் இருக்கு.

சீன,சப்பானிய மொழிலாம் படங்காட்டி விளக்கும் மொழி ,அதாவது ரொம்ப எலுத்துக்குனு மெனக்கெடுவதேயில்லை, வூடுனு எழுதினா வூடு படத்தையே சின்னதா வரிஞ்சாப்போல எயுதிடுவாங்க அவ்வ்!

நம்ம தமிலு மட்டும் இப்படி பிரிச்சி மேய்ஞ்சி வச்சிருக்காங்க என்றால் அந்த அளவுக்கு அந்தக்காலத்திலயே ஆய்ந்து அடிப்படை அலகா பிரிச்சு எப்படி வேண்டுமானாலும் "வரி வடிவில்" கொண்டு வர வசதியாக இருக்கத்தான்... அதனால தான் தமிலுல முன்னால பின்னால எப்படி வேண்டுமானாலும் வார்த்தைய தூக்கிப்போட்டு ஒரே மீனிங்க கொண்டு வரது ரொம்ப சுலுவா செய்ய முடியும்.

இதனால தான் நம்ம தமிலுல 2000 வருசத்துக்கு முன்னமே எலக்கியம் எயுதிக்கீறாங்க அதுவும் எப்புடி ... ஓசை நயம் இருக்கும், ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் இயைபு இருக்கும், சந்தம் இருக்கும், ஒரு இசை போல ஒலிக்கும், கவிதை போல இனிக்கும், ஆனால் ஆழமான பொருளையும் தரும்.

மத்த மொழிலவும் 2000 வருசம் முந்திய படைப்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றில் எல்லாம் இத்தப்போல மொழிக்கட்டமைப்பு கூறுகள் இருக்காது சொம்மா ஒரு கதைய சொல்லிட்டு போவும்.

சொம்மாவா சொன்னார் பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்"னு!

இப்படி எலுத்துக்குலாம் எலக்கணம் போட்டு ,ஒரு மொழியில என்னவெல்லாம் செப்படி வித்தைக்காட்டலாமோ அதுக்குலாம் வழி வாய்க்கா செஞ்சி வச்சிட்டு 2000 வர்சம் முன்னமே நம்ம முன்னோர்கள் போயிட்டாங்க, இப்போ 13 வருசமா கம்பியூட்டர்ல தமில இங்கிலிபீசுல தட்டுறேன் எனக்கு ஒன்னும் வித்தியாசமே தெரியலைனு சொல்லுறாரே ஆசான், அத டிரான்ஸ்லிட்டரேஷன் மொழிப்பெயர்ப்புக்கு ஒரு ஒரு எலுத்துக்கும் என்ன மாதிரி எலுத்துனு எவனோ வடிவமைச்சதால தானே,

இங்கிலீபீசுல எல்லா தமிலு எழுத்தின் ஒலிக்கும் "இங்கிலீப்பீசு லெட்டர் காம்பினேஷன்" இல்லைனு இன்னும் கூடவா தெரிஞ்சிக்கலை ,அப்படி இல்லாத சொல்லுக்குலாம் சும்மா குன்சா இப்படி எலுதினா அப்படி "டிரான்சிலிட்டரேட் செய்யனும்"னு நம்மாளுங்க தான் "டிசைன்" செய்திருக்காங்க, சும்மா "அம்மா இங்கே வா வா"னு இருக்கிறத இங்கிலீபீசுல எலுதினா ஒலி எப்படி வருதோ அப்படியே தமிலுலவும் வருதுன்னு அடிச்சு வுடக்கூடாது.

ஹி...ஹி அடுத்த வரி "ஆசை முத்தம் தா தா"னு ஏன் எயுதாம போனார்?  அவருங்கண்டியும் எயுதி இருந்தார் இன்னேரம் ,டப்பா டான்ஸ் ஆடியிருக்கும் ,அவ்வ்!

"ஏகபோகம்னு" இங்கிலீபீசுல எலுதினா அப்படியே தமில் ஒலி வடிவத்துல தான் இருக்கானு செக் செய்து சொல்லுங்க பார்ப்போம் :-))

நம்மாளுங்க இப்படி இங்லீப்பீசு லெட்டர சேர்த்துக்க , நீக்கிக்க ,அப்பாலிக்க டைப்படிச்சா அதுக்கு இப்படி தமில் சொல்லு வராப்போல மென்பொருள் எலுதிட்டோம்னு சொல்லிக்கொடுத்தது தப்பா போச்சு அவ்வ்!

#//பள்ளிகளில் இதைக் கற்பித்தால், குழந்தைகளுக்கு ஒரே ஒரு எழுத்துருவைக் கற்பித்தால் போதும். அவர்கள் தமிழை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக வாசிக்க அது உதவும் அல்லவா?//

ஹி...ஹி அப்புறம் , தமிழுல நெடில் வரச்சொல்ல ரெண்டு "a" போடுறாப்போல car க்கு ரெண்டு "a"  போட்டு "kaar"னு எலுதி இங்கிலீப்பீசு டீச்சர்க்கிட்டே ஒதைத்தான் வாங்குவான்.

# ஆங்கிலமே பிராதன மொழியாக புழங்கி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட மாணவர்கள் இன்னொரு மொழிக்கற்க வேண்டும் என "அறிவுறுத்தி" மதிப்பெண் கிரெடிட் கொடுக்கிறார்கள், இதனால் அமெரிக்க குழந்தைகள், ஸ்பானிஷ்,,சீனம், ஃபிரெஞ்ச் என எடுத்துப்படிக்கவும் செய்கிறார்கள், தமிழில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெற்றோர்கள் வீட்டில் தமிழும் பேசிய மாரி ஆச்சு குழந்தைக்கு அந்நிய மொழி கிரெடிட் வாங்கிக்கொடுத்த மாரியும் ஆச்சுனு தமிழையே பள்ளியில் அந்நிய மொழி(இரண்டாவது மொழி) என பதியவும் செய்கிறார்கள்.

அப்போ வெள்ளைக்காரனுக்கு தெரியதா ரெண்டு மொழி படிக்க வச்சா குழந்தைகள் கஷ்டப்படும்னு? உண்மையில் ரெண்டு மொழி படிச்சா மொழி ஒப்பீட்டின் மூலம் மொழிக்கற்றல் திறன் கூடவே செய்யும்!

அவர்களை விட எல்லாம் பெரியவர் நம்ம ஆசான் செயமோகர் ஏன்னா அவர் ஒரு வில்லேஜ் மொழிஞானி :-))

# # தமிழே படிக்காம,தமிழ் எழுத்துருவே தெரியாம,தமிழ்வாசிக்க தெரியாத ஒரு தலைமுறை ஒன்னு உருவாகிட்டு இருக்கு,அவங்களை எல்லாம் வாசிக்க வைக்கனும்னா ,வருங்காலத்திலும் தமிழில் நல்ல நூல்கள் வரவேண்டுமெனில் 'தமிங்கிலீஷ்" எழுத்துரு தான் அருமருந்து என்கிறார்,

தமிழே வாசிக்கத்தெரியாதவங்களுக்கு தமிழ் வொக்காபுலரி (சொல்லறிவு)மட்டும் இருக்குமா?

பேச்சு வழக்கில் சில நூறு தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயன்ப்படுத்திட்டு இருப்பாங்க, வாசிக்கும் போது தான் பலப்புதிய சொற்களும் அறிமுகம் ஆகும், தமிழ வாசிச்சுட்டு இருக்கும் நம்ம மக்களுக்கே திருக்குறள் புரிய ஒரு விளக்க உரைத்தேவைப்படுது, காரணம் என்னனா நாம மொழியில இருக்க பல சொற்களை பயன்ப்படுத்தாம விட்டதால் அதன் பொருள் என்னனு தெரியாம போயிடுச்சு, தமிழ் எழுத படிக்க  தெரிஞ்சவங்க எல்லாம் அதனால தான் பல சங்க இலக்கியங்கள், ஏன் சில நூற்றாண்டுக்கு முன் வந்த இலக்கியங்கள் கூட படிச்சு புரிஞ்சுக்க கஷ்டப்படுறாங்க., தமிழ் நல்லா தெரிந்தவங்களோட நிலைமையே இதான், அப்படி இருக்கும் போது தமிழ் அட்சர சுத்தமாக தெரியாதவங்க எப்படி 'டிரான்ஸ்லிட்டரேஷனில்" இருந்தால் மட்டும் படிச்சு புரிஞ்சுப்பாங்களா?, ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழ் - தமிழ் அகராதி தேவைப்படும், அப்படி மெனக்கெட்டு படிப்பாங்களா என்ன?

ஆங்கிலத்தில் இப்படி ஏகப்பட மொழிக்கலப்பு இருப்பதால் ,ஆங்கில எழுத்துருக்களை வாசிக்க தெரிஞ்சாலும் பொருள் புரிய ஆங்கில அகராதி தேவைப்படுது, அமெரிக்கன், பிரிட்டீஷ் என அம்மக்களுக்கும் அகராதி தேவைப்படுது, நாம் பெரும்பாலும் தமிழ் -தமிழ் அகராதி இல்லாமலே சமகால தமிழ் இலக்கிய படைப்புகளை படிச்சிடுவோம், அப்படி சமகால தமிழில் புரியிறாப்போல எழுதினால் மட்டுமே போணியாகும் ,அத விட்டுட்டு யாருக்கும் புரியாம எழுதிட்டு ,எழுத்துரு மாற்றினால் எல்லாரும் வாசிப்பாங்கனு சொல்வதெல்லாம் ,மொழியின் பயன்ப்பாட்டுவியல் புரியாத கத்துக்குட்டித்தனம்!

எனவே தமிழே படிக்காத,தமிழ் 'வோகாபுலரி(சொல்லறிவு)" இல்லாத ஒருத்தன் அகராதி வச்சு "டிரான்ஸ்லிட்டரேஷன் தமிழ்" படைப்பை  படிச்சு புரிஞ்சுக்க விரும்ப மாட்டான் ,அதுக்கு பேசாம நேரடியாக நல்லா புரியுற இங்கிலீஷ் புக்க படிக்கலாம்னு போயிடுவான் அவ்வ்! இப்போ ஆசான் புக்கு கூட சரியா விக்காம போக காரணம் மக்களுக்கு தமிழ் வாசிக்க மறந்து போனதால் இல்லை, என்னா சொல்ல வரார்னே பிரியலை, அதுக்கு ஒருத்தங்க "அருஞ்சொற்பொருள்" விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கு அவ்வ்!


#//இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். தென்னக மொழிகளைப் பிரிப்பது அவற்றின் வேறுபட்ட எழுத்துருக்கள்தான். மற்றபடி அவை 70% ஒன்றே.//

மிகச்சில நாட்களில் என்றால் ஒரு வாரம் ,பத்துநாள் போதுமா?

ஆசானுக்கு இங்கிலீப்பீசு நல்லாதெரியும் தானே ,அப்போ ஃபிரென்ச்,ஜெர்மன் ,ஸ்பானிஷ், எல்லாம் ஒரு சில நாட்களில் வாசிக்க கத்து இருக்கலாமே அவ்வ்!

ஆசான் ஆசைப்படுறா போல தமிழ் வரிவடிவம் தேவையில்லைனு நம்ம முன்னோர்களும் நெனைச்சிருந்தால் இன்னேரம் எல்லாரும் தேவநகரில இந்திப்போல தான் எயுதிக்கினு இருந்திருப்போம், ஒரு வேளை ஆரம்பத்துல எல்லாம் தேவநகரில எயுதுங்க, இந்திய மொழிகள் பல்வேறு இருந்தாலும் எல்லாம் வாசிக்க பழகிடும், மொழி வழியா இணைஞ்சி ஒருங்கிணைந்த அகன்ற பாரதம் உருவாகிடும்னு  சொல்ல தான்  ஆசைப்பட்டிருப்பாரோனு நினைக்கிறேன் ,ஏற்கனவே இந்துத்வா நாத்தம் அதிகம் அடிக்குதுனு பொலந்துக்கிட்டு இருக்காங்க எனவே பேசாம இங்கிலீப்பீசுனு சொல்லி ஆரம்பிப்போம் எதுக்கு அன்னிய மொழியின் வரிவடிவம்னு சொல்லிட்டு எவனாவது டீவில விவாதம் ஆரம்பிச்சு கூப்பிடுவாங்க  அங்கே போய் அப்போ சுதேசமான மொழி தேவநகரி அதை வச்சிக்கிட்டா என்னனு  திரிய பத்த வைக்கலாம்னு ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருப்பார் ஏமான் :-))
------------------------

இந்திய மொழிகள் அந்நிய தாக்கத்தினை எப்படி சமாளித்தது?

மலேசியாவில் , லத்தின்(ஆங்கில) எழுத்து வடிவில் மலாய் மொழியை எழுதுகிறார்கள் ,அதே போல தமிழில் செய்தால் என்ன எனவும் ஆசான் கேட்கிறார்,அதற்கு மலேசிய வரலாறும் கொஞ்சம் பார்க்க வேண்டும்,

மலேசியாவை எப்படி ஆங்கிலேயர்கள் பிடித்தார்கள் என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நூல், சிங்கப்பூரை நிர்மாணம் செய்தவரின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம்,

(சிங்கப்பூரை உருவாக்கிய தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ரேபேல்ஸ்)

அந்நூல்,

Sir Thomas Stamford Raffles
Kt., LL.D., F.R.S.
Founder of Singapore
1819

By
J. A. Bethune Cook
Author of " Sunny Singapore,"
" Apa Suka, Tuan,"

மலேயா(மலாக்கா) தீபக்கற்பத்தில் அப்பொழுது பெரும்பாலும் வசித்தவர்கள் ,இந்து, புத்தமத பழங்குடியின மக்களே, அவர்களில் பட்டாக்கா பகுதியை சார்ந்த சில இனக்குழுக்களுக்கு நரமாமிசம் சாப்பிடும் வழக்கு கூட இருந்துள்ளது, இப்பொழுது மலேசியா சிங்கப்பூரில் இருப்பவர்கள் எல்லாரும் பூர்வீக மக்களே அல்ல, அக்காலத்தில் பழங்குடியின மக்கள் பலரை கொன்றுவிட்டு சீன வழி வந்தவர்களை குடியேற்றினார்கள்,அப்படி குடியேற்றப்பட்டவர்களில் இந்தியர்களும் அடக்கம்.

முதலில் உள்ள புகுந்தது போர்ச்சுகீசியர்கள் தான் சுமார் 50 பேரை வச்சிக்கிட்டே ,கொஞ்சம் இடங்கொடுங்க வியாபாரம் செய்துட்டு போயிடுவோம்னு சொல்லிட்டு முகாம் போட்டு  ,நைட் கோட்டை சுவர் ஏறிக்குதித்து எல்லாரையும் கொன்று மலேசியாவை
(மலாக்கா) புடிச்ச கதை தெரிய வரும்:-((

கம்போடியாவை ஆண்ட ஶ்ரீவிஜயா வழிவந்த மன்னர்கள் தான் மலேயாவை ஆண்டது, அவனை ராஜேந்திரச்சோழன் வென்றதுலாம் வெள்ளைக்கரன் வரும்  முன்னரே நடந்தது, அப்போவே இந்து மதம்,புத்த மதம் பரவி இருந்தது, இடத்திற்கு ஏற்ப ,pallava grantham,bali,brahmi,malay,ஜரவானிஸ்,சீனம் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள், எழுத பெரும்பாலும் பல்லவ கிரந்தம், பிரம்மி ,native Rencong script,வடிவே பயன்ப்பாட்டில் இருந்தது.,பின்னர் டச்சு மற்றும் வெள்ளையர் காலனி அமைத்து ,இந்திய &சீனர்களை,குடியேற்றி இன்னும் பல்குழு இனமக்களாக மாற்றிய  நிலையில்,வெள்ளையருக்கு முன்னரே இஸ்லாமும் உள்ள புகுந்திருந்தாலும், வெள்ளையர்களின் சமகாலத்தில் நன்கு பரவி  ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இஸ்லாமிய பரவலின் போது அரபிய எழுத்தில் மலாய் மொழியை எழுதிய முறைக்கு jawi என்று பெயர் .மக்களிடையே மத மற்றும் இன அடிப்படையில் ஒற்றுமை இல்லாத நிலையில் வெள்ளைக்காரன் எல்லாத்திலவும் ஆங்கிலம் புகுத்தி ,லிபிலவும் ஆங்கிலம் புகுத்திட்டான். இப்பவும் மலேசியாவில் அரபி வடிவ ஜாவியும் புழக்கத்தில் உள்ளது, தேர்வுகளையும் அம்மொழியில் எழுதலாம்.

இலத்தின் எழுத்து ஆதிக்கம் செலுத்த காரணம் எந்த இனக்குழுவோட மொழியின் லிபியையும் முன்னிலைப்படுத்த மற்ற இனக்குழுக்கள் விரும்பாததே. மேலும் மலேசியாவில் பூர்வீக மொழியில் பெரியளவு இலக்கியம் ,கல்விலாம் அப்போ வளவே இல்லை, வெள்ளைக்காரன் காலத்தில் தான் நாடே முழுசா உருவாச்சு எனவே ,வெள்ளைக்காரன் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டார்கள்,இந்தியாவில் அப்படியில்லையே!

அதக்காலத்தில இந்தப்பக்கம் பர்மாவில இருந்து மலேயா,சிங்கப்பூர், ஜாவா,சுமத்தரா, வியட்நாம்,கம்போடியா என எல்லாம் சேர்த்து ஒட்டுமொத்தமா மலாக்கா தீவுக்கூட்டம்னு தான் குறிப்பிட்டார்கள், மொத்தமா 20 லட்சம் மக்கள் தொகை தான்,காலனி ஆட்சி அமைந்து ஓரளவு ,நவீன மலேசியா,சிங்கப்பூர் உருவான பின் மக்கள் தொகை வெறும் 100 ஆண்டுகளில் வேகமா வளர்ந்து 3.5 கோடி ஆச்சாம்,  ஆனால் இந்தியாவில வெள்ளைக்காரன் வரும் போதே கோடிக்கணக்கில் மக்களும், பல மொழிகளும்,அதுக்கு இலக்கணமும் இருந்துச்சு.எனவே ஆட்சிப்புடிக்க வந்தவர்களால் ரொம்ப ஆதிக்கம் செலுத்தி மாற்ற முடியலை,மொழி வளமும் வளர்ச்சியும் இல்லாத மலாய் மொழி  ஆங்கில எழுத்துருக்கு மாறியதை  உதாரணம் காட்டி பழமையான   தமிழை இப்போ மாற்றஞ்செய்ய துடிக்கிறார் ஆசான் அவ்வ்.

தமிழ் மொழி என்று இல்லை எந்த இந்திய மொழியையும் வெள்ளைக்காரர்களால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை, காரணம் பெரும்பாலான மக்களுக்கு அக்காலத்திலேயே வட்டார மொழி அறிவு பெருகி இருந்தது,மேலும் நிர்வாகமும் மொழி சார்ந்து இருந்தது. மேலும் வளமான இலக்கிய் வளம், ஏன் அறிவியல் நூல்களுமே உண்டு,பூர்வீக மொழி கல்வி கட்டமைப்பு எல்லாம் இருந்தது. உலகின் மிக பழமையான பல்கலைகழகமே நாளந்தாவில் இருந்தது என்னும் போது இந்தியாவில் எப்படி வெள்ளைக்காரன் லிபிய புகுத்த முடியும்?

மிக நீண்ட காலம் ஆண்ட முகமதிய ஆட்சியாளர்களாலேயே இந்திய முழுக்க "அரபிய " லிபிய கொண்டு வர முடியவில்லை.  நிர்வாக மொழி என அரண்மனையில் பாரசீகமும் மக்களிடையே அந்தந்த வட்டார மொழியுமே செல்லுபடியாச்சு.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவெனில் இந்திய மக்களுக்கு மொழி,இனம் ,மதம் என்றால் கொஞ்சம் பெருமிதம் உண்டு, எனவே  தன்மானம் பொத்துக்கிட்டு வந்துடும், என்ன தான் அடிமையா இருந்தாலும் எப்படி அதுல இன்னொருத்தன் கைய வைக்கலாம்னு கிளம்பிடுவாங்க, இல்லைனா இந்தி திணிப்புனு சொல்லி எல்லாம் ஆட்சிய புடிக்க முடியுமா?

இது ஏதோ தென்னாட்டுல நடக்கிற கூத்து,நம்மாட்கள் தான் உணர்ச்சி வசப்படுறாங்கனுலாம் சொல்லிட முடியாது, காந்தி ,தீவிரமாக மேற்கத்திய கல்வியை எதிர்த்தும்,பலாகங்காதர திலகர்  மத உணர்வை முன்னிறுத்தி பிள்ளையார் கையில தூக்கிட்டு மொழி, இனம்,மத உணர்வை  பயன்ப்படுத்தி தான் வெள்ளையனை எதிர்த்து போராட மக்களை திரட்டினாங்க, ஆனால் என்னமோ அவங்க எல்லாம் அரசியல் போராட்டம் மட்டுமே நடத்தி சாதிச்சுட்டதாவும், நாம தான் மொழி வெறியர்களாகிட்டாப்போலவும் முற்போக்கு இலக்கியவியாதிகள் கற்பித்துக்கொண்டு ,ஆங்கிலத்தில் எழுத வைப்பதை புரட்சினு நினைக்கிறாங்க அவ்வ்
---------------------------------------

தமிங்கிலீஷ் தட்டச்சு எளிதாக்குகிறதா தமிழை?


(Tamil-99 keyboard layout)

நேரடியாக இக்கேள்விக்கு பதில் எளிதாக்குகிறது எனலாம்,அப்புறம் என்ன அதையே பயன்ப்படுத்துகிறோம்,அதையே "கற்றலுக்கும்" எழுத்துருவாக' பயன்ப்படுத்திவிட்டு போய்விடலாமே என செயமோகத்தனமாக முடிவுக்கு வருவதற்கு முன்னர் சற்றே சிந்திக்க சில குறிப்புகள்,

ammaa= அம்மா , என ஃபொனடிக் அடிப்படையில் தட்டச்சு செய்வதை டிரான்ஸ்லிட்டரேஷன் தட்டச்சு என்பார்கள், ஆனால் இம்முறை எளிதாக தெரிந்தாலும் ,நமது உழைப்பை உறிஞ்சக்கூடியது,
எப்படி எனில் நேரடி தமிழ் விசைப்பலகை இருக்குமெனில் 3 விசை அழுத்தங்களில் "அ+ம்+மா" என முடிக்கும் வேலைக்கு , "a+m+m+a+a" என அடிக்க "5" விசை அழுத்தங்களை நாம் கொடுக்க வேண்டியதிருக்கு.

எனவே இம்முறை மிகச்சிறிய  தமிழ் தட்டச்சு வேலைக்கு தான் பயன்ப்படும்,  பின்நவீன எலக்கியவியாதிகள் போல சுமார் 500 பக்கங்கள் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் ... தமிங்கிலீஷில் தட்டச்சு செய்வதற்குள் விரல் எல்லாம் ஓரங்க்குலம் தேய்ந்து போனாலும் போய்விடக்கூடும் அவ்வ்!

தொழில்முறையில் தமிழ் தட்டச்சு செய்ய TAM,TAB,TASCI, போன்ற விசைப்பலகை லே அவுட்டினைத்தான் பயன்ப்படுத்துகிறார்கள், இவற்றில் பல "கீ"களுக்கு நேரடியாக தமிழ்ச்சொற்கள் ஒதுக்கப்பட்டிருக்கும், எனவே "க" த என எல்லாம் அடிக்க தமிங்கிலீஷ் தட்டச்சு போல ரெண்டு மூன்று ஆங்கில எழுத்தை அடிச்சு நேரம் செலவிட தேவையிருக்காது,மேலும் SHIFT, CTRL  போன்றவற்றை எல்லா எழுத்துக்கும் புடிச்சு அமுக்கிட்டிருக்க வேண்டாம். எனவே நேரமும் ,உழைப்பும் மிச்சம் ஆகும்.

அதாவது இப்பொழுது தமிங்கிலீஷில் தட்டச்சு செய்யும் நாம எல்லாம் சுமார் 100 எழுத்துக்கள் கொண்ட ஒரு தமிழ் பத்தியை தட்டச்ச 200-300 ஆங்கில எழுத்துக்களை அமுக்கிக்கொண்டிருக்கிறோம் அவ்வ்!

இது போல ஏகப்பட்ட எழுத்துக்களை அமுக்கி ஒரு படைப்பை உருவாகுவதற்குள் அயர்ச்சி அடைந்து ,ஸ்ஸ்ப்பாடா என நொறைத்தள்ளிடும், இதெல்லாம் பொழுதுப்போக்காக தமிழில் விளையாடுபவர்களுக்கு தான் பயன்ப்படும், நீண்ட காலப்பயன்ப்பாட்டுக்கு ' தலைவலி போய் திருகு வலியை கொடுக்க வல்ல தட்டச்சு என்பதே உண்மை.

தொழில்முறை தமிழ் தட்டச்சு போன்று மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விசைப்பலகை அழுத்தல்களை குறைத்து தட்டச்சு செய்வதை எளிமையாக்க ஒருங்குறியில் உருவான ஒரு விசைப்பலகை அமைப்பு இல்லையா எனக்கேட்கலாம், இருக்கு!

உண்மையான இணையத்தமிழ் ஆர்வலகள் பலர் கூடி "தமிழ்-99" என ஒரு தமிழ்விசைப்பலகை அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள், அதுவே எளிய ,சிறந்த கணினித்தமிழ் உள்ளீடு அமைப்பாகும். இம்முறையில் எழுத்துக்கள் உருவாக்கம் தமிழ் எழுத்திலக்கண முறைப்படியே அமையும்,தமிழ் எழுத்துக்கள் ,தமிழ் எழுத்துக்களாகவே மனதில் பதியும்,எனவே நமக்கும் தமிழ் அறிவு மட்டுப்படாது.

தமிங்கீலீஷ் தட்டச்சு எளிமையாக ,வேகமாக தட்டச்சு செய்ய உதவுவது போல தெரிவதே ஒரு பிரமை தான், நமது நேரத்தையும்,உழைப்பையும், ஏன் தமிழ் சிந்தனையையும் மட்டுப்படுத்தக்கூடியதே அம்முறை.

பீட்சா, பர்கர் எல்லாம் உணவு தான் ,சாப்பிட்டால் பல் சுலுக்குவதில்லை, ரொம்ப எளிதாக சமைக்கக்கூட தேவையில்லாமல் ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே கொண்டு வந்திடுவாங்க, இன்னும் கொஞ்ச நாள் போனால் சந்தை பிடிக்க ஊட்டிவிட்டுக்கூட போவாங்க!!!, அடடே ரொம்ப எளிதாக இருக்கே என மூன்று வேளையும் சாப்பிடக்கூட நமக்கு ஆசையாக இருக்கலாம்,ஆனால் அதையே மூன்று வேலையும் முக்கினால் 'ஜங்க் புட்" உடம்புக்கு ஒத்துக்காது தவிர்க்கணும் என மருத்துவர்கள் முதல் பொதுவான உடல்நல விரும்பிகள் வரை சொல்வதேன்?

எனக்கென்னமோ ஆசானுக்கு டாம்,டேப் ,டாஸ்கி முறையில் ஶ்ரீலிபியில் தட்டச்சு செய்து புத்தகம் உருவாக்கி கொடுப்பவர் "ஏமானே ,ஒரு பக்கத்துக்கு கொஞ்சம் பைசாவ கூட்டிக்கொடுங்க , விலைவாசிலாம் ஏறிப்போச்சுங்க ஏமானேனு" கேட்டிருப்பாரோ, என்னவோ?, எனவே எதுக்கு இந்த முறைலாம் பேசாம "தமிங்கிலீஷ்" தட்டச்சு போலவே கற்பது முதல் எல்லாத்தையும் மாத்திட்டால் பதிப்பகத்துறையிலும் தமிங்கிலீஷ் முறையே முழுக்க பயன்ப்பாட்டிற்கு வந்திடும் ,அப்பாலிக்கா நாமே தெனம் 10 பக்கம்னு தட்டச்சு செய்து  ஒரு 500 பக்கம் பொஸ்தவத்த வெளியிட்டுவிடலாம் காசு மிச்சம் ஆகிடும்னு நினைச்சிருக்கலாம் , கணக்கு பண்ணாமல் எதுலவும் கமிட் ஆக மாட்டார் நம்ம ஏமான் அவ்வ்!

வேகமாக சோர்வின்றி,நிறைய தட்டச்சு செய்ய வேண்டுமெனில் தமிழ் -99 முறையே சிறப்பானது, அதுக்குறித்து மேலும் அறிய,

சுட்டிகள்:

# http://tamil99.org/

# http://blog.ravidreams.net/tamil99/

# http://blog.ravidreams.net/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

ஒரு முழுமையான மொழி என்பது எழுத்துருவும், வாசிப்பும்(பேச்சு ,ஒலி) எனக்கொண்டிருக்க வேண்டும், எனவே அதில் சீர் திருத்தம் என செய்யப்பட்டால் ,இரண்டுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு மொழிக்கென சிறப்பாக தனித்து உருவாகியுள்ள எழுத்தை அழித்துவிட்டு செய்ய முற்படும் சீர்திருத்தம் மேம்பாடே அல்ல ,பின்நோக்கி செல்வது ஆகும்,

 ஒரு மொழி என்பது முதலில் ஒலி வடிவாக தோன்றி பின்னர் ஒலிக்குறிப்புக்கு "வடிவக்குறிப்பாக" எழுத்துருப்பெறும், இவ்வாறு நிகழ பலக்காலம் ஆகும். ஒரு மனிதக்கூட்டம் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து புழங்கி வந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும், நாடோடி மொழிகளுக்கே எழுத்து வடிவம் இல்லாமல் , ஒலிவடிவத்தில் இருக்கும், அப்படி எழுத நினைத்தாலும் சென்ற இடமெல்லாம் உள்ள எழுத்தில் எழுதிக்கொள்ளத்தான் முடியும்,தமிழ் நீடித்து நின்று வளர்ந்த மொழி மண்ணோடும், கலாச்சாரத்தோடும் இணைந்த மொழி, தமிங்கிலீஷில் எழுதினால் அம்மொழி தமிழ் மண்ணுக்கு சொந்தமென சொல்லும் உரிமையை தான் இழக்க நேரிடும்!

தமிழ் மொழியில் நீட்டலும் ,மழித்தலும் செய்து சீர்த்திருத்தம் செய்ய நினைத்தால் இம்மொழியின் "உட்க்கூறுகளை" கொண்டு தானே செய்ய வேண்டுமே ஒழிய ,இன்னொரு மொழியின் உட்க்கூற்றினை பிடுங்கி இங்கே நடுவதல்ல!

ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற விட்டாலும் பின்னர் கைவலிக்குறைக்கும் முறை, ஆரம்பத்தில் இதுல கொஞ்சம் நாள் வண்டி ஓட்டிவிட்டு , அப்புறம் மறந்துப்போச்சேனு விட்டுப்புட்டேன், இனிமே ஆசான் செயமோகர் புண்ணியத்துல மீண்டும் தமிழ் -99 கரைக்கு ஒதுங்கிடலாம்னு பார்க்கிறேன் அவ்வ்!
------------------------------

தமிழ் மொழியின் அச்சு வரி வடிவ வரலாறு!

இப்போ கொஞ்சம் பழங்கதையும் பார்ப்போம்,

#  இந்தியாவுக்கு கடல் வழி கண்டுப்பிடிச்சு வந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா  கி.பி 1498 இல் கோழிக்கோட்டிற்கு வந்தார். வாஸ்கொட காமாவுக்கு வழி ஒன்னும் தானா தெரியலை ,அப்போ மலபார் பகுதியில் இருந்து ,அரேபியா வழியா போன ஒரு இஸ்லாமிய வியாபாரி தான் , எங்கோ நடுவில் கடல்பயணத்தின் போது ,வாஸ்கோடகாமை சந்தித்து வழிக்காட்டி உதவியபடியே சொந்த ஊருக்கும் திரும்பினார்னும் சொல்வாங்க.

எப்படியோ வந்து சேர்ந்த அவர் சும்மா ஒன்னியும் வரலை வரும் போதே மொழி வல்லுனர்கள் எல்லாம் கூட்டாந்தார் ,அவங்கலாம் இந்திய மொழிய ஆராய்ந்து கத்துக்க ஆரம்பிச்சாங்க ,அப்படிக்கத்துக்கிட்ட மொத இந்திய மொழியே "மலபார்" என அப்பொழுது சொல்லப்பட்ட மலபார் தமிழ் தான்.

அதுக்கு காரணம் கோழிக்கோடு பகுதில கரையேறியது,ஆனால் அதே நேரம் கோவாவிலும் ஒரு கூடாரம் போட்டாச்சு.

படம்:



St Francis Church கி.பி.1510 இல் கட்டப்பட்டது இங்கு தான் கி.பி.1524 இல் இறந்த வாஸ்கோட காமாவின் உடல் புதைக்கப்பட்டு, பின்னர்,கி.பி 1538இல் தோண்டியெடுக்கப்பட்டு போர்ச்சுகல்லுக்கே மீண்டும் கொண்டு செல்லப்பட்டது, இப்பொழுது ஒரு நினைவு மண்டபம் மட்டும் உள்ளது.

மேல் விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
சுட்டி:

http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church


(தம்பிரான் வணக்கம் அட்டை-வலப்பக்கமா குந்திக்கிறவர் தான் ஹென்றி)

Henrique Henriques (1520-1600) என்ற போர்ச்சுக்கீசிய மொழி ஆய்வாளர் , தமிழை கத்துக்கிட்டு , போர்ச்சுகல்- தமிழ் அகராதிய ,(Cartilha – First Tamil book 1554) லத்தின் வரிவடிவில் சிறு புத்தகமாக கி.பி 1554 இல் லிஸ்பனில்  Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz ஆகியோர் மூலம் அச்சடித்தார். இவர் அப்பொழுது தூத்துக்குடி அருகே ஒரு தமிழ் பல்கலைகழகம் கூட அமைக்க வேண்டும் என ,போச்சுக்கல் அரசுக்கு பரிந்துறையும் செய்தாராம்.




(Cartilha – First Tamil book 1554)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வடிவம் கண்ட முதல் மொழி தமிழ் ஆகும்.

அதன் பின்னர்,கி.பி 1556 இல் இந்தியாவின் முதல் அச்சகம் , தற்போதைய கேரளாவில், கொல்லம் அருகே அம்பளக்காடு எனுமிடத்தில் அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஒரு சிலர் கோவாவில் அமைக்கப்பட்டது என்கிறார்கள்.

பின்னர் கி.பி 1557 இல் Juan Gonsalves. என்ற ஸ்பானிஷ் பாதிரி ,தமிழுக்கான முதல் "அச்சு எழுத்துக்களை செதுக்கி" உருவாக்கினார்.



இவ்வெழுத்துக்களை வைத்து Henrique Henriques  கொல்லத்தில் உருவாக்கப்பட்ட அச்சகத்தில் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ் (மலபார் தமிழ்)அச்சு புத்தகத்தினை அச்சிட்டு வெளியிட்டார்.

இந்நூல் "‘Doctrina Christam en Lingua Malauar Tamul " என இலத்தின் வரிவடிவில் வந்த நூலின் மொழிப்பெயர்ப்பு, கிருத்துவ வழிப்பாட்டு பாடல்கள் பிரேயர்கள் கொண்டது.


அதன் பின்னர் 1559 இல் மலையாள மொழியும் தமிழும்(மலபார் மலையாளம்) கலந்த Doctrina Christam’ alias ‘Kiricittiyani vanakkam’ என்று மொழிப்பெயர்க்கப்பட்ட நூலும் அச்சடிக்கப்பட்டது.

பின்னர் 1586 இல் தூத்துக்குடி புன்னக்காயலில் ஒரு அச்சகம் அமைக்கப்பட்டு ‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages) புனிதர் வரலாறு என்ற நூல் அச்சடிக்கப்பட்டது, இந்நூல் தான்  முதன் முதலில் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்பட்ட நூல் ஆகும்.

(‘Flos Sanctorum’ (Punitar varalaru -தமிழ்,of 669 pages)


(‘Flos Sanctorum’ (Punitar varalaru of 669 pages,ஜெர்மானிய மொழிப்பெயர்ப்பு-1672)

நாடு பிடிக்க ,மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் நினைச்சிருந்தால் இங்க இருக்கவங்களை தாஜா செய்து "லத்தின் வரி வடிவில்" எழுத,படிக்க சொல்லிட்டு போயிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யாமல் உள்ளூர் மொழியின் மொழி வரி வடிவத்தை மாற்ற விருப்பமில்லாமல் ,நம்ம ஊரு மொழிய கத்துக்கிட்டு,அதுக்கு "type casting " உருவாக்கி,புத்தகம் அச்சடித்து அப்புறமாத்தான் தன் சுயநலத்தையும் காட்டினான், ஆனால் நம்ம ஆசானோ இங்கனக்குள்ள குந்திக்கிட்டு 13 வருசமா டிரான்ஸ்லிட்டரேஷனில் டைப்படிக்கிறேன் நல்லாத்தான் இருக்கு , எல்லாரும் அப்படியே எழுதுங்கடானு "இவரே தமிழின் ஏகபோக பிரதிநிதி" போல தீர்ப்பு எழுதுறார் அவ்வ்!

என்ன கொடுமை சார் இது!
----------------------------

பின்குறிப்பு:

# தப்புத்தப்பா தமிழில் எழுதி தமிழைக்கொலை பண்ணிட்டேன் என பொங்கிட்டு  ,பிழை  திருத்தம் சொல்ல வராதிங்க ,ச்சும்மா தமாசுக்கு வேண்டும்னே மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினேன் :-))

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

# https://tidsskrift.dk/index.php/fundogforskning/article/view/1298/2076

# http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church

# http://karkanirka.org/2010/04/14/first_tamil_book/

# http://pazhayathu.blogspot.in/2009/11/first-printing-press-in-indiathe.html

# http://www.nathansholidayhome.com/sightseeing-in-and-around-fort-kochi/

மற்றும் தி இந்து, விக்கிப்பீடியா, & கூகிள் ,இணையத்தளங்கள்,நன்றி!
-------------------------

30 comments:

Anonymous said...

செமோ போன்ற ஒரு பன்றியை தமிழுக்காக நிச்சயமா பலி கொடுக்கலாம் தவறில்லை....


----கொங்கு நாட்டான்

கலாகுமரன் said...

கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து. இதை இங்கிலீஸ் காரனிடம் எழுதி கொடுத்து அவன் சரியா வாசிச்சிட்டான ரஷ்ய எழுத்தை தமிழுக்கு வச்சிடலாம்

குட்டிபிசாசு said...

எய் வவ்வாலே,

உட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா. ஏன்னா தகிரியம் இர்ந்தா லூஸ்மோகன் பத்தி பேசுவ நீ. அவரு ஏன்னாவேணா எய்துவாறுயா. காலங்க்காட்டி இங்கிலிசுல எய்த சொல்லுவாரு. சயந்க்காலங்க்காட்டி சமோஸகிருதா (ஏன்னா ஏலவுயா வாயில பேரு கூட வரல, அதான் கோயில்ல ஐயிரு சொல்லுவாரே அது) எய்த சொல்லுவாரு. நீ ஏன் பேஜார் ஆயினு கீர.

ஈழத்தவன் said...

சத்தியமா இதல எனக்கு ஒண்டும் விளங்கேல!

”தளிர் சுரேஷ்” said...

ஜெயமோகனின் கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு இல்லை! ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்று யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது! விட்டுத்தள்ளுங்கள்!

அஞ்சா சிங்கம் said...

இந்த விஷியத்தை பற்றி நீர் எழுதுவீர் என்று எதிர் பார்த்தேன்.. சபாஷ்டா சிங்கம் .(என் முதுகை தட்டிகிரேன்)
அவரு வீட்டு கீபோர்ட் தகராறாக இருக்கும் இல்லைனா கூகுள் ஐ.எம்.ஈ.தகராறு பண்ணி இருக்கும் அந்த கடுப்புல எழுதி இருப்பாரு .. அதுக்கு போட்டு அடிக்கிறாங்க எல்லாரும் ஒரு பச்ச புள்ளைய போட்டு ........

jeevagv said...

வவ்வாலு, இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி வரலாறுன்னு சொல்லி குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டுவீங்கன்னு தெரியலை - கொஞ்சம் வெளியில்லை வாங்க!

<a href="http://madhumithaa.blogspot.com/2013/11/blog-post.html>இதையும்</a> படிங்க!

வவ்வால் said...

கலாகுமரன்,

வாங்க,நன்றி!

சரியா சொன்னீங்க, லிபியை மாத்தி எழுதினா அதே போல படிக்க வரும்னா ஆங்கிலம் எழுத படிக்க தெரிஞ்ச எல்லாருமே ஐரோப்பிய மொழிய எல்லாம் படிச்சிடலாம்.

இன்னும் சொல்லப்போனால் 30 நாளில் தமிழ் மூலம் ஆங்கிலம்ம் கற்றுக்கொள்ளுக்கொள்ளுங்கள், இந்தி, சமஸ்கிருதம் என பல மொழிக்கு புக்கு இருக்கு அதில எல்லாம் 'தமிழ்லிபில' அந்த மொழிய சொல்லி தருவாங்க,நமக்கு சில வார்த்தைகள் தான் அறிமுகம் அகும் ஆனால் பேச முடியாது.

அதே போல கதை தான் ஆங்கில லிபியில் எழுதினா ஆகும்.
-----------------
குட்டிப்பிசாசு,

வா வாத்யாரே,

படா வஸ்தாதா கீறீரே, லூஸ் மோகன் எல்லாம் சுகுர்ரா பேசுவாப்படி ,நமக்கு அம்புட்டு சுகுர்ரா பேச வல்ல அவ்வ்!

ஹி...ஹி நீ ர் எந்த லூஸ் மோகன சொன்னீர் அவ்வ்!

செய மோகரு படா உஷார் பார்ட்டி , எந்த சைடு எடுத்தா என்னா கெடிக்கும்னு தெர்ஞ்சினுட்டு தான் பால் மாறுவாப்டி அவ்வ்!

ஆமாம் நாத்திரில இன்னா பாசை பேசுவாறு அவ்வ்!
---------------------

ஈழத்தவன்,

இப்டிக்கா வந்ததுக்கு டாங்க்ஸ்!

பிரியாத வரிக்கும் ஹேப்பி!
--------------
சுரேஷ்,

வாங்க,நன்றி!

// ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்று யோசித்திருப்பாரோ என்று தோன்றுகிறது! //

அதே தான் ,அதையும் சுட்டியுள்ளேன், கடசீல பாரும் , தேவநகரில தான் இந்திய பாஷைகளுக்கு பெரும்பாலும் "வரி வடிவம்" இருக்கு தமிழையும் அப்படி எழுதிட்டா இந்தியா முழுக்க பாஷை வித்தியாசம் குறைஞ்சிடும்னு பிட்ட போடுவாரு அவ்வ்!
-----------------

அஞ்சா ஸிங்கமே,

வாரும்,நன்றி!

எதுனா "மலையாள மந்தீரிகம்" தெரியுமா, நான் என்னா எயுதுவேன்னு தெரிஞ்சிடுதே ,உம்மலாம் ஏமாத்தவே முடியாது போல கீது அவ்வ்!

என்ன வெள்ளாட்டு இது பச்ச புள்ள ,கீரிப்புள்ளனு சொல்லிட்டு, அவரு பெருந்தச்சன் எழுத்தச்சன் ... மலையாள ஃபேமஸ் ரைட்டர் தெரியுமில்ல ... அவருக்கு மலையாளக்கரையில ரசிகர் மன்றம்லாம் இருக்கு, அவருங்கட்டியும் கேரளா போனாரு செலை வைப்பாங்கய்யா செலை! அவ்வ்!

-----------------

ஜீவா வெங்கட்ராமன்,

ரொம்ப நாள் கழிச்சு வரிங்க போல வாங்க,நன்றி!

நீங்க பெரிய குதிரை பந்தய மைதானத்துல குதிரை ஓட்டுவீங்க நமக்கு அதெல்லாம் வசதிப்படுமா அவ்வ்!

ஆமாம் எனக்கு சுட்டி போட்டப்பதிவை நீங்களே படிக்கலை போல தெரியுதே அவ்வ்,

//மொழியைக் கற்கும் ஆர்வத்தை நாம் தூண்ட வேண்டுமே தவிர, அந்த மொழியை வேறு மொழியில் கற்பதை ஒரு ஆரம்பமாக வைத்துக்கொள்ளலாமே தவிர, இது ஒரு மொழியை அழியாமல் காப்பதற்கான தீர்வாகாது.//

இப்படி 'வேற மொழியில லிபி" மாத்தி எழுதினால் மொழி அழியாம காக்கலாம் உதவாதுனு தான் சொல்லி இருக்காங்க.

அதாவது தமிழ் எழுத படிக்க தெரியாதவங்களுக்கு அறிமுகம் செய்ய உதவும்,ஆனால் அதுக்கு அப்புறம் அம்மொழிக்கான லிபியில் ப்டிக்கணுமாம்.

செய ,மோகரு என்ன சொல்லுறார்னா தமிழ் லிபியே தேவையில்லை அலாக்கா தூக்கிட்டு ஒட்டுக்கா ஆங்கில வடிவில் ஆரம்பத்துல இருந்தே பழக்கிடலாம்னு சொல்லுதார்.

இது எப்படி இருக்குனா "கண்ணு தெரியாதவங்களாம் பிரெய்லி "தான் படிக்கிறாங்க, வருங்காலத்தில எல்லாருக்கும் கண்ணு தெரியாம போனால் என்ன செய்றது எனவே எல்லாருக்கும் இப்ப இருந்தே பிரெய்லில மட்டும் எழுத பழக்கிடலாம் என்பது போல சொல்லுறார் அவ்வ்!

ஒரு மொழி முழு வளர்ச்சியடைந்த மொழி என்றால் அதுக்குனு தனிப்பட்ட ஒரு லிபி இருக்கனும், இல்லைனா குறை மொழி, அப்படி இருக்க தனித்து வளர்ந்த தமிழை ஏன் தானா குறை மொழியாக்க துடிக்கனும்.

லிபியே இல்லாத கொங்கணி மொழிக்கு சமீபத்துல கஷ்டப்பட்டு தேவநகரில லிபி உருவாக்கினாங்க.

இல்லாதவங்க கஷ்டப்பட்டு உருவாக்கிட்டு இருக்கும் போது லிபி வச்சிருக்க நாம எதுக்கு அதை அழிச்சிட்டு புதுசா ஒன்னை உருவாக்கணும்?

வாலறுந்த நரி ஒன்னு மத்த நரிகளை பார்த்து சொல்லிச்சாம் ,வால் ஒரு தெண்டம், வேகமா ஓட தடையா இருக்கும், எனவே எல்லாம் வால் அறுத்துக்குங்க அதான் நாகரிகம்னு அவ்வ்!

Anonymous said...

என்னுடைய பின்னூட்டம் மட்டும் எப்படி ஸ்பாம் பொட்டிக்கு போகுதுன்னு தெரியவில்லை......

--கொங்கு நாட்டான்

Shankar said...

I am a misfit to comment here, as I cannot write in tamil.
You have rightly mentioned that English is a strange language. Many aspects of it defies logic and reasonable explanation.I find it very difficult when I have to explain that to my grand son.
But, I fully endorse your views .
I follow most of your articles. Can I have your mail id please. I would like to stay in touch with you.

Paramasivam said...

மிகவும் ஆழமான பதிவு. நான் உங்களின் பதிவையும் விரும்பிப் படிப்பேன். ஜெயமோகன் எழுத்துகளையும் விரும்பிப் படிப்பேன். ஆனால் அவர் ஏன் இந்த ஒரு எண்ணம் கொண்டு உள்ளார் என தெரியவில்லை.தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இப்படிப் பட்ட பல வீணான முயற்சிகளைத் தாண்டி இப்போதும் பொலிவுடன் உள்ளது. நீங்களே கூறியது போல பிரபலம் அடைய குறுக்கு வழி என எண்ணி இருப்பார் என எண்ணுகிறேன். நான் அவரின் பதிவுக்கு சென்று என் கண்டனம் தெரிவிக்க உள்ளேன். மற்றொன்று, நானும் சென்னையில் தான் வசித்து வருகிறேன். ஆயின் உங்கள் தமிழ் சென்னை தமிழ் இல்லை என்பதையும் கூற விரும்புகிறேன். படித்து, பொருள் விளங்க சிறிது கடினமாக உள்ளது. எங்கள் சென்னையைப் பற்றி ஒரு தவறான எண்ணம் உங்கள் வாசகர்களிடம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ந.பரமசிவம்

Anonymous said...

எப்டிக்கீர நைனா? நல்லா எய்திகீர.

//மெட்டாமார்பாசிஸ் ஆகலாம்னு...//
தலைவரே நீங்க ஆல்ரெடி மெட்டாமார்பாசிஸ் ஆயிட்டீங்க.
ஏற்கனவே உங்களுக்கு ஆறரை அறிவு(நல்லவேல நந்தவனம் இன்னும் வரல...அவ்வ்...). இதிலவேற நீங்க இன்னும் மெட்டாமார்பாசிஸ் ஆயிட்டெயிருந்தீங்கன்னா உங்க எழுத்த புரிஞ்சிக்கிற அறிவு எங்களுக்கு இல்லப்பா.

//ஏன்னா தமிலு எழுத்தொலிக்கு முக்கியம் கொடுக்க மொழி, இங்கிலீப்பீசு சொல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது............எலுத்தா படிக்கும் போது சொல்லுற அதே ஒலில சொல்லாவும் சொல்லலாம், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.//

தமிழிழும் சில எழுத்துக்களுக்கு ஆங்கிலம் போலவே ஒன்றுக்கு மேற்பட்ட புரநவுண்சியேஷன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

தா'க'ம் (Thaa-'ha'-m), 'க'ணக்கு ('ka'-nakku) , 'க'ணேஷ் ('ga'-nesh)
'த'ண்ணீர் ('tha'-nneer), விரு'து'நகர் (viru-'dh'-unagar)
'செ'ன்னை ('che'-nnai), 'சி'ங்கம் ('si'-ngam)
பானை ('paa'-nai), தபால் (tha-'baa'-l)

நான் சொல் வழக்கிலுள்ள புரநவுண்சியேஷனைத்தான் எழுதியிருக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தால் இந்த அடியேனை மன்னிச்சு வுட்டுரு நைனா.

kirumban said...

enna pirachanai inga. jaya mohan sonnathula thappe illa. avaroooda adutha naval english eluthula thamil thaan. unkalale puringeka mudiyalaina athuku avar enna pannuvar? avar oru munnodi, kaliliyo mathiri. solrathu onu siyirathu onu apadikara alu avar illa.

வவ்வால் said...

கொங்கு நாட்டார்,

வாரும்,வழக்கம் போல ஸ்பாம் பொட்டிதான் அவ்வ்!

அனானியா வருவதால் அப்படியாகுதா?

செமோ ஒரு புனிதப்பசு இல்லையா அப்போ?

ஹி...ஹி ஆசானுக்கு இதுல என்னமோ புரட்சி பண்ணிட்டதா நினைப்பு,ஆனால் அவர் ஆசைப்பட்டா போல நல்ல பப்ளிக்குட்டி கிடைச்சிப்போச்சு அவ்வ்!
----------------------
ஷங்கர்,

வாங்க,நன்றி!

நீங்க சொன்னது சரிதான், ஆங்கிலத்தின் பலவீனத்தை கவனிச்சு இருக்கீங்க. ஏனோ பொதுவா மக்களுக்கு ஆங்கிலத்தில் எல்லாமே சரியா இருக்கும்னு நினைப்பு அவ்வ்!
-----------------

பரமசிவம்,

வாங்க,நன்றி!

அவருக்கு என்ன வேண்டும்னு நினைச்சாரோ அது கிடைச்சிடுச்சு ,அதான் இப்படி எழுதி இருக்கார்!

ஹி...ஹி மெட்ராஸ் பாஷை பேசுறத விட எழுத கஷ்டம், ஏதோ கொஞ்சம் கலந்துக்கட்டி எழுதி இருக்கேன் அவ்ளோ தான்.
---------------------

வேற்றுகிரகவாசி,

வா வாத்யாரே , எப்டிக்கீற? டாங்க்ஸ்!

நாம எப்பம்ப்போல சோக்கா கீறேன்!

//ஏற்கனவே உங்களுக்கு ஆறரை அறிவு(நல்லவேல நந்தவனம் இன்னும் வரல...அவ்வ்...)//

எம்மேல எதுனா காண்டுனா சொல்லிடு வாத்யாரே அதுக்காண்டி இப்பிடிலாம் போட்டு வாங்கப்படாது அக்காங், அப்பாலிக்கா ஏழறைனு சொல்லிப்புடும் சனம் அவ்வ்!

ஏக்கனவே நான் விக்கிப்பீடிய வலிச்சுனு வந்து இங்கன குப்பக்கொட்டினு இருக்கேன்னு அல்லா பெர்ய மன்சங்களும் எம்மேல காண்டாக்கீறாங்க ,இதுல பப்ளிக் லைஃப்ல இருந்து அப்ஸ்கான்ட் ஆன பெருசுங்கள வேர்ர இஸ்துவுட பாக்குறியே ஏம்ப்பா ஏன்?

#//தா'க'ம் (Thaa-'ha'-m), 'க'ணக்கு ('ka'-nakku) , 'க'ணேஷ் ('ga'-nesh)
'த'ண்ணீர் ('tha'-nneer), விரு'து'நகர் (viru-'dh'-unagar)
'செ'ன்னை ('che'-nnai), 'சி'ங்கம் ('si'-ngam)
பானை ('paa'-nai), தபால் (tha-'baa'-l)//

நீங்க சொன்னதுலாம் ஸ்ட்ரெஸ் ,எவ்ளோஒ அழுத்தி ஒரு எழுத்தை உச்சரிக்கனும் என்பது. நாஞ்சொன்னது 'சவுண்டு" வுடுறது, ஒரு எலுத்துல வர்ர ஒரிஜினல் சவுண்டு அப்பிடியே அந்த சொல்லுலவும் இர்க்கும் வாத்யாரே,

C - இந்த எலுத்துக்கு வர்ர சவுண்டு "சி" அதாவது சி, ச, சே,சு போல எல்லாம் "ச" அடிப்படையில வர எடத்துல போட்டுக்கினா பரவாயில்ல, ஆனாங்காட்டியும்,

car- கார் - "கா" சவுண்டு

care- கேர் - "கே"சவுண்டு

cup- கப் -"க" சவுண்டு

cone-கோன் - "கோ"

cry- கிரை -"கி' சவுண்டு

என க,கா,கே,கோ,கி, ன்னு எல்லா எடத்திலவும் போட்டுக்கிறாங்களே

K -இப்போ கே வச்சும் அதே சவுன்டு வர்ர போல எழுதலாமே ஏன் எழுதலை?

இதத்தான் சொன்னேன் ஒலிக்கு பொறுத்தமில்லமால் எழுத்த போட்டு ,இன்னொரு ஒலிக்கு சொல்லிடுவாங்க, தனி எழுத்தோட ஒலி மாரியே சொல்லில் வராதுனு.

தமிழுல தனித்தனி எழுத்தோட ஒலியோட கூட்டு கலவையா தான் சொல்லே இருக்கும், எனவே புரநவுண்சியேஷன் கொயப்பமே வராது.

சர்வதேச அளவில ஆங்கில பொனடிக் அடிப்படையில் தமிழை டிரான்ஸ்லிட்டரேஷனா எழுதும் போது "C" எழுத்தை "ச' ஒலிக்கு தான் பாவிக்கிறாங்க, cambandam = சம்பந்தம் என எழுதுகிறார்கள். இப்படி திருஞானசம்பதர் பேரை இணையத்தில பல இடத்தில் எழுதி இருக்காங்க.
---------------

கிறும்பன்,

வருகைக்கு நன்றி!

அப்படியே ஆகட்டும், ஒரு இம்சை தமிழை விட்டு ஒழிஞ்சதுனு நிம்மதியாகிடலாம் அவ்வ்!
-------------------

Anonymous said...

//K -இப்போ கே வச்சும் அதே சவுன்டு வர்ர போல எழுதலாமே ஏன் எழுதலை?//

இப்போ புரிஞ்சுதுங்க்ன்னா. C-K கூட பர்வால்ல.
Psychology,
Pneumatic,
Iron,
போன்ற வார்த்தைகளில் ஒரு எழுத்தையே முழுங்கிர்றாங்கோ.

Lieutenant (லெஃப்டினன்ட்) போன்ற வார்த்தைகளில் இல்லாத ஒரு எழுத்தை சேர்த்துகிறாங்கோ.

ஈசியாக எழுதக்கூடிய வார்த்தைகளை கூட கடினப்படுத்தி (என்ன லாஜிக்கோ), மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். இப்படி மனப்பாடம் செய்து நன்றாக வாந்தி எடுத்தவனை, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிறான் என்று பட்டம் வேறு கொடுக்கிறார்கள்.

கற்றது தமிழ் என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? BA Tamil Literature படித்தவனுடைய நிலைமையை 2000 ரூபாய் சம்பளம் (எப்பா எவ்ளோ பெரிய அமௌண்டு!!!). இப்போ பிரைவேட் ஸ்கூல்ல எல்லாம் தமிழ் வாத்தியாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்? நிலைமை மாறியிருக்கிறதா இல்லை இன்னும் அப்படிதானா? தமிழ் வாத்தியாருகெல்லாம் பீகார் ல இருந்து இறக்குமதி செய்ய முடியாதே?

jeevagv said...

வவ்வால்,
நல்லது, அப்படியே என்னுடைய கருத்தையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்:
தமிழ் எழுத்துரு தமிழுக்கு அழகு, ஆனால் தமிழ் தன் எழுத்துருவினைத் தாண்டியும் வாழும். இப்படி ஒரு எழுத்துரு என்பது இக்காலக் கட்டத்தின் போக்கு. அவ்வளவுதான். அந்த போக்கு மாறினாலும், தமிழின் ஜீவன் மாறிடாது.
கலம் என்ற சொல்லுன் அடிப்படை உச்சரிப்பு க்+அ+ல்+அ+ம்
இந்த அடிப்படை உச்சரிப்புகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்றவை என்றால், அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல - எல்லா மொழிக்கும் பொதுவானவை. தமிழில் "கலம்" என்பது பாத்திரம் என்பதும், மொழியின் இலக்கணமும் மட்டுமே மொழிக்கு ஆதாரம். அதே கலம் என்றை சொல்லை எழுதி தமிழ் எழுத்துருவில் எழுதி, அதை இந்தி மொழியில் பொருள் கொள்ளவும் என்றால் - அது "எழுதுகோல்" என்ற பொருளைத் தர வேண்டும். இப்படியாக எந்த மொழியையும் எந்த மொழியின் எழுத்திருவிலும் எழுதினாலுன், அதன் அடிப்படை இயல்பு மாறுவதில்லை. ஆங்கிலம் போன்ற phonetic அல்லாத மொழி எழுத்திருவில் தமிழை எழுதுவதால் அதன் phonetic இயல்பை நேரடியாக ெளிப்படுத்த முடிவதில்லை என்றாலும், அதன் அடிப்படை இயல்பு மாறுவதில்லை என்பதே என் கருத்து.

அஞ்சா சிங்கம் said...

//////இன்னும் கொஞ்ச நாள் போனால் சந்தை பிடிக்க ஊட்டிவிட்டுக்கூட போவாங்க!!!,/////

இதுக்கு என்ன அர்த்தம் .? ஏதும் டபுள் மீனிங் இல்லையே .......

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும், புரிஞ்சுதா ,அப்போ சரி,

//ஈசியாக எழுதக்கூடிய வார்த்தைகளை கூட கடினப்படுத்தி (என்ன லாஜிக்கோ), மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள். இப்படி மனப்பாடம் செய்து நன்றாக வாந்தி எடுத்தவனை, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிறான் என்று பட்டம் வேறு கொடுக்கிறார்கள்.//

இதைத்தான் நான் குறிப்பிட்டது,ஆனால் செமோ உட்டாலக்கடியா தமிழில் இப்படி செய்வதாக சொல்கிறார், இதிலிருந்து அவருக்கு தமிழின் அடிப்படையே தெரியலைனு புரியுது, ஏதோ குத்துமதிப்பா எழுதிக்கிட்டு இருக்காப்போல அவ்வ்!

# கற்றது தமிழ் படம் பார்த்திருக்கிறேன், அப்படம் மொழி பற்றியும் பேசாமல், தனிமனித உலவியல் சிக்கல்களை பற்றியும் பேசாம ரெண்டுங்கெட்டத்தனமா எடுத்து கெடுத்திருப்பாங்க அவ்வ்!

இப்பவும் தமிழ் வாத்தியார்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் அடிமாட்டு சம்பளம் தான், அரசு கல்வி நிறுவனங்களில் வேலை கிடைக்கலைனா திண்டாட்டம் தான்.

பீகார்ல இருந்து ஏன் கூப்பிடு வரணும் தமிழாட்டிலவே நிறைய ஆள் இருப்பதால் சல்லீசா புடிச்சு போட்ருவாங்க, மேலும் தனியார் பள்ளிகளில் தமிழ் பாடமே சாய்ஸ்ல விட்டுட்டு ,ஆங்கிலம்,இந்தி, ஃபிரெஞ்ச்னு சொல்லிக்கொடுத்து பீத்திக்க செய்வாங்க.

ஆனால் இப்படி படிக்கிறவங்க எவ்ளோ இருக்காங்களோ அதே எண்ணிக்கையில் தமிழில் படிப்பவர்களும் இருக்காங்க எனும் போது எதுக்கு தங்கிலீஷ்ல மாற்றனும் என்பதே எனது கேள்வி?

பள்ளிகளில் தமிழ் கட்டாயம்னு சொன்னால் ,இதே புண்ணாக்கு என்ன சொல்லும்னா, தனிமனித சுதந்திரம் பாதிக்கும் "கற்றலில் அனைவருக்கும் அவரவர் விருப்பம் போல சுதந்திரம்" கொடுக்கணும்னு சொல்லிடும் அவ்வ்!
------------------

அஞ்சா ஸிங்கமே,

வாரும் ,என்ன குசும்புய்யா இது?

ஆனால் ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நெட்ல "பீட்சா" டெலிவரி பிட்டு நிறைய பார்த்திருப்பீர் போல அவ்வ்!

நான் சொன்னது ஒரே மீனிங் தான் வீணா என்ன சீண்டிவிட்டு "என் மனக்குகையின் இருண்ட்மூலையில் நியாபக அடுக்குகளில் தேங்கிக்கிடக்கும் கில்மா நினைவுகளை மீட்டெடுக்க வைத்து விடாதீர்" அவ்வ்!
-------------------------------

வவ்வால் said...

ஜீவா வெங்கட் ராமன்,

நன்றி!

// தமிழ் தன் எழுத்துருவினைத் தாண்டியும் வாழும். //

அப்படி ஒரு நம்பிக்கை கொண்டவரெனில் ,எழுத்துருவே மாற்றம் செய்ய சொல்லதேவையில்லை,ஆங்கில எழுத்துருக்கு மாறாமலே தமிழ் வாழும்!

#//இப்படி ஒரு எழுத்துரு என்பது இக்காலக் கட்டத்தின் போக்கு//

கலாகட்டத்தின் போக்கெல்லாம் இல்லை, சிலரின் தனிப்பட்ட ஆசை/தேவையின் போக்கு :-))

தமிழே படிக்காமல் வளரும் நபர்களின் எண்ணிக்கைக்கு குறையமல் தமிழ் படித்து வளர்பவர்களின் எண்ணிக்கை இருக்கு. அரசு பள்ளியும், கிராமமும் இருக்கும் வரையில் தமிழ்ப்படிப்பு இருக்கவே செய்யும்.

தமிழ் அதன் வடிவிலேயே செழிப்பாக இருக்கணும் என்றால் ரொம்ப எளிமையாக ,பள்ளிகளில் "ஒரு பாடமாக" தமிழ் கட்டாயம்னு சட்டம் போட்டலே போதுமே, ஆனால் அப்போ லபோதிபோனு முதல் ஆளா உங்கப்போன்றவர்கள் தான் கூச்சல் போடுவிங்க அவ்வ்!

ஏற்கனவே போட்டு எதிர்ப்பு சிலர் எதிர்ப்பால் நின்னு போச்சு.

#//கலம் என்ற சொல்லுன் அடிப்படை உச்சரிப்பு க்+அ+ல்+அ+ம்
இந்த அடிப்படை உச்சரிப்புகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்றவை என்றால், அவை எந்த மொழியையும் சார்ந்தவை அல்ல - எல்லா மொழிக்கும் பொதுவானவை.//
மெல்லினம், இடையினம்,வல்லினம் எல்லாம் நான் நியாபகப்படுத்தனுமோ அவ்வ்!

தமிழ் உச்சரிப்பு தமிழுக்கென இருக்கு, கலம், களம் என இரண்டு தமிழில் இருக்கு, அப்போ எந்த ல (அ) ள வச்சு உச்சரிக்கப்பட்டது என மற்ற மொழி உச்சரிப்பில் கண்டுப்பிடிக்க முடியுமா?

இந்த ல, ள, ற,ர, ன,ண வித்தியாசம்லாம் யாருக்கு வேணும் ஏதோ ஒன்னு சொல்லிட்டு போறோம், எங்களுக்கு இங்கிலீஷ் லெட்டரில் தமிழ் வேண்டும்னு சொல்லுறிங்களா அவ்வ்!

வச்சிக்கோங்க, யாரு தடுக்கப்போறா அந்த கருமத்த ஏன் எல்லாருக்கும் பொதுவாக்க சொல்லனும்?

# //இப்படியாக எந்த மொழியையும் எந்த மொழியின் எழுத்திருவிலும் எழுதினாலுன், அதன் அடிப்படை இயல்பு மாறுவதில்லை. //

மத்த மொழியை பத்தி தெரியாது ,தமிழுக்கு இயல்பு மாறவே செய்யும்,மேற்சொன்ன ல, ள உதாரணமே போதும்.

#//அதன் அடிப்படை இயல்பு மாறுவதில்லை என்பதே என் கருத்து.//

மாறிவிடும், குறிப்பாக இலக்கணம் , மாறிவிடும்.

செய்யுள் இலக்கணம் எல்லாம் எத்தனை எழுத்துக்கள் , குறில்,நெடில் ,ஒற்று சார்ந்து , அசைகள் ,சீர்களின் அடிப்படையில் உருவானது, எனவே தமிழ் எழுத்துக்களில் இருந்தால் தான் தமிழ் இலக்கண இலக்கியமே செல்லுபடியாகும்.
யாப்பிலக்கணம், ஆசிரியப்பா, வஞ்சிப்பா,கலிப்பா, எல்லாம் சித்தப்பா, பெரியப்பா போல ஆகிடும் அவ்வ்!

திருக்குறளின் சிறப்பு ரெண்டு அடி, ஏழு சீர்களால் ஆனது,அது குறட்பா என்றெல்லாம் இலக்கணம் சொல்லிட்டு இருக்க முடியாது. அப்புறம் என்ன அது பழமையான இலக்கியம்னு டிவிட்டு போடுறவங்க எல்லாம் வள்ளுவர் தான்னு செமொ சொல்லிடுவார் அவ்வ்!

வரிவடிவத்தின் இலக்கணத்தினை இல்லாமல் செய்துவிட்டால் மொழியின் தொன்மை போய்விடும்,அதற்கு தான் ஆசைப்படுகிறார் செமோ போல அவ்வ்!

இலக்கணம் இல்லாத மொழிக்கு எதை வேண்டுமானாலும் லிபியா போட்டுக்கலாம். 2000 ஆண்டுகளுக்கு மேல் இலக்கண ,இலக்கியம் உள்ள மொழியில் அப்படிலாம் செய்ய முடியாது. அப்படி செய்யலாம் என்பது மொழி அறிவின்மையின் வெளிப்பாடு!!!

Anonymous said...

டிசம்பர் மாதம் நெருங்குகிறது. புது புத்தகம் வெளியிடும் நேரம். சமீபத்தில் வட்டம் விருது கொடுத்தது. இந்த நேரத்தில் ஏதாவது கொளுத்தி போட்டால்தான் உண்டு. எல்லாம் ஒரு விளம்பரம்தான்.

Anonymous said...

சாரு விளம்பரத்துக்ககாக தனது தாய் ஒரு விபச்சாரி என்று சொன்னார்.
ஜெமோ விளம்பரம் தேவை என்றால் சாருவை போல் ஏதாவது வசனம் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ளட்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொஞ்ச நஞ்சம மதிப்பையும் குறச்சிக்க முடிவி பண்ணிட்டார் போல இருக்கு ஜெ.மோ
கிராமங்கள்ல (ஏன் நகரங்கள்ள கூட)
ஆங்கிலம் படிக்க கஷ்டப் படறவங்க
ஆங்கிலத்தை அப்படியே தமிழ்ல எழுதி படிக்கறது ஜெமோ வுக்கு தெரியுமோ தெரியாதோ? அதாவது I am Jeyamohan என்பதை ஐ ஆம் ஜெயமோகன் என்று.
ரெபிடக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் அப்படிதானே கத்து தருது.

Anonymous said...

மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் மொழி பண்டைய காலத்தில் சித்திர எழுத்துக்களில் எழுதப்பட்டது. பின்னர் தமிழி எனப்படும் தமிழ் பிராமியில் எழுதப்பட்டு அதுவே பரிணாமம் அடைந்து இன்றைய எழுத்துக்களாகி உள்ளன. ஓலைகளில் எழுதத் தொடங்கியமையால் கோடுகளான தமிழி எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக உருமாறின. 6-ம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து வந்த பார்ப்பனர் சமற்கிருத நூல்களை எழுத பல்லவர்கள் தமிழி எழுத்துக்களை காப்பியடித்து கிரந்தத்தை உருவாக்கினர். அதே சமயம் தமிழ் எழுத்துக்களையே தமிழ் மொழிக்கு பயன்படுத்தினர். அதன் நெடுங்கணக்கை மாற்றவில்லை. கிரந்த எழுத்துக்களை பல்லவர்கள் தமிழகத்துக்கு வெளியே கன்னடம், தெலிங்கு, துளு, சிங்களம், சாவகம், மலாய், மியன்மார் என பல நாட்டு மொழிக்கும் பரப்பினர். அவை காலப்போக்கில் உருமாறி தனித் தனி எழுத்துக்கள் ஆகின. கிரந்தத்தின் முழு வடிவமும் உருமாற்றம் குறைவாக இன்றைய மலையாளத்தில் எழுதப்படுகின்றன. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் தமிழோடு சில கிரந்த எழுத்துக்களான ஜ, ஸ, ஹ, ஷ, முதலியவற்றை இணைத்து எழுதினர். ஆனால் அதன் நெடுங்கணக்கு மாறவில்லை. கிரந்தத்தை தமிழர்கள் ஏற்கவும் இல்லை. 16-ம் நூற்றாண்டில் கிரந்தத்தோடு கிரந்தத்தில் இல்லாத ழ, ற, ந, ஏ, ஓ, போன்ற எழுத்துக்களை இணைத்து துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள லிபியை உருவாக்கி மலையாள மொழியை உருவாக்கியும் விட்டார். கிரந்த எழுத்துக்களில் தமிழ்/மலையாளம் தவிர அனைத்து இந்திய மொழிகளையும் எழுதலாம். மலையாள லிபியில் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் எழுதலாம். தமிழை ரோமன் எழுத்துக்களில் முதன்முதலில் எழுதியோர் போர்த்துகேயர். தமிழில் எழுந்த முதல் புத்தகம் ரோமன் எழுத்துகளில் எழுதப்பட்டது. பின்னர் போர்த்துகேயர்கள் தமிழை ரோமனில் எழுதுவது கடினம் என்பதால் தமிழ் எழுத்தில் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை கொச்சினில் அச்சடித்தனர். அதே காலக்கட்டத்தில் தமிழகம் கேரளத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெரியவர்கள் தமிழ் - அரபி கலந்த மொழியான அரவி என்பதை எழுத அரவி எழுத்துக்களையும் உருவாக்கினர். இது தமிழ் - சமற்கிருதம் கலந்த மணிபிரவாளம் போன்றதே. பிற்காலங்களில் இவை வழக்கொழிந்து போன்து. ஆக தமிழ் மொழி அன்று முதல் இன்று வரை எழுத்தை மாற்றவோ, நெடுங்கணக்கை மாற்றவோ இல்லை. தமிழோடு தொடர்புடைய பிற நாட்டவர் தமது எழுத்துக்களில் தமிழையும் தம் மொழியையும் கலந்து எழுத முயன்று புதிய எழுத்துக்களைத் தோற்றுவித்து பின்னர் தோல்வி கண்டு தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டனர் இதுவே வரலாறு. இன்று சிலர் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்தத்தை சேர்க்க முயன்று தோற்றனர். அதே கூட்டம் ரோமன் எழுத்தில் தமிழை எழுதலாம் என மீண்டும் கிளப்பிவிட்டு குழப்பம் செய்வது. தமிழோடு பிறமொழியை கலக்க விட்டும், அதன் தனித்துவ எழுத்துக்களை ஒலிகளை அழித்து இந்தியாவிலே மிக எளிதான எழுத்துக்களையும், லாஜிக்கான அறிவியல் பூர்வமான வர்க்கமற்ற எழுத்து முறைகளை அழித்துவிட நினைக்கின்றனர். தமிழ் எழுத்துக்கு சீர்திருத்தம் தேவை, இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் குறிகள் எழுத்தோடு பிணைந்துள்ளத்தை நீக்கி மலையாளத்தில் உள்ளது போல தனிக் குறியாக்கினால் தமிழ் இன்னும் எளிமையாகும். அதை விட்டு தமிழ் எழுத்தையே மாற்றி ஆங்கில எழுத்தில் எழுதி ஆங்கில சுனாமிக்கு பலிக் கொடுக்க நினைப்பது முட்டாள்தனம்.

Amudhavan said...

நான் கொஞ்சம் தாமதம் என்று நினைக்கிறேன். ஜெயமோகனின் அபத்தக் கருத்திற்கு(இது கருத்தெல்லாம் இல்லை,எதையோ எதிர்பார்த்துப் பொதுவெளியில் வைக்கப்பட்ட ஒரு காலி டப்பாதான்)எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருக்கும் எல்லாருமே ஜெயமோகனைக் கண்டித்தும், திட்டியும் தூக்கிப்போட்டு மிதித்தும் எழுதியிருக்கும் பதிவுகளுக்கு மத்தியில் அவரின் கருத்தைக் கண்டித்து அது எப்படிச் சரிப்பட்டு வராது, ஏன் சரியில்லை, இதிலிருக்கும் குறைபாடுகள் என்ன என்றெல்லாம் இத்தனை விரிவாகவும் சொல்லியிருக்கும் பாணி நிச்சயம் 'வவ்வால் ஸ்பெஷல்'தான்.
\\ஒரு முழுமையான மொழி என்பது எழுத்துருவும், வாசிப்பும்(பேச்சு ,ஒலி) எனக்கொண்டிருக்க வேண்டும், எனவே அதில் சீர் திருத்தம் என செய்யப்பட்டால் ,இரண்டுக்கும் நன்மை பயக்க வேண்டும்,ஒரு மொழிக்கென சிறப்பாக தனித்து உருவாகியுள்ள எழுத்தை அழித்துவிட்டு செய்ய முற்படும் சீர்திருத்தம் மேம்பாடே அல்ல ,பின்நோக்கி செல்வது ஆகும்\\
மற்றவர்கள் யாரும் அந்த மனிதருக்கு சாதகமாகப் பேசிவிடுவார்களோ,இதனை ஒரு விவாதப்பொருளாக மாற்றிவிடுவார்களோ என்ற யோசனை வந்து அப்படி யாரும் வருவதாக இருந்தால் அவர்களுக்கும் சேர்த்து எல்லாப் பரிமாணங்களிலும் பதில் சொல்லிவைக்கலாம் என்று சகலத்தையும் ஆய்ந்து தீர்க்கமான பதில்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.simply great.
ஜெயமோகனுடைய எழுத்துக்களை அவர் சொல்லியிருக்கும் முறையில் கொண்டுவருவதை அப்புறம் செய்துகொள்ளலாம். ஒரு மாறுதலுக்காக உங்களுடைய முதல் பாதிக்கட்டுரையை அவருடைய ஆங்கில எழுத்துருவில் அவரை எழுதிக்காட்டச் சொல்லும் விண்ணப்பத்தை அவருக்காக இங்கே வைக்கின்றேன்.

காரிகன் said...

வவ்வால்,
ஒரு நல்ல கருத்தாழமிக்க பதிவை நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கும் நீங்கள் கொஞ்சம் சாதாரண நடையிலேயே எழுதியிருந்தால் இந்தப் பதிவின் நோக்கம் சுலபத்தில் பலரிடம் சென்று சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்பவும் சிரமப்பட்டு படிக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் தீவிரமான சங்கதிகளை விவாதிக்கும் போது அதே தீவிரத்தை (seriousness) எழுத்திலும் கொண்டுவருவது அவசியம். (வவ்வாலுக்கு கோபம் வராது என்பதால் இந்தக் கருத்தைச் சொல்கிறேன்)

வவ்வால் said...

முரளி,

வாங்க,நன்றி!

அதே தான்!

தனது இருத்தலை வெளிக்காட்டிக்கொள்ளும் தன்முனைப்பாகவே தெரிகிறது, கூட ஒத்தூத இந்து ஏன்னா அவங்களும் புதுசா தமிழ் யாவாரம் ஆரம்பிச்சு இருக்காங்க , இப்படி எதுனா பட்டாசு வெடிச்சாத்தானே நாலு பேர் வாங்குவாங்க அவ்வ்!

நானும் அந்த தமிழ் வழி ஆங்கிலம் படிக்கும் முறையை முந்தைய பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன். அந்நிலை ஏற்பட்டால் யாருக்கும் உண்மையான பொருள் விளங்காமல் வெறும் சப்தம் மட்டுமே எழுப்பி "மொழி பரிமாற்றம் நிகழும்"
--------------

அனானி,

நன்றி!

ரெண்டும் ஒன்னு தானே?

அஃதே ,அஃதே, ஒரு வெளம்பரந்தேன்!
-----------------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

தாமதமாக வந்தாலும் தரமான கருத்தினை வழங்கியுள்ளீர்கள்,நன்றி!

பெரும்பாலும் எனது பதிவுகளில் 'நாட்டாமை தீர்ப்பு" போல ஒன்றை சொல்லாமல் கருத்தினை பதிவினூடாக சொல்லி இருப்பேன்,சிலர் என்ன சொல்ல வர்ரனே புரியலையேனு மேலோட்டமாக படித்துவிட்டு சொல்லிடுவாங்க, ஆனால் நீங்க மட்டும் சரியா " எங்கே அந்த கருத்து" இருக்கோ அங்கே போய் ஆணி அடிச்சுடுறீங்க :-))

# மெட்ராஸ் பாஷைய கலந்துக்கட்டி எழுதினதே தமிழ் நாட்டுக்குள்ளவே எத்தன வட்டார வழக்குகள் இருக்கு, அதை தமிழில் எழுதினாலே நொறைத்தள்ளும் என்பதை புரிய வைக்கவே.

ஹி..ஹி செயமோகர் 'நாகர் கோயில் வட்டார வழக்கை " தான் அதிகமாக கையாள்வார் ,அதை கூட தமிங்கிலீஷில் எளிதாக கொண்டு வர முடியாது, அப்படி இருக்க மெட்ராஸ் பாஷைய செய்தால் பிச்சுக்கும் அவ்வ்!

ஒரு மொழியின் உபயோகமே அதன் நிலைப்புக்கு காரணமாக இருக்கும், தமிழில் பல வட்டார வழக்குகளை பயன்ப்படுத்த ஏதுவாக 'நெகிழ்வுடன்" இருப்பதாலே தமிழ் இன்னும் சாஸ்வதமாக , சமஸ்கிருத தாக்குதலையும் தாங்கி காலம் கடந்து நிற்கின்றது.

தன் மீதான மொழிபிரயோக தாக்குதலில் , அதனுடன் கலந்து ஒன்றிவிடாமல் ,தன்மீதான பிரமொழி தாக்குதலை உள்ளிழுத்துக்கொண்டு "தமிழ் தமிழாக தனித்து அடையாளங்காட்டிக்கொள்ளும் வல்லமை' கொண்டது.
------------------------

காரிகன்,

வாங்க,நன்றி!

வேண்டும்னே தான் அப்படி எழுதினேன் , தமிழின் நெகிழ்வு, மற்றும் பயன்ப்பாட்டு தளம் பரவலானது, தமிழில் பல வட்டார வழக்குகள் புழங்கி வருகின்றது,ஆனாலும் தமிழ் தமிழாகவே இருக்கு என காட்டவே. தமிங்கிலீஷில் அதெல்லாம் சாத்தியமில்லை, முக்கியமா "சொற்பிரயோகத்தின் ஒலிப்பு' சிதைந்துவிடும், எல்லாம் ஒரே மாதிரி ஆகி மொழிச்சுவையே போய் 'சப்புனு" ஆகிடும் என விளக்கவே இம்மொழி நடை.

# ரொம்ப சீரியஸாக பேசி மண்டைய தீய வைக்க வேண்டாம்னு தான் ,கொஞ்சம் தமாசு பண்ணினேன் அவ்வ்!

தமிழ் நாட்டுல புழங்குற ஒரு வட்டார வழக்கையே எழுத்தில் படிக்க கஷ்டமா இருக்கே, தமிழ்கிலீஷில் முழுக்க எழுதினா என்னாகும் அவ்வ்!

ஹி...ஹி மெய்யாலுமே எனக்கு கோவம் வராதுங்க ,சொன்னா நம்பணும் அவ்வ்!
----------------
நீலவண்ணன்,

வாங்க,நன்றி!

படிக்காமலே பின்னூட்டம் போட்டிருக்கீங்களே அவ்வ்!

ராஜ நடராஜன் said...

வவ்வால்!மெட்ராஸ் பாசை பேசாமலே சுய மோகருக்கு அம்பு விட்டுறுக்கலாம்.தொடுப்பு ஆவணங்கள் சிறப்பாக இருந்தாலும் நம்ம மாதிரி நக்கீரன்கள் யாராவது குற்றப் பின்னூட்டம் போட்டிருந்தால் விவாதம் இன்னும் கொஞ்சம் விரிவாக்கப்பட்டிருக்கும்.ஐ.நாக்காரன் விட்ட தமிழ் மெல்ல சாகும் என்ற அறிக்கை பொய்ப்படுத்தலுக்கு இது போன்ற ஆவணப்பதிவுகள் மிகவும் அவசியம்.

//கண்ணு தெரியாதவங்களாம் பிரெய்லி "தான் படிக்கிறாங்க, வருங்காலத்தில எல்லாருக்கும் கண்ணு தெரியாம போனால் என்ன செய்றது எனவே எல்லாருக்கும் இப்ப இருந்தே பிரெய்லில மட்டும் எழுத பழக்கிடலாம் என்பது போல சொல்லுறார் அவ்வ்!//

எண்ட மலையாள பகவதி மேரியம்மே:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி,

புதுசா பதிவு போட்டப்பிறகு ,பழைய கடையிலே போய் கதவ தட்டிட்டு இருக்கீர் அவ்வ்.

செயமோகரு நாகர்கோயில் தமிழுல எயுதிக்கொலையா கொல்லுதாருல்ல அதான் மெட்ராஸ் பாஷையில எயுதி,பழிக்கு பழி,வஞ்சத்துக்கு வஞ்சம் :-))

நக்கீரன் கோவாலுனு நெனப்புத்தேன் :-))

#ஐநாக்காரன் இந்த வேலையெல்லாம் வேற செய்றானா அவ்வ்.

# ஹி...ஹி நமக்கு மலபார் பகவதி மேரியம்மே இருக்கு அவ்வ்!

lanelabbe said...

Blue Titanium Cerakote - The Artwork of Tipexing
Jun 21, 2017 · 5 posts titanium edc · 3 authorsSo, how rocket league titanium white do is titanium a metal I use blue titanium cerakote on my laptop? The titanium rings for men blue titanium cerakote has a light green color. งานออนไลน์

teesyth said...

yt207 blundstone sko tilbud,arc'teryx ダウン,hugo boss mujer,cotopaxi jacket damen,arcteryxmont,guessskonorge,fila trainers ireland ,hugo boss tröja,filaschoenen mh465