Wednesday, January 09, 2013

சினிமா ரகசியம்-6: DTH-Disaster To Haasan.


(ஹி...ஹி நம்ம DTH- Direct To HeartU)

குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:

செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

மு.வ உரை:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

திருவள்ளுவரை சும்மாவா பொய்யா மொழிப்புலவர்னு சொன்னாங்க, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எப்படி திட்டமிட்டு ஒரு செயலை செய்ய வேண்டும், எப்படி சாதக,பாதகங்களை கணக்கிட வேண்டும் என்றெல்லாம் நச்சுன்னு ரெண்டே வரியில சொல்லிட்டார், உலகின் மிக சிறந்த துவித்தர் யாருன்னு என்னைக்கேட்டால் கண்ணை மூடிக்கிட்டு திருவள்ளுவர் பேரைச்சொல்வேன் :-))

ஆறு டிடிஎச் சேவைகளில் படம் வெளியிடுவதாக செய்தி வெளியானதுமே , 300 கோடி வசூல் என்றெல்லாம் கூச்சமேயில்லாமல் சில விசிலடிச்சான் குஞ்சுகள் புரளியை பரப்பின, உண்மையில் அதில் பாதியளவுக்கு தேரியிருந்தாலும் தியேட்டர்களை நம்பாமல் டிடிஎச் இல் வெளியிட்டு இருக்கமாட்டாரா என்ன? சில லட்சங்கள் அளவுக்கு தான் டிடிஎச் மூலம் வருமானம் தேரியிருக்கிறது, அந்த தொகைக்கு டிடிஎச் இல் வெளியிடுவது தற்கொலைக்கு சமம் என்பதால் தியேட்டர்களிடம் மீண்டும் சரணாகதியாகிவிட்டார் லோக நாயகர்.

கவனத்தில் கொள்ளவும்:

மொத்தமாக பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதோடு, டிடிஎச் ரிலீஸ் பட வெளியீட்டுக்கு முன்னர் இல்லை என்பதாக செய்திகள் வெளியானதன் அடிப்படையில் எழுதப்பட்டப்பதிவு.

 திரையரங்க வெளியீட்டுக்கு முன் டிடிஎச் ரிலீஸ் உண்டா என்பதை இது வரையில் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை, ஆனால் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு பின்னர் வெளியானாலும் ஆகலாம், அப்படி செய்யும் பட்சத்தில் 1000 ரூபாய் கட்டணம் என்பதற்கான மதிப்பேயில்லை,எனவே முன்பணம் கட்டியவர்கள் திரும்பக்கேட்டால் கொடுக்க வேண்டிய சூழல் வரும்.

டிடிஎச் வெளியீடு என தொடர் விளம்பரங்களை செய்த டிடிஎச் சேவையாளர்கள் ,வாங்கிய கட்டணத்தினை திரும்ப தருவதற்கு வாய்ப்பில்லை, அப்படி தர வேண்டும் எனில் அவர்கள் செய்த விளம்பரத்திற்கு கட்டணம் கேட்கும் வாய்ப்புண்டு. பின்னர் இலவச விளம்பரத்திற்காகவா அவர்கள் டிடிஎச் சேவையினை நடத்துகிறார்கள், எனவே டிடிஎச் இல் முன் வெளியீடு என்ற முறையினை இடியாப்ப சிக்கலாக்கிவிட்டதால், இனி தயாரிப்பாளர்கள் டிடிஎச் இல் பட வெளியீட்டுக்கு முன்னர் வெளியிடலாம் என யோசிக்கவே அஞ்சும் சூழலும், டிடிஎச்சுக்கு பணம் கட்ட ரசிகர்கள் அஞ்சும் சூழலும் உருவாகிவிட்டது எனலாம்.

(எனக்கு ஒரு காயம்னா பரவாயில்லை என் படத்துக்கு காயம்னா தான் தாங்கமுடியலை..அபிராமி ..அபிராமி)

டிடிஎச் முன்பதிவு தோல்வியடைய காரணங்கள்:

# டிடிஎச் இல் அரங்க வெளியீட்டுக்கு முன் வெளியிடுவது சிறுமுதலீட்டு படங்களுக்கே ஏற்றது,மேலும் குறைவான கட்டணம் என இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் பார்ப்பார்கள்.

30 சதவீத மக்கள் ஒரு வேளை முழுசாக உணவுண்ண வழியில்லாமல் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தேசத்தில் ஒரு திரைப்படத்திற்கு 1000 ரூ என விலை நிர்ணயம் செய்வதே மிகப்பெரிய மனிதாபிமானமற்ற செயல் எனலாம்.ஆனாலும் சில விசிலடிச்சான் குஞ்சுகள் மனசாட்சியேயில்லாமல் , ஆகா புரட்சி செய்துவிட்டார் லோக நாயகர் என கூவினாலும்,மக்கள் வழக்கம் போல மவுனப்புரட்சி செய்து புறக்கணித்துவிட்டார்கள்.

நீதி: அமிர்தமே என்றாலும் சாமானியன் வாங்கும் விலையில் விற்கப்பட்டால் மட்டுமே சந்தையில் வெற்றியடையும்.

# ஏழைகளை குறிவைத்து இத்திட்டம் செயல் படுத்தவில்லை உயர்வர்க்க மக்களை கவர எனலாம், ஆனால் உயர்வர்க்க மக்களின் விருப்பத்தேர்வு லோகநாயகரின் படங்களாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள், உயர் வர்க்க மக்களும் முன்ப்பதிவு செய்யவில்லை என்பது குறைவான முன்ப்பதிவுகளின் எண்ணிக்கை காட்டுகிறது, ஏன் எனில் அவர்கள் பார்க்க விரும்பும் தரத்தில் இப்படம் இல்லை என அவர்கள் எண்ணமாக இருக்கிறதே.

நீதி: நமக்கான டார்கெட் ஆடியன்ஸ் யார் என தீர்மானித்து ஒரு படைப்பை உருவாக்க வேண்டும்.

# நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் ,பாடல் வெளியீட்டுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டது எனவே டிடிஎச் வெளியீட்டுக்கும் பெருமளவில் ஆதரவு கிடைக்கும் என கணக்கு செய்திருக்கலாம்,ஆனால் ரசிகர்கள் கூட்டம் கூடிய அளவுக்கு , முன்ப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.

வழக்கமாக திரையரங்கில் வெளியிடும் போது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ரசிகர் மன்றத்தினர், முதல் காட்சியை ரசிகர் மன்றக்காட்சியாக வெளியிட்டு ,ரசிகர்களிடம் ஒரு பிரிமியம் தொகையை வசுலீப்பார்கள் ,இவ்வாறு கிடைக்கும் லாபத்தினை வைத்தே மன்ற செயல்பாடுகளின் செலவுகளை சமாளிப்பார்கள், இத்தொகை ஓரளவுக்கு தான் உதவும், பல ரசிகர்களும் சொந்தக்காசை செலவு செய்வதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனாலும் ரசிகர் மன்றக்காட்சி நடத்துவது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு பெருமையான விஷயம், கிடைக்கும் சொற்ப லாபம் ரசிகர் மன்ற செலவுகளுக்கு கொஞ்சம் உதவியாக இருப்பதே போதும் என்றெல்லாம் ஆறுதல் பட்டுக்கொள்வார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைப்பது போல ,முதல் நாள் இரவே 1000 ரூ தொகையில் படம் ஒளிபரப்புவதாக சொன்னதும் ,ரசிகர் மன்றக்காட்சி என்ற தனிச்சிறப்பும்,பெருமையும் அடிபட்டு போய்விட்டது, முதல் நாள் இரவு 1000 ரூ செலவு செய்து பார்த்துவிட்டு எத்தனை ரசிகர்கள் அடுத்த நாள் ரசிகர்மன்ற காட்சிக்கும் அதிக கட்டணம் கொடுக்க முன்வருவார்கள், எனவே டிடிஎச் ஒளிப்பரப்பு வெற்றியடைந்தால் ரசிகர்கள்,ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என நினைத்த லோகநாயகரின் தீவிர ரசிகர்களும் சத்தம் போடாமல் ஒதுங்கிவிட்டதால் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் முன்ப்பதிவும் வேகமெடுக்காமல் முடங்கிவிட்டது.

காலங்காலமாக  படம் ரிலீஸ் அன்று போஸ்டர் அடித்து,தோரணம் கட்டி ,கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் என செய்து, படப்பொட்டிக்கு பூசைப்போட்டு கொண்டாடிய ரசிகர்களை ,துச்சமாக நினைத்து பணத்திற்காக டிடிஎச் ஒளிபரப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை தீவிர ரசிகர்கள் ரசிக்கவில்லை,அவர்களின் மனக்குமுறலின் மவுன கீதமே டிடிஎச் முன்ப்பதிவுக்கு மூடுவிழா நடத்தியது எனலாம்.

நீதி: சுயநலத்திற்காக உடனிருப்பவர்களை புறக்கணித்தால் வெற்றியடைய முடியாது.

# தமிழகத்தில் சென்னை நீங்கலாக எல்லாப்பகுதிகளிலும் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது, குறைந்த பட்சம் 12 மணி நேரம் மின் வெட்டு ,பல இடங்களில் உட்சக்கட்டமாக 16-18 மணி நேர மின்வெட்டெல்லாம் உள்ளது.

இதனால் பல இடங்களில் சிறு,குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதால் பலரும் வருமானமின்றி கஷ்ட ஜீவனமே செய்கிறார்கள்.

பெரிய நிறுவனங்களோ மூன்று ஷிப்ட் என்பதை குறைத்து ஒரு ஷிப்டில் ஓடிக்கொண்டிருக்கின்றன, கூடுதல் ஊழியர்களுக்கு வேலை "கட்", வழக்கமான ஊழியர்களுக்கு  மாதச்சம்பளமே சரியாக வருமா என தெரியாத நிலையில் பல தொழிலாளர்கள் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசமான நிலையில் உள்ளது, பருவ மழை பொய்ப்பு,காவிரியில் நீர் வரத்தில்லை, போர், கிணறு மூலம் பாசனம் செய்யலாம் என்றால் மின்சாரம் இல்லை, பலரும் கடனை வாங்கி டீசல் பம்செட் வைத்து பயிர் கருகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற பொருளாதார சிக்கலினால் இம்முறை தீபாவளியன்று கூட வழக்கமான வியாபாரமில்லை, மக்களிடமும் குதூகளம் ,கொண்டாட்டம் எல்லாம் குறைவாகவே பல இடங்களிலும் காணப்பட்டது.

இம்மாதிரியான பொருளாதார சிக்கலானக் காலக்கட்டத்தில் தீவிர ரசிகர்களும் ஆடம்பரமாக 1000 ரூக்கொடுத்து படம் பார்க்கணுமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள், மேலும் வீட்டில் உள்ளவர்களும் இப்போ இருக்கிற நிலைக்கு இதெல்லாம் தேவையா எனக்கேள்விக்கேட்பார்கள்,எனவே வீட்டில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக படம் பார்க்கும் சூழல் பெரும்பாலான வீடுகளில் இல்லை. அதன் விளைவே பலரும் டிடிஎச் முன்ப்பதிவு செய்யாமல் தவிர்த்து விட்டார்கள் எனலாம்.

நீதி: மழை பெய்யும் நேரத்தில் உப்பு விற்கப்போகக்கூடாது!

# வழக்கமாகவே லோகநாயகரின் படங்கள் "அடல்ட் கண்டென்ட்"(முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு எனக்கொள்க) வகையறா எனவே வழக்கமாகவே  பெரும்பாலோர் குடும்பம் ,குழந்தைக்குட்டிகளை அழைத்துக்கொண்டு லோகநாயகர் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்ல யோசிப்பார்கள். இந்நிலையில் 1000 ரூ பணங்கட்டி வீட்டு வரவேற்பறையில் படம் பார்க்கும் சூழலில் பசங்களை படம் பார்க்க கூடாது என தடுக்க முடியாது,அவர்களோடு சேர்ந்து பார்க்கும் போது சில தர்மசங்கடமான காட்சிகளும், வசனங்களும் வந்தால் நெளிய வேண்டிய சூழல் வரும், மேலும் அது போன்ற சந்தர்ப்பத்தில் "கண்ணா அப்பாவுக்கு தாகமா இருக்கு ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வா" என சொல்லி சமாளிக்கலாம் எனப்பார்த்தால் இக்கால வாண்டுகள் செம சுட்டிங்க தாகமா இருந்தா நீங்களே போய் குடிங்க, இப்படித்தான் சின்னப்பசங்களை வேலை வாங்குவீங்களான்னு "டாண்ணு" திருப்பிக்கொடுக்குங்கள் :-))

எனவே வசதியான உயர் நடுத்தரக்குடும்பத்தினரும் எதுக்கு சொந்த செலவில் சூனியம் வச்சுக்கணும் என டிடிஎச் முன்ப்பதிவை தவிர்த்துவிட்டார்கள் எனலாம்.

நீதி: நுகர்வோர் கண்ணோட்டத்தில் ஒரு தயாரிப்பினை சந்தைப்படுத்தலின் போது அணுக வேண்டும்,இல்லையெனில் முட்டு சந்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இன்னும் பலக்காரணங்களை பட்டியலிட முடியும், இங்கு சில முக்கியமான காரணிகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

ஒரு திரைப்படத்தின் முகமதிப்பு என்பது நாயகன்,இயக்குனர், நாயகி, மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் சந்தை மதிப்பினை வைத்தே, மொத்த சந்தைமதிப்பினை கடந்து ஒரு திரைப்படத்தினை தயாரித்தால் அது எவ்வளவு தான் நல்லப்படமாக இருந்தாலும் லாபகரமாக விலைப்போகாது.

மேலும் இப்படத்தில் லோகநாயகரைத்தவிர மற்றவர்கள் அனைவருமே சந்தை மதிப்பேயில்லாதவர்கள் என்பது மிகப்பெரும் பின்னடைவு எனலாம்.

லோகநாயகரின் சந்தை மதிப்பினை உணராமல் அதிக பட்ஜெட்டில் தயாரித்ததே விஷ்வரூபம் திரைப்படத்தினை சந்தைப்படுத்துவதில் சிக்கலை உருவாக்கியது ,இப்படம் 50 கோடிக்குள் முடிக்கப்பட்டிருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றியும் சுமார் 10 கோடி லாபத்தில் படத்தினை விற்று இருக்க முடியும்.

ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டவேண்டும், உலகப்படமாக எடுத்தாலும் சந்தை மதிப்பினை கணக்கிட்டு தயாரிக்க வேண்டும்.

இப்படம் இன்னொரு ஆளவந்தானாக ,ஹே ராமாக இல்லாமல் சிறப்பாக இருக்குமானால் பெரும் நட்டம் தவிர்த்து ,தப்பிக்க வாய்ப்புண்டு, அவ்வாறு இருக்கும் என நம்புவோம்,வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!
---------------------

பின்குறிப்பு:

நாம் அனைத்து வகையான திரைப்படங்களையும் பார்க்கும் ஒரு சராசரி திரைப்பட ஆர்வலன், உலகப்படம், உள்ளூர் படமென்ற பாகுபாடுகள் எதுவுமின்றி திரைப்படங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை ஆர்வமாக அவதானிக்கும் ஆர்வலன், எனவே எவ்வித விருப்பு வெறுப்புமின்றி ஒரு தொழில்நுட்ப ஆர்வலனாக  இப்பதிவினை எழுதியுள்ளேன்,எனவே எனக்கும் லோகநாயகருக்கும் வாய்க்கா ,வரப்பு தகராறு என்ற ரீதியில் யாரேனும் மனப்பிராந்திக்கொண்டிருந்தால் அடியேன் பொறுப்பல்ல :-))

நன்றி!
------------------------

தகவல் மற்றும் படங்கள் உதவி:

திருக்குறள்.காம்,தினமலர்,விக்கி,கூகிள் இணைய தளங்கள் நன்றி!

25 comments:

? said...
This comment has been removed by the author.
? said...

ஏனுங்க வவ்வாலு, மண்ணை கவ்விய லோகத்தை கொஞ்சமும் கருணையில்லாம ஏறி மிதிமிதின்னு மிதிச்சுப்புட்டு, கூடவே சைடுல நம்ம ராசநடையை செமையா ஊமைகுத்து குத்தியிருக்கீங்களே இது நியாயமா?

ஆனா அந்த போட்டோ கமெண்ட் செமகாமெடி

Anonymous said...

Truth always wins...hats off Voval. I am waiting for "King Walker"...:-)


By---
Maakkaan.

suvanappiriyan said...

ஹி..ஹி...எந்த பதிவாக இருந்தாலும் இந்த நடிகையை மட்டும் விடுவதாக இல்லை. :-)

சிவானந்தம் said...

ஒரு பதிவை படித்தால் அதில் சொல்லப்படும் வாதங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் நம் மனதை ஆக்கிரமிக்க வேண்டும்.இந்த பதிவு அந்த வகை.

இருந்தாலும் எதிர்காலத்தில் DTH வழி படம் பெரும் பங்கு வகிக்கப்போகிறது.எனவே அதை வரவேற்கவேண்டும்.இந்த பதிவில் சொன்னது போல் அவர் மற்றவர்களின் பலத்தை குறைத்து மதிபிட்டுவிட்டார்.

ஒரு தயாரிப்பாளராக தனது படத்தை மக்களிடையே கொண்டு செல்ல இடைத்தரகர்களை தவிர்க்க நினைக்கிறார். அது வியாபாரரீதியுலும் தியேட்டர்காரர்கள் செய்யும் அநியாயத்தையும் பார்க்கும்போதும் சரிதான்.

அவர்கள் பல்லை பிடுங்க வேண்டுமென்றால் அது திட்டமிட்டு மெதுவாக நடக்கவேண்டும். அது நடக்கத்தான் போகிறது.

Kavin said...

ஹ்ம்ம்ம்.. உண்மைய எழுதி இருக்கீங்க!

http://karuvooraan.blogspot.in/
ஆதரவு அளிக்கவும்!
நன்றி!

வவ்வால் said...

நந்தவனம்,

வாங்க,நன்றி!

ஒரு முயற்சியில் தோல்வி அடைந்து மண்ணைக்கவ்வுவது வேறு தோல்வியடைவது என்றே திட்டமிட்டு மண்ணைக்கவ்வுவது வேறு.

என்னைப்போன்ற சராசரியான ஆளுக்கே ஆரம்பத்திலேயே இப்படியாக வாய்ப்புள்ளது என தெரியும் அளவில் ஓட்டைகளுடன் செய்தால் என்ன செய்வதாம்?

இந்த வவ்வால் இம்சை பத்தாதுன்னு கூட நந்தவனம் வேறயான்னு பொலம்பிட்டு இருக்கார், நீங்களும் விடாம கையப்புடிச்சு இழுக்கிறீங்களே :-))

நான் பொதுவாத்தேன் சொன்னேன் அதை போய் இப்புடி முடிச்சு போடுறிங்களே அவ்வ்!

சோதனை மேல் சோதனை போடுமடா டிடிஎச் , சோதனை தான் டிடிஎச் என்றால் தாங்காது லோகம்... அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா ...இடி போல டிடிஎச் வந்து நின்றால் யார் தாங்குவார்!!!

போட்டோ காமெடிக்கு பாட்டும் போட்டாச்சு :-))
----------------------

மாக்கான்,

வாங்க, நன்றி!

சத்யமேவ ஜயதேன்னு சொல்லுறிங்க, அப்படியே ஆகட்டும்.

walk king is now runn(k)ing :-))

----------------
சு.பி.சுவாமிகள்,

வாங்க,,நன்றி!

ஹி...ஹி அடிக்கடி மனசை மாத்திக்க கூடாதுன்னு தான், என்னை போன்ற எளிய பதிவர்களுக்கு ஒன்னே போதும் :-))

உங்க பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கலையா, அதிகம் காணமுடியவில்லை.
----------------
சிவானந்தம்,

வாங்க,நன்றி!

ஃபேக்ட்டு..ஃபேக்ட்டு ...அதான் முரண்பாடு இல்லை :-))

டிடிஎச் எதிர்காலத்தில் இல்லை இப்பவும் வியாபார வழியாகத்தான் இருக்கிறது, முதலீட்டின் அளவைப்பொறுத்தே டிடிஎச் வெளியீட்டின் பயன் இருக்கும்.

இந்தியில் எடுக்கப்படும் மிக பெரிய பட்ஜெட்ப்படங்கள் எல்லாம் முதல் வாரத்தில் டிடிஎச் இல் மூவி ஆன் டிமாண்டில் சுமார் 150 ரூபாயில் வருகிறது. தியேட்டர் வருமானம் ஒரு வாரம் ,கூடுதல் வருமானம் டிடிஎச் , இதனால் அதிக வருவாய் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது.

டிடிஎச் வருவாய் மட்டுமே பெரிய பட்ஜெட் படத்தின் முதலீட்டை எடுக்க பயன்ப்படாது, அதே சமயத்தில் தியேட்டர் வருவாயுடன் கூடுதலாக டிடிஎச் வருவாய் வாய்ப்பையும் வீண் ஆக்காமல் ஒரே வாரத்தில் வெளியிட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

அது போல செய்தால் தியேட்டரிலும் பிசினெஸ் நடக்கும், டிடிஎச்லிம் நடக்கும், இரண்டின் வருவாயும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும், நல்ல லாபம் கிடைக்கும். இப்போ எல்லாம் இந்தி படங்களின் ஒரிஜினல்டிவிடியும் 4 வாரத்திற்குள் வெளியிடப்படுகிறது.

எனவே எல்லா வகை வருவாயும் தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. அதே போல செய்தால் லோகநாயகருக்கும் லாபம் கிடைக்கும் தானே. ஆனால் ரிலீஸ் முன்னர் என சொல்லி 1000 ரூபாய் என மிக அதிக விலை வைத்து ,அதிக ஆசைப்பட்டதே பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

இதற்கு காரணமே படம் சரியாக ஓடாவிட்டால் நட்டம் வரும் எனவே படம் நல்லா இருக்கு,இல்லைனு மக்கள் முடிவுக்கு வருமுன்னர் அதிகமாக வருவாய் ஈட்ட வேண்டும் என நினைத்ததே காரணம்.

டிடிஎச் இல் வெளியிடுவது ஒரு விளம்பரம் அதன் பின்னரும் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என சொல்லும் அவர் விளம்பரம் தானே குறைவாக கட்டணம் வைக்கலாம் என வைக்கலாம் தானே ,ஏன் 1000 ரூ?

ஏதோ ஒரு ஆர்வத்துல மக்கள் கண்ணை மூடிக்கிட்டு 1000 ரூ கட்டிருவாங்கன்னு தப்பு கணக்குப்போட்டுட்டார், நம்ம மக்கள் ஒரு படம் பார்ப்பது என்றால் யாரிடமாவது ,படம் எப்படின்னு ஒரு வார்த்தையாவது கேட்பார்கள்,முதல் மூன்று நாட்கள் ரசிகர்களும்,இளைஞர்களும் தான் பார்ப்பார்கள், அவர்கள் கூட நண்பர்களுடன் ஜாலியாக படம் பார்க்க எண்ணுபவர்கள், எனவே வீட்டில் 1000 ரூ கட்டி அப்பா,அம்மா,சகோதர,சகோதரிகளுடன் ,கமுக்கமா பார்த்தால் போரடிக்கும்னு நினைத்து இருப்பார்கள் :-))

முக்கியமாக ரசிகர்களுக்கே கடுப்பாயிடுச்சு, தியேட்டரில் ரசிகர் மன்ற ஷோ நடத்தி,பேனர் வச்சு கொண்டாடுவது ஒரு "கெத்து" அப்படி இருக்க 1000 கொடுத்துவிட்டு சைலண்டாக வீட்டில் பார்க்க பிடிக்கவில்லை :-))

#இங்கே இடைத்தரகர்கள் பல்லை விட அதிக சம்பளம் வாங்கும் நாயகர்கள் பல்லைத்தான் முதலில் பிடுங்க வேண்டும்.

மலையாளத்துல மம்மூட்டி ,மோகன்லால் எல்லாம் நடிக்க தெரியாதவங்களா, தேசிய அவார்டு எல்லாம் வாங்கினாலும் ஒரு கோடியை எப்போ எட்டினாங்க, ஆனால் இங்கே சுள்ளான் முதல் சொம்பு வரைக்கும் படம் ஓடுதோ இல்லையோ கோடிகளில் தானே.நடிகர்களின் சம்பளத்தை குறைத்தாலே சினிமா விளங்கிடும்.
-----------------

கவின்,

வாங்க,நன்றி!

உள்ளதை சொல்வேன்,நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது :-))

உங்கப்பதிவை பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

53ம் ரெட்டைப் பாதை வழியாத்தான் இங்கே வந்தேன்.அதென்ன தொழில் நுட்ப ஆர்வலன்?அசின் மோகன் என்பதையும் யாரும் நினைவு படுத்த வேண்டியதில்லை:)

யானை படுத்தால் எலியும் ஏறி விளையாடுமாம்:)

வவ்சு!உங்க கிட்ட மட்டும் நெட்பிளிக்ஸ் பற்றி சொல்லிகிட்டு வருகிறேன்.நெட்பிளிக்ஸ்க்கு மாற்றானதும்,எளிதானதுமான திரைப்படம் பார்க்கும் வழியே டி.டி.ஹெச்.இப்ப நெட்பிளிக்சை தாண்டிய,டொரண்ட்டையெல்லாம் தாண்டி வானொலி,செய்திகள்,தொழில்நுட்பம்,சமையல் என ஒவ்வொரு துறை சார்ந்த நிகழ்ச்சிகளை கணினி உதவியில்லாமல் பார்க்கும் முறைகள் கூட வந்து விட்டன.ஆனால் இவற்றையெல்லாம் அனுபவிக்காத படி நொள்ளை மனப்பான்மை,நண்டு சனங்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருப்பதால் இப்பொழுது அமெரிக்காவிலும்,அரசல் புரசலா என்னை மாதிரி ஆட்கள் மட்டும் அனுபவிச்சுகிட்டு வாராங்க.காலப்போக்கில் தொழில்நுட்பங்கள் மட்டுமே வெற்றி பெறும் போது இந்தப் பின்னூட்டமெல்லாம் வரலாறாகப் போயிருக்கும்:)

நீங்க வயரை இங்கே சொருகு அங்கே திருட்டு வீடியோ காப்பி செய்யலாம்ன்னு அரத புராதன டெக்னிக்கெல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு டி.டி.ஹெச்ல் எத்தனை ஓட்டைகள் இருக்குதுன்னு துவக்கம் முதலா சொல்லிகிட்டேயிருக்கீங்க:)உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்துன்னு ஹாலிவுட் பாலாவுக்கு சுட்டி கொடுத்தா அவரு அப்படியே செண்டிமெண்டலா மெர்சலாகிறார்ன்னு உங்க மூணு கால் முசல் குணத்தைக் காட்டுறீங்க:)

நான் முன்னாடி குஸ்தியில் சொன்ன அசின் பாவாடை சைஸ்ல இப்ப இருக்கும் எல்.சி.டிகள் வருவதற்கும் முன்பே இதென்ன அசின் பாவாடை சைஸ்,சிம்ரான் இடுப்பு சைஸ்ல எல்.இ.டி வருதுப்பான்னு ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடியே ஆருடம் சொன்ன மனுசன் பாலா.

நீங்கள் சொல்லும் மாற்றுப்பார்வையிலும் கருத்துக்கள் இருக்கின்றன,அதுவும் நீங்க இப்ப வடிவேலு மாதிரி கப்பு வாங்கின சூழலில் எனும் போது விஸ்வரூப உருவாக்கத்தின் உழைப்பை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?அதற்கு நொண்டிச்சாக்கா கடைசியா ஒரு டிஸ்கி போடறீங்க.

நீங்க அகராதி பொழிப்புரை போட்ட கலைஞரின் தற்கால அரசியல், ராஜபக்சேயின் அடாவடிகள்,டி.டி.ஹெச் சிக்கல்கள் என அனைத்திலும் வெற்றி மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

அபிராமி அந்தாதியா இன்னும் பொங்குது.கூகிளுக்கு பயந்துகிட்டு அடுத்த கணை தொடுக்கிறேன்:)





ராஜ நடராஜன் said...

யாரங்கே வாக் கிங்ன்னு புதுப்பட்டம் சுமத்தறது:) பெயர்ச்சொல் பற்றி சொல்லும் போது வந்து மல்லு கட்டாமல் மல்லு விளம்பரத்தில் வந்து மல்லு கட்டுறீங்களே!பக்கவாத்தியங்களும் சேர்ந்துகிட்டா என்னை மொத்துவதிலும்,முக்காட்டான் என துள்ளிப்பறக்கும் வவ்வாலுக்கு எவ்வளவு சுதி ஏத்தின மாதிரி இருக்கும்?சரி விசயத்திற்கு வருவோம்.

ஒரு திரைப்படத்தின் வெளியீடு என்பது வியாபார திட்டமிடல் என்பதோடு பாலாபிசேகம் செய்யும் கலாச்சார! மண்ணுக்கு கல்யாண தேதி மாதிரி.தவிர்க்க முடியாத காரணங்களால் கல்யாணமும்,முதலிரவு கூட தள்ளிப்போயிட்டா அய்யோ,குய்யோ அலறலும் முடிஞ்சு விடும் கிசுகிசுப்பு லோகநாயகர்கள் கொண்ட நிலம்.

திரையரங்குகளின் பரிணாமம் டூரிங் டாக்கிஸில் மணலைக்குவித்து வைத்து மூத்திரமும் அங்கே,வெத்தலை,எச்சில் துப்பலும் அங்கேயே என்பதில் துவங்கி பெஞ்சு டிக்கெட் என துவங்கி இடைவேளை முறுக்கு,வடை,பீடி,சிகரெட் என இடைவேளை விட்டு கொட்டகைக்கு வெளியே எல்லோரும் ஒண்ணா பைப்பை திறந்து விட்டு படம் போட்டு விடும் அவசரத்தில் திரும்ப வந்து உட்கார்ந்து கொள்ளும் கலாச்சாரத்தில் துவங்கி,சிமெண்ட் கொட்டாய்,ஏர்கண்டிசன் தியேட்டர்,குஷன் சீட்,கபேட்டேரியா என்று பரிணாம வளர்ச்சியடைந்தாலும் கூட திருவிளையாடல் வசனம் போல பிரிக்க முடியாதது திரையரங்கும்,மூத்திரக்கவுச்சி கழிப்பிடமும்.
இந்த சுவாச ரசனைகளை,பால் காய்ச்சி ஆராதனைகளையெல்லாம் விட்டுட்டு டி.டி.ஹெச்சில் படம் பார்க்க சொன்னால் எப்படி மனசு வரும்?

மென்மையாக காட்டும் உணர்ச்சிக்கு முக்காடு போட்டுகிட்டுத்தான் பார்க்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்யும் வவ்வால் நான் முக்காடு போட்டுட்டு ஓடிவிட்டேன் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வதேன்:)

தேவ் ஆனந்தின் தம்பி எப்பவோ சென்சார் போர்டுல உட்கார்ந்துகிட்டு இந்திய படங்களுக்கு முத்தக்காட்சி அவசியம் என்பதை தமிழகத்தின் இரு கழக ஆட்சிக்குப் பின்பும்,இந்திய இரு கட்சி ஆட்சிக்குப் பின்பும் இப்பொழுது முத்தக்காட்சிகள் இந்திப்பட்ங்களில் உதடுகள் கிழியுற அளவுக்கு உறுதி செய்யப்படுகின்றன.எந்த வீட்டில் தண்ணீர் எடுத்துட்டு வரச்சொல்லி அடுப்பாங்கறைக்கு அனுப்புறாங்க?இத்தனைக்கும் இந்திய திரைப்படங்களின் உலக வழியே பாலிவுட்தான்.

உலகநாயகர் மேல் இருக்குற விமர்சனம்ங்கிற முக்காடு போட்டுகிட்டு முக்காடு பற்றி பெரிசா பாடம் எடுக்க வந்தர்ராங்கப்பா:) உங்க முக்காட்டு பொய்களும் துருத்திக்கொண்டேயிருப்பது பார்வையில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்:)வவ்வால் பார்வைக்கு எப்படி தெரியும்?

கூகிள் கூப்பிடற மாதிரி தெரியுதே!

ராஜ நடராஜன் said...

//உள்ளதை சொல்வேன்,நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது :-))//

சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்குது சிரிப்பு:)நீங்க நல்லது செய்ற லட்சணம்தான் தொடர் விஸ்வரூபத்தில் தெரியுதே!ஊரெல்லாம் பறந்து பொரணி சொல்றது.அப்புறம் வந்து குகைக்குள் வந்து உட்கார்ந்துகிட்டு விஸ்வரூபம் கதை சொல்லி கீச்சறது.

பில்கேட்ஸ் விண்டோஸ் தயாரிச்சா அசல் விலை 1000 ருபாய்தான்.உங்க மாதிரி திருட்டு வீடியோக்காரர்களுக்கு 100 கூட அதிகம்தான்.

முன்பே சொன்னேன்.ஒரு நாட்டின்,தனிமனிதனின் பொருளாதாரத்தை செலவு செய்யும் பலமே தீர்மானிக்கிறது.இதற்கும் ஒரு திருட்டு வீடியோ மாதிரி திருட்டு வழி இருக்கிறது.கருப்பு பணத்தை சும்மா தீயா பரவ விடறது.முன்னாடி ஜெயலலிதா ஒட்டியாணம் போட்டுகிட்டிருந்த காலத்துலயெல்லாம் அப்படித்தான் இருந்தது.கோர்ட்டு,தாத்தாவையெல்லாம் பார்த்து இப்ப சுதாரிச்சுகிட்டாங்க போல கொஞ்சம் அடக்கி வாசிக்கிற மாதிரி தெரியுது.

விஸ்வரூப பிரச்சினைக்கு அடிப்படை காரணங்கள் இரண்டு.முதலாவது திரையரங்கு உரிமையாளர்களை சாப்பிடு மாமுன்னு லூஸ்ல விடாதது.
இரண்டாவது டி.டி.ஹெச்ல் வெளியிடுவதற்கு தடையாக உத்தரவாதமில்லாத மின்சாரம்.

நான் கழுகு மாதிரி ஆகாயப்பார்வை பார்க்கிறேன்.நீங்க இருட்டுல உட்கார்ந்துகிட்டு வவ்வால் பார்வை பார்க்கிறீங்க:)

ஆமா!walk king is now runn(k)ing :-))

ராஜ நடராஜன் said...

//ஒரு பதிவை படித்தால் அதில் சொல்லப்படும் வாதங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் நம் மனதை ஆக்கிரமிக்க வேண்டும்.இந்த பதிவு அந்த வகை.//

சிவானந்தம்!அமிர்தாஞ்சன் விளம்பரம் பார்த்துட்டே படத்துக்கு விசில் அடிக்கிறீங்களே!படமே இப்பத்தான் பின்னூட்ட டைட்டிலில்தான் ஆரம்பிக்குது:)

Jenil said...

//மலையாளத்துல மம்மூட்டி ,மோகன்லால் எல்லாம் நடிக்க தெரியாதவங்களா, தேசிய அவார்டு எல்லாம் வாங்கினாலும் ஒரு கோடியை எப்போ எட்டினாங்க, ஆனால் இங்கே சுள்ளான் முதல் சொம்பு வரைக்கும் படம் ஓடுதோ இல்லையோ கோடிகளில் தானே.நடிகர்களின் சம்பளத்தை குறைத்தாலே சினிமா விளங்கிடும்.//


Malayalam indistry way different from tamil industry.. There trade unions are very strong so the producer has to give reasonable pay for other workers(other than actors also)... ofcourse the unions are also not saints but they are doing some good for the labours also.. so the production cost there is high insense of technical workers also.. aslo the unions of distributors and theatre owners is also strong so they won't pay more for anyone's movie... 10 years back(my guess) the situation came when Mohan Lal and Mamooty demaned to raiose their salaries significantly but the distributors and owners decoded that they won't release both of those guy's movies unless they reduce their salaries and for that ONAM many films came from with new faces and many films become HITS one among them is FOUR STUDENTS after tat the big shots realised that even without them there will be cinema they agreed to reduce their salaries... If the same happens here also evrything will go goood :):)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

// இவற்றையெல்லாம் அனுபவிக்காத படி நொள்ளை மனப்பான்மை,நண்டு சனங்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருப்பதால்//

நொள்ளை மனப்பான்மை நண்டு சனங்கள்னு ஏன் சுத்தி வளைச்சுக்கிட்டு , பஞ்சத்தில் அடிபட்ட தரித்திரம் புடிச்ச சனங்கள்னு நேரடியாகவே சொல்லிடுங்க,அதை தானே உங்க மனசு சொல்ல விரும்புது.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை,அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை!

என்னைப்போன்றோர்க்கு இவ்வுலகின் இன்பங்கள் கிட்டாமல் போகலாம், அதனால் இழப்பொன்றும் இல்லை என்ற மனநிலையில் தான் என்னைப்போன்றோர் வாழ்கிறோம்.

நெட்பிளிக்ஸ் கணினி இல்லாமல் வேலை செய்யும் ,ஆனால் இணையம் இல்லாமல் வேலை செய்யுமா? அந்த இணையம் பணமில்லாமல் கிடைக்குமா? தினசரி 32 ரூவா சம்பளத்தில் சோறு தின்னவே வக்கத்துக்கிடக்க மக்களுக்கு நெட்ப்ளிக்கிஸை அனுபவிக்க தெரியலையேனு நீங்க சொல்வது மேட்டுக்குடி மனோபாவத்தினை தான் காட்டுது.

அவனனவன் அடுப்பெரிக்கிற எரிவாயு விலை ஏறிப்போச்சேன்னு எரிவாயு இல்லாமலே வயிறெரிஞ்சுப்போய் கிடக்கான், நெட்ஃப்ளிக்கிஸில் படம் பார்த்து ரசிக்க தெரியாத நண்டுகள்னு தமிழர்களை சொல்லுறிங்க , எல்லாம் காலக்கொடுமை தான்.

//விஸ்வரூப உருவாக்கத்தின் உழைப்பை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?//

உழைப்பு தான் ,இல்லைனா சொல்ல முடியும் பெரிய உழைப்பாச்சே.... ஏர் உழுது, ஏற்றம் இறைச்சு, நாத்து நட்டு களைப்புடுங்கி,கதிரறுத்து, மூட்டை சுமந்து முதுகொடிந்த உழைப்பாச்சே ,பாராட்டி மெரினா பீச்சில உழைப்பாளர் சிலையை தூக்கிட்டு அங்கே லோகநாயகர் சிலையை வைக்கலாம். அப்படி லோகநாயகருக்கு சிலை வைக்க நிதி திரட்டினால் என் சார்பா ஒரு ரூவா நிதி தரவும் தயார் :-))

#வழக்கம் போல வாய்ப்பாடு ஒப்பிப்பது போல ஏதோ சொல்லி இருக்கிங்க ,அது அவுட் ஆஃப் ஃபோகசில் ஓடிப்போச்சு :-))

#//சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்குது சிரிப்பு:)நீங்க நல்லது செய்ற லட்சணம்தான் தொடர் விஸ்வரூபத்தில் தெரியுதே!ஊரெல்லாம் பறந்து பொரணி சொல்றது.அப்புறம் வந்து குகைக்குள் வந்து உட்கார்ந்துகிட்டு விஸ்வரூபம் கதை சொல்லி கீச்சறது.//

என்னமாதிரியான மனிதர்கள் வாழ் உலகிது, வங்கக்கடலில் ஒரு குறைந்த தாழ்வழுத்த காற்று மண்டலம் உருவாகி இருப்பதால் ,அடுத்த 24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழையும்,பலத்த சூறாவளிக்காற்றும் அடிக்கும், எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என வானிலை அறிக்கை ரமணன் "forecasting " சொன்னால் பாழாப்போன மனுஷன் என்னை மீன்ப்புடிக்க போக வேண்டாம்னு சொல்லுறானே உருப்படுவானா என சபிப்பது போல உள்ளது ,உங்கள் பேச்சு :-))

#//விஸ்வரூப பிரச்சினைக்கு அடிப்படை காரணங்கள் இரண்டு.முதலாவது திரையரங்கு உரிமையாளர்களை சாப்பிடு மாமுன்னு லூஸ்ல விடாதது.
இரண்டாவது டி.டி.ஹெச்ல் வெளியிடுவதற்கு தடையாக உத்தரவாதமில்லாத மின்சாரம்.//

என்னக்கொடுமைய்யா இது, அப்போ இத்தினி நாளும் தியேட்டர்க்காரங்க சாப்பிடும் போது போனாப்போவுதுன்னு விட்டிருந்தாரா, மன்ன்மதன் அம்பு,உன்னைப்போல் ஒருவன்,ஆளவந்தான், ஹேராம் எல்லாம் கோடிக்கணக்கில் பணத்தை குவித்து ,தியேட்டர்காரர்கள் செல்வ செழிப்பில் கொழித்தார்களா :-))

தமிழ்நாட்டில் மின்சாரம் என்ன நிலையில் இருக்குன்னு இம்மாம் நாளும் தெரியாம எந்த குகையில தூங்கினு இருந்தார் லோகநாயகம் :-))

//நான் கழுகு மாதிரி ஆகாயப்பார்வை பார்க்கிறேன்//

கண்ணு தெரியாதவருக்கு பேரு கண்ணாயிரமாம்!!!!

#//சிவானந்தம்!அமிர்தாஞ்சன் விளம்பரம் பார்த்துட்டே படத்துக்கு விசில் அடிக்கிறீங்களே!படமே இப்பத்தான் பின்னூட்ட டைட்டிலில்தான் ஆரம்பிக்குது:)//

அய்யா ராச நட படம் முடிஞ்சப்ப்பொறவு டைட்டில் ஓடுதுங்க :-))
------------------

ஜெனில்,

நீங்க சொல்வது சரி தான், மலையாளப்படவுலகம் சிறியது தான் ஆனால் அதன் வர்த்தக எல்லைக்குள் செலவீனங்களை வைத்துக்கொண்டால் லாபகரமாக இயங்கலாம் என்பதை அவர்கள் புரிந்துக்கொண்டு கடிவாளம் போட்டுள்ளார்கள்.

அதே போல தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லை, புரிந்து செயல்ப்பட்டால் பெருமளவிலான நட்டம் தவிர்க்கலாம்.

ஒரு நடிகரோட படம் அவ்வளவு வசூலாகிச்சுனா எல்லாருக்கும் அதே போல வசூலாகும்னு நினைத்து தயாரிப்பது சரியல்ல.
----------------------------

முட்டாப்பையன் said...

வவாளுகாறு.
இங்க வாரும்.இன்னிக்கு ரத்தம் குடிக்கலாம்.வழக்கம்போல் உமக்கு வேண்டியதை நீர் எடுத்துக்கொள்ளும்.அப்படியே நம்ம சப்பலாக்கட்டை,பருண் மாமா இவங்களையும் கூப்பிடுவோம்.
:-))

http://suvanappiriyan.blogspot.in/2013/01/blog-post_10.html

ராஜ நடராஜன் said...

முட்டாப்பையன் இடையிலே பூந்து ஆட்டத்தை கெடுத்துட்டாரே!

ஆமா!ஐ லைக் அலெக்ஸ்பாண்டியன்...ஒரு திருட்டு டிவிடி பார்சல் !!! ன்னு நீங்க கேட்டது வந்து சேர்ந்துச்சா இல்லையா?

வவ்வால் said...

ஓய் ராச நட,

என்னா வேகம்,என்னா வேகம் நான் டிவிடி கேட்டதும் ,இங்கே வந்து கேட்குறிங்க, நான் கேட்டது டிவிடி முன்னாடி என்னாத்துக்கு திருட்டு சேர்க்குறிங்க, நான் காசு கொடுத்து வாங்குறேன், அது எப்படி திருட்டு டிவிடி ஆகும்?

அப்படிப்பார்த்தா காப்பி அடிச்சு எடுத்த படமெல்லாம் திருட்டு படமென சொல்வாரா உலோகநாயகன் :-))

என்னம்மோ கன்னிப்பெண்னை கெடுத்தாப்போல ஆட்டத்த கெடுத்தாங்கன்னு சொல்லுறீர், முட்டாப்பையர் சொன்ன ஆட்டமெல்லாம், ஆரம்பிக்க இன்னும் 2 நாளாவது ஆகும் , நான் நாட்டுப்பொறத்துக்கு வந்திருக்கேன் , தாவாணி போட்ட பொண்ணுகள காணும் பொங்க அன்னிக்கு சைட் அடிக்க(காணுதல்,ராட்டினம் எல்லாம் ஆத்துல வச்சிருக்காங்கோ),ஆத்து திருஷாவுக்கு போவணும் :-))

லாங்க் ஷாட்டுல எல்லாம் குத்த வச்ச குமரிக போலவே இருக்கும் கிட்டக்க போன சீக்கு வந்த கோழியாட்டம் இருக்கும் :-((

எனவே மீ ஒன்லி கோ ஃபார் வாட்சிங் :-))

ஹி...ஹி நான் வாட்ச் கட்டீருப்பேன்ல :-))

கூடுதல் தகவல் பொங்க பெசலா இது வரிக்கும் 4 மணி நேரம் தேன் பவர் கட்டு :-)) வாட் எ அச்சீவ்மெண்டு!!!!

R.Gopi said...

வவ்வால்.....

சில பல காரணங்களால் தான் இந்த படத்திற்கு இம்புட்டு இடியாப்ப சிக்கல்

1) 95 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது
2) பெரிய ஸ்டார்கேஸ்ட் இல்லாதது
3) முன்னோட்டமாய் வந்த ஆடியோ ஊத்திக் கொண்டது
4) ரூ.1,000/- என்று டிடிஹெச் விலை நிர்ணயம் செய்தது
5) அப்படியும் சில லட்சம் புக்கிங் வந்தால் சில பல கோடிகள் தேற்றி விடலாம் என்ற கணக்கு பொய்த்தது

இவை எல்லாவற்றையும் விட அதிமுக்கியமான காரணம் உண்டு...

அதாவது டிடிஹெச் ஒளிபரப்பில் அவர் எதிர்பார்த்த சுமார் 40-50 கோடிகள் தேறி இருந்தால், மிச்சம் தியேட்டர் ரிலீஸில் கல்லா கட்டி இருக்கலாம்... ஆனால் அது தேறவில்லை...

தானே தயாரிப்பாளராக இருந்து விட்டதால், தியேட்டருக்கு நேரடியாக குறைந்த பட்சம் ரூ.120/- கோடி அளவிற்காவது விற்றாக வேண்டும் (120 - 95 = 25 கோடியாவது தேறும்).. அப்படி விற்று விட்டு, படம் நன்றாக இல்லாமல் கலெக்‌ஷன் கையை விரித்து விட்டால், பன்னீர் செல்வம் க்ரூப் திரும்ப பணம் தா என்று நச்சரிக்கும்... (இது தான் மெயின் பாயிண்ட்)...

இந்த தொல்லை டிடிஹெச்-ல இல்ல... பணம் கட்ட சொல்லி, அமவுண்ட் கலெக்ட் பண்ணி, படம் காட்டியாச்சுன்னா நல்லா இருக்கு, இல்ல, பணம் திரும்ப தா... இந்த பேச்சுக்கே இடமில்லை...

இது தான் மேட்டர்....

வவ்வால் said...

கோபி,

வாங்க,நன்றி!

நீங்க என்ன சொல்லி இருக்கீங்களோ,அதை தான் நானும் பதிவில் விரிவாக சொல்லியிருக்கேன் :-))

//இந்த தொல்லை டிடிஹெச்-ல இல்ல... பணம் கட்ட சொல்லி, அமவுண்ட் கலெக்ட் பண்ணி, படம் காட்டியாச்சுன்னா நல்லா இருக்கு, இல்ல, பணம் திரும்ப தா... இந்த பேச்சுக்கே இடமில்லை...//

இதையும் சொல்லிட்டேன்,படம் நல்லா இருக்கு,இல்லைனு தெரியும் முன்னரே முடிந்த அளவுக்கு பணத்தை அள்ளிடனும்னு 1000 ரூ வச்சிருக்கார்னு, ஆனால் லோகநாயகர் விசிறிகள் தான் இதனை புரட்சினு சொல்லிக்கிறாங்க.

படம் நல்லா இருந்தா பிரச்சினை இல்லை, நல்லா இல்லைனு தகவல் முன்னதே பரவினால், தியேட்டருக்கு முதல் நாள் பார்க்க வரும் கூட்டமும் வராது. எல்லா படம் தயாரிக்கிறவங்களும் அவங்க படம் உலகத்திலேயே வித்தியாசமான நல்லப்படம்னு தான் சொல்வாங்க :-))

ராஜ நடராஜன் said...

வவ்சு!செம மூடுல இருக்கீங்க போல இருக்குதே:)

இப்போதைக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

பொங்கட்டும் பதிவுகள்.பொங்கலோ பொங்கல்.

ராஜ நடராஜன் said...

@கோபி!உங்க அட்டவணைப்பட்டியல் சரியா இருக்குற மாதிரிதான் தோணுது.ஆனால் 3.) முன்னோட்டமாய் வந்த ஆடியோ ஊத்திக் கொண்டது என்பது சரியல்ல.

ஆடியோ மட்டும் கேட்டுட்டு பாடல்களுக்கு எப்படி காட்சியமைப்பு வைத்தால் சரியாக இருக்குமென உங்கள் கற்பனைக்கான முன்னோட்டமது.

அவ்வளவு கற்பனையெல்லாம் இருந்தா நாங்களே ஆரோ 3 டி படம் எடுத்துருவோம்லன்னு ஏதோ அசரீரி கேட்கிற மாதிரி இருக்குதே:)

நாய் நக்ஸ் said...

வவ்வால்...அப்படியே நம்ம ஊர் பக்கம் எட்டி பாக்குறது...

எதிர்பார்ப்புடன்....
9043257501

வவ்வால் said...

ராச நட,

வாரும் ,வாரும் ,

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நாம எப்பவும் துன்பத்திலும் இன்பம் காணும் வகை எனவே எப்பொழுதும் ஏகாந்தம் தான் :-))

# உண்மைய கோபி அவர்களும் சொன்னதும் , அடி வயித்தில சொலீருனு இழுக்குதா :-))

ஹி...ஹி லோகநாயகத்தின் உண்மையான செல்வாக்கு என்னனு இந்த டிடிஎச் மேட்டரில் வெளியானது தான் மிச்சம், ரசிகர்களின் உண்மையான எண்ணிக்கையும் தெளிவாகிடுச்சு ,லட்சக்கணக்கான ரசிகர்கள்னு சொல்லப்படுவது எல்லாம் வெறும் கானல் நீரே!
------------

நக்ஸ் அண்ணாத்த,

வாங்க,நன்றி!

பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மண்ணின் மைந்தரான உங்களை என்றேனும் ஒரு நாள் சந்திக்காமலா போயிடப்போறேன் ,சந்திப்போம்!

R.Gopi said...

@ ராஜ நடராஜன் :

இன்று ஆடியோ என்பது படத்திற்கு மிக முக்கியமான ஒரு விஷயமாகி விட்டது... அதனால் தானே படத்தில் பாடல்கள் வைத்து அதை அம்புட்டு ஜிகினா வேலை செய்து படம் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியிடுகிறார்கள்....

இந்த பட ஆடியோ கூட ஒரே நாளில் பல இடங்களில் ரிலீஸ் என்று “எலி”காப்டர் எல்லாம் வாடகைக்கு எடுத்து, அம்புட்டு பேரையும் கூட்டிட்டு எல்லா இடத்துக்கும் சுற்றுப் பயணம் போனாங்க....

லோக நாயகர் கூட இந்த படத்தோட ஆடியோ இந்தியா அளவில் சேல்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கு, விரைவில் முதலிடத்திற்கு வந்து விடும் என்று சொன்னாரே!!!

ஆடியோ ஹிட் என்றால் படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகும் என்பது உண்மை.... காட்சியமைப்பு பற்றி நான் பேசவே இல்லை...

ஜோதிஜி said...

ARE YOUR PISIN FAN

ஜோதிஜி said...

LOT OF INFORMATION BOTH ARTICLE AND COMMENTS.