Thursday, May 11, 2006

சோனியா இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி

சோனியா ரேபரேய்லி(உ.பி) தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி(உறுதி செய்ய பட்ட ஒன்று)

தேர்தல் வெற்றி

தேர்தல்2006 வெற்றி -மு.கருணநிதி(சேப்பாக்கம்),
நாகநாதன்(திருவல்லிகேணி),
கு.பிச்சாண்டி(திருவண்ணாமலை)

என் கனவும் நீயடி!



உன் நினைவு என்னுள் ஊர்கையில்

தேகம் எங்கும் தீயின் தீண்டல்கள்

தொலைந்து போன எனது நினைவுகளை

தேடிப் பார்த்து களைக்கிறேன்

தொலைவில் செல்லும் உனது நிழலை

தொடர்கிறேன் தொடாமலே!

இருளில் ஒளியை தேடினேன்

ஒளியில் இருளை காண்கிறேன் !

காலம் கடந்து நிற்கிறேன்

கரையில் அலையாய் அடிக்கிறேன்!

கடந்து விடவே துடிக்கிறேன் !

கடக்க மறந்து தவிக்கிறேன்!

கானல் நீரை குடிக்கிறேன்!

கண்கள் திறந்தே காண்கிறேன் கனவு

கலைந்த பின்னும் தொடருமென் கனவு!

என் கனவு என்ன தேடினேன்

என் கனவும் நீயென கண்டு கொண்டேனடி!

Wednesday, May 10, 2006

அந்தி மழை!



கோடை மழை அந்தியில் பொழிகிறது

வரண்ட நிலத்தில் நீர்த் தாரைகள்

ஓடி மறைகிறது புழுதி வாசனையை கிளப்பி!

வெளிறிய வானவில்லில் மிச்சமிருக்கும் வர்ணத்தை போல

என்னுள் ஒட்டிகிடக்கும் உன்னுடைய நினைவுகள்

முளை விடும் விதை என முகிழ்த்து

விருட்சம் என வளர்ந்து விட்டது

வானவில் மறையும் முன்னே!

விலகி சென்ற பிறகும் விலக மறுக்கும் நினைவுகள்

துடுப்பற்ற படகைப் போல

நீரோட்டத்தின் திசையில் செல்கிறது நதியில்!

நாணல்கள் மட்டும் கரையோரம்!

மீட்சி!


கனவு வெள்ளத்தில் மூழ்கி

ஸ்வாசம் இழந்தேன்!

உன் நினைவு துளிகளே

மீட்டெடுத்தது என் மூச்சை!

Friday, May 05, 2006

நீங்காத நினைவுகள்!

அன்பர்களே கவிதைக்கு பொய் அழகு இதை நான் கவிதை என்று சொல்வது உ(எ)னக்கு அழகானு கேட்காம ..திரைப்படம் பார்க்கும் போது வரும் பாடல் காட்சிகளுக்கு எல்லாம் கதாநாயகியின் நாபிகமல தரிசனத்தை தியாகம் செய்து புகை பிடிக்க போவது போல் போகாமல் தம் கட்டி படிக்கவும் இந்தக் கவிதையை!

நீங்காத நினைவுகள்!


சிலந்தி பின்னும் வலையென

என் மனகுகையெங்கும் நினைவு வலைகள்

முடிவற்று படர்கின்றது

முன்னிரவில் தேய்பிறை நிலவொளியில்

தேங்கிய மழை நீரில்

நான் கண்ட உன் பிம்பம்

நாள் தோறும் வளர் பிறையென வளர்கிறது

நினைவு அடுக்குகளில் நீக்கமற நிறைந்துவிட்ட

நீங்காத நினைவுகள் முடிவற்று நீள்கிறது

தூக்கமற்ற இரவுகளின் நினைவோடை கனவுகளில்!

Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?

Wednesday, May 03, 2006

மழை மேகம்!


காரம் சாரமாக எழுத "மேட்டர்" ஒன்னும் சிக்க வில்லை(அரசியல் மட்டும் தான் சூடா இருக்கு அத தான் ஆள் ஆளுக்கு ஏற்கனவே கொத்து பரோட்டா போடுராங்களே அப்புறம் இந்த வவ்வால் எதுக்குன்றேன்!) அது வரைக்கும் சும்மா நேரம் போக மீண்டும் ஒரு கவித !

மழை மேகம்!

வானம் எங்கும் வெண்மேகங்கள்

என் தலைக்கு மேலே கடந்து செல்கின்றன

தினம் தோறும் மழை வருவதில்லை

வீதி எங்கும் பல வண்ண உடைகளில்

பெண்கள் மறைகிறார்கள்

என் பார்வையை விட்டு

மனதில் பதியவில்லை எவர் முகமும்!

மழைமேகம் வர கூடும்

மனதில் பதிந்த முகம் வருமா?

கோடை வெயிலில் ஆவியாகிவிட்டது என் வினா!

தீவிரமாக எழுதி மண்டை தீய வைப்பதில் உடன்பாடு இல்லை



ரொம்ப லைட் ஆக எதாவது எழுதனும்னு ஆசை பட்டேன் ஆனால் கடந்த முறை கொஞ்சம் தீவிரமா போய்டுச்சுங்கண்ணா........அத சரி கட்ட இந்த தடவை ஒரு கவிதை எழுதிடலாம்...னு பார்க்கிரேன்(இது அத விட "தீ"விரம்னு சொல்றிங்களாண்ணா)

நீங்க வேணாம்னு சொன்னாலும் .... விடுவதாக நான் இல்லை ...அப்ரம் எப்போதான் நானும் "கவி பேரரசு "ஆவுரதுங்கண்ணா (தோடா ...பிலாக் போடுரவன் எல்லாம் இப்படியே கிளம்புராங்கப்பா....சாமி இத்தோட 1118 ஆவது ஆளு இவனு சொல்ரது கேட்குதுங்கண்ணா)........

படிச்சு பாருங்கண்ணா... நல்லா இருந்தா வெளில நாலு பேருக்கு சொல்லுங்க நல்லா இல்லனாலும் நல்லா இருக்குனே சொல்லுங்கண்ணா பொய்மையும் வாய்மை இடத்துனு சொல்லுவாங்கண்ணா!........சரி இதோ கவித...... புடிங்க படிங்க ......இது 100 சதவிகிதம் எனது சொந்த படைப்பே...யாரையும் தழுவி எழுதியதல்ல (பெண் கவிதாயினிகள் நன்றாக எழுதும் பட்சத்தில் தழுவும் உத்தேசம் உண்டு கவித எழுத தான் சொன்னென் வேர எதுக்கும் இல்லங்கண்ணா)


பிரிவும்...சந்திப்பும்

அவர் அவர் உணர்வுகள் அவர் அவர் இதயத்தில்


அவர் அவர் பயணம் ஆளுக்கொரு திசையில்

ஏதோ ஒரு புள்ளில் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனம் காண கூடுமோ

அல்லது நீ யாரோ நான் யாரோ என்று

வேறு திசை நோக்கி பயணிப்போமா?

பிரிவது தெரிந்தே பிரிந்தோமா...

மீண்டும் சந்திக்க நேராமல் கூட போகலாம்..

காற்றில் அலைந்தாடும் பட்டம் வெகு தொலைவு பறப்பதில்லை

கையில் நூல் உள்ள வரை கட்டுண்டே பறக்கிறது காற்றில்

உணர்வுகள் தொடரும் வரை விலகி சென்றாலும்

பின் தொடர்ந்தே செல்கிறது மனம்!

ஆப்கான் படு கொலை- சொல்பேச்சு கேளாமையின் விளைவே





ஆப்கானில், ஆந்திராவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பொறியாளர் ஒருவரை தலிபான் தீவட்டிகள் தலை துண்டித்து கொன்று தஙகள் ரத்த வேட்கையை தீர்த்து கொண்டுள்ளார்கள்.இது ஒரு சோகம் என்றால் அந்த மாண்டு போன பொறியாளர் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் விசாக பட்டினதில் வளைத்து போட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்.அந்த பெண்ணை மணந்ததற்கு ஏதும் ஆதாரம் இல்லை ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே சாட்சியாக உள்ளது.தினத்தந்தி பாஷையில் சொல்வதானால் கள்ளக் காதலி ஆகிவிடுவார் அப்பெண்.

சட்ட ரீதியான மனைவிக்கு தான் அனைத்து பொருளாதார உதவிகளும் போய் சேரும்...இப்பெண்ணின் கதி என்ன (எந்த வெள்ளி திரையிலும் காண முடியாது இதன் கிளைமாக்சை)

என் மனதில் சில கேள்விகள் சுட்டெரிக்கின்றன........

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவை சேர்ந்த லாரி ஒட்டுனர்கள் இது போன்று கடத்த பட்டனர் அப்போதே ஆப்கான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை செய்ய போக வேண்டாம் என அரசால் அறிவுறுத்த பட்டது ...அதை எல்லாம் காதில் வாங்காமல் செல்லும் இவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது ..கூடுதல் பணம் கிடைக்கும் எனில் நரகலையும் தின்ன போவார்களா...இவர்களுக்காக பரிதாப படுவதே கேலி கூத்தாகிறது.அறிவுரைகளை மதியாமல் செல்லும் இவர்களை என்னவென்பது?

ஒரு மனைவி இருக்க இன்னொரு பெண்ணையும் மணந்து ஏமாற்றி இருக்கிறார் இதனால் முதல் மனைவி தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்
இப்படி பட்ட பணத்தாசை மிக்க ,வாழ்வியல் தர்மதிற்கு புறம்பான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க கூட மனம் விரும்ப மறுக்கின்றது.இதுபோன்ற படித்த முட்டாள்களை என்ன செய்வது ? இவர்களை நினைத்து இரக்க படுவதா எரிச்சல் படுவதா?(இதை படித்து என் மீது எரிச்சல் பட வேண்டாம் வெயில் காலம் பாருஙக! கொஞ்சம் கூலா இருங்க)

Tuesday, May 02, 2006

நானும் வந்துவிட்டேன்!

எல்லாம் பிலாக்...பிலாக்னு பினாத்துராங்களே அப்படி என்ன தான் இருக்குனு எட்டி பார்க்க வந்தேன் .தமிழ் வலை பதிவுகளை படித்த வரையில் எனக்கு தோன்றிய நிதர்சனம் என்னவென்றால் பெரும்பாலும் குழு மன பாண்மையோடு தான் அனேக வலை பதிவாளர்கள் செயல் படுவதாக எனது சிற்றறிவுக்கு எட்டியது ... சரி விடுரா விடுரா உனக்கும் ஒரு குழுவ செட் பண்ணிட்டா இந்த ஏக்கம் எல்லாம் போய்டும்னு தோனுது ... சீக்கிரமே நானும் ஒரு குழுவ எனக்குனு சேர்த்து கிட்டு மனம் வீசும் வலைப் பூக்களை என் பங்க்கு கொஞ்சம் நாறவைப்போம்னு ஒரு விபரீத ஆசை வந்து போச்சு (யாரோ வினாச காலெ விபரித புத்தினு சொல்ராங்க !) சரி வெகு விரைவில் கொஞ்சம் சரக்கு தேத்தி கிட்டு முடுக்கா வரேன் மக்களே! அது வரைக்கும் ஆசுவாச படுதிக்கோங்க என்னடா பிளாக்கு வந்த சோதனைனு.......... வருகிரேன் விரைவில்......