Wednesday, October 24, 2012

இசையும்-வசையும்:துவித்தர்கள் கைது.




நிகழ்காலத்தின் பரபரப்பு பிரபல்ய திரையிசை பாடகி மற்றும் சாஸ்த்திரிய சங்கீத பாடகி சின்மயி ஶ்ரீபதா அவர்களை துவித்தரில் ஆபாசமாக பேசி ,கொலை மிரட்டல்,பாலியல் வன்முறை என மிரட்டல் விடுத்த ஆறு பேர் மீது வழக்கு ,இருவர் கைது என்ற நிகழ்வாகும்.

மெய்நிகர் உலகான ,பதிவுலகு,துவித்தர் உலகு, முகநூல் உலகு , மற்றும் மின்வெட்டில் குதுகலிக்கும் மெய்யுலகு என அனைவரும் இந்நிகழ்வினை ,இந்நாளுக்கான பொழுது போக்கி என கூர்ந்து அவதானித்து சுவைபட எழுதியும் ,பேசியும் வருகையில் ,நிகழ்காலத்தின் நாட்டு நடப்புகள் பெரிதும் தெரியாமல் பெர்ஷியாவின் அக்கேமேனிய மன்னன் டாரியஸ்-1 கட்டிய பெர்சியாபொலிஸ் நகரம் எங்கே ,அரண்மனை எவ்வளவு பெரியது என கூகிளில் துழாவி சோம்பி திரியும் எனக்கும் லேசாக கிர்ரடிக்கவே என்ன தான் நடந்தது ,நடக்குதுன்னு மெல்ல சோம்பல் முறித்து இணையத்தில் துழாவினால் தொல்பொருள் ஆராய்ச்சியை விட சில சுவையான தகவல்கள் கிடைக்கவே ,பளீச்..பளீச் என என் மண்டைக்குள் பல்ப் எரிந்தது(பவர் கட்டிலும் பல்பு எரியுதாமா) ,அதனை இங்கே பகிர்கிறேன்.

துவித்தர் விவகாரம், விகாரமாக உருவாகி சைபர் கிரைம் வழக்காகி,கைதானதும் , தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு என பலவற்றிலும் முதிர்ச்சியற்ற கருத்துகளை சொன்னது தான் விவாதமாகி, சண்டையாகி நின்றது என அனைவரும் சொல்வதால், அப்படி எல்லாம் இல்லை நான் தமிழ் பெண், தமிழ் வளர்த்த அய்யங்கார் பரம்பரை, தென் தமிழக மறவர் சீமை என்றெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் பாடகி அவர்கள்.இது மேலும் ஆர்வத்தினை தூண்டவே,துவித்தர் மட்டுமல்லாமல் ,வலைப்பதிவும் வைத்திருக்கிறாரே , அதுவும் ஆங்கில வலைப்பதிவு அதில் எதாவது தேறுமா என படித்துப்பார்த்தேன்.

அவரது  வலைப்பதிவுக்கு "என்ன பெயர் வைப்பது" என தெரியவில்லை ,அதாவது அதாங்க பெயரே "what to name it"(இதே போல பெயரில் இளையராஜா ஒரு இசை ஆல்பம்(how to name it) வெளியிட்டிருந்தார் என நினைவு , வீடு படத்தில் பின்னணி இசையாக இதனை தான் பயன்ப்படுத்தியிருந்தார்கள் எனவும் நினைவு)

இனி பதிவில் இருந்து....

# The Ramnad Connection

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-7-ramnad-connection.html

அவரது வலைப்பதிவில் 2011 வாக்கில் எழுதப்பட்ட  "ராம்நாட் கனெக்‌ஷன்" என ஒரு இடுகை படித்தேன், அதில் வருவதாவது.

ராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாகிய 'ஷண்முக ரகுநாத சேதுபதியும்" , இவரது தாத்தாவும் பால்யகால சினேகிதர்கள், கல்லூரி தோழர்கள், மேலும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடுவார்கள். இவரது தாத்தாவை ராஜா "கொரளி அய்யங்கார்' என அழைப்பார் எனவும் ,ராஜா அக்கால மத்திய அரசில் அமைச்சர் ஆக சில காலம் இருந்தார் எனவும் முதல் பத்தியில் வருகிறது.

படம்-1


இதில் சில சிறு  பிழைகள் இருக்கிறது,

ராஜாவின் சரியான பெயர் -ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி.

மத்திய அமைச்சராக இல்லை, சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி , முறையே ராஜாஜி,காமராஜர் காலங்களில் வீட்டுவாடகை நிர்ணய அமைச்சராக தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்.

சுட்டி:

http://en.wikipedia.org/wiki/Shanmugha_Rajeswara_Sethupathi

காலம் கி.பி.1909-1967.

1967 இல் சுமார் 58 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இருக்கு பொறுமை காக்கவும்.

தாத்தாவின் நண்பரான ராம்நாட் ராஜாவின் சகோதரி "கணேஷ குஞ்சர நாச்சியாரும்", சகோதரர் "காஷிநாத் தொரை" அவர்களும் ,பாடகியின் தாயாருக்கு நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்றும், அப்போதெல்லாம் சென்னை செனடாப் சாலையில் உள்ள அவர்களது பெரியவீட்டில் பல புகழ்மிகு சாஸ்த்திரிய சங்கீத வித்வான்கள் பாடுவார்கள் என்றும் அங்கேயே பல மணிநேரங்கள் செலவிட்டு அவரது தாயார் இசை அறிவை பெருக்கிக்கொண்டதாகவும், மேலும் காஷிநாத் தொரை அவர்கள் பல சங்கீதவித்வான்கள் பாடிய சக்ர தனம், மண்டுக தனம், மர்கத தனம் ஆகியவற்றை அவரது தாயாருக்கும் எப்படி பாடுவது என பாடிக்காட்டுவாராம், மேலும் பல மணி நேரங்கள் இசைப்பற்றி பேசியும் பாடியும் அறிவை பெருக்குவதற்கு அடித்தளம் வகுத்தது எனவும் சொல்லியுள்ளார்.

படம்-2



இசை தெரிந்தவர்கள் இதெல்லாம் செய்வது சகஜம் தானே என நினைக்கலாம்,அட இருங்கப்பா அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவை எடுத்துக்கிட்டு ,இன்னும் வருது கதை...

படம்-3.





சிறுவயதில் தந்தைவிட்டு சென்றதால் இன்றளவும் தந்தைப்பெயரை வெளியில் சொல்வதில்லை, மேலும் அவரது தாயார் மிகக்கஷ்டப்பட்டு பாடகியை வளர்த்துள்ளார் என்பதும் தெரிகிறது.பாடகியும் இளம்வயதிலேயே நன்கு திறமைமிக்கவராக விளங்கியுள்ளார்.

தாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. அப்படியானால் அவர் பிறந்த ஆண்டு 86-15=1971  என வருகிறது.

திருமணம் சுமார் 1983 வாக்கில் ,அதாவது 12 ஆவது வயதில் நடந்துள்ளது. 1983 காலகட்டத்தில் பால்ய விவாகம் செய்யும் அளவிலேயே தமிழகம் இருந்துள்ளாதா? என்ன ஒரு கொடுமை இதனை இச்சமூகமும்,சட்டமும் அங்கீகரித்துள்ளதே.

பாடகியின் தாத்தா ராமநாட் ராஜாவின் கல்லூரி தோழர் எனில் அவரது வயதை ஒத்தவர்ராக இருக்கவேண்டும். அதாவது 1909-10 காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பாடகியின் தாயார் பிறக்கும் போது தந்தைக்கு வயது 61 ஆகிறது என வருகிறது.அந்த காலத்தில் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சரி அது போகட்டும் ராம் நாட் ராஜா "ஷண்முக ராஜேஷ்வர சேதுபதி 1967 இல் இறந்துவிடுகிறார் ,ஆனால் 1971 இல் பிறந்த பாடகியின் தாயார் எப்படி அவர் வீட்டில் நடந்த "அரசவை தர்பார் கச்சேரிகளை "கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.அப்போது பிறக்கக்கூடயில்லையே.

மேலும் ராஜாவின் சகோதர,சகோதரிகளுக்கும் அப்போது சுமார் 50-55 வயது இருந்திருக்க வேண்டும், ஆனால் 1971 இல் பிறந்தவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் ,வீட்டில் நடந்த கச்சேரிகளில் பாடிய நுணுக்கங்களை பாடிக்காண்பித்து தாயாருக்கு அறிவு புகட்டினார்கள், மணிக்கணக்கில் இசைக்குறித்து பேசிக்கொண்டார்கள் என சொல்கிறார்.

1971 இல் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார், பேச ,பாட ஒரு 6 வயது ஆவது ஆகும் அப்படி எனில் 1977 இல் என வைத்துக்கொண்டாலும் அப்போது ராஜாவின் சகோதர ,சகோதரிகளுக்கு இன்னும் வயதாகி 60-65 வயதில் இருக்கலாம், அவர்களுக்கு பாடகியின் தாயார் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனவும் சொல்ல முடியாது, சரி சின்னக்குழந்தையுடன் பழகினார்கள் என சொல்லலாம், ஆனால் ராஜாவின் வீட்டில் இசை தர்பார் நடக்கும் ,மணிக்கணக்கில் அங்கு இருந்து கற்றுக்கொண்டது,பட்டை தீட்டியது எல்லாம் இராஜா இறந்த பிறகு நடந்ததா? அதனை சொல்லவும் இல்லை.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் அவரது தாயார் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார் ,அதில் அவர் தனது 15 வயதில் சின்மயி பிறந்து, கணவன் விட்டு சென்ற பின் தான் முறைப்படி இசை பயில தொடங்கினேன், அது வரைக்கும் ஒன்றும் முறைப்படி தெரியாது என்கிறார்.இதெல்லாம் நடந்தது மும்பையில் என்றும் சொல்கிறார்.

ஆனால் பாடகியின் வலைப்பதிவில் ,சென்னையில் பல மணிநேரம் சங்கீத செஷன்ஸ் நடக்கும்,காஷிநாத் தொரை அவர்களும் , அவரது சகோதரியும் ,தாயாரும் பாடி,பேசிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள்.60-65 வயதில் இருப்பவர்கள் 12 வயதுக்குள் உள்ள சங்கீதம் கற்காத சிறுமியுடன் ,சக்ர தானம்,மக்ர தானம் எல்லாம் எப்படி பாடுவது என சங்கீத விவாதம் செய்துள்ளார்கள்.

----------------

The Tanpura of Ustad Abdul Karim Khan saheb:

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-10-tanpura-of-ustad-abdul.html

அவரது இன்னொரு இடுகையில் அவரது தாயாருக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள பிரபல புல்லாங்குழல் வித்துவான் மாலி என்கிற டி.ஆர் மகாலிங்கம் 100 ஆண்டு பழமையான ustad-abdul Karim Khan saheb பயன்ப்படுத்திய தம்புராவை கொடுத்தார் என ஒரு சம்பவத்தினை சொல்லியுள்ளார்.

படம்-4



அதில் வருவதாவது, சங்கீதம் கற்றுக்கொள்ள சுருதிப்பெட்டி சரி வராது என குருவான த்வாரம் மங்காதாயாரு (தாத்தாவின் வளர்ப்பு மகளாம்)சொல்லிவிட்டு ,சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது மாலி அவர்களை சந்தித்த போது ஒரு தம்புரா பெட்டி கேட்டதாகவும் ,அவர் வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமையான தம்புராவை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். அதுவும் விரிவாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல ஆன கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் தம்புராவை ஒரு இசைக்கடையில் காட்டி 40 ரூ என விலை நிர்ணயம் செய்து அனைத்து கட்டணமும் வாங்கிக்கொண்டே  கொடுத்தார்கள் என எழுதியுள்ளார்.

படம்-5



சுட்டி:http://padmhasinit.blogspot.in/2006/02/womens-rights-on-spirituality-contd.html

15 வயதில் தான் த்வாரம் மங்காதாயாரிடம் முதன் முதலில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என அவரது தாயார் பதிவில் எழுதியுள்ளார், அப்போது ஆண்டு 1985-86 ,இடம் பம்பாய்! மேலும் அதன் பிறகு பம்பாயில் வேலை தேடிக்கொண்டு அங்கேயே புதிதாக வாழ தொடங்கினேன் என்றே எழுதியுள்ளார், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னரே சென்னை வந்தது போல இருக்கிறது.ஏன் எனில் சென்னையை விட்டு போய் 15 ஆண்டுகள் ஆனது போல ஒரு இடத்தில் வருகிறது.


சரி மும்பையாக இருந்தால் என்ன , பெங்களூரில் இருந்த மாலியிடம் தம்புரா வாங்கி இருக்கலாமே எனலாம். அங்கும் ஒரு அதிசயம் இருக்கிறது ,மாலி 1980-85 வரையில் அமெரிக்காவில் இருந்தார். 1986 இல் இந்தியா வுக்கு திரும்பி பெங்களூரில் சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இறந்துவிட்டார்.

சுட்டி: http://en.wikipedia.org/wiki/T._R._Mahalingam_(flautist)

1986 இல் இந்தியாவில் தங்கியிருந்த சில மாத இடைவெளியில் தம்புரா வாங்கியிருக்கலாம், ஆனால் மும்பை ,சென்னை என இடம் மாறுகிறது.ரொம்ப எல்லாமே ஒரு அசாதாரணமாக நடப்பது போன்றே எல்லா நிகழ்வும் உள்ளது.

இதோடு முடியவில்லை சில ஆண்டுகள் கழித்து மாலி சென்னைக்கு வந்து தான் கொடுத்த தம்புரா பத்திரமாக இருக்கிறதா எனப்பார்க்க ஆழ்வார் பேட்டையில் உள்ள இவர்கள் வீட்டிற்கும் வந்தார் என்கிறார் , தம்புரா நன்றாக பராமரிப்பது குறித்து மகிழ்வும் அடைந்தாரம்.ஏன் மாலி அப்படி செய்தார் எனில் தம்புராவை இசைக்கவில்லை எனில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் ,அது பழமையான தம்புரா என நிபந்தனை விதித்தே கொடுத்தாராம் :-))

சென்னை, பம்பாய், பெங்களூர், அமெரிக்கா, 1986 என எல்லாம் ரொம்ப டிராமடிக்கா நடந்திருக்கு, பாவம் மாலி வேறு 1986 இல் இறந்துவிட்டார்.

ஒரு வேலை 1980க்கு முன்னரே தம்புரா வாங்கி கொடுத்தால் உண்டு ,ஆனால் மும்பையில் இசைக்கற்று கொடுத்தவர் பெயரும் த்வாரம் மங்காதாயார் எனவும், சொல்கிறார்கள்.

---------------

ஶ்ரீபதா என தனது குடும்ப பெயராக போட்டுள்ளார் பாடகி, ஶ்ரீபதா என்பது தெலுங்கு ஸ்மார்த்தா (வைதீகி)பிராமணர்கள் பயன்ப்படுத்தும் சர் நேம் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை என அறிகிறேன். ஒரு வேளை ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம், ஆனாலும் தமிழ்ப்பெண் , தாய்மொழி தமிழ், தமிழ் வளர்த்த பரம்பரை என சொல்வதெல்லாம் எப்படியோ?

இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம்!
-------------------


இப்படிலாம் நடக்காதா எனலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு படித்த போது தோன்றிய சந்தேகங்களை பொழுது போகாம எழுதி இருக்கிறேன், இதுக்கெல்லாம் கேசு போடுவாய்ங்களோ ?

ஒரு சினிமா பார்த்தால் லாஜிக் மிஸ்டேக்குன்னு ஒரு பட்டியல் போடுறாங்க, அதே போல சில பதிவுகளை படித்தேன் லாஜிக் மிஸ்டேக் போல இருப்பதை பட்டியலிட்டு இருக்கேன் , வேறொன்றுமில்லை .... ச்சே ..ச்சே ..வர வர நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போச்சுப்பா ... பிட்டு படம் எல்லாம் இணைய தளம் வச்சு பப்ளிக்கா ஓட்டுறாங்க ,ஆனால் ஒரு அட்டு மேட்டரை கருத்தா சொல்ல என்னமா யோசிக்க வேண்டியதா இருக்கு ...அவ்வ்வ் :-))
----------------------------------------------------

பிற் சேர்க்கை;

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்ற எழுத்தாளர்,பதிவர் பெயரையும் இவ்வழக்கில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்வேன் என அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

http://rightnews.in/4650/defamation-case-on-chinmayi/
-------------------------------

பின் குறிப்பு:

# பொது வெளியில் ஆபாசமாக, தனிநபர் தாக்குதல் செய்வது தவறு, அதே சமயம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளவேண்டும்.

#யாரையும் களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ இப்பதிவு எழுதப்படவில்லை.இப்பதிவில் குறிப்பிட்ட  நிகழ்வுகள், ஸ்கிரீன் ஷாட்கள்,சம்பந்தப்பட்ட நபர்களின் தளங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது , தரவுகள் விக்கியாப்பீடியா . நன்றி!

#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.
-------------------------

81 comments:

Katz said...

I wonder, how much time u took to write this!!

Anonymous said...

வழக்கம் போல் Dr.வவ்வால் தலைகீழாய் தொங்கியதால் வித்தியாச கோணத்தில் பார்வை...

நெட்டே பத்திக்கிட்டு எரிகையில் தம்புரா...-:)

வாசிக்கையில் தலை சுத்துகிறது...அடிக்கடி இங்கு வந்து பழகிப்போய்விட்டது வவ்வால்ஜி ...-:)

நாய் நக்ஸ் said...

வௌவாலு.....
:))))))))))))

உங்க அனுமதி இல்லாம பாதி படிக்கும்போதே g+,,fb,,-ல பகிர்ந்துட்டேன்...மன்னிக்கவும்....

ரோம்ப நாள் கழிச்சி களை கட்டுது வலையுலகம்....

கல்வெட்டு said...

அன்புள்ள வவ்வால் அவர்களே,
நீங்கள் கொடுத்துள்ள தகவல்களைப் படித்தேன். மிக்க நன்றி.
குடும்பத்தில் நவைவரும் நலமா?
இங்கே எனது மகன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டான். கணக்கில் மகள் 26 மார்க்கு வாங்கியுள்ளார்.

அன்புடன்

#பிரச்சனை இல்லாமல் பின்னூட்டம் போடப் பழகிக்கொண்டு உள்ளேன்.

Anonymous said...

She is a good singer...I was pleasantly surprised to see her show interest in society...

As you very well know..when one uses Social Media as the mouthpiece...whether one likes it or not...it bringsout what exactly one has in mind eventhough one may try to sugarcoat or mask...There is no cover there...It applies to both the singer and the ones in trouble...

One may say she invited trouble...but that may not be an excuse to cross the limits..even if they are not defined...

கேரளாக்காரன் said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

ஒரே ஒரு தப்பு. கொடுக்கப்பட்ட இணைப்புகளை லிங்க் செய்து விடுங்க. அவசரத்தில் மறந்து விட்டீங்களோ?

இரண்டு மூன்று நாட்கள் நிச்சயம் இதற்காக உழைத்து இருக்க வேண்டும்.

கேரளாக்காரன் said...

தாய்மொழி தெலுங்குதான்

ஆதாரம் :http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/320347_10151125349728303_927609600_n.jpg

மிச்சத்த விக்கிபீடியாவோட படிச்சிட்டு சொல்றேன்

Paleo God said...

ஒரு சிமெண்ட் பை 7 ரூபாய்

புல் வளர்ந்த மண் கொண்டு நிரப்பி

ஒரு அங்குல துளையிட்டு வெண்டை விதைகளை வைத்து, லேசாக மண் கொண்டு மூடிவிடவும், மூன்றாவது நாள் நிச்சயம் உயிர் நீர் ஊற்றவேண்டும்.

40 நாள் சுமாருக்கு காய்க்கத் துவங்கிவிடும்.

நிலமிருந்தால் மணலைக் கிளறி இதையெல்லாம் செய்தால் உடலில் பல கலோரிகள் குறையும். உடல் வலுப்பெறும்.

அடுத்த ஆராய்ச்சிக்கு உதவுமே என்று சொல்லி வைக்கிறேன்.

Paleo God said...

.மற்றவர்களின் கருத்துகளுக்கு இப்பதிவு பொறுப்பாகாது,நன்றி!//

கிழிஞ்சிது க்ருஷ்ணகிரி!

நாய் நக்ஸ் said...

@வவ்வால்....
கேட்ட பழக்கம்...பதிவ போட்டுட்டு எங்கையா போநீறு...????

சார்வாகன் said...

வணக்கம் நண்பர் வவ்வால்,
வழக்கம் போல் வித்தியாசமான் பார்வை. எனினும் வியப்பை ஏற்படுத்தவில்லை. கொஞ்சம் புகழ் அடைந்த எவருமே தங்கள் பரம்பரை பற்றி பீற்றும் கதைகளை கூறும் வழக்க்மான புகழ் போதைக்கு இந்த பாடகியும் விலக்கு இல்லை என்பதுதான்.

பாருங்க அந்த பதிவில் பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் அப்ப்டியா அதுதான் உங்களுக்கு இவ்வளவு திறமை,உங்க ஜீஇன்களிலேயே திறமை இருக்கு என ஜிங்சா போட்டு இருபார்கள் என்பதும் உண்மையே!!!.

இப்படி தன்னைப் பற்றிய ஒரு புனித பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சி உள்ளவரால் எப்படி விமர்சனங்களை ஏற்க முடியுமா?

ஆபாசமாக யாரையும் விமர்சிப்பது தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் சரியாக இந்த பிரச்சினையில் எப்போது எதற்கு, என்ன சொல்லப்பட்டது, எது இப்போதைய கைதுக்கு அடிப்படை என்பது அறியாமலே பல இணைய உலகு நீதி தேவன்கள் கருத்து சொல்லி வருகின்றார்கள்.எனக்கும் இணையத்தில் மூலம் மட்டும் நடவடிக்கையின் காரணமான் ட்வீட்டுகள் எது என அறிய இயலவில்லை.


*******
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் சொல்வதும் இன்னும் குழப்புகிறது. யார் ட்விட்டினார் என்று தெரியாமலே புகார் கொடுத்து, அதைன் மீது ஊடகங்களீல் செய்தி வெளியிட்டு கைது செய்வார்களா?

***************

பார்க்க்லாம். இந்த பிரச்சினை எவ்வள்வு நாளுக்கென்று!!!!!!!!!

நன்றி

Unknown said...

வவ்வாலு மேல கேஸ்(வழக்கு)போடுங்க....சார்! உள்ள தள்ளுங்க சார்...!

Unknown said...

அமைதிப்படை படம் பார்க்கனும் நல்லாயிருக்கும் வசனம்...!அதுவும் சத்தியராசு சொல்லுவாப்டியே சன் ஆப் ராஜராஜசோழன்..!அந்த சீன் நல்லாயிருக்கும்...!

ராஜ் said...

As usual a different post from you...Good one. :)

பட்டிகாட்டான் Jey said...




பிரபலம்னா...கொஞ்சம் அதிகப்படியா அள்ளித்தெளித்து புனிதமாவது சகஜம்தானே.

பிரபலம் பிரபலம்தான்... சாதா மனுசன் சாதா மனுசந்தான்.

பிளஸ்/முகநூல்/ட்வித்தர் இந்த மூனுலேயும் இந்த பதிவை பகிர்ந்திருக்கிறேன், அனுமதியில்லாமல்.

#இதுக்கு என்ன செக்சனோ
தெரியலையே கடவுளே

பட்டிகாட்டான் Jey said...

பக்கத்து கடைல பக்கோடா வாங்கினேன். கால் கிலோ ரூ.30/=

#safe comment

வவ்வால் said...

katZ,

நன்றி!

தட்டச்சு செய்வதை விட படித்து தேற்ற தான் அதிகம் நேரம் ஆச்சு , அந்த பதிவுகளை படிச்சு கூடுதலாக தலைவலி வேற.காரணம் ஒரே அய்யங்கார்,பிராமின் ,அது இதுன்னு எப்படித்தான் முடியுதோ கேட்டால் கருத்து சுதந்திரம்.


அய்யயோ ,எல்லாம் பாதுகாப்பா பின்னூட்டமிடும் போது நான் வேற கைப்புள்ளக்கணக்கா பேசிக்கிட்டு.

வானம் மேகமூட்டத்துடன் இருக்கிறது,வங்க கடலில் குறைந்த தாழ்அழுத்த மண்டலம் உருவாக்கி இருப்பதால்ல் ,அடுத்த 24 மணித்தில் மழை பெய்யலாம்.

வானிலை அறிக்கை -ரமணர் :-))
---------------
ரெவரி,

நன்றி!

துன்பம் நேர்கையில் தம்புரா எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயன்னு ஒரு பாட்டு இருக்கில்ல?

தலை சுத்தும் போது முதுகு தெரிகின்றதா?

பாதுகாப்பான பின்னூட்டம்(எய்ட்ஸ் வெளம்பரம் போல ஆகிடுச்சே)
---------------

நக்ஸ்,

அண்ணாத்த, நன்றி!

இதுக்கெல்லாம் அனுமதி எதுக்கு, நம்ம்ம கடை திறந்தவெளி கடை ,பதிவு அடியிலவே போட்ட�0��ம் ஷேமம் ,கொசுக்கள் நன்கு போஷாக்குடன் வளர்கின்றன. புதிதாக சிAF�வுல போயிட்டு வரேன் 2 கி.மீ கூட இல்லை 60 ரூ வாங்கிட்டான் :-((
----------------
கல்வெட்டு,

வாங்க,நன்றி!

ஷேமமா இருக்கின்றீர்களா, இவ்விடம் அனைவரும் ஷேமம் ,கொசுக்கள் நன்கு போஷாக்குடன் வளர்கின்றன. புதிதாக சில தவளைகளும் வருகின்றன, இரவானால் இனிய சங்கீதம் காத்உ ஜவ்வு கிழிகிறது :-))

ஹி...ஹி அதிரடி கமெண்டர் கல்வெட்டே பாதுகாப்பெனும் பதுங்கு குழியை தேடும் போது அடியேன் எம்மாத்திரம்.

ஆனாலும் எல்லாம் உங்க வழியில பாதுகாப்பா பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்களே :-))
------------------
ஜோதிஜி,

நன்றி!

நேற்று இரவு தான் கொசுக்கடி தாங்காமல் தூக்கம் போச்சுன்னு ஆரம்பிச்சேன் :-))

சுட்டியை எல்லாம் அப்படியே கொடுத்திருக்கிறேன்,லிங்க் ஆ போட்டாலும் யார் போய் படிக்கிறா.

கொசுக்கடியில் இருந்து தப்ப, வேப்பிலை, நொச்சி இலை எல்லாம் போட்டு மூட்டம் போட்டால் கொசு ஓடிவிடுமாம்.இயற்கை கொசுவிரட்டி ஆலோசனைகள்.
---------------
கேரள சேட்டா,

ஒரு சினிமா தளத்திலும் அப்படித்தான் போட்டிருக்கு.

நான் பொதுவா சொல்லி வைத்தேன்,ஏன் எனில் சினிமா தளங்கள் மேம்போக்காக கூட சொல்லி இருப்பார்கள்,வம்பாயிடக்கூடாதுல்ல.

ஹி...ஹி எம்ப்பூட்டு பாதுகாப்பாக சொல்ல வேண்டியதாக இருக்கு :-((
---------------------
ஷங்கர்,

நன்றி!

ஹி...ஹி நீங்களும் பாதுகாப்பா?

மாடிவிட்டு தோட்டம் அமைத்தல் இரண்டாம் பாகம் பதிவில் பயன்படுத்திக்கொள்கிறேன் ,ஆலோசனைக்கு நன்றி!

வீட்டு தோட்டத்தில் பூச்சிகள் வந்தால் வேப்பம் எண்ணை 10% +நீர் கரைசல்,சோப்பு நீர் கலந்து கை தெளிப்பான் மூலம் அடித்து கட்டுப்படுத்தலாம். இயற்கை பூசிக்கொல்லி.

சுற்று சூழல் காப்போம் :-))
--------------
சார்வாகன்,

நன்றி,

அதே தான் ,அப்பதிவுகள் முழுக்க சுய புராணம், குலப்பெருமை என வெள்ளமாக ஓடுகிறது.

படித்தால் ரத்த அழுத்தம் எகிற செய்யும் :-))
---------
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் மற்றும் சிலர் என்ன செய்தார்கள் என எதுவும் தெரியவில்லை, மேலும் இப்போது எடுத்த நடவடிக்கை கூட ஐ.பி போன்ற தொழில்நுட்பம்ம் வைத்து இல்லை அவர்களின் பெர்சனல் விவரங்கள் தெரிந்தவர்கள் கொடுத்து மட்டுமே.

செய்திகளில் தான் தொழில்நுட்பம் எல்லாம்ம் :-))

ஆமாம் லாஸ் ஏஞ்சல்ஸ் எங்கே இருக்கு,ராம் யாரு, எனக்கு எதுவும் தெரியாது... இன்னிக்கு பெட்ரோல் விலை என்னன்னு கூட தெரியாது :-((
---------------
வீடுஜி,

நன்றி!

ஏன் சார், ஒருக்கா லேசா கலாய்ச்சேன் அந்த கோவத்தில என்னை போட்டுக்கொடுக்கறிங்களா, இதுக்கு தான்யா கேசு போடுவேன்னு சொல்வங்க பதிவு எல்லாம் படிக்க கூடாதுன்னு சொல்லுறது ...

மி பாவம் ,என்றாவது சந்தித்தால் குச்சி மிட்டாயும் ,குருவி ரொட்டியும் சைட் டிஷ் ஆ வாங்கி தருவேன் :-))

அமைதிப்படை,அல்வா சூப்பர், இப்போ இரண்டாம் பாகம், நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ என வருது ,அவசியம் பார்க்கணும் .
---------------
ராஜ்,

நன்றி!
---------
பட்டிக்காட்டார்,

நன்றி!

பகிர எல்லாம் அனுமதி கேட்க வேண்டாம், என்பதிவில் திறமூல தமிழ்ப்பதிவுகள் என்று தான் அறிவித்துள்ளேன்.

சாதா என்னிக்குமே சாதா தான் , ஸ்பெஷல் சாதா எப்போவுமே ஸ்பெஷல் சாதா தான், ஹோட்டலில் கூட விலை அதிகம், தொட்டுக்கொள்ள கார சட்னி அல்லது மீன் கொழம்பு இருந்தால் யதேஷ்டம் :-))

அய்யோ மீன் கொழம்பு சாப்பிட்டால் கொலைகாரன்னு சொல்லிடுவாங்களோ ?

ஹி...ஹி நான் மீன் இல்லாத மீன் கொழம்பை சொன்னேன் (தப்பிச்சேன்)
-----------------

Anonymous said...

//தாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. //

http://padmhasinit.blogspot.in/2006/02/womens-rights-on-spirituality-contd.html என்ற பதிவில் இருந்து அவரது தாயாருக்கு 1986ல் 16 வயது என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என்று புரியவில்லை.

//Exactly at one year and fifteen days of Chinmayi, my marriage came to a stall.//

என்ற வரியில் அவரது திருமணம் நின்ற போது சின்மயியின் வயது ஒரு ஆண்டு பதினைந்து நாட்கள் என்று மட்டுமே சொல்கிறது.

http://sphotos-f.ak.fbcdn.net/hphotos-ak-ash4/320347_10151125349728303_927609600_n.jpg

பக்கத்தில் சின்மயி பள்ளிப் படிப்பை முடித்த ஆண்டு 2001 என்று இருப்பதால் அவர் பிறந்த ஆண்டு 1984 என்று கணக்கிடலாம். தாயார் வயதை எப்படிக் கணக்கிட்டீர்கள் என்பதற்கு வேறு தரவு இருக்கிறதா?

சதீஷ் செல்லதுரை said...

வௌவால் அண்ணே தலை கீழ நின்னு படிச்சாலும் ஒன்னும் புரியல..எப்படிண்ணே இப்படிலாம்?

பல பேருக்கு நல்லா நேரம் போகுது....

i support rajan னு ஒரு சங்கம் ஆரம்பிக்கிறாங்க தலைவர் பதவிக்கு உங்களை கேட்கிறாங்க..எப்படி வசதி?

பட்டிக்காட்டான்தான் துணை தலைவராம்...

ஒரே ஒரு கண்டிசன் சங்கம் ஜெயிலுக்குள்தான் கூடுமாம்....

Anonymous said...

//Yes, only after this initiation I started learning music officially (at fifteen) under Smt.Dwaram Mangathayaru.//

என்ற வரியில் விடை இருக்கிறது. உங்கள் பதிவைப் பாதி படிக்கும் போதே சந்தேகத்தில் முதல் மறுமொழி இட்டு விட்டேன். மன்னிச்சூ :) இரண்டு மறுமொழிகளையும் அழிக்கலாம்.

Unknown said...

சூப்பர் :-)எவ்வளவு நேரம் மினக்கெட்டு இருக்கீங்க.

gulf-tamilan said...

//#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.//
அழிக்கப்பட்டால் அதன் பிறகு நீங்கள் அவதூறு செய்ததாக புகார் கொடுக்கபடல்லாம்.ஜாக்கிரதை!!!

வவ்வால் said...

அனானி,

நீங்களாவே ,கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிக்கோங்க, நான் சுட்டியாக போட்டதில் போய் படித்தால் முழுக்கதையும் புரியும், சுருக்கமாக சொன்னதில் எல்லாம் சொல்ல முடியுமா?

ஆனால் அதற்கேற்ப தான் ஸ்கிரீன் ஷாட்,விவரங்கள் கொடுத்துள்ளேன் , சரியா ஆண்டு,நாள் என புரிந்து படித்தால் ,கட்டமைக்கப்பட்ட அனைத்தும் புரியும் :-))
--------

சதீஷ் செல்லதுரை,

உங்கள் பதிவின் நோக்கம் பற்றியே பலரும் பலவாரு சொல்லிக்கிட்ட்டு இருக்காங்க ,இதுல எனக்கு ஆருடம் சொல்ல வரிங்களே, செம காமெடி.

எனக்கு சிறையில் என்றால் உங்களுக்கு கோர்ட் மார்ஷல் கொடுப்பார்களா? நீங்க பேரா மிலிட்டரின்னு வேற சொல்லிக்கிறிங்க? என்னை போல சிவிலியனுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளை விட அதிகம் கருத்து சுதந்திர கட்டுப்பாடு இருக்கும் இடத்தில் இருந்து பதிவு போடுவதாக பீற்றிக்கொள்ளும் நீங்கள் எனக்கு நல்ல எச்சறிக்கை தான் விடுகிறீர்கள்.

உங்கள் கோவணத்தை இழுத்து கட்டும், எனக்கு ஒரு இழப்பும் வருமான ரீதீயாக வராது, மாடு மேய்த்தே பிழைப்பேன் :-))

இனிமேல் எல்லாம் புரட்சிகரமாக கருத்து சொல்கிறேன் என பேசிக்கொண்டு அலைய வேண்டாம், உங்கள் சாயம் வெளுத்து போச்சுங்கோ :-))
-----------------------
ஷண்முகம் ,

நன்றி!

-------------
கல்ப் தமிழன்,

பயமுறுத்த நீர் என்ன பேய்கதை மன்னன் பி.டி.சாமியா?

ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொடுத்தா ஆதாரம் எனில் என் கிட்டே அதே ஸ்கிரீன் ஷாட்டுகள் இருக்கே, ஐ.பி வச்சு அப்பதிவில் இட்டது எல்லாம்ம் எடுப்போம்ல,, மேலும் கேஷ் மெம் என்ன கூகிளே காட்டும்ல :-))

கத்துக்குட்டி தனமா சொல்லி மிரட்ட வாரும் , எப்படி அலப்பறைய செய்பவர்களை எதிர்க்கொள்வது என்பதற்கு எனது பதிவில் ஒரு பதில் இருக்கு, ஒருத்தருக்கும் புரியலை :-))

மேலும் இதில் என்ன அவதூறு இருக்கு,எல்லாம் அவர்கள் சொன்னது :-))

உம்மை போல சிலர் போதும் புரளி கிளப்பி பொழுது போக்கிட்டு போக :-))

Anonymous said...

வௌவால்,
நல்ல பகிர்வு

Envirovivek said...
This comment has been removed by the author.
கோவி.கண்ணன் said...

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா, 5600 மேடை நாடகம் போட்ட எஸ்வீசேகரைத் தெரியுமாண்ணா ?

http://govikannan.blogspot.sg/2010/05/blog-post_10.html

Aaravs77 said...

Just wanted to add one more thing to this - No one is speaking about it..

Sharankay whos is arrested was arrested based on that one twitter conversation (where chinmay was not even invited with @ tag) and he is the primary accused - did he involve with twitter on all the other conversation? why have they included him in this?

And on the facebook page of hers, she has put his college and professional details and defamed the college asking how could they employ him and encouraged all the bad tweet insults on him. Isnt that the same behaviour that these folks exhibited? Shouldnt justice be fair? and they got the arrest done exaclty before public holidays so that they ensure jail time for them.

All this shows is if you have the ego and vengeance and if you are linked to power, you can do what you want - The truth that has always been established in the country.

Aaravs77 said...

Mr Vavval

Neenga ithe parthingalannu theriyathu..

http://www.conweets.com/chinmayi/sharankay/#.UIbsRW8rO9h

So, if we use "bloddy Q#@@$#@%@!%@$" it is acceptable. what a challenge and what a revenge..

revenge of the twitter world.

Anonymous said...

Neenga support pannarathu thaan konjam aaruthalaa irukku...ippadi oru anniyam entha oorilum nadakkathu.... Its so much hurting me to see Sharankay like this ..... Justice is required....

சிவானந்தம் said...

வவ்வால்,

நல்ல புலனாய்வு பதிவு.

சின்மயி உதார் விட்டிருக்கலாம். அல்லது வம்பை விலைக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் இவர்களுடைய ட்வீட்கள் நாகரீகத்தின் எல்லையை தாண்டியவை. ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டிருந்தார். படித்தேன்.

கோபம் சின்மயி மீது இருந்தாலும் அதை ஒரு எல்லையோடு விமர்சிக்கலாம். இவர்கள் பிரதமர், முதல்வர் என எல்லாரையும் அநாகரீகமாக விமர்சித்திருகிறார்கள். இவர்களை நடுரோட்டில் வைத்து சாத்தினாலும் சரிதான்.

நந்தா said...

அட்டகாசம் வவ்வால்.

மணிஜி said...

மேகக்கூட்டம் மிதமிஞ்சி இருக்கு.. இடியும் ,மின்னலும் அதை மிஞ்சி இருக்கு.. மான் மார்க் அல்லது தேன் மார்க் அப்பளத்துடன் பருப்பு துவையலும், சுண்ட வத்தக்குழம்பும் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்..

நன்றி..தொடருங்கள்..

SELECTED ME said...

அவ்வ்வ்வ்

அஞ்சா சிங்கம் said...

ரைட்டு இருங்க நான் முன்ஜாமீன் வாங்கீட்டு வந்து கமண்ட்டு போடுறேன் ...................

வவ்வால் said...

அனானி,

நன்றி!
------------
கோவியார் ,
நன்றி!

என்னங்க்ணா நீங்களும் அண்ணா போடுறிங்க,அதுவும் உங்களுக்கேவா ....அவ்வ :-))

உங்க பதிவை படிச்சுட்டேன்,நல்ல கேள்வி அப்படி நிஜமாக 5600 நாடகம் எல்லாம் போடவியலாது.

எப்போ ஒரு முறை ,இக்கேள்விக்கு எஸ்.வீ.ஷேகர் (இப்படி ஷே,ஷா போட்டு பேசப்பழகிடுங்கோ ,ஒதவும்) பத்இல் சொல்லி இருக்கார்,

அவரது கணக்கு என்னவெனில் மேடை நாடகம்+ சிறுவயதில் அவரது தந்தைப்போட்ட நாடகத்தில் தலைகாட்டியது + தொலைக்காட்சியில் வந்த சீரியல்களின் எபீசோட்(ஒரு எபிசோடு ஒரு நாடகம்) +வானொலி நாடகம் எல்லாம் சேர்த்தாம்.

அப்படியும் கூட குறைய இருந்தால் ,அவரது நாடகம் .சிடியா வித்த கணக்கும் நாமளாக சேர்த்துக்கொள்ள வேண்டும் :-))

அவாள் எல்லாம் எப்படி வரலாறு படைக்கிறார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்!!
------------------
ஆரவ்77,
நன்றி!

பிரபல்யம் என்பதால் அவர்களுக்கு சில சாத்தியங்கள் உண்டு. மேலும் விவாதத்தினை அன்பார்லிமெண்டரி ஆக்காமல் பேசுவதே எப்பொழுதும் நல்லது.

அப்படியே பகடியாக பேசுவதாக இருந்தாலும் , வேண்டாம் என சொன்ன பிறகு தவிர்த்தல் நலம்.
இணைய வெளி இன்னமும் நம் மக்களுக்கு பழகவில்லை எனலாம்.

---------------
வெளிநாட்டு ஆங்கில ஃபோரம், சாட் எல்லாம் செய்துள்ளேன் , அங்கு இதை விட எல்லாம் "abusive slang" இல் சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அங்கு சைபர் கிரைமில் புகார் செய்ய பிரபல பின்புலம் எல்லாம் வேண்டாம். ஒரு புகார் கொடுத்தால் உடனே ஆக்‌ஷன் தான்.

ஆனால் அப்படி பேசுவது சகஜம் என அன்ங்கு அனைவரும் பழக்கிக்கொண்டுள்ளார்கள்.

சென்னையில் சாலையில் லேசாக உரசுவது போல வண்டி சென்றால் , தே...பாடு ...கண்ணு தெரியல என்பது சர்வ நிச்சயமான புகழாரம்.

இணையத்தில் புனித பசுக்களும், காண்டா மிருகங்களும் இருக்கும் நிலையில் எப்படி பேசுவது ,புழங்குவது என சட்டம் வரையறுத்து செய்திட இயலாது.

அவரவர் செயலுக்கு அவரவர் நெஞ்சே நீதி!
---------------
அனானி,

நன்றி!

பகலில் பக்கம் பார்த்து பேசணும் இரவில் அதுவும் கூடாது ,இணையத்தில் எதுவும் கூடாது என்ற நிலை போல, ஆனால் தனிநபர் ஆபாச தாக்குதல் இல்லாமல் பேசுவது என்றும் நன்றே!
------------------
சிவானந்தம்,

நன்றி!

//கோபம் சின்மயி மீது இருந்தாலும் அதை ஒரு எல்லையோடு விமர்சிக்கலாம்.//

அஃதே..அஃதே! மேலும் மாற்று பாலினத்தினருடன் பேசும் போது கவனம் தேவை.

சாலையில் சைக்கிள்/பைக்கில் போகும் போது நாம் விழுந்தால் நாமே தான் எழந்து தூசு தட்டிக்கணும் ,அதே ஒரு பொண்ணு விழுந்தால் ஊரே உதவிட வரும், எனவே நாம தான்ன் பொறுமையா வன்டி ஓட்டணும்.

வேகம் விவேகம் அல்ல! நிதானமே பிரதானம்!
ஹி...ஹி சாலை பாதுகாப்பு ஆலோசனைகள் :-))
--------------
நந்தா,

நன்றி!

அடடா பழைய ஆளுங்க எல்லாம் வரவைக்க என்னமா உழைக்க வேண்டியதா இருக்கு :-))
------------

மணிஜி,

வாங்கோ,நன்றி!

மேகம் கொட்டட்டடும்,மின்னல் மின்னட்டும் ஆட்டம் உண்டு :-))

அடாது மழை பெய்தாலும் ,விடாது மான் மார்க் குடைப்பிடித்து மீன் மார்க்கெட் சென்று வெஞ்சினம் இல்லா வஞ்சிரம் மீன் வாங்கி வந்து , மீனுக்கு வலிக்காமல் சுத்தப்படுத்தி ,சிறிய வில்லைகளாக வெட்டி,சிறிது எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து , மிளகாய்த்தூள்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து , 5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு மிகாமல் பூச்சுக்கொடுத்து 35 நிமிடங்கள் ஊற வைத்து , பின்னர் எரிவாயு அடுப்பினை கார்த்திகை தீபம் ஏற்றுவது போல ஏற்றி ,கடாயை ,அடுப்பில் அமர்த்தி , டபுள் ரிபைண்டு கோல்டுவின்னர் சூர்ய காந்தி எண்னையை அரைலிட்டர் ஊற்றி சூடானதும் , வஞ்சிர மீன் துண்டுகளை கவனமாக எண்ணை தெறிக்காமல் இட்டு , சிவந்த மேனியாக வறுத்தெடுத்து , சூடு ஆறும் மூன் ஊதி..ஊதி சாப்பிட்டால் .... என்னவென்று சொல்வதய்யா வஞ்சிரம் மீன் ருசியை ...என தானாக வாய்ப்பாடும் :-))

ஹி...ஹி நாங்களும் சமையல் குறிப்பு சொல்வோம்ல :-))

நன்றி,தொடர்வோம்!
----------------
நிலவன்பன்,

நன்றி!

ஜிவ்வ்வ் :-))
--------------

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

நன்றி!

சிறைக்கஞ்சா ஸிங்கம் கூட முன் ஜா"மீன்" வாங்க போகுதே,

என்னே காலத்தின் கோலம்!

எங்க ஊருல எல்லா மீன் மார்க்கெட்டிலும் தேடிட்டேன் ,வஞ்சிரம் மீன் இருக்குன்றான், வவ்வால் மீன் இருக்குன்றான்...ஆனா இந்த முன் ஜா"மீன்" மட்டும் இல்லைங்கிறான், எதுக்கும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் கேட்டுப்பாரும் கிடைச்சால் எனக்கும் ஒரு கிலோ முன் ஜா"மீன்" ப்ளீஸ்! :-))

Aaravs77 said...

Using vulgar words can never give any argument its due respect.

The price they have paid is a little too much given the fact the other parties are equally immature.

Agree to your points..well said ! PPl need to learn to agree to disagree !


”தளிர் சுரேஷ்” said...

ஆபாசமாக தாக்கி தனிப்பட்ட முறையில் ஒருவரை விமர்சிப்பது தவறு! எப்படியோ இணையத்தில் இந்த நிகழ்வு ஒருவித எச்சரிக்கை எழுப்பியதோடு பலரது வேசங்களை களைக்க உதவியுள்ளது போல! பிரபலமானாலே பொய் நிறைய சொல்லுவாங்களோ?!

Anonymous said...


கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நலமா?

இணையம் பத்திகிட்டிருக்கும் போது தம்புரா வாசிக்கிறீங்களே!

சின்மயி என்ற பெண்ணே முந்தா நாள்தான் எனக்கு அறிமுகம்ன்னு சொன்னால் கூட கேஸ் வந்திடுமோன்னு பயமா இல்லாமல் இருந்தாலும் உண்மை அதுதான்.


ராஜன் பதிவு,கமெண்டுகள் தவிர எனக்கு ஏனைய ட்விட்டர்களின் வாசிப்பும்,ட்விட் அனுபவமும் இல்லையென்பதால் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய முடியாது.ட்விட்டர் கருத்து பரிமாறல்கள் சின்மயி பற்றியும்,ட்விட்டயவர்கள் பற்றியும் ஓரளவுக்கு சொல்ல முயற்சித்தாலும் கூட சண்டைக்கான காரணங்களாக ஹிந்துஸ்தான் டைம்ஸில் சிறந்த ட்விட்டர்களாக சின்மயி,ராஜன் பெயர்கள் இருப்பதும்,சில நடிகைகள் பாதுகாப்பிற்காக தாயாரையும் சூட்டிங்கிற்கு கூட்டிப்போவது போல் ட்விட்டிற்குள் சின்மயி தனது அம்மாவையும் துணைக்கு கொண்டு வந்துள்ளதும்,பின் போன் சமாதான பேச்சு வார்த்தைகள் என இரு பக்க இழுபறிகள் என பிரச்சினையை வளர்த்து விட்டுள்ளது என எடுத்துக்கொண்டாலும் கூட தற்பொழுது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பெயரும் சின்னாத்தா என்ற நகைச்சுவைக்காக ட்விட்டயதை ராம் ஜின்னாத்தா என்று நகைச்சுவைப்படுத்தியாகவும்,தொடரும் அவரது தன்னிலை விளக்கமும் அவரது பெயரையும் குற்ற்ப்பட்டியலிட்டிருப்பது சின்மயி சண்டைக்கோழி என்றே சொல்கிறது.

இந்தப் பிரச்சினை குறித்து ச்வுக்கு தளம் வாசிக்க நேர்ந்தது.இது வரையிலும் சைபர் கிரைம் குறித்த 16 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருந்தாலும் கூட சின்மயி வழக்கு மட்டும் உடனடியாக லைம்லைட்டுக்கு வந்துள்ளது.

சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படும் சொற்பிரயோகங்களை நான் தனியாகவோ அல்லது பொதுவிலோ உபயோகிப்பதில்லையென்ற போதிலும் இங்கே அவசியம் கருதி கொய்யால என்ற பிரபல தமிழ் சொல்லை குறிப்பிட வேண்டியிருக்கிறது.நானறிந்த வரை இந்த சொல்லை பிரபல படுத்தியதின் பெருமை வடிவேலையே சாரும்.நகைச்சுவையாக சொல்லப்பட்டதென சரளமாக தமிழகத்திலும்,பதிவுலகிலும் உபயோகப்படுத்துவதே உதாசீனப்படுத்துவது மாதிரி ஏனைய சொற் பிரயோகங்களும் இரு நண்பர்கள் ட்விட்டும் போது கூட இதன் பாதிப்புகள் உணராமல் ட்விட்டியிருக்கலாம்.

ஒரு புறம் கெட்ட வார்த்தை பிரயோகம் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என பாலசந்தர்,பாரதிராஜா படங்கள் என சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதும் அதுவே மொழிக்கு உகந்ததல்ல,அருவருக்க தக்கது என்ற இரு சிந்தனைகள் இருக்கின்றன.ஆனாலும் சட்டப்பிரிவுகளின் படி ஒருவர் மீது உபயோகிப்படும் தவறான சொற்கள் நீதிமன்றங்களில் அங்கீகாரம் பெறாது எனவே கருதுகிறேன்.ஆனாலும் சமூக யதார்த்தங்களுக்கும் நீதிமன்ற வாசல்படிகளுக்கும் தூரம் இன்னும் அதிகமே.

இப்பொழுது ராஜன் ட்விட்,கமெண்டுகள் பக்கம் வருவோம். ஹிந்துஸ்தான் டைம்ஸின் ராஜன் ட்விட்டுகளின் அங்கீகாரத்தையும் உள்வாங்கிக்கொண்டு ராஜனின் தவறான சொற்பிரயோக குற்றம் என்ற ஒற்றைப்பார்வையை மதிப்பீடு செய்வது ந்ல்லது.

சின்மயி காவல்துறையை அணுகியது ட்விட்டர்கள் ஆறுபேருக்கான தண்டனை மட்டுமல்ல.சின்மயி என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான எதிர் விளம்பர தண்டனையாகும்.இதே போன்ற் மன அவஸ்தையை டோண்டு ராகவன் அனுபவித்தும் கூட பார்ப்பனியம் என்ற புள்ளியில் கொண்டு வந்து இணைப்பது அவரது பரிதாபகரமான நிலையில் இன்னும் பரிதாபத்தையே உருவாக்குகிறது.ஆனாலும் பிரச்சினையிலிருந்து ராகவன் வெளிவந்து காலம் முற்றுப்புள்ளி வைத்து பின் தள்ளியது போல் சின்மயி,ட்விட்டர் தோழர்களும் சமரசத்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டுகிறேன்.இதனை இன்னும் நீடிப்பது இன்னும் ரணங்களையும்,சின்மயி மீதான எதிர் விமர்சனங்களையே கொண்டு வரும்.

சமூக தளங்களாக பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் தங்கள் கடமையை சரிவர செய்யாத வரை சொற்பிரயோக கரடு முரடுகள் இருந்தாலும் பதிவுலக எண்ண வெளிப்பாடுகளே சமூக உண்மைகளை பிரதிபலிக்கின்றன.இனி பதிவுலகம் எப்படி சொற்பிரயோகங்கள் நோக்கி பயணிக்க போகிறதென பார்க்கலாம்.



ராஜ நடராஜன் said...

வவ்வால்!நலமா?

இணையம் பத்திகிட்டிருக்கும் போது தம்புரா வாசிக்கிறீங்களே!

சின்மயி என்ற பெண்ணே முந்தா நாள்தான் எனக்கு அறிமுகம்ன்னு சொன்னால் கூட கேஸ் வந்திடுமோன்னு பயமா இல்லாமல் இருந்தாலும் உண்மை அதுதான்.


ராஜன் பதிவு,கமெண்டுகள் தவிர எனக்கு ஏனைய ட்விட்டர்களின் வாசிப்பும்,ட்விட் அனுபவமும் இல்லையென்பதால் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய முடியாது.ட்விட்டர் கருத்து பரிமாறல்கள் சின்மயி பற்றியும்,ட்விட்டயவர்கள் பற்றியும் ஓரளவுக்கு சொல்ல முயற்சித்தாலும் கூட சண்டைக்கான காரணங்களாக ஹிந்துஸ்தான் டைம்ஸில் சிறந்த ட்விட்டர்களாக சின்மயி,ராஜன் பெயர்கள் இருப்பதும்,சில நடிகைகள் பாதுகாப்பிற்காக தாயாரையும் சூட்டிங்கிற்கு கூட்டிப்போவது போல் ட்விட்டிற்குள் சின்மயி தனது அம்மாவையும் துணைக்கு கொண்டு வந்துள்ளதும்,பின் போன் சமாதான பேச்சு வார்த்தைகள் என இரு பக்க இழுபறிகள் என பிரச்சினையை வளர்த்து விட்டுள்ளது என எடுத்துக்கொண்டாலும் கூட தற்பொழுது லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் பெயரும் சின்னாத்தா என்ற நகைச்சுவைக்காக ட்விட்டயதை ராம் ஜின்னாத்தா என்று நகைச்சுவைப்படுத்தியாகவும்,தொடரும் அவரது தன்னிலை விளக்கமும் அவரது பெயரையும் குற்ற்ப்பட்டியலிட்டிருப்பது சின்மயி சண்டைக்கோழி என்றே சொல்கிறது.

இந்தப் பிரச்சினை குறித்து ச்வுக்கு தளம் வாசிக்க நேர்ந்தது.இது வரையிலும் சைபர் கிரைம் குறித்த 16 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டிருந்தாலும் கூட சின்மயி வழக்கு மட்டும் உடனடியாக லைம்லைட்டுக்கு வந்துள்ளது.

சமூகத்தில் தவறாகப் பார்க்கப்படும் சொற்பிரயோகங்களை நான் தனியாகவோ அல்லது பொதுவிலோ உபயோகிப்பதில்லையென்ற போதிலும் இங்கே அவசியம் கருதி கொய்யால என்ற பிரபல தமிழ் சொல்லை குறிப்பிட வேண்டியிருக்கிறது.நானறிந்த வரை இந்த சொல்லை பிரபல படுத்தியதின் பெருமை வடிவேலையே சாரும்.நகைச்சுவையாக சொல்லப்பட்டதென சரளமாக தமிழகத்திலும்,பதிவுலகிலும் உபயோகப்படுத்துவதே உதாசீனப்படுத்துவது மாதிரி ஏனைய சொற் பிரயோகங்களும் இரு நண்பர்கள் ட்விட்டும் போது கூட இதன் பாதிப்புகள் உணராமல் ட்விட்டியிருக்கலாம்.

ஒரு புறம் கெட்ட வார்த்தை பிரயோகம் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு என பாலசந்தர்,பாரதிராஜா படங்கள் என சமூகத்தில் அங்கீகாரம் பெறுவதும் அதுவே மொழிக்கு உகந்ததல்ல,அருவருக்க தக்கது என்ற இரு சிந்தனைகள் இருக்கின்றன.ஆனாலும் சட்டப்பிரிவுகளின் படி ஒருவர் மீது உபயோகிப்படும் தவறான சொற்கள் நீதிமன்றங்களில் அங்கீகாரம் பெறாது எனவே கருதுகிறேன்.ஆனாலும் சமூக யதார்த்தங்களுக்கும் நீதிமன்ற வாசல்படிகளுக்கும் தூரம் இன்னும் அதிகமே.

இப்பொழுது ராஜன் ட்விட்,கமெண்டுகள் பக்கம் வருவோம். ஹிந்துஸ்தான் டைம்ஸின் ராஜன் ட்விட்டுகளின் அங்கீகாரத்தையும் உள்வாங்கிக்கொண்டு ராஜனின் தவறான சொற்பிரயோக குற்றம் என்ற ஒற்றைப்பார்வையை மதிப்பீடு செய்வது ந்ல்லது.

சின்மயி காவல்துறையை அணுகியது ட்விட்டர்கள் ஆறுபேருக்கான தண்டனை மட்டுமல்ல.சின்மயி என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான எதிர் விளம்பர தண்டனையாகும்.இதே போன்ற் மன அவஸ்தையை டோண்டு ராகவன் அனுபவித்தும் கூட பார்ப்பனியம் என்ற புள்ளியில் கொண்டு வந்து இணைப்பது அவரது பரிதாபகரமான நிலையில் இன்னும் பரிதாபத்தையே உருவாக்குகிறது.ஆனாலும் பிரச்சினையிலிருந்து ராகவன் வெளிவந்து காலம் முற்றுப்புள்ளி வைத்து பின் தள்ளியது போல் சின்மயி,ட்விட்டர் தோழர்களும் சமரசத்திற்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொடர வேண்டுகிறேன்.இதனை இன்னும் நீடிப்பது இன்னும் ரணங்களையும்,சின்மயி மீதான எதிர் விமர்சனங்களையே கொண்டு வரும்.

சமூக தளங்களாக பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் தங்கள் கடமையை சரிவர செய்யாத வரை சொற்பிரயோக கரடு முரடுகள் இருந்தாலும் பதிவுலக எண்ண வெளிப்பாடுகளே சமூக உண்மைகளை பிரதிபலிக்கின்றன.இனி பதிவுலகம் எப்படி சொற்பிரயோகங்கள் நோக்கி பயணிக்க போகிறதென பார்க்கலாம்.



ராஜ நடராஜன் said...

இது வரையிலும் நண்டுன்னு ஒரு சைவ நண்டுதான் சுத்திகிட்டிருக்கார்.அவருக்கு போட்டியா நீல நண்டுன்னு புதுசா முட்டை பொருச்சு வந்திருக்கிறதை இன்று காண நேர்ந்தது.சின்மயி பிரச்சினையில் சாரு நிவேதிதா வெத்தலைப்பொட்டி,சொம்பு தூக்கிகிட்டு வந்து தீர்ப்பு சொல்றத நினைக்கும் போது அட...சாமி!இது ஒலக மகா தீர்ப்பா இருக்குதேன்னு கவுண்டமணி என் காதுக்குள்ள கத்தறதுதான் கேட்குது:)

Anonymous said...

ங்கோத்தா என்று சொல்லாதவன் சென்னைவாசி என்று சொன்னால் சூ (சூ என்று சொன்னால் அது கெட்ட சொல் அல்ல) ஆல் சிரிப்பார்கள். ஆனால் அதே சொல்லை கூறியதற்காக ஊரில் நான் ஒருவனை அடித்துள்ளேன் (கெட்ட சொல்லை கூறலாமா). ங்கோத்தா என்ற சொல் தான் எனக்கு தெரியும் உண்மையான சென்னையில் புறண்டவனை சந்தித்தேன் அவன் தன் நெருங்கிய நண்பனை தேவாடிடிடியாயாப்பையன் என்று சொன்னான். என்ன இது என்று நான் முதலில் நினைத்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவன் அதை வசைச்சொல்லாக பயன்படுத்தவில்லை என்பதை. ங்கோத்தா மாதிரி தான் அவனுக்கு இதுவும்.

பெயரை சொன்னா வம்பு என்பதால் அடையாளம் தெரியாதவனாக.

Unknown said...

FYI:
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

Unknown said...

FYI:
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

Anonymous said...

super...fantastic...


by, Maakkaan.

வவ்வால் said...

ஆரவ்ஸ்77,
நன்றி!,

ஒருவரை வசை மொழியில் திட்டுவது தவறு, ஆனால் அதனை வைத்து பொதுவாக யார் என்ன சொன்னாலும் எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்க்கணும் என்பது போல பதிவுலகில் சிலர் கருத்து மழை பொழிவதனை என்னவென்பது.

ஒரு வழக்குரைஞர் வேறு , சட்டப்படி தண்டனை இல்லை என விடுதலை ஆனாலும் , போலீஸ் உங்களை ஒரு வழி செய்துவிடும் எனவே கவனம் என எச்சரித்து பதிவு போடுகிறார், அப்போ போலீஸ் சட்டத்துக்கு விரோதமாக தான் "ஒரு வழி செய்கிறது" என்பதனை கண்டித்து கூற கூட அவருக்கு துணிவில்லை :-((

இவ்வுலகம் சாமனியனுக்கு சொந்தமில்லை, செத்தபின்னாவது சமரசம் நிலவட்டும் :-))

மீன் சாப்பிடுறவன் எல்லாம் கொலைகாரன்னு சொன்னாதால் நான்கூட மன உளைச்சளுக்கு ஆளாகி இருக்கேன், இதை நான் யார் மேல எங்கே போய் புகார் கொடுக்க :-((
--------------------

சுரேஷ்,

நன்றி!

ஒரு பொய் சொன்னா அதனை நம்ப ஒரு கூட்டமிருப்பவர்கள் தான் பிரபலம் :-))
------------------------
ஆன் லைன்,

ஒரு பின்னூட்டம் போட்டு லின்க் கொடுங்கள் ,உங்கள் பின்னூட்டமே லின்க் போல கொடுத்தால், ,எடுத்துவிடுவேன்.

உங்கள் கருத்து ,உங்களுக்கு, அதில் ஓரளவும் எனக்கு உடன் பாடில்லை.
----------------------
ராச நட ராசர்,

வாங்க, நலமா,

நலமே, நன்றி!

என்னாத்துக்கு நீட்டி முழக்கிட்டு ,அதான் அடுத்த கட்டம்/வட்டம்னு போய் பேச ஆரம்பிச்சாச்சுல.

//சின்மயி காவல்துறையை அணுகியது ட்விட்டர்கள் ஆறுபேருக்கான தண்டனை மட்டுமல்ல.//

நான் துவித்தர், முகநூல்,ஜீ+ என போனதில்லை, பதிவில் வருவதை வைத்தே அவதானிப்பது.

உண்மையில் தனி நபர்,ஆபாச தாக்குதல் எனில் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால் துவித்தர்,முகநூலில் இணைக்கப்படாத நிலையில் தனிநபர் உரையாடல் கிடைப்பதில்லை, மேலும் பிளாக் செய்த பின் என்னத்துக்கு கவனிக்க?

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் பேச்செல்லாம் குழாய் ஸ்பீக்கர் வச்சு ... அலற ..அலற பேச விட்ட தமிழக காவல் துறை இணையத்தில் மட்டும் கலாச்சார காவல் காப்பது கொடுமை :-))

மேலும் 6 பேர் பெயரை சொன்னாலும் இருவர் தான் கைதாகி இருப்பதில் இருந்து சைபர் கிரைமின் தொழில்நுட்ப திறனை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் புகைப்படம்,முகவரி ,போன் நம்பர் கொடுத்து உரையாடியவர்கள் தான் மாட்டி இருக்கிறார்கள், அனானிமஸ் ஆக பேசியவர்கள் எல்லாம் கண்டுப்பிடிக்கப்படவில்லை :-))

சைபர் கிரைமில் உள்ள கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி இருந்தாலே புதிய கணினி என சொல்லலாம் :-))

(எனக்கு நேரடியாக அனுபவம் உண்டு, ஒரு அரசு அலுவலத்தில் 1996 இல் வாங்கிய கணினி இன்றும் வின் -98 இல் இயங்கியதை பார்த்து ஆச்சரியப்பட்டு கேட்டுள்ளேன்)

மேலும் நான் பேசினால் பெண்களை ஆபாசமாக பேசுவதற்கு நான் ஆதரவாளன் என சொன்னாலும் சொல்வார்கள்,நான் சொல்ல வருவது பிரபலமாக இருப்பதை வைத்து சாமனியனை ஒடுக்குவதை.

என்னைக்கூட ஒரு பதிவர் ,அவரை எதுவும் சொல்லாத நிலையில் அவருக்கு மாற்று கருத்து சொல்லிவிட்டேன் என ,நீ இன்னாரை அவதூராக பேசியதாக நான் வழக்கு தொடுப்பேன் என மிரட்டினார்.

தாராளமாக தொடுங்கள் ,அவர் பேசியதற்கு தான் நான் எதிர்வினையாற்றி இருக்கிறேன், அவரும் சேர்ந்து உள்ள வரட்டும் ,என சொன்னதும் ஓடிப்போயிட்டார் :-))

இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் , மாட்டினால் பஞ்சாமிர்தம் செய்ய ஒரு கூட்டம் இணையத்தில் இருக்கு என்பதை நினைவூட்ட :-))
-------------------------
அனானி,

ரொம்ப நல்லவரா இருக்கீங்களே, இதனை நானே சொல்லியாச்சு, சென்னையில் வண்டி லேசா உரசுவது போல சென்றாலே தே...பாடு என்பது எல்லாம் சகஜம் :-))

ஆனால் இணையத்தில் மட்டும் ,ஆச்சாரமானவர்களுக்கு அபிராமி அந்தாதி போலவே பேச வேண்டும், அதனை செய்யவில்லை எனில் வழக்கு வரும் :-))

உண்மையில் அபிராமி அந்தாதி போன்ற பக்தி இலக்கியத்துக்கு தமிழில் உரை எழுதினால் ஆபாச வழக்கில் கைதாக நேரிடலாம் :-))

----------------

உடனே என்னை குறி வச்சு ஒரு கூட்டம் கிளம்பிடுமே, ஹே ...மக்களே ... உங்க சொந்த அரிப்பை எல்லாம் ஓரம் கட்டும், நான் பொதுவா தான் சொல்லி இருக்கேன் , மீ ஒரு நடுநிலை வியாதி :-))
-----------------

அனானி,

மாக்கான்,நன்றி!
--------------

குறும்பன் said...

ஸ்ரீபதா என்ற பெயரை வேறுயாரெல்லாம் அவர் குடும்பத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்? அவர் அம்மா ஸ்ரீபதா என்ற பெயரை பயன்படுத்தவில்லை, வேறு யாராவது பயன்படுத்தியுள்ளார்களா என்று தேடினேன் எனக்கு சிக்கவில்லை. அவர் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவராமே. இன்னும் நல்லா படிச்சிருக்கனுமோ?

Anonymous said...

Good post. I be taught something more difficult on totally different blogs everyday. It is going to always be stimulating to read content material from different writers and observe slightly something from their store. I'd prefer to use some with the content material on my blog whether you don't mind. Natually I'll provide you with a hyperlink on your internet blog. Thanks for sharing.

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால்
(எனக்கு நேரடியாக அனுபவம் உண்டு, ஒரு அரசு அலுவலத்தில் 1996 இல் வாங்கிய கணினி இன்றும் வின் -98 இல் இயங்கியதை பார்த்து ஆச்சரியப்பட்டு கேட்டுள்ளேன்)
////////////////////////////////////////////////////////////////////////////

ரொம்ப கொடுமை வவ்வால் இது வட சென்னை முழுவதுக்கும் . bsnl டெக்னிகல் சப்போர்ட் நான்தான் பண்றேன் .
என் நிலைமையை யோசித்து பாருங்க . சர்வரே படு கேவலமா பல இடத்தில் இருக்கு . சில அலுவலகங்களில் இருக்கும் கணணியை பார்த்தால் கண்ணில் கண்ணீர் பெருகும் ..............போலிஸ் ஸ்டேசனை பற்றி சொல்லவே வேண்டாம் . வண்டி வண்டியாக சிரிப்பதற்கு என்னுடன் நிறைய கதைகள் இருக்கு .................:-)

Unknown said...

i wonder none of the bloggers mentioned or noticed this!!!

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

வவ்வால் said...

குறும்பன்,

நன்றி!,

எதாவது கேட்டு ,என்னை கிண்டி வம்பில மாட்ட வைக்கிறதுன்னு முடிவோடவே இருக்கீங்க போல :-))

அவர்கள் குடும்ப பாரம்பரியம் பற்றிய விவரம் எல்லாம் மர்மமாகவே இருக்கு, சமீபத்தில் தான் தமிழ் வளர்த்த பரம்பரைனு கண்டுப்பிடித்து இருக்கக்கூடும் :-))

ஶ்ரீபதா என்ற சர் நேம் இவருக்கு மட்டும் தனியே வந்துவிடாதல்லவா, ஒரு வேளை ஆந்திராவில் இருந்தால் நாங்க தெலுங்கு என சொல்லிக்கொள்ள உதவும்னு பயன்ப்படுத்துறாங்களோ என்னமோ, தமிழ் நாட்டில் எல்லாம் யாரு இதை கண்டுக்கப்போறாங்க, ஏன் பல பத்திரிக்கையும் செய்தி போடுதே ,அவங்க எல்லாம் இதை கேட்கப்படாதா?

பத்திரிக்கைகளுக்கு தேவை பரபரப்பான செய்தி, படம் போட ஒரு பொண்ணு படம்ம் அவ்வளவு தான் :-))
----------
10 ஆம் வகுப்பினை கூட வீட்டில் இருந்து படித்துவிட்டு , சென்னைப்பல்கலையில் அஞ்சல் வழியில் தான் சைக்காலஜி படித்துள்ளார்,எனவே பெருசாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.
-------------

அஞ்சா ஸிங்கமே,

அட நான் ஆரம்பத்தில் டிஷ்நெட்டில் இதே வேலைய தான் செய்தேன், அப்போ செர்வரில்/ரூட்டரில் செலிரான் 500 மெஹாஹெர்ட்ஸ் அளவுக்கு தான் இருக்கும், யுனிக்ஸில் இயங்குவதால் அதற்கு பெருசா பிராசசர் பவர் தேவை இல்லை.

128 கேபி ஐஸ்டிஎன் உலாவிய காலத்திலே 512 கே.பி பிராண்ட் பேண்டில் உலாவியவன், அப்போ எல்லாம் இணையம் எனக்கு ஒரு பெரும் ஆச்சரியம் :-))

இன்னமும் அதே போல தான் செர்வர்கள் உள்ளதா கொடுமை தான்.

பழைய கணினி இருப்பது கூட பிரச்சினை இல்லை, அரசு புதுசா கணினி வாங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆச்சாம் ,அவங்க மேலிடம் இன்னும் இவங்களுக்கு டெலிவரி செய்யாம வச்சிருக்கு என சொன்னார், காசுப்போட்டு வாங்கிட்டு ,குடோனில் வச்சி அழகு பார்க்குறாங்க :-))

கணினி இருக்குன்னு தான் பேரு ,பழசா போனதால் அப்போ அப்போ ஹேங் ஆகி ,தொங்கிடும் , சும்மா பேருக்கு வச்சிருக்காங்க :-))

Aaravs77 said...

agreed.....when there are not specific rules of engagement on an online argument, some people get very emotional and personal against each other.....

This is nothing but an extension of what we see in our daily physical world....

As I said, this is nothing to have been taken this far....but the real truth has always been in our society ("keduketa" if I may add) that the justice serves the ppl who have the power to wield the instruments of law and order.

"samaniyanukku ethuvum illai thaan"

Thans to the self promoting celebrities, soon net wont be for the ordinary to voice the opinion too...decent or otherwise.


வவ்வால் said...

ஆராவ்77,

//but the real truth has always been in our society ("keduketa" if I may add) that the justice serves the ppl who have the power to wield the instruments of law and order.

"samaniyanukku ethuvum illai thaan"
//

அஃதே..அஃதே... மொத்த கருத்தையும் சுருக்கி அழகா சொல்லிட்டிங்க. அருமை!

பெரும்பான்மையான பொதுஜனக்கூட்டம் ,உணவுக்கு மட்டும் வாய் திறக்க வேண்டும், என சிறும்பான்மை மேட்டுக்குடி மற்றும் அதிகார வர்க்கம் நினைக்கிறது.

பெரும்பான்மை பொதுஜனத்தின் வேலை , சிறிய எலைட் மக்களுக்கான சேவைகளை பூர்த்தி செய்யவே படைக்கப்பட்டிருக்கிறது, ஒரே அடியாக அனைவரையும் இல்லாமல் செய்யக்கூட தயங்க மாட்டார்கள், ஆனால் இந்த கீழ்மட்ட பொதுஜனம் இல்லைனா அவர்களுக்கு யார் ,உணவு உற்பத்தி செய்து தருவது, ஓட்டுனராக இருப்பது, சாக்கடை அள்ளுவது, குப்பை அள்ளுவது, பொதுஜனத்தினை நடமாட விட்டு வைத்திருப்பதே அவர்கள் தேவை கருதி தான் :-))

என்னமோ போங்க,நாம எல்லாம் ஒன்றே குலம் ஒருவனே தேவன், சமத்துவ சமுதாயத்தில் வாழ்கிறோம் என புகட்டப்பட்ட பாடத்தினை நம்பி வாழ்ந்துக்கொன்டிருக்கிறோம். நம்பிக்கை தானே வாழ்க்கை :-))

Aaravs77 said...

Taking the cue from you, I visited the site - your mine of information and found this
"

I have always maintained I wish for an equal society. I debated the two tumbler system on Live Radio on Aahaa FM, manual scavenging and men cleaning sewers manually even after court orders, 4 years back. I said on radio there is no such thing as a superior or an inferior man. Every man is a superior creation"

Samaniyanum superior thaan...until he starts talking....or share the screen space with the so called celebrities...

Aaravs77 said...

aaha...naan solla vanthatha mele ulla commentla solliteenga...

Aaravs77 said...

one quick question...
I read this on the same page you took the details....

Did the following cause you to dig the mine?

"I even tell people, that being who I am, its extreemely easy to find out about me. For the said 'background checks' you know? I m in the public domain. Easier to find out about me. But I on the other hand, will never know about a guy or a family posing to be normal like X1 I mentioned above, I would never know if he was stalking someone, has some obsessive pattern of behaviour, what the actual intentions are... well I can go on and on. "

btw doubt... if we keep spying on uninvited twitter posts, will that be stalking too ? sorry wrong question...athu vacchu complainte kodukkalam..

naren said...

வவ்வால்,

டோக், டோக், டோக் (echolocation). -----வவ்வால்தான்.

என்னத்தான் எழுதினாலும் கடைசியில் புத்திசாலியாக வென்றது அவர்கள்தான்.

சின்மயின் சுயசரிதத்தை கூர்மையாக படிக்காமல் விட்டது அவருடை பிராப்ல்யம்தான் காரணம். கூர்மையாக படிக்கும் ஒரு இலக்கியவாதியே இந்த பதிவை ரீடிவீட் பண்ணவேண்டியதாகிவிட்டது. அவரும் அதுகிட்டே எதுக்கு பேசினாரு என்று தெரியவில்லை.
எப்படியோ சின்மயின் டிங்கரிங் வேலை வெளிவந்துவிட்டது.

இடஒதுக்கீடு பற்றி பல கேள்விகள் எழுந்து அதற்கெல்லாம் பதில்சொல்லியாகிவிட்டது. சின்மயின் சின்னபுள்ளத்தனமான கேள்விக்கு, அது ஒரு மாபெரும் இதுன்னு எதற்கு பதில் சொன்ன போனாங்கன்னு தெரியலே. சின்மயி மீனவருக்கு அதரவு தந்தா என்ன தராட்டி என்ன ..... பிரமாணாள் எண்ணம்... என்று விட்டிருக்க வேண்டியதுதானே. அங்கே போய் ஒரு கெஞ்சல். விவாதம் செய்யமளவுக்கு ஒன்றுமில்லை.

ஒரு வெட்டி கல்லிடம் முட்டி மோதியுள்ளார்கள், அடிப்பட போகுது என்று தெரிந்திருந்தும்.

மற்றவர்கள் யார் என்று தெரியவில்லை, ஆனால் ராஜன் பிளாக் படிப்பவன் என்ற முறையில் வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த பிரச்சனையை சந்திக்கும் மனோபலம் அவரிடம் இருக்கின்றது என நிம்புகிறேன். மீண்டு வருவார்.

வவ்வால் ஒரு !@#$%^&*()_+ 1234567890-= abcdefghijklmnopqurstuvwxyz.
சைபர் கிரைமில் புகார் செய்யுங்க நேரடியாக் சந்திப்போம்.))))

புலனாய்வுக்கு நன்றி.

குறும்பன் said...

ச்சே வவ்வால் தப்பிச்சிட்டாருப்பா :) அடுத்த முறை கவனமா மாட்டிவிட பார்க்கறேன் :)) (சின்மயி note this person and blog)

கேள்வி கேட்டது எதுக்குன்னா சின்மயியோட அப்பா குடும்ப பேரு ஸ்ரீபதாவான்னு தெரிஞ்சிக்கதான். அவர் தன் அப்பா பெயரை வெளியில் சொல்லவில்லை என்றாலும் வவ்வால் எங்காவது நுழைந்து இருட்டில் தேடிபிடித்திருக்கும் என்பதால் :)

Unknown said...

Did you read these???

 ஹிந்துஸ்தான் டைம்ஸ் -இல் மஹேஷ் மூர்த்தி என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில் The badshahs of entertainment என்ற வகைமையில் 5 பேரை அறிமுகப் படுத்தினார் http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

 சின்மயியிடம் சில கேள்விகள்: http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

 உலகத்துல இருக்கிற அத்தனை ஸ்ரீலங்கன்ஸ் எங்களுக்கு ஆதரவு - சின்மயி அம்மாவோட பழைய பேச்சுhttp://www.tamilnewstime.com/2012/10/blog-post_20.html

 பிரபல பாடகி சின்மயி அம்மா பத்மஹாசினியின் மிரட்டல் பேச்சு http://www.tamilnewstime.com/2012/10/blog-post_6218.html
http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by


 பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். சின்மயியின் கணக்கில் இருந்து கருத்து தெரிவிப்பது அவரது அம்மாhttp://www.twitlonger.com/show/ecdvkq

வவ்வால் said...

ஆரவ்ஸ்77,

நன்றி!

//I have always maintained I wish for an equal society. I debated the two tumbler system on Live Radio on Aahaa FM, manual scavenging and men cleaning sewers manually even after court orders, 4 years back. I said on radio there is no such thing as a superior or an inferior man. Every man is a superior creation"//

ஆஹா பெரிய ஆளா இருப்பிங்க போல தெரியுதே, கலக்கி இருக்கிங்க. பொது ஊடகத்தில் இயல்பு வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களின் துயரங்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கொஞ்சம் வாழ்வில் முன்னேறிய உடன் இப்போ எல்லாம் சுபிட்சமாக இருக்காங்கன்ன்னு பொது ஜன்னமே நம்ப ஆரம்பிச்சுடுது.

சில ஆண்டுகளுக்கு முன்னரளிதே சென்னையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பவர் பிராமனருக்கு மட்டும் தான் விற்பேன் என பிடிவாதம் பிடித்த போது , அவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் நேரம் விவாதம் செய்துவிட்டு ஒழிஞ்சுப்போறான் ,காசு குடுத்து வாங்க நாம ஏன் கெஞ்சணும் என வந்தாயிற்று.

ஆனால் இப்போது வெளிப்படையாக விளம்பரம் கொடுத்து செய்ய்கிறார்கள். ஆனால் இப்படியான உயர் வர்க்கம் என சொல்லிக்கொள்பவர்கள் , சமூகத்தின் பெரும்பான்மையை துச்சமாக நினைத்து விஷம கருத்தினை கக்கிவிட்டு பிரபலம் என்ற முகமூடியுடன் சட்டப்பாதுகாப்பினை பெரும் அவலம் நம் நாட்டில் தான் சாத்தியம்.
-----------

நீங்களும் அதே தான் சொல்ல வந்தீர்களா , ஆம் உயர் வர்க்கத்திற்கு தேவை இல்லை எனில் , கீழ் வர்க்கம் என சொல்லி ஒன்றே இருக்க கூடாது என சட்டம் போட்டாலும் போடுவார்கள்.

அமெரிக்காவில் கருப்பின அடிமை தளை இருந்த போது கருப்பின மக்களை கொன்றால் வழக்கு பதிவாகாது. இதை எல்லாம் அவர்கள் போராடித்தான் வாழ்வுரிமை பெற்றார்கள்.

நம்ம நாட்டில் இன்று கொல்லவில்லை என்றாலும் சாரசரி மனிதனுக்கு சட்டத்தின் உதவி என்பது அப்படியாக தான் இருக்கிறது.
--------------
அதனால் என சொல்லவில்லை, மீனவர்கள், இடஒதுக்கீடு என அபத்தமாக பேசியதை வைத்து எப்படியும் இது போல அபத்தமாக பேசுவதை தொடர்ந்து செய்திருக்க கூடும் என மேற்கொண்டு முழுசாக தெரிய படித்துப்பார்த்தேன்.

திறந்த அமைப்பில் இருக்கும் போது படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை, தடுக்கப்பட்ட ,உறுப்பினர்கள் மட்டும் படிக்கும் வகையில் இருந௯�டத்தில் உள்ளே போய் படித்து விட்டு மன உளைச்சல் என்பது கூட சரி�டு அழைப்பினை பெற்று படித்து வெளியிட்டால் ஒன்றும் சொல்ல முடியாது, ஏன் எனில் அழைப்பினை அனுமதித்து, இருக்கிறார்கள்.

மாறு வேடத்தில் உள்ளே போய் படித்து விட்டு மன உளைச்சல் என்பது கூட சரியாக செல்லாது என நினைக்கிறேன். தார்மீக ரீதியாக சமூக வலை தளங்களில் கண்ணியமாக பேச வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு குற்ற சாட்டாக வரும்.

எனவே தான் கொலை மிரட்டல்,ஆபாச படம் என்றெல்லாம் வலுவான குற்றத்தினை வைப்பது.
பின் புலம் இல்லை எனில் என்ன குற்றசாட்டினையும் ஃபிரேம் செய்து மடக்க முடியும்.

இந்தியாவில் சிவில் ,மற்றும் கிரிமினல் சட்ட அமைப்பில் ஒரு மாறுபாடு இருக்கிறது.

சிவிலில் ,இந்த இடத்தினை ஆக்ரமித்து பிடிங்குவிட்டார்கள் என நாம் புகார் செய்தால் ,நாம் தான் நிருபிக்க வேண்டும். வழக்கு போட்டவரின் கடமையாகிவிடும்.

அதே சமயம் கிரிமினல் வழக்கில் நம் மீது குற்றம் சாட்டினால் ,நாம் செய்யவில்லை என நிறுபிக்க வேண்டும், குற்றம் சுமத்தப்பட்டவரின் கடமையாகிவிடுகிறது.

அமெரிக்காவில் குற்றம் சுமத்தினால் ,சுமத்தியவர் தான் வழக்கினை நிருபிக்க வேண்டும் என மாற்றி இருக்கிறதாம்.

ஹி...ஹி எல்லாம் கேள்வி ஞானம் தான் ,எனவே பிழையா சொல்லிட்டேன்னு சண்டைக்கு வராதிங்கப்பா :-))
----------------

வவ்வால் said...

நரேன் வாரும்,

நன்றி!

.//.என்னத்தான் எழுதினாலும் கடைசியில் புத்திசாலியாக வென்றது அவர்கள்தான்.//

கழுகே எக்கோலோகேஷன்ன் செய்தா :-))

புத்திசாலித்தனம் என்பதை விட , பின் புல அழுத்தம் எனலாம்.

//கூர்மையாக படிக்கும் ஒரு இலக்கியவாதியே இந்த பதிவை ரீடிவீட் பண்ணவேண்டியதாகிவிட்டது.//

என்ப்பதிவையா ரிட்டீவீட் செய்றாங்க, ஆஹா இப்படி செய்து என்னையும் வட்டத்துக்குள் இழுத்து விடப்பார்க்கிறங்களா, யாரு ஓய் அது?

நிறைய டிங்கரிங்க் இருக்கு, பதிவில் கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். சிறுப்பிள்ளைத்தனமாக இருக்கு அந்த பதிவுகள் முழுவதும்.

ராம்சாமின்னு ஒரு பேரை நான் சொன்னதும் நிறைய பேரு கூகிளில் தேடிப்பார்க்கிறாங்க, ஏன் தேடிப்பார்க்கணும் என்றெல்லாம் சொல்கிறார்கள், கூகிளில் தேடினார்கள் என்பதெல்லாம் எப்படி தெரியும், கூகிள் டாப் செர்ச் லிஸ்ட்டில் வர பல லட்சம் பேர் தேடினால் தான் வரும்.இப்படியாக அவர்களாகவே உலகின் முக்கியமானவர்களாக கருதிக்கொண்டு தத்துவ முத்துக்களாக உதிர்த்து வைக்கிறார்கள்.

கஷ்டம் வரும் போது கடவுளை பிரார்த்தனை செய்து ஸ்லோகம் சொன்னால் கடவுள் வந்து அசரீரியாக தெய்வ வாக்கெல்லாம் சொல்லுவதாகவும் இருக்கு :-))

ரொம்ப தோண்டி எழுத வேண்டாம்னு தான் எழுதவில்லை.

கல்லு கூட இல்லை களிமண் :-))

ஆனாலும் மக்கள் பிராபல்ய மோகத்தில் பின் தொடர்ந்து போய் , வாதம் வசவாக மாறி மாட்டிக்கொண்டார்கள் எனலாம்.

சில ஆண்டுகளுக்கு முந்தைய பதிவில்,ரெண்டு மெயில் அனுப்பி இருக்காங்க, ரெண்டு ஐ.பியில் இருந்து வந்திருக்கு ,ஆனால் இரண்டும் ஒரே ஆள் என கண்டுப்பிடித்துவிட்டேன் என அப்போவே துப்பறியற வேலை செஞ்சு இருக்காங்க, அதெல்லாம் படிச்சு பார்த்து மக்கள் சூதனமாக இருந்திருக்கணும்.

இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் அவர்களின் மைண்ட் செட்டிங்க் எப்படியானது என்பதை விவரிக்கவே.
-----------
//வவ்வால் ஒரு !@#$%^&*()_+ 1234567890-= abcdefghijklmnopqurstuvwxyz.
சைபர் கிரைமில் புகார் செய்யுங்க நேரடியாக் சந்திப்போம்.))))//

ஹி...ஹி நான் மர்ம பாஷையில் ஆரம்பிச்சேன் ,நீர் தான் புகார் செய்ய ஓடுவீர் :-))

ரோசட்டா ஸ்டோன் டிசைபர் செய்த எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் வேற படிச்சுக்கிட்டு இருக்கேன் ,படம் ,படமா எழுத்து, அதனை எப்படி தட்டச்சு செய்வது என தெரியவில்லை, அந்த பாஷையில தான் இனிமே பதிவு போடணும் ,ஒருத்தரும் அவதூறு,ஆபாசம்னு புகார் செய்யவே முடியாது.

ஆபாசம்னா என்னமோ கெட்ட வார்த்தைனு நினைச்சுக்கிறாங்க, ஆபாஸ்ய என்றால் உண்மையில்லாத ,பொய் என்று தான் சமஸ்கிருத அகராதி சொல்கிறத்உ :-))

சின்ஸ் ஐ அம் சபரிங் ஃப்ரம்ம் ஃபீவர்னு லீவு லெட்டர் எழுதுவதும் ஆபாசம் தான் :-))
------------

குறும்பன் ,

ஏன் ..ஏன் இந்த கொலவெறி?

ஶ்ரீபதா என்பது கோதவரி கரையோரம் ,ராயல சீமா பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட வைதீகி பிராமணர்கள் அனைவருக்குமான சர் நேம்.நீங்க சொன்னது போல தந்தை வழி பெயராகவும் இருக்கலாம்.

சில நாயுடு,ஷெட்டி குடும்பமும் ஶ்ரீபதா என சர் நேம் இருக்குன்னு போட்டு இருக்கு.

ஹி...ஹி கிருஷ்ணன் என்ற பெயர்னு ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் இருக்கு அதனை சொல்லி நான் மாட்டிக்கொள்ளணுமா :-))

அதான் சொல்லிட்டியே இனிமே மாட்டிவிடுறேன்னு கிளம்பிடாதீர்!
---------------

aravi said...

voval
do you know why the minority people living richer n happier and the majority dont.
there must be a secret, what is that Please reveal it,
cheers.
Aravindan

aravi said...

voval
do you know why the minority people living richer n happier and the majority dont.
there must be a secret, what is that Please reveal it,
cheers.
Aravindan

naren said...

வவ்வால்,

இங்கே பாருமய்யா....
http://twitter.com/maamallan/status/261145806403403776
//////
ரோசட்டா ஸ்டோன் டிசைபர் செய்த எகிப்திய ஹியரோ கிளைப்ஸ் வேற படிச்சுக்கிட்டு இருக்கேன் ,படம் ,படமா எழுத்து, அதனை எப்படி தட்டச்சு செய்வது என தெரியவில்லை,
/////
இதுதான் மெயின் மேட்டர். அவர் எப்படி டிசைபர் செய்தார் என்பதை எளிமையாக எழுதும். பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சரித்தரத்தை முதலில் பார்ப்போம், சின்மயி சரித்தரத்தை?? பிறகு கட்டுடைக்கலாம்.

நன்றி.

வவ்வால் said...

அரவிந்தன்,

நன்றி!

ரொம்ப எளிது, சிறுபான்மையாக இருப்ப்பவர்கள் தான் , வாழ்வியல் நீதி, இறையியல் கோட்பாடு, சட்டம் என கட்டமைத்தது.

அதனை பெரும்பான்மை மக்களை நம்ப வைத்ததில் அவர்களது திறன் இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையை கட்டுப்படுத்திவிட்டால் ,பின்னர் என்ன வேண்டுமானலும் சாதிக்கலாமே.

அக்கால நில உரிமை சட்டம் பற்றி ஒரு நூல் இருக்கிறது அதனைப்படித்தாலே எப்படி ஒரு சின்ன கூட்டம் செல்வம் சேர்த்தது என புரிந்து கொள்ளலாம்.

ஆதிகாலத்தில் ராஜாவும் இல்லை கூஜாவும் இல்லை, எவன் நிலத்தினை உழுதானோ அவனுக்கே நிலம் சொந்தம்,நில வரியுமில்லை.

பின்னர் நிலம் உழுத குடும்பத்தினரே பெருகி பல குடும்பம் ஆன போது ஒரு தலைவன் உருவாகி, அவனே ராஜாவ உருவானான், பொதுவான குடும்ப செலவுக்கு நிதி என வசூலித்து அது வரியாகி ,அந்த பகுதியில் உழுபவர்கள் தலைவருக்கு/ராஜாவுக்கு வரி கொடுக்க வேண்டும் என்ற நிலையானது, அப்போது ராஜாவுக்கு ஏற்பட்ட சில சந்தேகம், சங்கடம் தீர்க்க என வந்த பண்டிதர்கள், அவர்கள் வகுத்த கோட்பாடுகளை எல்லாம் ராஜாவுக்கு புகுத்தி அதனை மக்களுக்கும் புகுத்தி சாதித்துக்கொண்டார்கள்.

தலைவனை நம்ப வைத்துவிட்டால், அவன் வழி வந்தவர்களையும் நம்ப வைக்கலாம் என்ற சூத்திரத்தினை பயன்ப்படுத்தி , பின்னர் மற்றவர்களின் உழைப்பில் அவர்களும் நோகாமல் பங்கு வாங்கி வாழ்ந்து இன்றும் தொடர்கிறது.

மக்களை நம்ப வைத்தது தான் அவர்களின் திறமை.
----------

நரேன்,

சுட்டிக்கு நன்றி!

நம்ம பதிவு அம்மாம் தூரம் போயிடுச்சா?

இப்பதிவு போட்டதே எவ்வாறு சுய பெருமை அடித்துக்கொள்ள நிகழ்வுகளை கட்டமைக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே.

கண்டிப்பாக அடுத்தப்பதிவு வரலாற்றுக்கே, இதெல்லாம் ஒரு டைம் பாஸுக்கு.

aravi said...

"மக்களின் நம்பிக்கையை கட்டுப்படுத்திவிட்டால் ,பின்னர் என்ன வேண்டுமானலும் சாதிக்கலாமே"
why cant we break this even in now, alway minority kept the majority in darkness before in the name of "pundit/Raja"...
now in the name of CM/govt.officers.????:((

thank you for your time

தி.தமிழ் இளங்கோ said...

BLOGGER - இல் DASHBOARD வழியாக அண்மையில் நீங்கள் பதிவிட்ட The DON- 2:A guide to understand gangster films என்ற பதிவை க்ளிக் செய்தால் வருவதில்லை. கவனிக்கவும்.

வவ்வால் said...

அரவிந்தன்,

//why cant we break this even in now, alway minority kept the majority in darkness before in the name of "pundit/Raja"...
now in the name of CM/govt.officers.????:((
//

அதே , அக்காலத்தில் கட்டமைக்கபட்ட கோட்பாடுகளை மக்கள் மீற தயங்குவதே , அவர்களை இருட்டில் வைத்திருக்க காரணம்.
----------

தமிழ் இளங்கோ சார்,

அப்பதிவு நன்றாக திறக்கிறதே, சமயத்தில் பிலாக்கர் இப்படி செய்யும்.

1)http://vovalpaarvai.blogspot.in/2012/07/don-guide-to-understand-gangster-films.html

2)http://vovalpaarvai.blogspot.in/2012/07/the-don-guide-to-understand-gangster.html

இதன் மூலம் பதிவுக்கு போய் பாருங்கள்.

Anonymous said...

I have no say in what was spoken between the two groups and what the real issue is...But what bothers me most in this case is

1. Why has CyberCrime been so involved in this when there have been multiple cases filed and thorwn away to the dustbin?
2. Why was the arrest done so well planned to be before public holidays? This isnt a terrorist activity to be kept for so many days to investigate.
3. If one side wanted to ensure that a case is filed and they expect justice from court, why is one side of equation keep on getting their stance clarified through media while the others have been refrained from doing so?
4. Why has the media not been able to expose what is the real complaint and what are the evidences presented?
5. Who is giving these statements of sexual torture to the media while the accusing party is claiming they did not?
6. Why has a bail not been given in this case even after two days of court functioning? who is preventing this?
7. If an elderly lady has been considered to have been offended with derogatory sly remarks , can we sustitute "bloody !#@$!#%!#%" said by one side and substitute with "bas****" and consider they have used derogatory terms against the other side?
8. Have the jailed party families have a complaint copy yet? Have they been informed or did they find from media? Why is the media ignoring this so blatantly?
9. What happened to the case filed by a new group against the accusing party?

Even if they have committed wrong (need to wait to see what the courts say), treating the way these ordinary people who have no power, money or influence been treated, stands tall to the fact that there are really only two classes of people - Oppressed and Oppressors...


Anonymous said...

Oru kevi - ithai padiyungal...

மாயவரத்தான்.... ‏@mayavarathaan
@maamallan மீனவர் பிரச்னைன்னு யார் புகார் கொடுத்தாங்க? அநாகரிக தாக்குதலுக்கு தான் வோய் பிரச்னை. நீங்க தான் அதை மீனவர் பிரச்னைன்னு திசை |1

25 Oct விமலாதித்த மாமல்லன் ‏@maamallan
@mayavarathaan அப்பறம் மூலகாரணம் நாந்தான்னு எப்பிடிஅம்பி சொல்றே! நான் கொழந்தேன்னுனா கூட்டேன்
"

Anagariga varthai thakkuthal thane....iru manitharga atharkaaga veliye vara mudiyathapadi 6 natkal jailil irukirarge... neengal sonathu pola ithellam inga mattum thaan nadakkum...

Robin said...

நல்ல பதிவு வவ்வால். மெனக்கெட்டு தகவல்கள் சேகரித்திருக்கிறீர்கள்.

Robin said...

இதையும் வாசித்துப் பாருங்கள்.

http://www.maamallan.com/2012/10/blog-post_28.html

தருமி said...

ஷெர்லாக், சங்கர்லால் - இருவரில் யாரு உங்களுக்கு உறவு ?

நன்னயம் said...

எப்புடி? இதெல்லாம் எப்புடி உங்களாலை முடியுது வௌவால்?

அமுதா கிருஷ்ணா said...

சமைத்தோமா அதை சாப்பிட்டோமா என்று இருக்காமல் எனக்கெல்லாம் எதற்கு நெட்டும்,ப்ளாக்கும் பதிவும்.என்னவொரு ஆராய்ச்சி?

Anonymous said...

http://newindianexpress.com/cities/chennai/article1315081.ece பக்கத்தில் அவங்க அம்மா வயசு 62ன்னு போட்டிருக்கு.

K.s.s.Rajh said...

என்னமா ஆராச்சி செய்து பதிவு போட்டு இருக்கீங்க இம்புட்டு வில்லங்கம் இருக்கா?

இன்றுதான் உங்கள் தளம் வருகின்றேன் நண்பரே.இனி தொடர்ந்து வருவேன்

வவ்வால் said...

அனானி,

உங்கள் கேள்விகள் படித்தேன் சில சரியானவையே, ஆனால் இன்றைய நாட்டின் நிலையில் இதெல்லாம் சமானியர்களுக்கு அல்ல :-))

# சிலர் தூண்டிவிட்டு பாடகி இதெல்லாம் செய்வது போல இருக்கு.எழுத்தாலர் மாமல்லனும் அதனை தான் கேள்விக்கேட்கிறார் என நினைக்கிறேன்.
---------
ராபின்,

நன்றி!,

மாமல்லன் பதிவும் படித்தேன், நம்ம பதிவை கூட ரீடிவீட் செய்துள்ளார்,நன்றி.நிறைய ஸ்கிரின் ஷாட்டுகள் இணையத்தில் உலாவுகின்றன, அந்த செய்தியும் முன்னரே பார்த்தேன், இப்போது அவை யாவும் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதை உறுதி செய்கின்றன.
-----------------
தருமிய்யா,

வாங்க,நன்றி!

ஹி...ஹி துப்பறியும் சாமியார் திகம்பரசாமியார் எல்லாம் விட்டுட்டீங்க, தமிழின் முதல் துப்பறியும் நிபுணர் சாமியார் தான்,வடுவூர்.கே.துரைசாமி அய்யாங்கார் எழுதிய கதைகளில் வருவார்.

நாம துப்பறியும் ஷெர்லாக் சாம்புலால் :-))

இன்னும் நிறைய மேட்டர் இருக்கு, எங்கே எதையாவது எழுத போய் பெண் வன்கொடுமை சட்டம் கடமையை செய்திடுமோன்னு அடக்கி வாசிக்கிறோம் :-((
------------------
எதிகலிஸ்ட்,

நன்றி! என்ன இதற்கே இப்பூடி சொல்லீட்டிங்க, இன்னும் சொல்ல மறந்த கதைகள் எல்லாம் இருக்கு.
--------------
அமுதா கிருஷ்ணா,

நன்றி!

ஆமாம் சாப்பிட மட்டும் வாய்ய தொறந்தா போதும்னு தானே அதிகார மட்டமும் நினைக்குது!!!
------------

அனானி,

எக்ஸ்பிரசில் 62ன்னு போட்டு இருக்கானே, அப்போ 15 வயசில் பாடகிக்கு ஒரு வயசுன்னு ஏன் இவங்க பிலாக்கில் எழுதி வச்சாங்களோ ?

அப்போ அந்த ஸ்டேட்மெண்ட் சரியா, எக்ஸ்பிரஸ் சரியான்னு கண்டுப்பிடிக்க ரொம்ப எல்லாம் கஷ்டப்பட வேண்டாம் பதிவில் நான் கொடுத்துள்ள சுட்டியில் போய் அவர்கள் எழுதியதையே படிக்கவும் :-))

இன்னொரு பதிவு போட வேண்டி இருக்கும் போல இருக்கே ,விடாது வம்பு -))
-----------
கே.எஸ்.ராஜா,

நன்றி!

அடிக்கடி வாங்க,இன்னும் நிறைய செவி வழி செய்தி, எல்லாம் இருக்கு, அதை எல்லாம் எழுதி அடி வாங்க நான் தயாரில்லை :-))

Anonymous said...

தற்சமயம் தான் இப்பதிவைப் பார்த்தேன், சின்மயி மட்டுமல்ல பல ஆதிக்கச் சாதி குடும்பத்தில் இப்படியான புளுகு புளகாங்கித மூட்டைகள் பல சொல்லப்படுவது உண்டு .. ராஜ பரம்பரை, வீர பரம்பரை என்ற புரூடாக்கள் தான் சாதியைத்தை வளர்க்கின்றன, அந்த தற்பெருமைத் தனங்கள் தான் பிற்காலத்தில் பிற மக்களை கீழ்தரமாக எண்ணவும் செய்கின்றது .. முதலில் கூட சின்மயி விவகாரம் அந்தளவுக்கு எனக்குத் தெரியாது, ஆனால் அவரது சாதிய வெறித்தனக் கருத்துக்களைக் கண்டு அதிர்ந்து போனேன், இதில் அவரது வலைப்பதிவில் இத்தனை பொய்களை வேறு அடிக்கி விட்டுள்ளார்.. என்னக் கொடுமை என்றால் அதனைக் கூட நம்பி ஆகா, ஓகோ போட ஒருக் கூட்டம். ச்ச்சீ ! என்னக் கொடுமை டா இது ?