Showing posts with label கொடுமை.. Show all posts
Showing posts with label கொடுமை.. Show all posts

Sunday, April 21, 2013

என்ன கொடுமை சார் இது-13

(ஹி...ஹி முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்)


காகதாளிய நியாயம்!

கூகிள்காரன் ஓசியில பிலாக்னு ஒன்னு கொடுத்தாலும் கொடுத்தான் ஆள் ஆளுக்கு ஒரு பிலாக் ஆரம்பிச்சுட்டு, எதையாவது கிறுக்கி தள்ள ஆரம்பிச்சுட்டாங்க, சில சமயம் நல்லாவும் எழுதி தொலைச்சுடுறாங்க, ஆனால் சிலர் பண்ணுற அலப்பரை இருக்கே அது ஒரு தனிரக பயங்கரமா இருக்கும், தான் ஒரு  திரைவிமர்சனம் எழுதினா மணிரத்னம்,ஷங்கர் வரைக்கும் படிக்குறாங்கல ஆரம்பிச்சு அமெரிக்க சனாதிபதி ஓபாமாவே என் வாசகர்,எனக்கு மெயில் அனுப்பினார் என்பதாக பெரும்பீத்து பீத்துறாங்கய்யா :-))

சரி அதுவாது போகட்டும்னு விடலாம், நேத்து மழை பெஞ்சா கூடா நான் முத்தாநேத்தே மழை வராப்போல இருக்குனு துவித்தர்ல சொன்னேன், பிளஸ்ல சொன்னேன் ,பிலாக்கர்ல சொன்னேன்னு சொல்லிக்கிறாங்க, இதமாரி தான் ஒருப்பதிவர் இருக்கார், அவர் எழுதுறத அவர தவிர நாலுப்பேர் படிச்சாலே அதிசயம், பிரபல திரட்டிகள் கூடக்கண்டுக்காத ஒரு டொக்குப்பதிவு வச்சுக்கிட்டு, எதையாவது எழுதிட்டு ,கொஞ்ச நாள் கழிச்சு நான் சொன்னா மாதிரியே நடந்துப்போச்சுனு ஓவரா பில்டப்பு கொடுக்கிறார்,

கொஞ்ச நாள் முன்ன லோகநாயகர் டிடிஎச் இல் படம் வெளியாகும் முன் வெளியிடுவேன்னு சொன்னதும், அதெல்லாம் சாத்தியமில்லைனு முழ நீளத்துக்கு ஒரு பதிவு போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கினார், என்ன எழவு மாயமோ தெரியலை அதே போல டிடிஎச் இல் படம் வெளியாகவில்லை, அப்புறம் படம் வந்து ஒரு வாரத்தில் டிடிஎச் என லோகம் சொன்னார் ,ஆனால் இன்னிவரைக்கும் டிடிஎச் இல் படமே வரலை, உடனே அந்த வெளங்காவெட்டிப்பதிவர் பார்த்தீரா ...நான் அப்பவே சொன்னேன்ல என ஒரு அலப்பரைய கொடுத்தார் :-))

கெரகம் ஏதோ நல்ல நேரம் குத்து மதிப்பா சொன்னது போல நடந்துப்போச்சுனு மக்கள் பொறுத்துக்கொண்டார்கள், பின்னர் உரமானியத்தில் ஊழல் நடக்குதுனு ஒரு பதிவுப்போட்டார், ஒரு மாசம் கழிச்சு, உரமானிய ஊழல் பற்றி அம்மையார் ஒரு அறிக்கை விட்டாங்க, இதுல இன்னொரு கொடுமை என்னனா, அலப்பரைப்பதிவர் சொன்ன மாதிரியே கணக்கும் சொல்லி இருக்கவும், ஆசாமிக்கு உச்சந்தலையில கிர்ருனு ஏறிடுச்சு, நான் அப்பவே சொன்னேன்ல என அதை எடுத்து போட்டு ஒரு பதிவு போட்டு , காலரை தூக்கிவிட்டுக்கிறார்,எல்லாம் நேரம்யானு அப்பாவி பொதுமக்களும் ஏதோ போனாப்போவுதுனு அவர் பதிவை படிச்சு தொலைக்கிறாங்க என்பதை புரிந்துக்கொள்ளாமல் அடுத்த அலப்பரைக்கு அடிப்போட ஆரம்பிச்சுட்டார்.

சுட்டி:

உரமானிய ஊழல்.


அந்த அலப்பரைப்பதிவர் நவக்கிரகங்களுக்கும் நண்பனாகிட்டார் போல எந்த பதிவு போட்டாலும் அதுக்கு பின்விளைவாக இப்போலாம் ஒரு செய்தி மாட்டிக்குது,கச்சத்தீவு பற்றி ஒரு பதிவு போட்டு , கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது, அக்காலத்தில் திமுக பக்கோடா சாப்பிட்டுக்கிட்டு வேடிக்கை பார்த்தது ஏன் ? அப்படினு வில்லங்கமா ஒரு பதிவைப்போட்டார், ஆனாப்பாருங்க பதிவு வந்த சில நாட்களில் டெஷோ கூட்டமைப்பு சார்பாக ,கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போடப்படும்னு அறிவிப்பு வருது.

நீங்களே அந்த செய்தியப்பாருங்க,

//* கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும், வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 368வது பிரிவின்படி, பார்லிமென்டின் பரிசீலனைக்கு வைத்து, சட்டம் இயற்ற வேண்டும். கச்சத்தீவைப் பொறுத்தவரை, அப்படி எந்தவொரு சட்டமும், இதுவரை நிறைவேற்றபடாததால், கச்சத்தீவை இலங்கைக்கு, ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது, அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது.
* எனவே, 1974ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு, இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், உச்சநீதி மன்றத்தை டெசோ அமைப்பு அணுகும்//

செய்தி மூலம்:
http://tamil.oneindia.in/news/2013/04/16/tamilnadu-teso-decides-approach-sc-cancel-kac-173503.html

ஹி..ஹி இதான் அந்த அலப்பரையின் தீர்க்க தரிசனப்பதிவு,
கட்சத்தீவு

அடப்பாவிகளா, 1974 இல் விட்டுக்கொடுத்துட்டு 2013 வரைக்கும் சும்மா குந்தியிருந்துட்டு , இப்போ வழக்குப்போடுவோம்னு அறிக்கை வெளியிட்டா, பொங்கலுக்கே பட்டாசு வெடிக்கிறவன், தீபாவளிக்கு சும்மா இருப்பானா அதுக்கு ஏற்றார்ப்போல  லட்டுப்போல செய்தி வந்து மாட்டிக்கிட்டதும், எல்லாம் என்னால தான், எம்பதிவை படிச்சப்பொறவு தான் "டேஷோ"தலிவருக்கு ஞானம் வந்து வழக்கு போட்டிருக்கார்னு டமாரம் அடிச்சுட்டு கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்!

ரொம்ப தாமதம் என்றாலும் 2008 இல் அம்மையார் வழக்கு போட்டாச்சு, அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ வழக்கு போட்டால் ,ஜட்ஜே கேட்பார் "ஏன் மிஸ்டர் 1974 இலே உங்க கட்சி தானே மாநில ஆட்சியில் இருந்துச்சு ,அப்போலாம் ஏன் வழக்குப்போடலைனு :-))

ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இப்படி எதாவது நடந்து தொலைக்குது  அதுக்கெல்லாம் வெட்டிப்பந்தா விடப்படாதுனு சொல்லலாம்னு நானும் பார்க்கிறேன் ,ஆசாமி கண்ணுலவே சிக்க மாட்டேங்கிறப்படி, நீங்களாச்சும் எங்காவது பார்த்தா சொல்லி வையுங்க, அப்பவாவது நல்லப்புத்தி வருதா பார்ப்போம்.

(நீ கலக்கு மாமு ...ALL THE BEST!!!!)

என்ன கொடுமை சார் இது!
--------------------

எல்லாமே அரசியல்-2


(ஓடாது தெரிஞ்ச பின் உஷாரா ஏறி போராட்டம்)

#ஈழப்பிரச்சினைக்காக முதலில் லயோல கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் துவக்கினார்கள், பின்னர் பலக்கல்லூரி மாணவர்களும் துவக்கினார்கள்,இதையெல்லாம் பார்த்த சில வெள்ளந்தியான பதிவர்கள் ,அடடே என்னா ஒரு தமிழுணர்வு ,இது போல யாருக்கும் வருமானு சிலிர்த்துக்கொண்டு பதிவெல்லாம் போட்டார்கள்,ஆனால் அப்பொழுதும் மாற்றுப்பார்வைக்கு பெயர் போன அலப்பரை பதிவர் ,இப்போராட்டங்களின் பின்னால் இருக்கும் அரசியலை புட்டு புட்டு வைத்தார், ஆனால் சில நாட்களுக்கு பின்னர் போராட்டம் நீர்த்துப்போக ஆரம்பித்ததும் சிலிர்த்துக்கொண்டவர்கள் எல்லாம் மனசுக்குள் சலித்துக்கொண்டு , ஐபிஎல் பார்க்க போயிட்டார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் திடீர் திருப்பமாக , அதே லயோலா கல்லூரியில் இருந்து ஒரு பிரிவு மாணவர்கள் குழுவாக போய் 61 வயது ஆகியும் நரைகூடி கிழப்பருவம் அடையாத நித்திய இளைஞரான ,இளைஞரணி தலைவர் மு.க.இசுடாலினை(தமிழ்..தமிழ்) சந்தித்து இளைஞர் அணியில் ஐக்கியமாகி ,டெஷொவுக்கு ஆதரவாக போராடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள இராச தந்திரம் என்னவெனில் , முதலில் ஈழப்பிரச்சினைக்காக போராடுவதாக சொல்லிக்கொள்ளும் மாணவர்கள் சைக்கிள் கேப்பில் டெஷோவை எதிர்க்கிறோம் எனவும் பதாகை பிடித்திருந்தார்கள், மேலும் தொடர்ந்து திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை வைத்தார்கள்,ஆனால் மறந்தும் ஆளுங்கட்சியை விமர்சிக்கவேயில்லை,இது மக்களிடயே கழகத்தின் இமேஜை டேமேஜ் செய்து வந்தது. இதனை கட்சி ரீதியாக எதிர்க்கொண்டால் எடுபடாது என புரிந்து கொண்டு ,இன்னொரு மாணவர் குழுவை வளைத்துவிட்டார்கள், இனி அவர்கள் மூலம் ஈழப்பிரச்சினைக்கான போராட்டம் ,அதே நேரம் டெஷோவையும் விளம்பரப்படுத்துவார்கள், வழக்கமாக எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை எளிதில் அனுமதி கொடுக்காது,அதுவும் ஆளுங்கட்சிக்கு விருப்பமில்லாத போராட்டம் எனில் அனுமதிக்கிடைப்பது குதிரைக்கொம்பு,

இப்பொழுது கழகத்தின் ஆதரவு மாணவரணிக்கு அனுமதி மறுத்தால், முன்னர் போராடிய மாணவர்களுக்கும் அனுமதி கொடுக்க இயலாது, அனுமதி கொடுத்தால் இரு தரப்புக்கும் கொடுக்க வேண்டும், அப்படிக்கொடுத்தால் கழகத்தின் டெஷோவிற்கு விளம்பரம் கிடைத்துவிடும்,எனவே அனுமதிக்க முடியாது ,அதே போல இனி முதலில் போராடிய மாணவர்கள் குழுவிற்கும் அனுமதி கிடைப்பது கடினம், மாணவர்களும் தடையை மீறி எல்லாம் போராட மாட்டார்கள்,எனவே இப்பொழுது தானாகவே மாணவர்கள் எழுச்சி அடங்கிவிடும், அல்லது இரு தரப்புக்கும் அனுமதிக்கொடுக்கப்படும் இதனால் கழகத்தின் இமேஜ் டேமேஜ் ஆகாமல் காக்கப்பட்டு விடும், இதுவே மஞ்சத்துண்டின் ராசதந்திரம்.

இச்சம்பவங்களே எந்த அளவுக்கு மாணவர்கள் போராட்டத்தின் பின்னால் அரசியல் இருந்து இயக்கியது என்பதனை விளக்கப்போதுமானது.

எல்லாமே அரசியல் தான்!

என்ன கொடுமை சார் இது!
-------------------------------

தனி ஆவர்த்தனம்!

ஆரம்பத்தில் பெரியாரின் திராவிடர் கழகம் திராவிட நாடு என தனி நாடு வேண்டும் என கோஷம் போட்டு வந்தது, பின்னர் தி.கவில் விருந்து பிரிந்த அண்ணதுரை அவர்கள் திமுக கண்டார், அவரும் திராவிட நாடு என முழங்கினார், பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவே ,மொழிவழி பிரிந்து இனவழி ஒன்று கூடுவோம் ,அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் முழங்கினார்.

ஆனால் இதுக்கெல்லாம் மொத்தமாக ஆப்பு வைக்கும் விதமாக கி.பி 1962 இல் இந்திய அரசியல் சட்டத்தின் 19 ஆம் பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள், இதனை பதினாராவது அரசியல் சட்டத்திருத்தம் அல்லது தனிநாடு தடைச்சட்டம் என்றார்கள். மேலும் இதனடிப்படையிலேயே பதவிப்பிரமாணமும் எடுக்க வேண்டும்.

இச்சட்டத்திருத்தத்தின் படி , இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ தனி நாடு என கோரிக்கை வைத்து இயங்கக்கூடாது, அப்படி செய்தால் தேர்தலில் போட்டியிடத்தடை விதிக்கப்படும், தேவைப்பட்டால் நிரந்தர தடையே விதிக்கப்படும்.

சட்ட திருத்த விவரங்களுக்கு காண்க...

http://indiacode.nic.in/coiweb/amend/amend16.htm

இச்சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது ராஜ்யசபாவில் அண்ணா அவர்கள் தம் கட்டி நீண்ட எதிர் விவாதம் எல்லாம் செய்தார் ஆனாலும் ,சட்டத்திருத்த மசோதா அபார வெற்றிப்பெற்றது, இனிமேல் திராவிட நாடு எனப்பேசினால் தேர்தல் தடை என்ற சூழலில் , தனிநாடுக்கோரிக்கைக்கு மூடுவிழா நடத்திவிட்டு , மத்தியில் கூட்டாச்சி ,மாநிலத்தில் சுயாட்சி என புதிய கோஷம் உருவாக்கிக்கொண்டார், அதாவது ஃபெடரல் கவெர்ண்மெண்ட் அமைப்பில் மாநிலங்களுக்கு அதிக தன்னாட்சி உரிமை கேட்பதாகும்.

இந்த பழைய மேட்டரெல்லாம் எதுக்குனு கேட்கிறிங்களா விடயம் இருக்கு, அண்ணா காலத்திலே ஊத்தி மூடப்பட்ட, ஒரு சமாச்சாரத்தினை பற்றி இப்பவும் ஒரு அரசியல் தலைவர் பேசிக்கிட்டு இருக்கார், அவர் வேறு யாருமல்ல புரட்சிப்போராளி குருமா ச்சே திருமா தான்.அவருக்கு அவ்வாறு பேசுவது அரசியல்சட்டப்படி தடை செய்யப்பட்டது என தெரியுமா என தெரியவில்லை,

சமீபத்தில் நடந்த அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் வீர உரையாற்றிய திருமா, நான் நாடாளுமன்றத்திலேயே தனித்தமிழ் நாடு வேண்டும் எனக்குரல் கொடுத்தேன் என சொல்லி இருக்கிறார்.(செய்தி ஜூவியில் வந்துள்ளது)

இவ்வாறு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரின் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் சில முரணான கருத்துக்களையும் சொல்லலாம்,ஆனால் யாரேனும் ஒரு உறுப்பினர் ஆட்சேபம் தெரிவித்தால் அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்படும், மேலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தால் ,சபாநாயகர் விரும்பினால் இடைநீக்கமும் செய்யலாம்.சட்ட மன்றமோ,நாடாளுமன்றமோ சபாநாயகருக்கு "வானாளவிய அதிகாரம்"உண்டு என்பது கடந்த கால வரலாறு!

எனவே நாடாளுமன்றத்தில் பேசினேன் என சொல்லிக்கொண்டு மேடைப்போட்டு பேசிக்கொண்டு இருந்தால் ,யாரேனும் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால் தேர்தலில் கலந்துக்கொள்ள தடைவிதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சூனா சாமியின் கவனத்திற்கு  இதெல்லாம் இன்னும் செல்லவில்லை போல ,தெரிந்தால் உடனே பெட்டிஷன் போட்டு அலப்பரையை கொடுக்கலாம்.(ஹி...ஹி ,வருங்காலத்தில் அப்படி நடந்தால் அடியேனின் தீர்க்க தரிசனத்தின் அருமையை  நினைவு கூறவும்)

இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  நடைப்பெற சாத்தியமுல்ல தெலுங்கானா தனிமாநில கோரிக்கைக்கே  தெலுங்கான மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கவில்லை, அப்படி இருக்க சட்டத்தின் படி நிறைவேற வாய்ப்பேயில்லாத தனிநாடு பற்றிப்பேசினேன் என பெருமையாக பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் தலைவர்களை என்னவென்பது?

திருமாவிற்கு அரசியல் சட்ட நிலை என்னனு தெரிஞ்சு பேசினாரா, தெரியாம பேசினாரானு தெரியலை ஆனால் எதைப்பேசினாலும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரையில் அரசியல் கட்சிகளுக்கு வாழ்வுதான் :-))

என்ன கொடுமை சார் இது!
---------------

வாய்ப்பும்,வரமும்:



கருப்பு வெள்ளைக்காலப்படங்களில் வரும் ஜாலியான பாட்டுக்களை டப்பாங்குத்து பாட்டுக்கள் என்பார்கள், கிராமிய இசையின் பின்னணியில் பாடல் அமைக்கப்பட்டிருக்கும்.

இப்ப வரும் படங்களில் ஜாலியான பாட்டு என்றால் குத்துப்பாட்டு என்பார்கள், ஆனால் இசைனு சொல்லிக்கிறாப்போல எதுவும் இருக்காது, வெறும் டம்முக்கு டிப்பான் டப்பானு ஒரு பீட்ஸ் தான் பாட்டு முழுக்க ஓடும்.

மாமா ...மாமா மாமா ஏமா...ஏமானு ஜாலியான டப்பாங்குத்தாக இருப்பினும், பாட்டின் நடுவில் "தாலிக்கட்டும் முன்னே கை மேனியில் படலாமானு "கலாச்சாரமும் பேசு(பாடு)கிறார்கள் :-))

இப்போலாம் டாடி மம்மி வீட்டில் இல்லைனு நேரா இன்விட்டேஷன் தான் :-))

இந்த பாட்டில உள்ள கவனிக்க தக்க அம்சம் என்னவெனில் ,பாடலுக்கு ஆடும் ஆண் நடிகர் தான்,அவர் பெயர் "கள்ளப்பார்ட் நடராஜன்",அக்கால நாடகங்களில் வில்லனாக நடிப்பவர்களை "கள்ளப்பார்ட்"என்றும் ஹீரோவை "ராஜ பார்ட்" என்றும் சொல்வார்கள்.

நாடக நடிகர்கள் எல்லாருமே நடனம்,இசை என கற்றுக்கொண்டவர்களே, எனவே வில்லன் நடிகராக நாடகத்தில் நடித்தவர் என்றாலும் செமையா "உட்கார்ந்து எழுந்து" என குத்தாட்டம் போட்டிருக்கார். பாட்டின் நடுவில் எம்.ஆர்.ராதாவும் கனவாக ஒரு சில குத்துக்கள் போட்டிருக்கார்.

இப்படிலாம் நடனம் ஆடத்தெரிந்த நாடக நடிகர் பெரிய நடிகராக வந்தாரா என்றுப்பார்த்தால் இல்லை ,கடைசியில் பார்த்தால் தேவர் மகன் படத்தில் ரேவதிக்கு அப்பாவாக " மாயன் பார்த்தால் எங்களுக்கு தான் பிரச்சினை போயிடுங்க தம்பி " என அழுகாச்சி வசனம் பேசி நடித்தவர் இவர் தான் என தெரிய வருகிறது.

திறமை இருக்கும் பலருக்கு சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை, ஆனால் திறமை என பெரிதாக இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு ,கிடைத்து பின்னர் திறமையை வளர்த்துக்கொண்டு பெரிய அளவில் வந்துவிடுவதும் நடக்கிறது. வாய்ப்பு கிடைப்பதை விட வரம் கிடைக்க வேண்டும் போல!

இப்போலாம் சினிமாவில ஹீரோவாக ஆகணும் என்றால் ஹீரோவிற்கு மகனாக பிறந்திருக்க வேண்டும், அரசியலில் முதல்வராக /தலைவராக ஆக வேண்டும் என்றால் முதல்வருக்கு மகனாக பிறந்திருக்க வேண்டும் என ஆகிவிட்டது.

என்ன கொடுமை சார் இது!
--------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,ஜீவி,நன்றி!
**********

Monday, March 04, 2013

என்ன கொடுமை சார் இது-11


(ஹி...ஹி ஆடைக்கட்டி வந்த நிலவோ?)


வெட்கம் கெட்ட விளம்பர மோகம்!

கராத்தே வீரர் ஷிஹான் ஹீசைனி அடிக்கடி விளம்பரத்துக்காக எதையாவது செய்வார் ,அதுவும் அம்மையார் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் காலங்களில் எல்லாம் தன் மீது கவனத்தினை திருப்ப தவறாமல் ரத்தத்தில் படம் வரைவது, அல்லது கோணங்கி தனமாக  எதையாவது செய்து கவனம் ஈர்க்க முயல்வார், அதன் உச்சக்கட்டமாக்க இப்பொழுது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை செய்துள்ளார், சுமார் 11.5 லிட்டர் மனித இரத்தத்தினை மைனஸ் 27 டிகிரி செல்சியசில் உறைய வைத்து அதனைக்கொண்டு அம்மையாரின் மார்பளவு(BUST)  ஒரு சிலை செதுக்கியுள்ளார் , இதற்கு அவர் நடத்தும் வில்வித்தை பயிற்சி நிலைய மாணவர்களிடம் இருந்து  இரத்தம்  சேகரித்துள்ளார்,மேலும் அவர் ரத்தமும் பயன்ப்படுத்தி இருக்கிறார்.



இதற்காக எட்டு ஆண்டுகளாக அவரது இரத்தத்தினை சேகரித்து வைத்திருந்தாராம், இப்படி செய்வதற்கு பதில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்திருக்கலாம், ஒரு யூனிட் இரத்தம் என்பது சுமார் 200 மிலி என நினைக்கிறேன், எனவே 11.5 லிட்டர் ரத்தமும் சுமார் 57 யூனிட் அளவுக்கு வருகிறது, சாதாரணமாகவே 2 யூனிட் இரத்தம் இருந்தாலே ஒரு மேஜர் ஆபரேஷன் செய்யலாம்,எனவே சுமார் 114 மேஜர் ஆபரேஷன்களை இவர் சிலை வடிக்க பயன்ப்படுத்திய ரத்தித்தின் மூலம் செய்திருக்கலாம்,அத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்,எத்தனையோ பேர் ஆபரேஷன்களுக்கு ரத்தம் கிடைக்காமல் அலைகிறார்கள், இணையம், தொலைக்காட்சி என விளம்பரமெல்லாம் கொடுக்கிறார்கள், ஆனால் ஒரு மனிதன் தனது அல்ப விளம்பர மோகத்திற்காக  விலைமதிப்பில்லா மனித இரத்தத்தினை சிலையாக்கி வீணடித்துள்ளார், இதனையும் தொலைக்காட்சிகள் செய்தியாக்கி மகிழ்கின்றன, இதற்கெல்லாம் ஒரு தண்டனையும் கிடையாதா?

என்ன கொடுமை சார் இது!
-------------------

கடலில் கரையும் கண்ணீர் துளிகள்!

இலங்கையில் முள்ளி வாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது ,அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் நக்கீரன் பத்திரிக்கை முதல் பல பத்திரிக்கைகளிலும்,இணைய தளங்களிலும்  வெளியானது,ஆனால் சில  தமிழக அரசியல் தலைவர்கள் இறப்பினை உறுதிப்படுத்தாமல் பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இவ்வாறு செய்வதால் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடரும் என நினைத்தார்களோ என்னமோ,ஆனால் அப்படிப்பேசியது ,நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை   உணரவிடாமல் மக்களை செய்து விட்டது என்பேன்.



சில ஆண்டுகள் கடந்த பின் இப்பொழுது சேனல் நான்கில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கியால் துளைக்கப்பட்டு இறந்த காட்சியினை வெளியிட்ட உடன் , தமிழக அரசியல் தலைவர்கள் இது நாள் வரையில்  கேள்வியேப்படாமல் இன்று தான் கேள்விப்பட்டது போல பேசுவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது, இவர்கள் ஈழ மக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது  எல்லாம் கட்டுக்கதையா?

கோரச்சம்பவம் நடந்த அன்றே உண்மையை விளக்கி  பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கும், ஆனால் மொன்னையாக ,தெளிவில்லாமல் பேசி நடந்த கோரச்சம்பவத்தின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்.

ஒரு போராளி ஒரு அதிகார மையத்திற்கு எதிராக போராடினால் அவனை மட்டுமே  எதிரியாக பார்க்க வேண்டும், ஆனால் அவனது குடும்பத்தினரையும் எதிரியாக நினைத்து ஒரு சிறுவனைக்கூட விட்டு வைக்காமல் அழித்துவிட்டு ,சர்வதேச அரங்கில் ஒரு நாட்டின் அதிபர் என தலை நிமிர்த்தி ஒரு  மனிதன் நடக்கிறான்,அதனை உலக நாடுகளும் வேடிக்கைப்பார்ப்பதை எல்லாம் பார்த்தால்,மனித குலம் நாகரிமடைந்துவிட்டது, நாம் வாழும் உலகம் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு இயங்குகிறது என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரக்காயாக கற்பிக்கப்படும் சித்தாந்தங்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

மேலும் இராச பக்சே, பாலச்சந்திரன் படுகொலைக்கும் இலங்கை இராணுவத்துக்கும் தொடர்பில்லை என்கிறார் விட்டால் இலங்கைக்கும் ,இலங்கை இராணுவத்துக்குமே தொடர்பில்லை என்று சொன்னாலும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போமாக :-))

நல்ல வேளை சின்னப்பையன் ,அப்பா போன துக்கம் தாங்காமல் ,ஒரு துப்பாக்கிய எடுத்து நெஞ்சில ஐந்து முறை அவனே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டான் என சொல்லாமல் விட்டார்களே என நிம்மதியடையலாம்.


இதில் சேனல் நான்கு பல தவணைகளாக ஆண்டுக்கணக்கில் காணொளிகளை வெளியிட்டு வருவதும் சரியல்ல, ஒரு கோரச்சம்பவத்தினை தங்கள் சேனலின் டி.ஆர்பி ரேட்டிங்க் அதிகரிக்க உதவும் ஒரு நிகழ்ச்சியாக பயன்ப்படுத்துகிறார்கள் ,மேலும் படுகொலைகளை படமெடுத்தவர்களோ நல்ல விலைக்கு பேரம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக விற்பதாகவும் தெரிகிறது, இதனை போர்க்குற்ற ஆவணமாக கருதி சரியான காலத்தில் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலன் தரும், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் அஞ்சலியாக அமையும், ஏன் எனில்  சேனல் நான்கின் காணொளிகள் மட்டுமே இப்பொழுது உள்ள ஒரே போர்க்குற்ற ஆவணம், ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலும் இந்த ஆவணப்படங்கள் காட்டப்பட்டுள்ளது, ஆனால் முழுமையாக காட்டாமல் பகுதியாக காட்டுவதால் சரியான தாக்கம் ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு சேனல் நான்கு செயல்ப்பட வேண்டும்.

பாலச்சந்திரன் படுகொலை குறித்து, விரிவாகவும் தெளிவாகவும் தனது கருத்துக்களை மூத்த பத்திரிக்கையாளரும் ,வலைப்பதிவருமான திரு. அமுதவன் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளார்,அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

அமுதவன் பக்கங்கள்: பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை…….நமக்குள் எழும் கேள்விகள்

# இதில் நம்ம ஊர் அரசியல் கட்சிகள் இன்னமும் வழக்கம் போல மேடைக்கச்சேரி மட்டுமே செய்துக்கொண்டுள்ளன. கழகமோ ராஜ்ய சபாவில் பேசி அதன் மூலம் மற்றக்கட்சிகளுக்கு புரிய வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைப்போம் , ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியாவை ஓட்டளிக்க செய்வோம் என்கிறது, எனக்கு ஒன்னு விளங்கவில்லை  தி.மு.க மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தானே , கூட்டணிக்கட்சியாக மத்திய அரசை நேரடியாக வலியுறுத்தி ஒரு முடிவெடுக்க  வைக்க  முடியாதா? அப்படி பேசக்கூட முடியாத நிலையில் என்ன கூட்டணி வேண்டிக்கிடக்கு?

இதில் உட்சபட்ச கொடுமை என்னவெனில் ராஜ்யசபாவில் விவாதம் முடிந்த அன்றே காங்கிரசை சேர்ந்த ஒரு மத்திய அமைச்சர் (சல்மான் குர்ஷித்) சொல்கிறார் ,இலங்கை எதிரி நாடல்ல, ஜெனிவாவில் என்ன முடிவெடுப்போம் என்பதை இப்பொழுது சொல்ல முடியாது என்கிறார், இதன் மூலமே ராஜ்யசபாவில் தொண்டைக்கிழிய பேசினால் எல்லாம் வேலைக்காவாது என்பது நன்கு புலப்படும்.

தி.முக இப்படி செய்வதற்கு பதில் கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கு பிடிக்க முயற்சிக்கலாம் :-))

என்ன கொடுமை சார் இது!
--------------

படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம்!

வழக்கமாக மார்க்கப்பந்துக்கள் பரிணாமம் இல்லை ,உலகம்,உயிர்கள் அனைத்தும் அல்லா படைத்தார், விரித்தார் என கதை விடுவது வழக்கமே, ஆனால் அவர்களோடு சோடிப்போட்டுக்கொண்டு சில வைதீக மதப்பற்றாளர்களும் இப்பொழுது பரிணாமம் இல்லைனு கிளம்பி இருக்கிறார்கள்.

இதில் என்ன காமெடி எனில் , மார்க்கப்பந்துக்களை பொறுத்த வரையில் அறிவியல் பார்வைக்கொண்ட நாத்திகர்களும் காஃபீர்கள் தான் , இறை நம்பிக்கைக்கொண்ட வைதீக மதப்பற்றாளர்களும் காஃபீர்கள் தான்,ஆனால் நாத்திகர்கள் முன் வைக்கும் பரிணாமவியல் கோட்ப்பாட்டினை எதிர்க்க மட்டும் மார்க்கப்பந்துக்கள் வைதீகர்களுடன் கைக்குலுக்கிக்கொள்கிறார்கள் :-))

வைதீக மதப்பற்றாளர்கள் பரிணாமத்தினை கேள்விக்குள்ளாக்க ,மார்க்கப்பந்துக்கள் கேட்ட அதே கேள்வியான , பரிணாமத்தில் இடைப்பட்ட உயிரினத்தின் படிமம் இருக்கிறதா எனக்கேட்கிறார்கள், அதாவது மனிதன் குரங்கிலிருந்து உருவானவன் என்றால் மனிதனுக்கும் குரங்குகிற்கும் இடைப்பட்ட வடிவில் ஒரு உயிரினம் இருக்க வேண்டும்,அதன் படிமம் எங்கே என கேட்கிறார்கள்.

இக்கேள்வியை அரேபிய மதத்தினை பின்ப்பற்றுபவர்கள் கேட்கலாம்,ஏன் எனில் அவர்களுக்கு இராமாயணமெல்லாம் தெரியாது, படித்திருக்க மாட்டார்கள்,ஆனால் சதா சர்வகாலமும் ,எம்பெருமான் கிருஸ்ணாவின் சரச சல்லாப லீலைகளை நினைத்து புளகாங்கிதம் அடையும் வைதீகர்கள் அப்படி எல்லாம் கேட்கலாமோ?

பகவான் பெருமாளின் தசாவாதரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின்  மகிமையை போற்றிப்பாடும் இராமாயணத்திலேயே பரிணாமத்திற்கு ஆதரவான சான்றுகள் உள்ளது, நம்பாதாவர்கள் கீழ்க்கண்ட படத்தினை காணவும்.



அனுமார் மனிதனைப்போல் இருகால்களில் நிற்கிறார், உடலும் மனித உடலை ஒத்துள்ளது ,ஆனால் குரங்கு போல முகமும்,வாலும் உள்ளது,இதன் மூலம் குரங்கிற்கும்,மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் இருந்தது தெளிவாகிறது, அனுமான் படத்தினை பார்த்த பின்னும் பரிணாமத்தினை நம்பாதவர்கள், பகவான் எடுத்த தசாவதாரத்தினையும் நம்பாதாவர்கள் ஆவார்கள் :-))

இராமாயணத்தினை படித்துவிட்டு பரிணாமத்தினையும் எதிர்க்க நினைக்கும் வைதீகர்கள் படிப்பது இராமாயணம் இடிப்பது பரிணாமம் என்ற செயலை செய்யலாமா?

என்ன கொடுமை சார் இது!
---------------

மதமெனும் போதை!




புதுவை அண்ணா சாலையில் இராஜா திரையரங்கம் அருகில் இப்புண்ணியமிகு திருக்கோவில் உள்ளது, மாலை வேளையில் பக்த கோடிகள் பெரும் திரளாக வருவது வாடிக்கை. கோபுர தரிசனம் கோடி புண்ணியமாம் எல்லாம் கன்னத்துல போட்டுக்கோங்க!


கோயிலைபார்த்து பரவசமானீர்களா,வாங்க அப்படியே பக்தி பரவசமாகி ஏகாந்தமான பக்தர்களையும் தரிசிப்போம் ..........


பக்தி பெருக்கெடுத்த சில பக்தர்கள், புதுவையின் புகழ்மிகு புண்ணிய தீர்த்தம் அருந்திவிட்டு அம்மனிடம் அடைக்கலமாகிவிட்டார்கள் போலும் :-))

என்ன கொடுமை சார் இது!
----------------

பின் குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி ,

விக்கி,கூகிள் இணைய தளங்கள் ,நன்றி!
-------------------

Saturday, November 03, 2012

என்ன கொடுமை சார் இது-9:துவித்தர்,சுவாமி,நாயகன்.



(ஹி..ஹி வருகைப்புரிந்தோர் அனைவருக்கும் வணக்குமுங்க)


முட்டை மந்திரம்!




தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இல் உள்ள பிரிவு 66ஏ என்றால் என்ன என இணையத்தில் தேடிய போது கிடைத்தது...

//Information Technology Act, 2000

66. Hacking with Computer System. -


(1) Whoever with the intent of cause or knowing that is likely to cause wrongful loss or damage to the public or any person destroys or deletes or alters any information residing in a computer resource or diminishes its value or utility or affects it injuriously by any means, commits hacking.

(2) Whoever commits hacking shall be punished with imprisonment up to three years, or with fine which may extend up to two lakh rupees, or with both.//

மூலம்:http://www.vakilno1.com/bareacts/informationtechnologyact/s66.htm

செக்‌ஷன் 66 ஏ கணினியை ஹேக் செய்த குற்றத்திற்கான பிரிவு என இந்த இணைய தளம் சொல்கிறது.

ஹி...ஹி துவித்தரில் ஆபாசமாக கமெண்ட் போட்டதாக சொல்லப்பட்டு  ராஜன் என்பவரும், கார்த்தி சிதம்பரம் அவர்கள் பற்றி கமெண்ட் போட்டதற்காக ,புதுவையை சேர்ந்த ரவிஶ்ரீனிவாசன் மீதும் பிரிவு 66ஏ வின் கீழ் தான் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அப்போ துவித்தரில் கமெண்ட் போடுவது தான் ஹேக்கிங்கா அவ்வ்வ் :-))

என்ன கொடுமை சார் இது!
*****
update:

section 66A of information tectchnology act 2000 , செய்தியில் வந்ததை அப்படியே தேர்வு செய்து கூகிளில் தேடியப்போது கிடைத்த வக்கீல் நம்பர்-1 தளத்தில் இருப்பதை அப்படியே போட்டேன், சட்டம் 2008 இல் திருத்தப்பட்டு , புதிய பிரிவுகளும் 66ஏ வில் சேர்க்கப்பட்டுள்ளதை பதிவர் நந்தவனம் குறிப்பிட்டுள்ளா ,அது இங்கே,

"நந்தவனத்தான் said...
வவ்வாஜி, இன்னமும் 2000ல்ல போட்ட சட்டத்தையே பார்த்துகிட்டு இருந்தா எப்படி? சட்டத்தை 2008ல்ல திருத்திவிட்டார்கள்.

66 A Punishment for sending offensive messages through communication service, etc.( Introduced vide ITAA 2008)

Any person who sends, by means of a computer resource or a communication device,-

a) any information that is grossly offensive or has menacing character; or

b) any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will, persistently makes by making use of such computer resource or a communication device,

c) any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages (Inserted vide ITAA 2008)

shall be punishable with imprisonment for a term which may extend to three years and with fine."


முழு ஐடி தண்டனை சட்டமும் இங்க இருக்கு

http://cybercrime.planetindia.net/ch11_2008.htm

சுட்டியில் சென்று முழு சட்டமும் அறிக.

நன்றி, திரு.நந்தவனம்.

------------------
சொல்லி அடிக்கும் சு.சுவாமிகள்!




ஜனதா கட்சியின் தலைவர் அதிரடி பட்டாசு சு.சுவாமி அவர்களின் துவித்தரில் இது போல நிறைய பட்டாசுகள் வெடிக்கிறார் ...



நன்றி:
//https://twitter.com/Swamy39/status/264183595843862528

வலைப்பதிவு:http://swamy39.blogspot.in/2011/11/news-makers-of-2011-dr-subramanian.html

ஹி...ஹி போட்டு தாக்குற பெருந்தலைகளை எல்லாம் விட்டுப்புட்டு புள்ளைப்பூச்சிகளை போட்டு தாளிக்குறாங்களே :-))

என்ன கொடுமை சார் இது!
-------------------------------
லோக நாயகர்- ரீல் அந்து போச்சு!




கி.பி.1987 இல் தமிழில் வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கிரானைட் கல்(எத்தினி நாளுக்கு மைல் கல்லையே இழுப்பதாம்) என்றால் மிகை இல்லை, நாயகன் படம் வெளிவந்த காலத்தில் இருந்தே காட்பாதரின் தமிழ் பரிணாமம் என்றே கூறப்பட்டு வந்தாலும் Time magazine இல் சிறந்த 100 படங்களின் பட்டியலில் இடம் பெற்று ,தரத்தில் குறைவில்லாத தமிழ் படம் தான் நாயகன் என ISO  சான்றும் பெற்றாச்சு, படம் வந்து 25 ஆண்டுகள் உருண்டோடி போயிற்று, ஆனால் இப்போ வந்து லோகநாயகன் அந்த படத்தின் தயாரிப்பாளர் திரு.முக்தா ஶ்ரீனிவாசன் மட்டும் கொஞ்சம் தாரளமாக நடந்துக்கொண்டிருந்தால் உலகப்படமாக நாயகன் வந்திருக்கும் என சாம்பிராணி போடுகிறார்.

மணிரத்னத்தின் திறமைக்கும், லோகநாயகரின் திறமைக்கும் உரிய மதிப்பு கொடுத்து கலைப்படமாக ,உலகப்படமாக எடுக்காமல் மிகப்பெரும் லாப நோக்கோடு 5 லட்சம் லாபம் சம்பாதிக்க மட்டுமே தயாரிப்பாளர் ஆசைப்பட்டார் என குண்டை போடுகிறார்.

1987 கால கட்டத்தில் ஒரு கோடி என்பது பெரிய தொகை, 60 லட்சம் பட்ஜெட் போட்டு ஒரு கோடி செலவழித்த படத்தில் இருந்து 5 லட்சம் லாபம் கிடைத்தால் போதும் என நினைப்பது எந்த வகையில் குற்றம் ஆகும்?

5 லட்சம் என்பது முதலீட்டில் மீது 5% லாபமே ஆகும், எந்த ஒரு தொழிலிலும் 12% ரிட்டர்ன் எடுப்பதே சரியான லாப விகிதம் ஆகும், 12% க்கு மேல் கிடைத்தால் உபரி லாபம். பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும், படிக்காமலே வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கூட 10% கம்மியா லாபம் வருவது போல வியாபாரம் செய்ய மாட்டார்கள்.

இந்த சமாச்சாரத்தில் அலச நிறைய விடயங்கள் இருக்கு, ஆனால் லோக நாயகர் சொன்னதில் ஃபில்ம் ரோல் குற்றச்சாட்டினை மட்டும் பிரதானமாக பார்க்கலாம்.

தேவையான ஃபில்ம் ரோல்கள் கூட கொடுக்காமல் தினசரி கோட்டா வைத்து கஞ்சத்தனமாக தயாரிப்பாளர் நடந்து கொண்டார் என சொல்லி இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த தயாரிப்பாளர் 1987 இலேயே 100 ரோல்கள் பில்ம் செலவழித்து எடுத்தப்படம் என உண்மையை சொல்லி இருக்கிறார்.

100 ரோல் ஃபில்ம் என்பது தேவைக்கு அதிகமான ரோல்களே.

திரைப்படங்களின் நீளத்தினை ரீல் கணக்கில் சொல்வார்கள்.

ஒரு ரீல் என்பது 1000 அடி, 300 மீட்டர் , சுமார் 11 நிமிடம் ஓடும் அளவுக்கான திரைச்சுருள்.

ஒரு ரோல் colour film negative  என்பது 1000 அடி நீளம் இருக்கும், அதாவது ஒரு ரீல் நீளம் இருக்கும்.

பெரும்பாலும் 35 மி.மீ  திரைப்பட நெகட்டிவ் ரோல்கள் , 1000 அடி, 400 அடி என இரண்டு வகையில் விற்கப்படும். பொதுவாக ஒரு ரோல் ஃபில்ம் என்றால் 1000- அடி நீளத்தையே குறிக்கும்.

ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் 12 ரீல் அதாவது 12,000 அடி நீளத்தில் பொதுவாக தயாரிப்பார்கள் , தமிழில் 14-15 ரீல்கள் பொதுவான திரைப்பட நீளம் ஆகும்.

திரைப்படம் எடுக்க திட்டமிடும் போது , film roll எவ்வளவு தேவைப்படும் என்பதையும் கணக்கிடுவார்கள். இதனை இறுதியாக எடிட் செய்து உருவாக்கும் திரைப்படத்தின் நீளத்துடன் ஒரு விகிதாச்சாரத்தில் ஒப்பிட்டு கணக்கிடுவார்கள்.

பொதுவாக 1:4 ,கொஞ்சம் தாராளமாக ஷூட் செய்யலாம் என நினைத்தால் 1:5 என்ற விகிதத்தில் கணக்கிடுவார்கள்.

12 ரீல்  திரைப்படம் எடுக்க 1:4 என்ற விகிதம் எனில் 48 ரோல் ஃபில்மும், 1:5 எனில் 60 ரோல் ஃபில்ம் எனவும் கணக்கிட்டு வாங்குவார்கள்.

ஹாலிவுட் பாணி என சொல்லிக்கொள்ளும் லோக நாயகர் ,முக்தா ஶ்ரீனிவாசை "tight fisted" என கஞ்சத்தனம் என்கிறார். ஆனால் ஹாலிவுட்டில் ஒரு இயக்குனர் இப்படி கணக்கிட்ட அளவுக்கு மேல் ஃபில்ம் செலவழித்தால் படத்திலிருந்தே தூக்கிவிடுவார்கள்,பிறகு ஹாலிவுட்டில் எந்த ஸ்டுடியோவும் வாய்ப்பே கொடுக்காது.

ஹாலிவுட்டில் தயாரிப்பு தரப்பான ஸ்டுடியோ வைத்தது தான் சட்டம்.அதனால் தான் எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் ஒரு இயக்குனரோ, நடிகரோ 100 படம்ம் எல்லாம் அங்கு செய்ய முடியாது.

கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் , இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் விருப்பத்துக்கு படம் எடுக்க தனியாக தயாரிக்க கிளம்பிவிடுவது அதனால் தான். ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் ஒரு கதையை அவ்வளவு லேசில் அப்ரூவ் செய்யாது.

(ஹி..ஹி நம்ம வாசகி , நம்ம பதிவை தான் படிக்குறாங்க, என்ன கொடுமை சார் இது)


ஏன் திரைப்பட சுருளில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு பொருளாதார கணக்கீடு உள்ளது.

கலர் ஃபில்ம் நெகட்டிவ் விலை சர்வதேச விலை அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும், முக்கியமாக வெள்ளியின் சந்தை விலையை வைத்து ,அவ்வப்போது விலை மாறும், ஏன் எனில் ஃபில்ம் ரோலில் உள்ள ரசாயன எமல்சன் silver halide ஆகும்.

வெள்ளியின் விலை 1 ரூபாய் ஏறினால் ஃபில்ம் நெகட்டிவின் விலை 10 ரூ ஏறும் என்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்..

திரைப்படம் எடுக்க ஒரு வகையான கலர் நெகட்டிவ் ஃபில்மும்  ,அதனை திரையிடும் சுருளாக print எடுக்க ஒரு வகையான ஃபில்ம் ரோல்கள் பயன்ப்படுத்தப்படுகின்றன.

கலர் ஃபில்ம் நெகட்டிவ்கள்  பல வகையான வேகம், ஒளி அமைப்பில் படமெடுக்க என இருக்கிறது, அதற்கு ஏற்ப கொஞ்சம் விலை முன்ன பின்ன மாறுபடும்.

ஒரு ரோல், 1000 அடி கலர் ஃபில்ம் ரோலின் தற்போதைய சர்வதேச விலை 823 டாலர்கள். நம்ம ஊரில் சுமார் 50,000 Rs பக்கம் என கேள்வி.Kodak,Agfa ,Fuji film போன்றவை கலர் ஃபில்ம் நெகட்டிவ், பிரிண்ட் ஃபில்ம் என தயாரித்து வழங்குகின்றன.

see here: http://motion.kodak.com/motion/Products/Production/index.htm

இன்றைய நிலவரத்துக்கு 100 ரோல் ஃபில்ம் விலை மட்டும் ஐம்பது லட்சம் விலை வரும், டாலர் அடிப்படையில் என்பதால் 1987 இல் ஒரு டாலர் சுமார் 20-22 ரூபாய் அளவில் தான் இருந்தது. 20 ரூ என கணக்கிட்டாலும் அன்றைய விலைக்கே 100 ரோல் கலர் நெகட்டிவ் 20 லட்சம் வருகிறது.

அதாவது படத்தின் பட்ஜெட் ஒரு கோடியில் 20% , இது பொருளாதார ரீதியாக தவறான செலவீனம்.

இன்று 500 ரோல்கள் எல்லாம் வீணடிக்கும் உலகமகா இயக்குனர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் , ஆனால் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதை கணக்கில் கொண்டால் இது பெரிய தொகை இல்லை எனலாம்.500 ரோல் ஃபில்ம் விலை சுமார் 2.5 கோடி வரும். 100 கோடியில் 2.5% மட்டுமே.

ஆனாலும் தேவை இல்லாமல் ஃபில்ம் ரோல்களை வீணாக்குவதாலேயே படத்தின் பட்ஜெட் முதலில் கணக்கு போட்டதை விட தாண்டி போவது வழக்கம்.

மேலும் எடுத்த அனைத்து கலர் நெகட்டிவ்களையும் லேப்பில் கொடுத்து பிராசஸ் செய்து நெகட்டிவ் மற்றும் எடிட் செய்ய ஒரு பாசிட்டிவ் என தயாரிக்க வேண்டும். முதல் பிரதிஎன்பது  பாசிட்டிவில் எடிட் செய்து திரையிடும் வகையில் ஒரு படம் என ஒன்றை உருவாக்குவது ,பின் முதல் பிரதியின்  அடிப்படையில் நெகட்டிவில் எடிட்டிங் செய்து , பின்னர் அனைத்து திரையரங்குகளுக்கும் பிரிண்ட் போட்டு விநியோகம் செய்வார்கள்.

இப்பொழுது நான் லீனியர் எடிட்டிங்க் எல்லாம் வந்த பின் வேலை சுலபமாக நடக்கிறது. இதனை "Non_Destructive editing" எனவும் சொல்வார்கள் ஏன் எனில் உண்மையான ஃபிலிமில் கட் செய்வதே இல்லை,அனைத்தும் டிஜிட்டல் இண்டர் மீடியத்தில் மட்டுமே.

100 ரோல் ஷூட்டிங்க செய்தால் அதில் பல தேவையில்லாத ஓ.கே செய்யாத ஷாட்களும் இருக்கும், ஆனால் அனைத்தையும் பிராசஸ் செய்து பின்னரே எது தேவை ,தேவையில்லை என எடிட்டர் கண்டுப்பிடிப்பார்.எடிட்டரின் பணி குப்பை தொட்டியை கிண்டி புதையல் எடுப்பது போல :-))

நம்ம ஊரில் ஒரு அடி கலர் நெகட்டிவ் டெவெலப் செய்ய சுமார் 10 ரூ இன்றைய அளவில் பில்ம் லேப்கள் வசூலிக்கின்றன.ஹாலிவுட்டில் ஒரு அடிக்கு 0.16 முதல் .20 டாலர்கள்.

100 ரோல்கள் என்றால் ஒரு லட்சம் அடி அதனை 10 ரூபாயால் பெருக்கினால் சுமார் 10 லட்சம், பின்னர் நெகட்டிவ் பிரிண்ட், ஒரு மாஸ்டர் பாசிடிவ் பிரின்ட் என எல்லாம் சேர்த்து , 100 ரோல் வாங்க என்ன செலவாயிற்றோ அதே அளவுக்கு முதல் பிரதி எடுக்கவும் செலவாகும்.அதுக்கு அப்புறம் எடிட்டிங்க் இன்ன பிற போஸ்ட் புரொடக்‌ஷன் செலவுகள் இருக்கு.

பல படத்தயாரிப்பாளர்கள் பட்ஜெட் எகிறிவிட்டால், ஷூட்டிங்க் முடித்துவிட்டு போஸ்ட் புரடக்‌ஷன் செய்ய பணமில்லாமல் தவிப்பதுண்டு.

1987 இல் 20 லட்சம் ஃபில்ம் ரோல் வாங்க செலவாகியது என்றால் மேலும் 20 லட்சம் முதல் பிரதி தயாரிக்கவும் ஆகி இருக்கும்.ஒரு லட்சம் அடியில் 14 ஆயிரம் அடிக்கு தான் படம் மீதி எல்லாம் குப்பைக்கு தான் போயிருக்கும்.

இதனாலாயே ஹாலிவுட்டில் ஃபில்ம் ரோல்களை சிக்கனமாக்க தான் பயன்ப்படுத்த சொல்வார்கள். இப்போது 2013 க்கு அப்புறம் ஹாலிவுட்டில் செல்லுலாய்ட் 35 மி.மீ ஃபில்ம் என்பதே புழக்கத்தில் இருக்காது என சொல்கிறார்கள்.படம் எடுப்பதும் டிஜிட்டல், திரையிடுவதும் டிஜிட்டல் என மாற 2013 ஐ காலக்கெடுவாக வைத்துள்ளார்கள். எல்லாம் செலவீனத்தினை கட்டுப்படுத்தவே.இன்செப்ஷன் , பேட்மன் படங்களை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் , படம்பிடிக்க கண்டிப்பாக 35 மி.மி ஃபில்ம் ரோலை தான் பயன்படுத்த வேண்டும், எனவே ஹாலிவுட் இயக்கினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

காரணம் டிஜிட்டல் விலை மலிவு என்றாலும் அதன் தரம் செல்லூலாய்ட் எமல்ஷன் ஃபில்ம் அருகில் கூட இருக்காது என்பதை இயக்குனர்களும் ,ஒளிப்பதிவாளர்களும் அறிவார்கள். டிஜிட்டலில் படம் எடுப்பது ,புரொஜெக்‌ஷன் செய்வது எல்லாம் செலவை குறைக்கவே மற்றபடி டிஜிட்டல் தரம் இன்னும் ஃபில்ம் ரோல் அளவுக்கு முன்னேறவில்லை.

படத்தின் நீளத்தைப்பொறுத்து ஒரு படத்தின் திரைப்பிரதி தயாரிக்க சுமார் ரூ 70,000 இல் இருந்து ரூ  100,000 வரையில் ஆகும் டிஜிட்டல் பிரிண்ட் என்றால் ஒரு 300 ஜிபி ஹார்ட் டிஸ்க்கில் Digital cinema package(DCP) என்ற ஃபார்மேட்டில் ஒலி, ஒளி அனைத்தும் பதிவு செய்யப்பட்டு தியேட்டருக்கு அனுப்பப்படும், இதற்கு சுமார் ரூ 5000 போதும். ஆனால் நம்ம ஊரில் QUBE அல்லது UFO வில் அனுப்ப ரூ 20,000 ஆகிறதாம். Qube என்பது ஒரு digital film distribution server and player மட்டுமே அதனுடன் தனியாக , digital projector இணைக்க வேண்டும்.மேலும் கியூப் முறை E-cinema format மட்டுமே சப்போர்ட் செய்யும்,,dcp ஃபார்மேட் செய்வதில்லை. இப்போது கியிபிலும் dcp வசதி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி, மேலும் இந்த விலை வித்தியாசம்,மற்றும் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் போன்றவற்றை இன்னொரு தனிப்பதிவில் காணலாம்.

இப்போ உங்களுக்கே புரிந்திருக்கும் , 1987 இல் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுத்த படத்திற்கு 100 ரோல் பில்ம் சுமார் இருபது லட்சம் ரூபாய் செலவழித்தது பெரிய விடயம் அல்லவா. அக்காலத்தில் பெரும்பாலான படங்கள் சுமார் 50-60 ரோல்கள்  செலவழித்தே எடுக்கப்பட்டது.  உண்மையில் ஒரு காட்சியினை எப்படி எடுப்பது என சரியான திட்டமிடாமல் (shot composition) படம்பிடித்தால் மட்டுமே ஃபில்ம் ரோல் நிறைய செலவாகும்.

இயக்குனர்கள் பாலா ,செல்வராகவன் போன்றோர் இப்படி ஃபில்ம் ரோலை கண்டபடி செலவு செய்தே தயாரிப்பாளருக்கு நஷ்டம் உண்டாக்குவது வழக்கம் என திரையுலகில் ஒரு பேச்சுண்டு. அதே வேலையை தான் அக்காலத்தில் மணிரத்னமும் செய்திருப்பார் போல, அதனையே தயாரிப்பாளர் முக்தா ஶ்ரீனிவாசனும் சொல்ல வருகிறார்.

மேலும் லோகநாயகர் அவரே ஃபில்ம் ரோல் கொடுத்து படபிடிப்பை தொடர்ந்து நடத்த உதவியதாக சொன்னதையும் தயாரிப்பாளர் இல்லை என மறுத்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்காத ஃபில்ம் ரோல், ஓல்டு ஸ்டாக் போன்றவற்றை ஒளிப்பதிவாளர்கள் பயன்ப்படுத்த தயங்குவார்கள். ஏன் எனில் அவற்றில் சில சமயங்களில் சரியாக பதிவாகாமல் போகலாம், காரணம் controlled temperature  இல் தான் ஃபில்ம் ரோல்கள் வைத்திருக்க வேண்டும், இல்லை எனில் காற்றில் உள்ள ஈரப்பதத்தினை "silver halide" கிரகித்து நீர்ப்படலம் (fog)உருவாகிவிடும், இதனால் படம் எடுப்பது பாதிக்கப்படும். உப்பினை திறந்து வைத்திருந்தால் நீர் பிடிப்பது போல, இதனை  hygroscopic  nature என்பார்கள்.

எனவே ஃபில்ம் ரோல் கொடுத்து உதவினேன் என சொன்ன கதையும் அடிப்பட்டு போச்சு. மேற்கண்ட உதாரணங்களே லோக நாயகர் விட்ட கதையை கந்தல் ஆக்கும் போது அவர் சொன்ன மற்ற கதைகளும் இப்படியானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு படம் அனைவராலும் பாராட்டப்பட்டு , 25 ஆண்டுகள் கடந்த பின் யாருக்கு உண்மை தெரியும், கேள்விக்கேட்க போறாங்க என அவதூறாக பேசுவதை தடுக்க எல்லாம் சட்டம் ஒன்றும் செய்யாது போல இருக்கே :-))

பிரபலம் அவதூறாக பேசினால் அதனை கேள்விக்கேட்க அவரை விட ஒரு பெரிய பிரபலத்தால் மட்டுமே நம்ம நாட்டில் முடியும் போல :-))

என்ன கொடுமை சார் இது!
------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், விக்கி, கோடாக், ரெட் ஒன்,ஆசியன் ஏஜ்,தி இந்து, இணைய தளங்கள்,நன்றி!
-----------------------