Showing posts with label விலை உயர்வு. Show all posts
Showing posts with label விலை உயர்வு. Show all posts

Sunday, June 03, 2012

பெட்ரோல் விலை குறைப்பெனும் நாடகம்!




நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 2 ரூ விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது .ஏற்றியது 7.50 ரூ இறக்கியது 2 ஆக நிகர விலையுயர்வு 5.50 ரூ.உண்மையில் மத்திய அரசின் திட்டமிட்ட விலையுயர்வு 5.5 ஆகவே இருக்கும், கொஞ்சம் கூடுதலாக ஏற்றிவிட்டு பின்னர் மக்கள் நலன் கருதி குறைத்தது போல ஒரு செட் அப் செய்யவே இந்த விலை ஏற்றம் ,இறக்கம்.

இதற்கிடையில் மஞ்சள் துண்டு அய்யா, ரய்யில் பொட்டி அக்கா எல்லாம் அவங்க மிரட்டி குறைக்க வச்சோம்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அறிக்கை விட்டுப்பாங்க :-))

பெட்ரோல் விலை ஏற்றமே ஏமாற்று வேலை ,அன்னிய செலவாணி உயர்வால் கச்சா விலை உயரவில்லை என



ஆகிய இரண்டு பதிவிலும் முன்னரே சொன்னேன்.

மேலும் பெட்ரோல் விலையில் பெருமளவு அரசின் வரியே என்பதை விளக்கும் பதிவு...


அங்கு சொன்னது மீண்டும் இங்கு,

"உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன."

மேலும்,

இந்த விலையேற்றத்திற்கு பின்னால் தனியார் எண்ணை நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸார் போன்றவர்களின் கைவரிசையும் இருக்கலாம், ஏன் எனில் பொது துறை நிறுவனங்களுக்கு நஷ்டம் வரவில்லை அப்படியே வந்தாலும் அரசு மீட்டு எடுக்க நிதிக்கொடுக்கத்தான் போகிறது. ஆனால் தனியார் எண்ணை நிறுவனங்களுக்கு அவையே பொறுப்பு என்பதால் நல்ல லாபத்தில் விற்க வேண்டும். ஏற்கனவே தனியார்கள் பொது துறை எண்ணை நிறுவனங்களை விட ரூ 1 அல்லது 2 கூடுதலாகவே விற்கிறார்கள்.

மேலும் விலையேற்றம் செய்யவும் தனியார்களுக்கு ஆசை இருக்கிறது ஆனால் பொது துறை நிறுவனங்கள் விலையை ஏற்றவில்லை எனில் தனியாராலும் விலை ஏற்ற முடியாது, எனவே அவர்களுக்கு விலை ஏற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகவே பொதுத்துறையை விலை ஏற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து செய்திருக்கலாம் என தோன்றுகிறது.

கார்ப்பரேட்களின் கைக்கூலியாக மாறிவிட்ட அரசும், தலையாட்டியும்அவர்களுக்காக எதுவும் செய்வார்கள்.

இப்படி நாடகம் ஆடி மறைமுகமாக நாட்டுமக்களிடம் சுரண்டுவதற்கு மன்னு மோகன் மற்றும் குழுவினர் முகமூடிப்போட்டுக்கொண்டு கொள்ளையே அடிக்கலாம் யார் கேட்கப்போகிறார்கள் :-))

இவங்க சாப்பிடுற சாப்பாட்டின் ஒவ்வொரு பருக்கையிலும் நாட்டு மக்களின் வியர்வை இருக்கு, ஆனால் குனியாமல் ,நிமிராமல் தலையை ஆட்டி மட்டுமே சம்பாதிக்கும் இவருக்கு எப்படி சாப்பிட்ட சாப்பாடு செரிக்கும் என தெரியவில்லை.

*****

Tuesday, May 29, 2012

மாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)

(பட உதவி "தி இந்து",நன்றி)


ஏற்கனவே பெட்ரோல் விலையை வெற்றிகரமாக ஏற்றி மக்களுக்கு "பேரின்ப அதிர்ச்சி" கொடுத்த மத்திய அரசு இப்போ அடுத்து டீசல் விலையையும் ஏற்றலாமா என தீவிர சதியாலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

வழக்கமாக கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் உள்நாட்டில் விலையேற்றம் என சொல்லும் அரசு இம்முறை அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது ,எனவே டாலர் வாங்க கூடுதல் பணம் செலவாகிறது எனவே நட்டம் அதை தவிர்க்கவே விலையேற்றம் என ஒரு காரணத்தினை சொல்லியுள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவும் ,அதன் விளைவாக பெட்ரோல்,தங்கம் விலை ஏறும் என பெட்ரோல் விலையேற்றத்திற்கு முன்னரே ஒரு பதிவாக போட்டுள்ளேன்,அதனை இங்கு காணலாம்.


அப்பதிவில் சொன்னது தான்,மீண்டும் ஒரு முறை இங்கே,

ஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்னிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.

சந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.

ஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.

ஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.

உண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,

டாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.

அதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.

எனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்யப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.

பெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,


விரைவில் டீசல் விலையும் ஏறும் என்ற நிலையில் , அப்படி விலை ஏற்றினால் நமக்கு நாமே ஒரு மாற்று எரிப்பொருளை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் கவலை இல்லை அல்லவா, எனவே வீட்டிலேயே ஒரு வாகன எரிபொருள் இருப்பதையும் அதைப்பயன்ப்படுத்துவது எப்படி என்பதையும் சொல்லவே இப்பதிவு.

ஹி..ஹி இதைப்படிச்சுட்டு எல்லாம் வீட்டுக்கு வீடு
மூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானினு கிளம்பிடாதிங்க, இதெல்லாம் உலகம் அறிஞ்ச ரகசியம் :-))

வாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிப்பொருளை கனிம எண்ணை(mineral oil) என்பார்கள், சமையலுக்கு பயன்ப்படுத்தும் எண்ணை தாவர எண்ணை (veg oil)ஆகும். கனிம எண்ணையை சமைக்க பயன்ப்படுத்த முடியாது.ஆனால் தாவர எண்ணையை வாகனத்திற்கு பயன்ப்படுத்த முடியும்.

சுத்தமான தாவர எண்ணை;

எந்த ஒரு சுத்தமான தாவர எண்ணையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக டீசல் வாகனங்களில் பயன்ப்படுத்த முடியும்,அல்லது டீசலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்ப்படுத்த முடியும், அதனை பயோ டீசல் என்பார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பி-80 என்றப்பெயரில் விற்பது 20% தாவர எண்ணை கலந்த டீசல் ஆகும், அதே போல எத்தனால் கலந்தும் விற்கிறார்கள் சதவீதத்திற்கு ஏற்ப ஈ-85 என்பது போல விற்கிறார்கள்.

100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும்.நாம் நாட்டில் குடிக்கமட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது.



அதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட நம் நாட்டில் மொலாசஸ் அதிகம் கிடைக்கும் இதனை எத்தனாலாகவோ மெத்தனாலாகவோ மாற்றினால் நிறைய அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம்.ஆனால் அரசு அதனை செய்யாமல் இறக்குமதி, விலை ஏற்றம் என்ற பழைய பஞ்சாங்கமே பாடிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ?


இந்தியாவில் பயோ டீசல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என சொல்லி அரசே ஊத்தி மூடிவிட்டது.

சுத்தமான தாவர எண்ணையை எதனுடனும் கலக்காமல் வாகனத்தில் பயன்ப்படுத்த முடியும், ஆனால் ஸ்டார்ட்டிங்க் பிரச்சினை, நாசில் அடைத்துக்கொள்வது, குளிர்காலத்தில் எண்ணை கெட்டியாகிவிடுவது போன்ற பிறச்சினை வரும்.

இதனையும் தவிர்க்க வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், தாவர எண்ணைக்கு ஏற்ப நாசில், எண்ணை பில்டர், கூடுதல் திறன் உள்ள இக்னிஷன் காயில் ஆகியவை பொறுத்த வேண்டும்.கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலை.

இதனை தவிர்க்க இரட்டை டேங்க் முறைப்பயன்ப்படுகிறது.இம்முறையில் ஒரு டேங்கில் டீசலும்,இன்னொரு டேங்கில் தாவர எண்ணையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். முதலில் சிறிது நேரம் டீசலில் ஓட்டி எஞ்சின் சிலிண்டரை சூடாக்க வேண்டும், அதே நேரம் தாவர எண்ணையும் சைலண்சரின் வெப்பத்தின் மூலம் சூடாகும் படியாக தாவர எண்ணை டேங்க் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்பொழுது டீசல் டேங்கில் இருந்து எரிப்பொருள் செல்வதை அடைத்துவிட்டு தாவர எண்ணை டேங்கில் இருந்து வருமாறு மாற்றிவிட வேண்டும். மேலும் எஞ்சினை நிறுத்தும் முன்னர் சிறிது நேரம் டீசலில் ஓட விட்டு பின்னர் நிறுத்த வேண்டும்,அப்போது தான் மீண்டும் வாகனம் எளிதில் கிளம்பும்.

இன்னொரு முறையில் தாவர எண்னையை மட்டுமே பயன்ப்படுத்தலாம், டீசல் தேவையே இல்லை. ஆனால் அதற்கு தாவர எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் (transestrification)செய்ய வேண்டும். கொஞ்சம் கவனமாக செய்தால் அனைவரும் அவர்கள் கார் ஷெட்டிலேயே எரிப்பொருளை தயாரிக்க முடியும். வெளிநாடுகளில் பலரும் இப்படி செய்கிறார்கள்.

இம்முறைக்கு சுத்தமான தாவர எண்ணை pure veg oil)அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணை (waste veg oil)என எதை வேண்டுமானாலும் பயன்ப்படுத்தலாம்.

சமைக்கப்பட்ட எண்ணை எனில், செலவு மிச்சம் ஆகும் சில உணவங்களை அணுகி சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையை இலவசமாக கேட்டுப்பெறலாம்.வெளிநாடுகளில் பல முறை ஒரே எண்ணையில் சமைக்க தடை எல்லாம் இருப்பதால் கொடுப்பார்கள், நம்ம ஊரில் எண்ணை சட்டி வறண்டு போகும் வரை விடாமல் சமைக்கப்பயன்ப்படுத்துவார்களே :-))

ஆனால் நட்சத்திர உணவகம்,சில தரமான உணவங்களில் மீண்டும் எண்ணைப்பயன்ப்படுத்தாமல் கழிவாக வீணாக்கலாம்,அவர்களிடம் கேட்டுப்பெறலாம் என நினைக்கிறேன்.

அப்படி சமைத்து முடிக்கப்பட்ட எண்ணையை ஒரு கலனில் ஊற்றி சில நாட்கள் அப்படியே வைத்தால் வண்டல் எல்லாம் அடியில் படிந்துவிடும் ,பின்னர் மேலாக உள்ள எண்ணையை மட்டும் எடுத்து நன்கு வடிக்கட்ட வேண்டும், அப்போது தான் உணவுத்துணுக்குகள் நீக்க முடியும்.

இப்போது அடிப்படையான எண்ணை கிடைத்து விட்டது ,

மேலும் தேவையான பொருட்கள்,

சோடியம் ஹைட்ராக்ஸைடு, (Naoh)
சிங்க்,வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் நீக்கப்பயன்படும் ரசாயனமே சோடியம் ஹைட்ராக்சைடு அதனைக்கடையில் வாங்கிப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.



மெதனால் எனப்படும் மீதைல் ஆல்ஹகால்.(methanol-ch3oh)


தேவையான அளவில் சில கண்ணாடிகுவளைகள், வடிக்கட்டி, கலன்கள்,டிரம்,

கலக்கி விட சமையலுக்கு பயன்ப்படும் பீட்டர் ,அல்லது கையால் விடாமல் கலக்க முடியும் எனில் மரத்தால் ஆன ஒரு கலக்கி.

செய்முறை:

முதலில் எண்ணையை 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடாக்க வேண்டும். நம் நாட்டில் ந்ல்ல வெயில் அடிப்பதால் வெயிலில் வைத்து சில மணி நேரங்கள் வைத்து கலக்கிவிட்டாலும் போதும்.

இது எதற்கு எனில் சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையில் நீர் அல்லது ஈரப்பதம் இருக்கும் அதனை நீக்கவே.ஈரப்பதமான எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்தால் எரிப்பொருளுக்கு பதில் சோப் கிடைத்துவிடும்.இதற்கு சோப்பானிபிகேஷன்(saponification) என்று பெயர்.

செய்முறை மாதிரிக்கு இப்போது ஒரு லிட்டர் எண்ணை என வைத்துக்கொள்வோம்.

ஒரு லிட்டர் எண்ணைக்கு 200 மி.லி மெத்தனால், 6.5 அவுன்ஸ் சோடியம் ஹைட்ராக்சைடு தேவை.

முதலில் 200 மி.லி மெத்தானாலை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக சோடியம் ஹைட்ராக்சைடு பவுடரை கொட்டி கலக்க வேண்டும்.இவ்வேதி வினை ஒரு வெப்ப உமிழ்வு (exothermic)வினையாகும் எனவே சிறிய அளவிலேயே கலக்க வேண்டும். முடிவில் மெத்தாக்சைடு (methoxide)கிடைக்கும்.

இப்படிக்கலக்கும் போது உடலில் பட்டு விடாமல் கவனம் தேவை மேலும் வெளிவரும் புகையினை சுவாசிக்காமல் இருக்க முகத்தில் முகமூடி போல கட்டிக்கொள்ளவும் வேண்டும்.

இப்போது மீத்தாக்சைடை ஒரு லிட்டர் எண்ணை உள்ள குவளையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும், இப்படி சுமார் 30 நிமிடம் செய்ய வேண்டும், எனவே தான் பீட்டர் பயன்ப்படும் என்றேன்.

எண்ணையில் ஃப்ரி பேட்டி ஆசிட்(free fatty acid) உள்ளது அவை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் மூலம் esters of fatty acid ஆகவும், கிளைசெரால் (glycerol)என்ற உப பொருளாகவும் மாறும்.



கலக்கி முடித்து வினை முழுமை அடைந்ததும் குவலையை சில மணிநேரங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும் கிளைசெரால் அடியில் படிந்துவிடும், பின்னர் மேல்மட்டத்தில் உள்ள பயோ டீசலை உறிஞ்சு குழல் (syphon)முறையில் தனியாக பிரித்து எடுத்தால் வாகனத்திற்கு பயோ டீசல் தயார்.

இதே முறையை சுத்தமான தாவர எண்ணைக்கும் பயன்ப்படுத்தலாம், அதில் வடிக்கட்டுவது,சூடாக்கி ஈரப்பதம் நீக்குவது எல்லாம் செய்யாமல் நேரடியாக தயாரிக்கலாம் என்பது கூடுதல் வசதி.

வீட்டில் பயோ டீசல் தயாரிக்கும் அமைப்பின் படம்:

விலை அதிகமான சுத்தமான தாவர எண்ணையைப்பயன்ப்படுத்த தேவையில்லை, ஆமணக்கு, கடுகு எண்ணை என மலிவான எண்ணைகளே பெரும்பாலும் பயன்ப்படுத்தப்படுகிறது.

இந்த பயோடீசலை நேரடியாகவும் வாகனத்தில் பயன்ப்படுத்தலாம் அல்லது டீசலுடன் கலந்தும் பயன்ப்படுத்தலாம்.

இம்முறையில் உள்ள ஒரு சிக்கல் என்ன வெனில் 10 நாட்கள் வரைக்கும் பயோ டீசல் முழுத்திறனுடன் இருக்கும், பின்னர் படிப்படியாக திறன் குறைந்து 60 நாட்களுக்கு பின் எரிப்பொருள் திறனை இழந்துவிடும். எனவே பெரிய அளவில் தயாரித்து சேமிப்பது சிரமம்.

ஆனால் வீட்டில் வார இறுதியில் தயாரித்து தினசரிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக பலர் வீடுகளிலே இவ்வாறு செய்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் சிரமமே இல்லை ஏன் எனில் பலரும் அவர்கள் வாகனத்தினை அவர்களே பழுதுப்பார்க்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள்,நம்ம ஊரில் தான் கார் டயர் மாட்டக்கூட மெக்கானிக் தேடுவோம்.

----------
பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,விக்கி, இணைய தளங்கள், நன்றி!


*****

Friday, December 16, 2011

விவசாயி படும் பாடு!-1


      விவசாயி படும் பாடு!-1








உழுதவன் கணக்குப்பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்ற சொலவடை வால்மார்ட், யூக வணிகம் , அந்நிய முதலீடுகள் என்ற சொற்பதங்களை எல்லாம் நாம் கேள்விப்படும் காலத்திற்கு முன்னர் இருந்தே தமிழ்நாட்டில் நிலவி வருவது.

எனவே இக்காலத்தில் விவசாயம் எந்த அளவு லாபகரமானது , அதை தொடர்ந்த்து விவசாயிகள் செய்ய ஏதுவாக இருக்கிறதா என இப்பதிவில் பார்க்கலாம்.

தற்சமயம் நாங்கள் விவசாயம் செய்வதில்லை என்பதால் தமிழ் நாட்டில் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும், என்ன வருமானம் கிடைக்கும் என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

கோவை வேளாண் பல்கலைகழக தளத்தில் கீழ்கண்ட விவரங்கள் கிடைத்தது. அத்தளத்தில் உள்ள தகவல்கள் எந்தக்காலத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.நடைமுறையில் இதே அளவு செலவு செய்து விவசாயம் செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!



COST OF CULTIVATION (ACRE) in Rs.

 Land Preparation ->1500 ரூ

Seeds & sowing  ->  2000 ரூ


Manures & Manuring ->2500 ரூ

Weeding after cultivation & Irrigation ->1620 ரூ

Plant protection -> 803 ரூ

Harvest and other Expenses (Rs.) -> 2300 ரூ

                                          ______________
       செலவு=                         Total 10723

வருமானம்:

Yield (Kg)  -> 2100

 Gross Income (Rs.):  ->15123-10723=4400 ரூ.


Net income (Rs.) : ->    4400


சுட்டி:

கோவை வேளாண்ப்பல்கலை

கோவை வேளாண்ப்பல்கலைக்கழக தகவல்கள்ப்படியே விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கிடைக்கும் நிகர லாபம் என்பது ரூபாய் 4,400 மட்டுமே என்பதைப்பார்க்கவும்.

 கால அளவின் படி நெல் வகைகள்:

#குறுகிய காலப்பயிர்: 110-125 நாட்கள்

#இடைக்காலம் முதல் நீண்டக்காலப்பயிர்: 120-170 நாட்கள்.

#நீண்டக்காலப்பயிர் : 170 நாட்கள்.

ஒரு குறுகிய கால நெல் சாகுபடி என்பது சுமார் 115- 125 நாட்கள் கொண்டது. அதாவது சுமார் நான்கு மாதங்கள் என வைத்துக்கொள்ளலாம்.

நான்கு மாதங்களுக்கு கிடைக்கும் நிகர வருவாய் சுமார் 4,400 ரூபாய் மட்டுமே வருகிறது, ஒரு சிறு விவசாயிக்குடும்பத்தில் தாய்,தந்தை,மகன்,மகள் என நான்கு நபர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் நான்குப்பேரும் அந்த ஒரு ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள், அதன் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள்.

அப்படியானால் ஒருவருக்கு என்ன வருமானம் கிடைக்கும் =4,400/4= 1100 ரூபாய்.

இந்த 1100 என்பதும் ஒரு மாத வருமானம் அல்ல ஒருவருக்கு நான்கு மாத உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதி!

அப்படி எனில் ஒருவருக்கு ஒரு மாதத்தில் என்ன வருமானம் கிடைக்கும்,

1100/4= 275 ரூபாய் மட்டுமே!

ஒரு தனி நபர் மாதம் 275 ரூ வருமானத்தில் என்ன வாழ்க்கை வாழ முடியும் இந்தியாவில்?

இது ஏதோ நானே கணக்கிட்டு மிகைப்படுத்தி சொல்லவில்லை, கோவை வேளாண்ப்பல்கலையில் காஸ்ட் ஆப் கல்டிவேஷன் என பட்டியல் இட்டு வைத்திருப்பதன் அடிப்படையில் சொல்கிறேன்.சந்தேகம் இருப்பவர்கள் அச்சுட்டியில்ப்போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் உண்மையில் விவசாயிக்கு மாதம் அந்த 275 ரூபாய் கூட கிடைப்பதில்லை, வரவை விட செலவு அதிகம் ,என ஒரு ஆய்வு சொல்கிறது. ஒவ்வொரு போகத்திலும் சுமார் இரண்டாயிரம் நட்டம் அடைகிறானாம்.


மாநில வாரியா நெல் சாகுபடியில் ஏற்படும் நட்டம்:






சுட்டி:



நெல்சாகுபடிவருவாய்

  
அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது விவசாய செலவினை ஈடுகட்டுவதாக இல்லன என்பதை தெளிவாக காட்டியுள்ளார்கள்.இந்த சுட்டியில் போய்ப்பார்த்தால் நிகர நட்டம் வருவதாகவே சொல்லி இருக்கிறார்கள்.அதில் உள்ள அட்டவணையையும் பார்க்கவும்.

திடீர் வெள்ளம், மழை இல்லா வறட்சி, பூச்சி தாக்குதல், குறைவான விளைச்சல் என இதில் ஏகப்பட்ட சோதனைகள் வேறு. அதை எல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே அந்த குறைந்த தொகையான 275 ரூபாயை ஒரு விவசாயிக்கண்ணால் பார்க்க முடியும் நம் நாட்டில்!

ஒரு மனிதன் 3 வேளையும் பசியாற நாளுக்கு 32 ரூபாய் போதும் என சொன்ன திட்டக்கமிஷன் அறிக்கையை விட இத்தொகை மிக குறைவு.

பலருக்கும் நன்றாகவே தெரியும் 32 ரூபாய் வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியாது என, அதனால் திட்டக்கமிஷனின் அறிக்கையை பலரும் கிண்டல் செய்தோம், ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு விவசாயிக்கு மாதம் 275 ரூபாய் தான் வருமானம் வருகிறது.

திட்டக்கமிஷன் பரிந்த்துரைப்படி ஒருவருக்கு மாத வருமானம் = 32 ரூX30 =960 rs  வரவேண்டும்.

ஆனால் அந்த தொகையை விட பல மடங்கு குறைவானதாக இருக்கே.

இப்படி எல்லாம் இருந்தும் விவசாயி எப்படி ஜீவித்திருக்கிறான், அவன் வயலில் வேலை செய்த நாட்களைப்போக பிற நாட்களில் கூலி வேலைக்கு போயே வாழ்கிறான்.மேலும் நமக்கெல்லாம் நயமான பொன்னியை விளைவித்துக்கொடுத்துவிட்டு புழுத்துப்போன அரசின் இலவச அரிசியே அவன்  பசியைப்போக்குகிறது.

இத்தனை சோதனைகளுக்கும் நடுவிலும் விவசாயத்தை விடாமல் யாருக்காக அவன் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறான்?


எல்லாம் நமக்காக தானே! உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடம்,
2010 ஆம் ஆண்டில் 132 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.நமக்கு தேவை 128 மி.மெ.டன் தான். அதாவது விவசாயி எத்தனை கட்டம் வந்தாலும் அதை விட மனம் இல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் இருப்பதாலேயே   நமக்கு தேவைக்கு உணவு உற்பத்தி ஆகிறது. இது எத்தனைக்காலம் தொடரும்.

இப்பொழுதே கிராமப்புரத்தில் வறுமை, வேலை வாய்ப்பின்மையால் பலரும் நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் அங்கே விவசாய வேலை ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு.






ஆட்கள் தட்டுப்பாடால் நடவு முதல் , அறுவடைவரை எந்திரம் ஆகி விட்டது.

கட்டுமானத்தொழிலுக்கு வேலைக்கு போனால் குறைந்த பட்சம் 200 ரூ ஆனால் விவசாய வேலைக்கு அதிக பட்சமே 150 ரூ தான்! சம்பளம் அப்போ ஆட்கள் எங்கே வேலைக்கு போவார்கள்.


எவன் எப்படி போனா என்ன , எனக்கு வெளிநாட்டுக்காரன் நல்லா  சம்பளம் தறான் , வாங்கி தின்ன பொருட்கள் இருக்குனு இருக்கவங்க எல்லாம் , விவசாயம்னா என்னனு எனக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லைனு இருக்காங்க, ஒரு காலம் வரும் விவசாயம் செய்ய ஆளே இருக்காது, விளை நிலங்கள் எல்லாம் தரிசாக விடப்படும்,உணவுப்பொருட்கள் எல்லாம் பணக்காரர்களுக்கே ஆடம்பரம் ஆகும், அப்போ 120 கோடி மக்களுக்கும் எங்கே உணவுக்கு கை ஏந்துவார்கள்!


இந்தியாவில படிச்சுட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவாங்களாம், அவன் கிட்டே வேலைக்கு சேர்வாங்களாம், இந்தியாவிலவும் அவன் கம்பெனி வச்சா வேலைக்கு போவாங்க,ஆனா  அவன் கடை வச்சா விவசாயம் அழியும் சொல்வாங்க.

எனவே வெளிநாட்டில /இந்தியாவில் மென்பொருளில் போய் வேலை செய்து தனது  குடும்பத்தை மட்டும் வளமாக்குபவர்கள் சற்றே ஒதுங்கி இரும் பிள்ளாய்!

ஆனால் ஆதி காலம் தொட்டே விவசாயிக்கு ஒரு ரூபாய் கூட லாபம் வராம செய்தவங்க வெளிநாட்டுக்காரங்களா?  இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா அந்நிய மூல தன எதிர்ப்பை சொல்லுங்க மக்களே!




சிறு நகரங்களை சுற்றியுள்ள இடங்களோ வீட்டு மனைகளாக மாறி வருவதால் விளைநில பரப்பு சுருங்கி வருகிறது.

மேலும் அதிக பணம் வைத்திருப்பவர்கள் எதிர்கால முதலீடாக நிலங்களை வாங்கிப்போட்டு விவசாயம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். இந்த வேலையை பெரும்பாலும் செய்வது அயல்நாடு வாழ் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நில மூலதனம் செய்யவில்லை.

ஏன் எனில் சமிபத்தில் சென்னை நகரில் தான் வீடு வாங்க முடியவில்லை கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என புறநகர்ப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கலாம் என விசாரித்தேன் எல்லாம் 50-70 லட்சம் சொல்கிறார்கள் 1000-1200 சதுர அடி அடுக்ககத்தை.ஒரு கோடிக்கு கூட மகிந்திரா சிட்டியில் வைத்திருக்கிறார்கள். அருண் எக்செல்லோவில் 70 லட்சம்என பீதிக்கிளப்புகிறார்கள்.

ஏன் இப்படி புறநகரிலேயே இந்த விலை எனக்கேட்டதுக்கு கிரவுண்ட் விலையே ஏறிப்போச்சு, எல்லாம் எதிர்காலத்திற்காக சும்மா வாங்கிப்போட்டு இடத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கு மாடியில்  எல்லாம் மென்பொருள், அயல்நாடு வாழ் இந்தியர்கள் தான் முன்பதிவு செய்திருக்கிறார்கள் என குண்டைப்போட்டார் விற்பனை மேலாளர்.

நிலத்தின் மீது மதிப்பு ஏறுது ஆனால் அதில் விளையும் விளைச்சல் மீது எதுவும் ஏறவில்லை! இவங்க எல்லாம் வருங்காலத்தில என்ன விலைக்கு விற்றாலும் சாப்பிடுவாங்களோ?

இப்படி பல வகையிலும் விவசாயத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் விவசாயிகள் எப்படி தொடர்ந்து விவசாயத்தில் இருப்பார்கள்.

மூலப்பொருட்கள் ஆன உரம், பூச்சி மருந்து, விதை நெல் , மின்சாரம் , டீசல் ,மேலும் விவசாய தொழிலாளர் சம்பளம் என அனைத்தும் வேகமாக விலை ஏறி வருகிறது ஆனால் அதே வேகத்தில் அவன் விளைச்சளுக்கு ஆன விலை ஏறுவதில்லை.

இடைத்தரகர்களும், கமிஷன் மண்டிக்காரர்களும் அரசு என்ன குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கிறதோ அதன் மீது ஒரு 10 ரூபாய் குவிண்டாலுக்கு வைப்பார்கள்.

சமயத்தில் அரசின் தமிழ்நாடு வாணிபக்கழகம் போதுமான நெல்லை கொள்முதல் செய்யவில்லை, அல்லது அப்பருவத்திற்கான கொள்முதலை நிறுத்தி விட்டால் , தரகர்கள், கமிஷண் மண்டிக்காரர்கள் வைப்பதே விலை.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை:


4. Accordingly, the Government hereby permit the Tamil Nadu Civil
Supplies Corporation to procure paddy under the Decentralized Procurement
System, during the Khariff Marketing Season 2011-2012, i.e. from 01.10.2011 to
30.9.2012, at the price of Rs.1180/- per quintal for Grade ‘A’ paddy and Rs.1130/-

for Common variety of paddy by opening adequate number of procurement
centers in the Cauvery delta region and other paddy growing areas in the State, in
consultation with the District Collectors on need basis.


சுட்டி:

tngov.msp for paddy

எம்.எஸ் சுவாமிநாதன் பரிந்துரை என்னவெனில் குறைந்த பட்ச ஆதரவு விலை என்னவோ அதனுடன் 50% விலை அதிகம் வைத்து நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே விவசாயிக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என உள்ளது.

தமிழ்நாட்டில் இடுப்பொருட்களின் விலை விவரம்:

யூரியா ஒரு மூட்டை= 310 ரூ

டிஏபி ஒரு மூ= 900 ரூ

பொட்டாஷ் ஒரு மூ =620

சூப்பர் காம்ப்ளக்ஸ் ஒரு மூ= 870 ரூ.

மேற்சொன்ன விலை ஒரு விவசாய இடுப்பொருட்கள் கடையில் நேரடியாக விசாரித்துபோட்டுள்ளேன்.

#அரசு நிர்ணயம் செய்துள்ள உரங்களின் விலை, இந்து செய்தித்தாளில் இருந்து,

//The government has fixed Rs. 278.88 as the price per 50 kg bag of urea, Rs. 312 for IPL Potash, Rs. 315 Zuari potash, Rs. 624 for Iffco DAP, Rs. 630 for Zuari DAP, Rs. 656 for Spic DAP, Rs. 488.50 for Factamfos 20:20:20:0, Rs. 520 for Iffco 20:20:20:13 and Rs. 567.60 for Zuari 10:26:26, a press release says.//


சுட்டி:

the hindu


நடைமுறை விலை மற்றும் அரசு நிர்ணயத்திற்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.

விவசாய வேலையாட்களின் சம்பள நிலவரம்:

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை நிர்ணயத்தின் படி ,
ஆண்= 100ரூ (6 மணி நேரம் வேலை) ஆனால் நடைமுறையில் ஆணுக்கு 150 ரூ

பெண்=80(5 மணிநேர வேலை, 100 ரூ)

விவசாயம் முதல் பல்வேறு வேலைக்களுக்கான சம்பளத்தினை இங்கு காணலாம்,

சுட்டி:

அரசு சம்பளநிர்ணயம்


பின்னர் பூச்சி மருந்து தேவைக்கு ஏற்ப எப்படியும் ஒரு ஏக்கருக்கு 1000 ரூ, விதை நெல் ஒரு 1000 ரூபாய் வரும்.

இப்படி அனைத்து இடுப்பொருட்களின் விலையும் வருடா வருடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏறி வருகிறது ஆனால் ,விளைச்சலுக்கான விலை மட்டும் மெதுவாக நகர்கிறது.

இப்படி ஒரு குவிண்டால் நெல் 1130-1180 விலைக்கு விற்பனையாகும் நெல் நம்மிடம் அரிசியாக வரும் போது மட்டும் அதிக விலைக்கு வருவதேன் இடையில் லாபம் அடைவது யார் என்பதை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

தொடரும்...


.
50-70