Showing posts with label நீயா. Show all posts
Showing posts with label நீயா. Show all posts

Wednesday, May 30, 2012

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா? ஒரு சூடான அலசல்!



விஜய் தொ.காவின் நீயா,நானா நிகழ்ச்சி நங்கூரம் கோபிநாத் , தனது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆற்றல் விண்மீன்(பவர் ஸ்டார்) என்ற திரைபிரபலத்தை அழைத்து உரிய முறையில் நடத்தாமல், தேவையில்லாத கேள்விகள் கேட்டு அவமரியாதை செய்து விட்டதை வைத்து பலரும் பதிவுகள் போட்டுத்தாளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நானும் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு வழக்கம் போல மொக்கையாக அறிவியல் ,பொருளாதாரம்னு ஜல்லி அடிக்கலாம், நமக்கு எதுக்கு இதெல்லாம் என வாளாவிருந்தேன்,அது நேற்று இரவு குமுதம் ரிப்போர்ட்டரை படிக்கும் வரையே, அதில் ஆற்றல் விண்மீன் பற்றி ஒரு செய்தி போட்டிருக்கிறார்கள்.

அதில் சொல்லப்பட்டிருப்பது என்னவெனில்,

#ஆற்றல் விண்மீன் மருத்துவப்படிப்பே படிக்கவில்லை, அவர் கல்வி தகுதிக்குறித்து நீண்ட நாட்களாக சர்ச்சை உள்ளது,

#பலப்பேரிடம் கடன் வாங்கி தருகிறேன் எனச்சொல்லி கையாளும் கட்டணமாக கமிஷன் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

தற்போது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழிலதிபர் சுரேந்திரகுப்தா என்பவரிடம் 6 கோடிக்கடன் வாங்கி தருவதாக சொல்லி கமிஷனாக 26 லட்சம் பெற்றுள்ளார், அப்போது 2.75 கோடிக்கு டி.டி காட்டியுளார் ,அதை பின்னர் தருவதாக சொல்லியுள்ளார்,வங்கியில் விசாரித்த போது அது போலியானது என சொல்லியுள்ளார்கள்.எனவே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார், பல அலைச்சலுக்கு பின்னர் 17 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு ,மிரட்டியுள்ளார்,எனவே இப்போது சுரேந்திர குப்தா மாநகர ஆணையர் அலுவலகத்தில், ஆ.வி மேல் மோசடிப்புகார் கொடுத்துள்ளார்.

இதுவே கு.ரிப்போர்ட்டர் செய்தி, அப்படி எனில் இது போல பலரிடம் மோசடி செய்த பணத்தில் தான் படம் எடுத்து விளம்பரம் செய்துக்கொண்டுள்ளாரா ஆற்றல் விண்மீன் ?

பவர் ஸ்டார் நல்லவரா ,கெட்டவரா?

இப்போ கோயான் கோபிநாத்துக்கு வருவோம்,



ஒரு நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்/விருந்தினர் என்றால்,அவரது கருத்தை சொல்லத்தான் அழைக்கப்பட்டுள்ளார், அது ஒன்றும் அவரது நேர்காணல் அல்ல, அவரைப்பற்றி விமர்சிக்க,கேள்விக்கேட்க.எனவே எந்த நிகழ்ச்சியை எப்படி வடிமைக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு பின்னர் நிகழ்ச்சி செய்ய வரவும்.

பவர் ஸ்டாரை இப்படி எல்லாம் கேள்விக்கேட்க வேண்டும் என ஆசை இருந்தால் ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியை வைத்து அதில் கேட்டுக்கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி நங்கூரம்னா கோட்டு சூட்டுப்போட்டுக்க வேண்டும்னு விதி இருக்கா? ஆனானப்பட்ட கரண் தாப்பர் கூட கோட் போடாமல் நிகழ்ச்சி நடத்துனார்ப்பா, அப்படியிருக்க தமிழில் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு கோட்டு தேவையா?

அதை விட கொடுமை கோட் ரொம்ப சின்னதா உடம்புக்கு பொருந்தாம , உடம்பே பிதுங்கிக்கிட்டு இருக்கும் ,வாடகைக்கு கோட் எடுக்கும் போதே கொஞ்சம் பெருசா எடுக்கப்படாதா :-))

-------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

குமுதம் ரிப்போர்ட்டர், கூகிள்,நன்றி.

*****