Wednesday, November 09, 2011

அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?





அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?


கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை அழுத்த நீர் அணு உலை ஆகும் ( Pressurized water reactors (PWRs) , இதன் முக்கிய கலன், அணு உலை அழுத்த கலன் (  reactor pressure vessel )எனப்படும், இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது.இதற்குள் தான் யுரேனியக்கோர் எல்லாம் இருக்கும். இந்த கலனில் இரண்டு வெல்டிங் இணைப்புகள்  கோர் பெல்ட் பகுதியில் இருக்கும்.

//The original design of reactor pressure vessel (RPV) did not contemplate welds in the core region. However, the vessel now used has two welds in the core region. The effect of lifetime neutron fluence on these welds was evaluated and found to be acceptable.//

கூடன்குளம் அணு கலன் பற்றிய இந்திய அணுசக்தி துறையின் தளம்:

http://www.constructionupdate.com/News.aspx?nId=Kncid8W53rVC5RiVKpBKog==

வெல்டிங்க் செய்யாமல் கலனை இணைக்க முடியாது, அவ்வாறு இணைக்கும் பகுதியில் பற்ற வைப்பு உலோகம், மற்றும், கலனின் அடிப்படை உலோகம் என இரண்டு உலோகம் இருக்கும். எனவே இந்தப்பகுதி தான் வலிமை குறைந்த பகுதியாகும்.

அணு உலை செயல்ப்படும் போது வெளிப்படும் நியுட்ரான்கள் தொடர்ந்து இணைப்பில் தாக்குவதால் உலோகப்பகுதி வலுவிழக்கும் இதற்கு எம்பிரிட்டில்மெண்ட் என்பார்கள். அதாவது கடினத்தன்மையை இழப்பது, எனவே காலப்போக்கில் அழுத்தம் தாங்கும் திறன் குறையும்.

பற்றவைப்பு பகுதி படம்:



//Embrittlement

Reactor pressure vessels, which contain the nuclear fuel in nuclear power plants, are made of thick steel plates that are welded together. Neutrons from the fuel in the reactor irradiate the vessel as the reactor is operated. This can embrittle the steel, or make it less tough, and less capable of withstanding flaws which may be present. Embrittlement usually occurs at a vessel’s “beltline,” that section of the vessel wall closest to the reactor fuel.//

அழுத்த நீர் அணு உலைகளில் தான் இந்த நெகிழ்வு தன்மை அதிகம் ஏற்படும், கொதிநீர் அணு உலைகளில் குறைவான பாதிப்பே ஏற்படும்.

//Pressurized water reactors (PWRs) are more susceptible to embrittlement than are boiling water reactors (BWRs). BWR vessels generally experience less neutron irradiation and therefore less embrittlement. //

இந்த உலோக நெகிழ்வு தன்மையின் பாதிப்பு மிக அதிக அளவில் PWRs இல் அதிக எதிர் விளைவுகளை உண்டாக்கும் ஏன் எனில் வெப்ப அழுத்த அதிர்ச்சி, என்பது விபத்துக்காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டு, எவ்வாறு எனில், திடீர் என அணு உலையில் குளிரீட்டும் அமைப்பு செயல்படவில்லை எனில் விபத்தினை தடுக்க அதிக அளவில் கடல் நீர் உள்ளே பாய்ச்சப்படும். உதாரணம் புக்‌ஷிமா அணு உலை சம்பவம்.

இப்படி குளிர்ந்த நீர் திடீர் என உள்ப்பாயும் போது உலோகம் விரைவாக குளிரும், இதனால் விரைவாக சுருங்கும், அதே நேரம் தொடர் யுரேனியப்பிளவையால் வெப்பம் உண்டாகி அழுத்தம் அதிகரிக்கும், இப்படி ஆவதால் உலோகத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே நெகிழ்வான இணைப்புகள்,அதிக அழுத்தம், உலோகத்தின் மீது ஏற்படும் வெப்ப அழுத்தம் என மூன்றும் சேர்ந்து அணு உலைக்கலன் வெடிக்கவோ,வீறல் விடவோ செய்யும். இப்படித்தான் புக்‌ஷிமாவில் அணு உலை வெடித்தது.

இதனை விளக்கும் யூடூயுப் வீடியோ:


விடியோ1:





விடியோ2;





//Another reason reactor vessel embrittlement is more of a concern for PWRs is because PWRs may experience pressurized thermal shock (PTS). PTS can occur under some accident scenarios that introduce cold water into the reactor vessel while the vessel is pressurized. Introduction of cold water in this manner can cause the vessel to cool rapidly, resulting in large thermal stresses in the steel. These thermal stresses, along with the high internal pressure and an embrittled vessel, could lead to cracking and even failure of the vessel.//

அணு உலைகளில் அடுத்து வரும் தொழிற்நுட்ப குறைபாடு:

கண்ட்ரோல் ராட் செலுத்தும் பகுதி,அதற்கான நாசில்கள் ஆகியவையும் அணு உலைக்கலனுடன் வெல்டிங் செய்தே இணைக்கப்பட்டிருக்கும். அங்கும் நியுட்ரான் தாக்குதலால் நெகிழ்வு,மற்றும் நீரால் ஏற்படும் உலோக அரிப்பு ஆகியவை ஏற்பட்டு அணுக்கசிவு ஏற்படும். வலிமை குறைந்த பகுதி அதிக அழுத்தகாலத்தில் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.

//Control rod drive mechanism nozzles and other vessel head penetration nozzles welded to the upper reactor vessel head are subject to another phenomenon – primary water stress corrosion cracking. The issue is a potential safety concern because a nozzle with sufficient cracking could break off during operation. This would compromise the integrity of the reactor coolant system pressure boundary – one of three primary barriers that protect the public from exposure to radiation. The break may also result in the ejection of a control rod, which could damage nearby components.//

அமெரிக்காவில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பினை வரைப்படுத்தவும் கண்காணிக்கவும் அமெரிக்க அணு உலை ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அவர்கள் ஆய்வின் படி 2001 இல் 3 மைல் தீவு உலை,கிரிஸ்டல் ரிவர் உலை, வடக்குஅன்னா உலை ஓசொனி உலை ஆகியவற்றில் கண்ட்ரோல் ராட் செலுத்தும் இடத்தில் கதிரியக்க கசிவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

//Inspections by licensees during the fall of 2001 revealed vessel head penetration nozzle cracks at Three Mile Island Unit 1, Crystal River Unit 3, North Anna Unit 1, and Oconee Unit 3.//

//Inspections performed at several PWRs in 2002 including those performed at the Davis-Besse Nuclear Plant, found leakage and cracks in vessel head penetration nozzles or J-groove welds that have required repairs or prompted the replacement of the vessel head. As a result of continuing concerns regarding licensee inspection programs in this area, the NRC issued an Order on February 11, 2003, to all PWR licensees in the U.S. The Order requires specific inspections of the vessel head and associated penetration nozzles based on their susceptibility to primary water stress corrosion cracking.//

இதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆய்வில் 26 அணு உலைகளில் மேற்குறிப்பிட்ட அணு உலைப்பகுதியில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.

//Twenty-six units were identified by the Electric Power Research Institute's Materials Reliability Program as having a high susceptibility to nozzle cracking. Inspections by licensees performed after issuance of the latest bulletin and order, revealed nozzle or J-groove weld cracks and/or leaks//

மேலும் டேவிஸ் பேஸ் அணு உலையில் நாசில்ப்பகுதி அருகில் ஒரு கால்ப்பந்து அளவுக்கு ஓட்டையும், ஒரு வெடிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

//In early March of 2002, during an inspection prompted by Bulletin 2001-01, Davis-Besse Nuclear Power Station identified a football-sized cavity in the units reactor vessel head. The cavity was next to a leaking nozzle with a through-wall crack and was in an area of the vessel head that had been covered with boric acid deposits for several years. Inspections at Oconee Unit 1 and Millstone Unit 2 also identified nozzle cracking. The discovery of leaks and nozzle cracking at Davis-Besse and other PWR plants called for more effective inspections of reactor pressure vessel heads and associated penetration nozzles.//

அமெரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் சுட்டி:http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/prv.html

இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணு உலை, பாதுகாப்பு அம்சங்கள் அதிகம், சிறப்பாக பராமரிப்போம் என்றெல்லாம் கூடன்குளத்தில் அதிகாரிகள் சொல்கிறார்கள். அவை  நம்பும் வகையில் இல்லையே.

சிறப்பாக செயல்படும் அமெரிக்க அணு உலைக்கூடங்களிலேயே பராமரிப்பு நிலை இது தான், அப்படி எனில் இந்தியாவில் என்ன கதி என்று யோசித்தால் மயக்கம் வருகிறது.

என்ன தான் சிறப்பாக  வடிவமைத்து ,பாதுகாப்புடன் பராமரித்தாலும் அணு உலைக்கலன்களுக்கு என்று சில கட்டுமான பலவீனங்கள் உள்ளது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையே இவைக்காட்டுகின்றன.இதை எல்லாம் அறிந்த அப்துல்கலாம் போன்றவர்கள்.தீங்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

பின்குறிப்பு:

தமிழில் மட்டும் எழுதி சுட்டியைப்போட்டால் சில அறிவுஜீவிகள் சுட்டியைப்படிக்காமல் மீண்டும் வந்து கேள்விகேட்டு இம்சையைக்கூட்டுது, அதான் மேஜர் சுந்தரராஜன் போல தமிழ் & ஆங்கிலம்( தளத்தில் இருந்து காபி& பேஸ்ட்) என அடுத்து அடுத்து போட்டாச்சு, சுட்டியும் இருக்கு போய் தெளிவா படிங்க!

Tuesday, November 08, 2011

சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.



சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.



பெரும்பாலும் கீழ் காணும் மூன்று முறைகளில் சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாகவோ எரிசக்தியாகவோ பயன்ப்படுத்துகிறோம்,

# போட்டோ ஓல்டிக் பேனல்

#சூரிய வெப்ப சக்தி

#சூரிய அடர் சக்தி


போட்டொ ஓல்டி பேனல்:

சூரிய சக்தி தயாரிப்பில் விலை அதிகம் ஆன தொழில் நுட்பம் இது, காரணம் இதற்கான பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி ஆவதே. இதுவே அமெரிக்காவில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 சென்ட்கள் போதும். இந்தியாவில் 15 ரூபாய் ஆகிறது(இங்கே அதிக பட்ச மதிப்பீடையே அளிக்ககிறேன் குறைந்த பட்சமாக 3 ரூபாய்க்கும் தயாரிக்க முடியும்)

ஏன் எனில் 15 ரூபாய்க்கு தயாரிக்கும் பிளாண்ட் என்பது முழுக்க தானியங்கியாக, இரவு பகல் எப்போதும் மின் உற்பத்திக்கு பயன்படும், அதி நவீனமானது. தோராயமாக 1 மெகா வாட் திறனில் பிளாண்ட் அமைக்க 25 கோடி அதிகபட்சம் ஆகும்,சுமார் 10 ஏக்கர் இடம் தேவைப்படும். அப்படி எனில் அணு சக்தி மின்சாரமான 2.7 சதவீதம் ஆன சுமார் 7000 மெகா வாட் தயாரிக்க இந்தியாவுக்கு சுமார் 175000 கோடி ரூபாயும், சுமார் 70000 ஏக்கர் இடமும் தேவைப்படும். 176000 கோடி 2ஜி ஸ்ப்பெக்ட்ரம் ஊழல் பணமே போதும். அவ்வளவு ஊழல் செய்யும் ஒரு நாட்டில் பாதகமற்ற மின்சாரத்துக்கு செலவு பண்ண முடியாதா? தார்ப்பாலைவனத்தின் பரப்பளவு 200,000 km2 ஆகும்.

மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட விலை எல்லாமே மிக அதிகப்பட்ச விலை ஆகும், உண்மையில் இதில் பாதி போதுமானது. குறைவான தொகை கணக்கில் வைத்து சொன்னால் கூடுதலான விலையை மட்டுமே கணக்கில் வைத்து விதாண்டா வாதம் பேசினால் கூட செல்லுபடியாக கூடாது என்பதற்கே.

போட்டொ ஓல்டிக் பேனல் வீடியோ:



இந்த 15 ரூபாய் என்பதே ஒரு தர்க்க ரீதியான விலை, பயன்ப்படும் காலத்தில் எரிபொருள் செலவு இல்லை, சுற்று சூழல் மாசு இல்லை என்பதற்கான விலையை கழித்தால் குறைவான தொகையே நாம் செலவிட்டதாக ஆகும்.

போட்டோ ஓல்டிக் பேனல்கள் என்பது சிலிகான் கொண்டு தயாரிக்கபடுவது, அவற்றின் மீது கண்ணாடிப்பூச்சு இருக்கும்.மேல் படும் சூரிய ஒளியை நேரடியாக மின்சாரம் ஆக மாற்றீ மின்சார சுற்றுக்கு அனுப்பும். போட்டொ ஓல்டிக் விளைவுக்காகவே ஆல்பிரட் ஐன்ஸ்டின் நோபெல் பரிசு பெற்றார்,இதனை 1905 இல் கண்டுப்பிடித்தார்.

சூரிய வெப்ப சக்தி:

இது கொஞ்சம் சாதாரணமான தொழில் நுட்பம்,இதுவும் சூரிய அடர்வு சக்தி முறை தான் எப்படி செயல்ப்படுத்துகிறோம் என்பதனை பொறுத்து மாறுபடும். நேரடியாக சூரிய வெப்பத்தைக்கொண்டு நீரை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்து டர்பைன்களை இயக்க செய்து , அனல் மின் நிலையம் போல மின் உற்பத்தி செய்வது.

பேராபோலிக் வடிவ நீள் தகடுகளை அமைத்து அதன் மயத்தில் வெப்பம் கடத்தும் திரவம், எளிதான முறை எனில் நீரையும், அல்லது மினரல் ஆ 91;ில் போன்றவற்றையும் பயன்ப்படுத்துவது. விலைக்கூடிய முறை எனில் உருகிய உப்பினை கொண்டு வெப்பத்தினை கடத்தி நீராவி உற்பத்தி செய்து மினுற்பத்தி செய்வார்கள். இந்த முறையில் சில இடங்களில் அடர்வு/ வெப்ப சக்தி என மாற்றிப்பயன்படுத்துவார்கள்.

இதிலும் தானியங்கி முறை உண்டு.இரவிலும் பயன்ப்படும், ஏன் எனில் வெப்பம் சேமிக்கும் சாதனமாக உருகிய சோடியத்தை பயன்ப்படுத்தலாம்.

கீழே யூட்யுப் விடியோ கானவும்.





அடர்வு சூரிய சக்தி:

இதில் ஒரு சூரிய சக்தியினை குவிக்கும் கோபுரம் அமைப்பார்களில் (ஹீலியோஸ்டாட்)அதில் பல குவி ஆடிகள் இருக்கும் இதன் மூலம் சூரிய ஒளியை குவித்து வெப்பத்தை உருவாக்கி உருகிய உப்பு/ வெப்பம் கடத்தும் மினரல் ஆயிலை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்வார்கள். இதுவும் தானியங்கி அமைப்பு, 24 மணி நேரமும் பயன்ப்படக்கூடியது.

கீழே யூட்யூப் வீடியோ:வீடியோ1:



வீடியோ 2:




இந்தியாவில் இப்போது வணிக ரீதியாக தனியார் முதலீடு கொண்டு சூரிய பண்ணைகள், நகரங்கள் அமைக்கப்படுகிறது, அதானி குருப், மோசர் பேயர் போன்றவை 50 மெகா வாட் அளவுக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சுட்டியில் இந்தியாவில் எப்படி வணிக சூரிய மின் உற்பத்தியாளர்கள் செயல்ப்படுகிறார்கள் என அறியலாம்;

commercial solar power production in india

கீழ்க்காணும் சுட்டியில் மேல் விவரங்கள் காணலாம்;

solar power stations

solar power

solar energy


__________________________

சூரிய ஆற்றலும் தீங்கானது என சிலர் சொல்கிறார்கள்,அவர்கள் கூறும் வாதம் இது தான்.

# சிலிக்கான் பேனல்களில் இருந்து சிலிக்கான் தூசு வரும் என்று, அது சிலிக்கோசிஸ் என்ற நுரையீரல் நோய் உண்டாக்கும் என்பதாகும்.

இது முற்றிலும் கற்பனா வாதம், ஏன் எனில் பேனல்கள் மீது கண்ணாடி பூச்சு உள்ளது.சிலிக்கான் தூசு எப்படி வெளியில் வரும். அப்படிப்பார்த்தால் சில்லிக்கான் கொண்டு தான் கணினி, கைப்பேசி, என பல மின் அணு சாதணங்கள் செய்யப்படுகிறது, எல்லாருக்கும் சிலிக்கோசிஸ் நோய் வந்து விட்டதா?

# அடுத்தது , சூரிய வெப்பம் கடத்தப்பயன்படும் வெப்பக்கடத்தி திரவம் , மினரல் ஆயில் மூலம் நோய் வரும் என்பது இதுவும் தவறான பிரச்சாரம் ஆகும்.

காரணம் , இந்த எண்ணை மூடப்பட்டக்குழாய்களில்  தனிச்சுற்றாக  சுற்றி வரும் வெளியில் வராது. ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மூலமே நீரை சூடாக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஆரம்பத்தில் தெர்மினால் (பாலி குளோரோ பைபினைல் கலவை)என்ற எண்ணை பயன்ப்படுத்தப்பட்டது அது தான் ஆபத்தானது அதனை 1976 லேயே தடை செய்து தற்போது தீங்கற்ற எண்ணை, அல்லது விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என உருகிய உப்பினை பயண்ப்படுத்துகிறார்கள். உருகிய உப்பு என்பது நாம் பயன்ப்படுத்தும் சாதாரண உப்பே.

# மேலும் பூச்சிகள் சூரிய சக்தியினை குவிக்கும் ஆடிகளால் பாதிக்கப்படும் என்கிறார்கள், இதுவும் தவறானது, சூரிய ஒளியை குவிக்கும் போது அதன் வழியாக சென்றால் எல்லாம் பூச்சிகள் சாகாது நீண்ட நேரம் அதில் இருக்கும் போது தான் வெப்பம் தாக்கும், எந்த பூச்சியும் அங்கேயே கூடுகட்டி குடி இருக்காது. வேண்டுமானால் ஒரு குவி ஆடி வைத்து சூரிய ஒளியை குவித்து அதில் உங்கள் கையை வைத்து சூடு செய்துப்பாருங்கள், சற்று நேரம் ஆனால் தான் வெப்பம் நாமே உணர்வோம். ஆடியில் பட்டதுமே பற்றிக்கொள்ளும் வெப்பத்தினை சூரிய ஒளி உருவாக்காது.

சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.

 # அதிக இடம் தேவைப்படும் என்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் உள்ள தார்ப்பாலைவனம் ஒன்றே போதும் தேவையான மீன்சாரம் உற்பத்தி செய்ய. ஆனால் தற்ப்போது நம்மிடம் நிதி ஆதாரம் இல்லை ,முழுக்க பயன்ப்படுத்த , எனவே அணு மின்சாரம் 2.7% உற்பத்தி செய்கிறோம் அதற்கு மட்டும் தற்போது மாற்றூ செய்துக்கொள்ளலாம், போக போக போட்டோ ஓல்டிக் பேனல்கள் விலை குறையும் அப்போது அதிகமாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம். ஏன் எனில் கணினி அறிமுகம் ஆனப்போது என்ன விலை, இப்போது மலிவாக கிடைக்கவில்லையா,அப்படித்தான் போட்டொ ஓல்டிக் பேனல்களூம் வருங்காலத்தில் விலைக்குறையும்.

செலவு அதிகம் ஆகும் என்பவர்கள் இந்த சுட்டியைப்பார்க்கவும்:

cost of solar power

பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் அமெரிக்க கலிபோர்னிய மாகாணத்தில்  மஜோவா பாலையில  ஒரே இடத்தில் 500 மெகாவாட் சூரிய மினுற்பத்தி மையம் அமைத்துள்ளார்கள். இப்படி பத்து மையம் அமைத்தால் 5000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

சுட்டி:

solar power-land requirement

Monday, November 07, 2011

தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு , வேண்டுதல்!.



தமிழ்மணத்திற்கு ஒரு அன்பான,பண்பான,பாசமிகு ,
வேண்டுதல்!.



நட்சத்திரப்பதிவுகள் என்பது சிறப்பாக எழுதும் பதிவரை மேலும் சிறப்பாக எழுத தூண்ட தமிழ்மணம் மிக சிரத்தை எடுத்து தீட்டிய ஒரு நெடுங்கால திட்டம் ஆகும். ஆனால் தற்போதெல்லாம் பெரும்பாலும் நட்சத்திரமாக தேர்வானவர்கள் காபி&பேஸ்ட்*(terms and conditions apply) பதிவையே நட்சத்திரப்பதிவாக போடுவதைக்காண்கிறேன்.

இது வரைக் காபி & பேஸ்ட் பதிவு போட்டிருந்தாலும் நட்சத்திரமாக தேர்வான காலத்திலாவாது புதிதாக எழுதக்கூடாதா?

அரைவேக்காடு லகடன்கள்,அமுதம் போன்றவை ஏற்கனவே எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளிவராத ஆக்கங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும் என சொல்லும் போது, உலக தமிழ் திரட்டிகளின் தாயான தமிழ் மணம் நட்சத்திரப்பதிவர்கள் கண்டிப்பாக சுயமாக,புதிதான படைப்புகளை மட்டுமே நட்சத்திர வாரத்தில் அரங்கேற்ற வேண்டும் என சொல்லக்கூடாதா, சொல்லலாமே!

பின்குறிப்பு:

இது ஏதோ நான் டைம் பாசுக்கு எழுதுறேன்னு நினைக்ககூடும் , ஆனால் ஏன் தமிழ்மண நட்சத்திர வாரத்திலும் ஒரு பதிவு நேர்,எதிர் என ஓட்டு வாங்கி இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

*a copy and paste is always copy &paste!

இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா?



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...இணையத்தால் தமிழ்,வளர்கிறதா, இல்லை சிதைகிறதா? என்று. ஏன் எனில் இணையத்தில் தமிழ் பற்றி தேடும் போது கண்ணில் படும் பல இலக்கியம் குறித்தான மடல்குழுக்களின் விவாதங்கள் ,வலைப்பதிவுகளீன் உள்ளடக்கம் ஆகியவை , பல தவறான பொழிப்புரைகளை கொண்டுள்ளதாகவே எனக்குப்படுகிறது. ஆமாம் இவர் பெரிய நக்கீரர் குற்றம் கண்டுப்பிடிக்க வந்துட்டார்னு நினைக்காம எனக்கு சந்தேகம் தீர்க்க உதவுங்கள்.

சாதாரணமா தேனீ வளர்ப்பு,காளான் வளர்ப்பு எப்படி என்று எழுத அதை செய்யாதவங்க முன்வர மாட்டாங்க, ஆனால் கம்பன், வள்ளுவன், இளங்கோவடிகள் எழுதியவற்றுக்கு விளக்க உரைக்கொடுக்க எந்த தயக்கமும் கொள்வதில்லை,வீட்டுல தமிழ் பேசுறேன் , தமிழ் பதிவுப்போடூறேன் அப்போ , எனக்கு தமிழ் தெரியாதா, இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டாமா என்பார்கள்.

சரி தான் , இணையத்தில் தமிழ் இலக்கியம் வளரணும் ஆனால் சரியான விளக்க உரையுடன், நான் தேடியப்போது கிடைப்பதெல்லாம் எனக்கே பிழையாக தெரியுது (நான் கத்துக்குட்டி என்பதை நினைவில்கொள்க).நாமே ஆஃப்பாயில் இதுல அவங்க சொன்னா சரியா இருக்கும்னு அப்படியே விட்டா காலப்போக்கில் பிழையானவையே தேடலின் போது கிடைக்கும்.

சிலர் சிறப்பாக செய்யலாம் ஆனால் கூகிள் தேடலின் போது முதலில் வருவதில்லை. ஒரு வார்த்தைக்கு சரியான பொருள் கிடைக்க 1000 பக்கங்கள் திறக்க வேண்டியது இருக்கு.

தமிழ் படித்தவர்கள் அதிகம் இருந்தாலும் , இணையத்தில் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன், மேலும் அவர்கள் மடல் குழுக்களில் அதிகம் கவனம் செலுத்தவில்லையோ என தோன்றுகிறது.அந்த பக்கமும் போய் விவாதங்கள், சந்தேகம் தீர்ப்பது என செயல்ப்பட வேண்டும்.

குறிப்பாக நான் நாலு வருஷமா தமிழில் பேசுறேன் எனவே தமிழ் இலக்கணம்,இலக்கியம் தெரியும்னு சொல்லாம, நல்லா தமிழ் இலக்கியம்,இலக்கணம் படிச்சவங்க,தெரிந்தவங்க இதை செய்யலாமே

கம்பரும் கொம்பரும் என்ற ஒருப்பதிவில், இலவசக்கொத்தனார் என்ற தமிழ் ஆர்வமுள்ளப்பதிவர் இப்படி விளக்கம் போட்டு இருந்தார்(அவருக்கும் யாரோ சொன்னதாம்) அந்த விளக்கம் கீழே,

சுட்டி:
http://elavasam.blogspot.com/2011/11/blog-post.html

//ஒரு திருப்புகழ் நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப என்று தொடங்குகிறது. இங்கே நெச்சு என்றால் நெய்த்து; நெய் பூசப்பட்டு என்று பொருள். ஆனால் தற்கால கவிதைகளில் இவற்றைச் செய்தால் பொருளை அனுமானிக்க முடியுமா? அருணகிரிநாதர் செய்து இருக்கிறார் என்று நெய்த்து நெய்பூசப்பட்டு என்று ஆகுமானால், பொய்த்து பொய் பேசப்பட்டு என்றெல்லாம் விரித்துக் கொண்டே போக முடியுமா? //

எனக்கு வழக்கம் போல சந்தேகம் வரவே என் சந்தேகத்தினையும், எனது விளக்கத்தையும் ,பின்னூட்டமாக போட்டிருந்தேன்,அது கீழே,

சந்தேகத்தின் சாராம்சம் இதான் நெய்த்து = நெய்ப்பூசிய என வருமா என்பது தான், ஏன் எனில் இது மலர் பற்றிய வரி, மலருக்கு ஏன் நெய்ப்பூச வேண்டும்.என் பின்னூட்டம் படிச்சுப்பாருங்க.

-------------------------------------------------------------------------------

இ.கொ,

பாவம்யா கம்பர், அவர் எல்லாம் இன்னிக்கு இருந்தா இணையம் வந்து தமிழ் கத்துக்கனும்!

அப்புறம் பூவில நெய் பூசி வாணலில போட்டு வறுத்து சாப்பிடணுமா> இப்படிலாமா நெய்த்துக்கு அர்த்தம் வருது? :-))

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்ப கச்சக சுற்று என்பதோட சேர்த்து பார்த்தா பொருள் மாறுமே,

சரமாக தொடுத்த குளிர்ந்த பிச்சி பூவினை அழககா சுற்றி இருந்தாள் அப்படினு தான் இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.யாரோ ஒரு பொண்ணு ,வள்ளியாக கூட இருக்கலாம் அப்படி கொண்டைல பிச்சி பூ வச்சு இருப்பதை சொல்லி இருக்ககூடும்.

பிச்சி = முல்லை,

தட்பம்= குளிர்,

கச்சக =அழகாக,

சுற்று= சுற்றி இருப்பது,

தனியா ஒரே ஒரு பூவ சுத்த முடியுமா?

நெச்சு= நெய்த= நெய் பூசிய என்று எப்படி எடுத்துக்கொள்வது, பூமேல எல்லாம் இயல்பா ஒரு வாக்ஸ் கோட்டிங்க் இருக்கும், அதை நெய்னு சொல்லி இருக்கலாம்னா, அருணகிரி பாட்டணி மேஜர் படிச்சு இருப்பாரா?
துணி நெய்தல்=இழைகளை இணைப்பது,அப்படியே பூக்களை தொடுப்பதை நெய்த என்று எ 75;ுத்துக்கலாமோ?

அடுத்த வரிகளை போட்டா ,முழுசா படிச்சா வேற பொருள் வரலாம்.அடுத்த வரிகளைப்போடுங்க.

கள்வடியும் பூக்கள்னு சொன்னா அதிலிருந்து கள் எடுத்து குடிக்கிறாங்கனு சொல்வாங்களோ? :-))

Sunday, November 06, 2011

பிவிட்டர்-1#வவ்வால்

                                 பிவிட்டர்-1#வவ்வால்                                          

கூகிள்காரன் பதிவுனு ஒன்று ஆரம்பித்ததும் எல்லாம் ஓடி வந்து ஆரம்பித்துக்கொண்டோம்,பெருமையாகவும் நினைத்துக்கொண்டோம்!

அப்புறமா டிவிட்டர் , கூகிள் பஸ், முகநூல் என எது வந்தாலும் ஓடிபோய் ஏற மக்கள் தாயாராயிட்டதும் ,எல்லாம் சமூகவலையாச்சு(இதுல அதுல சேராதவங்கள கற்கால மனிதன் போல பார்த்ததுகள் சிலது) . ஆனா என்னா ஆச்சுனா ஆரம்பத்தில ஆர்வமா பஸ்ல தொங்குனவங்க, டிவிட்டுனவங்க,எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு , இதுல போடுறது எல்லாம் ரொம்ப நாள் இருக்காது பதிவுல பதிய வச்சா தான் காலா காலத்துக்கும் இருக்கும்னு அங்கே போட்ட அதே மொக்கைய இங்கே காபி&பேஸ்ட் பண்றாங்க!(ஏன் கல்வெட்டுல செதுக்கி தஞ்சை பெரியகோவிலில் வைக்கிறது தானே)

இதுல இருந்து தெரிவது என்ன என்றால் வாழ்கை மட்டும் வட்டமில்ல , இணையமும் வட்டம் தான்.

ஹி..ஹி இவங்களாம் அங்கே போய் அனுபவப்பாடம் கத்துக்கிட்டு அப்புறமா இங்கே வந்து அத காபி & பேஸ்ட் பண்றாங்க,அனுபவம் நல்ல ஆசான், ஆனால் அடுத்தவங்க அனுபவம் நல்ல கைட்!

எனவே கோணார் நோட்ஸ் படிச்சு தமிழ்ல பாஸானவன் என்ற காரணத்தால் ,இவங்க செய்த அதே வேலைய சுளுவா இப்போ நான் செய்யப்போறேன்.

சின்ன சின்ன குறுஞ்செய்தியா போட்டா அது டீவிட்டராம்,பஸ்ஸாம்(எங்க ஊர்ல பஸ்ஸுக்கு சக்கரம்ல்லாம் இருக்குமே) எனவே நான் குறு(ம்பு)ஞ்செய்தியா நேரடியா பதிவில போட்டுக்க போறேன், (எவன்/எவள் படிச்சா எனக்கு என்னா) அதனால அப்படி குறுஞ்செய்தி பதிவில போட்டா ஒரு நாமகரணம் வைக்கணுமே, இதெல்லாம் சப்ப மேட்டர், டீவீட்டர் போல  பிலாக்ல  போட்டா அதுக்கு பேரு பிவீட்டர் னூ வைக்காம வேற என்ன வைக்க?

இனிமே நம்ம பிவீட்டர்கள் ,என் உற்சாகத்துக்கு ஏற்ப வரும்! படித்து துன்புறுங்கள்! உங்களை எந்த ஆண்டவனும் இரட்சிக்கவே மாட்டான்/ள்.

--------------------------

#விசய்,அசித் பட பஞ்ச் டயலாக்கை பதிவில் கேளி செய்பவர்கள் டீவிட்டரிலும்,பஸ்ஸிலும் பஞ்ச் டயலாக் செய்வதே வேலையாக இருப்பதேன்#வவ்வால்

#பதிவுக்கு வரும் போது ,அய்யா சாமி பின்னூட்டம் போடுங்க என கெஞ்சுபவர்கள் ,சில நாட்களீல் இது என் பதிவு,என் பின்னூட்ட பெட்டி என நமக்கே பாடம் நடத்துவது ஏன்#வவ்வால்

#அன்புள்ள விசய்க்குனு மொக்கைப்படத்துக்கு கூட அன்புடன் விமர்சனம் எழுதும் சிகாமணிகள்,சூர்யா படத்துக்கு அப்படி அன்புள்ள என்றேல்லாம் விளிப்பதில்லையே ஏன்?#வவ்வால்

#ஓசியில் படம் பார்த்தால் 10 ஆண்டு பொட்டியில் தூங்கிய படம் என்றாலும் சூப்பர் என்னும் சிகாமணீகள், புத்தம் புதிதாக வரும் படத்தை காசு கொடுத்துப்பார்த்தால் 35/120 என காசுக்கு மார்க் போடுறாங்கப்பா!#வவ்வால்

#சிலர் தப்பு தப்பாக மொழிப்பெயர்த்து கொண்டு "நடு சென்டர் "போல பேசிக்கிட்டு பதிவுல அலையுறாங்க அதை சொன்னால் ஷைத்தான் என்கிறார்கள் என்னை! அவர்கள் மீது சாணியும்,சந்தனமும் பரவுவதாக!#வவ்வால்

--------------------------------

இது முதல் பிவீட்டர் என்பதால் இத்தோட கடைய மூடி,லைட் ஆப் பண்றேன்..இம்சை தொடரும்!

Saturday, November 05, 2011

கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!





கருங்காலி கூட்டமும் குமரி மாவட்டமும்!



குமரி மாவட்டம், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் அடக்கி வைக்கப்பட்டிருந்தது,அய்யா வைகுண்ட சாமி,மார்ஷல் நேசமணி போன்றோர் போராடி, தமிழகத்துடன் 1956 இல் இணைத்தனர், இந்த நவம்பர்  1உடன் 55 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் அதிக தகவல்கள் வேண்டுவோர் இணையத்தினை நாடலாம்.

இப்போ இதுக்கு என்னா என்கிறீர்களா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில்(6.11.2011) ஒரு கட்டுரை வந்துள்ளது, அதன் சாரம்சம் இதுவே,

குமரி கேரளாவுக்கே சொந்தம் என ஒரு அமைப்பு கேரளாவில் போராடி வருகிறதாம் (பெயர் போடவில்லை) இவர்களுடன் வகுண்டசாமி தர்ம பரிபாலன சங்கம் என்ற அமைப்பும்(தலைவர் சந்திர சேகரன்) சேர்ந்து கேரளா சட்டம்மன்றம் எதிரே நவம்பர் 1 ஆம் தேதி தர்ணா நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.மேலும் அவர்கள் இது நாள் வரை நவம்பர் ஒன்றை துக்க தினமாக அனுசரித்து வந்தார்களாம்!

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு குமரி மாவட்டத்திற்கு  சாலை முதலான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லையாம்(ஒரு மெடிக்கல் காலேஜ் கூட அங்கே புதுசா வந்துச்சே)

இது பற்றி பாலப்பிரஜாப்தி அடிகளிடமும் கேட்டு இருக்கிறார்கள்,இவரும் அந்தப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். அவர் சொன்ன கருத்துகள்,

#தமிழ் நாட்டில் குமரி மாவட்ட இணைப்புக்காக போராடியவர்களுக்கு சிலை வைக்கவில்லை(அட டா சிலை வச்சா காக்கா உச்சா தானே போகும் என்ன ஒரு கோரிக்கை),

#தமிழகத்துடன் குமரி இணைந்ததை தமிழ் நாட்டில் யாரும் கொண்டாடவில்லை,

#ஆனால் கேராளாவில் குமரி பிரிந்து போனதற்காக வருந்துகிறார்கள்,

அவர்களுக்கு எங்கள் மீது இன்னும் பாசம் இருக்கு, எனவே இங்குள்ள மக்கள் விரும்பினால் குமரி கேரளாவுடன் சேரலாம், வேணாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்லி இருக்கார்.சேர வேண்டாம்னு போராடினால் அதிலும் முதல் ஆளாக கலந்து கொள்வேன் என்றார்.(ரொம்ப தெளிவு)

இதே கருத்தை தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் அவர்களும் பிரதிபலித்தாராம்(கருங்கல்லு பிரதிபலிக்குமா அது என்ன கிரானைட்டா)

ஜான் ஜேக்கப், கிள்ளியூர் காங் எம் எல் ஏ மட்டும் இது ஜாதி, மதம் சார்ந்து கிளம்புற பிரச்சினை இதுக்கு ஆதரவு தர மாட்டேன்னு வெளிப்படையா பேசி இருக்கார்(காங் ல கூட வெளிப்படையா பேச ஆள் இருக்குப்பா)

போறப்போக்க பார்த்தா குமரி மாவட்டத்த லெமுரியா கண்டத்துக்கூட இணைக்கனும்னு யாரேனும் போராடுவார்களோனு பயமா இருக்கு! :-))

சரி சென்னப்பட்டினத்த ஆந்திரா கூட இணைக்கனும் யாரும் போராடுவதற்குள், சென்னை தமிழ் நாட்டுக்கேனு நாம போராட்டத்த ஆரம்பிச்சுடுலாம் ..ரெடி ஸ்ஸ்ட்டார்ட் த மியுஜிக்!

பின் விளைவு குறிப்பு:

 ரிப்போர்ட்டர் என்ற வார பத்திரிக்கையில் வந்தசெய்தியே இது , முழுதுமாக காபி ,பேஸ்ட் செய்யப்படவில்லை, இது ஒரு " gist news" எனவே சந்தேகம் இருப்பவர்கள் அந்த பத்திரிக்கையைப்படித்து தெரிந்து கொள்ளவும்.

Saturday, October 29, 2011

சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?



சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?


தமிழகத்தில் இஸ்லாமியர்கள் முகமன் கூற "சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று கூறுவதாக பதிவுலகில் பலரும் சொல்கிறார்கள். இதன் அரேபிய மூலம் அசலாமும் அலைக்கும் என்பதாகும். இதனை வைத்து தமிழ்மணத்தில் ஒரு பிரச்சினை எழுந்து அடங்கியது.

இதனிடையே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது(இவர் பாண்டிய மன்னரு!), சாந்தி என்றால் அமைதி...அமைதிக்கு பெயர் தான் சாந்தி என்று பாடல் கூட உள்ளது. அமைதி என்றால் சைலண்ட், மேற்கு தொடற்சி மலையில் கேரளாவில் "சைலண்ட் வாலி" என்று ஒரு பள்ளத்தாக்கு உள்ளது அந்த வனப்பகுதி இரவிலும் சப்தமில்லாமல் இருக்கும் ஏன் எனில் அங்கே சிக்காடா என்ற வண்டு இனம் இல்லை, சிக்காடா என்பது சில்வண்டு, சுவர் கோழி, மோல் கிரிக்கெட் எனப்படும் பூச்சியே. இது இரவு நேரங்களில் கிர்ரிச் கிர்ரீச் என சத்தமிடும். உலகிலேயே சிக்காடா இல்லாத வனம் சைலைண்ட் வாலி தான். இதை தமிழில் அமைதிப்பள்ளத்தாக்கு என்பார்கள்.

சமாதானம் என்பது ஆங்கிலத்தில் பீஸ்(peace) ஆகும்." peace treaty" இதை தமிழில் சமாதான உடன்படிக்கை (அ) ஒப்பந்தம் எனலாம்.சில சமையம் அமைதி உடன்ப்படிக்கை( அ) ஒப்பந்தம் என்று சொல்லவும் கேட்டு இருக்கிறோம்.

அப்படியானால் சாந்தி(=அமைதி), சமாதானம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக்குறிக்கும் இரு சொற்கள் ஆகிறது. அன்னை, தாய் என்பது போல.

எனவே சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக என்று சொல்வது இரண்டு முறை சாந்தி என்றோ இரு முறை சமாதானம் என்றோ சொல்வதாகிறதே எப்படி அப்படி சொல்வார்களா?

ஆகவே அதன் அரபிய மூலமான "அசாலாமு அலைக்கும் வ" என்பதன் பொருளைத்தேடினேன்.
அதற்கு உலகெங்கும் பொதுவாக சுருக்கமாக "Peace be upon you" என்று சொல்வதாக போட்டிருந்தார்கள். இதன் பொருள் சமாதானம் நிலவுவதாக என்பதாகும்.

இரானில் "peace and health upon you" என்ற பொருளில் பயன்ப்படுத்துகிறார்களாம். தமிழில் அமைதியும் (அ)சமாதானமும் ஆரோக்கியமும் நிலவுவதாக என்பதாகும்.

ஆனால் இதுவே முழு முகமன் கிடையாது , முழுசாக "அசலாமு அலைக்கும் வ ரகமத்துல்லா வ பரக்கத்து" என சொல்லப்படுகிறது.
இதனை தமிழில் மொழிப்பெயர்த்தால் "சமாதானமும் அல்லாவின் கருணையும் (அ)இறையருளும் நிலவுவதாக" என்றோ அல்லது "அமைதியும் ஆரோக்கியமும் இறையருளும் நிலவுவதாக" என்றோ தான் மொழிப்பெயர்த்து பயன்ப்படுத்தி இருக்க வேண்டும்.
பரக்கத் என்பதற்கு அபிவிருத்தி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. சாப்பிடும் போது சொல்லும் வாக்கியத்தில் பரக்கத் என்பது அபிவிருத்தியாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

ஆகவே அரேபிய மூலத்தில் இல்லாத ஒன்றை தமிழில் அடுக்குத்தொடர் போல் ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைப்பயன்ப்படுத்தக்காரணம் தவறான மொழிப்பெயர்ப்பே என நினைக்கிறேன்.

அந்த காலத்தில் தவறாக மொழிப்பெயர்த்திருந்தாலும், சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை சரிப்பார்க்க வாய்ப்பிருந்திருக்காது, ஆனால் இது இணைய உலகம், எதனையும் அறிந்து கொள்ள முடியும். சாந்தியும் சமாதானியும் சண்டையின் போது யாருமே அலசி ஆராயாமல் சண்டைப்பிடிக்க ஒரு வாய்ப்பு விடக்கூடாது என்று பாய்ந்ததாகவே இப்போது எனக்குப்படுகிறது.

இந்தப்பதிவிலும் ஏதேனும் பிழைகள் இருக்கலாம் சுட்டிக்காட்டவும், மேலும் அரபியும், தமிழும் தெரிந்தவர்கள் எது உண்மை என்று விளக்கினாலும் நன்றே!

மற்றப்படி சிலம்பாட்டம் ஆட ஆசைப்படுபவர்களை "பிதா சுதன் புனிதப்பேயோ, அல்லா ரக்காவோ ,அனுமானோ இரட்சிப்பாராக..ஆமென்!
-------------------------------------------------------------------------------------

விளக்கம் தேடியப்போது எனக்கு கிட்டியவை, ஆங்கிலத்தில் இதில் இருப்பதைத்தான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிகளும் உள்ளது , படித்துப்பாருங்கள்.


Assalamu Alaikum Wa (السلام عليكم و رحمة الله و بركاته)
Rahmatullahi Wa Barakatuh (السلام عليكم و رحمة الله و بركاته)
Grammar: greeting; 6 words;
"Peace be unto you and so may the mercy of Allah and His blessings". It is the full version of the Islamic greeting.

http://www.islamic-dictionary.com/index.php?word=assalamu%20alaikum%20wa%20rahmatullahi%20wa%20barakatuh
-----------------------------------------------------------------------------------


Definition: A common greeting among Muslims, meaning "Peace be with you." The appropriate response is "Wa alaikum assalaam" (And upon you be peace.)

Extended forms include "Assalamu alaikum wa rahmatullah" (May the peace and mercy of Allah be with you) and "Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh" (May the peace, mercy, and blessings of Allah be with you).

http://islam.about.com/od/glossary/g/gl_salaam.htm
---------------------------------------------------------------------------------------------

The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)

http://www.iqrasense.com/muslim-character/assalamu-alaikum-origin-and-meaning-of-the-muslim-greeting.html
----------------------------------------------------------------------------------------------------

Friday, October 28, 2011

தெரியும்...ஆனா ...தெரியாது!





                                          தெரியும் ஆனா தெரியாது.                               


உலகத்தில நிறைய பிரபலமான , பெரியதும் சிறியதுமா ஏகப்பட்ட கம்பெனி இருக்கு, சிலப்பெயர் பார்த்ததும் புரிஞ்சுடும் உதாரணமாக மன்னார் அன்ட் கம்பெனி . பல நிறுவனங்கள் ,வணிகப்பெயர்கள் கேட்க நல்லா இருக்கும் ஏன் அப்படி வச்சாங்க , அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. எல்ஜி டீவி எல்லாருக்கும் தெரியும் எல்ஜி என்றால் என்னனு அவ்வளவாக தெரியாது.

எனக்கும் தெரியலை சரினு கூகிளாண்டவரிடம் முறையிட்டு தேடி தெரிஞ்சுக்கிட்டேன்.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறைய தேடி சேர்த்து வச்சுட்டேன்(ஏ யப்பா சொத்துலாம் இல்லை வெறும் பெயர்களை தான்பா) சரி நமக்கு தெரிஞ்சா போதுமா என்று உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.(இந்தப்பதிவு எல்லாம் தெரிந்தவர்களுக்காக அல்ல)
நிறைய நிறுவனங்கள் இருக்கு ஆனால் இங்கே ஒரு A to Z பதிவாக இப்போ போட்டு இருக்கேன், மற்றதை பிறகு பார்ப்போம்.

                                         A TO Z LIST:                                                                 

#ADIDAS= Adolf (Adi) Dassler.ஜெர்மனிய சேர்ந்த இவர் பெயரையே சுருக்கி ஷீ கம்பெனிக்கு வச்சுக்கிட்டார்.

#BSA CYCLE= BIRMINGHAM SHORT ARMS. இங்கிலாந்துல துப்பாக்கி தயாரிச்சுக்கிட்டு இருந்த கம்பெனி, இரும்பு அதிகமா இருக்குனு சைக்கிள் தயாரிச்சாங்க, இந்திய விடுதலைக்கு அப்புறமா டிஐ (டியுப் இன்வெஸ்ட்மென்ட்) கிட்டே வித்துட்டு போய்டாங்க.இது அமால்கமேஷன் குருப்போட ஒரு நிறுவனம்.அம்பத்தூர்ல இருக்கு.

#CEAT TYRES = Cavi Electrici Affini Torino (Electrical Cables and Allied Products of Turin,ITALI) இத்தாலில வையர் தயாரிச்சுக்கிட்டு இருந்தவங்க டயருக்கு மாறிட்டாங்க!

#DABUR= DR.BURMAN. கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் எஸ்.கே.பர்மன் , அவர் பேரை சுருக்கி டாபர் னு ஒரு ஆயுர்வேதிக் மருந்து கம்பெனி ஆரம்பித்தார்.

#EID PARRY= EAST INDIA DISTILARIES PARRY. அயர்லாந்தை சேர்ந்த தாமஸ் பாரி இந்தியாவில சர்க்கரை ஆலை ஆரம்பித்தார்(முதல் ஆலை) அப்போதைய ஆங்கிலேயர்களுக்கு சரக்கு தேவைப்பட சாராய ஊரல் ஆலையும் போட்டார் அது தான் இது. விடுதலைக்கு பின் பலர் கை மாறி இப்போது அமால்கமேஷன் குருப்பிடம் உள்ளது.

#FANTA= FANTASTIC. பேன்டாஸ்டிக்கா பேரு வைக்கணும்னு யோசித்து எதுவும் சரிப்படாம கடைசில அதையே சுருக்கி ஃபேண்டா னு பேரு வச்சுடுச்சு கோகா கோலா நிறுவனம்.(இந்தப்பதிவ படிச்சதும் நீங்களும் ஃபேண்டா னுசொல்லணும்... சொல்வீங்க)

#GMR CONSTRUCTIONS = G.MADHUSUDAN RAO, ஆந்திராவை சேர்ந்த இவர் பெயரையே சுருக்கி கம்பெனிக்கு வச்சுக்கிட்டார். டெல்லி டேர் டெவில்ஸ் அணி அதிபர்.

#HORLICKS = James and William Horlick, அப்படிங்கிற அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரு(1+1=2 மட்டுமே) அமெரிக்காவில உருவாக்கின மால்டெட் பானத்திற்கு அவங்க குடும்ப பேரையே வச்சுக்கிட்டாங்க. அப்போது எல்லாம் நைட்லதூக்கம் வராதாவங்க தூக்கம் வர ஹார்லிக்ஸ் குடிப்பாங்களாம்.(இப்போ என்னடான குடிச்சா சுறு சுறுப்பாக இருக்கலாம் சொல்றாங்க)

#INTEL= INTERGRATED ELECTRONICS, அமெரிக்கால மிகேல் மூர், நாய்ஸ் அப்படினு ரெண்டு பேரு சேர்ந்து ஆரம்பிச்ச கம்பெனிக்கு மூர் அன்ட் நாய்ஸ்னு பேரு வச்சுப்பார்த்தாங்க படிக்கும் போது மோர் நாய்ஸ் போல இருக்குனு, அப்புறமா, ஐசி அ குறிக்கிறாப்போல இன்டெல் னு வச்சுக்கிடாங்க.

#JCB EARTHMOVER= JOSEPH CYRIL BAMFORD,இங்கிலாந்த சேர்ந்தவர் இவர் பேரையே சுருக்கி கம்பெனிக்கு வச்சுட்டார்.

#KONICA= Konishiroku Kogaku, ஜப்பானை சேர்ந்த "Konishiya Rokubeiten," என்பவர் அவர் பேர கோனிஷிரோகு என்று சுருக்கி கோனிஷிரோ கோககு னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சார். அப்படினா கோனிஷிரோ ஆப்டிகல்ஸ்னு அர்த்தம். அதையே சுருக்கி கோனிகா னு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சார்.

#LG ELECTRONICS= LUCKY GOLD STAR ELECTRONICS,கொரியாவை சேர்ந்த லக்கி எலக்ட்ரானிக்ஸ்(முன்னனிப்பதிவர் லக்கி தான் பினாமியா?) மற்றும் கோல்ட் ஸ்டார் ஹோம் அப்ளையன்ஸ் என்ற இரண்டு கம்பெனி சேர்ந்து எல்ஜி எலெட்ரொனிக்ஸ் கார்ப்ரேஷன் ஆகிட்டாங்க.

#MITSHUBISHI= MITSHU= THREE,BISHI=WATER CHESNUT=ARROW ROOT,DIAMOND SHAPED FLOWER, ஜப்பானிய மொழில மிட்ஷு ன முன்று என்று அர்த்தம் அங்கேலாம் மூனாம் நம்பர் லக்கி நம்பராம். ரிஷி என்பது சொல் புனைவின் போது பிஷி ஆகிடும் அப்படி ஆவதற்கு ரெண்டக்குனு சொல்றாங்க, பிஷி =நம்ம ஊரு அரரொட்டி மாவு கிழங்கு , அல்லது வைர வடிவமாம். எல்லாம் சேர்த்து கம்பெனிக்கு பேரு வச்சுட்டாங்க.(ரூம் போட்டு யோசிப்பாங்களோ)

#NIKON= NIPPON KOKAGU= இதுவும் கோனிகா கதைப்போல தான் ஜப்பானிய மொழில JAPPAN OPTICALS அதை சுருக்கி நிக்கோன் என வச்சுக்கிட்டாங்க, இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு அப்போ ரொம்ப முன்னணில ஜெர்மனிய சேர்ந்த நிக்கோர் என்ற கேமரா இருந்ததது அது போல பேரு வைக்க இப்படி ஒரு ஐடியாவாம்.ஜெர்மன் காரன் கேசுலாம் போட்டானாம் அப்போ.

#ONIDA = MUCH EXPECTED IN LATIN, நம்ம ஊரு கொம்பு மொளைச்ச டீவி, லத்தின்ல அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பொருள்னு அர்த்தம்.

#PANASONIC= ALL SOUND ,ஆடியோ கருவிகளை மட்டுமே ஆரம்பத்தில தயாரிச்சாங்க எனவே நாங்க சவுண்ட் பார்ட்டினு காட்டுறாப்போல பேரு வைக்க பாண் = அனைத்தும் சோனிக் = சவுண்ட், சேர்த்து பேரு வச்சுட்டாங்க.

#QANTAS AIRLINES= "Queensland and Northern Territory Aerial Services".அவுஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ விமான கம்பெனி, மொத்தமா சுருக்கி காண்டாஸ் னு பேரு வச்சுட்டாங்க(சென்னைல காண்டா இருக்கான்னு சொல்வாங்களே அது இதான் போல). செல்லமா பறக்கும் கங்காருனு சொல்வாங்களாம்.

#RAYBAN= UV "RAY BAN"NED, பாஷ் அன்ட் லாம்ப் நிறுவனம் அல்ட்ரா வயலட் கதிரை தடுக்கும் குளிர் கண்ணாடி தயாரிச்சப்போ அதையே குறிக்கும் வண்ணம் ரேபான் என்று பேரு வச்சாங்க.

#SAMSUNG = சாம்= 3, சங்= நட்சத்திரம் அதாவது "THREE STARS IN KORIYAN" கொரியாவிலயும் மூன்றாம் நம்பர்னா லக்கியாம்.

#TVS COMPANY= TRICHUR VENGAGARU SUNDARAM AYYANGAR COMPANY, நம்ம ஊரு வண்டி டீவிஎஸ் , அவர் பேரையே சுருக்கி வச்சது.

#UNINOR = UNITECH WIRELES AND TELNOR, இந்தியாவை சேர்ந்த யுனிடெக் கும் நார்வேயை சேர்ந்த டெலிநார் மொபைல் கம்பெனியும் கூட்டணி அதனால யுனிநார் னு பேரு.(இந்த போன்ல பேசினா நார் நாரா கிழிக்கலாம் போல)

#VIDEOCON = VENUGOPAL DHOOT, கம்பெனி ஓனர் அவர் பேர நினைவு படுத்துராப்போல இருக்கணும்னு அவர் பேருல வர எழுத்துக்களையே கலக்கி போட்டு ஒரு பேர உருவாக்கினார் அதான் வீடியோகான், இப்படி வார்த்தைகளை உருவாக்கிறதுக்கு பேரு அனாகிராம்.உலகிலேயே அதிகம் பிக்சர் டுயுப் தயாரிக்கும் நிறுவனம், சோனிக்கே லெட்,ல்எல்சிடி பேனல் இங்கே இருந்து தான் சப்ளை ஆகுது.

#WIPRO= WESRTEN INDIA PRODUCTS ,என்ற பெயரில் குடும்ப தொழிலாக சமையல் எண்ணை ஆலை வைத்திருந்தாங்க,எண்ணை, வனஸ்பதிலாம் விற்பனையாச்சு.பின்னர் அசிம் பிரேம்ஜி அதையே கணினி நிறுவனம் ஆக்கிட்டார்.

#XEROX = DRY IN LATIN, உலர்ந்த என்ற வார்த்தை வருமாறு வைக்க இப்படி வச்சுட்டாங்க, ஏன் எனில் அப்போலாம் ஜெராக்ஸ் இது போல ட்ரையாக எடுக்க முடியாதாம் உலகின் முதல் வகை இதுவே .வேறு எந்த கம்பெனியும் ஜெராக்ஸ் என்ற பெயரையே பயன்படுத்த முடியாது. அவங்க எல்லாம் போட்டொ காபியர்னு தான் சொல்லிக்கணும்.

#YAHOO= YET ANOTHER HIERARCHIAL OFFICIOUS ORACLE,இதை ஜெர்ரி யங் இப்படி சுருக்கி வச்சார்னு சொல்றாங்க, ஆனால் உற்சாகமாக யாஹூ னு கத்துவதுனும் சொல்றாங்க.ஜொனாதன் ஸ்விப்ட் நாவலான கலிவர்ஸ் டிராவல்ஸ் ல வர குள்ள மனிதர்கள் யாஹூ னு கத்துவாங்களாம். நம்ம ஊரு இந்தி படத்துல ஷம்மி கபூர் யாஹூனு கத்துற பார்த்து இருக்கேன்.

#ZANDU BALM= குஜராத்ல ஸண்டு னு ஆயுர்வேத மருத்துவர் இருந்தார் அவரோட பேரன் ஜகத் ராம் தாத்தாவின் மருத்துவ குறிப்புகளை வச்சு 1910 ல தாத்தாவின் பேருல zandu pharmaceuticals என்று ஆயுர்வேத மருந்து கம்பெனி ஆரம்பிச்சார் .அவங்க தயாரிச்ச வலி நிவாரணிக்கு ZANDU BALM னு பேரு வைக்காம வேறென்ன வைப்பாங்க.


ஹி..ஹி இந்தப்பதிவ படிச்சதும் ZANDU BALM தேவைப்படுதுனுலாம் சொல்லப்படாது

Monday, October 24, 2011

கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை



கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை


அணு ஆற்றல் என்பது ஆபத்தான ஒன்றே அதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது, அப்படியில்லை என்பவர்கள் எல்லாம் அரசியல் மற்றும் வியாபார புத்திசால 07;களே. அணு சக்திக்கு மாற்றாக உள்ள ஆற்றல் உற்பத்தி முறைகள்,

#அனல்
,#புனல்,
#கடல் அலை,
#காற்றாலை,
#சூரிய சக்தி,
#புவி வெப்ப சக்தி,
#இயற்கை எரிவாயு,
#குப்பைகள் மறுசுழற்சி எரிவாயு,

என பல பாதகமில்லா அல்லது குறைவான பாதகம் கொண்ட மாற்று ஆற்றல் உற்பத்தி முறைகள் உள்ளன, இணையத்தினால் நீங்களே அறிந 21;து; கொள்ள முடியும்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் போட்ட மாற்று ஆற்றல் குறித்த பதிவு.

கடலில் அலை அடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கூடன்குளம் அணுத்திட்டத்தின் மீதான எனது சந்தேகங்கள் சில இருக்கு,ரஷ்ய பொருளாதாரம் சரிந்த பின்னால் அங்கு ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டன அவற்றுக்காக தாயாரிக்கப்பட்ட அணு உலைகள் அப்படியே கிடக்கலாம் அவற்றை ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் ஆக இந்தியாவின் தலையில் கட்டுகிறார்களோ என்பது தான்.

மேலும் EVVR-1000 வகை அணு உலைகள் 1977 இல் டிசைன் செய்யப்பட்டவை, அதனை வடிவமைத்தவர் கூட விமான விபத்தில் போய் சேர்ந்துட்டார். இப்போதும் அவை இந்த காலத்திற்கு ஏற்றார் போல இருக்குமா? போன வருடம் வாங்கிய கணிணியே இந்த வருடம் புராதண பொருள் ஆகி விடுகிறது.

ஆனால் ரஷ்யா இந்த EVVR- 1000(water coold water moderated reactor) வகை அணு உலையை மேம்படுத்தி இருக்கோம் என்று சொல்கிறது ,யாரை வைத்து, எப்படி? வடிவமைத்தவர் தான் போய் சேர்ந்துட்டாரே? மேலும் இப்போ ரஷ்யா ஒரே ஒரு அணு உலை திட்டத்தை மட்டும் கையில் வைத்துள்ளது ஆனால் அதற்கு EVVR-1200 என புதிதாக சுட சுட வேறு வகை அணு உலை வடிவமைக்கிறார்கள். Ī;4;ம்மக்கிட்ட பழச வித்து அவங்க புதுசா செய்கிறார்கள் போல!

பொதுவாக எல்லா நாட்டு தயாரிப்பு அணு உலைகளும் ஆபத்தானவையே அதை விட ரஷ்ய தயாரிப்பு மீது தான் சந்தேகமா இருக்கு, காரணம் அவர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் தரம் குறித்து அக்கரை கொள்பவர்கள் அல்ல. புள்ளையார் புடிக்க போய் கொரங்கு வந்தாலும் இதான்பா புள்ளையார் மாறு வேடத்தில இருக்கார்னு சொல்றவங்க.

மேலும் உலக அளவில் காப்புரிமை பெற்ற சில சிறப்பு தொழில்நுட்பங்கள் இருக்கு, அதனை எல்லாம் காசுக்கொடுத்து வாங்க மாட்டார்கள், அதற்கு பதில் ஜெனிரிக்கா இருக்கும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவர்களே ஒரு மாதிரி தயாரித்து பயன்ப்படுத்திக்கொள்வார்கள்.

உதாரணமாக ரஷ்ய தயாரிப்பு தொலைக்காட்சிகளை அருகில் இருந்து பார்க்க கூடாது...ஏன் கண் கெட்டு விடுமா? இல்லை உயிரே போய் விடும் , எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடும்.
தொலைக்காட்சிப்பெட்டியில் சிஆர்டி திரை சூடு ஆவதை தடுக்க ஒரு மின்சுற்று உள்ளது இது காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம், இதனை வாங்கி பயன்ப்படுத்தாமல், தூரமா உட்கார்ந்து பாருங்க, ரொம்ப நேரம் டீவி பார்க்காதிங்க 85;ு எச்சரிக்கை நோட்டிஸ் கொடுத்துட்டாங்க.நம்ம ஊரில் கூட சில சமயம் டீவி வெடித்து விட்டதுனு செய்தி வரும் ,காரணம் அந்த மின்சுற்று ஏதோ காரணத்தால் பழுதாவதால் தான். இப்போ திறந்த பொருளாதாரத்திற்கு வந்த பின் இறக்குமதி தொலைக்காட்சிப்பெட்டிகளை பயம் இல்லாமல் பயன்ப்படுத்துறாங்க.

அங்கே அதிகம் விற்பனையாகும் டீவி நம்ம ஊரு ஒனிடா டீவி தான். பத்துலட்சம் பெட்டிகளுக்கு மேல் விற்று சாதனைப்படைத்துள்ளது ஒனிடா! இதனை ஒனிடா டீவி தளத்தில் காணலாம்.

இதனை எதற்கு சொன்னேன் என்றால் சாதாரணமான டீவிக்கே இப்படினா அவங்க அணு உலை எப்படி இருக்கும்? அவங்க வெடிக்காதுனு சொல்றதுக்கு என்ன உத்திரவாதம்...கியாரண்டியோ, வாரண்டியோ கொடுக்க நாங்க என்ன பிரஷ்ஷர் குக்கரா விக்கிறோம்னு சொல்லிவிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

அதனால் தான் விபத்து ஏற்பட்டால் அது எங்களைக்கட்டுப்படுத்தாது, உங்க பொறுப்புனு இப்பவே நழுவிட்டாங்க.

சரி மக்களே இவ்வளவு நேரம் பாதகங்களைப்பார்த்தோம், இப்போ இங்கே நடக்கிறப்போறாட்டத்தின் பரிமாணத்தைப் பார்ப்போம், அதுக்குள்ள அரசியல்,சுயநலம், விளம்பர மோகம் எல்லாம் கலவையா ஒளிந்து இருக்கு.

கூடன்குளம் ஏன் கொதிக்கிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பொதுவாக ஒரு சந்தேகத்தினை எல்லாம் கேட்கிறாங்க, 1988 திட்டம் அறிவிக்கப்பட்டு 20 வருடமா இதோ அதோனு இழுத்து முடியப்போற நேரத்தில ஏன் இந்த போராட்டம் என்பதே?

போராட்ட்தில் கலந்து கொண்டவர்கள் படங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன, அவர்களைப்பார்த்தால் அணு உலைக்கும் அடுப்பில வைக்கும் உலைக்கும் கூட வித்தியாசம் தெரியாது போல இருக்கு. பெரும்பாலும் இது போன்ற மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்றால் "அணு உலைனு சொல்றாங்க ஆபத்தானதுனு சொல்றாங்க ஆனால் அரசாங்கமே இதை செய்யுது, இனிமே நாங்க என்ன செய்றது.. எல்லாம் விதி...ஆண்டவன் இருக்கான் பார்த்துப்பான் என்று பெருமூச்சு விடுவார்கள் அவ்வளவே.



ஆரம்பத்தில் இத்தனை தீவிரம் இல்லாத போராட்டம் இப்போ மட்டும் ஏன் இப்படி தீவிரமாக? நியாயமான கேள்வி தான் ,வழக்கமாக சில ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு, சாலை சரியில்லை, பஸ் வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவார்கள், கடை அடைப்பு , ஏன் உண்ணாவிரதம் கூட இருப்பார்கள், சரியாக கண்டுக்கொள்ளப்படவில்லை எனில் தேர்தல் காலத்தில் , தேர்தல் புறக்கணிப்பு என ஒரு குண்டுப்போடுவார்கள், அவ்வளவு தான் மாவட்ட ஆட்சியர், எம்.எல் ஏ, மந்திரி என எல்லாம் ஓடி வந்து சமரசம் பேசி குறைகள் களையப்படும் என்று வாக்குறுதி அளிப்பார்கள்.

ஆனால் கூடங்குளத்தில் போராடுபவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் சரி இப்போதைய உள்ளாட்சி தேர்தலின் போதும் சரி தேர்தல் புறக்கணிப்பு என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்ப்படுத்தவில்லை, ஏன் மந்திரம் மறந்து போச்சா? இதில் தேர்தலுக்காக ஒரு நாள் போராட்டத்துக்கு லீவ் எல்லாம் விட்டார்கள்.மாநில அரசை கோபப்படுத்தக்கூடாது என்பது போல அது இருந்தது.

இதில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாகவே தோன்றியது. அது என்ன?

எனவே எனக்குள் தூங்கிகொண்டிருந்த ' துப்பறியும் ஷெர்லாக்ஸ் ஜேம்ஸ் சாம்பு லால்"  விழித்துக்கொண்டான், என்னளவில் சிறிது முயற்சி செய்தேன், ஒரு தென்மாவட்ட நண்பரைப்பிடித்து கேட்டேன், அவர் லைட்டாக சொன்னாலும்,சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. மேற்கொண்டு தெரிந்து கொள்ள சரி நாமும் இணையத்தை துழாவலாம் அது என்ன பூட்டியா இருக்குனு தேடினேன், அவர் சொன்னது உண்மை தான் என்பது போலவே செய்திகள் கிடைத்தன.

நான் பார்த்ததை பார்வைக்கு வைக்கிறேன், இதில் தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லை.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை, அப்படி நினைத்து யாரேனும் கச்சைக்கட்டிக்கொண்டு வந்தாலும் கவலை இல்லை!

கூடன்குளம் போராட்டம் திடீர் என்று ஒரு புதிய சக்தி பெற்றதற்கு பின்னால் இருப்பது ஒரு தனி மனிதரே,காரணம் மணல்!!! ஆம் மணல் தான் கார்னெட் மணல் தொழில். ஏற்கனவே 2007 இல் டாடா கார்னெட் மணல் , டைடானியம் டை ஆக்சைட் தொழில் தொடங்க வந்த போதும் விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்தி ஆனானப்பட்ட டாடாவுக்கே டாடா காட்டியவர் இந்த மணல் மனிதர்.

அனுசக்திக்கும் , கார்னெட் மணலுக்குமென்ன சம்பந்தம், அப்போ டாடா வை விரட்டினார் இப்போ ஏன் ?
பதில் இந்த செய்தியைப்பாருங்க, ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புதின் இந்தியா வந்த போது வெளியானது. கூடன்குளத்தில் அணு உலை அமைப்பதுடன் இந்திய-ரஷ்ய கூட்டுறவில் டைட்டானியம் டை ஆக்சைட் ஆலை அமைக்கப்படும் என்று 62;ப்பந்தம் கையொப்பம் ஆனதாக கூறுகிறது.

//Russian President Vladimir Putin arrived in India earlier in the day on a visit aimed at boosting trade ties and securing military and energy deals. Defense Minister Sergei Ivanov is also in the country, and has signed several arms deals, including an agreement on the licensed production two-day visit, the Russian president is expected to sign agreements on the construction of additional reactors for the Kudankulam NPP and of new nuclear plants in India under Russian designs, as well as setting up a Russian-Indian joint venture for the production of titanium dioxide and other titanium products.//

இப்போ தெரிஞ்சு இருக்குமே எலி ஏன் அம்மணமா ஓடுச்சுனு!

கஜினி முகம்மது, இந்தியாவின் மீது 17 முறை படை எடுத்தான் எனப்படித்துள்ளோம், உண்மையில் அவை படை எடுப்பே அல்ல கொள்ளை அடிக்க வந்த தாக்குதல்.முதல் முறை கஜினி முகம்மது வந்த போதே யாராவது இந்திய மன்னர்கள் செமத்தியாக கவனித்து இருந்தால் அவன் ஏன் 17 முறை மீண்டும் மீண்டும் படை/கொள்ளையடிக்க வந்திருக்கப்போகிறான்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கூடன்குளத்திற்கு முன்னரே தமிழகத்தில் கல்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டு செயல்ப்பட்டு வருகிறது இந்த அணு சக்தி எதிர்ப்பாளர்கள் அன்றே கல்ப்பாக்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி இருந்தால் தமிழகத்தில் வலுவான எதிர்ப்பு இருக்கு என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பார்கள். ஒரு வேளை எதிர்ப்பையும் மீறி கல்ப்பாக்கத்தில் அணு உலை அமைக்கப்பட்டிருந்தாலும் , மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் அணு உலை வைக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வந்திருக்காது. வேறு எதாவது மாநிலம் பார்த்திருப்பார்கள் கூடன் குளம் தப்பியிருக்கும்.கேரளாவில் 50;ரம்பத்திலேயே சரியாக எதிர்ப்பு காட்டினார்கள். எனவே தான் அங்கிருந்து அணு உலை கூடன் குளம் வந்தது.

நாம் அப்போது சரியான எதிர்ப்புக்காட்டவில்லை. இந்த 58;திர்ப்பாளர்களும் நேற்றுப்பிறந்து இன்று வளர்ந்து போராட்டத்தில் குதிக்கவில்லை. தொடர்ந்து கல்ப்பாக்கத்தில் போராடி இருக்கலாம். இப்போது கல்ப்பாக்கத்தில் உள்ள அணு உலை அதன் செயல்பாட்டின் இறுதி நிலையில் உள்ளது,ஒரு அணு உலையின் சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகளே, பின்னர் புதுப்பித்தால் மேலும் 15 ஆண்டுகள் ஓடும். புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். போதும் இதோடு மூடி விடுங்கள் என்று இவர்கள் போராடலாமே, ஒரு வேளை நல்ல ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை போலும், கிடைத்தால் போராடுவார்களாயிருக்கும்!
----------------------------------------------

சரி ரஷ்யா கூட ஒப்பந்தம் போட்டா  என்ன அது இந்தியாவில வேற எங்காவது அமைக்கப்போறாங்க ,கூடன்குளத்துக்கா வருவாங்கனு கேட்கலாம், ஆம் அங்கே தான் வருவாங்க வேற வழியில்லை, தென் தமிழ் மாவட்ட கடல் ஓர கார்னெட் மணல் தான் இந்தியாவிலேயே தரமானது, ஏன் உலகத்திலேயே நல்ல தரமானதும் கூட.மேலும் கிழக்கு கடற்கரையில் சில இடங்களில் டைட்டானியம் ஆலைகள் கடந்த சில ஆண்டுகளில் அரசின் ஆதரவில் வந்து விட்டது.

உலக டைட்டானியம் டை ஆக்சைட் தேவையில் 75% தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது, அதில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகம்.இந்தியாவில் கிழக்கு கடற்கரையில் தான் டைட்டானியம் அதிகம், தரமானதும் கூட. தமிழகத்தில ரொம்ப நாளா இந்த தொழில் நடக்கிறது.அந்த மணல் மனிதர் இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவிலும் பெரிய கார்னெட் தொழிலதிபர்.அவர்கள் தளத்தில் உங்களுக்கு எத்தனை டன் டைட்டானியம் வேண்டுமானாலும் எங்களால் சப்ளை செய்ய முடியும் எனப்பெருமையாக போட்டிருப்பதைக்காணாலாம்.

இது மட்டும் காரணம் அல்ல , சமிப காலமாக கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்கம், ஒரிசா , மேற்கில் கேரளா என புதிய கார்னெட் ஆலைகள் 49;ரசாலோ அல்லது தனியார் -ரஷ்ய கூட்டுடனோ; அமைக்கப்பட்டுவிட்டது.இப்போ அதிக வளமுள்ள தென் தமிழகத்தில் மட்டும் தனியார் ஒருவர் மட்டுமே கோலோச்சுகிறார். எனவே அங்கே ரஷ்ய-இந்திய ஆலை வர வாய்ப்பு மிக அதிகம்.

மேலும் சில டைட்டானியம் டை ஆக்ஸைட் ஆலைகள் பற்றிய செய்திகள்.

//Orissa titanium plant offers villagers jobs, work resumes
07-07-2008 18:32:04 by IANS ( 1 comment )
//Bhubaneswar, July 7 (IANS) The work at the site of a proposed titanium dioxide plant in Orissa’s Ganjam district was resumed after the company assured employment opportunities to villagers affected by the project, a government official said Monday. “The local villagers and administration allowed the company to resume work after it assured that it will provide work on priority basis to all the people who lost land due to the project,” additional district magistrate Madan Mohan Deo told IANS.//

//Kolkata-based Saraf Group and the Russian government are jointly setting up the plant in two phases in over 600 acres of land near Chhatrapur town, about 175 km from here.
The integrated plant will produce 40,000 tonnes per annum of titanium dioxide per year. The first phase of the project, with an investment of $250 million, is expected to turn commercial by the end of 2009.//
--------------------------------------------------

Kollam, Feb 27 (IANS) India Sunday join a select band of titamium sponge producers with Defence Minister A.K. Antony inaugurated a 500 tonne-capacity plant at Chavara near here.A select group of nations like the US, China, Japan and Britain have the technology for industrial-scale production of titanium sponge
-----------------------------------------------------

அதெல்லாம் இருக்கட்டும் அரசு ஆரம்பித்தால் என்ன அது ஒரு பக்கம் ,இவர் ஒரு பக்கம் நடத்தப்போறங்க எனலாம் . ஆனால் மணல் மனிதரின் பாராக்கிரமங்களைப் பார்த்தால் அவர் விட்டுக்கொடுக்க முன்வர மாட்டார் என்பது புரியும்.மேலும் மிக அதிக அளவில் முதலீடும் , 15 கிலோ மீட்டர் கடற்கரையை அரசிடம் இருந்து 40 ஆண்டு குத்தகை எடுத்துள்ளார்.


அங்கே
பீச் மினரல்ஸ் </span>என கம்பெனி வைத்துள்ளார், இது கூடன்குளத்தில் இருந்து கூப்பிடு தொலைவே.அது போக சொந்தமாக தேரிக்காட்டில் 2300 ஏக்கர் நிலம்
வளைத்துப்போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பினாமி நிலம், பொறம்போக்கு இடம் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில், இதனை எப்படி விடுவார். தூத்துக்குடியில் இருந்து கன்யாகுமரி வரை கடற்கரை அவரது கட்டுப்பாட்டில்.
மேலும் தற்போது அங்கே செயல்பட்டு வந்த கில்பர்ன் கெமிக்கல்ஸ் எனப்படும்
மற்றொரு டைட்டானியம்ம் டை ஆக்சைட் ஆலையும் வாங்கி விட்டார். இனி அவரது ஏக போகம் தான் அங்கே.

கார்னெட் மணல் அள்ளப்படும் இடங்களைக்காட்டும் படம்:





மணல் மனிதரின் கார்னெட் தொழில் சம்பந்தப்பட்ட செய்திக்குறிப்புகள்.



V.V. Mineral is the only company in India with a 15km stretch of beach area under a mining lease for 40 years. This ensures a continuous deposition of placer minerals from the Gulf of Mannar. The gulf's geological characteristics, typical wave action and beach structure make it a highly valuable zone for continuous deposition of heavy minerals like Garnet, Ilmenite, Rutile and Zircon. Another 2,300 acres of heavy minerals-rich land add to our total annual output of 150,000 metric tonnes of garnet ,2,25,000 metric tonnes of ilmenite, 12000 M.Tons of Zircon and 5000 M.Tons of Rutile.
---------------------------------------------------------------------------------------

Kilburn Chemicals sells TiO2 division
Kilburn Chemicals Ltd (KCL), a producer of anatase grade titanium dioxide, will sell its chemical division producing anatase grade titanium dioxide to S Vaikundarajan of partnership firm V V Mineral, one of the country’s largest producers of garnet & ilmenite, for an estimated Rs.110 crore, KCL said in a statement.


KCL has a manufacturing plant in Tuticorin, Tamil Nadu. KCL also manufactures the by-product ferrous sulphate. V V Minerals, established in 1989, is based in Tirunelveli, in Tamil Nadu and caters to Europe, Middle East, East Asia, Australia and USA.
Titanium Dioxide is a vital ingredient for diverse industrial applications and is one of the most commonly-used white pigment in the world. It is used for a variety of applications like manufacturing of paint, rubber, paper, detergents, cosmetics, printing inks, textiles, plastics among other products.
--------------------------------------------------------

 மணல் மனிதரின் ஆலையில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள், மேலும் சம்பளம் கொடுத்து ஊர் மக்கள் என முறை வைத்து ஆட்களை அனுப்புவதுடன், போராட்டத்தின் ஸ்பான்சரும் அவரே.கூடவே மிஷனரிகள், இன்ன பிறர் என சரியாக காய் நகர்த்தி கொண்டு போகிறார் என தோன்றுகிற;து.போராட்டம் நடத்தினால் தான் நாளைக்கு, வேலை ,அல்லது இழப்பீடு எல்லாம் கிடைக்கும் வரலைனா அரசாங்கம் கண்டுக்காது போன்ற நயமான அழைப்புகளும் உண்டு.

ஒரு வேளை அந்த மக்கள் பாவம் நல்ல மனுசன் அணு உலைக்கு எதிராக நல்லா ஆதரவு தருகிறார் என நினைத்துக்கொண்டிருக்கலாம்.அவர் மணலுக்காக ஆதரவு தருகிறார் என தெரியாமலே கூட இருக்கலாம்.மணல் மனிதர் பின் புலத்தில் இருப்பதால் தான் தேர்தல் புறக்கணிப்பு அஸ்திரம் போராட்டத்தில் பயன்ப்படுத்தப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலும் இப்போது நடந்த உள்ளாட்சி தேர்தலும் அம்மையாருக்கு மிக முக்கியமானவை, எனவே அம்மைக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார் அவர்.

ஒரு வேளைப்போராட்டம் வெற்றிப்பெற்றால் அணு உலையில் இருந்து மக்களும் தப்பிப்பார்கள், அவருக்கு மணலும் தப்பிக்குமĮ1;!

இந்திய அரசாங்கம் என்று இல்லை எந்த அரசுமே இந்த பிடிவாதம் கொண்டவையே,எனவே இவ்வளவு தூரம் வந்த திட்டத்தை கை விடாமல் மாற்று வழியில் மணல் மனிதரை மடக்கிடும் என தோன்றுகிறது, உங்க கார்னெட் பிசினெசுக்கு பங்கம் வராது, அங்கே ரஷ்ய கூட்டு ஆலை வராதுனு உத்திரவாதம் தந்தா போதும், அவர் கழண்டுப்பார், முன்னால் நிற்கும் சமூகப்போராளிகளுக்கு காத்து இறங்கிடும், நாங்க போரடினோம் என்னப்பண்றதுனு சொல்லி போராளிப்பட்டத்தை வாங்கிக்கிட்டு போய்டுவாங்க பாவம் மக்கள் தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும் வழக்கம் போல விதியை நொந்து வாழ்வார்கள்.

இதில் உள்ள அரசியல் என்னவென்றால், அம்மையாருக்கும் காங்கிரசுக்கும் ஆகாது, அம்மையாரின் ஆதரவு பெற்றவர் மணல் மனிதர், கடந்த சட்ட மன்ற தேர்தலில் "ரொம்ப" உதவியவர் மணல்மனிதர். தற்சமயம் காங்கிரசுக்கு குடைச்சல் கொடுக்க இது உதவும் என்பதால் தான் சாத்வீகமாக இருக்கிறார் அம்மையார். இல்லையென்றால் "இரும்புக்கரம்"பேசி இருக்கும்!

இப்போ காங்கிரசே பெங்களூரு வழக்கு விவகாரத்தில் சாதகம், திமுக கழட்டி விடல்,மேலும் சில முக்கிய புள்ளிகள் திஹார் கைது என அம்மைக்கு ஆதரவுக்காட்டினால் போதும், திமுகவின் இடத்தில் அம்மையார் ஒட்டிக்கொள்வார், மணல்மனிதரையும் தட்டி வைத்து விடுவார். பின்னர் சமூகப்போராளிகளும்" சமூகப்போராளிப்பட்டத்தை" தூக்கி தோளில் போட்டுகொண்டு போய்டுவாங்க பாவம் மக்கள் , வழக்கம் போல அவர்களுக்கு அல்வா தான்! ஆனால் இந்த தடவை ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா!

பின்குறிப்பு:

#எந்த ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ எண்ணி இப்பதிவிடவில்லை, எல்லாவற்றுக்குமே ஒரு மாற்றுப்பார்வை உண்டு அது போன்றதே இதுவும் எனவே யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

# இங்கு தரப்பட்டுள்ள செய்தி குறிப்புகள், புள்ளி விவரங்கள் அனைத்தும் சம்ப ந்தப்பட்ட இணைய தளங்களில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மை அவற்றை சார்ந்தே!

சுட்டிகள்:

# http://www.energy-daily.com/reports/Russia_To_Build_Four_More_Nuclear_Reactors_In_India_999.html

# http://www.vvmineral.com/mining.htm

#http://www.thaindian.com/newsportal/business/orissa-titanium-plant-offers-villagers-jobs-work-resumes_10068743.html

# http://www.chemindigest.com/news.html

Tuesday, November 10, 2009

சிரிப்பொலி!

ஷங்கரோட எந்திரன் படத்தில கமல ஹாசன் நடித்திருந்தா என்ன பெயர் வைத்திருப்பார்?

எந்திரன் சந்திரன்!
---------------------------------------------------
மணிரத்னம் படத்தில் மு.க அழகிரி கதாநாயகனா நடிக்கிறார்...
படம் பேர் ?
மதுர நாயகன்!
--------------------------------------------------
நடிகர் ஜீவா அகோரியா ஒரு படத்தில் நடிக்கிறார்...

படம் பெயர் என்ன?

சிவா மனசுல பக்தி!
---------------------------------------------------
முழுவதும் தென் ஆப்பிரிக்காவில எடுக்கிற ஒரு படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

பேர் என்ன?

கேப்டவுன் பிரபாகரன்!
-----------------------------------------------------
ஷூ கடை வைத்திருப்பவர் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தால் படத்துக்கு என்னப்பேர் வைப்பாங்க?

குவாண்டம் ஆப் ஷூலேஸ்!
-----------------------------------------------------

தமிழ் படங்களை ரிமேக் செய்தால் நம்ம ஊர் பிரபலங்கள் நடிக்க விரும்பும் படங்கள்.

கலைஞர்- ஆசையில் ஓர் கடிதம்!

ஸ்டாலின் - அடுத்த வாரிசு!

உதயநிதி ஸ்டாலின் - ஒரு வாரிசு உருவாகிறது!

சுப்ரமணியம் சுவாமி- ஜகதலப்பிரதாபன்! அல்லது மணல் கயிறு!

கார்த்திக்- மாயாவி.

வைகோ- அக்ரஹாரத்தில் கழுதை!

மருத்துவர் ராமதாஸ் - பூந்தோட்ட காவல்காரன் அல்லது நாடோடிகள்!

ஜெயலலிதா - இருவர்

தா.பாண்டியன் - தோழா!

சோனியா காந்தி!- இட்டாலியன் ஜாப்(ஆங்கிலம்)

ராகுல் காந்தி - பிள்ளையோ பிள்ளை (கதை, வசனம் மு.க)

மம்தா பானர்ஜி - கிழக்கே போகும் ரயில்!

"ஸ்பெக்ட்ரம்" ராசா - அனுபவி ராஜா அனுபவி!

என்.கே.பி.பி.(எஸ்கேப்)ராஜா - சட்டம் என் கையில்!

விடுபட்ட மற்ற பெருந்தலைகளுக்கும் ஏற்ற மாதிரி ரீமேக்க படங்கள் இருந்தால் நீங்களும் சொல்லுங்க!

Monday, November 09, 2009

பெங்களூரு புத்தக விழா

பெங்களூருவில் பேலஸ் கிரவுண்டில் புத்தக கண்காட்சி நடப்பதாக "முற்போக்கு மற்றும் கலவரப் பதிவர்" தோழர் செந்தழல் ரவி!(இன்னும் பல பட்டங்களுக்கும் தகுதியானவரே, இடம் போதாமையால் இது மட்டும்) "பதிவிட்டிருந்தது சும்மா கிடந்த என் மனச்சங்கை ஊதிவிட்டிருந்தது, அதற்கேற்றவாறு பெங்களூருக்கு செல்லும் வாய்ப்பு வந்தது , அப்படியே புத்தக கண்காட்சியையும் ஒரு நடைப்போய்ப்பார்த்தாச்சு, பார்க்க மட்டுமே செய்தேன் எதுவும் வாங்கவில்லை.

மெஜஸ்டிக் கெம்பே கவுடா பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் சென்றேன் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக 100 வாங்கிக்கொண்டான்(ர்), ஆனால் வரும் போது மீட்டர் போட்ட ஆட்டோவில் 35 ரூபாய் தான் ஆச்சு! (அது வேறு வழி, இது வேறு வழியா எனத்தெரியவில்லை)அப்போது தான் நான் பல்பு வாங்கியது தெரிந்தது!


கண்காட்சி என்றார்கள் ஆனால் அங்கே யாரும் கண்ணை தோண்டி காட்சிக்கு வைத்திருக்கவில்லை(கண்காட்சி என்பது தவறு கருத்துக்காட்சி தான் சரி என நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் சொன்னார்) , புத்தகங்கள் தான் அதுவும் பெரும்பாலும் கனட, ஹிந்தி , ஆங்கிலம் கொஞ்சமே கொஞ்சம் தமிழ் நூல்கள் கொண்ட கடைகளை விரிந்திருந்தார்கள்.

மழைக்கு பயமில்லாத உள்ளரங்குகளில் அமைத்திருந்தார்கள். நுழைவு சீட்டுக்கொடுக்கும் இடம் கொஞ்சம் உள் தள்ளி இருந்ததால் பெரும்பாலோர் /சிலர் அதற்கு முன்னரே இருந்த வாசல் வழி சும்மாவே போய்க்கொண்டிருந்தார்கள்.நான் டிக்கெட் எடுத்து தான் சென்றேன்(மொழி தெரியாத இடத்தில் வம்பு வேண்டாம் என்று தான்), 20 ரூபாய் , இது சென்னை புத்தக விழா கட்டணத்தை விட அதிகம்.ஆனாலும் வழ வழப்பான , மங்கலான அட்டைகளுடன் தடித்த , மெலிந்த என பல ரூபாய் விலைகளில் பல விதமான புத்தகங்கள் கண்களைக்காய்ச்சி எடுத்து விட்டது!

இரவு 8.30 வரைக்கும் என சொல்லி விட்டு 8 மணிக்கே கடையை மூட ஆரம்பித்து விட்டார்கள். அரங்கில் புத்தக விழா பேனர்களில் எல்லாம் ஒரு உப்புமா நடிகர் புத்தகம் வாசிப்பது போன்ற படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள், விளம்பர யுக்தியாம்!

இதற்கு மேலும் அதிகம் எழுதி எழுத்து வன்கொடுமை எதுவும் செய்யாமல் சுமாராக எடுத்த சில புகை இல்லாத(நிழல்) இல்லாத சில படங்களை மட்டும் பதிவில் போட்டு விட்டு எஸ் ஆகிக்கொள்கிறேன்!





நுழைவுவாயில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது!(மழை வந்து எனது திட்டத்தை எல்லாம் கெடுத்திருந்தது)

விஸ்தாரமான உணவகம்! நுழைவுக்கு அருகிலேயே உள்ளது.பிரெட் ஆம்லெட் கிடைக்கிறது வேறு என்ன வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.

அனுமதி சீட்டு வழங்கும் இடம்!

நூல் அரங்கம்.
சாகித்ய அகதமியின் அரங்கம்.

சென்னையை சேர்ந்த டவ் மல்டி மீடியாவின் அரங்கு.(பொதுவாகவே எல்லா அரங்குகளிலும் சொற்ப கூட்டமே இருந்தது) ஹாயாக தேநீர் பருகிக்கொண்டிருந்தார்கள்.
திருமகள் தமிழ் நூல் அரங்கம்

கிழக்கு பதிப்பத்தின் அரங்கம். நான் இங்கே வரும் போதெல்லாம் கடையை கட்டும் நேரம் ஆகி விட்டதால் தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டிருந்தார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்டின் அரங்கம்

ஆனந்த விகடன் அரங்கம்.
ஒரு தமிழ் ஆன்மீக நூல் பதிப்பகத்தின் அரங்கம்.
அரிய , மற்றும் பழமையான நூல் அரங்கம் என்றுப்போட்டிருந்தார்கள், அட்டை பிய்ந்த நூல்கள் எல்லாம் இருந்தது(எவ்வளவு பிய்ந்து இருக்கோ அவ்வளவு அரிய வகை போல).சென்னையில் பெல் ரோட்டில் இது போல பல கடைகள் இருக்கு என்பதால் அரங்கை அதிகம் ஆராயவில்லை.

எதை எடுத்தாலும் 50 ரூபாய் என சகாய விலையில் ஒரு கடை(வாசிக்க பிடிக்காத வகையில் பல நூல்கள் இருந்தது)

எதை எடுத்தாலும் 100 ரூபாய் தான் முன்னர் கூறிய அதே ரக நூல்கள் தான், ஒரு வேலை தம்கட்டி தேடினால் நல்ல நூல்கள் கிடைக்கலாம்.

விவசாயம் சம்பந்தமான குறுந்தகடுகள் வைந்திருந்தார்கள்.

இராம கிருஷ்ண மடத்தின் சார்பில் அனைவருக்கும் இலவசமாக சிறு கையேடுக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் இங்கே!

இந்த கடையில் சிறிய கையடக்கமான மின்சார தையல் எந்திரங்கள் விற்றார்கள் (படித்துக்கிழிந்த நூல்களை தைக்குமா எனத்தெரியவில்லை, நூல் கொண்டு "நூல்" தைக்க முடியாதா?).

இன்னும் கொஞ்சம் படங்கள் உள்ளன ஆனால் அவை எல்லாம் இன்னும் சுமாராகவே வந்திருக்கு , அதையும் போட்டு மக்களை பரிசோதிக்க விரும்பவில்லை.

Friday, November 06, 2009

நீள் உறக்கம்



ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர்.


அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு

எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர்.


இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான்.


ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள்.



ஏன் இந்த நீண்ட உறக்கம்?

கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம்.


எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது?

குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.

அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.


நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.

குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன.


நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்:


குளிர் ரத்த உயிரினங்கள்:


தேரை













ஆமை










பல்லி


பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்)



பூச்சிகள்:











தேனீ


வெப்ப ரத்த உயிரினங்கள்:

சிப்மங்க்










லெமுர்












கரடி











ஹேம்ஸ்டர்

அணில்


கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!













மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது!